புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
4 Posts - 3%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
1 Post - 1%
Kavithas
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
1 Post - 1%
bala_t
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
293 Posts - 42%
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
6 Posts - 1%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
4 Posts - 1%
manikavi
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்


   
   

Page 9 of 19 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 19  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 01, 2018 10:06 pm

First topic message reminder :

"வீரயுக நாயகன் வேள் பாரி"

ஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" (அரவான் படத்தின் மூலகதை)  ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P100bnew

"வீரயுக நாயகன் வேள் பாரி" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.. அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்



நன்றிஆசிரியர் : சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., , விகடன்  நன்றி


முன்னுரை

இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P100a

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.

தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.

மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.

பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.

வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.

இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...

Readre இந்த பதிவை விரும்பியுள்ளார்


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 13, 2018 12:28 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P77a_1515567331
வ்வியூரிலிருந்து கபிலரை அழைத்துவந்த உதிரன், வேட்டுவன் பாறையில் உள்ள எல்லோருடனும் பேசி நலம் விசாரித்துக்கொண்டிருந்தான். திசைவேழரும் கபிலரும் தனியே பேச எழுந்து சென்றபோது, நீலனும் உதிரனும் இன்னொரு திசை நோக்கி நடந்து சென்றனர். இரு திசைகளையும் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார் வேட்டூர் பழையன். கற்றறிந்த அறிஞர்கள் இருவர் வலப்புறம் மெதுவாக நடந்து சென்றுகொண்டிருக்கும்போது, பறம்பின் இணையற்ற வீரர்கள் இருவர் இடப்புறமாகப் பேசியபடி நடந்துகொண்டிருந்தனர்.

உதிரனிடம் நீலன் கேட்கவேண்டிய கேள்விகள் நிறைய இருந்தன. ``எவ்வியூருக்குக் கூழையனிடமிருந்து நாள் தவறாமல் செய்தி வந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார்களே..?” என்று தொடங்கினான்.

``ஆம், சேரகுடியினர் இருவரும் போருக்கான வேலைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்தச் செய்திகளைக் கூழையன் நாள்தோறும் அனுப்பிக்கொண்டிருக்கிறான். உதியஞ்சேரலைவிடக் குடநாட்டினரிடம்தான் நாம் கூடுதல் விழிப்பு உணர்வுடன் இருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது. அவர்கள் தளபதி எஃகல்மாடன் பற்றி மிகக் கொடுமையான கதைகள் மக்களிடம் பரவியிருக்கின்றன. பிடிபட்ட எதிரி நாட்டு வீரர்கள் யாரையும் கண நேரம்கூட அவன் உயிரோடு வைத்திருப்பதில்லையாம். உடல்களைச் சிதைத்துக் கொல்வதை அவன் வழக்கமாக வைத்திருக்கிறானாம். `கோளூர்சாத்தனின் கைகளை வெட்டிய முடியனின் தலையை எடுக்காமல் நான் ஓய மாட்டேன்’ எனச் சூளுரைத்தபடி அலைகிறானாம்” என்றான் உதிரன்.

அவன் சொல்லியதைப் பற்றி சிந்தித்தபடி வந்துகொண்டிருந்தான் நீலன். ``பறம்பினைச் சுற்றியுள்ள வேறெந்த நாட்டினருக்கும் இல்லாத வாய்ப்பு குடநாட்டினருக்குத்தான் உண்டு. நில அமைப்பின் தன்மையைக் கணக்கில் கொண்டால் அவர்களால் பச்சைமலையின் நடுப்பகுதி வரை வந்து சேர முடியும். இந்தச் சாதகமான வாய்ப்பைப் பயன்படுத்துவதாக நினைத்துதான் அவர்கள் ஏமாற்றம் அடைவர். ஏனென்றால், அதன் தொடர்ச்சியாக உள்நுழைந்தால் கரும்பாறைப் பிளவுக்குள் எளிதாகச் சூழப்பட்டு முழுமுற்றாக அழிக்கப்படுவர்” என்றான்.

அடுத்த கேள்வியை நீலன் கேட்கும் முன்னர் உதிரன் கேட்டான், ``சோமப்பூண்டின் பானம் குடிக்க வந்தபோது மீட்டுவந்த கப்பல் அடிமைகளைப் பற்றிக் கூறினாயே, அவர்களின் தலைவன் இன்னும் அப்படித்தான் இருக்கிறானா அல்லது ஏதாவது பேசுகிறானா?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P77b_1515567350
``இப்போது முழுமையாகக் குணமடைந்து விட்டான். மிகக் கொடுமையான காயங்கள் ஏற்பட்டதால் இத்தனை மாதங்கள் ஆகியுள்ளன. ஆனாலும் அவன் எதையும் வாய் திறந்து பேச ஆயத்தமாக இல்லை. எவ்வளவு முயன்றும் அவன் கூட்டத்தைப் பற்றிய உண்மைகள் எதையும் தெரிந்துகொள்ள முடியவில்லை.
உடன் இருக்கும் வீரர்கள் தலைவனின் உத்தரவின்றி ஒரு சொல்கூட உதிர்க்க மறுக்கிறார்கள். அவனது கண் அசைவை வைத்தே பணிபுரிகின்றனர். தேர்ந்த போர்க்குடியாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடும் உறுதியும் எளிதில் வராது” என்றான்.

``கபிலர் அவரின் ஆசானோடு ஓரிரு நாள்கள் தங்குவார். நாம் போய் அவனைப் பார்த்து வரலாமா?”

``விடிந்ததும் புறப்பட்டுப் போவோம்” என்றான் நீலன்.

பிலரும் திசைவேழரும் குடிலுக்குத் திரும்பும்போது நண்பகல் கடந்திருந்தது. அவர்களுக்கான உணவு ஏற்பாடாகியிருந்தது. திறளி மரப்பலகையில் உட்கார்ந்ததும் திசைவேழர் சொன்னார், ``உணவு அருந்தியதும் நாங்கள் புறப்படுகிறோம்.”

``உங்களின் வலதுகாலை மடக்கி எழ முடியாததைப் பற்றி நீங்கள் சொன்னதால், மருத்துவர்கள் மூலிகைகளைப் பறித்துவந்து காத்திருக்கிறார்கள். இன்னும் இரு தினங்கள் தங்குங்கள். அவர்களின் மருத்துவத்தால் முழுமையாகக் குணமடைந்து செல்வீர்கள்” என்றார் வேட்டூர் பழையன்.

மறுமொழி ஏதுமின்றி அமைதியாக இருந்தார் திசைவேழர். வந்த நோக்கம் நிறைவேறாத மனநிலை மட்டுமன்று, இதுவரை தான் கண்டிராத ஒரு கபிலரையும் அவர் கண்டுள்ளார். அவருடைய உணர்வுகள் கொந்தளிப்பாக இருந்தன. பேரரசுக்காகத் தூது வந்ததைப்போல தன்னை கபிலர் நினைத்துவிட்டாரோ என்ற எண்ணமும் எழாமல் இல்லை. அமைதி நீடித்தது. அதைக் கவனித்துக்கொண்டிருந்த கபிலர், ``மருத்துவம் பார்த்துக்கொண்டு குணமடைந்து செல்வதுதான் நல்லது” என்றார்.

திசைவேழரின் மனம் அதை ஏற்கவில்லை. பறம்பைப் பற்றிக் கூறிய சொற்கள் அவரைக் கூசிக்கொண்டிருந்தன. ஆனால், நீட்டி மடக்க முடியாத வலதுகால் அவரது மறுப்புச்சொல்லை மடக்கிப் பிடித்துக்கொண்டது. என்ன செய்வது என அறியாமல் திணறிக்கொண்டிருந்தவர், கபிலரின் சொல்லுக்கு இணங்கித் தலை அசைத்தார்.

மாலை நேரம் நெருங்கியதும் மருத்துவர்கள் பச்சிலைகளையும் மரப்பட்டைகளையும் கொண்டுவந்திருந்தார்கள். திறளி மரப்பலகையில் உட்கார்ந்திருந்த அவரை, வலதுகாலை மட்டும் பலகையின் மேல் நேராக நீட்டச் சொன்னார்கள்.

திசைவேழரால் செய்யவே முடியாத பெருஞ்செயலாக அது இருந்தது. வளைந்த கால் அவ்வளவு எளிதில் நீண்டுகொள்ள ஆயத்தமாக இல்லை. அவரால் எவ்வளவு முடியும் என்பதைக் கணிப்பதற்கே மருத்துவர்கள் இதைச் செய்யச் சொன்னார்கள். அவர் முடிந்தவரை கால்களை நீட்ட முயன்றார். ``அரைவட்ட விண்மீன் கூட்டம் ஒருபோதும் நேர்க்கோட்டு சாட்டைக்கம்பு வெள்ளியாக மாறாது” என்று காலை அழுத்திக்கொண்டே சொன்னார். அவரது சொல்லைக் கேட்டுச் சிரித்தார் கபிலர்.

மருத்துவர்கள் பச்சிலையையும் பட்டையையும் கைக்கருவிகளால் ஒன்றாக்கி அரைத்துக் கொண்டிருந்தனர். அடிநரம்பு, சுண்டி இழுத்துக்கொண்டிருந்தது. வலி உச்சந்தலையைத் தொட்டது. மருத்துவர்கள் அரைத்துக் கொண்டிருக்கும் மூலிகைகளைப் பார்த்தபடி, ``என்ன மருந்து இது?” எனக் கேட்டார் திசைவேழர்.

மூத்த மருத்துவர் சொன்னார், ``புலி முன் ஆடு.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P77c_1515567373
திசைவேழருக்குப் புரியவில்லை. அவர்கள் சற்றே விளக்குவார்கள் என எதிர்பார்த்தார். மருத்துவர் மூவரும் அவரவர் வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தனர். தலைமாட்டில் இருந்த கபிலரைப் பார்த்தார். அவருக்கும் அதற்கான பொருள் புரியவில்லை. மருத்துவர்களைப் பார்த்து கபிலர் கேட்டார், ``அப்படியென்றால் என்ன... மூலிகையின் பெயரா?”

``இல்லை. மருந்தின் சேர்மானத்தையும் நோயின் தன்மையையும் வைத்து நாங்கள் முடிவுசெய்வோம். எங்களின் மருந்துக்கு முன், இந்த நோயானது புலிக்கு முன் ஆடு போல கண நேரத்தில் பதுங்கி ஒடுங்கும். சில நேரத்தில் நோயும் மருந்தும் புலிக்கு முன் புலி போல சம அளவில் நிற்கும். சில நேரத்தில் மருந்தால் கட்டுப்படுத்த முடியாத அளவில் நோய் இருக்கும், புலியை வீழ்த்தும் யானைபோல” என்றார் அவர்.

திசைவேழர் வியப்புடன் பார்த்தார். `மருத்துவத்தைத் தொடங்கும் முன்னரே, புலிக்கு முன் ஆடு போல, இந்த நோயானது மருந்துக்கு முன் பதுங்கி ஒடுங்கும் என எப்படி துணிந்து சொல்ல முடிகிறது இவர்களால்?’ என்று சிந்தித்தபடியே படுத்திருந்தார். வலி உச்சந்தலையைத் தொட்டுத் திரும்பிய இடத்தில் இப்போது புலியும் ஆடும் உலவிக்கொண்டிருந்தன. மனம் வேறொன்றைக் கணித்துக்கொண்டிருக்க, வலி நினைவில் தங்க இடமின்றி மறந்தொழிந்தது.

இரவு நெடுநேரமாகியும் தூக்கம் வரவில்லை. காலில் கட்டு போடப்பட்டிருந்ததால் அசையாமல் படுத்திருக்கவேண்டியிருந்தது. மனம் அலைமோதிக்கொண்டிருந்தது. அருகில் போடப்பட்டிருந்த கட்டிலில் கபிலர் உட்கார்ந்து திசைவேழரைக் கவனித்தபடி இருந்தார். உரிமை கலந்த இயல்பான பேச்சு இருவரிடமும் இல்லை. `நாம் சற்று கடுமையாகப் பேசிவிட்டோமோ!’ என்ற எண்ணம் இருவருக்குள்ளும் ஓடிக்கொண்டிருந்தது.

அமைதியைக் குலைக்கும் சொல்லைக் கண்டறிய முடியாமல் கபிலர் தவித்துக்கொண்டிருக்கும்போது திசைவேழரின் மெல்லிய குரல் கேட்டது, ``பல ஆண்டுகளுக்கு முன் பொதிகை மலையில் தற்செயலாக ஒரு பாணர் கூட்டத்தைக் கண்டேன். ஒருவார காலம் என்னோடு சேர்ந்து அவர்கள் பயணப்பட்டார்கள். அந்தப் பயணத்தின்போது நான் யார் என்பதை உடன் வந்த மாணாக்கர்கள் மூலம் அறிந்து கொண்டனர். அதன் பிறகு அந்தப் பாணர் குழுவின் தலைவன் நாஞ்சிலன் என்னிடம் வானியல் பற்றி பல ஐயங்களைக் கேட்டான். நான் அவற்றுக்கெல்லாம் விடை சொல்லியபடி வந்தேன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P77d_1515567388
பயண வழியில் விலகிச் செல்லும் இடம் வந்தது. அப்போது அவன் சொன்னான், `பச்சைமலைத்தொடரில் வியப்புறு கனியான கருநெல்லி உள்ளது. அதை உட்கொண்டால் பகலிலும் விண்மீன்களைப் பார்க்கலாம். சென்றமுறை நான் பறம்புக்குச் சென்றபோது நடுமலையின் முகட்டில் அந்த மரத்தைக் கண்டேன். பயிற்சிபெற்ற வீரர்களைத் தவிர மற்றவர்களால் ஏறிச்செல்ல முடியாத பெருமுகடு அது. அந்த அதிசயக் கனியைப் பறித்து யாருக்குக் கொடுக்கப்போகிறோம் என்ற எண்ணம் உருவானதால், நான் அதைப் பெரிதாகக் கருதவில்லை. உங்களைப் போன்ற வானியல் பேராசானுக்கு அந்தக் கனி உண்ணக் கிடைத்தால் எவ்வளவு நன்மைபயக்கும்! அடுத்த முறை பறம்பு செல்கிறபோது பாரியிடம் கேட்டு அந்தக் கனியைக் கொண்டுவந்து உங்களுக்குத் தருவேன்’ என்று சொல்லிச் சென்றான்.

அவன் சொல்வதை நான் உண்மை என நம்பவில்லை. பகலிலே விண்மீன் கூட்டத்தை எப்படிப் பார்க்க முடியும்? அவன் ஏதோ கற்பனையாகப் பேசுகிறான் என்று நினைத்தேன். ஆனால், திசைகாட்டும் விலங்கு ஒன்று இருக்கிறது என்பதைப் பார்த்த பிறகு, இப்போது எனது எண்ணம் வேறுவிதமாக இருக்கிறது. அந்தச் செய்தியை அறிந்த நான் அப்போதே பறம்புக்கு வந்திருக்க வேண்டும். தவறிழைத்துவிட்டேனோ எனத் தோன்றுகிறது.”

திசைவேழர் சொல்வதை வியந்து கேட்டுக்கொண்டிருந்தார் கபிலர். என்ன சொல்வது எனப் பிடிபடவில்லை. சற்றே திணறி மீண்டார். பேச்சற்றிருந்த கபிலரைப் பார்த்து, ``எதுவும் சொல்லாமல் இருக்கிறாய்?” எனக் கேட்டார் திசைவேழர்.

``கருநெல்லியைப் பற்றி பாரி என்னிடம் சொல்லியுள்ளான். `அதை உட்கொண்டால் பகலிலும் விண்மீன்களைப் பார்க்க முடியும். அந்த ஆற்றல் அதற்கு உண்டு என, குலநாகினிகள் சொல்வார்கள்’ என்று கூறியுள்ளான். அந்தக் கனியைப் பாரிகூடப் பார்த்ததில்லை. ஆனால், அதைப் பார்த்த ஒருவர் உங்களிடம் வந்து சொல்லியுள்ளார் என்பது எவ்வளவு முக்கியமான செய்தி! என்னால் நம்பவே முடியவில்லை” என்று வியப்பில் திணறினார் கபிலர்.

`இயற்கையைப் பற்றிய மனிதப்பேரறிவு இங்குதான் சேமிக்கப்பட்டிருக்கிறது’ என்று கபிலர் சொன்ன சொல்லின் ஆழம் காண முயன்றார் திசைவேழர்.

``பகலில் அல்ல, இரவில்கூட விண்மீன்களைப் பார்க்க முடியாத அளவுக்கு, அகந்தையும் ஆணவமும் சில நேரங்களில் கண்களை மறைத்துவிடுகின்றன” என்றார் திசைவேழர்.

இதற்கு என்ன மறுமொழி சொல்வதெனத் தெரியவில்லை. அசையும் அவரது வலதுகால் பாதத்தை மெள்ளப் பிடித்தபடி, ``அசைய வேண்டாம். எல்லாம் சரியாகும்” என்றார் கபிலர்.

பெரும்புலவனின் கைவிரல்கள் பாதத்திடம் பேசிய மொழி கேட்டு திசைவேழரின் கண்கள் கலங்கின.

திகாலையில் புறப்பட்ட நீலனும் உதிரனும் இரு குன்றுகள் தாண்டி அருவியின் அருகில் இருந்த மருத்துவக் குடிலை வந்தடைந்தனர். உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவு மிகக் கடினமான காயங்கள் ஏற்பட்டிருந்ததால் இந்த இடம்வைத்தே மருத்துவம் பார்த்தனர். இப்போது அந்த வீரனின் உடல் முழுமையாகக் குணமாகிவிட்டது. நெடிய உயரமும் எல்லையற்ற வலிமையும்கொண்ட அவனது உடலை, சிதைவிலிருந்து முழுமையாக மீட்டிருந்தனர் பறம்பு மருத்துவர்கள்.

நீலனும் உதிரனும் அந்த இடம் வந்து தலைமை மருத்துவரைக் கண்டு வணங்கினர். ``எல்லா வகைகளிலும் அவன் குணமாகிவிட்டான்” என்றார் அவர்.

``ஆனால் பேசத்தான் மறுக்கிறான். அதுதான் ஏன் எனப் புரியவில்லை” என்றார் உடன் இருந்த இன்னொரு மருத்துவர்.

``மற்ற வீரர்களோ, தலைவனின் உத்தரவின்றிப் பேசுதல் முறையன்று என்று சொல்கிறார்கள்” என்றார் அருகில் இருந்த உதவியாளர்.

``அவர்களின் குலம் முழுமையாக அழிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்களும் மரணத்தைவிடக் கொடும்வேதனையை அனுபவித்து மீண்டுள்ளனர். அதனால், அச்சம் அவர்களின் ஆழ்மனம் வரை பதிந்திருக்கும். எவரையும் எளிதில் நம்பிவிட முடியாத மனநிலையில் அவர்கள் இருக்கக்கூடும். பறம்பைப் பற்றி அவர்கள் பெரிதாகக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். எனவே, நம்பிக்கைகொள்ள முடியாத தயக்கமே அவர்களைப் பேசவிடாமல் செய்கிறது என நினைக்கிறேன்” என்றார் தலைமை மருத்துவர்.

எல்லாவற்றையும் கேட்ட இருவரும் புறப்பட்டு அந்த வீரனைக் காணச் சென்றனர். நாய்களை நன்கு பழக்கக்கூடியவர்களாக அந்த வீரர்கள் இருந்தனர். வேட்டைநாய்கள் அனைத்தையும் மிக அணுக்கமாக வைத்திருந்தனர். சுற்றிலும் இருந்த வீரர்கள் நீலனைக் கண்டதும் எழுந்து வணங்கி வழிவிட்டு நின்றனர். அவர்கள் தலைவன், குடிலுக்குள் தனித்திருந்தான். நீலனும் உதிரனும் உள்நுழைந்து அவன் முன் அமர்ந்தனர்.

உடல் முழுக்க வெட்டுத் தழும்புகள் இடைவெளியின்றி இருந்தன. பார்த்த கணம், உதிரனுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. `இவ்வளவு காயங்களையும் மீறி உயிர்பிழைத்து உட்கார்ந்திருக்கிறானே!’ என்ற வியப்பே ஆட்கொண்டது. சிதைந்த உடலை மீண்டும் இறுக்கிக்கட்டும் உடற்பயிற்சியைத் தொடங்கிவிட்டான் என்பதை நீலனால் உணர முடிந்தது. சென்றமுறை பார்த்ததற்கும் இந்தமுறை பார்ப்பதற்கும் உள்ள வேறுபாட்டை அவனுடைய கண்கள் கணித்தன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P77e_1515567406
அவனை உற்றுப்பார்த்தபடி உதிரன் சொன்னான், ``உனது குடிலுக்குப் பின்னால் இருக்கும் அருவியின் இடப்புறம் சிறிது தொலைவு நடந்தால் வீரன் ஒருவனின் நடுகல் உண்டு. அவனது பெயர் கடுவன். கடுவனின் கதையை யாவரும் அறிவர். அதைக் கேட்டுத் தெரிந்துகொள். உனக்கு இனி தேவைப்படும் மருத்துவம் அதுதான்” சொல்லிவிட்டு எழுந்தான் உதிரன்.

வந்த இருவரும் நீண்டநேரம் பேசுவார்கள் என அவன் நினைத்திருந்தான். ஆனால் அவர்களோ, ஒற்றைச் சொல்லை மட்டும் சொல்லிவிட்டுப் புறப்பட்டனர். தொலைவில் இருவரின் உருவமும் மறையும் வரை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

து ஒரு கொடும் கோடைக்காலம். மழையின்றி விளைச்சல் பாதித்ததால் சமவெளியில் இருந்த மனிதர்களின் சேமிப்புகள் எல்லாம் தீர்ந்தன. உண்ண உணவு ஏதும் இல்லாமல், மனிதர்கள், உணவு தேடி எங்கும் அலைந்துகொண்டிருந்தனர்.

எவ்வளவு கொடும்பஞ்சம் வந்தாலும் மலைவாழ் மக்களைக் கிழங்குகள் கைவிடாது. ஏழு வகைக் கிழங்குகள் மலையில் விளைகின்றன. நீரின்றிச் செடிகொடிகள் எல்லாம் செத்து மடிந்தாலும் மண்ணுக்குள் கிடக்கும் இந்தக் கிழங்குகள் மனிதனின் உணவுக்காக என்றென்றும் காத்திருப்பவை.

சித்திரவள்ளிக்கிழங்கும் காட்டுவள்ளிக் கிழங்கும் இதர கொடிகளும் மனிதர்கள் உண்ண எப்போதும் கிடைக்கக்கூடியவை. அவைகூட விளையாத கொடும்பஞ்சகாலம் என்றால் இருக்கவே இருக்கிறது நூரை, சவலன், நெடுவன், தீச்சி, நாச்சி, சம்பை, நூழி எனும் ஏழு வகையான கிழங்குகள். ஒவ்வொன்றும் வெவ்வேறு ஆழத்தில் விளைந்துகிடப்பவை. நிலம் அறிந்த மனிதர்கள் அந்தக் கிழங்குகள் இருக்கும் இடத்தை எளிதில் அடையாளம் கண்டு தோண்டி எடுப்பர்.வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P77f_1515567421

சமவெளியில் உண்ண வழியில்லாத நிலையில், பலரும் கிழங்குகளைத் தேடி மலைகளில் ஏறினர். போதன் என்பவன், பட்டினிகிடக்கும் தன் குடும்பத்தைக் காப்பாற்ற, கிழங்கு தேடிப் பச்சைமலையில் ஏறியுள்ளான். காலையிலிருந்து உச்சிப்பொழுது வரை தேடி அலைந்துள்ளான். மிகச்சிறிய அளவிலான இரு கிழங்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. ஆனாலும் விடாமல் தேடி அலையும்போது பாறை ஒன்றில் அமர்ந்திருந்த இளைஞனைப் பார்த்துள்ளான். இளைஞனின் காலில் ஏதோ காயம்பட்டுக் குருதி வழிந்து ஓடியது. பச்சிலைகளைப் பறித்து, காயத்தின்மீது தேய்த்தபடி உட்கார்ந்திருக்கிறான் அந்த இளைஞன். அவன் மலைமகன் என்பதை, பார்த்ததும் போதன் புரிந்துகொண்டான். `இவனிடம் கேட்டால் நமக்கு வழி பிறக்கும்!’ என நினைத்து, ``எத்திசை போனால் கிழங்கு கிடைக்கும்?” எனக் கேட்டான்.

அவன் பதில் ஏதும் சொல்லாமல் போதன் கையில் வைத்திருந்த இரு கிழங்குகளையே உற்றுப்பார்த்தான். ``கேள்விக்கு விடை சொல்லாமல், கைகளில் இருக்கும் கிழங்குகளையே பார்த்துக்கொண்டிருக்கிறாய்?” எனக் கேட்டான் போதன்.

அதற்கு அந்த இளைஞன், ``நீ கையில் வைத்திருப்பது நூழிக்கிழங்கின் வகை. புதிதாகச் சாப்பிடுகிறவர்களுக்கு இது ஒவ்வாது. இதில் உள்ள கருவிதைகள் செரிமானம் ஆகாது” என்றான்.

``வீட்டில் கொடும்பட்டினியில் கிடக்கிறார்கள். அவர்களின் பசிக்கு எதுவும் உணவுதான். புதிதாகக் கிழங்குகள் கிடைக்க வழியிருந்தால் சொல்” எனக் கேட்க, இளைஞனோ அருவி விழும் பாறையைக் காட்டி, “அந்தத் திசையில் போய்ப்பாருங்கள், சித்திரவள்ளிக்கிழங்கு கிடைக்கும்” என்றான்.

``சரி” என்று கூறிப் புறப்படும்போது போதன் கேட்டான், ``நீ பறம்பைச் சேர்ந்தவனா?”

``ஆம். எனது பெயர் கடுவன்.”

“அப்படியென்றால் உன்னை நம்பலாம்” எனச் சொல்லி, கையில் வைத்திருந்த நீர்க்குடுவையையும் கிழங்குகளையும் அவனிடம் கொடுத்துவிட்டு. “இதைப் பார்த்துக்கொள். நான் அந்த இடம் சென்று கிழங்கைத் தோண்டிவந்ததும் வாங்கிக்கொள்கிறேன்” என்றான்.

அலைந்து தவித்து, மிகவும் சோர்வுற்று இருக்கும் ஒருவன் சொல்கிறானே என்று கடுவனும் அதை வாங்கிக்கொண்டு அவனை அனுப்பிவைத்தான்.

போதன் சென்ற பிறகு காயங்களில் வழியும் குருதி நின்றுவிட்டதா எனப் பார்த்தபடி கடுவன் உட்கார்ந்திருந்தான். அவன் அருகில் போதன் வைத்துவிட்டுப் போன இரு கிழங்குகளும் நீர்க்குடுவையும் இருந்தன. சிறிது நேரத்தில் பெருமுயல் ஒன்று கடுவன் உட்கார்ந்திருந்த பாறையின் வலப்புறமாகத் தவ்விப் புதருக்குள் ஓடியது.

பார்த்தவுடன் கடுவனுக்கு போதனின் உயிரற்ற குரல் நினைவுக்கு வந்தது. கொடும்பட்டினியில் குடும்பம் கிடப்பதால் நூழிக்கிழங்கை எடுத்துப் போகிறான். `இது புதியவருக்குச் சேராதே!’ என நினைத்தவன், `இந்த முயலைப் பிடித்துக்கொடுத்தால் அவன் குடும்பத்துக்கு உணவாகும்’ எனச் சிந்தித்தபடி கையில் இருந்த மூங்கில்குச்சியை எடுத்துக்கொண்டு சட்டெனப் புதரை நோக்கித் தாவினான்.

அந்தப் புதர் முழுவதும் கிண்டிப் பார்த்தான், முயல் தென்படவில்லை. எந்தத் திசையில் போயிருக்கும் எனக் கால்தடம் பார்த்தான். எதுவும் தென்படவில்லை. மழைக்காலத்தில் எளிதில் தடம் அறியலாம், கோடையில் தடம் அறிவது கடினம். எங்கே போயிருக்கும் எனக் கணித்துக் கீழ்திசை நோக்கி, புதர்களைக் கிளறியபடி போனான். நீண்ட தொலைவு கீழிறங்கிச் சென்றான். முயல் அவனது கண்ணில் படவே இல்லை. மிகவும் சோர்வடைந்து பாறை நோக்கி நடந்தான்.

புதர்களுக்குள் நுழைந்து இங்குமங்கும் தேடியதில் குச்சிகள் கிழித்து, காயத்திலிருந்து மீண்டும் குருதி வழிந்தது. `பச்சிலையைத் தேய்ப்போம்!’ என எண்ணியபடி பாறையின் மீது ஏறி அமர்ந்தான். காய்ந்த குச்சிகளின் கீறல் அளவற்றதாக இருந்தன. `எப்படியாவது பிடிக்க வேண்டுமே என்ற பதற்றத்தில், நிதானமின்றிப் புதருக்குள் ஓடியுள்ளோம்’ என நினைத்தபடி பச்சிலையை எடுத்துத் தேய்த்தான்.

காயத்தில் எரிச்சல் அதிகமாக இருக்கிறதே என்று பற்களைக் கடித்துக்கொண்டே பாறையைப் பார்த்தான். வைத்துவிட்டுப் போன இடத்தில் அந்த இரு கிழங்குகளும் இல்லை. நீர்க்குடுவை மட்டும் ஓரத்தில் உருண்டுகிடந்தது. சற்றே பதற்றமடைந்து இங்குமங்குமாகத் தேடினான். எங்கும் இல்லை. ஏதோ விலங்கு வந்து அதைத் தின்றுவிட்டுப் போய்விட்டது என்பது தெரிந்தது.

போதன் வந்து கேட்டால் என்ன செய்வது என்ற பதற்றத்தில், பாறையைச் சுற்றி எங்காவது விழுந்துகிடக்கிறதா எனத் தேடினான். எதுவும் கண்களில் படவில்லை. நேரமாகிக்கொண்டிருந்தது. `அடுத்து என்ன செய்யலாம்?’ எனச் சிந்தித்தான். எங்கிருந்தாவது வேறு கிழங்குகளைத் தோண்டி எடுத்துவந்துவிடலாமா என எண்ணிக்கொண்டிருந்தபோது தொலைவில் போதன்  வருவது தெரிந்தது.

கடுவன், பதற்றத்தோடு அவனது வரவைப் பார்த்துக்கொண்டிருந்தான். போதனின் கையில் சித்திரவள்ளிக்கிழங்குகள் சில இருந்தன. சற்று மகிழ்வோடுதான் அவன் வந்தான். “நீ சரியான இடத்தைச் சொன்னாய், உனக்கு நன்றி” என்று சொல்லியபடியே பாறையின் மீதிருந்த நீர்க்குடுவையை எடுத்துக்கொண்டு கிழங்குகளைத் தேடினான். அவற்றைக் காணவில்லை. அப்பக்கம் இருக்குமோ என நினைத்து கடுவனின் பின்திசையில் பார்த்தான். அங்கும் இல்லை. தேடியபடியே, “எங்கே கிழங்குகள்?” என்றான்.

கடுவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தயக்கத்தில் சொற்கள் வரவில்லை.

போதனின் கண்கள் தேடியபடியே “கிழங்குகள் எங்கே?” என மீண்டும்  கேட்டான்.

தயக்கத்தோடு கடுவன் சொன்னான், ``அவற்றை ஏதோ விலங்கு தின்றுவிட்டது.”

அதிர்ச்சியானான் போதன். தலையை மறுத்து ஆட்டி “என்ன சொல்கிறாய்..?” எனக் கேட்டான்.

“முயலொன்று பார்வையில் பட்டது, உங்களுக்குக் கொடுக்கலாமே என அதைப் பிடிக்க ஓடினேன். அந்த நேரத்தில் ஏதோ ஒரு விலங்கு, கிழங்குகளைத் தின்றுவிட்டது” என்றான் மிகுந்த கவலையோடு.

அதிர்ச்சியிலிருந்து மீளாத போதன், “முயல் எங்கே?” என்றான்.

``பிடிக்க முடியவில்லை. தப்பிச்சென்று விட்டது.”

``என்னை ஏமாற்றப்பார்க்கிறாய். கிழங்குகளைத் தின்றுவிட்டு, என்னிடம் மறைக்க, பொய் சொல்கிறாய்” என்றான்.

கடுவன் மிகுந்த பதற்றத்துக்குள்ளானான், “நான் பொய் சொல்லவில்லை. உங்களுக்குக் கொடுக்கத்தான் முயலைப் பிடிக்கப் போனேன், அவசரத்தில் கிழங்கை எடுத்துக்கொண்டு போகாமல் இங்கேயே வைத்துவிட்டுப் போய்விட்டேன். அதுதான் நான் செய்த தவறு. என்னை மன்னியுங்கள்” என்றான்.

போதனோ, “நீ பறம்பைச் சேர்ந்தவன் என்பதால்தான் நம்பினேன், என்னை நீ ஏமாற்றிவிட்டாய்” என்றான்.

சொற்கள் கடுவனை நிலைகுலையச்செய்தன. அவன் மீண்டும் மீண்டும் தனது நிலையை விளக்கிச் சொல்ல முயன்றான். போதன் அவனது சொல்லை நம்பவில்லை. “கிழங்கை நீ உட்கொண்டுவிட்டு விலங்கின் மீது பழிபோடுகிறாய்” என்று உறுதியாகச் சொன்னான்.

“சரி, தின்று முடித்துவிட்டாய். இனி நான் புலம்பி என்ன ஆகப்போகிறது, கொடும்பஞ்சம் பறம்பு மக்களையும் மாற்றிவிட்டது” என்று துயருற்றுப் புலம்பியபடியே புறப்பட்டான் போதன்.

சிறு பாறையின் மீது நின்றுகொண்டிருந்த கடுவன் இடுப்பில் இருந்த குறுங்கத்தியை எடுத்தபடி, ``ஒரு கணம் நில்லுங்கள்” என்றான்.

நடக்கத் தொடங்கிய போதன் நின்று அவனைத் திரும்பிப் பார்த்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P77g_1515567442
பாறையின் மீது இருந்த கடுவன், குறுங்கத்தியை அடிவயிற்றின் இடப்புறம் அழுத்தி உள்நுழைத்தான்.

போதனுக்கு அவன் என்ன செய்கிறான் என்பது புரியவில்லை.

அடிவயிற்றின் இடப்புறம் உள்நுழைத்த கத்தியை வலப்புற முனைவரை கண்ணிமைக்கும் நேரத்தில் இழுத்தான்.

அப்போதுதான் போதனுக்கு அவனது செயல் புரிந்தது.

கத்தியை இழுத்துக்கொண்டிருக்கும்போதே கடுவன் சொன்னான், “எனது வயிற்றில் கிழங்கேதும் இருக்கிறதா எனப் பாருங்கள். செரிமானம் ஆகாத கருவிதைகள் ஒன்றேனும் இருக்கிறதா எனவும் பாருங்கள்” என்று சொல்லியபடி வேலையை முடித்தான்.

பதறிய போதன் அவனை நோக்கி ஓடும்போது பாறையிலிருந்து சரிந்துகொண்டிருந்தான் கடுவன். “என்னை மன்னித்துக்கொள்” என போதன் கதறியபடி அவனது தலையை ஏந்திப்பிடித்தபோது கடுவன் சொன்னான், “பறம்பின் மக்கள், நம்பிக்கைக்கு துரோகம் இழைக்க மாட்டார்கள்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 13, 2018 12:43 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P69h_1516185037
ஞ்சித்துறைக்கு அதிகாலையிலேயே வந்துவிட்டான் உதியஞ்சேரல். மன்னன் வந்ததால் பிற வணிக நடவடிக்கைகள் எல்லாம் சற்றே நிறுத்திவைக்கப் பட்டிருந்தன. அரச மாளிகையில் விருந்தினராகத் தங்கியிருந்த ஹிப்பாலஸுக்குச் செய்தி தெரிந்தபோது விடிந்து நீண்ட நேரமாகியிருந்தது. உதியஞ்சேரல் அதிகாலையிலேயே எழுந்து துறைமுகத்துக்கு ஏன் போனான் என்ற காரணம் புரியாத குழப்பத்தில் வேகவேகமாகப் புறப்பட்டு, துறைமுகம் நோக்கி விரைந்தான்.

யவனக் காவல் வீரர்கள் அறுவர் சூழ அவனது வண்டி புறப்பட்டது. புறப்படும் நேரத்தில் வந்து அவனுடன் இணைந்தான் திரேஷியன். பெரும்படையையும் வழிநடத்திச் செல்லும் வல்லமைகொண்ட அவனை ஹிப்பாலஸ் எந்நேரமும் உடன்வைத்துக்கொண்டான். இருவரும் துறைமுகம் அடைந்தபோது சேர அமைச்சன் நாகரையன் இருவரையும் வரவேற்றான்.

துறைமுக மாளிகையில் அரசன் இருப்பதாகக் கூறி, இருவரையும் அங்கு அழைத்துச்சென்றான். உதியஞ்சேரல், தன் தளபதி துடும்பனோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். ஹிப்பாலஸ் இங்கு வந்து நாள்கள் பல ஆகிவிட்டன. ஆனால், குட்டநாட்டுத் தளபதியை இதுவரை பார்க்கவில்லை. அரசவையிலும் அவன் இல்லை. போர் நடவடிக்கையில் தீவிரமாக இருப்பதால் தளபதி அவைக்கு வந்து சேர நாளாகும் என, விசாரித்ததில் தெரியவந்தது. அவன் எங்கு போயிருக்கிறான் என்பது அரண்மனையில் உள்ளவர்களுக்கே தெரியவில்லை. இதுபோன்ற செய்திகளைப் பெறுவது யவனர்களுக்குக் கடினமில்லை. ஆனால், அரசனைத் தவிர வேறு யாருக்கும் இந்தச் செய்தி தெரியவில்லை என்பதை ஹிப்பாலஸ் உறுதிப்படுத்திக்கொண்டான். அதனால்தான் தளபதியின் நடவடிக்கையை அறியவேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P69i_1516185009
அரண்மனை நடவடிக்கைகளை அறிந்துகொள்வதில் பெருவணிகர்கள் எப்போதும் மிகக் கவனமாக இருப்பர். அவர்களால்கூட இந்தச் செய்தியை அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், சற்றும் எதிர்பாராமல் இன்று காலை துறைமுக மாளிகையில் அரசனோடு அமர்ந்திருந்தான் தளபதி துடும்பன். ஹிப்பாலஸும் திரேஷியனும் இன்றுதான் அவனை முதன்முதலாகப் பார்க்கின்றனர். முதல் தோற்றத்திலேயே அவன்தான் குட்டநாட்டுத் தளபதி என்பதை அவர்களால் ஊகிக்க முடிந்தது.

திரேஷியன்போல மிக உயரமான உருண்டு திரண்ட உடலமைப்போடு இருந்தான் துடும்பன். யவன விருந்தினரை எழுந்து வணங்கினான். ஹிப்பாலஸ் மன்னனுக்கு முகம்மன் கூறி இருக்கையில் அமர்ந்தான்.

``அதிகாலையிலேயே வந்துவிட்டீர்களா மன்னா?” என்று பேச்சைத் தொடங்கினான் ஹிப்பாலஸ்.

``ஆம். கப்பல்கள் வந்துவிட்ட செய்தி கிடைத்ததும் புறப்பட்டு வந்தேன்” என்றான்.

என்ன கப்பல், எங்கிருந்து வந்துள்ளது என்று எந்த விளக்கமும் இல்லாமலிருந்தது உதியஞ்சேரலின் கூற்று.

சற்று அமைதிக்குப் பிறகு ஹிப்பாலஸை அழைத்துக்கொண்டு மாளிகையின் பின்புறப் படிக்கட்டின் வழியாக மேல்மாடத்துக்கு நடந்தான் உதியஞ்சேரல். துடும்பனும் திரேஷியனும் கீழேயே இருந்தனர்.

துறைமுகத்தில் வரிசைகொண்டு நிற்கும் கப்பல்களை மேல்மாடத்திலிருந்து பார்த்தனர் இருவரும். துறைமுகம் எங்கும் படைவீரர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதையும் புதிதாக நிறைய கப்பல்கள் வந்துள்ளதையும் பார்த்தபடி ஹிப்பாலஸ் நின்றுகொண்டிருந்தான்.

``நான் நீண்டகாலம் எதிர்பார்த்துக் காத்திருந்தது இன்று வந்து சேர்ந்துள்ளது” என்றான் உதியஞ்சேரல்.

``உங்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியே அதை உணர்த்துகிறது” என்றான் ஹிப்பாலஸ்.

``சாலமலையைக் கடந்தே பறம்பின் எல்லைக்குள் நம்மால் நுழைய முடியும். படைகள் எளிமையாக நுழையக்கூடிய வாகான பகுதிகள் மூன்று இடங்களில் இருக்கின்றன. அவற்றின் வழியே உள்நுழைவதற்குத்தான் இதுவரை முயன்றுள்ளோம். அவ்வாறு முயலும்போதெல்லாம் எளிய வழியிலிருந்து அடர்காட்டு வழியே நம்மை உள்ளிழுத்துத் தாக்கும் திட்டத்தை நிறைவேற்றுவான் பாரி. இந்த முறை நமது திட்டமே அடர்காட்டு வழியே உள்நுழைவதுதான் என்று நான் முடிவுசெய்துள்ளேன். அதற்கான ஏற்பாடுகள் முடிவுறுவதற்காகத்தான் நான் காத்திருந்தேன்’’ என்று சொல்லியபடியே மாடத்திலிருந்து கீழிறங்கி, துறைமுகம் நோக்கி நடந்தான் உதியஞ்சேரல். அவனைப் பின்தொடர்ந்தான் ஹிப்பாலஸ்.

வந்து நிற்கும் புதிய கப்பல்களிலிருந்து பொருள்களை இறக்குவதற்கான ஆயத்தவேலைகள் தீவிரமாகிக் கொண்டிருந்தன. எண்ணற்ற படைவீரர்கள் வரிசையாக வந்து நின்றவண்ணம் இருந்தனர். இவர்கள் என்ன பொருளை இறக்கப் போகிறார்கள் எனத் தெரியாத குழப்பத்தில் இங்கும் அங்கும் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தான் ஹிப்பாலஸ்.

`இதைத் தாண்டி அருகில் செல்ல வேண்டாம்’ என்று மன்னருக்குச் சொல்வதற்காக, குறிப்பிட்ட இடத்தில் நின்றுகொண்டிருந்தான் துடும்பன். அந்த இடம் வந்ததும் உதியஞ்சேரல் நின்றான். உடன் வந்த ஹிப்பாலஸும் மன்னனோடு சேர்ந்து நின்று கொண்டான். காலை நேரக் கடற்காற்று சற்று அதிகமாக வீசியது. அலைகள் விடாது வந்து கரை மோதி ஓசை எழுப்பியபடியிருந்தன. படைவீரர்கள் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

``அப்படி என்னதான் கொண்டு வந்திருக்கிறார்கள்?’’ என்று ஹிப்பாலஸ் ஆவலோடு கலன்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். திடீரென ஊளையிடும் ஓசை கேட்டது. எங்கிருந்து இந்த ஓசை வருகிறது என அவன் சிந்திப்பதற்குள் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணற்ற ஓசைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பேரோசையாக மாறி, கரையில் நிற்பவர்களை நடுங்கச் செய்தன.

உதியஞ்சேரல், ஒரு கணம் மிரண்டு நின்றான். ஹிப்பாலஸுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி, அளவிட முடியாததாக இருந்தது. ``அந்தக் கப்பலுக்குள் என்னதான் இருக்கிறது? அலையை மிஞ்சும் பேரோசை நம்மை  நிலைகுலையவைக்கிறது” என்றான்.

ஏற்பட்ட அதிர்ச்சியைக் கடந்து மகிழ்ச்சியை வெளிக்காட்டத் தொடங்கினான் உதியஞ்சேரல். ``இதைக் கொண்டுவரத்தான் இவ்வளவு காலமானது. கடைசியாகக் கொண்டுவந்து சேர்த்துவிட்டான் என் தளபதி” என்று பாராட்டினான். தோள் தட்டிப் பாராட்டு பெறும் துடியனின் பக்கம் திரும்ப ஹிப்பாலஸ் முயன்றான். ஆனால், அவனுடைய கண்களோ கப்பலைவிட்டு அசையவில்லை. அங்கு தீவிரமான வேலை ஏதோ நடந்துகொண்டிருக்கிறது.

கப்பலின் அடித்தளத்திலிருந்து பெரும்மரச்சட்டங்களின் வழியிலான நாற்சதுரக் கூடுகளை இரும்புக்கம்பிகளால் கட்டி மேலேற்றிக்கொண்டிருந்தனர். ஊளையின் ஓசை பெருகியபடியே இருந்தது. அதைவிடப் பெருங்குரலில் பேசினான் உதியஞ்சேரல், ``இந்தக் கப்பல் எங்கிருந்து வந்துள்ளது தெரியுமா?”

`தெரியாது’ என்று ஹிப்பாலஸ் தலையை மறுத்து ஆட்டினான்.

``நக்கவாரத் தீவிலிருந்து.”

அதிர்ந்தான் ஹிப்பாலஸ். ``அந்தத் தீவுக்குள் மனிதக்கறி தின்னும் மனிதர்கள் மட்டுமே இருப்பதாகத்தானே கேள்விப்பட்டுள்ளேன். அங்கு எப்படி?”

அந்தத் தீவு மிக நீளமானது. அதன் கீழ்ப்புறம் மனிதக்கறி தின்னும் மனிதர்கள் உள்ளனர். மேற்புறம் இன்னொரு மனிதக்கூட்டம் உள்ளது. அவர்களுடன்தான் நாம் உறவை உருவாக்கியுள்ளோம்.”

மரச்சட்டத்தால் ஆன பெருங்கூண்டு ஒன்றை, கப்பலின் மேல்தளத்திலிருந்து கரைக்குக் கொண்டுவர முயற்சி நடந்தது. அடித்தொண்டையைக் கிழித்துக்கொண்டு அவை வெளிப்படுத்திய பேரோசை, வீரர்களை அஞ்சி நடுங்கவைத்தது. ஆனால், அந்த மரச்சட்டகங்களைக் கொண்டுவந்த அந்தத் தீவுவாசிகள் அந்த ஓசையைப் பொருட்படுத்தவேயில்லை.

கழுத்தை மேலும் உயர்த்தியபடி பார்த்துக்கொண்டிருந்த ஹிப்பாலஸின் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை.

``நிலப்பரப்பெங்கும் இல்லாத புது வகையான விலங்கு இது” என்றான் உதியஞ்சேரல். ஹிப்பாலஸின் ஆர்வம் எல்லை கடந்ததாக இருந்தது. முழு விசையோடு மரச்சட்டகங்களைச் சறுக்குப்பலகையின் வழியே கப்பலின் மேலிருந்து கரைக்கு இறக்கினர். மீண்டும் ஊளையிடும் ஓசை, காற்றைக் கிழித்துக்கொண்டிருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P69f_1516184995
உதியஞ்சேரல் சொன்னான், ``இவைதான் தோகைநாய்கள்.”

ஹிப்பாலஸ் கேள்விப்பட்டதில்லை. ஊளையிடும் ஓசையின் மிரட்டல் ஒருபக்கம். அவற்றை மரச்சட்டங்களின் வழியாகக் கட்டியிழுக்க வீரர்கள் படும் பாட்டைப் பார்த்தபடி, உதியஞ்சேரலின் கூற்றைக் கேட்கத் தொடர்ந்து முயன்றான் ஹிப்பாலஸ். தலையை இந்தப் பக்கம் திருப்புவதா அந்தப் பக்கம் திருப்புவதா என்ற குழப்பம் கணம்தோறும் ஏற்பட்டபடி இருந்தது.

அருகில் இருந்த துடும்பன்தான் சொன்னான், ``தீவுகளில் மிகக் கொடுமையான மனிதர்களும் விலங்குகளும் இருப்பது நக்கவாரத் தீவில்தான். அந்தத் தீவில் உள்ளதிலேயே மிகக் கொடுமையான விலங்கினம் இதுதான்.

கீரியைப்போன்ற நீள்வடிவ உடலும் வாலும் கொண்ட அமைப்பு. வால் நிறைய தோகையும் கொண்டது. நாயின் அளவு உயரம் உடையது. உடல் நீளத்தில் மூன்றில் ஒரு பங்கு அதனுடைய நீள்வாய். குதிரையின் கழுத்துப் பகுதியை ஒரே கடியில் எடுத்துவிடக்கூடியது. இதன் சிறப்பே தரையில் எவ்வளவு வேகமாக ஓடுமோ அதே அளவு வேகத்தோடு புதரின் மீதும் மரக்கொப்பின் மீதும் ஓடுவதுதான். மரத்தின் மீதிருந்து பாய்ந்து கீழிறங்கும்போது அதன் வால் பகுதி சிலிர்த்து தோகை முழுவதும் விரிந்துவிடும். பெரும் ஊளையோடு மரத்தின் மீதிருந்து விரிந்த தோகையோடு பாய்ந்து இறங்கும் இதைப் பார்த்தால் எப்படையும் சிதறித் தெறிக்கும்.

குறிப்பாக, அடர்காட்டில் எதிரியின் படையில் இருக்கும் விலங்குகளை அழிக்க,  இதற்கு இணையான இன்னொரு விலங்கு இல்லை. பாரியின் பெரும்பலமாக எல்லோரும் சொல்வது அவனது குதிரைப்படையைத்தான். தோகைநாயின் தாக்குதலால் அவனது குதிரைப்படை உருத்தெரியாமல் அழியும்” என்றான்.

ஊளையிடும் ஓசை காதடைக்கச் செய்தது. காலை வெயில் சுள்ளென அடித்துக்கொண்டிருந்தது. ஹிப்பாலஸால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. துடும்பன் விடாமல் பேசினான். பல நாள்களாகக் கடற் பயணம் செய்ததால், தோகைநாயின் ஓசை துடும்பனுக்குப் பழகிவிட்டது. ஆனால், மற்றவர்களுக்கு அப்படியல்ல. ஒவ்வொரு மரச்சட்டகத்திலும் மூன்று தோகைநாய்கள் இருப்பதுபோல வடிவமைத்திருந்தனர்.

ஹிப்பாலஸ், சட்டகங்களுக்குள் அதன் உருவத்தை உற்றுப்பார்க்க முயன்றான். ஆனால், நிற்காமல் அது உள்ளுக்குள் சுழன்றபடி பெருங்கத்தல்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. இதற்குமேல் இந்த இடத்தில் நிற்க வேண்டாம் என முடிவுசெய்து, ``மாளிகைக்குப் போவோமா?” எனக் கேட்டான். சரியெனச் சொல்லி அழைத்துவந்தான் உதியஞ்சேரல்.

மாளிகைக்கு வந்ததும் இருவருக்கும் பழச்சாறு கொடுக்கப்பட்டது. அருந்தியபோதுதான் சற்று தெளிச்சி வந்தது. ஆனால்,  ஊளையின் ஓசை நிற்காமல் கேட்டுக் கொண்டே இருந்தது. இந்த நாய்களைப் போரில் பயன்படுத்த, தீவிலிருந்து கொண்டுவரப்பட்ட மனிதர்களும் மரச்சட்டகங்களுக்குப் பக்கத்தில் வந்துகொண்டிருந்தனர். அவர்களின் உடலமைப்பும் உடலின் மேல் தொங்கிக்கொண்டிருக்கும் பொருள்களும் காண்போரை நடுங்கச்செய்வதாக இருந்தன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P69e_1516184961
ஹிப்பாலஸின் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருந்தன. ஆனால், உதியஞ்சேரலின் எண்ணங்கள் நிதானம்கொண்டிருந்தன. ``கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் தொடர்ந்து முயன்றுவருகிறோம். குடநாட்டினரும் அவ்வப்போது முயல்கின்றனர். அப்படியிருந்தும் பறம்புநாட்டை வீழ்த்த முடியவில்லை. அதற்கான அடிப்படைக் காரணம் என்ன தெரியுமா?”

மற்ற எல்லோரையும்விட பறம்பை மிக நன்கு புரிந்துவைத்துள்ளவன் உதியஞ்சேரல்தான் என்பது ஹிப்பாலஸுக்குத் தெரியும். எனவே, அவனது கேள்விக்கு சிந்தித்து விடை சொன்னான், ``அரண் அமைத்து நிற்கும் பறம்புநாட்டின் மலைகள்தான் காரணம்.”

``இல்லை” என்றான் உதியஞ்சேரல்.

தொடர்ந்து அவன் சொல்லப்போகும் சொல்லை உற்று கவனித்தான் ஹிப்பாலஸ். தோகைநாயின் நீள் ஊளை சத்தம் காதுகளுக்குள் இடைவிடாது  அறைந்துகொண்டிருந்தது.

ஓசைகளில் எத்தனையோ வகையுண்டு. அவற்றில், வெளிப்புறம் பெருக்கெடுக்கும் ஓசை ஒரு வகை. ஆனால், சில ஓசைகள் உள்ளுக்குள் கூர்மைகொண்டு இறங்கக்கூடியவை; ஆழ்மனதில் இருக்கும் அச்சங்களை எளிதில் கிளறிவிடக்கூடியவை. தோகைநாயின் ஓசை வெளிப்புறமும் பெருக்கெடுக்கிறது. அதே நேரத்தில் ஆழ்மன அச்சத்தையும் விடாமல் கிளறுகிறது. எனவே, மனதை நிலைகொள்ளச் செய்ய முடியவில்லை. அந்த ஓசை நின்ற கணத்தில் உதியஞ்சேரல் சொன்னான், ``பறம்பின் மலைகள் அல்ல, பாதைகள்தான் காரணம்.”

ஹிப்பாலஸுக்குப் புரியவில்லை. ``என்ன சொல்கிறாய்?” என்றான்.

``பறம்புநாடு முழுவதும் மனிதர்கள் உருவாக்கிய பாதைகளே கிடையாது என்பது மட்டுமல்ல, மனிதர்கள் பாதைகளை உருவாக்கக் கூடாது என்பதிலும் பாரி திடமான முடிவோடு இருக்கிறான்.’’

``பாதையை உருவாக்காதது பெரும்பலம் என்று சொல்ல முடியுமா?”

``அவன் இருப்பிடம் நோக்கி எப்படிப் போவது?” என மறுகேள்வி கேட்டான் உதியஞ்சேரல்.

ஹிப்பாலஸ் சற்றே அமைதியானான்.

``இப்பெரும் மலைத்தொடர் இயற்கையின் பேரரண். இதில் எவ்வியூர் எங்கே இருக்கிறது? போய்த் திரும்பும் ஒற்றர்களுக்கும் பாணர்களுக்கும் எவ்வியூர் எப்படி இருக்கிறது என்றுதான் சொல்லத் தெரிகிறதே தவிர, எங்கே இருக்கிறது எனச் சொல்லத் தெரியவில்லை. ஒவ்வொருவனும் ஒவ்வொரு திசையையும் குறிப்பையும் சொல்கிறான். ஒன்றுபோல் சொன்ன இரண்டு ஒற்றர்களை இதுவரை நான் காணவில்லை.”

ஹிப்பாலஸ் மலைத்துப்போய்க் கேட்டுக்கொண்டிருந்தான்.

``நாம் மலைக்குள் படை நடத்திப் போவதெல்லாம் தோராயமான கணிப்பில்தான்” என்று உதியஞ்சேரல் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஹிப்பாலஸ் கேட்டான், ``அப்படியென்றால் பறம்பு மலைத்தொடர் முழுவதும் பாதைகளே இல்லையா?”

``உண்டு. விலங்குகள் உருவாக்கிய பாதைகள் உண்டு.”

``அதைப் பயன்படுத்தி முன்னேற முடியாதா?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P69d_1516184937
வலதுகையை நீட்டியவுடன் இன்னொரு குவளை பழச்சாறு கொடுக்கப்பட்டது. அதை வாங்கி அருந்தியபடியே உதியஞ்சேரல் சொன்னான், ``காடுகளில் பாதைகளை விலங்குகளே உருவாக்குகின்றன. அதிலும் குறிப்பாக, யானைகள்தான் பெரும்பாலான பாதைகளை உருவாக்கக்கூடியவை. வேறு சில விலங்குகளும் பாதைகளை உருவாக்குகின்றன.”

ஹிப்பாலஸ் இரண்டாம் குவளை பழச்சாற்றில் பாதி குடித்தபடி அவசரமாகக் கேட்டான், ``யானைப் பாதையை மனிதர்களால் பயன்படுத்த முடியுமல்லவா?”

``முடியும். காட்டு வழிகளில் அமைந்துள்ள பாதைகள் எல்லாம் விலங்குகள் உருவாக்கிய பாதைகள்தான். அதன் பிறகு மனிதர்கள் தமது தேவைக்காக அதை விரிவுபடுத்தி அமைத்துக்கொள்கின்றனர். ஆனால், பறம்பில் அந்த வேலை எதுவும் நடக்கவில்லை. ஆனாலும் விலங்குப் பாதைகளைத் துல்லியமாகக் கணித்து நடக்கக்கூடிய மலைமக்கள் நிறையபேர் நம்மிடம் உண்டு”.

``அவர்களை முன்களத்தில் பயன்படுத்தி, சிக்கலைத் தீர்க்க முடியாதா?’’

``முடியாது.”

``ஏன்?” என்று வேகமாகக் கேட்டான் ஹிப்பாலஸ்.

சற்றே நக்கலான சிரிப்போடு உதியஞ்சேரல் சொன்னான், ``விலங்குகளின் பாதைகள் எல்லாம் எவ்வியூருக்கா போய்ச் சேர்கின்றன? பாரி, காட்டு மனிதர்களின் கூட்டத்துக்குத்தான் தலைவன்; காட்டு விலங்குகளுக்கு அல்லவே!’’
அதிர்ந்து பார்த்தான் ஹிப்பாலஸ்.

குடித்து முடித்த குவளையைக் கீழே வைத்தபடி உதியஞ்சேரல் சொன்னான், ``விலங்குகளின் எல்லாப் பாதைகளும் இறுதியாகப் போய் முடிவது ஏதாவதொரு நீர்நிலையில்தான்.”

ஹிப்பாலஸ் கண்கள் அசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். சமவெளி மக்களின் வாழ்வுக்கு அடிப்படையாக இருப்பது மேய்ச்சல். ``மலைவாசிகளுக்கு மேய்ச்சல் தெரியாது. நாயைத் தவிர எதையும் வளர்த்துப் பழகாதவர்கள். மடுவிலிருந்து பால் பீச்சிக் குடிக்கத் தெரியாத அறிவிலிகள்” என்றான், சற்றே கோபத்தோடு.

`பாதைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், இதை ஏன் சொல்கிறான்?’ என ஹிப்பாலஸ் சிந்தித்துக்கொண்டிருக்கையில் உதியஞ்சேரல் சொன்னான், ``மேய்ச்சல் தெரிந்த மனிதர்களாக இருந்தால் மலையில் எவ்வளவு தொலைவு ஆவினங்களை மேய்த்தாலும் இரவில் வந்து ஊரடைவார்கள். இயல்பாகவே அந்த ஊரை நோக்கிப் பல பாதைகள் உருவாகிவிடுகின்றன. ஆனால், அங்கு அதற்கும் வழியில்லை” என்றான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P69c_1516184911
``எந்தப் பாதையையும் பாரி உருவாக்கிக்கொள்ளவில்லையா?”

``பெரும்பாலும் விலங்குகளின் பாதைகளையே பயன்படுத்துகிறான். தேவையான இடங்களில் மட்டும் விலகிச் செல்ல சிறுபாதைகளை உருவாக்கியுள்ளான். ஆனால், அவை மற்றவர்கள் கண்டறிய முடியாதபடி இருக்கின்றன. விலங்குகளின் பாதைகளிலிருந்து அவர்கள் எந்த இடம் பிரிந்து செல்ல வேண்டும் என்பதற்கான குறிப்பு அல்லது அடையாளம் எது என இன்று வரை தெரியவில்லை. அடையாளம் தெரியாமல் பாதையை விட்டு சற்று விலகினாலும் போதும், அடர்காட்டுக்குள் மீள முடியாமல் சிக்கிக்கொள்வோம்” என்றான்.

``அவனிடம் வலிமையான குதிரைப்படை இருக்கிறது என்கிறாய். குதிரைப்படையை வைத்துள்ள ஒருவன் எப்படி பாதைகளின் அடையாளங்களைப் பிறருக்குத் தெரியாமல் காப்பாற்ற முடியும்?”

“இன்றுவரை அவனால் முடிகிறது. நான் அறிந்தவரை பறம்பில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அந்தப் பாதை பற்றிய குறிப்பு தெரியும் என்று கருதுகிறேன்.”

``இது படை நடத்துவதற்கான அடிப்படையான சிக்கல். இதற்கு வழிவகை தெரியாமல் போர் தொடுக்க முடியாதே?”

``ஆம்” என்று மகிழ்வோடு சொன்ன உதியஞ்சேரல், ``இதற்கு வழிவகை தெரிந்ததால்தான் இப்போது போர் தொடுப்பதற்கான முயற்சியைத் தீவிரப்படுத்துகிறேன்.”

சற்றும் எதிர்பாராத பதிலாக இருந்தது. ஆர்வத்தோடு ஹிப்பாலஸ் கேட்டான், ``இந்தச் சிக்கலுக்கு என்ன வழிவகை கண்டாய்?”

பெரும் ஊளை ஓசை மீண்டும் கேட்டது. அடுத்த கப்பலிலிருந்து மரச்சட்டகங்களை இறக்கத் தொடங்கிவிட்டனர் என்பது தெரிந்தது. ஆனால், முன்பைவிட இந்த ஓசை இன்னும் கூர்மையாகக் காதின் உள்மடிப்புகளில் போய்க் குத்துவதாக இருந்தது. ஹிப்பாலஸ் தனது விரல்களால் காதுத் துளையை அடைப்பதற்காகக் கைகளைக் கொண்டுசென்றபோது, ஓசையோடு சேர்ந்து உதியஞ்சேரல் பீறிட்டான், ``தோகைநாய்கள்...”

`ஆமாம் தோகைநாய்கள்தான் கத்துகின்றன. இதை ஏன் மீண்டும் மீண்டும் சொல்கிறான்?’ என்று ஹிப்பாலஸ் எண்ணியபோது கேள்விக்கான விடையாக இதைச் சொல்கிறான் என்பது புரிந்தது.

ஆத்திரம் கலந்த ஆர்வத்தோடு முன்பல்லைக் கடித்துக்கொண்டே உதியஞ்சேரல் சொன்னான். ``முன்கள தோகைநாயை பறம்பின் குதிரைப்படையின் மீது ஏவிவிட்டால், அது குதிரைகளின் குரல்வளையை அறுத்தெரியும். இது என்ன வகை விலங்கு? இதை எப்படி வீழ்த்துவது எனத் தெரியாத குழப்பத்தில் குதிரைப்படையின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு, பின்வாங்கத் தொடங்குவார்கள் எதிரிகள். திரும்பிச் செல்லும் குதிரைகளைப் பின்தொடர்ந்து கடைசி வரை போகக்கூடியது தோகைநாய். அடர்காட்டுக்குள் மறைந்தபடி தொடரும் தோகைநாயை எளிதில் அவர்களால் வீழ்த்திவிட முடியாது. குதிரைப்படைகள் போய்ச் சேரும் கடைசி எல்லை வரை ஒரு தோகைநாய் போய்ச் சேர்ந்தால் போதும். கைவசம் இருக்கும் மீதத் தோகைநாய்கள் அதன் வாசனை பிடித்தே எந்த எல்லைக்கும் போய்விடக்கூடியவை.

குதிரைப்படையின் அழிவும் எவ்வியூர் நோக்கிய வழியும் ஒருங்கே நமக்குக் கிடைக்க உள்ளன. இந்தப் புதிய விலங்கின் எதிர்பாராத தாக்குதல் எதிரிகளை நிலைகுலையச் செய்துவிடும். அவர்களின் தாக்குதலால் தோகைநாய்கள் சில மரணிக்கலாம். ஆனால், அவர்களின் குதிரைகளை முழுமுற்றாக இவற்றால் அழிக்க முடியும். இவற்றின் குருதி தாகவேட்டை, எதையும் மிச்சம் வைக்காது.”

ஹிப்பாலஸ் வியந்தபடி கேட்டுக்கொண்டிருந்தான். தோகைநாயின் ஓசையைவிட ஆழத்தில் இறங்கிக்கொண்டிருந்தது உதியஞ்சேரலின் குரல். அவனது நுட்பமான திட்டமிடுதல், ஹிப்பாலஸை திகைப்பிலிருந்து மீள முடியாமல் செய்துகொண்டிருந்தது.

``மாலை அரண்மனைக்கு வாருங்கள், எனது முழுத்திட்டத்தையும் விளக்குகிறேன்” என்று சொல்லி விடைபெற்றான் உதியஞ்சேரல்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P69b_1516184877
துறைமுகத்திலிருந்து வஞ்சி மாநகரின் விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்தான் ஹிப்பாலஸ். பகல் உணவு ஆயத்தமாக இருந்தது. ஆனால், அவனது எண்ணங்கள் உதியஞ்சேரலின் தீர்மானமான குரலிலிருந்து விடுபட முடியாதபடி இருந்தன.

நீண்ட நேரம் கழித்துதான் உணவருந்த வந்தான். அவனது வருகைக்காக திரேஷியன், எபிரஸ், கால்பா, பிலிப் ஆகிய நால்வரும் காத்திருந்தனர். உணவு மேசையிலும் அவனது வியப்பின் குரல் தொடர்ந்தது. உணவருந்திவிட்டு மீண்டும் பேசினான்.

``பாண்டியனின் செல்வச் செழிப்பையும் படையின் வலிமையையும் ஒப்பிட்டால் சேரனின் வலிமை சிறியதுதான். ஆனால், பறம்பைக் கைப்பற்றும் திட்டத்தில் சேரன் பெற்றிருக்கும் அனுபவமும் அவனது அறிவுநுட்பமும் பெரும்வியப்பில் ஆழ்த்துகின்றன. பாண்டிய பெரும்படை கீழ்த்திசையிலிருந்து முன்னேறும்போது சேர அரசர்கள் இருவரும் ஒருங்கிணைந்து தாக்குதல் திட்டத்தை முன்னெடுத்தால் பறம்பின் அரசனால் சில நாள்களுக்குக்கூடத் தாக்குப்பிடிக்க முடியாது என்றே கருதுகிறேன்” என்றான் ஹிப்பாலஸ்.

எபிரஸ் பேசத் தொடங்கினான். வழக்கமாக இதுபோன்ற பேச்சுகளில் மாலுமி கருத்து சொல்வது கிடையாது. ஆனால், இங்கு இருக்கும் யாரையும்விட, தமிழ்த் துறைமுகங்களுடனும் மன்னர்களுடனும் மிக நீண்டகாலப் பழக்கம் கொண்டவன் அவன்தான். எனவே, அவனது கருத்துக்கு ஹிப்பாலஸ் மிகுந்த மதிப்பு கொடுப்பான். எபிரஸும் எளிதில் பேசக்கூடியவன் அல்லன். ஆழ்கடலின் அமைதி எப்போதும் அவனுள் குடிகொண்டிருக்கும், மிகச்சில நேரங்களில்தான் அமைதியைக் கலைப்பான்.

``சேர அரசர்களான குடநாட்டு மன்னனும் குட்டநாட்டு மன்னனும் எத்தனையோ முறை பறம்பின் மீதான தாக்குதலை நடத்தியுள்ளனர். ஒவ்வொரு முறையும் இதுபோல புதிய உத்திகளைக் கண்டறிந்து அந்த நம்பிக்கையில்தான் தாக்குதலைத் தொடங்குகின்றனர். ஆனாலும், அவர்களால் தொடக்கக் கட்டத்தைக்கூடத் தாண்ட முடியவில்லை” என்று மட்டும் சொல்லி நிறுத்திக்கொண்டான் எபிரஸ்.  

``அது உண்மையாக இருக்கலாம். இப்போது முழு வீச்சில் இறுதிப்போருக்கு ஆயத்தமாகி விட்டார்கள். பாண்டியனும் பறம்பை நோக்கிப் படையைக் கிளப்பப் போகிறான் எனத் தெரிந்ததும், நிலைமையை இன்னும் தீவிரப் படுத்தியுள்ளனர். ஏனென்றால், அதன் பலன் தங்களுக்கே கிட்ட வேண்டும் என்று அவர்கள் மிக உறுதியாக உள்ளனர். இந்தப்  படையெடுப்பைப் பற்றி முழுமையாக விளக்கத்தான் இன்று இரவு என்னை அழைத்துள்ளான்” என்றான் ஹிப்பாலஸ்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P69a_1516184848
அவர்கள் தொடர்ந்து பேசியபடியிருந்தனர். இரவு கவியத் தொடங்கியது. அரண்மனையின் அழைப்புக்காக ஆவலோடு காத்திருந்தான் ஹிப்பாலஸ். அதுவரை அவனோடு பேசிக்கொண்டிருந்தனர் மற்ற நால்வரும். பொழுது நீண்டுகொண்டேபோனது. அழைப்பு ஏதும் வரவில்லை. காரணமும் புரியவில்லை. ஆனாலும் காத்திருந்தான்.

`மிகுந்த உற்சாகத்தோடு உதியஞ்சேரல் சொல்லிச் சென்றானே... பிறகு ஏன் இன்னும் அழைக்காமல் இருக்கிறான்?’ என்று சிந்தித்தபடியிருந்தான் ஹிப்பாலஸ். முன்னிரவு முடியும் நேரம் நெருங்கிவிட்டது. இனி அழைப்பு வர வாய்ப்பில்லை எனத் தெரிந்து தூங்கச் சென்றனர். 

ஹிப்பாலஸால் தூங்க முடியவில்லை. உதியஞ்சேரல் சொன்ன செய்திகள் பலவும் நினைவில் வந்துகொண்டேயிருந்தன. தோகைநாய்களின் ஊளையை உதியஞ்சேரலின் குரல் விஞ்சியதை அவன் மனதுக்குள் மீட்டியபடியே இருந்தான். ஆனாலும் அவனது நினைவுப்பரப்பு எங்கும் தேவாங்கின் முகமே பரவியிருந்தது. பெருங்கடலுக்கு நடுவே நாவாய்களுக்குத் திசைகாட்டி அழைத்துச் செல்லும் அதன் ஆற்றல் அவனை விடாது தூண்டிக்கொண்டேயிருந்தது. நீலக்கடல் எங்கும் குறுக்கும் நெடுக்குமாக நாவாய்கள் கடந்து கொண்டிருக்கும் காட்சி அகல மறுத்தது. இமை மூடும்போதெல்லாம் தேவாங்கின் வட்டக்கண்கள் அவனை எட்டிப்பார்த்தபடியே இருந்தன.

பொழுது விடிந்து நெடுநேரமானபோதும் அவன் அறையிலிருந்து எழுந்து வரவில்லை. மற்ற நால்வரும் அவனுக்காகக் காத்திருந்தனர். நடுப்பகலில்தான் எழுந்து வந்தான். அப்போதுதான் அரண்மனையிலிருந்து வரச்சொல்லி அழைப்பும் வந்தது. வேகவேகமாகப் புறப்பட்டுப் போனான்.

அரசவைக்குள் நுழையும் வரை உடன் வந்த திரேஷியன், அவனுக்கான எல்லையறிந்து நின்று கொண்டான். உள்ளே போன ஹிப்பாலஸால், உதியஞ்சேரலைப் பார்த்த கணத்தில் அவனது முகத்தில் தெரிந்த குழப்பத்தை உணர முடிந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P69_1516184814
சற்று அமைதிக்குப் பிறகு உதியஞ்சேரல் பேசத் தொடங்கினான். ``நேற்று மாலை என் ஒற்றர்கள் கொண்டுவந்த செய்தி என்னைப் பெருங்குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. அதனால்தான் உங்களை அழைக்க முடியவில்லை” என்றான்.
ஹிப்பாலஸ் உற்று கவனித்தான்.

``செங்கனச்சோழன் பெரும்படையோடு பறம்பின் மீதான போருக்கு ஆயத்தமாகிவிட்டான்” என்றான் உதியஞ்சேரல்.

ஹிப்பாலஸுக்குப் புரியவில்லை. ``சோழன் ஏன் பறம்பின் மீது போர் தொடுக்க வேண்டும்?”

``அதுதான் எனக்கும் புரியவில்லை. இதுவரை பறம்பின் மீது அவர்களுக்கு எந்தப் பகையும் உருவாகவில்லை. அப்படியிருக்க, அவன் ஏன் இவ்வளவு பெரிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறான்?” என்று கூறிய உதியஞ்சேரல், சற்றே அமைதிக்குப் பிறகு சொன்னான், ``அவனது படையின் தன்மையையும் எண்ணிக்கைகளையும் பற்றி என் ஒற்றர்கள் சொல்லும் கணக்கை என்னால் நம்பவே முடியவில்லை.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 13, 2018 8:42 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83a_1516706245
ருப்பன்குடி மூதாதையர்தாம் அதைக் கண்டறிந்தனர். எத்தனை தலைமுறைகளுக்கு முன்னர் அது நிகழ்ந்தது எனத் தெரியவில்லை. `எண்ணிலடங்கா காலத்துக்கு முன்னர் அது நிகழ்ந்தது’ எனச் சொல்வார்கள். அந்த ஆற்றுக்கு அப்போது பெயரிடப்படவில்லை. பெயரில்லாத அந்த ஆற்றின் வலக்கரை முழுவதும் செவல்படிந்த சிறுமண் பரப்பு. அதில் புதர் மண்டிய புற்காடு.

புல்லின் வகைகள்தாம் எத்தனை எத்தனை! வடிவத்திலும் நிறத்திலும் அவை ஏற்படுத்தும் வாசனையிலும் வகைப்படுத்த முடியாதவையாகத்தானே இன்று வரை இருக்கின்றன. பறவைகளும் விலங்குகளும் மேய்ந்தறியும் புல்லைக்கொண்டே மனிதன் தனக்கானதைக் கண்டறிந்தான். ஆவினத்தை மேய்த்துக் கொண்டிருக்கையில், புதர் ஒன்றில் நீள்தோகை கொண்ட பெரும்புல் விளைந்து கிடந்திருக்கிறது. மேய்த்துக்கொண்டிருந்தவன் அது என்ன வகைப் புல் என்பதை அறிய அதன் தோகையைக் கைகளால் பறித்துப்பார்க்க முயன்றிருக்கிறான். தோகையின் பக்கவாட்டுக் கூர்மை கிழித்துவிடக்கூடியதாக இருந்தது. அதன் நீள்தண்டு சற்றே வேறுபட்டு இருந்ததையும் பார்த்திருக்கிறான்.

மேய்ச்சல்வெளிதான் மனிதன் இயற்கையின் நுட்பத்தைக் கவனிக்கக் கிடைத்த முதற்பெரும் வாய்ப்பு. பறந்து அலையும் தும்பிகள் காலூன்றாப் புற்கள் எவை என்பது தொடங்கி, நீண்டிருக்கும் புல் நுனியில் செருகி நிற்கும் பனித்துளியின் கனம் வரை அனைத்தையும் அவன் அறிவின் சேகரமாக மாற்றிக்கொண்டிருந்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83b_1516706266
கருநீல நிறமும் நெடுநீள் தோகையும் உடைய அந்தப் புல்லின் தண்டுப்பகுதியை ஒருநாள் தற்செயலாகக் கடித்துப்பார்த்தான். அதன் சாறு அவன் அறிந்திராத தித்திப்பைக் கொடுத்தது. மீண்டும் கடித்தான், தித்திப்பின் அளவு குறையவேயில்லை. மீண்டும் மீண்டும் கடித்துச் சுவைத்தான். சுவை குறையாத இந்தப் புல்லைப் பற்றித் தன் கூட்டத்தார் அனைவருக்கும் போய்ச் சொன்னான். அனைவரும் வந்து கடித்துச் சுவைத்தனர். அதைச் `சுவைப்புல்’ என்றே அழைத்தனர்.

அந்தச் சுவைப்புல் தனது கணுக்களிலிருந்து முளைவிடுவது அறிந்து, கரணைகளாக அதை வெட்டிப் புதிய இடத்தில் நட்டுவைத்தனர். கணுக்கள் தழைத்துப் பெரும்புற்களாகின. பல கரணைகளை ஒரே இடத்தில் பரவலாக நட்டுவைக்க சுவைப்புல் பெருங்காடென வளரத் தொடங்கியது.

இந்த அரிய புல்லைப் பற்றி மற்றவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அறியத் தொடங்கினர். `கருப்பன் குடியினர், அரியவகை சுவைப்புல்லைப் பயிரிட்டு வளர்க்கின்றனர்’ என்ற செய்தி பரவ, பலரும் அவர்களிடம் வந்து சுவைப்புல்லைக் கேட்டு வாங்கிச் சென்றனர். நாளடைவில் `சுவைப்புல்’ என்ற பெயர் நீங்கி, அந்தக் குடியின் பெயரால் `கரும்பா புல்’லென்றும் `கரும்பெ’ன்றும் அதற்குப் பெயர் விளங்கிற்று.

தலைமுறைகள் பல கடந்தோடின. கருப்பன் குடியினர் கரும்பின் எண்ணற்ற நுட்பங்களைத் தங்களது பட்டறிவில் சேகரித்திருந்தனர். கணுக்களின் முகம் பார்த்துக் கரும்பின் சுவையைக் கணிக்கும் பேரறிவைப் பெற்றனர். புதிய நிலங்களில் எந்த வகைக் கரணைகளை நடவேண்டும் என்றும், எந்த வகைக் கரும்புகள் தித்திப்பின் உச்சம் எனவும் அவர்கள் துல்லியமாக அறிந்தனர். பனைச்சாற்றிலிருந்து காய்ச்சப்பட்ட இனிப்புக் கட்டியைப்போலக் கரும்பஞ்சாற்றிலிருந்தும் இனிப்புக் கட்டியைக் காய்ச்சி எடுத்தனர். செய்தி எங்கும் பரவியது. கரும்பென அழைக்கப்படும் சுவைப்புல் அரிதினும் அரியதொன்றாக எல்லோரும் பேசிய காலத்தில்தான், அந்தக் கொடும் தாக்குதல் நடந்தது.

பயிரிடுதலின் நுட்பத்தை அறிய தலைமுறை தலைமுறையாகத் தங்களை ஒடுக்கிக்கொண்டு மண்ணுள் புதைந்திருந்த கருப்பன் குடியினரின் மீது திடீர்த் தாக்குதல் நடந்தது. தாக்குதல் நடத்தியவர்கள் தங்களைச் `சோழர்குடி’ என முழங்கினர். இரக்கமற்ற கொடும்தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் கருப்பன் குடியினர் சிதைவுற்று வீழ்ந்தனர்.

அவர்களை வெட்டி வீசி விளைநிலங்களையும் செல்வங் களையும் கைப்பற்றுவதுதான் அந்தக் காலத்து நடைமுறை. ஆனால், சோழர்குடியின் தலைவன், கருப்பன் குடியினரின் அறிவையும் ஆற்றலையும் நன்கு உணர்ந்தவனாக இருந்தான். எனவே, அந்தக் குடியினரை முழுமுற்றாக அழிக்கவில்லை. எல்லோரையும் விளை நிலங்களில் அடிமைகளாக மாற்றினான். கரும்பை எவ்வளவு அதிகமாக விளையவைக்க முடியுமோ அவ்வளவு அதிகமாக விளையவைத்தான்.

கரும்பின் சுவை எங்கும் பரவியது. பனைவெல்லத்தையும் ஈச்சவெல்லத்தையும் கரும்பின் வெல்லச்சுவை மிஞ்சியது. தலைமுறைகள் பல கடந்தாலும் கருப்பன் குடியின் அடிமை வாழ்வு முடிந்தபாடில்லை. அவர்கள் அளவுக்குக் கரும்பை அறிந்த மனிதக்கூட்டம் எதுவும் உருவாகவில்லை. இந்த நிலையில்தான் யவன வணிகம் தொடங்கியது. சேரனின் மிளகுதான் முதலில் யவனர்களை ஈர்த்தது. அந்த வணிகமே பெருமளவு நடந்துகொண்டிருந்தது. அப்போது இந்த நிலத்தில் வேறேதும் புதுமையாகக் கிடைக்காதா எனப் பல யவன வணிகர்கள் கடற்கரை நகரங்களுக்குத் தொடர்ந்து வரத் தொடங்கினர். அவர்களுக்குத் தரப்பட்ட விருந்தொன்றில் கரும்பு பரிமாறப்பட்டது. அதன் தித்திப்பும் தீஞ்சுவையும் அவர்களையும் மயக்கின.

கரும்பின் கெட்டிப்பாகும் விளையவைக்கக் கூடிய விதத்தில் கரும்பின் கரணைகளும் யவனம் நோக்கி நாவாய்களில் பயணப்படத் தொடங்கின. சோழ அரசனின் அவையில் யவனத்தேறலும் மினுக்கும் பாண்டங்களும் மாற்றுப்பொருளாக வந்திறங்கின. காலம் ஓடியபடி இருந்தது.

தம் குலத்தின் விடுதலையைத் தாம் பெற்றே ஆகவேண்டும் என்ற வேட்கையில் அவ்வப்போது கருப்பன்குடி வீரர்கள் முளைத்தெழுவர். ஆனால், அது எப்படியும் சோழனுக்குத் தெரிந்துவிடும். அந்தச் செயல் செய்தவர்களை அழித்தொழிப்பர். ஆனாலும் மொத்தக் குடியையும் அழிக்காமல் பாதுகாத்தனர். கரும்பின் வியப்புறும் சுவையும் நுட்பமும் சோழர்களுக்குத் தேவையாக இருந்தன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83c_1516706280
தீஞ்சுவைப் புல்லைக் கண்டறிந்த குடி, எண்ணிலடங்கா தலைமுறைகளாகக் கண்ணீர் சிந்தியபடியே இருந்தது. முளைத்தெழும் கரும்பின் முன் பகுதியில் கருப்பன் குடியின் கண்ணீர் தேங்கியே இருக்கும் என மக்கள் கருதினர். எப்படியாவது இந்த நிலையிலிருந்து மீளவேண்டும் எனத் திட்டமிட்டது வீரர்களின் கூட்டம் ஒன்று. அதற்குத் தலைமையேற்றவன் ஈங்கையன்.

எத்தனையோ முறை அழிக்கப்பட்ட அவர்களின் போராட்டத்தை இந்தமுறை அழித்துவிட முடியாதபடி நன்கு திட்டமிட்டான். ஈங்கையன் இணையற்ற வீரனாக இருந்தான். `தனிமனிதப் போரில் அவனை வெல்லக்கூடிய மனிதர்கள் எவரும் இல்லை’ எனப் பெயரெடுத்தான். தன் தோழர்களையும் அதேபோல வளர்த்தெடுத்தான். அவனது அறிவுக்கூர்மையும் ஆற்றலின் வலிமையும் பெரும்நம்பிக்கையைக் கொடுத்தன.
ஆனால், சோழன் இப்போது சிறுகுடியன் அல்லன்; பேரரசன். தன் மகன் செங்கனச் சோழனுக்கு சோழவேலன் முடிசூட்ட நாள் குறித்திருந்தான். முடிசூட்டு விழாவுக்கு முன்னர் நடக்கும் களப்பலி சடங்குக்காக சோழர்களின் குதிரைகள் கரும்புக் காட்டுக்குள் சீறிப்பாய்ந்தன. மீண்டும் எதிர்பாராத தாக்குதல். கருப்பன்குடி வீரர்கள் சிதைந்தனர். எதிரிகளின் படையை ஈங்கையன் தன்னந்தனியாக எதிர்கொண்டான். அவனது வாள்வீச்சில் மயிரிழையில் தப்பிப்பிழைத்தான் சோழநாட்டுத் தளபதி உறையன்.

ஆவேசமும் அதிசிறந்த வீரமும் உடைய ஈங்கையனின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பின்வாங்கினான் உறையன். முடிசூட்டு விழாக் காலத்தில் சோழப்படை பின்வாங்கிய செய்தி பேரரசனை எட்டுமாயின் தன்னைக் கொன்றளிப்பான் என முடிவு செய்த தளபதி, இரவோடு இரவாகப் பல மடங்கு படை திரட்டினான். பின்வாங்கி ஓடியவன், விரைந்து திரும்பி வருவான் என ஈங்கையன் எதிர்பார்த்தான். ஆனால், பொழுது விடிவதற்குள்  பெரும் படையோடு வந்து நிற்பான் என எதிர்பார்க்க வில்லை. எண்ணற்ற இனக்குழுக்களை அழித்து, பேரரசாக வளர்ந்து நிற்கும் அரசாட்சிக்கு முதுகெலும்பாக இருப்பது இத்தகைய படைவளம்தான்.
எதிரிகளின் படையை முடிந்தவரை போரிட்டு அழித்தனர் ஈங்கையனின் படையினர். சோழத் தளபதி உறையன் இந்தமுறையும் பின்வாங்க நேருமோ என அஞ்சும் அளவுக்கு இருந்தது ஈங்கையனின் தாக்குதல். ஆனால், அவனது வீரர்கள் பலரால் நிலைமையை நீண்டநேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

எண்ணிக்கையில் மிகக் குறைந்த அவர்கள், கடுந்தாக்குதலுக்குப் பிறகு முழுமுற்றாகச் சூழப்பட்டனர். வீழ்ந்தவர்களை முழுமையாகக் கொன்றழிக்கத்தான் நினைத்தான் உறையன். ஆனால், இவர்களின் உடலமைப்பையும் வலிமையையும் கணித்து மிக நல்ல விலைக்கு விற்கலாம் என முடிவுசெய்து, விலங்கிட்டு இழுத்துச் சென்றான்.

அவன் கணித்ததுபோலவே, கடல் வணிகர்கள் மிக நல்ல விலைகொடுத்து இந்த அடிமைகளை வாங்கினர். புதிய அடிமைகளை அடிமைத் தொழிலுக்குப் பழக்குவது கொடூரமிக்கதொரு செயல். விலைக்கு வாங்கப்பட்டவர்களை ஊனமாக்காமல் அவர்களை உடலாலும் உள்ளத்தாலும் கூனிக்குறுகி உணர்ச்சியற்ற உயிரினமாக மாற்ற வேண்டும். இதைச் செய்து முடிக்க கப்பல் தலைவன் ஒவ்வொருவனும், ஒவ்வொரு வழிமுறையைப் பின்பற்றுவான்.

ஈங்கையன் கூட்டத்தை விலைக்கு வாங்கிய கப்பலின் தலைவனோ, அவர்களுக்கு எந்த வேலையையும் கொடுக்காமல் விலங்கு பூட்டி, கப்பலின் மேல் தளத்தில் அமரவைத்தான். கப்பல், புகாரிலிருந்து வைப்பூருக்கு வந்து சேர்ந்தது. வைப்பூரில் பொருள்கள் ஏற்ற இன்னும் இரண்டு நாள்களாகும் என்ற நிலையில் புதிதாக வாங்கியவர்களை முழு அடிமைகளாக மாற்றும் வேலையில் இறங்கினான். வாங்கப்பட்டவர்களின் தலைவனான ஈங்கையனை மீகானின் கூம்புமாடக் கம்பத்தில் கட்டினான். என்ன செய்யப்போகிறான் என்று மற்றவர்கள் மிரண்டு பார்த்துக்கொண்டிருந்தபோது அருகன்குடியில் வாங்கிய புதுச்சாட்டையோடு மூன்று பேர் மூன்று திசையில் நின்றனர்.

விளாசல் தொடங்கியது. விலங்கின் நரம்பிலும் மரத்தின் நரம்பிலும் செய்யப்பட்ட புதுச்சாட்டைகள் இடைவிடாமல் ஈங்கையனை வெட்டிச் சிதைத்தன. கண்கொண்டு பார்க்க முடியாத கொடுமை நடந்தேறியது. மற்ற வீரர்கள் கதறித் துடித்தனர். இழுபடும் சாட்டையின் வீச்சுக்கு ஏற்ப குருதித் துளிகள் நீண்டு சிதறின. எது செய்தும் காதுகொடுத்துக் கேட்க அங்கு யாருமில்லை. பகல் முழுவதும் அடித்தனர். உடலெங்கும் ரத்தவிளாறாக மாறிக் காலடியில் நிறைந்து நின்றது செங்குருதி. விலங்கிடப்பட்ட நிலையில் பார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவனும் உள்ளம் ஒடுங்கிச் சிதைவுற்று அடிமைத்தனத்துக்குள் ஆழப்புதைய வேண்டும் என்பதற்குத்தான் இந்தக் கொடுமையைச் செய்கிறார்கள்.

மாலை மங்கியபோது ஈங்கையன் முழுமையாக நினைவிழந்தான். கப்பலில் ஏற்றப்படவேண்டிய பொருள்கள் வந்து சேர்ந்தன. அவற்றைக் கப்பலில் ஏற்றும் வரை அடிப்பதை நிறுத்தி அந்தப் பணியைச் செய்யத் தொடங்கினர். கம்பத்தில் கட்டப்பட்டிருந்த ஈங்கையன் மயங்கிய நிலையில் தலை தொங்கிக்கிடந்தான். விலங்கிடப்பட்ட அவன் தோழர்கள் செய்வதறியாது துடித்துக் கிடந்தனர். இந்த நிலையில்தான் துறைமுகத்தின் கீழ்ப்பகுதியிலிருந்து பெருநெருப்பு எழுந்தது. கப்பலில் இருந்தவர்கள் அதை அணைக்க ஓடினர். விலங்கிடப்பட்ட அடிமைகள் தங்களையோ, தங்கள் தலைவனையோ விடுவிக்க என்ன செய்வதென்று தெரியாமல் கதறித் துடித்தனர்.

நேரம் ஆக ஆக, நெருப்பு எங்கும் பரவியது. ஒருகட்டத்தில் அவர்கள் இருக்கும் கப்பலின் விளிம்புப் பகுதியில் நெருப்பு மேலேறிக் கொண்டிருந்தது. அவர்கள் பெருங்கூச்சல் எழுப்பினர். அப்போதுதான் திரையர் கூட்டம் நெருப்பினுள் நுழைந்து அவர்களை மீட்டது. 

பிலரும் உதிரனும் வேட்டுவன் பாறையிலிருந்து மீண்டும் எவ்வியூருக்குப் புறப்பட்டனர். வழியில்தான் ஈங்கையனின் கதையை உதிரன் கபிலருக்குச் சொல்லிக் கொண்டுவந்தான். ``இத்தனை மாதங்களாகியும் ஈங்கையனும் அவன் கூட்டத்தாரும் தாங்கள் யார் என்பதை வாய் திறந்து பேசவில்லை. `சோழப் பேரரசன்தான் தங்களின் எதிரி எனத் தெரிந்தால் யாரும் தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க மாட்டார்கள்’ என்று அவர்கள் நினைத்துள்ளனர். அதுமட்டுமன்று, யாரிடமும் நம்பிக்கைகொள்ளும் சூழலும் அவர்களுக்கு இல்லை. அதனால்தான் அவர்கள் பேச்சற்று இருந்துள்ளனர்.

நம்மவர்கள் அவர்களை மீட்டதும் இங்கு வந்ததிலிருந்து நல்லதொரு மருத்துவம் செய்து அவர்கள் தலைவன் ஈங்கையனைக் காப்பாற்றியதும், அவர்களுக்கு நம் மீது நல்ல எண்ணத்தை உருவாக்கியுள்ளது. ஆனாலும் நாம் யார் என்பதை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் பேச மறுத்துள்ளனர். கடுவனின் கதையை அறிந்த பிறகுதான் நம்பிப் பேசத் தொடங்கினான் ஈங்கையன். அவர்களின் குடி அடைந்த துயரம் சொல்லிமாளாது” என்றான் உதிரன்.

கேட்டுக்கொண்டே நடந்த கபிலர், ``அடிக்கரும்பின் தித்திப்புக்காக மனம் எத்தனை முறை ஏங்கியுள்ளது! ஆனால், அவையெல்லாம் இந்தக் குடியின் குருதியில்தானே விளைந்துள்ளன. `பூத்த கரும்பும் காய்த்த நெல்லும் உடையது சோழனின் கழனி’ என்று புலவர்கள் பாடுகின்றனர். ஆனால், அந்தக் கழனி கரும்பாக்குடி சிந்திய குருதியால்தான் உலராமல் இருக்கிறது” என்றார்.

உதிரன், கபிலரின் சொற்களைக் கேட்டபடி அமைதிகொண்டு நடந்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83d_1516706301
``நெருப்பிலே அழிந்துவிடாமல் இவர்களை மீட்டெடுத்ததன் மூலம் வாழ்வெல்லாம் மகிழ்ந்துண்ட கரும்பஞ்சாற்றுக்கும் வெல்லத்துக்கும் கைம்மாறு செய்துள்ளோம்” என்றார் கபிலர்.

``திரையர்கள் இருந்ததால்தான் இவர்களை மீட்டெடுக்க முடிந்தது. ஈங்கையனின் உருவ அமைப்பைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். அவ்வளவு திறன்வாய்ந்த ஒருவனைக் கம்பத்திலிருந்து பிய்த்தெடுத்துத் தோளிலே போட்டுத் தூக்கிக்கொண்டு நெருப்பிலிருந்து வெளியேறுவதெல்லாம் இயலுகிற செயலன்று” என்றான் உதிரன்.

சற்றே அமைதியுடன் நடந்த கபிலர் சொன்னார், ``வெற்றிலையும் கரும்பும் மனித குலம் இருக்கும் வரை தேவைப் பட்டுக்கொண்டே இருக்கும். தமது இலையாலும் தண்டாலும் சாற்றாலும் மனிதனுக்கு அருமருந்தைத் தந்தபடியேதான் இருக்கும். அந்த அரிய பயிரினங்களைக் கண்டறிந்த ஆதிகுடிகள் எப்படியெல்லாம் வேட்டையாடப்படுகிறார்கள்! அவர்கள் கண்டறிந்த  உயிர்ச் செல்வங்களுக்கு நாம் செய்யும் கைம்மாறு இதுதானா?” ஏக்கப்பெருமூச்சோடு பாறையைப் பிடித்து மேலேறிக் கொண்டிருந்தார் கபிலர்.

சொல்லின் வலி, உள்ளத்தின் உறுதியைத் தளர்த்தவல்லது. இதைவிடக் கடினமான செங்குத்துப்பாறையைக்கூட குனிந்து உட்காராமல் நிமிர்ந்தபடி மேலேறிய கபிலர் இந்தச் சிறு பாறையைக் கடக்க உட்கார்ந்து நகர்கிறார். அவரின் செயலை உன்னிப்பாகக் கவனித்த உதிரன், பேச்சை மாற்றி அவரின் எண்ணங்களைத் திருப்ப முயன்றான்.

``உங்களைக் காண வந்த பெரியவரோடு இரண்டு இளைஞர்கள் உதவிக்கு வந்தார்கள் அல்லவா?” என்றான்.

பாறையைக் கவனமாய்க் கடந்த பிறகு நிமிர்ந்த கபிலர், ``ஆம், திசைவேழரோடு இருவர் வந்திருந்தனர்” என்றார்.

``அவர்களில் ஒருவனாவது படைவீரனாகவோ, ஒற்றனாகவோ இருப்பான் என நானும் நீலனும் நினைத்தோம். ஆனால் அப்படியன்று; இருவருமே அவரின் மாணவர்கள்தாம்.”

``அவர் காலத்தைக் கணிக்கும் பேராசான். இதுபோன்ற செயல்களுக்கெல்லாம் மாமனிதர்களைப் பயன்படுத்திவிட முடியாது. இயற்கையின் பேரியக்கத்தைக் கணித்துக் கொண்டிருப்பவர்கள் மனிதர்களின் கீழ்மைக்குத் துணை போக மாட்டார்கள்.”

கபிலர் சொல்லி முடிக்கும் முன்னர் சற்றும் இடைவெளியின்றி உதிரன் கேட்டான், ``பாண்டியப் பேரரசுக்காகத்தானே அவர் இங்கு வந்தார்?”

``இல்லை. அவர் நம்பும் உண்மைக்காக வந்தார். இயற்கையின் உள்நரம்புகள் மனிதனின் கைகளுக்கு மிக அரிதாகவே அகப்படும். அப்படியொன்று தெய்வவாக்கு விலங்கின் வடிவில் அகப்பட்டுள்ளது. அதை இழந்துவிடக் கூடாது என்ற தவிப்பில்தான் வந்துள்ளார்” என்றார்.

``அவரின் கூற்றில் உண்மை இருக்கிறதா?” எனக் கேட்டான் உதிரன்.

அடுத்த பாறையில் ஏறாமல் அப்படியே நின்றார் கபிலர்.

பாறையின் மேலேறிய உதிரனுக்கு, கபிலர் ஏன் ஏறாமல் நிற்கிறார் என்ற காரணம் புரியவில்லை.

``நான் எங்கே நிற்கிறேன்?” என்று கேட்டார் கபிலர்.

``கீழே நிற்கிறீர்கள்” என்றான் உதிரன்.

``காரமலையின் உச்சியில் நின்றாலும் நான் கீழே நிற்பதாகத்தானே உனக்குத் தோன்றுகிறது” என்றார்.

கபிலர் சொல்லவருவது உதிரனுக்குப் புரியவில்லை.

கபிலர் விளக்கினார். ``உண்மை என்பது, இருக்குமிடம் சார்ந்தது. அதனால்தான் நான் கீழே இருப்பதாக கண நேரத்தில் நீ முடிவு செய்துவிட்டாய். நீ சொல்வது உன்னளவில் மட்டுமே உண்மை. அதுவே முழு உண்மையாகிவிடாது. எல்லோரும் ஓரிடத்தில் நிற்கப்போவதில்லை. எனவே, எல்லோருக்குமான பொது உண்மை இருக்கப்போவதேயில்லை.”

பிலரும் உதிரனும் எவ்வியூர் அடைந்தபோது தேக்கனும் காலம்பனும் ஊர் திரும்பியிருந்தனர். அனங்கனும் அவன் குழுவினரும் காட்டெருமைக் கூட்டத்தோடு எந்த மலையில் அலைகிறார்கள் என்பதைப் பற்றிப் பலரும் அவர்களிடம் விசாரித்துக்கொண்டிருந்தார்கள்.

கபிலர் வந்து சேர்ந்ததும் விசாரிப்புகள் எல்லாம் அவர் பக்கமாகத் திரும்பின. அவரின் ஆசானைப் பற்றி அறிந்துகொள்ள எல்லோருக்கும் ஆர்வம் இருந்தது. பாட்டாப்பிறையில் பெரியவர்கள் காத்திருந்தனர். ஆனால், பாரியைப் பார்க்கப் போன கபிலர் நள்ளிரவு வரை வரவில்லை.

பாரியின் அவையில்தான் அந்த உரையாடல் நடந்தது. தனக்கும் திசைவேழருக்கும் நிகழ்ந்த சந்திப்பைப் பற்றி முழுமையாக விளக்கினார் கபிலர். உடன் தேக்கனும் முடியனும் இருந்தனர். திசைவேழர் வந்ததன் நோக்கத்தைப் பாரியால் கணிக்க முடிந்தது, ``தேவவாக்கு விலங்கு வடதிசை நோக்கித்தான் உட்காரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், அதற்கு இப்படியொரு பயன்பாட்டுக் காரணம் இருக்கும் என நினைக்கவில்லை” என்றான் பாரி.

``அது வடதிசை நோக்கி மட்டுமே உட்காரும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியுமா?” எனக் கேட்டார் கபிலர்.

``இதுகூடவா தெரியாமல் இருப்போம்?” என்றான் முடியன்.

``தேவவாக்கு விலங்கை `கொற்றவையின் குழந்தை’ என்றுதானே சொல்கிறோம். கொற்றவைக்கு `வடக்குவா செல்லி’ என்றொரு பெயர் உண்டு என்பதை நீங்கள் அறிய மாட்டீர்களா? கொற்றவைக் கூத்தின்போது அனைத்து நாள்களும் அது கீழிறங்கி வந்துதானே பழத்தை எடுத்தது. அப்போதெல்லாம் அது உட்கார்ந்ததை நீங்கள் கவனித்து அறியவில்லையா?’’ எனக் கேட்டான் பாரி.

கபிலர் திகைத்துப்போனார். ``அவை மிகவும் அஞ்சியபடி வந்து பழத்தை எடுத்துச் செல்வதைக் கூர்ந்து கவனித்தேன். ஆனால், அவற்றின் தனித்த நடவடிக்கையைக் கவனத்தில்கொள்ளவில்லை” என்றார் கபிலர்.
உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த தேக்கன், இடுப்புத் துணியில் மடித்து வைத்திருந்த வெற்றிலையை எடுத்துக்கொண்டே சொன்னார், ``திசைவேழரின் வருகையிலும் நாம் கவனிக்கத் தவறும் தனித்த விஷயங்கள் இருந்துவிடக் கூடாது.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83e_1516706353
தேக்கனின் சொல் சற்றே கடுமையானதாகத் தான் இருந்தது. ஆனாலும் இன்முகத்தோடுதான் கபிலர் அதை எதிர்கொண்டார். ``கவனம் தவறிவிடக் கூடாது என்பதில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தேன்.’’
``பாண்டியனின் பெருந்துறைமுகமான வைப்பூர்த் துறைமுகமே நம்மவர்களின் தாக்குதலால் அழிந்திருக்கிறது. அப்படியிருந்தும் இவ்வளவு மென்மையான முயற்சியைப் பாண்டியன் ஏன் செய்கிறான்?” எனக் கேட்டார் தேக்கன்.

கபிலரிடம் இதற்கான விடை இல்லை. சிந்தித்தபடி அமைதியானார்.

``பெருந்தாக்குதலுக்கான ஆயத்த முயற்சியில் இருப்பவர்கள், நாங்கள் அப்படியல்ல எனக் காட்டிக்கொள்ள முயல்வார்கள். இந்த முயற்சி அப்படிப்பட்ட ஒன்றுதான்” என்றார் தேக்கன்.

ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு ``அதற்கும் வாய்ப்பிருக்கிறது” என்று சற்றே மெல்லிய குரலில் சொன்னார் கபிலர்.

அதைக் கவனித்த பாரி கேட்டான், ``உங்களுக்கு ஏன் அவ்வாறு தோன்றியது?”

``முதலில் மிகுந்த சினத்தோடு பறம்பைக் குற்றம்சாட்டிப் பேசிய திசைவேழர், எனது விளக்கத்துக்குப் பிறகு சற்றே அமைதியானார். அவரின் நோக்கம், திசையறியும் ஒரு விலங்கைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். அதில் ஐயம் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாள்களில் அவரின் முகம் மிகவும் வாடியிருந்தது. நான் அவரை நன்கு அறிவேன். எளிதில் தளராத மனிதர் அவர். அவரின் கண்கள் ஒன்றுக்கு மேற்பட்டமுறை கலங்கின. அதற்குக் காரணம் உள்ளுக்குள்ளிருந்த குற்றவுணர்வு. அங்கு நடக்கும் பல முயற்சிகளை அவர் அறிவார். அதைப் பகிர்ந்துகொள்ள முடியாத நிலையில் உள்மனம் அவரைக் கலங்கச் செய்திருக்கும்” என்றார்.

அவரைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்த தேக்கன், ``புலி முன் ஆடு என்பது திசைவேழருக்குச் சொல்லப்பட்ட சொல்லன்று; பாண்டியனுக்காகச் சொல்லப்பட்ட சொல். பறம்பின் முன் அவனது பெரும்படை அடங்கி ஒடுங்கும் என்பது பாண்டியனின் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்திருக்கும்” என்றார்.

ஒரு கணம் உறைந்துபோனார் கபிலர். `அங்கு பேசிய பேச்சு அதற்குள் எப்படி இங்கு வந்து சேர்ந்தது!’ திகைத்த கண்களோடு தேக்கனைப் பார்த்தார். அவர் வெற்றிலையை மெல்வதற்கு ஏற்ப நன்றாக மடித்துக்கொண்டிருந்தார்.

``உதிரன் கரும்பாக்குடியின் கதையைச் சொன்னான். எனக்கு அவர்களைப் பார்க்க வேண்டும்போல் இருக்கிறது. அவர்கள் யார் எனத் தெரிந்த பிறகும் ஈங்கையனை அழைக்காமல் ஏன் வந்தீர்கள் என உதிரனைத் கோபித்தேன்” என்றான் பாரி.

பேச்சின் போக்கை எவ்விடம் மாற்ற வேண்டும் என்பதைப் பாரி அளவுக்கு நன்கு உணர்ந்தவர் யாருமில்லை என்பது கபிலருக்குத் தெரியும். திசைவேழர், தனக்கு சிகிச்சை செய்த மருத்துவர்களிடம் நிறைய பேசினார். அந்தப் பேச்சுகள்   எல்லாம்   இங்கு  வந்து சேர்ந்தி ருக்கின்றன. அவர் என்னவெல்லாம் பேசினார் என்பது கபிலருக்குக்கூட முழுமையாகத் தெரியாது. அவரின் எண்ண ஓட்டங்களைக் கண்டறிய மருத்துவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு இருந்திருக்கும். அவர் சொன்ன சொற்களிலிருந்து தான் தேக்கன் இந்த முடிவுக்குப் போயுள்ளார் என்பதைக் கபிலர் உணர்ந்தபோது, அதுகுறித்த பேச்சை நீட்டிக்க வேண்டாம் என்றுதான் பாரி ஈங்கையனின் பேச்சை எடுத்தான்.

பாரியின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு கபிலர் சொன்னார், ``நாங்கள் மலை ஏறும்போது தான் ஈங்கையனின் கதையை உதிரன் என்னிடம் சொன்னான். அவர்களைப் பார்க்காமல் வந்துவிட்ட கவலை எனக்கும் உண்டு.”

வெற்றிலையை வாயில் மென்றபடி தேக்கன் கேட்டார், ``என்ன சொன்னார் வேட்டூர் பழையன்?”

`உங்களுக்குத் தெரியாமல் என்னிடம் எதுவும் சொல்லப்போகிறாரா அல்லது என்னிடம் சொல்லியது எதுவும் உங்களுக்குத் தெரியாமல் இருக்கப்போகிறதா?’ என நினைத்துக்கொண்டே, ``நான்கு நாள்கள் அல்லவா! நிறைய பேசினோம். குறிப்பாக, மயிலாவின் மணவிழா பற்றி கண்கள் பூக்கப் பேசினார் நீலன்” என்றார்.

மென்று சுவைத்த வாயின் அசைவு சட்டென நின்றது. காலம் தாழ்த்துவது அழகல்ல எனத் தோன்றியபடியேயிருந்த எண்ணத்தைக் கிளறிவிட்டது கபிலரின் சொல். திரும்பிப் பாரியைப் பார்க்க நினைத்தவர், அதைத் தவிர்த்து மீண்டும் கபிலரின் பக்கம் திரும்பினார்.

தேக்கனின் எண்ண ஓட்டத்தை மட்டுமன்று, பழையனின் எண்ண ஓட்டத்தையும் நன்கு அறிந்த பாரி சொன்னான், ``இந்தக் கார்காலத்தில் தான் மணவிழாவை முடிவுசெய்திருந்தோம். ஆனால், எதிர்பாராத பலவும் நடந்துவிட்டதால் மணவிழாவை நடத்த முடியாமல் போய்விட்டது. அதற்காக இனியும் காலம் கடத்த வேண்டாம். உப்பறைக்குப் போய் வந்த மூன்றாம் நாள் மணநாளாக முடிவுசெய்து செய்தி அனுப்புங்கள்” என்றான் பாரி.

நீண்டநாள் பேச்சு அந்தக் கணமே முடிவானது தேக்கனுக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது. உடனே சம்மதித்தான்.

கபிலரும் மகிழ்வடைந்தார். `உப்பறைக்குப் போய் வந்த உடன்’ என்று பாரி ஏன் சொன்னான் என்பது மட்டும் அவருக்குப் புரியவில்லை.

``உப்பறை எங்கே இருக்கிறது? போய் வர எவ்வளவு நாள்களாகும்?” எனக் கேட்டார்.

``போய் வர ஒரு மாதமாகும். ஆண்டுக்கு ஒருமுறை பறம்பின் தலைவன் அங்கு போய்த் திரும்புவது காலகாலப் பழக்கம். இந்த முறை சற்று தாமதமாகிவிட்டது” என்றான் தேக்கன்.

நீலன், மயிலாவின் மணவிழா ஏற்பாடு உறுதியான மகிழ்வில் வெற்றிலையை வேகவேகமாக மடித்து வாயில் திணித்துக் கொண்டே கேட்டான், ``நீங்கள் என்னோடு இருந்து மணவிழா வேலையில் பங்கெடுக்கிறீர்களா அல்லது பாரியோடு உப்பறைக்குப் போய் வருகிறீர்களா?”

கைநீட்டி வெற்றிலையைக் கேட்டார் கபிலர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83f_1516706376
மறுமொழியேதும் சொல்லாமல் கை நீட்டுகிறாரே எனச் சிந்தித்தபடி வெற்றிலையைக் கொடுத்தார் தேக்கன்.

வாங்கி அதைத் தோதாக மடித்துக்கொண்டே கபிலர் சொன்னார், ``இந்தக் கேள்விக்கு நான் சொல்லித்தான் விடை தெரிய வேண்டுமா உங்களுக்கு?”

சிரித்தான் பாரி.

வெற்றிலையை வாயில் மென்றபடியே முடியன் சொன்னான், ``தேவவாக்கு விலங்கு திசை மாறியா உட்கார்ந்துவிடப்போகிறது!”

மீண்டும் சிரித்தான் பாரி.

கிடைத்த வாய்ப்பைக்கொண்டு தேக்கனை நோக்கிச் சொல்லைச் சுழற்றினார் கபிலர், ``இத்தனை நாள்களாகியும் தனித்த விஷயங்களைக் கவனிக்கவில்லையா நீங்கள்?”

அறையெங்கும் பொங்கி வெடித்தது சிரிப்பு.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 13, 2018 9:01 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83a_1517389225
கதமலையின் முகடுகளில் குதிரைகள் பாய்ந்து போய்க்கொண்டிருந்தன. பாரி, காலம்பன், கபிலர் ஆகிய மூவரைத் தொடர்ந்து வீரனொருவன் கூடுதலாக ஒரு குதிரையைக் கையிற்பிடித்தபடி பின்தொடர்ந்தான். அக்குதிரையில் உணவுப்பொருள்களின் சிறுமூடைகள் ஏற்றப்பட்டிருந்தன. இவர்கள் எவ்வியூரிலிருந்து புறப்பட்டு மூன்று நாள்களாகி விட்டன.

கபிலர் இளைஞராய் இருந்தபொழுது குதிரையேற்றப்பயிற்சி பெற்றிருக்கிறார். ஆனால் அதன்பின் நீண்டகாலம் குதிரையேற்றத்தில் ஈடுபடவில்லை. எவ்வியூர் வந்தபின் அவ்வப்பொழுது குதிரையில் ஏற்றி ஒன்றிரண்டு மலைத்தொடருக்கு உதிரன் அழைத்துச்செல்வான். அப்பழக்கம் இருந்ததால்தான் இப்பயணத்தில் அவரால் பங்கெடுக்க முடிந்தது.

இதுவரை மூன்று மலைகளையும் இரு ஆறுகளையும் கடந்துவிட்டார்கள். ஆனால் பயணம் இன்னும் நெடுந்தொலைவு. வடக்கும் தெற்குமாக நீள்கோடெனக் கிடப்பதுதான் பச்சைமலைத்தொடர். இக்கோடு சில இடங்களில் நான்கு மடிப்புகளாகவும் சில இடங்களில் ஏழெட்டு மடிப்புகளாகவும் இருக்கிறது. ஆனாலும் பெருமடிப்புகளாக உள்ள மூன்று மடிப்புகளைத்தான் காரமலை, நடுமலை, ஆதிமலை என அழைக்கின்றனர். இம்மலைத்தொடரில் உள்ள முகடுகளும் துண்டிக்கப்பட்ட தனிக்குன்றுகளும் எண்ணிலடங்காதவை. இவற்றிற்கிடையில் வழிந்தோடும் ஆறுகளைக் கணக்கிட முடியாதுதான். ஆனாலும் பேராறுகளுக்குப் பெயர் சூட்டியிருந்தனர்.

இந்நீள்மடிப்பு மலைத்தொடரின் வடவெல்லை முதல் தென்னெல்லை வரை இருப்பவர்கள்தாம் பதினான்கு வேளிர்குடியினர். இம்மலைத் தொடரின் சிறுபகுதியில்தான் பறம்புநாடு இருக்கிறது. ஏறக்குறைய அதன் நடுவில் எவ்வியூர் உள்ளது. எவ்வியூரிலிருந்து குதிரையில் புறப்பட்டால் பறம்பின் வடக்கு எல்லையைச் சென்றடைய எட்டுநாள்களாகின்றன. ஐந்துநாள் பயணத் தொலைவில் காழகமலையுள்ளது. அதன் அடிவாரத்தில் இருப்பதுதான் உப்பறை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83b_1517389241
அதனை நோக்கிய பயணத்தின் மூன்றாம் நாள் அகதமலையில் பயணித்துக்கொண்டி ருந்தனர். கபிலர் இதுவரை பறம்பின் காடுகளை நடந்துதான் கடந்துள்ளார். முதன்முறையாக அகலவிரிந்து கிடக்கும் பெருங்காடுகளை மலைச் சரிவின் இருபக்கமும் பார்த்தபடி விரைந்து கொண்டிருக்கிறார். பறம்பின் அரண்போன்ற அமைப்பு என்னவென்பதை, காணும் காட்சிகள் உணர்த்திக்கொண்டிருந்தன. இயற்கையின் பெருவிரிப்பிலிருந்து பார்வையை விலக்க முடியாமல் கவனமாய்க் கடிவாளத்தை இழுத்துச்செல்ல வேண்டியிருந்தது.

காடுகளின் மீதான வியப்பேதும் காலம்பனின் கண்களில் இல்லை. வனத்தின் ஆதிப்பிளவு களினூடே முளைத்து வந்தவன் அவன். பாசிபடர்ந்து குளுமையேறிய ஈரப்பாறையையும் வெக்கையை உமிழ்ந்துதள்ளும் கரும்பாறையையும் இரு தோள்களெனக்கொண்டவன். அவனது வியப்பெல்லாம் முன்னால் விரைந்து சென்று கொண்டிருக்கிற பாரி எவ்வடையாளங்களைப் பாதைகளாக்கிக் கடந்துகொண்டிருக்கிறான் என்பதுதான்.
குதிரைகள் இளைப்பாற சிற்றோடையின் அருகில் நின்றான் பாரி. ஓடையில் நீர் சிறுத்து ஓடிக்கொண்டிருந்தது. “இவ்வாண்டு கோடையின் உக்கிரம் மிகக்கடுமையாக இருக்கும்” என்று சொன்னபடி நீரினை அள்ளிப்பருகினான். அப்பொழுதுதான் குதிரையை விட்டு இறங்கிய கபிலர் இடுப்பில் கைகளைவைத்து முதுகைப் பின்புறமாக வளைத்துக்கொடுத்தபடி கேட்டார், “கோடையின் கடுமை அதிகமாக இருக்குமென்றா சொல்கிறாய்?”

“ஆம். நாம் உப்பறை சென்று திரும்புகையில் இவ்வோடை முற்றிலும் வற்றியிருக்கும்.”

“எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்?”

“கோடை தொடங்கிய முதல் மாதத்திலேயே நீர்சுரப்பு குறைந்துவிட்டது. இம்மாதத்தில் நீர் இழுத்தோடவேண்டும். ஆனால் இதன் போக்கைப் பாருங்கள். உள்ளே நகரும் மீனின் வேகம்கூட நீருக்கு இல்லை. பாறை இடுக்குகள் இன்னும் பத்து நாளுக்குள் இவ்வோடையைக் குடித்துவிடக்கூடும்.”

பாரியின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு கணிப்பினைச் சொல்லிக்கொண்டிருந்தது. சிற்றோடைகள் வற்றி முடித்த வேகத்தில் ஆறுகள் காயத்தொடங்கும் என்று சொல்லியபடி ஓடையைக் கடந்து மீண்டும் குதிரையில் ஏறினான்.

“இவ்வோடைதான் அகதமலையின் எல்லை. இதனைக் கடந்தால் தொடங்குவது வெப்புமலை. சற்றே செங்குத்தாய் மேலேற வேண்டும்” என்று சொல்லியபடி சிறிது தொலைவு மேலேறியவுடன் கைநீட்டிக் காண்பித்தான். இறங்குமலையில் மிகத்தொலைவில் பாறையின்மீது வெள்ளை விழுதென சிறுத்தநீர் செங்குத்தாய் இறங்குவது தெரிந்தது. “அதோ தெரிகிறதல்லவா! அந்த அருவியில் பெருவெள்ளம் கொட்டும். ஆனால் அதனைத்தொடர்ந்து ஓடும் ஆற்றைக் கண்ணால் பார்க்க முடியாது. இவ்வடர் காட்டில் மரங்களுக்கூடே அது முழுமுற்றாக மறைந்துவிடும். எனவே இதற்கு  மறையாறு என்று பெயர்.”

குதிரையை நிறுத்தி, காலம்பனும் கபிலரும் அவ்வடர் காட்டினைப் பார்த்தனர். பாரி சொன்னான், “இக்காட்டில்தான் வேறெங்கும் இல்லாத ஓர் உயிரினம் உள்ளது. நெடுங்காது முயல்தான் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், இங்கு மட்டும்தான் எலிகளின் காதினைப்போன்ற குறுங்காது முயல் உள்ளது. அதன் குருதியில்தான் பறம்பின் வீரர்கள் பிடித்து நிற்கும் வில்லின் நாண்கள் ஊறவைக்கப்படுகின்றன.”

அருவியைப் பார்த்துக்கொண்டிருந்த காலம்பனும் கபிலரும் வியப்பு நீங்காமல் பாரியின் பக்கம் திரும்பினர்.

பாரி சொன்னான், “சமவெளி மனிதர்கள் பயன்படுத்தும் வில்லின் ஆற்றலைவிட மலைமக்கள் வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83c_1517389251பயன்படுத்தும் வில்லின் ஆற்றல் மிகவலிமையானது. மலைமக்களில் மற்றவர்கள் பயன்படுத்தும் வில்லிலிருந்து அம்பு போய்ச்சேரும் தொலைவைவிட மூன்றுமடங்குத் தொலைவிற்குப் பறம்பின் வீரன் பயன்படுத்தும் அம்பு போய்ச்சேரும். அதற்கு முக்கியமான காரணத்தில் ஒன்று வில்லில் பூட்டப்படும் நாணின் இழுவைத் திறன். நாங்கள் பயன்படுத்தும் நரம்பினைக் குறுங்காது முயலின் குருதியில் ஊறவைத்துவிடுவோம். இழுத்துத் தள்ளும் அதனது விசை அளவிட முடியாததாக இருக்கிறது.”

வியப்பு நீங்காமல் பார்த்துக்கொண்டிருந்த இருவரும் இப்பொழுது குதிரையை நகர்த்தியே ஆகவேண்டியிருந்தது. ஏனென்றால், பாரி பேசியபடி முன்னால் போய்க்கொண்டிருந்தான். வெப்புமலையின் வடபுற இறக்கத்தில்தான் சூளூர் இருக்கிறது. இன்று இரவு தங்கல் அங்குதான். மூன்று நாள் பயணத்தின் வழியில் ஊர்கள் இல்லை. மிகத்தள்ளி ஒன்றிரண்டு குன்றுகளைத்தாண்டித்தான் ஊர்கள் இருந்தன. அங்கு போய்த் திரும்பினால் மிகக்காலந்தாழும் என்பதால் வழியில் உள்ள குகைத்தளங்களிலேயே தங்கினர். இன்றுதான் ஊரினில் தங்கப்போகின்றனர்.

பாரி வருகை ஊர்மக்களை மகிழ்ச்சிக்கூத்தாடச் செய்யும். வந்த மறுநாள் காலையிலேயே புறப்படுவது இயலாத செயல். ஆனால், புறப்பட்டே ஆகவேண்டிய நிலையை எடுத்துச்சொல்லிப் புரியவைப்போம் என்றுதான் பாரி அதனை நோக்கிப் போய்க்கொண்டிருந்தான்.

குதிரைகள் ஏற்றத்தில் மிகவும் மெதுவாக ஏறின. காலம்பனின் குதிரை ஒரு நாளில் இரண்டு முறை மாற்றப்பட்டது. பயணவழியில் நீண்டுகிடக்கும் படர்பாறை இருந்தது. குதிரையை விட்டு இறங்கினான் பாரி. அருகில் வந்ததும் மற்றவர்களும் இறங்கினர். சமதளப்பாறையாகத்தானே இருக்கிறது. இதற்கு ஏன் குதிரையை விட்டு இறங்கினான் பாரி என்ற எண்ணம் மற்ற இருவருக்கும் ஏற்பட்டது.
இறங்கி நடந்தபடி பாரி சொன்னான். “சூளூர்தான் முடியனின் ஊர். அங்குதான் அவன் குடும்பம் இருக்கிறது.”

முடியன் என்பது பெயரன்று, தேக்கனைப்போல அது ஒரு பட்டம். சமவெளி அரசுகளில் படைத்தளபதி என்ற பட்டம் இருப்பதுபோல பறம்பிலுள்ள பட்டமிது. ஆனால், இந்தச் செய்தி காலம்பனுக்குத் தெரியுமா என்று கபிலரின் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. பாரி சொன்னான், “நாம் கடந்து வந்த ஓடை எழுவனாற்றில் போய்ச் சேருகிறது. அந்த ஆற்றுக்கு நீர்ப்பிடிப்பு ஓடைகள் மிகக்குறைவு. எனவே வேகமாக வற்றிவிடும். பச்சைமலையின் உள்ளிடுக்கின் வழியாகவே நீண்டதொலைவு பயணிக்கும் இவ்வாறு குறும்பியூர்க் கணவாயின் வழியாகக் கீழ்த்திசையில் திரும்பி, சமதளத்தை நோக்கிப் பாய்கிறது. கரடுமுரடற்ற பாதையாக இதன் வழித்தடம் அமைந்திருக்கிறது.”

குதிரைகள் பாறையை மிதித்து நடக்கும் ஓசையும் பாரி பேசும் ஓசையும் மட்டுந்தான் கேட்டன. இருவரும் மிக அமைதியாக பாரி பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தனர். “இயற்கையின் மாபெரும் அரணால் சூழப்பட்ட பறம்பினைத் தாக்க எதிரிகளுக்கு உள்ள ஒரே வாய்ப்பு எழுவனாறுதான்” என்றான் பாரி. காலம்பனும் கபிலரும் அதிர்ந்தனர்.

“கோடைக்காலத்தில் இவ்வாற்றின் வழித்தடத்தைப் பயணவழியாகப் பயன்படுத்த முடியும். அதற்கேற்ற தன்மையுடன்தான் இதன் அமைப்பிருக்கிறது. குறும்பியூர்க் கணவாயில் இவ்வாற்றின் வழித்தடம் பற்றி உள்ளே நுழைபவன் எவ்வியூரின் அருகிலுள்ள குன்றுவரை வந்துசேரலாம். ஆனால் அதில் மூன்று சிக்கல்கள் உண்டு. ஒன்று, பறம்புக்குள் இப்படியொரு வழித்தடம் இருக்கிறது என்பது வெளியாட்களுக்குத் தெரிய வாய்ப்பேதுமில்லை. இரண்டு, குறும்பியூர்க் கணவாயிலிருந்து இந்த வெப்புமலைவரை வந்து சேர்வதற்குள் இவ்வாற்றில் பல ஆறுகளும் ஓடைகளும் இணைகின்றன. அவற்றின் அகலமும் எழுவனாற்றின் அகலமும் ஒன்றுபோல்தான் இருக்கின்றன. எனவே மூல ஆறு எது என்பதனை எளிதில் கண்டறிய முடியாது. இணையும் ஆறுகளின் வழியே திரும்பினால் இயற்கையின் பெரும் பொறிக்குள் போய்ச் சிக்கி மீளமுடியாமல் அழிவார்கள்.

மிகச்சரியான வழியைத் துல்லியமாகக் கண்டறிந்து பலநாள் பயணப்பட்டு இந்த வெப்புமலை அடைந்து விட்டார்கள் என்று வைத்துக்கொண்டால் அதன் பிறகு இதனைக்கடந்து ஒருவன்கூட எவ்வியூரை நோக்கித் தென்திசையில் சென்றுவிட முடியாது” என்றான் பாரி.

குதிரைகள் படர்பாறையை நடந்து கடந்துவிட்டன. ``மேலேறிப் பயணத்தைத் தொடர்வோம்; பொழுதாகிக் கொண்டிருக்கிறது” என்று சொல்லி, குதிரையின் மேல் ஏறினான். காரணம் தெரியாமல் குதிரையின் மீது ஏற மற்ற இருவருக்கும் மனமே இல்லை.

முதன்முறையாக காலம்பன் பாரியின் சொல்லை மறுத்து நின்றான். குதிரையில் ஏறியபடி பின்னால் திரும்பிப்பார்த்த பாரி, கடிவாளத்தை இடதுபக்கமாக இழுத்தபடி அவர்களை நோக்கித் திருப்பினான். குதிரை கனைத்தபடி திருப்பியது. “ஏனென்றால் இங்குதான் சூளூர் இருக்கிறது. இவ்வுலகின் தலைசிறந்த வீரர்கள் இவ்வூரில்தான் பிறக்கிறார்கள்” சொல்லும்பொழுதே உரத்தது பாரியின் குரல். “பறம்பின் மாவீரனே இம்மலையைக்காக்கும் பெரும்பொறுப்பினை ஏற்று முடியனாகிறான். இதுவரை முடியன் பட்டத்தை ஏற்றவர்கள் அனைவரும் சூளூர்க்காரர்களே. பறம்பில் உள்ள மற்ற வீரர்கள் குறுங்காது முயலின் குருதியில் ஊறவைத்த நாணேற்றி எய்யும் அம்பின் தொலைவை வெறும் நரம்பில் நாணேற்றி சூளூர்க்காரர்கள் எய்துமுடிப்பர்.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83d_1517389268
காலம்பனும் கபிலனும் வியந்து நிற்க, பாரி கேட்டான், “இன்றைய நிலையில் பறம்பில் வில்வித்தையில் மாவீரன் யார் தெரியுமா?”

சற்றும் எதிர்பாராத கேள்வியாக இருந்தது. என்ன சொல்வதென்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தனர். நீலனின் திறன் பற்றி தேக்கன் நிறைய சொல்லியுள்ளார். உதிரனின் ஆற்றலைப்பற்றிய பேச்சுவந்தபொழுது வாரிக்கையன் சொன்ன செய்திகள் மிகுந்த வியப்பினை ஏற்படுத்தின. ஆனாலும் முடியனைப்பற்றி இதுவரை யாரும் எதுவும் பேசியதில்லை. இப்பொழுது பாரி சொல்லும் குறிப்பிலிருந்து பார்த்தால் அவனாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. அவர்களிடம் விடையை எதிர்பார்க்காமல் பாரி சொன்னான், “அம்மாவீரனின் பெயர் இரவாதன். முடியனின் ஒரே மகன். இன்றிரவு நமக்கான விருந்தினை ஏற்பாடு செய்து காத்திருக்கிறான்.  காலந்தாழ்த்தாமல் குதிரையேறுங்கள்.”

செம்மாஞ்சேரலிடமிருந்து விடைபெற்று வஞ்சித்துறைக்கு வந்தான் ஹிப்பாலஸ். சோழனின் படையெடுப்பு பற்றி இருவருக்கும் தெரியவேண்டிய செய்தி இருந்தது. அதனை அறியத்தான் ஹிப்பாலஸ் புறப்படுகிறான். சூழலை சாதகமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதில் இருவரும் மிகுந்த துடிப்போடு இருந்தனர். சோழப்படையெடுப்பின் காரணம் தெரியாவிட்டாலும் பறம்பின் மீதுதான் படையெடுக்கிறான் என்பதை அறிந்ததிலிருந்து உதிரஞ்சேரலின் மனதுக்குள் மகிழ்ச்சி பொங்கியபடி இருந்தது. பறம்பின் மீது யார் படையெடுத்தாலும் அதன் இறுதி வெற்றியை அடையப்போகும் வாய்ப்பு தனக்குத்தான் என்பதில் அவன்மிக உறுதியாக இருக்கிறான்.

ஹிப்பாலஸ்ஸின் நாவாய் வஞ்சியிலிருந்து புறப்பட்டது. தன்னோடு எபிரஸ்ஸையும் கால்பாவையும் அழைத்துக் கொண்டான். திரேஷியனும் பிலிப்பும் வஞ்சியிலேயே இருந்தனர். புகாரின் பெருஞ்செல்வந்தர்களும் வணிகர்களும் கால்பாவின் நட்புக்காகப் பல்லாண்டுகளாக ஏங்கிக்கிடப்பவர்கள். அவனுடைய நாவாய்கள்தாம் புகார் வணிகர்களின் செல்வங்களுக்கான வடிகாலாக இருந்தன. ஹிப்பாலஸ் அதனால்தான் கால்பாவை உடன் அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.

உதியஞ்சேரலுக்கு நன்குதெரியும், ஹிப்பாலஸ் புகாரை அடையும்பொழுது செங்கனச்சோழனின் படை பறம்புமலையின் அடிவாரத்தைச் சென்றடைந்திருக்குமென. ‘படை புறப்பட்டுவிட்டது’ என வந்த ஒற்றுச்செய்தியை ‘படை ஆயத்தமாகிறது’ என்று மட்டும் ஹிப்பாலஸ்ஸுக்குச் சொன்னான் உதியஞ்சேரல். அப்படியிருந்தும் ஹிப்பாலஸ்ஸை அனுப்பி வைப்பதற்குக் காரணம் இருக்கிறது. யவனர்களால் மட்டுமே அரசவையின் அனைத்து உண்மைகளையும் முழுமையாகவும் எளிதாகவும் அறியமுடியும். செங்கனச்சோழன் படையெடுப்பின் முழுநோக்கம் என்ன என்பதை அறிந்துகொள்ளத் திட்டமிட்டான் உதியஞ்சேரல்.

சூளூரிலிருந்து அதிகாலையிலேயே புறப்பட்டு விட்டனர். ஐந்தாம் நாள் மாலைக்குள் உப்பறையை அடைய வேண்டும். எனவே, இன்றைய பயணத்தொலைவை சற்று கூடுதலாகத் திட்டமிட்டான் பாரி. மற்றவர்களுக்கும் அது புரிந்து கவனமாகவும் விரைவாகவும் செயல்பட்டனர். இன்றைய நாள் முழுவதும் கபிலருக்கு இரவாதனின் நினைவே இருந்தது. வில்லடியின் மாவீரன் என்று பாரி அவனைப்பற்றிச் சொன்ன சொல்லிலிருந்தே சிந்தனை அவனைச் சூழ ஆரம்பித்தது. நேற்றிரவு அவனைப் பார்த்தகணம் முதல் எண்ணங்கள் அவனை விட்டு விலகவில்லை. அவ்விளம் வீரனின் துடிப்பும் அவனது பேரன்பும் கபிலரைக் கிறங்கவைத்தன.

குதிரைகள் விரைந்துகொண்டிருந்தன. மலையின் பக்கவாட்டுச் சரிவிலிருந்து மறுகுன்றுக்குத் திரும்பும் இடத்தில் குதிரையை இழுத்து நிறுத்தினான் பாரி.

மற்ற இருவரும் அவன் சொல்லப்போவதைக் கேட்க ஆயத்தமாயினர். “நாம் இவ்விடம் வளையாமல் நேராகப் பயணித்தால் வடதிசை நோக்கிச் செல்வோம். இத்திசையில் குன்றுகள் தவறாமல் ஊர்கள் உண்டு. ஒவ்வோர் ஊரின் தன்மையும் ஒவ்வொரு வகையானது.  ஒருநாளைக்கு ஐந்து முதல் ஆறு ஊர்களை நம்மால் பார்க்க முடியும். தொடர்ந்து பயணித்தால் மூன்று நாள் பயணத்தொலைவில் இருப்பதுதான் தந்தமுத்தம். அவ்வூரைச் சேர்ந்தவர்கள்தாம் முதன்முதலில் யானைகளுடனான மொழியை உருவாக்கியவர்கள். இன்றளவும் யானைகளைப்பற்றி அவர்களுக்கு இருக்கும் அறிவுத்திறன் வேறு யாருக்கும் இல்லை” என்று மிகச்சுருக்கமாகச் சொல்லிவிட்டுக் குதிரையைக் கிளப்பினான்.

பாரியின் குதிரை மலையின் பக்கவாட்டுச் சரிவில் இடப்புறமாகத் திரும்பியது. எதையோ கேட்க வாயெடுத்த காலம்பன் கேட்காமல் நிறுத்திக்கொண்டான். சரிவுப்பாதையின் தன்மை மிக ஆபத்தானதாக இருப்பதை உணர்ந்ததால் பேச்சை நிறுத்திக் கவனமாகக் கடந்தான். யானைகளைப்பற்றி பாரி சொல்லத் தொடங்கியதும் காலம்பனிடமிருந்து கேள்வி எழும் என்று கணித்தார் கபிலர். எழும் கேள்வியைக் கேட்கத்தொடங்கி நிறுத்திய காலம்பன் ஆபத்தான அவ்விடம் கடந்ததும் கேட்டான். “உனது பயணத்தின் போக்கு எனக்கு இப்போது வரை புரியவில்லை.”

என்ன கேட்கிறான் என்று கபிலர் விழித்ததைப்போலவே பாரியும் திகைத்தான். காலம்பன் சொன்னான், “எவ்வடையாளத்தை வைத்து உனது குதிரை போகிறது? எதனைப் பாதையென்று யூகித்துப் பயணிக்கிறாய்? புறப்பட்டதிலிருந்து நான் அதனைத்தான் உற்றுக் கவனித்து வருகிறேன். உனது பயணப்பாதை எனக்குப் பிடிபடவேயில்லை.  ஆனால், எவ்விடமும் தயங்கி நிற்காமல் பயணித்தபடியே இருக்கிறாய்” என்றான் காலம்பன்.

பாரி சொன்னான் “மலையின் எல்லாப் பாதைகளையும் விலங்குகளே உருவாக்குகின்றன. நாங்கள் கடமான் உருவாக்கும் பாதையையே பயன்படுத்துவோம். முகடுகளின் வழியான நெடும்பயணத்துக்கு அதுவே ஏற்றது. ஆனால் அதிலும் சிக்கல்கள் உண்டு. கடமான் பாதை, பாறை மடிப்புகளில் போய்ச் சேர்ந்தபிறகு மீண்டும் எவ்விடமிருந்து தொடங்குகிறது என்பதைக் கண்டறிவது எளிதன்று. தொடங்கும் இடத்தை மிகக்கவனமாகக் கண்டறியாவிட்டால் எத்திசை போய்ச் சேருவோம் என்பதே தெரியாது. அடர்காட்டுக்குள் போய் மாட்டிக்கொண்டு வெளியேற வழியின்றி நிற்போம்.”

நேற்றைய பயணத்தின்பொழுது படர்பாறை வந்ததும் பாரி குதிரையை விட்டு ஏன் இறங்கினான் என்பது இப்பொழுதுதான் விளங்கியது. பாதை மீண்டும் தொடங்கும் இடத்தைக் கண்டறியவே இறங்கியுள்ளான் என்று காலம்பன் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது கபிலர் கேட்டார், “மண்ணில் அழுத்தமற்ற இவ்வகைப்பாதைகள் எளிதில் மறைந்துவிடும் ஆபத்து இல்லையா?”

“கடமான் பாதை ஒருபொழுதும் அழியாது. அதன் காலடித்தடத்தையும் அதன் பற்கள் புற்களைக் கடிக்கும்வித்தையும் தெரிந்த ஒருவர் அதன் வழித்தடத்தைக் கண்டறிவது கடினமன்று. கொம்புகள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க முட்களையும் புதர்களையும் விட்டு விலகியே பாதையை அது உருவாக்கி வைத்திருக்கும். ஒருவகையில் குதிரைப்பயணத்துக்கு இவ்வகைப்பாதையே ஏற்றது” என்று சொன்ன பாரி, குதிரையின் கடிவாளத்தைச் சற்றே கவனப்படுத்தியபடி சொன்னான், “இதில் முக்கியமானது கடமான் பாதையிலிருந்து விலகி மீண்டும் அதன் மற்றொரு பாதையில் போய்ச் சேருவதுதான். அவ்விடைப்பட்ட தொலைவில் பாதைக்குறிப்புகளை நாம் உருவாக்கியுள்ளோம்.”

“இவ்வளவு கடினமான அமைப்புகொண்ட பாதையை எப்படி எல்லோராலும் நினைவில் கொள்ள முடியும்?” எனக் கேட்டார் கபிலர்.

“பறம்பின் அனைத்துத் திசைகளிலிருந்தும் இவ்வகைப் பாதைகள் எவ்வியூரை நோக்கி அமைந்திருக்கின்றன. அப்பாதையில் தொடர்ந்து காவல்வீரர்கள் குதிரைகளில் பயணித்தபடிதான் இருக்கின்றனர். அதுமட்டுமன்றி, அத்திசையில் உள்ள ஊர் மக்களுக்கும் இவ்வகைப்பாதையைப் பற்றிய தெளிவு உண்டு. ஆனால், எவ்வியூரில் இருந்து செல்லும் அனைத்துப் பாதைகளையும் கண்டறிந்து, அனைத்துத் திசைகளின் எல்லைவரை பயணிக்கக்கூடியவர்கள் மிகச்சிலரே. வாரிக்கையன், தேக்கன், கூழையன், முடியன் உள்ளிட்ட ஏழுபேரால் மட்டுமே அது முடியும்” என்றான் பாரி.

ஹிப்பாலஸ் புறப்பட்டுப்போன அன்றைய நாளே குடநாட்டு வேந்தனுக்கு ஓலை அனுப்பினான் உதியஞ்சேரல். ஓலை கண்டதும் குடநாட்டின் அமைச்சன் கோளூர் சாத்தனும் தளபதி எஃகல்மாடனும் வஞ்சியை நோக்கிப் புறப்பட்டனர். செப்பனிடப்பட்ட பாதை அமைப்பு இருந்ததால் விரைந்து வந்தனர்.

அவர்கள் வந்த செய்தி உதியஞ்சேரலுக்குத் தெரிவிக்கப்பட்டது. தன் தளபதி துடும்பனுடனும் அமைச்சன் நாகரையனுடன் அவைக்குள் நுழைந்தான். உள்ளே குடநாட்டின் அமைச்சன் கோளூர் சாத்தனும் தளபதி எஃகல்மாடனும் காத்திருந்தனர். வழமையான மரியாதைகள் முடிந்தவுடன் உதியஞ்சேரல் சொன்னான், “நாம் முன்பு திட்டமிட்டதைப்போல ஆளுக்கு ஒருமுனையிலிருந்து படைநடத்தி முன்செல்ல வேண்டாம். சூழல் நமக்கு மிகவும் சாதகமாக மாறியுள்ளது. பாண்டியனின் பெரும்படையும் சோழப்படையும் பறம்பினைத் தாக்க முற்பட்டுள்ளன. அத்தாக்குதல் தொடங்கும் செய்திக்காக நாம் காத்திருப்போம். அவர்களின் தாக்குதலை எதிர்கொள்வது பாரிக்கு எளிதன்று. அவனது முழுமையான ஆற்றல் பறம்பின் கிழக்கு, வடகிழக்கு முனைகளில் குவிக்கப்படும். அந்த நேரத்தில் நம் இரண்டு படைகளும் ஒரேமுனையில் பறம்புக்குள் நுழைவோம்.

நமது பெருங்தாக்குதலை எதிர்கொள்ளும் ஆற்றல் பாரியிடம் இருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில், அவனது படைவலிமை முழுவதும் அவ்விரு எதிரிகளை நோக்கி வெகுதொலைவுக்கு அப்பால் குவிக்கப்பட்டிருக்கும். அதன் பிறகு அவனால் வீரர்களை நம்மை நோக்கி எளிதில் நகர்த்தி வரமுடியாது. எந்தப் பச்சைமலைத்தொடர் அவனுக்கு இதுநாள் வரை அரணாக இருந்ததோ, அதே மலைத்தொடர்தான் அவன் விரைந்து வந்துசேர முடியாத பெருந்தடையாக இருக்கப்போகிறது. கிழக்கிலும் வடகிழக்கிலும் இருக்கும் தொலைவோடு ஒப்பிட்டால் சரிபாதித் தொலைவிற்கு நாம் உள்ளே போனாலே போதும், நடுமலையில் நிலைகொண்டுவிடுவோம். அதன்பிறகு காடு நமக்கான அரணாக மாறும்.”

தாக்குதலின் திட்டத்தை உதியஞ்சேரல் விளக்கியவிதம், கேட்டுக்கொண்டிருந்தவர்களை உறைய வைத்தது. உதியஞ்சேரலின் மனதுக்குள் முழுமையாகப் போர் தொடங்கியிருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83e_1517389283
ப்பறையை அடைந்து இருநாள்களாகிவிட்டன. ஆனாலும் கபிலர் இன்னும் வியப்பின் ஆழத்திற்குள்ளிருந்து மீளவில்லை. அவரால் எளிதில் நம்பக்கூடியதாக இது இல்லை. உப்பறையென்பது பச்சைமலைத் தொடரின் கருவறை என்றே சொல்லலாம். இங்கு பெரியகுளமொன்று இருக்கிறது. எக்காலத்திலும் நீர்வற்றாத குளமது. இக்குளத்தின் நீர் உப்பேறியிருக்கும். இம்மண்ணிலும் உப்புத்தன்மை மிக அதிகமாக இருக்கும்.
குளம் நோக்கி இருவரையும் அழைத்துக் கொண்டு நடந்தான் பாரி. “வடகோடியிலிருந்து தென்கோடிவரை நீண்டுகிடக்கும் இப்பச்சை மலைத்தொடர் முழுவதும் இருக்கும் விலங்குகள் ஆண்டு தவறாமல் இவ்விடத்துக்கு வந்துவிடுகின்றன. இவ்வுப்புநீரை அருந்துவது மட்டுமன்றி, இம்மண்ணையும் தின்கின்றன. ஏன் என்பதற்கான காரணம் இன்றுவரை புரியவில்லை. விலங்குகளின் நோய்க்கான மருந்தாக இம்மண் இருக்கிறதா அல்லது ஈனும் காலத்தில் இம்மண்ணின் ஆற்றல் அதற்குத் தேவைப்படுகிறதா என்று எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், பச்சைமலைத் தொடரிலிருக்கும் எல்லா விலங்குகளும் இக்குளத்துக்கு வராமல் இருக்காது. இக்குளம் பற்றிய அறிவு அவற்றின் குருதிக்குள்ளே இருக்கும்போல. தலைமுறை தலைமுறையாக அவை இவ்விடம் வந்து இத்தண்ணீரைக் குடித்து, இம்மண்ணைத் தின்றுவிட்டுச் செல்கின்றன.”

குருதிக்குள் உறைந்திருக்கும் நினைவிலிருந்து மேலெழுந்துகொண்டிருந்தது பாரியின் சொல். அவன் மேலும் சொன்னான், “ஒருவகையில் விலங்குகளின் தாய்நிலம் இதுதான். இவ்விடத்துக்கு வந்து செல்வதற்கான பாதை எல்லா விலங்குகளுக்கும் தெரிந்திருக்கிறது. இவ்விடமிருக்கும் ஊரின் பெயர் `அறல்.’ இவ்வூர்க்காரர்கள் விலங்குகளை வேட்டையாடக் கூடாது என்பது காலகாலத்துப் பழக்கம். பறம்பில் உழவுசெய்து வாழ்வது இவர்கள் மட்டுந்தான். இவர்கள்தாம் ஆதியிலே உழவைக் கண்டறிந்ததாகச் சொல்லுவார்கள்” என்றான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83f_1517389297
“உழவும் வேளிர்குலம் கண்டறிந்ததுதானா?’ எனக் கேட்டார் கபிலர்.

“இதற்கான விடையை நீங்கள்தாம் சொல்ல வேண்டும். ஆனால் ஒன்று எனக்குத் தெரியும். விலங்குகளின் தாய்நிலமான இந்த உப்பறை பறம்புக்குள் இருப்பதால்தான் பதினான்கு வேளிர்குலத்திலும் பறம்பின் வேளிர்கள் முக்கியத்துவங்கொண்டவர்களாக மாறினர்.”

“அதனால்தான் வேளிர் குலச்செல்வங்கள் அனைத்தும் பறம்பிலே கொண்டுவந்து பாதுகாக்கப்படுகின்றனவா?”

“பறம்பு அனைத்தையும் பாதுகாக்கும். இக்காட்டின் செடிகொடிகளையும், உயிரினங்களையும் காக்கும் பொறுப்பைத்தான் மனிதர்களாகிய எமக்கு இயற்கை அளித்துள்ளது” சொல்லியபடி குளக்கரையில் மண்டியிட்டான் பாரி.

என்ன செய்யப்போகிறான் எனத் தெரியாத திகைப்பில் கபிலரும் காலம்பனும் அவனைப் பார்த்திருக்க, நீரருந்தும் விலங்கினைப்போலக் குனிந்து முகத்தினை நீருக்கு அருகில் கொண்டுசென்றான்.
“இக்காட்டின் எல்லா உயிர்களைப்போல இவ்வுப்பூநீர் குடித்தே எம் வேளிர்குலமும் உயிர்வாழ்கிறது. இந்நீரையும் நிலத்தையும் விலங்கினங்களையும் செடிகொடிகளையும் காத்தல் என்பது எமது உயிரினும் மேலானது” என்று அவன் கூறிய சொற்கள் நீருள் புதைந்திருக்கும் ஆதி உப்பின் மீது படிந்துகொண்டிருந்தன. பார்த்துக்கொண்டிருந்த கபிலரும் காலம்பனும் குளத்து நீரில் வாய்வைத்துக் குடித்துக்கொண்டிருக்கிறான் பாரி என நினைத்தனர்.

முகமெங்கும் நீர் வழிய நிமிர்ந்தான் பாரி. கண்திறவாமல் வான்நோக்கி நாடியை உயர்த்தினான். அவனது தொண்டைக்குழிக்குள் இருந்த உப்புநீரின் வழியே பீறிட்டு வெளிவந்தது ஓசை.

கணநேரத்தில் காட்டை உலுக்கிய ஓசையது. ஓசை வெளிப்பட்ட கணத்தில் கபிலரும் காலம்பனும் அஞ்சி அகன்றனர். எந்த வகையான ஓசையிது என்பது இருவருக்கும் பிடிபடவில்லை. விட்டுவிட்டுத் தெறித்துக்கொண்டிருந்தது ஓசை. பாரி வேறொன்றாக மாறிக்கொண்டிருப்பது போல் தெரிந்தது. திகைத்துப்போய் நின்றபொழுது காலம்பன் கணித்தான். வேட்டையைத் தொடங்கும் கணத்தில் விலங்குகளின் உள்மூக்கிலிருந்து வெளிப்படும் உறுமலோசை இது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 13, 2018 9:20 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83a_1517990133
ப்பறைக்குச் சென்ற மூவரும் எவ்வியூர் வந்துசேர்ந்தனர். அவர்கள் வந்தபொழுது குலநாகினிகளைத்தவிர ஊரில் யாருமில்லை. எல்லோரும் நீலன், மயிலா மணவிழாவிற்காக வேட்டுவன் பாறைக்குச் சென்றுவிட்டனர். ஒருநாள் ஓய்விற்குப்பின் மூவரின் குதிரைகளும் எவ்வியூரிலிருந்து வேட்டுவன் பாறையை நோக்கிப் புறப்பட்டன. நீலன், மயிலா மணவிழா மகிழ்வு, பயணத்தின் வேகத்தைக் கூட்டியபடியே இருந்தது.

வேட்டுவன் பாறையில் ஆட்கள் நிரம்பி வழிந்தனர். மணவிழா உற்சாகம் களைகட்டியிருந்தது. எவ்வியூர் முழுமையாக வந்துசேர்ந்திருந்தது. பல ஊர்களிலிருந்தும் ஊர்ப்பெரியவர்கள் வந்திருந்தனர். கள்ளும் கனியுமாக மணவிருந்து தொடங்கிவிட்டது. மான்தசையைச் சுட்டுக்கருக்கும் வாசம் காடெங்கும் வீசிக்கொண்டிருந்தது. வெற்றிலைகள் வகைபிரித்து வரிசை வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன.

புனுகு மணமும் நாகப்பூ மணமும் மணவிழாவுக்கே உரியன. புன்னைப்பூவும் பாதிரிப்பூவும் ஆலம்பனையின் ஓலைக்கொட்டானில் குவிந்துகிடக்க வந்தவர்கள் எல்லாம் மனம்மயங்கி, கனியுண்டு கள்ளருந்தினர். மான்தசையைக் கடித்திழுத்து உண்டுவிட்டு அதனைச் செமித்து முடிக்க வெற்றிலை தின்றனர். மலைமக்களின் மணவிழா என்பது எல்லையில்லாத இன்பத்தை உணரவும் உணர்த்தவுமான விழா. உணவின் வகைகளும் ஆட்டபாட்டத்தின் வகைகளும் சொல்லிமாளாது.

மலையெங்குமிருந்து சாரிசாரியாக ஆட்கள் வந்துகொண்டிருந்தனர். வெவ்வேறு வகையான இசைக்கருவிகளின் ஓசைகள் அவர்களுடன் வந்துகொண்டிருந்தன. இசைக்கப்படும் ஓசையை வைத்தே வருவது எந்த ஊர்க்காரர்கள் எனப் பெரியவர்கள் சொன்னார்கள். சிறுவர்களின் கொண்டாட்டம் தனித்திருந்தது. காலம்பனின் மூத்த மகன் கொற்றன். அவன்தான் எவ்வியூர் சிறுவர்களின் கூட்டத்துக்குத் தலைவனாக இருந்தான். அவன் எவ்வியூர் வந்த புதிதில் மற்ற சிறுவர்கள் அவனோடு பழகத் தயங்கினர். ஏனெனில் அவனது உருவ அமைப்பு அவனைச் சிறுவனென்று ஏற்றுக்கொள்ள முடியாத தன்மையைக் கொண்டிருந்தது. நாளடைவில் எல்லாம் சரியானது. விளையாட்டில் அவனை யாரும் வெல்ல முடியாதது மட்டுமல்ல; எவ்வியூர் சிறுவர்களுக்குத் தெரியாத புதுவிளையாட்டுகள் நிறைய அவனுக்குத் தெரிந்திருந்தன. காட்டெருமை விளையாட்டினை அவன்தான் எல்லோருக்கும் கற்றுக்கொடுத்தான். ஆட்டபாட்டத்திலும் இணையற்றவனாக இருந்தான். எனவே எவ்வியூர் சிறுவர்கள் எந்நேரமும் அவனுடனே இருந்தனர்.

அலவன், முடிநாகன், குறுங்கட்டி, அவுதி, மடுவன், உளியன், வண்டன் ஆகிய எல்லோரும் இப்பொழுது சிறுவர்களாவும் இல்லாமல் இளைஞர்களோடும் சேரமுடியாமல் நடுவில் நின்று விழித்துக்கொண்டிருந்தனர். இளைஞர்கள் எல்லாம் தங்களின் இணையைப்பற்றிப் பேசிச்சிரித்து மகிழ்ந்துகொண்டிருந்தனர். இவர்கள் அருகிற்போனால் சிறுவர்களோடு விளையாடச்சொல்லி விரட்டிவிடுகிறார்கள். சிறுவர்களிடம் போனால் அவர்கள் எல்லாம் கொற்றனின் தலைமையில் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். யாரும் இவர்களுடன் நின்று பேசக்கூட ஆயத்தமாக இல்லை. விளையாட்டுகள் அவ்வளவு மும்முரமாகப் போய்க்கொண்டிருந்தன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83b_1517990147
சங்கவை, சிறுமிகளின் கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு தென்புறச்சரிவில் மூங்கிற்குச்சியில் நார்ப்பந்துகளைச்செருகி அடித்து விளையாடிக்கொண்டிருந்தாள். பெண்களும் பெரியவர்களும் மணவிழா வேலையில் மூழ்கிப்போயிருந்தனர். யார்யார் எங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.

பொழுதுமங்கி இருள்கவியத் தொடங்கியது. ஊரெங்கும் தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டன. மந்தையில் அமர்ந்திருந்த பெரியவர்கள் ஒவ்வொருவரிடமும் சிறுபிள்ளைகள் வந்து வெற்றிலை கொடுத்தனர். இருப்பதிலே மிகமூத்தவர் வாரிக்கையன்தான். ஆனால் அவருக்கு வெற்றிலை கொடுக்காமல் மற்றவர்களுக்காகப் பிள்ளைகள் கொடுத்துக்கொண்டிருந்தனர். கொடுத்து விடுபவர்கள் சொல்வதைத்தானே பிள்ளைகள் கேட்பர். காலையிலிருந்து இளைஞர்களை விரட்டி விரட்டி வேலைவாங்கியதால் தம்மீது கோபமாக இருக்கிறார்கள் என்று வாரிக்கையனுக்குத் தோன்றியது. ‘சரி, என்னதான் நடக்கிறது பார்ப்போம்’ என்று வாரிக்கையன் பொறுத்திருந்தார்.

எல்லோருக்கும் கொடுத்தபின் ஒரு சிறுமி வந்து வாரிக்கையனுக்குக் கொடுத்தாள். சற்றே கோபத்தோடு அதனை வாங்கினார். ஆனால் மற்றவர்களுக்குக் கொடுத்ததைவிட இருமடங்கு வெற்றிலை அதில் இருந்ததால் முகத்தில் மகிழ்ச்சி பரவியது. உடனடியாக வெற்றிலையை மெல்லத்தொடங்கினார்.

மேற்புறமிருந்து காற்றுவீச மந்தையை ஒட்டியிருந்த பந்தத்தீ பாம்பைப்போலச் சீறி அடங்கியது. எல்லோரும் சீற்றத்தின் ஓசையை கவனிக்க, ஒரு பெரியவர் மட்டும் காற்றோடு மிதந்து வந்த மணத்தை மோந்தபடி “இது குளவிப்பூவின் வாசமாயிற்றே இப்பக்கம் குளவிக்கொடி இருக்கிறதா என்ன?” என்று கேட்டார்.

தேக்கனுக்குத் தெரியவில்லை. பின்னால் உட்கார்ந்திருந்த வாரிக்கையனிடம் கேட்போம் என்று சத்தம்போட்டுக் கேட்டார். எங்கும் பேச்சுக்குரல் கேட்டதால் தேக்கனின் குரல் காதில் விழவில்லை. எழுந்து மந்தையின் முன்பக்கமாக வந்தார் வாரிக்கையன். நொங்கு தின்ற குரங்குபோல அவரின் இருபக்கத் தாடைகளும் உப்பி இருந்தன. உள்ளுக்குள் வெற்றிலையை அடைத்து வைத்திருந்தார். அருகில் வந்துநிற்கும் வாரிக்கையனிடம் குளவிப்பூ பற்றி மீண்டும் கேட்டார் தேக்கன். வெற்றிலையைப் பக்குவமாய் அணைத்துக்கொடுத்துப் பேசக்கூடியவர் வாரிக்கையன் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரும் பக்குவமாய் நாவால் ஒதுக்கிப் பேசத் தொடங்கும்பொழுது திடீரென ஏதோவொன்று உச்சிமண்டைக்குள் ‘கிர்’ரென ஏறியது. என்னவென்று புரிந்துகொள்ளும்முன் பெருந்தும்மலாக வெடித்து வெளியில் வந்தது. யானையின் துதிக்கைக்குள்ளிருந்து சீறிப்பாய்வதைப் போல மந்தையிலிருந்த எல்லோரின் மீதும் வெற்றிலை எச்சில் தெறித்துச் சிதறியது. உட்கார்ந்திருப்பவர்கள் விழித்துக்கொள்வதற்குள் ஒன்று, இரண்டு, மூன்று என்று விடாமல் தும்மினார் வாரிக்கையன்.

கீழ்ப்புறமிருந்து எதிர்காற்று அடுத்தடுத்து வீசியதுபோல் இருந்தது. பலத்த காற்றோடு சேர்ந்து நீரும் வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83c_1517990160வந்ததால் மந்தையை ஒட்டியிருந்த தீப்பந்தம் முழுமுற்றாக அணைந்தது. மந்தையில் ஓராள்கூட மிச்சமில்லை. நடக்கமுடியாத பெருசுகள்கூட தாவிக்குதித்து வெளியேறியதாகச் சொன்னார்கள். விடாது தும்மிய வாரிக்கையனை அவருக்கு உற்ற தோழர்கள் இருவர் பக்குவமாய் வெளியில் கூட்டிப்போனார்கள்.

மணவிழாக்கொண்டாட்டம் களைகட்டியது. கையில் துடைப்பத்தோடு மந்தைக்கு வந்த பெண்கள் வசவுச் சொல்லை வாரி இறைத்தபடி மந்தையைப் பெருக்கித் தூய்மைப்படுத்தினர். மீசைமுடியிலும் தலைமுடியிலும் ஒட்டிய வெற்றிலையெச்சிலை எப்படி நீக்குவதெனத் தெரியாமல் பெருசுகள் இங்குமங்குமாக அலைந்துகொண்டிருந்தனர்.

மணவிழாவுக்காகத் தொடர்ந்து மூன்றுநாள்கள் விருந்து நடக்கும். விலங்கின் இறைச்சியை வெட்டியெடுக்கும் இடத்திலிருந்து துர்நாற்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காக குளவிப்பூவின் கொடிகளைக் கொண்டுவந்து அப்பக்கம் போட்டிருந்தனர். அந்த மணத்தை அறிந்துதான் குளவிப்பூ வாசம் இங்கே எப்படி என்று பெரியவர் கேட்டார். அதுதான் இவ்வளவுக்கும் காரணமானது. இப்பொழுது குளவிப்பூக்கொடியை இருவர் கைநிறைய அள்ளிவந்து மந்தையில் போட்டனர். அப்படியும் துப்பிய நாற்றம் போகவில்லை.

வாரிக்கையனை அழைத்துக்கொண்டு போன அவர் தோழர்கள் தனியே ஓரிடத்தில் அவரை உட்காரவைத்தனர். தும்மல் கொஞ்சங்கொஞ்சமாக நின்று அமைதியடைந்தார். கண்ணிலும் மூக்கிலும் நீர்கொட்டி நின்றது. “எப்படி திடீரென இவ்வளவு தும்மல் வந்தது?” எனக் கேட்டார்.

உடனிருந்த பெரியவர்கள் இருவரும் “தும்மலுக்கெல்லாமா காரணம் சொல்ல முடியும்?” என்றனர்.

வாரிக்கையன் ஏற்கவில்லை. இடுப்புத்துணியால் முகத்தை முழுவதுமாகத் துடைத்தபடி “ஏதோ நடந்திருக்கிறது!” என்றார். உடனிருந்த பெரியவர்கள் இருவரும், “இதில் என்ன நடந்திருக்கும்?” என்றனர். வாரிக்கையன் இதனை அப்படியே விட விரும்பவில்லை.

எங்கும் வாரிக்கையன் பேச்சுதான் பேசப்பட்டுக்கொண்டிருந்தது. “மான்கறி, மிளாக்கறி என எவ்வளவு சுவையாகச் சமைத்துப்போட்டாலும் இந்த மணவிழாவின் பேச்சு வெற்றிலையைப் பற்றித்தான்” என அவரிடமே வந்து கேலி பேசிவிட்டுப் போயினர். அதற்கெல்லாம் அவர் கவலைப்படவில்லை. என்ன நடந்திருக்கும் என்பதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தவர் இறுதியில் அதனைக் கண்டறிந்தார்.

இளசுகளை மிகவும் கடிந்துகொண்டு, ஓயாமல் வேலைவாங்கினார். நீலனின் உற்றதோழன் புங்கனை மந்தையில் வைத்து காலையில் திட்டினார். அதனால் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து வாரிக்கையனை அதே மந்தையில் வைத்து வாரிவிடத் திட்டந்தீட்டினர்.

தும்மி இலையைப் பறித்துவந்து இவருக்குக் கொடுக்கப்பட்ட வெற்றிலைக்குள் வைத்துக்கொடுத்துள்ளனர். தும்மி இலையையோ, தும்மிப்பூண்டையோ சாப்பிட்டால் உடனடியாகத் தும்மல் வரும். கட்டுப்படுத்த முடியாதபடி வந்துகொண்டே இருக்கும். அதனால்தான் வாரிக்கையன் இந்தப் பாடுபட்டுள்ளார். 

நடந்ததைக் கண்டுபிடித்த வாரிக்கையன் தன்னுடைய வேலையைக்காட்ட முடிவுசெய்தார். மந்தைப்பக்கமே போகாமல் ஊருக்குள் நுழைந்தார். பாவை விளையாட்டும் பந்து விளையாட்டும் விளையாண்டபடி சிறுவர், சிறுமியர் எங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். தாழ்வான மரக்கிளைதோறும் ஊஞ்சல்கட்டி பலரும் ஆடினர். வாரிக்கையனின் கண்கள் தேடின. வட்டாட்டத்தையும் கழங்காட்டத்தையும் தாய்மார்களின் துணையோடு குழந்தைகள் ஆடினர். அவ்விடத்தைக் கடந்து போகையில்தான் ஓங்கூர் மருத்துவன் கண்ணிற்பட்டான். அவனை சத்தம்போட்டுக் கூப்பிட்டார் வாரிக்கையன். அவன் அருகில் வந்தான்.

தனக்கு வேண்டியதைக் கேட்டார். மருத்துவர் அதிர்ச்சியடைந்தான். ‘இதை ஏன் இவர் கேட்கிறார்?’ என்பது அவருக்குப் புரியவில்லை. வாரிக்கையன் கேட்கும்பொழுது கொடுக்காமல் இருக்க முடியாது. “சரி ஏற்பாடு செய்துதருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83d_1517990178
‘இனி மந்தைப்பக்கம் போவோம்’ என நடையைக்கட்டினார்.  மந்தைவெளி இரவு நடைபெறும் ஆட்டத்துக்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தது. வந்துள்ளதில் மணமுடித்தவர்களும் மணமுடிக்காதவர்களும் தங்கள் இணையோடு சேர்ந்து ஆடும் குரவைக்கூத்துதான் மணவிழா நிகழ்வின் உச்சம்.  இந்த ஆட்டத்தில் பங்கெடுக்கவும் இந்தக் காதற்கொண்டாட்டத்தைக் காணவுந்தான் எல்லோரும் ஆர்வமாக இருப்பர். அதற்கான தொடக்க ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.

வாரிக்கையன் கூட்டத்தின் ஓரமாகவே நடந்து மந்தையை நோக்கி வந்துகொண்டிருந்தார். இசைக்கலைஞர்கள் இரவு ஆட்டத்துக்குத் தங்களை ஆயத்தம் செய்துகொண்டிருந்தனர். பகலில் இசைத்தது முக்கியமல்ல; இரவில் இசைக்கப்போவதுதான் முக்கியம். ஏனென்றால், இது ஆணும் பெண்ணும் இருகூறாகப் பிரிந்து தங்கள் இணையோடு ஆடும் போட்டியாட்டம். தழுவித்துள்ளும் காதலுக்கு இசையே அடிப்படையாக அமையவேண்டும். நள்ளிரவு நெருங்க நெருங்க ஆட்டத்தின் வேகத்துக்கு இசைக்கலைஞன் ஈடுகொடுத்தாக வேண்டும். அதற்கான ஆயத்தங்களில் அவர்கள் தீவிரமாயினர். 

வாரிக்கையன் மந்தை முழுவதையும் சுற்றிப்பார்த்தார். கபிலர் மந்தையின் வடபுறமிருந்த மேட்டிலே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். என்ன நடக்கிறது என்பதை அவரால் கண்டறிய முடியாது. எனவே அவரால் ஆபத்து ஏதுமில்லை என முடிவுசெய்த வாரிக்கையன் மந்தையின் முன்புறத் திண்ணையில் தேக்கன் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தார். தூக்கிவாரிப் போட்டது.

‘தேக்கனை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது. எதையும் கண்டறிவதில் கெட்டிக்காரன். எனவே இவனை மந்தையை விட்டு வெளியேற்ற என்ன வழி?’ என்று சிந்தித்தார். அப்பொழுது அவரது கண்ணில் கட்டையர்கள் இருவர் தென்பட்டனர்.

ஆதிமலையின் வடகோடி அடிவாரத்தில் வாழ்பவர்கள் கட்டையர்கள். இருப்பதிலே மிகக்குள்ளமானவர்கள். ஆனால் மகாதிறமைசாலிகள். வீரத்தால் புகழ்பெற முடியாது என உணர்ந்த அவர்கள் வித்தைகளைக் கற்றுப் பெரும்புகழடைந்தனர். அவர்கள் ஊர்த்தலைவர்கள் இருவர் மட்டும் வந்துள்ளனர். பார்த்ததும் வாரிக்கையன் அவர்களைத் தனியே அழைத்து. “திகைப்பூச்சி இருக்கிறதா? எங்கிருந்தாவது பிடிக்கமுடியுமா?” எனக் கேட்டார்.

இருவரில் மூத்தவர் சொன்னார், “இருட்டிவிட்டதே, இனி எங்கு போய்த் தேடுவது?”

இளையவன் சொன்னான், “வருகிறபொழுது அருகிருந்த குளத்தில் அது கத்தும் ஓசையைக் கேட்டேன். தீப்பந்தத்தோடு இருவரை அனுப்புங்கள் பிடித்துவருகிறோம்” என்றான். பந்தத்தோடு இரண்டு இளைஞர்களை உடனனுப்பினார் வாரிக்கையன்.

வேட்டுவன் குன்றின் பின்புறச் சரிவில் சிறுகுட்டை ஒன்று இருந்தது. கோடைக்காலமாதலால் நீர் மிகக்குறைவாகவே இருந்தது. அதை நோக்கித்தான் அவர்கள் நால்வரும் போனார்கள். திகைப்பூச்சி நண்டுவலைக்குள்தான் இருக்கும். சிறுசிலந்தியைப்போல சிறிய உடலமைப்பும் நீண்ட கால்களையும்கொண்டது. பார்த்தால் சட்டெனத் தெரியாது. ஆனால் அது ஓசையைத் தெறித்துக்கொண்டேயிருக்கும். தொலைவிலிருந்தும் கேட்கலாம்.

கட்டையர்கள் குட்டையின் அருகிற்போய் நின்றார்கள். திகைப்பூச்சியின் ஓசை வருகிறதா என உற்றுக்கேட்டார்கள். ஓசையை அறிந்து அவ்விடம் போய்க் குத்தவைத்து உட்கார்ந்தனர். குறிப்பிட்ட நண்டுவலைக்குள்ளிருந்து அவ்வோசை வந்தது. பந்த வெளிச்சத்தை நன்றாகக் காண்பிக்கச் சொன்னார்கள். குளக்கரையோரம் சிறுநண்டு ஒன்று ஓடியது. அதனைப் பிடித்து முதுகோடு ஒரு நார்க்கயிற்றைக் கட்டினர். பந்தமேந்தியவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இவர்கள் என்னதான் செய்கிறார்கள் என்று உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தனர். பிடிபட்ட நண்டினை ஓசைவந்த வலையின் அருகே விட்டனர். அது சொளவுக்குள் குடுகுடுவென ஓடியது. சிறிதுநேரத்திலே நார்க்கயிற்றை மேலே இழுத்தனர். இரண்டுமூன்று திகைப்பூச்சிகளைக் கவ்விய கால்களோடு நண்டு மேலே வந்தது. அதனைப் பக்குவமாய் எடுத்து இடுப்பிலே இருந்த பைத்துணிக்குள் போட்டு முடிச்சிட்டுக்கொண்டனர். 

நேரமாகிக்கொண்டிருந்தது. கட்டையர்களை இன்னும் காணவில்லை என்ற பதற்றத்தில் இருந்தார் வாரிக்கையன். ஓங்கூர் மருத்துவன் அவர் கேட்டதைக் கொண்டுவந்துவிட்டான். பெருமகிழ்ச்சி. உடனிருந்த இரு பெரியவர்களையும் அழைத்து அடுத்து செய்யவேண்டிய வேலையைச் சொல்லிமுடித்தார். கட்டையர்கள் இன்னும் வந்துசேரவில்லை. சற்றே பதற்றத்தோடு மந்தையில் போய் தேக்கனுக்கு அருகில் உட்கார்ந்தார் வாரிக்கையன்.

மந்தைவெளி முழுக்க ஆட்டத்தைக்காண, பெருவட்டத்தில் மக்கள் உட்கார்ந்தனர். புங்கனின் தலைமையில் இளைஞர்கள் கூட்டமாய் களத்தை நோக்கி வந்தனர். இணையர்கள் எல்லாம் களத்துக்கு வரத் தொடங்கினர். ஆட்டம் நள்ளிரவு வரை நடக்கும். நேரமாக ஆகத்தான் வேகம் கூடும். ஆண்சுற்றில் வேகங்கூடுதலாக இருக்கும், பெண்சுற்றில் குழைவு கூடுதலாக இருக்கும். இறுதிச்சுற்றில் இணையைப் பொறுத்து ஒவ்வொன்றும் ஒவ்வொருமாதிரி இருக்கும். தழுவியாடும் ஆட்டமாதலால் எதையும் முன்கணிக்க முடியாது.

குரவைக்கூத்து என்பது மலைமக்களின் ஆதிநடனம். ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தொற்றி ஆடுவதால் “தொற்றியாடல்” என்றும் தழுவி ஆடுவதால் “தழுவியாடல்” என்றும் இதற்குப் பெயருண்டு. இணையர்கள் எல்லாம் களத்துக்குள் நுழைந்தனர். பார்வையாளர்கள் வழக்கம்போல் ஆண், பெண் என இருகூறாகப் பிரிந்து ஆட்டத்தினை ஆதரித்து ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். முதுபெண்களும் வேறு சிலரும் மணவிழா வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தனர். மணமகள் அவளது ஊரிலிருந்து இன்னும் அழைத்துவரப் படவில்லை. எனவே மணமகன் ஆட்டத்தைக் காணக்கூடாது.

கோடை வெக்கைக்கு தாகம் கடுமையாக இருக்கும். அதுவும் ஆடுபவர்களுக்கு விடாமல் வேர்த்துக்கொட்டும். எனவே ஆட்டக் காரர்களுக்காக ஆண்கள் பக்கமும் பெண்கள் பக்கமும் தனித்தனியாகப் பழச்சாறு கலந்து வைக்கப்பட்டிருந்தது. இசைக்கலைஞர்கள் ஒருமுகப்பறையையும் இரட்டை முகமுடைய இணைமுகப்பறையையும் முழங்கத் தொடங்கினர். கூட்டத்தினரின் ஆர்ப்பரிப்பு எழுச்சிகொண்டது. இளைஞர்கள் ஒருபக்கமும் இளைஞிகள் ஒருபக்கமுமாகக் களமிறங்கினர். புங்கனின் முகத்தில் மகிழ்வின் ஒளிவீசியது.   
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83f_1517990199
மற்ற ஆட்டத்தைப்போல மெதுவாகத் தொடங்கி சீறான வேகங்கொள்ளும் ஆட்டமல்ல இது. இணையரின் வேகத்தைப் பொறுத்து சட்டென வேகங்கூடும். ஓர் இணை நெருங்கி ஆடிவிட்டால் போதும் மற்றவர்களும் நெருங்குவதற்காக ஆட்டத்தின் வேகத்தைக் கூட்டுவர். கால்களும் கைகளும் வேகங்கொள்ள பறையிசைப்பவனின் வேகம் அதற்கு முன்னே சென்றாக வேண்டும். முதற்சுற்று எவ்வளவு வேகமாக ஆடினாலும் அது தொடக்கம்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். வாரிக்கையன் கைகளால் உத்தரவுகொடுத்து, வேலையைத் தொடங்கச்சொன்னார். ஒரு பெரியவர் ஆண்கள் குடிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த பெரும் பானைக்குள் எதையோ போட்டுவிட்டு நகர்ந்து இப்பக்கம் வந்துவிட்டார்.

எல்லோரின் கவனமும் ஆட்டக்களத்தின் மீதே இருந்தது. உள்ளே போடவேண்டியதைப் போட்டாகிவிட்டது என்பது வாரிக்கையனுக்கு மகிழ்ச்சிதான். ஆனாலும் கட்டையர்கள் வந்துசேராதது கவலையைத் தந்தது. தேக்கன் விழிப்போடிருந்தால் நாம் மாட்டிக்கொள்வோம் என்ற பதற்றத்தில் இருந்தார். முதற்சுற்று ஆட்டம் முடிந்தது. ஆடியவர்கள் பானைகளில் இருந்த பழச்சாற்றை அருந்தினர். 

ஆண்களின் பக்கமிருந்த பழச்சாற்றில் வாரிக்கையன் கலக்கச்சொன்னது காமஞ்சுருக்கியை. அது இச்சையைச் சட்டென வற்றிப்போகச்செய்யும். உடலை வேகமாகக் களைப்புறச்செய்து தூக்கத்துக்குக் கொண்டு செல்லும். காமஞ்சுருக்கி கலக்கப்பட்ட பழச்சாற்றை ஆண்கள் நான்கைந்து குவளை குடித்துவிட்டு அடுத்த சுற்றுக்கு ஆயத்தமாயினர்.

இரண்டாஞ்சுற்று ஆண் இறங்கி ஆடவேண்டும். இசைக்கலைஞர்கள் ஆயத்தமானார்கள். புங்கனை நடுவில் நிறுத்திக் கைகோத்து வட்டங்கொண்டது ஆண்களின் அணி. ‘நீங்கள் ஆடி வாருங்கள், பார்ப்போம்’ என்று எதிர்பார்த்தி ருந்தனர் பெண்கள். கூட்டம் பெருமாரவாரத்தைச் செய்துகொண்டிருந்தது. அப்போதுதான் கட்டையர்கள் உள்ளே வந்தார்கள். அவர்களைப் பார்த்த பின்தான் வாரிக்கையன் முகத்திலே மகிழ்ச்சி வந்தது. அவர்களைக் கையசைத்து மந்தைப்பக்கமாக வரச் சொன்னார். அவர்களும் அப்பக்கமாக வந்து யாரும் அறியாத வகையில் திகைப்பூச்சி இருக்கும் சுருக்குப்பையை வாரிக்கையனின் கைகளில் ஒப்படைத்துவிட்டு நகர்ந்தனர்.

பெருமாரவாரத்தோடு தொடங்கிய இரண்டாஞ்சுற்று நேரம் செல்லச்செல்ல வேகங்கூடுவதற்கு பதில் மந்தநிலை கொள்ளத் தொடங்கியது. மந்தையில் தேக்கனுக்கு சற்று பின்னால் உட்கார்ந்திருந்த வாரிக்கையன் ஆட்டத்தைக்கண்டு அகமகிழத் தொடங்கினார். இசைக்கலைஞர்களுக்கு சற்றே குழப்பமானது. ஏன் ஆண்கள் வேகங்கொள்ள மறுக்கின்றனர் என்று சிந்தித்தபடியே இசையின் வேகத்தைக் கூட்ட முயன்றனர்.

தேக்கனுக்குப் பின்னால் இருந்த வாரிக்கையன் சுருக்குப்பையைத் தேக்கனின் முதுக்குப் பின்புறமாக வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83e_1517990210வைத்து அவிழ்த்தார். உள்ளே இருந்த திகைப்பூச்சி தேக்கனின் முதுக்குப்புறமாக மேலே ஏறியது. கண்ணுக்குத்தெரியாத அளவுள்ள அதன் கால்கள் மேலேறுவதை மனிதனால் உணரமுடியாது. மேலேறிய அது கடித்துவிட்டு சிறிதுநேரத்தில் செத்துப்போகும். திகைப் பூச்சியால் கடிக்கப்பட்டவர்கள் சிறிதுநேரத்திலேயே திகைத்துப்போய்விடுவர். அவரால் வழக்கம்போல் செயலாற்ற முடியாது. எண்ணியதைப் பேசமுடியாது, மறுமொழி சொல்லமுடியாது. ஒருவித மந்தநிலையில் திகைப்பு மாறாமல் அவ்வப்பொழுது சிரித்தபடி தலையாட்டிக் கொண்டிருப்பர். வேறெதுவும் செய்யமாட்டார்கள். முதுகில் கடித்தவுடன் திகைப்பூச்சி சரிந்து விழுந்ததை உற்றுப்பார்த்த வாரிக்கையன் இனி சிக்கலேதுமில்லை என்ற முடிவுக்குப் போனார்.

கூட்டத்தின் ஆரவாரம் பலமடங்கு அதிகரித்தது. அதற்குக் காரணம் இளைஞர்களிடம் வேகம் போதாததால் சுற்றியுள்ள ஆண்கள் பெருங்குரலெடுத்துக் கத்தி அவர்களை உற்சாகப்படுத்த முயன்றனர். அப்பொழுது இன்னொரு பெரியவருக்குக் கையசைத்து உத்தரவு கொடுத்தார் வாரிக்கையன். அப்பெரியவர் நேராக பெண்களுக்கான பழச்சாறு கலக்கப்பட்டுள்ள பானையில் எதனையோ போட்டுவிட்டு ஒதுங்கி வந்தார். ஆண்களின் ஆட்டத்தைக்காணும் யாருக்கும் கோபம் வரும், அந்த அளவு மோசமாக ஆடிக்கொண்டிருந்தனர். இசைக்கலைஞர்கள் முடிந்த அளவு வேகத்தைக் கூட்டிப் பார்த்தனர். ஒன்றும் நடக்கவில்லை. வழக்கமாக ஆண்களின் சுற்றில் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பெண்கள் சிலர் தள்ளாடிவிழுவதும் உட்கார்ந்துவிடுவதும் நடக்கும். இன்று அது எதுவும் நடக்கவில்லை. இவ்வளவு மெதுவாக எவ்வளவு நேரந்தான் ஆடுவது என்று சலித்துப்போய் நிறுத்தினான் இசைக்கலைஞன். வழக்கமாக இசையை எப்பொழுது நிறுத்தினாலும் “நிறுத்தாதே!” என்றுதான் குரல் வரும். ஆனால், இன்று விட்டால்போதும் என்ற நிலையில்தான் ஆடும் இளைஞர்கள் இருந்தனர்.

இளைஞர்கள் ஏன் இவ்வளவு களைப்பாக ஆடுகின்றனர் என்பது யாருக்கும் விளங்கவில்லை. இளைஞிகளுமே சற்று குழப்பத்துக்கு ஆளானார்கள். ‘என்னாச்சு இவனுகளுக்கு? வழக்கமாக இருக்கும் வேகத்தில் பாதிகூட இல்லையே!’ என்று சிந்தித்தபடியே இரண்டாஞ்சுற்றினை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

ஆடுபவர்கள் மீண்டும் பழச்சாறு குடிக்கப்போனார்கள். இளைஞர்களின் பக்கம் பெருங்கூட்டம். “நல்லா குடிச்சிட்டு தெம்பா ஆடுங்கப்பா” என ஆளாளுக்கு முகந்து கொடுத்தனர். சிலர் புங்கனை வசைபாடத் தொடங்கினர். இளைஞிகளின் பக்கமும் நிறைய முகந்து குடித்தனர். இசைக்கலைஞன் மறுசுற்றுக்கு ஆயத்தமானான். ஆனால் நடுத்தர ஆண்கள் சிலர் தலையிட்டு, “கொஞ்சம் நேரமாகட்டும்பா, ஆடுறவங்க மிகக் களைப்பாக இருக்காங்க” என்று சொல்லி ஆட்டத்தைக்  காலந்தாழ்த்தினர். வாரிக்கையன் இதனைப் பார்த்து அகமகிழ்ந்துகொண்டிருந்தார். அவரின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த தேக்கன் அவ்வப்பொழுது சிரிக்கத் தொடங்கினார்.

``நல்லா ஆடுங்கடா! தேக்கன் உங்களப் பாத்து சிரிச்சுக்கிட்டு இருக்காரு” என்று சொல்லி மூன்றாஞ்சுற்றுக்கு இளைஞர்களை இறக்கினர் நடுத்தர ஆண்கள். இளைஞர்களைத் தொடர்ந்து இளைஞிகள் உள்ளிறங்கினர். இச்சுற்று பெண்கள் ஏறிப்பாடி ஆடும் சுற்று. களைகட்டும் கூத்து. காண்போரை ஆட்டத்தின் வழியே கிறக்கத்தை உருவாக்குவார்கள் இணையர்கள். இன்று அதே வேகத்தோடு அல்ல, வழக்கத்தைவிடப் பலமடங்கு வேகத்தோடு உள்ளிறங்கியது இளைஞிகள் கூட்டம். ஏனென்றால், அவர்கள் குடித்த பழச்சாற்றிலே வாரிக்கையன் கலக்கச்சொன்னது காமமூட்டியை. அதனை நீரில் கலந்து ஒரு குவளை குடித்தாலே காதலுணர்ச்சி உச்சத்தை அடைந்து படாத பாடுபடுத்தும். முதற்சுற்று ஆடிய களைப்பில் இளைஞிகள் ஒவ்வொருவரும் மூன்று நான்கு குவளையைக் குடித்துவிட்டு உள்ளே இறங்கியுள்ளனர். எதிர்ப்புறமோ இளைஞர்கள் முழுவதும் காமஞ்சுருக்கியை எண்ணற்ற குவளை குடித்துவிட்டு வந்து நின்றனர்.

ஆட்டம் தொடங்கியது. பறம்பு நாட்டில் எந்த ஒரு மணவிழாவிலும் நடக்காத கூத்தாக இந்தக் குரவைக்கூத்து நிகழ்ந்தது.  இளைஞிகள் தங்கள் இணைமீது தீராக்காதலோடு களமாடினர். இளைஞர்களின் பாடு பெரும்பாடானது. எவனும் எவளுக்கும் ஈடுகொடுக்க முடியவில்லை. துவளுங்கொடியாக ஆணும் நிமிரும் சுடராகப் பெண்ணும் இருந்தனர். “என்னடா ஆச்சு உனக்கு?” என்று ஒவ்வொருத்தியும் தங்கள் இணையின் காதிலே கடிந்து கேட்டனர். என்ன கேட்டும் எதுவும் நடக்கவில்லை. இசைஞன் அடுத்தடுத்து வேகத்தைக் கூட்டிக்கொண்டிருந்தான்.

கைகோத்து, நடுவிரல் பற்றி, அணிவிரல் சேர்த்து ஆடவேண்டிய ஆட்டத்தை ஆட  எவனுக்கும் தெம்பில்லை. ஆனால், எவளும் வேகத்தைக் குறைத்துக்கொள்ள முயலவில்லை. காதலையும் காமத்தையும் உயிர்கொல்லும் உச்சத்துக்குக் கொண்டுசெல்லும் தெய்வமகளாம் `அணங்கு’ இறங்கி ஆடும் கடைசிக்கட்டம் தொடங்கியது. ஆண்களில் எவனாலும் களத்தில் நின்றாட முடியவில்லை. புங்கன்தான் முதலில் சரிந்தான். பெண்களின் ஆர்ப்பரிப்பு விண்ணைத் தொட்டது. பார்த்துக்கொண்டிருந்த ஆண்கள் தலைகவிழ்ந்தனர். மந்தையில் உட்கார்ந்து விண்ணதிரச் சிரித்துக்கொண்டிருந்தார் வாரிக்கையன். தேக்கனோ அவ்வப்பொழுது சிரித்துக்கொண்டிருந்தார். ஆட்டத்தின் இறுதிக்கட்டம் வந்தபொழுது ஈடுகொடுக்க முடியாத தம் இணையை, தோளிலே தூக்கி ஆடினர் பெண்கள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83g_1517990229
“இது மயிலாவின் மணவிழா. அப்படித்தான் இருக்கும். தூக்கிச் சுத்துங்கடி இவனுகள” என்று, பார்த்திருந்த பெண்கள் கத்த, சுற்றிய சுற்றில் சுருண்டு வதங்கினர் இளைஞர்கள்.

ஆட்டம் முடிந்ததும் விருந்து தொடங்கியது. எல்லோருக்கும் உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தபொழுது, தொலைவில் இருளில் குதிரைகள் வந்து நின்றன. விருந்து ஏற்பாட்டிலிருந்த வேட்டூர் பழையன் குதிரையின் குளம்படி கேட்டுத் திரும்பினார்.

வந்திறங்கிய குதிரை வீரர்களை நோக்கி இருளுக்குள் நடந்து போனார் வேட்டூர் பழையன். அவர்கள் கீழ்த்திசை எல்லைக்காவலர்கள். வேட்டூர் பழையனை வணங்கிவிட்டுச் சொன்னார்கள், “நெடுங்குன்றின் அடிவாரம் பாண்டிய நாட்டு வீரர்கள் படை தங்குவதற்கான பாடிவீட்டினை அமைத்துக் கொண்டிருக்கின்றனர்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 15, 2018 4:18 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83a_1518515222
பொழுது விடிந்தது. ஆட்டத்தின் களைப்பை உதிர்த்தபடி ஊர் எழுந்தது. பாண்டியர்கள் படைவீடமைக்கும் செய்தியைச் சொன்ன வீரர்களை வேட்டூர் பழையன் தனியே அழைத்துக்கொண்டு போய்விட்டார். நீலனின் கண்களிற்பட்டால் அவன் உடனே புறப்பட்டுச்செல்ல முற்படுவான். கீழ்திசைக்காவல் அவன் பொறுப்பு. என்ன சொல்லியும் அவனைத் தடுத்து நிறுத்த முடியாது. எனவே பாரி வந்து சேரும்வரை காவல்வீரர்களை நீலனின் கண்களிற்படாமல் பழையன் பார்த்துக்கொண்டார்.
பொழுதாகிக்கொண்டிருந்தது. ஆண்களெல்லாம், ஆடிய இளைஞர்களை மிச்சம் வைக்காமல் திட்டித்தீர்த்துக்கொண்டிருந்தனர். இளைஞர்களுக்கு என்ன நடந்தது என்பது புரியவில்லை. ஆனால், இவையெல்லாம் விடிந்து சிறிதுநேரம் மட்டுமே இருந்த எண்ணங்கள். இவையெல்லாம் சேர்ந்ததுதான் மணவிழாக்கொண்டாட்டம். மீண்டும் இசைக்கருவிகளின் ஓசை கேட்கத் தொடங்கியதும் மகிழ்வு மலையெங்குமிருந்து பொங்கி மேலெழுந்தது. மணவிழாவின் வேலைகளில் வேகங்கூடின. ஆனாலும் எல்லோரின் கண்களும் பாரியின் வரவை எதிர்பார்த்தே காத்திருந்தன.

மணமக்கள் குடிபுக சுடுமண் சுவரெழுப்பி புல்வேயப்பட்ட புதுக்குடிலைக் கூரைப்பூக்களைக் கொண்டு அலங்கரித்திருந்தனர். ஆதினியும் அவள் தோழிகளும் அதனைப் பார்த்துவரப் புறப்பட்டனர். அப்புதுக்குடில் நாங்கில் மரத்தை முன்நிழலாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. காரமலையின் கீழ்ப்பகுதியில் விரிந்துகிடக்கும் சமவெளி முழுவதையும் பார்ப்பதைப்போல அக்குடில் இருந்தது. குடிலுக்குள் வந்தாள் ஆதினி. தலையுயர்த்தி, வேயப்பட்ட புல்லினைப் பார்த்தாள், சற்றே ஐயங்கொண்டு வெளியில் வந்து மேற்பரப்பைப் பார்த்தாள். வியப்பு கலந்த மகிழ்வு அவளது முகத்திலே ஓடிமறைந்தது.

மற்ற பெண்களுக்கு சட்டெனப் புரியவில்லை. என்னவென்று கேட்டனர். ஆதினி சொன்னாள். ``குரம்பைப் புல்லினை அடிப்புறம் வைத்து நடுவில் மூங்கிற்புல் பரப்பி, மேலே மாந்தம்புல்லினை மேய்ந்துள்ளனர். எவ்வியூர் போல இது மலைமுகட்டு ஊரல்லவே! அடிவாரத்து ஊராதலால் வெக்கை நிறைந்த கோடைக்காலத்திலும் குளுமை நீங்காமல் இருக்க இந்த ஏற்பாடு. மாந்தம்புல் உச்சிமலையின் கரும்பாறை இடுக்குகளில் மட்டுமே வளரக்கூடியது. கடமான்கள் விரும்பி உண்ணக்கூடிய புல்வகை. அவற்றைப் போய் அறுத்து வருவது எளிய செயலல்ல, நீலன் அவனே மேலேறிச்சென்று இதனை அறுத்து வந்திருப்பான்” என்றாள்.

உடன் வந்த இன்னொரு பெண் சொன்னாள்,  ``அவசரப்பட்டு முடிவுக்குப் போகாதே ஆதினி. மயிலாவே அதனைச் செய்திருப்பாள். அவளைப்பற்றி உனக்குத் தெரியாது” என்றாள். எல்லோரும் சிரித்தனர். வெளியில் இசைக்கருவிகளின் ஓசையோடு ஆரவார ஓசையும் பெருகி வந்தது. பாரி வந்துவிட்டான் என்பதை உணர்ந்து ஊர்மந்தையை நோக்கி விரைந்தனர்.

மக்களின் கூட்டத்துக்கு நடுவே பாரியின் முகத்தைக் காண நீண்டநேரமானது. எல்லோரையும் நலங்கேட்டான் பாரி. பறம்பின் தென்னெல்லையில் உள்ள ஊரிலிருந்தெல்லாம் பெரியவர்கள் வந்து சேர்ந்துள்ளனர். ஒவ்வொருவரிடமும் பாரியின் நலங்கேட்டல் தனித்தன்மை கொண்டதாக இருந்தது. கரியனூர் பெரியாத்தா கூட்டத்தை விலக்கிக்கொண்டு பாரியை நோக்கி வந்தாள். வாஞ்சையோடு வரும் அவளைக் கண்டதும் பாரியின் மனம் பூரித்தது. 

பாரியின் தந்தையை சிறுவனைப்போல் நடத்துவாள் அவள். ஆனால் பாரியை அவள் தந்தையைப் போல நடத்துவாள். ``என் அப்பன்னெடா நீ” என்றே எப்பொழுதும் சொல்லுவாள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83b_1518515245
“தள்ளாத வயதில் இவ்வளவு தொலைவு வரவேண்டுமா?” எனப் பாரி கேட்டதற்கு. “இனி நான் மலையேறி எவ்வியூருக்கு வந்து உன்னையப் பாக்க முடியாது. மலையடிவார ஊருக்கு எப்ப நீ வருவேன்னுதான் காத்திருந்தேன். மணநாளுக்கு வருவேன்னு எனக்குத் தெரியும். அதனாலதானப்பா எப்படியாவது ஒன்னையப் பாத்திடணும்ன்னு ஓடிவந்தேன்” என்றாள்.

பாரியின் கண்கள் கலங்கின. ``சூல்மருது எப்படி இருக்கிறது?” எனக் கேட்டான். ``இந்த மழைக்காலத்துல தப்பிச்சிருச்சு. ஆனால் இன்னும் எத்தனை காலமோ?” என்றாள். அவளின் குடிலருகே உள்ள மரமது. ஒருவகையில் அவளின் குலதெய்வமும்கூட.

பாரியின் நலங்கேட்டல்கள் எல்லாம் இப்படித்தான். மரம் செடி கொடி, விலங்குகள், மனிதர்கள் என ஒன்றுவிடாமல் கேட்டுக்கொண்டிருந்தான். கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளே நுழைந்த வேட்டூர் பழையன், ``வந்தவர்களை முதலில் உணவருந்த விடுங்கள்” என எல்லோரையும் சத்தம் போட்டு விலக்கினான்.

பாரியும் கபிலரும் காலம்பனும் அருகிருந்த குடிலுக்கு உணவருந்தப் போயினர். அவர்களுக்காகப் பொங்கம்பழப் பூந்தேன்கட்டி காத்திருந்தது. தேனீ தனது கூட்டுக்குள் முதலில் தேனைக் கட்டியாகத்தான் வைத்திருக்கும். பின்னர்தான் தேனாக்கும். மலைமக்கள் தேன்கட்டியைத்தான் எடுப்பர். தேனைப் பிழிந்தெடுக்கும் பழக்கம் அவர்களுக்கு இல்லை. அதுவும் எந்தவகைப் பூவில் இருந்து தேனெடுத்து இந்தக் கட்டியைத் தேனீ உருவாக்கியிருக்கிறது என்பதைப் பொறுத்துதான் இந்தக்கட்டியை எடுக்கலாமா வேண்டாமா என்பதனை முடிவுசெய்வர்.

அந்தப்பகுதியில், அந்தப்பருவத்தில் எந்தப் பூ அதிகம் பூத்திருக்கிறதோ அந்தப் பூவின் சுவைதான் வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83c_1518515256தேன்கட்டியிலும் இருக்கும். நாவற்பழப்பூந்தேன் துவர்க்கும், வேப்பம்பழப்பூந்தேன் கசக்கும், கள்ளிப்பூந்தேன் இனிக்கும், கோட்டைப்பழப்பூந்தேனையும் அத்திப்பூந்தேனையும் சுவைபிரித்து அறிவது மிகக்கடினம். இதில் மிகச்சிறந்த சுவைகொண்டது, எவ்வளவு சாப்பிட்டாலும் இன்னும் இன்னும் என்று கேட்டுக்கொண்டே இருக்கச் சொல்லுவது பொங்கப்பழப்பூந்தேன். அந்தத் தேன்கட்டியை எடுத்துவந்து அடுக்குவாழை இலையில் வைத்துக்கொடுத்தனர். கட்டிச்சாறு கணக்கின்றி உள்ளிறங்கியது.

உணவு முடிந்ததும் வேட்டூர் பழையன் பாரியிடம் கூறினான், ``எல்லாவற்றையும் தேக்கனிடம் சொல்லியுள்ளேன், பகற்பொழுதிலே நீ போய் நேரில் பார்த்துவிட்டு வந்துவிடு.”

சரியெனச் சொல்லிய பாரி தேக்கனையும் முடியனையும் உடனழைத்துக்கொண்டு புறப்பட்டான். கபிலர் கொற்றவைக்கூத்தில் பார்த்த பலரை அதன்பின் இப்பொழுதுதான் பார்க்கிறார். எனவே அவர் இங்கேயே இருந்து கொண்டார். காலம்பனை பல ஊர்க்காரர்கள் இன்னும் பார்க்கவேயில்லை. ஆனால் பறம்பு முழுவதும் அவனின் வீரக்கதை தெரியும். எல்லோரும் அவனைக் காண விருப்பப்படுவர். எனவே அவனையும் இருக்கவைத்துக்கொண்டார் வேட்டூர் பழையன். ஈங்கையன் பாரியைப் பார்க்க வேண்டுமென விருப்பத்தோடு இருந்தான் ஆனால், பாரி பொழுதுக்குள் போய்த் திரும்பவேண்டியிருந்ததால் வந்த பின் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார் பழையன்.

பாரியுடன் மற்ற இருவரும் புறப்படும்முன் பழையன் சொன்னான், ``பொழுது சாய்வதற்குள் மணப்பெண்ணை அவளது ஊரிலிருந்து அழைத்து வந்துவிடுவார்கள். அதற்குள் நீங்கள் வந்துவிட்டால் மயிலாவிடமிருந்து தப்பித்தீர்கள். இல்லையென்றால் அவ்வளவுதான்” என்று எச்சரித்து அனுப்பினார் வேட்டூர் பழையன்.

பாரி, தேக்கன், முடியன் மூவரும் குதிரையில் புறப்பட்டனர். உடன் கீழ்திசை எல்லைக் காவல்வீரர்கள் இருவரும் சென்றனர். எதிர்பார்த்திருந்த செய்தியைத்தான் பழையன் சொன்னார். ஆனாலும், அவர் சொல்லும் இரு இடங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருந்தன. குதிரைகள் காரமலையின் சரிவுப் பாதையில் தென்புறம் நோக்கி விரைந்து கொண்டிருந்தன. இரண்டாம் குன்றினைத் தாண்டியபொழுது பாரிக்கு மயிலாவின் நினைவுவந்தது. அக்குன்றின் அடிவாரத்தில்தான் அவளது ஊர்.

மயிலாவின் ஊரான செம்மனூரிலிருந்து மணமகளின் தாய்மாமன் அவளைத் தனது தோளிலே தூக்கி வருவான். வேட்டுவன் பாறையின் எல்லையில் நின்று மணமகன் அவளைத் தனது தோளுக்கு மாற்றித் தூக்கிச்செல்வான். அவ்வாறு தூக்கிச்செல்லும் நிகழ்வுதான் மிகுந்த உற்சாகமும் கொண்டாட்டமும் நிறைந்தது. கேலிப் பேச்சுகளும், குறும்புவிளையாட்டுக்களுமாக ஊரே களைகட்டியிருக்கும். சற்று அமைதியான பெண்கூட மணமகனின் தோளிலே அமர்ந்து வரும்பொழுது இல்லாத குறும்பெல்லாம் செய்வாள். மயிலாவைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவள் செய்யப்போகும் குறும்புத்தனங்களைக் காண பாரிக்கும் விருப்பமாகத்தான் இருந்தது. ஆனால், சூழல் வேறுவிதமாக அமைந்துவிட்டது.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83d_1518515277குதிரைகள் விரைந்துகொண்டிருந்தன. உச்சிப்பொழுதுக்கு வெள்ளடிக்குன்றின் அடிவாரத்திற்கு வந்தனர். அவர்களின் எண்ணவோட்டத்துக்கு ஈடுகொடுத்து வந்து சேர்ந்தன குதிரைகள்.  குன்றினை விட்டு மிகவும் தள்ளி, படைகள் தங்குவதற்கான தாவாரங்கள் அடிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. படைவீரர்கள் இங்குமங்குமாகப் புதர்களை அகற்றிக் கொண்டிருந்தனர். குதிரைகள் ஆங்காங்கு கட்டப்பெற்றிருந்தன. கொடியெதுவும் பறக்கவில்லை. ஆனால், பாசறையின் முன்புறத்தில் பாண்டியப்பேரரசின் இணைக்கயல் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. படைவீரர்களின் உடைகளும் தாவாரத்தின் தன்மையும் பார்த்தவுடனே தெரிந்துகொள்ளக் கூடியவையாகத்தான் இருந்தன.

குன்றின் மீது நின்றபடி மூவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். ``இது வெங்கல்நாட்டின் பகுதியாயிற்றே. பறம்புக்கு எதிராகச் செயல்பட மாட்டோம் என்று வாக்களித்த குலமல்லவா அவருடையது!” என்று முடியன் சொன்னபொழுது, தேக்கன் குறுக்கிட்டார், ``வைப்பூரில் நடந்த மோதலில் அவர் மகனின் தலையை நம்மவர்கள் சீவியெறிந்து விட்டதாகவும் அதன் பொருட்டு மையூர்கிழார் வஞ்சினம் உரைத்துள்ளாதாகவும் வேட்டூர் பழையன் சொன்னார்.”

``இங்கிருக்கும் இவன் எதற்கு வைப்பூர் துறைமுகத்துக்குப் போனான்?” எனக் கேட்டான் பாரி.

“தெரியவில்லை. ‘இளவரசனின் திருமண ஏற்பாட்டிற்குப் போனவன் அப்படியே துறைமுகம் வரை போயிருப்பான்’ என்கிறார் பழையன்.”

நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேலைகளைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான் பாரி. சற்று நேரத்துக்குப்பின் புறப்பட்டனர்.

செம்மனூர்காரர்கள் வேட்டுவன் பாறையின் எல்லையை நெருங்கிக்கொண்டிருந்தனர். அவர்களை வரவேற்று மணப்பெண்ணைத் தூக்கிக்கொள்ள மணமகன் வீட்டார் ஆயத்தமாக இருந்தனர். நீலன் மாவீரன்தான். ஆனால், மயிலாவைத் தூக்கியபின் கீழே இறக்காமல் ஊர்மந்தைக்குக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். அவள் செய்யப்போகும் குறும்புத்தனங்களை இவன் எப்படிச் சமாளித்துத் தூக்கிவரப்போகிறான் என்பதைக் காண எல்லோரும் ஆவலோடு இருந்தனர்.

செம்மனூர்காரர்கள் எழுப்பும் பெரும்பறையின் ஓசை காட்டையே உலுக்கியது. ஓசைகேட்டு ஆடாத காலில்லை. தாய்மாமனின் தோளில் ஆடாமல் அசையாமல் அப்படியே உட்கார்ந்து வந்தாள் மயிலா. எதிர்கொண்டு வாங்க வேட்டுவன் பாறையின் எல்லையில் தொண்டகப்பறை முழங்க மணமகனின் ஊரார் காத்திருந்தனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83g_1518515429
வந்தாள் மணப்பெண். தாய்மாமனின் தோளிலிருந்து தனது தோளுக்கு மாற்ற நீலன் அருகில் சென்றான், அவளும் இடமாறி உட்கார வசதியாக அவனுக்குக் கைகொடுத்தாள். பறைமுழக்கம் பேரிசையாய் எழுந்தது. சுற்றத்தார்கள் பூக்கள் சொரிய, அளவற்ற ஆரவாரத்துக்கு நடுவே நீலனின் இடதுதோளுக்கு மாறினாள் மயிலா.

உரிமையோடு காதலியைத் தோளிலே தூக்கிச்செல்லும் ஆணுக்கு இருக்கும் ஒரு மிடுக்குநடையைக் கண்டு மகிழ்ந்தது கூட்டம். நீலனின் திறள்கொண்ட தோளில் வசதியாக உட்கார்ந்து அவனது இருகைகளையும் பற்றியிருந்தாள் மயிலா. என்ன செய்யப்போகிறாளோ என எல்லோரும் ஆவலோடு அவளையே பார்த்தபடி வந்துகொண்டிருந்தனர். உன்னி நழுவும் அவளை இறங்கவிடாமல் எப்படிச் சமாளிக்கிறான் பார்ப்போம் என்று எதிர்பார்ப்போடு கூட்டம் கூச்சலிட்டுக்கொண்டு வந்தது. தொண்டகப்பறையும் பெரும்பறையும் ஒன்றாக இசைக்க, கூட்டத்தில் பாதிக்கு மேல் ஆட்டத்தில் இருந்தது. 

நீலனின் இடப்புறத் தோளிலே உட்கார்ந்த மயிலா அதன்பின் அமைதியாக வந்தாள். நீலன் சிரமமேதுமின்றித் தூக்கிவந்தான். பாதித்தொலைவுக்கு மேல் கடந்துவிட்டனர். இரு ஊராருக்கும் வியப்பு ஏறிக்கொண்டேயிருந்தது. ``சாதாரண காலத்தில் இயல்பாய் இருக்கும் பெண் மணமகனின் தோளில் உட்கார்ந்ததும் பெருங்குறும்பு செய்வதும், எந்நேரமும் குறும்புக்காரியாக இருப்பவள் மணமகனின் தோளிலே உட்கார்ந்ததும் அமைதியாய் அடங்குவதும் இயற்கைதானப்பா” என்று பேசிக்கொண்டே நடந்தனர் சிலர்.

மலைப்பாதையை மறித்தபடி கிளைபரப்பியிருக்கும் மாமரத்தினூடே நுழைந்து போய்க்கொண்டிருந்தது கூட்டம். பறையோசையில் மாமரத்திலிருந்த பறவைகள் ஒலியெழுப்பியபடி கலைந்து பறந்தன. கலையும் பறவைகளின் படபடப்புக்கும் ஓசைக்கும் ஏற்ப ஆட்டத்தின் வேகமும் கூடின. தாளத்துக்கு ஏற்ப பலரும் ஆடிக்கொண்டிருந்தனர். திடீரென மொத்தக் கூட்டமும் பேரோசையை வெளிப்படுத்தி ஆரவாரத்தால் அலைமோதியது. முன்னால் ஆடிக்கொண்டிருந்தவர்களுக்கு என்ன நடந்ததெனத் தெரியவில்லை. மணமக்களை நோக்கி வேகமாக உள்ளே ஓடிவந்து பார்த்தனர்.

சற்றே தாழ்ந்திருந்த மரக்கொப்பை எவ்விப்பிடித்து சட்டென மேலேறிக்கொண்டாள் மயிலா. நீலன் திகைத்துப்போய் அப்படியே நின்றான். கூட்டத்தின் ஆரவார ஓசை காதைக் கிழித்தது. நீலன் மரத்துக்கு மேலேறி அங்கிருந்து தோளிலே தூக்கியபடி கீழிறங்க முடியாது. மயிலாவாக மனம்மாறிக் கீழிறங்கி அவனது தோளுக்கு வந்தால்தான் உண்டு. கூட்டத்தின் கொண்டாட்டம் இருமடங்கானது. மயிலா யாரெனக் காட்டிவிட்டாள் என செம்மனூர்காரர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.

நீலனுக்குத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. மயிலாவின் மனம் இறங்கிவர என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆதியிலிருந்து நடந்துவரும் போராட்டமிது. இதில் ஒருவரையொருவர் வெல்வதைவிட ஒருவரோடு ஒருவர் இணைவதே இயற்கையின் தேவை. அதுவே இறுதியில் வெற்றியும் பெறுகிறது. ஆனால், இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் நீலன் விழித்தபொழுது மயிலா சொன்னாள். ``என் கேள்விகளுக்கு நீ விடை சொல். சரியான விடை சொன்னால் உனக்கு எறிகிடையாது. தவறான விடை சொன்னால் மாங்காயால் எறிவிழும். உனது எந்த விடை எனது மனம்தொடுகிறதோ அப்பொழுது நான் உனது தோளுக்கு இறங்குவேன்.”

கூட்டத்தின் ஓசை முன்னிலும் கூடியது. இவ்வளவு நேரம் செம்மனூர்காரர்கள், வேட்டுவன் பாறையைச் சேர்ந்தவர்கள் என இருகூறாகப் பிரிந்திருந்த கூட்டம் இப்பொழுது ஆண், பெண்ணென இருகூறானது.

மயிலாவின் சொல்லினை ஏற்பதைத் தவிர நீலனுக்கு வேறு வழியில்லை. இதிலுள்ள பெருஞ்சிக்கல் அவள் பறித்து வைத்திருக்கும் மாங்கனி ஒவ்வொன்றும் உள்ளங்கை அளவு இருக்கிறது. அதில் எறிவாங்கினால் நீலனின் நிலைமை என்னவாகும் என்று ஆளாளுக்குப் பேசிச் சிரித்தனர்.

முதல் கேள்வியைக் கேட்டாள். ``என் தாய்மாமன் உன்னைவிட வலுக்குறைந்தவன். ஆனால், அவன் என்னைப் பூப்போல தூக்கிவந்தான். நீ ஏன் இவ்வளவு அழுத்திப்பிடித்துத் தூக்கிவந்தாய்?”

கேட்டு முடிக்கும்முன் நீலன் சொன்னான், ``நீ நழுவி ஓடிவிடுவாய் அல்லவா? அதற்காகத்தான்” சொல்லி முடிக்கும்முன் சடசடவென விழுந்தது மாங்காயின் எறி. கூட்டத்தின் சிரிப்பு விண்ணைத் தொட்டது. ``நான் உன்னை விட்டு எங்கேடா போகப்போகிறேன். என்மீது நம்பிக்கை இல்லாமல்தான் அவ்வளவு இறுக்கமாகப் பிடித்திருந்தாயா?” எனக் கேட்டபடி கிளையிலிருந்த மாங்காயைப் பறித்துப் பறித்து எறிந்தாள். அவன் எறிபொறுக்கமாட்டாமல் மரத்தின் அப்பக்கமும் இப்பக்கமுமாக ஓடி மறைந்தான். அவளோ கொப்புகளின் மீது இங்குமங்குமாக ஓடியோடி எறிந்தாள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83e_1518515313
அவனுக்காக இரக்கப்பட்ட பெண்ணொருத்தி, ``உன்மேல இருந்த ஆசையிலதான் இறுக்கிப் பிடிச்சேன்னு சொல்லாம இப்படிச் சொல்லிட் டானே” என்று வருத்தப்பட்டுச் சொன்னபொழுது அவளுக்கும் சேர்த்துவிழுந்தது எறி.

அதன்பின் நீலன் முன்னால் வந்து நிற்கவே நீண்டநேரமானது. அவள் கடுங்கோபத்தோடு கண்ணிற்பட்டபொழுதெல்லாம் எறிந்து கொண்டேயிருந்தாள். அவன் ஓடியோடி மறைந்துகொண்டிருந்தான். பொழுதாகிக் கொண்டிருக்கிறது என்று மயிலாவை சமாதானப்படுத்தி நீலனை அழைத்துவந்து அவளின் முன்னால் நிறுத்தியது கூட்டம்.

அடுத்து என்ன கேட்கப்போகிறாளோ என்ற பதைபதைப்போடு இருந்தான் நீலன். அவளோ சற்றே கோபத்தோடு கேட்டாள், ``குழந்தை பிறந்தவுடன் எந்த மார்பில் முதலில் பால்கொடுக்க வேண்டும்?”

பெண்குழந்தையென்றால் இடதுமார்பிலும் ஆண் குழந்தையென்றால் வலதுமார்பிலும் என்று நினைவுக்கு வந்தது. வந்தவுடன் குழப்பமும் சேர்ந்துவந்தது. ‘ஆண் குழந்தைக்குத்தானே இடதுமார்பு!’என்று குழம்பியபடியே அமைதியானான்.

கூட்டத்திலிருந்த பெண்ணொருத்தி அருகிருந்தவளிடம் சொன்னாள். ``இந்தக் கேள்விக்கு என்ன விடை சொன்னாலும் எறி உறுதி.”

``ஏன்?” என்றாள் அருகிலிருந்தவள்.

``தவறாகச் சொன்னால், ‘இதுகூடத் தெரியவில்லையா?’ எனச் சொல்லி எறிவாள். சரியாகச் சொன்னால், `உனக்குத்தான் அக்கா தங்கச்சி இல்லையே; எவகிட்ட இதக் கேட்ட?’ என்று சொல்லி விடாமல் எறிவாள்” என்று சொல்லிச் சிரித்தாள்.

நீலனின் நிலைமை படுமோசமானது. எல்லோரும் எறி எப்போது தொடங்கப்போகிறது என்று உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தனர்.

நீலன் சொன்னான், ``நான் பிறந்த உடனே ஆத்தாகாரி இறந்துவிட்டாள். உடன்பிறந்தவர்களும் இல்லை. அப்படியென்றால் காதலி நீதானே இதனைச் சொல்லித்தந்திருக்க வேண்டும்?”

எதிர்பாராத பதில். மயிலா ஒரு கணம் திகைத்துப்போனாள். அவன் தன் தாயின் இடத்தில் அவளைவைத்துச் சொல்லிய சொல் மயிலாவை ஏதோ செய்தது. சற்றே அமைதியானாள்.

அவளின் வேகம் மட்டுப்பட்டதை எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தனர். அவளோ உணர்வுகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடுத்த கேள்வியைக் கேட்டாள்.

``நம் குழந்தைக்குப் பாட உனக்கு எத்தனை தாலாட்டுகள் தெரியும்?”

மூணு, ஆறு, பத்து என கூட்டத்திலிருந்த பெண்களின் வாய்கள் முணுமுணுத்தன. அவளிடம் நீலன் மறுபடியும் எறிவாங்கக் கூடாது என எல்லோரின் ஆசையும் எண்ணிக்கையாய் வெளிவந்துகொண்டிருந்தது.
நீலன் சொன்னான் ``ஒரே ஒரு பாட்டு.”

முணுமுணுத்த பெண்கள் தலையில் கையைவைத்தனர். ``கூடுதலாகச் சொல்ல வேண்டியதுதானே. அவள் மீண்டும் எறியப் போறாளே” என்று பதறியபொழுது மரத்தின் மீதிருந்த மயிலா கேட்டாள், ``என்ன பாடல் அது?”

அதுவரை அண்ணாந்து மேலே பார்த்துக் கொண்டிருந்த நீலன் தலைகவிழ்ந்து மண்ணைப் பார்த்தான், கண்களை மூடினான், வைகையின் அலை கரைவந்து அடித்தது. நீரின் செந்நிறத்தை நினைவில் ஏந்தியபடி அகுதையின் பாடலைப் பாடத் தொடங்கினான்.

கூட்டத்தின் ஆரவாரம் கொஞ்சம்கொஞ்சமாக ஒடுங்கியது. எல்லோரும் அமைதியாயினர். அவன் பாடல் மட்டுமே காற்றெங்கும் ஒலித்தது. மயிலாவின் கால்கள் மரம்விட்டுக் கீழிறங்கிக் கொண்டிருந்தன. இமைமூடிய நீலனின் கண்களுக்குள் வைகையை விட்டுக் காட்டுக்குள் ஓடிய குழந்தையே தெரிந்தான். அக்குழந்தை நகரும் செம்மூதாயைத் தொட்டபொழுது தாய் அவளைத் தூக்கினாள். அவ்வரியை அவன் பாடும்பொழுது தன்னையே தூக்குவதுபோல் உணர்ந்தான். அவள் குழந்தையைத் தோளிலே ஏந்தியபடி காட்டுக்குள் நடக்கத் தொடங்கினாள். மயிலாவும் அதனையே செய்தாள். இப்பொழுது நீலனை அவளது தோளிலே தூக்கியிருந்தாள். நீலன் நினைவு மீண்டபொழுது மயிலாவின் இறுகிய கைப்பிடியிலிருந்து அவனால் தன்னை விடுவிக்க முடியவில்லை. கூட்டம் இருவரையும் வணங்கி விலகியது.

நெடுங்குன்றின் அடிவாரத்தை அடைந்தபொழுது அங்கும் அதேபோன்று தாவாரம் அடிக்கப்பட்டிருந்தது. படைவீரர்கள் புதர்களை  நீக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தனர். இணைக்கயல் சின்னம் பளிச்சிட்டது. ஆனால், வெள்ளடிக்குன்றின் எதிர்ப்புறம் இருந்தவர்களைவிட இங்கு இருப்பவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தனர். குன்றின் மீதிருந்தபடி பாரியும் பிறரும் அதனைப் பார்த்தனர்.

வெள்ளடிக்குன்றுக்கும் நெடுங்குன்றுக்கும் இடையில் பலகாதத் தொலைவு இடைவெளி உண்டு. “ஏன் இவ்விரு இடங்களில் படைகளை நிறுத்த எண்ணுகிறான்?” என்று கேட்டான் முடியன்.

என்ன நடக்கிறது என்பதை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்த பாரி சொன்னான். “இவ்விரு இடங்களில் படைகளை நிறுத்தவில்லை. இவ்விரண்டு எல்லைக்கும் இடையில் முழுவதுமாகப் படையை நிறுத்தப்போகிறான்.”

சற்றே திகைத்த முடியன் ``இத்தனை காதத்தொலைவா?”

``ஆம். இத்தனை காதத்தொலைவிற்கு நிறுத்துமளவிற்குப் படைபலம் இருப்பதால்தான் அவன் துணிந்து வருகிறான்” என்றான் பாரி.

சிறிதுநேரம் மூவரிடம் எந்தப் பேச்சும் இல்லை. சற்றே பின்புறம் திரும்பி மலையுச்சியைப் பார்த்தான் பாரி. சித்தேறி முகட்டிலிருந்து இருகூறாகப் பிளந்து சரிந்திருந்தது மலையடிவாரம்.

அவன் சொல்லப்போவது என்னவென்று தேக்கன் கணித்தான்.

மீண்டும் சமதளத்தைப் பார்த்தபடி பாரி சொன்னான், ``இவ்வடிவாரத்தில் எத்தனை பெரியபடையைக் கொண்டுவந்து நிறுத்தினால்தான் என்ன?” என்று சொல்லியபொழுது அவனது முகத்தில் ஓடிய சிரிப்பு கணநேரத்துக்குள் இருவரின் முகத்திலும் பரவியது.

பாரி வேட்டுவன் பாறைக்குத் திரும்பும்பொழுது பந்தவெளிச்சத்தில் மலைமுழுவதும் ஒளிவீசிக்கொண்டிருந்தது. எங்கும் மனிதத்தலைகள் தெரிந்தன. மணவிழாவுக்கு வந்துசேரவேண்டிய எல்லோரும் வந்துவிட்டனர். பாரியும் தேக்கனும் முடியனும் ஊருக்குள் நுழையும்பொழுது பொழுதடைந்து விட்டதால் மயிலா கோபித்துக்கொள்வாளோ எனத் தோன்றியது. ஆனால் பெண்ணை அழைத்துக்கொண்டு வரவே பொழுதுசாய்ந்து விட்டது என்றனர். காரணம் கேட்டபொழுது மாமரத்தில் ஏறிக்கொண்ட மயிலாவின் கதையைச் சொன்னார்கள். மகிழ்ந்து சிரித்தான் பாரி.

வந்த மூவரும் உணவருந்தினர். இசையின் பெருமுழக்கம் மீண்டும் தொடங்கியது. புதுமகிழ்வில் ஊர் திளைத்தது. பாரிக்காகவே காத்திருந்த பெரியவர்கள் அடுத்தகட்ட வேலையைத் தொடங்கினர். நீலனையும் மயிலாவையும் இருதிசைகளிலிருந்து ஆட்டபாட்டத்தினூடே அழைத்துவந்தனர். மந்தையின் நடுவிலிருக்கும் செங்கடம்பு மரத்தினடிவாரத்தில் வந்துசேர்ந்தனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83f_1518515334
ஊரின் நிலைமரம் அது. அதனடிவார மேடையில் நின்று மணமக்கள் மாலை சூட வேண்டும். மயிலம் மலர் மணக்கும் மாலையை அவர்கள் சூடிய பொழுது மலையெங்குமிருந்து பறித்துவந்த பூக்களை அவர்களின் மீது பொழிந்தனர் மக்கள். இசையோசையும் ஆரவாரமும் விண்ணைத்தொட, மலர்மணத்தில் மந்தையே கிறங்கியது. வந்தவரெல்லாம் வாழ்த்துச்சொல் கூறினர்.

அடுத்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள மனைக்கு அவர்கள் செல்லவேண்டும். நீலன் புதுமனை நோக்கி மயிலாவை அழைத்துச்சென்றான். அவனுக்குப் பின்னால் பாரியும் வேட்டூர் பழையனும் தேக்கனும் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து ஊரே வந்துகொண்டிருந்தது. நாங்கில்மரத்தின் அடிவாரமிருந்த புதுக்குடிலுக்கு வந்துசேர்ந்தனர். கூட்டத்தின் ஆரவாரமும் கேலிப்பேச்சும் பன்மடங்கு கூடியது. குலவை ஒலி பெருகிவர மயிலாவை அழைத்துக்கொண்டு மனைக்குள் நுழைந்தான் நீலன்.

எங்கும் உற்சாகப் பேரொலி. சற்று தொலைவில் பெண்களின் கூட்டத்தினூடே இருந்த ஆதினியைப் பார்த்தான் பாரி. அவளின் கண்கள் அங்குமிங்குமாக தவித்து அலைந்து கொண்டிருந்தன. வழக்கத்துக்கு மாறாக இருப்பதை உணர்ந்து அருகில் சென்றான் பாரி.

கலங்கிய அவள் கண்களில் நீர்பெருகியிருந்தது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 15, 2018 4:38 pm

லங்கி நின்ற ஆதினி சொன்ன செய்தி எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  உதிரனும் அங்கவையும் மணவிழாவுக்கு வந்துசேரவில்லை என்பதுதான் அச்செய்தி. எவ்வியூரிலிருந்து மணவிழாவுக்கு ஒருவாரத்துக்கு முன்பே தன் தோழிகளோடு புறப்பட்டாள் அங்கவை. நான்கு நாள்களுக்கு முன்புதான் புறப்பட்டாள் ஆதினி. இரண்டு இரவும் மூன்று பகலுமெனப் பயணித்து மணநாளுக்கு முதல்நாள் வந்துசேர்ந்தாள் ஆதினி.

அவள் வந்தபொழுது விருந்தினர்களின் பெருங்கூட்டம் வேட்டுவன் பாறைக்கு வந்துசேர்ந்திருந்தது. பறம்புநாடு நானூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களைக்கொண்டது. எல்லா ஊர்களிலிருந்தும் நீலன்மயிலா திருமணத்துக்கு மக்கள் வந்துசேர்ந்திருந்தனர். தொலைவில் உள்ள ஊர்களிலிருந்து ஓரிருவரும் அருகிலுள்ள ஊர்களிலிருந்து பலரும் வந்துசேர்ந்திருந்தனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P85_1519219251
தன் கூட்டத்தோடு ஆதினி வந்தபொழுது வேட்டுவன் பாறை மக்கட்கூட்டத்தால் திணறிக்கிடந்தது. எல்லோரும் ஆதினியைக்கண்டு  நலங்கேட்டனர். அவளும் வந்ததிலிருந்து இங்குமங்குமாக அலைந்துகொண்டே இருந்தாள். இரண்டொருமுறை சங்கவையைப் பார்த்தாள். அங்கவையோ கண்ணிற்படவேயில்லை. இந்தப் பெருங்கூட்டத்தில் தன் தோழிகளோடு எங்காவது சுற்றிக்கொண்டிருப்பாள் என்று நினைத்தாள். ஆனால், நள்ளிரவில் தொடங்கிய குரவைக்கூத்தில் இணையர்கள் எல்லாம் களமிறங்கியபொழுது அங்கவையும் உதிரனும் ஆடும் ஆட்டத்தைப் பார்க்க மிகுந்த ஆவலோடு வந்து நின்றாள். ஆனால், அவர்கள் இருவரும் களமிறங்கவில்லை. குரவைக்கூத்தில் பங்கெடுக்காமல் எங்கே போனார்கள் என்று தேடத் தொடங்கியபொழுது எதிர்ப்பட்ட அங்கவைக்குத் தோழியிடம் கேட்டாள்.

“எவ்வியூரிலிருந்து புறப்பட்ட முதல்நாள் இரவு புலிவால்குகையில் தங்கினோம். மறுநாள் காலையில் எழுந்தபொழுது உதிரன் வந்திருந்தான். ‘நீலன்மயிலாவுக்கு அதிசிறந்த பொருளொன்றை மணவிழாவன்று தந்து மகிழ்விக்க வேண்டாமா?’ என்றான். ‘ஆமாம். என்ன தரலாம்?’ என அங்கவை கேட்டபொழுது அவன் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். ‘நாங்கள் பரிசுப்பொருளோடு வேட்டுவன் பாறைக்கு வந்துசேருகிறோம்’ என்று சொல்லிவிட்டு இருவரும் புறப்பட்டுப் போய்விட்டனர். இன்று வந்துவிடுவாள் என நினைத்திருந்தேன். இன்னும் வரவில்லையா?” எனக் கேட்டாள் அவள். உதிரன் தோழர்கள் யாருக்கும் இதுபற்றித் தெரியவில்லை.

நீலனும் மயிலாவும் புதுமனை புகுந்தவுடன் நிலைமையைப் பாரியிடம் விளக்கினாள் ஆதினி. அன்றிரவு வேட்டுவன் பாறையிலே அனைவரும் தங்கினர். பொழுது விடிந்தது. ஆனால் உதிரனைப்பற்றிய எந்தச்செய்தியும் யாரிடமுமில்லை.
அதற்காக யாரும் பதற்றங்கொள்ளவில்லை. உதிரனும் அங்கவையும் சிறுவர்களல்லர். காடறியும் பயிற்சியில் முதன்மைவீரனாக விளங்கியவன் உதிரன். பச்சைமலையின் எந்தக் காட்டிலும் எவ்வளவு நெருக்கடியான நிலையிலும் மீண்டுவர அவனால் முடியும். அங்கவையும் இணைசொல்ல முடியாத வீரமுடையவள்தான். ஆபத்தில் சிக்கி உதவிதேவைப்பட்டால் சென்றிப்புகையைப் போட்டிருப்பர்.

“மணவிழாவுக்கு வந்துள்ள அனைவரும் அவரவர் ஊர்களுக்குப் புறப்படுங்கள். ஏதாவது சிக்கலில் மாட்டியிருப்பது அறிந்தால் தக்க உதவியைச் செய்யுங்கள்” என்று சொல்லி அனைவரையும் அனுப்பிவிட்டு எவ்வியூர் நோக்கிப் புறப்பட்டான் பாரி.

ணவிழாவுக்கு ஆறு நாள்களுக்கு முன்பு, அதிகாலையில், புலிவால் குகையில் தோழிகளோடு இருந்த அங்கவையைக் கண்டு பேசினான் உதிரன். சிறந்ததொரு பரிசுப்பொருளினை நீலன்மயிலாவுக்குத் தரவேண்டும் என உதிரன் சொன்னபொழுது அங்கவை பெருமகிழ்வோடு அதனைக் கண்டடைய உடனே புறப்பட்டாள். அவளும் குதிரையேற்றம் தெரிந்தவள். தன்னுடனிருந்த இன்னொரு காவல்வீரனின் குதிரையை வாங்கி அங்கவைக்குக் கொடுத்தான் உதிரன். இருவரும் குதிரைப்பாதையில் பயணிக்கத் தொடங்கினர்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை காய்ப்பதுதான் கிளிமூக்கு மாங்காய். பச்சைமலைத்தொடரின் வியப்புறு கனிகளில் அதுவும் ஒன்று. அத்தகைய கனி பறம்பின் வடதிசையில் உள்ள கொழுமலையில் உள்ள செவ்வரிக்காட்டில்  காய்த்திருப்பதாகக் காவல்வீரர்கள் சொன்ன செய்தியைக்கொண்டு அப்பக்கமாகப் பயணத்தைத் தொடங்கினான் உதிரன். கொழுமலையென்பது எவ்வியூரிலிருந்து குதிரைப்பாதையில் சென்றால் ஐந்துநாள் பயணத்தொலைவைக் கொண்டது. அவ்வளவு நெடுந்தொலைவு சென்று மணநாளுக்கு முன் திரும்ப முடியாது என நினைத்த உதிரன். மலைமுகட்டில் அமைந்துள்ள குதிரைப்பாதையிலே தொடர்ந்து செல்லாமல், சில இடங்களில் குதிரைப்பாதையையும் சில இடங்களில் குறுக்குவழியில் நடைபாதையுமாக மாறி மாறிச் சென்று குன்றுகளைக் கடந்து கொண்டிருந்தான்.

முதல் இருநாள்கள் மலைமுகட்டின் வழியிலான குதிரைப்பாதையிலே சென்றனர். அங்கவை உடனிருப்பதால் காடுகளுக்குள் தங்காமல் அருகிலுள்ள ஊர்களிலேயே தங்கினர். அவ்வூர்களிலிருந்து மணவிழாவுக்குச் செல்பவர்கள் எல்லாம் ஏற்கெனவே புறப்பட்டிருந்தனர். பின்னர் குறுக்குவழியில் மலையிடுக்குகளுக்குள் புகுந்து பயணத்தைத் தொடர்ந்தனர். மூன்றாம் நாளும் நான்காம் நாளும் நடந்தே செல்ல வேண்டியிருந்தது. உதிரன் நினைத்ததுபோலப் பயணத்தின் வேகம் இல்லை. காரணம் வழியை விட்டுத் தொலைவில் இருக்கும் ஊர்களில் இரவு தங்கவேண்டியிருந்ததால் அங்குபோய்த் திரும்ப நேரமானது.

ஆனாலும் பாதிக்கு மேற்பட்ட தொலைவு வந்தபின் திரும்ப முடியாது என்ற காரணத்தால் பயணத்தைத் தொடர்ந்தனர். கிளிமூக்கு மாங்கனியோடு நீலன்மயிலாவைக் காண்பது எவ்வளவு மகிழ்வைத்தரும் என்பதை நினைத்தபடி அவர்கள் நடந்தனர்.

தன் காதலனோடு பயணிக்கும் அங்கவையின் மனநிலை முற்றிலும் வேறாக இருந்தது. அடர்காடுகளுக்குள் உதிரனோடு நீண்ட நெடும்பயணம். அவனால் காட்டின் எந்த இண்டிடுக்குக்குள்ளும் நுழைந்து வெளியேற முடியும். அவளை எந்தவொரு ஆபத்தும் தீண்டிவிடாதபடி பாதுகாக்க முடியும். பொதினியில் மருத்துவ அறிவை ஆணுக்கு நிகராகப் பெண்களும் அறிவர். அதனால்தான் ஆதினி மூலிகைச்செடிபற்றிய பேரறிவைக்கொண்டவளாக இருந்தாள். அங்கவையையும் அவளைப்போலவே வளர்த்திருந்தாள். இப்பொழுது கபிலரின் மொழியறிவும் அவளுள் செழித்திருக்க அவள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் புதிதாய் மலரும் பூவினைப்போல் ஒளியும் மணமும் வீசியது.

இருவரின் வியப்புகளுக்குள் அடங்காமல் விரிவடைந்துகொண்டே இருந்தது காடு. நான்காம் நாள் இரவு எயினூரில் தங்கினர். வந்திருப்பது அங்கவை என அறிந்து ஊரே விருந்துசெய்து மகிழ்ந்தது. உதிரனுக்கு வேறொன்று நினைவுக்கு வந்தது, அதனை அங்கவையோடு பகிர்ந்துகொண்டான். “காடறியும் காலத்தில் இவ்வூரின் மேற்றிசையில்தான் இராவெரி மரத்தைப் பார்த்தேன்” என்றான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P85a_1519219270
அதனைச் சொன்ன கணத்தில் அங்கவையின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. “எவ்விடத்தில் இருக்கிறது என்பது உனக்கு நினைவில் உள்ளதா?”

“நன்றாக நினைவில் உள்ளது.” “சென்று பார்ப்போமா?”

“நாம் பார்த்துத் திரும்ப, இருபகல் ஓர் இரவு ஆகுமே.”

அங்கவை சற்றே சிந்தித்தாள். உதிரன் சொன்னான், “ஏற்கெனவே அதிக நாள்களாகிவிட்டன. இனியும் நாம் காலந்தாழ்த்த வேண்டாம். இன்னொருமுறை அதனைப் பார்ப்போம்” என்றான். அங்கவையின் முகம் சற்றே வாடியது. மனக்கவலை தீர இரவில் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தான் உதிரன்.

அங்கவை தங்கிய குடிலின் மூதாட்டி, “இராவெரி மரத்தைப் பார்க்காவிட்டாலென்ன! இரிக்கிச்செடியைப் பறித்துவந்து காட்டு” என்றாள்.

மூதாட்டி என்ன சொல்லுகிறாள் என்று உதிரனுக்குப் புரியவில்லை. “இரிக்கிச் செடி என்றாள் என்ன?” எனக் கேட்டான்.

``உனக்கும் தெரியாதா?” எனக் கேட்டவள், தூரத்திலிருந்த பெண்ணை சத்தம்போட்டு அழைத்து, “இவ்விருவரையும் கூட்டிப்போய் இரிக்கிச்செடியைக் காட்டு” என்றாள்.

அப்பெண், இருவரையும் அழைத்துக்கொண்டு காட்டுக்குள் நுழைந்தாள். தேய்பிறையின் கடைசிக் காலமாதலால் மாமலை கும்மிருட்டில் மூழ்கிக்கிடந்தது.  ஊரை விட்டு சற்றுத்தள்ளி உள்ளே போனவள், சந்தன மரத்தின் அடிவாரத்தில் பின்னிக்கிடந்த பெருங்கொடியைப் பிடித்துத்தூக்கினாள். அவர்கள் இருவரும் அக்கொடியையே பார்த்தனர். கொடியின் முனைப்பகுதியை மட்டும் ஒடித்தவள் அங்கவையையும் உதிரனையும் கைநீட்டச் சொன்னாள். இருவரும் கையை நீட்டினர்.

ஒடித்த கொடியிலிருந்து கசியும் நீரினை இருவரின் உள்ளங்கையிலும் ஒவ்வொரு துளி வைத்தாள். இதனை ஏன் கையில் வைக்கிறாள் என இருவரும் உள்ளங்கையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர்களின் கண்கள் விரியத் தொடங்கின. அத்துளி வெண்மை நிறங்கொண்டதாக மாறியபடியிருந்தது. கெட்டியான பால்துளிபோல் அது இருப்பதைப் பார்த்தனர். வியப்பு அடுத்தகட்டத்தை அடைந்தது. இவ்விருட்டில் இவ்வெண்மை நிறம் எப்படி இவ்வளவு துல்லியமாகத் தெரிகிறது எனச் சிந்தித்தபொழுதுதான் புரியவந்தது, அத்துளிநீர் மெல்லியதாய் ஒளியை உமிழ்ந்துகொண்டிருக்கிறது என்று. மின்னுட்டான் பூச்சியின் உடலுக்குள் இருக்கும் வெண்பச்சைநிற நீர்போல்தான் இதுவும் பச்சையின்றி முழுவெண்மையில் ஒளியை உமிழ்கிறது. இருவரும் தங்களின் உள்ளங்கைக்குள் ஓர் அதிசயத்தை வைத்துக்கொண்டு நின்றனர். கைநடுக்கத்தில் காற்றில் அசையும் சுடர்போல் கையொளி அசைந்துகொண்டிருந்தது.
அழைத்துவந்தவள் நீண்டநேரத்துக்குப் பின், “இன்று இரவு முழுவதும் வைத்திருந்தாலும் ஒளிமங்காது. வாருங்கள் போவோம்” எனச் சொல்லி ஊருக்கு அழைத்துவந்தாள். வரும்பொழுது நீண்டு படர்ந்துகிடந்த அதன் கொடியைப் பறித்து வந்தான் உதிரன்.

ஊர்வந்ததும் அங்கவை தங்கும் குடிலின் உட்புறச்சுவரிலும் மேற்கூரையிலும் செடியை ஒடித்து, கசியும் நீரினைப் பொட்டுப்பொட்டாக வைத்துவிட்டு வெளியேறினான். எரிந்துகொண்டிருந்த சிறுவிளக்கினை அணைத்தாள் அங்கவை. விளக்கொளி நீங்கியதும் குடில் முழுவதும் பெருகி நிறைந்தது இருள். சிறிதுநேரத்திலே நீர்த்துளிகள் பால்நிறங்கொள்ளத் தொடங்கின. இங்குமங்குமாக இருளுக்குள்ளிருந்து வெண்ணிற மொட்டுக்கள் அவிழத்தொடங்கின. அவிழும்பொழுதே ஒளி கசிந்துபரவியது. வான்வெளியில் மஞ்சள் ஒளிசிந்தும் விண்மீன்கள் வெண்மைநிற ஒளியைச் சிந்தினால் எப்படி இருக்கும் என்பதை அங்கவை இரவு முழுவதும் பார்த்திருந்தாள். அவ்விரவு முழுவதும் அவளின் கைக்கெட்டும் தொலைவில் விண்மீன்கள் நிறைந்துகிடந்தன. 

பொழுது விடிந்தது. அவர்கள் விரைந்து புறப்பட்டனர். அப்பொழுது உதிரன் செவ்வரிக்காட்டினைப் பற்றி எயினூர் மக்களிடம் கேட்டான். அவர்கள் அக்காட்டினை அடையும் திசைக்குறிப்பினைச் சொன்னார்கள். கிளிமூக்கு மாங்கனி வேண்டும் என்று சொல்லியிருந்தால், அவர்களும் உடன்வந்து பறித்துத் தந்திருப்பார்கள். ஆனால், தாமாகக் கண்டறிந்து நீலன்மயிலாவுக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதால் அதனைப்பற்றிக் கேட்கவில்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P85d_1519219211
அவர்கள் சொன்ன குறிப்பின் அடிப்படையில் நடைவழிப்பாதையில் இருமலைகளைத் தாண்டினர். செங்குத்தான ஏற்ற இறக்கமாதலால் களைப்பு அதிகமாக இருந்தது. அன்றிரவு குகையினில் தங்கினர். அருகில் ஊரெதுவும் கிடையாது. உதிரன் கையில் இரிக்கிக்கொடியைப் பறித்து வந்திருந்தான். குகைமுழுவதும் வான்வெளியாக மாற்றி அங்கவையைத் தூங்கவைத்தான். குகைவாயிலில் இரவு முழுவதும் விழித்திருந்தான். அதிகாலை அவள் எழுந்ததும் சிறிதுநேரம் அவன் உறங்கினான்.

வெயில் ஏறத் தொடங்கியபொழுது அவர்கள் வேகவேகமாக நடந்துகொண்டிருந்தனர். செவ்வரிக்காட்டுக்குள் உச்சிப்பொழுதில் நுழைந்தனர். நீண்டுகிடக்கும் மலைமடிப்பின் இருபக்கச் சரிவிலும் பரவிக்கிடப்பதுதான் செவ்வரிக்காடு. காட்டின் நடுவில் ஊடறுத்து ஓடிக்கொண்டிருந்தது எழுவனாறு. அகலமான இவ்வாற்றில் ஒருதுளி நீரில்லை. கோடையின் வெக்கையில் மணற்துகள்கள் மின்னிக் கொண்டிருந்தன.

இருவரும் ஒவ்வொரு மரமாக உற்றுப்பார்த்தபடி நடந்துகொண்டிருந்தனர். எண்ணற்ற மாமரங்கள் இருந்தன. அவை எதிலும் கிளிமூக்கு மாங்கனி இல்லை. மரத்தைப் பார்த்தபடியே இங்குமங்குமாக நடந்தனர். கொடுங்கோடையாதலால் செடிகொடிகள் வதங்கிப்போயிருந்தன. பச்சைமலையின் அடிவாரக்குன்றுப்பகுதிகள் இவை. எனவே வெக்கையின் தாக்கம் கடுமையாகவே இருந்தது.

நன்கு படர்ந்து விரிந்திருந்த மாமரத்தின் அடிவாரத்தில் ஓய்வெடுக்கலாம் என அமர்ந்தனர். சற்றே அவன் தோள்சாய்ந்தாள் அங்கவை. சிறிது ஓய்வுக்குப்பின் உதிரன் சொன்னான், “நிழலிலே அமர்ந்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.”

அங்கவை பதிலேதும் சொல்லவில்லை.

“ஏன் எதுவும் பேசாமல் இருக்கிறாய்?” எனக் கேட்டான் உதிரன்.

தோளிலே சாய்ந்திருந்தவள் முகம்பார்த்துப் பேசுவதற்காக எதிரே வந்து உட்கார்ந்து சொன்னாள், “இது மகிழ்வை மட்டுமே அறியும் பருவம். இதற்கு நிழலும் பொருட்டல்ல, வெயிலும் பொருட்டல்ல.”

சொல்லியபடி புன்னகைத்த அவளை மகிழ்ந்து கவனித்துக்கொண்டிருந்த உதிரனின் முகம் சட்டெனக் கடுமையானது. ``அசையாமல் இரு” என்றான்.

என்னவென்று புரியாமல் திகைத்தபடி இருந்தாள் அங்கவை. அவளது கழுத்தின் பின்பகுதியில் அமர்ந்திருந்த பெரிய ஈ ஒன்றை நோக்கி வலக்கையை மெதுவாகக்கொண்டுபோய் சட்டென அமுக்கிப்பிடித்தான்.

பிடித்த வேகத்தில் கைகளை மூடியவன் மெல்ல விரலிடுக்குகளின் வழியாக உள்ளிருப்பதைப் பார்க்க முயன்றான். இவ்வளவு கூர்மையாக எதனைப் பார்க்கிறான் என்று அவளும் உற்றுநோக்கினாள். விரல் இடுக்குகளுக்குள்ளிருந்து அது தலையை முண்டி வெளியேற முயன்றது. அதன் தலையையும் வெளிவரமுயலும் அதன் எத்தனிப்பையும் கவனித்தபடி உதிரன் சொன்னான், “இது அடவி ஈ. மூன்றுநான்கு ஈக்கள் கடித்தால் சற்றுநேரத்திலே மனிதன் மயக்கம் அடைந்துவிடுவான். எண்ணற்ற ஈக்கள் மொய்த்துக்கொண்டு கடித்தால் மரணங்கூட ஏற்படலாம்.”

கணநேரத்தில் அங்கவையின் முகம் இறுகி உறைந்தது. அதனைக் கவனித்தபடி உதிரன் சொன்னான், “இந்த ஈ உன்னைக் கடிக்கவில்லை. அமர்ந்ததும் பிடித்துவிட்டேன். அதுமட்டுமல்ல; ஓர் ஈ கடித்ததால் ஒன்றும் ஆகிவிடாது.”
தலையை மறுத்து ஆட்டியபடி அங்கவை சொன்னாள், “உனது முதுகில் மூன்றுநான்கு ஈக்கள் இருப்பதை அப்போதே பார்த்தேன்.”

சற்றே அதிர்ந்தான் உதிரன்.

சொல்லிக்கொண்டே அவனது முதுகுப்புறமாக வந்துபார்த்தாள். மூன்று ஈக்கள் முதுகோடு ஒட்டியிருந்தன. மரத்தில் சாய்ந்திருந்ததால் மரப்பட்டை அழுத்துகிறது என நினைத்திருந்தான் உதிரன். அவள் தட்டிவிட்டதும் அவை பறந்து வெளியேறின.அவ்விடத்தில் முள்தைத்ததைப்போல் குருதி இருந்தது.

ஒன்றுக்கும் மேற்பட்ட ஈக்கள் கடித்துள்ளன என்பதை அவளின் முகம்பார்த்து உணர்ந்த உதிரன் சொன்னான், “நீ கலங்காதே! ஒருவேளை நான் மயக்கமுற்றாலும் சிலபொழுதில் எழுந்துவிடுவேன். பதற்றமடையாமல் இரு” என்றான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P85c_1519219196
அங்கவை சற்றே படபடப்போடு இருந்தாள். ஏனென்றால் இதனைச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே உதிரனின் கண்கள் செருகத் தொடங்கிவிட்டன. அதனைக் கவனித்தவள், அவனது தலையினைத் தனது மடியினில் மெல்லச் சாய்த்தாள். சிறிதுநேரத்திலேயே உதிரன் முழுமுற்றாக மயங்கினான். 

கலக்கத்தில் உடல் உதறுவதுபோல் இருந்தது, ஆனால், அடுத்தகணமே செய்ய வேண்டியதென்ன என்று சிந்தித்தாள். உடனடியாக சென்றிப்புகை போடுவோம். இப்பகுதியில் ஊரேதும் இல்லை. மலையின் பின்புறம் இருமடிப்புகள் தாண்டி எயினூர் இருக்கிறது. இங்கு புகைபோட்டால் அவ்வூரில் இருப்பவர்களால் பார்க்க முடியாது. இம்மலைப்பகுதியில் யாராவது இருந்தால்தான் உண்டு என்று எண்ணியபடி இங்குமங்குமாக சென்றிக்கொடியைத் தேடினாள்.

உதிரனின் இடுப்பிலிருந்த குறுவாளினை எடுத்து அருகிருந்த செடிகொடிகளை வெட்டியிழுத்தாள். வேகமாக அவற்றை உதிரனின் மீது போட்டு மீண்டும் ஈக்கள் மொய்க்காதபடி செய்தவள். சற்று விலகிப்போய் சென்றிக்கொடி தேடலாம் என்று முயன்றாள்.

அவளது தேடல் தொடர்ந்துகொண்டே இருந்தது. கீழ்ப்புறமாக எழுவனாற்றை நோக்கி இறங்கித் தேடினாள். அகன்று விரிந்து கிடந்தது எழுவனாறு. அதன் மணல் வெக்கையை உமிழ்ந்துகொண்டிருந்தது. ஆற்றினூடே குறும்பாறைகள் முளைத்துக்கிடந்தன. அவளின் கண்கள் எங்கும் ஓடித்திரும்பின. உதிரனைப் பார்க்கும் தொலைவைக் கடந்து போய்விடக்கூடாது என நினைத்துக்கொண்டே திரும்பித் திரும்பிப் பார்த்தபடி தேடிக் கொண்டிருந்தாள்.

எப்பொழுதும் கண்ணில் தட்டுப்படும் ஒன்று தேடும்பொழுது மட்டும் ஏன் கிடைப்பதேயில்லை என்று எண்ணிக்கொண்டிருக்கையில் அவளது கண்களுக்கு முன்னால் அது படர்ந்துகிடந்தது. பார்த்ததும் பெருமூச்சு விட்டாள். கையிலிருந்த குறுவாள்கொண்டு கொடியின் அடிப்புறத்தை அறுக்க எண்ணித் தரையோடு அமர்ந்தாள். ஏதோ மாறுபட்ட ஓசை ஒலிப்பதுபோல் இருந்தது. என்னவோசையிது என்று எண்ணியபடி சுற்றுமுற்றும் பார்த்தாள். ஒன்றும் பிடிபடவில்லை. ஆனால், சிறிது சிறிதாக ஓசையின் அளவு கூடிக்கொண்டேயிருப்பதுபோல் உணர்ந்தாள். 

கையிலிருந்த குறுவாளோடு கொடியினை அறுக்காமல் அப்படியே எழுந்தாள். கண்கள் திசையெங்கும் தேடித்துழாவின. பெருகுமோசை என்னவென்று புரியவில்லை. காட்டின் கீழ்ப்புறமிருந்து பறவைகள் கலைந்து பறந்தன. அத்திசையிலிருந்துதான் ஓசை வருகிறதென அறியமுடிந்தது. என்னவென்று தெரியவில்லை. மலையின் உச்சியில் ஏறிநின்று பார்ப்போமா என்று எண்ணியபொழுது, மிகத்தொலைவில் எழுவனாற்று மணல்வெளியில் உருவங்கள் தென்படத் தொடங்கின.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P85b_1519219232
வேகவேகமாக அருகிருந்த மரத்தின் மீதேறி, கொப்புகளுக்குள் தலைநுழைத்துப் பார்த்தாள். முதல்கணம் அவளால் காட்சியை உள்வாங்க முடியவில்லை. அகலவிரித்த கண்களில் தென்படும் எதுவும் அறிவிற்குப் புலப்பட மறுத்தது. எண்ணிலடங்காத யானைகள் எழுவனாற்று மணல்வெளியில் நடந்து முன்னேறிக்கொண்டிருந்தன. உயர்த்தப்பட்ட ஆயுதங்களோடு அவற்றின் மீது வீரர்கள் அமர்ந்திருந்தனர். ஆற்றின் இருகரையையும் அடைத்துக்கொண்டு அப்படை வந்துகொண்டிருந்தது.

 காணுங்காட்சியை அவளால் நம்ப முடியவில்லை. சிந்தனையைக் கூர்மையாக்கி மீண்டும் கண்திறந்து பார்த்தாள். வந்துகொண்டிருப்பது பெரும்படை என்பதை சிந்தனைக்குள் ஆழப்பதிந்தாள். கண்கள் காட்சியை அலசிக்கொண்டிருக்க எண்ணம் செய்யவேண்டியதைப் பற்றிச் சிந்தித்தது. கண்பார்வையின் கடைசி விளிம்பில்தான் அப்படை நகர்ந்து வந்துகொண்டிருந்தது. ஆனால் மூலப்படைக்கு முன்னால் தூசிப்படை வருமென அவளுக்குத் தெரியும். அப்படியென்றால் ஆற்றின் இருகரைகளிலும் எதிரிகள் முன்னேறி வந்துகொண்டிருப்பர். எண்ணிய கணத்தில் மரம்விட்டுச் சட்டெனக் குதித்து இறங்கி, உதிரனை நோக்கி ஓடினாள்.

கணநேரத்துக்குள் வாழ்வின் காட்சிகள் மாறிக்கொண்டிருந்தன. மேலே கிடந்த செடிகொடிகளை விலக்கி அவனது கன்னத்தில் அறைந்தும் மார்பில் குத்தியும் எழுப்ப முயன்றாள். உதிரன் உணர்வற்றுக் கிடந்தான். அங்கவை ஏதேதோ செய்துபார்த்தாள். கண்கள் கலங்கின. தலைமுடியைப் பிடித்து உலுக்கிப்பார்த்தாள். எந்தப் பயனுமில்லை. ஆவேசமும் குழப்பமும் கதறலுமாக மனம் கொந்தளிப்பில் அலைமோதியது. சட்டென அதே மரத்தின் மேலேறி, பொருத்தமான கிளையின் முனையில் போய்நின்று இலைகளை விலக்கிப்பார்த்தாள். மணல்தூசி அடுக்கடுக்காய் மேலேறிக் கொண்டிருந்தது. மிகத்தள்ளி அவர்கள் வந்துகொண்டிருந்தனர். ஆனால், ஆற்றின் எதிர்ப்புறச் சரிவிலிருந்து புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட பதாகையை ஒருவன் அசைத்துக் காண்பிப்பது அவளுக்குத் தெரிந்தது. வந்து கொண்டிருப்பது சோழனின் படை. அப்படியென்றால், அதே அளவுத் தொலைவில் இப்பக்கமும் தூசிப்படை முன்னேறியிருக்கும் என்பது புரிந்தது.
 வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P85e_1519219175
வெறிகொண்ட ஆவேசத்தோடு மரம் விட்டு இறங்கியவள், இங்குமங்குமாகத் தேடி, நீண்டுகிடந்த இண்டங்கொடியை இருபனை உயரத்துக்கு வெட்டியெடுத்தாள். ஒரு முனையில் உதிரனின் கால், இடுப்பு, மார்பு என அனைத்துப்பகுதியையும் மேல்நோக்கித் தூக்குவதற்கு ஏற்ப இறுகக்கட்டினாள். அவன் எவ்வித அசைவுமற்றுக் கிடந்தான்.

இண்டங்கொடியின் மறுமுனையை மரத்தின் கிளைகளுக்குள்ளே எறிந்தாள். தாழ்ந்திருந்த கிளையில் விழுந்து மறுபக்கமாகச் சரிந்தது. அதுவரை மேலே தூக்கி, பின்னர் மறுகிளை நோக்கி மேலுயர்த்துவதெல்லாம் முடியாதசெயல் எனச் சிந்தித்தவள். கொடியைக் கையில் எடுத்துக் கொண்டு சரசரவென மரத்தின் மேற்கிளையை நோக்கி ஏறினாள். பொருத்தமான இடமெனத் தென்பட்ட கவட்டைவடிவக் கிளையில் கொடியைப் போட்டு மறுபக்கமாகக் கீழே எறிந்தாள்.

மரம் விட்டு இறங்கியவள் இழுத்து மேலே தூக்க வசதியாக உதிரனை மரத்தினையொட்டி சாய்வாக உட்காரவைத்து, பின்புறமாகத் தொங்கிக்கொண்டிருக்கும் கொடியை இழுக்க ஆயத்தமானாள். இரு கைகளுக்குள்ளும் அடங்காத அளவு அகலங்கொண்டிருந்த இண்டங்கொடியைப் பிடித்து வாகாக நிற்க முயன்றாள். நகரும் படையின் ஓசை பெருக்கெடுத்து முன்னகர்ந்து வந்தது.

கையிலிருந்த கொடியை விட்டுவிட்டு ஓடிப்போய் எவ்விடம் வந்துள்ளனர் என்பதைப் பார்க்க எண்ணியவள் மறுகணம் இப்பொழுது கையிலிருக்கும் இக்கொடியை விடுவது, உதிரனின் உயிரை விட்டு அகல்வதற்கு நிகர். தூசிப்படையின் கண்களுக்கு மனிதர்கள் தெரிந்தால் வெட்டி யெறிந்துவிட்டுப் போவார்கள் எனச் சிந்தித்தபடி கொடியை இறுகப்பிடித்து வலுக்கொண்டு இழுத்தாள். உதிரன் மெல்ல அசைந்துகொடுத்தான். ஆனால், அவ்வளவு வலுமிக்க வீரனின் உடலை இழுத்து மேலேற்றுவதெல்லாம் எளிய செயலல்ல. ஆவேசங்கொண்டு முயன்றாள் அங்கவை. 

அமர்ந்த நிலையிலிருக்கும் உதிரனை நின்றநிலைக்குக்கூடக் கொண்டுவர முடியவில்லை. இது தனிமனிதராகச் செய்யும் முயற்சியல்ல என்பது தெளிவாக விளங்கியது. ஆனால், இம்முயற்சியை விட்டால் உதிரனைக் காப்பாற்ற வேறு எவ்வழியுமில்லை என்பதும் உறுதியாகப் புரிந்தது. எண்ணங்களை ஒருங்கிணைத்து முழுமூச்சோடு முயன்றாள். ‘வீரமும் வலிமையும் சிந்தனையில்தான் உள்ளன. அதனால்தான் சின்னஞ்சிறியவர்களை வைத்துக்கொண்டு திரையர்களின் கூட்டத்தை நடுமலை வரை எதிர்கொண்டார் தேக்கன். அத்தனை முறை தாக்குதலுக்கு ஆளான பின்னும் தளராமல் இறுதி வரை ஓடினர் கீதானியும் அலவனும். எண்ணத்தின் உறுதி எதனையும் செய்யும் ஆற்றலைத் தரும் என்பதை உணர்ந்தபடி ஆவேசத்தோடு இண்டங்கொடியை இழுத்துப் பின்னால் நகர்த்தினாள்.

உதிரன் சற்றே மேலுயர்ந்தான். உதிரனைத் தூக்கிவிட முடியும் என்று கண்ணில் தெரிந்த நம்பிக்கை, கைகளின் வலுவை மேலும் கூட்டியது. உன்னியிழுத்துப் பின்னகர்ந்தாள். உதிரன் உயர்ந்துகொண்டிருந்தான். மூன்று, நான்கு என கைகளில் கொடியைச் சுழற்றியபடி இழுத்தாள். தாழ்ந்திருந்த கொப்பின் உயரத்தை அவன் தலை தொட்டது. கொடியை அருகிருந்த மரத்தில் இழுத்துக்கட்டிவிட்டு வேகமாக வந்து மேலேறினாள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P85f_1519219151
இவ்வுயரத்தில் இருந்தால், மரத்துக்குக் கீழே யார் வந்தாலும் எளிதாகப் பார்த்துவிட முடியும். எனவே, மேலே உள்ள கிளைக்குக் கொண்டு போனால்தான் அவனை மறைக்க முடியும் எனத் தோன்றியதும் மீண்டும் கீழிறங்கிவந்து இழுக்க முயன்றாள். கைகளில் வலு போதவில்லை. என்ன செய்வதென்று புலப்படவில்லை. படையின் பேரோசை மலையெங்கும் அதிர்ந்து பரவியது. கைகளைத் தளர்த்தாமல் மூச்சினை இழுத்தாள். மனம் கொற்றவையை வணங்கியது. போர்த்தெய்வத்தின் ஆவேசத்தைக் கேட்டு மன்றாடினாள். மூடிய கண்களுக்குள் செம்பாதேவியின் நினைவு வந்தது. பற்களை நறநறவெனக் கடித்தபடி புலிக்கொடியைக் கிழித்து எறியும் ஆவேசங்கொண்டாள்.

``செம்பா தேவீ” என மனம் கதற, அடக்கமுடியாத ஆற்றலோடு இண்டங்கொடியை இழுத்துத் தள்ளினாள். உதிரன் மேற்கிளையில் முட்டி நின்றான். கயிற்றை மீண்டும் கட்டிவிட்டு மரமேறி உச்சிக்குப் போனாள். கிளையின் பிளவில் பொருத்தமாக அவனை உட்காரவைத்துக் கவட்டையோடு சேர்த்து அவனைக் கட்டினாள். கீழ்ப்புறமிருந்து பார்த்தால் தெரியாத அளவு கொப்புகளை ஒடித்துச் செருகி மறைத்தாள். இண்டங்கொடியை முழுமையும் மேல்நோக்கி இழுத்துக்கொண்டாள்.

படையோசை எங்கும் கேட்டது. காடெங்கும் பறவைகள் கலைந்து பறந்தன.  அடர்கிளைகளை மெல்ல விலக்கினாள். கிளி ஒன்று முகத்தில் கொத்துவதுபோல் வந்தது. தலையைப் பின்புறமாக இழுத்துக்கொண்டு பார்த்தாள். அது கிளிமூக்கு மாங்கனி. மரத்தின் உச்சிக்கிளையில் காய்த்துத் தொங்கிக்கொண்டிருந்தது. ஆடுங்கனியை இடக்கையால் விலக்கிப்பார்த்தாள். தூசிப் படையினர் முன்னேறி வந்துகொண்டிருந்தனர்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 15, 2018 5:03 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83a_1519746110
மூன்றாம் நாள் நள்ளிரவில் உதிரனும் அங்கவையும் எயினூருக்குள் நுழைந்தனர். நாய்களின் குரைப்பொலியைக் கேட்டு ஊரே விழித்துக்கொண்டது. உடலும் மனமும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் இருந்தன. எழுவனாற்றின் மணல்வெளியைக் கடக்க முடியவில்லை. எத்தனை காலடித் தடங்கள், யானையினுடையவை எத்தனை, வில் வீரர்களுடையவை எத்தனை, கொன்றழிக்க வேண்டிய எதிரிகளின் எண்ணிக்கைதான் எத்தனை எத்தனை!

பார்த்த காட்சியை மற்றவர்களிடம் சொல்ல, கொந்தளிக்கும் உணர்வு இடம் தரவில்லை. எயினூரிலிருந்து மிகத் தள்ளி குன்றுகள் பலவற்றைத் தாண்டி ஓடும் எழுவனாறு, எதிர்ப்புறமாகத் திரும்பிச் செல்கிறது. எனவே, எயினூர் மக்கள் யாரும் படையைப் பார்த்தறியவில்லை. வந்ததும் அங்கவையை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு வீரர்கள் இருவரை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாகப் புறப்பட்டான் உதிரன்.
மலைப்பாதையில் செங்குத்தான வழித்தடத்தில் கோழியனூரை நோக்கி மேலேறினர். இரவில் இந்தப் பாதையில் செல்வது ஆபத்து என ஊரார் தடுத்தபோதும் கேட்கும் நிலையில் உதிரன் இல்லை. கோழியனூரை அடைந்துவிட்டால் அங்கு காவல் வீரர்களிடம் விட்டுவிட்டு வந்த `குதிரையில் எவ்வியூர் விரைய வேண்டும். எதிரியின் படைகள் பறம்புக்குள் நுழைந்துள்ள செய்தியை மிக விரைவாக பாரியிடம் கொண்டு சேர்க்க வேண்டும். எழுவனாற்றின் வழித்தடத்தை யொட்டிய மலைப்பகுதியில் ஊர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. நாளையோ, நாளை மறுநாளோ படை வந்து கொண்டிருப்பதை மக்கள் பார்த்து விடுவர். வந்துகொண்டிருப்பது, இதுவரை பார்த்திராத அளவு எண்ணிக்கைகொண்ட பெரும்படை. எனவே, ஆங்காங்கே உள்ள மக்கள் தாக்குதலைத் தொடங்கிவிடக் கூடாது. நன்கு ஒருங்கிணைந்த தாக்குதலாக இருக்க வேண்டும். செய்தியை மிக விரைவாகக் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதுதான் இப்போது முக்கியம்.’

நன்றாக வழி தெரிந்த இருவரோடு தான் மலையேற்றத்தைத் தொடங்கினான் உதிரன். செங்குத்தான பெரும்பாறைகளில் துணிந்து முன்னேறிச் சென்றனர். காலடியில் உருளும் கற்கள் கீழே போய் விழும் ஓசையைக்கூடக் கேட்க முடியவில்லை. மலைச்சரிவு அவ்வளவு ஆழமுடையதாக இருந்தது. பல இடங்களில் வேர்களையும் கொடிகளையும் பிடித்து மேலேற வேண்டியிருந்தது. வீரர்கள் இருவரும் உதிரனை அழைத்துச் செல்வதில் மிகக் கவனமாகச் செயல்பட்டனர்.

ஆனால், உதிரன் வெறிகொண்டபடி மேலேறிக் கொண்டிருந்தான். எந்த ஆபத்தையும் பொருட்படுத்த அவன் ஆயத்தமாய் இல்லை. அங்கவையின் செயல் அவனை உலுக்கியது. `எவ்வளவு இக்கட்டான நிலையில் தனியொருத்தியாக இருந்து என்னைக் காப்பாற்றியுள்ளாள். கடைசி வரை நம்பிக்கை இழக்காமல் செயல்பட்ட அவளின் துணிவு இணையற்றது. கால்களுக்குக் கீழே எண்ணிலடங்காத எதிரிகள் நகர்ந்து போய்க்கொண்டிருக்கும்போது பகலும் இரவும் கவனமாகத் தன்னையும் காத்து என்னையும் காத்துள்ளாள். இந்த உறுதிப்பாட்டுக்கும் துணிவுக்கும் முன்னால் நம் செயல்கள் எல்லாம் பொருட்டே அல்ல’ என்று அவனுக்குத் தோன்றியது. எயினூர் வீரர்கள் சற்றே தயக்கத்தோடு கடக்கும் இடங்களைப் பாய்ந்து கடந்துகொண்டிருந்தான் உதிரன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83b_1519746124
அதிகாலை கோழியனூர் வந்து சேர்ந்ததும் காவல் வீரர்களிடம் குதிரையை வாங்கிக்கொண்டு எவ்வியூர் நோக்கி விரைந்தான். பாய்ந்து செல்லும் குதிரையால் அவனது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. `மூன்று ஊர்களில் குதிரையை மாற்றி, பயணத்தை நிற்காமல் தொடரவேண்டும்’ என்று எண்ணியபடி பகல் இரவு பாராமல் விரைந்துகொண்டிருந்தான்.    
ங்கவை சொல்லிய ஒவ்வொரு சொல்லும் அவனால் நம்பவே முடியாததாக இருந்தது. அவன் விழிப்புற்றபோது பெரும்பான்மையான படைகள் கடந்துவிட்டன. பொழுது நீங்கி நீண்டநேரத்துக்குப் பிறகுதான் அவன் மயக்கம் தெளிந்தான். மரத்தின் உச்சிக்கிளையில் உட்கார்ந்த நிலையில் கயிற்றால் கட்டப்பட்டிருப்பது ஏனென்று அவனுக்கு நீண்டநேரம் புரியவில்லை. அவன் பேசத் தொடங்கியதும் ``அதிர்ந்து பேசாதே!’’ என எச்சரித்தாள் அங்கவை. பொழுது மங்கி இருள் சூழ்ந்ததால் அவனால் நடப்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. நீண்டநேரத்துக்குப் பிறகு மிக மெதுவான குரலில் நகரும் படையைப் பற்றிக் கூறினாள். அப்போதும் அவனது கட்டை அவள் கழற்றவில்லை. நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் உணர்ச்சிமேலிட அவன் எதுவும் செய்துவிடக் கூடாது என்பதில் அவள் தெளிவாக இருந்தாள். பறம்புக்குள் எதிரிகள் நுழைந்ததை அறிந்த பிறகும் ஒரு காவல் வீரன், கதை கேட்டுக்கொண்டிருக்க மாட்டான் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், இப்போது நிலைமை வேறுவிதமாக இருக்கிறது.

அவன் மயக்கம் நீங்கிய பொழுதிலிருந்து அதிர்ச்சிமேல் அதிர்ச்சிகளை அவள் சொல்லிக்கொண்டே இருந்தாள். ஆற்றின் மேலே நல்ல உயரத்திலிருந்து பார்த்ததாலும், எண்ணறிவில் தேர்ந்தவளாக இருந்ததாலும் நகரும் படையைப் பற்றிய துல்லியமான கணக்கை அவளால் சொல்ல முடிந்தது.

சொல்லிக்கொண்டேயிருந்த அவளின் குரல் காதை விட்டு அகல மறுக்கிறது. ``பறம்புவீரனாக இந்தப் படையைத் தடுப்பது தான் எனது முதல் வேலை. அருகில் இருக்கும் ஊர்களைத் திரட்டி இந்த இரவிலேயே தாக்குதலைத் தொடங்க முடியும். எதிரிகளை இந்த இடம் விட்டுத் துளியும் நகரவிடாமல் என்னால் செய்ய முடியும்” என ஆத்திரம்கொண்டு உரைத்தபோது, மிகவும் அமைதியாக ஆனால் உறுதியான குரலில் அவனது எண்ணத்தை மறுத்தாள் அங்கவை.

``தந்தை, தேக்கன், முடியன் என யாரும் சிந்தித்திராத ஒரு திசை வழியில் பறம்புக்குள் பெரும்படை நுழைந்துள்ளது. அப்படியென்றால், இதற்குப் பின்னால் விரிவான திட்டமிடல் இருக்க வேண்டும். சேரனும் பாண்டியனும் படையெடுப்பார்கள் என எதிர்நோக்கி இருக்கும்போது இவ்வளவு பெரும்படையோடு சோழன் ஏன் உள்ளே நுழைகிறான்? அதுவும் எழுவனாற்றின் வழியினூடே எங்கே போகிறான்? இதெல்லாம் விரிவான தன்மையோடு எதிர்கொள்ள வேண்டிய ஒன்று. எனவே, செய்தியை உடனடியாக எவ்வியூருக்குக் கொண்டு செல்லும் வேலையை மட்டும் செய்.”

எதிரியைக் கண்டு குருதி கொப்புளிக்கச் சினந்தெழுந்த உதிரனை மடக்கிப் பிடித்து எவ்வியூர் நோக்கி அனுப்பினாள் அங்கவை. ``செய்தி சொல்ல மற்றவர்களைக்கூட அனுப்பலாம். நான் எதிரிகளைத் தொடர்ந்து செல்வதுதான் சரி” என உதிரன் மீண்டும் வாதிட்டபோது அங்கவை சொன்னாள், ``எதிர்பாராத திசையிலிருந்தே இவ்வளவு பெரும்படை உள்ளே நுழைந்திருக்கிறது என்றால், மற்ற திசைகளிலிருந்து எவ்வளவு படைகள் உள்ளே நுழைந்துள்ளதோ! அவற்றை எதிர்கொள்ள யார் யார் எங்கெங்கே செல்வது என்பதெல்லாம் பறம்பின் தலைவன் எடுக்க வேண்டிய முடிவு. நீ போரிடவேண்டிய இடம் எது என்பதை எவ்வியூருக்குப் போய் கேட்டுத் தெரிந்துகொள்” எனத் திடம்கொண்ட குரலில் கூறினாள் அங்கவை. ஈட்டி ஏந்திய பல்லாயிரம் எதிரிகள் கீழே போய்க்கொண்டிருப்பதை அறிந்தபோதும் நடுங்காத அவளின் கால்களைவிட உறுதிமிக்கதாக இருந்தன அவளுடைய சொற்கள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83c_1519746136
பொழுது மங்கிக்கொண்டிருக்கும் மாலை வேளையில் நாகப்பச்சை வேலியைத் தாண்டிப் பாய்ந்தது உதிரனின் குதிரை. மேல்மாடத்தில் பாரி, தேக்கன், முடியன், காலம்பன் ஆகியோர், தென் திசையிலிருந்து கூழையன் அனுப்பிய செய்தியைப் பற்றித் தீவிரமாகக் கலந்துரையாடிக்கொண்டிருந்தனர். தொலைவிலேயே பாரியின் கண்களுக்கு உதிரனின் பாய்ச்சல் தெரிந்தது. அங்கவையின்றித் தனியே வருபவனின் வேகம் ஆபத்து ஒன்றை முன்னுணரச்செய்தது. மாடத்திலிருந்து விரைந்து கீழிறங்கினர்.

இரண்டு நாள்களாக உணவேதுமின்றி அவ்வப்போது குதிரையை மட்டும் மாற்றி விரைந்து வந்து சேர்ந்தான் உதிரன். கிறங்கியபடி வந்தவனை சற்றே இளைப்பாறவைக்க முயன்றார் தேக்கன்.  ஆனால், கொந்தளிக்கும் உணர்வோடு இருந்த உதிரனால் அவர்கள் கொடுக்கும் நீராகாரத்தை வாங்கிக் குடிக்க முடியவில்லை. பேச்சு ஒழுங்கோடு வெளிவர மறுத்தது. முன்னும் பின்னுமாகத் திணறினான். அங்கவை இல்லாமல் உதிரன் மட்டும் வந்த செய்தி ஆதினியை எட்டியபோது இதுவரை இல்லாத அச்சத்தை அடைந்தாள்.

மாளிகையை நோக்கி ஓடோடி வந்தாள். அவள் உள்ளே நுழைந்தபோது அங்கவையின் கண்களின் வழியே நகர்ந்து செல்லும் யானைப்படையின் எண்ணிக்கையைச் சொல்லிக்கொண்டிருந்தான் உதிரன். காலாட்படையின் தன்மை வேறுபாடுகளைச் சொன்னான். குதிரைப்படை ஏதுமில்லை. படைகளை ஒழுங்கமைக்கவும் தளபதிகளின் பயன்பாட்டுக்காகவும் மட்டுமே குதிரைகள் வந்துள்ளன. வீரர்களின் முகங்களில் களைப்பேதும் இல்லை. தூசிப்படையினர் காதுகளின் மேல்மடல்களில் மூன்று ஓட்டையிட்டிருந்தனர் என்பதுவரை அங்கவை சொல்லி அனுப்பியிருந்தாள்.

ஏறக்குறைய அனைவரும் திகைத்துப்போயினர். `சோழன் ஏன் படையெடுத்து வருகிறான்? எழுவனாற்றினூடே பறம்புக்குள் நுழையும் வழி எப்படி அவனுக்குத் தெரிந்தது? அவனது படையின் வலிமை யானைகளை நம்பியதாக இருக்கிறது. அது மிகச்சரியான உத்தியே. இவ்வளவு தெளிவான திட்டமிடலோடு புறப்பட்டு வரும் நோக்கம் என்ன?’ என, ஒவ்வொருவருக்குள்ளும் கேள்விகள் உருண்டுகொண்டிருந்தன.

அவை அமைதிகொண்டது. ஆதினி பெருமூச்சு விட்டாள். அங்கவைக்கு ஆபத்து ஏதும் நிகழவில்லை. அதுபோதும். பறம்புக்குள் எவ்வளவு பெரியபடை வந்தாலும் அச்சம்கொள்ள ஒன்றுமில்லை. எனவே, அவை விட்டு அகன்றாள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83d_1519746150
முந்தைய நாள் நள்ளிரவு, கூழையன் செய்தி அனுப்பியிருந்தான். `குடநாடும் குட்டநாடும் படையை ஒருமுகப்படுத்தியிருக்கின்றன. ஆயிமலையின் பின்புறம் இருநாட்டுப் படைகளும் ஒன்றுசேர்ந்து பாசறை அமைத்துள்ளன. ஆயிமலையின் கணவாய் வழியாக இன்னும் சில நாள்களில் அவர்கள் பறம்புக்குள் நுழைய உள்ளனர்’ என்பதுதான் கூழையன் அனுப்பியுள்ள செய்தி. வழக்கத்துக்கு மாறான தன்மையுடன் சேரர்களின் நடவடிக்கை உள்ளது. இருவரும் தனித்தனியே போரிடுவதற்கான ஏற்பாட்டுடன் இருந்ததாகத்தான் ஏற்கெனவே கூழையன் செய்தி அனுப்பி யிருந்தான். திடீரென எப்படி இரு படைகளும் ஒருங்கிணைந்தன? ஆயிமலை கணவாய்ப் பகுதியின் வழியே பறம்புக்குள் நுழையும் துணிவு எப்படி இவனுக்கு வந்தது? கிழக்குப்புறத்தில் பாண்டியன் படை அணி திரண்டுகொண்டிருப்பதற்கும், சேரனின் நடவடிக்கைக்கும் இருக்கும் உறவுகள் என்ன என்பதைப் பற்றிதான் அவையில் ஆய்ந்துகொண்டிருந்தனர்.

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும்மேலாக சேரர்களின் தாக்குதல் எத்தனையோ முறை நிகழ்ந்துள்ளது. ஆனால், இந்த முறை உதியஞ்சேரலின் நடவடிக்கைகளில் நிறைய வேறுபாடு தெரிகிறது. அவன் மிகக் கவனமாகப் பல வேலைகளைச் செய்கிறான். பறம்புக்குள் வழி அமைக்க தொடர்ந்து அவன் முயன்றுள்ளான். ஆனால், அவன் முயன்ற எந்தப் பகுதியிலும் இல்லாமல் ஆயிமலையில் கொண்டுவந்து இப்போது படையை நிறுத்திவைத்துள்ளான். அவனது திட்டமிடலின் ஒரு பகுதியாக நமது எண்ணங்களைக் குழப்பும் உத்தி இடம்பெற்றுள்ளது. இதை எதிர்கொள்ள, செய்யவேண்டியது என்ன எனச் சிந்தித்துக்கொண்டிருந்தவர்களிடம்தான் சோழப்படை உள்நுழைந்ததைப் பற்றிச் சொன்னான் உதிரன்.

உதிரன் சொன்ன செய்தி, எல்லோருக்குள்ளும் குழப்பத்தையே உருவாக்கியது. இந்தப் படையெடுப்பின் நோக்கத்தையும் தன்மையையும் புரிந்துகொள்ள முடியவில்லை. இத்தனை ஆயிரம் எதிரிகள் இதுவரை பறம்புக்குள் நுழைந்ததில்லை. அங்கவை சொல்லியுள்ள கணக்குப்படி காலாட்படையின் எண்ணிக்கை ஐந்தாயிரத்துக்கும் அதிகமாக இருக்கிறது. யானைகளின் எண்ணிக்கை ஐந்நூறு.

`எதிரியின் படையைப் பற்றி பாரி வேறென்ன கேட்கப் போகிறான்?’ என்று உதிரன் எதிர்பார்த்திருந்தபோது பாரி கேட்டான், ``நீ கண் விழித்தது எப்போது?”

``மறுநாள் மாலையில்.”

``போதிய உணவின்றிப் பல நாள்களாக இருக்கிறாய். முதலில் உணவருந்திவிட்டு வா. பின்னர் பேசுவோம்” என்றான்.

உதிரனுக்கு எழுந்து செல்ல மனமில்லை. தயங்கியபடியே வீரர்களோடு அவையை விட்டு வெளியேறினான்.

துவளாத அவனது நடையைப் பார்த்தபடியே பாரி சொன்னான், ``நாகக்குடி என்பதால் மறுநாள் கண்விழித்திருக்கிறான். ஒன்றுக்கும் மேற்பட்ட அடவி ஈ கடித்திருந்தால் மற்ற யாராக இருந்தாலும் மரணித்திருப்பர்.”
தேக்கன் `ஆம்’ எனத் தலையசைத்தான். உதிரன் வரும் வரை பேச்சு நீண்டது.

புதிய சூழலுக்கு ஏற்ப தனது கருத்தைக் கூறினான் முடியன். ``ஆயிமலையின் கணவாய்ப் பகுதி மிகக் குறுகியது. அதனுள்ளே நுழைந்து வந்தாலும் அடர் காடுகளைக் கொண்டது. எனவே, அந்தப் பகுதியில் சேரனால் படை நடத்தி உள்நுழைய முடியாது. அவன் வேறு ஏதோ திசை வழியில் இருந்தே உள்ளே வரத் திட்டமிட்டுள்ளான். நமது கவனத்தைத் திருப்பவே இந்த ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறான்.”

``அடர்காட்டை எவ்வளவு தொலைவு ஊடறுக்க முடியும்? பெரும்படைகள் நகர்வதற்கான நில அமைப்பை அவனால் எப்படி உருவாக்கிக்கொள்ள முடியும்?” எனக் கேட்டார் வாரிக்கையன்.

``எந்தவித முன்னனுபவமும் இல்லாமல் சோழன் உள்நுழைந்துள்ளான். பல்லாயிரம் வீரர்களைக்கொண்ட படை இருக்கும் மமதையில்தான் மூடத்தனமான முடிவை எடுத்துள்ளான். ஆனால், உதியஞ்சேரலை அப்படிச் சொல்லிவிட முடியாது. நம்மால் கணிக்க முடியாத ஓர் ஆட்டத்தை ஆடிப்பார்க்க எண்ணுகிறான்” என்றார் தேக்கன்.

உரையாடலைக் கேட்டபடி அமைதிகொண்டிருந்த பாரி இப்போது சொன்னான், ``தென்புறத்துக் காவல் வீரர்கள் பயன்படுத்தும் குதிரைப்பாதை ஒன்று ஆயிமலையின் வழியே செல்கிறதல்லவா, அதை அடிப்படையாகக்கொண்டு உதியஞ்சேரல் திட்டம் தீட்டியிருப்பான்.”

யாரும் சிந்திக்காத கருத்தாக அது இருந்தது. ``ஆனால், குதிரைப்பாதையில் பெரும்படை ஒன்று எப்படி நகர்ந்து வர முடியும்?” எனக் கேட்டான் முடியன்.

``அதுவன்று கேள்வி, அந்தக் குதிரைப்பாதையை அவன் எப்படி அறிந்தான் என்பதுதான் கேள்வி. அந்தத் திசை செல்லும் நமது காவல் வீரர்களை அவர்கள் தொடர்ந்து கவனித்ததன் மூலம் அறிந்துள்ளனர். அப்படியென்றால், அந்தப் பாதையின் வழியிலான ஒரு முயற்சிக்கு அவர்கள் ஆயத்தமாகியுள்ளனர்” என்றார் வாரிக்கையன்.

மற்றவர்களின் சிந்தனை அதை நோக்கிப்போனது. ``சாலமலை, கழுவாரிக்காடு, நரிமுகடு ஆகிய மூன்று பகுதிகளில்தான் சேரன் படைநடத்தி உள்ளே வர முடியும். ஆனால், எந்தவிதக் காரணமும் இல்லாமல் ஆயிமலையின் பின்புறம் படையை நிறுத்தியுள்ளது எதனால்?” எனக் கேட்டான் முடியன்.

அமைதி நீடித்தது. ``அவர்களின் திட்டம் எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். மூவரும் நமது கைக்கு அருகே வந்துவிட்டனர். நாம் செய்ய வேண்டியதைப் பற்றி முடிவெடுப்போம்” என்றான் தேக்கன்.
சிறிது நேரம் அமைதி நீடித்தது. அச்சமோ அவசரமோ யாரிடமு மில்லை. சப்பணமிட்டு அமர்ந்திருந்த பாரி எழுந்தபடி கூறினான், ``நீராட்டுக்காகக் கொற்றவையின் கூத்துக்களத்தில் கூடுவோம்.”

கொற்றவையின் கூத்துக் களத்தைக் காவல்வீரர்கள் வேகவேகமாகத் தூய்மைப்படுத்தி பந்தங்களை ஏற்றிவைத்தனர். உதிரன்தான் முதலில் வந்தான். அவன் சொல்லித்தான் வீரர்களுக்குத் தெரியும். நீராட்டுச் சடங்கு எவ்வளவு உக்கிரமேறியது என்பதை அனைவரும் அறிவர்.

தேக்கன், வாரிக்கையன், முடியன் ஆகிய மூவரும் அடுத்ததாக வந்து சேர்ந்தனர். சற்றுநேரத்தில் பாரியும் காலம்பனும் வந்தனர். அவர்களுக்குப் பின்னே ஆதினி இரு பெண்களுடன் வர, இறுதியில் குலநாகினிகள் கூட்டமாக வந்தனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83e_1519746165
பந்தங்கள், எங்கும் ஏற்றப் பட்டிருந்தன. வெளிச்சம் கண்டு பறவைகள் படபடத்து ஓசை யெழுப்பின. குலநாகினிகளில் மூவர் உடுக்கையைக் கையில் கொண்டிருந்தனர். ஆதினியுடன் வந்த இரு பெண்களில் இளம்பெண் ஒருத்தி நீர் நிறைந்த பச்சைமண் குடத்தைத் தூக்கி வந்தாள். நீர்க்குடத்துக்குள் முன்னோர்களின் எலும்புகள் இருந்தன. இன்னொருத்தி சூல்வயிற்றுக்காரி. அவளோ பனங்கருக்கைக் கலயத்துள் செருகி, தலையில் ஏந்திவந்தாள்.

போர் என்பது கொற்றவையின் திருவிழா. ஆதிகாலம்தொட்டு அவள் மனம் குளிரும் நிலம் போர்க்களம்தான். சிதைவுண்ட உடல்களும் சரிந்து தொங்கும் குடல்களும் தாடை வெட்டுப்பட்டுப் பிளந்துகிடக்கும் முகங்களும்தான் அவளுக்கான படையல்.

குலுங்கும் முலைகளில் குருதி பெருக்கி தன் மக்களை அவள் பாலூட்டி வளர்ப்பதே, போர்க்களத்தில் இக்கைமாற்றை அவர்கள் செய்வார்கள் என்பதால்தான், செம்பாறையில் தலைகள் உருண்டு தெறிக்கும் ஓசையினையே உடுக்கையின் ஓசையாக்கிக்கொண்டவள். எதிரிகளின் குருதி, நிலமெங்கும் வழிந்தோடும். செவ்வீரமண்ணைப் பிசைந்து அவளுக்கு ஊட்டப்போகும் நற்செய்தியைச் சொல்லவே குலநாகினிகள் வந்துள்ளனர்.

பாரி, தேக்கன், முடியன், வாரிக்கையன், காலம்பன் ஆகிய ஐவரும் குலநாகினிகளுக்கு சற்றுப் பின்னே நின்று கொண்டிருந்தனர். அவர்களை விட்டு விலகி மற்ற வீரர்களோடு நின்றுகொண்டிருந்தான் உதிரன். `போரைத் தொடக்க ஆயத்தநிலையில் உள்ள சேரன், படை நடத்திப் பறம்புக்குள்ளே வந்துள்ள சோழன், பறம்பின் எல்லையில் படையை நிலைகொள்ளச் செய்யும் பாண்டியன் என மூன்று பெரும் எதிரிகள் சூழ்ந்த நிலையில் நமது தாக்குதலைத் தொடங்க பாரி சொல்லப்போகும் உத்தரவு என்ன? யார் யார் எந்தத் திசையில் களம் புகவேண்டும்? பறம்பின் தலைவன் சொல்லப்போகும் ஆணை என்ன?’ என்பதறிய உதிரனின் மனம் துடித்துக்கொண்டிருந்தது.

கூட்டத்தின் ஓசையையும் பந்தங்களின் வெளிச்சத்தையும் கண்டு தேவவாக்கு விலங்கு குரலெழுப்பி, அவர்களுக்கான உத்தரவைக் கொடுத்தது. குலநாகினிகளும் ஆதினியும் சடங்குகளை வேகப்படுத்தினர். பனை ஓலைக் கூடையில் கனிகளையும் இதர பொருள்களையும் கொண்டுவந்த குலநாகினி ஒருத்தி, அவற்றை எடுத்துக் கீழே வைக்கத் தொடங்கினாள். உடல் முழுவதும் இறகு உதிர்த்த நீர்ச்சேவல் ஒன்று கால் கட்டப்பட்ட நிலையில் அதில் இருந்தது.

யானைமுடியும் புலிமயிரும் கொண்டு பின்னப்பட்ட கயிற்றால் நூழிக்கிழங்கைக் கட்டியிருந்தனர். சாம்பற் புழுதியில் குருதி பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணற்ற உருண்டைகளை உருட்டியிருந்தனர். கூத்துக்களத்தின் இடப்புறமிருந்து தேவவாக்கு விலங்கின் வழக்கத்துக்கு மாறான குரல் கேட்டதும் உடுக்கை எடுத்து அடிக்கத் தொடங்கினாள் குலநாகினி ஒருத்தி. மற்றவர்களோ குலவையிடத் தொடங்கினர்.
உடுக்கை ஓசையும் குலவை ஓசையும் கூடின. குலநாகினிகள், நடுவில் நின்றிருந்த ஆதினியையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவளோ, முடிச்சிட்ட தலைமுடி அவிழ மெள்ளச் சிரித்துத் தோள் குலுக்கி ஆடத் தொடங்கினாள். உடுக்கையின் ஓசைக்கு ஏற்ப ஆட்டத்தின் வேகம் கூடியது. மிக விரைவாக அது வெறியாட்டமாக மாறியது. நள்ளிரவில் உடலெல்லாம் கொதிப்புற்றுத் துடிக்க ஆதினியின் ஆட்டம் குலநாகினிகளையே நடுக்குறச்செய்வதாக இருந்தது.

குலவை ஓசை மேலும் கூடியது. உடுக்கையின் ஓசை வெடிப்புற்றுத் தெறித்தது. குலநாகினிகள் மூவரும் ஆதினியின் முன் மண்டியிட்டு உடுக்கை அடித்தனர். அவர்களின் கண்களில் நீர் தாரைதாரையாக இறங்கிக்கொண்டிருந்தது. ஆதினியின் ஆவேசம் மேலும் கூடத்தொடங்கியது. உடுக்கையின் ஒலி, நரம்புகளை முறுக்கிச் சுழற்றியது. மற்ற குலநாகினிகள் அவளின் தோள்களைப் பிடித்து அமுக்கி உட்காரவைக்க முயன்றனர். குலவை ஓசைக்கு ஏற்ப குலநாகினிகளின் சடங்கு தீவிரமடைந்தபடியிருந்தது. பற்களை நறநறவெனக் கடித்தபடி பிடித்திருப் போரை உலுக்கியெடுத்தாள் ஆதினி. நெருங்க முடியாப் பறம்பின் தலைவியைக் குலநாகினிகள் மொத்தமாக இணைந்து தோள்களைப் பிடித்து அழுத்தினர்.

உடுக்கையின் ஒலியும் குலவை ஓசையும் பறவைகளின் கத்தல்களும் இணைய கூத்துக்களம் உருமாறிக் கொண்டிருந்தபோது பெருங் குரலெடுத்து ஆதினி கத்தினாள். அதுவரை சாய்ந்துகிடந்த நீர்ச்சேவல், எழுந்து நின்று தலை சிலுப்பிக் கூவியது. அதைக் கண்டவுடன் பாய்ந்து சென்ற மூத்த குலநாகினி, இறகு உதிர்த்த நீர்ச்சேவலை எடுத்து ஆவேசமாகக் கத்தியபடி அதன் தலையை முறுக்கி அத்தெடுத்தாள். குலவை ஓசை உச்சிக்குச் சென்றது.

வலக்கையில் இருந்த நீர்ச்சேவலின் தலையை இடப்புறமாகவும், இடக்கையில் இருந்த நீர்ச்சேவலின் உடலை வலப்புறமாகவும் வீசி எறிந்தாள். குலவை ஓசையும் உடுக்கையின் ஓசையும் காட்டை மிரட்டின. மற்ற குலநாகினிகள் நூழிக்கிழங்கையும் குருதி உருண்டைகளையும் எல்லா திசைகளிலும் வீசியெறிந்தனர். குலவை ஒலியோடு தேவவாக்கு விலங்கின் ஒலியும் இணைந்து இருளை உலுக்கின.
இளம்பெண் சுமந்துவந்த பச்சைமண் குடத்து நீரை, அமர்ந்திருந்த ஆதினியின் தலையில் ஊற்றினர். முன்னோர் களின் எலும்புகள் மேலெங்கும் நழுவி இறங்கின. இறங்கும் எலும்பை இரு கைகளிலும் ஏந்தினாள் ஆதினி.

ஆயிரம் அணங்குகள் காடெங்கும் இருந்து இறங்கி வந்து ஆதினிக்குள் அடங்க, எண்ணிலடங்கா முன்னோர்களின் விலா எலும்பை இரு கைகளிலும் ஏந்தினாள் ஆதினி. அதைக் கண்டதும் ஆவேசம்கொண்ட பாரி, அவளை நோக்கி வந்தான். மற்றவர்களும் தொடர்ந்து வந்தனர். ஆதினியின் கையில் இருந்த எலும்பு ஒன்றை எடுத்தான் பாரி. உடுக்கை அடிப்பவர்கள் பாரியைச் சுற்றி ஒலியெழுப்பினர். குலவை ஒலி மேலிட எடுத்த எலும்பு கொண்டு மார்பிலே கீறினான் வேள்பாரி. கொப்புளித்துப் பெருகியது பாரியின் குருதி. உடுக்கை அடிப்பவர்களின் ஆவேசம் மொத்தக் காட்டையும் உலுக்கியது. மற்ற நால்வரும் அதேபோல முன்னோர்களின் எலும்பு எடுத்து மார்பிலே கிழித்தனர்.

திக்கெட்டுமிருந்து தேவவாக்கு விலங்குகளின் குரல் எதிரொலித்துக்கொண்டிருக்க, சூல்வயிற்றுக்காரி தலையில் சுமந்துவந்த கலயத்தோடு பாரியின் முன்னால் மண்டியிட்டு அமர்ந்தாள். குடத்துக்குள் இருந்த பனங்கருக்கினை எடுத்த பாரி, கீறிய மார்பின் மீது உரக்கத் தேய்த்தெடுத்தான். மேற்சதையைப் பிய்த்துக்கொண்டு வந்தது பனங்கருக்கு. குலவை ஓசையும் உடுக்கை ஓசையும் பறவைகளின் கத்தலும் விலங்கின் கதறலும் இணைய ஐவரின் மார்புக் குருதியை பனங்கருக்குகள் வாங்கிக்கொண்டன.

குருதி தோய்ந்த பனங்கருக்கினை ஆதினியின் கைகள் ஏந்திப்பிடிக்க, சூல்வயிற்றுக்காரி மேடையின் மீது ஏறி அமர்ந்தாள். குலநாகினிகள் ஆளுக்கு ஒரு திசை பார்த்து ஆவேசமாய் ஆடினர். கொற்றவையின் பசியடக்கி, தாகம் தீர்க்க எதிரிகளை மலைமலையாய்க் கொன்றழிப்போம் என ஐவரும் மார்புக் குருதிகொண்டு உறுதி அளித்ததால் ஆதினிக்குள் இருந்த கொற்றவை அகமகிழ்ந்தாள். வாய் அகன்று காடதிரச் சிரித்தாள்.

ஆனால், மேடையில் அமர்ந்திருந்த சூல்வயிற்றுக்காரி சிரிக்கவில்லை. ஆவேசம் தணியவில்லை. விரித்த விழிகளில் இமையாடவில்லை. பெருங்குரலெடுத்து ``வா... ஏங்கிட்ட வா...” எனப் பேய்க்கூச்சலிட்டாள்.
தலையை மறுத்து மறுத்து ஆட்டி, ``விழப்போகும் எதிரிகளின் எண்ணிலடங்காத உடல்களைத் தின்று முடித்துவிட்டு வருகிறேன். உருவிய குடல்களால் குன்றுகள் மறைந்து கிடக்க, காடெங்கும் பெருகியோடும் குருதியைக் குடித்துவிட்டு வருகிறேன். அதற்குள் ஏன் அழைக்கிறாய்?” என மறுத்துக் கத்தினாள் கொற்றவை. ஆனால், சூல்வயிற்றுக்காரி விடவில்லை. அதைவிடப் பெருங்குரலெடுத்துக் கத்தினாள். ``காலம் தாழ்த்தாதே, எனக்கான வாக்கை அளித்துவிட்டு நீ பசியாறிக்கொள்.”

கொற்றவை நகரவில்லை. ``என் மக்கள் கொன்றளித்துள்ள பிணங்களைப் புசித்து முடிக்கும் வரை பொறுத்திரு” எனக் கூறி, பற்களை நறநறவெனக் கடித்து, காட்டையே இரு கூறுகளாகப் பிளந்துகொண்டிருந்தாள்.
குலநாகினிகள் ஒன்றுசேர்ந்து கொற்றவையை, சூல்வயிற்றுக்காரியை நோக்கி இழுத்துச் செல்ல முயன்றனர். ஆனால் யாராலும் அவளை அசைக்க முடியவில்லை. ஆயிரம் அணங்குகள் ஒன்றாய் இறங்கி ஆடிக்கொண்டிருந்தனர். குலவையின் பேரொலி பல மடங்கு அதிகரித்தது. உடுக்கை ஓசையில் இலைகள் நடுங்கின. குலநாகினிகள் எல்லோரும் சேர்ந்து பெரும் ஆவேசத்தோடு உட்கார்ந்திருந்தவளைத் தூக்கி மேடையின் மீதிருந்த சூல்வயிற்றுக்காரியை நோக்கி நகர்த்திச் சென்றனர்.

சூல்வயிற்றுக்காரியின் கண்ணில் நீர் வழிந்துகொண்டிருந்தது. ஆனால், கொற்றவை தன்னை நோக்கி வரத் தொடங்கியதும் அவளின் முகத்தில் சிரிப்பு படரத் தொடங்கியது. குலநாகினிகள் வலுக்கொண்ட மட்டும் நகர்த்தினர். அமர்ந்திருந்தவள் ஆதினியல்லள், கொற்றவை. அவ்வளவு எளிதாக நகர்த்திவிட முடியாது.

மேலும் மேலும் ஓசையெழுப்பி, உடுக்கையடித்து, பெருங்குரலில் கதறியபடி கொற்றவையை முன்னகர்த்தினர். மலையெனக் குவியும் பிணங்களின் குருதி வாடையை உள்மூக்கில் நுகர்ந்தபடி சற்றே அகமகிழ்ந்து எழுந்தாள். எழுந்த கணம் குலநாகினிகள் முழு ஆவேசத்தோடு மேடையை நோக்கி நகர்த்தினர். அருகில் சென்று, அமர்ந்திருந்தவளின் நிறைசூலில் கை வைத்தாள் கொற்றவை. காடு நடுங்கும் ஓசை இருளெங்கும் கேட்டது. `நிறைசூலுக்குள் இருக்கும் புது உயிருக்கு இந்த மண்ணைக் காத்தளிப்பேன்’ எனக் கொற்றவை அளித்த வாக்கு, காட்டுயிரின் காதுகளிலெல்லாம் எதிரொலித்தது.

எதிரிகளைக் கொன்றழிக்க நிகழும் சூளுரையும் குருதி குடிக்கத் துடித்தெழும் ஆவேசமுமே இந்தச் சடங்கின் உச்சம். ஆந்தைகளின் வட்டவிழி நடுக்குற்ற அந்தக் கணத்தில், இருளும் மலையும் ஒருசேர உணரும்படி காடதிரக் கத்தினான் வேள்பாரி. ``கொற்றவையின் பசி தீர்க்க எதிரிகளின் பிணங்களை மலையெனக் குவிப்போம்! பறம்பெங்கும் வேந்தர்படை சிந்தும் குருதி விட்டு ஈக்கள் அகலாது நிலைகொள்ளட்டும். சேரனின் படையை அழித்தொழிக்கும் வேலையைத் தேக்கனும் கூழையனும் உதிரனும் செய்யட்டும். கிழக்குத் திசையில் நிலைகொள்ளும் பாண்டியப்படையின் கருவறுக்கும் வேலையை முடியனும் காலம்பனும் நீலனும் செய்யட்டும். எழுவனாற்றின் மணலுக்குள் சோழப்படையைப் புதைத்தொழிக்க நான் புறப்படுகிறேன். கொற்றவையின் பெரும்பசிக்கு திசையெங்கும் விருந்தளிப்போம்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 15, 2018 5:32 pm

றம்பின் வலைப்பின்னல்களில் செய்திகள் பறந்துகொண்டிருந்தன. தனது கூட்டில் இரை வந்து சிக்கிய கணத்தில் தூக்கம் கலைந்தெழும் விலங்குபோல் பறம்பு எழுந்தது. சிக்கிய இரையால் இனி ஒருபோதும் தப்ப முடியாது என அதற்குத் தெரியும். தாடை கிழிவதைப்போல வாயைப் பிளந்து கொட்டாவி விட்டபடி மெள்ள இரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது பறம்பு.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83a_1520340655
வடக்கும் தெற்குமாக நீண்டுகிடக்கும் பச்சைமலைத் தொடரில் இத்தனை நூறு ஊர்களிலும் ஒரே நேரத்தில் காரிக் கொம்பூதி யாரும் கேள்விப்பட்டதுகூட இல்லை. மலைத் தொடர் எங்கும் கொம்போசை அதிர்ந்து பரவிக்கொண்டிருந்தது.  கூவல் குடியினரின் முன்னெச்சரிக்கை ஒலிகள் எல்லை யில்லாத வேகத்தில் பாய்ந்துகொண்டிருந்தன.

`பறம்பின் மாவீரர்கள் அனைவரும் களம்நோக்கிச் சென்று விட்டால், படைகளை ஒருங்கிணைப்பது யார்?’ என்ற கேள்வி எழுந்தது. புறப்படும்போது பாரியின் உத்தரவு அதுவாகத்தான் இருந்தது. ``எவ்வியூரிலிருந்து மூன்று திசைப்படைகளையும் ஒருங்கிணைக்கும் வேலை வாரிக்கையனுடையது.”

பாரி தந்தையின் காலம்தொட்டு இக்காலம் வரை எண்ணற்ற தாக்குதலை நடத்தி அனுபவம் வாய்ந்த மாமனிதர் வாரிக்கையன்தான். அவர் அளவுக்கு முன்னனுபவத்தின் வழியே வழிகாட்டக்கூடிய இன்னொரு மனிதர் இல்லை. பாரி உத்தரவிட்ட  கணத்திலிருந்து வாரிக்கையன் வேலையைத் தொடங்கினார்.

கூத்துக்களத்தில் நீராட்டு முடிந்ததும் பாரி வடதிசை நோக்கிப் புறப்பட்டான். தேக்கனும் உதிரனும் தென்திசை நோக்கிப் புறப்பட்டனர். முடியனும் காலம்பனும் கீழ்த்திசை நோக்கிப் புறப்பட்டனர். மூன்று திசைகளுக்கும் தலைமை யேற்றவர்களோடு குழுவுக்கு ஆறு வீரர்களை மட்டுமே உடன் அனுப்பினார் வாரிக்கையன். எவ்வியூரில் இருக்கும் அனைத்து   வீரர்களும்   இப்போது  வாரிக்கையனுக்குத் தேவைப்பட்டனர். 

எதிரிகள் மூன்று திசைகளிலும் இருக்கின்றனர். எனவே, நிலைமைக்குத் தகுந்தபடி வழிகாட்டவும் செய்தியைப் பரிமாறவும் வாரிக்கையனுக்கு வலிமை மிகுந்த படை தேவை. அந்தப் படை, பறம்பின் அனைத்து திசைகளுக்கும் மின்னலெனப் பாய்ந்து செல்லும் படையாக இருக்க வேண்டும்; குதிரையிலும் குதிரை இல்லாமலும் விரைந்து செல்லும் படையாக இருக்க வேண்டும். அதற்கு  எவ்வியூர் வீரர்களே பொருத்தமானவர்கள். அவர்களால்தான் இந்த வேலைக்கு ஈடுகொடுக்க முடியும். போர்க்களத்தில் இணையற்ற வீரத்தை வெளிப்படுத்தக்கூடிய எவ்வியூர்க்காரர்கள் யாரையும் போர்க்களத்துக்கு அனுப்ப முன்வரவில்லை வாரிக்கையன். காட்டை ஊடறுத்து விலங்கெனப் பாயும் வேட்டைவீரர்களாக அவர்களைப் பயன்படுத்த முடிவுசெய்தார்.

களத்தில் போரிடுபவர் களுக்குத் தேவையான படைகளையும் ஆயுதங் களையும் தடையின்றி வழங்க வேண்டும். நெருக்கடியில் அவர் களுக்கான உத்தரவை வழங்க வேண்டிய பொறுப்பும் வாரிக்கையனுடையது.
உத்தரவிட்ட கணத்தில் கூத்துக்களத்திலிருந்து எல்லோரும் போர்முனை நோக்கிப் பாய்ந்து சென்ற போது, தனித்திருந்த வாரிக்கையனின் முன்னால் எண்ணிலடங்காத கேள்விகள் உருத்திரண்டு நின்றன. எதையும் செய்து முடிக்கக்கூடிய அனுபவ அறிவால் ஒவ்வொன்றுக்கும் விடைகண்டார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83b_1520340671
`ஒரே நேரத்தில் பறம்பின் மூன்று முனைகளிலும் போர் நடத்திய அனுபவம் இதுவரை  யாருக்கும் இல்லை. இந்தப் பெருந் தாக்குதலை எப்படி ஒருங்கிணைப்பது? செய்திகளை விரைவாகப் பரிமாறிக்கொள்ள வழி என்ன?’ என்று சிந்தித்தபடி தனது முதல் உத்தரவை அதிகாலை பிறப்பித்தார்.

சேரன் பாடிவீடமைத்திருக்கும் போர்முனையான ஆயிமலை தொடங்கி எவ்வியூர் வரை செய்திப்பரிமாற்றப் பின்னலை உருவாக்க, கூவல்குடியினருக்கு உத்தரவிட்டார். மிகநீண்ட தொலைவைக்கொண்ட இந்தப் பரப்பில் செய்தியைப் பரிமாறுவது மிகக்கடினமான பணி. ஏனென்றால், கூவல்குடியினரின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆனாலும் அவர்கள் அதற்கு ஆயத்தமாயினர்.

மற்ற இரு முனைகளும் இந்த அளவு ஆபத்துகொண்டவை அல்ல என்பது வாரிக்கையனின் கணிப்பு. அதனால்தான் கூவல்குடி முழுமையும் ஆயிமலை நோக்கி அணிவகுக்கச் செய்தார். எவ்வியூர் பாட்டப்பிறை யிலிருந்துதான் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. பறம்பில் உள்ள ஊர்களில் மிக அதிக எண்ணிக்கை தென்திசையில்தான் உள்ளன. அந்தத் திசையில் இருந்த நூற்றிருபது ஊர்களிலும் காரிக்கொம்பு ஊதப்பட்டது. தேக்கனின் சொல்லுக்காக அவ்வூரினர் காத்திருப்பர்.

கீழ்த்திசை ஊர்களில் நான்கில் ஒரு பங்கு ஊர்களை மட்டும் வேட்டுவன் பாறைக்கு வர உத்தரவிட்டான் முடியன். வடதிசைதான் மிகக் குறைவான எண்ணிக்கையில் ஊர்கள் இருக்கும் பகுதி. மொத்தம் இருப்பதே அறுபத்தேழு ஊர்கள்தாம். அந்த ஊர்களில் இருக்கும் வீரர்களைக் கொண்டுதான் ஆறாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உள்ள சோழப்படையைப் பாரி முறியடித்தாக வேண்டியிருக்கும் என மற்றவர்கள் எண்ணிக்கொண்டிருக்கும்போது, அதிலுள்ள இருபத்துநான்கு ஊர்களை மட்டும் ஆயத்தமாகும்படி செய்தி அனுப்பினான் பாரி.

எவ்வியூர் வீரர்கள், திசைதோறும் செய்திகளைக் கொண்டுசென்றனர். குதிரைப்பாதைகள் இரவுபகலாக இயங்கிக்கொண்டிருந்தன. சோழனுக்கு எதிராகப் பாரியும், பாண்டியனுக்கு எதிராக முடியனும் தீர்மானிக்கும் போர்க்களங்களை நோக்கி, தேவையான ஆயுதங்களையும் மருத்துவக்குடிகளையும் அனுப்பிவைக்க முழுவீச்சில் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. இந்த இருமுனை களிலிருந்தும் எவ்வியூருக்குச் செய்தியை ஒருங்கிணைக்கக் காரிக்கொம்பினையும் சென்றிப்பு கையையும் பயன்படுத்தலாம் என முடிவுசெய்து அதற்குத் தகுந்தபடி மலைதோறும் இடைவிடாது ஆள்கள் நிறுத்தப்பட்டனர்.

சிறுபாழி நகரிலிருந்து ஆயுதங்களைப் போர்க்களங்களை நோக்கித் தடையின்றிக் கொண்டுசெல்ல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆயுதங்கள் இடம் மாறத் தொடங்கின. எவ்வியூரின் ஆண் பெண் என்று ஒருவர்கூட மீதமில்லாமல் இரவுபகலாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பறம்பின் நடுப்பகுதியில் இருந்த 114 ஊர்களும் உத்தரவின்றித் தாக்குதலுக்குச் செல்லவேண்டாம் என்று கூறப்பட்டுவிட்டது. ஊரின் வீரர்கள் எல்லோரையும் ஆயத்தநிலையில் இருக்கச் சொன்னார் வாரிக்கையன். தேவையையொட்டி எந்தக் களத்துக்கும் அவர்கள் செல்லவேண்டியிருக்கும்.

இது ஒரு புது அனுபவம். எனவே, எல்லோரும் மகிழ்ந்தும் விரைந்தும் செய்தனர். ஊரார்கள் எல்லோரும் ஒன்றுகூடி, போர்க்களம் நோக்கி ஆயுதங்களை எல்லை பிரித்துக் கைமாற்றினர். மருத்துவக்குடிகளும் ஆயுதங்களோடு சேர்ந்து இடம்பெயர்ந்துகொண்டிருந்தன. கோடைக்காலம் ஆதலால் நீர் ஆதாரங்களைக் குறிவைத்தே பாதைகளை வகுத்துக்கொண்டனர்.

எவ்வளவு மறுத்தும் கபிலர் கேட்கவில்லை. ``தாக்குதல் நடக்கும் இடத்துக்கு வரவில்லை. அருகில் இருக்கும் ஊரில் இருந்துகொள்கிறேன்” என்று விடாப்பிடியாகச் சொல்லியதால் அவரைத்     தன்னுடன் அழைத்துச்செல்லச்   சம்மதித்தான் பாரி.

மூன்றாம் நாள் இரவு பாரியும் கபிலரும் சூளூரை அடைந்தனர். விடைப்பேறி நின்றுகொண்டிருந்தது  ஊர்.  `எழுவனாற்றில் எதிரிகளின் படை நுழைந்ததும் தாக்கும் உத்தரவை சூளூருக்கல்லவா வழங்கியிருக்க வேண்டும்?’ என ஊர் பெரியவர்கள் கோபம்கொண்டிருந்தனர். `எதிரியின் படையை யாரும் தாக்கவேண்டாம். எல்லோரும் அவரவர் ஊரிலே நிலை கொள்ள வேண்டும்’  எனப் பாரியிடமிருந்து வந்த முதற்செய்தியைச் செரிக்க முடியாமல் திணிறிக்கிடந்தன வடதிசை ஊர்கள்.

முன்னிரவு நேரத்தில் ஆறு வீரர்களோடு பாரியும் கபிலரும் வந்திறங்கியபோது வரவேற்றவர்களின் முகத்தில் சினமே நிலைகொண்டிருந்தது. ``எழுவனாற்றின் கரையில் இருக்கும் பதினோர் ஊர்களைக்கொண்டு எதிரியை அழிக்கும் உத்தரவை சூளூருக்கு ஏன் வழங்கவில்லை?” என்று கோபத்தோடு கேட்டார் ஊர் பெரியவர் பிட்டன்.

``தாக்குதல் தொடுக்கவேண்டிய உத்தியை எவ்வியூரிலிருந்து முடிவெடுப்பது பொருத்தமாக இருக்காது. அதனால்தான் நேரில் வந்தேன்” என்றான் பாரி.

பல்லாயிரம் வீரர்களைக்கொண்ட படையைப் பதினோர் ஊரார்களைக்கொண்டு எதிர்க்க சூளூர்க் காரர்கள் அனுமதி கேட்பதையும் அதற்குப் பாரி சொல்லும் மறுமொழியையும் கபிலரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

உணவருந்த அமர்ந்தனர். உண்மையில்லாத வெற்றுச்சொற்களைப் பயன்படுத்தும் பழக்கம் அறவே இல்லாதவன் பாரி. அப்படியிருக்க, பெரியவரின் கேள்விக்கு ஏன் இப்படி பதில் சொன்னான் எனக் கபிலருக்கு விளங்கவில்லை. ‘இத்தனை  பெரும்படையை அவ்வளவு எளிதாக எதிர்கொண்டுவிட முடியுமா?’ என்று சிந்தித்துக்கொண்டிருந்தார் கபிலர்.

உணவு முடிந்து ஊர் மந்தையில் கூடினர். சுற்றிலும் பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. நடுவில் இருந்த மேடையில்தான் பாரியும் கபிலரும் உட்கார்ந்திருந்தனர். இன்று வந்து சேரவேண்டிய செய்திக்காக அவர்கள் காத்திருந்தனர். பொழுது நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் கீழ்க்காட்டில் ஓசையை உணர முடிந்தது.

சிறிது நேரத்திலேயே ஆறு வீரர்களோடு இரவாதன் வந்துசேர்ந்தான். செய்தியைக் கேள்விப்பட்ட கணத்திலிருந்து சோழர்படையைப் பின்தொடர்ந்து சென்றவர்கள் இப்போது வந்துசேர்கிறார்கள்.

சாதாரண காலத்திலேயே இரவாதனைப் பார்க்கும்போது அடுத்த கணம் போரிடுவதற் கான துடிப்புடனும் தினவுடனும் நிற்பான். இப்போது அவனது வேகம் எப்படியிருக்கும் என்பதைக் காண கபிலர் காத்திருந்தார். வந்திறங்கிய அவன், நகரும் படையின் தன்மையை விளக்கத் தொடங்கினான். முன்னகரும் யானையின் எண்ணிக்கையிலிருந்து தொடங்கினான். அது ஏற்கெனவே தெரிந்த செய்தி என்பதால் கபிலருக்குப் பெரிய வியப்பேதும் இல்லை.

``முகத்தில் அடர்த்தியான மயிர்கொண்ட யானைகள். அவற்றின் தந்தங்கள் அனைத்தும் மஞ்சள் நிறத்தில் மட்டுமே இருக்கின்றன. எனவே, வயது இருபதுகளைத் தாண்டாது. மோதத் துடிக்கும் வயது இது” என்று அந்த யானைகளின் தன்மைகளைப் பற்றி விளக்கினான். அதன் பிறகு கபிலரால் இரவாதனை விட்டுச் சிறிதும் கண்விலக்க முடியவில்லை. அவனது கவனிப்பு சிந்தித்துக்கூடப் பார்க்க முடியாததாக இருந்தது.

ஆற்றுமணலில் ஏழு நாள்களுக்கு மேலாக நடந்த பின்னும் காலாட்படை வீரர்கள் சோர்வடையாமல் இருக்கின்றனர். மணலில் யானைகளால் இழுத்துச்செல்லப்படும் வண்டிகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர். சக்கரமற்ற அந்த வண்டிகளில் போதுமான பொருள்கள் ஏற்றப்பட்டுள்ளன. மணலின் தன்மைக்கேற்ப வண்டிகளின் பெரும் அணிவரிசை படையின் முன்புறம் தொடங்கி இறுதிவரை நகர்ந்துகொண்டிருக்கிறது. கழுதைகளின் மீதும் இதர விலங்குகளின் மீதும் பொருள்கள் ஏற்றப்பட்டு சாரைசாரையாக நடந்துகொண்டிருக்கின்றன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83c_1520340687
பாரி சற்றே வியப்போடு பார்த்தான். நீர் வற்றிய ஆற்றின் வழியாகப் படையை நகர்த்த எல்லாவகையான ஆயத்தங்களோடும் வந்துள்ளான் சோழன். எவ்வியூரை அடைவதற்கு எழுவனாற்று வழியே ஏற்றது என்பது எப்படி வெளிமனிதர்களுக்குத் தெரியவந்தது என்பது புரியாத ஒன்றாக இருந்தது.

யானைகளும் காலாட்படை வீரர்களும் அணியணி யாகப் பிரிக்கப்பட்டு, முழுமையாக ஒழுங்குபடுத்தப்பட்டு முன்னேறிக்கொண்டிருந்ததை இரவாதன் விவரித்து முடித்தான்.

இவ்வளவு சிறப்புமிக்க ஒரு வரவேற்பை ஹிப்பாலஸ் எதிர்பார்க்கவில்லை. அவனது நாவாய் புகாரின் துறைமுகத்துக்குள் நுழைந்தது முதல் அரண்மனைக்குள் அவன் காலடியெடுத்துவைப்பது வரை சோழவேந்தன் அவனைத் திகைப்புறச் செய்தான்.

கால்பாவைக் கண்டு பேச, புகார் நகரத்துப் பெருவணிகர்கள் எல்லோரும் ஆயத்தநிலையில் இருந்தனர். ஆனால், பிறர் கண்டுபேசவெல்லாம் மாமன்னர் தரும் விருந்து முடிவுற்ற பிறகுதான் என்று அமைச்சர் வளவன் காரி தெரிவித்துவிட்டான். ஆனால், விருந்து என்றைக்கு முடிவுறும் என்றுதான் யாருக்கும் தெரியவில்லை.

இன்று வரை யவனத்துடனான வணிகத்தில் பாண்டியன், சேரன் ஆகிய இருவருக்கும் அடுத்து மூன்றாம் நிலையில்தான் சோழன் இருக்கிறான். இந்நிலையில் ஹிப்பாலஸ் போன்ற யவன தேசத்தின் மாமனிதன் புகாருக்கு வருவதைப் பெரும்வாய்ப்பாகக் கருதினர். குடகடலில் வீசும் காற்று கால்பாவின் கப்பலுக்காகவே வீசுவதாகப் பேச்சுவழக்குண்டு.

கால்பா, யவனத்தின் மாபெரும் வணிகன். அவனது வணிகச்செயற்பாட்டில் இணைந்தே பெரும்பாலான தமிழ் வணிகர்கள் இருந்தனர். ஹிப்பாலஸும் கால்பாவும் புகார்த் துறையில் வந்து இறங்கியதைப் பெரும்வாய்ப்பாகப் பலரும் கருதினர். மாமன்னன் சோழவேந்தனும் அவ்வாறே எண்ணினான்.

வந்திறங்கிய மூன்று நாள்களும் ஆட்டம் பாட்டங்கள் இடைவெளியின்றி நடந்தேறின. சோழப்பேரரசன் செங்கணச்சோழன் படை நடத்திப் போயுள்ளதால் எல்லா விருந்துகளிலும் அவன் தந்தை சோழவேலனே கலந்துகொண்டார். சுமார் 15 ஆண்டுகள் சோழ நாட்டை ஆண்ட சோழவேலன் யவன வணிகத்தை வளப்படுத்த எண்ணிலடங்காத முயற்சிகளைச் செய்தவர். அதனால்தான் ஹிப்பாலஸும் கால்பாவும் வருகிற செய்தியை அறிந்ததிலிருந்து பெரும் உற்சாகத்தோடு விருந்துகளுக்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83d_1520340700
விருந்தினூடே பறம்புக்குப் படைநடத்திச் சென்றிருக்கும் செங்கணச்சோழனைப் பற்றிப் பேசப்பட்டது. தன் மகன் வெற்றிகொண்டு திரும்பும் வரை அவர்கள் இருவரும் புகாரில் தங்கியிருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் சோழவேலன்.

தனது பயணம், கடற்காற்றை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டது. எனவே, நீண்டகாலம் தங்கியிருக்க முடியாது என்று சொன்ன ஹிப்பாலஸ், ``அரசர் எந்த மாதத்துக்குள் திரும்புவார் என எதிர்பார்க்கிறீர்கள்?” எனக் கேட்டார்.

``இந்தப் போரின் கால அளவை மிகத் துல்லியமாகவே என்னால் சொல்லிவிட இயலும். ஆனால், அதுகுறித்து விருந்து மண்டபத்தில் பேச வேண்டாம். நாளை எனது மாளிகையில் விரிவாகப் பேசுவோம்” என்றார் சோழவேலன்.

மறுநாள் அதிகாலை புறப்பட்டான் பாரி. சூளூரின் மாவீரர்கள் ஆயத்தமாயினர். அவர்களை இருகூறுகளாகப் பிரித்தான். இரவாதன் தலைமையிலான ஒரு பகுதி வீரர்களை எழுவனாற்றின் வலக்கரைக்கு அனுப்பினான். பிட்டன் தலைமையிலான வீரர்களை எழுவனாற்றின் இடக்கரையில் பயணிக்க உத்தரவிட்டான். வலக்கரைப் பகுதியில் இருக்கும் பதினோர் ஊர்களை  இரவாதன் அழைத்துக்கொள்ள வேண்டும். இடக்கரையில் இருக்கும் பதின்மூன்று ஊர்களைப் பிட்டன் அழைத்துக்கொள்ள வேண்டும். எதிரிகளின் படை நகர்வுக்கு ஏற்ப இருபுறமும் மேற்புறக் காடுகளில் மறைவாக அவர்கள் வரவேண்டும்.

மலை முகடுகளில் பயணித்தபடி எதிரிப்படையின் நகர்வுகளைக் கவனித்து வருவான் பாரி. உரியநேரத்தில் அவனது உத்தரவுக்கேற்ப இருபக்கப் படைகளும் தாக்குதலைத் தொடுக்க வேண்டும் என்று விளக்கப்பட்டது. பாரியோடு எவ்வியூரிலிருந்து வந்த அறுவரும் சூளூர் வீரர்கள் அறுவருமாகப் பன்னிருவர் பயணப்பட்டனர். கபிலர், சூளூரில் தங்கவைக்கப்பட்டார்.

குதிரைப்பாதையில் வெப்புமலையின் முகடுகளில் பயணப்பட்டான் பாரி. மலையின் அடிவாரத்தில் எழுவனாற்று மணல் காலடித் தடங்களால் முழுவதும் புரண்டுகிடந்தது. அதைப் பார்த்தவண்ணம் ஆற்றுப் போக்கினிலே போய்க்கொண்டிருந்தான். அவனது மனதில் நீங்காத கேள்வி ஒன்று துருத்திக்கொண்டே யிருந்தது. ``எழுவனாற்றின் வழித்தடத்தை எப்படி அறிந்தான் இவன்?”

ஆங்காங்கே இருக்கும் ஊரார்கள் பாரியைக் கண்டு, சோழர்படையின் தன்மைகளை விளக்கியபடியிருந்தனர். எல்லாவற்றையும் கேட்டபடி அவன் பயணித்துக் கொண்டே இருந்தான். கோடைகாலம் உச்சம் தொட்டுக்கொண்டிருந்தது. காய்ந்த புற்களால் காட்டின் மேனியெங்கும் மஞ்சள் பரவிக்கிடந்தது. ஆனால், இத்தனை ஆயிரம்  பேர் உள்ள படையை நடத்திக் கொண்டு ஒருவன் நம்பிக்கையோடு முன்னேறிக் கொண்டிருக்கிறான்.

அன்று நண்பகல் முள்ளூர் பெரியவர், பாரி வரும் குதிரைப்பாதையில் காத்திருந்தார். முள்ளூரைச் சேர்ந்த வீரர்கள் எல்லோரும் பிட்டனோடு இணையப் போய் விட்டனர். ஊர் பெரியவர் மட்டும் பாரியிடம் சொல்லவேண்டிய செய்திக்காக முகட்டின் மீது காத்திருந்தார்.

மிகவும் இடுக்கான பாதையின் வழியே குதிரைகள் வந்துகொண்டிருந்தன. பாதையோரப் பாறையின் மீது அந்தப் பெரியவர் அமர்ந்திருந்தார். தொலைவிலிருந்து பார்த்தபோது கழுகு ஒன்று பாறையின் மீது உட்கார்ந்திருப்பதுபோலத் தெரிந்தது.

பாரியைப் பார்த்ததும் பாறையின் மீதிருந்து சரிந்து இறங்கினார் கிழவர். குதிரையை விட்டு இறங்கிய பாரி, அவரை அணைத்து மகிழ்ந்தான். எப்போதும் மகிழ்வோடு இருக்கும் அவரின் முகத்தில் சிறு கவலை இருப்பதை, பாரி பார்த்த கணமே புரிந்துகொண்டான்.

இருவரும் பாறையின் பின்புற நிழலில் பேசியபடியே அமர்ந்தனர். ``படையின் எண்ணிக்கை பொருட்டல்ல; அதன் தன்மை சற்றே வியப்பூட்டுவதாக இருக்கிறது. அதை உன்னிடம் நேரில் தெரிவிக்கவே வந்தேன்” என்றார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83e_1520340715
``என்ன?” என்று கேட்டான் பாரி.

``குறும்பியூர்க் கணவாயின் வழியாக அவன் எழுவனாற்றுக்குள் நுழைந்து பத்து நாள்களுக்கும்மேல் இருக்கும். இந்தக் கொடும்கோடையிலும் இவ்வளவு பெரிய படைக்கான நீர் ஆதாரத்தை அவனால் வற்றிய இவ்வாற்றில் உருவாக்கிக்கொள்ள முடிகிறது” என்றார்.

பாரி, அவர் சொல்லவருவதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். சொல்லி முடித்த வார்த்தையைத் தொடராமல் நிறுத்திக்கொண்டார் கிழவர். சற்றே இடைவெளிக்குப் பிறகு பாரி கேட்டான், ``ஆறு காய்ந்து கிடந்தாலும் அடிமணலுக்குள் இருக்கும் ஊற்றுநீரைப் பயன்படுத்த முடியும்தானே?”

கிழவர் சொன்னார், ``இல்லை பாரி. அவர்கள் ஆற்றுமணலில் இங்கும் அங்குமாக எல்லா இடங்களிலும் குழிதோண்டி நீர் எடுக்கவில்லை. நாள்தோறும் தங்கும் இடத்தை மையப்படுத்தி முன்புறம் இரண்டு கிணறுகளும் பின்புறம் இரண்டு கிணறுகளும் வெட்டுகின்றனர். அந்த நான்கு கிணறுகள்தான் இத்தனை ஆயிரம் வீரர்களுக்கும், இத்தனை நூறு யானைகளுக்கும் நீர் தருகின்றன.”

கிழவரின் சொல், வியப்பை ஏற்படுத்தியது. ``பச்சைமலையின் மற்ற ஆறுகளைவிட எழுவனாறு நீரோட்டம் குறைந்த ஆறுதான். ஆனால், அந்த ஆற்றில் வறண்ட இந்தக் கோடையில் இத்தனை ஆயிரம் பேர் அருந்துவதற்கு ஏற்ப நீரோட்டம் உள்ள கிணறுகளை எப்படி இவர்களால் தோண்ட முடிகிறது? படை நடந்து கடந்த வழியில் குறும்பியூர்க் கணவாய் வரை போய்த் திரும்பிவிட்டேன். அவர்கள் தோண்டியுள்ள எல்லாக் கிணறுகளிலும் வற்றாமல் நீர் இன்னும் இருக்கிறது. அதுகூட வியப்பில்லை. நாள்தோறும் அவர்கள் தோண்டும் நான்கு கிணறுகளில் இரண்டு `கடுத்த நீர்’ இருக்கும் கிணறுகளாக இருக்கின்றன.”

பாரியின் முகக் குறிப்பில் சிறு மாற்றம் உருவானது. ``கடுத்த நீர் அருந்திய யானைகளுக்கு எளிதில் தாகம் ஏற்படாது” என்று கிழவர் சொன்னபோது `தெரியும்’ என்பதுபோலத் தலையசைத்தான் பாரி.

``வறண்ட ஆற்றில் இவ்வளவு துல்லியமாக நீரையும் நீரின் தன்மையையும் கண்டறிந்து பயன்படுத்தியபடி அவர்கள் முன்னேறுகின்றனர். போரிடும் அரசப்படை என்று மட்டும் இதைக் கணித்துவிட வேண்டாம். பல்வேறு ஆற்றல்கொண்டவர்கள் இதற்குள் இருக்கின்றனர்” என்றார் கிழவர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83f_1520340733
பாரியின் சிந்தனை மீண்டும் முதற்புள்ளிக்கே போனது. `பெரும்படைக்குத் தேவையான நீர்வளம் இருக்கும் பாதையாகத்தான் இதைத் தேர்வுசெய்தார்களா அல்லது இதுதான் சரியான பாதை எனத் தெரிந்து தேர்வுசெய்தார்களா?’ என்று எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தபோது கிழவர் சொன்னார், ``எனது சிந்தனைப்படி நாளை இரவு இவர்கள் சுழிப்பள்ளத்தை அடைவார்கள். அங்கு எழுவனாற்றோடு வட்டாறு வந்து கலக்கிறது. அகலத்தில் எழுவனாற்றைவிட வட்டாறே பெரியது. புதிதாய்ப் பார்ப்பவர்கள் அதுதான் மூல ஆறு என்று நினைப்பார்கள். இவர்களும் அப்படி நினைத்து அத்திசையில் திரும்பிவிட்டால் எவ்வியூருக்குத் தொடர்பே இல்லாத திசையிலே பயணப்படுவார்கள். அதுமட்டுமன்று, வட்டாறு கடும்பாறை நிலங்களை வழித்தடமாகக்கொண்டது, எளிதில் இவர்களால் நீரைக் கண்டறிய முடியாது. தனது போக்கிலே இப்படை அழிவுக்குள் சிக்கிக்கொள்ளும்” என்று கிழவர் சொன்னார்.

ஆனால், பாரியின் உள்மனத்துக்குத்தான் தெரியும், அவன் எழுவனாற்றின் வழியே எவ்வியூர் நோக்கி முன்னகர்ந்தால்கூட ஆபத்தேதும் இல்லை. வட்டாற்றில் திரும்பினால்தான் ஆபத்தென்று.

மறுநாள் சோழவேலனின் விருந்து மண்டபத்தில் சந்தித்தனர். வழக்கம்போல் பரிமாறல்களில் பொங்கி வழிந்துகொண்டிருந்தது தேறல். சோழவேலன் தனது நாட்டின் சிறந்த கள்ளைக் கொடுத்தபடி பேச்சைத் தொடங்கினார். உடன் அமைச்சர் வளவன் காரி இருந்தார். கடலோடிகளின் குடிக்கு இணை சொல்ல முடியாது. உள்ளிறங்கும் நீர்மட்டம் உயரட்டும் எனக் காத்திருந்த ஹிப்பாலஸ் பொருத்தமான நேரத்தில் தொடங்கினான், ``திரையர்களை வெற்றிகொள்ள முடியாமல் சோழர்படை பாதியில் திரும்பியதாகக் கேள்வியுற்றேன். அப்படியிருக்க, இப்போது பறம்பின் மீது படையெடுத்துப் போய் எப்படி வெற்றிகொள்ள முடியும்?”

``திரையர்கள் பற்றி வெளியுலகுக்கு ஆதிகாலம்தொட்டே அதிகம் தெரியும். வெளியுலகுக்குத் தெரியாத, ஆனால் திரையர்களைவிட வலிமையான குடியினர் கிழக்குத் திசையில் உள்ள தாளமலையில் உள்ளனர். அவர்களின் பெயர் நெடுங்காடர்கள். `திரையர்களைக்கூட நெருங்க முடியும். ஆனால், நெடுங்காடர்களை நெருங்கவே முடியாது’ என்றுதான் செய்திகள் சொல்லப்பட்டன. ஆனாலும் செங்கணச்சோழன் துணிந்து தாளமலையை முற்றுகையிட்டான். பல மாதகால முற்றுகை. இயற்கையாக அமைந்த மழைவெள்ளத்தால் நெடுங்காடர்கள் குடியிருப்புப் பகுதியில் பெரும்பாறைச்சரிவு ஏற்பட்டது. அவர்கள் ஒருங்கிணைய முடியாத நிலை உருவானது. அதை சாதகமாகப் பயன்படுத்தி நெடுங்காடர்களை முழுமையாக வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உருவானதால்தான் திரையர்களை நோக்கி நகர்ந்த படைப்பிரிவின் தலைவன் திதியனைப் பின்வாங்கிவர உத்தரவிட்டோம். செங்கணச்சோழன் மொத்தப் படையையும் ஒருமுகப்படுத்தி நெடுங்காடர்களைச் சூழந்து தாக்கினான்” என்றார்.

நெடுங்காடர்களைப் பற்றி இதுவரை ஹிப்பாலஸ் கேள்விப்பட்டதில்லை. பேச்சு அதைச் சுற்றியே இருந்தது. சோழவேலன் சொன்னார், ``கீழ்நெடுங்காடர்கள், மேல்நெடுங்காடர்கள், குறுங்காடர்கள் என்று மூன்று பிரிவினர் உண்டு. நாங்கள் அறிந்தவரை காடு பற்றி இவர்களின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் இணை சொல்ல யாரும் இல்லை. மனிதனே புக முடியாத கொடிய காட்டுக்குள் இவர்கள் நுழைந்தால்கூட உணவு, நீர், வழித்தடம் ஆகிய மூன்றையும் கணநேரத்தில் உருவாக்கிவிடுவார்கள்.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83g_1520340752
ஹிப்பாலஸ் திகைத்துப்போனான். சோழவேலன் தொடர்ந்தார், ``பத்து ஆண்டுகளுக்குமேலாகப் போர் முயற்சியில் இருக்கும் சேரனால்கூட பறம்பை ஒன்றும் செய்ய முடியவில்லை.   ஆனால், வெகுதொலைவில் இருக்கும் எங்களால் பறம்பை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை எளிதிலா ஏற்பட்டிருக்கும்?”

ஹிப்பாலஸுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. சோழவேலன் தனது நரைத்த தலைமுடியை விரல்களால் கோதியபடியே சொன்னார், ``பறம்பின் உட்காடுகள் வரை போகக்கூடிய பாதையை நன்கு அறிந்தவர்கள் நெடுங்காடர்கள். பறம்பின் எல்லைக்குள் எமது படை நுழைந்து பதினான்கு நாள்களாகிவிட்டன. நான்கு நாள்கள் இடைவெளியில் எனக்குச் செய்தி வந்துசேர்கிறது. அப்படியென்றால், பறம்புக்குள் நுழைந்து பத்து நாள்கள் வரை பாரி தாக்குதல் தொடுக்கவில்லை. இவ்வளவு பெரும்படை உள்ளே நுழைந்ததை இரு நாள்களுக்குள்ளேயே அவன் அறிந்திருப்பான். ஆனால்,  இந்தப் படையின் தன்மையை உணர்ந்த கணமே அவன் வில்லினை உயர்த்தும் ஆற்றலை இழந்திருப்பான்.”

பறம்பின் எல்லைக்குள் பத்து நாள்களுக்குமேலாகப் படை சென்றுகொண்டிருக்கிறது என்பதை ஹிப்பாலஸ்ஸால் நம்பவே முடியவில்லை. உதியஞ்சேரலால் இத்தனை ஆண்டுகளாகியும் முடியாததைச் சோழர்கள் எளிதாகச் சாதித்துக்கொண்டிருக்கின்றனர் என்று எண்ணிய ஹிப்பாலஸ், தனது வியப்பை மேலும் வெளிக்காட்டாமல் இருக்க முயன்றான். கூர்மையாகச் சிந்திப்பதைப்போல சற்றுநேரம் அமைதியாக இருந்தான்.
தனது புகழின் மீதான பெருமிதத்தை அடுத்தவன் கண்களின் வழியே பார்ப்பது அளவிட முடியாத மகிழ்வைத் தரக்கூடியது. அதுவும் கிரேக்கத்தின் பெருவணிகனும் கடல் வழித்தடத்தின் தளகர்த்தனும் இமை மூடாமல் சோழப்பேரரசின் வலிமையைத் தனது சொல்கொண்டு பார்த்திருக்க, சோழவேலனால் வார்த்தைகளை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?

``பெரும்படைகொண்டு வெற்றிகொள்ள சமதளத்தில் எண்ணற்ற நாடுகள் இருக்க, பறம்பினை நோக்கி ஏன் படையெடுத்துள்ளார் சோழப்பேரரசர்?” எனக் கேட்டான் ஹிப்பாலஸ்.

சற்றே புன்முறுவலோடு அவனது கேள்வியை எதிர்கொண்ட சோழவேலன், ஒளிவீசும் செவ்வண்ணக் கோப்பையைக் கையில் ஏந்தினார்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 15, 2018 9:50 pm

ருக்கன்குன்றை அடுத்து ஆயிமலை நீண்டுகிடக்கிறது. ஆயிமலையின் மேல்முகட்டைப் பறம்பின் மக்கள் கடப்பதில்லை. அந்தத் திசையின் அடர்காடுகளில் சேர நாட்டினரே வேட்டையில் ஈடுபடுகின்றனர். எனவே, அப்போதிலிருந்து அது அவர்களின் பகுதியாகவே கருதப்படுகிறது. அந்தக் காட்டின் நடுவில்தான் குட்டநாடும் குடநாடும் இப்போது தத்தம் படைகளை ஒருங்கிணைத்துள்ளன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83a_1521022716
குடவர்கோ போர்க்களம் வரவில்லை. அவருக்குப் பதில் அமைச்சன் கோளூர்சாத்தனே வந்திருந்தான். குட்டநாட்டு வேந்தன் உதியஞ்சேரல் தாக்குதலின் முழுத் தன்மையையும் தீர்மானிப்பவனாக இருந்தான். இரு நாட்டுத் தளபதிகளான துடும்பனும் எஃகல்மாடனும் அவனது உத்தரவை நிறைவேற்ற ஆயத்தநிலையில் இருந்தனர். ஆயிமலையின் இடப்புற விளிம்பின் வழியாக எஃகல்மாடன் தலைமையிலும் வலப்புற விளிம்பின் வழியாக துடும்பனின் தலைமையிலும் பறம்புக்குள் படையெடுக்க முடிவுசெய்திருந்தனர்.

நேரெதிராக இருந்த இருக்கன்குன்றின் உச்சியில் நிலைகொண்டிருந்தான் கூழையன். தேக்கனும் உதிரனும் வந்துசேர்ந்தனர். அருகில் இருந்த ஊர்களைச் சேர்ந்த நூறு வீரர்கள் கூழையனோடு இருந்தனர். தேக்கனிடம் நிலைமையை விவரித்தான் கூழையன். எதிரிப்படையின் எண்ணிக்கையைத் தோராயமாகத்தான் சொல்ல முடிந்தது. ``ஆயிமலையின் மேல்முகடுகளில் இருந்துதான் நம்மால் பார்க்க முடியும். மலையின் கீழ்ப்பகுதியில் உள்ளொடுங்கிய அடர்காட்டுக்குள் அவர்கள் இருப்பதால், அவர்களின் எண்ணிக்கையைச் சரியாக மதிப்பிட முடியவில்லை” என்றான் கூழையன். ஆனால், இருவர் படைகளும் காட்டுக்குள் வந்துவிட்டதை உறுதிசெய்தான். ``அவர்களின் தாக்குதல் திட்டத்தைத்தான் கணிக்க முடியவில்லை’’ என்றான்.

தேக்கன் நிலைமையைப் புரிந்து கொள்ள நேரமெடுத்துக் கொண்டான். சேரர்கள் இருவரையும் எளிதாக நினைத்துவிடக் கூடாது என அவனுக்குத் தெரியும். `கூழையனின் கூற்றுப்படி சேரப்படை முழுமையாக வந்து இரு வாரங்களாகப்போகின்றன. ஆனால், இன்னும் அந்த இடம் விட்டு அசையாமல் ஏன் இருக்கிறான்? அவனது காத்திருப்பு எதற்காக?’ - தேக்கன், கேள்விகளை எழுப்பியபடியே இருந்தான்.

``சேரன் ஆயிமலையின் இடப்புற விளிம்பு அல்லது வலப்புற விளிம்பு என ஏதேனும் ஒன்றின் வழியாகத்தான் உள்ளே நுழைந்தாக வேண்டும்” என்று கூழையன் சொன்னபோது, ``ஏன், இரண்டு பக்கங்களிலும் ஒருசேர உள்ளே நுழைய மாட்டானா?” எனக் கேட்டான் தேக்கன்.

``வாய்ப்பிருக்கிறது” என்றான் கூழையன்.

``இந்த இரண்டு பக்கங்களிலும் அவனது படையை எதிர்கொள்ள நாம் ஆயத்தமாவோம் என அவனுக்குத் தெரியுமல்லவா, பிறகு ஏன் அவன் காலம் தாழ்த்திக்கொண்டிருக்கிறான்?”

கூழையனிடம் பதில் இல்லை.

``நம்மை இங்கு கவனம் செலுத்தவைத்து, அவன் வேறு திசையில் நுழைய மாட்டானா?” எனக் கேட்டான் உதிரன்.

``இல்லை, வேறு எங்கும் அவனது படை நிலைகொள்ளவில்லை. இங்குதான் அவன் மையமிட்டுள்ளான்” என்றான் கூழையன்.

எப்படிச் சிந்தித்தாலும் அவனது செயலின் காரணம் பிடிபடவில்லை.

அன்றிரவு தேக்கன் எந்த முடிவும் எடுக்கவில்லை. `உதியஞ்சேரல் ஏன் காத்திருக்கிறான்? அவனுக்குத் தேவையான செய்தி வந்து சேரவில்லை அல்லது அவன் நினைத்த இடத்தில் எதிரிகளாகிய நாம் வந்து சேரவில்லை. இந்த இரண்டு காரணங்கள்தாம் இருக்க முடியும். சோழனும் பாண்டியனும் படையெடுத்துள்ள செய்தி அறிந்து அவர்களின் தாக்குதலுக்காகக் காத்திருக்கலாம் அல்லது நாம் ஆயிமலையின் எந்த விளிம்பில் அவனை எதிர்கொள்ள அணிவகுக்கப்போகிறோம் என்பதை அறியக் காத்திருக்கலாம்’ என்று சிந்தித்தபடியிருந்தான். 
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83b_1521022743
பின்னிரவு தொடங்கியது. தேக்கன் சொன்னான், ``நாளை காலை இரு விளிம்புகளிலும் நமது படையை அணிவகுக்கச்செய்வோம். அதன் பிறகும் அவன் முன்னகரவில்லை என்றால், சோழ, பாண்டியப் படையெடுப்போடு ஏதோ ஒருவகையில் இவனது திட்டம் ஒருங்கிணைந்துள்ளது என்று பொருள்.”

கூழையனும் உதிரனும் தேக்கனின் சொல்லோடு முரண்பட முடியாமல் அமைதிகாத்தனர். தேக்கன் சொன்னான், ``அப்படியோர் ஒருங்கிணைப்பு இருப்பதாக நாம் முடிவுக்கு வந்தால், எதிரிகளை நோக்கி நமது படை முன்பாய்ச்சலில் சென்று தாக்கவேண்டியிருக்கும்.”

தேக்கனின் கூற்று சரியெனப்பட்டது. திட்டத்தை நடைமுறைப்படுத்துவதைப் பற்றிப் பேசினர். இடப்புற விளிம்பில் உதிரனின் தலைமையில் இருபது ஊர்களையும், வலப்புற விளிம்பில் கூழையனின் தலைமையில் இருபத்தாறு ஊர்களையும் அணிவகுக்குமாறு தேக்கன் சொன்னான். குதிரைப்படையினரோடு குன்றின் மேல்முகட்டில் அமைந்துள்ள இந்த இடத்திலிருந்து இரு பக்க நிலைமைக்கு ஏற்ப முடிவெடுத்துத் தாக்குதலை வலுவூட்டுவது தேக்கனின் வேலை என முடிவானது.

திட்டமிட்டபடி கூழையனும் உதிரனும் ஆயிமலையின் விளிம்புகளில் எதிரிகளைத் தாக்க ஆயத்தமாயினர். வலிமைமிகுந்த குதிரைப்படையோடு இருக்கன்குன்றின் மேலே நின்றபடி இரு பக்க நிலைமைகளையும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான் தேக்கன்.

மறுநாள் முழுவதும் எதிரிகளிடம் எந்த அசைவும் இல்லை. காத்திருந்தான் தேக்கன்.

விருந்து மண்டபம் கோடையின் வெக்கையைச் சிறிதும் உள்ளிறக்காமல் இருந்தது. ஆனால், தேறல் கணக்கின்றி உள்ளிறங்கிக்கொண்டிருந்தது. ஹிப்பாலஸ், குடியில் பேரார்வம் கொண்டவனைப்போலக் காட்டிக்கொண்டிருந்தான். ஆனால், அவன் குடிக்கும் வழக்கமான வேகம் இன்றில்லை. காரணம், அவனது தேவை வேறொன்று.

சோழவேலன் சொன்னார், ``எவ்வளவு அடர்கானகத்தில் இருந்தாலும் தேவையான அளவு வழியமைப்பதில் வல்லமை வாய்ந்தவர்கள் குறுங்காடர்கள். இருக்கையின் மீதிருக்கும் தூசியை ஊதித்தள்ளுவதைப்போல பின்னிக்கிடக்கும் செடிகொடிகளையும் புதர்களையும்  விலக்கி  எளிதில்  வழியமைப்பார்கள். கீழ்க்காடர்களோ, நீரும் வேரும் கிழங்கும் அறிந்தவர்கள். மண்ணுள் இருக்கும் அனைத்தையும் பற்றி அவர்களைப்போல் அறிந்த இன்னோர் உயிர் இல்லை என்றே சொல்லலாம். மேல் மண்ணை மோந்து அடிமண்ணைக் கண்டறியும் ஆற்றல் கொண்டவர்கள். மண்ணுள் மணிக்கற்கள் இருக்கும் இடத்தில் நன்கு வேர்விட்டு வளரக்கூடியது `கருநொச்சி’ என்று கண்டறிந்தவர்கள் அவர்களே. அதனால்தான் கருநொச்சி இருக்கும் நிலத்தில் புதையல் இருக்கும் என்று மக்கள் நம்பத் தொடங்கினார்கள்.

மேல்காடர்களோ நிலத்தின் மேற்புறத்தைத் தமது உடலின் மேற்புறம்போல பாவிப்பவர்கள். மரம், செடிகொடி என அனைத்தையும் இருக்கும் நிலையிலேயே ஆயுதமாக மாற்றத் தெரிந்தவர்கள். இவர்கள் மூவரும் ஆதியில் ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகள். `அந்த ஆதித்தாய், மண்ணுள்ளிருந்து விளைந்தவள்; மண்ணாலானவள்’ என்று சொல்கிறார்கள். அதனால்தான் இன்றும் மண் போர்த்தி உறங்கும் பழக்கம் அவர்களிடம் உண்டு.”

ஹிப்பாலஸ், இதுவரை இப்படியொரு பழக்கமிருக்கும் மனிதர்களைப் பற்றிக் கேள்விப்பட்டதேயில்லை. மிரண்டு நின்றான்.

``கிழக்குப் பகுதி மலையின் ஆதிகுடிகள் இவர்கள். பச்சைமலைத்தொடர்போல் ஒற்றைக்குணம் கொண்ட நீள்மலையல்ல அது. ஒவ்வொரு குன்றுக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. கிழக்கும் மேற்கும் எதிர்த்திசைகளைப்போல இந்த இரு திசைகளில் உள்ள மலைமனிதர்களும் எதிரெதிர்த் தன்மைகளைக் கொண்டவர்களே!”  

இத்தனை தலைமுறைகளாகத் தமிழ் நிலத்தோடு வணிகம் நடந்திருந்தும் இதுவரை கேள்விப்பட்டிராத செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்தான் ஹிப்பாலஸ்.

சோழவேலன் தொடர்ந்தார். ``காட்டின் ஆதிக்குணங்களைத் தங்களின் குருதி நாளங்களில் உணர்ந்தவர்கள் நெடுங்காடர்கள். எனவே, அவர்களைக்கொண்டே படையெடுப்பின் முறைமையை வகுத்துள்ளான் என் மகன் செங்கணச்சோழன். சோழநாட்டு நிலைப்படையின் தேர்ந்த வீரர்கள் மட்டுமே இந்தப் படையெடுப்பில் பங்கெடுத்துள்ளனர். நெடுங்காடர்கள் கவசமென அணிவகுக்க, பறம்பை ஊடுருவிச் சென்றுகொண்டிருக்கிறது சோழப்படை. அது சமதளப்போரில் எவ்வளவு ஆற்றல்வாய்ந்த தாக்குதலை நடத்துமோ அதைவிட வலிமையான தாக்குதலை இப்போது காடுகளுக்குள் நடத்த வல்லது” என்றான்.

விழித்த விழி நகராமல் நின்றது. `சேரனையும் பாண்டியனையும் கடந்தவனாக இருக்கிறான் சோழன்’ எனத் தோன்றியது. இந்த எண்ணம் தோன்றிய மறுகணமே `தான் கேட்ட கேள்விக்கான விடையைச் சொல்லாமல், மற்ற செய்திகளைச் சொல்வதன் மூலம் பேச்சை திசைதிருப்புகிறார் சோழவேலன்’ என்றும் தோன்றியது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83c_1521022770
ஹிப்பாலஸ், ஆழ்ந்து சிந்தித்து `அவரின் வழியையே நாமும் பின்பற்றுவோம்’ என நினைத்துக் கேட்டான், ``இவ்வளவு வலிமைகொண்ட படை இருக்குமேயானால், நீங்கள் வெல்வதற்குப் பேரரசுகள் இருக்கின்றனவே. ஏன் பறம்பின் மீது படையெடுக்க வேண்டும்?”

உற்சாகத்தோடு பீறிட்ட சொற்கள் சட்டென நின்றன. வேகம் முறிந்ததுபோலானது. அமைதி சூழ்ந்தது.

சோழவேலன் சொல்லத் தயங்குகிறாரா அல்லது எப்படித் தொடங்குவது எனச் சிந்திக்கிறாரா என்பதை ஹிப்பாலஸால் கணிக்க முடியவில்லை. சற்று அமைதிக்குப் பிறகு ஹிப்பாலஸைப் பார்த்து சோழவேலன் கேட்டார், ``ஒரு நாட்டைச் செழிப்புமிக்க நாடு என எதை வைத்துத் தீர்மானிப்பீர்கள்?”

``அது மனிதர்கள் தீர்மானிப்பதன்று; அந்நாட்டின் சேமிப்பறைகளில் இருக்கும் பொன்னும் மணியும் முத்தும்தாம் தீர்மானிக்கின்றன.”

``சரியாகச் சொன்னீர்கள். யவனர்களாகிய நீங்கள், இந்நிலத்தில் நடக்கும் அரசாட்சிகளையும் நாடுகளையும் நன்கு அறிந்தவர்களாயிற்றே! நீங்களே சொல்லுங்கள், இந்த நிலத்தில் செழிப்புமிக்க நாடு எது?”

இதுபோன்ற பேச்சுகளில்தான் ஆழமான மனக்காயங்கள் உருவாகின்றன. அவை வணிகத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வார்த்தைகளுக்குக் கொடுக்கப்படும் விலையை நீதிமானோ, உழவனோ அறிந்ததைவிட வணிகனே அதிகம் அறிந்திருப்பான். எனவே, விடை சொல்வதைத் தவிர்த்தான் ஹிப்பாலஸ்.

``ஏன் தயங்குகிறீர்கள், நீங்கள் நினைப்பதைச் சொல்லுங்கள்?”

சொல்ல முடியாமல் தவித்தவன் தயக்கத்தை உடைத்து மெள்ளச் சொன்னான் ``பொன்னும் மணியும் முத்துக்களைவிட மதிப்பு உயர்ந்தன. ஆனால், அவை மிகக்குறைவாகவே கிடைக்கின்றன. முத்துக்களோ அளவிடற்கரிய முறையில் கிடைக்கின்றன. பெரும்முத்துக்குளியலை நாள்தோறும் நடத்திவரும் பாண்டியநாடே செழிப்புமிக்கது.”

தலையசைத்துச் சிரித்தான் சோழவேலன் ``இப்படித்தான் தவறுதலாக மதிப்பிடுகிறீர்கள்.”

``இதில் என்ன தவறு இருக்கிறது?”

``முத்துக்களைவிடப் பொன்னும் மணியும்தாமே மதிப்பில் உயர்ந்தன?”

``ஆமாம்.”
``அந்தச் செல்வத்தை அளவிட முடியாத அளவு வைத்துள்ளது யார்?”

சற்றே தயங்கியபடி ``தெரியவில்லை” என்றான் ஹிப்பாலஸ்.

ஹிப்பாலஸின் முகத்தைக் கூர்ந்துபார்த்து, புருவங்களை உயர்த்தியபடி சொன்னார், ``பறம்பின் பாரி.”

கண்கள் பிதுங்க விழித்தான் ஹிப்பாலஸ். `என்ன சொல்கிறான் சோழவேலன்’ என்பதைப் புரிந்துகொள்ள முடியாத குழப்பத்தை, அவனது முகம் காட்டியது.

``நான் சொல்வதை உங்களால் ஏற்க முடியவில்லை அல்லவா?”

``ஆம்’’ எனத் தலையசைத்தான்.

``பச்சைமலைத்தொடரின் நீளம் அறிவீர்களா நீங்கள்?”

``எங்களின் நாவாய்கள் குமரிமுனை திரும்பினால் கரையையொட்டி ஒரு மாதகாலம் பயணப்பட்டு, சுபாகரா இடத்தில் மேற்குத் திசையில் திரும்புகின்றன. அந்த இடம் வரை நீண்டுகிடக்கிறது என நினைக்கிறேன்.”

``ஆமாம். நீங்கள் சொல்வது மிகச்சரி. கண்காண முடியாத தொலைவு நீண்டுகிடக்கும் இந்தப் பச்சைமலைத்தொடர் முழுவதையும் தம் வாழ்விடமாகக் கொண்டவர்கள்தாம் பதினான்கு வேளிர்குடிகள்.

மலையுள் உள்ள குகைப்பாறைகளின் சுரங்கங்களிலும் ஆற்றிலும் பள்ளத்தாக்கிலும்தான் விலை உயர்ந்த மணிக்கற்கள் கிடைக்கின்றன. உங்களின் யவனப் பேரரசர் உட்பட எல்லா நாட்டு வேந்தர்களும் செல்வந்தர்களும் எண்வகைத் திருமணிகளையே வாங்கவும் அணியவும் சேமிக்கவும் விரும்புகிறோம்.”

அமைதிகொண்டு கேட்டான் ஹிப்பாலஸ்.

``வெருகின் கண்போல முழுப்பச்சை நிறத்தின் நடுவில் செங்குத்தான வெண்கோடு ஒளிருமே பூமர வைடூரியம். அதைத்தானே யவனர்களாகிய நீங்கள் மிக உயர்ந்ததாகக் கருதுவீர்கள்?”

``ஆமாம்.”
 
``அந்த வகையான வைடூரியம் மிக அதிகமாகக் கிடைப்பது உடுவன்மலையில். அந்த மலையை ஆள்பவன் வேள் அழுந்துவன்.”

`இதை எதற்குச் சொல்கிறார்?’ எனச் சிந்தித்தான் ஹிப்பாலஸ்.

``தேன்துளியின் மீது கதிரவன் ஒளிபட்டு மின்னுவதுபோல் இருக்குமே அது என்ன வகை வைடூரியம்?” எனக் கேட்டார்.

ஹிப்பாலஸுக்கு, சட்டெனப் பெயர் நினைவில் வரவில்லை. சோழவேலன் சொன்னார், ``வாலவாயம். அது கிடைப்பது தணக்கன் குன்றில். அந்த இடம் நெடுவேள் ஆதனின் மலைப்பகுதியைச் சேர்ந்தது. அவனது மலைக்கு அடுத்து இருப்பதுதான் பன்றிமலை. மயிலின் கழுத்துபோலக் கார்நீலம் இறங்கி ஓடும் வைரக்கல் கிடைக்கும் இடம் அதுதான்” என்று பட்டியலிட்டார் சோழவேலன்.

இவரது பேச்சு எதை நோக்கிப் போகிறது என்பதை ஹிப்பாலஸால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஹிப்பாலஸின் முகத்தைக் கூர்ந்து பார்த்தபடி சோழவேலன் கேட்டார், ``எங்கள் வேந்தர்கள் மிகவும் விரும்பி அணியும் வைடூரியம் எது தெரியுமா?”

``தெரியாது” என்றான்.

``முயலின் குருதி சிற்றகலின் ஒளி பட்டுத் திகைத்துத் திகைத்து ஒளி சிந்தும். அதன் ஒவ்வொரு மினுக்கும் ஒவ்வொரு நிறத்தில் இருக்கும். அந்த வகையிலான வைடூரியத்தை `துகிர்கனகம்’ என்போம். அதுதான் இந்த நிலமெங்கும் இருக்கும் வேந்தர்கள் விரும்பி அணிவது. அது கிடைக்கும் இடம் புடவூர் வேளன்குன்றில்.

சொல்லியபடி இருக்கையை விட்டு எழுந்தார் சோழவேலன். ஹிப்பாலஸும் உடன் எழுந்தான். விருந்து மாளிகையின் எதிர்ப்புறச் சுவரை நோக்கி மெள்ள நடந்தபடி சோழவேலன் கேட்டார், ``யவன வணிகர்கள் நீலமணிக்கற்களை மிக அதிகமாக வாங்குவது எந்த நாட்டில்?”

``எங்கள் நாட்டுச் செல்வந்தர்கள் அதிகம் விரும்புவது கார்நீல மணிகளைத்தான். அந்த வகை மணிகள் அதிகம் கிடைப்பது ஈழநாட்டில்தான். எனவே, அங்கிருந்து அதிகம் வாங்குகிறோம். அரச குடும்பத்தினர் பொதுவாக கார்நீலத்தைத் தவிர்த்துவிட்டு மாநீல மணிகற்களைத்தான் பயன்படுத்துவர். அந்த வகைக் கற்கள் அதிகம் கிடைப்பது மணிபல்லவத் தீவில். எனவே, எங்களின் நாவாய்கள் ஆண்டு முழுவதும் மணிபல்லவத் தீவில் நிலைகொள்கின்றன.”

சுவரில் இருந்த ஓவியத்தில் பெண் ஒருத்தி நீர்நிறைந்த சிறு குவளையைக் கையில் வைத்துள்ளாள். அந்தக் குவளையில் உள்ள நீரிலிருந்து ஒளி படருவதுபோல் வரையப்பட்டிருந்தது. அதைக் காட்டி, ``இந்த ஓவியம் எதைக் குறிக்கிறது என்று உங்களால் அறிய முடிகிறதா?” எனக் கேட்டார்.

நீர் நிரம்பிய குவளையிலிருந்து எப்படி ஒளி வருகிறது என்பது ஹிப்பாலஸுக்குப் புரியவில்லை. அதைக் கேட்ட பிறகு சோழவேலன் சொன்னார், ``அதில் உள்ளது புன்னாட்டு மணிக்கல். அது உமிழும் நீலத்துக்கு இணையே இல்லை. குவளை நிறைய கறந்த பாலை நிரப்பி, அதற்குள் அந்த மணிக்கல்லைப் போட்டால் பாலுக்கு மேல் ஒளி பரவும்” என்றார்.

ஹிப்பாலஸின் முகம் முழுவதும் வியப்பு பரவியது. சோழவேலன் சொன்னார், ``அந்தப் புன்னாடு வேள்முடியனின் கையில் உள்ளது. உள்ளுக்குள் தீச்சுடர்போல் அணையாமல் ஒளி வீசும் இளஞ்சிவப்பு நிற மணிக்கற்கள்தாம் வேந்தர்கள் விரும்பி அணிவது. மகுடத்தில் சூடும் முடிமாலையில் அவ்வித மணிக்கற்கள் பதித்தால், அந்த வேந்தன் எந்தப் போரிலும் தோல்வியைத் தழுவ மாட்டான் என்பது நம்பிக்கை. அவ்வித மணிக்கற்கள் அதிகம் கிடைப்பது செருவின்குன்றில். அது அழும்பின் வேள் குன்றாய் இருக்கிறது. 

இவர்கள் உட்பட ஒன்பது வேளிர்கள் இன்றும் பச்சைமலையை ஆள்கின்றனர். எஞ்சியோர் வேற்றுநாட்டுப் படையெடுப்புகளால் வீழ்ந்துவிட்டனர். பதினான்கு குடி வேளிர்களுக்கும் ஆதியிலிருந்து ஒரு பழக்கம் இருக்கிறது. அவர்களின் நிலப்பகுதியில் கண்டெடுக்கும் மணிக்கற்களைக் குலத்தலைவனிடம் கொடுப்பர். அவன் அவற்றைப் பாதுகாத்து வைப்பான். அந்தக் குலத்தலைவன் மரணத்தைத் தழுவியவுடன் புதியவன் பொறுப்பை ஏற்கும்போது செய்யும் முதற்பணி, ஏற்கெனவே இருந்தவன் காலத்தில் சேகரிக்கப்பட்ட மணிக்கற்களைப் பறம்புநாட்டிலிருக்கும் பாழி நகரில் போய் வைத்துவிடுவதுதான்.’’

சோழவேலன் சொல்லிவந்தது என்ன என்பதை ஹிப்பாலஸ் உணரும் வேளை தேறல்களின் மயக்கத்தை கணநேரத்தில் கலைத்தது. சோழவேலன் தொடர்ந்தார், ``ஆதியில் நெருக்கடியான சுழலில் யாரோ ஒரு வேளிர்குடி பாழி நகரில் போய் மணிகற்களைப் பாதுகாத்து வைத்திருப்பான். அதன் பிறகு வேளிர் குடிகளிடம் இது ஒரு சடங்காக மாறிவிட்டது. குலத்தின் புதிய தலைவன் பழையவனின் காலத்துச் சேமிப்பைப் பாழியில் போடுவது அவனது காலத்தைச் சிறப்பாக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. இப்படி பதினான்கு வேளிர்குடியும் தலைமுறை தலைமுறையாக மணிக்கற்களைப் பாழி நகரில் போட்டுவிட்டு வருகின்றனர். பறம்பு வேளிர்கள் அதைக் காத்துவருகின்றனர்.”

செங்கணச்சோழன் படையெடுப்பின் நோக்கம் ஹிப்பாலஸுக்குத் தெளிவாகப் புரிந்தது. ஆனால், இந்தச் செய்தியே தெரியாமல்தான் மற்ற வேந்தர்கள் இருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. சோழவேலன் சொல்வது உண்மையாக இருக்குமேயானால் பறம்பின் மாபெரும் செல்வம் கொள்ளிக்காட்டு விதையோ, சோமப்பூண்டு பானமோ, தேவாங்கு விலங்கோ அல்ல; பாழி நகர்ச் செல்வம்தான்.”

ஹிப்பாலஸ் எண்ணிக்கொண்டிருக்கும்போது சோழவேலன் சொன்னார், ``இன்று, நேற்று அல்ல... எத்தனையோ தலைமுறைகளாகப் பாழி நகரத்தில் குவிக்கப்படும் செல்வம் கதைகளாகப் பரவியபடியே இருக்கிறது. உலகின் மாபெரும் செல்வமான மணிக்கற்களை மலைமக்கள் பாழாய்ப்போடுகின்றனர் என்று எல்லோருக்கும் தெரியும். அதைக் கைப்பற்றும் கனவும் தலைமுறை தலைமுறையாக வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், அந்தப் பாழி நகர் எங்கு இருக்கிறது என்ற குறிப்பு, வேளிர்குடியின் மிகச்சிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவர்கள் எந்தச் சூழலிலும் அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். போரில் வீழ்ந்த வேளிர்களிடம்கூட அந்த உண்மையைப் பெற முடியவில்லை.”

ஹிப்பாலஸ் தன்னை முழுமுற்றாக மறந்த நிலையில் சோழவேலனின் சொல்லைக் கவனித்துக்கொண்டிருந்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 9 P83d_1521022806
``மறைக்கப்படுவதுதான் கவனிக்கப்படுவதாக மாறும். மேற்குத்திசையில் உள்ள பச்சைமலைத்தொடரில் வேளிர்களால் மறைக்கப்படுவது கிழக்குத்திசைக் குன்றுகளில் உள்ள நெடுங்காடர்களால் கவனிக்கப்படத் தொடங்கியது. தலைமுறை தலைமுறையாகப் பாழி நகரை அறிவதே நெடுங்காடர்களின் பணி. அவர்களின் முன்னோர்கள் இட்ட வாக்கும் அதுதான். மண்ணின் அடிவாரத்தை மோந்தே கண்டறியும் கீழ்க்காடர்கள்தான் பாழி நகர் நிலைகொண்டுள்ள நிலத்தைக் கண்டறிந்துள்ளனர். எண்ணிலடங்காத மணிக்கற்கள் குவிக்கப்பட்டிருக்கும் அந்த நிலத்தை அவர்கள் கண்டறிந்தபோதுதான் இன்னொன்றையும் சேர்த்தே அறிந்தனர்.

``என்ன?’’ என்று அதிர்ந்து கேட்டான் ஹிப்பாலஸ்.

``வேற்று மனிதர்களால் ஒருபோதும் அந்த இடத்தைக் கண்டறிந்து, அந்தச் செல்வத்தைக் கைப்பற்ற முடியாது என்பதுதான் அது. கீழ்க்காடர்களின் இந்தக் கூற்றை மேல்காடர்களும் குறுங்காடர்களும் ஏற்பதில்லை. அந்தச் செல்வத்தைக் கைப்பற்றக் கீழ்க்காடர்கள் ஒத்துழைப்பதில்லை என்ற காரணத்தினாலேயே காடர்களுக்குள் பல தலைமுறைகளாகப் பகை உண்டாகியது.

செங்கணச்சோழன் மூவரையும் ஒருசேரத் தாக்கியபோது, தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மூவரும் ஒன்றுசேர்ந்துள்ளனர். அப்படியிருந்தும் சோழப் பேரரசின் பெரும்படையை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. சோழப்படைக்குக் கிடைத்த பெரும்வாய்ப்பு இயற்கையால் நிகழ்ந்த நிலச்சரிவு. அது நெடுங்காடர்களின் குடியிருப்புகளை அழித்தது. அவர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து சோழப்படையின் மீது தாக்குதல் தொடுக்க முடியாத நிலையை உருவாக்கியது. அப்படியிருந்தும் சோழர்களால் அவர்களை வெல்ல முடியவில்லை. போர் நெடுங்காலம் நீடித்தது. இறுதியில் மேல்காடர்கள் உடன்படிக்கைத் திட்டத்தைச் சொன்னார்கள். செங்கணச்சோழன் அதை ஏற்றுக்கொண்டு தாளமலையைக் கைப்பற்றும் திட்டத்தைக் கைவிட்டான்” என்றான் சோழவேலன்.

ஹிப்பாலஸ், இருக்கையின் முனைக்கே வந்துவிட்டான். மீண்டும் எழுந்தார் சோழவேலன். ``போரிட்டுக்கொண்டிருந்தவர்களை ஒன்றாக இணைத்தது நெடுங்காடர்கள் சொன்ன உடன்படிக்கைத் திட்டம். இருவரின் நீண்டநாள் கனவுகளும் ஒன்றாயின. அதுதான் பாழி நகர். அந்தப் பெருஞ்செல்வத்தை இணைந்து கண்டறிய முடிவுசெய்தனர். காட்டைப் பிளந்து முன்னேறும் ஆற்றல்கொண்ட படையோடு என் மகன் பாழி நகர் நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறான்.”

சோழனின் திட்டத்தை முழுமையாக அறிந்தபோது ஹிப்பாலஸ் மெய்சிலிர்த்து நின்றான்.

``கிழக்குக்கும் மேற்குக்குமான பகை, வேந்தனுக்கும் வேளிருக்குமான முரணோடு இணைந்துவிட்டது. இனி பாழி நகரைக் காப்பாற்றப் பாரியால் முடியாது” என்றான் சோழவேலன்.

ருக்கன்குன்றின் மேலே காத்திருந்த தேக்கனுக்கு உதியஞ்சேரலின் திட்டத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆயிமலையின் இரு பக்க விளிம்புகளிலும் தனது படையைக் கொண்டுபோய் நிறுத்திய பிறகும் எதிரிகளின் பக்கத்தில் எந்தவித அசைவும் இல்லை. `என்னதான் நினைக்கிறான் உதியஞ்சேரல்?’ என நினைத்தபடியே இருந்த தேக்கன், குதிரைவீரர்களை அழைத்தான். அறுவர் முன்வந்தனர். தன்னோடு எவ்வியூரிலிருந்து வந்த எயினியிடம் சொன்னான், ``அறுவரையும் அழைத்துக்கொண்டு எதிரில் இருக்கும் ஆயிமலையின் முகட்டுக்குப் போ. அங்கு செல்லும் வரை நமக்குக் குதிரைப்பாதை இருக்கிறது. தேவைப்பட்டால் குதிரைப்பாதையையும் கடந்து சில வீரர்களை அனுப்பிவை. ஆயிமலையின் மறுபக்கம் எதிரிகளின் நடவடிக்கையை அறிந்து வா” என்றான்.

எயினி, ஆறு வீரர்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டான். இருக்கன்குன்றிலிருந்து இறங்கி ஆயிமலையின் மேற்புறம் ஏறி உச்சி முகட்டை அடைய வேண்டும். போரின் முதற்பணி தனக்கு வழங்கப்பட்டதை எண்ணி மகிழ்வோடு விரைந்தான் எயினி.

பறம்பில் உள்ள குதிரைகளை, வாரிக்கையன் இரு பாகங்களாகப் பிரித்திருந்தார். அதில் பெரும்பாகத்தை எவ்வியூரில் வைத்துக்கொண்டார். சிறு பாகத்தை மூன்றாகப் பிரித்து மூன்று திசைகளிலும் களம்நோக்கி அனுப்பினார். அவர் அனுப்பிய இருநூறு குதிரைகள் முந்தைய நாள் தேக்கனின் இடத்துக்கு வந்து சேர்ந்தன. அதை முழுமையாகத் தன்னுடன் வைத்துக்கொண்டான். ஆயிமலையின் இரு பக்க விளிம்புகளிலும் கூழையனும் உதிரனும் எதிரிகளைத் தாக்க ஆயத்தநிலையில் இருந்தனர். ஆனால், அவர்களுக்குக் குதிரைவீரர்களை அனுப்பவில்லை. தாக்குதலை மேலிருந்து கண்காணித்துக்கொண்டிருந்த தேக்கனிடம்தான் அனைத்துக் குதிரைவீரர்களும் இருந்தனர். யாருக்கு உதவி தேவையோ அவர்களை நோக்கிக் குதிரைப்படையை அனுப்புவதுதான் தேக்கனின் திட்டம்.

எயினியின் தலைமையிலான ஆறு வீரர்களும் இருக்கன்குன்றைத் தாண்டி ஆயிமலையில் ஏறத் தொடங்கினர். குதிரைகள் பிறந்தது முதலே பறம்பின் மலைப்பாதையில் ஓடிப்பழகியவை. எனவே, மலையேற்றத்திலும் வேகம் குறையாமல் வீரர்களைச் சுமந்து செல்லக்கூடியவை.

ஆயிமலையின் பாதி உயரத்தைக் கடந்தனர். சில இடங்களில் ஆபத்தான சரிவுப்பாறைகள் உண்டு. அந்த இடங்களில் குதிரையை விட்டு இறங்கி நடந்து செல்வர். முன்னால் சென்றுகொண்டிருந்த எயினி இறங்கி நடந்தான். வீரனாகிய தனக்கு வழங்கப்பட்ட இந்தப் பணி குறித்து எயினியின் மனதில் மகிழ்வு பீறிட்டபடி இருந்தது. சரிவுப்பாறையில்கூட குதிரையை நடக்கவிடவில்லை அவன். ஓடுகிற அதே வேகத்தில் இழுத்துக்கொண்டு நடந்தான். பாறையைக் கடந்ததும் குதிரையின் மீது ஏறிக் கடிவாளத்தைச் சுண்டினான். வரிசையாக மற்ற வீரர்களும் குதிரையின் மீது ஏறினர். வேகம் கூடியது. ஆயிமலை முகட்டின் பின்புறமிருந்து உதியஞ்சேரல் எதை எதிர்பார்த்துக் காத்திருந்தானோ அது அவனை நோக்கி வந்துகொண்டிருந்தது.

சோழனின் பெரும்படை சுழிப்பள்ளத்தை அடைந்தது. படையின் வால்பகுதி மறுமலையைக் கடந்து கிடந்தது.

இடப்புறக் கரையின் மேல் மறைந்தபடி வந்துகொண்டிருந்த பிட்டன் தலைமையிலான படையும் வலப்புறத்திலிருந்த இரவாதன் தலைமையிலான படையும் தங்களின் நிலையிலேயே இருந்தனர்.  இந்தப் படை சுழிப்பள்ளத்திலிருந்து இடப்புறமாக எழுவனாற்றில் நுழையப்போகிறதா அல்லது வலப்புறமாக வட்டாற்றில் நுழையப்போகிறதா என்பதைப் பொறுத்துத்தான் அவர்கள் தாக்குதல்  அமையும். தாக்குவது என்று முடிவானால் அதற்கான உத்தரவை இரவில்தான் பாரி அறிவிப்பான் என்று இருவரும் நம்பினர். ஏனென்றால், படையின் எண்ணிக்கை மிகப்பெரியது. இரவுதான் சிதறடிக்கும் தாக்குதலுக்குப் பொருத்தமானது.

ஆற்றின் இரு பக்கங்களும் மேலிருந்து படை நகர்வைக் கவனிக்கத் தொடங்கினர். ஆற்றின் போக்கிலே எவ்வியூர் நோக்கிப் போகப்போகிறார்களா அல்லது இணையும் ஆற்றுத்தடத்தில் நுழையப்போகிறார்களா என்பதை உன்னிப்பாகக் கவனித்தனர். விருகமரம் ஒன்றின் மீது ஏறி, தலையை மட்டும் வெளியே நீட்டி உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான் பிட்டன். ஆற்றின் வலப்புறம் பாறையின் மேல்மடிப்பிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான் இரவாதன். மலைமுகட்டின் மீதிருந்த பாரியின் இரு கண்களும் சுழிப்பள்ளத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தன.

பொழுது புலர்ந்த சிறிது நேரத்திலேயே, கதிரவன் ஒளியில் மின்னத் தொடங்கிய வட்டாற்று மணலில் தம்முடைய கால்களைப் பதித்தன சோழப்படையின் முதல் வரிசை யானைகள்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


Sponsored content

PostSponsored content



Page 9 of 19 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக