புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 9:57 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 6:52 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:01 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 5:51 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 4:11 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 11:37 am

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:18 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:00 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:40 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:13 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 9:11 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:01 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:54 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 8:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:47 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:38 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:30 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 4:48 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 4:43 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 4:34 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 2:09 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 8:01 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 6:18 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:48 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:41 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:38 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:36 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:34 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 11:04 am

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 11:02 am

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:43 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:37 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:35 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 4:41 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 4:40 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 3:56 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 3:43 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 3:28 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 10:03 am

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 9:57 am

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 9:56 am

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 9:54 am

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10 
4 Posts - 3%
M. Priya
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10 
1 Post - 1%
Kavithas
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10 
1 Post - 1%
சிவா
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10 
1 Post - 1%
bala_t
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10 
1 Post - 1%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10 
296 Posts - 42%
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10 
6 Posts - 1%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10 
4 Posts - 1%
manikavi
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்


   
   

Page 8 of 19 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 19  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 01, 2018 7:36 pm

First topic message reminder :

"வீரயுக நாயகன் வேள் பாரி"

ஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" (அரவான் படத்தின் மூலகதை)  ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P100bnew

"வீரயுக நாயகன் வேள் பாரி" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.. அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்



நன்றிஆசிரியர் : சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., , விகடன்  நன்றி


முன்னுரை

இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P100a

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.

தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.

மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.

பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.

வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.

இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...

Readre இந்த பதிவை விரும்பியுள்ளார்


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 8:21 pm

பிலர் மயக்கம் தெளிந்து எழுந்தபொழுது உதிரன் குடிலில் இல்லை. எப்பொழுதும் உடனிருக்கும் உதிரன் எங்கே போனான் என்று சிந்தித்தபடியே புறப்பட ஆயத்தமானார். பொழுது நண்பகலைக் கடந்திருந்தது. பாரியின் மாளிகையில் இருந்துதான் அவருக்கு உணவு வருகிறது. செய்திசொல்லி அனுப்பும் உதிரன் எங்கே போனான் என்பது தெரியாததால் அவ்வழி வந்த வீரனிடம் சொல்லி அனுப்பினார். சிறிதுநேரத்தில் உணவு வந்தது. உண்டு முடித்தார். உதிரன் இதுவரை தன்னிடம் சொல்லாமல் போனதில்லையே என  எண்ணியபடியே கூத்துக்களம் நோக்கிப் புறப்பட்டார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83a
கூத்துக்களத்தின் பாட்டாப்பிறையில் எந்நேரமும் பெரியவர்கள் உட்கார்ந்து கதைபேசிக்கொண்டிருப்பார்கள். கதையென்றால் அவை வெறுங்கதைகள் அல்ல; எல்லாம் கண்டுபிடிப்புகள். மின்னல் ஒளியில் மலரும் மலர் ஒன்று உள்ளது என்பதை அவர்கள் கபிலரிடம் சொன்னபொழுது அவரால் அதனைக் கற்பனை செய்யவே முடியவில்லை. அவர்கள் சொன்னார்கள், “மின்னல் ஒளிக்குத் தாழம்பூ மலரும்; எப்பொழுதும் அடிவயிற்றில் தொங்கும் குட்டியைக் கைவிடாத குரங்குகள் இடியோசை கேட்ட கணம் கைவிடும்” என்று.
குறிஞ்சியின் மக்கள் இயற்கையை அறிந்துள்ளவிதம் கணந்தோறும் வியப்பை உருவாக்கக் கூடியது. அவர்கள் புல்பூண்டு, யானை, புலி, பாறை, வேர் என எதைப்பற்றிப் பேசினாலும் எல்லாம் தலைமுறை தலைமுறையாய்ச் சேகரித்த அறிவின் சேர்மானமாய் இருக்கிறதே என வியந்தபடி உட்கார்ந்திருந்தார் கபிலர். நேற்றைய மயக்கமும் நான்கு நாள் கிறக்கமும் தெளியும்முன் பாட்டாப்பிறை பெருசுகள் மீண்டும் கிறக்கி மயக்கினர்.

“எங்கே தேக்கனைக் காணவில்லை?” எனக் கேட்டார் கபிலர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83b
“பாழிநகர் வரை போயுள்ளான்; இன்னும் சிறிதுநேரத்தில் வந்துவிடுவான்” என்று சொன்னார் தேக்கனின் வயதொத்த பெரியவர். உடனிருந்த இன்னொருவர் சொன்னார், “வழக்கமாக மேல்மாடத்தில்தானே சந்திப்பீர்கள். நீங்கள் அங்கே போங்கள். அவன் வந்ததும் அனுப்பிவைக்கிறோம்.”

பதிலைக்கேட்ட கபிலர் மறுத்துத் தலையாட்டியபடியே கூறினார், “இல்லை, அங்கே போனால் குவளையைக் கையிலெடுக் காமல் பேச முடிவதில்லை. கையிலெடுத்தால் என்ன பேசினோம் என்பது நினைவில் தங்குவதில்லை. எனவே, அவரிடம் கேட்க வேண்டியதை இங்கு கேட்டுவிட்டுத்தான் மேல்மாடம் போவது என்ற முடிவோடு வந்துள்ளேன்” என்றார்.

பெரியவர்களுக்கு அவர் சொல்வது சரியென்றுதான் பட்டது. “சரி அவரிடம் என்ன கேட்கப்போகிறீர்கள்?”

“செம்மாஞ்சேரலுடன் நடந்த போரின் முடிவு மட்டுந்தான் எனக்கு நினைவில் இருக்கிறது. அப்போர் மூன்று நாள்கள் நடந்ததாகச் சொன்னார். முதலிரண்டு நாள்கள் என்ன நடந்தது என்று தெரியவேண்டும்.”

“அது தேக்கனுக்கே தெரியாதே. பின்னெப்படி உங்களுக்குச் சொல்லுவான்?” என்றார் பெரியவர்.

அருகில் இருந்தவர் சொன்னார், “அதோ வந்துகொண்டிருக்கிறாரே வாரிக்கையன். அவர்தான் அந்தப் போரை, பாரியோடு சேர்ந்து வழிநடத்தியவர். அவரிடம் கேளுங்கள் சொல்வார்” என்றார்.

சிறுதொலைவில் நடந்து வந்துகொண்டிருந்தார் வாரிக்கையன். தேக்கனைவிட வயதானவர். ஆனால், உடலமைப்பைவைத்து வயதினைக் கண்டறிந்துவிட முடிவதில்லை. கபிலர் பறம்புக்கு வந்த புதிதில் அது பெருங்குழப்பத்தை உருவாக்கியது. புரிந்துகொள்வது கடினமாகவும் இருந்தது. வேட்டூர் பழையனைவிட வயதில் மூத்தவர் இவர் என்று அறியவந்தபொழுது கபிலரால் நம்பமுடியவில்லை. சமதளமனிதர் களுக்கும் மலைமனிதர்களுக்கும் வயதானதைக் காட்டும் குறியீடாக இருப்பது நரைமுடி மட்டுமே. அதனைவைத்துதான் பொதுவான தன்மையோடு வயது முதிர்ந்தவர் எனத் துணியலாம். ஆனால், வயதின் காரணமாகப் பல் உதிர்ந்து பொக்கைவாய் ஆவதென்பது மலைமக்களிடம் இல்லாத ஒன்றாய் உள்ளது. கிழத்தன்மையும் பல்லுதிர்வதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக சமதளத்தில் பார்க்கப்படுகின்றன. ஆனால், இங்கு அப்படியல்ல.

சிறுவயதிலிருந்தே காய்கனிகளையும் மரப்பட்டைகளையும் கடித்திழுப்பது அன்றாட நடவடிக்கையாக இருப்பதால் முன்பற்கள் மிகக்கூர்மையாகவும் பலருக்கு ஒழுங்கற்ற தோற்றத்துடனும் இருக்கின்றன என்பது மட்டுமே கபிலரின் மனப்பதிவாக இருந்தது. ஆனால், பெரும்பாலோருக்குப் பற்கள் உதிர்வதில்லை. அப்படியே உதிர்ந்தாலும் ஒன்றிரண்டுதான் உதிர்கின்றனவே தவிர  அத்தனை பற்களும் இல்லாத பொக்கைவாய் மனிதர்களைப் பறம்பில் இன்றுவரை கண்டதில்லை.

வாரிக்கையனை முதலில் பார்த்தபொழுது, அவர் தேக்கனைவிடவும் வேட்டூர் பழையனை விடவும் வயதில் மூத்தவர் என்பதைக் கபிலரால் நம்ப முடியாததற்குக் காரணம், தென்னங்காயைப் பல்லால் கடித்திழுத்தபடியே அவர் கபிலரோடு பேசிக்கொண்டிருந்தார் என்பதுதான்.

வாரிக்கையன் தளர்ந்த நடையில் மெதுவாக வந்து பாட்டாப்பிறையில் உட்கார்ந்தார். சின்னதாய் பெருமூச்சு வாங்கியது. சிறிதுநேரங்கழித்துப் பேச்சைத் தொடங்கிய கபிலர், செம்மாஞ்சேரலுடன் நடந்த போரைப்பற்றிய விவரத்தைக் கேட்டார்.

வாரிக்கையன் கால்மடக்கி உட்கார்ந்தார். “அது போரே அல்ல” என்றார்.

“மூன்றுநாள்கள் போர் நடந்ததாகத்தானே சொன்னார்கள்” என்றார் கபிலர்.

“நாம் போர் நடத்தியிருந்தால் மூன்று பொழுதுக்குள் அது முடிந்திருக்க வேண்டும். பறம்பின் தன்மை தெரியாமல் செம்மாஞ்சேரல் மொத்தப்படையையும் கொண்டுவந்து கழுவாரிக்காட்டிலே நிறுத்திவிட்டான். நம்மில் ஒரு வீரன்கூட அவனது கண்ணிற்படாமல் அவனது மொத்தப்படையையும் அழித்திருக்க முடியும். அவ்விட அமைப்பு அப்படி” என்றார்.

“பின்னர் ஏன் அழிக்கவில்லை? போர் ஏன் மூன்றுநாள்கள் நீடித்தது?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83c
“அப்பொழுதுதான் நாங்கள் முதன்முறையாக, திறல்கொண்ட குதிரைப்படையைக் கண்ணிற் பார்த்தோம்.”

யவனர்களுக்கு மிளகினை ஏற்றுமதி செய்து அதற்குக் கைம்மாறாக வலிமைமிகு குதிரைகளை வாங்கியது சேரர்கள்தாம். அதன் பின்தான் மற்ற இரு பேரரசுகளும் குதிரைகளை இறக்குமதி செய்யத் தொடங்கின என்பது கபிலருக்குத் தெரியும். ஆனால், பறம்பின் மக்கள் முதன்முறையாக செம்மாஞ்சேரனுடனான போரின்பொழுதுதான் குதிரைப்படையைப் பார்த்துள்ளனர் என்பது புதிய செய்தியாக இருந்தது.

குதிரைப்படையைப் பார்த்ததும் பாரி தாக்கும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டான். முன்களத்தில் நின்ற எனக்கு அவன் முடிவினை மாற்றியது தெரியாது.  அவனிடமிருந்து குறிப்புச்சொல் எதுவும் எனக்கு வரவில்லை. நான் பாறையின் உச்சிமறைப்புகளில் சிறுபடையோடு நின்றுகொண்டிருந்தேன். பாரியிடமிருந்து எவ்வித ஓசையும் கேட்கவில்லை. செம்மாஞ்சேரலின் படை எங்களைக் கடந்து முன்னுக்குப் போய்க்கொண்டிருந்தது. நாங்கள் பாறையின் மேல் மறைப்புகளில் நின்றிருந்தோம்.

பாரி மொத்தப்படையையும் பின்னுக்கு நகர்த்தி உள்காடுகளுக்குள் போய்விட்டான். செம்மாஞ்சேரலும் தொடர்ந்து போய் க்கொண்டிருந்தான். அவனது குதிரைப்படை மிகவலிமையானது, எனவேதான் அவன் துணிந்து காடுகளுக்குள் நுழைந்துகொண்டிருந்தான்.

“குதிரைகள் ஒன்றுக்குக்கூட சேதாரம் ஆகக்கூடாது, அனைத்தும் பறம்புக்கு வேண்டும்” என்று கூறிவிட்டான் பாரி. திட்டத்தை அதற்குத் தகுந்தாற்போல் மற்றவர்கள் மாற்றிவிட்டார்கள். பாரி ஏன் படையைப் பின்னால் நகர்த்திப் போகிறான் என்று புரியாத குழப்பத்தில் நான் இருந்தேன்.

கழுவாரிக்காடு இப்புதிய திட்டத்துக்கு ஏற்ற இடமல்ல.  குதிரையின் மீதுள்ள வீரர்களைத் தாக்கிக் குதிரையைக் கைப்பற்றுவதற்குப் பொருத்தமான இடம், இடப்புறம் இருந்த சருகுமலைக் குன்றுதான். எனவே செம்மாஞ்சேரலின் படையை அப்பக்கம் வரவைக்க வேண்டும் எனப் பாரி சிந்தித்துள்ளான்.

இது எதுவும் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் பாறையின் உச்சி மறைப்பிலே காத்திருந்தோம். திடீரெனக் கூவல்குடியினரின் ஓசை கேட்கத் தொடங்கியது. அது பின்புறம் ஓடுவதற்கான குறிப்புச்சொல்லும் ஓசை. இந்த ஓசை ஏன் கேட்கிறது என்று சிறு தயக்கம் ஏற்பட்டது. ஆனால், போர்க்களத்தில் தயங்குவதற்கெல்லாம் இடமில்லை. சரியென, பாறையின் உச்சியிலிருந்து கீழிறங்கிப் பின்புறம் செல்லத் தொடங்கியபொழுதுதான் செம்மாஞ்சேரலின் வீரர்கள் எங்களைப் பார்த்தனர்.

நாங்கள் பின்புறமாகப் போவது தெரிந்ததும் குதிரைப்படையின் ஒரு பிரிவினை எங்களை நோக்கி ஏவினான் செம்மாஞ்சேரல். குதிரைகள் பாய்ந்து வந்தன. அப்பொழுதுதான் தெரிந்தது குதிரை ஓட்டம் என்றால் என்னவென்று. நாங்கள் உயிர்பிழைப்பதே பெரும்பாடாகி விட்டது. எப்பக்கம் திரும்பி ஓடினாலும் பாய்ந்து வந்துகொண்டிருந்தனர் சேர வீரர்கள். ஆளுயர ஈட்டியோடு நான்குகால் பாய்ச்சலில் வரும் வீரனிடம் எவ்வளவு நேரம் ஓடித்தப்பிக்க? பாறையின் மேல் இருந்திருந்தால் அவர்கள் அனைவரையும் ஒருபொழுதில் அழித்திருப்பேன். ஆனால், தந்தரையில் என்ன செய்யமுடியும்?

என்னிடமிருந்தவர்கள் மிகக்குறைந்த வீரர்களே. விரட்டிவந்தவர்கள் நான்குமடங்கு அதிக வீரர்கள். நாங்கள் யாரும் தப்பிப்பிழைக்கப் போவதில்லை என்றுதான் தோன்றியது. பாறையின் உச்சியில் பாதுகாப்பாய்த்தானே இருந்தோம். ஏன் கீழே இறங்கி ஓடவிட்டான் பாரி என்ற குழப்பம் வேறு மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. குதிரை வீரர்கள் மிக அருகில் வந்துவிட்டார்கள்.

அப்பொழுதுதான் சருகுமலையின் இடப்புறப் பிளவிலிருந்து கூவல்குடியினரின் குறிப்புச்சொல் ஓசை கேட்டது. அப்பக்கம் வரச்சொல்வது அறிந்து அதனை நோக்கி முடிந்தவரை வேகங்கொண்டு ஓடினோம்.
பிளவினை உயிரோடு தாண்டமுடியும் என்ற நம்பிக்கை அடுத்தடுத்த அடியில் குறைந்துகொண்டே வந்தது. 

எண்ணிப்பார்க்க முடியாத வேகத்தில் குதிரைகள் வந்துகொண்டிருந்தன. அவை அருகில் வந்துவிட்டதை உணர்ந்தபொழுது நான் உன்னித் தவ்வினேன். அவை என்னைக் கடந்து தாவிப்பாய்ந்தன. கணநேரம் எனக்கு எதுவும் புரியவில்லை. சற்று நேரங்கழித்துதான் புரிந்தது, பாய்ந்து செல்லும் குதிரைகளின் மீது வீரர்கள் யாருமில்லை.  
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83d
கடவின் இருபுறமிருந்தும் பறம்புவீரர்கள் குதிரையின் மீது அமர்ந்திருந்த எதிரிகளை வீழ்த்தி முடித்தனர். சிறிய காயம்கூட இன்றி குதிரைகள் காட்டுக்குள் ஓடிக்கொண்டிருந்தன. இரண்டுநாள்களும் இப்படி வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்திப் பெரும்பகுதிக் குதிரைகளைக் கைப்பற்றினோம்.

இனி குதிரைகளைக் கைப்பற்ற முடியாது என்ற நிலையில்தான் தாக்குதல் போரினை நடத்தினான் பாரி. மூன்றாம் நாள் உச்சிப்பொழுதில் தொடங்கிய போர் மாலைக்குள் முடிவுக்கு வந்தது” என்றார் வாரிக்கையன்.
இத்தனை குதிரைகள் பறம்பில் இருப்பது எப்படி என்பது பறம்புக்கு வந்த நாளிலிருந்து கபிலரின் மனதிலிருந்த கேள்விதான். எதிர்பாராத நேரத்தில் விடை கிடைத்தது. வாரிக்கையன் செம்மாஞ்சேரலுடனான போரினைச் சொல்லி முடித்ததும் அருகிருந்த பெரியவர், கைப்பற்றிய குதிரைகளைக் காட்டின்தன்மைக்கு ஏற்ப எப்படியெல்லாம் பயிற்றுவித்தோம் என்பதையும், இத்தனை ஆண்டுகளில் குதிரைகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்ததற்கான காரணத்தையும் விரிவாக விளக்கினார்.

எதிர்பாராத பல செய்திகள் கபிலருக்குக் கிடைத்தன. அவர் வாரிக்கையன் சொல்வதை முழுமையாகக் கேட்டு முடித்தார். நடந்ததைச் சொல்லி முடித்தபின் சிறிதுநேரத்தில் புதிய கேள்வி ஒன்று மேலெழுந்து வந்தது. “தேக்கன் ஏன் அப்போரில் கலந்துகொள்ளவில்லை?”

யாரும் இதனை எதிர்பார்க்கவில்லை. கபிலர் போரை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில்தான் கேட்கிறார் என்றுதான் விளக்கமாகக் கூறினார்கள். ஆனால், சொல்லப்பட்ட பதிலுக்குள்ளிருந்து தாங்கள் சந்திக்க விரும்பாத ஒரு கேள்வி மேலெழும் என்று யாரும் நினைக்கவில்லை.

அனைவரும் சற்றே அமைதியாயினர். கபிலருக்குக் காரணம் புரியவில்லை. வாரிக்கையன் சொல்லட்டும் என்று மற்றவர்கள் காத்திருக்கிறார்களோ என்றுதான் முதலில் நினைத்தார். ஆனால், வாரிக்கையன் எதுவும் சொல்வதுபோல் இல்லை. அமைதியே நீடித்தது.

``உங்களின் வலதுகால் நடுவிரல் பிறக்கும்போதே இப்படித்தான் சிறுத்து மடங்கி இருந்ததா?” எனக் கேட்டார் எதிரில் இருந்த பெரியவர்.

அனைவரும் இந்த  உண்மையைப் பகிர்ந்துகொள்ள மறுக்கின்றனர். அதனாலேயே வேறு ஒன்றைப்பற்றிப் பேச விருப்பப்பட்டு எனது விரலைப் பற்றுகின்றனர் எனக் கபிலருக்குத் தெரிந்தது. “விரலைப்பற்றிப் பின்னர் பேசுவோம், தேக்கன் ஏன் போரிலே ஈடுபடவில்லை?” என மீண்டும் கேட்டார்.

விரல்பற்றி விளக்கங்கேட்ட பெரியவர்தான் சொன்னார், “பூண்டுப்பானம் கிடைத்து ஊரே மகிழ்ந்திருக்கும்பொழுது அதனை நினைவுபடுத்த வேண்டாமே என்றுதான்…” சொல்லி வார்த்தையை முடிக்காமல் இழுத்தார்.

எல்லோர் மனதையும் கவலைகொள்ளச் செய்யும் கேள்வியாக இது இருக்கும் எனக் கபிலர் எதிர்பார்க்கவில்லை. அப்படியென்றால் வேண்டாம் என்று அவர் முடிவுக்குப் போகும்பொழுது வாரிக்கையன் தொடங்கினார், “காட்டை நாம் ஒருபோதும் அறிந்துகொள்ள முடியாது.”

இவ்விடம் இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை கபிலர்.

“இந்த உண்மை நமக்குத்தெரியும். ஆனாலும், அவ்வப்போது இயற்கை நமக்குத் தாங்கமுடியாத துயரத்தைக் கொடுத்து இவ்வுண்மையை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது” என்றார் வாரிக்கையன்.
கபிலர் சற்றே அதிர்ந்தபடி அவர் சொல்வதைக் கேட்டார். “தேக்கனின் மூன்று மகன்களும் உயிரோடு இருந்தனர்” என்று தொடங்கினார் வாரிக்கையன். தேக்கனுக்கு மகன்கள் இருந்ததையே கேள்விப்பட்டிராத கபிலருக்கு, வாரிக்கையன் கூறிய சொற்கள் நெஞ்சில் யானை மிதித்ததைப்போல் இருந்தது.

“மூத்தவன் இளவயதுக்காரன். மற்ற இருவரும் சிறுவர்கள். வழக்கம்போல் சிறுவர்கள் எவ்வியூரைச் சுற்றி எங்கும் விளையாடிக்கொண்டு திரிவார்கள். விளையாட்டில் வழிமாறிச் சென்றார்களா அல்லது தெரிந்தே சற்று உள்ளே போய் விளையாடுவோம் என்று போனார்களா என்பது விளங்கவில்லை.

சிறுவர்கள் இருவரும் அடுத்த குன்றைக் கடந்து கீழ்த்திசையில் இறங்கியிருக்கிறார்கள். தாகமெடுத்திருக்கிறது. நீரோடையில் நீர் அருந்திவிட்டு, கரையேறிச் சிறுதொலைவு போயிருக்கிறார்கள். நடுத்தரமான மரம் ஒன்றின் கீழ் இளைப்பாற அமர்ந்திருக்கிறார்கள்.

பொழுது மாலையைக் கடந்தும் அவர்கள் ஊர் திரும்பவில்லை. நேரமாக ஆக எங்களுக்கு ஐயம் கூடத் தொடங்கியது. இரவு, பந்தமேந்தி ஆளுக்கொரு புறம் தேடத் தொடங்கினோம். பூச்சிகள், விலங்குகள், பறவைகள், நாகங்கள் என எத்தனையோ வகையில் குழந்தைகளுக்கு ஆபத்து வரலாம். ஆனாலும், இருவர் சேர்ந்து போனதால் எப்படியும் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83e
இரவு முழுவதும் தேடியும் அவர்களைக் கண்டறிய முடியவில்லை. மறுநாள் காலை மீண்டும் பல குழுக்களாகப் பிரிந்து காடுகளுக்குள் போனோம். பொழுதுசொல்லிப் புறப்பட்டுப் போனோம். தேக்கன் ஒரு குழுவில் போனான். நான் ஒரு குழுவில் போனேன். பாரி ஒரு பக்கம் போனான். முடியன் ஒரு குழுவில் போனான். மறுநாள் நள்ளிரவு சொல்லிய பொழுதுக்கு எல்லாக்குழுக்களும் எவ்வியூர் திரும்பின. யாராலும் சிறுவர்களைக் கண்டறிய முடியவில்லை.

என்ன செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தபொழுதுதான், தேக்கனின் மூத்தமகன் ஊர்திரும்பவில்லை என்ற இன்னோர் உண்மை தெரியவந்தது. அவன் கீழ்த்திசை போன குழுவில் சென்றான். அப் பகுதியில்தான் ஏதோ ஆபத்து இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தோம். அனைவரும் அப்பகுதிக்குப் போகலாம் எனப் புறப்பட்ட பொழுதுதான் செம்மாஞ்சேரலின் படை புறப்பட்ட செய்தி வந்துசேர்ந்தது.

வேறு வழியில்லாமல் எங்கள் எல்லோரையும் போருக்கு அனுப்பிவைத்துவிட்டு, தேக்கன் மட்டும் சில வீரர்களோடு அத்திசை நோக்கிப் போனான். இரண்டு நாள்கள் தேடியிருக்கின்றனர். எதுவும் அறியமுடியவில்லை. குகைகள், பிளவுகள், பள்ளங்கள், பெருமரப் பொடவுகள், அடர்புதர்கள் என எல்லா இடங்களிலும் தேடியுள்ளனர். அவர்களுக்கு எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

நாளாக ஆக தேக்கனுக்கு நம்பிக்கை கூடத் தொடங்கியது. ஒருவேளை அவர்கள் இறந்திருப்பார்களேயானால் அந்த உடல்களைத் தின்னக் கழுகுகளும் இன்னபிற பறவைகளும் வட்டமிடத் தொடங்கியிருக்க வேண்டும். சிறுவர்கள் இருவரும் ஒரே நாளில்தான் தொலைந்துள்ளனர். எனவே இந்த மூன்று குன்றுகளைத் தாண்டி அவர்கள் போயிருக்க முடியாது. இப்பகுதியில் பறக்கும் பறவைகளைவைத்து நம்மால் எளிதில் கண்டறிந்துவிட முடியும். ஆனால், இங்கே ஊனுண்ணும் பறவை எதுவும் தென்படவில்லை. எனவே அவர்கள் இறக்கவில்லை; ஏதோ ஆபத்தில் சிக்கியுள்ளனர் என்ற முடிவுக்குப் போனான்.

என்ன ஆபத்து என்பதை ஊகிக்க முடியவில்லை. இம்மூன்று குன்றுகளில் பெரும்பாறைப் பிளவுகளோ, ஆற்றுப்பள்ளங்களோ எதுவுமில்லை. வேறெங்கு சிக்கியிருப்பார்கள் எனத் தெரியாமல் திகைத்தபொழுதுதான்.  நடுத்தரமான மரம் ஒன்றின் அடிவாரத்தில் மூவரும் கிடப்பதை வீரர்கள் பார்த்துள்ளனர். தொலைவில் அதனைப் பார்த்த வுடன் ஓசையெழுப்பி தேக்கனுக்குக் கூறியுள்ளனர்...”

கதையைச் சொல்லிக்கொண்டிருந்த வாரிக்கையன் வார்த்தைகளைத் தொடராமல் நிறுத்தினார். கேட்டுக்கொண்டிருந்த கபிலர் மூர்ச்சையானதுபோல் இருந்தார்.  “தேக்கன்தான் காடறிந்த பேராசான் என்பதைப் பறம்பே உணர்ந்த கணம் அதுதான்” என்றார்.

கபிலருக்கு விளங்கவில்லை.

சற்று மூச்சுவாங்கியபடி வாரிக்கையன் தொடர்ந்தார், “மகன்கள் மூவரும் ஒரு மர அடிவாரத்தில் கிடப்பதைப் பார்த்தவுடன் யாராக இருந்தாலும் ஓடிப்போய்த் தூக்கியிருப்போம். ஆனால், தொலைவிலிருந்து பார்த்த கணமே தேக்கன் கொடுத்த முதல் குரல், ‘யாரும் அருகில் போகாதே’ என்பதுதான். வீரர்கள் அப்படி அப்படியே நின்றுள்ளனர்.

தேக்கன் மிகத்தள்ளி நின்று அம்மரத்தையே பார்த்துள்ளான். காற்றில் சற்றே வீச்சம் ஏறியிருந்தது. அவர்கள் இறந்துவிட்டனர் என்பதை முடிவுசெய்துள்ளான். இறந்தவர்களின் உடலைக் காட்டுயிரினங்கள் பொழுதுக்குள் இல்லாமல் செய்துவிடும். ஆனால், இவ்வுடல்களை எதுவும் ஒன்றும் செய்யவில்லையே, ஏன்?

தந்தை என்பதை மறந்து மறுகணமே தேக்கனாய் நின்றுள்ளான். கண்ணீர் மேலேற இடந்தராமல் காரணங்களையே சிந்தித்துள்ளான். அதனையும் மீறிச் சில வீரர்கள் அருகிற்செல்ல முனைந்தபொழுது கடுங்கோபத்தோடு தடுத்துள்ளான். தேக்கன் மட்டுமன்று, எவ்வியூரில் இருக்கும் யாரும் நம்பமுடியாத உண்மை ஒன்று வெளிவரத் தொடங்கியது.

அங்கு நின்றிருந்தது ஆட்கொல்லி மரம். பலா இலைபோல விரிந்த இலையுடையது. அதன் முனைமுழுவதும் சுனைசுனையாய் இருக்கும். மெல்லிய முள்ளினைப் போன்ற அச்சுனை காற்றிலே உதிர்ந்து கொண்டே யிருக்கும். யாராவது அருகில்போனால் அச்சுனை உடலிலே படும். பட்டவுடன் அரிப்பெடுக்கும். நாம் கையை வைத்துத் தேய்ப்போம். தேய்த்தவுடன் அது உள்ளே போய்க் குருதியில் கலக்கும். அந்தச் சுனையின் நஞ்சு கொடுமையிலும் கொடுமையானது. கணநேரத்தில் மூர்ச்சையாகும்.

அதன் கிளையில் எந்தவொரு பறவையும் அமராது. தப்பித்தவறி ஏதாவதொரு பறவை அமர்ந்தால், அமர்ந்த கணமே செத்து விழுந்துவிடும். உற்றுப்பார்த்தால்தான் அதன் எலும்புகள் இலைகளுக்கு இடையே சிக்கியிருப்பது தெரியும். இக்கொடிய மரம் பறம்பில் எங்கெங்கு இருக்கிறது என்பதை எல்லோரும் அறிவோம். சிறுவயதிலிருந்தே அவ்விடத்தைச் சொல்லியே குழந்தைகளை வளர்க்கிறோம். ஆனால், எங்கள் யாராலும் அறிய முடியாத உண்மை என்னவென்றால், எவ்வியூரின் மிக அருகில், இரண்டாம் குன்றில் ஆட்கொல்லிமரமொன்று இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறது என்பதுதான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83f
பறவைகள் எதுவும் இம்மரத்தில் தங்குவதில்லை என்பதால் இதன் விதைகள் எளிதில் பரவுவதில்லை. ஏற்கெனவே இருக்கும் மரத்தைச் சுற்றித்தான் மற்றொரு மரம் முளைக்கத் தொடங்கும். பறம்புமலையில் எட்டு இடங்களில் ஆட்கொல்லி மரங்கள் உண்டு. ஆனால், எவ்விதத் தொடர்புமில்லாமல் தனித்த மரமொன்று இவ்விடம் எப்படி முளைத்தது என்பது இன்றுவரை எங்களுக்குத் தெரியவில்லை. அதன் ஒற்றை விதை இவ்விடம் எப்படி வந்துசேர்ந்தது என்பது பெரும் வினா. நீரோட்டப்பாதையல்ல இது. எனவே நீர் அடித்துவந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோ ஒரு விலங்கோ பறவையோ அதன் கனியை உண்ணக்கூடியதாக இருக்க வேண்டும். அதனால்தான் அதன் விதை இவ்விடம் வந்திருக்க வேண்டும். இவையெல்லாம் தேக்கன் தொடர்ந்து எங்களிடம் சொல்லியது. அவன் மரணத்தின் துயரை மரத்தை வெல்லும் அறிவாக மாற்ற முயன்றுகொண்டிருந்தான்.”

வாரிக்கையன் இறுதிப்பகுதியை ஏன் வேகவேகமாகச் சொன்னார் என்பது கபிலருக்கு இப்பொழுதுதான் தெரிந்தது. பாட்டாப்பிறை நோக்கி தேக்கன் வந்துகொண்டிருந்தார். இயல்பாய் ஏதோவொன்றைப்பற்றிப் பேசிக்கொண்டிருப் பதைப்போலக் காட்டிக் கொள்ள, பெரியவர்கள் முயற்சி செய்துகொண்டிருந்தனர். வேகமாக வந்த தேக்கன் பாட்டாப்பிறையில் ஏறி அமர்ந்தார்.

கலங்கிப்போயிருந்த கபிலர் அகத்தையும் முகத்தையும் மாற்றப் பெரிதும் முயன்றார். தேக்கனிடம் இதுவரை கேட்காத கேள்வியைக் கேட்டு, பேச்சினை வேறுபக்கம் கொண்டுசெல்ல வேண்டும் என்று தோன்றியது. அமைதி நீடிப்பதை விரும்பவில்லை. ஆனால், எதைக் கேட்பதென்று தெரியவில்லை. தேக்கனின் கால்களைப் பார்த்தார் கபிலர். எல்லா விரல்களும் ஒன்றுபோலத்தான் இருந்தன. ஏன் இந்த எண்ணம் தோன்றியது எனத் தன்னையே இகழ்ந்துகொண்டார். மற்றவர்களும் பேசாததால் அமைதி நீடித்தது.

நீண்டநாள் கேட்க நினைத்த கேள்வி ஒன்று சட்டென கபிலருக்கு நினைவுக்கு வந்தது. தேக்கனைப் பார்த்துக் கேட்டார், “பாரி முல்லைக் கொடிக்குத் தேரைக் கொடுத்தான் என்று பாணர்கள் சமதள மக்களிடம் பாடித் திரிகிறார்களே, அது உண்மையா?”

பாட்டாப்பிறையில் இருந்த யாருக்கும் இதுபற்றித் தெரியவில்லை. ஒரு பெரியவர் மட்டும் சொன்னார், “அவன் கொல்லிக்காட்டு விதையவே கொடுத்தவனப்பா. தேரெல்லாம் ஒரு பொருட்டா?” என்று மட்டும் எதிர்க்கேள்வி கேட்டார். ஆனால், கபிலர் கேட்டதற்கான பதில் வரவில்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83g
தேக்கனுக்கு இதென்ன கேள்வி என்று பட்டது. `படர வழியின்றி ஒரு கொடி இருந்தால், அதற்கு வழியமைக்கும் வேலையை எல்லோரும்தானே செய்வார்கள். இதனைப் பெரியதாய் பாணர்கள் பாடுவதற்கு என்ன இருக்கிறது?’ என  நினைத்தார்.

‘சரி பாரியிடமே கேட்டுவிடுவோம்’ என்று கபிலரை அழைத்துக்கொண்டு வேகவேகமாக மேல்மாடத்துக்கு வந்தார் தேக்கன். வேகத்துக்குக் காரணம், தவழுங்கொடி மட்டுமன்று, தளும்பும் குவளையும்தான். அங்கே காலம்பனும் பாரியும் இருந்தனர். கபிலரின் வருகைக்காக, தொடங்காமல் காத்திருந்தனர்.  நுழைந்ததும் கபிலர் சொன்னார், “குவளையை ஏந்தும்முன் எனக்கொரு விடை தெரியவேண்டும்!”

கபிலரிடமிருந்து அவ்வளவு அவசரமாக முன்வரும் கேள்வியை எதிர்கொள்ளும் ஆவல் பாரியின் முகத்திலே தெரிந்தது.

கபிலர் கேட்டார், “நீ முல்லைக்கொடிக்குத் தேரைக் கொடுத்தாய் என்று பாணர்கள் பாடுகிறார்களே, அது உண்மையா?”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 8:38 pm

heezulia wrote:12.05.2018

82 வது பாகம் இந்த மாசம் 11ஆம் தேதிதானே வந்திருக்கு.

இப்படி காப்பி பேஸ்ட் செய்றதுக்கு எதுக்குங்க.................... படிக்கணும். ஒரு பாகத்துக்கு ஒரு மூணு நிமிஷம், அதிகம்னா அஞ்சு நிமிஷம் போதும். காலைல ஒரு அரை மணிநேரம், சாய்ங்காலம் அரை மணி நேரம்னு ஒரு நாளைக்கு 12 பாகம் அனுப்பிறலாமே. இன்னும் பதினஞ்சு நிமிஷம் அதிகமா செலவழிச்சா 15 பாகம் அனுப்பலாம். நீங்கதான் 55பாகம் அனுப்பிட்டீங்களே. ரெண்டே நாளைல 82ஐயும் முடிச்சிறலாம்.

இது எப்படி இருக்கு?

Heezulia மீண்டும் சந்திப்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1268865

நான் ஒரு பாகம் படித்து முடித்தவுடன் இங்கு அதை பகிர்கிறேன்ங்க ... புத்தகமா இருந்தா அப்படியே படிச்சிகிட்டே இருக்கலாம் ... இன்று இடையில் "சூப்பர் நேச்சுரல்" சீசன் 13 தொடர் 22 வேறு பாத்தேன் ...  சிரி
அப்பொழுது தான் தோன்றியது "பொன்னியின் செல்வனை " படமாக எடுக்க முயன்று பலர் தோற்றத்துக்கு பதில் ஆங்கிலத்தில் வரும் தொடர்களை போல தமிழில் திரைஉலகினர் உருவாக்க முயற்சிக்கலாம்  என்று .. ரிலாக்ஸ்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 8:59 pm

செம்மாஞ்சேரலுடன் நடந்த போர்தான் பறம்புக்கு எல்லாவகையிலும் புதிய தொடக்கத்தை உருவாக்கியது. அப்போரில்தான் குதிரைப்படையின் ஆற்றலைக் கண்டான் பாரி. ஏறக்குறைய சேரனின் குதிரைப்படையிலிருந்த மூன்றில் இருபங்குக் குதிரைகளை வெற்றிகரமாகக் கைப்பற்றினான். குதிரைகளைப்பற்றித் தெரிந்துகொள்வதும் பயில்வதும் பயிற்றுவிப்பதுமாக, புதிய பணிகள் தொடங்கின. முழுமையும் மலையுச்சிப்பகுதியான பறம்பின் நில அமைப்பிற்கு ஏற்ப குதிரைகளை எளிதில் பயிற்றுவிக்க முடியாது என்று சிலர் கூறினர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83a
தொடக்கத்தில் அந்தக் கூற்று உண்மைபோலத்தான் தோன்றியது. ஆனால், எங்குமில்லாத புல்வகையான தும்பையிலையும் முயற்புல்லும் குதிரைகளின் வாய்ச்சுவைக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தன. அது அவற்றின் குணமாற்றத்துக்கு அடிப்படையாய் அமைந்தது. மனித இயல்போடு அவை தம்மைப் பிணைத்துக்கொள்ள இயற்கையின் எண்ணற்ற தன்மைகள் இயைவு செய்தன. பறம்பின் வீரர்களோடு உரசி நின்ற குதிரைகள் எளிதில் விலகவில்லை. அதன்பின் அவை பறம்புக்கான தன்மைமாற்றத்தை அடையத்தொடங்கின. இப்பொழுது நிலைமை முற்றிலும் வேறுவிதமாக மாறிவிட்டது. பல தலைமுறைக் குதிரைகள் பறம்பில் அலைந்து கொண்டிருக்கின்றன. பறம்பின் மருத்துவர்கள் குதிரையை எவ்வித நோயிலிருந்தும் காக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்துவிட்டனர்.
செம்மாஞ்சேரலுடனான போர்தான் மாற்றத்திற்கான கண்ணைத் திறந்துவிட்டது என்பான் பாரி. போர் முடிந்த அன்று வெற்றிக் கொண்டாட்டத்தில் பறம்புநாடே திளைத்துக் கிடந்தது. பாரியின் தலைமையில் நடந்த முதற்போர்; அதுவும் பேரரசனாகப் புகழப்படும் சேரனை எதிர்த்து. அவனது குதிரைகளில் பெரும்பகுதியைப் பறித்துக்கொண்டு அவனை வீழ்த்தி முடித்த போர்முறை பலரையும் வியப்பிலாழ்த்தியது. இளைஞனான பாரியின் சாதனையிதுவெனப் போற்றிப் பாடப்பட்டது. கொண்டாட்டங்கள் அளவற்று நிகழ்ந்தன.

ஆனால், பாரியின் முகத்தில் அதற்கான மகிழ்வு இல்லை. அதனைக் கவனித்தான் வாரிக்கையன். தேக்கனின் மகன்கள் இறந்ததால் பாரி மிகவும் சோர்வுற்று இருக்கிறான் என்றுதான் முதலில் நினைத்தான். ஆனால், அதுமட்டும் காரணமல்ல என்று பின்புதான் தெரிந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83b
சேரவீரன் ஒருவன் எறிந்த ஈட்டியொன்றினை பாரி எப்பொழுதும் உடன் வைத்திருந்தான். கைப்பற்றப்பட்ட ஆயுதத்தை நினைவுக்காக வைத்திருக்கிறான் என்றுதான் வாரிக்கையன் எண்ணினான். ஆனாலும் பாரியை இளைஞனாக மட்டுமே நினைத்துவிட முடியாது. அவனது அறிவுக்கூர்மை அளவிடற்கரியது என்பதைப் போர்முனையிலும் கண்டு விட்டுத்தான் வந்துள்ளோம் என்று நினைத்தபடியிருந்தான் வாரிக்கையன்.
பாரியின் ஆழ்ந்த சிந்தனைக்கான காரணம் விரைவில் தெரியவந்தது. பறம்பின் கொல்லர்களை அழைத்து, தன்னிடம் இருந்த அம்பினைப்போன்ற நீண்ட ஆயுதத்தைக் காண்பித்தான். அவர்கள் வாங்கிப் பார்த்தனர். இரலைமான் கொம்பினைப்போன்று முறுகிய வடிவுடைய ஆயுதம் அது.  கொல்லர்கள் நீண்டநேரம் பார்த்தபடி நின்றனர்.

“நாம் இரும்பினை வைத்துத்தான் ஈட்டியையும் வேல்முனையையும் உருவாக்குகிறோம். ஆனால், அவற்றைத் திருகி முறுக்க முடிவதில்லை. நமது ஆயுதங்கள் ஒரே நேர்கோடாக மட்டுமே நீண்டு இருக்கின்றன. ஆனால், இவர்கள் இரும்பினைத் திருகி முறுக்கியுள்ளனர். இது எப்படிச் சாத்தியமானது. இது எந்த வகை இரும்பு? இதனை உருவாக்கும் நுட்பவேலைகளை நாம் எப்படி அறியப்போகிறோம்?” வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83c

பாரி கேள்விகளை எழுப்பினான். பறம்பின் கொல்லர்கள் அதற்கான விடையைக் கண்டறிய இரவு பகலாய் உழைத்தனர். சிறுபாழி நகரில் அமைந்த தொழிற்கூடங்கள் வெவ்வேறு வகைகளில் வடிவமாற்றம் அடைந்தன. நெருப்பு எரியும் உலை, தாதுக்களை நெருப்பிலிட்டு எடுப்பதற்கான நீள்வடிவத்தொட்டி. பக்கச்சுவர், ஊதுந்துருத்தி என எல்லாம் வெவ்வேறு வடிவங்களாக மாற்றமடையத் தொடங்கின.

இரும்பை உருவாக்கத் தேவைப்படும் தாதுக்களிமண் கட்டிகள் ஒரே இடத்தில்தான் எடுக்கப்பட்டு வந்தன. ஆனால், அவை மூன்று இடங்களிலிருப்பதை அறிந்து மூன்றையும் எடுத்து வந்தனர். மூன்றின் தன்மையும் நிறமும், வெவ்வேறானவையாக இருந்ததால், மூன்றையும் மூன்றுவிதமாக உலையிலிட்டு வடிக்கும் வேலையைச் செய்தனர்.

பறம்பின் பேராற்றல் நெருப்பினை ஆளும் அதன் சக்தி. நெருப்பின் அளவையும் சுடரின் உள்ளிறுக்கத்தையும் அவர்களால் கட்டுப்படுத்தவும் தீர்மானிக்கவும் முடிந்தது. அது இரும்பின் மாற்றம் எந்த அளவில் என்னவாக மாறுகிறது என்பதைத் துல்லியமாக அறியவும், அதே அளவினைப் பேணவும் ஏதுவாக இருந்தது.

உள்ளூற்றிய உலோகம் வெப்பமாகிச் செந்நிறமடையும் பருவத்தைக் குறிக்க செவ்வெப்பம் எனவும், தவிட்டுநிறப் புள்ளிகளோடு உலோகம் ஒளிர்செந்நிறத்தை அடையத் தேவையான வெப்பத்தைக் கருஞ்செந்நிற வெப்பமெனவும், தவிட்டுநிறம் மாறி முற்றாக வெண்மையடைய வெண்ணிற வெப்பம் எனவும் பெயரிட்டனர். வெண்ணிற வெப்பத்தைத் தாண்டி மேலும் வெப்பமாக்கும்பொழுது அது உருகும் தன்மையுடையதாகிறது என்பதையும் கணித்தனர்.

இவ்வெப்பத்தை உருவாக்க ஊதுந்துருத்தியில் காற்றினை எந்தளவிற்கு எவ்வளவு காலம் செலுத்துவது என்பதனையும் துல்லியப்படுத்தினர். பெண்யானை துதிக்கையில் மூச்சுவிடுவதைப் போன்ற மிதமான வேகத்தில் தொடங்கி, சீற்றம் காணும் காட்டெருமையின் மூச்சுக்காற்றைப் போன்ற முழுவிசையோடு காற்றினைச் செலுத்துவதற்கான குறிப்புகளைக் கணித்தனர்.

பறம்பின் வடிவக்கலைஞன் பல்வேறு வடிவங்களை வரைந்தபடியே இருந்தான். கணிதக்கலைஞன் எந்நேரமும் காட்சிகளை எண்களாக மாற்ற முயன்றுகொண்டேயிருந்தான். இரும்பு திருகி வளையத் தொடங்கியது. திருகும் இரும்பின் சேர்மானம் கண்டறியப்பட்டவுடன் நிலைமை தலைகீழாக மாறியது. எல்லா ஆயுதங்களையும் வெவ்வேறு வடிவங்களில் வடிவமைக்கவும் வலிமைப்படுத்தவும் அவர்களால் முடிந்தது.

கொடிமரவில் கார்முகங்கொண்டது. வில்லின் இருதலைக் குதைகளிலும் கனம் கூடியது. அதற்குத் தகுந்தாற்போல இழுபடும் நாண் புதுவகையில் உருவாக்கப்பட்டது.  பாய்ந்து செல்லும் அம்பின் தொலைவு மூன்று மடங்கு அதிகரித்தது. கூர்வாளும் சிறுவாளும் ஈர்வாளும் கைவாட்களாக மாறின. கழுமுட்சூலம் ஏந்தி வாரிக்கையன் நின்றதைப் பார்த்தபொழுது காடே நடுங்கியது. ஆயுதங்களின் கூர்முனையும் ஆற்றலும் அளவிடற்கரியனவாகப் பரிணமித்தன.

யவனத்தொடர்பால், தமிழ்நிலத்தின் பல மாற்றங்கள் சேரமண்ணில்தான் முதலில் தொடங்கின. வலிமைமிகுந்த குதிரைகள் தொடங்கி வளமையான போர் ஆயுதத்துக்கான பொறிகள் வரை பலவும் சேரமண்ணில் காணக்கிடைத்தன. சேரனுடனான பெரும்போரில் பறம்பு வெற்றிபெற்றதால் அவற்றுள் பலவும் பறம்புக்கு அறிமுகமாயின. நவீன மாற்றங்கள் பலவும் பறம்புக்குள் நுழைந்து பாரம்பர்யமான அறிவுச்சேகரத்தோடு இணைந்து பெருவளர்ச்சி அடைந்தன.

இது தற்செயல்தான்; ஆனால், பறம்பின் வலிமையை அது எண்ணிலடங்காத மடங்குகளாகப் பெருக்கிவிட்டது. பாரம்பர்ய அறிவுச்சேர்மானத்தோடு நவீனக் கண்டுபிடிப்புகள் இணையும்பொழுது அது மதிப்பிட முடியாத ஆற்றலைப் பெற்றுவிடுகிறது. சிறுபாழியில்தான் எல்லாவித ஆயுதங்கள் செய்யும் தொழிற்கூடங்களும் இருக்கின்றன. ஊதுந்துருத்தி காற்றை ஊதிக்கொண்டே இருந்தது; கரடி கிண்டுகிற ஈசல் புற்றில் இடைவிடாது ஈசல்கள் பறப்பதைப்போல துருத்தி ஊதும் அடுப்பிலிருந்து இடைவிடாது நெருப்புப்பொறிகள் பறந்தவண்ணமே இருந்தன.

செய்யப்பட்ட ஆயுதங்களின் முனையைத் தட்டிக் கூர்மையாக்கும் வேலைநடப்பதால் உலோக ஒலி கேட்டுக்கொண்டேயிருந்தது. சிறுபாழி கடந்து எவ்வியூர் நோக்கி வந்த பாணன் ஒருவன், தொடர்ந்து எழும் உலோக ஒலி கேட்டு என்ன இது என வினவினான்.

``ஆயுதங்களைத் தட்டிக் கூர்மையாக்குகிறார்கள்” என்று விடை கூறினர் பறம்பு மக்கள்.

அப்பொழுது அவன் சொன்னான், “பொதினி மலையில் ஆயுதங்களை உலோகத்தால் தட்டிக் கூர்மையாக்குவதற்குப் பதில், வட்டவடிவக் கல் ஒன்றினை உருட்டியபடி அதன் மேல் உரசுகிறார்கள். அப்படி உரசும்பொழுது அந்த ஆயுதம் அளவிடற்கரிய கூர்மையை அடைகிறது.”

செய்தி பாரிக்கு எட்டியது. “இரும்பினை உரசிக் கூர்மையாக்கும் கல் இருக்கிறதா?” என்று வியப்போடு கேட்டான்.

“ஆம், இருக்கிறது. நான் நேரில் பார்த்தேன். செய்யப்பட்ட ஆயுதத்தை ஒருநாள் முழுவதும் தட்டிக் கூர்மையாக்குவதைவிட, சிறுபொழுது அக்கல்லில் உரசி அதிகூர்மையாக்குகின்றனர். அது ஒரு அரியவகைக் கல்” என்றான் பாணன்.

‘நம்பும்படியாக இல்லையே’ என்று அவர்கள் ஐயங்கொள்வதைப் பார்த்தபடி மீண்டும் முதுபாணன் சொன்னான், “பொதினி மலையின் வேளிர்குலத்தலைவன் மேழகன் என்னிடமே சொல்லியுள்ளான். இக்கல்லை முதலில் கண்டறிந்தவர்களைக் காரோடர்கள் எனப் பெயரிட்டு அழைத்தான். நான் அவ்வரியவகைக் கல்லை நேரில் பார்த்திருக்கிறேன்” என்றான்.

ன்றிரவு கூத்து முடிந்து கலைஞர்கள் புறப்படும் முன்பே பாரி புறப்பட்டுவிட்டான் என்பது முதுபாணனுக்குத் தெரியாது. பதினான்கு வேளிர் குடிகளில் ஒன்றுதான் பொதினிமலை வேளிர்குடி. அவர்களும் தங்களின் ஆதிச்செல்வத்தைப் பெரும்பாழியில்தான் வைத்துள்ளனர். அதனைக் காக்கும் பணியைப் பறம்பு மக்கள்தான் பார்த்துக்கொள்கின்றனர். ஆனாலும் தலைமுறைக்கு ஒருமுறையோ, இருமுறையோதான் ஆட்களின் முகம்பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பாரி மிகவும் இளையவனாதலால் பொதினி மக்களை அவன் பார்த்ததில்லை. ஆனால், அவர்களைப் பற்றி தந்தை சொல்லக் கேட்டுள்ளான். பறம்பின் மூத்தவீரனான வாரிக்கையனும் கூழையனும் சில வீரர்களும் கொல்லர்கள் சிலருமாக மொத்தம் பத்துப்பேர் உடன்வர, பொதினி நோக்கிப் புறப்பட்டான் பாரி. பறம்பு நாட்டுக்கும் பொதினி மலைக்கும் நீண்ட தொலைவு இடைவெளி இருந்தது. பயணம் முடிந்து திரும்பச் சில மாதமாகலாம் எனச் சொல்லித்தான் சென்றனர்.

தென்திசை நோக்கிப் பயணம் தொடங்கியது. பயணம் எப்போதும் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கும். அதுவும் அடர்காட்டுப் பயணத்தில் இருக்கும் வியப்புகள் எண்ணிலடங்காதவை. பெருங்காட்டிற்குள் நிலவும் பேரமைதி எந்தக் கணத்திலும் விழிப்பைக் கோரக்கூடியது. அவர்கள் இரவுபகலாக நடந்தனர். உறங்கும்பொழுதும் புலன்கள் விழித்திருந்தன.

வாரிக்கையன்தான் பொதினிக்கான வழியமைப்பைச் சொன்னான். “எண்முகடு கடந்தால் கீரிச்சொளவு வரும். அதிலிருந்து நிலையருவிகள் நான்கைக் கடந்தால் சிறகுநாவல் காடிருக்கும். அங்கிருந்து கூப்பிடும் தொலைவில் ஓரிலைத்தாமரைத் தெப்பம் உண்டு. தெப்பக்கரையில் நின்று பார்த்தால் ஓடும் ஆறு தெரியும். ஆற்றங்கரையில் கீழ்நோக்கி நடக்க பொதினியை அடைவோம்” என்றான்.

முன்னோர்கள் சொல்லிவைத்துள்ள வழி இது. நாட்கணக்கில் நடந்து எண்முகடு கடந்து கீரிச்சொளவுக்கு வந்து சேர்ந்தனர். அப்பெரும் சொளவு நிறைய கீரிகளே இருந்தன. மண்ணெங்கும் கீறிப்புழுக்கைகள் கால்வைக்க முடியாதபடி கிடந்தன. அவற்றைக் கடந்து நிலையருவி அடைந்தனர். மலையெங்கும் ஆங்காங்கே அருவிகள் கொட்டிக்கொண்டிருந்தன. கோடைமலை என்று அழைக்கப்படும் அம்மலைத்தொடரின் நான்காம் அருவியைக் கடந்து, சிறகுநாவல் காட்டினை அடைந்தனர்.

அழகிய நாவல் பழங்கள் எங்கும் உதிர்ந்து கிடந்தன. ஆனால், ஒவ்வொரு பழத்தின் இருபக்கங்களிலும் சிறகுகளைப்போல இலைகள் ஒட்டியிருந்தன. பாரி இவ்வகை நாவலைப் பார்த்ததில்லை. நாவலின் சிறகுகளை விரித்துப்பார்த்தான். உதிரப்போகும் சறுகுகளைப் போல இருந்தன; ஆனால் உதிரவில்லை.

வாரிக்கையன் சொன்னான், “பழங்கள் மரத்தில் இருக்கும் வரை விரிந்த சிறகுகளைப்போல இவ்விரண்டு இலைகளும் பழத்தையொட்டி விரிந்திருக்கின்றன. உதிரும்பொழுது கீழே விழுந்து பழம் தெறித்துவிடாமலிருக்க இயற்கை செய்த ஏற்பாடிது. விரிந்த சிறகுகளோடுதான் பழம் மேலிருந்து உதிரும். காற்றில் மிதந்தபடிதான் அது மண்ணை வந்துசேரும்; அதனால் பழம் அடிபடாது. அதன் பிறகுதான் இலைகள் காயத் தொடங்குகின்றன. ஆனாலும் ஒருபொழுதும் இவ்விலைகள் பழத்தை விட்டு உதிராது.”
 
பாரி வியப்போடு அதனைப் பார்த்தான். வாரிக்கையன் சொன்னான், “காற்றடி காலத்தில் இப்பழம் மரத்திலிருந்து உதிரும்பொழுது நேராகக் கீழே விழாமல் நீண்ட தொலைவு காற்றோடு போகிறது. இதன் இலையமைப்பு எளிதில் தரையிறங்கவிடாது. காண்போர் இதனைப் `பறக்கும் பழம்’ என்று சொல்வர்.”

பாரி வியப்பு குறையாமல் கேட்டுக்கொண்டிருந்த பொழுது கூழையன் சொன்னான், “என் கிழவன் இந்தப் பழத்தைப்பற்றி ஒரு கதை சொன்னான். இது பெண்பழம் என்றும் இறகுகொண்டு மூடி, தன்னை எப்பொழுதும் பாதுகாத்துக்கொள்ளும் என்றும், பெரும்பாலான பழங்கள் இரவில்தான் உதிருமென்றும். முழுநிலா இரவில் காற்றில் பறக்கத் தொடங்கும் இப்பழங்கள் பொதினியின் குலமகளை எந்நேரமும் மொய்த்துக்கிடக்கின்றன.”  

‘நம்பும்படியாகவா இது இருக்கிறது?’ என்ற கேள்வி எல்லோர் மனதிலும் உதித்தபடிதான் இருந்தது. சிறகு முளைக்கத் தொடங்கும் சிறுகுருவி போல உதிர்ந்து கிடக்கும் சிறகுநாவலின் அழகை நீண்டநேரம் பார்த்து மகிழ்ந்தான் பாரி.

அவர்கள் தொடர்ந்து நடந்தனர். வாரிக்கையன் சொன்னான், “பொதினியில்தான் மிக அதிக மருத்துவக்குடிகள் இருக்கின்றனர். எண்ணற்ற தாவரங்களையும் தாதுக்களையும் அறிந்து அதனை மருந்தாக மாற்றியுள்ளனர்.” அனைவரும் அதனை வழிமொழிந்தனர். வேளிர் கூட்டத்தில் மருத்துவ அறிவின் உச்சங்கண்டோர் பொதினிவாழ் வேளிர்களே என்று முன்னோர் சொல் கேட்டுள்ளதாகக் கூழையன் சொன்னான். பேசியபடி ஓரிலைத் தாமரைத் தெப்பத்தைக் கடந்து ஆற்றின் ஓரம் இறங்கத் தொடங்கினர்.

கீழே இருந்த சிறுகுன்றில் குடில்கள் இருப்பது தெரிந்தன. இரவு இங்கே படுத்துறங்கி, காலையில் எழுந்து அக்குன்று நோக்கி நடப்போம் என முடிவுசெய்தனர்.

உறங்கும் இரவுகளில் கனவுகளை நிறுத்தும் வல்லமையை மனிதன் ஒருபொழுதும் பெற்றுவிட முடியாது. பழங்கள் பறப்பது நம்பும்படியாகவா இருக்கிறது எனக் கேட்ட பாரியின் கனவில் பழங்கள் பறந்துகொண்டிருந்தன. அவை பொதினியின் குலமகளை அடையுமா என்று அவன் எண்ணிக்கொண்டிருந்தபொழுது காலடியோசை கேட்டபடியிருந்தது. யாரோ நம்மைச் சுற்றி நிலைகொள்கின்றனர் என்பதைப் பாரி உணர்ந்தான்; ஆனாலும் அசைவின்றிப் படுத்திருந்தான். 

பொழுது விடியும்பொழுது பொதினி வீரர்கள் ஆயுதங்களோடு சூழ்ந்திருந்தனர். எழுந்து உட்கார்ந்தான் பாரி. சற்றுமுன் எழுந்த வாரிக்கையன் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83d
பாரி கேட்டான், “நள்ளிரவே வந்துவிட்டீர்களே, ஏன் அமைதிகொண்டே நின்றீர்கள்?”

“கடம்பமரத்தின் அடிவாரத்தில் வேலூன்றிப் படுத்திருப்பவர்களை நாங்கள் தாக்கமுடியாதே. காப்பதுதானே எங்களின் கடமை” என்றான் வந்துள்ள வீரன்.

கடம்பமரம் முருகனின் உறைவிடம். அம்மரத்தின் அடிவாரத்தில் படுத்துறங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் காப்பது வேளிர்களின் கடமை. பறம்பின் மக்கள் அங்கு படுத்துறங்கியதும் பொதினிவீரர்கள் அவர்களைக் காத்து நின்றதும் வேளிர் குலங்களின் காலகாலத்துப் பழக்கம்.

வந்துள்ளது யாரென விசாரித்துவிட்டு, பொதினித்தலைவன் மேழகனுக்குச் செய்தி சொல்ல வீரர்கள் ஓடினர். வேள்பாரி வந்துள்ளான் என்று செய்தி சொல்லப்பட்டது. செம்மாஞ்சேரலுடனான போர், பாரியின் பெயரை நிலமெங்கும் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டது. பொதினித்தலைவன் மேழகன், பாரியை எதிர்கொண்டு வரவேற்க மலையேறி வந்தான்.

பொதினித்தலைவனுக்குக் கொடுப்பதற்காகப் பறம்பின் ஆதிக்கள்ளான ஆலப்பனைக் கள்ளினை மூங்கிற்குடுவை நிறைய எடுத்து வந்திருந்தனர். எதிர்வந்த மேழகனோ பொதினியின் பூர்வக்கள்ளான ஐஞ்சுவைக்கள்ளினைக் கொடுத்து வரவேற்றான்.

நான் நினைத்ததைவிட இளைஞனாகவும் மாவீரனுக்குரிய உடல் தகுதியோடும் பாரி இருக்கிறான் என்று மேழகன் புகழ்மாலை சூடியபடியிருந்தான். வரவேற்பும் விருந்துமாக, பின்வந்த நாள்கள் கழிந்தன. செங்காற்சேவலடித்து மேழகன் தொடர்ந்து விருந்து வைத்தான். விருந்தின் சுவையில் மகிழ்ந்த பாரி, மூன்றாம் நாள்தான், தான் வந்த நோக்கத்தைத் தெரிவித்தான்.

மேழகன் சற்றே வியந்தான். இச்செய்தி அதற்குள் அங்கு எப்படிப் போனது எனச் சிந்தித்தபடியே சொன்னான், “இரும்பினைக் கூராக்கும் அக்கல்லுக்குச் சாணைக்கல் என்று பெயரிட்டுள்ளோம். அதனை எப்படி வெட்டியெடுத்து உருளையாய்ச் செய்து முடிக்கிறோம் என்பதை உங்களை அழைத்துச்சென்று காண்பிக்கிறேன்” என்றான்.

“காண்பித்தால் மட்டும் போதாது. எங்களுக்கு நீங்கள் அதனைக் கொடுத்துதவ வேண்டும்” என்றான் வாரிக்கையன்.

மேழகன் சொன்னான், “எம்குலம் கண்டறியும் எதனையும் பயன்படுத்திக் குறைதீர்ப்போம்; பயன்பாட்டுக்குக் கொடுத்தனுப்பும் வழக்கமில்லை. ஆனாலும், வேளிர்குலத்தோடு ஒரு மாற்றைச் செய்யலாம் என்பது முன்னோர் வாக்கு. எனவே, நீங்கள் கேட்கும் ஒன்றினை என்னால் தர முடியும்” என்றான்.

மேழகனின் சொல் கேட்டு எல்லோரும் மகிழ்ந்தனர். சாணைக்கல்லினைப் பெற்றுச்செல்ல இருந்த தடை அகன்றது. மறுநாள் சாணைக்கல் இருக்கும் இடத்துக்குச் சென்றனர். அதனை எடுத்து அரக்குக் கலந்து ஓர் உருளையாக மாற்றிக் காயவைக்கின்றனர். நன்றாகக் காய ஒரு வாரம் ஆகும் என்றார் மேழகன். காத்திருந்து பெற்றுச்செல்கிறோம் என்று பொறுத்திருந்தனர்.

நாள்தோறும் பொதினிமலை மருத்துவர்களின் செயல்களையும் தொழில்கலைஞர்களின் செயல்களையும் அவர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர். ஆனால், பாரி வேறொன்றைக் கவனித்தபடியிருந்தான். வந்த அன்றே மேழகன் மகள் ஆதினியைப் பார்த்துவிட்டான். ஆனால், பாரியின் கவனம் முழுவதும் சாணைக்கல்லின் மீதே இருந்ததால் வேறுபக்கம் திசைதிரும்பவில்லை. பலமுறை ஆதினியின் கண்கள் பாரியைக் கடந்துபோக முடியாமல் தவித்ததை மற்றவர்கள் பார்த்தனர்.

சாணைக்கல்லினைத் தருவதாக மேழகன் சொன்ன பின்னர்தான் பாரிக்கு வேறு சிந்தனையின் பக்கம் எண்ணங்கள் போகத் தொடங்கின. ஆனால், அதன்பின் ஆதினி பாரியின் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஏன் இந்த மாற்றம் என்று அவள் தோழிகளுக்கு விளங்காததைப்போல பாரிக்கும் விளங்கவில்லை. சற்றே குழப்பத்தில்தான் இருந்தான் பாரி.

அவள் தன்னைத் தவிர்க்கத் தொடங்கிய பிறகுதான் அவளைப் பார்த்தாக வேண்டும் என்ற வேட்கை அதிகரிக்கத் தொடங்கியது. ஆதினியோ அவன் கண்ணிற்படாமல் கடந்துகொண்டிருந்தாள். அவள் தவிர்க்கும் கணமெல்லாம் தவிப்பு மேலெழுந்தபடியிருந்தது.

பாரியைத் தவிர மற்ற அனைவரும் பக்கத்திலிருந்த மருத்துவக் குடியிருப்புக்குப் போயிருந்தனர். வாரிக்கையனும் கூழையனும் ஆளுக்கு ஒரு பக்கமாகப் போய்ப் பார்த்து வருவோம் என்று சொல்லி இரு கூறாகப் பிரிந்து சென்றனர். கூழையன் போனதிசையில் எரியும் நெருப்பின்மேல் சிரட்டையை வைத்து அதில் நீரூற்றி மருந்தினைக் காய்ச்சிக்கொண்டிருந்தார் மருத்துவர். அதனைப் பார்த்த கூழையனுக்கும் மற்றவர்களுக்கும் பெரும்வியப்பாக இருந்தது. நெருப்பில் சிரட்டை எரியாமல் எப்படி இருக்கிறது, நீர் எப்படிக் கொதிக்கிறது எனக் கேட்டனர்.

அம்மருத்துவர் சொன்னார், “பிரண்டையின்மேல் சிரட்டையை நன்றாகத் தேய்த்துக் காயவைக்க வேண்டும். பின்னர் சிரட்டையைப் பக்குவமான சிறுநெருப்பிலே வைத்தால் சிரட்டை எரியாது. உள்ளே இருக்கும் நீர்தான் கொதிக்கும்” என்றார். பிரண்டை நெருப்பைக் கடத்தும் ஆற்றலோடு இருப்பதை அம்மருத்துவன் எளிய முறையிலே சொல்வதை வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர் கூழையன் கூட்டத்தினர்.
வாரிக்கையனோடு போனவர்கள் அவ்வூர் முழுவதும் சுற்றிவந்து ஒரு குடிலில் உட்கார்ந்தனர். தாகமாக இருந்ததால் குடிக்க நீர் கேட்டான் ஒருவன். உள்ளிருந்த பெரியம்மா ஒருத்தி, “சிறிது பொறப்பா. எலிக்குத் தீனிவைத்துவிட்டு வருகிறேன்” எனச் சொல்லி உள்ளே போனாள். இவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தின் ஓரம் பெரும்பூனை ஒன்று நின்று கொண்டிருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83e
பூனை இருக்குமிடத்தில் எப்படி எலிக்குத் தீனி போடுவாள் எனக் குழம்பிக் கொண்டிருக்கையிலே கைநிறைய பயறுகளை எடுத்துவந்து வாசலோரம் தூவிவிட்டாள். செடிகொடிகளின் இடுக்குகளுக்குள்ளிருந்து ஏழெட்டு எலிகள் வந்து அதனை மேயத்தொடங்கின. பூனை அவற்றின்மீது பாயப்போகிறது என நினைத்து சற்றே பதற்றத்தில் வாரிக்கையனும் மற்றவர்களும் உட்கார்ந்திருந்தனர். ஆனால், பூனை எதுவும் செய்யாமல் அப்படியே இருந்தது.

வாரிக்கையன் பேரதிர்ச்சிக்கு உள்ளானான். எலியை விரட்டிப் பிடிக்காத பூனை எப்படி இருக்க முடியும்? அவனால் நம்பவே முடியவில்லை. மேலும் கீழுமாகப் பார்த்து விழித்துக்கொண்டிருந்தான். பெரியம்மா குவளையில் தண்ணீர்கொண்டு வரும்பொழுது வாரிக்கையன் கேட்டான். “இந்தப் பூனை ஏன் எலியைப் பிடிக்காமல் உட்கார்ந்திருக்கிறது?”

“இதென்ன கேள்வி? அந்தப் பூனைக்கு அருகில் இருப்பது என்ன செடி?”

வாரிக்கையனும் மற்றவர்களும் அந்தச் செடியை உற்றுப்பார்த்தனர். அவர்களால் அது என்ன செடியெனக் கண்டறிய முடியவில்லை. அவர்கள் விழிப்பதைப் பார்த்தே அவள் சொன்னாள், “அது பூனைவணங்கி.”
அவர்களுக்கு அப்பொழுதும் புரியவில்லை.

“அந்தச்செடியின் வாசனைபட்டால் சிறிதுநேரம் பூனைக்கு மயக்கம் வந்துவிடும். அதனால் எதுவும் செய்யமுடியாது. அப்படியே உட்கார்ந்துவிடும். எலிக்குத் தீனிவைக்கும் முன் பூனைக்கு அந்தச் செடியினடிவாரத்தில் சிறிது உணவு வைத்தால் போதும், தின்று முடித்தவுடன் மயங்கி உட்கார்ந்துவிடும். அப்பொழுது எலிகளுக்கு உணவிட்டால் அவை வந்து மேய்ந்துவிட்டுப் போகின்றன” என்று சொல்லிச் சென்றாள். வாரிக்கையனுக்கும் மற்றவர்களுக்கும் வாய்பேச எதுவுமில்லை.

ஊர்விட்டு வெளியேறி அவர்கள் வந்தபொழுது கூழையனும் மற்றவர்களும் வந்துகொண்டிருந்தனர். யாரும் யாருடனும் பேச்சுக்கொடுக்கக்கூட ஆயத்தமாக இல்லை. பேசாமல் வந்தனர். சரி, பாரியைப் பார்த்து அடுத்து ஆகவேண்டிய வேலையைப் பார்ப்போம் என முடிவுசெய்து பாரியைத் தேடி வந்தனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83f
சிற்றோடைக்கரையில் இருந்த செண்பகமரத்தின் அடிவாரத்தில் பாரி அமர்ந்திருந்தான். இவர்கள் வரும்பொழுதுதான் ஆதினி பாரியின் அருகிலிருந்து விலகிப் போனாள்.

இவள் தனியே வந்து பாரியிடம் என்ன பேசிவிட்டுப் போகிறாள் என்று எண்ணியபடி வந்தனர். பாரியின் அருகில் வந்து அவனது முகத்தைப் பார்த்த கூழையனும் வாரிக்கையனும் அதிர்ந்துபோயினர். நெருப்பில் சிரட்டை எரியாமல் இருப்பதைப் பார்த்தபொழுது கூழையன் முகமும், எலியின் மீது பூனை பாயாமல் இருந்தபொழுது வாரிக்கையன் முகமும் எப்படி இருந்தனவோ அவற்றைவிட அதிக மிரட்சியோடு இருந்தது பாரியின் முகம்.

என்னதான் செய்துவிட்டுப் போனாள் ஆதினி?

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 9:24 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83a
னவுகள் கலைந்த பின்னும், அவை நினைவிலிருந்து மறைவதில்லை. ஏனென்றால், கனவுகள் தோன்றுவதே நினைவுக்குழிக்குள்ளிருந்துதான். அவை மறைந்துகொள்ளும் இடமும் வெளிப்படுத்திக்கொள்ளும் இடமும் ஒன்றுதான். சிறகுநாவல்கள் மொய்த்துக்கிடக்கும் பொதினியின் குலமகளைக் கனவிலே பார்க்கும்முன் காலடியோசை கேட்டு விழிப்புற்றான் பாரி. கனவு கலைந்தது. ஆனால், அதன்பின் நினைவு கலங்கியே இருந்தது. கனவின் ஆற்றல் அதுதான்.

நாவற்பழத்தின் துவர்ப்புச்சுவை படிந்துகிடக்கும் பெண் யாராக இருப்பாள் என்ற  வினா எளிதில் உதிர்வதாக இல்லை. மேழகன் ஐஞ்சுவைக் கள் கொடுத்து வரவேற்ற கணத்திலிருந்து பாரியின் கண்கள் ஆதினியைத் தேடத் தொடங்கின. அவன் நினைவில் நாவற்பழங்கள் பறந்தபடியேதான் இருந்தன. ஆதினி மட்டும் கண்ணிற்படாமலே இருந்தாள்.

வந்தவர்கள் விருந்துண்டு மகிழ்ந்தனர். எவ்வியூர்போல மலைமுகட்டில் உள்ள ஊரல்ல பொதினி; மலையடிவாரத்துச் சிறுகுன்றின் மேல் நிலைகொண்டுள்ள ஊர். புல்வேய் குரம்பைக் குடில்கள் இதமான சூழலைக்கொண்டிருந்தன. பாரியின் கண்கள் முதன்முறையாக ஆதினியைக் கண்டபொழுது அவள் சற்றே மறைந்திருந்து அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

தான் பார்த்த கணம் சட்டென மறையும் ஒருத்தி அவளின்றி வேறு யாராக இருக்க முடியும்? அவள் மறையத் தொடங்கும்பொழுதே மனம் கண்டறியத் தொடங்கிவிட்டது. அதன்பின் மனதைக் கட்டுப்படுத்தி அழைத்துச் செல்வது எளிதல்ல. ‘இழுத்துச்செல்லுதல் இயல்பாய் வாய்க்குமோ பெண்ணுக்கு’ என்று வாரிக்கையனிடம் கேட்கவேண்டும் என்று தோன்றியது. ‘சேரனுடனான போரில் முன்களத்தில் நிறுத்தி எந்த பதிலும் சொல்லாமல் தவிக்கவிட்டவன்தானே நீ. இப்பொழுதும் விடையின்றித் தவித்தலை’ என அவன் எண்ணுவானோ என்று தோன்றியது.

இருவரும் காண்பதற்கு முன்பே ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்துவைத்திருந்தனர். செம்மாஞ்சேரலுடனான போரில் பாரி ஈட்டிய வெற்றி மலைநாடெங்கும் பரவியிருந்தது. ஆதினியின் கனவுக்குள் அவ்வெற்றிநாயகனே நிலைகொண்டிருந்தான். பாரியின் கனவுகளுக்குள் பறக்கும் நாவற்பழம் நிலைகொண்டிருந்தது. அவன் அந்தக் கதையை நம்பவில்லை. ஆனால், கதைகளால் சூழப்பட்ட ஒருத்தி, பார்க்கும் முன்பே பழக்கமாகிவிடுவாள். நன்றாகப் பழகிய ஒருத்தியை இன்னும் பார்க்கவேயில்லை என்றால் யாராவது நம்புவார்களா? காதல் இப்படித்தான் செய்யும். நீரற்ற குளத்தில் குளித்து நனைந்த கூந்தலோடு வருகிறவளுக்கு ஆடைகொடுக்கச் சொல்லிக் காதலனை அனுப்பிவைக்கும்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83b
உறக்கத்தில் பூக்கும் கனவுபோல மயக்கத்தில் பூக்கும் கனவுதான் காதல். ஆனாலும் கனவைவிட வலிமைமிக்கது. கனவு உள்ளுக்குள் மட்டுமே செயலாற்றுகிறது. தனக்குள் மட்டுமே பூக்கும் பூ. ஆனால், காதல் அப்படியல்ல; உலகத்தையே பூக்கச்செய்யும் பூ. பூத்துக்குலுங்கும் பொதினியின் இளங்காற்றினூடே திக்குத்தெரியாமல் அழைந்துகொண்டிருந்தான் பாரி.

தவித்தலைந்த அவன் கண்களுக்கு இரண்டாம் நாள் காலையில் அவள் தென்பட்டாள். மயில்கொன்றை மரத்துக்கு மலர்சூடி வணங்கிக்கொண்டிருந்த ஆதினியைத் தற்செயலாய்ப் பார்த்தான் பாரி. உடன் மேழகனும் வாரிக்கையனும் இருந்தனர். 
பார்த்த கணத்தில் பாரி நகர்தலற்று நின்றான். மேழகனும் வாரிக்கையனும் நின்றனர். ஆதினி மயில்கொன்றை மரத்தைப் பார்த்துநின்று வணங்கிக்கொண்டிருந்தாள். தான் நிற்பதற்கான காரணத்தைச் சொல்ல முடியாமல் நின்றான் பாரி. மேழகனோ அவள் மயில்கொன்றைக்கு மாலைசூட்டி வணங்குவதற்கான காரணத்தைச் சொல்ல முடியாமல் நின்றான்.

பொதினிமலைப் பெண்கள் தனக்கானவனைக் கண்டுவிட்டால் மயில்கொன்றை மரத்துக்கு மாலைசூட்டி மகிழ்வர். ஆதினி அதைத்தான் செய்துகொண்டிருக்கிறாள். அது மேழகனுக்குப் புரிந்தது. ஆனால், அதைப் பாரியிடம் சொல்லத் தயங்கி நின்றான்.
பாரியின் தயக்கம் வேறுவிதமாக இருந்தது. ‘சூட்டிய மாலையை எடுத்து அவளுக்குச் சூட்டிவிடுவோமா?’ என்று எண்ணம் ஓடத்தொடங்கியது. தான் பறம்பின் தலைவன். வந்த பணிமுடியாமல் பிற பணியில் கவனம் சிதறுவது அழகன்று எனத் தோன்றியது. எனவே, அப்பணி முடியும் வரை ஆதினியைப் பார்ப்பதில்லை என்று முடிவுசெய்து நடக்கத் தொடங்கினான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83c
அவளின் முகம்பார்க்காமல் பொழுதைக் கடத்த முயன்றான் பாரி. அது அவ்வளவு எளிதாக இல்லை. பொதினியின் இளங்காற்றும் புல்மேடும் பெருமலையும் மணக்கும் மலைவாசமும் அவனைப் பாடாய்ப்படுத்தின. ஆனாலும் மிகுந்த கட்டுப்பாட்டோடு எண்ணங்களைச் சிதறவிடாமல் இருந்தான். ஆனால், ஆதினியோ தனது நிழல் அவனது நிழலிற்படும்படி பொழுதுக்கு ஒருமுறை நடந்துகொண்டிருந்தாள். அவள் கைவீசி நடந்தபொழுது வலக்கையின் நீள்நிழல் தனது மார்பை அணைத்துச் சென்றபொழுது துடித்துப்போனான் பாரி. நிழலுக்குள் புகுந்து உடலுக்குள் வெளிவந்துகொண்டிருந்தாள் ஆதினி. என்னதான் செய்ய முடியும் பாரியால்?

மூன்றாம் நாள் மாலைநேரத்தில் பொருத்தமான சூழலில் சாணைக்கல் பற்றிய பேச்சு வந்தது. வாரிக்கையனும் கூழையனும் மிகுந்த மகிழ்வோடு அதில் பங்கெடுத்தனர். பாரி அக்கல்லினைப் பறம்புக்குத் தந்துதவ வேண்டும் என்று கேட்டான். மேழகனும் அதற்குச் சம்மதித்தான். இப்பேச்சு நடந்துகொண்டிருக்கையில் சற்று தொலைவில் நெல்லிமரமொன்றின் அடியில் தோழிகளோடு வீற்றிருந்தாள் ஆதினி. பாரி கேட்டதும் மேழகன் ஒப்புக்கொண்டதும்ஆதினியின் காதிலே விழுந்தன.

ஒருகணம் திகைத்தாள் ஆதினி. ‘பாரியா இதனைக் கேட்டது?’ என மீண்டுமொருமுறை மனதுக்குள் உறுதிப்படுத்தினாள். அவள் கண்கள் கலங்கின. சட்டென அவ்விடம் விட்டு அகன்றாள். உடனிருந்த தோழிகளுக்குக் காரணம் புரியவில்லை.
மேழகன் சாணைக்கல்லினைத் தர ஒப்புக்கொண்டதற்குப் பிறகுதான் பாரியின் மனம் இயல்புநிலைக்குத் திரும்பியது. அதன்பின்தான் அவன் கண்கள் ஆதினியைத் தேடத் தொடங்கின. அவள் நெல்லிமரம் விட்டு அகன்றிருந்தாள். தேடிப் பார்த்தான், அவளைக் காணவில்லை. மறுநாள் காலையில் எழுந்ததும் பாரியின் கண்கள் அவளைத்தான் தேடின. மேழகன் வந்தான். சாணைக்கல் இருக்குமிடம் செல்ல எல்லோரும் ஒன்றுகூடினர். ஆனால், ஆதினி கண்ணில் தட்டுப்படவேயில்லை. மூன்று நாள்களாகத் தனது நிழலோடு உரசி நகர்ந்த அவள், இப்பொழுது கண்பார்க்கும் வெளியிலேயே இல்லையே ஏன் எனப் புரியாமல் திகைத்தான்.

ஆதினியின் தோழிகளுக்கும் இது புரியவில்லை. பார்த்த கணம் முதல் பாரியை விட்டு அகலாத ஆதினியின் கண்கள் இப்பொழுது அவனிருக்கும் திசைப்பக்கமே திரும்ப மறுப்பது ஏன் என்று அவர்களுக்கும் புரியவில்லை. சாணைக்கல்லை அரக்கோடு கலந்து பேருருளைகளாகச் செய்து காயவைப்பதைப்பற்றி மேழகன் விளக்கினான்.  பாரி அதைப் பார்த்துக்கொண்டுதானிருந்தான். ஆனால், கல்லும் அரக்கும் ஒட்டாமலிருக்கும் துயரம்தான் அவன் மனதில் இருந்தது.

சாணைக்கல் காய்வதற்கு நாள்கள் ஆயின. அதுவரை காத்திருந்தனர். ஆனால், பாரியால் ஆதினியின் புறக்கணிப்பைப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை, தாங்கிக்கொள்ளவும் இயலவில்லை. அவளுடன் இருந்த தோழிகளுக்கும் விளங்கவில்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83e
அன்று காலை வாரிக்கையனும் கூழையனும் உடன் வந்தவர்களை அழைத்துக்கொண்டு மருத்துவக்குடில் நோக்கிப் புறப்பட்டுப் போனபொழுது பாரி மட்டும் போகாது தனித்திருந்தான். இன்று ஆதினியைக் கண்டுபேசுவது என முடிவோடிருந்தான். சிற்றோடைக்கரையிலிருந்த செண்பகமரத்தின் அடியில் அவள் அமர்ந்திருந்தாள். தனித்திருந்தவளின் முகத்தில் கவலையின் கீற்று தென்பட்டது.

குழப்பத்தின் பிடியிலிருந்த பாரி அவள் முன்னர் வந்து நின்றதும், பேச ஏதுமற்ற அவள் புறப்பட ஆயத்தமானாள். மறித்த பாரி, “என்னை விட்டு அகல்வதன் காரணமென்ன?” எனக் கேட்டான்.

நிமிர்ந்து பாரியின் கண்களைப் பார்த்தாள் ஆதினி. பார்வையின் பொருள் அவனுக்குப் புரியவில்லை.

அவள் சொன்னாள், “பறம்பின் தலைவன் நான் நினைத்ததுபோல் இல்லை.”

அதிர்ந்தான் பாரி. அவள் எதன் பொருட்டு இவ்வார்த்தையைப் பயன்படுத்துகிறாள் எனப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவேளை இவள் தந்தையிடம் சாணைக்கல் வேண்டும் என உதவிகேட்டதால் இப்படி எண்ணுகிறாளோ என்று தோன்றியது. இதில் தவறொன்றும் இல்லையே; வேளிர்குலம் தங்களுக்குத் தேவையானதைக் கொடுத்து மாற்றிக்கொள்ளும் பழக்கம் எப்பொழுதும் உள்ளதுதானே. இதற்கு ஏன் இப்படி நினைக்க வேண்டும் என்று எண்ணியபடி அவளைப் பார்த்தான். அவள் நேர்கொண்ட பார்வையைக் கீழிறக்காமலிருந்தாள்.

அவளின் உறுதி பார்வையின் கோணத்திலேயே வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. பாரியால் புரிந்துகொள்ள முடியவில்லை. “யான் செய்த பிழையென்ன?” என்று கேட்டான்.

“குலத்தலைவனுக்கு எது அழகு?”

“தன் குலம் காக்கும் துணிவும் வீரமும்.”

“அவை இரண்டும் இருப்பதால்தான் அவன் தலைவனாகிறான். ஆனால், அவனுக்கு அழகு சேர்ப்பது அவற்றையும் மீறிய பண்புகள்தானே?”

இது கேள்வியல்ல; விடை. ‘நான் பண்புபாராட்டுவதில் குறையேதும் வைத்தேனா?’ என்று மனதுக்குள் எண்ணத் தொடங்கியபொழுதே, குரலின் வீரியம் குறையத்தொடங்கியது. சிறு செருமல்கொண்டு நிலைமையைச் சமாளித்தபடி பாரி கேட்டான். “நீ கண்டறிந்த குறையைத் தயக்கமின்றிச் சொல்.”

“குறையைச் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை. ஆனால், சொல்லும் உரிமையில்லாததே எனது தயக்கத்துக்குக் காரணம்.”

“நீ மயில்கொன்றைக்கு மாலையிட்டபொழுதே மன அளவில் நாம் உரிமைகொண்டுவிட்டோம். பின் ஏன் தயங்குகிறாய்?”

ஆதினிக்குச் சற்றே அதிர்ச்சியாக இருந்தது. பொதினியின் வழக்கத்தை அதற்குள் பாரி அறிந்துகொண்டானே என்று தோன்றியது.

“பறம்பின் தலைவன் வந்துள்ளான் என அறிந்ததிலிருந்து எனது மனம் நிலைகொள்ளவில்லை. வேளிர்கூட்டத்தின் இணையற்ற வீரனாக உம்மைப் பற்றிய கதை காடெங்கும் பரவிக்கிடக்கிறது. உன்னைப் பார்க்காமலே நான் காதல்கொண்டு கிடந்தேன். உனது வருகை, நான் காதல்கொண்டு நீண்ட நாள்களுக்குப் பின்னர்தான் நடந்தது” என்றாள்.

பாரி வியப்புற்றுக் கேட்டுக்கொண்டிருந்தான்.

“ஆனால்…” சொல்ல சற்றே தயங்கினாள்.

பாரி அவளது வார்த்தையைக் கூர்ந்து கவனித்தான்.

“பொதினிமலை வருகிறவர்கள் தம் குலங்காக்க மருத்துவ உதவியைத்தான் கேட்பார்கள். நீயோ ஆயுத உதவியைக் கேட்டாய். என்னால் அதனை ஏற்க முடியவில்லை.”

ஆதினி கூறிய பிறகு பாரியின் மனவழுத்தம் சற்றே குறைந்தது. அவன் சொன்னான், “வேளிர் கூட்டத்தில் மருத்துவ அறிவில் உச்சங்கொண்டவர்கள் பொதினிமலை வேளிர்களே என்பதை நான் அறிவேன். ஆனால், எங்களுக்குத் தேவையானதைத்தானே நாங்கள் கேட்க முடியும்.”

மறுமொழி ஆதினியை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “தங்களுக்கு என்ன தேவை என்பதையே அறியாமல் குலத்தலைவன் எப்படி இருக்க முடியும்?”

ஆதினியின் சொல் கடுந்தாக்குதலாக இருந்தது. எதன் பொருட்டு இவ்வார்த்தைகளைப் பயன்படுத்துகிறாள் என்பது பாரிக்குப் புரியவில்லை. “பறம்பின் தேவைகளை நான் அறியவில்லை என்றா சொல்கிறாய்?”

கேள்வியைப் பாரி முடிக்கும் முன் ஆதினி சொன்னாள் “ஆம்.”

மீண்டும் அதிர்ந்தான் பாரி. ‘பறம்புநாட்டைப் பார்த்தறியாதவள் பறம்பின் தேவையை நான் அறியவில்லை என்று எப்படிச் சொல்லமுடிகிறது?’ அதிர்ச்சியும் ஆவேசமுமாக மாறியது மனம்.

சற்றே மனதை அமைதிப்படுத்தியபடி பாரி சொன்னான், “நீ பறம்பை அறியாதவள். பறம்பும் தேர்ந்த மருத்துவக்குடிகளைக் கொண்டதுதான். எனவே எங்களுக்கு அது சம்பந்தமான தேவையெதுவும் எழவில்லை. எனவேதான் நாங்கள் மருத்துவ உதவி எதுவும் கேட்கவில்லை. சாணைக்கல்...” என்று பாரி பேசிக்கொண்டிருக்கும்பொழுது கையை உயர்த்தி, பேச்சை நிறுத்தச்சொன்னாள் ஆதினி.

அவள் பார்வையில் இருந்த அழுத்தமும் கையை உயர்த்திய வேகமும் இடைவெளியின்றி நிறுத்தியது பாரியின் சொற்களை. பாரி விழி அசையாமல் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆதினி சொன்னாள், “மருத்துவத் தேவை எதுவுமில்லாத ஒரு குலம், தன் குல ஆசானின் மூன்று மகன்களையும் ஆட்கொல்லிமரத்துக்கு சாகக்கொடுப்பானேன்?”

ஒற்றைக் கேள்வியால் பாரியை இருகூறாகப் பிளந்தாள் ஆதினி.

தொலைவில் கூழையனும் வாரிக்கையனும், பிரண்டை தேய்த்த சிரட்டையையும் பூனை வணங்கியையும் பார்த்துவிட்டு, பாரியை நோக்கி வந்தனர். அவர்கள் வருவது அறிந்த ஆதினி அவ்விடம் விட்டு நகர்ந்தாள். உறைகல்லென நிலைகொண்டிருந்த பாரியைப் பார்த்த வாரிக்கையனும் கூழையனும் திகைத்து நின்றனர்.

பாரியின் அதிர்ச்சி கலைய நாளானது. சாணைக்கல் காய்ந்துகொண்டிருந்தது. செங்காற்சேவல் விருந்து நாள்தோறும் நடந்தது. பாரி அதன்பின் ஒவ்வொன்றாக அறியத் தொடங்கினான். ஆட்கொல்லி மரத்தின் அருகிற்செல்லப் பொதினி மருத்துவர்கள் வழிகண்டுள்ளனர் என்பது பிறகுதான் தெரியவந்தது. சேராங்கொட்டை விதையுடன் மூன்றுவிதமான மூலிகைகளை அரைத்து உடலெங்கும் தேய்த்துக்கொண்டால் அதனருகில் சென்றுவரலாம் என்று சொன்னார்கள். சரி, இவ்வளவையும் தேய்த்து அதனருகில் செல்லவேண்டிய தேவை என்ன என்று கேட்டபொழுது, அதற்கு அவர்கள் சொன்ன  காரணம் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. பொதினிவாழ் வேளிர் கூட்டத்தின் மருத்துவ அறிவு எவ்வளவு உச்சங்கொண்டிருக்கிறது என்பதைப் பாரியால் அப்பொழுதுதான் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

செம்மாஞ்சேரலுடன் போரிட்டு அடைந்த வெற்றி மட்டுமன்று, தேக்கனின் மகன்களை ஆட்கொல்லி மரத்துக்குச் சாகக்கொடுத்ததுகூடக் கதைகதையாய் மலையெங்கும் பரவிக்கிடக்கிறது என்பதும் பாரிக்குப் புரிந்தது.

வந்த புதிதில் சாணைக்கல்லைப்பற்றியே கேட்டுக்கொண்டிருந்த பாரி, இப்பொழுது ஆட்கொல்லி மரத்துக்கான மருத்துவத்தையே கேட்டுக்கொண்டிருக்கிறான் என்பதை மேழகன் கவனித்தபடி இருந்தான். வேளிர் கூட்டத்தோடு ஒருமாற்றுச் செய்யலாம் என்பது முன்னோர் வாக்கு. ஆனால், பாரி இருபொருள் கேட்பானோ என்று தோன்றியது.

சாணைக்கல் அரக்கோடு காய்ந்து இறுகப்பற்றி வட்டவடிவ உருளையாக மாறியது. நாளை அதனை எடுத்துப் பயன்படுத்தலாம் என்று மேழகன் சொன்னபொழுது பாரி சொன்னான், “எனக்கு சாணைக்கல் தேவையில்லை.”

இது மேழகன் எதிர்பார்த்ததுதான். சாணைக்கல்லுக்கு மாறாக ஆட்கொல்லி மரத்துக்கான மருந்தினைக் கேட்பான் என்று முன்கூட்டியே நினைத்திருந்தான். “ஆனால், அம்மருந்தினை இனிமேல்தான் உருவாக்கவேண்டும்” என்றான்.

“நான் அம்மருந்தினைக் கேட்கவில்லையே” என்றான் பாரி.
மேழகன் அதிர்ந்தான். “சாணைக்கல்லும் வேண்டாம், ஆட்கொல்லி மரத்துக்கான மருந்தும் வேண்டாம் என்றால், உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83d
“அதனை ஆதினியிடம் கேட்டுக்கொள்ளுங்கள்” என்றான் பாரி.

மேழகனுக்கும் புரியவில்லை உடனிருந்த வாரிக்கையனுக்கும் புரியவில்லை. சற்றே குழப்பத்தோடு மகளிடம் போய்க் கேட்டான் மேழகன், “பாரிக்கு என்ன வேண்டும்?”

“இதனை ஏன் என்னிடம் வந்து கேட்கிறீர்கள்?”

“பாரிதான் உன்னிடம் கேட்கச் சொன்னான்.”

‘பறம்பின் தேவையை என்னைவிட நீதான் அதிகம் புரிந்திருக்கிறாய். இப்பொழுது சொல் நான் எதைக் கேட்கவேண்டும்?’ என்று பாரி காதோடு கேட்கும் குரல் அவளுக்குள் எதிரொலித்தது.

உள்ளுக்குள் ஓடிய சிரிப்பை மறைத்தபடி ஆதினி சொன்னாள், “மணவிழாவுக்கு ஏற்பாடு செய்யுங்கள் தந்தையே.”

மேழகனுக்குப் புரியவில்லை. “பறம்பின் தேவை என்ன என்றுதானே உன்னைக் கேட்கச் சொன்னான்?”

“ஆம். பறம்பின் தேவை நான்தான். அதை நான் சரியாகக் கணிக்கிறேனா என்பதை அறியவே பாரி உங்களை அனுப்பியுள்ளான்.”

மேழகனுக்கு இப்பொழுதும் புரியவில்லை. ஆதினி மீண்டும் சொன்னாள், “என்னை வைத்தே என்னைக் கணிக்கும் ஒரு விளையாட்டைப் பாரி விளையாடுகிறான். அதுமட்டுமன்று, பறம்புமீதான எனது அக்கறையைக் காதல்கொண்டு உரசிப்பார்க்கிறான். சாணைக்கல்லில் இரும்பைக் கூர்தீட்டிப் பார்ப்பது இதுதான் தந்தையே.”

ஆதினி சொல்வது விளங்குவதுபோல இருந்தது. ஆனாலும் காதலின் ஆழத்தை அடுத்தவர் விளங்கிக்கொள்ளுதல் எளிதன்று. நிலைமையைச் சமாளித்தபடி மேழகன் சொன்னான், “நீ கடந்த சிலநாள்களாக அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் இருந்ததால், உனக்கு அவனைப் பிடிக்கவில்லையோ என்று நினைத்துவிட்டேன்.”

“இவ்வளவு ஆற்றலும் அழகுங்கொண்ட காதலனைப் பார்த்துக்கொண்டே விலகி நடப்பதைவிட, பார்க்காமல் திரும்பி நடப்பதுதான் உயிர்வாழ்வதற்கான சிறந்தவழி.”

அதன் பிறகு மேழகன் பேசவில்லை.

ணவிழாவுக்கு வரச்சொல்லி எவ்வியூருக்கு வீரர்களை அனுப்பிவைத்தான் வாரிக்கையன். நான்கு அருவிகளையும் எட்டு முகடுகளையுங்கடந்து பாய்ந்து சென்றது காதலின் கதை. பொதினியின் மகிழ்வுக்கு அளவேதும் இல்லை. விருந்து நாள்தோறும் நடந்தது. பறம்போடு மணவுறவு காண்பது வேளிர் குலப்பெருமை என ஊரே மனம் நெகிழ்ந்து கொண்டாடியது. 

இறைச்சிகளின் சுவை சுனைநீரின் கலவையோடு இணைந்தது. இவ்விருந்தில் பரிமாறப்படும் இறைச்சிகள் இவ்வளவு சுவையோடு இருப்பதற்குச் சுனை நீர் முக்கியக் காரணம். இடிவிழுந்து பாறைகள் பிளவுறுதல் ஒவ்வோர் ஆண்டும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால், பாறையின் பிளவுகளின் ஊடே உருவாகும் புதிய சுனைநீர் கடினத்தன்மை கொண்டிருக்கும். ஆழப்புதைந்த இடியில் உருவான நிலவுப்பு நீரிற்கலந்து சில மாதங்களாவது வந்துகொண்டே இருக்கும். அந்நீரில் வேகவைக்கப்படும் இறைச்சி இணையற்ற சுவைகொண்டிருக்கும். விழுந்த இடியின் நாட்கணக்கும் பிடிபட்ட விலங்கின் வயதுக்கணக்கும் இணைந்துதான் இலையில் விருந்தாகிறது.

இயற்கையின் வெவ்வேறு ஆற்றலை உணவாகச் சமைக்கத்தெரிந்ததுதான் மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு. பொதினி மக்கள் இறைச்சி தொடங்கி இடி வரை பலவற்றைச் சமையலுக்குப் பயன்படுத்தினர். மண்ணும் தாதுக்களும் என்னவெல்லாம் செய்யும் என்பதில் இவர்களுக்கிருக்கும் ஆற்றல் இணைசொல்ல முடியாதது.

புதிய இடியூற்றின் சுனைநீர்கொண்டே விருந்துக்கான இறைச்சி ஏற்பாடானது. வாரிக்கையனும் உடன்வந்த எவரும் எதனையும் விட்டுவைக்காமல் விருந்தை உண்டு மகிழ்ந்தனர்.

பொதினியின் ஐஞ்சுவைக்கள்ளுக்குள்ள குணம் தனிதான். அதனை விளக்கியபடியே மேழகன் சொன்னான், “ஆதினி மயில்கொன்றை மரத்துக்கு மாலையிட்ட அன்றே இத்திருமணம் முடிவாகிவிட்டது.”
சின்னதாய்ச் சிரித்தான் வாரிக்கையன்.

“ஏன் சிரிக்கிறீர்கள்?” எனக் கேட்டான் மேழகன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83f
“அதற்கு முன்பே முடிவாகிவிட்டது” என்றான் வாரிக்கையன். மேழகனுக்குப் புரியவில்லை.

“பறம்பின் ஆதிக்கள்ளான ஆலம்பனைக்கள்ளை மணவுறவுக்காக மட்டுமே கொடுக்கும் பழக்கம் எங்களுடையது” என்றான் வாரிக்கையன்.

“அப்படியென்றால் நீங்கள் சாணைக்கல்லுக்காக வரவில்லையா?”

“சாணைக்கல்லுக்கு மட்டுமென்றால் பாரி ஏன் வரவேண்டும், நாங்கள் மட்டும் போதாதா?”

“பாரி அறிந்துதான் வந்தானா?”

சிரித்தபடி வாரிக்கையன் சொன்னான், “நாங்கள் யாரும் அறியமாட்டோம் என்று நம்பி வந்தான். அவன் அப்பனுக்கே மணமுடித்துவைத்தவன் நான். என்னிடமே விளையாடுகிறான்” என்றான்.

“உங்களுக்கே இந்தச் செய்தி தெரியாதா?”

“சாணைக்கல்லைப்பற்றிச் செய்தி சொன்ன முதுபாணனிடம் இவன் அதிகம் வினவியது ஆதினியைப் பற்றித்தான்.”

“அப்படியா?” எனக் கேட்டான் மேழகன்.

“இடிநீரில் இறைச்சியைச் சேர்க்கும் உங்களுடைய அறிவைப்போலத்தான் ஆயுதத்தோடு ஆதினியைச் சேர்த்தான் பாரி.”

மேழகன் வியப்பிலிருந்து மீள நேரமானது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83g
குன்றின் சிறுபாறை முனையில் அமர்ந்திருந்தான் பாரி. அவனது தோளிலே சாய்ந்திருந்தாள் ஆதினி. கும்மிருட்டு நிலைகொண்டிருந்தது. ‘பாறையின் முகப்பில் ஏன் அமரவைத்திருக்கிறாள். ஏதாவது காரணமிருக்கும்’ என்று சிந்தித்தபடியிருந்தான். இருளுக்குள்ளிருந்து முழுநிலவு மேலேறி வரும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.

பற்றிய தோளிலிருந்து முகம் விலக்காமல் ஆதினி கேட்டாள், “எதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

மெல்லிய குரல் மேலெழுந்து வந்தது, “குலத்தின் தலைவனுக்கு எது அழகு?”

ஆதினி இதனை எதிர்பார்க்கவில்லை. விடைசொல்ல வாயெடுத்தவள் சற்றே அமைதியானாள்.

“ஏன் விடைசொல்ல மறுக்கிறாய்?”

“அழகான தலைவன் தன் குலத்தோடு சேர்த்த பிறகு நான் சொல்ல என்ன இருக்கிறது?” சொல்லி நிறுத்திய ஆதினி அசைவற்று அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“காதலியிடம் கற்றுக்கொள்ளும் சுகம் ஆணுக்கு வாய்ப்பது அரிது. நீ எனக்கு என்னுடைய அறியாமையைக் காண்பித்தாய். என்னுள் புகும் உனது ஆற்றல் என்னைத் திகைக்கச்செய்துவிட்டது.”

ஆதினி சொன்னாள். “என்னுள் புகும் உனது ஆற்றல் என்னை என்ன செய்கிறது தெரியுமா?”

பாரி மெல்ல தலையசைத்து, “தெரியவில்லை” என்றான்.

அவன் தோள் தழுவிய கையைச் சற்றே மேல் நகர்த்தி “இந்த அறியாமைதான் பேரழகு” என்றாள்.

இமைகள் மூடத்தலைப்பட்டபொழுது உச்சிமலையிலிருந்து பெருங்காற்று வீசி இறங்கியது. எதிர்ப்புறக் குன்றின் பின்புறத்திருந்து முழுநிலவு மேலெழ மஞ்சள் ஒளியில் மரங்களின் நுனியிலைகள் கூசிச் சிலிர்த்தன. மயங்கிய பாரி இயற்கையின் பேரழகை விஞ்சும் ஆற்றல் தனது கன்னத்தை ஏந்தி நிற்கும் கைகளுக்கு இருக்கிறதோ என நினைத்துக்கொண்டிருக்கையில் ஆதினி சொன்னாள், “கண்களை மூடுங்கள். உலகின் பேரழகைக் காட்டுகிறேன்.”

அவள் சொல்லியவிதமே பெருமயக்கத்தை ஊட்டியது. என்ன செய்யப்போகிறாள் என அறியும் ஆவலில் கண்களை மூடினான். இவ்வளவு பொழுதும் தனது உடலோடு ஒட்டியிருந்த அவள் தன்னை விட்டு விலகுகிறாள் என்பதை உணர்ந்தபடியே இருந்தான் பாரி.

சிறிதுநேரம் எதுவும் சொல்லாமல் இருந்தாள். பாரியின் எண்ணங்கள் எங்கெங்கோ போய்த் திரும்பின.

“இப்பொழுது கண்களைத் திறங்கள்” என்றாள்.

பாரி மெல்ல கண்களைத் திறந்தான். எதிரில் ஆதினி நின்றுகொண்டிருந்தாள். சிறு புன்னகையோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவள் வலப்புற மலையுச்சியைக் கைகாட்டி, “அங்கே பாருங்கள்” என்றாள்.

பாரி திரும்பிப்பார்த்தான். நிலவொளியில் மலையுச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கையில் ஏதோவொரு வேறுபட்ட தன்மையை உணர்ந்தான். என்னவென்று புரியவில்லை. காற்று வீசிக்கொண்டிருந்தது. கணநேரத்துக்குள் நூற்றுக் கணக்கான சிறகுநாவற்பழங்கள் மலையுச்சியிலிருந்து காற்றில் மிதந்து வந்துகொண்டிருந்தன. இமைக்காமல் பார்த்தான் பாரி. அலையலையாய் அந்த அதிசயம் வந்திறங்கியது.

உச்சிமலையில் எட்டிப்பார்க்கும் நிலவுக்குள்ளிருந்து கருநீலப்பொன்வண்டு காற்றெங்கும் மிதந்தபடி பாரியை நோக்கி வந்தது. நம்பமுடியாத காட்சி வானம் முழுவதும் வந்துகொண்டிருந்தது. கணநேரத்தில் கிறுகிறுத்துப்போனான்.

மலையுச்சியிலிருக்கும் சிறகுநாவற் காட்டிற்கு நேர்கீழாக இருப்பதுதான் பொதினிக் குன்று. உட்கார்ந்திருக்கும் இந்தப் பாறைமுனை இன்னும் துல்லியமானது.

விரிந்த ஈரிலையால் மிதந்துவரும் நாவலை அவனது கை எட்டிப்பிடிக்கும்பொழுது, விலகியிருந்த ஆதினி அருகில்வந்து கட்டிப்பிடித்தாள். ஈரிலைகொண்டு இருவரையும் மூடின சிறகுநாவல்கள்.

கண்திறக்கவும் முடியாமல் மூடவும் முடியாமல் அவன் தவித்தபொழுது துவர்ப்பின் சுவையை அவனுக்கு ஊட்டத்தொடங்கினாள் ஆதினி. நாவற்பழத்தின் சாறு உள்ளிறங்கியது. பறப்பதற்கு ஈரிலைகூடத் தேவையில்லை, ஈரிதழே போதும்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 13, 2018 8:15 am

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83a_1511848317
றம்பின் தலைவனுக்கு ஆதினியை மணமுடித்து எவ்வியூருக்கு அழைத்துவந்தனர். கொண்டாட்டங்களும் கூத்துகளும்தாம் எத்தனை வகை! விருந்துகளும் விளையாட்டுகளும் முடிந்தபாடில்லை. பொதினிவாழ் வேளிர்கள், இயற்கையின் அதிநுட்பங்கள் பலவற்றைக் கண்டறிந்தவர்கள்; தாதுக்களையும் உலோகங்களையும் நுட்பமாக அவதானித்த மாமனிதர்கள். அந்தக் குலமகள், பறம்புத் தலைவனை மணந்து எவ்வியூர் புகுந்தாள்.

மணமுடித்துச் செல்லும் குலமகளோடு பதினெட்டுக் குடிகளை அனுப்பிவைப்பது பொதினி வேளிர்களின் குலமரபு. பச்சிலை, தாதுக்கள், உலோகங்கள், உடற்கூறுகள் எனப் பலவற்றிலும் தேர்ந்த பதினெட்டு மருத்துவக்குடிகளை உடன் அனுப்பிவைத்தான் மேழகன். மதிப்பிட முடியாத மனிதச் செல்வங்களோடு ஆதினி எவ்வியூருக்குள் நுழைந்தாள்.

பொதினி, மலையடிவாரத்து ஊர். எவ்வியூர் பச்சைமலையின் உச்சியில் நிலைகொண்டுள்ள ஊர். மேகத்துக்குள் வாழ்வதுபோலவே எவ்வியூரின் பகற்பொழுது இருக்கும். நழுவி நகரும் மேகங்களுக்குள் கூந்தல் பறக்க ஓடவேண்டும் என்று ஆசை தோன்றியது ஆதினிக்கு. தான் ஒன்றும் குழந்தை அல்லள் என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டாள். மரங்களின் எல்லா இலைகளின் மீதும் நீர் தேங்கியிருப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

``ஆண்டின் பெரும்பான்மையான மாதங்களில் உலராத ஈரத்தோடுதான் இலைகள் இருக்கும்” என்றான் பாரி.

இயற்கையின் குளுமையைவிட ஆதினியின் ஆழ்மனம் அதிகம் குளிர்ந்திருந்தது. மேல்மாடத்தில் நின்று இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். மாடத்துக்குள் மலர்ப்படுக்கையை ஆயத்தம்செய்யும் பணி நடந்துகொண்டிருந்தது. எவ்வியூர்ப் பெண்கள் பொதினிக்குச் சென்ற அன்று மாலைதான் மணவிழா நடந்தது. அன்று இரவு பாரிக்கும் ஆதினிக்கும் தலைநாள் இரவு. பொதினியின் குலவழக்கப்படி குலசடங்குகளைச் செய்தனர்.

இரவு மலர்ப்படுக்கை ஆயத்தமானது. படுக்கையின் நடுவில் ஆவாரம்பூவின் இதழ்களைப் பரப்பியிருந்தனர். அது மஞ்சள் நிறத்திலானது. அதை அடுத்து அத்திப்பூவின் நீல நிறத்தாலான வளைந்த கோடுகளை உருவாக்கியிருந்தனர். மூன்று கோடுகளைச் சுற்றி வெண்டாழையின் வெண்மை பரவிக்கிடந்தது. அதன் விளிம்புப் பகுதியில் செந்தாழையின் சிவப்பு அணிவகுத்திருந்தது. அது ஒரு மாயப்படுக்கையைப்போல வண்ணத்திலும் மணத்திலும் பெருமயக்கத்தை உருவாக்குவதாக இருந்தது.

அது பொதினியின் பூப்படுக்கை என்றால், எவ்வியூரின் மலர்ப்படுக்கை வேறுவிதமாக இருந்தது. ஐவண்ணக் குறிஞ்சியினால் படுக்கையை ஆயத்தம் செய்தனர். பல்லாண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி, பச்சைமலையின் எத்திசையில் எல்லாம் பூத்துக்கிடக்கிறது என்பதை அறிந்து எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்த்தனர். பொன்வண்ணக் குறிஞ்சியின் மஞ்சள் இதழ்களைப் படுக்கையின் நடுவில் விரித்தனர். பச்சைமலையின் வடகோடியில் மட்டுமே பூத்துள்ள மழைவண்ணக் குறிஞ்சியின் நீலநிற இதழ்கொண்டு நடுவிலிருந்த மஞ்சளைச் சுற்றி அழகிய வட்டம் அமைத்தனர். பவளக்குறிஞ்சியின் செம்மை நிற இதழ்களையும், பெருங்குறிஞ்சியின் வெண்மை நிற இதழ்களையும் மாற்றி மாற்றி அடுக்கினர். ஒரு சுடர் படபடத்து எரிவதைப்போன்ற ஒரு தோற்றம் கொள்ளச்செய்தது. வாடாக்குறிஞ்சியின் செந்நீல இதழ்களை விளிம்பெங்கும் வரிசைப்படுத்தினர்.

குறிஞ்சி காமத்துக்கான பூ. அதன் மணமும் வண்ணமும் கணநேரத்தில் மனித ஆழ்மனத்தைத் தன்னகப்படுத்திக்கொள்ளும். குறிஞ்சி பூக்கத் தொடங்கினால் காடு முழுவதும் பூக்கும். காமத்தின் தன்மையும் அதுதான். கால்விரல் நுனியிலிருந்து நெற்றியில் சுருண்டுகிடக்கும் கூந்தல் வரை எல்லாவற்றிலும் காமத்தீ இணையாகப் பற்றும். பற்றியெரியும்போது மிச்சமின்றி எரியும் தீ அது. மொத்தக் காடும் எரிவதைப்போலத்தான் இருக்கும் குறிஞ்சி பூக்கும் காலம். அதுதான் காமத்தின் காலம். காத்திருந்து எரிந்து காலகாலத்துக்கு மணக்கும்.

படுக்கையின் தன்மைக்கு ஏற்ப அதுவே மணத்தை அறையெங்கும் நிரப்பியிருக்கும். மாலை நேரத்துக் கதிரவன் ஒளி மங்க, சிறிது நேரமே இருந்தது. சட்டென ஒரு சிந்தனை தோன்றியது பாரிக்கு. ஆதினியை அழைத்துக்கொண்டு மாடத்தை விட்டுக் கீழிறங்கி வந்தான். மாடத்தின் வெளிப்புறத்தில் புதிதாகச் செய்யப்பட்ட தேர் நின்றிருந்தது. குதிரைகளை அதில் பூட்டச் சொன்னான். வீரர்கள் குதிரைகளைப் பூட்டினர். ஆதினியைத் தேரில் அமரவைத்து பாரி தேரை ஓட்டினான்.

வீரர்களும் மற்றவர்களும் பார்த்திருக்க, நாகப்பச்சை வேலியைக் கடந்து தேர் வெளியேறிப் போனது. எங்கே போகிறான் என யாருக்கும் தெரியாது. `ஆதினியைத் தேரிலே உட்காரவைத்து, சுற்றிக்காண்பித்து வருவான்’ என நினைத்தனர்.

ஆதினி இதுவரை தேர்ப்பயணம் செய்ததில்லை. மாலை நேரத்துச் சுருங்கும் ஒலியும், சீறிப்பாயும் தேரின் ஓசையும், மலை மடிப்புகளின் இளம்பச்சையும் காணக்கிடைக்காத காட்சியாக இருந்தது. அவளது முகம், இயற்கையின் ஆதிச்சுவையை உணர்ந்துகொண்டிருந்தது. முறையான பாதைகள் உருவாக்கப்படாததால் வேகத்தைக் குறைத்து, தேரை மெதுவாக ஓட்டினான். தேர் சென்றுகொண்டே இருந்தது. கதிரவன், ஒளி சிறுத்து அணைய ஆயத்தமாகிக்கொண்டிருந்தது. மலை உச்சியில் ஒளி அகலுதல், விளக்கை ஊதி அணைப்பதைப்போலச் சட்டென நிகழ்ந்துவிடும். ஆனாலும் தேரைத் திருப்பாமல் முன்னோக்கி ஓட்டிச்சென்றான் பாரி. ஆதினி எதுவும் கேட்கவில்லை.

மலைமுகட்டோரம் போய் தேர் நின்றது. வண்டியிலிருந்து இறங்கிய பாரி, ஆதினி இறங்க உதவி செய்தான். சற்றே சிந்தித்தபடி நின்றவன், தேரிலிருந்து குதிரைகளைக் கழற்றி விட்டான். அவன் என்ன செய்யப்போகிறான் என்பதை ஆதினியால் கணிக்க முடியவில்லை.

``உன்னை ஓரிடத்துக்கு அழைத்துச் செல்கிறேன் வா” எனச் சொல்லி, மலைமுகடு நோக்கி நடந்தான். ஒளி முற்றிலும் அகன்று இருள் கவிந்துவிட்டது. அவனைப் பின்பற்றி நடந்தாள் ஆதினி.

``குதிரைகளை அப்படியே விட்டுவிட்டு வந்திருக்கிறீர்களே, காட்டுக்குள் ஓடிவிடாதா?”

``போகாது. இந்த மேட்டில் மட்டுமே முயற்புல் இருக்கிறது. அதற்கு மிகப் பிடித்த உணவு அதுதான். இந்த இடம் விட்டு எளிதில் அகலாது.”

``அப்படியா!” எனக் கேட்டபடி நடந்தாள். இருள் முழுமையாக நிலைகொண்டுவிட்டது. முகட்டை அடைந்ததும் மலையின் சரிவை நோக்கி இறங்கத் தொடங்கினான்.

``கால்களை கவனமாக எடுத்து வை” என்றான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83b_1511848332
நீருக்குள் மூழ்கும்போது உள்ளே போகப் போக அடர்ந்த ஓசை பெருகிவந்து காதடைக்குமே, அப்படித்தான் காட்டின் ஓசையும். நேரம் ஆக ஆக இருள் அடரோசையாக மாறிக் கொண்டிருந்தது. சிறிதும் பெரிதுமான பாறைகளுக்கு நடுவில் ஆதினியைக் கவனமாக அழைத்துக்கொண்டு கீழிறங்கினான் பாரி.

இருளுக்குள் மீன்களைப்போல் மிதந்துகொண்டிருக்கும் செடிகொடிகளின் இலைகளைக் கையால் தட்டியபடி நடந்த ஆதினி கேட்டாள், ``எங்கே போகிறோம்?”

குறுக்கிட்டுக்கிடந்த மரக்கட்டையை அகற்றி ஆதினி நடப்பதற்கு வழி அமைத்தபடி பாரி சொன்னான், ``நீ பொதினி மலையின் பேரதிசயத்தை எனக்குக் காண்பித்தாய் அல்லவா, அதேபோல பறம்பின் அதிசயத்தை உனக்குக் காட்ட அழைத்துச் செல்கிறேன்.”

``அன்று முழுநிலவு நாள். சிறகுநாவல்பழங்கள் மிதந்துவந்ததைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. இன்று நிலவற்ற காரிருள் நாள். இந்தக் கும்மிருட்டில் எதைப் பார்க்க முடியும்?”

``பொதினியின் அதிசயத்தைப் பார்க்க நிலவின் ஒளி தேவைப்பட்டது. ஆனால், பறம்பின் அதிசயத்தைத் தெளிவாகப் பார்க்க ஒளியற்ற காரிருள்தான் தேவை.”

ஆதினிக்கு வியப்பும் ஆர்வமும் ஒருசேரப் பெருகின. `ஒளியற்ற இருளில்தான் தெளிவாகப் பார்க்க முடியும் என்றால், அது என்னவாக இருக்கும்?’ என்று சிந்தித்தபடியே நடந்தாள்.

நின்று பொறுமையாக வழிக்குறிப்புகளைக் கவனித்தபடி முன்நடந்தான் பாரி. இருளில் இறக்கத்தில் கால் எடுத்து வைப்பதில் கூடுதல் விழிப்பு உணர்வு தேவை. பாரி முன் நடப்பதால் பதற்றம் இல்லாமல் நடந்தாள் ஆதினி.

நேரம் கூடியது. இருளின் அடர்த்தி அதிகரித்துக்கொண்டிருந்தது. முன் நடக்கும் பாரியின் கை பற்றிக் கீழிறங்குவதும், தோள் பிடித்து நடப்பதுமாக ஆதினி வேறொரு விளையாட்டை விளையாடியபடி வந்துகொண்டிருந்தாள். ஆனாலும், என்னதான் காண்பிக்கப்போகிறான் என்பதைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.

``நீங்கள் காண்பிக்கப்போகும் பறம்பின் அதிசயம் என்னவென்று தெரிந்துகொள்ளலாமா?”

``கண் முன்னால் அதைக் காண்பித்துச் சொல்கிறேன். அப்போது அடையும் அனுபவத்தை ஏன் இழக்க வேண்டும்?” 

பற்றிய தோளை ஆதினியின் கை இறுகப்பிடித்தது. கால்கள் தடுமாறுகின்றனவோ எனப் பாரி நின்றான். ஆதினி சொன்னாள், ``பறம்பின் பேரதிசயத்தோடுதான் நான் நடந்துகொண்டிருக்கிறேன். இந்த உணர்வு மற்ற எல்லாவற்றையும்விட மிக உயர்ந்தது. நான் புதிதாக எதையும் அடையப்போவதுமில்லை, இழக்கப்போவதுமில்லை. நீங்கள் தயங்காமல் சொல்லலாம்.”

அவளின் சொற்களுக்குள் இருந்த காதல், பாரியைக் கிறங்கச்செய்தது. பிடித்து இறங்க முடியாத பள்ளம் இருந்தது. மிகப் பாதுகாப்போடு அவளைப் பிடித்து இறக்கினான். தோள் தொடுவதும் கை தொடுவதுமாகத்தான் இவ்வளவு நேரப் பயணம் இருந்தது. ஆனால், இந்தப் பள்ளத்தைக் கடந்தது அப்படியல்ல. கடக்க முடியாத பள்ளமாகப் பாரிக்குத் தோன்றியது. ஆதினியின் உணர்வோ அதையும் கடந்ததாக இருந்தது.

சற்றே கால் சரிந்து பாரியின் மேல் விழுந்தவளை, தூக்கி விலக்கி நிறுத்த முடியவில்லை பாரியால். அந்த இடைவெளி உருவானால்தான் நடக்க முடியும் எனத் தெரிந்தும் அதை உருவாக்குவது எளிதாக இல்லை. செங்குத்தாகச் சரிந்துகிடக்கும் மலைச்சரிவில், கும்மிருட்டில் கண்கட்டி விளையாடுவதுபோல காதல் விளையாடியது. பாரி சற்றே சிந்தித்து `இந்த விளையாட்டுக்குள் மனம் சிக்கிவிடக் கூடாது, கவனமாகக் காலடியெடுத்து வைக்கவேண்டும்’ என நினைத்து நடந்தான்.

ஆதினிக்கு அதுவெல்லாம் இல்லை. பாரி மட்டுமே அவளின் பார்வையில் இருந்தான். முன் நடந்த பாரி சொன்னான், ``நான் காண்பிக்கப்போவதை, இதற்கு முன் மிகச் சில மனிதர்களே பார்த்திருப்பார்கள்.”

``அப்படியா!” என்றாள் ஆதினி.

``ஆம், அதன் பெயர் இராவெரி மரம்.”

ஆதினிக்கு சட்டெனப் புரியவில்லை. ``என்ன மரம்?”

``இராவெரி மரம். அதன் இலைகள் பகலிலே வாங்கிய ஒளியை இரவிலே உமிழும். பார்ப்பதற்கு எண்ணிலடங்காத சுடர்கள் எரியும் விளக்கைப்போல் இருக்கும்.’’

கிறங்கி நின்றாள் ஆதினி. ``என்ன சொல்கிறீர்கள்? அப்படியொரு மரம் இருக்கிறதா?”வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83c_1511848343

``ஆம். மழைநீரை உள்வாங்கிய மண், ஊற்றாகக் கசியவிடுகிறதல்லவா. அதேபோல பகல் முழுவதும் ஒளியை உள்வாங்கி இரவு முழுவதும் வெளிச்சத்தைக் கசியவிடும். பார்ப்பதற்கு மரம் பற்றி எரிவதுபோல் இருக்கும்.”

சொல் கேட்டு நின்ற ஆதினியின் தோள் தொட்டான் பாரி. கனவிலிருந்து மீண்டவளைப்போல மீண்டாள்.

``இன்னும் எவ்வளவு தொலைவில் அந்த மரத்தைப் பார்க்கலாம்?”

``சிறிது தொலைவு இறங்கினால் சரிவுப்பாறைகள் முடிச்சிட்டதுபோல் கிடக்கும். அங்கிருந்து பார்த்தால், எதிரில் இருக்கும் மலைச்சரிவில் இராவெரி மரம் தெரியும்.”

ஆதினியால் ஆசையை அடக்க முடியவில்லை. ஒளிரும் மரத்தைப் பார்க்க வாய்க்கும் அந்தக் கணத்தை அடைய மனம் தவித்தது. ``இப்போதுதான் இன்னும் கவனத்தோடு நடக்கவேண்டிய இடம். எனவே பார்த்து வா” என்று சொல்லியபடியே நடந்தான் பாரி.

``நீங்கள் எப்போது அந்த மரத்தைப் பார்த்தீர்கள்?”

``காடறியப் பயணப்படும்போது. தேக்கன் காண்பித்தார்.”

``பல ஆண்டுகள் ஆகியிருக்குமே. அதன் பிறகு பார்க்கவில்லையா?”

``இல்லை. பகலில் அந்த மரத்தை நம்மால் கண்டறிய முடியாது. அந்த மரம் பகலில் எப்படி இருக்கும் என்று இன்று வரை யாருக்கும் தெரியாது. இரவு நேரத்தில் எதிர்க் குன்றில் நின்று பார்த்தால்தான் கண்டறிய முடியும். அதுவும் நிலவற்ற இதுபோன்ற காரிருள் நாளின் நள்ளிரவில்தான் நன்றாகக் காண முடியும். அதற்கான வாய்ப்பு இப்போதுதான் அமைந்துள்ளது” என்று சொல்லியபடி அழைத்துச்சென்றான்.

சரிவுப்பாறைகள் முடிச்சிட்டதுபோல் திருகிக்கிடக்கும் இடம் வந்தது. அவற்றின் ஓரத்தில் நின்றபடி பார்த்தான், எதிரில் எதுவும் தெரியவில்லை. கும்மிருட்டாக இருந்தது. பாறையின் இன்னொரு முனையில் போய்ப் பார்த்தான். அப்போதும் எதிரில் மலைத்தொடர் தெரியவில்லை. தான் வந்தது சரியான பாதைதானா எனச் சிந்தித்தான். அந்த மலைச்சரிவில் இந்த இடம் மட்டும்தான் சரிவுப்பாறைகள் முடிச்சிட்டுக்கிடக்கும் ஒரே இடம். எனவே, தான் வந்துள்ளது சரியான இடம்தான் என்பதை முடிவுசெய்தபோதுதான் ஓர் உண்மை பிடிபட்டது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83d_1511848362
ஆதினியிடம் சொன்னான், ``நாம் சரியான இடத்துக்குத்தான் வந்துள்ளோம்.  ஆனால், மேகக்கூட்டங்கள் இரு மலைகளுக்கும் இடையில் முழுமையாக இறங்கி நிற்கின்றன. அதனால் எதிரில் இருக்கும் மலைத்தொடர் நம் கண்களுக்குத் தெரியவில்லை.”
``ஆதினியின் முகம் சற்றே கவலையடைந்தது. அப்படியென்றால், நம்மால் இன்று பார்க்க முடியாதா?”

அவள் கேட்டுக்கொண்டிருந்தபோதுதான் பாரிக்குத் தோன்றியது. `இன்னும் சிறிது நேரத்தில் மழை வந்துவிடும். நாம் இருப்பது மிகவும் ஆபத்தான இடம். பெருமழை என்றால் சரிவுப்பாறையில் மழைநீர் எவற்றையெல்லாம் இழுத்துக்கொண்டுவரும் எனத் தெரியாது. நாம் உடனடியாகப் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும்’ என்று.

தொலைவில் இடியோசை கேட்டது. பாறையை இழுத்து அடிக்கையில் தோலின்மீது இருக்கும் தூசி அதிர்வதைப்போல மாமலை அதிர்ந்தது. பெருமின்னல் ஒன்று வெட்டி இறங்கியது. மொத்த மலைத்தொடரின் மீதும் ஒளியின் கண்திறந்து மூடியது.
சரிவுப்பாறையைக் கடந்து இடப்புறம் போவதுதான் பாதுகாப்பு எனக் கருதிய பாரி, ஆதினியின் கையைப் பிடித்துக்கொண்டு வேக வேகமாக நடந்தான். இவ்வளவு வேகமாக இருளுக்குள் நடப்பது சரியில்லை எனத் தோன்றியது. ஆனாலும் வேறு வழியின்றி நடந்தான்.

அடுத்தடுத்து மின்னல்கள் இறங்கத் தொடங்கின. மின்னல் ஒளியால் தென்பட்ட பாதையை வைத்து விரைந்து அழைத்துச்சென்றான். அவன் எண்ணிவந்ததுபோலவே பிளவுண்ட பாறைகளுக்கு நடுவில் பெருங்குகை ஒன்று இருந்தது. விரைந்து வந்து குகைக்குள் நுழைந்தனர்.

கொட்டும் மழையின் கொட்டம் தொடங்கியது. எங்கும் மழையின் பேரோசை, இடியால் நடுங்கியது காடு. ``உரிய நேரத்தில் குகைக்குள் அண்டியதால் ஆபத்திலிருந்து தப்பித்தோம். நாம் இருப்பது மலையின் சரிவான பகுதி. மேலேறவும் முடியாது; கீழிறங்கவும் முடியாது. இந்தப் பகுதியில் பாதுகாப்பாக அண்டுவதற்கு இந்த ஒற்றைக் குகை மட்டுமே உண்டு” என்று பாரி சொல்லிக்கொண்டிருந்தான்.

காரிருளும் அடர்மழையும் சற்றே அச்சத்தை வரவைப்பனவாக இருந்தன. மின்னல்கள் இடைவெளியின்றி இறங்கிக்கொண்டிருந்தன. ஆனாலும் மின்னல் ஒளியில் குகையின் உட்புறத்தைப் பார்க்க முடியவில்லை. `எவ்வளவு உள்வாங்கிய குகை இது! இதற்குள் விலங்குகள் எதுவும் பதுங்கியிருக்குமோ?’ என்ற எண்ணங்கள் தோன்றியபடி இருக்க, ஆதினி அமைதியானாள். இடுப்பில் இருக்கும் சிறு வாள் தவிர, பாரியிடம் வேறு ஆயுதங்கள் இல்லை என்பதையும் அவள் கவனித்தபடி இருந்தாள்.
மழையின் பேரோசை அடங்கும் வரை ஆதினியின் அமைதி நீடிக்கும் என்பதை உணர்ந்தான் பாரி. குகையின் நடுவில் இருந்த சிறுபாறையின் மீது ஆதினியைத் தோள் சாய்த்து உட்கார்ந்திருந்தான். இராவெரி மரத்தை ஆதினிக்குக் காட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் மேகத்தின் தன்மையைக் கவனிக்காமல் இருந்துவிட்டோம் எனத் தோன்றியது. கவனித்திருந்தாலும் வராமல் இருந்திருப்போமா என்பது தெரியாது. காதல், இடிமின்னலுக்கு விலகி நடக்கத் தெரியாத உயிரினம் என்று மனதில் நினைத்தபடி உட்கார்ந்திருந்தான். ஒளியை உருவாக்க எந்த ஏற்பாடும் இல்லாமல் வந்துவிட்டோமே என்பதுதான் பாரிக்குக் குறையாகப் பட்டது.

நீண்டநேரம் கழித்து மழை நின்றது. அதன் பிறகுதான் நீரின் ஓசை மேலேறிவந்தது. காற்றெங்கும் ஈரம் மிதந்தபடி இருந்தது. குகையின் உள்ளொடுங்கித்தான் உட்கார்ந்திருந்தனர். ஆனாலும் நீர்த்தொட்டிக்குள் இருப்பதுபோலத்தான் இருந்தது. குளிர் நடுக்கியது. முகம் பார்க்க முடியாத கும்மிருட்டு. மழை பெய்யும் வரை விடாது வெட்டிய மின்னல் ஒளியில் அவ்வப்போது குகைக்குள் வெளிச்சம் தென்பட்டது. மழை நின்ற பிறகு, இருளின் அடர்த்தி மிக அதிகமானது. பாரியின் இடதுகையை இறுகப் பிடித்தபடி சாய்ந்திருந்தாள் ஆதினி.

பொழுதாகிக்கொண்டிருந்தது. `இந்நேரம் நள்ளிரவு கடந்திருக்கும்!’ என்று நினைத்த பாரிக்கு, முதன்முறையாக ஐயம் வந்தது. `பொழுது நள்ளிரவைக் கடந்திருக்குமா... இல்லையா... ஏன் குழப்பம்? ஆதினியின் பாதுகாப்புமீதே கவனம் குவித்திருந்த தால் பொழுதின் ஓட்டத்தைச் சரியாக மதிப்பிட முடியவில்லை. எப்படியோ, விடிந்த பிறகுதான் குகை விட்டு அகல முடியும். ஆதினியை இங்கேயே படுக்கச் சொல்லலாம். ஆனால், அவள் படுக்க மாட்டாள்’ என்று எண்ணியபடியே இருந்தான்.

கும்மிருட்டின் அச்சம் எளிதில் மனம் விட்டொழியாது. அதுவும் உள்காட்டின் அடர்குகைக்குள். ஆதினிக்கு அவ்வப்போது எழும் ஐயமே, தான் கண்ணைத் திறந்திருக்கிறோமா... மூடியிருக்கிறோமா என்பதுதான். இரண்டுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லாத நிலையில் பாரியின் கையை இறுகப்பற்றுவதன்றி வேறு எதையும் கவனிக்க முடியவில்லை.
`எந்தச் சொல்கொண்டு இந்த அமைதியைக் கலைப்பது?’ எனப் பாரி சிந்தித்துக்கொண்டிருக்கையில், குகையின் உள்ளடுக்கிலிருந்து சிற்றொளி வெளிப்பட்டது. அதை உணர்ந்த கணம், சட்டென குகையின் உட்பகுதியை நோக்கித் திரும்பினான் பாரி. தோளிலே சாய்ந்திருந்த ஆதினி திடுக்கிட்டு நடுங்கினாள். `உள்ளே இருப்பது விலங்கா... எந்த வகையான விலங்கு?’ எதையும் கணிக்க முடியவில்லை. `சட்டென குகையை விட்டு வெளியே போய் நின்று அதை எதிர்கொள்வது பாதுகாப்பானதா? உள்ளேயே எதிர்கொள்வது பாதுகாப்பானதா?’ பாரியால் முடிவெடுக்க முடியவில்லை.

ஒளியின் அளவு கூடிக்கொண்டே இருப்பதுபோல் தெரிந்தது. ஒளியின் தன்மை எதையும் கணிக்க முடியாததாக இருந்தது. `பரவும் ஒளிக்குப் பின்னால் இருப்பது பாறையா... இருளா? அல்லது மிருகத்தின் உடலா?’ எதுவும் புலப்படவில்லை. இவ்வளவு குழப்பங்கள் வாழ்வில் இதுவரை ஏற்பட்டதில்லை. இயற்கையின் கணிக்க முடியாத கூர்முனையில் முன்னால் நின்றுகொண்டிருந்தான் பாரி. காடு அறியும் காலத்தில்கூட இவ்வளவு பதற்றமான கணத்தைச் சந்தித்ததில்லை. இப்போது ஏற்படும் பதற்றத்துக்குக் காரணம், ஆதினி; எது நடந்தாலும் அவளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான்.

ஒளியின் அளவு கூடிக்கொண்டே இருந்தது. மஞ்சள் கலந்த வெண்ணொளி பாறை இடுக்கின் ஓரத்தில் நீரோடுவதுபோல் கசிந்து ஓடியது. பாரியால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. `இது என்ன உயிரினமா... தாதுக்களின் கசிவா? அல்லது ஏதாவது ஆபத்தின் அடையாளமா?’ ஒன்றும் புரியவில்லை. சட்டென ஆதினியை இழுத்துக்கொண்டு வெளியேறிவிடலாம் எனத் தோன்றியது. ஆனால், மனம் அதைச் செய்ய மறுத்தது.

ஒளியின் நீளம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. அதன் நீளம் அதிகமாக அதிகமாக குகை முழுவதும் செவ்வொளி பரவியது. இது என்ன எனப் புரியவேயில்லை. துணிந்து அருகில் போக முடிவெடுத்தான் பாரி. ஆதினியின் இறுகிய பிடியைத் தளர்த்த முயற்சிசெய்யும்போது பரவும் நீளொளியின் முனைப்பகுதி குச்சிபோல மேலெழுந்தது. ஒருகணம் குப்பென வியர்த்தது பாரிக்கு.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83e_1511848376
அறிவு, ஐயத்தின் புள்ளியைக் கண்டறிந்தது. அந்த ஐயத்தை நோக்கியே சிந்திக்கத் தொடங்கியது. ஏறக்குறைய பாரி அது என்ன என்று கணிக்கத் தொடங்கினான். சற்று முன்னால் நகர்ந்து பார்ப்போம் என்று எண்ணி, அதற்கு இடப்புறமாக மெள்ள நகர்ந்து பார்த்தான். அவன் கணித்தது சரியானது என்று உறுதிப்படுத்திய கணம், காடு அதிர்வதைப்போல கத்த வேண்டும் என்று தோன்றியது. ஆனால், ஆதினி அச்சமடைவாள். அதுவும் இடம் விட்டு விலகி பொந்துக்குள் ஓடிவிடும் என்பதால் மகிழ்வை அடக்க முடியாமல் அடக்கினான்.

அவ்வளவு நேரமும் உறையிலிருந்த ஆயுதத்தைப் பிடித்திருந்த வலக்கையை எடுத்து இப்போது ஆதினியை இறுக அணைத்தான். அவளுக்குக் காரணம் புரியவில்லை. கட்டற்ற மகிழ்வை கசியும் காதல்மொழியில் சொன்னான், ``ஆதினி, நீ பார்த்துக்கொண்டிருப்பது இந்தப் புவியின் பேரதிசயம்.”

அவளுக்குப் புரியவில்லை.

``இராவெரி மரத்தைப் பார்த்த பறம்பு மக்கள் பலர் உண்டு. ஆனால், பல தலைமுறைகளாக மனிதர்கள் பார்த்திராத ஒன்றை இப்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.”

அச்சம் நீங்காத குரலில் பாரியின் கைகளை இழுத்து அணைத்தபடி, ``என்ன அது சொல்” என்றாள்.

``இதுதான் ஒளி உமிழும் வெண்சாரை. நாகர்குடியின் குலதெய்வம். இதைப் பார்த்தவர்கள் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வார்கள் என்று நாகர்கள் நம்புகிறார்கள்.”

பாரியின் சொல், ஒளியில் மிதந்தபடி இருந்தது. நேரம் ஆக ஆக அந்தக் குகை மிளிரும் வெண்மஞ்சள் ஒளியால் நிரம்பியது. சொற்கள், நாகர்களின் ஆதிவரலாற்றிலிருந்து வெளிவந்துகொண்டிருந்தன.

ஆதினியின் முகத்தில் பூத்த மகிழ்வுக்கு எல்லையே இல்லை. பாரியின் முகம், அதைவிடப் பெருமகிழ்வை வெளிப்படுத்தியது. பெருமின்னல் வெட்டி மீண்டும் மழை தொடங்கியது. குகைக்குள் மகிழ்வு எல்லையற்றதாக இருந்தது.

அவர்கள் அதைப் பார்த்தபடி அப்படியே உட்கார்ந்திருந்தனர். அது பாறையின் ஓரம் அசையாமல் இருந்தது. செதில்களின் அசைவு, சிற்றகலின் நாக்கு அசைவதைப்போல ஒளியை அசைத்துக்கொண்டே இருந்தது. காலம் காலமாக இருக்கும் கதை ஒன்று காட்சியாக மாறிக்கொண்டிருக்கும் அதிசயத்தைக் கண்ணருகே பார்த்துக்கொண்டிருந்தனர். இருவருக்கும் இமைகள் துடிக்கவில்லை. உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கும் முகம் அசையவில்லை. ஆனாலும் ஒளியின் அளவு கூடுவதை அவர்களால் கவனம்கொள்ள முடியவில்லை.
அதிசயத்தை அளவிட முடியாது. மனம் கரைந்த ஒன்றைக் கணக்கிட முடியாது. அதுதான் நிகழ்ந்துகொண்டிருந்தது. உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த ஆதினி, சட்டென திடுக்கிட்டுத் துள்ளியெழுந்தாள். என்னவெனப் பார்த்தான் பாரி. ஆதினியின் அருகில் இருந்த பாறையிடுக்கிலிருந்து இன்னொன்று ஊர்ந்து அதை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. 

பார்த்தபடி பாரியின் வலப்புறம் வந்து பதுங்கி உட்கார்ந்தாள். ஒளி உமிழும் இரு வெண்கோடுகளும் ஒன்றாகச் சந்தித்தன. சிறிது நேரத்தில் ஒன்றை ஒன்று சுற்றிப் பின்னத் தொடங்கின. காற்றுக்கு அசையும் சுடரொலிபோல வெண்ணொளி கூடிக்குறைந்துகொண்டிருந்தது. இரவு முழுவதும் ஒளிச்சுடர்கள் இரண்டும் ஒன்றை ஒன்று பின்னியபடியே இருந்தன.

ஆதினி, பாரியின் கைகளை இறுகப் பற்றினாள். அச்சம் உதிர்ந்த கணத்தில் ஆசை மேலேறத் தொடங்கியது. வெண்ணொளி பின்னுவதுபோல இருளுக்குள் இருந்த உருவங்களும் தயங்கித் தயங்கிப் பின்னத்தொடங்கின. மழையின் ஓசையைப்போல மூச்சுக்காற்றின் ஓசையும் கூடிக்கொண்டே இருந்தது.

எவ்வியூர் மாளிகையில் ஐவகைக் குறிஞ்சிமலர் கொண்டு படுக்கையை ஓர் ஓவியம்போல வரைந்து வைத்திருந்தனர். ஆனால், குறிஞ்சி நிலத்தின் உள்ளங்கைக்குள் காமம் தானே தனக்கான ஓவியத்தை வரைந்துகொண்டிருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83f_1511848390
ஆதினி கால்களில் அணிந்திருந்த தண்டை இவ்வளவு ஓசையை எழுப்பியபோதும் பின்னிய நாகங்கள் விலகவில்லை. காமம், விலக முடியாத விளையாட்டு. நாகங்களும் விலகவில்லை, நாகங்கண்டும் விலகவில்லை.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 13, 2018 8:29 am

பொழுதுவிடிந்து நீண்ட நேரமாகிவிட்டது. நண்பகல் கடந்த சிறிது நேரத்திலேயே ஒளி அகன்றுவிடும். எனவே, வேகமாக நடக்க வேண்டும் என முடிவுசெய்து குகையை விட்டு வெளியேறினர். இரவு முழுவதும் கடுமழை பெய்ததால் சரிவில் நடந்து மேலேறுவது எளிதல்ல என்பது தெரியும். கவனமாக நடந்து செல்லத் துணிந்தனர். மலையெங்குமிருந்து நீரூற்று கசிந்துகொண்டே இருந்தது. நீரோடும் பாறையை அழுத்தி மிதித்தாலும் வழுக்கும், அழுத்தாமல் மிதித்தாலும் வழுக்கும். பாறையின் செதில்கள் எப்படி இருக்கின்றன என்பதைப் பொறுத்தே காலடியை முன்னெடுக்க வேண்டும்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83a_1512543161
பாறைகளைக் கடக்கும்போது பாரி முன்னால் நடந்தான். பாறையின் தன்மை அறிந்து ஆதினிக்கு வழிகாட்டிச் சென்றான். மண்ணை மிதித்து நடக்கும்போதும் அதே அளவு கவனம் தேவை. பல நேரம் ஆதினியை முன்னால் நடக்கவைத்துப் பின்னால் வந்துகொண்டிருந்தான்.

இறங்கும் நீரையும் பாறையையும் மண்ணையும் வேர்களையும் குனிந்து பார்த்தபடியே நீண்டநேரம் நடந்துகொண்டிருந்தாள் ஆதினி. எங்கும் நீர் இழுத்து ஓடியபடியே இருக்க, தொடர்ந்து நடப்பது மிகவும் கடினமாக இருந்தது. சற்றே ஓய்வு தேவைப்பட்டது. ஓரிடத்தில் நின்று இளைப்பாறியபடி பார்வையை எல்லாப் பக்கங்களிலும் ஓடவிட்டாள். அப்போதுதான் ஆபத்தின் அளவு புரிந்தது. செங்குத்தான பெருஞ்சரிவின் நடுவில் அவர்கள் நின்றுகொண்டிருந்தனர். ஆதினி அதிர்ச்சிக்குள்ளானாள்.

“இந்தச் சரிவிலா இரவில் நடந்தோம்?”

“ஆம். இந்தப் பெருஞ்சரிவில்தான் நடந்தோம். அதுவும் காதல்கொண்டே.”

பாரி சொல்வது தனது செயலைத்தான் என்பது புரிந்தது. ஆனாலும் எந்த மறுமொழியும் சொல்லவில்லை. ``இந்த இடத்தைப் பகலில் பார்த்த ஒருவர், இங்கு இரவில் நடக்கத் துணிய மாட்டார்” என்றாள்.

``இரவிலே நடந்த ஒருவர், பகலில் எளிதில் நடந்து கடப்பார்” என்றான்.

அவனது சொல் ஆதினிக்கானது. அவன் சொல்லில் இருக்கும் உண்மையை அவளது மனம் ஏற்றது. கால்கள் முன்னிலும் வீரியத்தோடு முன்னகர்ந்தன. ஒற்றைச் சொல்லால் விசை கூட்டும் வித்தையை பாரியின் அளவுக்கு அறிந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் எனத் தோன்றியது.

`அவனை நினைத்து மகிழத்தான் எவ்வளவு இருக்கின்றன!’ என்று எண்ணியபடியே நடந்தாள்.

``பின்னிக்கிடக்கும் வெண்சாரைகள் அந்த இடம் விட்டு விடியும் வரை நகராது. நீ அஞ்ச வேண்டாம்” என்று நேற்றிரவு அவன் கூறிய சொல்லிலிருந்துதான் எல்லாம் மாறின. `அவை இந்தப் பக்கம் திரும்பாது என்றால், நாம் ஏன் அந்தப் பக்கம் திரும்ப வேண்டும்?’ எனத் தோன்றியது. அவ்வளவு நேரமும் வெண்சாரையைப் பார்த்துக்கொண்டிருந்த ஆதினி, பாரியின் பக்கம் திரும்பினாள். 

மெல்லிய ஒளி அவனது முகத்தில் பூசி மறைந்தது. வெண்சாரைகள் இரண்டும் இறுக்கி முறுக்கிக்கொள்ளும்போது ஒளியின் அளவு இரு மடங்கு அதிகமானதுபோல் இருந்தது. ஆனால், அதை அவர்கள் கவனிக்கவில்லை; முறுக்கி இறுகும் வெண்சாரைகளும் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. தலைக்குப் பின்புறமாக குகை விட்டு வெளியே பேரிடி விடாது விழுந்துகொண்டிருந்தது. கால்களின் கீழ்ப்புறம் வெண்சாரைகள் இறுகிப் புரண்டுகொண்டிருந்தன. மழையின் பேரோசை கூடியபடியே இருக்க, காற்றெங்கும் நீர் மிதந்துகொண்டிருந்தது. இவற்றில் எதையும் காதல் பொருட்படுத்தவில்லை.

இப்போதுதான் அவற்றை ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்து கொண்டே நடந்தாள்.   தங்களைச் சுற்றி எவையெல்லாம் இயங்கின என எண்ணிப் பார்த்தாள். எதை நினைத்தாலும் தாங்கள் இயங்கியதில்தான் எண்ணங்கள் முடிவடைகின்றன. `பாரிக்கும் இப்படித்தான் எண்ணங்கள் ஓடுமா? அவனது உள்மனம் இப்போது எதை நினைத்துக் கொண்டிருக்கும்?’ ஆதினியின் சிந்தனை, பாரியை நோக்கி ஓடியது. அவன் கவனமாகச் செடி கொடிகளை விலக்கி முன்நடந்து கொண்டிருந்தான்.

அவனுடைய சொற்களின் வழியே, செயல்களின் வழியே அவனது எண்ண ஓட்டத்தைக் கண்டறிய முயன்றபடியே வந்தாள். அது அவ்வளவு எளிதானதாக இல்லை. ஆனாலும் ஆதினி தொடர்ந்து முயன்றாள். பெரும்பள்ளம் ஒன்றின் மேலேற வசதியாக அவளைக் கைபிடித்துத் தூக்கினான். அவள் பாரியின் கண்களைப் பார்த்தபடியே முன்காலைத் தூக்கி வைத்து மேலேறினாள். அந்தக் கண்களில் எதையும் கண்டறிய முடியவில்லை. `ஆண்களின் கண்கள் மொழியற்றவையோ!’ எனத் தோன்றியது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83b_1512543179
`இல்லையே, நேற்றிரவு என்ன செய்வது என அறியாத கணத்தில் அவன் பார்த்த பார்வைதானே காமத்துக்குள் கட்டற்ற வேகத்தில் நம்மை இழுத்துச்சென்றது. `பெண் கண் செருகும்போது தொடங்கும் ஆட்டம், ஆண் கண் செருகி இருக்கும்போது முடிவுறுகிறது’ எனச் சொல்லக் கேட்டுள்ளேன். ஆனால், இவை எல்லாம் யாரால் பார்த்தறிய முடியும்? மற்றவர்கள் பார்க்க முடியாது, சம்பந்தப்பட்டவர்களால் பார்க்கவே முடியாது. அப்புறம் எப்படி இவை எல்லாம் கதைகளால் சொல்லப்படுகின்றன?’ மனதுக்குள் எண்ணியபடியே நடந்தாள்.

குறுகிய பள்ளத்தில் நீரின் வேகம் சற்றே அதிகமாக இருந்தது. முதலில் அதைக் கடந்த பாரி, அவள் கடப்பதற்குக் கைகொடுத்து இழுத்தான். அவள் கடந்து வந்ததும் முன்னே நடக்கவிட்டுப் பின்தொடர்ந்தான்.
அப்போதுதான் கவனித்தான், ஆதினியின் முதுகில் சிறிய சிறிய கீறல்கள் கோடுகளாய் அங்குமிங்குமாக இருந்தன. `கற்படுக்கையால் இப்படி நேர்ந்துவிட்டதே!’ எனக் கவலை கொண்டான். மழை பெய்து குளிர் நீங்காமல் இருப்பதால் எரிச்சல் தெரியாமல் இருக்கிறது. கோடைக்காலமாக இருந்தால் கடும் எரிச்சல் இருந்திருக்கும் என எண்ணியவனுக்கு, அதன் ஆபத்து அப்போதுதான் புரியவந்தது, `இப்படியே போனால் இவள் தோழிகள் கேள்விகள் கேட்டே இவளைத் திணறடித்து விடுவார்களே!’ என்று.

என்ன நடந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். எப்படி நடந்திருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதில்தான் எல்லோரின் விருப்பமும் இருக்கும். இதுபோன்ற தடயங்கள்தான் அவர்கள் பயன்படுத்தப்போகும் ஆயுதங்கள். நிலைமையை ஆதினியால் சமாளிக்க முடியாத அளவுக்கு இருக்கும். ஏனென்றால், அவளது முதுகில் இருக்கும் தடயங்கள் அவ்வளவு. இதைப் பற்றித் தெரியாமல் ஆதினி ஏதோ சிந்தனையில் நடந்து போய்க்கொண்டிருக்கிறாள் என்று நினைத்த பாரி, ``நீ சிறிது நேரம் இங்கே இரு. நான் அருகில் இருக்கும் செம்பாறை வரை போய் வருகிறேன்” என்றான்.

``ஏன்?” எனக் கேட்டாள் ஆதினி.

``உனது முதுகு முழுவதும் பாறையின் செதில்களால் கீறப்பட்ட கோடுகளும் தடயங்களும் நிறைய இருக்கின்றன. தோழிகள் பார்த்தால் கேலிசெய்வார்கள்” என்றான்.

அவள் முற்றிலும் எதிர்பாராத ஒன்றைப் பற்றிப் பாரி பேசினான். அவனது சொல்லில் இருப்பது அளவிட முடியாத காதல். அதனால்தான் அடுத்த கணமே அது உள்ளுக்குள் இன்பத்தைச் சுரக்கிறது. அவன் காமத்தின் தடயங்களை மறைக்கப் பார்க்கிறான். அந்தக் கணத்தைக் கற்பனையில்கூட அடுத்தவர் நெருங்கக் கூடாது எனத் தவிக்கும் ஆணின் தவிப்புதான் காதலின் ஆகச்சிறந்த பரிசு என அவளுக்குத் தோன்றியது.

அவனது சொல்லைக் கடக்க முடியாமல் நின்றிருந்த ஆதினியைப் பார்த்துப் பாரி சொன்னான், ``செம்பாறையின் ஓரம் இழுத்தோடும் நீரில் பொன்போல மின்னும் மண் துகள் படிந்திருக்கும். அந்த மண் துகளை எடுத்துவந்து முதுகில் பூசிவிடுகிறேன். அது ஒளியை மினுக்கிக்கொண்டிருக்கும். பார்ப்பவர்களுக்கு மினுக்கும் ஒளிதான் தெரியுமே தவிர, முதுகில் உள்ள கீறல்கள் எளிதில் தெரியாது” என்றான்.

நுனிநாக்கால் மேலுதடைத் தொட்டு நனைத்துக் கொண்டாள். சிரிப்பை மறைக்க அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83c_1512543194
ஆனால் பாரி கண்டறிந்தான், ``ஏன் சிரிக்கிறாய்?”

``முதுகெல்லாம் ஏன் பொன்மணல் படிந்திருக்கிறது எனக் கேட்டால்?”

``படுத்திருக்கும்போது ஒட்டியிருக்கும் எனச் சொல்.”

``அதனால்தான் பாரியின் முதுகில் பொன்மணல் ஒட்டவில்லையோ எனக் கேட்பார்கள்.”

ஒரு கணம் திகைத்துப்போனான்.

அவன் முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியைக் கண்டு மகிழ்ந்து சிரித்தாள். அடுத்தடுத்து எழும் வினாக்களை நோக்கி அவள் உள்ளே போய்க்கொண்டிருந்தாள். திகைத்த இடத்திலே பாரி நின்றுவிட்டான். கேலி விளையாட்டில் பெண்கள் செல்லும் ஆழம் ஆண்களால் அறிய முடியாதது. இது, பெண்கள் தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக்கொண்ட கலையின்பம். அதனால்தான் எழப்போகும் வினா பாரிக்குத் திகைப்பை உருவாக்கிய கணமே ஆதினிக்குச் சிரிப்பை உருவாக்கியது. தோழிகள் கேட்கப்போகும் வினாக்களுக்குள் நுழைந்தபோது அவளது சிந்தனை திக்குமுக்காடியது. `வெண்சாரைகளின் நிழலில் எங்களின் காமம் நிகழ்ந்தது எனச் சொன்னால் நிலைமை என்ன ஆகும்!’ வேளிர் குலம் முழுக்க தலைமுறை தலைமுறையாக இந்தக் கதை நிலைத்துவிடும் என அவளுக்குத் தெரியும்.
 
எத்தனை தலைமுறைகளாலும் முதுகில் கீறல்கொண்ட இளம்பெண்கள் இந்த வினாவிலிருந்து தப்பவே முடியாது. காலம்காலமாகப் பாரியின் குறியீடாக பதில்கள் சொல்லப் பட்டுக்கொண்டே இருக்கும். அவன் செய்யப்போகும் செயல் எல்லா இளம்பெண்களின் முதுகிலும் படிந்துவிடும் என நினைத்தபடி பாரியின் கையைப் பிடித்து, ``பொன்மணல் துகள் வேண்டாம். தோழிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றாள்.
அவள் சொல்வதை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை. `என்ன சொல்லி சமாளிப்பாள்?’ எனச் சிந்தித்தபடியே அவன் நடந்தான். அவனுக்குள் வினாக்கள் தொடர்ந்து எழுந்தவண்ணம் இருந்தன. ஆனால், எண்ணங்கள் கேட்க விடாமல் தடுத்துக்கொண்டே இருந்தன. சிறுபாறையின் மேலே ஏறி அவளைக் கைபிடித்துத் தூக்கிவிட்டான்.

மேலேறியவுடன் நிமிர்ந்து பார்த்தாள் ஆதினி. எதிரில் சமவெளி விரிந்துகிடந்தது. `செங்குத்தான பெருஞ்சரிவை அதற்குள் ஏறிக் கடந்துவிட்டோமா!’ வியப்பு குறையாமல் முன்னும் பின்னுமாகத் திரும்பிப் பார்த்தாள். அவளால் நம்பவே முடியவில்லை. வியப்போடு பாரியைப் பார்த்தாள். அவன் உள்ளும் வெளியுமாக இயக்கும்விதம் மேலும் மேலும் வியப்பூட்டுவதாக இருந்தது.

கதிரவன், எதிர்க்குன்றின் பின்னால் மறையத் தொடங்கினான். இருவரும் சிறிது தொலைவு சமவெளியில் நடந்து சென்றனர். எதிரில் சிறுமேடு ஒன்று இருந்தது. ``இந்த மேடு ஏறி இறங்கினால், கீழ்த்திசையில் நாம் நிறுத்தி வந்த தேர் இருக்கும். நான் குதிரைகளைக் கண்டறிந்து வருகிறேன். அதுவரை நீ இங்கேயே இரு” என்று சொல்லி நடந்தான்.

காற்று சற்றே அதிகரிக்கத் தொடங்கியது. மாலையானதும் இன்றும் கடுமழை வரப்போகிறது எனச் சிந்தித்தபடி குதிரைகளைப் பிடித்துவர விரைந்தான்.

ஆதினி அவன் வரும் வரை மரத்தடியில் அமர்வோம் என நினைத்து, அருகில் இருந்த செங்கிளுவை மரத்தின் அருகே போய் உட்கார்ந்தாள். குதிரைகளை நோக்கி விரைந்த பாரி, ஏதோ எண்ணம் தோன்ற, திரும்பி ஆதினியைப் பார்த்தான். அவள் அப்போதுதான் செங்கிளுவையில் சாய்ந்தாள்.

``மரத்தை விட்டு விலகி வந்து ஓய்வெடு. நான் விரைந்து வருகிறேன்” என்று சொல்லியபடி ஓடினான். அவள் மரம் விட்டு நீங்கினாள். அருகில் இருந்த சிறுபாறையின் மீது உட்கார்ந்து மரத்தைப் பார்த்தாள். `ஏன் அதன் அருகே உட்கார வேண்டாம் என்று சொன்னான்?’ என்று சிந்தித்தபடியிருந்தாள்.

சற்று நேரம் கழித்து குதிரைகளோடு வந்தான் பாரி. இருவரும் பேசியபடியே குன்றின் மேல் நடந்தனர். குதிரையைத் தொட்டு வருடும் ஆசையை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. கைகூசியபடி அதனுடைய முதுகை வருடிக் கொண்டே கேட்டாள், ``ஏன் மரத்தை விட்டு அகலச் சொன்னீர்கள்?”

``காற்று பலமாக அடிக்கத் தொடங்கியது. அந்த மரம் பெருங்காற்றைத் தாங்காது. அதனால்தான் தள்ளி உட்காரச் சொன்னேன்.”

``பார்த்தால் வலிமையான மரம்போல் தெரிந்தது. அதனால்தான் அருகில் போனேன்.”

``மலையுச்சி மரங்களின் தன்மையைக் கணிப்பது சற்றே கடினம். எளிதில் நம்மை ஏமாற்றிவிடும்.”

``நீங்கள் எப்படிக் கண்டறிந்தீர்கள்?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83d_1512543217
``உதிரும் அதன் இலையை வைத்துதான்.”

``இலையை வைத்தா?”

``ஆம், இலையில்தான் மரத்தின் குறிப்பு இருக்கிறது.”

குதிரைமீதிருந்த கையை விலக்கி அவனைப் பார்த்தாள்.

பாரி சொன்னான், ``உதிரும் இலையின் நுனிப்பகுதி கீழ்நோக்கி வருகிறதா,  அடிப்பகுதி கீழ்நோக்கி வருகிறதா அல்லது சம எடையுடன் காற்றை வெட்டி வெட்டி மிதந்து வருகிறதா என்பதை இலையின் கீழ்ப்புறம் உள்ள நரம்பின் தன்மையே தீர்மானிக்கிறது. மரங்களுக்கு வயது ஆக ஆக நரம்பின் பிடிமானமும் கன அளவும் மாறும். அது மாற மாற உதிரும் இலையின் தன்மையும் மாறும். எனவே, உதிரும் இலை எந்த நிலையில் உதிர்கிறது என்பதை வைத்தே மரத்தின் வயதையும் ஆற்றலையும் சொல்லி விடலாம்.”

``வியப்பாக இருக்கிறது” என்றாள் ஆதினி.

``இதிலென்ன வியப்பு இருக்கிறது... ஓடும் நரியைப் பார்த்தவுடன் வயதைச் சொன்னார் உன் தந்தை. அதுதான் வியப்பு.”

சொல்லிக்கொண்டிருக்கும்போதே தொலைவில் தேர் நிற்பது தெரிந்தது. பாரி கை நீட்டி அதைக் காண்பித்தான். அதைப் பார்த்தபடியே ஆதினி கேட்டாள், ``தேரின் நேரெதிர் திசையில்தானே கீழே இறங்கினோம். இப்போது இடப்பக்கமாக ஏறி வருகிறோம்?”

``காட்டில் எதையும் நாம் தீர்மானிக்க முடியாது. காடுதான் தீர்மானிக்கும். நாம் பார்க்கப்போனது ஒன்றை; பார்த்தது வேறொன்றை. அப்படித்தான் எல்லாமும்.”

பேசியபடியே தேரை நெருங்கினர். கதிரவன் மலையில் சரிபாதி மறைந்துவிட்டான். காற்றின் வேகம் கூடியபடி இருந்தது. குதிரைகளைத் தேரில் பூட்ட முன்புறமாகப் போனான் பாரி. ஆதினி, வலப்புறமாகத் தேரை நோக்கி நடந்தாள். காற்று பலம்கொண்டு வீசியதில் குதிரை காதுவிடைத்து, கனைத்தது. அதன் கழுத்துப் பகுதியைத் தடவிக்கொடுத்து அமைதிப்படுத்த முயன்றான். அப்போது ஆதினி அழைக்கும் குரல் கேட்டது. குதிரை மீண்டும் எதிர்காற்றில் துள்ளிக் கனைத்தது. குதிரையை அருகில் இருந்த சிறு மரத்தில் கட்டிவிட்டு ஆதினியின் அருகில் வந்தான்.

அவள் தேர்ச்சக்கரத்தின் அருகில் உட்கார்ந்து எதையோ பார்த்துக்கொண்டிருந்தாள். அங்கு உட்கார்ந்து என்ன செய்கிறாள் என்று எண்ணியபடி அருகில் வந்தான் பாரி. தேர்ச்சக்கரத்தின் ஆரக்காலில் முல்லைக்கொடி ஒன்று முழுச்சுற்று சுற்றி, தலையை வெளிப்புறமாக நீட்டியபடி இருந்தது. இன்னொரு கொடி பக்கத்தில் இருந்த ஆரக்காலில் பாதி சுற்றி, தலை நீட்டியிருந்தது.

அருகில் வந்த பாரி அதைப் பார்த்தான். கொடியின் தளிர், காற்றுக்கு அசைந்தபடி ஆரக்காலைத் தழுவியிருந்தது. ஆதினியின் முகத்தைப் பார்த்தான். சற்றே பதற்றத்தோடு இருந்தாள். ``தேரை எடுத்தால் இரு கொடிகளும் அறுந்துவிட வாய்ப்புள்ளது. இந்த முல்லைக் கொடியைப் பக்குவமாகப் பின்னோக்கிச் சுழற்றி வெளியில் எடுத்துவிடலாமா?” எனக் கேட்டாள்.

பாரி, எதுவும் சொல்லாமல் முல்லைக் கொடிகளையே பார்த்துக்கொண்டிருந்தான். காற்று பெரும்வேகத்தோடு வீசியது. நின்றிருந்த தேர், சற்றே அசைந்துகொடுத்தது. சட்டென சக்கரத்தை இறுகப்பிடிக்க முயன்றாள் ஆதினி. ஆனால், பாரியின் கை அதைப் பிடித்துக் கொண்டிருந்தது. இது நிகழ்ந்துகொண்டிருக்கும் போது குன்றுக்குப் பின்னால் சடசடவெனப் பேரோசை கேட்டது. அதிர்ந்து திரும்பினாள்.

திரும்பாமலே பாரி சொன்னான், ``அந்தச் செங்கிளுவை விழுந்துவிட்டது.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83e_1512543316
ஆதினிக்கு, பதற்றம் இன்னும் அதிகமானது. விழுந்த மரத்தில் அடைந்திருந்த பறவைகள் கலைந்து வெளியெங்கும் ஓசையெழுப்பின. அதைக் கவனித்தபடியே ஆதினியிடம் சொன்னான், ``இலையில் மரத்தின் குறிப்பு இருந்ததைப்போல இந்த முல்லைக்கொடிகளில் இருக்கும் குறிப்பு என்னவென்று பார்.”

அவள் முல்லைக்கொடிகளை உற்றுப் பார்த்தாள். சக்கரத்தின் ஆரக்காலை முழுமையாகச் சுற்றிய கொடி, தலையாட்டியபடி அவளைப் பார்த்துக்கொண்டிருந்தது. அது ஆரத்தைச் சுற்றியிருக்கும் விதத்தைக் கவனித்தாள். எங்கோ பார்த்ததுபோல் இருந்தது. எங்கே என்று சிந்தித்தபோது வெண்சாரைகளின் நினைவு வந்தது. அதே பின்னல்கொண்டு வளைந்து மேலேற முயன்றது முல்லைக்கொடி. பக்கத்து ஆரத்தின் மீதும் அதே முயற்சியைச் செய்து கொண்டிருந்தது இன்னொரு கொடி.

கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்த ஆதினியின் கண்கள் கலங்கின. பாரியைத் திரும்பிப் பார்த்தாள். அவன் கண்கள் எண்ணில்லா சொற்களைப் பேசின. ஆண்களின் கண்களைப் படித்தறிய வேறு வழியுண்டா என மனம் பதறியது. ஆனாலும் தொடர்ந்து முயன்றாள். `இடப்புறம் இருப்பதுதான் நானா?’ என்று ஆதினியின் ஆழ்மனம் கேட்க, `இல்லை வலப்புறம் இருக்கும் கொடிதான் உனது சாயலில் தலைசாய்ந்தே இருக்கிறது’ என்று பாரி சொல்ல, மனதுக்குள் நீங்கா உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. `வெண்முல்லையும் வெண்சாரையும் வடிவத்திலும் வாசனையிலும் ஒன்றே!’ என ஆழ்மனம் சொல்லியது. காற்று வீறுகொண்டு வீசியது. ஆதினி, பாரியின் கைகளை இறுக அணைத்துத் தோள் சாய்ந்தாள்.

``குகை நமக்கானதாக மாறியதுபோல, தேர் முல்லைகளுக்கானதாக மாறிவிட்டது” என்றான் பாரி.

வெட்கம் கலையாத சிரிப்போடு ஆதினி சொன்னாள், ``நேற்று நாகம் கற்றுக்கொடுத்தது. இன்று முல்லை கற்றுத்தருகிறது.”

``காடு, கணம்தோறும் நமக்குக் கற்றுத்தந்து கொண்டேதான் இருக்கும்” எனச் சொல்லியபடி தேர் விட்டு நகர்ந்தான் பாரி. தன் விரல்களால் சக்கரங்களின் ஆரங்களைத் தொட்டு வருடியபடி அந்த இடம் விட்டு எழுந்தாள் ஆதினி.

இருவரும் நடக்கத் தொடங்கினர். ஆதினி மெல்லிய குரலில், ``படர்வது குறுமுல்லை. ஒரு மலர் பூத்தால் போதும். காடே மணக்கும்” எனச் சொல்லிவிட்டு, பாரியின் முகத்தைப் பார்த்தாள்.

‘என்ன பொருள் இதற்கு?’ பாரியின் கண்கள் தடுமாறின. பெண்ணின் கண்கள் சொல்வதை முழுமையாகக் கற்க ஆண்களால் முடியுமா என்ன? ‘உதிரும் இலையின் குறிப்பு தெரிந்த உனக்கு வீசும் பார்வையின் பொருள் புரியாதா?’ என்று கேட்பதுபோல் இருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83f_1512543348
இருவரும் காதல் மயக்கம் கலையாமல் நடக்கத் தொடங்கினர். பொன்மணல் துகள் மனமெல்லாம் மின்னிக்கொண்டிருந்தது. கீறல் தழும்புகளிலிருந்து குறுமுல்லையின் நறுமணம் கசியத் தொடங்கியது. பாரியின் வலக்கையைத் தனது இடக்கையால் பின்னியபடி நடந்தாள். வெண்சாரை ஒருபுறமும் குறுமுல்லை மறுபுறமுமாகப் படர்ந்து கொண்டிருந்தன. இருவரும் எவ்வியூர் நோக்கி நடந்தனர்.

இன்றும் ஐவகைக் குறிஞ்சியில் மலர்ப்படுக்கை அமைத்திருப்பர். ஆனால், மலராத முல்லையின் மணமேந்தி, சுடரின்றிப் பரவும் ஒளியேந்தி வந்துகொண்டிருக்கும் இந்தக் காதலர்களின் இரவை மற்றவர்களால் எதுகொண்டு அலங்கரிக்க முடியும்?

போகும்போது கட்டிப்போட்டிருந்த குதிரைகளைக் கையில் பிடித்துக்கொண்டு நடந்தனர். இரு குன்றுகளைத் தாண்டியபோது எதிரில் பாணர் கூட்டம் ஒன்று வந்துகொண்டிருந்தது. எவ்வியூர் வந்து திரும்பும் பாணர்களை, வீரர்கள் அழைத்துக்கொண்டு போயினர்.

``பாரி தேரில்தானே வந்ததாகச் சொன்னார்கள். இப்போது குதிரைகளைக் கையில் பிடித்துக் கொண்டு நடந்து போவானேன்?” என்று ஒரு பாணன் கேட்க, ``அதோ, தேர் அங்கே நிற்கிறது. அருகில் போய்ப் பார்த்தால் காரணம் தெரியப் போகிறது” என்று இன்னொரு பாணன் சொன்னான்.

``முல்லைக்குத் தேரைக் கொடுத்ததாகப் பாணர்கள் பாடுகிறார்களே அது உண்மையா?” என்று கபிலர் கேட்டதற்குத்தான் இந்த முழுக் கதையையும் பாரி சொல்லி முடித்தான். கேள்வி என்னமோ முல்லைக்கொடியைப் பற்றித்தான். ஆனால், பாரி தனது திருமணக் காலத்திலிருந்து நடந்ததை விளக்கியதற்குக் காரணம், காலம்பன் அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.

சோமப்பூண்டின் பானம் இருந்தும் அன்று யாரும் ஒரு குவளைகூடக் குடிக்கவில்லை. பாரி நடந்ததைச் சொல்லி முடிக்கும்போது அனைவரும் பெரும்வியப்பில் மூழ்கிப் போயிருந்தனர். முல்லைக்கொடி பற்றிக் கேட்ட கபிலரோ, இராவெரி மரம் பற்றிக் கேள்விப் பட்டதும் அதிர்ந்துபோனார். ``இதைத்தான் வடதேசத்து முனிகள் `ஜோதி விருட்சம்’ எனச் சொல்கிறார்களோ!’’ எனக் கேட்டார்.

தேக்கனின் வியப்பு வேறுவிதமாக இருந்தது. ``நீயும் ஆதினியும் வெண்சாரையைப் பார்த்தீர்களா? இதுவரை சொல்லவேயில்லையே” எனக் கேட்டார். பாரியைப் பற்றிய தேக்கனின் வியப்பு காலகாலத்துக்கு நீங்காது என்பது அவரின் பார்வையிலேயே புலப்பட்டது.

காலம்பனின் வியப்பு முல்லைக்கொடியோ, வெண்சாரையோ அல்ல; `ஆயுதங்களைக் கூர்மையாக்கும் கல் இருக்கிறதா? பல்வேறு தாதுக்களை ஆற்றலாக மாற்றத் தெரிந்த பொதினியின் பதினெட்டுக் குடிகள். அவர்கள் எதையெல்லாம் செய்யும் ஆற்றல் படைத்தவர்கள்?’ அடுக்கடுக்காய் மேலெழுந்தபடி இருந்தது காலம்பனின் வியப்பு.

எல்லோரும் வியந்ததைப்போல பாரியும் வியப்பு நீங்காமல்தான் இருந்தான். இந்த நிகழ்வு எப்படி வெளியில் தெரிந்திருக்கும் என எண்ணிப்பார்த்தான். ``பேசியபடி தங்களைக் கடந்துபோன பாணர்கள் தேர்ச்சக்கரத்தில் முல்லைக்கொடி பின்னிக்கிடப்பதைப் பார்த்துப் பாடல் புனைந்துள்ளனரோ?!” என்றான்.

கேள்வி, கபிலருக்கு வியப்பைக் கொடுத்தது. ``நிலமெங்கும் உனது புகழைப் பரப்பும் குறியீடு இதுதான்” என்றார் கபிலர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83g_1512543368
``படர வழியின்றிக் கொடி தவித்தால் யாராக இருந்தாலும் அதற்கு வழிசெய்துவிட்டுத்தானே போவார்கள். இதில் வியக்க என்ன இருக்கிறது?” எனக் கேட்டான் தேக்கன்.

``மலைமக்களின் வாழ்வை சமவெளி மனிதர்கள் புரிந்துகொள்வது எப்படி எளிதில்லையோ, அதேபோல்தான் சமவெளி மக்களின் எண்ண ஓட்டங்களையும் சிந்தனை நிலையையும் மலைமக்கள் புரிந்துகொள்வதும் எளிதல்ல” என்றார் கபிலர்.

தேக்கனுக்கு அவர் சொல்லவருவது விளங்கவில்லை,

``உங்களுக்கு இது வாழ்வின் பகுதி. எனவே, நின்றுபார்க்க ஒன்றுமில்லை. ஆனால், தவித்து அலையும் மக்களுக்கு இது கனவு. எனவே, கடக்க வழியின்றிப் பாடியபடியே இருக்கின்றனர்.”

கபிலரின் சொற்கள் ஆழத்துக்குப் போயின. அதைப் பற்றிய சிந்தனையும் அவ்வாறே. இரவெல்லாம் பேசினர். சோமப்பூண்டின் பானம் விட்டு மனமும் உடலும் வெளியேறிவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்தனர். குடியும் இரவும் அவர்களை விட்டு அகன்றன.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 13, 2018 8:58 am

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P88a_1513158013
வனத்தின் சாகசத் தளபதி ஹிப்பாலஸ், வஞ்சி மாநகரத்தில் வந்திறங்கினான். வைப்பூர்த் துறைமுகம் பற்றி எரிந்து பல மாதங்களாகப்போகின்றன. நீண்டநாள்களாக வைப்பூர்க் கோட்டையிலேயே இருந்தவன், பிறகு ஓரிரு இடங்களுக்குப் பயணம் போய் இப்போது வஞ்சியை வந்தடைந்துள்ளான். அவனோடு எபிரஸ், திரேஷியன், கால்பா, பிலிப் ஆகியோர் வந்துள்ளனர்.

பெருவணிகன் வெஸ்பானியன் தலைமையில் யவனத்திலிருந்து ஆறு நாவாய்களில் பாண்டிய இளவரசனின் மணவிழாவுக்குப் புறப்பட்டனர் யவனர்கள். `மீனாள்’ என்று யவனத்தில் எழுதப்பட்ட யானை வடிவம் தாங்கிய நாற்சதுர நாணயத்தோடும் எண்ணற்ற பரிசுப்பொருள்களோடும் பாண்டிய நாட்டில் வந்திறங்கினர்.

இந்தப் பெருஞ்சிறப்பு, தமிழ்நிலத்தில் எந்த மன்னனுக்கும் தரப்பட்டதில்லை. அதற்குக் காரணம், யவன வணிகத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ள பாண்டிய நாட்டு முத்துகள். அதன்பொருட்டே யவனப் பெருவணிகன் வெஸ்பானியனும் அரச பிரதிநிதிகளும் துறைமுகப் பொறுப்பாளர்களும் வருகைபுரிந்தனர்.

இவர்கள் வருகைபுரிந்த ஆறு நாவாய்களும் வைகை ஆற்றில் சாம்பலாகக் கரைந்தன. வெஸ்பானியன் நெருப்பிலே மாண்டான். வேதனைகளையும் இழப்புகளையும் தாங்க முடியவில்லை. கடக்க முடியாத துயரங்களைக் கடக்க வழியின்றி நாள்கணக்கில் குடித்தான் ஹிப்பாலஸ். கம்பீரமிக்க தனது நாவாய் எரிந்தபடியே மூழ்கிய காட்சி, அவன் கண்களைவிட்டு எளிதில் அகல மறுத்தது.

எல்லோரையும்போல இது விபத்து என்றுதான் அவனும் முதலில் நினைத்தான். ஆனால், பிறகுதான் செய்தி தெரியவந்தது, பறம்பு வீரர்கள் பற்றவைத்த நெருப்பு என்று. ஆனாலும் காரணம் எளிதில் புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது. சேர அரசுகளான குட நாட்டுக்கும் குட்ட நாட்டுக்கும் பறம்போடு பன்னெடுங்காலப் பகை இருக்கிறது. பாண்டியனோடு எந்தப் பகையும் பறம்புக்கு இல்லையே. பிறகு ஏன் பறம்பு வீரர்கள் இந்தக் கொடுஞ்செயலைச் செய்ய வேண்டும் என்பது, விளங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது.

காரணம் அறியாமல் வைப்பூர்க் கோட்டையை விட்டு வெளியேறுவதில்லை என்ற முடிவோடு இருந்தான். செய்திகள், எல்லா முனைகளிலிருந்தும் ஹிப்பாலஸுக்கு வந்துகொண்டிருந்தன. கடலோடிகள், பெருவணிகர்கள், கடற்கரைப் பணியாளர்கள், வைப்பூர் மக்கள், பாண்டிய அரண்மனைப் பணியாளர்கள், போர்வீரர்கள் என எல்லோரும் ஆளுக்கோர் உண்மையை ஹிப்பாலஸுக்குச் சொன்னார்கள். எல்லாவற்றையும் தொகுத்தபடியே இருந்த அவன், கடைசியாகக் கேள்விப்பட்டது தேவாங்கு பற்றிய செய்தியை.

அந்தக் கணத்திலிருந்து அவனுக்கு வியப்பு தாங்க முடியவில்லை. `திசை உணர்த்தும் ஒரு விலங்கா!’ காலம் முழுவதும் கடலிலேயே பயணப்படும் ஒருவனுக்கு, தேவாங்கு போன்ற விலங்கு நம்ப முடியாத கற்பனையாகத்தான் இருக்கும். ஆனாலும் எல்லா வகைகளிலும் அவன் அதை உறுதிப்படுத்தினான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P88b_1513158031
குலசேகரப்பாண்டியன் அந்த விலங்கைக் கைப்பற்றப் பறம்புக்குத் திரையர்களை அனுப்பிவைத்ததை அமைச்சர்கள்மூலமே தெரிந்துகொண்டான். திரையர்களோடு பறம்பு வீரர்கள் உடன் வந்துதான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஏனென்றால், விடுதலையான திரையர் குடும்பங்களும் கப்பலிலிருந்து தப்பித்த திரையர்குல வீரர்களும் பறம்புக்குள்தான் நுழைந்துள்ளனர். எனவே, எல்லாம் பாரியின் செயல்தான் என்பதைக் குலசேகரப்பாண்டியன் உறுதிசெய்துள்ளான் என்பது வரை ஹிப்பாலஸுக்குத் தெரியவந்தது.

ஆனாலும், அந்த விலங்கைப் பார்க்காமல் அவனால் நம்ப முடியவில்லை. அந்த விலங்குகள் எல்லாம் பறம்பு வீரர்களால் மீட்கப்பட்டுவிட்டதாகவும் மிஞ்சிய சில, நெருப்பிலே எரிந்துவிட்டதாகவும் சொன்னார்கள். ஒன்றிரண்டாவது எஞ்சியிருக்காதா என்று ஹிப்பாலஸ் தொடர்ந்து முயன்றான். அவன் முயற்சி வீண்போகவில்லை.

வைப்பூர்த் துறையில் நெருப்பு பற்றுவதற்கு முன்னரே இரண்டு கலங்கள் துறையை விட்டு வெளியேறியுள்ளன. இறலித்தீவுக்கும் தெங்கின்தீவுக்கும் பயணமான அவை இரண்டிலும் தேவாங்குகள் இருந்திருக்கின்றன. சூழ்கடல் முதுவன் யாரும் அறியாதபடி நள்ளிரவுக்கு முன்னதாகவே அந்தக் கலங்களை வெளியேற்றியுள்ளான் என்பதை ஹிப்பாலஸ் அறிந்தான். 
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P88c_1513158048
எப்படியாவது அந்தக் கலங்களில் உள்ள தேவாங்குகளைப் பார்த்துவிட வேண்டும் என்று பெருமுயற்சி செய்தான். வைப்பூரிலிருந்து கொற்கைக்கு வந்தவன் சிறிய வடிவிலான வங்கத்தை எடுத்துக்கொண்டு இறலித்தீவுக்குப் புறப்பட்டான். அங்கு போய் சூழ்கடல் முதுவனுக்கு நம்பகமான வணிகத் தோழனிடம் அதிகப்படியான விலைபேசி தேவாங்கைக் கைப்பற்றினான். அதைப் பார்த்த கணத்திலிருந்து இப்போது வரை அவனது வியப்பு நீங்கவில்லை.

`கடலின் எல்லாவித ஆபத்துகளையும் நீக்கும் தேவதை இது!’ என அவன் தேவாங்கை வர்ணித்தான். இப்படியொரு விலங்கு இருக்கும் செய்தி யவனத்தை எட்டுமானால், உலகெங்கும் இருக்கும் கடல் வணிகர்கள் அனைவரும் பாண்டிய நாட்டை முற்றுகையிடத் தொடங்கிவிடுவர். மற்றவர்கள் அறியும் முன், இந்த விலங்கை நாம் கைப்பற்ற வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்தான் ஹிப்பாலஸ்.

இறலித் தீவிலிருந்து மீண்டும் கொற்கைக்குத் திரும்பிய அவன், நேராக மதுரைக்குச் சென்றான். குலசேகரப்பாண்டியனைக் கண்டு பேசிவிட்டுத்தான் இப்போது வஞ்சி மாநகருக்கு வந்துள்ளான்.

அவனது வருகை உதியஞ்சேரலுக்குத் தெரிவிக்கப்பட்டது. யவனத்தின் பெருமைமிகு வணிகர்களும் கடல் பயண சாகசத் தளபதிகளும் வந்துள்ளதை மகிழ்வோடு வரவேற்றான் உதியஞ்சேரல்.

அவனுடைய உற்சாகத்துக்கு இப்போது கூடுதல் முக்கியத்துவம் இருந்தது. வணிகப் போட்டியில் சேரனின் மிளகை, பாண்டியனின் முத்து கடந்து முன் சென்றுவிட்டது. எனவே, யவன வணிகர்களின் முதல்மரியாதை பாண்டியனை நோக்கியே கடந்த சில ஆண்டுகளாக இருப்பதை யாவரும் அறிவர். அதன்பொருட்டே பாண்டிய இளவரசனின் மணவிழாவுக்கு யவனத்திலிருந்து சிறப்பு ஏற்பாட்டோடு பலரும் வந்து பங்கெடுத்தனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P88d_1513158097
ஆனால், வைப்பூரில் பற்றிய தீயால் யவன வணிகர்களுக்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. பாண்டியனின் நற்பெயரில் அழிக்க முடியாத கரும்புகை படிந்துவிட்டது. வைப்பூரில் ஏற்பட்ட இழப்பிலிருந்து எந்த ஒரு வணிகனும் எளிதில் மீண்டுவிட முடியாது. பாண்டியனால் ஏற்பட்ட கசப்பையும் கண்ணீரையும் கடலோடிகளால் எளிதில் கடந்துவிட முடியாது. நெருப்பின் சூட்டைக் கடல் மறக்க, நீண்ட காலமாகும். அதுவரை வஞ்சி நகரே வணிகத்தின் தலைவாசலாக இருக்கும் என்று கணித்தான் உதியஞ்சேரல்.

வைப்பூரில் பற்றிய நெருப்பு, பாண்டியப் பேரரசுக்குப் பெருங்களங்கத்தை உருவாக்கியது உண்மைதான். அதனால் யவன வணிகர்கள் கடுஞ்சினம்கொண்டிருந்ததும் உண்மைதான். ஆனால், இறலித்தீவுக்குப் போய் தேவாங்கை ஹிப்பாலஸ் நேரில் பார்த்த பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அதனால்தான் அவன் மீண்டும் கொற்கைக்குத் திரும்பினான். மதுரைக்குப் போய் குலசேகரப்பாண்டியனைக் கண்டான்.
கடுங்குற்றச்சாட்டைப் பகிர்ந்து கொள்வதற்காகவே அவன் திரும்பி வந்திருப்பதாக குலசேகரப்பாண்டியன் நினைத்தார். ஆனால் ஹிப்பாலஸ், ``தங்களைக் கண்டு நன்றி சொல்லவே வந்தேன்”  என்றான். பேரரசருக்கு விளங்கவில்லை.

``காலம் முழுவதும் கடலிலேயே வாழ்வைக் கழிக்கும் கடல்மனிதன் நான். திசை அறியும் ஆற்றல்கொண்ட விலங்கு ஒன்று இருக்கிறது என்பதைக் கண்டறிந்ததற்காகவே உங்களைக் கண்டு நன்றி சொல்ல வந்தேன். பாண்டிய நாட்டு வானியல் அறிஞர்களின் ஆற்றல் பற்றி நிறையவே கேள்விப்பட்டுள்ளேன். எமது நாட்டின் மூத்த அறிஞர்கள், பாண்டியர்களைப் பற்றி எண்ணற்ற குறிப்புகளை எழுதிவைத்துள்ளனர். நாட்டை 365 பாகங்களாகப் பிரித்து, நாள்தோறும் ஒவ்வொரு பாகத்தில் குடியிருப்பவர்கள் அரசுக்குத் திறை கட்ட வேண்டும் என்று விதி செய்தவர்கள் பாண்டியர்கள். `பல தலைமுறைக்கு முன்பே ஆண்டை நாள்கணக்கில் துல்லியமாகப் பகுத்து, அதை நிர்வாகத்தோடு இணைத்த அறிவு பாண்டியர்களுடையது’ என எழுதிவைத்துள்ளனர். உங்களின் வானியல் ஆற்றலை நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், திசை காட்டும் விலங்கொன்று இருக்கிறது என்பதைக் கண்டறிந்த உங்களின் பேரறிவுக்கு, எங்களின் மரியாதையைச் செலுத்துகிறோம். நீங்கள் கண்டறிந்தது மகத்தான ஒன்று. கடல் இருக்கும் வரை இந்தக் கண்டுபிடிப்புக்காகப் பாண்டியப் பேரரசின் புகழை உலகம் பாடும்” என்றான் ஹிப்பாலஸ்.

அவமான உணர்வால் துவண்டுபோயிருந்த குலசேகரப்பாண்டியனுக்கு, மீண்டும் புத்துணர்வு ஊட்டுவதாக இருந்தது ஹிப்பாலஸின் பேச்சு. பறம்பின் மீதான பழிவாங்கும் உணர்வு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த நேரத்தில், அதற்கு இன்னொரு பரிமாணத்தை அவன் வழங்கினான்.

நீண்ட நெடுங்காலமாகத் தமிழ் நிலத்துக்கும் யவனத்துக்கும் இடையில் கடல் வணிகம் நடந்துவருகிறது. நுரைதள்ளும் கரைவழிப் பயணமாக இரு நிலத்துக் கடலோடிகளும் பல தலைமுறைகளைக் கழித்துவிட்டனர். இரு நாகரிகங்களும் எண்ணற்றவற்றைப் பரிமாறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த இரு நிலப்பரப்புகளில் இருப்பவர்களும் கண்டு பெரிதும் வியக்கும் கண்டுபிடிப்பாக தேவாங்கு இருக்கிறது. `சாகசத் தளபதி’ என்று உலகெங்கும் பெயர்பெற்ற ஹிப்பாலஸ், தனது மிகப்பெரிய நாவாய் எரிந்த துயரைக் கடந்து, கண்டறியப்பட்ட தேவாங்குக்காக, தன்னை வணங்கி நிற்கிறான் என்றால் அது எளிதான ஒன்றல்ல.

ஹிப்பாலஸும் குலசேகரப்பாண்டியனும் அடுத்து நடக்க வேண்டியவற்றைப் பற்றி நிறைய பேசினர். அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது உதியஞ்சேரலைப் பார்க்க வந்துள்ளான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P88e_1513158110
பறம்பின் மீதான உதியஞ்சேரலின் போர்த் திட்டங்களைப் பற்றித்தான் அவன் உரையாடினான். ஹிப்பாலஸுடன் எபிரஸ், திரேஷியன் இருந்தனர். குடநாட்டு அமைச்சன் கோளூர் சாத்தன் கொல்லிக்காட்டு விதையைப் பெற்றுத்தருவதாகக் கூறி, பறம்புக்குச் சென்று பாரியிடம் வணிகம் பேசியதையும், அதன் பொருட்டு கை துண்டிக்கப்பட்டதையும் கூறிய அவர்கள், குடநாட்டினர் இப்போது உதியஞ்சேரலோடு இணைந்து பறம்புக்கு எதிராகச் செய்யும் முயற்சியையும் பகிர்ந்துகொண்டனர்.

யவனர்கள் இங்கு நிகழும் எல்லாவற்றையும் அறிந்துவைத்துள்ளது உதியஞ்சேரலுக்கு வியப்பளிக்கும் ஒன்றாக இல்லை. பல தலைமுறைகளாகச் செழித்தோங்கியிருக்கும் வணிகம், அரசியலுக்குள் ஆழமான வேர்களைச் செலுத்தியிருக்கும் என்பதை அவன் அறிவான்.

ஆனால், பாரியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று நீண்டநெடுங்காலமாக சிந்தித்துச் செயல்பட்டுக்கொண்டிருப்பது குட்டநாடு. உதியஞ்சேரலின் தந்தையான செம்மாஞ்சேரலைக் கொன்றழித்தவன் பாரி. அதற்குப் பல காலத்துக்கு முன்பே பகை தொடங்கிவிட்டது. உதியஞ்சேரல் பட்டமேற்ற பிறகு பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறான்.

அவனோடு முரண்பட்டு விலகியிருந்த குடநாட்டு வேந்தன் குடவர்கோவும் இப்போது இணைந்து செயல்பட முன்வந்துள்ளான். இது சூழலை மிகவும்  ஏதுவாக மாற்றியுள்ளது என்று உதியஞ்சேரல் எண்ணிக்கொண்டிருக்கும் போதுதான் வைப்பூரின் மீதான பாரியின் தாக்குதல் நடந்துள்ளது.

எதிரிகளின் எண்ணிக்கையை, பாரி போதுமான அளவுக்கு அதிகப்படுத்திக்கொண்டான். இதைவிட நல்லகாலம் இனி வாய்க்காது என்று உதியஞ்சேரல் நினைத்துக்கொண்டிருந்தபோது தான் ஹிப்பாலஸ் வந்துசேர்ந்துள்ளான். பேரியாற்றங்கரையின் நெடுவுயர் மன்றத்தில் நடந்தபடியே இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

வைகையின் தென்கரைப் படித்துறையில் இருந்த நிலைமாடத்தில் தனித்திருந்தார் குலசேகரப்பாண்டியன். பொழுது கவியக் காத்திருந்தது. ஆற்றங்கரை எங்கும் கூடு திரும்பும் பறவைகளின் கீச்சொலி கேட்டுக்கொண்டிருந்தது. வைகை சீற்றமின்றி ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், குலசேகரப்பாண்டியனின் எண்ணவோட்டம் அப்படியில்லை. அது கட்டுக்கடங்காமலே இருந்தது. நீண்டநெடும் அரசியல் அனுபவம், அவருடைய எண்ணங்களை வழிநடத்த முடியாமல் திணறியது. அவர் சிறிது நேரம் நடப்பதும் பிறகு உட்காருவதும் உட்கார்ந்த உடனே எழுந்து நடப்பதுமாக இருந்தார்.

தொலைவில் காவல் வீரர்கள் நின்றிருந்தனர். அவர்களைக் கடந்தே முசுகுந்தரும் மற்றவர்களும் நின்றிருந்தனர். யாரும் நெருங்க முடியாச் சீற்றம்கொண்டிருந்தார் பேரரசர். ஓடும் வைகை, மூழ்கும் கலங்களைக் கண்களுக்குக் காட்டிக் காட்டி மறைத்துக்கொண்டிருந்தது. அவர் தனிமையில் சிந்திக்கவும் ஓய்வெடுக்கவும் எவ்வளவோ இடங்கள் உண்டு. ஆற்றங்கரை மண்டபத்துக்குப் போனால் வைப்பூரின் நினைவே மீண்டும் மீண்டும் வரும். எனவே, அதைத் தவிர்க்கலாம் என்றுதான் பலரும் சொல்லிப்பார்த்தனர். ஆனால், பேரரசர் வேறு எங்கும் போகாமல் தொடர்ந்து இங்குதான் வருகைதந்தார். அதற்குக் காரணமும் இருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P88f_1513158149
பாரியின் புகழ், நிலமெங்கும் பரவியிருந்தது. அது ஆள்வோருக்கு இயல்பாகப் பொறாமையை உருவாக்கியிருந்தது. இடைவிடாது பாடித் திரியும் பாணர்கள் தங்கள் குரல் நாளங்கள் விடைப்புற்று வலியெடுக்கும்போதும் பாரியைப் பற்றியே பாடுகின்றனர். சொற்களுக்குள் உருளும் பாரியின் நினைவு, குரல் நாளங்களுக்கு இதம் தருவதாக பாணர் குலமே கருதியது. தோற்பறையை நெருப்பிலே சூடேற்றி ஒலியெழுப்பும் பக்குவத்துக்குக் கொண்டுவருதல்போல பாடிக் களைத்த குரல் நாளங்களை மீண்டும் பாடும் பக்குவத்துக்குக் கொண்டுவர பாரியைப் பற்றிய பாடல்கள் உதவி செய்வதாகவும் பேசினார்கள். பாரியைப் பற்றிய பாணர்களின் பேச்சும் பாட்டும் இசையும் கூத்தும் வேந்தர்களின் ஆழ்மனதில் வெறுப்பை இடைவிடாது உமிழ்ந்துகொண்டிருந்தன. புகழைப் பழுக்கக்காய்ச்சி வேந்தர்களின் அடிநெஞ்சில் இடைவிடாமல் ஊற்றினர். அது எல்லா வகைகளிலும் வினையாற்றிக்கொண்டே இருந்தது.

பாரியின் மீது வெறுப்பும் பொறாமையும் குலசேகரப்பாண்டியனுக்கும் உண்டு. ஆனாலும் தேவாங்குக்காகப் போர் தொடுக்க வேண்டும் என்று கருங்கைவாணனும் பொதியவெற்பனும் கூறியபோதும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், பொறாமையும் வெறுப்பும் மனித மனத்தைக் குறைந்த அளவே இயக்கும் ஆற்றல்கொண்டவை. பகை மட்டும்தான் அளவற்ற வெறிகொண்டு மனதை இயக்கும் ஆற்றல்கொண்டது. பாண்டிய நாட்டுக்குப் பறம்பின் மீது பகை உருவாகவேயில்லை. அதன்பொருட்டே குலசேகரப்பாண்டியன் போர்தொடுக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை. பெரும் மலைத்தொடருக்குள் இருக்கும் ஒரு நாட்டைக் கைப்பற்ற வளமிக்க போர்ப்படை மட்டும் போதாது; அதை வழிநடத்துபவர்களுக்கு ஆறாப்பகை இருக்க வேண்டும். அதுதான் அவர்களைச் சினம் குறையாமல் இயக்கிக்கொண்டேயிருக்கும். பகை, கணம்தோறும் ஊறிப் பெருகக்கூடியது. சூழலில் நிகழும் ஒவ்வொரு காரணத்தையும் பகை தன்னைப் பெருக்கிக்கொள்ள இயல்பாகப் பயன்படுத்திக்கொள்ளும். வெறும் பொறாமையும் வெறுப்பும் எளிதில் அணைந்துவிடும். பகை மட்டுமே மூட்டியவனால்கூட அணைக்க முடியாத பெருநெருப்பு.

இப்போது பாண்டிய நாட்டுக்குப் பறம்பின் மீது தீராப்பகை உருவாகிவிட்டது. நகரும் நதிநீரை கணம்தோறும் பார்த்தவண்ணமே அந்தப் பகையைக் கொழுந்துவிட்டெழச் செய்துகொண்டிருக்கிறார் குலசேகரப்பாண்டியன்.

பேரியாற்றங்கரையின் நெடுவுயர் மன்றத்தில் நடந்தபடியே உதியஞ்சேரலும் ஹிப்பாலஸும் பேசிக்கொண்டிருந்தனர். உதியஞ்சேரல் வயதில் மிக இளையவன். ஹிப்பாலஸைப்போல நெடிய உயரம்கொண்டவன். அவனது அறிவுக் கூர்மையைப் பலரும் பாராட்டுவதை எத்தனையோ முறை கேட்டுள்ளான் ஹிப்பாலஸ். 

குலசேகரப்பாண்டியன் பறம்புக்கு எதிரான வேலைகளைத் தொடங்கிவிட்டதாக ஹிப்பாலஸ் சொன்னபோது, உதியஞ்சேரல் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

சிற்றலைகள் எழுந்தபடியிருந்த பேரியாற்றின் கரையில் கண்களை அங்குமிங்குமாக ஓடவிட்டவாறு உதியஞ்சேரல் சொன்னான், ``பகைமைகொண்டு இயங்குபவன் விரைவில் வலிமை இழப்பான். பகை, சினத்தை மட்டுமே வளர்த்தெடுக்கும். போருக்குத் தேவை சினமன்று. ஆனால், இதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பகை பின்னுக்குத் தள்ளிவிடும். எனவே, பாண்டியன் இப்போது எடுக்கும் முடிவால் பறம்புக்கு எந்த ஆபத்தும் நிகழப்போவதில்லை.”

உதியஞ்சேரலின் உரை கேட்டு அதிர்ச்சியானான் ஹிப்பாலஸ். பறந்துவந்த மீன்கொத்தி ஒன்று சட்டென மீனைக் கொத்தித் தூக்கியதைப் பார்த்தபடி உதியஞ்சேரல் சொன்னான், ``தேவாங்கின் ஆற்றலைக் கண்டறிந்தது பாண்டியனின் அறிவுக்கூர்மையைக் காட்டுகிறது. ஆனால், அதைப் பிடித்துவர திரையர்களை அனுப்பியது மலைமக்களைப் பற்றிய அறிவற்றதனத்தையே காட்டுகிறது.”
ஹிப்பாலஸ், புரியாமல் விழித்தான்.

``நாம்     இவ்விடம்  வந்து   இருபொழுது களாகின்றன. அந்த மீன்கொத்தி, நீண்டநேரம் நாணலில் உட்கார்ந்திருந்தது. பிறகு அந்த மரக்கிளையில் போய் உட்கார்ந்திருந்தது; காற்றிலே வட்டமிட்டுக்கொண்டே இருந்தது. ஏதோ ஒரு கணத்துக்காக அது காத்திருந்தது. அந்தக் கணம் வந்தவுடன் மலையின் மேலிருந்து பாய்ந்து இறங்கும் வீரனைப்போல காற்றைக் கிழித்துக் கண்ணிமைக்கும் நேரத்தில் மீனைக் கவ்வித் தூக்கியது.

நீருக்குள் இருக்கும் மீனை நீரைவிட்டு வெளியில் இருக்கும் ஓர் உயிரினம் வேட்டையாடுவதைப்போல சவால் நிறைந்தது வேறில்லை. நீரின் மேற்பரப்பில் நீந்திக்கொண்டிருக்கும் மீன், மீன்கொத்தியின் அலகைத் தாண்டிய ஆழத்துக்குப் போகும் முன் காற்றைக் கிழித்துக் கீழிறங்கி வரவேண்டும். அப்படியென்றால், எவ்வளவு துல்லியமான கணிப்பு தேவை. பார்வையின் கூர்மை, சிறகு அசைக்கும் வேகம், கொத்தித் தூக்கும் அலகின் துடிப்பு எல்லாம் ஒருங்கிணைய வேண்டும். ஆனால், எந்தக் காத்திருப்பும் ஆயத்தமும் இல்லாமல் கடகடவெனக் காட்டுக்குள் இறங்க முடிவெடுத்தான் பாண்டியன். அவனது அறியாமை எல்லையற்றது” என்றான் உதியஞ்சேரல்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P88g_1513158189
வயதில் மிக மூத்தவரான பேரரசர் குலசேகரப்பாண்டியனின் அரசியல் நடவடிக்கையை, சொற்களால் இடித்துத் தள்ளினான் உதியஞ்சேரல். ஹிப்பாலஸுக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை.
``பறம்பின் மீது போர் தொடுப்பது என நான் முடிவெடுத்து, பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இன்னும் நாணலின் மீது உட்கார்ந்தும் கொப்பில் அமர்ந்தும் காற்றில் பறந்தபடியும்தான் இருக்கிறேன். நீரை நோக்கிப் பாயும் நேரம் இன்னும் கைகூடவில்லை” சொல்லும்போது அவன் கண்கள் சிவந்தன. முறுக்கேறிய கைகளின் ஆவேசத்தை அவனால் கட்டுப்படுத்த முடிந்தது.

``அந்தக் கணம் வரை நான் காத்திருப்பேன். சீவப்பட்ட என் தந்தையின் தலைக்கு ஈடாக, பாரியின் தலையை மண்ணில் சரிப்பேன்.” சொற்களிலிருந்த உறுதி ஹிப்பாலஸையே உலுக்கியது.

``குடநாடும் நீங்களும் பறம்புக்கு எதிராகப் போர்புரிய ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கியுள்ளதாக அறிகிறேன். அதேபோல பாண்டியருடனும் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுக்கலாம் அல்லவா?”
``அதற்கான தேவையும் இல்லை. அதனால், எந்தப் பலனும் நேரப்போவதில்லை.”

``ஏன்?”

``எங்களைவிட மூன்று மடங்கு பெரும்படை பாண்டியர்களிடம் இருக்கும் என்று கருதுகிறேன். ஆனால், பாண்டிய நாட்டின் நிலவியல் அமைப்பு, பச்சைமலைத் தொடரின் தன்மை இவற்றைக்கொண்டு பார்த்தால், கீழ் திசையிலிருந்து பறம்பை எதுவும் செய்துவிட முடியாது. காரமலையைக்கூட அவர்களால் தாண்ட முடியாது. மேலேறும் பாண்டியர் படையை அழித்தொழிக்க, பாரிக்கு அதிகப்பொழுது தேவைப்படாது.”

``பேரரசின் படையை அவ்வளவு எளிதில் அழித்துவிட முடியும் என்றா சொல்கிறீர்கள்?”

``பறம்பின் ஆற்றல் என்ன என்று பத்தில் ஒரு பங்குகூட பாண்டியர்களால் உணர முடியாது. அதனால்தான் அறிவீனமான செயல்களைச் செய்துதொலைக்கிறார்கள்.”

உதியஞ்சேரலின் கோபத்துக்கான காரணத்தை ஹிப்பாலஸால் புரிந்துகொள்ள முடியவில்லை. ``குடநாடும் குட்டநாடும் பச்சைமலைத் தொடரின் பெருங்காட்டின் ஒரு பகுதியாகத்தான் இருக்கிறோம். எங்களாலேயே அவனது ஆற்றலை இன்று வரை அளவிட முடியவில்லை. எல்லை கடந்த ஆற்றலைக் கொண்டிருக்கிறான் அவன். அப்படி இருக்கும்போது, எங்கோ இருந்த திரையர்களையும் அவர்களோடு சேர்த்துவிடும் மூடத்தனத்தைக் கண்டு சினம்கொள்ளாமல் என்ன செய்வது?”

உதியஞ்சேரலின் சினத்துக்கான காரணத்தை இப்போதுதான் புரிந்துகொள்ள முடிந்தது.

``இதுவரை பாரியின் புகழை மட்டுமே பாடிக்கொண்டிருந்த பாணர்கள், இப்போது `வேந்தர்களை மீறிய வீரம்கொண்டவன் பாரி’ எனப் பாடுகின்றனர். வேளிர்களை வேந்தர்களுக்கு இணையாகச் சொல்கின்றனர்.

இதற்கெல்லாம் தளம் அமைத்துக்கொடுத்துவிட்டான் பாண்டியன்.”

உதியஞ்சேரல் அடுக்கடுக்காக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளைக் கேட்டபடி நின்றுகொண்டிருந்தான் ஹிப்பாலஸ். அடுத்து என்ன சொல்வதென அவனுக்குத் தெரியவில்லை.

பேரியாற்றைப் பார்த்துக்கொண்டே பேசிய உதியஞ்சேரலின் முகத்தில் சற்றே மாறுபட்டதன்மை வெளிப்பட்டது. இழுத்து மூச்சுவாங்கி விட்டபடி சொன்னான், ``நடந்தவை எல்லாவற்றையும் நினைத்துப்பார்க்கும்போது பாண்டியன் செய்தது எல்லாமே பிழை. ஆனால், பறம்பின் வீரர்கள் செய்த பிழையும் ஒன்று இருக்கிறது. அதைத்தான் முக்கியமாகக் கவனிக்கவேண்டியுள்ளது.”

இவ்வளவு நேரம் நிகழ்ந்த உரையாடலில் மிக முக்கியமான ஒன்றைப் பற்றி இப்போது உதியஞ்சேரல் பேசுவதாக ஹிப்பாலஸுக்குத் தோன்றியது.

சற்றே ஆர்வத்தோடு கேட்டான், ``என்ன அது?”

``இளமாறனை வெட்டி வீசியது.”

ஹிப்பாலஸ் வியப்பு நீங்காமல் பார்த்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P88h_1513158203
``மையூர்கிழாரின் மகன் இளமாறனின் தலையை வெட்டி வீழ்த்தியதன் மூலம் வெங்கல் நாட்டின் பகையைத் தேடிக்கொண்டனர். எந்தக் காரணம்கொண்டும் பறம்புக்குத் தீங்கு செய்ய மாட்டோம் என்று உறுதிபூண்ட குலம் அது. ஆனால், இன்று வெங்கல் நாட்டுத் தலைவர் மையூர்கிழார் தன் மகனின் சாவுக்குப் பழிதீர்க்கச் சூளுரைத்துள்ளார். வெங்கல் நாட்டின் பல ஊர்கள் பச்சைமலைத் தொடரில் உள்ளடங்கியுள்ளன. பறம்பின் ஊர்கள் பலவற்றோடு அந்த மக்களுக்கு நல்ல உறவு உள்ளது. இது எங்களுக்குக்கூடக் கிடைக்காத வாய்ப்பு.”

ஹிப்பாலஸின் கண்கள் அசைவற்று அவனையே பார்த்துக்கொண்டிருந்தன.

உதியஞ்சேரல் இறுதியாகச் சொன்னான், “குலசேகரப்பாண்டியன் சரியாகத் திட்டமிடுபவனாக இருந்தால், பாரியின் முடிவைத் தீர்மானிப்பவனாக மையூர்கிழாரை மாற்ற முடியும்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 13, 2018 9:14 am

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83a_1513662493
மூன்று வகையான திட்டங்களை முன்வைத்தான் கருங்கைவாணன். மழைக்காலம் முடிந்துவிட்டது; இனி நெடுங்கோடைதான். எனவே  கோடைக்காலத்துக்கேற்ப உத்திகளை வகுத்தான். பாண்டியப் பெரும்படையின் வலிமை அளவற்றது; வேறெந்தப் பேரரசுடனும் ஒப்பிட முடியாதது; தொடர்ந்து எண்ணற்ற வெற்றிகளை ஈட்டிவருவது. அறுவடைக்காலம் முடிந்ததும் இதுபோல் இன்னொரு மடங்கு வீரர்களைத் திரட்ட முடியும். எனவே, கருங்கைவாணன் வகுத்த திட்டத்தில் இடம்பெற்றிருந்த வீரர்களின் எண்ணிக்கை இந்த மண் அறியாதது.

``பாண்டியப்படை கேடயத்தோடு வாள் உரசும் ஓசையை, மூன்றாம் மலை கடந்து பாரி உணர்வான்’’ என்றான் கருங்கைவாணன். அவனது திட்டங்களையும் போர் உத்திகளையும் கண்டு பொதியவெற்பனும் முசுகுந்தரும் வாயடைத்துப்போயினர். திதியன், கருங்கைவாணனின் நிழல்போல் எந்நேரமும் உடன் இருந்தான். மலைப்பகுதியில் அமைக்கவேண்டிய உத்திகளைப் பற்றி அவன்தான் ஆலோசனைகளை வழங்கியவன். எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துத்தான் திட்டங்களை வகுத்திருந்தனர்.

போரில், வழக்கமாக வெற்றியே நோக்கமாக இருக்கும். ஆனால், இந்தப் போரில் அதைக் கடந்த நோக்கங்கள் நிறைய இருந்தன. ஆறாப்பகையைத் தீர்த்துக்கொள்ளவேண்டிய தேவையிருந்தது. வாழ்வில் இதுவரை அடையாத அவமானத்தை அடைந்தவனாகக் கூனிக்குறுகிப்போயிருக்கிறான் கருங்கைவாணன். அவன் வழிநடத்திய ஒரு போரில்கூட பாண்டியர் படை தோல்வியைத் தழுவவில்லை. ஆனால், அவனது தவறுதலான கணிப்பால் நெஞ்சுக்குழிக்குள் ஈட்டியை இறக்கிவிட்டனர் திரையர்கள். பகலையும் இரவையும் கடக்க முடியாமல் துடிக்கும் ஒருவனாக அவன் இருக்கிறான். வேதனைக்கு அணுஅணுவாக முகங்கொடுக்கும் கருங்கைவாணன், எப்போதும் அரண்மனையில் தலை கவிழ்ந்தே நிற்கிறான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83b_1513662483
போருக்கான அனுமதியைப் பேரரசர்  தராமல் காலங்கடத்தும் ஒவ்வொரு நாளும் அவன் அடையும் வேதனை அளவற்றதாக இருக்கிறது. இந்த முறை வகுக்கப்பட்டுள்ள திட்டத்தைப் பேரரசர் ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன் இருந்தான் அவன்.

நேற்று மிக நீண்டநேரம் வைகையின் தென்துறை நிலைமாடத்தில் இருந்த பேரரசர், அதன் பிறகு யாரையும் சந்திக்கவில்லை. காலையில் அவரின் வருகைக்காக இளவரசனும் முசுகுந்தரும் கருங்கை வாணனும் காத்திருந்தனர். நீண்ட நேரத்துக்குப் பிறகு பேரரசர் வருகை தந்தார். அவரது முகத்தை மகிழ்வோடு எதிர்கொள்ள இன்னும் யாருக்கும் துணிவு வரவில்லை. வணங்கி வரவேற்ற அவர்கள், குனிந்த தலையை நிமிர நீண்டநேரமானது.

கருங்கைவாணன், போருக்கான மூன்றுவிதமான திட்டங்களையும் விளக்கினான். தோல் மடிப்புகளை ஒவ்வொன்றாக விரித்து விரித்து, படை நகர்வுகளையும் தாக்குதலையும் மிகுந்த நிதானத்தோடு சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் பேரரசர், கவனமாகக் கேட்பதைப்போல்கூடக் காட்டிக்கொள்ளவில்லை. அவரின் கண்ணசைவுகள் எல்லாவற்றையும் எளிதில் கடந்து போய்க்கொண்டிருந்தன. யாராலும் அவரைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் எதிர்பார்ப்புதான் என்ன என்பது விளங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது.

அவர் அடுத்த பணிக்காக அவையை விட்டு நீங்கியபோது கருங்கைவாணனும் பொதியவெற்பனும் கூனிக்குறுகிப்போயினர். முசுகுந்தர், கலங்கிய முகத்தோடு அவருக்குப் பின்னால் போய்க் கொண்டிருந்தார்.

முன்புபோல் கலங்கிப்போயிருக்கவில்லை பொற்சுவை. அவளின் முகம் தெளிவுகொண்டிருந்தது. காலம் எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கும்; கற்றுக்கொள்ளும் சுவை அறிந்தவளுக்குக் கணக்கின்றிக் கற்றுக்கொடுக்கும். வெளிமாடத்தில் நின்றபடி சக்கரவாகப் பறவை பறந்து சென்ற திசையைப் பார்த்துக்கொண்டே இருந்த காலம் முடிந்துவிட்டது என்பதை உணர்ந்தாள். தன்னுள்ளும் தன்னைச் சுற்றியும் என்னதான் நிகழ்கிறது என்பதை அறியத் தொடங்கினாள்.

வைப்பூரில் நெருப்புப் பற்றிய செய்தி வந்தபோது, அரண்மனையே அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்தது. ஆனால், அவள் அதிர்ச்சியடைய அதில் ஒன்றுமில்லை. நெருப்பினும் கொடும் அழிவை அகவாழ்வில் கண்ட ஒருத்திக்கு, நெருப்பின் சூடு புதியதாகத் தாக்க என்னவிருக்கிறது? மூழ்கிய கலங்களைப் பற்றியும் மிதந்த சாம்பலைப் பற்றியும் நாள் கணக்கில் பேசினர். அதற்கு வெகுநாள்களுக்கு முன்பிருந்தே அவள் அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஏறக்குறைய அவளின் அனைத்துக் கனவுகளுக்கும் அதுதான் நிகழ்ந்தது; எந்தவித மிச்சமுமின்றி நிகழ்ந்தது. வைப்பூருக்காவது வைகை மிஞ்சியது; பொற்சுவைக்கு மிஞ்ச எதுவுமில்லை.
துயரம், தன்னுள் மட்டுமல்ல... அரண்மனையின் வெளி முழுவதும் பரவியிருக்கிறது என்பதை உணர்ந்தாள். குலசேலரப்பாண்டியனும் பொதியவெற்பனும் சூல்கடல் முதுவனும் ஒருசேர மனமொடிந்து கிடப்பதாகக் கேள்விப்பட்டாள். மேல் மாடத்தில் வீற்றிருந்த அவளை, வைகையின் இளங்காற்று தழுவிக் கடந்தது. நெருப்பும் துயரமும் தன்னை நோக்கி வர மறுப்பதை அறிந்தபோது வைகை நெருக்கமாக இருப்பதாக உணர்ந்தாள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83c_1513662513
அழிவு நீக்கமற நிகழ்ந்துவிட்டது. மணவிழாவின் நினைவுப்பரப்பெங்கும் துயரம் பரவிக்கொண்டிருப்பதைப் பற்றி எல்லோரும் பேசிக்கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் அமைதியுடன் கவனித்தபடி இருந்தாள். நீண்ட தனிமை அவளுக்குத் தேவைப்பட்டது. தனித்திருத்தல், அவளின் இயல்புக்கு முற்றிலும் மாறானது. ஆனாலும் அதற்குள் புகுந்தாள். நீண்டநாள்களாக சுகமதியைக் கண்டு பேசவில்லை.

மாதங்கள் சில ஓடிய பிறகு இப்போதுதான் சுகமதியை அழைத்துவரச் சொல்லி, பணிப் பெண்களை அனுப்பினாள்.  

பின்தொடர்ந்து போன முசுகுந்தர் விரைந்து நடந்து அவரை அணுகவும் முடியாமல், மிகவும் பின்தங்கியும்விடாமல் நடந்து வந்தார். அதாவது, பேரரசருக்குப் பின்னால் அமைச்சர் நடந்து வருகிறார் என்பதைப் பேரரசர் உணரக்கூடிய நிலையில் வந்துகொண்டிருந்தார்.

முசுகுந்தரின் மனம், பேரரசரைப் புரிந்து கொள்ள இடைவிடாது முயன்றுகொண்டிருந்தது. வைப்பூரில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலால் பாண்டிய நாட்டின் புகழில் நிரந்தரமான கறை விழுந்துவிட்டது என்று பலரும் பேசுகின்றனர். அதைச் செய்தவர்களை அழித்தொழித்தால் மட்டுமே, இந்தக் கறையை அகற்ற முடியும்; பேரரசின் புகழை நிலைநாட்ட முடியும். ஆனால், பேரரசர் ஏன் தாக்குதலுக்கான அனுமதியைக் கொடுக்க மறுக்கிறார்?

``வைப்பூர்த் துறைமுகத்தைப் புதுப்பிக்கும் பணியை உடனடியாகச் செய்ய வேண்டும்; முன்னிலும் பெருந்துறைமுகமாக அதை வடிவமைக்க வேண்டும்’’ என்று வெள்ளிகொண்டார் கேட்டதற்கும் பேரரசர் அனுமதி வழங்கவில்லை.

பேரரசின் வலிமை என்பது, அழிக்கப்பட்ட ஒன்றை அதைவிடப் பல மடங்கு சிறப்போடு கட்டி எழுப்புவதில் உள்ளது. ``துறைமுகம் என்பது செல்வத்தின் கண்; நாம் அதை விரைந்து செப்பனிட வேண்டும்” என்று வெள்ளிகொண்டார் கேட்டுள்ளார்.

``எரித்தவனை அழிக்காமல், எரிக்கப்பட்ட பொருளை மீண்டும் அலங்கரிக்க நினைப்பது அவமானம்” என்று கூறியுள்ளார் பேரரசர்.

அப்படியென்றால் பாரியை வீழ்த்திவிட்டுத்தான் வைப்பூரைப் புதுப்பிக்கும் பணியைச் செய்யும் முடிவோடு இருக்கிறார் என்பது புரிகிறது. பிறகு ஏன் படையெடுப்புக்கான எந்தவித அனுமதியும் வழங்க மறுக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் முசுகுந்தரின் மனம் தவித்தது.

பேரரசர், சித்திரக்கால் மண்டபத்துக்குள் நுழைந்தார். குழம்பிய மனதோடு அவரின் பின்னாலேயே போன முசுகுந்தர், அரசரைப் பார்க்க அனுமதி கேட்டு, பணியாளனை உள்ளே அனுப்பினார்.

சுகமதி உள்ளே நுழைந்தாள்.

கார்காலப் பள்ளியறையிலிருந்து வேனிற்காலப் பள்ளியறைக்கு இளவரசி மாறப்போவதால், இங்கிருந்து அங்கு எடுத்துச் செல்லவேண்டிய பொருள்களைப் பணிப்பெண்கள் எடுத்துக் கொண்டிருந்தனர்.

சுகமதியைப் பார்த்ததும் உள்ளறைக்குப் போய் செய்தி சொன்னாள் ஒருத்தி. உள்ளிருந்த பொற்சுவை, மாளிகையின் நடுமண்டபத்துக்கு வந்தாள். வேலை செய்துகொண்டிருந்த பணிப் பெண்கள் இடம் விட்டு வெளியேறினர்.

நடுவில்  இருந்த பெருங்கட்டிலில் பட்டுமெத்தைப் படுக்கையின் மீது செந்நிறப்  பட்டால் வடிவமைக்கப் பட்ட எலிமயிர்ப் போர்வை ஒழுங்கற்ற மடிப்போடு கிடந்தது. அதைப் பார்த்துக்கொண்டிருந்த சுகமதியின் கண்கள் சட்டெனத் திரும்பி உள்நுழையும் பொற்சுவையைப் பார்த்தன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83d_1513662526
பார்த்த கணத்தில் இயல்பான பேச்சு தொடங்கியது. ``கார்காலம் முடிந்துவிட்டது. எனவே, வேனிற்காலப் பள்ளியறைக்கு இளவரசி இடம்பெயர்வது அரண்மனை வழக்கமாம். அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன சுகமதி” என்றாள்.

சற்றே மெல்லிய குரலில் ``எல்லாம் வழக்கப்படி தான் நடக்கின்றனவா?” என்று கேட்டபடி இடப்புறமாகத் திரும்பி ஒழுங்கற்ற போர்வை மடிப்பைப் பார்த்தாள் சுகமதி.

அசட்டுச் சிரிப்போடு பொற்சுவை சொன்னாள், ``நானும் உன்னைப்போல்தான் நினைத்தேன். இதே கேள்வியை எனக்குள் கேட்டுக்கொண்டேன்.”

சுகமதிக்குப் புரியவில்லை.

``எல்லாம் வழக்கப்படி நடக்கின்றனவா? அப்படி நடக்கவில்லையே என முடிவுசெய்து உள்ளுக்குள் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், காலம் தாழ்த்திதான் உணர்ந்தேன் எல்லாம் வழக்கப்படிதான் நடக்கின்றன.”

சுகமதி கேட்டதன் பொருள் சற்றே வெளிப்படையாகத்தான் இருந்தது. ஆனால், பொற்சுவை சொல்வதற்குள் என்ன பொருள் இருக்கிறது என்பது புரியவில்லை.

`வெளிப்படையாகவே கேட்போம்’ என்று சுகமதிக்குத் தோன்றியது. படுக்கையின் அருகில் வந்தாள், எலிமயிர்ப் போர்வையை மெள்ளத் தொட்டுப் பார்த்தபடி, ``இந்தப் போர்வை உங்கள் இருவரின் உடல்களை உணர்ந்ததா?”

``அதை நீ அறியவேண்டாம் சுகமதி. என்னைப்போல் நீயும் சிக்கிக்கொள்ள நேரிடும்.”

பழைய சுகமதியென்றால் தலை கவிழ்ந்து சொற்களை உள்வாங்கி நிதானமாக அடுத்த வினாவைக் கேட்டிருப்பாள். ஆனால், இப்போது அப்படியல்ல. கவிழ்ந்த தலையைச் சட்டென நிமிர்த்திக் கேட்டாள், ``உண்மையில் நீங்கள் யாரிடம் சிக்கிக்கொண்டுள்ளீர்கள், காதலனிடமா... பொதியவெற்பனிடமா?”

``பெண் ஒருபோதும் ஆணிடம் சிக்கிக்கொள்ள மாட்டாள். அவள் சிக்கிக்கொள்வது அவளிடம் மட்டும்தான்” எனக் கண நேர இடைவெளியின்றிச் சொற்களை எறிந்துவிட்டு நடந்தாள் பொற்சுவை. சுகமதிக்கு எதிர்பாராத பதிலாக இருந்தது.

பொற்சுவை தொடர்ந்தாள், ``ஆண் ஒருபோதும் பெண் மனதைக் கண்டறிய முடியாது. பெண்ணுடல், பிரித்தறிய முடியாத மர்மங்களின் சேர்மானம். ஆண்களால் கணிக்கவே முடியாத கற்பாறை. எனவே, ஆணைக் கண்டு எனக்கு எப்போதும் பயம் இல்லை. நான் சிக்கிக்கொண்டிருப்பது என்னிடம்தான்.”

``உங்களிடமே நீங்கள் சிக்கிக்கொண்டுள்ளீர்கள் என்றால், உங்களை விடுவிக்கும் ஆற்றலும் உங்களிடம் உள்ளது என்றுதானே பொருள்!”

``உனது பேச்சுமொழியே மாறிவிட்டது சுகமதி. முன்னிலும் தெளிவாகப் பேசுகிறாய்” என்று சுகமதியை வெகுவாகப் பாராட்டினாள். ஆனால், அவளின் சிக்கல் என்னவென்று மட்டும் சொல்லவில்லை.

பொற்சுவையின் பின்னால் நடந்தபடியிருந்த சுகமதி, தான் எழுப்பிய கேள்வியிடமிருந்து மட்டும் நகரவில்லை, ``பெண் மனதை ஆண் கணிக்கவே முடியாது என்றா சொல்கிறீர்கள்?”

``ஆம், அதில் என்ன ஐயம்? நதியின் ஆழத்தைப் படகு அறியாது. நீரின் போக்கில் நகர்வதே அதற்கு இன்பம் பயக்கக்கூடியது. அதன் தேவையும் அதுதான்.”

``எல்லா ஆண்களையும் அப்படிச் சொல்லிவிட முடியுமா?”

``ஆண் என்ற வடிவத்துக்கு விதிவிலக்குகள் இல்லை சுகமதி.”

அதிர்ந்தாள். அவளது முகம், பொற்சுவை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறியது.

``நீலம் என்பது வானத்தின் விதியல்ல, இயல்பு. விதியாக இருந்தால் விதிவிலக்கு இருக்கும். இயல்பாக இருந்தால்?”

சுகமதி திகைத்து நின்றாள்.

காரணம் புரியாத திகைப்பிலும் குழப்பத்திலுமிருந்து முசுகுந்தர் மீளவில்லை. உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நீண்ட நேரம் காத்திருந்தார்.

பேரரசரின் அழைப்பை, பணியாளன் வந்து சொன்னான். உள்நுழைந்தார் முசுகுந்தர்.

பேரரசரைப் பார்த்துவிட்டுச் சிலர் வெளியேறினர். அவர்கள் யாரென முசுகுந்தரால் அறிந்துகொள்ள முடியவில்லை. யாராக இருக்கும் என்ற சிந்தனையிலேயே பேரரசரின் முன் வந்து நின்றார்.

வந்து நின்ற கணத்தில் பேரரசர் கேட்டார், ``நாம் செய்த பிழை என்ன அமைச்சரே?”

அழுத்திக்கொண்டிருந்த கட்டி வெடித்ததைப்போல் இருந்தது. இந்தக் கேள்வியைக்கூட இத்தனை நாள் அவர் கேட்கவில்லை. வாழ்க்கை முழுவதும் சந்தித்திராத அவமானத்தை இந்தக் காலத்தில்தான் முசுகுந்தர் சந்தித்தார். வைப்பூரின் அழிவுக்குப் பிறகு ஒற்றைக் கேள்விகூட அவர் கேட்கவில்லை. அந்தப் பெரும் அழிவை நேரில் பார்த்தவர் முசுகுந்தர்தான்.  எதையும் கேட்க மறுத்ததன்மூலம் உருவான நிராகரிப்பை, அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

`இப்போதாவது கேட்டாரே!’ என்று சற்றே ஆறுதலுடன் சொன்னார், ``தேவாங்கைக் கொண்டுவந்தவர்கள் எல்லாம் திரையர்கள்தானா என்பதைச் சோதிக்கத் தவறியது.”

``இல்லை. `திரையர்கள் வீழ்ந்து விட்டார்கள்’ என்று கருங்கைவாணன் சொல்லியதை நம்பியது.”

பேரரசரின் எண்ணம் எவ்வளவு உள்ளோடியதாக இருக்கும் என்பதை நன்கு தெரிந்த முசுகுந்தரே முதல் கேள்வியிலேயே மூச்சுமுட்ட நின்றார்.

பேரரசர் தொடர்ந்தார், ``படைவீரர்கள் தாம் தோற்றவுடன் வீழ்வார்கள். குலம் காக்கும் போராளிகள் ஒருபோதும் வீழ மாட்டார்கள்; கடைசிக் கணத்திலும் வெகுண்டெழுவார்கள்.”

பேரரசரின் சொல் முசுகுந்தருக்கு எந்தச் சொல்லையும் விட்டுவைக்க வில்லை.

``வெற்றி என்பது, போர் வீரர்களாலும் போர் உத்திகளாலும் நிகழ்வது என்று நம்புகிறான் கருங்கைவாணன். இல்லை,  இறுதியாக  அது கனிவது எதிரி தரும் வாய்ப்பில்தான். எதிரியையே நம்மால் கணிக்க முடியாதபோது, அவன் தரும் வாய்ப்பை நம்மால் எப்படி அறிய முடியும்?”
 
``இ
யல்பாக அமைந்த வாய்ப்புகள் அல்ல, திட்டமிட்டே உருவாக்கப்பட்ட வாய்ப்புகள்” என்றாள் பொற்சுவை.

சுகமதி அதிர்ச்சி நீங்காமல் அவள் சொல்வதைக் கவனித்தாள்.

``மணவிழாக் காலத்திலும், மணம் முடிந்த பிறகும் இளவரசர் நாட்டியப் பெண் நீலவல்லியுடன் மட்டுமே இருந்தார். எனது அருகில் வராதது, எனது தேவையாகவும் இருந்தது. எனவே, அந்த நாள்களை எனது விருப்ப நாள்களாக அமைத்துக்கொண்டேன். நான் நானாக இருப்பதால் கிடைக்கும் இன்பம் பறிக்கப்படாமல் இருந்தால் மகிழ்ச்சிதானே. அந்த மகிழ்ச்சி எல்லையின்றி நீடித்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83e_1513662542
ஆனாலும் உள்ளுக்குள் ஓர் ஐயம் உருவாகியபடியே இருந்தது. `எல்லாவற்றுக்கும் விதி செய்துள்ள இந்தப் பேரரசில் இதற்கு மட்டும் விதியின்றி இருக்காதே! விதியை மீறிச்செயல்பட வாய்ப்பில்லையே!’ எனத் தோன்றியது. சிறிது சிறிதாக விசாரித்தேன். அரண்மனைபோல உண்மைகள் எளிதில் ஒழுகுமிடம் வேறுண்டா என்ன? முழு உண்மையும் வெளிப்பட்டது.”

பொற்சுவை என்ன சொல்லவருகிறாள் என்பதைத் திகைப்போடு கவனித்தாள் சுகமதி.

``இளவரசனுக்கு மனைவிமீது காதல் கூடாது. அது நாணத்தக்க நடத்தை. காதல் மரியாதையை உருவாக்கும்; மரியாதை பணிவை உருவாகும். மனைவியிடம் பணிவதுபோல் இழிசெயல் இன்னொன்றில்லை. மனைவியின் அன்புக்கும் அழகுக்கும் பணிவது ஆண்மையல்ல. மனைவி மீது மோகம்கொள்ளுதல் அரச நடவடிக்கையிலிருந்து அவனது சிந்தனையை மாற்றும்.”

பொற்சுவை சொல்வதை சுகமதியால் உள்வாங்க முடியவில்லை.

அவள் தொடர்ந்தாள், ``இவை எல்லாம்தான் இளவரசனின் அகவாழ்வு பற்றி அரண்மனையில் உருவாக்கப்பட்டுள்ள விதிகள். ஆனால், காமத்தை விதிகளால் கட்டுப்படுத்த முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே, காமம்கொண்டே அதை ஒழுங்கு படுத்த விதியமைத்துக்கொண்டனர்.

எலிமயிர்ப் போர்வையைச் சற்றே விலக்கி, மெத்தையில் அமர்ந்து, தலையணையில் சாய்ந்தபடி சுகமதியைப் பார்த்தாள் பொற்சுவை.

அடுத்து சொல்லப்போகும் சொல்லை நோக்கியபடி இருந்தாள் சுகமதி. பொற்சுவை தொடர்ந்தாள், ``வழக்கமான வடிவுடைய பெண்ணாக இருந்தாலே மணம் செய்யப்போகும் இளவரசன் அவளின் மீது காதல்கொண்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அரசகுலம், பேரழகு கொண்ட ஒருத்தியை மணப்பெண்ணாகத் தேர்வுசெய்துவிட்டால் எவ்வளவு கவனம்கொண்டு செயல்படும்?! எனது  வாழ்க்கையிலும் அதுதான் நடந்துள்ளது.

மணப்பெண்ணாக என்னைத் தேர்வுசெய்த உடனே முடிவுசெய்துள்ளனர், ‘இவ்வளவு அறிவும் அழகும் படைத்த ஒருத்தியிடம் இளவரசன் எக்காரணம்கொண்டும் மயங்கிவிடக் கூடாது’ என்று. எனவே என்னைவிட அழகுவாய்ந்த ஒருத்தியைத் தேடத் தொடங்கியுள்ளனர்.”

சுகமதி, இமை மூடாத வியப்பில் உறைந்து நின்றாள்.

``அழகுக்கலையின் பேரழகி என்று வர்ணிக்கப்பட்ட வேணாட்டு மங்கை நீலவல்லியைக் கண்டறிந்துள்ளனர். மணவிழாவுக்கு மூன்று நாள்களுக்கு முன்பு பெருவிருந்தின் நடன அரங்கில் இளவரசரின் முன் அவளது அரங்கேற்றம் நிகழ்ந்துள்ளது. கலையின் உச்ச சுழற்சியில் காமத்தின் கனியைப் பொதியவெற்பனுக்குப் பரிமாறியுள்ளாள் நீலவல்லி.

திருமணத்துக்கு முன் விருந்தினரோடு நாட்டியம் காண அரசியார் என்னை அழைத்ததாக நீ வந்து சொன்னாய் அல்லவா? அதை இயல்பான நிகழ்வாக நாம் நினைத்தோம். அது இயல்பாக நடந்ததன்று; முன்னேற்பாட்டோடு இளவரசனுக்கும் தெரியாமல் நடத்தப்பட்டது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83f_1513662555
கலையின் வழியாக ஆணுக்குள் இறங்குபவள், இயல்பாகவே அடியாழம் வரை இறங்க முடியும். அப்படித்தான் அவள் அவனுக்குள் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளாள். அரண்மனையில் மணவிழா என்பது மணப்பெண்ணைச் சுற்றி மட்டும் நடப்பதல்ல; அதற்கு எதிர் திசையில் இன்னொரு பெண்ணைச் சுற்றியும் நடக்குமாம்.

மணப்பெண்ணின் வாசனையை நுகர்வதற்குச் சற்றுமுன் இன்னொருத்தியின் வாசனையில் அவன் கரைக்கப்படுகிறான். அந்த வாசனையிலிருந்து அவன் மீள நெடுங்காலமாகும். அக்கால இடைவெளி இயல்பாகவே மணப்பெண்ணின் மீதான புதுமையை உள்ளுக்குள் உதிரச்செய்துவிடும்.”

கேட்டுக்கொண்டிருக்கும் சுகமதி என்ன ஆகிறாள் என்பதைக்கூடப் பார்க்க பொற்சுவை ஆயத்தமாகவில்லை. அவள் பேசியபடியே இருந்தாள்.

பேச்சை இழந்து நின்றார் முசுகுந்தர்.

``போர் என்பது, எதிரியின் மீது தொடுக்கும் ஓர் ஆயுதம்தான். அதுபோல வலிமையுடைய வேறு பல ஆயுதங்களும் இருக்கின்றன.  நான்   அவற்றை      உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்” என்றார் பேரரசர்
பேரரசரின் அமைதிக்குக் காரணம், சிறிது சிறிதாக முசுகுந்தருக்குப் புரியத் தொடங்கியது. அவர் பல வழிகளில் இயங்கிக்கொண்டிருக்கிறார். புதிய வழிமுறைகளையும் அதற்கான மனிதர்களையும் அவர் கண்டறிந்துவிட்டார் என்பது தெரிகிறது. ஒருமுறை பாதிப்பை உருவாக்கிவிட்டால் அனைவரின் மீதிருக்கும் நம்பிக்கை எப்படிப் பொய்த்துப் போகிறது என்பதை வெட்கத்தோடு ஏற்றுக்கொள்பவராக முசுகுந்தர் தலைகவிழ்ந்து நின்றார்.

பேரரசர் தொடர்ந்தார், ``இம்மண் காணாத பெரும் படையோடு நிற்கும் கருங்கைவாணன், நான் ஏவப்போகும் ஒற்றை ஆயுதம்தான். அதைப் பொருத்தமான நேரத்தில் பயன்படுத்துவேன். ஆனால், மற்ற ஆயுதங்களை உருவாக்க சற்றே காலம் தேவைப்படுகிறது.”

``அதன் பொருள், நான் தேவைப்படவே இல்லை என்பதல்ல. எப்போது என்பதை அவர்கள் முடிவுசெய்கிறார்கள்.”

கலங்கிப்போய் இருந்த சுகமதி, அவள் பேச்சை உள்வாங்கும் வலிமையற்று நின்றாள். வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83g_1513662566

``பொருத்தமான நேரத்தில் பயன்படுத்தச் சொல்லி உத்தரவிடப்பட்டதால் சில நாள்களுக்கு முன் அவர் இங்கு வந்தார்.” சொல்லி நிறுத்தினாள் பொற்சுவை.

`என்ன நடந்தது?’ எனக் கேட்க சுகமதிக்குத் துணிவு வரவில்லை, அமைதியானாள். ஆனால், பொற்சுவை யிடமிருந்தும் எந்தச் சொல்லும் வரவில்லை. அமைதியே நீடித்தது. கொடும் அமைதியைப் பொறுக்க முடியாமல் பொற்சுவையை நிமிர்ந்து பார்த்தாள். அவளோ படுக்கையில் படுத்தபடி மாளிகையின் மேற்கூரையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

`ஏன் திடீரெனப் பேச்சை நிறுத்திவிட்டாள்?’ என்று எண்ணியபடி சுகமதியும் அண்ணாந்து மேற்கூரையைப் பார்த்தாள். அமைதி நீடித்தபடியே இருந்தது.

மெல்லிய குரலில் பொற்சுவை கேட்டாள், ``மேலே வரையப்பட்டுள்ளது என்ன தெரியுமா?”

அண்ணாந்து பார்த்தபடியே சுகமதி சொன்னாள், ``விண்மீன்களும் கோள்மீன்களும் வரையப்பட்டுள்ளன.”

மெத்தையில் சாய்ந்துபடுத்து நிலைகொத்தி அதைப் பார்த்தபடி பொற்சுவை சொன்னாள், ``அது பொதியவெற்பன் பிறந்தபோதிருந்த வானியல் அமைப்பு. இந்த அமைப்பு கொண்டவன் தனது வழித்தோன்றல்களை உருவாக்குவதற்கான காலக்குறிப்பு உள்ளதாம். அதைக் கணித்தே அவன் இந்த அறைக்கு அனுப்பப்பட்டான்.”

அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத சுகமதி, எலிமயிர்ப் போர்வையிலிருந்து மெள்ள கைகளை விலக்கினாள்.

அசைவறிந்து அதைப் பார்த்தபடி பொற்சுவை சொன்னாள், ``அப்படி என்னால் விலகிவிட முடியாதே சுகமதி.”

கதறவேண்டும் எனத் தோன்றியது. கட்டுப்படுத்த முயன்றாலும் கண்கள் பீறிடத் தொடங்கின.

``வேட்டை விலங்கைக் கண்டு எந்த விலங்கும் அழுவதில்லை சுகமதி. வேட்டையின் ஒரே விதி போராடுதல் மட்டும்தான்.”

சொல்லியபடி படுக்கையிலிருந்து எழுந்தாள். ``நள்ளிரவுக்குப் பிறகு திடீரென எனது அறைக்குள் அரண்மனையின் முதுபெண்கள் நுழைந்தனர். விளக்குகள் எல்லாம் ஏற்றப்பட்டன. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நான் திடுக்கிட்டு எழுந்தேன். விளக்கொளியில் கண்கள் கூசின. எனது உடலை அவர்கள் சடங்குப்பொருளாக்கினர். முதலில் என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. சிறிது நேரத்தில் புரிந்துகொண்டேன். முற்றிய தேறலின் கடிமணம் காற்றில் மிதந்து வந்தபோது அவர்கள் எல்லோரும் அறையைவிட்டு வெளியேறினர்.

எனது உடலை இவர்கள் என்ன செய்து வைத்திருக்கிறார்கள் என்பதை, குனிந்து இங்கும் அங்குமாகப் பார்த்துக்கொண்டிருக்கும்போது மூச்சுக்காற்று எனது முகத்தில் பட்டது.”

பேரரசர் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அடுத்தடுத்து வந்து முகத்தில் அறைந்து கொண்டிருந்தது.

``இதுவரை கருங்கைவாணன் நடத்திய அனைத்துப் போர்களிலும் பாண்டிய நாடு வெற்றிபெற்றது என்பது உண்மை. ஆனால், அவை அனைத்தும் படையின் வலிமையால் அடையப் பெற்ற வெற்றியே. தளபதியின் வலிமையாலும் தந்திரத்தாலும் அடைந்த வெற்றி என எதுவுமில்லை. திரையர்களை வெற்றிகொண்டதற்குத் திதியனே காரணம்.”

பேரரசர் இதைச் சொல்வது எதற்காக என, முசுகுந்தரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், சொல்லை அத்துடன் நிறுத்திய பேரரசர் எழுந்து முசுகுந்தரை ஒரு பார்வை பார்த்தபடி அவை விட்டு அகன்றார்.

`இந்தச் சொல்லுக்கு என்ன பொருள்? இந்தப் பார்வைக்கு என்ன பொருள்? கருங்கைவாணன் போதிய திறமைகொண்டவனல்லன் என்று சொல்கிறாரா அல்லது அவனை மட்டுமே நம்பி படை நடத்த முடியாது என்று சொல்கிறாரா? திதியனின் தந்திரத்தைப் பாராட்டுகிறாரா? அவர் பயன்படுத்திய இந்தச் சொற்களின் வழியாக நான் புரிந்துகொள்ளவேண்டியது என்ன? மற்றவர்களுக்கு நான் சொல்லவேண்டிய செய்தி என்ன? இப்போது தீட்டப்பட்டுள்ள எந்தத் திட்டமும் குறைந்த அளவுகூடத் தகுதியான திட்டமில்லை என்பதைத்தான் அவர் சொல்லிச் செல்கிறாரா?’

சிந்தித்தபடியே நீண்ட நேரம் அந்த இடம் விட்டு அகலாமல் அப்படியே நின்றார் முசுகுந்தர்.

``எவ்வளவு நேரம்தான் அப்படியே நிற்பாய்? வா” என்று கைபிடித்து இழுத்தாள் பொற்சுவை.

உயிரற்ற ஒருத்தியாய் அவளின் இழுவைக்கு உடன்போனாள் சுகமதி.

``பரவிக்கிடப்பது அடர் இருளென்றாலும் அதிகாலையில் செவ்வொளி பரவத்தானே செய்யும். முழுமையாக வேட்டையாடப்பட்டதாக உணர்ந்த பிறகுதான் இன்னொன்றையும் உணர்ந்தேன்.”

சுகமதியின் உயிரற்ற கண்கள் அவளை நோக்கி மெள்ளப் புருவம் உயர்த்தின.

``எவ்வளவு வேட்டையாடப்பட்டாலும் என்னிடமிருக்கும் எதையும் எடுத்துச் சென்றுவிட முடியாதல்லவா? மறுநாள் காலை நிலைக்கண்ணாடி முன் வெகுநேரம் நின்றேன். மெள்ளப் புன்னகைத்துப் பார்த்தேன். எனது புன்னகை என்னிடம்தான் இருந்தது. நான் எதையும் இழக்கவில்லை என்று உணர்ந்தபோதுதான், என்னை வேட்டையாட முடியாது என்பதையும் உணர்ந்தேன்.”

பேசியபடியே கைபிடித்து இழுத்துக்கொண்டே படிகளில் ஏறினாள். `எங்கே அழைத்துச் செல்கிறாள்?’ என்ற குழப்பத்திலே வந்தாள் சுகமதி.  மேல்நிலையில் இருக்கும் ஓர் அறைக்குள் நுழைந்ததும் சொன்னாள், ``இதுதான் வேனிற்காலப் பள்ளியறை.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P83h_1513662584
பொற்சுவை சொன்னதும் சட்டெனத் தலை நிமிர்த்தி மேற்கூரையைப் பார்த்தாள் சுகமதி. அங்கேயும் வானியல் காட்சிகள் வரையப்பட்டிருந்தன. நெற்றியில் வடிந்த வியர்வையைத் துடைத்தபடி பொற்சுவையைப் பார்த்தாள்.

``இது, நான் பிறந்த வானியல் அமைப்பைக் குறிக்கும் ஓவியம்.”

மூர்ச்சைகொண்டு நின்றாள் சுகமதி.

மெல்லிய சிரிப்போடு சொன்னாள் பொற்சுவை, ``ஒருவேளை, இனி எனது வேட்டைக்கான காலமாக இருக்குமோ!”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 13, 2018 9:30 am

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P139a_1514366293
வாய்நிறைய வெற்றிலையை மென்றபடி கபிலரின் குடிலுக்கு வந்தார் வாரிக்கையன். காலையிலேயே பெரியவர் வந்துள்ளாரே என வேகமாக வெளியில் வந்து திண்ணையில் உட்கார்ந்தார் கபிலர்.

உள்ளிறங்கும் வெற்றிலையின் சாற்றுக்கு இடையூறில்லாமல் பேச்சைத் தொடங்கினார். “எதிரிநாட்டு அரசன் வீழ்ந்துவிட்டான் என்பதன் குறியீடாக அவன் நாட்டுக் காவல்மரத்தை வெட்டியெடுத்துச் செல்வார்கள். பறம்பின் காவல்மரம் எதுவெனத் தெரியாது. அதனால் பறம்பைக் காக்கும் கொற்றவையின் குழந்தையான தேவவாக்கு விலங்கினை எடுத்துச்சென்றால் பறம்பை வென்றதாகப் பொருள். அதனால்தான் காலம்பன் கூட்டத்தை அனுப்பி தேவவாக்கு விலங்கினை எடுத்துவரச் சொல்லியுள்ளான் பாண்டியன் என்று நீங்கள் சொன்னதாக வீரர்கள் சொல்கிறார்களே அது உண்மையா?”

மெல்லும் வெற்றிலையை இடப்புறமாகவும் வலப்புறமாகவும் ஒதுக்கியபடியே பக்குவமாய்ப் பேசினார் வாரிக்கையன். வெற்றிலையின் சிறப்பு, மெல்லுகிறவரின் வாயில் எவ்வளவு ஊறுமோ அதே அளவு அருகில் இருப்பவரின் வாயிலும் ஊறும். கபிலர் கைநீட்டும்பொழுதே வாய் அசையத் தொடங்கிவிட்டது.  

வாரிக்கையன் ஒவ்வொரு வெற்றிலையாய் எடுத்துக் கொடுத்தார். வாங்கி, தடம்பார்த்து மடித்தபடியே கபிலர் சொன்னார், “இதுவும் காரணமாக இருக்கலாம் என்றுதான் சொன்னேன். இதுதான் காரணம் என்று சொல்லவில்லை.”

“இது காரணமாக இல்லாமலிருக்கவும் வாய்ப்பிருக்கிறதா?”

“இருக்கிறது.”

மூன்று வெற்றிலைகளை ஒன்றாக மடித்து இடதுகடவாயின் கடைசிப்பல்லுக்குக் கொடுத்தபடி வாரிக்கையன் கேட்டார் “என்ன அது?”

“இந்தக் காரணத்துக்காக எடுத்துச்செல்லப்பட்டிருந்தால், அவற்றை ஏன் துறைமுகத்துக்கும் கலங்களுக்கும் கொண்டுசெல்ல வேண்டும்? யவனர்கள் விலங்குகளையும் பறவைகளையும் அவர்களின் நாட்டுக்கு வாங்கிச்செல்வர். சற்றே வேறுபட்டு இருக்கிறது என்பதால் இதனை வாங்கியிருக்கலாம் என்றுகூடத் தோன்றும். ஆனால், நம் வீரர்கள் சொல்லும் குறிப்பைப் பார்த்தால் தேவவாக்கு விலங்குகளை யவன நாவாய்களில் ஏற்றியதாகத் தெரியவில்லையே. தமிழ்வணிகர்களின் கலங்களில்தான் ஏற்றுப்பட்டுள்ளன.”

“எப்படி அவையெல்லாம் யவன நாவாய்கள் இல்லையென உங்களால் சொல்ல முடிகிறது?”

“எல்லாம் பட்டறிவுக்கணக்குதான். உங்கள் வாய்க்குள் போகும் வெற்றிலைகள் மட்டும் ஆண்வெற்றிலைகளாக இருக்கின்றன அல்லவா? அதுபோல அறிவைத்  தன்னியல்பாக்கிக்கொள்வதுதான்.”

“கண்டறிகிறானடா கபிலன்” என்று சிறுவனைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டுவதுபோல கபிலரைப் பாராட்டிய வாரிக்கையன் தொடர்ந்து கேட்டார், “பின்னர் எதற்குத்தான் அவர்கள் இதனை எடுத்துச்சென்றனர்?”

“இந்தக் கேள்வி ஏன் உனக்குத் தோன்ற மறுக்கிறது எனப் பாரியிடம் கேட்டால், அவன் ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிடுகிறான். ‘வேந்தர்கள் எந்தச் செயல் செய்தாலும் அது அவர்களின் அதிகாரத்துக்கானது. மனிதருக்கும் இயற்கைக்கும் எதிரானது. அதில் கூடுதலாகச் சிந்திக்க என்ன இருக்கிறது?’ என்று.”

சொல்லிக்கொண்டிருக்கும்போதே பாரியும் தேக்கனும் வேகமாக நடந்து போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. “எங்கே போகிறார்கள்?” எனக் கேட்டார் கபிலர்.

இடப்பக்கமாகத் திரும்பி உதடுகுவித்து வெற்றிலை எச்சிலைத் துப்பியபடி வாரிக்கையன் சொன்னார், “வாயில் வெற்றிலை இருக்கும்பொழுது அதற்கு மட்டுந்தான் வாயசைக்க வேண்டும். சாறு உள்ளிறங்கும்போது ஓசையை வேகமாக வெளியேற்றக் கூடாது, அருகில்போய்க் கேளுங்கள்.”

புறப்பட்டுப் போனார் கபிலர். பாரியும் தேக்கனும் நாகப்பச்சை வேலியினருகே இருந்த காலம்பனை நோக்கிப் போய்க்கொண்டிருந்தனர். காலம்பனோடு திரையர்குல வீரர்கள் ஏழுபேர் இருந்தனர். அறுவர் இளம் வீரர்கள்; ஒருவர் மிகவும் வயதான கிழவர். அவரது பெயர் ஏதோ சொன்னார்களே என்று நினைவுகூர்ந்தபடியே போனார் கபிலர். அருகில் போனவுடன் நினைவிற்கு வந்தது. அவரது பெயர் அணங்கன்.

திரையர்குல வீரர்கள் நீண்ட பயணத்துக்கான ஆயத்தத்தோடு இருப்பதை அறியமுடிந்தது. பெரியவர் அணங்கன் எதையோ துணியிற்சுற்றிக் கையில் வைத்திருந்தார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P139b_1514366314
பார்த்தபடி தேக்கன் கேட்டான், “எங்கே புறப்பட்டுவிட்டீர்கள்?”

“நான் போகவில்லை. இவர்கள் அறுவர்தான் போகப்போகிறார்கள். நானும் செதிலனும் இவர்களை அனுப்பிவைத்துவிட்டு வந்துவிடுவோம்” என்றான் காலம்பன்.


“அதுதான், எங்கே போகப்போகிறார்கள்?” என்று தேக்கன் கேட்டுக்கொண்டிருக்கும்பொழுதே பாரி சொன்னான், “பறம்பின் காட்டுக்குள் இவர்கள் மட்டும் ஏன் தனியாகப் போகவேண்டும். பறம்பு வீரர்களும் உடன்போகட்டும்.”

பாரி சொல்லி முடிக்கும்முன் சற்றுத் தள்ளி நின்றிருந்த பறம்பு வீரர்கள் சிலர் திரையர்களோடு இணைந்து நின்றனர்.

அவர்களைப் பார்த்தபடி காலம்பன் சொன்னான், “பறம்பு வீரர்கள் உடன்செல்ல வேண்டாமே.”

“ஏன் வேண்டாம் என்று சொல்கிறாய்?” என்றார் தேக்கன்.

“இவர்களால் தாக்குப்பிடிக்க முடியாது” என்றான் காலம்பன்.

பாரிக்கு சற்றே அதிர்ச்சியாக இருந்தது.

“காடறியும் பயிற்சி முடித்த சிறந்த வீரர்கள் இவர்கள்” என்றான் தேக்கன்.

காலம்பன் மீண்டும் சொன்னான், “செய்யப்போகும் வேலைக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியாது, அதனால்தான் வேண்டாம் என்கிறேன்.”

“என்ன வேலைக்குத்தான் போகிறார்கள்?” சற்றே வேகமாக இருந்தது தேக்கனின் குரல்.

“காட்டெருமைகளின் மந்தைக்குள் நுழையப்போகிறார்கள்.”

மறுமொழி எதிர்பாராததாக இருந்தது. வியப்பைக் கடந்து ஐயமே மேலெழுந்தது.  “காட்டெருமைகளின் மந்தைக்குள் எப்படிப் போகமுடியும்? அங்கு போய் என்ன செய்யப்போகிறார்கள்?” என்றான் தேக்கன்.
 
“காட்டெருமையின் மந்தைக்குள் பல்வேறு குணங்களைக்கொண்ட காட்டெருமைகள் உண்டு. அவற்றில் மந்தையை வழிநடத்தும் காட்டெருமையைக் கண்டறியப் போகிறார்கள்.”

காலம்பன் சொல்வது கேள்விப்பட்டிராததாக இருந்தது. “காட்டெருமைகளின் குணங்களைக் கண்டறிய முடியுமா? அவற்றின் பின்கால் நரம்பில் அடித்து அதனை அசையவிடாமற்செய்ய திரையர்களால் முடியும் என்றுதானே கேள்விப்பட்டுள்ளோம். நீ புதிதாகச் சொல்லுகிறாயே?”

“அதுவெல்லாம் சூலிவேள் காலத்தில் செய்யப்பட்ட வேலைகள். அதன்பின் இத்தனை தலைமுறையாக நாங்கள் வேறு என்னதான் கற்றோம்? காட்டெருமையுடனேதான் கிடந்தோம்” என்று சொன்ன காலம்பன், செய்யப்போகும் வேலையைப்பற்றிச் சொன்னான்.

``மந்தைகளை வழிநடத்தும் காட்டெருமையை இனங்காணுவதுதான் முக்கியமான வேலை. ஒவ்வொரு வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P139c_1514366326மந்தைக்கும் தலைமையெருமை ஒன்று இருக்கும். அது தான்தான் மந்தைக்குப் பெரிய ஆள் என்பதை நாள்தோறும் செயல்மூலம் காட்டிக்கொண்டே இருக்கும். அதனைத் தவிர அதற்கு வேறு வேலையில்லை. ஆனால், மந்தையை வழிநடத்துவது வேறொன்றாக இருக்கும். அதுதான் ஓசைகளின் மூலமான உத்தரவைக் கூட்டத்துக்கு வழங்கும். அதனைக் கண்டறிந்து நமது கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவரவேண்டும். அதன்பின் அந்த மந்தையின் வழித்தடத்தை நம்மால் அறிய முடியும்.”

காலம்பன் சொல்லுவது நம்பமுடியாததாக இருந்தது. “நீ சொல்லுவது உண்மையா?” எனக் கேட்டான் தேக்கன்.

“எலியை நோக்கிப் பூனையைப் பாயவிடாமல் நிறுத்தும் ஆற்றல் பொதினி வேளிர்களிடம் இருந்திருக்கிறது. விலங்குகளின் குருதியிலிருக்கும் வெறியையும் பசியையும் குணத்தையும் அவர்களால் கட்டுப்படுத்த முடிகிறது. பாம்பின் வலிமையே அதன் நஞ்சுதான். ஆனால், அதற்கே தெரியாமல் அதன் நஞ்சை உருவியெடுத்துப் பயன்படுத்தும் ஆற்றல் பறம்பு வேளிர்களுக்கு இருக்கிறது. இவற்றோடு ஒப்பிட்டால் திரையர்களாகிய நாங்கள் கற்றுள்ளது மிகக்குறைவுதான்” என்றான் காலம்பன்.

தேக்கன் சற்றே தாழ்வுணர்ச்சியுடன் அவனது தோளிலே தட்டிச் சொன்னான். “நீங்கள் எவ்வளவு குறைவாகக் கற்றிருக்கிறீர்கள் என்பது, உடல்முழுக்க வாங்கிய எனக்குத்தானே தெரியும்.”

அனைவரும் சிரித்தனர். “அவர்களை அனுப்பும் வரை நாங்களும் உடன்வருகிறோம்” என்று சொல்லி பாரியும் தேக்கனும் காலம்பனுடன் புறப்பட்டபொழுது கபிலரும் உடன் நடந்துகொண்டிருந்தார்.

திரையர் கூட்டத்திலே மிகவயதான மனிதராக அணங்கன்தான் இருக்கிறார். வந்த புதிதில் கபிலர் அவரோடு பேச முயன்றார். அவர் பேசும்முறையும் மொழி உச்சரிப்பும் புரிந்துகொள்ள மிகக்கடுமையாக இருந்தன. இவர் தமிழ்தான் பேசுகிறாரா அல்லது வேறுமொழி பேசுகிறாரா என்று அவ்வப்பொழுது குழப்பமாக இருக்கும். ஆனால், திரையர் கூட்டத்தில் மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதில் சிக்கல் எதுவுமில்லை. அணங்கனுக்கு மிகவும் வயதாகிவிட்டதால் சொற்கள் தெளிவாக இல்லையோ எனத் தோன்றியது. பொதுவாக மலைமக்கள் சொற்களை நீட்டி இழுத்தே உச்சரிப்பர். ஆனால், அணங்கனின் உச்சரிப்பு நேரெதிராக சிறிது சிறிதாக வெட்டி வெட்டி இருக்கும். இவர் ஓசையை ஏதேதோ செய்யப்பார்க்கிறார் என்று தோன்றும். மறுகணமே வயதாகிவிட்டதால் உருவாகும் நிலையிது என்று முடிவுக்குப் போவார் கபிலர். பேசவே அவ்வளவு தடுமாறும் அணங்கனை இவ்வளவு கடினமான வேலைக்கு ஏன் கூட்டிப்போகிறார்கள் என்று எண்ணியபடி நடந்தார் கபிலர்.

காலம்பன் காட்டெருமைகளின் மந்தைக்குள் போவதைப் பற்றிக் கூறினான். “ஒரு மந்தையைக் கண்டறிந்து அதற்குத் தெரியாமலேயே அதைப் பின்தொடர வேண்டும். அந்த மந்தையில் உத்தரவு பிறப்பிக்கும் எருமை எதுவெனக் கண்டறிய வேண்டும். இதற்கே வாரக்கணக்கில் ஆகும். அதுவரை காடுமலைகளில் அதன் கண்ணிற்படாமல் கொம்புகளுக்குத் தப்பி, வாலின் வாசம் பிடித்துக்கொண்டே போகவேண்டும்.
உத்தரவு பிறப்பிக்கும் எருமையைக் கண்டுபிடிப்பதுதான் மிகமிக முக்கியம். அதன் செருமலும் கனைப்பும் தலையாட்டலும் தனித்துவமிக்கதாக இருக்கும். அதனைக் கண்டுபிடித்து, கனைப்போசையை மடக்கி எதிர்கனைப்பை வெளியிட வேண்டும். அது எளிய செயலல்ல; மாமனிதர்களால் மட்டுமே முடியக்கூடியது. இப்பொழுது அதனைச் செய்யக்கூடிய ஒரே மனிதராக அணங்கன் மட்டுமே இருக்கிறார். மற்றவர்கள் எல்லாம் போரிலே இறந்துவிட்டனர்” என்று பெரியவரைக் கைகாட்டிச் சொன்னான் காலம்பன்.

தேக்கனும் பாரியும் அணங்கனை பெருவியப்போடு பார்த்தனர். கபிலருக்கு இப்பொழுதுதான் அவர் பேசும்முறையின் காரணம் புரிந்தது. ஓசையைக்கொண்டு வேறோர் உயிரினத்துக்குள் புகமுடியும் மாமனிதனான அணங்கன் அமைதியாக முன்நடந்துகொண்டிருந்தார்.

காலம்பன் தொடர்ந்தான். “அந்தக் குறிப்பிட்ட காட்டெருமை கண்டறியப்பட்டுவிட்டாற்போதும், அதன்பின் நடக்கவேண்டியவற்றையெல்லாம் மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.”

‘இவ்வளவு எளிதாகச் சொல்கிறானே!’ என்கிற வியப்போடு பார்த்தான் தேக்கன். முன்னால் போகிற அறுவரும் யார் என்பது இப்பொழுதுதான் புரியத் தொடங்கியது.

காலம்பன் சொன்னான், “காட்டெருமை யானையைவிட வலிமைவாய்ந்தது. ஆனால், யானையைப்போலக் கூருணர்ச்சி கொண்டதன்று. எளிதில் ஏமாறக்கூடியது. ஒருபோதும் அச்சத்தோடு அவற்றை அணுகக்கூடாது. சிறுபூச்சி ஒன்றை நசுக்கி அழிக்கும் ஆணவத்தோடுதான் அதனை அணுகவேண்டும். அதன் முன்புற நெற்றி இரும்பினைவிட வலிமையானது. அதனை மட்டுமே அது நம்பியிருக்கும். ஆனால் அதைத்தவிர முழுவுடலும் மிச்சமிருக்கிறதே!”

காட்டில் இதுவரை கேள்விப்பட்டிராதவற்றைக் கேட்கும் புதிய மனிதர்களைப்போல பாரியும் தேக்கனும் காலம்பனின் குரலை கவனித்துக்கொண்டிருந்தனர். கபிலரோ மூவரையும் ஒருசேர கவனித்துக்கொண்டிருந்தார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P139d_1514366349
காலம்பன் தொடர்ந்தான். “ஆண் காட்டெருமை விரைவில் காதுகேட்கும் ஆற்றலை இழந்துவிடும்.”

பறம்பின் ஆசான், பறம்பின் தலைவன், பறம்பின் விருந்தினன் ஆகிய மூவரையும் எந்த வேறுபாடும் இல்லாமல் வியப்பின் விளிம்பில் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்தின காலம்பனின் சொற்கள்.

அவன் சொன்னான், “ஆண் காட்டெருமையின் காது மடல்களுக்குள் மயிர்க்கால்கள் அடர்ந்து முளைக்கும். அவற்றுள் சிறுகொடுக்குவகைப் பூச்சியினம் அதிகம் அடையும். அதனைக் காட்டெருமையால் ஒன்றுமே செய்யமுடியாது. பூச்சியினம் கட்டும் கூடு காதுகளை அடைத்துக்கொள்வதாலோ, அல்லது தொடர்ந்து உள்ளுக்குள் கொத்திக்கொண்டேயிருப்பதாலோ ஆண்காட்டெருமை கேட்கும் ஆற்றலை முழுமையும் இழந்துவிடுகிறது. ஆனால் பெண் காட்டெருமையின் காது மடல்களில் மயிர்க்கால்கள் முளைப்பதில்லை. எனவே அது காதுகேட்கும் ஆற்றலை இழப்பதில்லை.

குட்டியோடு நகரும் பெண் காட்டெருமைகளைச் சுற்றியேதான் ஆண் காட்டெருமைகளின் நடவடிக்கைகள் இருக்கின்றன. பெண் காட்டெருமைகள் மிகக்கட்டுப்பாடுகொண்டவை. அவை, வழிநடத்தும் தலைமையின் கனைப்பொலிகொண்டே செயல்படுபவை. மந்தைகளை வழிநடத்தும் பெண் காட்டெருமை வயதானதாகத்தான் இருக்கும். அதனை அறிந்து பின்னங்கால் நரம்பைச் சரிக்க வேண்டும். அதன் வேகத்தை முழுமுற்றாகக் கட்டுப்படுத்தியபின் நம்முடைய வேலையைத் தொடங்கவேண்டும். சீண்டலின் மூலமும் செருமலின் மூலமும் நாம் அதனை முன்னகர்த்திச் செல்லலாம். மந்தை முழுமையையும் அது நகர்த்திக்கொண்டு வந்துவிடும்.

ஆனால், இந்தக் கட்டத்தை அடைவது எளிதன்று. வேலையைச் செய்யப்போன ஆறுபேரையும் ஒரேநாளில் முட்டித்தூக்கிக் கொன்ற நிகழ்வுகள் நிறைய இருக்கின்றன. காட்டெருமைகள் நாள்முழுவதும் இளைக்காமல் ஓடக்கூடியவை. எந்த மேட்டிலும் பள்ளத்திலும் விடாது ஓடுபவை. அவற்றின் ஓட்டத்துக்கு முழுநாளும் தாக்குப்பிடிக்கக்கூடியவன்தான் இந்தப் பணிக்குள்ளே இறங்கமுடியும். காட்டுக்குள் எங்களின் ஓட்டங்களைக் காட்டெருமைகளிடம் இருந்துதான் தொடங்குகிறோம். அவையே எங்களின் ஆசான்கள்” என்றான் காலம்பன்.

ஏறக்குறைய பேச்சற்று இருந்தனர் மூவரும். தேக்கனுக்கு நிறைய கேள்விகள் உருவாயின. ஆனால், அவையெல்லாம் மிக எளிதான கேள்விகள். ‘காட்டெருமைகளின் காதுமடல்களுக்குள் நுழைந்து காலம்பன் பேசிக்கொண்டிருக்கிறான்; அவனிடம்போய் இதனையா கேட்பது?’ என்று தோன்றியதால் எதையும் கேட்கவில்லை. அமைதியே நீடித்தது.

அமைதியைக் குலைத்து, சற்றே குரலுயர்த்தி காலம்பன் சொன்னான், “மலைமக்களுக்குப் பகைகொள்ளத் தெரிவதில்லை. ஆனால், பகை வளர்க்காமல் குலம் காக்கமுடியாது.”

காலம்பனின் ஆவேசமிகுந்த சொற்களால் தன்னிலைக்கு வந்தான் தேக்கன். ‘இப்பொழுது இதனைச் சொல்லும் காரணமென்ன?’ என்று சிந்தித்தான்.

காலம்பன் தொடர்ந்தான், “எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும் நாங்கள் அவர்களை அழிக்காமல், எங்களைக் காத்துக்கொள்ளும் போரினை மட்டுமே நடத்தினோம். அதனாலேயே அழிக்கப்பட்டோம். இனியும் நாம் அப்படி இருந்துவிடக்கூடாது.”

குரலில் ஆவேசம் உச்சத்தில் இருந்தது.

“என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாய்?” எனக் கேட்டான் பாரி.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P139e_1514366384
“பச்சமலையின் நான்கு திசைகளிலும் நான்கு காட்டெருமை மந்தைகளை வழிநடத்தும் ஆற்றலை நாம் பெற்றாக வேண்டும்.அதற்கு இணையான ஆற்றல்கொண்ட படை இவ்வுலகில் இல்லை.”

தேக்கன் வியந்து நின்றபோது காலம்பன் சொன்னான், “யானைப் படைகளேயானாலும் அவை பழக்கப்படுத்தப்பட்டவைதான். காட்டெருமைகளைப் பழக்கப்படுத்த முடியாது. அவற்றின்  சீற்றம்    யானைக் கூட்டத்தை நடுங்கச்செய்துவிடும். அதுவும் பழக்கப்படுத்தப்பட்ட யானைகளைவிட வலிமைகுன்றிய உயிரினம் காட்டில் வேறெதுவும் இல்லை. விலங்குகளின் இயற்கையான ஆற்றலை எதிரிகளை நோக்கிப் பாயவிடும்பொழுது மிஞ்சுவது எதுவும் இருக்காது” சொல்லிய வேகத்தில் பாரியைப் பார்த்தான்; சுண்டாப்பூனையை ஏவி திரையர்குல வீரர்கள் எட்டுப்பேரை வீழ்த்தியவன் பாரி.

பேச்சு நின்ற கணத்தில் பாரியின் சிந்தனையிலும் சுண்டாப்பூனையே வந்து சென்றது. காலம்பன் தொடர்ந்தான், “நாங்கள் கவனக்குறைவாக இருந்துவிட்டோம். பாண்டியர்படை அடர்மழைநாளில் எங்கள் குடில்களைச் சூழ்ந்தபொழுது அணங்கன் ஒருவன் மட்டும் வெளியில் இருந்திருந்தாற்கூடப் போதும். காட்டெருமை மந்தையைக்கொண்டு அவர்களின் யானைப்படையை முழுமுற்றாக அழித்திருப்பான்.”

காலம்பன் சொல்லிக்கொண்டிருந்தபொழுது சற்றே மெலிந்த உடலோடு அந்தக் கிழவன் காட்டெருமையின் வாசத்தை நுகர்ந்தபடி முன்னே போய்க்கொண்டிருந்தான்.

வலிமையைவிட நுட்பமே ஆற்றல் வாய்ந்தது என்பதைக் காலம் மீண்டும் மீண்டும் சொல்லித்தருகிறது என்று எண்ணியபடி பின்தொடர்ந்தான் பாரி.

இரண்டு நாள் நடந்து ஆறாம்குன்றை அடைந்தனர். இங்குள்ள மக்கள் எதிரிலுள்ள வெளவால் மலையின் பின்புறச்சரிவில் ஒரு மந்தை மேய்வதாகச் சொன்னார்கள். ஆபத்தான சரிவுப்பகுதி அது. அதில் இறங்கிப்போவது கபிலருக்கு நல்லதன்று: அவரை மட்டும் விட்டுவிட்டுப் போகமுடியாத நிலையில் பாரி சொன்னான், “அருகில் வந்தாகிவிட்டதல்லவா? நீங்கள் மந்தையைக் கண்டறிந்து அந்த அறுவரையும் அனுப்பிவைத்துவிட்டு வாருங்கள். நான் கபிலரை அழைத்துக்கொண்டு எவ்வியூர் திரும்புகிறேன்.”

தேக்கனும் காலம்பனும் “சரி” என்று சொல்லி, இருவரையும் அனுப்பிவைத்தனர். 

பாரியும் கபிலரும் எவ்வியூர் நோக்கி நடக்கத் தொடங்கினர். பேச்சு காலம்பன் சொன்னதைப் பற்றியதாக இருந்தது. “பகை வளர்க்காமல் குலங்காக்க முடியாது என்று காலம்பன் சொல்கிறானே, அது சரிதானா?” எனக் கேட்டான் பாரி.

“பகை, காட்டினில் விளையும் நெருப்புபோல...   பரவிக்கொண்டும் ஆற்றலைப் பெருக்கிக்கொண்டும் இருக்கும்” என்று கபிலர் சொல்லி முடிக்கும் முன் பாரி சொன்னான், “ஆனால் அழித்துக்கொண்டே இருக்கும்.”

“அழித்தல் எல்லாவிதத்திலும் தவறானதா என்ன?”

“எல்லாவிதத்திலும் தவறன்று; ஆனால், எல்லாவற்றையும் அழிக்கும். ஒரு கட்டத்தில் உங்களால் பிரித்தறிய முடியாது.”

அவனது சொல்லின் ஆழத்தைப்பற்றிச் சிந்திக்கும்போதே நிறுத்தாமல் தொடர்ந்தான் பாரி, “காட்டெருமையின் காதுமடல்களில் உள்நுழைய முடியா ஓசையைக் கணிக்க முடிந்த திரையர்களால், அடர்மழையின் ஓசையில் யானைப்படை வருவதைக் கணிக்கமுடியாமற் போயிருக்கிறது. கவனம்கொள்ளுதல்தான் முக்கியம். பகைவளர்த்தல் அன்று.”

“நீ சொல்வது சரிதான். கவனம்கொள்ளுதல்தான் முக்கியம். ஆனால், அழிக்கப்பட்டவனின் குரல் அப்படித்தானே இருக்கும். நிலம் இழந்தவன், குலம் இழந்தவன் உயிர்வாழ ஒரே காரணம் பகைமுடிக்கத்தானே?”

“அதனால்தான் நானும் சொல்கிறேன். அபகரித்துக்கொண்டவன் நம்முடைய வளங்களையும் சேர்த்து மேலும் வலிமையடைவான். இழந்தவர்கள் பகை மட்டும் வளர்த்துக்கொண்டிருந்தால் வலிமை கூடாது. இருப்பது ஒரேயோர் அணங்கன். அவன் இறந்துவிட்டால் திரையர்களின் வலிமை இன்னும் குறையும்.”

பாரியின் சொற்கள் பாறைகள் உருள்வதைப் போலத்தான் எந்தக் கணத்திலும் மேலேபோட்டு அமுக்கும். அமுக்கிய சொல்லிலிருந்து மீண்டெழ கபிலர் நினைத்துக்கொண்டிருந்தபொழுது பாரி சொன்னான், “நான் உங்களை அழைத்துக்கொண்டு எவ்வியூர் திரும்புகிறேன் என்று சொன்னதுக்கு அதுதான் காரணம். தேக்கனை காலம்பனிடம் பேசச்சொல்லியிருக்கிறேன். இப்போது பயிற்சி தேவைப்படுவது மந்தையை வழிநடத்தும் காட்டெருமைக்கன்று. உடன்செல்லும் மனிதர்களுக்குத்தான். அணங்கனைப்போல அதிதிறமையுள்ள ஆசானிடம் எவ்விதப் பயிற்சியும் பெறாமல் மாதக்கணக்கில் நாம் வீணடித்துள்ளோம். பகை நெருப்பைப்போலப் பரவும் என்று சொன்னீர்கள் அல்லவா, இங்கு என்ன நடந்துள்ளது? ஒற்றைக்குச்சியில் மட்டுமே எரியும் நெருப்பை அடுத்தகுச்சிக்குக்கூடப் பரவாமல் வைத்திருக்கிறது.”

கபிலர் சொன்ன உவமை எப்படித் தவறானது என்பதை, கபிலருக்கு பாரி சொல்லிக்கொண்டிருந்தான். அதைக் கேட்டபடி சற்றே அமைதியாய் கபிலர் வந்துகொண்டிருந்தார். சிறிது நேரத்துக்குப்பின் பாரி கேட்டான், “ஏன் ஏதும் பேசாமல் வருகிறீர்கள்?”

எவ்வியூரிலிருந்து புறப்படும்பொழுது வாரிக்கையன் சொன்னார், “கற்றுக்கொண்டான் கபிலன்” என்று, இப்பொழுது நீ கல்லாத கபிலனை எவ்வியூருக்கு மீண்டும் அழைத்துச்செல்கிறாய்.”

மெல்லிய சிரிப்போடு பாரி மறுமொழி சொன்னான், “நீண்ட ஒலிக்குறிப்போடு பேசும் மலைமக்களுக்கு நடுவில் வெட்டி வெட்டி ஒலியைப் பயன்படுத்துகிறாரே என்று அணங்கனைக் கண்டறிய முயன்றது நீங்கள் மட்டுந்தான். அதைக்கூடக் கண்டறிய முடியாதவர்களாகத்தான் நாங்கள் இருந்துள்ளோம்.” பேசியபடியே குன்றின் உச்சியிலிருந்து இடப்புறமாக இறங்கத் தொடங்கினர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P139f_1514366399
உச்சிப்பொழுது. மலைமடிப்புகளை நின்று பார்க்கத்தோன்றியது. சிறிதுநேரம் குன்றின் உச்சியிலே நின்றார் கபிலர். தென்கிழக்குத் திசையைப் பார்த்தபடி சொன்னார், “அந்த மூன்றாங்குன்றைக் கடந்தால் எவ்வியூரை அடையலாம். சரிதானே.”

“இல்லை” என்றான் பாரி. எவ்வியூர் இருப்பது இடப்புறத்தில்.

“அப்படியென்றால் நாம் ஏன் தென்கிழக்குத் திசையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம். இடப்புறக்காட்டை அல்லவா ஊடறுத்துப் போகவேண்டும்.”

“சரியான திசையில் போவதாக இருந்தால் அப்படித்தான் போகவேண்டும். ஆனால், இக்காட்டுக்குள் பறம்பு மக்கள் யாரும் காலடி எடுத்துவைக்கமாட்டோம்.”

“ஏன்?”

“இது ஆளிக்காடு.”

“ஆளியா… கொடூர விலங்கு என்று சொல்வார்களே, அதுவா?’

“ஆம். அது ஈன்ற குட்டியின் முதல்வேட்டையே யானைதான். யானையின் தந்தத்தைப் பிய்த்து அதன் குருத்தைத்தான் விரும்பி உண்ணும் என்பார்கள்.”

``அவ்விலங்கு இன்னும் இருக்கிறதா?”

“இல்லை, எப்பொழுதோ அழிந்துவிட்டது.”

சிறிதுநேரம் பேச்சின்றி நடந்த கபிலர், “அப்படியொரு விலங்கு உண்மையாய் இருந்திருக்கும் என்று நீ நம்புகிறாயா?”

“இருந்திருக்காது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

“நான் அவ்விலங்கைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், எதுவும் நம்பும்படியாக இல்லை. மிகைப்படுத்தப்பட்ட கதையாக இருக்கலாம் அல்லவா?”

மெல்லிய சிரிப்பை வெளிப்படுத்தியபடி பாரி சொன்னான், “வெறும் கதைகளை நம்ப நாங்கள் குழந்தைகள் இல்லை.”

“அப்படியென்றால் வேறு எதைவைத்துச் சொல்கிறாய்? குகைப்பாறைகளில் முன்னோர்கள் வரைந்த ஓவியம் எதுவும் இருக்கிறதா?”

“இல்லை, அவற்றைவிடப் பெரிய சான்று இருக்கிறது.”

“என்ன?”

“இம்மலைத்தொடர் முழுவதும் எறும்புக் கூட்டங்கள்போல அலைந்து திரியும் யானைகள் எதுவும் இன்றுவரை ஆளிக்காட்டுக்குள் நுழைவதில்லை.”

கபிலர் மிரண்டு நின்றார்.

“உயிரினங்களிலே அதிக நினைவாற்றல் கொண்டது யானைதான்.”

“ஆம்” என்று தலையசைத்தார் கபிலர்.

“அதுமட்டுமன்று, யானைகளுக்கு மனிதர் சொல்லும் கதைகள் தெரியாது.”

பாரியின் சொற்கேட்டு மீளமுடியாமல் நின்ற கபிலர் சற்று நேரங்கழித்துக் கேட்டார். “உங்களைப் பொறுத்தவரை. ஆளி இருந்தது வியப்பன்று, அழிந்ததுதான் வியப்பு?”

“இல்லை” என்றான் பாரி. ``எங்களைப் பொறுத்தவரை ஆளி அழிந்ததில் வியப்பேதுமில்லை.”

“ஏன்?”

“அழிவுகளை மட்டுமே செய்யும் உயிரினம் காட்டில் நிலைத்து வாழமுடியாது. ஏனென்றால், அது இயற்கைக்கு எதிரானது.”

கபிலர் நிற்கும் இடம்நோக்கி மேலேறினான் பாரி, “விதையை நடாதவன் கிளையை ஒடிக்க இயற்கை அனுமதிக்காது.”

கண்ணுருட்டிப் பார்த்துக்கொண்டிருந்த கபிலரின் தோளிலே கையை வைத்து பாரி சொன்னான், “இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்”.

 - பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 13, 2018 9:43 am

 
 
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P85a_1514720863
பாரியும்  கபிலரும் எவ்வியூருக்கு வந்து சேர்ந்தபோது இரவாகிவிட்டது. தொடர்ந்து நான்கு நாள்கள் நடந்ததால், கபிலரின் கால்கள் துவண்டுபோய் இருந்தன. நீண்ட ஓய்வு தேவைப்படுகிறது என்ற எண்ணத்தோடு எவ்வியூருக்குள் நுழைந்தார். `இந்த எண்ணம் வரும்போதெல்லாம், அணங்கன் நினைவுக்கு வந்துவிடுகிறான். இந்த வயதிலும் காட்டெருமை மந்தைக்குள் நுழைய என்ன ஒரு தினவு வேண்டும்! நுழைந்துவிட்டால், எந்தக் கணமும் பல மடங்கு வேகத்தோடு ஓட வேண்டும். அந்த ஓட்டம் என்றைக்கு முடியும் எனச் சொல்ல முடியாது. எப்படி இதுவெல்லாம் அணங்கனால் முடிகிறது?’ என்று எண்ணிக்கொண்டே உள்நுழைந்தார் கபிலர்.

`தேவவாக்கு விலங்கை எடுத்துக்கொண்டு, பறம்பின் அடர்காட்டுக்குள் தொடர்ந்து அத்தனை நாள்கள் எப்படி திரையர்களால் ஓட முடிந்தது?’ என்ற கேள்விக்கான முடிச்சுகள் எல்லாம் தன்போக்கில் அவிழ்ந்துவிட்டன.

பாரி வந்ததை அறிந்து, முடியன் அவர்களை நோக்கி வேகமாக வந்தான். ஏதோ ஒரு செய்தி அவனுக்காகக் காத்திருக்கிறது என்பதைக் கபிலர் உணர்ந்தார். வேட்டுவன் பாறையிலிருந்து நீலன் அனுப்பியுள்ள வீரர்கள் வந்துள்ளதாக அவன் சொன்னான்.

`நீலன் வராமல் ஏன் வீரர்களை அனுப்பியுள்ளான்?’ என்று எண்ணிய கபிலர், ``சரி, நான் போய் ஓய்வெடுக்கிறேன்” என்று சொல்லி விடைபெற முயன்றார்.

``வந்துள்ள செய்தி, உங்களோடு தொடர்புடையது” என்றான் முடியன்.

கபிலர் சற்றே வியப்படைந்தார். ``எனக்கு என்ன செய்தி வந்திருக்கப்போகிறது?!” என்று சொல்லிக்கொண்டிருக்க, வீரர்கள் இருவர் அறைக்குள் வந்தனர்.

பாரியையும் கபிலரையும் வணங்கிவிட்டு, ``உங்களைப் பார்க்க மூவர் வந்துள்ளனர்” என்று கபிலரைப் பார்த்தபடி சொன்னார்கள்.

``என்னைப் பார்க்கவா?!” என்று திகைப்புற்றுக் கேட்டார் கபிலர்.

கபிலர் கேட்டு முடிக்கும் முன் பாரி சொன்னான், ``கபிலரைப் பார்க்க வந்துள்ளவர்களை அழைத்து வந்திருக்கலாமே. ஏன் நிறுத்திவைத்து வந்தீர்கள்?”

வீரர்கள் சொன்னார்கள், ``அவர்களில் ஒருவர் மிக வயதானவர். அவரால் மலையேற முடியாது.”

வியப்பும் குழப்பமுமாக இருந்தது. `யாராக இருக்கும்?’ என்று கபிலர் சிந்தித்துக்கொண்டிருக்கையில் வீரர்கள் சொன்னார்கள், `` `எனது பெயரைச் சொன்னால் அவரே இங்கு வந்துவிடுவார்; போய்ச் சொல்லுங்கள்’ என்று எங்களை அனுப்பிவைத்தார்.”

கபிலருக்கு இன்னும் வியப்பு கூடியது. `நாம் இங்கு இருப்பதை அறிந்து இவ்வளவு உரிமையோடு வீரர்களை அனுப்பிவைத்தது யார்?’ என எண்ணிக்கொண்டிருக்கையில் வீரன் சொன்னான், ``அவரின் பெயர் திசைவேழர்.”

பெயர் சொல்லப்பட்ட கணத்தில் கபிலரின் முகத்தில் ஏற்பட்ட வியப்பைப் பார்த்தபடி கேட்டான் பாரி ``யார் இந்தப் பெரியவர்?’’

அகலத் திறந்திருந்த கபிலரின் கண்கள், ஒளியை உமிழ்ந்தன. வியப்பை உதிர்க்க முடியாமல் திணறியது முகம். கைகளை உயர்த்திக் காட்டி ``வானியல் பேராசான்” என்றார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P85b_1514720944
சொல்லை உச்சரித்த விதத்திலேயே அவரின்பாலுள்ள வாஞ்சையும் மதிப்பும் வெளிப்பட்டன. அதைப் பார்த்து மகிழ்ந்தபடி பாரி சொன்னான், ``அவரை, சிவிகையில் வைத்துச் சுமந்து வரச் சொல்லிவிடலாமா?”

``வேண்டாம் பாரி. அவர் மிக வயதானவர். என் பொருட்டு அவருக்குச் சிறு தொந்தரவுகூட வந்துவிடக் கூடாது. நானே போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன்.”

``சரி” என்று ஏற்றுக்கொண்ட பாரி, ``தொடர்ந்து நான்கு நாள்கள் நடந்திருக்கிறீர்கள், மிகவும் களைப்பாக இருக்கும். ஒருநாள் ஓய்வெடுத்துவிட்டு, பிறகு புறப்படுங்கள்.”

``வந்துள்ளது பேராசான். எனது மனம் எப்படி ஓய்வெடுக்கும் பாரி? தாயைத் தேடும் கன்று எத்தனை மலைகளைக் கடந்தாலும் துவண்டுவிடவா செய்யும்?”

அவரது உணர்ச்சிக்குள் இருக்கும் உண்மையைப் பாரியால் உணர முடிந்தது. `தேக்கன் இருந்தால் உடன் அனுப்பிவைக்கலாம். அவனோ காலம்பனோடு இருக்கிறான்’ என்று சிந்தித்தபடியே உதிரனையே அழைத்துக்கொண்டு போகச் சொன்னான். ``சரி’’ என்று ஏற்றுக்கொண்டு விடைபெற்றுக் குடிலுக்குப் போனார் கபிலர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P85c_1514720963
மறுநாள் காலை எழுந்ததும், ``கபிலர் புறப்பட்டுவிட்டாரா?” எனப் பாரி கேட்டான்.

``அவர் இந்நேரம் ஆதி மலையில் பாதித் தொலைவைக் கடந்திருப்பார்’’ என்றனர் வீரர்கள்.

பிலர் வேட்டுவன் பாறைக்கு வந்தபோது திசைவேழர் வந்து ஐந்து நாள்களுக்குமேல் ஆகியிருந்தது. அவரைக் காணும் பொழுதைக் கனவுபோலச் சுமந்து வந்தார் கபிலர். `எத்தனை ஆண்டுகளாகிவிட்டன? விரிவடங்கா வானத்தின் விந்தைகளைப் பேசி முடியாத நாள்கள்தான் எத்தனை... எத்தனை!! காலம் கரைகிறதா... நகர்கிறதா?’ என முடிவுறாத பேச்சுகளை எண்ணியபடி திசைவேழர் இருந்த குடில் அருகே வந்தார் கபிலர்.

முதன்முறையாகக் கபிலர், வேட்டுவன் பாறைக்கு வந்த அன்று, அவரைத் தங்கவைத்திருந்த குடில் அது. விரிந்து நீண்ட திறளி மரத்தாலான பலகையில் உட்கார்ந்திருந்தார் திசைவேழர். கபிலர் வருவது தொலைவிலேயே தெரிந்தது. அங்கு இருந்தவர்கள் எழுந்து அவரை வரவேற்றனர். அளவுகடந்த மகிழ்வோடு வந்த கபிலர், திசைவேழரை வணங்கி மகிழ்ந்தார். பெருங்கவியை ஆரத்தழுவிக்கொண்டார் திசைவேழர். கண்களில் கசிந்தது பேரன்பு.

கபிலர் வந்தது அறிந்து வேட்டூர் பழையனும் நீலனும் குடிலுக்கு வந்தனர். வந்து ஐந்து நாள்களாகிவிட்டதால், இவர்கள் அனைவரையும் திசைவேழர் அறிவார். ஆனாலும் பெயர் சொல்லிப் புகழ்ந்தார் கபிலர். நீலனை `மகன்போல்’ எனச் சொல்லி அறிமுகப்படுத்தினார். பேசிக்கொண்டிருக்கும்போது பெண் ஒருத்தி சிறு கூடையில் நாவற்பழம் கொண்டுவந்து வைத்தாள். யார் எனப் பார்த்தார் கபிலர். தனக்கு மகர வாழையில் காரத்துவையல் கொடுத்தவள். கபிலரை வணங்கியபடி அதே சிரிப்போடு அந்த இடம் விட்டு நகர்ந்தாள். இப்போது கைக்குழந்தையோடு இருந்தாள்.

திசைவேழர், கூடையில் வைக்கப்பட்ட நாவல் ஒன்றை உண்பதற்காக எடுத்தார். அதைக் கவனித்த கபிலர், ``வேண்டாம். அதை வைத்துவிடுங்கள்’’ எனச் சொல்லி, இன்னொரு பழத்தை எடுத்து அவருக்குக் கொடுத்தார்.

``உண்பதற்கேற்ப கனிந்துதான் இருக்கிறது. இதை ஏன் வேண்டாம் என்கிறீர்?” எனக் கேட்டார் திசைவேழர்.

கபிலர் சொன்னார், ``அது குழிநாவல்; கார்ப்புச் சுவை அதிகமாக இருக்கும். அதன் பிறகு எந்த நாவலைத் தின்றாலும் கார்ப்புச் சுவை போகாது. எனவே, அதை எடுத்தவுடன் உண்ணக் கூடாது. இதோ சிறுநாவல். இதிலிருந்து தொடங்கலாம். இதற்கடுத்து உண்ணவேண்டியது...” என்று சொல்லி, கூடையைக் கிளறியபடியே சற்றே பெருத்த வெண்ணாவலை எடுத்தார். திசைவேழர் வியப்போடு பார்த்தார்.

கபிலர் ஒவ்வொரு நாவலாக எடுத்து திசைவேழருக்குக் கொடுத்துக்கொண்டே அதன் பெயர், தன்மை, சுவைநுட்பம் என, பழத்தின் சிறப்புகளைக் கூறி மகிழ்ந்தார். கூடையில் இருந்த அனைத்துப் பழங்களைப் பற்றியும் அவரால் விளக்க முடிந்தது. அருகில் இருந்த வேட்டூர் பழையனும் நீலனும் வியப்பேறிய விழிகளோடு பார்த்துக்கொண்டிருந்தனர்.

பழத்தை உண்டபடி நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தனர். ``சிறிது நேரம் நடந்துகொண்டே பேசுவோம்’’ எனச் சொல்லிப் புறப்பட்டனர். வலக்கையை ஊன்றுகோலில் அழுத்தி, இடக்கையைத் தோதாகப் பிடித்து அழுத்தி எழுந்தார் திசைவேழர். வலதுகாலை மடக்கி நீட்ட முடியாத நிலையைப் பற்றிப் பேசியபடியே இருவரும் சிறிது தொலைவு நடந்தனர். அவர்கள் தனியாகப் பேச விரும்புவது அனைவருக்கும் புரிந்தது. எனவே, மற்றவர்கள் குடிலிலேயே இருந்தனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P85d_1514720980
கோல் ஊன்றி நடந்தபடியே திசைவேழர் கேட்டார், ``பறம்பில் வாழ்வனுபவம் எப்படி இருக்கிறது?”

``இதுதான் வாழ்வு எனத் தோன்றுகிறது.”

முதல் சொல்லே முழுமைகொண்டிருந்தது. சற்றே திகைப்புற்றார் திசைவேழர். கபிலர் உச்சரிக்கும் சொற்களின் வலிமையை நன்கு உணர்ந்தவர் அவர்.

கபிலர் தொடர்ந்தார், ``இயற்கையைப் பற்றிய மனிதப் பேரறிவு இங்குதான் சேமிக்கப்பட்டிருக்கிறது. வாழ்வு முழுவதும் நான் கற்றுக்கொண்டவற்றை வந்த முதல் நாளே என்னை எடைபோட்டுப் பார்க்கவைத்தவர்கள் பறம்பு மக்கள்.’’

கபிலர் உணர்ச்சி மேலிட்டவராக இருக்கிறார் என திசைவேழருக்குத் தோன்றியது.

``எண்ணற்ற செடிகொடிகளுக்கும் எண்ணிலடங்காத பூக்களுக்கும் இவர்கள் பெயரிட்டு அடையாளப்படுத்தியுள்ளனர். இத்தனை வகையான பூக்களையும் அதன் பெயர்களையும் நாம் எங்கேயும் காண முடியாது” என்று சொன்ன கபிலர், மிக மகிழ்வோடு சொன்னார், ``கடந்த வாரம், நாங்கள் அடர்காட்டுக்குள் மிக முக்கியமான வேலைக்காகச் சென்றுகொண்டிருந்தோம். அப்போது என்னுடன் வந்த பாரி, ஓர் இடத்தில் அப்படியே நின்றான். என்ன காரணம் எனப் புரியாமல் உடன் வந்த அனைவரும் நின்றோம். பாரி எதைக் கவனிக்கிறான் என்பதை, அனைவரின் கண்களும் உற்றுநோக்கின.

பாறையின் மீது வேர்போல தேன் நிறத்தில் படர்ந்து இருந்த சிறு கொடியில் மலர்ந்திருந்தது பூ. அதன் இதழ்கள், காற்றடிக்கும்போது சாய்ந்து எரியும் சுடர்போல இருந்தது. அதைப் பார்த்தபடி பாரி சொன்னான், ``இந்த வகைப் பூவை, இதுவரை நான் பார்த்ததில்லை.’’

``ஆம். இது புதுவகையான செடியாக இருக்கிறது’’ என்றனர் மற்றவர்கள்.

உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த பாரி, ``இந்தப் பூவுக்கு நீங்களே ஒரு பெயர் சூட்டுங்கள்’’ என்றான்.

`பூவுக்கு எப்படிப் பெயர் சூட்டுவது... நிறம்கொண்டா, மணம்கொண்டா... அதன் தனிச்சிறப்பு அறிந்தா?’ என்று எண்ணங்கள் ஓடியபடியே இருந்தன.

கபிலர் உற்சாகத்தோடு பேசுவதைக் கேட்டபடி நடந்துகொண்டிருந்த திசைவேழர், ``என்னதான் பெயர் சூட்டினீர்?” என்றார்.

``அந்தப் பூவைப் பார்த்த கணமே பாரியின் எண்ணத்தில் பெயர் தோன்றியிருக்கும். அந்தப் பெயர், பூவின் வேரிலிருந்து விளைந்ததாக இருக்கும். அதேபோன்ற தோற்றம்கொண்ட பூக்களுக்கு என்ன பெயர் உள்ளது என அனைத்தையும் ஒப்பிட்டு, பெயரைச் சிந்தித்திருப்பான் பாரி. எனவே, நான் உடனடியாக ஒரு பெயரைச் சொல்லிவிட முடியாது அல்லவா? `சிந்தித்துச் சொல்கிறேன்!’ என்று கூறியுள்ளேன்” என்றார்.

``நீங்கள் பெயர்வைக்கும் வரை அது பெயரற்ற `பூ’தானா?”

திசைவேழரின் சொல்லுக்குள் சற்றே எள்ளல் இருப்பதுபோல் கபிலருக்குத் தோன்றியது.

திசைவேழர் தொடர்ந்தார், ``அந்தச் செடி வேறு இடத்திலும் இருக்குமல்லவா? அங்கு அதற்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் அல்லவா?”

``இருக்கலாம். வேறு எங்கேயாவது அந்தச் செடி இருக்கலாம். அதற்கு மனிதர்கள் பெயரிட்டிருக்கலாம்” என்றார் கபிலர்.

தலையை நிமிர்த்தாமலேயே மெல்லிய குரலில் திசைவேழர் கேட்டார், ``அப்படியென்றால், அறியாதவர்களுக்கு நடுவில் இருப்பதை அறிவென்று ஏற்க முடியுமா?”

திசைவேழர் சொல் அதிர்ச்சியைக் கொடுத்தது. ``அறியாதவர்கள் என்று, பறம்பு மக்களையா சொல்கிறார்?’’ நம்ப முடியாமல் கேட்டார், ``எப்படி இப்படியொரு சொல்லைச் சொன்னீர்கள்?”

``நீங்கள் ஒன்றை அறிய நினைக்கும்போது உங்களின் அறியாமையை மற்றவர்கள் அறிந்துகொள்ளுதல் இயற்கைதானே?”

திசைவேழரின் சொற்கேட்டுத் திகைத்து நின்றார் கபிலர். அவருக்குள் இந்தச் சொல் உருத்திரண்டு வர, பூ மட்டும் காரணமல்ல என்பது புரியத் தொடங்கியது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P85e_1514720996
திசைவேழர் சொன்னார், ``இயற்கை பற்றிய மனிதப் பேரறிவு இங்குதான் சேமிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னீர்களே, அது சரிதானா?”

பதற்றம், உடலெங்கும் பரவியதை உணர முடிந்தது. பறம்பே தனது உடலாக மாறிவிட்டதைப்போல் இருந்தது. அதன்மீது சொல்கொண்டு எறிவதைக்கூட உடல் ஏற்க மறுக்கிறது, ஆனாலும் தன்னை நிதானப்படுத்தியபடி கபிலர் கேட்டார், ``சரியில்லை என்று எப்படித் தோன்றியது உங்களுக்கு?’’

``தனது உள்ளங்கையில் இருக்கும் ஒன்றின் ஆற்றலையே மதிப்பிட முடியாதவர்களாக இவர்கள் இருப்பதால்.”

``எதைச் சொல்கிறீர்கள்?”

``தேவாங்கு விலங்கைச் சொல்கிறேன்.”

புதுப் பெயராக இருக்கிறதே என நினைத்த கபிலர், தேவவாக்கு விலங்கைத்தான் இப்படிச் சொல்கிறார் எனப் புரிந்துகொண்டார். ``அதன் ஆற்றலைப் பறம்பு மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்றா சொல்கிறீர்கள்?”
``ஆம். அதன் ஆற்றலை இப்போது வரை பாரியும் பறம்பு மக்களும் புரிந்துகொள்ளவில்லை.”

கபிலருக்குள் விடை தெரியாமல் உருண்டுகொண்டிருந்த கேள்வி, இப்போது திசைவேழரின் சொல் முனையில் வந்து நின்றது. புருவம் உயர்த்தியபடி திசைவேழரைப் பார்த்து ``என்ன அதன் ஆற்றல்?”

``அது கடலை வெல்லும் ஆற்றல்கொண்ட உயிரினம்.”

கபிலர் அதிர்ந்து நின்றார். அவரின் முகக்குறிப்பு அறிந்து திசைவேழர் தேவாங்கின் சிறப்பைப் பற்றிப் பேசத் தொடங்கினார். எப்போது உட்கார்ந்தாலும் வடதிசை நோக்கியே உட்காரும் அதன் ஆற்றலை, மெய்சிலிர்த்தபடி விளக்கினார். ``பொதிகை மலையில் இதைப் போன்ற உடல் அமைப்பைக்கொண்ட விலங்கு உண்டு. ஆனால், அதற்கு இத்தகைய ஆற்றல் இல்லை. இது ஒருமரத்து விலங்கு. நீண்ட நெடுங்காலம் குறிப்பிட்டதொரு மரத்திலே வாழக்கூடியதால், குறிப்பிட்ட திசை நோக்கி உட்காரும் இயற்கையின் அதிசிறந்த ஆற்றலைப் பெற்றுள்ளது” என்றார்.

கபிலர் மெய்மறந்து கேட்டார். இந்த விலங்குக்காகப் பாண்டியன் ஏன் இவ்வளவு முயன்றான் என்ற விடையின்றித் தத்தளித்த கேள்விக்கு, விடை தெரிந்தது. நூற்றாண்டுகளாகத் தொடரும் யவன வணிகத்துக்கு இதுபோன்ற ஒரு விலங்கு எவ்வளவு முக்கியமான பங்காற்றும் என்பதை, கபிலரால் எளிதில் விளங்கிக்கொள்ள முடிந்தது. பாண்டியனின் பெருமுயற்சிக்குப் பின்னிருந்த உண்மை வெளிவந்தது.

நடையை நிறுத்தி அருகில் இருந்த சிறு பாறையில் சாய்ந்து நின்றார் கபிலர். கோல் ஊன்றியபடி நின்றுகொண்டிருந்த திசைவேழர் சொன்னார், ``கடலையும் வானையும் இணைக்கும் பேராற்றல்கொண்ட உயிரினமாக இது இருக்கிறது. இதைப் பெற வேறு வழியே இன்றிதான் திரையர்களை அனுப்பிவைத்தார் குலசேகரபாண்டியன். நீங்கள் பறம்பில் இருப்பது அப்போது தெரிந்திருந்தால் உங்கள் மூலமே முயன்றிருப்பார் பேரரசர்.”
கபிலர் அசைவின்றி உட்கார்ந்திருந்தார். குலசேகரபாண்டியனின் முயற்சி தொடர்வதை அவரால் உணர முடிந்தது.

திசைவேழர் சொன்னார், ``அந்த அரிய உயிரினத்தால் பறம்புக்கு எந்த நன்மையும் கிட்டப்போவதில்லை. அதன் ஆற்றல் வெளிப்படப்போவது கடலில்தான். எனவே, அதைக் கொடுத்து உதவ, பாரிக்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டும்.’’

கபிலரின் அமைதி நீடித்தது.

சிறிது நேரத்துக்குப் பிறகு திசைவேழர் கேட்டார், ``ஏன் பேச்சின்றி நிற்கிறீர்?”

``பாரி எப்போதும் வியப்புக்குரிய தோழன்தான். ஆனால், இப்போது அந்த வியப்பு மேலும் அதிகரிக்கிறது.”

கபிலரின் சொல்லுக்குப் பொருள் புரியவில்லை. கண்களை உருட்டியபடி பார்த்தார் திசைவேழர்.

கபிலர் சொன்னார், `` `தேவவாக்கு விலங்கை இவ்வளவு முயன்று எடுத்துச் செல்லவேண்டிய தேவை என்ன?’ என்று பலமுறை நான் கேள்வி எழுப்பியுள்ளேன். ஆனால், இந்தக் கேள்விக்கு விடையறிய பாரி ஒருபோதும் முயன்றதே இல்லை. எனக்கு அது பெருவியப்பைக் கொடுத்தது. வற்புறுத்திக் காரணம் கேட்டால் சொல்வான், `வேந்தர்கள் எதைச் செய்தாலும் அது அவர்களின் அதிகார நலனுக்கானது; மனிதருக்கும் இயற்கைக்கும் எதிரானது. அதில் கூடுதலாகச் சிந்திக்க என்ன இருக்கிறது?’ என்று. மிக வேகமாக அவன் முடிவுக்கு வந்துவிடுகிறானோ என அப்போது தோன்றியது. ஆனால், இப்போது தெரிகிறது, அவனுடைய சொற்கள் எவ்வளவு ஆழமானவை என்று.”

பாறையை விட்டு எழுந்து, திசைவேழரைப் பார்த்தபடி கபிலர் மேலும் சொன்னார், ``இயற்கையைப் பற்றிய பேரறிவு மட்டுமல்ல, மனிதர்களைப் பற்றிய பேரறிவும் சேகரிக்கப்பட்டுள்ள இடமாக `பறம்பு’ இருக்கிறது.”
தனது சொல்லைத் தனக்கு எதிரானதாக்கிக்கொண்டிருக்கிறார் கபிலர் என்பது திசைவேழருக்குப் புரிந்தது. இருவரும் சிறிது நேரம் பேச்சின்றி நின்றனர்.

நேர்முகம் பார்ப்பதைத் தவிர்க்க எழுந்து நடந்தபடி திசைவேழர் சொன்னார், ``ஆற்றலை அறிவதும் பயன்படுத்துவதும்தான் மனிதனை வெல்லற்கரியவனாக மாற்றியுள்ளன.”

``மனிதன் வெல்லற்கரியவனாக மாறவேண்டியது யாருடைய தேவை?” என்றார் கபிலர்.

சற்றும் இடைவெளியின்றி திசைவேழர் சொன்னார், ``இயற்கையின் தேவை.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P85f_1514721012
இளக்காரமானதொரு சிரிப்போடு கபிலர் சொன்னார், ``இல்லை. ஆசைக்கு அடிமைப்பட்ட கணத்தில் மனிதன் எடுத்துக்கொண்ட உறுதி அது.”

``அது ஆசையல்ல, இயல்பு. இயற்கையின் தன்மை அதுதான். ஆற்றல்கொண்டதை மட்டுமே அது அரவணைத்துக்கொள்ளும். எனவே, மனிதன் ஆற்றலைப் பெருக்கவே வாழ்வை அமைத்துக்கொள்கிறான்.”

``அது, மனிதன் இயற்கைக்குக் கொடுத்துள்ள விளக்கம்.”

``தேவாங்கு விலங்கு கடலிலே இருக்கும்போது கிடைக்கும் பயன் எல்லையற்றது. அதன் ஆற்றல் துலங்குமிடம் அதுதான். அந்த இடத்திலே அதைப் பயன்படுத்துதல் அனைவருக்கும் நன்மை செய்வதுதானே?”

``இதைப் பாரியிடம் கேட்டால், என்ன சொல்வான் தெரியுமா?”

``என்ன சொல்வான்?”

`` `அதைப் பயன்படுத்த மனிதனுக்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்று கேட்பான்.”

திசைவேழரின் நடையின் வேகம் கூடியது. ``இந்தக் கேள்வியை எப்போதோ கடந்து வந்துவிட்டனர் நம் முன்னோர்கள். மலைக்காடுகளில் மட்டுமே விளைந்த தானியக்கதிரின் விதைகளைச் சேகரித்து நதிக்கரையில் நட்டுவைத்தபோதே இதைப் போன்ற கேள்விகளெல்லாம் இறந்துவிட்டன. பயனளிக்கும் இடத்தை நோக்கிப் பாய்ந்து செல்லுதலே வாழ்தலின் விதி” என்று கூறிய திசைவேழர், சற்றே சினத்தோடு குரல் உயர்த்திச் சொன்னார், ``நீங்கள் எழுப்புவது இயற்கையின் மீதான உரிமை பற்றிய கேள்வியல்ல; இயற்கையின் இயங்கு விசையைப் புரிந்துகொள்ளாத அறியாமையிலிருந்து எழும் கேள்வி.”

திசைவேழரின் சினத்தை சற்றே எள்ளலோடு எதிர்கொண்ட கபிலர் கூறினார் ``நீங்கள்தான் முதலிலேயே சொல்லிவிட்டீர்களே, `அறிவுதான் அறியாமையின் அடையாளம்’ என்று.”

சினம் மேலேறாமல் கட்டுப்படுத்த முயன்றார் திசைவேழர். கபிலரை இணங்கவைப்பதுதான் முக்கியமானது. அந்தச் செயலை வெற்றிகரமாகச் செய்தாக வேண்டும். அதற்கு ஒரே வழி அவரை கருத்துகள்மூலம் வெல்வது மட்டும்தான். எண்ணங்கள் உள்ளுக்குள் ஓடியபடியிருக்க திசைவேழர் சொன்னார், ``வளைய மறுக்கும் கிளை ஒடிவதும், வளைந்துகொடுக்கும் கிளை நீண்டு தழைப்பதும்தான் இயற்கையின் அமைப்பு.”

சொற்களின் வலிமை அறிந்த இருவர், எதிரெதிர் திசையிலிருந்து அதைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். தேவாங்கில் தொடங்கி அதைத் தர மறுக்கும் பாரியை நோக்கி உருண்டன சொற்கள். அதை எதிர்கொள்ள, கபிலருக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. ஆனால், இப்படியொரு பணிக்கு திசைவேழர் எப்படி இணங்கினார் என்பதே அவரின் சிந்தனையாக இருந்தது.

``ஒரு தவளை இடும் முட்டையிலிருந்து பல்லாயிரம் தலைப்பிரட்டைகள் உருவாகின்றன. அவை எல்லாம் உயிர்வாழுமேயானால், இந்தப் பூமியில் தவளையைத் தவிர வேறு உயிரினமே இருக்காது. ஒரேயொரு கொக்கு, நாள் ஒன்றுக்கு எண்ணாயிரம் தலைப்பிரட்டைகளை விழுங்கி வாழ்கிறது. இந்த அழிவுகளின் மூலம்தான் இயற்கை சமநிலையைப் பேணுகிறது.”

திசைவேழரின் சொற்களைக் கேட்டபடி கபிலர் அமைதியாக நடந்தார். அழிவுகளின் நியாயத்தைப் பேசத் தொடங்கி, அடுத்து அழித்தலின் அவசியத்தில் வந்து பேச்சு முடியும். திசைவேழர் எதை நோக்கி வருகிறார் என்பதை, கபிலரால் கணிக்க முடிந்தது.

``வலதுகையால் ஊன்றுகோலை இறுகப்பிடித்து இடதுகையால் அழுத்திக்கொடுத்துதான் உங்களால் எழுந்திருக்க முடிந்தது. இவ்வளவு தளர்ந்த நிலையிலும் நெடுந்தொலைவு பயணித்து என்னைக் காண வந்துள்ளீர்கள் எனப் பெருமகிழ்வடைந்தேன். ஆனால், உங்களின் நோக்கம் எனது மகிழ்வை உதிரச்செய்துவிட்டது” என்று சொன்ன கபிலர், சற்றே தயக்கத்தோடு அதேசமயம் உறுதியான குரலில் கேட்டார், ``உங்களுக்கு உடன்பாடற்ற செயலை ஒருபோதும் நீங்கள் செய்ய மாட்டீர்கள். அப்படியிருக்க, எதன் பொருட்டு இந்தச் செயலில் உங்களுக்கு உடன்பாடு ஏற்பட்டது?”

திசைவேழர் சொன்னார், ``சான்றோர் போற்றும் பெருங்கவி பறம்பில் உள்ளான் என்ற பெருமகிழ்வுடனே இங்கு வந்தேன். என் கால்கள் இதனினும் தளர்ந்துபோயிருப்பினும் நான் இங்கு வந்திருப்பேன் அல்லது உன்னால் மலையிலிருந்து இறங்கி வர முடியாத நிலை ஏற்பட்டிருப்பினும் நான் மலையேறி அங்கு வந்திருப்பேன். ஏனென்றால், வாழ்வு முழுவதும் நான் பயணித்த பாதையில் இப்படியோர் ஆற்றல்கொண்ட உயிரினத்தைக் கண்டதில்லை.”

திசைவேழரின் குரலில் உணர்ச்சி மேலேறிக் கொண்டிருந்தது. ``எனது இளம்பருவத்தில் நாடியைத் தூக்கி அண்ணாந்து வானத்தை உற்றுப்பார்க்கவைத்தார் என் தந்தை. அன்றிலிருந்து இன்று வரை வானக்கோடுகளின் ஊடேதான் நான் வளைந்தும் நெளிந்தும் போய்க் கொண்டிருக்கிறேன். ஒளி அண்டங்களின் மடிப்புகளுக்குள் பேதலித்து நின்ற காலங்கள் எத்தனையோ! முன்னோருக்கு முன்னோர் என எத்தனை தலைமுறைகளாக வானியலின் வியப்புகளுக்குள் மூழ்கிக்கிடக்கிறோம். கதிரவனும் விண்மீன்களும் இன்றி மூடப்பட்ட அறைக்குள் நம்மால் திசை அறிய முடியும் என்று ஒருவன் சொன்னால், அவனை `மூடன்’ என்று சொல்லியிருப்பேன். ஆனால், தேவாங்கு என்ற இந்தச் சின்னஞ்சிறு உயிரினம் நம் அறியாமையைத் தகர்த்துவிட்டது. எல்லையில்லாத அகண்ட வானத்தைத் துளையிட்டுப் பார்ப்பதைப்போல இருக்கிறது, அது வடதிசை நோக்கி உட்கார்ந்திருப்பது.

இனி நம் பாய்மரங்களுக்கு, கடலும் காற்றும் பொருட்டல்ல. நடந்துகொண்டிருக்கும் தேவாங்கு உட்காரும் கணத்தில் திசைகள் தாமே வந்து மீகானின் சொல் கேட்க உள்ளன. இந்த ஆற்றல், வேந்தர்களுக்கு மட்டுமல்ல... மனிதர்கள் அத்தனை பேருக்கும் பயனளிக்கப்போகும் ஒன்று. இதை நாம் தவறவிட்டுவிடக் கூடாது. இந்த அறிவின் அவசியத்தை உன்னால் புரிந்துகொள்ள முடியும். மலைமக்கள், வாழ்வின் இயக்கத்தைப் பிடித்து அடுத்த கட்டத்துக்கு நகர முடியாத மந்தநிலைகொண்டவர்கள். நீதான் பாரியிடம் இதை எடுத்துச்சொல்ல வேண்டும். அதற்காகத்தான் வந்தேன்.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 8 P85g_1514721031
நெற்றியில் இருந்த வியர்வையைத் துடைத்தபடி மறுமொழியின்றிக் கேட்டுக்கொண்டிருந்தார் கபிலர்.

வேகம் குறையாமல் திசைவேழர் கேட்டார், ``ஏன் பேச்சின்றி நிற்கிறீர்?”

``நீங்கள் சொல்வது எல்லாமே எனக்குப் புரிகிறது. ஆனால், நான் சொல்வது மட்டும் உங்களுக்குப் புரியவில்லை. நீங்கள் தேவாங்கினால் ஏற்படும் பயனைப் பற்றிப் பேசுகிறீர்கள். அது தேவாங்குக்கான பயன் அல்ல என்பது உங்களுக்குப் புரியவில்லை. உங்களின் பயனுக்காக அதைப் பயன்படுத்த உங்களுக்கு உரிமை இல்லாததைப்போல, அனுமதி கொடுக்கும் உரிமை பாரிக்கும் இல்லை. இழக்கக்கூடிய வாழ்விடத்தில் எந்த உயிரையும் இயற்கை உருவாக்கவில்லை. எனவே, தனது வாழ்விடத்தை ஓர் உயிர் இழப்பது இயற்கையுடனான ஆணிவேரை அறுத்துக்கொள்வதற்கு நிகர். பயன்பாட்டுக் கணக்குகளும் பண்டமாற்றுக் கணக்குகளும் எல்லாவற்றுக்கும் எப்படிப் பொருந்தும்? நாடியைத் தூக்கி வானத்தைப் பார்த்தபடி உங்கள் தந்தை விதைத்த கனவுக்கு விலை சொல்ல முடியுமா உங்களால்?”

கபிலரின் குரல் திடமாக ஒலித்தது. சொற்களைச் செங்குத்தாகக் கீழ்நோக்கித் தள்ள புலவனுக்குத் தெரியும். ஆசானாக மதிக்கும் ஒருவரின் மீது அந்தச் செயலைச் செய்யக் கூடாது என நினைத்தார். ஆனால், எண்ணங்களை மீறிச் சொற்கள் உருண்டன.

``தேவாங்கு மட்டுமல்ல, பாரியும் அப்படித்தான். என்ன விலை கொடுத்தாலும் சினம்கொண்டாலும் வீழ்ந்து பணிந்தாலும் திசை மாற மாட்டான்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


Sponsored content

PostSponsored content



Page 8 of 19 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக