புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10 
4 Posts - 3%
bala_t
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10 
1 Post - 1%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10 
1 Post - 1%
M. Priya
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10 
1 Post - 1%
Kavithas
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10 
296 Posts - 42%
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10 
6 Posts - 1%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10 
5 Posts - 1%
manikavi
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்


   
   

Page 10 of 19 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 19  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 01, 2018 10:06 pm

First topic message reminder :

"வீரயுக நாயகன் வேள் பாரி"

ஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" (அரவான் படத்தின் மூலகதை)  ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P100bnew

"வீரயுக நாயகன் வேள் பாரி" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.. அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்



நன்றிஆசிரியர் : சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., , விகடன்  நன்றி


முன்னுரை

இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P100a

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.

தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.

மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.

பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.

வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.

இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...

Readre இந்த பதிவை விரும்பியுள்ளார்


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 15, 2018 10:06 pm

யிமலையின் முகட்டுக்கு எயினி தலைமையில் அறுவரும் வந்து சேர்ந்தனர். குதிரையை விட்டு எயினி இறங்கினான். வீரர்கள் ஒவ்வொருவராக வந்து இறங்கிக்கொண்டிருந்தனர். `முதலில் மூவரை முகட்டின் பின்புறம் அனுப்பிவைப்போம்’ என்று அவன் நினைத்தபோது முகட்டுக்கு அப்பாலிருந்து ஏதோ ஓர் ஓசை கேட்டது. எதிரிகள் மிக அருகில்தான் இருக்கிறார்கள் என்பதைக் கணித்த எயினி, சட்டென இடுப்பில் இருந்த குறுவாளை உருவினான். 
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83a_1521625550
மற்றவர்களும் ஆயுதங்களை ஏந்திப்பிடிக்க ஆயத்தமாகும்போது, முகட்டின் பின்புறமிருந்த ஓசை மிக வேகமாக நகர்ந்து வருவதுபோலிருந்தது. ‘கண நேரத்துக்குள் எப்படி இங்கே?’ என்று எயினி எண்ணிக்கொண்டிருக்கும்போதே மரத்தின் உச்சிக்கிளையில் இருந்த ஒன்று பெரும் ஊளைச் சத்தத்தோடு பாய்ந்து இறங்கியது. மனிதர்கள் வருவார்கள் என்று புதர்களுக்குள் பார்த்துக்கொண்டிருந்தவன், மரத்தின் மேலிருந்து பாய்ச்சலைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

பாய்ந்த தோகைநாய், குதிரையின் பிடரியைக் கவ்வி ஓர் இழு இழுத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் எயினியின் குதிரை தடுமாறிக் கீழே சாய்ந்தது. எயினி உருவிய வாளோடு அந்த விலங்கை நோக்கிப் பாய்ந்தபோது பீறிட்ட குதிரையின் குருதி அவனது முகத்திலே பீய்ச்சியடித்தது. திகைத்துப்போனவனுக்கு என்ன நடக்கிறது எனப் புரிவதற்கு முன் அடுத்தடுத்து தோகைநாய்கள் மரத்திலிருந்து குதிரைகளை நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்தன.

வீரர்களால் வில்லில் அம்பைத் தொடுக்கவே முடியவில்லை. இதுவரை கேட்டிராத ஊளைச் சத்தத்தோடு இறங்கிக்கொண்டிருக்கும் விலங்குகளை எப்படி எதிர்கொள்வது எனச் சிந்திக்கும் முன், தாக்குதல் முடிவுறும் கட்டத்தை நெருங்கியது. இடுப்பில் இருந்த குறுவாள்கொண்டு, பாயும் விலங்கின் மீது பாய எத்தனித்தனர். அப்போது குதிரைகளைச் சரிவில் இழுத்துத் தள்ளிக்கொண்டிருந்தன தோகைநாய்கள். முன்னும் பின்னுமாக வீரர்கள் அலைமோதியபோது பாய்ந்து இறங்கும் தோகைநாய்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது.

கணநேரத்துக்குள் ஏழு குதிரைகளும் குருதி வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தன. எயினிக்கு, என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பறம்புவீரன், தான் சாக நேர்ந்தாலும் குதிரையைப் பாதுகாப்பாகக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்பது பறம்பின் பழக்கம். ஆனால், ஏழு குதிரைகளின் உயிரும் கண்களுக்கு முன்னால் துடித்துக்கொண்டிருக்க எயினி முடிவெடுக்க ஓரிரு கணங்களே இருந்தன.

இருக்கன்குன்றில் இருந்தபடி எதிரில் இருந்த ஆயிமலையின் உச்சியைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் தேக்கன். திடீரென அங்கே ஓசை கேட்பதை அறிய முடிந்தது. `எதிரிகள் ஏதோ சூழ்ச்சி செய்துவிட்டனர்’ என்று அவன் எண்ணிக்கொண்டிருந்தபோது சரிவுப்பாறை ஒன்றில் குதிரை ஒன்று சரிந்து கீழே விழுவது தெரிந்தது. அதிர்ந்தான் தேக்கன். `பறம்பின் மலையில் குதிரையைச் சரித்து வீழ்த்தும் அளவுக்கு எதிரிகளுக்கு எங்கிருந்து வந்தது வீரம்? ஏதோ சூழ்ச்சியில் நம்மவர்கள் மாட்டிக்கொண்டு விட்டார்கள்’ என்று கணித்து, அருகில் இருந்த நெடுமனை அழைத்தான். ``பதினைந்து குதிரைவீரர்களை அழைத்துக் கொண்டு உடனடியாகப் போ” என்று ஆணையிட்டான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83b_1521625565
நெடுமன், மிகத் திறமையான வீரன். ஆபத்தான கட்டத்தில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வீரர்களில் அவனும் ஒருவன். நெடுமனின் குதிரை கனைத்தபடி பாதை நோக்கிப் பாய்ந்தது.

ட்டாற்றில் யானைப்படையை வழிநடத்திச் சென்றுகொண்டிருந்தான் அரிஞ்சயன். அவன்தான் யானைப்படையின் தளபதி. இந்தப் படையெடுப்பே யானைப்படையை மையப்படுத்தியதுதான். பல்லாயிரம் வீரர்கள் உடன்வந்தாலும் அவர்களை யானைகளுக்கு இணை சொல்ல முடியாது. காடு, யானைகளின் களம். அடர்காட்டில் பழக்கப்படுத்தப்பட்ட போர் யானைகள் ஒவ்வொன்றும் ஒரு பெரும்படைக்குச் சமம். 

பத்து யானைகளை இணைத்து ஒரு வகைமையாகவும் பத்து வகைமைகளை இணைத்து ஒரு தொகையாகவும் பிரித்திருந்தனர். யானையின் மீது இருப்பவன் பாகன், வகைமையின் பொறுப்பாளன் வாகையன். தொகைகளின் பொறுப்பாளன் தளகர்த்தன். இந்த ஐந்து தளகர்த்தர்களும் யானைப்படைத் தளபதி அரிஞ்சயனுக்குக் கட்டுப்பட்டவர்கள். ஐந்து தொகைகளைப் போதிய இடைவெளியில் தனித்தனியாக வருவதுபோல முன்நடத்திக்கொண்டிருந்தான் அரிஞ்சயன்.

இதேபோன்று காலாட்படையும் எண்ணிக்கை வாரியாகப் பிரிக்கப்பட்டிருந்தது. காலாட்படையின் தளபதி கிழானடி வானவன். ``படையின் வலிமை, எண்ணிக்கையில் அன்று; அதன் கட்டுக்கோப்பான செயல்பாட்டில்தான் இருக்கிறது. வலிமையான தாக்குதலை முறையற்று நடத்துவதைவிட, எளிய தாக்குதலை முறையான ஒழுங்கோடு நடத்துவதே எதிரிகளை வீழ்த்தும்” என்பதை ஒவ்வொரு வீரனையும் உணரச்செய்தவன்.

நெடுங்காடர்கள், தம்முடைய மூன்று பிரிவுகளுக்கும் தனித்தனித் தலைமையைக் கொண்டிருந்தனர். மூவருக்கும் பொதுத்தலைவனாகத் துணங்கன் இருந்தான். இந்தப் பெரும்படையெடுப்புக்குச் சோழநாட்டின் தலைமைத் தளபதி உரையன்தான் தலைமையேற்பதாக இருந்தது. ஆனால், பெருஞ்செல்வத்தை நோக்கிய படையெடுப்பால் தானே தலைமையேற்றான் செங்கணச்சோழன்.

நெடுங்காடர்களின் திறமை கண்டு வியக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. காட்டில் அவர்களை வீழ்த்தவோ, வெல்லவோ முடியாது என்பதை உறுதியாக நம்பிய பிறகே செங்கணச்சோழன் போரில் பங்கெடுக்க முடிவுசெய்தான். பேரரசரே நேரில் ஈடுபடும் போரில் படைவீரர்கள் பல மடங்கு ஆற்றலுடன் செயல்படுவார்கள். வெற்றி பற்றிய எண்ணம் உச்சம்கொண்டிருக்கும். வீரர்களின் மனோபலத்தைப் பல மடங்கு அது உயர்த்தியிருக்கும். அதுமட்டுமன்று, பெருஞ்செல்வத்தைக் கைப்பற்ற நடக்கும் போர் என்பதால், வீரர்களுக்கும் அதில் பங்குண்டு. எனவே களைப்பின்றி முன்னேறுவர்.

வட்டாற்றில் திரும்பிய சிறிது நேரத்திலேயே வேந்தனின் அருகில் வந்த தளபதி உரையன் சொன்னான், ``வேற்றுநாட்டு எல்லைக்குள் நுழைந்து இத்தனை நாள்களாகியும் எந்தவிதத் தாக்குதலும் நடக்கவில்லை என்பது பலருக்கும் வியப்பாகவே இருக்கிறது. பறம்பின் வீரர்களுக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பேதுமில்லை. நமது படையின் வலிமைகண்டு மிரண்டுபோயிருப்பர் என்று வீரர்கள் பேசிக்கொள்கிறார்கள்.”

குதிரையில் பயணித்தபடியே உரையனின் சொல் கேட்டு மகிழ்ந்தான் வேந்தன். சிறிது நேரத்துக்குப் பிறகு நெடுங்காடர்களின் தலைவன் துணங்கனை அழைத்துவரச் சொன்னான்.

துணங்கன் விரைந்து வந்துசேர்ந்தான். குதிரையை விட்டுக் கீழிறங்கி வேந்தனை வணங்கினான். ``எதிரிகளைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என, பேச்சைத் தொடங்கினான் செங்கணச்சோழன்.

குதிரையைப் பிடித்துக்கொண்டு நடந்தபடியே சொன்னான், ``அவர்கள் நம்மைப் பல நாள்களாகப் பின்தொடர்ந்து வருகிறார்கள்.”

இயல்பான குரலில் துணங்கன் சொன்னது, பெரும் அதிர்ச்சியாய் இருந்தது.

``எந்தத் திசையில்?” என வேகமாகக் கேட்டான் உரையன்.

``ஆற்றின் இரு கரைகளிலும் பத்துப்பனை உயரத்துக்குமேல்.”

``எவ்வளவு உயரத்தில் வந்தால் என்ன? மேலேயிருந்து தாக்குபவர்களின் ஆயுதங்கள் இருமடங்கு வேகம்கொள்ளும் என்றுதான் அவர்களுக்குத் தெரியும். ஆனால், அதைவிட வேகமாக நம் எறிபொறிகள், ஆயுதங்களை மேல்நோக்கி வீசக்கூடியவை என்பது அவர்களுக்குத் தெரியாதே” என்றான்.

செங்கணச்சோழன் துணங்கனைப் பார்த்தபடி கேட்டான், ``எத்தனை பேர் இருக்கிறார்கள்?”

``களையும் பறவைகள் வெகுதொலைவு செல்வதில்லை. அருகில் இருக்கும் மரங்களிலேயே உட்கார்ந்துவிடுகின்றன. எனவே, எண்ணிக்கை சில நூறுகளாகத்தான் இருக்கும்.”

எதிரிகளின் படைநகர்வைப் பறவைகளை வைத்தே கணிக்கிறான் என அறிந்தபடி ``அவர்களின் திட்டம் என்னவாக இருக்கும் எனக் கருதுகிறாய்?” எனக் கேட்டான்.

``முடிவெடுக்க முடியாத குழப்பமாக இருக்கும்?”

``ஏன்?”

`` `இந்தப் பாதையை எப்படித் தெரிவுசெய்தார்கள்? எதை நோக்கிப் போகிறார்கள்? இந்தக் கொடுங்கோடையிலும் இவ்வளவு பெரும்படைக்கு எப்படி நீராதாரத்தை உருவாக்குகிறார்கள்?’ என எல்லாமே அவர்களுக்கு விடையில்லாத கேள்விகள்தான். விடையில்லாத கேள்விகளோடு போரிடுபவனுக்கு உள்வலிமை இருக்காது. பாரி மிகச்சிறந்த வீரன். எனவே, இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டறியாமல் தாக்குதலைத் தொடங்க மாட்டான்.”

ஒரு கணம் திகைத்துப்போனான் செங்கணச்சோழன். பல்லாயிரம் படை வீரர்களோடு பறம்புக்குள் இத்தனை நாள்களாக ஊடுருவி வந்துவிட்ட நிலையிலும் தன் தளபதி ஒருவன் பாரியின் வீரத்தை வியந்து பேசுவது அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால், நெடுங்காடனைத் தன் சொந்தத் தளபதியைப் போல அணுகிவிட முடியாது. எனவே, உணர்வை வெளிக்காட்டாமல் கேட்டான், ``நீ பாரியைப் பார்த்திருக்கிறாயா?’’
``அருகில் பார்த்ததில்லை. மிகத் தொலைவில் பார்த்திருக்கிறேன்.”

``எப்போது?”

``இன்று.”

செங்கணச்சோழன் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். குதிரை கனைத்து நின்றது. ``காலையிலிருந்து இங்கேதானே இருந்தாய்! அவனை எங்கே பார்த்தாய்?”

சற்றே சிரித்தான் துணங்கன். ``நான் மேல்காடன் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள்.”

உரையன் விரைந்து கேட்டான், ``பத்துப்பனை உயரத்தை நம் எறிபொறிகளால் துல்லியமாகத் தாக்க முடியும். அவன் எந்தத் திசையில் வருகிறான். உடனடியாகச் சொல்.”

துணங்கன் சொன்னான், ``பத்துப்பனை உயரத்தில் வருவது அவன் படைகள் மட்டும்தான். அவன் வருவதோ மலையின் உச்சிமுகட்டில்.”

செங்கணச்சோழனும் உரையனும் சட்டென மலைமுகட்டை அண்ணாந்து பார்த்தனர். கதிரவன் ஒளி, மேல்விளிம்பில் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தது. கூசிய கண்களைச் சிமிட்டியபடி கேட்டனர், ``அங்கு வருவதை இங்கிருந்து பார்த்தாயா?”

`ஆம்’ எனத் தலையசைத்தான் துணங்கன்.

``அவன் பாரி என்று எப்படி முடிவுசெய்தாய்?”

இவ்வளவு பெரும்படையை முழுமையாகப் பார்க்கவும் கணிக்கவும் ஒருவன் எந்த உயரத்தைத் தேர்வு செய்கிறான் என்பதைவைத்தே சொல்லிவிடலாம், அவன் யாராக இருக்கும் என. நான்கு நாள்களாக அவன் மேலும் செல்லாமல் கீழும் இறங்காமல் ஒரே மட்டத்தில் வந்து கொண்டிருக்கிறான்.”

``நான்கு நாள்களாகப் பார்க்கிறாயா?”

``ஆம். அதனால்தான் இன்று முடிவுக்கு வந்தேன், அவன் பாரியாகத்தான் இருக்குமென்று.”

சோழப்படை காலையில் வட்டாற்றில் திரும்பியவுடன் இடப்புறமிருந்த பிட்டனும் வலபுறமிருந்த இரவாதனும் மிகவும் மகிழ்ந்தனர். எவ்வியூர் நோக்கி வந்தவர்கள் திசையறியாமல் மாறிவிட்டனர் என்ற முடிவுக்குப் போயினர். அதுமட்டுமன்று, வட்டாறு பெரும்பாறை அடுக்குகளை அடிநிலமாகக்கொண்டது. எனவே, இவர்களால் அதிகத் தொலைவு செல்ல முடியாது. நீராதாரம் இல்லாமல் படை தவித்து அலையும் நிலை ஏற்படும். அதுவே நமது தாக்குதலுக்கான சரியான நேரமாக இருக்கும். அதற்காகவே பாரி காத்திருக்கிறான் என நினைத்தனர்.

ஆனால், எதிரிகளின் படை வட்டாற்றில் திரும்பியதும் பாரியின் குழப்பம் மேலும் அதிகமானது. `எதிரிகள் எதை நோக்கிச் சென்றுகொண்டிருக் கின்றனர்?’ இந்தக் கேள்விக்குக் கிடைக்கும் விடை, பாரியை உள்ளுக்குள் உலுக்குவதாக இருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83c_1521625593
நெடுமனின் தலைமையிலான படை இருக்கன்குன்றினைக் கடந்து ஆயிமலையின் பாதித்தொலைவுக்குப் போயிருக்கும்போது எதிர்ப்புற மரக்கிளைகளிலிருந்து தோகைநாய்கள் பாய்ந்து இறங்கின. நீள்வாய் நாய்களின் கோரப்பற்களும் பாயும் வேகமும் யாரையும் கணநேரத்தில் நிலைகுலையச் செய்பவை. உச்சிக்கிளையிலிருந்து பாய்ந்து இறங்கிய அவற்றை நோக்கி வாளை உருவியபோது நெடுமன் சரிந்து கீழே கிடந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் மரங்களின் மேலிருந்து இடைவிடாமல் அவை பாய்ந்து கொண்டிருந்தன. அவையிடும் ஊளையின் ஆவேசம் குதிரைகளை மிரளச்செய்தது. குதிரைகளின் கனைப்பொலி பாதியில் அறுபட, எழும் ஊளையின் ஓசை தேக்கன் இருக்குமிடம் வரை எதிரொலித்தது.

பொழுது மங்கிக்கொண்டிருந்தது. ஆயிமலையின் கிழக்குப்புறச் சரிவு பறம்பின் பகுதி. அதில் பாதித் தொலைவுக்கு எதிரிகள் வந்து விட்டார்கள் என்பதைத் தேக்கனால் நம்பவே முடியவில்லை. உடனடியாக முழுக் குதிரைப்படையுடன் அந்த இடம் போக ஆயத்தமானான். வீரர்கள் வேகவேகமாகக் குதிரையில் ஏறிப் புறப்படும்போது உடலெங்கும் குருதிகொட்ட அடர்காட்டுக்குள்ளிருந்து மேலேறி வந்தான் எயினி.

குதிரை புறப்படப்போகும் கணத்தில் காட்டின் அசைவுகளைக் கண்டு நிறுத்தினான் தேக்கன். உள்ளிருந்து எயினி வெளியேறி வந்த காட்சி தேக்கனை உலுக்கியது. ஓடிப்போய் அவன் சரிந்துவிடாமல் பிடித்தான். குற்றுயிராக வந்த எயினி சொன்னான், ``உடனடியாக இங்கு இருக்கும் குதிரைகளைக் காப்பாற்றுங்கள். இங்கு நிறுத்த வேண்டாம். இடப்புறச் சரிவில் இருக்கும் குகைகளில் அவற்றை அடைத்து வீரர்களைப் பாதுகாப்புக்கு நிறுத்துங்கள்.”
தேக்கனோடு இருந்த யாருக்கும் எதுவும் புரியவில்லை. ``போரில் ஈடுபடத்தானே குதிரைகள். அவற்றை ஏன் குகைகளில் அடைத்துக் காக்க வேண்டும்?” எனக் கேட்டான் ஒருவன்.
``பேச நேரமில்லை. புது வகையான விலங்கு ஒன்றை ஏவிவிட்டுள்ளான் சேரன். அவை கணநேரத்தில் குதிரையின் கழுத்தைக் கடித்து இழுத்துவிடுகிறது. நாம் எது செய்தும் அதைத் தடுக்க முடியாது. அது பறக்கும் ஓநாய்போல் இருக்கிறது” என்றான்.

``நீ பயங்கொள்ளாதே! நெடுமன் பதினைந்து குதிரைவீரர்களோடு போயுள்ளான். அவற்றை வெட்டிச் சாய்த்துவிடுவான்” என்று வீரன் ஒருவன் சொல்லி முடிக்கும் முன் எயினி சொன்னான், ``அவற்றில் ஒரு குதிரைகூடத் தப்பிப்பிழைக்காது. உடனடியாக மீதி இருக்கும் குதிரைகளைக் கொண்டு செல்லுங்கள்.”

எயினி சொன்னவுடன் வேறொரு வீரன் ஏதோ மறுசொல் சொல்ல முனைந்தான். ஆனால், தேக்கன் தடுத்துவிட்டான். ``எயினி இவ்வளவு அழுத்தமாகச் சொல்கிறான் என்றால், அதை நாம் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அனைத்துக் குதிரைகளையும் கீழ்ப்புறமிருக்கும் குகைப்புடைவுகளில் அடைத்துக் காவல் இருங்கள். காலாட்படை வீரர்கள் பாதிப் பேர் என்னோடு வாருங்கள். மீதிப் பேர் குதிரைவீரர்களோடு இணைந்து காவல் இருங்கள்” என்று சொல்லிவிட்டு நெடுமன் போன திசையை நோக்கி ஓடத் தொடங்கினான் தேக்கன். மற்ற வீரர்கள் அவனுடன் சேர்ந்து ஓடினர். சிலர் எயினியைத் தூக்கிக்கொண்டு மருத்துவரை நோக்கி ஓடினர். மற்றவர்கள் குதிரையைக் காக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கதிரவன் ஒளி முழுமுற்றாக மங்கியபோது குதிரைப்பாதையில் ஓடிக்கொண்டிருந்தான் தேக்கன். உருவிய வாளோடு வெறிகொண்டு ஓடினர் வீரர்கள். இருக்கன்குன்றின் அடிவாரத்தைக் கடந்து ஆயிமலையில் கால் வைக்கும்போது நெடுமன் தலைமையில் சென்ற வீரர்கள் எதிர்த்திசையில் ஓடிவந்துகொண்டிருந்தனர். பெரும்ஓசையை எழுப்பியபடி நெடுமன் வந்துகொண்டிருந்தான். அவனை நிறுத்தி என்னவென்று கேட்கவேண்டிய தேவை ஏதும் தேக்கனுக்கு இல்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83d_1521625609
இப்போது அவர்களின் முன்னுரிமை குதிரைகளைக் காப்பாற்றுவது. எயினி சொன்ன ஒவ்வொரு சொல்லும் நினைவில் எதிரொலித்தபடி இருக்க, வந்த வழியிலேயே திரும்பி குகைப்புடைவை நோக்கி ஓடத்தொடங்கினான் தேக்கன். வீரர்களில் சிலர் தாக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்யச் சென்றனர். மற்றவர்கள் தேக்கனோடு இணைந்து வேகம்கொண்டனர்.

ஓடிக்கொண்டிருந்த தேக்கனை எட்டிப்பிடித்து நிறுத்தினான் நெடுமன். ஏன் நிறுத்துகிறான் எனப் புரியாமல் தேக்கன் நின்றபோது கையை உயர்த்தி மரத்தின் மேலே காட்டினான் நெடுமன். தேக்கன் அண்ணாந்து பார்த்தபோது இருளுக்குள் கிளைகள் அசைவது மட்டுமே தெரிந்தது. என்னவென்று அவன் கேட்கும்முன் நெடுமன் சொன்னான், ``அவை முன்னோக்கிப் போய்விட்டன.”

அதிர்ந்து நின்றான் தேக்கன். ``என்ன சொல்கிறாய்?”

``ஆம். எயினியைத் தொடர்ந்தே பாதி போயிருக்கின்றன. இவை மறுபாதி.”

``அவற்றை வீழ்த்த என்ன வழி?”

``தெரியவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் கொப்புகளின் வழியே தாவிவிடுகின்றன.”

திமிறி ஓடும் வீரர்களின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி, தானும் நின்றான் தேக்கன். எல்லோரும் திகைத்து நின்றனர்.

வெகுதொலைவு உள்செல்லக்கூடிய குகைகள் மூன்று இருக்கின்றன. மூன்றிற்குள்ளேயும் குதிரைகளை அடைத்து ஆயுதங்களோடு வீரர்கள் காத்திருந்தனர். முன்வரிசையில் உருவிய வாளோடு நின்றனர் எவ்வியூர் வீரர்கள். குதிரைகளின் குருதி வாடையை உணர்ந்தபடி பெரும் ஊளையோடு மரங்களின் மேலிருந்து குகைகளை நோக்கிப் பாயத் தொடங்கின தோகைநாய்கள். வீரர்கள் எய்யும் அம்புகளும் வாள்வீச்சும் அவற்றை குகைகளுக்கு அருகில் நெருங்க முடியாமல் செய்தன. வீரர்களின் ஆவேசக் கூக்குரல் இருளை உலுக்கியது. தோகைநாய்களின் ஊளை ஓசை காடெங்கும் இருந்த பறவைகளை நடுக்குறச்செய்தது. மூன்று குகைகளையும் சுற்றிச் சுற்றி வந்து ஊளையிட்டபடி இருந்தன. குகைவாயில் களில் பந்தங்கள் எரிந்துகொண்டிருக்க, இரவில் குகைகளின் மேற்பாறைகளில் உள்நுழையக்கூடிய பிளவு ஏதாவது இருக்கிறதா என்று இங்கும் அங்குமாகத் தேடிக்கொண்டிருந்தன. நீள்வாய் கொண்டு அவை கடித்திழுக்கும் ஓசை அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

வீரர்களோடு அந்த இடமே நின்ற தேக்கன் ``என்ன செய்யலாம் என்ற தெளிவில்லாமல் குகை நோக்கி நகரவேண்டாம்’’ என்று கூறிவிட்டான். அதை எதிர் கொண்டு தாக்கியவன் நெடுமன்தான். அவனோடு சென்ற பலரும் இன்னும் வந்து சேரவில்லை. என்ன நிலையில் இருக்கின்றனர் என்றுகூடத் தெரியவில்லை. நெடுமனின் கைத்தசைகள் கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தன. உடன் இருந்த வீரன் ஒருவன் இடுப்புத்துணியால் அதைக் கட்டி, குருதி சிந்துவதை நிறுத்த முயன்றுகொண்டிருந்தான். குருதிப்போக்கு அதிகமிருந்ததால் அவனுக்குக் கண் செருகுவதுபோல் இருந்தது.

``அவை கூட்டுணர்வுள்ள விலங்குகள். முழுமுற்றாக அழிக்கும் வரை ஒரு குதிரையைக்கூட குகை விட்டு வெளியேற்ற வேண்டாம்” என்றான் நெடுமன். “சரி” எனச் சொல்லி நெடுமனை மருத்துவர்கள் இருக்குமிடம் நோக்கிக் கூட்டிச்செல்ல உத்தரவிட்டான் தேக்கன்.

நெடுமனை அனுப்பிய பிறகு சிறிது நேரம் சிந்தித்தபடி இருந்தான். எயினியும் நெடுமனும் அவற்றின் தாக்குதலை கணநேரம்கூட எதிர்கொள்ள முடியவில்லை. கூட்டுணர்வுள்ள விலங்குகள் முன்புறம் தாக்கும்போதே பின்புறக் கால்களைக் கவ்வியிழுக்கும் பழக்கம்கொண்டவை; அறிவுக்கூர்மைமிக்கவை. இந்தக் காட்டில் இல்லாத விலங்கினம் இது. இதை இருக்கன்குன்றினைத் தாண்டிப் பறம்புக்குள் செல்ல விட்டுவிடக் கூடாது. இதை முழுமுற்றாக அழித்தல் மட்டுமே முதற்பணி என்னும் முடிவுக்கு வந்தான் தேக்கன்.

அவன் ஆணையிட்டதும் கூவல்குடி வீரன் ஒருவன் மூன்றுமுறை உட்சுழித்து ஓசையை வெளியிட்டான். ஆயிமலையின் வலப்புறக் கணவாயில் நின்றிருந்த உதிரன் படையோடு திரும்பிவர வேண்டும் என்று அதற்குப் பொருள். மூன்று உட்சுழி ஓசை நான்கு பேரின் தொடர் வெளிப்பாட்டின் வழியே உதிரனை எட்டியது. ஓசையின் வழியே வந்த உத்தரவு அவனுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த இரவில் படையோடு திரும்பி வரச்சொல்ல வேண்டிய தேவை என்ன என்று உதிரனுக்கு விளங்கவில்லை.

எதுவானாலும் ஆணையைச் செயல்படுத்துவதே அவனது வேலை என்பதால் மொத்தப் படையுடன் இருக்கன்குன்றின் முகடு நோக்கிப் புறப்பட்டான். இந்த இரவில் இப்படியோர் ஆணை வந்துள்ளது என்றால், ஏதோ ஓர் ஆபத்து அல்லது அவசரமான தாக்குதலாக இருக்க வேண்டும் எனக் கருதி வீரர்களை விரைவுபடுத்தி முன்னேறினான்.

நெடுமனுடன் சென்றவர்களில் இரண்டு வீரர்கள்தாம் சிறிய காயங்களோடு களத்திலே நிற்பவர்களாக இருந்தனர். அவர்களின் வாயிலாக அந்த விலங்கின் தன்மையைப் புரிந்துகொள்ள தேக்கன் முயன்றான். எவ்வளவு குறிவைத்து அம்பு எய்தாலும் கணநேரத்தில் கிளைகளினூடே தாவிச் செல்லும் ஒன்றை வீழ்த்துவதிலிருக்கும் சிக்கலைப் பற்றிப் பேசினர். ஆனாலும் அதற்கு ஒரு வழி இல்லாமலாபோகும் என்று சிந்தித்த தேக்கன், நாகர்குடியினர் இருக்கும் ஊர்களுக்கு வீரர்களை உடனே அனுப்பினான். ``எவ்வளவு விரைவாகப் பறவைநாகங்களைப் பிடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாகப் பிடிக்கச் சொல்லுங்கள். கிடைக்கக் கிடைக்க வீரர்களிடம் கொடுத்து அனுப்புங்கள்” என்றான்.
பறவைநாகங்கள் மரக்கொப்புகளில் வசிப்பவை. எதுவொன்று மரத்தின் மீது அசைகிறதோ அதை நோக்கிக் கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து கவ்வும் ஆற்றல்கொண்டவை. எனவே, அவற்றைப் பிடித்துவர ஏற்பாடு செய்தான். ஆனால், பறவைநாகங் களைத் தேடிக் கண்டறிவதெல்லாம் எளிய செயலன்று. அப்படியே கிடைத்தாலும் ஒன்றிரண்டுதான் கிடைக்கக்கூடும். ஆனால், இங்கு வந்துள்ள நீள்வாய்நாய்களோ எண்ணற்றவை. வேறென்ன வழிகள் இருக்கின்றன எனச் சிந்தித்தனர். பொழுது விடியச் சிறிது நேரம் இருக்கும்போது உதிரனின் படையணி வந்துசேர்ந்தது. நிலைமையை அவனுக்கு விளக்கினர்.

தாக்கும் திட்டம் ஒன்று உருவானது. பொழுது விடிந்ததும் குகைகளைக் காத்து நிற்கும் வீரர்களும் அவற்றுக்கு எதிர்ப்புறமாகக் காட்டுக்குள் நிற்கும் தேக்கன் தலைமையிலான வீரர்களும் ஒரே நேரத்தில் குகைகளைச் சுற்றி மரங்களின் மீதும் பாறைகளின் மீதும் அம்பு எய்தித் தாக்குவோம். ஐந்து வரிசையாகக் குறிப்பிட்ட நேர இடைவெளியில் வீரர்களின் அம்புகள் காற்றைக் கிழிக்கையில், நீள்வாய்நாய்கள் ஒரு கொப்பிலிருந்து மறுகொப்புக்குத் தாவினால்கூட அவற்றால் எளிதில் தப்ப முடியாது” என்றான் தேக்கன்.

திட்டம்  உருவானது. குகைகளின் வாசல்களிலும் காட்டுக்குள்ளும் வீரர்கள் ஆயத்த நிலையில் இருந்தனர். பொழுது விடிந்தது. காடெங்கும் இருக்கும் பறவைகள் ஓசை எழுப்பிக் கொண்டிருந்தன. மரத்தின் மீதிருந்த அவை குகைக்குள் நுழைய முடியாமல் வெறிகொண்டு இங்கும் அங்கும் கொப்புகளின் மீது தாவிக் கொண்டிருந்தன.

மரக்கொப்புகளை நோக்கி அண்ணாந்து பார்த்தபடி நாணேற்றிக் காத்திருந்தனர் வீரர்கள். பாம்பின் சீற்றம் போன்ற ஓசை தேக்கனின் குரல்வளையிலிருந்து வெளிவந்தபோது காற்றெங்கும் அம்புகள் சீறிப்பாய்ந்தன. குறிப்பிட்ட இடைவெளியில் அடுத்தடுத்து எகிறிக் கொண்டிருந்தன அம்புகள். ஊளையின் ஓசை காதைத் துளைத்துக்கொண்டிருந்தது. அம்புகளை எய்து முடித்த பிறகு பார்த்தனர். எந்த நீள்வாய்நாயும் கீழே விழவில்லை. அம்பு தைக்கப்பட்டவைகூட ஓசை எழுப்பியபடியே கொப்புகளில் தாவி வெளியேறித்தான் ஓடின.

இத்தனை நூறு அம்புகளுக்கும் தப்பி அவற்றின் பாய்ச்சல் இருப்பது பேரதிர்ச்சியைக் கொடுத்தது. ஒன்றிரண்டு புதர்களில் விழுந்துகிடக்கலாம் என வீரர்கள் தேடிக்கொண்டிருக்கும்போது தேக்கனும் உதிரனும் மரக்கொப்புகளையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தனர். தாக்குதலின்போது எழுந்த பேரூளையினூடே காடு நடுங்கியது. பறவை நாகங்கள் வந்தாலும் பெரிதாகப் பயன்கிடைக்காது போலத் தோன்றியது.

தாக்குதலின் முதல் நாளே தேக்கன் தலைமையிலான படை இருபதுக்கும் மேற்பட்ட குதிரைகளை இழந்துவிட்டது. மாபெரும் வீரர்கள் நிறைந்த படையணி இது. அப்படியிருந்தும் இந்தப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பைப் பற்றிச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். தங்களாலே நம்ப முடியாத இந்த உண்மையின் மீது நின்றுதான் அவர்கள் அடுத்த கட்டத்தைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது உதிரன் சொன்னான், ``கரும்பாக் குடியின் வீரர்கள் எண்ணற்ற நாய்களைத் தங்களின் குடிலில் வைத்திருந்தனர். அவற்றுள் எதுவும் அவர்கள் கொண்டுவந்ததில்லை. எல்லாம் வந்த இடத்தில் பழக்கியவை. நாயினங்களைப் பற்றிய பல நுட்பங்கள் அவர்களுக்குத் தெரிவதாக நமது மருத்துவர்களும் சொன்னார்கள். நான் உடனடியாகப் போய் ஈங்கையனிடம் பேசிப் பார்க்கிறேன். இந்த வகை நாய்களை எப்படி வீழ்த்துவது என அவன் ஏதேனும் ஆலோசனை சொல்லக்கூடும்” என்றான்.

இப்போதைய நிலையில் இது சிறந்த ஆலோசனை யாகத் தெரிந்தது. உடனடியாக உதிரனை அனுப்பிவைத்தான் தேக்கன். போய்த் திரும்ப ஒரு வாரம்கூட ஆகலாம். ஏனென்றால், நடைபாதையின் வழியாகத்தான் அவன் சென்றாக வேண்டும். அதைத் தவிர வேறு வழியேதுமில்லை. நீள்வாய்நாய்களை அழிக்காமல் ஒரு குதிரையைக்கூட குகை விட்டு வெளியேற்ற முடியாது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83e_1521625624
உதிரன் மூன்று வீரர்களோடு அடர்காட்டை ஊடறுத்து ஓடத் தொடங்கினான். நாகர்குடியைப் பார்க்கப்போனவர்களில் ஓரிருவராவது இன்று பறவைநாகங்களோடு வருவார்களா என்று தேக்கன் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, குகைப்பாறையின் மேல்நிலையில் நின்றிருந்த வீரர்கள் தேக்கனை நோக்கிக் கையசைத்து அழைத்தார்கள். தேக்கன் பாறையின் மீது ஏறி நின்று அவர்கள் கைகாட்டிய திசையில் பார்த்தான்.

உதிரனின் தலைமையிலான படையைத் திருப்பி அழைத்துக்கொண்டதால் பாதுகாப்பற்றி ருந்தது ஆயிமலையின் வலப்புறக் கணவாய்ப்பகுதி. அதன் விளிம்பில் பெரும்படை ஒன்று பறம்பின் காட்டுக்குள் போய்க்கொண்டிருந்தது.

இத்தனை ஆண்டுக்காலப் போர் அனுபவத்துக்குப் பிறகு சிறு எதிர்ப்புகூட இல்லாமல் பறம்புக்குள் நுழைந்தது சேரனின் படை. இரு கைகளிலும் ஏந்திய ஆயுதங்களோடு பேரோசை முழங்க முன் சென்றான் எஃகல்மாடன்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 15, 2018 10:27 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83a_1522148179
சோழப்படை வட்டாற்றில் திரும்பிய கணத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி பாரியின் மனதிலிருந்து இன்னும் உதிரவில்லை. இதுவரை உருவாகாத புதிய கேள்விகள் மேலெழும்பியபடியே இருந்தன. முடிவெடுக்க முடியாமல், குழப்பம் திணறடித்தது. சோழன், எவ்வியூரை நோக்கி வரும் பாதை தெரியாமல்தான் எழுவனாற்றிலிருந்து வட்டாற்றில் திரும்பிப் பயணிக்கிறான் என பிட்டன் உறுதியாகச் சொல்லுகிறான். ஆனால் பாரி அக்கூற்றினை ஏற்கவில்லை. மூலப்படை வருவதற்கு முன்னர் தூசிப்படையினர் தெளிவான அறிதலோடு அப்பக்கம் திரும்பிச்சென்றதை வீரர்கள் உறுதிப்படுத்தினர்.

வட்டாற்றின் வழித்தடத்தை அறிந்துபோகிற ஒருவனை எளிதாக நினைத்துவிட முடியாது. எழுவனாற்றிலிருந்து வட்டாற்றின் கரையில் எட்டுநாள் பயணத்தொலைவில் சிறுகானம் இருக்கிறது. அதன் மறுபுறத்தில்தான் உப்பறை அமைந்துள்ளது. பாழி நகருக்கான அடையாளம் உப்பறையிலிருந்து தொடங்குகிறது. ஆனால் இவையெல்லாம் வெளியுலகத்தைச் சேர்ந்த யாரும் எவ்வகையிலும் அறிந்திடமுடியாத ஒன்று. எனவே இவற்றை அறிந்துதான் சோழன் படைநடத்திக்கொண்டிருக்கிறான் என்று நம்பமுடியவில்லை. அதேநேரத்தில் அவன் மிகத்தெளிவாக எழுவனாற்றிலிருந்து வட்டாற்றில் திரும்பியதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

படை வட்டாற்றில் திரும்பிய முதல்நாள் இரவு பாரியின் மனதில் எண்ணிலடங்காத கேள்விகள் உதித்தவண்ணமிருந்தன. கோடையின் வெக்கையைப் பாறைகள் இரவெல்லாம் உமிழ்ந்தன. அவனது உடலில் வியர்வை அடங்கவேயில்லை. உள்ளுக்குள் எண்ணங்கள் கொப்பளித்தபடியே இருந்தன.

பின்னிரவில் பிட்டன் இருந்த இடம்நோக்கிக் கீழிறங்கினான் பாரி. மற்ற குதிரைவீரர்களை முகட்டின் மீதே பயணிக்கச் சொல்லிவிட்டு இருவீரர்களோடு கீழிறங்கினான். அதிகாலைப் பொழுது விடிகையில் பிட்டனின் படையணிக்குள் வந்து நின்றான் பாரி. எதிர்பாராமல் பாரி வந்து நிற்பது தாக்குதலைத் தொடங்குவதற்காகத்தான் என நினைத்த பிட்டன், அதற்கான வேலையைத் தொடங்க ஆயத்தமானான். ஆனால் பாரியோ, “நான் அதற்காக வரவில்லை. எதிரியை அருகிலிருந்து பார்த்தறியவே வந்தேன்” என்றான்.

“நாம்  தாக்குவதற்குக் காலந்தாழ்த்தக் கூடாது” என வாதிட்டான் பிட்டன். அவனது எண்ணங்களைத் தெரிந்துகொண்ட பாரி உத்தர வேதும் கொடுக்கவில்லை. நகர்ந்து கொண்டிருக்கும் எதிரிகளின் படையணி நோக்கிக் கீழிறங்கிக்கொண்டிருந்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83B_1522148198
அன்றைய நாள் முழுவதும் எவ்வளவு நெருக்கமாகப் போகமுடியுமோ, அவ்வளவு நெருக்கமாக நின்று ஆற்றில் நகரும் படையின் தன்மையைக் கவனித்தான். ஆற்றின் நடுப்பகுதி முழுவதும் வேந்தனின் ஒழுங்கமைக்கப்பட்ட படையணி வந்தது. ஆனால், ஆற்றோரத்தில் வந்துகொண்டிருப் பவர்கள் வேந்தர்களின் படையணியைச் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் மலைமக்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் யார் இவர்கள் என்பதுதான் விளங்கவில்லை.

ஆழ்ந்த சிந்தனையின் வழியே அன்றைய நாள் முழுவதும் நடந்துகொண்டிருந்தான். பொழுது மங்கியவுடன் மீண்டும் முகடுநோக்கி மேலேறத் தொடங்கினான். அப்பொழுதும் பிட்டன் வாதிட்டான். வட்டாற்றில் ஊற்றுநீர் மிகக்குறைவு. அவர்கள் நேற்று தங்கியிருந்த இடத்தில் தோண்டப்பட்ட கிணறுகளில் போதுமான நீரில்லாததால் கிணறுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளனர். எழுவனாற்றில் நாளொன்றுக்கு நான்கு கிணறுகளை வெட்டியவர்கள், நேற்று பத்துக்கும் மேற்பட்ட கிணறுகளை வெட்டியுள்ளனர். தோண்டப்படும் கிணறுகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். அவ்வளவு எண்ணிக்கையில் தோண்டினாலும் இப்பெரும்படைக்குத் தேவையான நீரினை இவர்களால் கண்டறிய முடியாது. யானைகளுக்கும் போதுமான நீர் கிடைத்திருக்காது. இன்றிரவு நிலைமை இன்னும் மோசமாகும். நாளை அனைவரிடமும் முழுமையான சோர்விருக்கும் நாம் தாக்குதலைத் தொடுக்க நாளை இரவு மிகப்பொருத்தமானது” என்றான்.

பாரி மறுமொழியேதும் சொல்லவில்லை. அமைதியின் மூலமே மறுப்பினைச் சொல்லிவிட்டு மேல்நோக்கி நடக்கத் தொடங்கினான். எதிரிப்படையின் ஓரப்பகுதியில் வரும் மலையின மக்களின் உடலமைப்பினைப் பற்றியே மீண்டும் மீண்டும் சிந்தித்தபடியே வந்தான். ‘அவர்கள் பச்சைமலைத்தொடர்ப் பகுதியைச் சார்ந்தவர்கள் அல்லர். அப்படியென்றால் யாரவர்கள்?’ என்று எண்ணியபடியே இருந்தான்.

முள்ளூர்ப் பெரியவர் சொன்ன குறிப்புகள் நினைவுக்கு வந்தன. இரவாதன் சொன்ன அத்தனை செய்திகளையும் சிந்தித்துப்பார்த்தான். உதிரன் பதற்றத்தோடு எவ்வியூர் வந்ததை யோசித்தான். சட்டென அங்கவை சொன்னதாக உதிரன் சொன்ன சொல் நினைவுக்கு வந்தது, “அவர்கள் காதின் மேல்மடல்களில் மூன்று துளையிட்டிருந்தனர்.”

மனதுக்குள் மின்னலின் ஒளி பாய்ச்சுவதுபோல இருந்தது அந்தச் செய்தி. `எவ்வளவு முக்கியமான குறிப்பினை அங்கவை சொல்லியுள்ளாள்! மரத்தின் மீதிருந்து பார்த்ததால் கீழே செல்பவர்களின் காதுமடல்களைத் துல்லியமாகப் பார்க்க முடிந்துள்ளது. நாம் மிகவும் தொலைவிலிருந்து பார்த்ததால் அதனைப் பார்க்கமுடியவில்லை’ என்று நினைத்துக்கொண்டிருந்த பாரியின் மனதில் எதிரிப்படையில் வந்துகொண்டிருப்பது யாரெனப் பிடிபடத் தொடங்கியது. காதுமடல்களில் மேல்நிலையில் மூன்று துளைகளை இடுபவர்கள் மேல்காடர்கள் என்றும் கீழ்ச்சதையில் இரு துளைகளை இடுபவர்கள் கீழ்க்காடர்கள் என்றும், காதின் நடுநரம்பினை ஒட்டிப் பெரிய துளையினை இடுபவர்கள் குறுங்காடர்கள் என்றும் கேள்விப்பட்டுள்ளான். நெடுங்காடர்களை இதுவரை பாரி நேரில் பார்த்ததில்லை. ஆனால், அவர்களைப்பற்றிய எண்ணற்ற கதைகளை வேளிர்குலம் அறியும். அவை அனைத்தும் கடகடவென நினைவுக்கு வந்தன.

வேளிர்குலம் நெருப்பினை அறியவும், வளர்த்தெடுக்கவும், கட்டுப்படுத்தவும் ஆற்றல் கொண்டதைப்போல நீரினைப்பற்றிய பேரரறிவு கொண்டவர்கள் காடர்கள் என்பது நினைவுக்கு வந்தது. `மண்ணுக்குள் இருக்கும் கடுநீரை எப்படித் துல்லியமாக அவர்கள் கண்டறிந்தார்கள்?’ என முள்ளூர்ப் பெரியவர் அன்று எழுப்பிய கேள்விக்கு இன்று விடை கிடைத்தது.

நீரும் நெருப்பும் போல, கிழக்கும் மேற்கும்போல இயற்கையின் அதிஆற்றலை வெளிப்படுத்தும் இரு குடிகள்தாம் வேளிர்களும் காடர்களும். இவர்களுக்குள் எதிரெதிர் நிலை கொண்ட முரண்கள் ஆதியிலிருந்தே உருவாகிவிட்டன. வேளிரோடு பகைமைகொண்டு பழிதீர்க்க எண்ணற்ற சடங்குகளைக் காடர்கள் நடத்துவார்கள் என்பதும் பாரி அறிந்ததே. காடர்களின் கண்ணிற்படாமல் எப்படி அங்கவை தப்பினாள் என்பது இப்பொழுது தான் பெருவியப்பாக இருந்தது. அவர்களின் கண்ணிற்பட்டிருந்தால் எவ்வளவு பெரிய கொடூரம் நிகழ்ந்திருக்கும் என நினைத்தபடி விரைவாக நடந்தான்.

சிறுவயதில் காடறியும் பயணத்தின்போது வடதிசை ஊரொன்றின் கிழவன் சொன்ன சொல் நினைவுக்கு வந்தது, “காடர்களும் கருநொச்சியும் இருக்கும் வரை எந்தப் புதையலையும் மறைக்க முடியாது.”
அது நினைவுக்கு வந்த மறுகணம் குலநாகினியின் வாக்கும் நினைவுக்கு வந்தது. “பறம்பு மக்கள் இருக்கும் வரை பாழி நகரை எவனும் நெருங்க முடியாது.”

சொற்களின் நினைவுகளுக் குள்ளிருந்து மீண்டு வெளிவந்தான் பாரி. அவனது மனதிலிருந்த கேள்விகள் அத்தனைக்கும் விடை கிடைத்தது.

‘சோழன், காடர்கள்மூலம் பாழிநகர் பற்றிய குறிப்பினை அறிந்துள்ளான். இப்பொழுது அதனை நோக்கியே அவன் போய்க் கொண்டிருக்கிறான். கீழ்க்காடர்களே நீர்ச்சுரப்பைக் கண்டறிந்து கிணற்றினை உருவாக்கியுள்ளனர். படையின் இருபுறங்களிலும் நெடுங்காடர்கள் அணிவகுத்து வருகின்றனர். குறுங்காடர்கள் கொடும் நச்சுப் பூச்சிகளைக் கையாளத் தெரிந்த வர்கள். நகர்ந்துகொண்டிருக்கும் இப்பெரும் படையை எளிதில் அழிக்க முடியாது. ஏனென்றால், நெடுங்காடர்கள் அடர்மரக் கொப்புகளை ஒன்றுடனொன்றாகப் பின்னித் தடுப்பரண்களை எளிதாக அமைத்துவிடுவர். நாம் வீசும் அம்பும் ஈட்டியும் அத்தடுப்பரணைத் துளைத்துக்கொண்டு உள்ளே போவது மிகக்கடினம். நெடுங்காடர்கள் இருக்கும் வரை இப்படையைப் பக்கவாட்டிலிருந்து தாக்கி அழிக்க முடியாது. பிட்டன் மிகவும் அவசரப்படுகிறான். இரவாதனோ நாள்தோறும் உத்தரவு கேட்டுக்  குறிப்புகள் அனுப்புகிறான். நீராதாரம் உருவாக்கப்போகும்  சிக்கல் என்னவென்பதை நம்மால் எளிதில் முடிவுசெய்ய முடியாது. சற்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’ என்று எண்ணியபடி உச்சிமுகட்டினை அடைந்தான் பாரி.

சோழப்படை வட்டாற்றில் திரும்பிய ஆறாம்நாள். பொழுது நண்பகலைக் கடந்தது. கதிரவனின் சூடு உச்சங்கொண்டிருந்தது. நெடுங்காடர்களின் தளபதி துணங்கன் யானைப்படையின் நடுப்பகுதியிலிருக்கும் வேந்தரைக் காண வந்திருந்தான். யானையின் மீதிருந்த அம்பாரியில் அமர்ந்து வந்தான் செங்கனச்சோழன். அருகில் குதிரையின் மீது வந்துகொண்டிருந்தான் உறையன். துணங்கன் வந்துள்ள செய்தியை வேந்தனுக்குத் திரை விலக்காமல் மெய்க்காப்பாளன் சொன்னான். சிறிதுநேரத்தில் திரையை விலக்கினான் செங்கனச்சோழன்.

துணங்கன் முறைப்படியான மரியாதையைத் தெரிவிக்கக் குதிரையிலிருந்து கீழிறங்கி நின்றிருந்தான். அம்பாரியிலிருந்து எட்டிப்பார்த்தபடி அதனை ஏற்ற வேந்தன். ``என்ன செய்தி?” எனக் கேட்டான்.

துணங்கன் பதில் சொல்லும்முன் அவனைக் குதிரையின் மீது ஏறும்படி கையசைத்தான் வேந்தன். துணங்கன் குதிரையின் மீதேறிப் பேசும்பொழுது அதனை யானையின் மீதிருந்து கேட்க வசதியாக இருந்தது. ஆனால் இந்தச் செயல், வேந்தன் களைத்துப்போய் உள்ளான் என்பதன் அடையாளமாகவே துணங்கனுக்குத் தோன்றியது. அவன் சொன்னான், “இவ்வாற்றில் நீராதாரம் நாம் எதிர்பார்த்ததைவிட மிகக்குறைவாக இருக்கிறது.”

“என்ன செய்யலாம்?”

பறம்பில் மிகக்கடுமையான பகுதியை நாம் கடந்துவிட்டோம். அவர்களின் மிகப்பெரிய ஊர்கள் இருப்பதெல்லாம் எழுவனாற்றின் பகுதியில்தான். இனி பேராபத்தேதுமில்லை. எனவே நாம் படையைக் கையாள்வதில் சில முடிவுகள் எடுக்க வேண்டும்.”

“என்ன முடிவெடுக்க வேண்டும்?”

யானைப்படையின் ஒரு பகுதியையும் காலாட்படையின் ஒரு பகுதியையும் ஒருநாள் இடைவெளியில் பின்தொடர்வதைப்போல ஏற்பாடுகள் செய்யலாம். அதன்மூலம் நீராதாரத்தைப் பகிர்ந்து கொடுக்க முடியும். படையும் தெளிச்சிகொண்டு முன்னேறும். நம்முடைய தாக்குதல்திறன் எந்தக் கட்டத்திலும் குறையாது” என்றான்.

சற்றே பதறிய உறையன், “இல்லை, அப்படிச் செய்வதன் மூலம் நமது ஆற்றலை நாமே பிரித்தவர்களாகிவிடுவோம். எதிரி தாக்குதல்தொடுக்க வசதியாகிவிடும்” என்றான்.

துணங்கன் சொன்னான், “அப்படிச் செய்யவில்லையென்றால், நாளையே வீரர்கள் சிலர் மயங்கிவிழ நேரிடலாம். போதிய நீரின்றித் தொடர்ந்து வேலைவாங்கப்படும் யானைகளின் நடத்தை எப்படியிருக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியாது. வீரர்கள் மயங்கிவிழத் தொடங்கினால் அது போருக்கான மனநிலையை முற்றாகச் சிதைக்கும்” என்றான்.

“பின்னால் வரும் இரண்டாம் நிலைப்படை வலிமைகுன்றி இருக்குமேயானால் எதிரிகள் அதனைச் சூழ்ந்து தாக்கி அழிப்பர்” என்றான் உறையன்.

நெடுங்காடர்கள் இருக்கும் வரை மலைமேலிருந்து அவர்கள் எறியும் ஈட்டியும் அம்பும் எந்த பாதிப்பினையும் ஏற்படுத்தாது. இப்பகுதியெல்லாம் அடர்காடுகள். ஆற்றங்கரை யோரத்திலிருக்கும் மரத்தொகுதிகளை ஒருபொழுதுக்குள் பின்னல்வலையாக மாற்றிவிட முடியும். எண்ணிலடங்காத மூங்கில் மரங்கள் ஆற்றோரம் இருக்கின்றன. எந்தக் கவலையும் நமக்கில்லை” என்றான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83C_1522148215
சிறிதுநேரம் சிந்தித்த செங்கனச்சோழன், “இருதொகுதி யானைகளையும் ஈராயிரம் வீரர்களையும் இன்றிரவு இங்கேயே தங்கவையுங்கள். முன்னணிப்படை வழக்கம்போல் காலையில் புறப்படட்டும். இரண்டாம் நிலைப்படை ஒருநாள் இடைவெளியில் நம்மைப் பின்தொடரட்டும். அவசரத்தேவை யென்றால்கூட ஒருநாள் நடைத்தொலைவை எளிதில் வந்தடைந்துவிடலாம்” என்றான்.

இருவரும் ஏற்றுக்கொள்ளும் பதிலாக இருந்தது அது. ஆனாலும் துணங்கனுக்கு ஐயம் இருக்கத்தான் செய்தது. இருதொகுதி என்றால் இருநூறு யானைகள்தாம். மீதமுள்ள முந்நூறு யானைகளுக்கு நீர் கிடைப்பது கடினம். எனவே, சமமாகப் பிரிப்பதே சிறந்தது எனத் தோன்றியது. ஆனால், இதற்குமேல் வேந்தனிடம் பேசுவது முறையல்ல என்று தோன்றியதால் துணங்கன் அமைதிகாத்தான். ஆனால், உறையன் சொன்னான் “பின்னணிப்படையின் பாதுகாப்புக்கு நாம் கூடுதல் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.”

“மிகச்சிறந்த தளபதிகளை அங்கே நியமிப்போம்” என்றான் வேந்தன். சரியெனத் தலையாட்டினான் உறையன்.

இரண்டாம் நிலைப்படையில் யானைப்படைக்குக் கச்சனையும் காலாட்படைக்கு ஆழிமார்பனையும் தளபதியாக்கி உத்தரவிட்டான். நெடுங்காடர்களுக்கு யாரைத் தளபதியாக்கலாம் என்று துணங்கனைப் பார்த்துக் கேட்டான் செங்கனச்சோழன்.

துணங்கன் சொன்னான், “முன்னால் செல்கிறவர்களுக்குப் பின்னால் வரும் படையின் மீது ஐயமோ, கவனமோ சிறிதும் இருக்கக்கூடாது. அந்த அளவு அது வலுமிக்க படையாக அறியப்பட வேண்டும். எனவே இரண்டாம் நிலைப்படைக்கு நானே தளபதியாக நிற்கிறேன். முன்னணிப்படையின் நெடுங்காடர்களுக்கு சிவியன் தளபதியாக இருக்கட்டும்” என்றான்.

நெடுங்காடர்கள் சோழர்களுக்காக இப்போரில் பங்கெடுக்கவில்லை. வேளிர்கள்மீது தங்களுக்குள்ள பகையின் காரணமாகவே பங்கெடுக்கின்றனர் என்பதை எத்தனையோ முறை உணர்ந்த செங்கனச்சோழன் இப்பொழுதும் அதனையே உணர்ந்தான்.

திரன் ஈங்கையனை அழைத்துக்கொண்டு ஆறாம்நாள் இருக்கன்குன்றுக்கு வந்து சேர்ந்தான். அவன் வரும்வரை குதிரைகளைப் பாதுகாப்பது பெரும்போராட்டமாக இருந்தது. பகலிரவென ஒவ்வொரு கணமும் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டியிருந்தது. சிறு கவனக்குறைவு ஏற்பட்டால்கூடத் தோகைநாய்கள் குகைநோக்கிப் பாயத் தயாராகிவிடுகின்றன. நாள்கள் செல்லச்செல்ல, பசி அவற்றை வெறிகொள்ளச் செய்தது. குதிரைகளின் சுவை வேறு வேட்டையை நோக்கி அவற்றைத் திரும்ப விடவில்லை. குகைக்குள்ளிருக்கும் குதிரைகளை வேட்டையாட ஒவ்வொரு கணமும் முயற்சி செய்துகொண்டிருந்தன.

குகையைக் காத்துநிற்கும் வீரர்களின் எண்ணிக்கையை இருமடங்கு அதிகப்படுத்தினான் தேக்கன். பறவைநாகங்கள் வந்தும் எவ்விதப் பயனும் இல்லை. தோகைநாய்கள் ஒரே கடியில் அவற்றை இருதுண்டுகளாக்கிவிடுகின்றன. வழிதெரியாமல் திகைத்தபடி குகையைக் காத்துநின்றனர் வீரர்கள்.

ஆறாம்நாள் உதிரனும் ஈங்கையனும் வந்து சேர்ந்தனர். பறம்பில் இல்லாத புதுவகையான விலங்கு என்று அதன் தன்மையைச் சொன்னவுடன் ஈங்கையன் சொல்லிவிட்டான், அதன் பெயர் “தோகைநாய்” என்று. “எவ்விதத் தாக்குதலாலும் அதனை வீழ்த்த முடியாது” என்று சொன்ன ஈங்கையன், “தந்திரத்தால் மட்டுமே அதனைக் கொல்ல முடியும்” என்றான். ஈங்கையனை அழைத்துக்கொண்டு புறப்படும்பொழுதே எல்லாவற்றையும் பேசி அவற்றுக்கான ஏற்பாடுகளையும் செய்தபடியே வந்தான் உதிரன்.

“கரும்புப்பாகு கிடைக்குமா?” எனக் கேட்டான் ஈங்கையன்.

“பறம்பில் கரும்பு இல்லை” என்றான் உதிரன்.

“இனிப்புச்சுவை கொண்ட பாகு வேறென்ன கிடைக்கும்?”

“பனம்பாகும் ஈச்சம்பாகும் கிடைக்கும்” என்றான் உதிரன்.

“எத்தனை பெருங்குடங்களில் பாகு கொண்டுவர முடியுமோ, அத்தனை குடங்களில் பாகினை அவ்விடம் கொண்டுவரச் சொல்லுங்கள்” என்றான் ஈங்கையன்.

வரும் வழியிலேயே எந்தெந்த ஊருக்கு ஆள் அனுப்ப வேண்டுமோ அங்கெல்லாம் ஆட்களை அனுப்பி ஏற்பாடுகளைக் காலம்தாழ்த்தாமல் செய்தான் உதிரன்.

“பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும் பசை என்ன இருக்கிறது?” எனக் கேட்டான்.

“பலவகையான பசைகள் இருக்கின்றன” என்றான் உதிரன்.

“துளிபட்டாலும் பிரிக்கமுடியாதபடி ஒட்டக்கூடிய பசையை ஏற்பாடு செய்யுங்கள்” என்றான். அதற்கும் பொருத்தமான ஆட்களை அனுப்பி இருக்கன்குன்றுக்குக் கொண்டுவந்து சேர்க்கச் சொன்னான்.

“பசை வாடை அடிக்காமலிருக்க சுவைகூட்டிகளை அதனுடன் சேர்க்க வேண்டும்” என்றான். அதற்கும் ஏற்பாடானது.

ஈங்கையன் அவனோடு மூன்றுவீரர்களை அழைத்து வந்தான். அவர்களால் உதிரனைப் போலவோ, பறம்பின் வீரர்களைப் போலவோ வேகங்கொண்டு ஓடமுடியவில்லை. எனவே உதிரனும் சற்று மெதுவாகவே அவர்களுடன் நடக்க வேண்டியதானது.

அவர்கள் ஆறாம்நாள் இருக்கன் குன்றினை வந்தடைந்தார்கள். ஈங்கையன் கேட்டவையெல்லாம் அவன் வரும் முன்னரே வந்துசேர்ந்திருந்தன. அவன் வியந்துபோனான். குகைகாத்து நிற்கும் தேக்கனைக் கண்டு வணங்கினான். நீலனின் மணவிழாவின்பொழுது அவனிடம் நிறைய பேசவேண்டும் என்று தேக்கன் விரும்பியிருந்தான். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமற்போனது.

தேக்கனைக் கண்டதும், “தோகைநாய்களைப்பற்றிச் சொல்வதற்கு எவ்வளவோ இருக்கின்றன. ஆனால், அவற்றை வீழ்த்தும் வழியைப்பற்றி மட்டும் இப்பொழுது பேசுவோம்” என்றான்.

தேக்கனும் மற்றவர்களும் அவன் என்ன சொல்லப்போகிறான் என்பதை ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்தனர்.

“மூன்று குதிரைகளை நாம் இழக்கவேண்டியிருக்கும்” என்றான்.

“இன்னும் மூன்றா?” எனக் கேட்டான் வீரனொருவன்.

“ஆம். மூன்று குகைகளில் குதிரைகளிருப்பது அவற்றுக்குத் தெரியும். எனவே மூன்று குதிரைகள் கட்டாயம் தேவை. காயம்பட்ட அல்லது வயதான குதிரைகளைக் கொடுங்கள்” என்றான்.

சரியெனச் சம்மதித்தனர்.

“தோகைநாயினை வீழ்த்துவதற்கான ஒரே வழி அதனுடைய தோகைதான்” என்றான்.

வீரர்கள் அவன் சொல்வதைப் பெருவியப்போடு கேட்டனர்.

பெருவட்டவடிவில் செடிகொடிகளை நன்றாக விலக்கிக் களம் அமையுங்கள். அவ்விடம் முழுவதும் ஈச்சம்பாகும் இறுக்கிப்பிடிக்கும் பசையும் அவற்றின் வாடை தெரியாது மறைக்கும் அளவுக்குச் சுவையூட்டிகளும் கலந்த கலவையை நன்றாக ஊற்ற வேண்டும். அவ்விடம் முழுவதும் ஊற்றியபின் ஒருகுதிரையை மட்டும் வீரர்கள் சிலர்  அக்களத்தின் நடுப்பகுதிக்குக் கொண்டுசெல்ல வேண்டும். குகை விட்டு வெளிவரும் குதிரையைக் கண்டு தோகைநாய் மின்னல்வேகத்தில் பாய்ந்து வரும். பாகு ஊற்றப்பட்ட வட்டத்தின் நடுவிற்கொண்டுபோய் குதிரையை விட வேண்டும். தோகைநாய்கள் அதன்மீது பாயத் தொடங்கியதும் குதிரையை விட்டுவிட்டு வந்துவிட வேண்டும். எண்ணற்ற தோகைநாய்கள் பாய்ந்துவந்து அவற்றைக் கடித்துக் குதறும். இத்தனை நாள் பசிக்கு ஒரு எலும்பினைக்கூட அவை மிச்சம் வைக்காது.

தோகைநாய்கள் இப்புறமும் அப்புறமும் குதிரைக்கறியை இழுத்து, முன்காலை மடக்கி உட்கார்ந்து, கடித்து உண்ணும்பொழுதெல்லாம் அதனது தோகை பாகுக்கலவையில் முழுமையாகப் புரளும். குதிரையைத் தின்றுமுடிக்கும் வரை அது வேறெதிலும் கவனங்கொள்ளாது. அதன்பிறகு எழுந்து ஓடத் தொடங்கும் பொழுதுதான் தெரியும், வால்பகுதியிலுள்ள தோகையும் அடிவயிற்றுமுடியும் முழுவதுமாக ஒன்றுடனொன்று ஒட்டிக்கிடப்பது. அது எவ்வித் தவ்வும்பொழுது தோகைமுடிகள் சிலிர்த்து விரியாது. வாலின் எடையும் தூக்கித் தாவ முடியாத அளவுக்குக் கனமாக மாறும்.

முதல் தாவலிலே இதனைத் தோகைநாய் உணர்ந்துவிடும். முன்னும் பின்னுமாகத் திரும்பி ஏதேதோ செய்துபார்க்கும். பாகுக்சுவையால் மரக்கிளையில் எவ்விடத்தில் உட்கார்ந்தாலும் எறும்புகளும் பூச்சிகளும் அதனை மொய்க்கத் தொடங்கும். அப்பொழுதுதான் நீள்வாயின் வேட்டை தொடங்கும். தனது கூரிய பற்களைக்கொண்டு திரும்பித்திரும்பி அரிக்குமிடத்தில் கடிக்கத் தொடங்கும். இடப்புறமும் வலப்புறமுமாக வண்டு ரீங்காரமிடுதல்போலச் சுற்றிச்சுற்றி முன்பற்களால் கடித்திழுக்கும். அதன் நீள்வாயின் முன்பற்கள் பின்னுடலை மாறிமாறிக் கீறும். பின்புறப் பிட்டங்களிலும் வாலிலுமிருந்து குருதி கசியத் தொடங்கும். எந்நேரமும் பூச்சிகள் மொய்த்துக்கிடக்க எந்த இடத்தில் நின்றாலும் செவ்வெறும்பும் பாறையெறும்பும் மலையெறும்பும் அதன்மேல் ஏற, பேரலறலோடு அது ஓடத் தொடங்கும். உட்கார முடியாமல் ஓடிக்கொண்டேயி ருக்கும் அது வெகுவிரைவிலேயே ஓட முடியாத்  தன்மை எய்தும்.  மலைமுழுவதும் எதிரொலிக்கும் அதன் ஊளைச்சத்தம் சிறிது சிறிதாகக் குறைந்து இளைப்பின் வழியிலான முனகலோடு அதன் வாழ்வு முடியும்” என்றான் ஈங்கையன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83d_1522148230
இரவு நெருங்கியதும் வேலையைத் தொடங்கினர். குகைக்கு முன்னாலிருந்த செடிகொடிகளை வெட்டி அப்புறப்படுத்தினர். கலவைகள் நன்கு தயாராயின. ஈங்கையன் சொன்னபிறகு  அதில் தேவையை உணர்ந்து எங்கும் கிடைக்காத எழுமுட்பசையையும் தெல்லுக்கொடிப்பசையையும் சேர்த்தனர். இனி அதன் ஒட்டுந்தன்மைக்கு இணையேதும் இல்லை என்றான் தேக்கன்.

இரவானதும் வெளிச்சம் விழாதபடி பந்தங்களைத் திருப்பி வைத்து, கலவைகளைக் கொண்டு வந்து ஊற்றினர். போதும்போதும் என்று சொல்லுமளவுக்கு ஊற்றி முடித்ததும் மூன்றுவீரர்கள் குதிரையைப் பிடித்துக்கொண்டு கலவையை நோக்கி நடந்தனர். குதிரைகள் குகை விட்டு வெளி வருவதறிந்த கணமே தோகைநாய்கள் தமது தோகைசிலிர்க்க, கிளைகளை விட்டு எழுந்தன. நீள்வாய்கள் மெள்ளத்திறந்த பொழுது கால்கள் குதிரையை நோக்கிப் பாய்ச்சலுக்கு ஆயத்தமாயின.

பொழுது நடுப்பகலைக் கடந்தது. பாரியை நோக்கி பிட்டன் மலையேறி மேலே வந்தான். தொலைவிலேயே அவன் வருவதை அறிந்தான் பாரி. பிட்டனின் பதற்றம் நாளுக்கு நாள் கூட்டிக்கொண்டே இருந்தது. நெடுங்காடர்களைப் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தி அடர்காட்டுக்குள் நகரும் ஒரு படையை எளிதில் தாக்கி வீழ்த்திவிட முடியாது என்பதைப் பாரி நன்கு உணர்ந்திருந்தான். ஆனால் பிட்டனோ, எதிரியின் படையில் நெடுங்காடர்கள் இருக்கிறார்கள் என்பதையே அறியவில்லை. எனவே, காலந்தாழ்த்தாமல் உடனே தாக்குதலைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியபடியே இருந்தான். வழக்கமான தாக்குதலால் இவர்களை ஒன்றும் செய்துவிட முடியாது, வேறுவழியைக் கண்டறிந்தால் மட்டுமே தாக்குதலுக்குப் பலன் கிடைக்கும் என்ற சிந்தனையிலேயே தாக்குதலைத் தள்ளிப்போட்டுக்கொண்டு வந்தான் பாரி.

மேலேறிவந்த பிட்டன் சொன்னான், “எதிரி குடிநீர்ப் பற்றாக்குறையின் காரணமாகப் படையை இருகூறாகப் பிரித்துள்ளான். நேற்றிரவு தங்கிய இடத்தை விட்டு இன்னும் ஒரு பகுதிப்படை புறப்படவில்லை. இதுதான் பொருத்தமான நேரம். இன்றிரவு பின்புறப்படையைத் தாக்கலாம்” என்றான்.

“சற்று பொறுத்திருப்போம்” என்றான் பாரி.

பிட்டனால் பாரியின் வார்த்தைகளை ஏற்க முடியவில்லை. ``இதுபோன்ற சிறந்த வாய்ப்பு இனி கிடைக்காமற்போகலாம்.”

“எதனை வைத்துச் சொல்லுகிறாய்?” எனக் கேட்டான் பாரி.

“எதிரிகள் நீர்ப்பற்றாக்குறையைச் சமாளிக்க சரியான உத்தியை வகுத்துவிட்டார்கள். இன்னும் இரண்டு நாள்கள் இதே தன்மையில் அவர்கள் படையை நகர்த்திச் சென்றுவிட்டால், அதன்பின் அவர்கள் வலிமையடைந்துவிடுவார்கள்.”

“எப்படி?”

“இரண்டு நாள் நடைத்தொலைவில் வட்டாற்றின் ஓரமாகச் சிறுகானத்துக்குச் சற்றே முன்னால் குளமொன்று இருக்கிறது. எக்கோடையிலும் நீர்வற்றாத குளமது. துவண்டுபோயிருக்கும் எதிரிகளின் யானைப்படையை அது முழுமையாகத் தெளிச்சிகொள்ளச் செய்துவிடும். நாம் அதற்குள் முந்தியாக வேண்டும்” என்றான்.

பிட்டனின் கூற்று பாரிக்கு வேறொன்றைச் சொல்லியது. சற்றே வியப்போடு, “இக்கோடையிலும் அதில் நீர் இருக்கிறதா?” எனக் கேட்டான்.

“ஆம். வீரர்கள் பார்த்துவந்த பின்னர்தான் உடனடியாக உன்னிடம் சொல்ல மேலேறி வந்தேன்.”

“அப்படியென்றால் அவர்கள் குளம்நோக்கி நகரட்டும். அதுதான் நமக்கான இடம்.”

பிட்டனுக்குப் புரியவில்லை. அவ்விடத்தில் வைத்துத் தாக்கலாம் எனப் பாரி நினைக்கிறானோ என்று தோன்றிய கணத்தில் பிட்டன் சொன்னான், “அது மேலிருந்து தாக்குவதற்கான நிலவமைப்பு கொண்ட இடமல்ல. அவ்விடத்தில் தாக்குதலைத் தொடுத்தால் எதிரியை வீழ்த்த முடியாது.”

“அவ்விடத்தில் மட்டுமல்ல, மேலிருந்து தாக்கும் போர்முறையால் எவ்விடத்திலிருந்து தாக்கினாலும் எதிரியை வீழ்த்த முடியாது.”

‘பாரியா இப்படிச் சொல்வது?’ என்று அதிர்ந்த பிட்டன், “ஏன் அப்படிச் சொல்கிறாய்?’’ என்றான்.

சோழனின் படையை இருபுறமும் அரணெனக் காத்து வந்துகொண்டிருப்பவர்கள் நெடுங்காடர்கள்.

“நெடுங்காடர்களா..?” பிட்டன் ஒரு கணம் உறைந்து மீண்டான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83e_1522148244
“ஆம். அந்த வலிமை இருப்பதால்தான் பறம்புக்குள் துணிந்து இவ்வளவு தொலைவு முன்னேறியுள்ளான் சோழன்.”

பிட்டனுக்கு அடுத்து என்ன கேட்பதெனத் தெரியவில்லை. அவன் அதிர்ச்சிக்குள் மூழ்கிக்கொண்டிருந்தபொழுது பாரி தெளிவுநோக்கி மேலேறிக்கொண்டிருந்தான்.

“குளக்கரைதான் நமது தாக்குதலைத் தொடங்கப்போகும் இடம். வீரர்களின் எண்ணிக்கையைப் பலமடங்கு அதிகப்படுத்த வேண்டும். மீதமிருக்கும் வடதிசை ஊர்கள் நாற்பத்தி மூன்றுக்கும் செய்தியனுப்புங்கள். இருகரைகளிலும் வீரர்கள் குவியட்டும். நாளை மறுநாள் நள்ளிரவில் தொடங்குகிறது நமது தாக்குதல்” என்றான் பாரி.

தாக்குதல் எப்பொழுது என்று கேட்டுக்கொண்டேயிருந்த பிட்டனின் கேள்விக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது. ஆனால், இதுவரை இருந்த வேகமும் தெளிவும் இப்போது குழப்பமாக மாறின.

மலைமுகட்டிலிருந்து கீழே தனது படைநோக்கி வந்தான் பிட்டன். எல்லா ஊர்களுக்கும் செய்திகளைக் கொண்டு சேர்க்க வீரர்கள் புறப்பட்டனர். வலக்கரையில் இருக்கும் இரவாதனுக்கு  மறைகுறிப்புகள்மூலம் செய்தி சென்றுசேர்ந்தது. வீரர்கள் தாக்குதலைத் தொடங்க எல்லா வகைகளிலும் ஆயத்தமாகிக்கொண்டிருந்தனர். பிட்டன் விடையில்லாத கேள்வியோடு இருந்தான். ‘குளக்கரையில் வைத்து என்ன செய்துவிட முடியும்? குளத்துநீரில் நஞ்சுகலந்து யானைகளைக் கொல்லும் உத்தியை, பாரி ஒருபொழுதும் கைக்கொள்ள மாட்டான். வேறு என்னதான் செய்யப்போகிறான்?’

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 15, 2018 10:55 pm

றுநாள் பொழுது விடிந்தது. நக்கவாரத் தீவிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் ஆயிமலையின் உச்சியிலிருந்து இருக்கன்குன்றையே பார்த்தபடி இருந்தனர். கடந்த சில நாள்களாக, குன்றின் மேற்குகையைச் சுற்றியே தோகைநாய்கள் ஊளையிட்டுக்கொண்டிருந்தன. நேற்று நள்ளிரவுக்குப் பிறகு ஊளைச்சத்தம் சற்றே அதிகமாகியது. ஆனால், அதிகாலை தொடங்கி இப்போது வரை அந்தச் சத்தம் பிரிந்து காடெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. தீவுமனிதர்கள் குழம்பிப்போய் இருந்தனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P85b_1522841797
செய்தி உதியஞ்சேரலுக்குச் சொல்லப்பட்டவுடன் அவனும், அமைச்சன் நாகரையரும் ஆயிமலைக்கு மேலேறி வந்தனர். குழப்பத்தில் நின்றிருந்த தீவுமனிதர்களிடம், ``என்ன நிலைமை?” என்று கேட்டான் அமைச்சன். 
``எதிரிகள் தோகைநாய்களை ஏதோ செய்துவிட்டார்கள். அவை அனைத்தும் காடுகளுக்குள் சிதறி ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றைவிடக் கொடிய வேட்டை விலங்கு ஒன்றை ஏவி விட்டுள்ளனர். அதனால்தான் அவை இப்படிச் சிதறி ஓடுகின்றன. இனி அவற்றால் பலன் கிடைக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது.”

பதில் கேட்டு உதியஞ்சேரல் உறைந்து நின்றான். ``அப்படியென்றால், எதிரிகள் குகைகளுக்குள் இருக்கும் குதிரைகளை வெளியில் கொண்டுவந்துவிடுவார்களா? முழு வேகத்தோடு அவர்களின் தாக்குதல் தொடங்கிவிடுமா?”

தீவுமனிதர்கள் மறுமொழியின்றி நின்றனர்.

``எஃகல்மாடன் பறம்புக்குள் நுழைந்து ஐந்து நாள்கள் ஆகிவிட்டன. நமது திட்டப்படி வலதுபுறக் கணவாயின் வழியாகத் துடும்பனின் தலைமையிலான படை வந்து சேரும் என்ற நம்பிக்கையில் போய்க்கொண்டிருக்கிறான்.”

நாகரையரின் வார்த்தை காதில் விழுந்துகொண்டிருந்தது. ஆனால், அதைக் கவனிக்கும் நிலையில் உதியஞ்சேரல் இல்லை. பறம்பின் உட்காடுகளுக்குள் தனித்துவிடப்பட்ட எஃகல்மாடனின் படை என்னவாகப்போகிறது என்பது அவனது மனக்கண்ணில் தெரிந்துகொண்டிருந்தது. 
 
இரண்டாம் நாள் மாலை நேரம் நெருங்கியபோது குளம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது சோழனின் யானைப்படை. அதன் தளபதி அரிஞ்சயன் அளவற்ற மகிழ்வில் இருந்தான். வட்டாற்றில் திரும்பியதிலிருந்து யானைகளுக்குப் போதுமான நீர் கிடைக்கவில்லை. நிலைமையை எப்படிச்  சமாளிக்கப்போகிறோம் எனத் தெரியாமல் திணறிக்கொண்டிருந்தபோதுதான் குளம் இருப்பது பற்றிய செய்தி வந்தது. அதன் பிறகு நெடுங்காடர்கள் தளபதி சிவியன் நேரில் போய்ப் பார்த்தான். குளத்துநீரில் நஞ்சேதும் இல்லை என்று உறுதிப்படுத்திய பிறகுதான், அதை நோக்கி யானைகளைச் செலுத்த அரிஞ்சயன் அனுமதியளித்தான்.

இந்தப் படையெடுப்பே யானைப்படையை மையப்படுத்தியதுதான். அடர்காடுகளில் காட்டுமனிதர்களை எதிர்கொள்ள, யானைப்படையை மையப்படுத்திய போர் உத்திதான் வெற்றியைத் தேடித்தரும். அதுவும் அரிஞ்சயன் போன்ற அனுபவமேறியவர்களின்கீழ் இயங்கும் யானைப்படை, வெற்றியை எளிதில் ஈட்டும்.

சோழர்களின் படைத்தொகுப்பில் இருந்த மொத்த யானைகளில் சரிபாதிக்கும் குறைவான யானைகளைத்தான் இந்தப் படையெடுப்புக்குத் தேர்வுசெய்தான் அரிஞ்சயன். சிறந்ததொரு போர்யானை, தந்தங்களைக்கொண்டு பதினான்கு முறைகளில் தாக்கும் பயிற்சியைப் பெற்றிருக்கும்.

முகத்துக்கு நேராகத் தந்தத்தைக் குத்திச் செருகுவது, குறுக்காகக் கொடுத்துக் குத்தித் தூக்குவது, இரு பக்கங்களிலும் இரு தந்தங்களால் குத்துவது, எதிர் யானையின் தந்தவட்ட உதடு நோக்கிக் குத்துவது, பக்கவாட்டில் சாய்த்துக் குத்துவது, பக்கங்களில் நேராகக் குத்துவது, கண்ணிமைக்கும் நேரத்தில் துதிக்கையின் நடுவில் குத்தித் தூக்குவது, எதிர் யானையின் தலையைக் குறுக்கே பிடித்து ஒரு தந்தத்தால் குத்துவது, கோபத்தோடு எதிர் யானையின் திட்டாணியில் அடித்திழுத்து தந்தத்தைச் செருகுவது, உடலைப் பின்சுற்றிப் பின்பாய்ந்து குத்துவது ஆகியன உள்ளிட்ட பதினான்கு வகையான தந்தத் தாக்குதலில் தேர்ந்த யானைகளை மட்டுமே இந்தப் படையெடுப்பில் பங்கேற்கச் செய்தான் அரிஞ்சயன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 Vel_1522908612
`அவ்வளவு சிறந்த போர்ப் பயிற்சியுடைய யானைகளை, கொடும்வெக்கையில் போதிய நீரின்றித் தொடர்ந்து நடக்கவைத்துக்கொண்டிருக்கிறோமே!’ என்று கவலைகொண்டிருந்தவன், குளம் கண்டு கவலை நீங்கினான். முதலில், ஐந்து வகைமையர்களின் தலைமையிலுள்ள ஐம்பது யானைகளை நீர் அருந்த அனுப்பினான். நீர் உறிஞ்சும் ஓசையிலே அவற்றின் தாகத்தை அறிய முடிந்தது. அதேபோன்று ஐந்து ஐந்து வகைமையரின் தலைமையில் குளம் நோக்கி ஐம்பது ஐம்பது யானைகளாக அனுப்பினான் அரிஞ்சயன்.

பொழுது மங்கி இருள் கூடும் வரை யானைகள் அணிவகுத்துப் போய் நீர் அருந்தித் திரும்பிக்கொண்டிருந்தன. ஏற்கெனவே வகுக்கப்பட்ட ஒழுங்கின் அடிப்படையில் அவை வட்டாற்றில் நிலைகொண்டன.
நான்கு காதத்தொலைவுக்கு நீண்டு கிடக்கும் இந்தப் பெரும்படையின் இரு பக்கங்களும் மலைக்குமேல் பறம்புவீரர்கள் தாக்குதலுக்கு ஆயத்தநிலையில் இருந்தனர். பறம்பின் வடதிசை ஊர்கள் அறுபத்தேழிலிருந்தும் வீரர்கள் திரட்டப்பட்டுவிட்டனர். அவர்களுக்கான ஆயுதங்களும் வந்துசேர்ந்துவிட்டன. ஆற்றின் இருபுறங்களும் சரியான இடைவெளியில் தாக்குதலுக்கான துல்லியமான உத்தி வகுக்கப்பட்டிருந்தது. இவ்வளவு பெருந்தாக்குதலை இதுவரை பறம்புமக்கள் நடத்தியதில்லை.  இரவாதன், இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தான்; பாரியின் உத்தரவு கிடைத்த கணம் வட்டாற்றில் பெருக்கெடுக்கப்போகும் குருதி வெள்ளத்தைக் காணத் துடித்துக்கொண்டிருந்தான்.

பிட்டனின் குழப்பம், இந்தக் கணம் வரை நீங்கவில்லை. `சோழப்படையின் கரையோரப் பகுதிகளில் நிற்பவர்கள் நெடுங்காடர்கள் என்பது பாரிக்கும் பிட்டனுக்கும் மட்டுமே தெரியும். நாம் எறியும் அம்பும் ஈட்டியும் சரிபாதிதான் அவர்களைக் கடந்துபோய்த் தாக்கக்கூடியதாக இருக்கும். அப்படியிருந்தும் தாக்குதலுக்குப் பாரி ஆயத்தமாகியுள்ளான் என்றால், தெளிவான உத்தியை வகுத்துவிட்டான் எனப் பொருள். அந்த உத்தி, குளத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. என்ன அது?’ என்று விடை தெரியாத கேள்வியோடு உத்தரவுக்காகக் காத்து நின்றான் பிட்டன். ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மரங்கள் தம்முடைய கிளைகளில் எண்ணிலடங்கா வீரர்களைச் சுமந்தபடி சிலிர்த்து நின்றன. 

ஆறாவது முறை ஐந்து வகைமையரின் தலைமையில் ஐம்பது யானைகளை அனுப்பியபோது, குளத்துநீர் ஏறக்குறைய வற்றி, தரை தொட்டுக்கிடந்தது. ஆனாலும் யானைகளின் துதிக்கைகள் உறிஞ்சியெடுத்தன. எல்லா யானைகளும் நீர் அருந்தி முடிக்கும் வரை அரிஞ்சயன் குளக்கரையிலே நின்றிருந்தான். கடைசி வரிசையில் வந்த யானைகளும் குளம் விட்டு அகன்றன. அரிஞ்சயன், அளவற்ற மகிழ்வடைந்தான். இனி பிரச்னையேதும் இருக்காது. சமாளித்துவிட முடியும் என்ற நம்பிக்கை உறுதியானவுடன் அதை வேந்தனிடம் தெரிவிக்க, குதிரையில் விரைந்தான்.

படை அணிவகுப்பில் யானைப்படையைக் கடந்து காலாட்படை தொடங்கும் இடத்தில் செங்கனச்சோழனுக்கான கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. ஆற்றின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த அந்தக் கூடாரத்தைக் கவசவீரர்கள் காத்து நின்றனர். உள்ளே வேந்தனுக்கு உணவு பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தது. கூடாரம் வந்த அரிஞ்சயன், உணவு முடியட்டும் எனக் காத்து நின்றான். 

அணிவரிசையின் முன்புறம் நின்றிருந்த யானைகளிடமிருந்து சற்றே வேறுபட்ட ஒலி எழுவதைக் கேட்க முடிந்தது. `போதுமான அளவு நீர் குடித்த தெளிச்சியில் எழுப்பப்படும் ஒலியிது’ என எண்ணியபடி வேந்தனுக்காகக் காத்திருந்தான் அரிஞ்சயன். இதைவிடப் பேரொலிகொண்ட யானைப் பிளிறலை எதிர்பார்த்து மலையின் மேல் காத்திருந்தான் பாரி. அவனைச் சுற்றி நின்றிருந்த பன்னிரு வீரர்களும் அவன் சொல்லப்போகும் உத்தரவை, பிட்டனின் தலைமையிலான இடதுபுறப் படைக்கும் இரவாதனின் தலைமையிலான வலதுபுறப் படைக்கும் தெரிவிக்கக் காத்துக்கொண்டிருந்தனர்.

நிலவற்ற வானில் இருள் அப்பிக்கிடக்கும் இந்தப் பொழுதில், ஒலியின் மூலம் மட்டுமே ஆற்றின் எதிர்த்திசையில் இருக்கும் இரவாதனுக்கு மறைகுறிப்பைக் கடத்த முடியும். பிட்டனும் பாரியும் ஒரே திசையில்தான் மேலும் கீழும் நிற்கின்றனர். எனவே, இவர்களுக்கு ஓசையின் மூலம் மறை குறிப்பைக் கடத்திவிடலாம். எல்லா ஏற்பாடுகளும் ஆயத்தநிலையில் இருந்தன. பாரியோ, வட்டாற்றில் நிறுத்தப்பட்டிருக்கும் யானைப்படையின் பிளிறல் ஓசையை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

இவ்வளவு சிறந்ததொரு வாய்ப்பு கிடைக்கும் எனப் பாரி எதிர்பார்க்கவில்லை. இன்னும் சில நாள் பயணத்துக்குப் பிறகுதான் அவன் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தான். சிறுகானத்தைக் கடந்து உப்பறைக்குப் போகும்வழி மிகக் குறுகிய கணவாய் அமைப்பைக்கொண்டது. அந்த இடம், நெடுங்காடர்களால் தடுப்பரணையோ, வலைப்பின்னலையோ உருவாக்க முடியாது. முழுமையான பாறைப் பிளவு அது. பிளவின் மேலிருந்து தாக்குதல் தொடுத்தால் படையின் முன்புற அணியை மிகக் குறுகிய நேரத்தில் முழுமுற்றாக அழிக்க முடியும். எதிர்பாராத அந்தத் தாக்குதல் அவர்களின் கட்டுக்கோப்பை எளிதில் சிதறடிக்கலாம்.
நெடுங்காடர்களுக்குத்தான் காடு பற்றிய அச்சமிருக்காது. ஆனால், சோழப்படையினர் அனைவருக்கும் காட்டில் பார்க்கும் ஒவ்வொரு காட்சியும் அச்சத்தை உருவாக்கும். `எங்கெங்குமிருந்து மேலெழும் அம்புகளாலும் ஓசைகளாலும் முழக்கங்களாலும் அவர்களின் உறுதியை முற்றிலுமாகச் சிதைக்கலாம். அதன் பிறகு பறம்புவீரர்கள் சூறையாடலைத் தொடங்கலாம்’ என்றுதான் திட்டமிட்டிருந்தான் பாரி. ஆனால், பிட்டன் நீர்வற்றாக் குளம் ஒன்று இருப்பதைப் பற்றிய செய்தியைச் சொன்னவுடன் தனது திட்டத்தை மாற்றிக்கொண்டான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P85c_1522841832
நீர்ப்பசை இருக்கும் பாறைப் பிளவுகளிலும் மரச் செதில்களிலும் சங்கு அட்டைகள் இருக்கும். மற்ற அட்டைப்பூச்சிகளுக்கு, குருதியை உறிஞ்சும் வாய்ப்பகுதி ஒன்றுதான் உண்டு. ஆனால், சங்கு அட்டைப்பூசியானது விரிசங்கு வடிவிலானது. அதன் எல்லா முனைகளிலும் குருதி உறிஞ்சும் வாய்கள் உண்டு. மிக அரிதான உயிரினமான இது, மறையாற்றின் பகுதிகளில் உள்ள மர இடுக்குகளிலும் பாறை இடுக்குகளிலும் அதிகம் இருக்கும். அதனாலேயே மக்கள் அந்தக் காட்டுக்குள் போக மாட்டார்கள். ஆனால், இப்போது சங்கு அட்டைகள்தான் மிக அதிகமாகத் தேவைப்பட்டன.

குளம் பற்றிய செய்தியை அறிந்தவுடன் மறையாற்றின் பகுதியில் இருக்கும் சங்கு அட்டையைச் சேகரிக்க, கட்டையர்களுக்குக் கமுக்கமாக உத்தரவிட்டான் பாரி. ஆறு ஊர்க் கட்டையர்களும் மறையாற்றின் அடர்காட்டுக்குள் இறங்கினர். எண்ணற்ற சுரைக்குடுக்கையில் சங்கு அட்டையை நாள் முழுவதும் சேகரித்தனர். மருத்துவர்கள் தந்த செவ்வெண்ணெயைக் கைகளில் தேய்த்துக்கொண்டுதான் அவற்றைப் பிடித்தனர். அப்படியும் பிடித்தவர்களின் கைகள் எங்கும் குருதி கொட்டியபடியே இருந்தது.

அன்று இரவே குடுவையில் இருந்த சங்கு அட்டைகள் முழுவதையும் அந்தக் குளத்துக்குப் போய்ச் சேர்த்தனர். குளம் முழுக்க, எல்லாப் பகுதிகளிலும் பரவுமாறு சங்கு அட்டைகளைக் கொட்டிவிட்டுச் சுரக்குடுக்கையை எடுத்துவந்துவிட்டனர். சங்கு அட்டைகள் நீரின் அடிவாரப் பாறைகளிலும் மண்ணோடும் நீர்மீது மிதக்கும் செத்தைகளிலும் அப்பிக்கிடந்தன. சோழர்களின் தூசிப்படை மருத்துவர்களும் குறுங்காடர்களும் குளத்துநீரில் நஞ்சு கலக்கப்பட்டுள்ளதா எனச் சோதித்துப் பார்த்துவிட்டு, ``நஞ்சு ஏதும் கலக்கவில்லை. யானைகள் நீர் அருந்தலாம்’’ என்று கூறினர்.

அதைத் தொடர்ந்து யானைகள் குளத்தடிக்கு வந்து நீள்துதிக்கையால் நீரை உறிஞ்சின. நீரின் மேற்புறமும் அடிவாரத்திலும் இருந்த சங்கு அட்டைகள், உறிஞ்சப்படும் நீரினூடே துதிக்கைக்குள் போய்விட்டன. முதலில் வந்து நீர் குடித்த யானைகளின் துதிக்கைக்குள் ஓரிரு அட்டைகள் உள்ளே போயின. அடுத்தடுத்து யானைகள் வந்து நீரை உறிஞ்சியதும் அடிவாரத்தில் ஒட்டிக்கிடந்த அட்டைகள் கணக்கில்லாத எண்ணிக்கையில் துதிக்கைகளுக்குள் போயின.

உள்ளே போய்த் துதிக்கையின் சதைக்குள் ஒட்டிய சங்கு அட்டைகள், குருதியை உறிஞ்சத் தொடங்கியபோதுதான் விளைவு வெளிப்படத் தொடங்கியது. கூடாரத்துக்குள் உணவு உண்டு முடித்த செங்கனச்சோழனிடம் ``யானைகள் அனைத்தும் நன்றாக நீர் அருந்திவிட்டன. இனி நமக்குக் கவலைவேண்டாம்’’ என்று அரிஞ்சயன் சொல்லிக் கொண்டிருந்தபோது யானைகளின் பிளிறல் தொடங்கியது. ஒன்று மாற்றி ஒன்றாக இருளின் திசைக்குள்ளிருந்து பிளிறல் ஓசை மேலேறி வந்தது. அரிஞ்சயன் கூடாரத்துக்குள்ளிருந்து வேகமாக வெளியில் வந்தான். ஒவ்வொரு சங்கு அட்டைக்கும் ஆறு முனைகளில் ஆறு வாய்ப்பகுதிகள் உண்டு. ஆறும் ஒருசேரக் குருதியை உறிஞ்சும்போது அந்த இடத்தில் சதையே பிய்த்துக்கொண்டு வருவதுபோல இருந்தது. அதுவும் துதிக்கைக்குள் இந்தக் குடைச்சல் தொடங்கியதும் யானைகள் தலையை மறுத்து மறுத்து ஆட்டி, துதிக்கையை இங்குமங்குமாக வீசிச் சுழற்றின.

சிறுசிறு சலசலப்புகள் யானைப்படைக்குள் உருவாகத் தொடங்கியபோது பாகன்கள் எல்லோரும் யானைகளை அமைதிப் படுத்தி, நின்ற நிலையிலிருந்து உட்காரும் நிலைக்கு அமர்த்திவைக்க முயன்றனர். அப்போதுதான் இடது மூலையில் இருந்த யானை ஒன்று பெரும்பிளிறலோடு துதிக்கையைத் தூக்கி இரு பக்கங்களும் அடித்தது. பக்கத்தில் இருந்த யானைகள் மிரண்டு விலகின. உடனே அதன் பாகன் அதன் அருகே சென்று அதை அடக்க முற்பட்டபோது சற்றும் எதிர்பாராமல் சுழற்றி வீசப்பட்டான். 

யானைகளுக்கு என்ன நடக்கிறது என்ற கவனம் சில கணம்தான் இருந்தது. அதற்குள் பிளிறலின் ஓசை அங்குமிங்குமாகப் பல இடங் களிலிருந்து மேலெழுந்தது. யாருக்கும் எதுவும் புரியவில்லை. பாகன்கள் எல்லோரும் யானைகளின் மீதேறி அவற்றைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தனர். அங்குசத்தால் அடித்தும் தலையில் ஊன்றிக் குத்தியும் மத்தகத்தில் வைத்து இழுத்தும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். ஆனால், அவையெல்லாம் சிறிது நேரம்தான் நடந்தன.

வேந்தனின் கூடாரத்திலிருந்து படையின் முன்வரிசை நோக்கிக் குதிரையில் விரைந்து கொண்டி ருந்தான் அரிஞ்சயன். ஏதோ ஒரு யானைக்கு மதம்பிடித்துவிட்டது என்றுதான் அவன் நினைத்தான். ``அந்த மதயானையை அப்புறப் படுத்துங்கள். முடியவில்லை என்றால், போர்வாள் கொண்டும் தந்த ஈட்டிகொண்டும் குத்திச் சரியுங்கள்” என்று ஓசையெழுப்பிய படி விரைந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் இருளுக்குள்ளிருந்து வீசப்பட்ட பாகன் ஒருவன் அரிஞ்சயனின் குதிரைமீது வந்து விழுந்த வேகத்தில் அடியோடு சரிந்தான் அரிஞ்சயன்.

யானைகள் உள்மூக்கில் ஏற்படும் அரிப்பும் எரிச்சலும் தாள முடியாமல் துதிக்கையை முன்னும் பின்னுமாக வெறிகொண்டு வீசித் தாக்கத் தொடங்கிய கணத்தில் கட்டுக்கோப்புகள் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன. நிலைமையின் விபரீதத்தை உணரும் முன்பே நூற்றுக்கணக்கான யானைப்பாகன்கள் அடித்து, மிதித்து, நசுக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். வீரமுண்ட வாத்தியமும் பேரிகையும் முழங்கி நிலைமையைக் கட்டுப்படுத்த, படைக்காவல்வீரர்கள் சிலர் முயன்றனர். ஆனால், யானைகளின் பிளிறலுக்கு நடுவே இந்தக் கருவிகளின் ஓசையேதும் மேலேறவில்லை. கீழே விழுந்த அரிஞ்சயன் எழுந்தபோது முன்புறப் படையின் கட்டுக்கோப்பு மொத்தமும் சிதைந்திருந்தது.

என்ன நடந்தது என்பதைச் சிந்திக்க கணநேரம்கூட யாருக்கும் இல்லை. மூன்று தளகர்த்தர்தர்களின்  உத்தரவின் கீழிருக்கும் முந்நூறு யானை களைக்கொண்ட இந்தப் படையில், ஒரே நேரத்தில் முப்பது யானைகள் கட்டுப்பாட்டை இழந்தாலே மொத்தப் படையும் சிதறிப்போய்விடும். ஆனால், இப்போதோ எல்லா யானைகளும் கட்டுப்பாட்டை இழந்துவிட்டன. துதிக்கையைத் தூக்கி வீசி அடித்துத் தாக்கும் அதன் வேகத்தில்தான் வேறுபாடு இருந்தது. சங்கு அட்டைகள் ஒன்றோ இரண்டோ யானைகள் சிலவற்றின் துதிக்கைக்குள் ஏறி அடிப்பகுதிக்குப் போகாமல் முன்பகுதியிலேயே இருந்தன. அந்த யானைகள் மட்டுமே சற்று கட்டுக்கோப்புடன் நடந்துகொள்ள முயன்றன. மற்ற யானைகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பது யாருக்கும் புரியவில்லை. காடே அதிர்வதுபோலிருந்த பிளிறல் ஓசையால் பின்புறம் நின்றிருந்த காலாட்படை வீரர்கள் நடுங்கினர். கூடாரத்தில் இருந்த வேந்தனைப் பாதுகாக்க, தக்க ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர். நெடுங்காடர்களுக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை. அவர்கள் தலைவன் சிவியன் காலாட்படையின் பின்பகுதியில் நின்றுகொண்டிருந்தான். நிலைமையை அறிந்துவர முன்னோக்கிச் செல்ல முயலும்போது பெரும்கூச்சலோடு படையெங்கும் குழப்பம் பரவியிருந்தது.

செங்கனச்சோழனைக் கூடாரத்திலிருந்து வெளியேற்றி, வேந்தனுக்குரிய யானையின் மீதேற்ற முயன்றுகொண்டிருந்தான் உறையன். அப்போது அந்த இடத்துக்கு வந்த காலாட்படைத் தளபதி கிழானடிவானவன், வேந்தனை யானையின் மீதேற்றிப் பின்புறம் கொண்டுசெல்வதை ஏற்கவில்லை. ``இதைப் பார்க்கும் காலாட்படையின் அனைத்து வீரர்களும் நம்பிக்கை இழப்பர். கணப்பொழுதுக்குள் எல்லோருக்குள்ளும் அச்சம் பரவிவிடும். எனவே, குதிரையின் மீதேற்றிப் பின்புறம் விரைவோம்” என்றான்.

ஆனால் உறையனோ, ``யானைப்படையின் முன்பகுதியில் ஏதோ கடினமான பிரச்னை உருவாகியுள்ளது. சில யானைகளைப் பாகன்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என நினைக்கிறேன். இந்நிலையில், வேந்தன் குதிரையில் பயணிப்பது நல்லதன்று. வெகுண்டெழும் ஒற்றை யானையின் பிளிறல்கூடக் குதிரையை நிலைகுலையச் செய்துவிடும். எனவே, வேந்தனுக்குரிய யானையின் மீது ஏற்றுங்கள்” என்று வாதிட்டான்.
வேந்தனின் யானை வீரர்களுக்குத் தோண்டப்படும் கிணற்றில் நீர் அருந்தியிருந்தது. எனவே, இதற்குப் பிரச்னை ஏதுமில்லை. பாகன் அதைக் கொண்டுவந்து கூடாரத்தின் ஓரம் நிறுத்தியிருந்தான். ஆனால், உள்ளே உறையனும் கிழானடிவானவனும் கடுமையாக உரையாடிக் கொண்டிருந்தனர்.

அந்த உரையாடல்களை அருகில் இருந்தவர்கூடக் கேட்க முடியாத நிலையில் பிளிறலின் ஓசை பன்மடங்கு அதிகரித்துக்கொண்டிருந்தது. படையின் முன்வரிசையில் இருந்த யானைகள் பாகன்களைச் சுழற்றி எறிந்தபடி வட்டாற்றின் முன்புறம் நோக்கி ஓடத் தொடங்கின.

இந்தக் கணத்துக்காகவே காத்திருந்த பாரி, தனது உத்தரவைப் பிறப்பித்தான். குளக்கரையெங்கும் பதுங்கி இருந்த பறம்புவீரர்கள் ஆற்றின் முன்பகுதியை நோக்கி எரியம்புகளை வீசத் தொடங்கினர். இருளைக் கிழித்தபடி ஆற்றின் இரு திசைகளிலிருந்தும் மணலுக்குள் எரியம்புகள் வந்து செருகின. முன்புறமாக ஓடத் தொடங்கிய யானைகள் நெருப்புமழைபோல் விடாதுபொழியும் எரியம்புகளைக் கண்டு, வந்த திசை நோக்கிப் பின்புறமாகத் திரும்பின.

பிளிறலும் அலறலும் இருளை உலுக்கின. வெறிகொண்ட யானைகள் வட்டாற்றில் வந்த திசை நோக்கித்  திரும்பி முறுக்கியபடி மணல் நெளிய ஓடிவந்தன. யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. வெறி கொண்டு முன்னேறும் யானைகளால் மொத்த யானைப் படையும் சிதறத் தொடங்கியது. ஆவேசம்கொண்ட யானைகள், பின்னிலையில் நின்ற காலாட் படைக்குள் புகுந்தன. அதகளம் தொடங்கியது. சங்கு அட்டைகள் உச்சி மூக்கில் குருதியை உறிஞ்சிய ஒவ்வொரு முறையும் துதிக்கையை ஓராயிரம் முறை சுழற்றியடித்தன யானைகள். தந்தங்களின் கூர்முனை இரு பக்கங்களிலும் குத்திக் கிழித்தன.
இருளெங்கும் பேரோலம் மேலெழுந்தபோது வட்டாற்றின் மணலெங்கும் குருதி ஊற்றெனப் பீச்சியடிக்கத் தொடங்கியது. படைவீரர்கள் செய்வதறியாது எங்கும் சிதறினர். குடிநீருக்காகத் தோண்டப்பட்ட எண்ணற்ற கிணறுகளில் நூற்றுக்கணக் கானவர்களை மிதித்துப் புதைத்தபடி யானைகள் முன்னேறிக் கொண்டிருந்தன. படையின் கட்டுக்கோப்பு குலையும் கணத்தில் பேரழிவு தொடங்கும். ஆனால், இங்கு தொடங்கிய கணத்திலேயே பேரழிவு முடிவுறும் நிலையை நெருங்கியது.

யானைப்படைத் தளபதி அரிஞ்சயன் ஆற்றுமணலுக்குள் ஆழப் புதைந்து கொண்டிருந்தான். மணற்துகள்களைப்போல எலும்புகள் நொறுங்கிக்கொண்டிருந்தன. இடைவெளியின்றி மிதித்து நகர்ந்தன எண்ணிலா யானைகள்.

தலைமைத் தளபதி உறையன் எது செய்தாவது காலாட்படையின் ஒரு பகுதி வீரர்களையாவது காக்க முடியுமா எனச் சிந்திக்கும்போது, எல்லாம் கைமீறிப்போயிருந்தன. படைவீரர்களோ யானைகளோ ஆற்றின் கரைகளில் எங்கெல்லாம் மேலேறுகிறார்களோ, அங்கெல்லாம் எரியம்புகள் பாய்ந்து கீழிறங்கின. நெருப்பின் பொறிபட்ட கணத்தில் கரையோரச் செடிகொடிகள் பற்றி எரிந்தன. மேலேறிய யானைகள் வெக்கை தாக்கிய வேகத்தில் பிளிறியபடி, சிக்கியவர்களை எல்லாம் அடித்து நசுக்கிக்கொண்டு மீண்டும் ஆற்றுக்குள் ஓடின.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P85d_1522841853
பற்றிய நெருப்பு காட்டுக்குள் பரவாமல், தகுந்த முன்னெச்சரிக்கையோடு பறம்புவீரர்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் ஒற்றை அம்பைக்கூட சோழப்படையின் வீரர்களை நோக்கி எய்யவில்லை. பிளிறியபடி மேலேறும் யானைப்படையை ஆற்றை நோக்கிக் கீழிறக்கும் வேலையை மட்டுமே அவர்கள் செய்தனர். எந்த ஆற்றைப் பாழிநகருக்கான வழியாக செங்கனச்சோழன் தீர்மானித்து முன்னகர்ந்தானோ, அதே ஆற்றை மரணத்தின் பெரும்பாதையாக மாற்றினான் பாரி. எதிரிகள் நிலைகொண்டிருந்த நான்கு காதத்தொலைவுக்கும் மலைக்குமேல் தகுந்த இடைவெளியில் பறம்புவீரர்கள் நிலைகொண்டிருந்ததால் எல்லாவற்றையும் துல்லியமாகச் செயல்படுத்தினர். இருளை நகர்த்திச் செல்வதைப்போல வெறிகொண்ட யானைக் கூட்டத்தைக் கரையோடு கரையாக நகர்த்திக்கொண்டிருந்தனர்.

வட்டாறெங்கும் பல்லாயிரக்கணக்கான வீரர்களை நசுக்கியபடி யானைகள் ஓடிக் கொண்டிருந்த அந்த நள்ளிரவின் பிற்பகுதியில், அழிவின் உச்சகட்டம் தொடங்கியது. `முதல்நிலைப் படையினர் தாக்குதலுக்கு ஆளாகிவிட்டனர்’ என்ற செய்தி, ஒருநாள் இடைவெளியில் வந்துகொண்டிருந்த இரண்டாம் நிலைப் படையின் தளபதிகளுக்கு எட்டியது. நெடுங்காடர்களின் தளபதி துணங்கன் துடித்தெழுந்தான். யானைப்படையின் தளபதி கச்சனும் காலாட்படையின் தளபதி ஆழிமார் பனும் வெகுண்டனர். தாக்கப்பட்டவர்களுக்கு உதவ உடனடியாகப் புறப்பட்டனர். இரவோடு இரவாக யானைகளை எவ்வளவு வேகமாக விரட்ட முடியுமோ, அவ்வளவு வேகமாக விரட்டிச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து காலாட்படையினரும் விரைந்து வந்தனர்.

போர் என்பது, கட்டுக்கோப்பான தாக்குதல். அதன் வெற்றி, தாக்கும் திறனில் மட்டுமன்று, அதன் ஒழுங்கமைப்பின் வடிவிலும் இருக்கிறது. வேந்தனின் படைகள், இந்தக் கருத்துக்கு நன்கு பழக்கப்படுத்தப்பட்டவை. ஆனால், அடர்காட்டுக்குள் முன்னிலைப்படை தாக்கப்பட்ட செய்தி தெரிந்த பிறகு விரைந்து சென்று சேர்வதுதான் முதல் வேலை. அதில் எவ்வளவு வேகத்தில் விரைய வேண்டுமோ அவ்வளவு வேகத்தில் விரைவதே முக்கியம் என உணர்ந்து ஆழிமார்பனும் கச்சனும் விரைந்துகொண்டிருந்தனர். துணங்கனோ நெடுங்காடர்களைத் திரட்டி யானைகளை முந்திக்கொண்டு ஓடினான்.

பின்னிரவு சரிந்து கீழ்வானில் மெல்லிய ஒளிக்கீற்றுகள் மேலெழத் தொடங்கியபோது வட்டாறு இதுவரை சந்தித்திராத பேரழிவைச் சந்திக்க ஆயத்தமானது. இரண்டாம் நிலையில் இருந்த யானைப்படை கச்சனின் தலைமையில் விரைந்து முன்னேறிக்கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பார்க்காத வகையில் எதிர்த் திசையிலிருந்து பிளிறிக்கொண்டு வந்தது முதல்நிலை யானைப்படை. எந்த யானையின் மீதும் பாகன்கள் யாரும் இல்லை. வந்து கொண்டிருப்பது நமது படைதானா என்பதைக்கூட இருளுக்குள் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

தந்தத்தின் உள்மூக்குக்குள் துருவிக் கொண்டிருக்கும் குடைச்சல் தாங்க முடியாமல் துதிக்கையைச் சுருட்டி, திருகி, முறுக்கி வீசியபடி பிளிறிக்கொண்டு வந்த யானைகளை, எதிர் நிலையில் சந்தித்தது கச்சனின் யானைப்படை.

ஒரு யானையின் குருதி, பல நூறு வீரர்களின் குருதிக்குச் சமம். தந்தங்களைக்கொண்டு பதினான்கு விதங்களில் தாக்குவதற்குப் பயின்ற யானைகள், இருள் முடியும் கணத்தில் ஒன்றுடனொன்று நேர்கொண்டு மோதின. இதுவரை யாரும் கேள்விப்பட்டிராத பேரழிவு நிகழத் தொடங்கியது. உச்சிமண்டைக்குள் குருதியை உறிஞ்சிக் குடிக்கும் சங்கு அட்டைகளால் ஏற்படும் வேதனை தாங்காமல் துதிக்கைகொண்டு தமது தலையின் கும்பங்களையே நொறுக்குவதுபோல் அடிக்கும் யானைகள் எதிரில் சிக்கும் யானைகளை விட்டுவிடவா செய்யும்! சுழற்றியடித்துத் தந்தத்தால் குத்தித் தூக்கின.

மணிக்கட்டிலும் மார்பிலும் கமுக்கட்டையிலும் விலாப்புற மடிப்பிலும் வயிற்றிலும் குத்தித் தள்ளப்பட்ட எண்ணிலடங்கா யானைகள் எழுப்பிய ஓலம் காட்டை உறையச்செய்தது. வட்டாற்றுக் கொதிமணல் குடித்து முடியாத கருங்குருதி, விழுந்து கிடந்த யானைகளுக்கு நடுவில் வீரர்களின் உடலை இழுத்து நகர்த்தியது. குருதி குடித்த வட்டாற்று மணற்பரப்பு மணிக்கற்களைப்போல ஒளி வீசியது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P85e_1522841875
தோகைநாய்களை அழித்த பறம்புவீரர்கள் காட்டை ஊடறுத்துக் குறுக்குவழியில் குதிரைகளில் பறந்தனர். எஃகல்மாடன் தலைமையில் நடுக்காட்டுக்குள் ஊர்ந்துகொண்டிருந்த சேரப்படையை இரவில் நாற்புறமும் சூழ்ந்தனர். உள்ளங்கைக்குள் சிக்கிய இரையை அவர்களின் ஆசைக்கேற்ப அடித்திழுக்கும் வேட்டை தொடங்கியது. பறம்புவீரன் ஒவ்வொருவனும் எண்ணற்ற தோகைநாய்களாக உருமாறியிருந்தான். எந்தவொரு தாக்குதலையும் இவ்வளவு கொடும் ஆவேசத்தோடு பறம்புவீரர்கள் தொடங்கிய தில்லை. இருபதுக்கும் மேற்பட்ட குதிரைகளை இழந்தவர்களின் வெறி, வீசப்பட்ட ஒவ்வோர் அம்பிலும் இருந்தது. உள்ளங்கைக்குள் வைத்துக் கழுத்தைத் திருகி எடுப்பதைப்போல எதிரிகளின் படையை உயிரோடு திருகி எடுத்தனர். தாக்குதல் நடந்த செவ்வரிக்காட்டில் குருதி படியாத இலையென்று எதுவும் இல்லை.

முகத்தில் மூன்று அம்புகள் ஒருசேரத் துளைத்தபோது அவன் மண்ணில் வீழ்ந்தான். ஆனாலும் அவன் செய்வதைப்போலவே தலையை வெட்டியெடுத்தான் தேக்கன். குருதி நாளங்கள் வெடிப்பதைப்போலக் கத்திக்கொண்டு துண்டித்த அவனது தலையைத் தூக்கி வீசினான் தேக்கன். நீள்வாய் நாய்களை நம்பி உள்ளே வந்த எஃகல்மாடனின் தலையைக் கவ்விச் செல்ல ஒரு தோகைநாய்கூட உயிருடன் இல்லை.

- மூன்றாம் பாகம் முற்றிற்று.


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 15, 2018 11:01 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 3838410834 வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 1571444738 வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 15, 2018 11:15 pm

றம்பு வீரர்கள், வடக்கு-தெற்குப் போர்க்களங்களிலிருந்து ஊர் திரும்பினர். பாரி எவ்வியூரை அடைந்தபோது தேக்கனும் உதிரனும் வந்து சேர்ந்திருந்தனர். இவ்வளவு பெருந்தாக்குதல்களை இதுவரை பறம்பு நடத்தியதில்லை. எனவே, இதுவரை இல்லாத அளவுக்கு, போர் பற்றிய கதைகள் பறம்பு முழுவதும் நிறைந்திருந்தன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83a_1523353748
போர் மனநிலையிலிருந்து விடுபடுதல் எளிதன்று. வெறிபிடித்த வேட்டை விலங்குக்கு ஒப்ப எண்ணிலடங்கா நாள்கள் செயல்பட்டுவிட்டு, அதனிலிருந்து இயல்புவாழ்வுக்கு மாறுதல் மனப்பிறழ்விலிருந்து மீள்வதைப் போன்றது. இந்தக் கொடும் துன்பத்திலிருந்து விரைவில் வெளிவர வேண்டும் என்பதால்தான் போர் முடிந்தவுடன் கொற்றவைக்குக் ‘குருதியாட்டுவிழா’ எடுப்பர். வாரக்கணக்கில் நடைபெறும் இந்தப் பெருவிழாவில், அத்தனை வகைக் கள்ளும் ஆற்றுப்பெருக்கென ஓடும். குடித்துக் களித்து, ஆடிப்பாடி, பேருணவு உண்டு முடிப்பர். இந்தப் பெரும்விழா, வீரர்கள் அனைவரையும் குணமாற்றம் அடையச் செய்யும். இழப்பின் வலியிலிருந்து மகிழ்வின் கொண்டாட்டத்துக்கு ஒவ்வொருவரையும் தள்ளும். கண்ணுக்குள் ஊறிக்கிடந்த கொலைவெறி வற்றி இறங்கும். வாழ்வு மீண்டும் வீசிச்செல்லும் இளங்காற்றுக்குத் தலையசைக்கிற சிறுபுல்லின் குணமெய்யும்.

ஆனால், இம்முறை குருதியாட்டு விழாவை நடத்த முடியவில்லை. பாண்டியனின் படை கீழ்த்திசையில் நிலைகொண்டுள்ளது. அவனுடனான போர் இன்னும் தொடங்கவே இல்லை. கொற்றவையின் கூத்துக்களத்தில் நீராட்டு விழாவின்போது வஞ்சினம் உரைத்த பாரியின் கூற்றில் இரண்டை முடித்தாகிவிட்டது. மூன்றாம் கூற்று தொடங்கப்படவேயில்லை. பறம்பைப் பொறுத்தவரை போர் இன்னும் முடியவில்லை. எனவே, போர் மனநிலையை உதற முடியாத நிலையிலேயே அனைவரும் இருந்தனர்.

வட்டாற்றில் சோழப்படையின் மீதான தாக்குதல் முடிந்த மறுநாள் இரவு, பாரி அங்கிருந்து புறப்பட்டுவிட்டான். ``இனி சோழப்படை மீள வாய்ப்பேதும் இல்லை. எனவே, தொடர்ந்து வீறுகொண்ட தாக்குதல் தேவையில்லை. பறம்பு மண்ணைவிட்டு அவர்களை அப்புறப்படுத்தினால் போதும். மிஞ்சியவர்கள் குறும்பியூர்க் கணவாயில் வெளியேறும் வரை, அவர்களை பிட்டன் பின்தொடரட்டும்’’ என்றான் பாரி.

இரவாதனைத் தாக்குதல் களத்திலிருந்து வெளியேற்றி, வேறு வேலைகளைக் கொடுத்தான். எதிரிப்படை வீறுகொண்டு நிற்கும்போதே அவனது தாக்குதலை அவர்களால் எதிர்கொள்ள முடியாது; இப்போதோ அவர்கள் உயிர்பிழைக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இரவாதனைக் களம் விட்டு வெளியேற்றுவது அவசியம் எனக் கருதினான் பாரி.

``யானையின் துதிக்கைக்குள் சென்ற சங்கு அட்டைகள் ஒருசில நாள்களில் தாமே செத்து உதிரும் வரை யானைக்கு வேதனை இருக்கத்தான் செய்யும். யாரையும் நெருங்க விடாது. தாக்குதலுக்குள்ளாகி இறந்த யானைகளைத் தவிர  குற்றுயிராய் இருக்கும் யானைகளுக்கும் சிகிச்சை தேவைப்படும் யானைகளுக்கும் உதவ வேண்டியது நமது கடமை. நமது மலைகளுக்குள் பிளிறிக் கதறும் யானைகளுக்கு நாம் உதவியே ஆகவேண்டும். யானைகளுடனான ஆதிமொழியை உருவாக்கிய தந்தமுத்தத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்” என்று இரவாதனுக்கு உத்தரவிட்டான் பாரி.

யானைப்படையை வீழ்த்துவதற்காக உயர்த்திய வில்லோடு அலைந்துகொண்டிருந்த இரவாதனை, தந்தமுத்தத்துக்காரர்கள் கேட்கும் பச்சிலைகளைப் பறித்துத் தருபவனாக மாற்றினான் பாரி. எண்ணிலடங்காத காயங்களுடனும் வேதனையுடனும் அலைந்துதிரியும் யானைகளை, தந்தமுத்தத்துக்காரர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை அவன் கூர்ந்து கவனிக்க வேண்டியது முக்கியம். வீரன், மருத்துவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உண்டு. அதுவும் வேதனைகொண்ட போர்யானைகளை நெருங்கவும், தேவைப்பட்டால் எளிய முறையில் அவற்றை வீழ்த்தவும், பிறகு சிகிச்சையளிக்கவும் எண்ணற்ற நுணுக்கங்களைத் தந்தமுத்தத்துக்காரர்கள் செய்தனர். இவையெல்லாம் பெரும்படைக்குத் தலைமையேற்பவர்களுக்குத் தேவையான பயிற்சி. இவ்வளவு யானைகளுக்கிடையே இப்படியொரு பயிற்சியைப் பெறும் வாய்ப்பு இரவாதனைத் தவிர பறம்பில் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. அவசியம் எனக் கருதியே பாரி இந்தப் பயிற்சியில் அவனை ஈடுபடுத்தினான்.

எழுவனாற்றை விட்டு பாரி புறப்பட்ட பிறகு வலக்கரையில் இருந்த இரவாதன் தந்தமுத்தத்துக்குச் சென்றான். இடதுகரையில் இருந்த பிட்டன், சிறு படையை உடன் வைத்துக்கொண்டு எதிரிகளைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தான். பெரும் எண்ணிக்கையிலான பறம்பு வீரர்கள் ஊர்களுக்குத் திரும்பினர்.

யானைகளின் கொடூர அழித்தொழிப்பிலிருந்து செங்கணச்சோழனைக் காப்பதில், சோழர்படையின் முன்னணித் தளபதிகளும் நெடுங்காடர்களும் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டனர். தேர்ந்த வீரர்களின் வலிமைமிகுந்த பாதுகாப்பு வளையத்தினூடே செங்கணச்சோழனை முன்னகர்த்தி வந்துகொண்டிருந்தனர். தாக்குதல் நடந்த முதல் நாள் இரவு `வேந்தனைக் காக்க முடியாத நிலை வந்துவிடுமோ!’ எனக் கவலைப்பட்டனர். நெடுங்காடர்கள், பாறைக்குகை ஒன்றுக்குள் வேந்தனை அனுப்பி, யானைகள் உள்நுழையாதபடி நெருப்பு வளையத்தை உருவாக்கிக் காத்தனர். அடுத்தடுத்த நாள்களில் யானைகளுடனான ஆபத்து குறையத் தொடங்கியதும் தகுந்த ஏற்பாட்டோடு பறம்பை விட்டு வெளியேறும் பயணத்தைத் தொடங்கினர்.

சிறிய படைப்பிரிவு ஒன்று மிகுந்த பாதுகாப்புத் தன்மையோடு ஆற்றின் ஓரப்பகுதியின் வழியே தப்பிச்சென்று கொண்டிருப்பதை அறிந்த பிட்டன், அவர்களை இறங்கித் தாக்க முடிவெடுத்தான். `பெரும்படை முழுமுற்றாக அழிந்த பிறகும், இவர்கள் இவ்வளவு வேகமாகத் தப்பிச்செல்கின்றனரே!’ என்று சற்றே அவசரப்பட்டான்.

வேந்தனைக் காத்து நின்றது, மிகத் தேர்ந்த வீரர்களைக்கொண்ட படைப்பிரிவு. உடன் நெடுங்காடர் தளபதி துணங்கன் இருந்தான். தளபதிகளில் தப்பிப்பிழைத்தது அவன் மட்டும்தான். `பறம்புநாட்டை ஊடறுத்துச் செல்லும் தாக்குதலுக்கு எங்களை நம்பி நீங்கள் வரலாம்’ என்று நெடுங்காடர்கள் அளித்த வாக்கின் அடிப்படையில்தான் செங்கணச்சோழன் வந்தான். அந்த வாக்கைக் காப்பாற்ற இறுதி வரை முயன்றுகொண்டிருந்தான் துணங்கன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83b_1523353769
பொழுது மங்கிக்கொண்டிருந்த மாலை நேரத்தில் ஆற்றின் வளைவு ஒன்றில் பொருத்தமான இடத்தில் வேந்தனுக்குக் கூடாரம் அமைக்கப்பட்டது. அருகில் இருந்த மூங்கில் மரங்களை ஆற்றுக்குள் சாய்த்துப்பிடித்து வலைப்பின்னல்களை நெடுங்காடர்கள் உருவாக்கினர். எந்தவித பாதிப்பும் அடையாத பன்னிரண்டு யானைகளைப் பாதுகாப்புக்கு நிறுத்தினர். கவசவீரர்கள், கூடாரத்தைச் சுற்றி நின்றிருந்தனர்.

`இவன்தான் இந்தப் படையெடுப்புக்குத் தலைமை தாங்கியவன்!’ என்று இந்த ஏற்பாடுகளைக் கண்டதும் பிட்டனுக்குத் தோன்றியது. அமைக்கப்பட்ட கூடாரத்தின் பின்பகுதியில் ஆற்றுவழியே தாக்குதல் எதுவும் நடந்துவிடக் கூடாது எனப் பன்னிரு யானைகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. கூடாரத்தைச் சுற்றிக் கவசவீரர்கள் விழிப்புடன் காத்து நின்றனர். காரிருள் சூழ்ந்திருந்தபோது கூடாரத்தின் இடதுபுறமிருந்து பிட்டனின் தலைமையிலான சிறுபடை ஆற்றுமணலுக்குள் இறங்கியது.

பிட்டனின் பார்வை முழுவதும், கூடாரத்தைச் சுற்றி நின்றிருந்த கவசவீரர்களை நோக்கியே இருந்தது. ஆனால், மண் போத்தி உறங்கும் பழக்கம்கொண்ட நெடுங்காடர்கள், ஆற்றுமணலுக்குள் தலை மட்டும் மேலே தெரிவதைப்போல மறைந்து கிடப்பதை அவன் கவனிக்கவில்லை. கூடாரத்தை நோக்கித் தாக்குமாறு பிட்டன் ஆணையிட்டதும் உடன்வந்தவர்கள் வில்லை உயர்த்த எத்தனித்தபோது மணலுக்குள்ளிருந்து தெறித்து மேலெழும்பினர் நெடுங்காடர்கள். இரு கைகளிலும் உருவிய வாள்களோடு எழுந்தவர்கள் தங்களின் கை அருகில் இருக்கும் பறம்பின் வீரர்களை கணப்பொழுதில் வெட்டிச் சரித்தனர்.

பல்லாயிரம் வீரர்களைக்கொண்ட படையை உருத்தெரியாமல் அழித்த எதிரிகள் கை அருகில் சிக்கியுள்ளனர் என்ற வெறியோடு நெடுங்காடர்கள் வெட்டியபோது, வில்லிலிருந்து விடுபட்ட அம்புகள் கவசவீரர்களைத் துளைக்கவும் செய்தன. ஓசை கேட்டு கூடாரத்துக்குள் இருந்த செங்கணச்சோழன் சட்டெனத் திரை விலக்கி வெளியே வந்தான். மேலே தெறித்த மணற்துகள்களுக்கு நடுவே அவனது உருவத்தைத் துல்லியமாகக் கண்டான் பிட்டன். கையில் இருந்த ஈட்டியை அவனை நோக்கி எறிந்தபோது, நெடுங்காடர்களின் எண்ணிலடங்கா வாள்கள் பிட்டனை நோக்கி இறங்கிக்கொண்டிருந்தன.

வலதுகால் தொடையில் ஈட்டி இறங்கிய கணம், பேரலறலோடு செங்கணச்சோழன் மண்ணில் சரிந்தான். அதே வேளையில் பிட்டன் எண்ணற்ற துண்டுகளாக மணலெங்கும் சிதறிக்கிடந்தான்.

குலசேகரபாண்டியனின் வயதும் அனுபவமும், யாராலும் கணிக்க முடியாத முடிவுகளை எப்போதும் எடுப்பவராக அவரை மாற்றியிருந்தன. முதல்நிலைப் படை வெங்கல்நாட்டுக்கு வந்ததும் போருக்கான ஆயத்த வேலைப்பாடு தொடங்கிவிடும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மிக விரிந்த அளவில் பாடிவீடுகளை ஏற்படுத்தி, படைகளைப் பகுதி பகுதியாகக் கொண்டுவந்து இறக்கும் உத்தரவை மட்டும் கருங்கைவாணனுக்கு வழங்கியிருந்தார்.

பாண்டியநாட்டின் வெவ்வேறு திசைகளிலிருந்து படைகள் வெங்கல்நாடு நோக்கி நகர்ந்தன. ஆனால், படை முழுமையும் அங்கு வந்து குவிந்துவிடவில்லை. குறிப்பிட்ட இடைவெளிகளில் படைகளை ஆங்காங்கு தங்கவைத்து, பேரரசரின் உத்தரவுக்கு ஏற்ப வெங்கல்நாட்டை நோக்கி நகர்த்தினர்.  
    
இளவரசர் பொதியவெற்பனும் தளபதி கருங்கைவாணனும் பாடிவீட்டிலேயே முகாமிட்டிருந்தனர். ஆனாலும் பேரரசரின் எண்ண ஓட்டங்களையோ போர் உத்திகளையோ அவர்களால் யூகிக்க முடியவில்லை. மையூர்கிழார் மிக மும்முரமாக இருந்தார். எண்ணிலடங்காத படைப்பிரிவுகள் நாள்தோறும் வந்தவண்ணம் இருந்தன. அவரது நிலப்பரப்பு எங்கும் குதிரைகளும் யானைகளும் குறுக்கும் நெடுக்குமாகப் போய்வந்தபடி இருந்தன. எல்லா ஏற்பாடுகளிலும் அவரது ஆலோசனை அடிப்படையாக இருந்தது. பேரரசின் அதிகாரமிக்க பிரதிநிதியாக எல்லோராலும் அவர் பார்க்கப்பட்டார். பாண்டிய நாட்டின் எண்ணற்ற படைப்பிரிவின் தளபதிகளும் சிற்றரசர்களும் வந்து சேர்ந்துகொண்டே இருந்தனர். ஆனால், பேரரசர் மட்டும் இன்னும் வெங்கல்நாட்டுக்கு வந்து சேரவில்லை. அவர் மதுரையிலும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட இடத்தில் தும்பாற்று அரண்மனையில் இருந்தார்.

சேரனின் தாக்குதலைப் பற்றியும் சோழனின் படையெடுப்பைப் பற்றியும் ஒற்றர்கள் மூலம் செய்திகளை நாள் தவறாமல் சேகரித்தபடி இருந்தார். அந்தத் தாக்குதலில் ஏற்படும் விளைவுகளைப் பொறுத்தே தன்னுடைய உத்திகளை வகுப்பது என முடிவெடுத்திருந்தார். முதலில் சேரனின் தோல்வி பற்றிய செய்தி வந்துசேர்ந்தது. நீண்டநாள்களுக்குப் பிறகு, சோழப்படையின் அழித்தொழிப்பு பற்றிய செய்தி அவரை எட்டியது. எல்லாவற்றையும் பொறுமையோடு சிந்தித்துக்கொண்டிருந்தார். தனக்கான உத்திகளைத் தனித்துவத்தோடு வகுத்துக்கொண்டிருந்தார்.

போர் என்பது உத்தியால் மட்டும் தீர்மானிக்கப்படுவதன்று; கடைசிகணம் வரை அந்த உத்தியைச் செயல்படுத்தும் புறச்சூழல் நம்முடைய ஆதிக்கத்தில் இருக்க வேண்டும் அல்லது அதனுடைய ஆதிக்கத்தால் பாதிப்படையாத உத்திகள் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். சேரனும் சோழனும் தவறிய இடங்களைப் பற்றி நேரில் பார்த்தவரைப்போலச் சுட்டிக்காட்டிப் பேசிக்கொண்டிருந்தார். இருநாட்டுத் தாக்குதல்களும் தோல்வியடைந்த பிறகு, வெங்கல்நாடு நோக்கி முன்னகர்ந்தார் குலசேகரபாண்டியன்.

காற்றடிகாலம் உச்சம்கொண்டிருந்தது. குளம், குட்டைகளில் நீரின் இருப்பு மேலும் குறைந்தது. ஆனாலும் மேற்குமலையில் மேகங்கள் கூடும்காலம் நெருங்கிவிட்டது. அதைக் கணித்தே அவரின் நகர்வு இருந்தது. பாண்டியப் பெருவேந்தன் வெங்கல் நாடு நோக்கி வரும் செய்தி எட்டியவுடன் படையெங்கும் உற்சாகக் கொண்டாட்டம் தொடங்கியது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு குலசேகரபாண்டியன் நேரடியாகப் போர்க்களம் ஒன்றுக்கு இப்போதுதான் வருகிறார்.

முடியனும் காலம்பனும், கீழ்த்திசைப் போர்க்களத்துக்கு வந்து மாதக்கணக்காகிறது; பாண்டியப்படை பாடிவீடு அமைத்து எங்கெல்லாம் தங்குகிறார்கள், என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதைக் கவனித்தபடி இருந்தனர்.

வேட்டூர்பழையன், மலையடிவாரம் எங்கும் தன் வீரர்களை நிறுத்தி எதிரிகளின் ஒவ்வோர் அசைவையும் கண்காணித்தபடி இருந்தான். மாதக்கணக்கில் பாண்டியர் படை வந்து குவிந்துகொண்டே இருந்தது. கண்களுக்கு எட்டும் தொலைவு வரை ஈட்டி ஏந்திய வீரர்கள் தென்பட்டனர்.

நீலனால் அமைதிகொள்ள முடியவில்லை. இறங்கித் தாக்கவேண்டும் என்ற அவனது எண்ணத்தை மற்றவர்கள் ஏற்கவில்லை. பறம்பினுள் நுழையாத யாரின் மீதும் தாக்குதல் தொடுக்க நமக்கு உரிமையில்லை என்பதை அவனால் ஏற்க முடியவில்லை. மற்ற இரு திசைகளிலும் ஈட்டிய வெற்றிச் செய்தி இங்கு வந்து சேர்ந்ததும் நீலனின் வேகம் இன்னும் கூடியது. அவனைக் கட்டுப்படுத்துதல் வேட்டூர் பழையனால் முடியாதது. எனவே, நீலனை முடியனோடு இருக்கச்செய்தான் பழையன். முடியனின் சொல்லைப் பறம்புவீரன் யாரும் மீற முடியாது. வேறு வழியில்லாமல் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான் நீலன். காலம்பனின் மனநிலையும் ஏறக்குறைய அதேபோல்தான் இருந்தது. கீழ்த்திசை ஊர்களின் வீரர்கள் மலையெங்கும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

காற்றடிகாலம் தொடங்கும் முன்பே தேக்கனும் உதிரனும் வந்திறங்கினர். கூழையன் மட்டும் தென்திசையில் சேரநாட்டு எல்லையில் இன்னும் இருந்தான். தேக்கன் வந்த பிறகு உத்திகள் மாற்றப்படும் என்று அவர்களுக்குத் தெரியும். இருபெரும் வெற்றிச் செய்திகளோடு எவ்வியூரில் இருந்த வீரர்களின் கூட்டம் தேக்கனின் தலைமையில் கீழ்த்திசைக்கு இறங்கியது. `அடுத்த சில நாள்களில் பாரி வரவுள்ளான்’ என்ற செய்தியையும் தேக்கன் சொன்னான். எல்லோரும் அளவற்ற மகிழ்வடைந்தபோது நீலன் மட்டும் சற்றே வருத்தம்கொண்டான். தனது பொறுப்பில் இருக்கும் காவல்திசை ஒன்றுக்குப் பாரி வரும்போது அவனுக்கு வெற்றியைத் தந்து வரவேற்கும் வாய்ப்பற்றுப்போனதே என்ற கவலை, அவனது முகத்தில் இருந்தது. ஆனாலும் பறம்பின் ஆசான் தேக்கனும் உற்றதோழன் உதிரனும் எண்ணிலடங்காத எவ்வியூர் வீரர்களும் வந்து இறங்கிய மகிழ்வு, அவனை விரைவில் ஆற்றுப்படுத்தியது.

எழுவனாற்றிலும் செவ்வரிக்காட்டிலும் கொட்டித்தீர்த்த எதிரிகளின் குருதியேந்தி இரு திசைப் படையின் பொறுப்பாளர்களும் வேட்டுவன் பாறைக்கு வந்து சேர்ந்தனர். பறம்பின் மாவீரர்கள் எல்லோரும் ஒன்றாய்க் குவிந்திருக்க, நாண்முழவைக் குறுந்தடிகொண்டு எழுப்பும் ஓசை காரமலையின் உச்சியிலிருந்து எதிரொலித்தது. பாரியின் வருகையைக் கீழ்த்திசை முழுவதும் அறிவிக்கும் ஓசை அது. வழக்கமான நாள்களில் இதுபோன்ற ஏற்பாடுகள் இல்லை. போர்க்காலத்தில் எல்லாம் ஒழுங்கமைக்கப்ப ட்டிருந்தது. தான் இருந்த இடத்திலிருந்து பறம்பு முழுவதும் குறிப்பறிந்து வழி நடத்திக்கொண்டிருந்தான் வாரிக்கையன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83c_1523353787
கபிலரோடு நடந்து வந்த பாரி காரமலையின் முகட்டின் மீது கால் வைத்ததும் நாண்முழவின் ஓசை கேட்டது. எல்லோரும் ஓசை கேட்ட திசை நோக்கி வியப்புற்றுத் திரும்பினர். பாரியோ, கபிலரைப் பார்த்து ``இது வழுக்குப்பாறை. கவனமாகக் காலெடுத்து வையுங்கள்” என்றான்.

``பலமுறை இந்த வழியில் காரமலையைக் கடந்து இரு பக்கங்களும் போய்வந்துள்ளேன், அப்போதெல்லாம் முழவின் ஓசை கேட்டதில்லையே” என்றார் கபிலர்.

``இவையெல்லாம் வாரிக்கையனின் ஏற்பாடு. செய்தித்தொடர்புகளின் வலைப்பின்னல்களை இருந்த இடத்திலிருந்தே உருவாக்கும் நுட்பம் அவர் அளவுக்குப் பறம்பில் வேறு யாருக்கும் இல்லை” என்றான் பாரி. கபிலர் வியந்து கேட்டுக்கொண்டிருந்தார்.

``நான் வருவதை முன்னோக்கி அறிவிக்கும் ஓசை என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். பின்னோக்கி அவருக்குச் சென்று சேரவேண்டிய செய்தி ஒன்று வேறு ஒலிக்குறிப்பில் போய்க்கொண்டிருக்கும்” என்றார்.

``எவ்வளவு ஆற்றல்கொண்ட மாமனிதனாக அவர் இருக்கிறார்!” என்று கபிலர் வியந்து கூறியபடி பாரியின் தோள்பற்றி நடந்து கொண்டிருந்தார். பாரி சொன்னான், ``பறவைகளைக் கூடுகளில் பார்த்து மகிழ்வது ஓர் அனுபவம். வானமெங்கும் பறந்து திரிவதைப் பார்த்தறிவது இன்னொரு வகை அனுபவம். அதுவே வேட்டைக்காகச் சிலிர்த்தபடி ஈட்டிபோல இறங்கித் தாக்குவதைப் பார்த்தல் முற்றிலும் வேறுவகை அனுபவமாயிற்றே! இது வேட்டைக்காலம் அல்லவா, தங்களின் ஆற்றல் முழுமையும் பயன்படுத்தும் வாய்ப்பாக ஒவ்வொரு பறம்பு மனிதனும் கருதுவான்” என்றான் பாரி.

``ஆற்றல் அளவிடற்கரியது. அது பயிற்சியோடும் திறமையோடும் மட்டும் தொடர்புடையதன்று; சூழலுடனும் உணர்வுடனும் தொடர்பு டையதாயிற்றே” என்றார் கபிலர்.

``ஆம், அதனால்தான் தளர்ந்த வயதில் வாரிக்கையனும், மிக இளம்வயதில் இரவாதனும் எண்ணிப்பார்க்க முடியாத நுட்பத்துடனும் வலிமையுடனும் ஆற்றலை வெளிப்படுத்து கின்றனர்.”

ஒரு கணம் அதிர்ந்தார் கபிலர். மகா திறமைகொண்ட வாரிக்கையனைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், அந்த வரிசையில் இரவாதனை ஒப்பிட்டுப் பாரி சொன்னது வியப்பைத் தந்தது. சற்றே அமைதிகொண்ட கபிலர் ``இரவாதனை...” என்று மெள்ளத் தொடங்கினார்.

கபிலர் என்ன கேட்க வருகிறார் என்பதைப் புரிந்துகொண்ட பாரி சொன்னான், ``எழுவனாற்றுப் போர்க்களத்தில் ஒரு காட்சியைப் பார்த்தேன். இரவாதன் எய்த அம்பொன்று யானையின் கழுத்தில் ஒருபக்கம் தைத்து மறுபக்கம் எட்டிப்பார்த்தது. அவனது வில்லடியின் ஆற்றல் அளவிட முடியாததாக இருக்கிறது.”

வியப்பு மீறாமல் கபிலர் சொன்னார் ``இதேபோன்ற வியப்போடு நீலனின் ஆற்றலைப் பற்றி தேக்கன் சொல்லிக் கேட்டுள்ளேன்.”

``ஆம், இருவரும் இணையற்ற ஆற்றல்கொண்ட வீரர்கள்தாம். ஆனால், வீரர்களை மாவீரர்களாக மாற்றுவது போர்க்களம்தான்” சொல்லியபடி நடையை நிறுத்தினான் பாரி.

குனிந்தபடி கவனமாக நடந்துவந்த கபிலர், பாரி நின்றதும் தானும் நடையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தார். மலையடிவாரச் சமவெளிப் பரப்பில் விரிந்துகிடந்தது பாண்டியர் படை. கண்ணிமைக்காமல் அதைப் பார்த்துக் கொண்டிருக்கையில் பாரி சொன்னான் ``பெரும்புகழை அணைத்துக்கொள்ளும் மாவீரர்களுக்காக, களம் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.”

வேந்தனுக்கு இதுவரை யாரும் தந்திராத வரவேற்பைத் தர வேண்டும் என்று இரவு பகலாகப் பணியாற்றிக்கொண்டிருந்தது வெங்கல்நாடு. குலசேகரபாண்டியனின் காலடி வெங்கல்நாட்டு அரண்மனையில் பதிந்தபோது, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து தொட்டு வணங்கி வரவேற்றார் மையூர்கிழார். பறம்பின் மீதான போர் பற்றிய முடிவெடுக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குமேல் ஆகிவிட்டது. இந்த முடிவு எடுக்கப்பட்டவுடன் தனது அரண்மனையில் புதிய மாளிகை ஒன்றைக் கட்டத் தொடங்கினார் மையூர்கிழார். இந்தப் போரில் குலசேகரபாண்டியன் நேரடியாகக் கலந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. அப்படி அவர் வந்தால் தங்குவதற்காக இந்த ஏற்பாட்டைச் செய்தார்.

பாண்டியப் பெருவேந்தனின் தங்கல்மாளிகை பேரழகோடு வடிவமைக்கப்பட்டிருந்தது. `கொற்றர்களின் தாய்நிலம்’ என்று வர்ணிக்கப்படும் வெங்கல்நாடு, அதிசிறந்த மாளிகையை வடிவமைத்திருந்தது. பேரரசர் உள்நுழைந்ததும் அதன் சுதை வேலைப்பாட்டிலும் வண்ண ஓவியத்திலும் வியந்து நிற்பார் என மையூர்கிழார் எதிர்பார்த்தார். குலசேகரபாண்டியனின் கண்களுக்கு அவை எவையும் தெரியவில்லை. அவர் பார்க்க நினைப்பது மாளிகையை அன்று, வெங்கல்நாட்டின் நிலவியல் அமைப்பை; பறம்பு மலையின் வாகினை; தாக்கி முன்னேறவும் தற்காத்து நிற்கவுமான நிலப்பரப்பை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83d_1523353803
மறுநாள் அதிகாலை, கவசவீரர்களின் அணிவகுப்பினூடே நிலப்பரப்பைப் பார்வையிடப் புறப்பட்டார் குலசேகரபாண்டியன். வேட்டுவன் பாறைக்கு மூன்று காத தொலைவிலிருந்து வெங்கல்நாடு தொடங்குகிறது. மையூர்கிழார் முதலில் அங்குதான் வேந்தரை அழைத்து வந்தார். அங்கிருந்து எதிரில் தெரியும் காரமலையைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார். பின்னர் தென்மேற்குத் திசை நோக்கி வேந்தரின் தேர் நகர்ந்தது. தேருக்கு முன்னால் கருங்கைவாணனும் பொதியவெற்பனும் குதிரையில் அணிவகுத்தனர். அவர்களுக்கு முன்னால் காவல்வீரர்கள் சென்றனர். இதேபோல, தளபதிகளும் வீரர்களும் பின்புறமும் அணிவகுக்க, வேந்தரின் தேர் நகர்ந்துகொண்டிருந்தது.

தேரின் இடதுபுறமாகக் குதிரையில் வந்தபடி மலையையும் அதற்கு மேலே இருக்கும் ஊர்களையும் விளக்கினார் மையூர்கிழார். மழைக்காலம் தொடங்கிவிட்டதால், நிலத்தின் தன்மையை மதிப்பிடுவது சற்று எளிதாக இருந்தது. பதியும் குதிரைகளின் குளம்படிகளையும் தேர்ச்சக்கரத்தின் தடங்களையும் கூர்ந்து பார்த்தபடியே பயணித்தார் வேந்தர்.

வெள்ளடிக்குன்றின் அடிவாரத்தை அடைந்தனர். அங்கிருந்துதான் பாண்டியர் படை தங்கியுள்ள கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேரரசரின் வருகையைக் கண்டு வீரர்கள் ஆயுதங்கள் ஏந்தி, பெருமுழக்கம் செய்தனர். மிகத் தள்ளி பேரரசரின் தேர் பயணப்பட்டுக்கொண்டிருந்தது. வீரர்களின் ஆவேச ஒலி மலையெங்கும் எதிரொலித்தது. பேரரசரின் கவனம் வெள்ளடிக்குன்றின் உயரத்தின் மீதே இருந்தது.
 
``அந்த ஊரின் பெயரென்ன சொன்னாய்?” எனக் கேட்டார்.

`எந்த ஊரைக் கேட்கிறார்?’ என்று சற்றே குழப்பமானார் மையூர்கிழார்.

``முதலில் சொன்ன ஊரின் பெயர்?”

``வேட்டுவன் பாறை பேரரசே” என்று பணிந்து சொன்னார்.

``அது அவர்களின் காவல் தலைவர்கள் இருக்கும் ஊர் என்று சொல்கிறாய். பின்னர் ஏன் படையை இவ்வளவு அருகில் தங்கவைத்துள்ளாய்?” எனக் கேட்டார்.

யாரிடமும் பதிலில்லை.

குதிரைகள் மீண்டும் புறப்பட்டுப் போயின. வரிசையாகக் குன்றுகளின் பெயரையும் தன்மையையும் அப்பால் உள்ள ஊர்களின் பெயர்களையும் சொல்லியபடி வந்தார் மையூர்கிழார். இடதுபுறம் பாண்டியப்படையின் வீரர்கள் வெற்றிக்கூச்சல் எழுப்பியபடி இருந்தனர். பேரரசரின் வருகையால் வீரர்களின் உணர்வு எல்லைகடந்ததாக இருந்தது. படைவீட்டின் இறுதி எல்லை இருக்கும் நெடுங்குன்றம் வரை நிற்காமல் வந்தடைந்தனர். காரமலையின் தன்மைகளை அண்ணாந்து பார்த்தபடி நின்றார்.

வெள்ளடிக்குன்று தொடங்கி நெடுங்குன்று வரை தெற்கு வடக்காகப் பாடிவீடுகள் அமைக்கப்பட்டதன் காரணத்தைக் கருங்கைவாணன் சொல்ல முற்பட்டான்.

பேரரசரோ ``படை தங்குவதற்கான பாடிவீடுகள் இங்கிருந்து தொடங்கி, தென்திசையில் அமையட்டும்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

`இவ்வளவு ஏற்பாடுகளையும் இனி மாற்ற வேண்டுமா?!’ என்ற அதிர்ச்சி எல்லோர் முகங்களிலும் தெரிந்தது. அவர் சொன்னதற்கான காரணம் எவ்வளவு சரியானது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

மழைக்காலம் தீவிரமடையத் தொடங்கியது. நெடுங்குன்றத்திலிருந்து வெள்ளடிக்குன்று வரை அமைக்கப்பட்ட பாடிவீடுகளையும் படை அமைப்புகளையும் வேந்தர் சொன்னபடி மாற்றும் பணியைத் தொடங்கினர். வெள்ளடிக்குன்றிலிருந்து தொடங்கி, தென்திசையில் நீண்டது படையமைப்பு.

வெங்கல்நாட்டு மாளிகை முழுவதும் போர்ப்பாசறையானது. உணவு தானியங்களுக்கான சேமிப்புக்கலன்களாக அவற்றில் பல உருமாறின.  பாண்டியநாட்டுப் படை பல்வேறு சிற்றரசர்களின் பகுதிகளில் பரவலாக முகாமிட்டிருந்தது. மழைக்காலம் முடிவடைவதற்காக அவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். மழை தீவிரமடைவதற்கு முன், புது விருந்தினர் வெங்கல்நாட்டுக்கு வந்தனர். அவரது வருகை, பேரரசருக்குத் தெரிவிக்கப்பட்டது.

குலசேகரபாண்டியன் அவரின் வருகையை எதிர்பார்த்திருந்ததால் வியப்பேதும் அடையவில்லை. ``உள்ளே அழைத்துவரச் சொல்” என்றார்.

சிறியதேயானாலும் எழில்மிகு மாளிகைக்குள் நுழைந்தான் ஹிப்பாலஸ். வஞ்சிமாநகரில் சேரனின் போர் உத்திகளைக் கண்டு வியந்தவன், அங்கிருந்து புறப்பட்டுப் புகாரை அடைந்தபோது செங்கணச்சோழனின் படையெடுப்பையும் அதற்கான காரணத்தையும் கேட்டுத் திகைப்புற்றவன், பாரியை வீழ்த்தும் வல்லமைகொண்டவர்களாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் காட்சியளிப்பதாக நம்பியவன், இறுதியில் தாக்குதலின் முடிவுகளால் நம்பிக்கையற்றவனாக மாறி நின்றான்.

இரு வேந்தர்களும் முழுமுற்றாகத் தோல்வியடைந்த பிறகும் பெருவேந்தனான குலசேகரபாண்டியன் மிக நிதானமாகத் தனது படையெடுப்புப் பணிகளை நடத்தி வருவதறிந்து இந்த இடம் வந்துசேர்ந்துள்ளான். உடன்வந்த கால்பாவும் எபிரஸ்ஸும் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தனர்.

ஹிப்பாலஸ், பேரரசரை வணங்கி நின்றான். அவரோ அவனை அணைத்து வரவேற்றார். ``சேரனின் மீதும் சோழனின் மீதும் பாரி நடத்திய தாக்குதலின் முழுவிவரங்களும் நீங்கள் அறிவீர்கள்தானே” என்று பேச்சைத் தொடங்கினான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83e_1523353816
அந்தப் படையெடுப்புகள் பற்றியும் அங்கு நிகழ்ந்த பேரழிவுகள் பற்றியும் பரிமாறிக்கொள்ள இருவரிடமும் எண்ணிலடங்காத செய்திகள் இருந்தன. அன்றிரவு முழுவதும் அவை பற்றியே பேசினர். போர்க்களத் தாக்குதல்களைப் பற்றி தான் அறிந்துள்ளவை எவ்வளவு குறைவானவை என்பதை ஹிப்பாலஸ் உணருவதற்கு வெகுநேரமாகவில்லை. குலசேகரபாண்டியன் சொன்ன செய்திகள் ஹிப்பாலஸ்ஸை உறையவைத்தன. ``மற்ற இருவரும் இழைத்த தவறுகளை நாங்கள் இழைக்க மாட்டோம்” என்று குலசேகரபாண்டியன் சொன்ன கூற்று நம்பிக்கையின் அடிப்படையிலானது மட்டுமன்று, நுட்பமான திட்டமிடலுடன்கூடியது என்பதை ஹிப்பாலஸ்ஸால் உணர முடிந்தது. ஆனாலும் அவன் கேட்டான் ``அவர்களைப்போல் அல்லாமல் உங்களின் தாக்குதல் எந்த விதத்தில் வேறுபடப்போகிறது?”

``கழுகுக்கும் மலைக்காடைக்கும் வேறுபாட்டை அறிவீர்களா?”

பேரரசர் என்ன சொல்ல வருகிறார் என்பது ஹிப்பாலஸுக்குப் புரியவில்லை.

``நானே சொல்கிறேன். கழுகு, தனது இரையை நிலமெங்கும் தேடிப்போய் வேட்டையாடும். மலைக்காடை, நிலமெங்கும் இருக்கும் இரையைத் தனது கூட்டுக்கு வரவழைத்து வேட்டையாடும்” என்றார்.
வியப்புற்றபடி, ``எப்படி?!” எனக் கேட்டான்.

பேரரசர் சொன்னார், ``மலைக்காடை, பாறை இடுக்குகளில் இருக்கும் நாகர வண்டின் இறகுகளைக் கொத்திக் கொண்டுவந்து தனது இருப்பிடத்தில் வைத்துக்கொள்ளும். நாகர வண்டின் மணம் காற்றில் கண நேரத்தில் பரவக்கூடியது. அந்த மணத்தை நுகர்ந்தவுடனே காட்டில் உள்ள வண்டினங்கள் எல்லாம் அதை நோக்கிப் பறந்துவரும். சில்வண்டு தொடங்கி எரிவண்டுகள்  வரை அதை நோக்கி வந்தவண்ணமேயிருக்கும். தனது கூட்டில் இருந்தபடியே வந்துசேரும் வண்டினங்களை வளைத்து வளைத்து வேட்டையாடும் மலைக்காடை” என்றார்.

ஹிப்பாலஸ் தனது மனக்கண்ணில் மலைக்காடையை உருவகப்படுத்த முயன்றபோது குலசேகரபாண்டியனின் முகமே தெரிந்தது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 16, 2018 9:41 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83a_1524046592
ஹிப்பாலஸ் வஞ்சி நகரை அடைந்து ஒரு வாரத்துக்குப் பிறகுதான் கால்பா புகார் நகரைச் சென்றடைந்தான். இருவரும் குலசேகரபாண்டியனின் திட்டத்தை இரு பெருவேந்தர்களிடமும் விளக்கினர். பறம்பிடம் தோற்றதால் இருவருமே அவமானப்பட்டுக் குறுகிக்கிடந்தனர். செங்கணச்சோழன் கால் எலும்பு முறிந்து உயிர் பிழைத்ததே பெரும்பாடாகிப்போனது. வலதுகாலை இழுத்து இழுத்து, கோலின் துணைகொண்டே நடக்கும் நிலையில் இருந்தான். ஆனால், பறம்பை அழித்தொழிக்கும் வாய்ப்பு பாண்டியனின் மூலம் கிடைக்கிறது எனத் தெரிந்த கணமே வெகுண்டெழுந்தான். தந்தை சோழவேலன், `சற்றே நிதானித்து முடிவெடுப்போம்’ என்று சொல்வதற்கான இடமே அன்றைய அரசவையில் எழவில்லை. சோழப்படையின் அத்தனை ஆற்றல்களையும் கொண்டுவந்து குவிக்க ஆயத்தநிலையில் உள்ளதாக அறிவித்தான்.

உதியஞ்சேரல் சட்டென முடிவெடுத்துவிடவில்லை. `மலைப்பகுதியில் இவ்வளவு திறன்மிகுந்த ஏற்பாடுகளைச் செய்துமே நம்மால் தாக்குதலில் வெற்றிகொள்ள முடியவில்லை; சமவெளிப் போரில் பாரியை வீழ்த்த முடியுமா?’ என்று சிந்தித்தபடியே இருந்தான். ஹிப்பாலஸ், பொறுமையாகப் பல விளக்கங்களைக் கொடுத்தான். சேரனும் சோழனும் என்ன காரணத்துக்காகப் பறம்பின் மீது படை யெடுத்தார்களோ, அந்தச் செல்வங்களை அவர்களே எடுத்துக்கொள்ளட்டும்; தனக்குத் தேவை பறம்பின் வீழ்ச்சி மட்டுமே என குலசேகரபாண்டியன் தெளிவுபடுத்திவிட்டான் என்பதை மீண்டும் மீண்டும் கூறினான்.

தேவாங்கு, கொல்லிக்காட்டு விதை, பாழிநகர் மணிக்கற்கள் என அனைத்தின் மீதும் ஹிப்பாலஸின் கனவு நிலைகொண்டிருந்தது. அதனால்தான் பாண்டியனின் போர்த் திட்டத்தோடு மற்ற இரு பேரரசுகளையும் இணைக்கும் வேலையில் முனைந்து ஈடுபட்டான்.

சேரனும் சோழனும் பாரியிடம் தோல்வியைத் தழுவியுள்ளனர். இந்நிலையில், அவனை எப்படியாவது அழிக்க வேண்டும் எனத் தீவிரத்தோடு போர்புரிவர். அதுமட்டுமன்று, தனது தலைமையில் நடக்கும் ஒரு போரில் அவர்கள் பங்கெடுப்பதே பாண்டியப் பேரரசின் முதன்மையை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் செயல்தானே! ஒரு போர் தொடங்கும்போதே மறைமுகமாக உயர்வை வழங்குவதை எண்ணி மகிழ்ந்தார் குலசேகரபாண்டியன். அதனால்தான் ஹிப்பாலஸை இந்தச் செயலை நோக்கித் தூண்டினார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83b_1524046606
மூன்று பேரரசுகளும் அவை உருவான காலம்தொட்டு தங்களுக்குள் சமரசம் செய்துகொண்டதில்லை. உள்ளுக்குள் எரியும் பகையெனும் நெருப்பை அவை ஒருபோதும் அழித்துக்கொண்டதில்லை. சிற்றரசுகளையும் சிறுகுடிகளையும் வீழ்த்துவதில் இன்றளவும் பேரரசுகளின் படைகளுக்கிடையான மோதல் தவிர்க்க முடியாததாகத்தான் இருக்கிறது. ஆனாலும் யவன வணிகத்தால், கடந்த சில தலைமுறைகளாக மூன்று பேரரசுகளும் பெருஞ்செல்வச்செழிப்பை எட்டியுள்ளன. அரசின் வலிமையை ஆளும் நிலப்பரப்பு மட்டும் தீர்மானிப்பதில்லை; அதனிடமிருக்கும் செல்வங்களும் முக்கியமானவை என்பதை உணர்ந்துள்ளன. அதனால்தான் முத்துகள் கொழிக்கும் கடல்வளத்தையும், மிளகு தொடங்கி எண்ணிலடங்காத வாசனைப் பொருள்களும் மருத்துவப்பொருள்களும் விளைந்துகிடக்கும் மலைவளத்தையும் தனதாக்கிக்கொள்ள விடாமல் முயல்கின்றனர். ஹிப்பாலஸின் இந்த முயற்சிக்கு மூன்று பேரரசுகளும் இசைவு தெரிவித்தது இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியே. இத்தனை காலங்களாக எந்த வளத்துக்காக இந்த மூவரும் தனித்தனியே போரிட்டார்களோ, அதே நோக்கத்துக்காகத்தான் இப்போது மூவரும் இணைந்து போரிட முடிவுசெய்துள்ளனர். இந்தப் போர், வெளிப்படையாக எதிரியை நோக்கியது. ஆனால், ஆழத்தில் உடன் இருப்பவரின் இழப்பைக் கண்டு மகிழக்கூடியது.

பாரி வேட்டுவன்பாறைக்கு வந்ததிலிருந்து போர்ச்சூழலைப் பற்றிய உரையாடல்கள் நாள்தோறும் நடந்தபடியே இருந்தன. ``தாக்குதலுக்கு எல்லா வகையிலும் நாம் ஆயத்தமாக வேண்டும்’’ என, தொடர்ந்து வற்புறுத்தப்பட்டது.

``நாம் இறங்கிப்போய்த் தாக்கப்போவதில்லை; எதிரி மலையேறி வந்தால் நாம் தாக்குவதற்குப் புதிதாய் எதுவும் தேவையில்லை. பிறகு ஏன் பதற்றமடைகிறீர்கள்?” என்றான் பாரி.

பாரியின் கருத்தை மறுத்து உரையாடுதல் எளிய செயலன்று. தேக்கன் மட்டுமே மிக எளிதாக அதைக் கைக்கொள்வான். சற்றே தயங்கி, ஆனால் உறுதியாகப் பேசக்கூடியவன் முடியன். வேட்டூர் பழையன் பாரியின் கூற்றுக்கு மறுப்பாகத்தான் பேசத் தொடங்குவார். ஆனால், அவன்மீதுள்ள வாஞ்சையால் எப்போது திசைமாறினோம் என்பதை அறியாமலேயே பாரியின் கருத்துக்கு உடன்பட்டுப் பேசிக்கொண்டிருப்பார். இவர்கள் எல்லோரிலும் ஒரேயொரு விதிவிலக்கு வாரிக்கையன் மட்டும்தான். அவருடன் பேசும்போது பாரியிடம் ஏற்படும் மாறுபாட்டை மற்றவர்கள் எளிதில் உணர முடியும். ஏனெனில், பாரியின் தந்தையே அவரின் சொல்கேட்டு வளர்ந்தவர்தான். வாரிக்கையன் இன்னும் எவ்வியூரில்தான் இருக்கிறார். போர்க்களம் பற்றிய தற்போதைய உரையாடலில் அவர் கருத்துகள் ஊடாடவில்லை.

மழைக்காலம் தொடங்கியது. பாண்டியர் படையின் பாடிவீட்டுக் கூடாரங்கள் தென்திசை நோக்கி இடமாறத் தொடங்கின. ஆயிரக்கணக்கான பொருள்களின் இடப்பெயர்வு நடந்தது. எண்ணற்ற யானைகள் இந்தச் செயலில் ஈடுபடுத்தப்பட்டன. இவர்கள் என்னதான் செய்கிறார்கள் என்பதைப் பறம்புவீரர்கள் மலையின் மீதிருந்து கவனித் தபடியே இருந்தனர். வெள்ளடிக்குன்றிலிருந்து நெடுங்குன்று வரை கூடாரம் அமைத்திருந்த படை,  இப்போது  முழுமுற்றாக நெடுங்குன்றி லிருந்து தென்புறமாக இடமாறிக்கொண்டிருந்தது. வேட்டுவன்பாறை என்பது பறம்பின் மிக முக்கியமான இடம் என்பதால், தங்களின் இருப்பிடத்தை மிகவும் தள்ளிக்கொண்டு போகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

மயிலா கருவுற்றிருந்ததால் அவளுக்குக் கனிகளைக் கொடுத்து உபசரிக்க ஆதினியை வரச்சொல்லியிருந்தான் பாரி. அவளும் தன் தோழிகளோடு வேட்டுவன்பாறைக்கு வந்திருந்தாள். சில நாள்கள் அங்கேயே தங்கியிருந்தான் பாரி. அடைமழை முடிவுற்ற மறுநாள் பறம்பின் வீரன் ஒருவன் பாரி இருந்த குடில்நோக்கி ஓடிவந்தான். அவன் சொன்ன செய்தி கேட்டு எல்லோரும் குன்றின் மேல் ஏறி நின்று பார்த்தனர். தென்திசையிலிருந்து பெரும்படை ஒன்று அணியணியாய் வந்துகொண்டிருந்தது. படையின் முன்னணி வீரன் ஏந்தியிருந்த பதாகையில் சேரனின் வில் பொறிக்கப்பட்டிருந்தது. அடுத்த பத்தாம் நாள் வடதிசையிலிருந்து வந்த படை அணியினர் புலிக்கொடி ஏந்திய பதாகையைச் சுமந்துவந்தனர். இதுவரை காரமலையின் அடிவாரம் இருந்த மூன்று குன்றுகளின் மேலிருந்து பறம்புவீரர்கள் கண்காணித்து க்கொண்டிருந்தனர். இப்போது ஆறு குன்றுகளின் மேலிருந்து கண்காணிக்கவேண்டியிருந்தது. வந்து குவியும் படைவீரர்களின் எண்ணிக்கை எல்லையில்லாத விரிவை எய்திக்கொண்டிருந்தது.

மூவேந்தர்களும் படையை ஒரு முனையில் குவிக்கின்றனர் என்ற செய்தி உறுதிப்பட்ட பிறகு, பறம்பின் எல்லா திசைகளிலிருந்தும் வீரர்கள் கீழ்த்திசைக்கு அழைக்கப்பட்டனர்.  வாரிக்கையனும் கூழையனும் சில நாள் இடைவெளியில் வேட்டுவன்பாறைக்கு வந்துசேர்ந்தனர்.

ருவூலப் பொறுப்பாளர் வெள்ளி கொண்டாரைத் தவிர மதுரையின் அரண்மனை நிர்வாகப் பொறுப்பிலிருந்த அனைவரும் வெங்கல்நாட்டுக்கு வந்துசேர்ந்தனர். குட்டநாட்டு அமைச்சன் நாகரையன் வந்துசேர்ந்தான். ஆயிமலையில் நடைபெற்ற தாக்குதலில் குடநாட்டுத் தளபதி எஃகல்மாடன் தலைமையிலான படை மட்டுமே முழுமுற்றாக அழிவுற்றது. குட்டநாட்டுத் தளபதி துடும்பன் தலைமையிலான படை பறம்புக்குள் நுழையாமலேயே நின்றுவிட்டது. இதன் பின்னணியில் உதியஞ்சேரலின் துரோகமும் அடங்கியுள்ளதாக நினைத்த குடநாட்டு வேந்தன் குடவர்கோ இன்னொரு கூட்டுப்போரில் பங்கெடுக்க விரும்பவில்லை. எனவே, குட்டநாட்டுப் படை மட்டுமே போர்க்களம் வந்தது. சேரநாட்டின் அமைச்சராக நாகரையனே விளங்கினான். சோழநாட்டு அமைச்சன் வளவன்காரியும் வந்து சேர்ந்தான். பாண்டியப் பேரரசின் தலைமை அமைச்சர் முசுகுந்தர் எல்லோரையும் ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.

அமைச்சர்களின் சந்திப்பு நடந்த பிறகுதான் வரப்போகும் படைகளின் தன்மையும் எண்ணிக்கையும் முழுமையாகத் தெரியவந்தன. அந்தப் படைகளுக்குத் தேவையான ஆயுதங்கள், அவற்றைச் செப்பனிடுவதற்கும் புதிதாக உருவாக்குவதற்கும் தேவையான ஏற்பாடுகள், உணவு ஏற்பாடுகள், பண்டகச்சாலைகள், மருத்துவர்கள், சிகிச்சைக்கான பகுதிகள், குதிரைகளுக்கும் யானைகளுக்குமான கட்டுத்தறிகள், போர்க்களத்துக்கான தேர்கள், அவற்றுக்கான பராமரிப்பாளர்கள்,  பிற கருவிகள், போர் விலங்குகளுக்கான தானியங்கள், கூலங்கள் ஆகிய எல்லாவற்றையும் செம்மையுறக் கணக்கிட்டனர்.

பறம்பின் தரப்பில் ஆயத்தங்களைத் தொடங்கவேண்டியதைப் பற்றிய உரையாடல் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. பாரி ஒப்புதல் வழங்கிய பிறகு சிறுபாழி நகரில் ஆயுதங்களை உருவாக்கிக்கொண்டிருந்த அத்தனை பேரும் கீழ்த்திசைக்கு இடம் மாறினர். மூவேந்தர்களின் போர்ப்பாசறை, வேட்டுவன் பாறையிலிருந்து பலகாதத் தொலைவில் இருப்பதால் தங்களின் இருப்பிடத்தையும் மாற்ற முடிவுசெய்தனர்.

வேந்தர்களின் படைக்கலக் கொட்டில் செம்மையுற வடிவமைப்பதற்கான வேலைகள் தொடங்கின. மதுரையிலிருந்து தலைமை அமைச்சர் முசுகுந்தர் வரும்போதே அவருடன் அரண்மனையின் தலைமைக் கணியன் அந்துவனும் வந்திருந்தான். மூலப்படைப் பாசறை அமைக்கப்போகும் நிலப்பகுதிக்கு, மூன்று நாட்டு அமைச்சர்களும் அந்துவனும் மாணாக்கர்கள் சிலரும் புறப்பட்டுப் போயினர். அவர்கள் சென்று சேரும்போது மையூர்கிழார் வரவேற்க நின்றுகொண்டிருந்தார். உடன் பூசகர்களின் குழு ஒன்றும் இருந்தது. முசுகுந்தர் அந்தப் பெரும்நிலப்பரப்பைக் குதிரையில் இருந்தபடியே பார்த்தார். காரமலையின் அடிவாரத்தில் சற்றே திமில் முறுக்கியிருக்கும் பெரும்மேடாக அந்த இடம் இருந்தது. மேட்டின் நடுப்பகுதியில் இறங்கி நின்றனர். மழைநீரை எவ்வளவு குடித்தும் நெகிழ்ந்து கொடுக்காத இறுக்கத்தோடு மண் இருந்தது.

அவர்கள் வந்த சிறிது நேரத்தில் பாண்டியப் பேரரசின் சிறப்புமிக்க முதுயானையை அழைத்துவந்தனர். தாழம்பூ நிறத் தந்தமும் வட்டமாய் அகன்று நடுவில் குழிந்த கும்பங்களும் நீண்டுநெளியும் அழகான வாளும் நாண்பூட்டிய வில்லினையொத்த முதுகெலும்பும் உடைய `பவளவந்திகை’ எனும் பெயர்கொண்ட அந்த யானை, பாசறை நிலத்துக்கு வந்துசேர்ந்தது. உடன் மதுரையின் யானை கட்டுத்தறிப் பொறுப்பாளர் அல்லங்கீரனும் கோட்டைத் தளபதி சாகலைவனும் வந்தனர். 

வண்ணத்தட்டில் வைக்கப்பட்டிருந்த பூக்களையும் கனிகளையும்கொண்டு அந்த இடத்தில் சிறு வழிபாடு ஒன்றை பூசகர் நடத்தினர். பிறகு அந்துவன் கையசைத்து உத்தரவிட்டான். அதுவரை கீழே நின்றிருந்த பாகன், யானையின் மீதேறி அமர்ந்தான். பவளவந்திகை நடக்கத் தொடங்கியது. பாகன் தன்னுடைய கால்கள் பவளவந்திகையின் காதுகளின் பின்புறத்தைத் தொட்டுவிடாமல் மடக்கி வைத்துக்கொண்டான். எந்தத் திசைக்குப் போகவேண்டும் என்ற குறிப்பேதும் பாகனின் கால்கள் சொல்லாததால் யானை அதன் விருப்பத்துக்கு நடந்தது. அந்தப் பெருமேடு முழுவதும் குறுக்கும்நெடுக்குமாக நடந்த பவளவந்திகை மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு வந்துசேர்ந்தது.

இப்போது அந்துவன் தன் மாணாக்கர்களை அழைத்துக்கொண்டு யானையின் காலடிகளைப் பார்த்தபடியே உள்ளே போனான். யானையின் காலடி, ஆமையின் ஓடு போன்ற வடிவம் கொண்டது. வெளிவட்டம் மட்டுமல்ல, உள்ளேயும் ஆமையின் ஓட்டில் இருப்பது போன்று விண்மீன்களின் வடிவம்கொண்ட கோடுகள் இருக்கின்றன. யானையின் பாதத்தில் இருக்கும் ரேகைக்கோடுகள் அவை. யானையின் நான்கு காலடிகளும் நான்குவித ரேகைகளைக் கொண்டவை. பவளவந்திகையின் காலடிகள் அந்தப் பெருமேடெங்கும் பதிந்துகிடக்க அவற்றைக் கூர்ந்து கவனித்தபடி அந்துவனும் அவன் மாணாக்கர்களும் நடந்து கொண்டிருந்தனர்.

காலடியின் அச்சில் அசையாமல் பதிவுகொண்ட விண்மீன்களின் வடிவு எந்தத் திசைநோக்கி அமைந்திருக்கிறது என்பதைக் கணித்தபடி ஒவ்வொரு தடத்தையும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

மழையின் ஈரம் காயாமல் இருந்ததால் காலடித்தடத்தின் உட்கோடுகள் மண்புழுக்களைப் போல் எங்கும் நெளிந்து கிடந்தன. மாணாக்கர்கள் தேர்வுசெய்த காலடிகளை அந்துவன் போய்ப் பார்த்தபடியிருந்தான். நெடுநேரமானது. ஆனாலும் காலடியின் உள்வடிவங்களை உற்றுப்பார்த்து ஒன்றொடு ஒன்றை ஒப்பிட்டுக் கொண்டிருந்தான் அந்துவன். இறுதியாக மூன்று காலடிகளைத் தேர்வுசெய்தான். பெருமேட்டின் உச்சிப்பகுதியில் அமைந்த காலடித்தடத்தில் பாண்டியப் பெருவேந்தனுக்கான பாசறையை அமைக்க இடம் குறித்தான். அதிலிருந்து மிகத்தள்ளித் தென்புறக் காலடித்தடத்தில் சேரவேந்தனுக்கான இடத்தையும் வடகிழக்குப் பகுதியில் சோழனுக்கான இடத்தையும் அந்துவன் தேர்வுசெய்து தந்தான்.

மூன்று பேரரசர்களும் தங்கப்போகும், அவர்களைச் சுற்றிப் பல்லாயிரம் வீரர்கள் மொய்த்துக்கிடக்கப்போகும் அந்த இடத்துக்கு `மூஞ்சல்’ எனப் பெயரிட்டார் முசுகுந்தர். மூலப்படை நிலைகொள்ளப்போகும் படைக்கலக் கொட்டில் மூஞ்சலில் உருவாகத் தொடங்கியது. பேரரசர்களின் பாசறைக் கூடாரம் மிகப் பெரியதாகவும் வசதிமிக்கதாகவும் உட்பாதுகாப்பு அரண்கொண்டதாகவும் அமையத் தொடங்கியது. அவர்களைச் சுற்றி இளவரசர்களும் முக்கியமான சிற்றரசர்களும் தங்குவதற்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. 

குவிக்கப்படும் படைகளை விட்டு மிகத்தள்ளி, பெருமேடு ஒன்றில் விரிவுகொண்ட கூடாரங்கள் எண்ணற்றன அமைக்கப்படுவதை, குன்றின் மேல் நின்று பறம்புவீரர்கள் பார்த்தபடியிருந்தனர். எதிரிப்படைகள் குவிக்கப்ப ட்டிருக்கும் இடத்தை  நோக்கி அதற்கு நேரெதிர்த் திசையில் தங்களுக்கான இடத்தைத் தேக்கன் தேர்வுசெய்தான். காரமலையின் சரிவில் நாகக்கரடு இருக்கிறது சில காதத்தொலைவுக்கு நீண்டுகிடக்கும் கரட்டுமேடு இது; வேட்டுவன்பாறை யளவே உயரம்கொண்டது. பறம்பின் வீரர்கள் நிலைகொள்ள இது ஏற்ற இடம் என்று தேக்கன் முடிவுசெய்தான்.

அவற்றுக்குச் சற்று மேலே காரமலையில் இருபது பனை உயரத்தில் இரலிமேடு இருக்கிறது. எண்ணற்ற குகைப்பாறை களைக்கொண்ட இடம் அது. ஆயுதங்களை வைக்கவும் மருத்துவப் பயன்பாட்டுக்கும் ஏற்ற இடமாகவும் அது இருக்கும் எனக் கருத ப்பட்டாலும், அந்த இடத்தைத் தேர்வுசெய்யச் சற்றே தயங்கினான் தேக்கன். வாரிக்கையனோ துணிந்து தேர்வுசெய்யச் சொன்னான். காரணம், அந்தக் குகைகளின் தன்மை. வேர்க்கொடியைப்போல ஒன்றையொன்று இணைத்துச் செல்லும் எண்ணற்ற குகைகளைக்கொண்ட இடம் அது. மிக நன்கு பழக்கப்பட்டவர்களால் மட்டுமே அதற்குள் போய் வெளிவர முடியும். போரின்போது வீரர்கள் விரைவாக வந்து திரும்பும் தன்மையுடன் அமைவிடம் இருக்க வேண்டும் என்று தேக்கன் தயங்கினான். ஆனால் வாரிக்கையனோ, ``இதுதான் போருக்குப் பொருத்தமான அமைவிடம்’’ என்றான்.

இரலிமேட்டின் இடதுபுறம் இருந்த சமதளமான பகுதிகளிலும் மலைச்சரிவுகள் முழுமையும் குடில்கள் அமைக்கும் பணிகள் தொடங்கின. பறம்புவீரர்கள் எல்லா திசைகளிலிருந்தும் இரலிமேட்டுக்கு வரத் தொடங்கினர். ``இவ்விடம்தான் நாம் முகாமிட்டுள்ள இடம் எனத் தெரிந்த கணத்திலிருந்து, எதிரிகள் நம்மைக் கண்காணிப்பார்கள். மையூர்கிழார் ஆள்கள் அவர்களுக்கு நன்கு உதவிசெய்யக்கூடும். எனவே, பறம்புவீரர்கள் இரலிமேட்டுக்கும் நாகக்கரட்டுக்கும் வந்து சேர்வதையே எதிரிகளால் கணிக்க முடியாதபடி இருக்க வேண்டும்” என்றார் வாரிக்கையன்.

``இரவு அடிக்கடி மழை பெய்வதால், சுளுந்துக் கம்பை வெட்டி, பந்தம் ஏற்றுங்கள்’’ என்றார். சுளுந்துக் கம்பைக் கூராக வெட்டி பந்தம் ஏற்றினால் அது அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும். கீழே போட்டு மண் அள்ளிக்கொட்டினால்தான் அணையும். மற்றபடி மழைத்துளிக்கெல்லாம் எளிதில் அணையாது.

சமதளத்திலிருந்து பார்த்தால் குகையின் தன்மையை எளிதில் மதிப்பிட முடியாது. ஒவ்வொரு குகைக்குள்ளும் எண்ணிலடங்காத வீரர்கள் தங்கியிருக்க முடியும். குகைகளின் தன்மை, நீர்க்கசிவுகொண்ட குகைகள், நன்கு காற்றோட்டம் உள்ள குகைகள், மாட்டு மந்தைகளையே அடைக்கக்கூடிய பரப்பைக் கொண்ட குகைகள் என அத்தனையையும் வகை பிரித்து வீரர்களுக்கு விளக்கினார் வாரிக்கையன்.

குகைகளுக்குள் உரிய இடங்களில் விளக்குகளை அமைத்து, குறியீடுகளை உருவாக்கினார். பறம்புவீரர்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். சிறுபாழியில் இருந்த தொழிற்கூடங்கள் அத்தனையும் இரலிமேட்டுக்கு இடம்பெயர்ந்தன. பெரும்பான்மையான குகைகள் ஆயுதக்கூடங்களுக்காக மட்டுமல்லாமல் உலைக்களங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டன. மிகவிரிந்த நிலவமைப்பும் காற்றோட்டமும் கொண்ட குகைகள் உலைக்களங்களால் நிரம்பின. அவை மட்டுமல்லாமல் வெளிப்புறத்திலும் எண்ணற்ற உலைக்களங்களை அமைத்துக் கொண்டிருந்தனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83c_1524046623
குதிரைகளுக்கான கட்டுத்தறிகள் இரலிமேட்டின் தென்புறச் சரிவில் அமைக்கப் பட்டுக்கொண்டிருந்தன. குகைகளுக்கும் கட்டுத்தறிகளுக்கும் இடையில் உணவுக் கூடங்களை அமைத்தனர். மருத்துவக்கூடங்கள் அமைப்பது பற்றிப் பேசப்பட்டது. ``இந்தப் போரில் மருத்துவர்களின் பணி மிக முக்கியமானதாக இருக்கப்போகிறது. எனவே, முறியன் ஆசானை அழைத்துவர வேண்டும்’’ என்றார் பழையன்.

நோய்க்கான மருந்தைத் தருவதில் வல்லவர்கள் எண்ணற்றோர் உள்ளனர். ஆனால், போரில் ஏற்படப்போவது காயங்களும் முறிவுகளும்தான். அவற்றுக்கு மருந்தளிப்பதில் மிக வல்லவர் முறியன் ஆசான்தான். பச்சைமலையின் வடதிசையில் ஓடும் மறையாற்றின் கரையில் அவர் இருக்கிறார். ``வயதாகி மிகத் தளர்ந்த அவரை இவ்வளவு தொலைவு வரவழைக்க வேண்டுமா?” எனத் தயங்கினான் தேக்கன்.

வாரிக்கையனோ, ``கட்டாயம் அவர் இங்கு நம்மோடு இருக்க வேண்டும்” என்றார்.

சிவிகையில் உட்காரவைத்துத் தூக்கிவரும் எண்ணத்தோடு செய்தி அனுப்பப்பட்டது. முதலில் தயங்கிய முறியன் ஆசான், பிறகு ஒரு நிபந்தனையோடு வர ஒப்புக்கொண்டார். “எனது சிவிகையைத் தூக்கிவர இருவரை மட்டுமே அனுப்ப வேண்டும். அவர்களும் என்னைக் கொண்டுவந்து சேர்க்கும் வரை உணவேதும் உண்ணக் கூடாது.”

தேக்கன் உள்ளிட்ட எல்லோரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். ``பத்திலிருந்து பன்னிரண்டு நாள் பயணத் தொலைவை எப்படி உணவின்றிக் கடக்க முடியும்? அதுவும் சிவிகையைத் தூக்கிக்கொண்டு!” எனப் பலரும் தயங்கியபோது வாரிக்கையன் சொன்னார், ``மலைப்பாதையில் உணவு ஏதுமின்றி சிவிகையைத் தூக்கிவரும் வீரர்கள் இரண்டு அல்லது மூன்று நாள்கள் வர முடியும். அதற்குப் பிறகும் அவர்கள் ஓடிவந்தால் மயக்கமடைந்து வீழ்வார்கள். அவர்களை குணப்படுத்தி மீண்டும் சிவிகையைத் தூக்கவைப்பது மருத்துவராகிய அவருடைய வேலை. நாம் ஏன் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்?” என்றார்.

சரியென ஒப்புக்கொண்ட தேக்கன், வலிமை மிகுந்த போர்வீரர்கள் இருவரைத் தேர்வுசெய்தான். ஆனால் வாரிக்கையனோ, ``அவர்கள் வேண்டாம்” என்று சொல்லி, தோற்றத்தில் எளிமையான இருவரை அனுப்பிவைத்தார்.

பன்னிரண்டு நாளில் வந்து சேரவேண்டிய அவர்கள் எட்டாம் நாள் காலையிலே வந்துசேர்ந்தனர். இதுதான் நடக்கும் என வாரிக்கையனுக்குத் தெரியும். எனவே, அவர் வியப்பேதுமடையவில்லை. ஆனால், மற்ற அனைவரும் வியப்பால் கிறங்கிப்போனார்கள். சிவிகையைத் தூக்கிவந்த இருவரும் புறப்பட்ட இடத்திலிருந்து இப்போதுவரை உணவு ஏதும் உண்ணவில்லை; முழுவேகத்தோடு வந்துசேர்ந்துள்ளனர் என்ற செய்தி வீரர்கள் எல்லோருக்கும் பரவியது. எப்படி இது நடந்தது எனப் பலரும் பேசிக் கொண்டிருக்கையில் மருத்துவர்களிடமிருந்து உண்மை வெளிவந்தது, ``முறியன் ஆசான் செய்து வைத்துள்ள திங்கள் மூலிகையை உட்கொண்டால், பல நாள்களுக்குப் பசியெடுக்காது; ஆற்றலும் குறையாது” என்று.

மருத்துவனின் வருகை மருத்துவத்தால் அறியப்பட வேண்டும். முறியன் ஆசானின் வருகை அப்படியே அறியப்பட்டது. பறம்பின் அனைத்து வகையான மருத்துவர்களும் முன்னரே இரலிமேட்டுக்கு வந்துசேர்ந்தனர். மருத்துவப் பேராசானோடு பணிசெய்யும் வாய்ப்புக்காகப் பல காலம் காத்திருந்தவர்கள் அவர்கள்.

போர் என்பது, எதிரிகள் இருவருக்கிடையில் நடப்பது மட்டுமன்று; வீரர்களுக்கும் மருத்துவர்களுக்கு மிடையில் நடப்பதும்கூட. எதிரிகளுக்கு மருத்துவனால் குணப்படுத்த முடியாத காயங்களை உருவாக்கவே ஒவ்வொரு வீரனும் நினைக்கிறான். `எதிரிகள் எவ்வளவு காயத்தை உருவாக்கினாலும் குணப்படுத்தி மீண்டும் வீரனை வாள் ஏந்தவைப்பேன்’ என்றே ஒவ்வொரு மருத்துவனும் மூலிகைச்சாற்றைப் பிழிகிறான்.
மருத்துவனின் சிகிச்சை மீதிருக்கும் நம்பிக்கையே வீரனின் துணிச்சலைப் பல நேரங்களில் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு நாளும் போர் முடியும் கணத்தில்தான் போரை அறிந்துகொள்ளுதல் தொடங்குகிறது. அன்றைய இரவின் காட்சிகள்தாம் மறுநாள் அவனது மனஉறுதியைத் தீர்மானிக்கிறது. மரணமெய்தியவர்கள் மரணத்தின் மீது அச்சமூட்டுவதில்லை. உடல் சிதைக்கப்பட்டு, மருத்துவர்களால் எதுவும் செய்ய முடியாமல், எங்கும் கதறிய ஓசையோடு இழுபட்டுக் கிடப்பவர்கள்தாம் ஒவ்வொரு போர்வீரனையும் நிலைகுலையச் செய்கிறார்கள். அதனால்தான் போர்க்களத்தில் தாக்குண்டவர்களை மருத்துவசாலை நோக்கித் தூக்கிவரும் வேலையை வீரர்கள் செய்யக் கூடாது எனப் பேரரசுகள் விதிசெய்துள்ளன; அதைச் செய்வதற்குத் தனிப்படையை அமைத்துள்ளன. போரின் விதியை வீரனின் வாளும் மருத்துவனின் பச்சிலைகளும் இணைந்தே தீர்மானிக்கின்றன.

பறம்புவீரர்கள் இணையற்ற நம்பிக்கையோடு வாளினை ஏந்தவும் நாணினை இழுக்கவும் எதிரிப் படையைச் சிதைத்து முன்னேறவும், மருத்துவர்களும் முக்கியக் காரணம். அதுவும் முறியன் ஆசான் களம் நோக்கி வந்துள்ள செய்தி பறம்புவீரர்களுக்குக் கட்டற்ற வேகத்தைக் கொடுத்தது. மரணத்தை மிதித்து நடக்க ஒவ்வொரு வீரனும் ஆசைப்பட்டான்.

முறியன் ஆசான் இரலிமேட்டுக்கு வந்த அன்றுதான் மூஞ்சலில் வேந்தர்களுக்குக் கூடாரங்கள் அமைக்கும் பணி முடிவுக்கு வந்தது. மூஞ்சல் பகுதிக்கு மட்டும் தனித்துவமான பாதுகாப்பு அரண்கள் உருவாக்கப்பட்டன. மூவேந்தர்களுக்கு மூன்று பெருங்கூடாரங்கள். மூவரும் சந்தித்து உரையாட மாளிகை வடிவிலான பெருங்கூடாரம் ஒன்று. வேந்தர்களுக்கான பணியாளர்கள் மருத்துவர்கள், உணவுச்சாலைகள் ஆகியவற்றுக்காக மூன்று கூடாரங்கள். போரில் பங்கெடுக்கும் அரச குடும்பத்தினர் தங்குவதற்காக ஐந்து கூடாரங்கள் என்று மொத்தம் பன்னிரு கூடாரங்கள், ஆயுதப்பயிற்சிக்கான களம் என அனைத்தும்கொண்ட விரிவான அமைப்போடு மூஞ்சல் நகர் தயாரானது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83d_1524046637
மூஞ்சலின் பாதுகாப்புக்குத் தனித்த அரண் அமைக்கப்பட்டது. பெரும்பெரும் மரத் தூண்களாலும் ஆயுதங்களாலும் அமைக்கப்பட்ட அரண் அது. அரணுக்கு வெளியில்தான் படைகள் பலகாதத் தொலைவுக்குப் பரவியிருந்தன. இரவில் கடுங்குளிர் இருந்தாலும் பகற்பொழுதின் வெயில் இன்னும் சூடேறாமல்தான் இருந்தது. மூஞ்சலின் அரண்காவலர்கள் நான்கு முனைகளிலும் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு மேடையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தனர். தென்திசையில் நின்றிருந்த படை வீரர்களிடமிருந்து உற்சாகப் பேரோசை மேலேறிவந்தது.

கடல்போல் பரவிக்கிடந்த படைவீரர்களின் வாழ்த்தொலி முழங்க உதியஞ்சேரலின் தேர் தென்திசையிலிருந்து மூஞ்சல் நோக்கி வந்துகொண்டிருந்தது. தேருக்கு முன்னால் சேரநாட்டுத் தளபதி துடும்பன் குதிரையில் வந்துகொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் கவசவீரர்கள் அணிவகுத்து வந்தனர். நாணேற்றப்பட்ட வில்லைப் பதாகையில் தாங்கிய வீரன் முதலாவதாக வர, அவனைத் தொடர்ந்து அணியணியாய் சேரவீரர்கள் வந்து கொண்டிருந்தனர்.

மூன்று பேரரசுகளின் அமைச்சர்களாகிய முசுகுந்தரும் நாகரையரும் வளவன்காரியும் உதியஞ்சேரலை வரவேற்க மூஞ்சலின் வாயிலில் காத்துநின்றனர். முசுகுந்தர், பாண்டிய முறைப்படி அவருக்கான வரவேற்பை வழங்கினார். உதியஞ்சேரல் மூஞ்சலுக்குள் நுழைந்தான். அரசகுல முதுயானை பவளவந்திகை மாலை சூட்டி, வணங்கி, தனது முதுகின் மேலிருந்த அம்பாரியில் ஏற்றிக்கொண்டது.

மூஞ்சலின் வீதியெங்கும் நிறைந்துள்ள பாதுகாப்பு வீரர்களின் வாழ்த்தொலிகளை ஏற்றபடி தனக்கான பாசறைக் கூடாரத்துக்குள் நுழைந்தான் உதியஞ்சேரல்.

தான் நினைத்ததைவிட உதியஞ்சேரல் இளமையோடு இருக்கிறார் என்று கருதிய முசுகுந்தருக்கு, அவனுடைய தோளின் மேல் கருங்குரங்குக்குட்டி ஒன்று உட்கார்ந்திருப்பது ஏன் என்பது புரியவில்லை. 
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83e_1524046652
உதியஞ்சேரல் வந்த மறுநாள் சோழப் பேரரசனுக்கான வாழ்த்தொலிகளால் படைக்கலக்கொட்டில் குலுங்கியது. புலிக்கொடி ஏந்திய பதாகையை யானையின் மீது தாங்கிப்பி டித்த வீரன் முன்வர அவனைத் தொடர்ந்து பேரரசரின் தேர் வந்துகொண்டிருந்தது. தேருக்குள் தந்தையும் மகனும் இருந்தனர். செங்கணச்சோழனுக்குக் கால் முறிவுகொண்ட தால் அவனால் நின்று போரிட முடியாது. மற்ற இரு பேரரசர்களும் போரில் நேரடியாக ஈடுபடும்போது சோழப்பேரரசர் மட்டும் நேரடிப்போரில் ஈடுபடாமலிருந்தால் அது சோழநாட்டுக்குப் பேரவமானமாகும். எனவே, ``மகனின் சார்பில் நான் போரில் பங்கெடுப்பேன்” என்று கூறி, சோழவேலன் உடன்வந்தார்.

அன்று மாலை வீரமுண்டா வாத்தியம் இடியென முழங்கத் தொடங்கியது. பேரிகையின் ஓசையோ எல்லையில்லாத அதிர்வை உருவாக்கியது. எங்கும் போர்க்களத்துக்குரிய கருவிகள் இசைக்கப்பட்டன. அணிவகுத்து வந்த யானைகளின் மணியோசை பேரிகையை விஞ்சிக்கொண்டிருந்தது. வீரர்கள், விண்ணைப் பிளப்பதைப்போல முழக்கமிட்டனர். வெடிப்புற்ற தந்தமும் விளைந்த நகமும், முதுகினில் சங்கு வடிவப் புள்ளிகளையும்கொண்ட பாண்டியநாட்டுப் பட்டத்துயானையின் மீது அமர்ந்தபடி மூஞ்சலுக்குள் நுழைந்தார் குலசேகரபாண்டியன்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 16, 2018 10:02 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83a_1524635053
போர்க்கருவிகளின் தொகுப்பாக விளங்கும் படைக்கலப் பேரரங்கு, மூன்று இடங்களில் உருவாக்கப்பட்டது. பாண்டியனின் பேரரங்கு மூஞ்சலின் அருகில் இருந்தது. சேரனின் பேரரங்கு தென்புறமும், சோழனின் பேரரங்கு வடபுறமும் அமைக்கப்பட்டன. மூவேந்தர்களுக்கான போர்க்கருவிகள் முழுமையும் இங்குதான் சேகரித்துவைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பேரரங்கும் மூஞ்சல் நகரின் பரப்பளவைக்கொண்டிருந்தது. அவற்றுள் பத்துக்கும் மேற்பட்ட கூடாரங்கள் இருந்தன.

ஒவ்வொரு கூடாரத்திலும் ஒவ்வொருவிதமான ஆயுதம் வைக்கப்பட்டிருந்தது. ஆயுதங்களை ஒழுங்குமுறைப்படி அடுக்கிவைப்பதும், தேவைக்கேற்ப நாள்தோறும் அவற்றை எடுத்து போர்க்களத்துக்கு அனுப்புவதும் தனித்ததொரு கலை. இந்தக் கலையைச் செய்பவரை `ஆயுதவாரி’ என்று அழைத்தனர்.

நான்கு வகையான வில்களும் பதின்மூன்று வகையான அம்புகளும் போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொருவிதமான அம்புக்கட்டும் தனித்தனியே அடுக்கிவைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவற்றை எடுத்துத் தர வசதியாக இருக்கும். களம் புகும் வீரன் கையில் ஏந்தியிருக்கும் வில்லுக்குத் தகுந்த அம்புகள் அவனது அம்பறாத்துணிக்கு வந்துசேர வேண்டும்.

ஆயுதங்களை படைக்கலப் பேரரங்கிலிருந்து வீரர்களின் போர்ப்பாசறைக்கு நள்ளிரவுக்குள் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். பொழுது விடியும்போது அந்தப் பாசறையில் இருக்கும் வீரர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் அவர்களின் கண்கள் முன் பளிச்சிடவேண்டும். `என்னை ஏந்திக்கொள்’ என்ற ஆயுதங்களின் அழைப்பை வீரர்கள் உணரவேண்டும்.

படைப் பிரிவுகளின் தன்மைக்கேற்ப குறிப்பிட்ட வகை வில்லை மட்டுமே பயன்படுத்துபவராக ஒவ்வொரு பிரிவினரும் இருப்பர். அந்த வகை வில்லுக்குப் பொருத்தமான அம்புக்கட்டுகள் அங்கு வந்துசேர வேண்டும். அதில் ஏதாவது குழப்பம் நிகழ்ந்தால், அதிகாலையிலேயே சிக்கல் உருவாகிவிடும். எனவே, ஆயுதங்களை பாசறைக்குப் பிரித்துத் தரும் பொறுப்பை வகிக்கும் `ஆயுதவாரி’ மிக முக்கியமானவராகக் கருதப்படுவார். போர்க்களத்தில் தளபதிக்கு சமமான அதிகாரம்கொண்டவராக போர்களக் கொட்டிலில் ஆயுதவாரி விளங்குவார். 

மூன்று பேரரசுகளும் அனுபவமேறியவர்களைத் தான் ஆயுதவாரிகளாக நியமித்தன. பல நேரங்களில் படைகளின் தளபதியையே சமாளிக்கவேண்டிய பொறுப்பு ஆயுதவாரிக்கு உண்டு. குறிப்பிட்டவகை ஆயுதம்தான் வேண்டும் என்று தளபதி கேட்பார். ஆனால், அந்த வகையான ஆயுதத்தின் இருப்பு மிகக் குறைவாக இருக்கும். எனவே, மற்றவகை ஆயுதத்தைக் கொடுத்து நிலைமையைச் சமாளிக்க வேண்டும். போர் நெருக்கடிகளுக்கு இடையில் அதிகம் மோதிக்கொள்பவராக தளபதியும் ஆயுதவாரியும்தான் இருப்பர். அதனால் ஆயுதவாரி பொறுப்புக்கு நியமிக்கப்படுபவர் வயதானவராக இருப்பது அவசியம். அதுவும் தளபதி மதிக்கும் மனிதராக இருக்குமாறு பார்த்துக்கொள்வர். ஏனென்றால், போர்களத்தினூடே அவர்களின் தேவைகளையும் இருப்புகளையும் பற்றிப் பேசிக்கொள்ள சில கணங்களே வாய்க்கும். அதற்குள் அனைத்தையும் புரிந்துகொள்பவராகவும் பரிமாறிக்கொள்பவராகவும் இருக்க வேண்டும்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83b_1524635069
இருபது வகையான வாள்கள், எட்டு வகையான வேல்கள், மூன்று வகையான குறுவாள்கள், மூன்று வகையான தண்டங்கள், மூன்று வகையான கேடயங்கள் என அனைத்தும் எந்த இடத்தில் எவ்வளவு இருக்கின்றன, எந்தெந்தப் பாசறைக்கு எந்தெந்த வகையான ஆயுதங்களை எவ்வளவு அனுப்ப வேண்டும், கடைசி வரை இருப்பு குறையாமல் எப்படிச் சமாளிப்பது, உற்பத்திக் களத்திலிருந்து தேவையான ஆயுதங்களை எப்படி விரைவுபடுத்தி வாங்குவது ஆகியவற்றில் மிகுந்த கவனத்தோடு செயல்படுபவராக ஆயுதவாரிகள் இருந்தனர்.

போர்க்களக் கொட்டில்களில் ஆயுதங்கள் பெருமரச்சாரங்களில் ஏற்றி அடுக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது இரலிமேட்டின் முதல் மூன்று குகைகள் முழுக்க ஆயுதங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. ஒவ்வொரு குகையும் பத்து பனை நீளத்துக்கு உள்ளே செல்லக்கூடியதாக இருந்தது. பறம்பின் ஆயுதப் பொறுப்பாளனாக சிறுபாழியைச் சேர்ந்த முதுவேலன் நியமிக்கப்பட்டார். குகைகளுக்குள் விளக்குகள் எந்நேரமும் எரிந்துகொண்டிருந்தன. ஆயுதங்களை எடுத்துத் தர ஏதுவாக மரச்சாரங்களை அடிக்கும் பணி இரண்டே நாளில் முடிவுற்றது. அதன் பிறகு ஆயுதங்கள் அடுக்கப்பட்டன. போர்க்களம் செல்ல முடியாத வயதானவர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மூங்கிலும் குமிளங்கொம்பும் மட்டுமே வில் செய்ய பயன்படுத்தப்பட்டன. உலோகத்தால் வில் செய்யும் பழக்கம் பறம்பில் இல்லை. வேந்தர்களின் தரப்பில் முன்கள வீரர்களும் தளபதிகளும் உலோக வில்லையே பயன்படுத்துவர்.  மற்ற வீரர்கள் பயன்படுத்தும் வில்கள் பனைமட்டையாலும் மூங்கிலாலும் ஆனவையாக இருந்தன. ஐந்து, ஏழு, ஒன்பது முடிச்சுகள்கொண்ட வில்களையே வேந்தர்களின் படையினர் பயன்படுத்தினர். பெரும்பாலான முன்கள வீரர்களும் தளபதிகளும் சிறுவிரல் பருமன் அளவு முறுக்கப்பட்ட பட்டுநூலால் ஆன நாணையே பயன்படுத்தினர். ஆனால், பறம்புவீரர்கள் அத்தனை பேரும் குறுங்காது முயலின் குருதியில் ஊறவைக்கப்பட்ட நாண் பூட்டிய வில்லையே பயன்படுத்தினர்.

இரும்புக்கிட்டம், சிரட்டைக்கரி, புளியம் விதை மூன்றையும் கருவேலஞ்சாறு விட்டு இடித்து அதனுடன் கூழாங்கல் மாவைச் சேர்த்து ஆயுதங்களுக்கான `வடி’ உருவாக்கப்பட்டது. நான்காம், ஐந்தாம் குகைகள் ஆயுத உருவாக்கங்களுக்கான உலைகளால் நிரம்பி இருந்தன. உலைகளின் தன்மைக்கு ஏற்ப அவை குகைகளைவிட்டு வெளியே பல இடங்களில் அமைக்கப்பட்டன. சிறிய உலைக்கு காற்றடி இல்லாத ஒடுங்கிய பகுதியே ஏற்றது. அந்த வகை உலைகளில்தான் ஆயுதங்களின் நுனிப்பகுதியிலும் விளிம்பின் கூர்முனையிலும் செய்யவேண்டிய முக்கியமான வேலைகளைச் செய்ய முடியும்.

மற்ற காலங்களில் ஆயுதங்களை பெருவுலையில் அடித்தும் வடித்தும் வைத்திருப்பர். அவை எல்லாம் முதல் மூன்று குகைகளில் வந்து நிரப்பப்பட்டுவிட்டன. இப்போது அவை அனைத்தையும் போருக்குப் பயன்படுத்துவதற்கு ஏற்ப இறுதி வடிவம்கொடுக்கும் வேலையைத்தான் நான்காம், ஐந்தாம் குகைகளில் செய்தனர். 

பறம்புவீரர்கள் பயன்படுத்தும் வாள்கள் அனைத்தையும் கலவைத் தொட்டியில் பத்து நாள்கள் ஊறவைக்க வேண்டும். அதன் பிறகுதான் போர்க்களத்துக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும். பொதுவாக, பறம்புவீரர்களுக்கு போர்க்களத்தில் வாளைப் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம் வாய்த்ததில்லை. பறம்பின் வில்படையே எதிரிகளை முழுமுற்றாகத் தாக்கி அழித்துவிடும். எனவே, வாளின் வேலை மிகக் குறைவே. ஆனால், இந்தப் போரில் வாள்வீச்சுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு என்பதால், எண்ணற்ற கலவைத்தொட்டிகள் உருவாக்கப்பட்டன. கொடிக்கள்ளி சாம்பல், புறாவெச்சம், எருக்கிலைப்பால், எலிச்சக்கை ஆகிவற்றால் ஆன கலவையில் உலோகங்கள் நாள்கணக்கில் ஊறவைக்கப்பட்டன. அப்படிச் செய்தால் அவை ஒருபோதும் மொட்டையாகாது. வேறு எந்த உலோகத்துடனோ கருங்கற்பாறையிலோ மோதினாலும் இந்த வாளுக்கு சிறு பாதிப்புகூட ஏற்படாது. முனை, எளிதில் மழுங்காது. வாய்ப்பு கிடைக்குமேயானால், எதிரியின் வாளைப் பிளந்து இறங்கும். 

பறம்புவீரர்கள் பயன்படுத்தும் இந்த வகை வாளுக்கு நிகரான கூர்வழுவுள்ள வாள் வேறெதுவும் இல்லை.

கலவைத் தொட்டியில் ஊறவைக்கப்பட்ட உள்ளங்கை அளவு அகலம்கொண்ட கூர்முனை வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83c_1524635085ஆயுதத்தைக்கொண்டே மூவிலைவேல் தயாரிக்கப்பட்டது. பறம்பின் தனித்துவமான ஆயுதம் இது. வேறெங்கும் இந்த வகை ஆயுதம் செய்யப்பட்டதில்லை. வேலின் முனையில் விரிந்திருக்கும் மூவிலையில் கல்லூசிகளையும் எஃகூசிகளையும் பன்றியின் முன்கொம்பால் செய்யப்பட்ட ஊசியையும் பொதிந்துவைப்பர். மூவிலைவேலை செய்ய அதிக காலம் தேவைப்படும். எனவே, வீரர்களின் பயன்பாட்டுக்கு இது அரிதாகவே  கொடுக்கப்படும். வலிமைகொண்ட வீரன் ஒருவன் குறி தவறாமல் எறிந்தால், எதிரியின் தேர் முறிந்து கீழே சரியும். போர் யானையை ஒரே எறியால் வீழ்த்த முடிகிற ஆயுதம், இது ஒன்றுதான்.

பேரரசுகளின் வலிமை, எண்ணில்லாத மடங்கு ஆயுதங்களை இடைவிடாது போர்க்களத்துக்கு அனுப்புவதிலே இருக்கிறது. ஒரு யானையின்மேல் ஏற்றப்படும் ஆயுதங்களைக்கொண்டு நூறு வீரர்களைக்கொண்ட படைப்பிரிவு நாள் முழுவதும் சண்டையிடலாம். அவ்வாறு ஆயுதங்களை ஏற்றிச்செல்ல மட்டும் நூறு யானைகள் ஆயுதவாரியின் உத்தரவுக்குக் காத்துநின்றன. உடல் முழுவதும் கவசங்களால் பூட்டப்பட்ட யானை, ஆயுதங்களைச் சுமந்து போர்க்களத்துக்குள் செல்லும்போது எதிரிப்படையால் அதை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது.

வாளும் வேலும் அம்பும் தாக்கும் ஆயுதங்கள் என்றால், கவசமும் கேடயமும்தான் காக்கும் ஆயுதங்கள். பேரரசுகளின் படைகளில் தளபதிகளுக்கும் முதல் நிலை வீரர்களுக்கும் தகுந்த மெய்யுறைக் கவசங்களை உருவாக்கி வைத்திருந்தனர். வாள்வீச்சாளர்கள் அத்தனை பேருக்கும் மூன்று வகையான கேடயங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. சேரனின் கேடயம் வாள்வீச்சாளன் சுழன்று தாக்க ஏதுவாக இருந்தது. சோழனின் கேடயம் அதே அளவு வலிமையுடன், ஆனால் எடை குறைவானதாக இருந்தது. அதனாலேயே அதைப் பயன்படுத்த வீரர்கள் மிகவும் விரும்பினர். பாண்டியனின் கேடயமோ, யானை ஏறி நின்றபோதும் நெளிந்துகொடுக்கவில்லை.

``பறம்புக்கு கடந்தகாலங்களில் வாள்படை பெரிதாகத் தேவைப்படாததால், கேடயத்துக்கான தேவையும் பெரிய அளவில் இல்லை. இப்போதுதான் அதன் தேவை உணரப்படுகிறது. அதை உருவாக்குவதொன்றும் கடின வேலையல்ல’’ என்றான் முதுவேலன். ஆனாலும் முறியன் ஆசான் வந்த பிறகு அவரிடம் கேட்காமல் செய்வது முறையன்று என்பதால், அவரிடம் ஆலோசனை கேட்டான். அவர் சொல்லிய குறிப்பின் அடிப்படையில் வேலைகள் உடனடியாகத் தொடங்கப்பட்டன. ஆனால், மெய்யுறை தயாரிக்க ஆசான் சொல்லும் சிவப்புச் சித்திர மூலக்கொடியும் செங்கொடி வேலியும் எளிதில் கண்ணுக்குப்படாதவை. எங்கோ ஒன்றுதான் முளைத்துக்கிடக்கும். பறம்பின் அத்தனை வீரர்களுக்கும் மெய்யுறை தயாரிக்கத் தேவையான அளவு இந்தக் கொடிகளைப் பறித்துவருதல் எளிதன்று. ஆனால், அதைத் தவிர வேறு வழியில்லை.
முடியன் உத்தரவிட்டான். நாகக்கரடுக்கு வந்து சேர்ந்த வீரர்கள் மட்டும் இங்கு இருக்கவைக்கப்பட்டனர். பல்வேறு பகுதிகளிலிருந்து இரலிமேட்டுக்கு வந்துகொண்டிருந்த வீரர்கள் அனைவருக்கும் செய்தி அனுப்பப்பட்டது. அதேபோல பறம்புமலை முழுவதும் உள்ள மக்களுக்கும் செய்தி கொடுக்கப்பட்டது. எல்லோரும் மூலிகையைத் தேடி காடுகளுக்குள் இறங்கினர்.

கிடைக்கும் மூலிகைகளை, காலம் கடத்தாமல் இரலிமேட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்பது உத்தரவு. வந்துசேர்ந்த மூலிகைக் கொடிகளைக்கொண்டு மெய்யுறை தயாரிக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. கல்லில் அறைத்துத் தயாரிக்கப்படும் இவற்றை, நிழலில் உலர்த்திதான் ஈரம்போக்க வேண்டும். அதற்கு ஏற்ற இடமாக குகைத்தளங்கள் இருந்தன.

வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தபோது பாரியும் கபிலரும் வேட்டுவன்பாறையிலிருந்து இரலிமேடு நோக்கிப் புறப்பட்டனர். இத்தனை நாள்களாக பாரி வேட்டுவன்பாறையிலேயே இருந்ததற்கு போர்த்தயாரிப்பு நோக்கி மனம் ஒன்றாததுதான் காரணம். ஆனாலும் முன்னெச்சரிக்கையாக நாம் சில தயாரிப்புகளைச் செய்தாகவேண்டும் என்று அனைவரும் சொன்னதால், அதை ஏற்றான். தேக்கனும் முடியனும் அதைச் செய்து முடிக்கட்டும் என்று வேட்டுவன்பாறையிலே தங்கிவிட்ட பாரி, இன்று காலையில் கபிலருடன் இரலிமேடு நோக்கிப் புறப்பட்டான்.

நடுப்பகலின்போது அவர்கள் நெடுங்குன்றை வந்தடைந்தனர். அங்கிருந்து சமதளத்தில் கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை வேந்தர்களின் படைகள் பரவிக்கிடந்தன. நெடுங்குன்றைக் கடந்ததும் நாகக்கரடு தொடங்குகிறது. கரடு முழுவதும் பறம்புவீரர்கள் நிலைபெற்றிருந்தனர். நீலனும் உதிரனும் கரட்டின் இருபக்க எல்லைகளில் நிலைகொண்டிருந்தனர். குதிரைகள் நிற்காமல் விரைந்துகொண்டிருந்தன. எங்கும் வீரர்கள் உற்சாகமாக ஒலி எழுப்பியபடி இருந்தனர். மாலை வரை பயணம் நீடித்தது. கரடு முழுவதும் பறம்பின் வீரர்களும் சமவெளி முழுவதும் வேந்தர்களின் படையுமாக நிலமெங்கும் மனிதத்தலைகள் நிரம்பி வழிந்தன.
நாகக்கரட்டைவிட்டு இறங்கி இரலிமேட்டை நோக்கி மேலேற, குதிரையைத் திருப்பினான் பாரி. அந்த இடத்தில்தான் தேர்களைச் செய்வதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தன.

எண்ணிலடங்கா தேர்கள் செய்யப்பட்டு வரிசை வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. பாரியும் கபிலரும் அந்த இடம் வந்ததும் குதிரையை இழுத்து நிறுத்தினர். கபிலரின் கண்கள் வியப்பு நீங்காமல் பார்த்துக்கொண்டிருந்தன. ஒற்றைக் கட்டையால் நடுமரம் அமைக்கப்பட்டு எளிய முறையில் தேரை வடிவமைத்திருந்தனர். வேட்டூர் பழையனும் காலம்பனும் அந்த இடம் நின்றிருந்தனர். தேரின் உறுதியை கலைஞர்கள் பாரிக்கு விளக்கினர். நிறுத்தப்பட்டிருந்த தேர்களைவிட்டு பாரியின் கண்கள் எளிதில் அகலவில்லை.

பார்த்தபடி இரலிமேட்டை நோக்கி குதிரையைச் செலுத்தினர்.  உலைக்களங்களும் குதிரைக்கொட்டடிகளும் உணவுச்சாலைகளும் இரலிமேடு முழுவதும் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன. எங்கும் வீரர்கள் வேலைபார்த்துக்கொண்டிருந்தனர். கூழையன் சத்தம் இடதுபுற மூலையில் கேட்டுக்கொண்டிருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83d_1524635105
மூன்றாம் குகையிலிருந்து வெளிவந்தார் வாரிக்கையன். கீழிருந்து பாரியும் கபிலரும் குகை நோக்கி வந்துகொண்டிருப்பது தெரிந்தது. அவர்கள் மேலே வரும் வரை அந்த இடம்விட்டு நகரவில்லை. பாரியின் குதிரை, முன்னால் வந்துகொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து கபிலர் வந்துகொண்டிருந்தார். குகைவாயில் வந்தடையும் வரை பார்த்துக்கொண்டிருந்தார் வாரிக்கையன்.

பாரி வந்து இறங்கினான். மகிழ்ந்த முகத்தோடு அவனை வரவேற்றார் வாரிக்கையன்.

``என்ன... நெடுநேரமாக நின்று பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்?” எனக் கேட்டான் பாரி.

``உன் பின்னால் வந்துகொண்டிருந்தது கபிலனா, கூழையனா என, சற்றே ஐயமாக இருந்தது!”

``ஏன், பார்வை தெளிவில்லையா?”

``போர்வீரனைப்போல மலையேற்றத்தில்கூட குதிரையை இயல்பாக இயக்கும் தெளிவை புலவன் பெற்றுவிட்டான் அல்லவா! அதனால்” என்றார்.

கபிலர் ஒரு கணம் பூரித்து நின்றார். பாரி சொன்னான், ``உங்களையும் போருக்கு ஆயத்தப்படுத்துகிறார். எச்சரிக்கையாக இருங்கள்.”

மூவரின் சிரிப்பும் குகை முழுவதும் எதிரொலித்தது.

மூவேந்தர்களின் வருகைக்குப் பிறகு மூஞ்சல்நகர் களைகட்டத் தொடங்கியது. பேரரசர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி அன்பைப் பரிமாறிக்கொண்டனர். ரத்தினக்கல் பதித்த ஆரங்களை பாண்டியனுக்கும் சோழனுக்கும் சூட்டி மகிழ்ந்தான் உதியஞ்சேரல். செங்கனச்சோழனும் தனது சிறந்த பரிசை மற்ற இருவருக்கும் வழங்கினான். குலசேகரபாண்டியனோ இருவரையும் முத்துகளால் குளிக்கவைத்தான். மூவரும் ஹிப்பாலஸுக்கு அளவற்ற நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர். இசையும் கூத்தும் இரவெல்லாம் நீண்டன.

நாள்கள் நகர, அடுத்தடுத்த கட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாகின. படைகளின் பிரிவுகள் எண்ணற்றச் சேனைகளாக வகுக்கப்பட்டன. ஒவ்வொரு சேனைக்கும் சேனைமுதலி இருந்தார். பன்னிரு சேனைகளைக்கொண்ட பெரும்பிரிவுக்கு சேனைவரையன் இருந்தார். விற்படை, வாள்படை, குதிரைப்படை, தேர்ப்படை, யானைப்படை என ஐவகைப் படைகள் ஆயத்தநிலையில் இருந்தன. ஐவகைப் படைகளுக்கும் ஐந்து தளபதிகளைத் தேர்வுசெய்யவேண்டியிருந்தது. விற்படைக்கு துடும்பனும், வாள்படைக்கு சாகலைவனும், குதிரைப்படைக்கு உறுமன்கொடியும், தேர்ப்படைக்கு நகரி வீரனும், யானைப்படைக்கு உச்சங்காரியும் தளபதிகளாக இருக்க முடிவுசெய்யப்பட்டது.

ஐந்து தளபதிகளையும் கட்டுப்படுத்தும் தலைமைத் தளபதியாக `மகாசாமந்தன்’ என்று அழைக்கப்படும் பெரும்பொறுப்புக்கு கருங்கைவாணன் தேர்வுசெய்யப்பட்டான்.

சேரனின் சார்பில் உதியஞ்சேரலும் சோழனின் சார்பில் சோழவேலனும் பாண்டியனின் சார்பில் பொதியவெற்பனும் களத்தில் ஆயுதம் ஏந்துவர். மூவேந்தர்களும் ஒற்றைப்படை அணியில் நின்று ஆயுதம் ஏந்தப்போகும் இந்தப் பெரும்போரின் தொடக்கச் சடங்குக்கு நாள் குறிக்க கணியர்களிடம் ஆலோசனை கேட்க வேந்தர்கள் முடிவுசெய்தனர்.

மூன்று நாட்டுக் கணியர்களும் மூன்றுவிதமான குறிப்புகளைச் சொல்ல வாய்ப்புண்டு. இந்தப் போரில் அடையப்போகும் வெற்றி பொதுவானது. ஆனால், இழப்பின் தன்மை பொதுவானதாக இருக்க வாய்ப்பில்லை. மூவருக்கும் வேறுபட்ட தன்மையில்தான் அது அமையும். தங்களுக்கு எந்தவித இழப்பும் நேரக் கூடாது என்றே மூவரும் நினைப்பர். அதற்குத் தகுந்த தன்மையில்தான் நாள் குறிக்க எண்ணுவர். எனவே, இதுதான் மூவருக்குள்ளும் ஆழமான விளைவை உருவாக்கும் செயல். இதை மிகவும் கவனமாகக் கையாளவேண்டும் என நினைத்தார் முசுகுந்தர்.

அன்று இரவு குலசேகரபாண்டியனிடம் இது பற்றி தனியே உரையாடினார், ``காலையில் அந்துவன் கையில் வரைபடம் ஏந்திய பட்டுத்துணியோடு என்னை வந்து சந்தித்தான். `பவளவந்திகையின் காலடி குறிப்பைக்கொண்டே வேந்தர்களின் பாடிவீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பின் அடிப்படையிலே நாள் குறிப்பதுதான் பொருத்தமானது’ என்றான். ஆனால், மற்ற இரு பேரரசர்களும் கணியர்களும் இதை ஏற்பார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களின் நாள்கணக்குகள் வேறு மாதிரியாக இருக்க வாய்ப்புண்டு” என்றார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83e_1524635123
``தளபதிகளைத் தேர்வுசெய்ததைப்போல மற்றவர்கள் எளிதில் ஏற்றுக்கொள்ளும் செயலல்ல இது. உணர்வுடனும் நம்பிக்கையுடனும் கலந்தது. எனவே, கவனமாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்” என்று சொன்னவர், நீண்டநேரம் கழித்து ``இந்தப் பிரச்னையைத் தீர்க்க நீங்கள் சொல்லும் வழி என்ன?” எனக் கேட்டார்.

``ஒரே வழிதான் உண்டு. தமிழ் நிலத்தின் அத்தனை கணியர்களும் பேராசானாக ஏற்றுக்கொண்டது திசைவேழரைத்தான். அவரை வரவழைத்து நாள் குறிப்போம். மற்ற இரு பேரரசர்களும் அதை ஏற்பர்” என்றார்.
குலசேகரபாண்டியன், திசைவேழரை நன்கு அறிவார். அவரது கருத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத அறிவுச்செருக்கின் அடையாளம். அவரை கையாள்வது ஆபத்து நிறைந்தது. ஆனாலும் `மூவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு பொதுமனிதர் தேவை. அதற்கு திசைவேழர் பொருத்தமானவர்தான்’ என நினைத்து அவரை அழைக்க சம்மதம் தெரிவித்தார்.

மற்ற இரு பேரரசர்களுக்கும் இந்த ஆலோசனை சொல்லப்பட்டது. அனைவரும் மகிழ்வோடு ஏற்றனர். திசைவேழரின் தலைமாணவன் அந்துவனையே அனுப்ப முடிவானது. அவரின் இருப்பிடமான பொதிகைமலையில் இருந்தால் வந்துசேர பல நாள் ஆகும். ஆனால், அவரோ வைகையின் ஓரத்தில் இருக்கும் குன்றில்தான் இருந்தார். நான்கு புரவி பூட்டிய பெருந்தேரில் அவரின் இருப்பிடம் நோக்கி விரைந்தான் அந்துவன்.
இரவு-பகல் நிற்காமல் பயணித்து அவரின் இருப்பிடம் அடைந்தான். ஆற்றின் வடகரையில் அவரது குடில் இருந்ததால் வைகையின் வெள்ளத்தைக் கடக்கவேண்டிய தேவை எழவில்லை. ஆற்றங்கரையிலிருந்து நாணல்கள் விலக்கி குடில் நோக்கி வந்தார் திசைவேழர். தனது ஆசானைப் பணிந்து வணங்கி மூவேந்தர்களின் அழைப்பைத் தெரிவித்தான் அந்துவன்.

``பெருவெள்ளம் ஓடும் ஆற்றங்கரையில் இருக்கிறேன். ஆனால், அள்ளிப்பருக குருதி கொண்டுவந்திருக்கிறாய் நீ.”

அந்துவன் மறுமொழியின்றி அமைதியாக நின்றான்.

``நான் போர்க்களம் புகேன் என மூவேந்தர்களுக்கும் தெரியும். அப்படியிருந்தும் என்னை ஏன் அழைத்தார்கள்?” என வினவினார். அந்துவனிடம் இதற்கும் பதில் இல்லை. திசைவேழர், குடிலுக்குள் போனார்.
அந்துவன் அன்று முழுவதும் காத்திருந்தான். மறுநாள் மாலை குடில்விட்டு வெளியே வந்தார். `மூவேந்தர்களின் அழைப்பை நிராகரிக்க வேண்டாம். போய் நமது நிலையைத் தெளிவுபடுத்திவிட்டு வருவோம்’ என்று எண்ணியபடி ``காலையில் புறப்படுவோம்” எனக் கூறினார்.

இந்தச் செய்தி இரவோடு இரவாகப் பயணித்து விடியும்போது மூஞ்சல்நகர் எட்டியது. `திசைவேழர், அழைப்பை ஏற்க மறுப்பாரோ!’ என்ற அச்சத்திலிருந்த முசுகுந்தர், செய்தி கேட்டு அளவற்ற மகிழ்வடைந்தார். மூஞ்சலில் எல்லாமே சிறப்பான தொடக்கமாக அமைகிறது. மூவேந்தர்களும் தங்களுக்குள் மிக இயல்பாகப் பேசிக்கொள்ள அதிக காலம் எடுத்துக்கொள்ளவில்லை. `தளபதிகளின் தேர்விலும் முரண்கள் எதுவும் உருவாகவில்லை. அதேபோல சடங்குக்கான நாள் குறிப்பிலும் சிக்கலான நிலையேதும் உருவாகாமல் இருந்தால் போதும், எல்லாம் வெற்றிகரமாக அமைந்துவிடும்’ என்று எண்ணியபடி பொதியவெற்பனின் கூடாரத்துக்கு வெளியே நின்றுகொண்டிருந்தார்.

அப்போது உதியஞ்சேரல் தனது மாளிகையைவிட்டு வெளிவருவதை பணியாளர்கள் சிற்றோசை எழுப்பி தெரியப்படுத்தினர். அவர் உணவுக்கூடாரத்தை நோக்கி நடந்து போனார். பேசிக்கொண்டே உடன் சென்ற அமைச்சர் நாகரையன், அவர் உணவகம் நுழைந்ததும் வந்த வழியே திரும்பினார்.வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83f_1524635134

சற்று தொலைவில் முசுகுந்தர் நிற்பதைப் பார்த்து அருகில் வந்தார். திசைவேழர் அழைப்பை ஏற்றுக்கொண்ட செய்தியை அவரோடு பரிமாறி மகிழ்ந்தார் முசுகுந்தர். இருவரும் நீண்டநேரம் பேசியபடி நின்றனர்.
முசுகுந்தர் கேட்டார், ``எனக்கு ஓர் ஐயம். தெளிவுபடுத்த முடியுமா?”

``எனக்கு விடை தெரிந்தால் தெளிவுபடுத்துகிறேன்” என்றார் நாகரையர்.

``உங்களின் பேரரசருடன் எந்நேரமும் கருங்குரங்குக் குட்டி ஒன்று இருக்கிறதே, ஏன்?”

நாகரையர் இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. சற்றே சிந்தித்தபடி இருந்தார், ``பேரரசருக்குப் பிடித்த உயிரினம் அது என்பதால்தான்” என்று சொல்லி, வார்த்தையை முடிக்காமல் நீட்டினார். எதையோ சொல்ல தயங்குகிறார் என்பது புரிந்தது.

சற்று இடைவெளியில் அவரே சொன்னார், ``உங்களிடம் மறைக்க விரும்பவில்லை. ஆனால், நீங்கள் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாதீர்கள். எந்நேரமும் அந்தக் குட்டி உடன் இருக்காது; உணவுக்கூடாரத்துக்குச் செல்லும்போது மட்டும்தான் உடன் இருக்கும். உணவில் நஞ்சு இருப்பின் வாசனையை நுகர்ந்த கணத்திலேயே அது சத்தமிட்டுக் குதிக்கும்; மலம்கழிக்கும். அதனால்தான் அவர் அதை வைத்துள்ளார். எங்கள் மருத்துவர்கள் கூறியுள்ள பாதுகாப்பு ஏற்பாடு அது” என்றார்.

மூவேந்தர்களுக்குள்ளும் பொதுநம்பிக்கையை உருவாக்குவது எவ்வளவு கடினமான செயல் என்பதை குரங்கின் மூலமும் உணர்ந்தார் முசுகுந்தர்.

திசைவேழரின் இருப்பிடத்திலிருந்து நான்கு புரவிகள் பூட்டிய பெருந்தேர் பயணத்தைத் தொடங்கியது. திசைவேழர், மனக்குழப்பத்தினூடே பயணப்பட்டுக்கொண்டிருந்தார். மறுநாள் போர்ப்பாசறைக்குள் தேர் நுழைந்தது. திரைச்சீலையின் வழியே வெளியில் பார்த்துக்கொண்டு வந்தவர் போர்நிலம் வந்தவுடன் வெளிப்பார்வையைத் தவிர்த்தார். தேர் மூஞ்சலில் வந்து நின்றது.

முசுகுந்தர் வணங்கி வரவேற்றார். பயணக்கலைப்பு நீங்க கூடாரத்தில் தங்கி சற்று ஓய்வெடுக்கச் சொன்னார். மாலை ஆனதும் அவர் முன் உணவு பரிமாறப்பட்டது. இரண்டு வாழைக்கனிகளை மட்டும் எடுத்துக்கொண்டார். பேரரசர்கள் கூடும் நடுக்கூடாரத்துக்கு அவரை அழைத்துச் செல்ல முசுகுந்தர் காத்திருந்தார். சிறிது நேரம் கழித்து புறப்பட்டார். அவரை அழைத்துக்கொண்டு முன்நடந்தார் முசுகுந்தர்.

நடுக்கூடாரத்தில் மூவேந்தர்களுடன் சோழவேலனும் பொதியவெற்பனும் இருந்தனர். அரச குடும்பமல்லாத ஒரே நபராக முசுகுந்தர் இருந்தார். திசைவேழர் உள்ளே நுழைந்ததும் அனைவரும் அவருக்கு மரியாதை செய்தனர். அதை ஏற்றபடி தனக்கான இருக்கையில் அமர்ந்தார் திசைவேழர்.

உதியஞ்சேரலும் செங்கனச்சோழனும் திசைவேழரைப் பார்த்து பல்லாண்டுகள் ஆகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்க்கும் இருவரும் அவரின் முதுமையைக் கண்டு மனம்குவித்து வணங்கினர்.
குலசேகரபாண்டியன்தான் பேச்சைத் தொடங்கினார், ``இந்த மண் காணாத பெரும்போரை நடத்த மூவேந்தரும் இணைந்துள்ளோம். போர்ச்சடங்குக்கு நாள் குறித்துத் தரவே பேராசானை அழைத்தோம்” என்றார்.
``பலி நிலத்துக்குக் குறிசொல்லும் இழிசெயல் செய்யேன்” என வார்த்தை வெடித்து மேலே கிளம்ப எத்தனித்தது. `பேரரசர்கள் மூவரும் இருக்கும் அவையில் கடுஞ்சொற்கள் வேண்டாம்!’ என எண்ணினார் திசைவேழர்.

அமைதி நீடித்தது. அவர் சொல்லப்போகும் வார்த்தையை எதிர்பார்த்துக் காத்திருந்தது அவை. சற்று இடைவேளைக்குப் பிறகு, ``போரைத் தவிர்க்க வழியேதும் இல்லையா?” என மெல்லிய குரலில் கேட்டார்.
போர்க்களத்துச் சடங்குக்கு நாள் குறிக்க அழைக்கப்பட்டவர் போரைத் தவிர்க்க வழிகேட்டது, சேரனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. சடங்கின் தன்மை பேசப்படும் கணத்திலிருந்து தொடங்கக்கூடியது. அது சார்ந்த எல்லா நிகழ்வுகளும் சடங்கின் பகுதியே, அது சார்ந்த செயலும் சொல்லும் சடங்கினால் ஏற்படும் விளைவை தீர்மானிப்பவையே; நாள் குறிக்க நிகழ்த்தப்படும் சடங்கைப் பற்றியப் பேச்சே சட்டென தடுமாறியது நல்ல அறிகுறியாக உதியஞ்சேரலுக்குப் படவில்லை.

குலசேகரபாண்டியனோ திசைவேழரிடமிருந்து இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. என்ன சொல்வதென்ற திகைப்பு எல்லோரிடமும் இருந்தது. பேராசானுடனான உரையாடலில் மிகுந்த கவனம் தேவை என அனைவரும் அறிவர். எனவே, அமைதியே நீடித்தது.

``வலதுகாலை மடக்க முடியாமல் சிரமப்பட்டீர்களே! இப்போது ஆசனத்தில் சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கிறீர்களே எப்படி?” என்று சூழலை இலகுவாக்க பேச்சின் போக்கை மாற்ற முயன்றார் முசுகுந்தர். ஆனால், அந்தப் பேச்சு பறம்பினைத்தான் நினைவூட்டியது. புலி முன் ஆடு போல இருந்தது அவையின் அமைதி.

``வளம்மிக்க மண்ணைப் பாழ்படுத்துதல் அறமன்று” என்றார் திசைவேழர்.

``வளத்தை, தானும் பயன்படுத்தாமல் மற்றவர்களையும் பயன்படுத்தவிடாமல் தடுப்பது இயற்கைக்குச் செய்யும் நியதியன்று” என்றார் முசுகுந்தர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 P83g_1524635153
``பயன்பாட்டு உரிமைதான் சிக்கல் என்றால், பேசித் தீர்க்கலாமே. பேசிப்பார்க்காமலேயே போர்க்களம் புகுவது என்ன அறம்?”

மீண்டும் அமைதி நிலவியது.

இந்த இடம் சேரனோ சோழனோ மறுமொழி பேச முடியாது. வயதில் மூத்த குலசேகரபாண்டியன்தான் பேசியாக வேண்டும். எனவே, மற்றவர்கள் அவரையே பார்த்தனர்.

குலசேகரபாண்டியன் சற்றே குழப்பமடைந்தான். நாமே தேவையில்லாமல் சிக்கலை ஏற்படுத்திக்கொண்டோமோ எனத் தோன்றியது. மற்ற இரு பேரரசர்களும் ஏற்கும் பொதுமனிதர் ஒருவர் வேண்டும் என யோசித்தோம். ஆனால், `மூவரும் பேசி இணங்கவைக்க முடியாத மனிதரை அழைத்துவந்துவிட்டோமோ!’ எனத் தோன்றியது. 

சற்று இடைவெளியில் ``சரி, நீங்களே இதற்கு வழியொன்று சொல்லுங்கள்” என்றார் குலசேகரபாண்டியன்.

திசைவேழர் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அதை இறுகப் பற்றிக்கொண்டார். சற்றே கண்மூடிச் சிந்தித்தார். `என்ன சொல்லப்போகிறார்?’ என அவை காத்திருந்தது. ``மூன்று பேரரசுகளின் போற்றுதலுக்குரிய பெரும்புலவர் கபிலர்தானே பாரியின் உற்றதோழர். அவர் மூலம் பேசிப்பார்க்கலாமே!”

மூவரின் கண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துத் திரும்பின. மறுமொழி எழவில்லை. திசைவேழரின் கூற்றை மறுப்பதற்கான காரணம் ஏதுமில்லை. அமைதி நீடித்தது. சம்மணமிட்ட காலை நீட்டித் தொங்கவிட்டார் திசைவேழர்.

இந்த இடத்தை அறிவுக்கூர்மையுடன் கையாள வேண்டும். இல்லையென்றால், போரின் தொடக்கமே சிக்கல் நிரம்பியதாகிவிடும் என நினைத்த குலசேகரபாண்டியன், ``சரி, பேச்சுவார்த்தைக்காக கபிலருக்கு அழைப்பு அனுப்புங்கள்” என்றார்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 16, 2018 10:18 pm

வாள்படைத் தளபதி சாகலைவன் வந்த தேர், இரவு முழுவதும் நாகக்கரட்டின் அடிவாரத்தில் நின்றது. அவன்தான் கபிலருக்கு அழைப்பு எழுதப்பட்ட சுருள்மடலை எடுத்து வந்தவன். பறம்புவீரர்கள் அதைப் பெற்றுக்கொண்டு இரலிமேட்டுக்குச் சென்றனர். ``மறுமொழி வரும் வரை காத்திருக்கிறேன்” என்று சொல்லிக் காத்திருந்தான் சாகலைவன். மூவேந்தர்களின் படை நிலைகொண்டுள்ள இடம்விட்டு மிகத் தொலைவில் வந்து பறம்பின் நிலப்பகுதிக்குள் இரவு முழுவதும் காத்திருந்தான் சாகலைவன்.

மறுநாள் பொழுது விடிந்தது. செய்தியை எதிர்பார்த்திருந்தான் சாகலைவன்.  நீண்ட நேரத்துக்குப் பிறகு கரட்டுமேட்டிலிருந்து ஆள்களின் வருகை தெரிந்தது. உற்றுப்பார்த்தான். நடுவில் வருபவர் கபிலர். அவன் கபிலருக்கு அறிமுகமானவன். மதுரையில் தங்கி இருக்கும்போது கபிலரை பலமுறை  கண்டு பேசியிருக்கிறான். அதனால்தான் இந்தப் பணிக்காக அவன் அனுப்பப்பட்டான்.

மேலே இருந்து இறங்கி வந்த கூட்டம், குறிப்பிட்ட இடத்தோடு நின்றுகொண்டது. அதற்குப் பிறகு கபிலர் மட்டும் வந்து கொண்டிருந்தார். அவரோடு சிறுவன் ஒருவனும் வந்தான். அவன் யாரென சாகலைவனுக்குத் தெரியவில்லை. உதவிக்கு அழைத்துவருகிறார் எனப் புரிந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 83p1_1525172219
கபிலர் தேரின் அருகில் வந்ததும் அவரை வணங்கி வரவேற்றான் சாகலைவன். முகம் பார்த்து மலரும் மனநிலையில் கபிலர் இல்லை. தலையை மட்டும் மெள்ள அசைத்தார். குறுக்குக்கட்டையை எடுத்து அவர் தேரில் ஏற வசதி செய்தபடி நின்றான். அவரோ உடன்வந்த அலவனின் தோளை அழுத்தி மேலேறி அமர்ந்தார். அலவனும் ஏறி அவர் அருகில் அமர்ந்துகொண்டான்.

தேர் புறப்பட்டு, சிறிது நேரத்தில் படைக்களத்துக்குள் நுழைந்தது. முதலில் இருந்தது காலாட்படைதான். கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை வீரர்கள் நிறைந்திருந்தனர். தேர் வேகம்கொண்டு சென்றது. நெடுநேரத்துக்குப் பிறகு காலாட்படையைக் கடந்து குதிரைப் படையின் எல்லையில் போய் வலதுபுறமாகத் திரும்பியது. வேகம் குறையாமல் பயணித்தாலும் படைகளைக் கடந்து நெடுந்தொலைவு போகவேண்டியிருந்தது. தேரோட்டும் வளவன், தேரை விரைவுபடுத்த முயன்றான். ஆனால், வீரர்களின் நெரிசல் அதிகமாக இருந்தது. நீட்டிப்பிடித்த வேற்கம்புகளும் ஈட்டிகளும் குதிரையின் மீது பட்டுவிடுமோ என்ற அச்சம் அவனுக்குள் இருந்தது.

ஆயுதங்கள் குவிக்கப்பட்டிருக்கும் படைக்கலப் பேரரங்குகள் மூன்றையும் தொட்டுப் பயணிப்பதைப்போல வழி சொல்லியிருந்தான் சாகலைவன். தேர், அந்தத் திசையிலேயே போய்க்கொண்டிருந்தது; வேகம் குறையாமல் தேர்ப்படையின் எல்லைக்குள் நுழைந்தது. இந்தப் பகுதியில் வீரர்களின் எண்ணிக்கை சற்று குறைவு. ஆனால், அங்குமிங்குமாக மரக்கட்டைகளும் குதிரைகளின் ஓட்டமுமாக இருந்தன. சற்றே கவனத்தோடு தேரைச் செலுத்தினான். அதைத் தொடர்ந்து சிற்றரசர்களும் தளபதிகளும் தங்கி இருக்கும் பகுதி இருந்தது. அதை ஓரமாகச் சென்று கடக்க முயன்றான்.

தொலைவில் யாரையோ பார்த்த கபிலர், ``தேரை நிறுத்து” என்றார். யாரைப் பார்த்துவிட்டு தேரை நிறுத்தச் சொல்கிறார் எனப் புரியாமல் விழித்தான் சாகலைவன். தேர் நின்றது. குறிப்பறிந்து அலவன் கீழே இறங்கினான். அவன் தோள் பிடித்து இறங்கினார் கபிலர்.

சற்று தொலைவில் வாள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இருவர், தேரைவிட்டு இறங்கும் மனிதர் யார் என உற்றுப்பார்த்தனர். அடையாளம் கண்டறிந்த ஒருவன், ``தேர்விட்டு இறங்குவது பெரும்புலவர் கபிலர்” என்று சத்தமிட்டுக் கூறியபடி வாளைவிடுத்து ஓடோடி வந்தான்.

அவன் வரும் வேகம் கண்டு அலவன் சற்றே விலகி நின்றான். விரைந்து வந்து கபிலரின் கால் தொட்டு வணங்கினான். அவன் அறுகநாட்டின் சிறுகுடி மன்னன் செம்பன். அவனைக் கண்டதும் கபிலரின் முகம் மலர்ந்தது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இவனது மாளிகையில் தேறல் அருந்தி மான்கறி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதுதான் பாரியைப் பற்றிய பேச்சுவந்தது. அவனது வள்ளல்தன்மையைப் பற்றி செம்பன் சொன்னதை ஏற்காத கபிலர், ``நாளையே நான் புறப்பட்டு பறம்புமலைக்குப் போகிறேன்” என்று சொல்லி புறப்பட்டுப் போனார். அதன் பிறகு இன்றுதான் மலைவிட்டு இறங்கி சமவெளிக்கு வந்துள்ளார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 83p2_1525172308
``யாரைப் பார்த்துவிட்டு பறம்பில் ஏறினேனோ, அவனைத்தான் பறம்புவிட்டு இறங்கியதும் முதலில் பார்க்கிறேன்” என்று சொல்லி அவனது தோள் தொட்டு மகிழ்ந்தார் கபிலர்.

சுற்றிலும் கூட்டம் கூடியது. அந்தப் பகுதியில் இருந்தவர்கள் எல்லாம் சிறுகுடி மன்னர்களும் தளபதிகளும் ஆவர். அனைவரும் கபிலரை அறிவார்கள். பேரரசர்கள் பணிந்து வணங்கும் பெரும்புலவன் நம்மோடு போர்க்களத்தில் நின்று உரையாடுகிறார் என்ற பெருமிதத்தோடு கூட்டம் கூடியது. ஆனாலும் அனைவரும் விலகியே நின்றனர்.

``நீ அன்று பாரியின் வள்ளல்தன்மை பற்றி வியந்து கூறினாய். நான் மறுத்துக் கூறி அதை சோதித்தறிய மலையேறினேன். ஒன்றரை ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. எனது வாழ்வின் மிகச்சிறந்த இந்தக் காலத்தைச் சொல்லால் வார்த்துச் சொல்கிறேன், `உனது வார்த்தையே மெய்’. அதை நான் பணிந்து ஏற்கிறேன்” என்று சொல்லி செம்பனை நோக்கிக் கைகுவித்தார் கபிலர்.

நடுங்கிப்போய் கபிலரின் கால் பற்றி வணங்கினான் செம்பன், ``தாங்கள் என்னை வணங்கக் கூடாது” என்றான்.

``நான் உன்னை வணங்கவில்லை. நீ சொன்ன உண்மையை வணங்குகிறேன்.”

``அந்த உண்மைக்கு எதிராகவே இப்போது வாள் ஏந்த வந்துள்ளேன். பேரரசின் ஆணை இது. என்னை மன்னியுங்கள்” என்றான் சற்றே கலங்கிய குரலோடு.

``உண்மையல்லாத ஒன்றை நான் எப்போதும் மன்னிப்பதில்லை” என்று சொல்லியபடி தேரில் ஏறினார் கபிலர். மற்றவர்களுக்கு என்ன நடக்கிறது எனப் புரியவில்லை.

குவித்த கையை விலக்காமல் அவரைப் பார்த்தபடியே நின்றான் செம்பன். 

தேர் ஏறிய கபிலர், அவனது கைகளைப் பார்த்துக்கொண்டே சொன்னார், ``இந்தக் கைகளால் அன்று கறித்துண்டங்கள் நிறைந்த குழிசிப்பானையை என்னை நோக்கித் தள்ள முடிந்திருந்தால், நாம் இந்நேரம் போர்க்களத்தில் சந்தித்திருக்க மாட்டோம் அல்லவா?”

கபிலரின் முகத்திலிருந்த மெல்லிய சிரிப்பு, செம்பனைக் கூனிக்குறுகச் செய்தது. தேர்ப்புழுதி மேலெழும் வரை அவன் அசைவற்று நின்றான்.

நேரம் அதிகமாகிக்கொண்டிருந்ததால் தேரை விரைந்து செலுத்தச் சொன்னான் சாகலைவன். அவனது சொல்லுக்கு ஏற்ப தேரின் வேகம் கூடியது. படைகளைக் கடந்து மூஞ்சல்நகர் நோக்கிச் சென்றது தேர். தனித்துவமிக்க இந்தப் பகுதியைப் பார்த்ததும் பேரரசர்களின் கூடாரப் பகுதி என்பது புரிந்தது. மூஞ்சலுக்குள் தேர் நுழைந்ததும் வரவேற்க அமைச்சர்கள் நின்றிருந்தனர்.

அவர்கள் நின்ற இடம்வந்து தேர் நின்றது. அமைச்சர்கள் மூவரும் பெரும்புலவரை வணங்கி வரவேற்றனர். முசுகுந்தரின் முகம் அளவற்ற மகிழ்வில் இருந்தது. எத்தனையோ மாலைப்பொழுதுகளை வைகைக் கரையில் கபிலரோடு உரையாடி மகிழ்ந்தவர் அவர்.

நாகரையனும் வளவன்காரியும் அவரின் கை தொட்டு வணங்கினர். அவர்கள் இருவருக்கும் கபிலரோடு உரையாடும் அளவுக்கு உறவு இல்லை. தேர்விட்டு இறங்கிய கபிலர் நடக்கத் தொடங்கினார். நினைவின் ஆழத்திலிருந்து கடந்தகாலம் மேலெழுந்து வந்துகொண்டிருந்தது. மூன்று பேரரசர்களுக்கும் தனக்குமான உறவின் வலிமை நினைவெங்கும் பரந்துவிரிந்தது. கடந்த காலத்தின் முன் மனம் கூசி நடுங்கியது. ஆனால், இன்னும் சிறிது நேரத்தில் அந்தக் கடந்த காலத்துக்குள்தான் நுழையப்போகிறார். அங்கிருந்து வந்துள்ள மனிதர்கள்தான் அவருக்காகக் காத்திருக்கின்றனர்.

`எனது புலமையைப் போற்றிக் கொண்டாடிய பேரரசர்களுக்கு எதிராக வந்து விழப்போகும் சொற்கள் என்னவாக இருக்கப்போகின்றன? அவை எனது வாழ்வின் முழுமையிலிருந்து விளைந்த சொற்களாக இருக்கப்போகின்றனவா அல்லது பறம்பிலிருந்து மட்டும் விளைந்த சொற்களாக இருக்கப்போகின்றனவா? சொல், நிலத்திலிருந்து எழுவதில்லை; மனதிலிருந்துதான் எழுகிறது. மனம் உண்மையோடு கரைகிறபோது சொல் தன்னியல்பில் முளைத்து மேலெழுகிறது. உண்மைகள் விளையவைக்கும் சொற்களைப் பற்றி நாம் ஏன் முன்கூட்டியே சிந்திக்கவேண்டும்?’ என்று கருதியபடி கூடாரத்துக்குள் நுழைந்தார் கபிலர்.

குலசேகரபாண்டியன் இருக்கைவிட்டு எழுந்து வந்து பெருமகிழ்வோடு வரவேற்றார். செங்கணச்சோழனும் உதியஞ்சேரலும் பொதியவெற்பனும் வணங்கி வரவேற்றனர். சோழவேலன் அணைத்து மகிழ்ந்தான்.

கூடாரத்தின் இடது ஓரம் இருந்த சிறு மேடையில் நால்வர் அமர்ந்து யாழ்மீட்டிப் பாடிக்கொண்டிருந்தனர். கபிலர் உள்நுழைந்ததும் பாடலை நிறுத்தி எழுந்தனர். மீட்டிய யாழையும் பிற இசைக்கருவிகளையும் வைத்துவிட்டு வெளியேறினர்.

அவர்கள் பாடிய `வேந்தே காண்...’ எனும் கபிலரின் பாடலைப் பாடியபடி அவரை இருக்கையில் அமரவைத்து தானும் இருக்கையில் அமர்ந்தான் குலசேகரபாண்டியன்.

``நீங்கள் இந்தப் பாடலை எழுதிய அன்று நமக்குள் நிகழ்ந்த உரையாடல் நினைவிருக்கிறதா?” என்று பேச்சை இயல்பாகத் தொடங்கினார் குலசேகரபாண்டியன்.

``நன்றாக நினைவிருக்கிறது” என்றார் கபிலர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 83p3_1525172332
மனிதர்களைக் கையாள்வதில் குலசேகரபாண்டியனுக்கு இருக்கும் அனுபவம் இணையற்றது என்று எப்போதும் கருதும் முசுகுந்தர், இப்போதும் அதையே நினைத்துக்கொண்டார். எதிரிக்கு தோழனாகக் கருதப்பட்ட பெரும்புலவரை, இவ்வளவு இயல்பாக உரையாடலுக்குள்ளே இழுத்துக்கொண்ட அவரின் ஆற்றல் வியப்பையே தந்தது.

`` `வேந்தனின் செங்கோன்மையை இதைவிடச் சிறப்பாய் இன்னொரு புலவன் சொல்லிவிட முடியாது’ என்று நான் சொன்னபோது அன்று நீங்கள் மறுத்தீர்கள் அல்லவா?” என்றார் குலசேகரபாண்டியன்.

``ஆம்” என்றார் கபிலர்.

``இன்று வரை இதற்கு இணையான பாடலை வேறு யாரும் எழுதிவிடவில்லை.”

``யாரும் எழுதிவிடாததாலேயே இது சிறந்த பாடலாகிவிடுமா?” எனக் கேட்டார் கபிலர்.

``இன்றைக்கும் இதுதான் சிறந்த பாடல்.”

``இல்லை. பிழையான பாடல்.”

அதிர்ந்தான் குலசேகரபாண்டியன். ``பெரும்புலவர் கபிலர் பிழையான பாடல் எழுதினாரா?” எனக் கேட்டான்.

``நான் பாடல் எழுதினேன். காலம் அதை பிழையென ஆக்கியுள்ளது.”

``எதை பிழையெனச் சொல்கிறீர்?’’

``செங்கோன்மைக்கு நான் சொன்ன உவமை பிழையெனக் கருதுகிறேன்.”

அவையில் அமைதி நீடித்தது. மற்றவர்களுக்கு அந்தப் பாடல் எது எனத் தெரியாததால், பேச்சில் பங்கெடுக்கவில்லை. முசுகுந்தருக்கு அந்தப் பாடல் நன்கு தெரியும். இந்தப் பேச்சு எதை நோக்கிப் போகிறது என்பதை உணரத் தொடங்கினார். 

கபிலர் தொடர்ந்தார், ``அரசன் நியதியை நிலைநாட்ட தண்டத்தைப் பயன்படுத்துவது பயிருக்குள் இருக்கும் களையை அகற்றுவது போன்றது எனக் குறிப்பிட்டுள்ளேன் அல்லவா அதைத்தான் சொல்கிறேன்” என்றார்.

``அது முற்றிலும் சரியான கருத்துதானே, அதிலென்ன பிழையுள்ளது?”

``அரசு அறத்தை நிலைநாட்ட தண்டத்தினைக்கொண்டு களையைப் பறிக்கலாம். ஆனால், பயிரைப் பறிப்பது எந்த வகை அறம்? அரசநியதியின் பெயரால் நிகழ்த்தப்படும் செயல்கள் அனைத்தும் செங்கோன்மைக்குப் பெருமை சேர்ப்பதாகா.”

கபிலர் சொல்லவருவது என்னவென்று எல்லோருக்கும் புரிந்தது. பேச்சு, எழுதப்பட்ட பாடலைப் பற்றியது அன்று; தூது அனுப்பப்பட்டதன் நோக்கத்தைப் பற்றியது; போர்க்களத்தின் அரசியல் பற்றியது. உரையாடல் தொடங்கும்போதே கபிலர் அவையை அந்த இடம் கொண்டுவந்து நிறுத்துவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தத் தன்மையில் இந்தப் பேச்சு தொடங்கக் கூடாது; தொடரவும் கூடாது எனக் கருதிய முசுகுந்தர், ``முதலில் பயணக் களைப்பாற சுவைநீர் அருந்துங்கள். பிறகு உரையாடலாம்” என்று கை அசைத்தபடி சொன்னார். அவர் சொன்னதும் பணியாளர்கள் நீள்வாய்க்குவளையை உள்ளே கொண்டுவந்தனர். ஒவ்வொருவருக்கும் அழகிய பீங்கான் குவளையில் முந்நீர் வழங்கினர்.

முசுகுந்தர் கபிலரைப் பார்த்து, ``இது, குறும்பை நீரும் கரும்பின் சாறும் தெங்கின் இளநீரும் கலந்த முந்நீர்ச்சாறு. நீங்கள் அருந்தி நீண்டகாலம் ஆகியிருக்கும் அல்லவா?” என சற்றே எள்ளலோடு கேட்டார்.

குவளைநீரை வாங்கியபடி கபிலர் சொன்னார், ``குறும்பையும் தெங்கும் பறம்பில் நிறைய உண்டு. கரும்பை மட்டும் சமவெளி மக்களிடம் மான்தசையும் மதுவும் கொடுத்து வாங்குவர்” எனச் சொன்னவர், ``இன்னும் நீங்கள் கரும்பைப் பிழிந்து சாறெடுத்துதான் குடிக்கிறீர்களா?” எனக் கேட்டார்.

அவையோர் அதிர்ச்சியடைந்தனர். ``கரும்பைப் பிழிந்துதானே சாறெடுக்க முடியும்... வேறெப்படி எடுப்பது?” எனக் கேட்டார் சோழவேலன்.

``கரும்பின் மூன்றாவது கணு மட்டும் சிறு துளையுடையது. விளைந்த கரும்பை செம்மண்ணால் குழைத்த துணிகொண்டு அடி முதல் நுனி வரை இறுகக் கட்ட வேண்டும். மூன்றாவது கணு மட்டும் வெளியில் தெரிவதைப்போல் இருக்க வேண்டும். அதில் குவளையைக் கட்டிவைத்துவிட்டால் பனையில் கள் இறங்குவதுபோல கரும்பின் சாறு இறங்கும். பத்து கரும்புகளுக்கு ஒரு மிடறு சாறு கிடைக்கும். அதற்கு இணையான சுவைநீர் உலகில் வேறில்லை.”

கேட்டுக்கொண்டிருந்தவர்களின் நாக்கில் மூன்றாம் கணுவின் நீர் இறங்கத் தொடங்கியது.

கபிலர் தொடர்ந்தார், ``அதை மட்டுமே குடிக்க வேண்டும் என்று குவளை நிறைய நாள் தவறாமல் எனக்குத் தருவான் பாரி.”

எங்கே தொடங்கினாலும் முடிக்கவேண்டிய இடத்தில் வந்து முடிக்கிறார் கபிலர். குவளையில் முந்நீரை யாரும் அருந்தவில்லை. பேச்சின் சூழல் பொருத்தமாய் அமைவதுபோல் இல்லை. அனைவரின் எண்ணமும் அதுவாகத்தான் இருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 83p4_1525172380
குவளையைக் கையில் ஏந்திய கபிலர் அப்போதுதான் கவனம்கொண்டார். உடன்வந்த அலவன் அருகில் இல்லை. ``என்னுடன் வந்த சிறுவன் எங்கே?” எனக் கேட்டார். மற்றவர்களும் அதுவரை கவனிக்கவில்லை.

கூடாரத்துக்கு வெளியே பணியாளர்கள் அங்குமிங்குமாகத் தேடினர். மூஞ்சலின் ஒரு மூலையிலிருந்து நடந்து வந்துகொண்டிருந்தான் அலவன். பணியாளர்கள் அவனை அழைத்துக் கொண்டு வந்தனர். கூடாரத்துக்குள் நுழைந்து கபிலரின் அருகே அமர்ந்தான். அவனுக்கும் குவளையில் முந்நீர் தரப்பட்டது.

அதுவரை உதியஞ்சேரலின் அருகே இருந்த கருங்குரங்குக்குட்டி திடீரென பல்லை இளித்து `கீர்ர்ர்’ரென ஓசை எழுப்பத் தொடங்கியது. என்ன ஓசையெழுப்புகிறது என மற்றவர்கள் பார்க்கும்போதே அந்த இடத்தில் மலம் கழித்தது. என்ன செய்கிறது எனப் பார்த்தறியும் முன்னரே அது நிலைகுலைந்து கத்தவும் குதிக்கவும் தொடங்கியது. சேரனின் பணியாளர்கள் உடனே வந்து அதைப் பிடிக்க முயன்றனர். அதன் செயல்கண்டு பதற்றத்தோடு உதியஞ்சேரல் கத்தினான், ``குவளையில் இருக்கும் முந்நீரை அருந்தாதீர்கள். அதில் நஞ்சு கலக்கப் பட்டிருக்கிறது.”

குலசேகரபாண்டியன் மிரண்டு எழுந்தான். ஏந்திய குவளையை சட்டென விடுத்தான் சோழவேலன். செங்கணச்சோழனும் பொதியவெற்பனும் அதிர்ந்தனர். முசுகுந்தர் நடுங்கிப்போனார்.

யாருக்கு எதிரான சதியிது? யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. மூவேந்தர்களும் ஒருவருக்கு ஒருவர் வீசிய பார்வையில் எழுப்பப்பட்ட நம்பிக்கை நொறுங்கிக்கொண்டிருந்தது.

கபிலர், ஏந்திய குவளையோடு அப்படியே இருந்தார். அருகில் இருந்த அலவன் அவரின் காதோடு சொன்னான், ``அது என்னைக் கண்டுதான் மிரண்டு கத்துகிறது. குவளை நீரில் நஞ்சேதும் இல்லை.”

குலசேகரபாண்டியனின் மேலெல்லாம் வியர்த்துக்கொட்டியது. ``சுவைநீரில் நஞ்சிருக்கிறதா என்று சோதியுங்கள். சமையலாளர்களைச் சிறையிடுங்கள்” என்றார்.

மிச்சம் இருந்த குவளைநீரை பணியாளர்கள் கைநடுங்க வந்து வாங்கினர். கபிலர் சொன்னார், ``இதில் நஞ்சேதும் இருப்பதுபோல் தெரியவில்லையே!”

``வேண்டா பெரும்புலவரே” என்று சொன்ன குலசேகரபாண்டியன் அவையைப் பார்த்துச் சொன்னான், ``முந்நீரில் நஞ்சு கலக்கப்பட்டுள்ளதா என்று சோதித்தறிந்த பிறகு பேச்சைத் தொடரலாம்.”

அவை அமைதிகாத்தது. கபிலரையும் அலவனையும் சற்றுநேரம் ஓய்வெடுக்க கூடாரத்துக்கு அழைத்துச்சென்றார் முசுகுந்தர்.

நீண்ட சோதனைக்குப் பிறகு மூவேந்தர்களின் தலைமை மருத்துவர்கள் உள்ளே நுழைந்தனர், ``பார்போற்றும் வேந்தர்களை வணங்குகிறோம். சுவைநீரில் நஞ்சேதும் இல்லை.”

``நன்றாகச் சோதித்தீர்களா?”

``முழுமையாகச் சோதித்துவிட்டோம்.”

``அப்படியென்றால் நீங்கள் மூவரும் முதலில் அருந்துங்கள்” என்றார் சோழவேலன்.

மூவரும் குவளைநீரை அருந்தினர்.

குவளையைக் கீழே வைக்கும் வரை வேந்தர்களின் கண்கள் அவர்களைவிட்டு விலகவில்லை. அருந்திய மருத்துவர்களின் கண்களில் சிறு அச்சம்கூட இல்லை. அவர்கள் குவளையைக் கீழே வைத்த கணத்தில் உதியஞ்சேரல் கத்தினான், ``அந்தக் குரங்கைக் கொன்றுவிடுங்கள்!”

சற்று இடைவெளிக்குப் பிறகு ஓய்வறையில் இருந்த கபிலரை அழைத்துவரச் சொன்னார்கள். நஞ்சு, அச்சம், சதி, விசாரணை, கொலை என சிறிது நேரத்துக்குள் அனைத்தும் நிகழ்ந்து முடிந்த ஓர் அவைக்குள் கபிலர் மீண்டும் நுழைந்தார். யார் முகத்திலும் இயல்பும் மகிழ்வும் இல்லை. பாரியின் தரப்பில் நின்று வேந்தர்களுக்கு எதிராக வெளிப்படையாகச் சொல்லேந்துவார் கபிலர் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

அதிகாரத்தின் மீதிருந்து வெளிவரும் நேரடியான அரசியல் பேச்சு தொடங்கியது. ``இப்பெரும் போரால் பாரியும் பறம்பும் அழிவதைத் தவிர்க்கவே நாங்கள் விரும்புகிறோம். அதற்காகத்தான் உங்களை அழைத்தோம்” என்றார் குலசேகரபாண்டியன்.

அருகில் இருந்த அலவனைப் பார்த்து, ``நீ வெளியில் போ” என்றார் கபிலர். அவன் வெளியேறினான்.

``நான் என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறீர்கள்?” எனக் கேட்டார் கபிலர்.

``பாரியை சமாதானப்படுத்தி பேரரசர்களோடு இணங்கிப்போகச் சொல்லுங்கள்” என்றார் முசுகுந்தர்.

``போருக்கு ஆயத்தமாக இருக்கும் ஒருவனைத்தானே சமாதானமாகப் போகச்சொல்ல முடியும். பாரிதான் போருக்கே ஆயத்தமாகவில்லையே, பிறகு எப்படி அவனை சமாதானமாகப் போகச்சொல்வது?”

``பெரும்புலவர், பொய் பேசத் துணிந்துவிட்டீர்! எதிர் மலையில் நாள்தோறும் எண்ணற்ற வீரர்களைக் குவித்துக்கொண்டு இருக்கிறான். அவனையா போருக்கு ஆயத்தமாகவில்லை என்று சொல்கிறீர்கள்?”

``அவனது மண்ணைக் காக்க அவனது எல்லைக்குள் வீரர்களைச் சேர்க்கிறான். அதுவா போருக்கான ஏற்பாடு?”

``எல்லையைக் காப்பதற்கும் எல்லைக்குள் இருந்து தாக்குதலுக்கு  ஆயத்தமாகவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. நீங்கள் அதை அறியாதவரல்லர். ஆனால், அவன் எங்களையும் எமது படையையும் அறியாதவனாக இருக்கிறான். அதை அவனுக்கு உணர்த்தவே உங்களை அழைத்தோம்” என்றார் சோழவேலன்.

``நீங்கள் தேரில் ஏறிய கணமிருந்து இந்த இடம் வந்து சேர இரு பொழுதுகள்  ஆனதல்லவா! இதே வேகத்தில் தேரை ஓட்டினால் எமது படை நிற்கும் பரப்பளவு முழுவதும் பார்த்தறிய மூன்று நாள்களாகும். இந்தப் பெரும்படையோடு மோத நினைக்கும் மூடத்தனத்தை அவன் செய்ய வேண்டாம் என நீங்கள் அவனுக்கு எடுத்துரைக்க வேண்டும்” என்றார் குலசேகரபாண்டியன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 83p5_1525172279
``நாகக்கரட்டின் மேலிருந்து பார்த்தால் படையின் சரிபாதி தெரிகிறது. அதுவே இரலிமேட்டிலிருந்து பார்த்தால் ஒரே பார்வையில் மொத்த படையின் முழுமையையும் பார்த்துவிட முடிகிறது. அவ்வளவுதான் இந்தப் படையின் அளவு. ஆனாலும் பாரி போரிட வேண்டாம் என்றுதான் முடிவுசெய்துள்ளான்” என்றார் கபிலர்.

``இந்தப் பெரும்படையைப் பார்த்தால், எந்தச் சிறுகுடி மன்னனும் போரிட வேண்டாம் என்றுதான் முடிவுசெய்வான். அதைத் தவிர அவனுக்கு வேறு வழி என்ன இருக்கிறது?” எனக் கேட்டான் உதியஞ்சேரல்.

வார்த்தைகள் உரசிக்கொள்ளத் தொடங்கின. கபிலரைக் காயப்படுத்திவிடக் கூடாது என்ற கவனம் மெள்ள மெள்ள குறைந்துகொண்டிருந்தது.

உதியஞ்சேரல் வயதால் மிகச் சிறியவன்; பலமுறை தோல்வியடைந்ததால் தீராவலியோடு இருப்பவன். அவையனைத்தும் வார்த்தைகளில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.

``மூவேந்தர்களோடு இணங்கிப் போதல்தான் பாரிக்கு நல்லது. எண்ணற்ற சிறுகுடி மன்னர்களைப்போல அவனும் தனது நிலத்தை சிறப்பாக ஆளலாம்” என்றார் முசுகுந்தர்.

``இல்லையென்றால்..?”

``போர்க்களத்தில் அவனது குடலை கழுகுகள் ஏந்திப் பறக்கும் நாள் விரைவில் வரும்” என்றார் சோழவேலன்.

கூர்முனைகொண்ட வார்த்தைகள் அடியாழம் வரை இறங்கின. கபிலர் சற்றே அமைதிகொண்டார். அவை முழுவதும் அமைதி நீடித்தது. செங்கணச்சோழன் பொதியவெற்பனைப் பார்த்து கண்களை உருட்டி ஏதோ சொல்லச் சொன்னான். தூதுவனைச் சீண்டுவதும் மிரட்டுவதும் மிக முக்கியம். எதிரியை எந்தப் பொறியை நோக்கி நகர்த்த வேண்டும் என்பதிலிருக்கும் தெளிவுதான் தூதுவனை நோக்கி எறியவேண்டிய சொற்களை தீர்மானிக்கிறது. பாரியிடம் சமாதானம் பேசவேண்டிய தேவை எதுவும் மூவேந்தர்களுக்கு இல்லை. திசைவேழரின் வாக்கை ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதால், இது நடக்கிறது.

இந்தப் படையெடுப்புக்கு வேந்தர்கள் மூவருக்கும் தனித்தனியான காரணங்கள் உண்டு. பொதுவான காரணம், பாரியின் புகழ். அது இவர்களின் ஆழ்மனதை நிம்மதி இழக்கச் செய்துள்ளது. அவனது பெயர் அவமானத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது. அவனது அழிவு மட்டுமே இதற்கு முடிவு காணக்கூடியது. அதற்காக போர்க்களம் நோக்கி குறிவைத்து இழுக்க பேச்சுவார்த்தையைப் பயன்படுத்துதல் என்பதுதான் இவர்களது எண்ணம்.

பேசவேண்டியது பற்றி கண்களால் குறிப்புச் சொன்னதும் பொதியவெற்பன் கூறினான், ``பெரும்புலவரை வணங்குகிறேன். பேரரசர்கள் வீற்றிருக்கும் அவையில் இளவரசன் பேசுதல் முறையன்று. ஆனாலும் எனது கருத்தைத் தெரிவிக்க விழைகிறேன். பாரியின் முன்னால் இருப்பன இரண்டு வழிகள்தான்.”

என்னவென்று கபிலர் கேட்பார் எனக் கருதியது அவை. அவரோ அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.

கேள்வி எழாததைக் கண்டுகொள்ளாததைப் போல் பேச்சைத் தொடர்ந்தான், ``மூவேந்தர்களில் யாரேனும் ஒருவருக்கு பாரி தன் மகளை மணமுடித்துக் கொடுத்து மணஉறவு காண்பது அல்லது மூவேந்தர்களோடு போரிட்டு மாய்வது. இவை இரண்டில் எது சரியான வழியென உங்கள் நண்பனுக்கு நீங்கள் அறிவுரை வழங்குங்கள்.”

கொந்தளிக்கும் தனது எண்ணங்கள் எதுவும் முகத்தில் தெரிந்துவிடக் கூடாது என பெருமுயற்சி செய்தார் கபிலர். ஆனாலும் மற்றவர்களால் கண்டறிய முடிந்தது. இதுதான் தகுந்த நேரம் என நினைத்த சோழவேலன் சொன்னான், ``போரில் அவன் அழிவான். அதன் பிறகு மூவேந்தர்களும் பறம்பைப் பங்கிட்டுக் கொள்வோம். அதைத் தடுக்க, மூவேந்தர்களோடு மண உறவுகொள்ளுதல் சிறந்ததுதானே?”

இயற்கையின் தன்னியல்பில் பற்றிப் படரும் கொடிபோல் மனிதக்காதல் செழித்துக்கிடக்கும் ஆதிநிலம் குறிஞ்சி. குறிஞ்சியின் குலச்சமூகம் நோக்கி மணவுறவை அரசியல் நடவடிக்கை என்னும் வல்லாயுதமாக மாற்றி வீசியெறிந்தபோது கபிலரின் உடல் நடுங்கியது.

மறுசொல்லின்றி அமர்ந்திருந்தார். அமைதி நீடித்தது. சற்று நேரத்துக்குப் பிறகு கொந்தளித்த உணர்வுகளை ஒருமுகப்படுத்திப் பேசத் தொடங்கினார்,

``உங்கள் மூவருக்கும் பறம்பின் மலைகள் வேண்டும். அவ்வளவுதானே?”

நேரடியாக இப்படிக் கேட்கிறாரே என்று குலசேகரபாண்டியன் எண்ணிக்கொண்டிருந்த போது, சற்றே உயர்த்திய குரலில் சோழவேலன் சொன்னான், ``ஆமாம்.”

``அதோ அந்த மேடையில் இருக்கும் இரண்டு யாழ்களையும் இருவர் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு பெண்களை அழைத்து கால் சலங்கையைக் கட்டிக்கொள்ளச் சொல்லுங்கள். அனைவரும் உடன் வாருங்கள். நான் பாடுகிறேன். பாட்டிசைத்துப் பறம்பேறிய குழுக்கள் கேட்பதை `இல்லை’ எனச் சொல்லும் வழக்கம் பாரியிடம் இல்லை. மொத்த பறம்பினையும் வழங்கிவிடுவான்.”

ஆணவத்தை அடியோடு வெட்டிச் சாய்ப்பதைப்போல சொற்களை வீசியெறிந்துவிட்டு, மறுமொழி என்ன என்பதை இறுமாப்போடு பார்த்தார் கபிலர்.

கொதிநெருப்பைக் கொட்டியதுபோல துடித்தெழுந்தான் சோழவேலன். நிலைமை வேறுவிதமாக ஆகிவிடக் கூடாது எனக் கருதிய குலசேகரபாண்டியன் சட்டெனச் சொன்னார், ``நட்பால் நா பிறழ்கிறது. உமது சொற்கள் பற்றியெறியும் பறம்பினைப் பாட அதிக நாள் இல்லை கபிலரே!” 

இருக்கையைவிட்டு எழுந்தார் கபிலர், ``நெருப்பில் எரித்தாலும் மீண்டும் முளைக்கும் ஆற்றல்கொண்டது பனம்பழம் மட்டும்தான். பனையை குலச்சின்னமாகக்கொண்டவன் வேள்பாரி. நெருப்பாலும் அழிக்க முடியாத அவனைப் பாடுதல் எந்தமிழுக்கு அழகு.”

சொல்லியபடி வணங்கி அவை நீங்கினார் கபிலர்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 16, 2018 10:35 pm

வேனிற்காலப் பள்ளியறையிலிருந்து மீண்டும் குளிர்காலப் பள்ளியறைக்கு மாறியிருந்தாள் பொற்சுவை. ஆனால், மாற்றங்கள் வேறு எதிலும் நிகழவில்லை. வேனிற்காலப் பள்ளியறையில் இருந்த காலத்திலும் பொதியவெற்பன் அங்கு வரவில்லை. அரசப் பணிக்காக வெங்கல் நாட்டுக்குப் போனவனை பேரரசர் அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டார். போர்ச்சூழலை நோக்கி நாள்கள் நகர்ந்துகொண்டிருந்தன.

மழைக்காலம் தொடங்கும் முன் பேரரசரும் புறப்பட்டுப் போனார். போருக்கான ஏற்பாடுகளுக்காக அரண்மனையின் முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் முன்னதாகப் புறப்பட்டுப் போயினர். போர்ச்சூழல், அரண்மனையை ஆண்களின் வாசனையற்றதாக மாற்றியது. கருவூலப் பொறுப்பாளர் வெள்ளிகொண்டார் மட்டுமே கோட்டையில் தங்கியிருந்தார். அரண்மனையின் நிர்வாகப் பொறுப்பு முழுமையும் அவர்வசமிருந்தது.

கோட்டையின் பாதுகாப்புக்கான வீரர்களைத் தவிர படைக்கலனில் இருந்த அனைவரும் புறப்பட்டுப் போயினர். பேரரசரும் இளவரசரும் கோட்டைக்குள் இல்லாத காலங்களில் விழாக் கொண்டாட்டங்கள் நடப்பதில்லை. தெய்வ வழிபாட்டுச் சடங்குகள் மட்டுமே வழக்கம்போல் நடந்தன. அரண்மனையின் அன்றாடம் என்பது ஆடம்பரமற்றே இருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 83p2_1525692100
இந்தப் புறச்சூழல் எதுவும் பொற்சுவையின் அகத்துக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அவளது நாள்கள் வழக்கம்போலவே கழிந்தன. ஒரு பகல் பொழுதில் சுகமதியை அழைத்துக்கொண்டு அரண்மனையின் வெவ்வேறு மாளிகைகளைப் பார்த்துவந்தாள். தனித்து இருந்த அழகிய மாளிகை ஒன்று அப்போது அவளின் கண்ணில்பட்டது.

கடல் அலைகள் இடைவிடாது சுருண்டு மேலெழுவதுபோல் மாளிகையின் வெளிப்புறச் சுதைவேலைப்பாடுகள் இருந்தன. அலையை மேல்தோல் எனப் போத்தியிருக்கும் அந்த மாளிகையைப் பார்த்ததும் உள்ளே நுழையவேண்டும் என ஆசைகொண்டாள். கடல் அலையின் தளும்பல்களை காலம் முழுவதும் உணர்ந்தவள் அவள். அதைப் பார்த்ததும் கால்கள் தன்னியல்பில் அந்த மாளிகையை நோக்கி நடக்கத் தொடங்கின.

அது என்ன மாளிகை என்று உடன் இருக்கும் சுகமதிக்குத் தெரியும். எனவே, அங்கு போவதைத் தவிர்க்க முயன்றாள். ஆனால், அதற்குள் மாளிகையின் வாசல் அருகே சென்றுவிட்டாள் பொற்சுவை. இளவரசி திடீரென அங்கு வருவாள் என, பணிப்பெண்கள் எதிர்பார்க்கவில்லை. முத்துகள் பதித்த விரிவடிவத் தட்டுகளை எடுத்து வந்து அவளை வரவேற்க ஏற்பாடு செய்தனர். ஆனால், அதற்குள் பொற்சுவை மாளிகையின் உள்ளே நுழைந்துவிட்டாள்.

நிலைச்சுவரிலும் தரையிலும் பளிங்குக்கற்கள் பாவப்பட்டிருந்தன. ஓவியங்களும் மரவேலைப்பாடுகளும், மனிதக் கற்பனைக்கு எட்டாத பேரழகுகொண்டு விளங்கின. எங்கும் இசைக்கருவிகள் நிறைந்திருந்தன. வியந்து பார்த்த பொற்சுவை,”இது என்ன மாளிகை?” எனக் கேட்டாள்.
சொல்வதற்கு சற்றே தயக்கத்தோடு சுகமதி நின்றிருந்தபோது, அருகில் இருந்த தலைமைப் பணிப்பெண் சொன்னாள், “இந்த மாளிகையின் பெயர் பாண்டரங்கம்.”

பெயர் கேட்டதும், நீலவள்ளிதான் நினைவுக்குவந்தாள். ‘திருமணத்துக்காகக் கட்டப்பட்ட பாண்டரங்கில்தான் நீலவள்ளி யோடு மகிழ்ந்துகிடக்கிறான் பொதியவெற்பன்’ என்று பலமுறை கேள்விப்பட்டுள்ளாள். இந்த மாளிகையில்தான் தேவவாக்கு விலங்கின் வடக்கிருக்கும் ஆற்றல் கண்டறியப்பட்டது என்பதையும் அறிவாள். மனதுக்குள் அந்த எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, கண்கள் கலைவேலைப்பாடுகளைக் கண்டு சுழன்று கொண்டிருந்தன.  

நிமிர்ந்து மேற்கூரையைப் பார்த்தாள். அங்கும் வானியல் காட்சிகள் வரையப்பட்டிருந்தன. காலத்தை வசப்படுத்தும் மனித முயற்சிகள் அவளுக்குச் சிரிப்பையே வரவழைத்தன. பார்த்தபடியே இடதுபுறமாகத் திரும்பினாள். மேடை ஒன்றில் மகரயாழ் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு சற்று தள்ளி மாளிகையின் நடுவில் விளக்கு ஒன்று இருந்தது. அதன் கலை வேலைப்பாடுகள் கண்களை ஈர்த்தன. மகரயாழை நோக்கிச் செல்ல நினைத்தவள், விளக்கை நோக்கிச் சென்றாள்.

பணிப்பெண் அருகில் வந்து சொன்னாள், “மிகச்சிறந்த கலைவேலைப்பாடுகளைக்கொண்ட விளக்கு இது. ‘காமன் விளக்கு’ என்று இதைச் சொல்வார்கள் இளவரசி.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 83p1_1525692119
காதலுற்றப் பெண் ஒருத்தி வலதுகையை பக்கவாட்டில் சற்றே உயர்த்திப் பிடித்திருக்கிறாள். அவளின் உள்ளங்கையில் அகல் இருக்கிறது. இடதுகையை மார்போடு அணைத்தபடி வைத்திருக்கிறாள். அந்தக் கை ஒரு மலரைப் பிடித்துக்கொண்டிருக்கிறது. அவளின் பேரழகில் மயங்கிய காதலன் அவளின் முகம் பார்த்தபடி அணுக்கமாய் மயங்கி நிற்கிறான். அந்தச் சிலையை உற்றுப்பார்த்தபடியே நின்றாள் பொற்சுவை.

பணிப்பெண் சொன்னாள், “இந்த விளக்கில் சுடரேற்றிப் பார்க்கும்போதுதான் இதன் முழு சிறப்பும் தெரியவரும் இளவரசி.”

‘சரி’ எனத் தலையசைத்தாள் பொற்சுவை. அரங்கின் பிற பகுதிகளிலிருந்து வரும் ஒளியை, திரைச்சீலையை இறக்கி மறைத்தார்கள். பாண்டரங்கில் இருள் நிறைந்தது. பணிப்பெண்கள் காமன் விளக்கில் சுடரேற்றினார்கள். முன்திசையெங்கும் ஒளி பரவியது. அரங்கில் இருந்த கண்ணாடிகளும் முத்துகளும் ஒளியை வாங்கி உமிழத் தொடங்கின.

பணிப்பெண், “இந்த விளக்கின் சிறப்பு, உமிழும் ஒளியல்ல; படரும் நிழல்தான்” என்று பொற்சுவையைப் பார்த்துச் சொல்லியபடி விளக்கின் பின்புறத்தை நோக்கிக் கை நீட்டினாள். பொற்சுவையும் சுகமதியும் அந்தத் திசையைப் பார்த்தனர்.

ஆணும் பெண்ணுமாக இருவர் நிற்கும் சிலையின் நிழல் ஒற்றை உருவமாக படிந்திருந்தது. சுடர் அசையும்போதெல்லாம் நிழலும் அசைந்துகொடுத்தது. அசையும் நிழலுக்குள் புரளும் உருவங்களைப் பற்றி பணிப்பெண் வியந்து சொல்லத் தொடங்கினாள்.

கையை உயர்த்தி அவளின் பேச்சை நிறுத்திய பொற்சுவை. “திரைச்சீலைகளை உயர்த்துங்கள்” என்றாள்.

சற்றே அதிர்ந்த பணிப்பெண்கள் திரைச்சீலைகளை விலக்கினர். பாண்டரங்கம் மீண்டும் ஒளிகொண்டது. 

சிலையின் அருகில் இருந்தபடி உற்றுப்பார்த்துக்கொண்டே இருந்த பொற்சுவை, சிறிது நேரம் கழித்துச் சொன்னாள், “இந்தச் சிலையின் சிறப்பு, வலதுகையில் ஏந்திப்பிடித்துள்ள விளக்கோ படரும் நிழலோ அல்ல.”

அனைவரும் வியந்து பார்த்தனர். 

“இடதுகையில் மார்போடு அணைத்துப் பிடித்திருக்கும் அந்த மலர்தான்.”

சுகமதி அப்போதுதான் அந்த மலரை உற்றுப்பார்த்தாள்.

“இந்தச் சிலையை வடித்த சிற்பி யார்?”

பணிப்பெண்களுக்குத் தெரியவில்லை. “கேட்டுச் சொல்கிறோம் இளவரசி.”

“விரைந்து தெரிவியுங்கள்” என்று சொல்லி, பாண்டரங்கம்விட்டு வெளியேறினாள்.

வரும் வழியில் சுகமதி கேட்டாள், “அந்த மலரின் சிறப்பு என்ன இளவரசி?”

“அந்தக் காதலர்களின் முகங்களைப் பார்த்தாயா? உள்ளுக்குள்ளிருந்து பெருகும் பேரன்பால் மலர்ந்திருக்கின்றன. விளக்கில் சுடரை ஏற்றாதபோதும் அந்த முகங்கள் மலர்ந்தே இருக்கின்றன. அப்படியென்றால், ‘அந்த மகிழ்வுக்குக் காரணம் விளக்கன்று, வேறேதோ காரணம் இருக்க வேண்டும்’ எனத் தோன்றியது. அப்போதுதான் அந்த மலரை உற்றுக்கவனித்தேன். அது தனித்துவமிக்கதொரு மலர். அதன் கீழ் இதழ்களின் அடிப்பகுதியில் சிறுசிறு வேர்கள் இருப்பதைப்போல சிற்பி வடித்துள்ளான்” என்றாள்.

“மலரின் இதழ்களில் எப்படி வேர் இருக்கும்? வேரில் காய்கள் காய்க்கும்... மலர்கள் மலருமா என்ன?”

“நானும் இதுவரை கேள்விப்பட்டதில்லை. ஆனால், வேரில் மலரும் தன்மைகொண்ட ஏதோ ஓர் அதிசய மலர் உள்ளது. அதை ஏந்திப்பிடித்துள்ளதால்தான் இந்தக் காதலர்கள் இவ்வளவு மகிழ்வோடு இருக்கிறார்கள். அதைத்தான் சிற்பி மிக நுட்பத்தோடு வார்த்துள்ளான்” என்றாள்.

அன்றைய நாள் முழுவதும் அந்த மலரையும் காமன் விளக்கையும் பற்றியே பேசிக்கொண்டிருந்தாள் பொற்சுவை. அந்த விளக்கைச் செய்த சிற்பி யார்  எனத் தெரிந்துகொள்ள, விடாது முயன்றாள்.

மறுநாள் காலையில் பாண்டரங்கின் தலைமைப் பணிப்பெண் வந்து சொன்னாள், “தங்களின் திருமணத்துக்காக வெங்கல்நாட்டுச் சிறுகுடி மன்னர் கொடுத்த பரிசுப்பொருள் அது. அங்கு உள்ள சிற்பி இதை வடித்துத் தந்துள்ளார்.”

அன்று மாலையே வெள்ளிகொண்டாருக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது. இளவரசி வெங்கல்நாட்டுக்குச் செல்லவேண்டும்.

போர்க்களத்துக்குச் செல்ல இளவரசி ஏன் ஆசைப்படுகிறார் என்பது வெள்ளிகொண்டாருக்கு விளங்கவில்லை. இளவரசர் அரண்மனையைவிட்டு அகன்று பல மாதகாலம் ஆகிவிட்டது. “அவரைக் காணும் விருப்பத்தில் இளவரசி புறப்படுகிறார்’’ என்று உடன் இருந்தவர்கள் அவருக்குச் சொன்னார்கள். உரிய ஏற்பாட்டோடு இளவரசியை அனுப்பிவைப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியேதும் தெரியவிலை.

தகுந்த பாதுகாப்போடு இளவரசியை அழைத்துச் செல்லும் பொறுப்பு செவியனுக்கு வழங்கப்பட்டது. அரண்மனையின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் செவியன்தான் வெங்கல் நாட்டுக்கு பலமுறை சென்று வந்த அனுபவம்கொண்டவன். எனவே, வெள்ளிகொண்டார் அவனைத் தேர்வுசெய்தார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 83p3_1525692140
மூன்றாம் நாள் அதிகாலை தேர் புறப்பட்டது. தோழிகள் புடைசூழ, அன்னகர்கள் காவல்கொள்ள, அவர்களைக் கடந்து வீரர்கள் அணிவகுக்க, செவியன் தலைமையில் பயணம் தொடங்கியது.

செவியனின் குதிரையே முன்னே பாய்ந்து சென்றது. ஆனால், அவனது மனம் குழப்பத்திலிருந்தது. கடந்தமுறை வெங்கல் நாட்டிலிருந்து இளமாறனை மதுரைக்கு அழைத்து வந்தது செவியன்தான். ஆனால், அவனால் அழைத்துவரப்பட்டவன் மீண்டும் உயிரோடு வெங்கல்நாடு திரும்பவில்லை. இப்போதோ இளவரசியை வெங்கல்நாடு நோக்கி அழைத்துச்செல்கிறான். இந்தப் பயணம் எப்படி அமையப்போகிறதோ என்ற குழப்பத்தில் தவித்தது அவனது மனம்.

விரைந்து பயணித்தனர். குதிரைகள் இளைபாறுதலுக்காக ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அப்போதெல்லாம் தேர்விட்டு இறங்கி வெளியில்வரும் இளவரசி, சற்று தொலைவு நடந்து இயற்கையின் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தாள். மழைக்காலம் முடிவுற்ற நேரமிது. வயல்வெளியெங்கும் உழவுத்தொழில் செழிப்புற்று இருக்கவேண்டிய காலம் இது. ஆனால், காட்சிக்கு அப்படித் தெரியவில்லை. அந்த வழி சென்ற இரண்டு பெண்களை அழைத்துக் கேட்டாள் பொற்சுவை.

“ஊர்களில் ஆண்கள் இருந்தால்தானே உழவுத்தொழிலைச் செய்ய முடியும். எல்லோரையும் போர்க்களத்துக்கு அனுப்பச் சொல்லி அரச உத்தரவு. பிறகு எப்படி பயிர்செய்ய முடியும்?” எனக் கேட்டுவிட்டு நடந்தனர் பெண்கள்.

செல்லும் வழியில் எதிர்படும் ஊர்களில் தேர் நின்றது. பெண்களும் குழந்தைகளும் வயோதிகர்களும் மட்டுமே ஊர்களில் இருந்தனர். நீரும் வயலும் இருந்தும் பயிரை விளைய வைக்க முடியாத கொடுமையைப் பார்த்துக்கொண்டே கடந்தாள். கொல்லர், தச்சர், பறம்பர் என எவரும் ஊரில் இல்லை. எல்லோரும் போர்க்களம் சென்றுவிட்டனர். தானியங்களைச் சேமிக்க வழியின்றி இருக்கும் சின்னஞ்சிறு ஊர்களில் எல்லாம் கோடைக்காலத்தைப் பற்றிய கவலை இப்போதே வரத் தொடங்கிவிட்டது. ஏறக்குறைய எந்த ஊரும் இந்த ஆண்டு முழுமையான அறுவடையைச் செய்யவில்லை. வரப்போகும் காலம் எவ்வளவு கொடுமையாக இருக்கப்போகிறது என்பதை ஒவ்வொருவரின் கண்களிலும் கண்டாள் பொற்சுவை.

இரண்டாம் நாள் பயணத்துக்குப் பிறகு அவள் மனிதர்களைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். காட்சிகள் மனதைக் கலங்கடிப்பனவாக இருந்தன. எனவே, திரைச்சீலை விலகாமல் பார்த்துக்கொண்டாள்.

தொடர்ந்து பயணித்து வெங்கல்நாட்டு மாளிகையை அடைந்தனர். பாண்டியநாட்டு இளவரசியின் திடீர் வரவு, வெங்கல்நாட்டு அரண்மனையைத் திகைப்புறச் செய்தது. புதிதாகக் கட்டப்பட்ட மாளிகை ஒன்றில் அவள் தங்கவைக்கப்பட்டாள். போர்க்களம், பலகாதத் தொலைவு தள்ளி இருக்கிறது. செவியன் அங்கு சென்று மையூர்கிழாரைக் காண முயன்றான். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிந்தது. மையூர்கிழாருக்கு செய்தி அனுப்பப்பட்டது. அவர் வரும் வரை காத்திருந்தனர்.

இரண்டாம் நாள்தான் செய்தி மையூர்கிழாரை எட்டியது. அவர் காலாட்படையின் வடகோடியில் இருந்தார். செய்தியை அவர் முதலில்  நம்பவில்லை. ‘உலகின் பேரழகி என வர்ணிக்கப்படும் பாண்டியநாட்டு இளவரசி, தனது அரண்மனைக்கு வந்துள்ளாரா?!’ வியப்பு நீங்காமல் குதிரையை விரைவுபடுத்தினார்.

‘பொதியவெற்பன் மதுரைக் கோட்டை யிலிருந்து நீங்கி பல மாத காலம் ஆகிவிட்டது. அதனால்தான் இளவரசியாரும் புறப்பட்டு இங்கு வந்துள்ளார்’ என்று எண்ணியபடியே அவள் தங்கியுள்ள மாளிகையை அடைந்தார். பாண்டியநாட்டு வழக்கப்படி நுன்னிழை பட்டுச் சரடுகளாலான திரைச்சீலைகள் அலையலையாய் மறைத்திருக்க அப்பால் நின்றிருந்த இளவரசி திரை விலக்கி வெளியே வந்தாள். தலை தாழ்த்தி வணங்கிய அவர், இளவரசியின் வருகையை வர்ணித்துக் கூறிய வார்த்தைகளை முடிக்க நீண்டநேரமானது. பொற்சுவை மகிழ்ந்து அவரது வரவேற்பை ஏற்றாள்.

“அமைச்சர் முசுகுந்தரிடம் நான் வந்துள்ள செய்தியைத் தெரிவியுங்கள். அவர் பொருத்தமான நேரத்தில் பேரரசரிடமும் இளவரசரிடமும் இந்தச் செய்தியைச் சேர்ப்பார்” என்றாள்.

“உத்தரவு இளவரசி. அவ்வாறே செய்கிறேன்” என்று கூறி, புறப்பட ஆயத்தமான மையூர்கிழாரை நோக்கி சுகமதி கேட்டாள், “இளவரசியாரின் திருமணத்துக்கு காமன் விளக்கைப் பரிசாகத் தந்தீர்கள் அல்லவா... அந்த விளக்கைச் செய்த சிற்பி எங்கே?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 83p4_1525692157
மையூர்கிழார் உள்ளுக்குள் மகிழ்ந்தார். இந்த மாளிகைக்கு இளவரசர் வரும் நாளன்று காமன் விளக்கு இங்கு இருக்க வேண்டும் என இளவரசி விரும்புவதாக எண்ணிக்கொண்டார்.

“உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறிய மையூர்கிழார், அரண்மனையின் தலைமைச் சித்திரக்காரர் குழல்தத்தனை அழைத்து காராளி எங்கு இருந்தாலும் அழைத்துவர உத்தரவிட்டு போர்க்களம் திரும்பினார்.

குழல்தத்தன் வயதில் மூத்தவர். இளவரசியைக் கண்டு வணங்கினார். “காராளியின் ஊர் மலைக்குன்றுகளுக்குள் இருக்கிறது. போய்த் திரும்ப மூன்று நாள்கள் ஆகும்” என்று சொல்லிச் சென்றார்.

இளவரசி பொற்சுவை, பயணக்களைப்பு நீங்க ஓய்வெடுத்தாள். மூன்று நாள்களுக்குப் பிறகு குழல்தத்தன் வந்தார். ஆனால், உடன் யாரும் வரவில்லை. இளவரசியிடம் பணிந்து சொன்னார், “காராளி வர மறுத்துவிட்டான் இளவரசி.”

யாரும் எதிர்பாராத பதிலாக இருந்தது.

“பாண்டியநாட்டு இளவரசியின் அழைப்பை ஒரு சிற்பி மறுத்துச் சொல்கிறானா?” எனச் சற்றே கோபத்தோடு கேட்டாள் சுகமதி.

குழல்தத்தன் பேச்சற்று நின்றார்.

“ஏன் மறுத்தான்?” எனக் கேட்டாள் பொற்சுவை.

குழல்தத்தன் எந்த விளக்கமும் சொல்லாமல் நின்றார்.

மீண்டும் கேட்டாள் பொற்சுவை. காரணத்தைச் சொல்வதன்றி குழல்தத்தனுக்கு வேறு வழியில்லை.

“ ‘வாக்குத் தவறியவனின் சொல்லுக்கு மதிப்பளிக்க மாட்டோம்’ எனக் காராளி கூறுகிறான்.”

பொற்சுவைக்குப் புரியவில்லை.”வாக்குத் தவறியது யார்?” எனக் கேட்டாள்.

தயக்கத்தோடு குழல்தத்தன் சொன்னார், “எங்கள் மன்னர் மையூர்கிழார்.”

சற்றே அதிர்ந்தார் பொற்சுவை.

“ ‘பறம்பின் மீது தாக்குதல் தொடுக்கவோ, தொடுப்பவருக்கு உதவியோ செய்ய மாட்டோம் என்பது எம் முன்னோர்களின் வாக்கு. மையூர்கிழார் அதை மீறிவிட்டார். இனி இந்த மண்ணை நான் மிதிக்க மாட்டேன்’ எனக் கூறி வர மறுத்துவிட்டான்” என்றார் குழல்தத்தன்.

காரணம் அறிந்ததும் அமைதிகொண்டாள் பொற்சுவை. அந்த அமைதி, அவன் மீதான கோபமாக உருமாறவில்லை. என்ன சொல்லப்போகிறாரோ என குழல்தத்தன் எதிர்பார்த்திருக்க,”அவன் இங்கு வரவேண்டாம், நான் அங்கு செல்கிறேன்” என்றாள் பொற்சுவை.

குழல்தத்தன் பதறிப்போனார். “இளவரசியார் மலைக்குன்றுகளுக்குள் இருக்கும் அவனுடைய இடத்துக்குப் போகவேண்டுமா!” என்றார்.

அதற்குள் அவளின் ஆணை அன்னகர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பல்லக்குகள் ஏற்பாடாயின. “நாளை காலை புறப்படலாம்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் பொற்சுவை.

மையூர்கிழாரைக் கண்டு இதைத் தெரிவிக்க முடியவில்லை. அவர் மூவேந்தர்களின் படைக்குள் எங்கு இருக்கிறார் என்பதை அறிவதே இயலாத செயலாகத் தோன்றியது. எனவே, அழைத்துச் செல்வதைத் தவிர குழல்தத்தனுக்கு வேறு வழியில்லை.   

பல்லக்கைச் சுமந்தபடி காரமலையின் அடிவாரக் குன்றுகளுக்குள் நுழைந்தனர் அன்னகர்கள். குழல்தத்தன் முன்னால் போய்க்கொண்டிருந்தார். காரமலையின் அடிவாரத்தில் உள்ளொடுங்கி இருக்கும் ஆறு ஊர்களும் வெங்கல்நாட்டுக்கு உட்பட்டவை. அதற்கு முன்னும் பின்னுமாக இருக்கும் ஊர்கள் பறம்புக்கு உட்பட்டவை. உடலெங்கும் வியர்த்துக்கொட்டியபடி இருந்தது. ஆனாலும் பறம்பு மக்கள் மீதிருந்த நம்பிக்கையில் அவர் துணிந்து அழைத்துச்சென்றார். எந்த ஓர் ஆபத்தும் அவர்களால் நேராது என்பது அவரின் எண்ணம்.

சரிவுப்பாறையில் வண்ணக் கலவைகொண்டு ஓவியம் வரைந்துகொண்டிருந்தான் காராளி. அவன் இருக்கும் இடமறிந்து அங்கேயே அழைத்துச் சென்றார் குழல்தத்தன். மலையேற்றப் பாதையில்கூட பல்லக்கைக் குலுங்காமல் தூக்கி வந்தனர் அன்னகர்கள். திறள்கொண்ட அவர்களின் தோள்களும் துடுப்பு போன்ற அகலமான பாதங்களும் அதற்கென பழக்கப்பட்டவை.

சற்று தொலைவில் இருந்த காராளியிடம் போய்ப் பேசினார் குழல்தத்தன். காராளி திரும்பிப் பார்த்தான். பல்லக்கைக் கீழிறக்கிக்கொண்டிருந்தார்கள். உள்ளே இருந்து பெண் ஒருத்தி இறங்கி அவனை நோக்கி வந்தாள். “வருபவர்தான் பாண்டியநாட்டு இளவரசி” என்று சொல்லி, அந்த இடம்விட்டு அகன்றார் குழல்தத்தன். சுகமதி பல்லக்கின் அருகேயே நின்றுகொண்டாள்.

இளவரசியை மகிழ்ந்து வரவேற்க, காராளி ஆயத்தமாக இல்லை. தலையைத் தாழ்த்தியபடி உயிரற்றக் குரலில் வரவேற்புச் சொல்லைக் கூறினான்.

தனது வரவை விரும்பாத ஒருவனின் முன் நிற்கிறோம் என்பதை முதல் பார்வையிலேயே உணர்ந்தாள் பொற்சுவை. ‘ஆனாலும் என்ன, அவனது கலை என்னை இங்கே வரவைத்தி ருக்கிறது. வாக்கு மீறியவன் மன்னனேயானாலும் அவன் மாளிகைக்கு வர மாட்டேன் என்று சொல்லும் துணிவு பிடித்திருக்கிறது. அதனால்தான் வந்துள்ளேன்’ என மனதுக்குள் நினைத்தபடி சொன்னாள், “நீ வடித்து தந்த காமன் விளக்கு மிகச் சிறப்பாக இருக்கிறது.”

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் செய்து தந்த விளக்கைப் பற்றிய நினைவுவந்தது. எல்லோரையும்போல அதன் சிறப்பை அறியாமலேயே சிறப்பித்துக் கூறும் இன்னொ ருவர் என நினைத்தபடி “நன்றி” என்றான் தலைநிமிராமல்.

“அந்தச் சிலையின் அழகு, சுடரில் ஒளியேற்றும்போது இணைந்துவிழும் நிழலில் இருப்பதாகக் கூறினர். ஆனால், எனக்கு அவ்வாறு தோன்றவில்லை” என்றாள்.

சற்றே விழிப்புற்றான் காராளி. தாழ்த்தியிருந்த தலையை மெள்ள உயர்த்தி இளவரசியைப் பார்த்தான். “உங்களுக்கு என்ன தோன்றியது?” எனக் கேட்டான்.

“அவள் இடதுகையில் பிடித்திருக்கும் மலரில்தான் அந்தச் சிலையின் உயிர் இருப்பதாக நினைக்கிறேன்.”

வியப்புற்று விரிந்தன கண்கள். காராளி, சொற்களின்றி அவளின் முகம் பார்த்தபடியே நின்றான்.

“நான் சொல்வது சரிதானா?” எனக் கேட்டாள்.

சற்று இடைவெளிக்குப் பிறகு “எப்படிக் கண்டறிந்தீர்கள்?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 83p5_1525692174
“நீ விளக்கில் வடித்துள்ள சிலைகள் அவ்வளவு உயிர்ப்போடு இருக்கின்றன. அவர்களின் முகங்களில் இருக்கும் மகிழ்வை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதற்குக் காரணம், இடதுகையில் ஏந்தியிருக்கும் மலர்தான். அவள் அதை உயிரெனக் காத்து வைத்திருக்கிறாள்.”

“ஆம், அதுதான் மலர்களிலே அதிசிறந்தது. காதலின் குறியீடாக மலைமக்கள் போற்றுவது.”

பெருவியப்போடு பொற்சுவை கேட்டாள், “என்ன மலர் அது? அதன் சிறப்பு என்ன?”

முகம் மலர்ந்து காராளி சொன்னான், “நிலத்தில் பூக்கும் பூக்கள் எல்லாம் ஒருமுறைதான் மலர்கின்றன. பிறகு காய்ந்து உதிர்ந்துவிடுகின்றன. ஆனால், நீர்ப்பூக்கள் அப்படியன்று. அவை மலர்கின்றன. பிறகு கூம்புகின்றன, மீண்டும் மலர்கின்றன. பூக்களின் அதிசயம் நீர்ப்பூக்கள் என்றுதான் பலரும் கருதுவர்.”

“ஆம், அதில் என்ன ஐயம்?” எனக் கேட்டாள் பொற்சுவை.

“நீர்ப்பூக்களைப்போல மலர்ந்து பிறகு கூம்பி, மீண்டும் மலரும் பூ ஒன்று நிலத்திலும் இருக்கிறது.”

பெருவியப்போடு,  “நீ சொல்வது உண்மையா?” எனக் கேட்டாள் பொற்சுவை.

“ஆம்” என்று சொன்ன காராளி, “அதில் வியப்புக்குரிய செய்தி இதுவன்று; இதனினும் சிறந்த ஒன்று உள்ளது” என்றான்.

சொல்லி முடிக்கும் முன்னர் “என்ன அது?” என்று கேட்டாள்.

காராளி சொன்னான், “முளைக்கும் பயிர் நிலத்தை முண்டி மேலே வருவதைப்போல, வேரிலிருந்து முளைக்கும் இந்த மலர் நிலத்தை முண்டி மேலே வந்து மண்ணோடு மலரும். இதன் வியப்புக்குரிய குணம் என்னவென்றால், மனிதர்கள் யாரேனும் அருகில் போனால் மலர்ந்த அதன் இதழ்களை மீண்டும் கூப்பி உள்ளே இழுத்துக்கொள்ளும். அதன் மேலிதழ்களில் சிறுசிறு முற்கள் இருக்கும். பார்ப்பவர்கள் ஏதோ முள்காய் மண்ணுள் கிடக்கிறது என நினைத்து கடந்து போய்விடுவார்கள்” என்றான்.

பொற்சுவை அசையாமல் கேட்டுக்கொண்டி ருந்தாள். காராளி, பேச்சை நிறுத்தி அமைதியானான்.

“அப்படியென்றால், மனிதர்கள் இதைப் பார்க்கவே முடியாதா?”

“முடியும். பேரன்பால் ஒன்றுகலந்த காதலர்கள் மண்ணுள் புதைந்திருக்கும் இதன் அருகே உட்கார்ந்து, ஈசல் புற்றை மெள்ள ஊதுவதுபோல மூச்சுக்காற்றால் ஊத வேண்டும். காதல் இணையர்களின் மூச்சுக்காற்று படப்பட கொஞ்சம் கொஞ்சமாக இந்த மலர் மலர்ந்து வெளிவரும் என்று சொல்வார்கள்.”

பொற்சுவையின் உடல் நடுங்கி அடங்கியது, “நீ சொல்வது உண்மையா?”

“ஆம்” என்றான் காராளி. “இதன் ஆதிப்பெயர் நிலமொரண்டி. ஆனால், ‘காதல் மலர்’ என்றால்தான் காட்டில் உள்ளவர்களுக்குத் தெரியும்.”

பொற்சுவை சொல்லின்றி நின்றாள்.

“பாரியும் ஆதினியும் தங்களின் மூச்சுக்காற்றால் மலரவைத்த காதல் மலரை ஏந்தி நின்றார்கள் என்று என் ஆசான் ஒருமுறை கூறினார். அந்தக் காட்சியை நான் கற்பனையாக வரைந்திருந்தேன். மையூர்கிழார் புதுமையாக ஏதாவது பரிசுப்பொருள் செய்ய வேண்டும் என்று சொன்னபோது அந்த ஓவியத்தையே விளக்காக வடிவமைத்தேன். எல்லோரும் சிலை அமைக்கப்பட்ட கோணத்தால் நிழல் படர்வதைத்தான் கவனித்தார்களே தவிர, கையில் ஏந்தியிருக்கும் காதல் மலரை யாரும் கவனிக்கவில்லை. நீங்கள் மட்டுமே அந்த அதிசய மலரைக் கண்டறிந்திருக்கிறீர்கள்” என்றான்.

மூர்ச்சையாவதைப்போல தாக்குண்டு நின்றாள் பொற்சுவை. “நீ வடித்துள்ள சிற்பத்தில் இருப்பது பாரியும் ஆதினியுமா?”

“அவர்களை நினைத்துதான் அந்த ஓவியத்தை வரைந்தேன். அந்த ஓவியம்கொண்டே சிற்பத்தை உருவாக்கினேன். அப்படியெனில், அதில் இருப்பது அவர்கள்தானே!”

மிரட்சியிலிருந்து மீள முடியவில்லை. “பாண்டியப் பேரரசின் பாண்டரங்கத்துக்குள் இத்தனை காலமாக இருப்பது பாரியின் சிலையா?!” கலங்கி நின்றாள் பொற்சுவை.

“மனங்களை வெல்லத் தெரிந்தவன் ஒருபோதும் தோல்வியடைய மாட்டான். நாடுகளையும் காலங்களையும் கடந்து, கலைகளால் அவன் வாழ்வான். இன்னும் எத்தனை நூறு ஆண்டுகள் கழித்தும் மனமொன்றிய காதலர்கள் நிலமொரண்டியைக் கண்டு மூச்சுக்காற்றை ஊதினால் பாரியும் ஆதினியுமே இதழ்களாய் விரிவார்கள்” என்றான் காராளி.

கலங்கிய கண்களோடு பேச்சின்றி நின்றாள் பொற்சுவை. அவளின் ஆழ்மனதுக்குள் மூச்சுக்காற்று ஊதப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால், புதைந்துபோன அவளது காதல் மலர் இதழ் விரித்து மேலெழவில்லை. சற்றே அதிர்ச்சியாகி நின்றாள். காலம் கடந்துவிட்டது எனத் தோன்றியது. மூச்சுக்காற்றின் ஓசை மட்டும் கேட்டபடியிருக்க அந்த இடம்விட்டு மெள்ள நகர்ந்தாள்.

‘எதுவும் சொல்லாமல் போகிறாரே!’ என நினைத்த காராளி, பொற்சுவையைப் பார்த்துக் கூறினான், “நாங்கள் ஆறு ஊர்க்காரர்களும் வெங்கல்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால், வாக்குத் தவறியவனுக்காக வில்லேந்த மாட்டோம் என்று உறுதிகொண்டுள்ளோம். எனவே, போர்க்களம் புகப்போவதில்லை. தங்களுக்கு விருப்பமானதைச் சொல்லுங்கள் இளவரசி. செய்துதருகிறேன்”.

தள்ளிப்போன பொற்சுவை கண்களைத் துடைத்தபடி திரும்பினாள். முகம் மெள்ள  மலர்ந்தது. காராளியைப் பார்த்துச் சொன்னாள், “எனக்கு வேண்டியதை நீ தந்துவிட்டாய்!”

அவளது புருவங்கள் இசைவாய் வளைந்து கீழிறங்குவதும், இமையோரத்து மயிர்கால்கள் அதை எவ்விப் பிடிக்க முயல்வதும் யாராலும் வரைய முடியாத ஓவியம்போல் இருந்தன. அந்த அழகிய விழிகளைவிட்டு காராளியின் கண்கள் விலகவில்லை. 

பேச்சின்றி நின்ற காராளியைப் பார்த்து, “என்ன?” என்றாள் பொற்சுவை.

“இந்த உலகில் வரைய முடியாத ஓவியங்கள் இருக்கும்வரை, ஓவியன் வரைந்துகொண்டே இருப்பான்” என்று சொல்லி மீண்டும் வண்ணக்கலவையைக் கையில் ஏந்தினான் காராளி.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu May 17, 2018 10:16 am

சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.
பிலர் திரும்பி வந்ததும் அவரிடம் கேட்கப்பட்டதைவிட அலவனிடம்தான் அதிக கேள்விகள் கேட்கப்பட்டன. அவன் அனுப்பப்பட்டதும் அதற்காகத்தான். வேந்தர்களின் படைக்கலக் கொட்டிலில் நஞ்சு சேகரிப்பு இருக்கிறதா, எந்த வகை நஞ்சுகளை அவர்கள் வைத்திருக்கிறார்கள் என்பன போன்ற செய்திகள் தேவைப்பட்டன. அதனால்தான் கபிலருக்கு உதவியாளனாக அலவனை அனுப்பிவைத்தான் தேக்கன்.
அலவனின் வேலையை எதிரிகளே பாதியாகக் குறைத்தனர். கபிலரை அழைத்துச்செல்லும்போதே ஆயுதச் சேகரிப்பு இடங்களான படைக்கலக் கொட்டில்கள் மூன்றின் வழியாகத்தான் சாகலைவன் அழைத்துச் சென்றான். வேந்தர்களின் போர் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது என்பதைக் காட்டும் உத்தியாக அவ்வாறு செய்தார்கள். ஆனால், அதுவே அலவனின் வேலையைக் குறைத்தது. படைக்கலக் கொட்டில்கள் மூன்றும் எங்கெங்கு இருக்கின்றன என்பதை முதலிலேயே பார்த்துக்கொண்டான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 83p2_1526366998
பிறகு பேச்சுவார்த்தை நடத்தும்போது, ``நீ வெளியில் இரு’’ என கபிலர் சொன்னதும் வெளியில் வந்த அலவன் மூன்று இடங்களையும் போய்ப் பார்த்தான். அவன் பார்க்க நினைக்கும் இடங்களுக்கு வீரர்களே அழைத்துச் சென்றனர். வேந்தர்களின் கூடாரத்துக்குள்ளிருந்து வெளியேறிவந்து கேட்டதால், `அரச உத்தரவு’ என நினைத்து தங்குதடையின்றி அழைத்துச் சென்றனர். அலவன் சிறியவனாக இருந்ததால் அவனை ஐயம்கொள்ளவும் வழியின்றிப்போனது. 

அலவன் நீண்டநேரம் சுற்றினான். நஞ்சின் வாடையை காற்றை நுகர்ந்தே கண்டறியும் உயிரினங்கள் உண்டு. நஞ்சின் குணமேறிய காற்று பட்டவுடன் வண்டுகள் குழறி ஒலிக்கும்; அன்றிற்புல் மயக்கமெய்யும்; காடை மயிர்சிலிர்க்கும்; மயிலோ நிலைபிறழ்ந்து துள்ளும். இவற்றைப்போலவே நஞ்சின் வாடையை நுகர்ந்தறியும் ஆற்றல்கொண்டவர்கள் நாகக்குடியினர். ஆனால், துள்ளுவது, சிலிர்ப்பது, மயங்குவது என எந்தவிதத்திலும் வெளிக்காட்டிக்கொள்ளாதவர்கள். சிறுவன் எல்லா இடங்களையும் சுற்றிப்பார்த்துத் திரிகிறான் என உடன் இருந்த காவல் வீரர்கள் நினைத்தனர். ஆனால் அவனோ, காற்றில் கலந்திருக்கும் நஞ்சை நிதானமாக நுகர்ந்து ஆய்ந்துகொண்டிருந்தான்.

போய் வந்ததும் முறியன் ஆசான் அவனை அழைத்துப்போய்விட்டார். ஆறாம் குகைக்குள் மருத்துவர்கள் புடைசூழ அலவன் அமர்த்தப்பட்டான். எந்த வகையான நஞ்சுகள் அவர்களின் சேமிப்பில் இருக்கின்றன என அவன் பட்டியலிட்டபோது அனைவரும் வாயடைத்துப்போயினர். இவ்வளவையும் மனிதர்கள் மீது செலுத்த அவர்கள் ஆயத்தநிலையில் வைத்திருக்கிறார்கள் என்பது கேள்விப்படவே பேரதிர்ச்சியாக இருந்தது. இவற்றைச் சேகரிக்கவும் உருவாக்கவும் ஆண்டுகள் பல ஆகியிருக்க வேண்டும்.

நஞ்சைச் சேகரித்தல் எளிதன்று; மருத்துவ அறிவு எங்கு செழிப்புற்று இருக்கிறதோ அங்குதான் நஞ்சைக் கையாளும் முறையும், சேகரிக்கும் முறையும் சிறப்புற்று இருக்கும். தாழைமலரின் மணம்கொண்ட நாகத்தின் நஞ்சும் புளியம் பூ மணம்கொண்ட விரியனின் நஞ்சும் மிக அதிக அளவில் இருந்தன சேரனின் படைக்கலக் கொட்டிலில். புகைநாற்றம்கொண்ட கந்தக நஞ்சு, பாண்டியனின் கொட்டிலிலும், நுகர்ந்த உடனே மார்பு எரிச்சலை உருவாக்கிய பற்பத்தாலான நஞ்சு சோழனின் கொட்டிலிலும் பாதுகாக்கப்பட்டிருப்பதை அலவன் விரிவாகச் சொன்னான்.

``இந்த வகை நஞ்சுகளை எந்த ஆயுதங்களினூடேயும் பயன்படுத்த வாய்ப்புண்டு. இதனால் நமது வீரர்கள் தாக்குண்டால் களத்துக்குள்ளேயே செய்துகொள்ளவேண்டிய மருத்துவம் என்ன... களம்விட்டு வெளியில் கொண்டுவரும் வரை தாக்கப்பட்டவருக்கு உயிர் நிலைக்குமா... அதற்கு என்ன வழி,   மருத்துவச்சாலையை இவ்வளவு உயரத்தில் இரலிமேட்டிலே அமைத்துள்ளது எந்த வகையில் பயன்படும்... நாகக்கரடின் கீழே உடனடி மருத்துவத்துக்கு வகைசெய்யும் ஏற்பாட்டைச் செய்யவேண்டுமா?’’ என்று உரையாடல் தொடர்ந்தது. அலவன் கண்டறிந்து சொன்ன செய்திக்குப் பிறகு நஞ்சு முறியைச் சேகரிக்கும் பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. 

முன்னுரிமை கொடுக்கப்படவேண்டிய பணி எது என்பது, மையூர்கிழாருக்கு பெருங்குழப்பமாகவே இருந்தது. பாண்டியப் பெருவேந்தனின் மனம்கோணாமல் நடப்பதுதான் அவருக்கு இருக்கும் முன்னுரிமை. ஆனால், என்று மூஞ்சல் நகர் அமைக்கப்பட்டு பாதுகாப்பு அரண் உருவாக்கப்பட்டதோ, அன்றிலிருந்து இன்று வரை அவரால் மூஞ்சல் நகருக்குள் செல்ல முடியவில்லை. வேந்தர்களுக்கான எல்லா தேவைகளையும் நிறைவுசெய்யப் போதுமான நிர்வாக ஏற்பாட்டுடனேயே அவர்கள் உள்ளனர். அமைச்சர் முசுகுந்தர் மூலமே செய்தியை அவ்வப்போது பரிமாறிக்கொண்டார். இளவரசி வந்துள்ள செய்தியை முசுகுந்தரிடம் தெரிவித்தார். அதேபோல போர்க்களம்விட்டு சற்று தொலைவில் தனித்த குடில் ஒன்றில் தங்கியுள்ள திசைவேழரைப் பற்றிய செய்திகளையும் அவ்வப்போது சொல்லிவந்தார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 83p1_1526367012
மூவேந்தர்களின் படைகள் நிலைகொள்ளும் வரை மையூர்கிழாருக்கு எண்ணற்ற வேலைகள் இருந்தன. ஆனால், படைகள் நிலைகொண்டவுடன் அவருக்குச் சொல்லப்பட்ட முக்கிய வேலை என்பது பறம்புமலைக்குள் எதிரிகள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து சொல்லுதல் மட்டுமே.
அவர் வாக்கு மீறிய காரணத்தால் அவருடைய வெங்கல்நாட்டைச் சேர்ந்த ஆறு ஊர்க்காரர்கள் இந்தப் போரில் பங்கெடுக்க மாட்டோம் என முடிவுசெய்துள்ளதை அவர் வேந்தனிடம் தெரிவிக்கவில்லை. அது அவர் மீதான மதிப்பைக் குறைத்துவிடும் என நினைத்தார். ஆனால், ‘இந்தச் செய்தியை என்று இவன் சொல்கிறான் பார்ப்போம்’ எனக் காத்திருந்தார் குலசேகரபாண்டியன்.

ஒற்றாடுதல் என்பது, பெருங்கலையாக வேந்தர்களால் வளர்த்தெடுக்கப்பட்டிருந்தது. வெங்கல்நாட்டு நிர்வாகத்துக்குள் என்னென்ன நடக்கின்றன என்பதை அறிந்து சொல்ல ஒற்றர்படைத் தலைவன் ஒருவனின் கீழ் ஒரு குழு இயங்கியது. அவர்களைப் பொறுத்தவரை மையூர்கிழார், பொற்சுவை, திசைவேழர் எல்லோரும் கண்காணிக்கப்பட வேண்டியவர்களே! அவர்கள் அறிந்த செய்தியை ஒற்றர்படைத் தலைவனிடம் நாள்தோறும் கூறுகின்றனர். அவனோ தனக்கு மேலிருக்கும் பொறுப்பாளனிடம் கூறுகிறான். அவனைப்போல எத்தனை பேர் ஒற்றர்படையில் இருக்கிறார்கள் என்பதை குலசேகரபாண்டியன் மட்டுமே அறிவார். 

குலசேகரபாண்டியன் அமைத்துள்ள ஒற்றர்படை, இணையற்றச் செயல்பாட்டுத் திறனைக்கொண்டிருந்தது. அதனால்தான் சேரனையும் சோழனையும் துணிந்து தனது போர் செயல்பாட்டுக்குள் இணைத்துக் கொண்டார். அவர்கள் இருவரின் படைகளும் பாசறைகளும் குலசேகரபாண்டியனின் செவிப் பறையால் கேட்கக்கூடிய இடங்களாகத்தான் இருந்தன.

சேரனும் சோழனும் ஒற்றர்படை கொண்டிருந்தனர். ஆனால், மாபெரும் இயக்கம் ஒன்றின் ஒரு பகுதியாக இணைந்த பிறகு அதன் மொத்த இயக்கத்தைக் கண்காணிப்பது எளிய செயலன்று. ஆனாலும் அவர்களின் ஒற்றாடற்பணியும் தீவிரமாகத்தான் இருந்தது. அவர்கள் பணியின் இலக்காக இருந்தது பறம்பில் நடப்பதறிந்து வெல்லும் செயலுக்கானதன்று. மாறாக, எதிரியாலோ, மற்ற இரு பேரரசுகளாலோ தங்களுக்கு ஏதும் தீங்கு நேரிடாமல் காக்கும் செயலுக்கானதாக இருந்தது. எனவே, அவர்கள் தற்காப்பு ஆயுதமாக ஒற்றாடலைப் பயன்படுத்தினர். குலசேகரபாண்டியனோ தாக்கும் கருவியாக ஒற்றாடலை கூர்தீட்டியிருந்தான். 

``போரில் ஆயுதங்கள் மட்டுமே கருவிகள் அல்ல; எந்த ஓர் ஆயுதத்தையும்விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை, கண்டறியப்படும் செய்திகளுக்கு உண்டு. எனவே, வெங்கல்நாட்டுக்குள் பறம்புக்குடிகள் சிலரையாவது அனுப்பிவைக்க வேண்டும். அவர்களின் செயல்பாடுகளை ஒற்றறிவது அவசியம்’’ என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. 

``தன்னையும் தனது வீரத்தையும் நம்பாதவனே ஒற்றனை நம்புகிறான்’’ என்றான் பாரி.

வாரிக்கையன் மறுத்தான். ``வீரமும் தந்திரமும் சம முக்கியத்துவம்கொண்டவை. போர்க்களத்தில் இரண்டிலும் திறன்மிக்கவர்களாக இருத்தல் வேண்டும்.’’


``வீரத்தின்வழி மட்டுமே போரை நடத்துவோம். அறமற்ற வழிக்கு `தந்திரம்’ எனப் பெயர் சூட்டுவது கோழைகளின் செயல்’’ என்று சொன்ன பாரி, சற்றும் இடைவெளியின்றி தொடர்ந்தான், ``நாம் விரும்பாத ஒரு வழிமுறையில் போரை நடத்தப்போவதில்லை. எதிரிகளின் அறமற்றச் செயலைப் பற்றி நாம் ஏன் கவலைகொள்ள வேண்டும்?’’[/size]
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 83p5_1526367030
இப்போது கபிலர் குறுக்கிட்டார், ``போரென்று வந்துவிட்டால், அதற்கு வெற்றி மட்டுமே நோக்கமாக இருக்க முடியும். அந்த வெற்றியை அடைய நிகழ்த்தப்படும் கொலையில் அறமும் அடக்கம். எனவே, போரில் அறம் நெடுநேரம் உயிர்வாழாது. நாம் விரும்பாவிட்டாலும் இதுதான் உண்மை.`` 

``அறத்தின் கொலைக்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது. அதுமட்டுமன்று, அந்தக் கொலைக்குக் கைம்மாறுசெய்யும் சீற்றத்தை நாம் இழந்துவிடக் கூடாது.’’

பாரியின் சொல்லுக்குப் பிறகு அங்கு எந்தக் கருத்தும் மிஞ்சவில்லை. 

இரவு நீண்ட உரையாடல் முடிந்து தூங்குகையில் பொழுது நள்ளிரவைத் தாண்டியிருந்தது.

மறுநாள் மிகவும் காலம் தாழ்த்தியே பாரி எழுந்தான். அவன் எழுந்தபோது எதிரில் நின்றிருந்தான் நீலன்.

அவனைக் கண்டதும்தான் பாரியின் நினைவுக்கு வந்தது, இன்று மயிலாவுக்கான நிறைசூல் விழா. வள்ளிக்கூத்து நடக்கும் நாள். பெண் முதன்முறையாகக் கருவுறும்போது ஒன்பதாம் மாதம் அவளை அவளது இல்லத்திலிருந்து அழைத்துப்போய் சந்தனவேங்கை மரத்தின் அடிவாரத்தில் இரவெல்லாம் வள்ளிக்கூத்து நடத்துவர். பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் பெருங்கூத்து இது. கூத்து முடிந்ததும் மூத்த மருத்துவச்சியின் குடிலுக்கு அழைத்துச்செல்வர். குழந்தை பிறக்கும் வரை அவள் அங்குதான் இருப்பாள். பெண்களின் முதல் மகப்பேறுக்காக நடக்கும் பெருவிழா இது.

வள்ளிக்கூத்தில் ஆண்களுக்கு அனுமதியில்லை. எனவே, இன்று வரை அந்தக் கூத்து எப்படி நடக்கிறது என்று எந்த ஆணுக்கும் தெரியாது. ஆனால், அதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை யாரையும் விடுவதில்லை. 

கருவுற்றவளை சந்தனவேங்கை நோக்கி அனுப்பிவைக்கும் சடங்கு, இன்று நடக்க இருக்கிறது. வள்ளிக்கூத்தில் கலந்துகொள்ள ஆதினியும் அங்கவையும் வேட்டுவன் பாறையில்தான் இருந்தனர். பாரியும் வேட்டுவன்பாறைக்கு வருவதாகச் சொல்லியிருந்தான். ஆனால், நேரம் அதிகமாகிவிட்டது. ``நீ இப்போது புறப்பட்டால்தான் மாலைக்குள் போய்ச்சேருவாய். காலம் தாழ்த்தாமல் புறப்படு. நான் இரவுக்குள் வந்து சேருகிறேன்’’ என்றான் பாரி.

பாரியின் சொல்லை ஏற்று புறப்பட்டான் நீலன். உடன் அவன் தோழர்கள் புங்கன் உள்பட பத்து பேர் புறப்பட்டனர். காலம்பனின் மூத்தமகனான கொற்றனும் உடன்வந்தான். இரலிமேட்டில் இருக்கும் குகைகளை இந்தப் போருக்காகத்தான் தங்குமிடமாக மாற்றினர். எனவே, இங்கிருந்து மற்ற இடங்களுக்கு செம்மையான குதிரைப்பாதைகள் உருவாகிவிடவில்லை. இரலிமேட்டிலிருந்து கீழே வந்து நாகக்கரடின் வழியே நெடுந்தொலைவைக் கடந்து பிறகு மீண்டும் காரமலையின் மீது ஏறித்தான் குதிரைப் பாதையைப் பிடிக்க முடியும். அதன் பிறகு விரைந்து பயணித்தால் மாலைக்குள் வேட்டுவன்பாறையை அடையலாம். அதனால்தான் ``காலம் தாழ்த்தாமல் புறப்பட்டுப் போ’’ என்றான் பாரி.

நீலன் புறப்பட்டுச் சென்ற பிறகு இரலிமேட்டின் மேற்புறம் இருந்த சிற்றருவியில் குளிக்கச் சென்றான். அவனது எண்ணம் முழுக்க நேற்றிரவு நடந்த உரையாடலையே மையம்கொண்டிருந்தது. `போரில் அறம் நெடுநேரம் உயிர்வாழாது’ என்ற கபிலரின் வார்த்தை, அவனை இரவெல்லாம் தூங்கவிடவில்லை. பெரும்போரை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிழுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் எனத் தோன்றியது. 

`நாம் இறங்கித் தாக்கவேண்டிய எந்தத் தேவையும் இல்லை. இப்படியே பறம்புவீரர்கள் எல்லோரும் ஊர் திரும்பினால் இந்தப் போர் முடிவுக்கு வந்துவிடும். எதிரிகள், இப்போது இருக்கும் இடத்தைவிட்டு பறம்புக்குள் ஒருபோதும் நுழைய மாட்டார்கள். அப்படியே நுழைந்தாலும் அவர்களை அழிக்க நீண்ட பொழுதாகாது. அதை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். அதனால்தான் கண்ணுக்கு முன்னால் பெரும்படையை நிறுத்தி கொஞ்சம் கொஞ்சமாக உருவேற்றுகிறார்கள். எதிரி என்ன செய்கிறான் எனச் சிந்திக்கத் தொடங்குவதே அவனது நோக்கத்துக்குள் நாம் இழுபட்டதன் அடையாளம்தான். தேக்கன் அலவனை அனுப்பியிருக்கக் கூடாது. அவசரப்பட்டுவிட்டான். சேகரிக்கப்பட்டுள்ள கொடும்நஞ்சைப் பற்றிய செய்தி, வீரர்களை மேலும் முறுக்கேற்றிவிடும். நாம் அவர்களை நோக்கி இழுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்’ என்ற எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது மரத்தின் மீதிருந்து சற்றே மாறுபட்ட பறவையின் ஒலி கேட்டது.


`என்ன பறவை இது... கேட்டிராத ஒலியாக இருக்கிறதே!’ என நினைத்து இங்கும் அங்குமாகப் பார்த்தான். எதுவும் தெரியவில்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் ஒலி கேட்டது. ஒலி வந்த திசையைக் கூர்ந்து நோக்கினான். சின்னஞ்சிறிய பறவை இன்று முறுக்கித்திரும்பும் கிளையில் உட்கார்ந்திருந்தது. உற்று அதையே பார்த்துக்கொண்டிருந்தான். `அதுதான் கூவியதா... என்ன பறவை அது?’ எனப் பார்த்தபடி இருந்தான். மீண்டும் கூவியது. இப்போதுதான் அதன் முகப்பகுதியை முழுமையாகப் பார்க்க முடிந்தது. 

ஒரு கணம் திகைத்துப்போனான். அது கருங்கிளி. காட்டின் வியத்தகு பறவைகளில் ஒன்று. எளிதில் யார் கண்ணுக்கும் தட்டுப்படாதது. மகிழ்ச்சி பொங்க அதையே பார்த்துக்கொண்டிருந்தான் பாரி. சிறிது நேரத்தில் அது பறந்து காட்டில் மறைந்தது. சிறுவயதில் தந்தையோடு பயணப்பட்டபோது பார்த்தது. ஆண்டுகள் பல ஆகிவிட்டன. நினைவு, கருங்கிளியையே சுற்றிவந்தது. குளித்து முடித்துத் திரும்பும்போதுதான் தோன்றியது, `கருங்கிளையைப் பார்ப்பது மிக நல்ல நிமித்தம். பறம்பில் உள்ள எல்லோரும் அதை அறிவர். இந்தச் செய்தியைச் சொன்னால் `தாக்குதலை இன்றே தொடங்க வேண்டும் என்று கூறுவார் வாரிக்கையன். எனவே, இதைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டாம்’ என நினைத்தபடி குகைத்தளத்துக்கு வந்தான் பாரி.


உணவு முடித்து சிறிது நேரத்தில் வேட்டுவன்பாறை நோக்கிப் புறப்பட ஆயத்தமானபோது நாகக்கரட்டிலிருந்து குதிரைவீரர்கள் இருவர் வந்தனர். ``முடியன் உடனே தங்களை அழைத்துவரச் சொன்னான்’’ என்றனர். போர் தொடர்பான முக்கியச் செய்தியாக இருக்கும். அதனால்தான் உடனே வரச்சொல்லி அழைப்பு அனுப்பியுள்ளான் முடியன் என்பதைப் புரிந்துகொண்ட பாரி, புறப்பட்டான். தேக்கனும் கபிலரும் பின்தொடர்ந்தனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 83p6_1526367046
மாலை நெருங்கிக்கொண்டிருந்தது. நீலனின் பயணம் வேட்டுவன்பாறையை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. செல்லும் வழியில் குமரிவாகையைப் பார்த்தான். வாகைமரத்தில் முதன்முதலாகப் பூப்பூக்கும் வாகையை `குமரிவாகை’ என்பர். குமரிவாகையின் மலர் பேரெழில் கொண்டதாக இருக்கும். மயிலாவுக்கு சூடுவதற்காக அதைப் பறித்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தான்.


வேட்டுவன்பாறைக்குள் நுழையும்போது ஊரே விழாக்கோலம்கொண்டிருந்தது.  சேவலின் நெற்றிக்கொண்டை போன்ற கவிர்மலரால் மலரணி வாயிலை உருவாக்கியிருந்தனர். தோரணங்களும் மாலைகளும் எங்கும் தொங்கவிடப்பட்டிருந்தன. சிறுமியர் எல்லாம் ஈங்கைமலரை கூந்தலில் சூடி ஆடிப்பாடிக்கொண்டிருந்தனர். சிட்டுக்குருவியின் குஞ்சு போன்ற அந்த மலர் சிறுமியரின் தலையாட்டலுக்கு ஏற்ப தாவித் தாவி பறந்துகொண்டிருந்தது. மலர் மணக்க, தண்டு மணக்க, தாது மணக்க எங்கும் நிறைந்த மனத்தினூடே மலர்ந்திருந்தது வேட்டுவன்பாறை.


மயிலாவின் தோழிகள் நீலனை வரவேற்று அவனது குடில் நோக்கி அழைத்துச்சென்றனர்.  மற்ற காலம் என்றால், ஊரே ஆட்டம்பாட்டத்தில் மூழ்கியிருக்கும். போர்ச்சூழலாதலால் அது இல்லை. நீலன், குடிலுக்குள் நுழைந்தான். நிறைசூல் மங்கை எதிரில் அமர்ந்திருந்தாள். குனிந்திருந்த மயிலாவின் முகம் சற்றே நிமிர்ந்தது. மாதம் கழித்து வந்தவனின் கைகளைப் பற்றி நிறை வயிற்றில் வைத்து மகவை உணரச்செய்ய வேண்டும் எனத் தோன்றியது. `நீ கொடுக்கும் முத்தத்தை உள்நாக்கு நழுவி உணர்வதுபோல இருக்கிறது அடிவயிற்றுக்குள் துடிக்கும் மகவின் செயல்’ என அவனது காதோடு சொல்லவேண்டும் என ஆசையாய் இருந்தது. ஆனால், அவனது முகத்தைப் பார்த்த கணம் எல்லாம் சொல்லப்பட்ட உணர்வோடு அமைதியானாள்.


அவளைப் பார்த்தபடி எதிரில் அமர்ந்த நீலன், சிறிது நேரம் கழித்து ஆதினியைத் தேடினான். சிரித்த முகத்தோடு நீலனின் அருகில் வந்து அமர்ந்தாள் ஆதினி. பெண்களின் கேலிப் பேச்சினூடே ஏதேதோ நடந்துகொண்டிருந்தது. ஒருத்தி மயிலாவின் காதோரம் போய் ஏதோ சொன்னாள். மகிழ்ந்து சிரித்தாள் மயிலா. 


விரிந்த மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை மயிலாவின் கையில் கொடுத்து நீலனுக்குச் சூட்டச் சொன்னாள் ஆதினி. அதை வாங்கிய மயிலா, மலர்ந்த முகத்தோடு விரிமலர் மாலையை நீலனுக்குச் சூடினாள். ஆணின் மலர்தல் பெண்ணின் சூலகத்திலிருந்தே விளைகிறது. 


மணம்மிக்க பச்சிலைகளாலான படலை மாலையை நீலனின் கையில் கொடுத்து மயிலாவுக்கு சூட்டச்சொன்னாள் ஆதினி. இருகரம் ஏந்தி அவளுக்கு அணிவித்தான் நீலன். பச்சிலைகளின் ஆதிமணம் சூல்கருவுக்குள் இறங்கும்போது நீலனின் மணமும் இணைந்தே கலந்தது. குடிலெங்கும் நிரம்பிவழிந்தது குலவையொலி.


ஆதினி நீலனிடம் சொன்னாள், ``நீ கொண்டுவந்த பூவை இப்போது அவளுக்குச் சூட்டு.’’


நீலன் மறுமொழி சொல்லாமல் மயிலாவையே பார்த்துக்கொண்டிருந்தான்.


``என்ன பேசாமல் இருக்கிறாய்?’’ என ஆதினி மீண்டும் கேட்டதற்கு, மயிலாவைப் பார்த்துக்கொண்டே நீலன் சொன்னான், ``நிறைசூல் பெண்ணின் மலர்ந்த முகத்துக்கு இணையான மலர் இதுவரை கண்டறியப் படவில்லை. நான் எந்தப் பூவைச் சூட்டுவேன் அவளுக்கு?’’


அவன் சொல் கேட்டு ஆதினியின் கண்கள் கலங்கின. நீலனைத் தன் மகன் எனத் தழுவி நெற்றிமுகர்ந்து முத்தம் கொடுத்தாள். அப்போதுதான் கவனித்தாள், நீலன் கொண்டு வந்தது குமரிவாகை. ``வாகைப்பூவையா பறித்து வந்தாய்? வாகை, கொற்றவை குடிகொள்ளும் மரமல்லவா? இந்தப் போர்க்காலத்தில் போர் தெய்வத்தின் பூக்கள் உன்னிடமே இருக்கட்டும். அவை உனக்கானவை’’ என்றாள்.


நிறைந்திருந்த ஓசையின் நடுவே அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த  தோழி ஒருத்தி நீலனைப் பார்த்து சத்தம்போட்டுச் சொன்னாள், ``உனக்குரியது வாகைமலர்தான்; காந்தள் மலர் அல்ல. அதனால்தான் உன் வீட்டை அலங்கரிக்க காந்தள் மலரைப் பயன் படுத்தவில்லை. அதற்கான தகுதி உனக்கில்லை’’ என்றாள்.


அவள் சொன்னதைக் கேட்டு வீடு வெடிப்பதைப்போல பெண்கள் சிரித்தனர். தொடர்ந்து அவள் சொன்னாள், ``நீ குடில்விட்டு வெளியேறு. நாங்கள் மயிலாவை அழைத்துக் கொண்டு வள்ளிக்கூத்துக்குப் புறப்படுகிறோம்.”


சிரிப்பொலிக்கும் கேலிப்பேச்சுக்குமிடையே குடில்விட்டு வெளியேறி வந்தான் நீலன். காத்திருந்த தோழர்கள் அவன் அருகில் வந்தார்கள். குடிலுக்குள்ளிருந்து வெளிவந்தவனின் மீது வெளிப்படும் பூந்தாதுவின் மணம் யாரையும் மயக்கக்கூடியதாக இருந்தது. மணத்தை நுகர்ந்தபடியே புங்கன் சொன்னான், ``பெண்களின் விழாதான் இயற்கையின் திருவிழா. ஆண்களுக்கு இதுபோல எந்த விழாவும் இல்லையே!


அந்தக் கவலை எல்லோருக்கும் இருந்தது. நீலனுக்கு, கூடுதலாக ஒரு கவலை இருந்தது. ஏன் இந்த விழாவில் காந்தள் மலர் பயன்படுத்தப் படவில்லை; தனக்கு அந்தத் தகுதி ஏன் இல்லை எனத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று அங்குமிங்குமாக விசாரித்தான்.  


மயிலாவின் காதோரம் கேலிபேசி சிரித்த தோழி வெளியில் வந்தபோது அவளிடமே கேட்டான் நீலன். அவள் சொன்னாள், ``காந்தள் மலர் மலரும் வரை தேனீயோ வண்டோ காத்திருக்காது. கிண்டி மலரச்செய்து தேன் பருகும். ஆனால், நீ அப்படியல்ல. பொறுமை காத்திருக்கிறாய். மணம் ஆன பிறகுதான் மகவைப் பெற்றுள்ளாய். எனவே, உனக்கு காந்தள் மலரைச் சூடும் தகுதியில்லை” எனச் சொல்லியபடி சிரித்துக்கொண்டே ஓடினாள்.[/size]
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 10 83p7_1526367060
நீலனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ``நான் அப்படியல்ல என்று சொல்வதா, அப்படித்தான் என்று சொல்வதா’’ புரியாத குழப்பத்தில் நின்றான். 


நேரமாகிக்கொண்டிருந்தது. வள்ளிக் கூத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாகின. நீலன் தலைமையில் வந்த பத்து இளைஞர்களும் ஊரில் இருந்த கிழவர்கள் பன்னிருவருமாக 22 ஆண்களும் ஏக்கத்தோடு பார்த்திருக்க, மயிலாவை அழைத்துக்கொண்டு புறப்பட ஆயத்தமாகினர் பெண்கள்.


படைக்களத்தின் மூன்று மூலைகளிலும் போர்ப்பலிக்கான சடங்குகள் உச்சிப்பொழுதில் தொடங்கின. ஈனாமல் இளவயதிலேயே செத்துப்போன பசுவின் தோலை மயிர்சீவல் போத்தியிருந்த போர்முரசுகள் ஒலிக்கத் தொடங்கின. நிணத்தைத் தின்று குதித்தாடும் பேய்மகளிரின் ஆட்டத்துக்கான கருங்கூத்துக்களம்  ஆயத்தமாகிக்கொண்டிருந்தது.


இணையற்ற வீரர்கள் களப்பலிக்குத் தேர்வுசெய்யப்பட்ட செய்தி படையெங்கும் பரவியது. கொப்புளிக்கும் குருதிபோல் வீரவுணர்ச்சி பெருக்கெடுக்க ஆயுதங்களை ஒன்றுடனொன்று உரசி பேரொலியை எழுப்பினர். சடங்குகள் தொடங்குவதற்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. முரசுகளின் ஓசை சீரான வேகத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடத்தொடங்கியது.


முரசு அதிரும் ஓசைகள் ஆங்காங்கே கேட்பதறிந்த முடியன், எதிரிப்படையில் ஏதோ நடக்கிறது என நினைத்து பாரியை அழைத்து வரச்சொல்லி வீரர்களை அனுப்பிவைத்தான். பாரியும் தேக்கனும் கபிலரும் நாகக்கரடுக்கு வந்து சேர்ந்தனர்.


படைகளின் மூன்று திசைகளிலும் மூன்று பலிச்சாலைகளில் சடங்குகள் தொடங்கின. ஆனால், முக்கியச் சடங்கு மூஞ்சலில் நடக்க விருந்தது. அது பகலின் மறைவுக்குப் பிறகுதான் தொடங்கவிருந்தது. ஆனால், மற்ற இடங்களில் பலிச்சடங்குகள் நண்பகல் இருந்தே தொடங்கின. பூசகர்கள் மலர்களையும் கனிகளையும் கொண்டுவந்து குடுவைநீரைத் தெளித்து தீ மூட்டி சடங்குகளைத் தொடங்கினர்.


சடங்குகளின் ஓசை, முரசுகளின் பேரொலி, பேய்மகளிரின் கூத்தாட்டம் எல்லாம் நேரமாக ஆக கூடியபடி இருந்தன. பொழுது மறையத் தொடங்கும்போது பலிச்சடங்கு உச்சம்கொள்ளத் தொடங்கியது. வீரனின் குருதி ஏந்தியபடி கதிரவன் களம் நீங்குவான். அவனது தாகம் நீக்கப்பட்டதன் கைம்மாறாக போர்க்களத்தில் தனது ஒளி படர்ந்துகிடக்கும் ஒரு பகல் பொழுதில் வெற்றியைத் தருவான். அதற்குத்தான் இந்தப் பலிச்சடங்கு நடக்கிறது.


கதிரவனின் தாகம் நீக்க பேரொலிகொண்ட சடங்கு நடக்கும்போது, இதற்குத் தொடர்பில்லாத இன்னொரு சடங்குக்காக மூஞ்சல் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. அது யட்சினிக்கான சடங்கு. பேராற்றலைக்கொண்ட அழிவின் தேவதை யட்சினி. மலையெனக் குவிக்கப்பட்ட வீரர்களின் உடல்களைக் கண்டும் தாகம் தணியாதவள்.  மனிதப் பிணங்களையே  புணர்ந்து மகிழ்பவள். அவளை இறைஞ்சி அழைக்கும் சடங்கு தொடங்கியது மூஞ்சலில்.


நிலமெங்கும் இருள் கவிழ்ந்தது. சடங்குக்காக மலர்களாலும் குருதி பிசைந்த தினைமாவாலும் நாற்சதுரமிடப்பட்ட நிலம் நோக்கி அதை அழைத்து வந்துகொண்டிருந்தனர். பேய்முரசு முழங்கியது. வீரர்களே அஞ்சி நடுங்கும் பேரோசை இரவெங்கும் பரவியது. நிறைசூலியின் பால்கட்டிய மார்புபோல திரண்ட கும்பத்தையுடைய யானை அது. நேற்று வரை பாண்டியப் பேரரசின் சிறப்புக்குரிய முதுயானை பவளவந்திகை; இப்போதோ யட்சினியின் வாகனம்.


முரசுகளின் முழக்கத்துக்கேற்ப அதை இருளுக்குள் அழைத்துவந்தனர். சடங்கு நிலத்தில் பூசகர்களின் பெருங்கூட்டம் நின்றிருந்தது. குளித்த ஈரத்தை உலர்த்தாமல் நீர்வடிய நின்றிருந்தனர் மூவேந்தர்களும். 


பேய்முரசுகளின் ஓசை இருளை உலுக்கியது. கடல்போல் கிடந்த படையெங்கும் பேரமைதி நிலவியது. சடங்குகளின் தனித்த ஓசை இரவெங்கும் எதிரொலித்துக்கொண்டிருந்தது. அதிர்ந்து அதிர்ந்து பரவிய ஓசை கேட்டு பேய்மகளிர் மூன்று திசைகளிலிருந்தும் மூஞ்சலை நோக்கி வந்துகொண்டிருந்தனர். அவர்களின் கூந்தல் முழுவதும் வீரர்களின் குருதியால் நனைந்திருந்தது. அவர்கள் ஆடிய கருங்கூத்தால் நிலம் அதிர்ந்துகொண்டிருந்தது. அவர்கள் மூஞ்சலுக்கு வந்துசேர்ந்தபோது பவளவந்திகையும் வந்துசேர்ந்தது. 


நள்ளிரவைத் தொடுவதற்கு சிறிது நேரமே இருந்தது. பவளவந்திகையை, மண்ணில் அமரச்செய்தான் பாகன். அதன் முகம் முழுவதையும் தோலாடைகளால் இறுகக் கட்டினர். பேய்முரசின் மேல்தோல் விடாது புடைத்தெழுந்துகொண்டிருந்தது. மேலெழும் ஓசை இருளின் செவிப்பறையைக் கிழித்துக் கொண்டிருந்தது.


நாகக்கரடின் உச்சியில் நின்றபடி படைகள் இருக்கும் திசையையே பார்த்துக்கொண்டிருந்தான் பாரி. நண்பகலில் போர்ச்சடங்குகள் மூன்று மூலைகளில் தொடங்கின. ஆனால், இரவான பிறகும் சடங்குகள் முடியவில்லை. படைகளின் நடுப்பகுதியில் சடங்கொன்று தொடங்கும் ஓசை கேட்டதும் `இது என்ன புதியதாய் இருக்கிறதே!’ என இருளின் திசையைப் பார்த்தபடியே நின்றிருந்தனர்.


நள்ளிரவைத் தொடும் நேரத்தில் யானை ஒன்றின் சாவுப்பிளிறல் இருளெங்கும் எதிரொலித்தது. வேந்தர்களின் வீரர்கள் அனைவரும் பேய்க்கூச்சல் எழுப்பி ஆயுதங்களை ஒன்றுடனொன்றை உரசி வெற்றி முழக்கமிட்டனர்.


நாகக்கரடின் மேல் இருந்தவர்களுக்கு என்ன நடக்கிறது எனப் புரியவில்லை. ஆனால், யானையின் பிளிறல் கேட்ட கணம் கபிலரின் உடல் நடுங்கி மீண்டது. சிறிது நேரத்துக்குப் பிறகு மெள்ளச் சொன்னார், ``அவர்கள் யட்சினிக்கான சடங்கை நடத்துகிறார்கள்!”


``அப்படியென்றால்?’’ விளக்கம் கேட்டான் முடியன்.


``காக்கும் போருக்கும் தாக்கும் போருக்கும் அந்தந்தத் தெய்வ வழிபாட்டுச் சடங்குகளை நடத்துவார்கள். ஆனால், பேரழிவை உருவாக்கும் போருக்கு யட்சினி வழிபாட்டை நடத்துவார்கள். அவள் அழிவின் தேவதை. எதிரியின் படை நோக்கி அவளை ஏவிவிடும் சடங்குக்கான பெரும்பலியை அவர்கள் கொடுத்துள்ளனர்.”


எல்லோரும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்க, கபிலர் சொன்னார் ``அவர்கள் தாக்குதலைத் தொடங்கப்போகிறார்கள்.’’



- பறம்பின் குரல் ஒலிக்கும்...


Sponsored content

PostSponsored content



Page 10 of 19 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக