புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
1 Post - 1%
Kavithas
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
1 Post - 1%
bala_t
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
1 Post - 1%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
1 Post - 1%
M. Priya
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
296 Posts - 42%
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
6 Posts - 1%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
4 Posts - 1%
manikavi
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்


   
   

Page 6 of 19 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 19  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 01, 2018 10:06 pm

First topic message reminder :

"வீரயுக நாயகன் வேள் பாரி"

ஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" (அரவான் படத்தின் மூலகதை)  ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P100bnew

"வீரயுக நாயகன் வேள் பாரி" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.. அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்



நன்றிஆசிரியர் : சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., , விகடன்  நன்றி


முன்னுரை

இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P100a

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.

தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.

மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.

பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.

வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.

இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...

Readre இந்த பதிவை விரும்பியுள்ளார்


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 1:52 pm

பின்னிரவு கடந்தது. எவ்வியூருக்குள் நுழைய இன்னும் எவ்வளவு நேரம் ஆகுமோ தெரியவில்லை. இரவும் புதிதல்ல, காடும் புதிதல்ல. ஆனால், இரவில் காட்டுக்குள் பெரியவர்களின் துணையின்றிப் பயணித்தல் புதிது. காட்டில் கண்களைக்கட்டி விளையாடும் பேராபத்து நிலத்தில் இருக்கிறது. அந்த நிலத்தின் வாகும் வடிவும் தெரியாமல் நடப்பது, மீள முடியாத ஆபத்தை அடுத்த அடியில் நமக்குத் தந்து முடிக்கும்.

முடிநாகன் அச்சமின்றி வழிநடத்திச் சென்றான். குறுங்கட்டிக்கு, இந்தப் பகுதிக் காட்டைப் பற்றி நன்கு தெரியும். அவன் பெரிய கிழவியோடு சேர்ந்து இரு மாதங்களுக்கு முன் இந்தக் காடு முழுவதும் அலைந்து திரிந்தான். எவ்வியூரில் இரவுகளில் ஏற்றப்படும் கொம்பன் விளக்குக்கு ஒவ்வொரு பருவகாலத்துக்கும் ஏற்ப நாகக்கழிவும் நச்சுப்பிசினும் மாற்றிப் பூசப்படும். மழைக்காலத்தில் விளக்குகளை நோக்கி எண்ணிலடங்கா பூச்சியினங்கள் வந்து குவியும். அவற்றை விரட்ட புதிய சேர்மானத்தோடு கொம்பன் விளக்கை உருவாக்க வேண்டும்.

அதற்கு மிக அதிகளவு தேவைப்படுவது, செவ்விரியனின் கழிவும் மலைநாகத்தின் கழிவும்தான். அவற்றைக் காடுகளுக்குள் சேகரிக்கும் வேலையை முதுபெண்கள் செய்கின்றனர். குறுங்கட்டி, தன் கிழவியோடு இந்தக் காடு முழுவதும் அலைந்தான். பாறை இடுக்குகளிலும், மரத்தின் ஓரங்களிலும், மக்கிய செத்தைகளுக்குள்ளும் அவற்றைத் தேடினர். மண்புழு அளவு கனம்கொண்ட காய்ந்த குச்சியைப் போன்று கிடக்கும் செவ்விரியனின் கழிவை எடுத்து இச்சிமரப் பிசினைக் கலந்து கொம்பன் விளக்கின் மேல் மெழுக வேண்டும். அந்தச் சேர்மானத்தில் விளக்கின் சுடர்பட்டுக் கருகி மேலெழும் புகையும் வாசனையும் காட்டின் எந்தப் பூச்சியையும் நெருங்கவிடாது. 
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p1
இந்த மழைக்காலம் தொடங்கும் முன்பிருந்தே கிழவியோடு சேர்ந்து இந்த மலையெங்கும் அலைந்து திரிந்தான் குறுங்கட்டி. எனவே, அவனுக்கு இந்தக் காடு மிக நன்றாக வசப்பட்டிருந்தது.

சிற்றாற்றைக் கடந்து மேலே ஏறியவுடன் முடிநாகனை முந்திக்கொண்டு பாய்ந்தன குறுங்கட்டியின் கால்கள். சிறு இடறும் இல்லாமல், மிகத்தெளிவாக வளைந்து, நெளிந்து, பாறைகளைக் கடந்து பாய்ந்து கொண்டிருந்தான் அவன். இளமனும் உளியனும் ஆயுதங்களைக் கவனமாக ஏந்திப் பிடித்தபடி ஓடிவந்துகொண்டிருந்தனர். தங்களுக்குள் ஒரு சொல்கூட பேசிக்கொள்ளாதபோதும் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் கவனம் செலுத்தினர். எல்லோரையும் ஓடவிட்டு, கடைசி யாக வந்துகொண்டிருந்தான் முடிநாகன். அவனின் கண்கள் விலங்குகள் ஏதேனும் தெரி கின்றனவா எனத் துழாவின. பின்னிரவின் சரிபாதி நேரத்தில் அவர்கள் எவ்வியூருக்குள் நுழைந்தனர்.

பாரியை எழுப்பிய வீரர்கள், “மாணவர்கள், அவசரமாகப் பார்க்க வந்துள்ளனர்” எனச் சொன்னார்கள்.

பாரிக்குக் காரணம் புரியவில்லை. ஆனாலும், அவர்களிடம் விளக்கம் கேட்பதைத் தவிர்த்தபடி எழுந்து வெளிவாசலுக்கு வந்தான். மாணவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் மூச்சிரைத்தபடி கைகால்களை நீட்டிக் கிடந்தனர். பாரி வந்ததும் சட்டென எழுந்திருக்க நினைத்தனர். முடியவில்லை.வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p3
ஐவரையும் பார்த்தான் பாரி. முடிநாகன் மெள்ள எழுந்தான். ‘பேசப்போகும் வார்த்தை, தொண்டைக்குழிக்குள் எவ்வளவு கசப்பைக் கொட்டப் போகிறதோ?’ என்ற அச்சம் மேலெழுந்தது. பாரியை எழுப்பும்படி வீரர்களுக்குச் சொல்லிப் புரியவைக்கும் முன்பே, இருமுறை வயிறு குமட்டி வாந்தி எடுத்துவிட்டான். உதவி செய்யவந்த இளமனால், ஒற்றைச் சொல்லுக்குமேல் பேச முடியவில்லை. ஓடிவந்த களைப்பும் தாகமும் தொடர்ந்தன; எச்சில் ஊறுவதால், கசப்பு நிற்காமல் சுரந்துகொண்டிருந்தது. அவற்றையும் மீறி சிறு சொல் பேசினாலே, உமட்டலால் குடல் வெளிவருவதைப்போல அடிவயிறு பிரட்டிக்கொண்டு வருவதை மாணவர்களால் தாங்க முடிய வில்லை. “ஏதோ சொல்ல வருகிறார்கள். என்னவென்று புரியவில்லை” என்றுதான் வீரர்கள் பாரியிடம் சொன்னார்கள்.

முடிநாகன் எழுந்து நின்று மீண்டும் கசப்பை விழுங்க முடிவுசெய்தபடி சொன்னான், “தேக்கன் உங்களை அழைத்துவரச் சொன்னார்.”

முடிநாகனின் முகத்தை உற்றுப் பார்த்தான் பாரி. ஊறிப்பெருகும் கசப்பு அவனின் நாக்கைப் பிடுங்கிக் கொண்டிருந்ததை அந்த முகம் வெளிப்படுத்தியது. ‘தேக்கன் ஏன் என்னை அழைத்துவரச் சொல்ல வேண்டும்... இரவோடு இரவாக இவர்களை மட்டும் ஏன் அனுப்பியுள்ளான்?’ எனச் சிந்தித்தபடியே ஒவ்வொருவரையும் பார்த்தான். கைகால்கள் எல்லாம் இழுபட்டு, ஆங்காங்கே குருதி கசிந்தபடி கிடந்தனர்.

‘வழக்கமாகக் காடறிய உள்ளே அழைத்துச் சென்றுதான் பயிற்சி கொடுப்பான் தேக்கன். இம்முறை உள்ளே அழைத்துச் செல்லவே பயிற்சி தேவை என முடிவுசெய்துவிட்டான்போலும்’ எனத் தோன்றியது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p21
‘கேள்வி கேட்டு இவர்களை மேலும் கசப்பை விழுங்கவிட வேண்டாம்’ என்று முடிவுசெய்த பாரி, “ஓய்வெடுங்கள். காலையில் போவோம்” என்று சொல்லிவிட்டு, மாளிகை நோக்கித் திரும்பினான். திரும்பிய அவனின் கையை, சற்றும் எதிர்பாராமல் இறுகப் பற்றினான் முடிநாகன்.

உடன் இருந்த வீரர்களுக்கு என்னவெனப் புரியவில்லை. முடிநாகனின் கழுத்து நரம்பெல்லாம் விடைத்து, கண்கள் பிதுங்கின. அவனின் தோள்பட்டைகள் ரத்தவிளாறாக இருந்தன. அவனின் முகம் சொல்லவருவது என்னவெனப் புரியவில்லை. ஆனால், மாணவர்கள் மன்றாடுகிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.  

‘தேக்கன், முதல் நாளிலேயே பயிற்சியை இவ்வளவு கடுமையாக ஏன் தொடங்கினான்?’ எனச் சிந்தித்தபடியே “சரி, புறப்பட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான் பாரி. மாணவர்கள் சற்றே நிம்மதி அடைந்தனர்.
சிறிது நேரத்தில் வெளியேறி வந்தான். குளிர் நடுக்கம் குறைவாகத்தான் இருந்தது. இருளின் கடைசி முடிச்சு அவிழ இன்னும் நேரம் இருந்தது.

“தேக்கன் எங்கே வரச்சொன்னார்?” எனக் கேட்டான் பாரி.

``ஆதிமலையின் எலிவால் முகட்டுக்கு” எனப் பதில் சொன்னது உளியன். `எப்படி இவ்வளவு துணிவு அவனுக்கு வந்தது?’ என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்க, கைகளால் தொண்டைக்குழியைப் பிய்த்து எடுப்பதைப்போல நெரித்தான். அதையும் மீறி குமட்டல் வெளிவந்துகொண்டிருந்தது.

பாரிக்கு வியப்பு அதிகமானது. `பயிற்சியின் முதல்நாளே இரவு முழுவதும் ஓடவிட்டு, மறுபடியும் அவ்வளவு தொலைவு ஏன் வரச்சொல்ல வேண்டும்?’ பாரி குழம்பியபடியே நின்றுகொண்டிருந்தான். பொழுதாகிக் கொண்டிருந்தது. மாணவர்களின் பதற்றம் அதிகமானது. இவ்வளவு நேரமும் பேசுவதைப்பற்றி நினைக்கவே முடியாமல் இருந்த ஆயன், சூழலைப் புரிந்துகொண்டு சொன்னான். “எதிரிகள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.”

சின்ன புன்முறுவலோடு அவனைப் பார்த்தான் பாரி.

‘தேக்கன் சொன்ன கதையை உண்மை என நம்பியே இவர்கள் இவ்வளவு தொலைவு வந்துள்ளனர். தேக்கனின் பயிற்சி உடலுக்கும் அறிவுக்கும் சமஅளவு முக்கியத்துவம் உள்ளதாக இருக்கும். இவர்கள் ஒன்றில் வெற்றிபெற, இன்னொன்றில் தோற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

குதிரைப் பாதைகள் எல்லைப்புற மலைகளுக்குத்தான் இருக்கின்றன. `எலிவால் முகட்டுக்கெல்லாம் மனிதர்கள் நடந்து போவதே கடினம். முதல்நாளே இந்தக் கடினப் பயிற்சியை ஏன் கொடுத்தான் தேக்கன்? அதுவும் ஐந்து பேருக்கு மட்டும். இவர்களை மட்டும் சோதித்துப்பார்க்க சிறப்புக் காரணம் என்னவாக இருக்கும்?’ என எண்ணிய கணத்தில் மறுசிந்தனை வந்தது... ‘மற்ற அறுவரும் எந்தத் திசை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்களோ?’

`தேக்கனின் நோக்கம் எதுவாகவும் இருக்கட்டும். மாணவர்களை மீண்டும் தேக்கனிடம் கொண்டுசேர்க்கும் வரை நாம்தான் அவர்களுக்கு ஆசானாக இருக்க வேண்டும்’ என்று மனதுக்குள் முடிவுசெய்துவிட்டு, மாளிகைவிட்டு வெளியேறி வந்தான் பாரி. உடன் வீரர்களும் வந்தனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p6
“இவர்களே இருள் அப்பிக்கிடக்கும் இந்தக் காட்டுக்குள் தனியாக வந்துள்ளனர். நான் வீரர்களோடு போனால், நன்றாகவா இருக்கும்?” என்றான்.

வீரர்கள் நின்றுகொண்டனர். பின்னால் வந்துகொண்டிருந்த மாணவர்கள் இந்த உரையாடலை அறியவில்லை.

எவ்வியூரின் எல்லை தாண்டிக் காட்டுக்குள் இறங்கும்போது மீண்டும் மாணவர்களின் கால்கள் வேகமெடுத்தன. பாரி, அவர்களின் செயல்களை உன்னிப்பாகக் கவனித்தபடி வந்தான். ‘தேக்கன் நடத்தும் இந்தச் சோதனை ஓட்டம் மாணவர்களுக்கானதாக மட்டும் தெரியவில்லை. சேரர்கள் எந்நேரமும் போர்தொடுக்கும் வாய்ப்புள்ள இந்த வேளையில், எனக்குவரும் செய்திகளை விழிப்போடு கேட்டு நான் எப்படி முடிவெடுக்கிறேன் என என்னையும் சோதிக்கிறாரா? வீரகுடி ஆசானின் மனதில் என்னதான் இருக்கிறது?’ எனப் பாரி குழம்பினான்.

பாரி சிறுவனாக இருந்து காடறியச் செல்லும்போது தேக்கனாக இருந்தது இவரேதான். பகரியை வேட்டையாடி முதன்முறையாக தேக்கனாகி மாணவர்களை அழைத்துச்சென்றது அப்போதுதான். ஒரே காலத்தில் தேக்கன் மூலம் மாணவர்களும், மாணவர்கள் மூலம் ஆசானாகத் தேக்கனும் பயிற்சிபெற்றனர். ஆசானுக்கே முதன்முறையாக இருந்ததால், பயிற்சி இளகுத்தன்மையற்று மிகக் கடுமையாக இருந்தது. அந்த ஆழ்மனப்பதிவே இப்போதும் பாரியை அவ்வாறு  சிந்திக்கவைத்தது.

தேவாங்கு தன் கால்களால் பற்றி நிற்பதற்கு ஏற்ப, கூடை முழுவதும் குறுக்குக்குச்சிகள் செருகப்பட்டிருந்தன. சிற்றுருளைப்போல் நீள்வடிவுகொண்ட ஒரு கூடையில் பத்திலிருந்து இருபது தேவாங்குகள் வரை இருந்தன. ஒன்றின் மேல் ஒன்று அமுக்கி நசுங்கிவிடாதபடி குறுக்குக்குச்சியைக் கொடுத்து அந்தக் கூடை பின்னப்பட்டிருந்தது. எவ்வளவு வேகமாக ஓடினாலும், எந்தப் புதருக்குள் நுழைந்தாலும் தேவாங்குக்கு எந்தச் சேதாரமும் ஆகாதபடி அதை வடிவமைத்திருந்தனர்.

இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியவன் காலம்பன். இவன் பறம்பு மலையைப் பார்த்ததில்லை. ஆனால், பலரும் சொன்ன குறிப்புகளைக்கொண்டு இந்தத் திட்டத்தை வடிவமைத்தான். மொத்தம் முப்பது பேர் வந்துள்ளனர். காரமலையின் முகட்டில் பத்து பேர் நின்றுகொண்டனர். நடுமலையின் முகட்டில் எட்டு பேர் நிற்கின்றனர். ஆதிமலையின் முகட்டில் ஏழு பேர் நின்றுகொண்டனர். ஐவர் மட்டும் கொற்றவைப் புதர் நோக்கி உள்ளே நுழைந்தனர்.

வரும்போது யார் கண்ணிலும் பட்டுவிடாமல் படுவேகமாக வந்துவிட முடியும் என அவர்கள் உறுதியாக நம்பினர். ஆனால், தேவாங்கைப் பிடிக்கும்போது காவல் வீரர்கள் பார்த்துவிட்டால் தப்பிச் செல்லுதல் எளிதல்ல. பறம்புநாட்டு வீரர்களின் ஆற்றல் இணையற்றது. எனவே, ஆங்காங்கே தங்கவைக்கப்பட்டுள்ள வீரர்களிடம் கூடையைக் கைமாற்றி எப்படியாவது பறம்புமலையை விட்டுக் கீழிறக்க வேண்டும் என்பதுதான் திட்டம்.

அவர்கள் எதிர்பார்த்ததைப்போலவே, கொற்றவையின் கூத்துக்களத்துக்கு வந்தடைவது வரை யார் கண்ணிலும் படவில்லை. அங்கே காவல் வீரர்கள் இல்லாதது அவர்களின் வேலையை மேலும் எளிதாக்கியது.

தேவாங்கைப் பிடிக்க மூங்கில் குச்சியை வெட்டி, முனையில் தோற்பை போன்ற சுருக்குத் துணியைச் செருகினர். நீள்குச்சிகளைக்கொண்டு மிக விரைவாக அவற்றைப் பிடித்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக சிறுவர்களை அழைத்துக்கொண்டு கிழவன் ஒருவன் வந்து நின்றதை அவர்களின் கூட்டத்தில் ஒருவன் பார்த்தான். சிறிது நேரத்தில் அந்தச் சிறுவர்கள் கூட்டம் போய்விட்டது. பிறகு எப்படி மீண்டும் வந்து கடவின் பின்னால் இருந்து தாக்குதல் தொடுத்தார்கள் என்பதுதான் காலம்பனுக்குப் புரியவில்லை.

அவன்தான் முன்னால் ஓடிக்கொண்டிருந்தான். தங்களை எப்படி அவர்கள் கண்டறிந்தார்கள் எனச் சிந்தித்தபடியே அவன் ஓடினான். இருளுக்குள் எளிதில் நுழைய முடியாத அடர்காட்டுக்குள் அவர்கள் நுழைந்துவிட்டதால், விரைவாக முன்னகர முடியவில்லை.

கூடையைச் சுமந்து சென்ற ஒருவன், மெள்ள முனகத் தொடங்கினான். “என்னால் முடியவில்லை” சத்தம் மட்டும் வெளிவந்தது. மற்ற நால்வரும் ஓடுவதை நிறுத்தி அவன் அருகில் வந்தனர். அவன் தளர்ந்தான். “என்ன ஆனது?” என்று மற்றவர்கள் விசாரிக்க, ``கடவின் மறைவிலிருந்து தாக்கியவனின் அடி நரம்புகளை ஏதோ செய்துவிட்டது. என்னால் கால்களை முன்னகர்த்த முடியவில்லை” என்று சொல்லிக்கொண்டே மண்டியிட்டான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p4
காலம்பன் அவனைத் தாங்கிப் பிடித்தான். மற்றவர்கள் அவன் முதுகில் இருந்த கூடையைக் கழற்றினார்கள். ``நாங்கள் தோள்களில் தாங்கலாக உன்னைத் தூக்கிக்கொண்டு போய்விடுகிறோம். கவலைப்படாதே” என்றனர்.

இருவர் அவனின் கைகளைத் தங்களின் தோள்களின் மேல் போட்டபடி அவன் நடந்துவர உதவி செய்தனர்.

பொழுது விடிந்துகொண்டிருந்தது. கதிரவன் கண்ணில் படவில்லை. ஆனால், காடு முழுவதும் ஒளி ஊடுருவிக்கொண்டிருந்தது. தேக்கன், அடர்காட்டுக்குள் போகாமல் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்துப் போனான். அது  சற்று அதிகத் தொலைவுதான். ஆனால், அந்த அடர்காட்டைக் கடப்பதற்கான நேரத்தில் பாதி நேரமே ஆகும்.

மாணவர்கள் களைத்துப்போயினர். ஆனாலும், `நாம் சென்றுவிடலாம்’ என்ற நம்பிக்கையோடு போய்க்கொண்டிருந்தனர். ‘சரியான நேரத்துக்குள் பாரி வந்து சேர்ந்தால், மீதமுள்ள நால்வரையும் எலிவால் முகட்டிலேயே வெட்டிச்சாய்க்கலாம்’ என்ற வெறி ஏறிக்கொண்டிருந்தது. ‘மாணவர்கள் என்ன சொல்லி பாரியை அழைப்பார்கள்? அங்கு கேட்கப்படும் கேள்விக்கு இவர்கள் கசப்பை விழுங்கிப் பதில் சொல்லியிருப்பார்களா? என்ன சொல்ல வேண்டும் என்பதை நாம் சொல்லி அனுப்பியிருக்கலாமோ?’ எனத் தோன்றியது. இந்த எண்ணங்களோடு ஓடிக்கொண்டிருந்த தேக்கனுக்கு, சிற்றாற்றின் வலதுகரையில் சுண்டாப்பூனை ஒன்று இருப்பதாக இரு நாள்களுக்கு முன் வீரன் ஒருவன் சொன்னது சட்டென நினைவுக்கு வந்தது. `நாம் அதை இவர்களிடம் சொல்லாமல் அனுப்பி விட்டோமே, தீங்கு ஏதும் நேர்ந்திருக்குமா!’ என்று எண்ணிய கணத்தில் பதற்றம் கூடியது.
மாணவர்கள், பாரியுடன் சிற்றாற்றைக் கடந்தனர். நேற்று மாலை ஓடத்தொடங்கிய அவர்கள், இன்னும் நின்றபாடில்லை. தேக்கன் சொல்லி அனுப்பிய சொல் அவர்களை நிற்கவிடாமல் துரத்தியது.

மாணவர்களின் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்தபடி சற்றே பெருநடை நடந்துவந்தான் பாரி. ஒவ்வொருவனின் நடையையும் வேகத்தையும் கவனித்தான். முடிநாகனின் பாதம் முழுவதும் மண்ணை அப்பி எழுந்தது. இளமனின் கால்விரல்கள் விரிவுகொள்ளாமல் இருந்தன. உளியன் தேவைக்கு அதிகமான உயரத்துக்குக் காலைத் தூக்குகிறான். ஆயனின் நடைதான் ஒப்பீட்டளவில் சரியாக இருந்தது. அதனால், மற்றவர்களைவிட அவனால் வேகமாகப் போக முடிந்தது.

கால்களில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பிரச்னையைச் சொன்ன பாரி, காட்டு விலங்குகள் ஒவ்வொன்றின் நடையைப் பற்றியும், கால் அமைப்பைப் பற்றியும் விளக்கத் தொடங்கினான். அவற்றின் வேகத்துக்கும் பாதத்தை அவை பயன்படுத்தும் உத்திக்கும் உள்ள உறவை அவன் விளக்கிச் சொல்லும்போது மாணவர்கள் சற்றே எரிச்சலோடு அதைக் கேட்டு நடந்தனர்.

எவ்வளவு முறை சொற்களாலும் சைகையாலும் சொல்லியும் பாரியைவிட முன்னால் ஓடிவிட முடியவில்லை. களைத்துப்போன தங்களின் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்தே வருகிறான் என்ற கோபம் எல்லோருக்கும் இருந்தது. என்ன செய்வது எனத் தெரியவில்லை.

இந்நிலையில்தான் பாரியின் கண்களுக்கு அந்தச் சுருள்வால் தெரிந்தது. தலை சாய்த்து உற்றுப்பார்த்தான். புற்களுக்குள்ளே தடித்த செங்காவிநிறச்சுருள் தனித்துத் தெரிந்தது. அவனின் ஐயம் உறுதியானது. அவனை அறியாமலே கால்கள் நின்றன. சின்னதாக ஒலியெழுப்பி மாணவர்களை நிற்கச் சொன்னான். யாரும் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. தளர்ந்தபடி நடந்தனர். சற்றே சத்தமாகச் சொன்னான், “அங்கே நிற்பது சுண்டாப்பூனை; அப்படியே நில்லுங்கள்.”

சுண்டாப்பூனையின் வால், மேல் நோக்கிச் சுருண்டுதான் இருக்கும்; ஒருபோதும் கீழே தொங்காது. அதன் பற்கள் பன்றியின் பற்களைப் போன்றது. கடவாயில் இருந்து உதடு பிளந்து மேல் நீண்டிருக்கும். மனிதனை அதன் முகம் உரசிப் போனாலே, வாள்கொண்டு சீவிப் போனதைப்போல் ஆகிவிடும். அது நீளத்திலும் உயரத்திலும் புலியைவிட சற்றே குறைவு. ஆனால், வேகமும் தாக்கும் திறனும் புலியைவிட அதிகம். சுண்டாப்பூனையைக் கண்டால் புலி ஒதுங்கிப்போகும் என்பார்கள்.

மனிதர்கள் இதைப் பார்த்துவிட்டால் அப்படியே நின்றுவிட வேண்டும். அது சில நேரம் பக்கத்தில் வந்து முகர்ந்து பார்த்துவிட்டுப் போகும். சில நேரம் தொலைவில் இருந்தபடியே போய்விடும். ஆனால், அதைப் பார்த்தபிறகு ஓடத் தொடங்கினால், அவ்வளவுதான். அதன் வேட்டையிலிருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது. இந்தக் காட்டில் அதற்கு இணையாக ஓடும் இன்னோர் உயிரினம் கிடையாது.

அதைப் பார்த்த கணம் அப்படியே நின்றான் பாரி. மாணவர்கள் நிற்காமல் நடந்தனர். தொலைவில் செடிகளுக்கு இடையில் தெரியும் சுருள்வாலை அவர்கள் பெரிதாகக் கருதவில்லை. பாரிக்கு, சின்னதாகப் பதற்றம் வரத் தொடங்கியது. “நில்லுங்கள்” என்று மீண்டும் மெள்ளக் கத்தினான். முடிநாகனுக்கு தேக்கன் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது, `உன் பின்னால் ஈன்ற புலி துரத்துகிறது என நினைத்துக்கொண்டு ஓடு’ என்ற வார்த்தைகள் எதிரொலித்தபடி இருந்தன. ‘எதையோ விளக்குவதற்காக நிற்கச் சொல்கிறார் பாரி’ என்று நினைத்தபடி எரிச்சலில் சற்றே வேகத்தை அதிகப்படுத்தினான் முடிநாகன்.

“என்ன செய்கிறாய் நீ?” என்று பாரி குரல் உயர்த்திக் கத்தியபோது மற்றவர்களும் முடிநாகனைத் தொடர்ந்து ஓடத் தொடங்கினர். கண நேரத்தில் ஏதேதோ நடப்பதுபோல் ஆனது. ஈட்டியை இறுகப் பிடித்தான் பாரி. ‘அது நமக்கு அருகில் வந்தால் மாய்த்துவிடலாம். முன்னால் போகிறவனை ஓர் அடி அடித்துவிட்டு பாய்ந்து ஓடினால் போதும். முதுகுக்கறி எதுவும் மிஞ்சாது. ஏன் இவர்கள் நாம் சொல்வதைக் கேட்க மறுக்கின்றனர்?’ என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும்போது, மாணவர்களின் எண்ணம் வேறொன்றாக இருந்தது. பதறி ஓடவேண்டிய நேரத்தில் நிற்கச் சொல்லிக் கத்தும் பாரியின் சொல்லை மறுப்பதன் மூலம் தங்களின் கோபத்தை வெளிக்காட்டினர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p5
அது இவர்களை நோக்கி வரத் தொடங்கியது. `நாம் எவ்வளவு போராடினாலும், அதனுடைய ஓர் அடி எவன்மீதாவது பட்டால் போதும். அவன் சாவதைத் தவிர வேறு வழியில்லை’ எனப் பாரியைப் பதற்றம் சூழ்ந்தது. கண நேரத்தில் பாய்ந்து முன்னால் போன பாரி, முடிநாகனின் கழுத்தைப் பிடித்து இழுத்துவிட்டான். அவன், பின்னால் சாய்ந்த வேகத்தில் நான்கு மாணவர்களும் மிரண்டு நின்றனர். விரல்களை ஓங்கியபடி “அமைதியாய் நில்லுங்கள்” என்றான் பாரி. அவர்கள் அப்படியே நின்றனர்.

சுண்டாப்பூனையும் சிறிது நேரம் தொலைவில் இருந்தபடியே பார்த்தது. பின்னர் வேறு பக்கம் சென்று மறைந்தது. அது போனதை உறுதிப்படுத்திக்கொண்டபிறகு சொல்லத் தொடங்கினான் பாரி. சுண்டாப்பூனையைப் பற்றிக் கேள்விப் பட்டிராத அவர்களுக்கு அதன் தன்மையை விளக்கினான். அவர்கள் அதைக் கவனித்ததுபோல் தெரியவில்லை. அவர்களின் கவனம் முழுவதும் ஆசானிடம் இருந்தது.

பாரியின் மனதில் சின்னதாக வருத்தம் எழுந்தது. `மாணவர்களை இழுத்து நிறுத்த வேண்டியதாகிவிட்டதே!’ என நினைத்துக் கொண்டே அவர்களோடு சேர்ந்து பேசியபடி ஓடினான்.

கண்ணில் படும் ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்லிக்கொண்டே வந்தான். “எங்களால் வேகமாக ஓட முடியவில்லை. நீங்களாவது முன்னால் போங்கள்” என்று முடிநாகன் அரைகுறை வார்த்தைகளிலும் கை அசைவிலும் சொல்லிப்பார்த்தான். ஆனால், பாரி அதைப் பொருட்படுத்தவில்லை. மாணவர்களுக்குச் சொல்லித் தருவதிலே கவனமாக இருந்தான். ஏதோ ஒருவகையில் தேக்கன் தனக்கு வைக்கும் சோதனையாக அவன் மனதில் பதிந்தது.

`மலையின் மேற்குப் பக்கக் காட்டுக்குள் கடந்த மாதம் முழுவதும் அலைந்தோம், கீழ்த் திசையின் உள்காடுகளுக்குள் நான் வந்து நீண்டகாலமாகி விட்டது. சேரனோடு போர் தொடங்கிவிட்டால் மேற்குப் பக்கமிருந்து நம் கவனம் திசை திரும்ப நெடுங்காலமாகிவிடும். எனவே, கீழ்த் திசைக் காட்டின் இண்டு இடுக்குகளுக்குள் அலைந்து திரிவது அவசியம் எனத் தேக்கன் கருதியிருக்கலாம். மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் வாய்ப்பாகவும் இது அமையும் எனக் கருதியிருப்பார்’ என்று நினைத்துக்கொண்டான் பாரி.

ஒரு பாறையின் வளைவில் கடந்ததும் எதிரில் குத்துக்கோரை முளைத்துக்கிடந்தது. “அதில் மிதித்து நடக்கக் கூடாது. அதன் முனைகள் கால்விரல்களின் இடைவெளிகளை எளிதில் அறுத்துவிடும்” என்று சொல்லியபடி சற்று விலகி ஓட வழி காட்டினான். சிறிது தொலைவில் சங்கஞ்செடி பெரும்புதர்போல் கிடந்தது. “அதில் மிதித்து நடந்தால், இலையில் உள்ள பால் நம்மீது பட்டவுடன் அரிக்கத் தொடங்கும். எனவே, மிதிக்காமல் விலகிச் செல்லுங்கள்” என்றான். போகும் வேகம் கூடவில்லை. மேலும் கீழுமாக அலைக்கழிப்பதே அதிகமாகிக்கொண்டிருந்தது.

மாணவர்கள், மனதுக்குள் பொருமிக் கொண்டிருந்தனர். பின்னால் வந்த பாரி, “நில்லுங்கள்” என்று சத்தம் கொடுத்தான். கோபம் மேலிட நின்றனர். அருகில் மிகப்பெரிய செங்கிளுவை மரம் இருந்தது. அதன் கிளை இடுக்கில் எரிவண்டின் கூடு அப்பியிருந்தது. மாணவர்களுக்கு அதைக் காட்டியபடி பாரி சொன்னான், “மரத்தின் முண்டுபோல பெரியதாக இருக்கிறதே, அதுதான் எரிவண்டுக் கூடு. அந்தக் கூட்டைத் தொந்தரவு செய்தால் அவ்வளவுதான்; நம்மை விரட்டி விரட்டிக் கொத்தும். எவ்வளவு விரைந்து ஓடினாலும் அதனிடமிருந்து தப்பிப்பது எளிதல்ல.”

பாரி சொல்லி முடிக்கும்போது, முடிநாகன் விட்டான் ஒரு கல்லை. அது எரிவண்டின் கூட்டைப் பிய்த்துக்கொண்டு போனது. ``என்ன செய்கிறாய் நீ?” என்று பாரி கேட்டு முடிக்கும் முன், படை திரட்டி வந்தது எரிவண்டுக் கூட்டம். மாணவர்கள் வெறிகொண்டு ஓடினர். செடி, கொடிகளில் முண்டியும் புதருக்குள் நுழைந்தும் ஓடிய அவர்களின் கால்கள் பலமடங்கு வேகம்கொண்டன. எரிவண்டின் சத்தம் கேட்கக் கேட்கக்  கால்கள் காற்றைக் கிழித்துக் கொண்டிருந்தன.  

‘என்ன ஆனாலும் பாரி நம்மைக் காப்பாற்றுவான்’ என்று அவர்களுக்குத் தெரியும். எனவே, அவர்களின் கால்கள் பதற்றமின்றிப் பறக்க முயன்றுகொண்டிருந்தன. முன்னால் ஓடிக்கொண்டிருந்த முடிநாகன் மனதில் எண்ணிக்கொண்டான், `தேக்கனின் சொல்லைக் காப்பாற்றுகிறேன். பாரியையும் சேர்த்து வழிநடத்துகிறேன்.’

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 2:09 pm

நேற்று மாலை ஓடத்தொடங்கியவர்கள் இன்னும் நின்றபாடில்லை. தேக்கன் வழக்கம்போல் முன்னால் ஓடிக்கொண்டிருந்தான். மாணவர்கள் வரவேண்டும் என்பதற்காகச் சற்றே வேகம் குறைத்து ஓடினான். அவர்கள் விடாப்பிடியோடு ஓடிவந்தனர். அவர்களின் பிரச்னை ஓடுவதில் இல்லை. ஓடிக்கொண்டே இருப்பதால், தண்ணீர் தாகமெடுத்தது. நீர் குடித்துக் கசப்பை விழுங்கும் துணிவு யாருக்கும் இல்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P85a
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் சாமப்பூ, கார்காலத்தில்தான் பூக்கத் தொடங்கும். அதன் பிறகே மாணவர்களை அழைத்துக்கொண்டு காடறியப் புறப்படும் சடங்குகள் தொடங்குகின்றன. குலநாகினி மலைவேம்பின் இலையில் சாறெடுத்து அடித்தொண்டையில் ஊற்றும் நிகழ்வுதான் காடறிதலின் தொடக்கம்.

காட்டின் ஆதிக்கசப்பு அது. நஞ்சினும் மேலான கசப்பு அது. அக்கசப்பினைப்பற்றி எவ்வியூரில் யாரும் எப்போதும் பேசவே மாட்டார்கள். வாரக்கணக்கில் விடாது சுரக்கும் கொடுங்கசப்பை விழுங்கவேண்டியதிருக்கும் எனத்தெரிந்தால் சிறுவர்கள் காடறியப் புறப்படவே தயங்குவார்கள். எனவே, இதுபற்றிப் பேசுவதேயில்லை.

கொற்றவையை வழிபட்டபின் ஆதிமலையின் செங்குகையை அன்றிரவே அடைவார்கள். அதன்பின் சில மாதங்கள் அங்குதான் தங்குவார்கள். மழைக்காலமாதலால், அதிகம் தாகமெடுக்காது. உணவு வழக்கம்போல் உண்ணும் முறையில் இருக்காது. நாள்தோறும் ஒரே ஒரு காய் மட்டுமே தரப்படும். கடித்தும் சுவைத்தும் உண்ணவேண்டியிருப்பதால், விழுங்கும் தேவை மிகமிகக் குறைவே. காயின் துவர்ப்பு, தேங்கி நிற்கும் கசப்பை இறுகப்பிடித்து இறங்கும். கசப்பும் துவர்ப்பும் சுவைநாளங்களின் அடிவேரில் நிலைகொள்ள வைக்கப்படும்.

காயின் அளவும் நாளாக ஆகச் சிறிதாகிக்கொண்டே இருக்கும். இறுதியில் நெல்லிக்காய் அளவேயுள்ள கனி மட்டுமே ஒரு நாளைக்குப் போதுமானதாக மாறிவிடும். பிறந்ததில் இருந்து நன்றாக உண்டு வளர்ந்த  அவர்களின் உடல் இறுகுவதற்கான பயிற்சி அது. தசைகள் எலும்புகளோடு ஒட்டிப் பாறையின் இறுக்கம் உடலுக்கு வாய்க்கும். அதன்பிறகு, செங்குகையிலிருந்து வெளியேறுவார்கள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P85b
குகைவாழ்க்கை முடியும்போது கசப்பு மட்டுமன்று, எல்லா சுவைகளும் நாக்கிலிருந்து வடிகட்டப்பட்டுக் கீழிறக்கப்பட்டிருக்கும். மேல்தாடை மட்டுமே சற்று சுவை உணர்வுகொள்வதால், நடுவில் தாழ்ந்திருக்கும் மனித நாக்கு மேல்நோக்கி உயரவே தொடர்ந்து முயலும்.

தலைகீழாகப் புரண்டிருக்கும் யானை நாக்கினைப் போன்ற வடிவம் அது. இம்மாற்றம் நிகழும்போது, பேச்சுக்குழன்று பின் கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகும். காட்டின் மொழி விதவிதமான ஓசைகளைக்கொண்டது. அந்த ஓசைகளை எழுப்ப மனித நாக்கின் இயல்பான வடிவத்தால் முடியாது. பறவைகளும் விலங்குகளும் எழுப்புமோசைக்கு எதிரோசை கொடுக்க மேல்தாடையைத் தொட்டுக்கிடக்கும் நடுநாக்கே அடிப்படை ஆதாரம்.

ஓசையெழுப்பும் முழுத்திறனும் ஒருவனுக்கு வரும்வரை ஒற்றைக் கனியின்றி வேறு உணவு உண்ண அவனை அனுமதிப்பதில்லை. காடறிதலின் முதற்பயிற்சி காட்டின் மொழியைக் கற்றுக்கொள்ளுதல்தான். அதற்கான தொடக்கத்தைத்தான் குலநாகினி அடிநாக்கில் வைத்து அனுப்புகிறாள். அங்கிருந்து தொடங்கி மரநாயில் வந்து முடிகிறது அது.

காட்டு விலங்குகளின் ஓசையை அறிவதில் மிகக்கடினமானது மரநாய் ஓசைதான். மரமேறி விலங்குகளின் வகையிலும் சேராத, மண்மீது நடக்கும் விலங்கின் வகையிலும் சேராத மரநாய் எழுப்பும் ஓசை, முற்றிலும் மாறுபட்ட  தன்மையைக்கொண்டிருக்கும். அதனைத் துல்லியமாகக் கவனித்து அறிதல் எளிதன்று. அவ்வோசையின் முடிப்பில் இருக்கும் சிறுசுழிவை நுட்பமாகக் கவனித்து அறியவில்லையெனில் எளிதில் ஏமாற்றமடைவோம். ஓசையின் முடிப்பில் இருக்கும் அச்சுழிவை மீண்டும் மீண்டும் எழுப்பிப்பார்த்தே உணரவும் அறியவும் முடியும்.

கீழ்வளைந்திருந்த நடுநாக்கு இப்பயிற்சியினால் மேல்நோக்கி எழுந்து பின் சமதளமடையும். இவை நிகழ்ந்து முடியும்போது, உள்ளுக்குளிருந்து விடாது சுரந்துகொண்டிருந்த கசப்பு எப்போது, எங்கே மறைந்ததென்ற நினைவே இருக்காது. 

இப்பயிற்சிகள் எதுவும் நிகழாமல், அடித்தொண்டையில் வைக்கப்பட்ட கொடுங்கசப்பு உள்ளிறங்கியபடியே இருக்க மாணவர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஓட ஓட தாகமெடுக்கிறது.  நீரை அருந்தவோ, வேறு உணவை உண்ணவோ முடியவில்லை. ஒரு மிடறு எச்சில் உள்ளே போனாலே, கொடுங்கசப்பு உள்ளிறங்கும் என்பதை நினைத்து தேக்கன் மிகவும் கவலைகொண்டிருந்தான். ‘அவர்களின் தொண்டைக்குழி முழுவதும் இந்நேரம் புண்ணாகியிருக்கும்.  இதுவரை காடறியப்போன மாணவர்கள் யாரும்  கண்டிராத கொடிய சோதனையை இவர்கள்  கண்டுகொண்டிருக்கின்றனர். இவர்களின் ஓட்டத்தை நிறுத்தச் சொல்லவும் முடியாது. ஓடியபடியே இருந்தால் இவர்கள் என்ன ஆவார்கள் என்றும் தெரியவில்லை’ எனச் சிந்தித்தபடியே தேக்கன் ஓடினான். ஆனாலும் அவனது கவனம், வேகத்தைக் கூட்டும் செயலோடு தன்னையறியாமலே இணைந்திருந்தது.

அடர்காட்டினுள் புகுதல் எளிதல்ல. செடிகொடிகளை விலக்கியும் அறுத்தும் முன்னகர நினைத்து எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் நகரமுடியாத பெரும்புதரை நோக்கியே நகர்த்திச்செல்லும் ஆபத்துண்டு. இயற்கையின் தன்மைகளைத் துல்லியமாக அறிந்தவர்களாகத் தான் அவர்கள் இருந்தனர்.எனவே, எக்காட்டுக்குள்ளும் நுழைந்து வெளியேறும் திறன் கொண்டிருந்தனர்.  வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P85c

காலம்பன், சரிவுகளில் கற்கள் உருளாமல் சரசரவென மேலேறிக்கொண்டிருந்தான். அடிபட்டவனால் வேகமாக நடக்க முடியவில்லை. மற்றவர்கள் உதவிசெய்தாலும் அவனால் ஒத்துழைக்க முடியவில்லை. ஆனாலும், அவனை விட்டுவிடக் கூடாது என்பதில் நால்வரும் உறுதியாக இருந்தனர்.

நன்றாக விடிந்துவிட்டது. பின்னிக்கிடக்கும் மரங்களுக்கிடையில் ஊடுருவிக் கதிரவனின்  ஒளிக்கதிர்கள் கீழிறங்கிக்கொண்டிருந்தன. ‘நம்மை அவர்கள் பார்த்துவிட்டார்கள். எனவே, விரைவாகச் செல்ல வேண்டும். காட்டை அவர்கள் அளவுக்குப் புரிந்தவர்கள் யாருமில்லை. எனவே, அவர்களின் தாக்குதல் எப்படி இருக்குமெனக் கணிக்க முடியாது. எப்படி இருந்தாலும் நம்மைக் காட்டுக்குள் வைத்து ஒன்றும் செய்ய முடியாது’ என்று உள்ளுக்குள் எண்ணங்கள் ஓடியபடி இருக்க, காலம்பன் வேகத்தைக் கூட்டிக்கொண்டேயிருந்தான்.

வழியமைத்தபடி முன்னால் ஓடிக்கொண்டிருந்த காலம்பனுக்கு இக்காட்டில் ஏதோ ஒரு தன்மை வேறுபட்டிருப்பதாகத் தோன்றியது. என்ன என்பது புலப்படவில்லை. பின்னால் வருபவனின் முனங்குதல் சற்றே அதிகமானபடி இருந்தது. நூலாம்படையைக் கிழித்து விலக்குவதைப்போல கைவிரல்களால் எவ்வளவு பெரிய மரக்கொடிகளையும் எளிதில் விலக்கி முன்னேறினான்.

நேரமாகிக்கொண்டிருந்தது. காலம்பனின் கவனம் கூர்மைகொண்டதாக இருந்தது. மேலேறிக்கொண்டிருந்தவன் சட்டென நின்றான். “பொழுது விடிந்ததிலிருந்து பறவைகளின் குரலோசை எதுவும் கேட்கவில்லை என்பதைக் கவனித்தீர்களா?”

மற்றவர்களுக்கும் அப்போதுதான் அது பிடிபட்டது. மேலே அண்ணாந்து பார்த்தபடி பார்வையை அங்குமிங்குமாக ஓடவிட்டனர். ‘செடிகொடிகளை விலக்கியும், செத்தைகளை மிதித்தும் வேகவேகமாக வந்துகொண்டிருந்ததால், பிற ஓசைகளைக் கூர்ந்து கவனிக்காமல் இருந்துவிட்டோம்’ என்று தோன்றியது. ‘பறவைகள் ஏன் காட்டின் இப்பகுதியில் இல்லை’ என்று சிந்தித்த கணத்தில் காலம்பன் சொன்னான், “ஒருவேளை, இது இரத்தச்சிலந்திகள் இருக்கும் காடாக இருக்கலாம். அதனால்தான், பறவைகள் தங்கவில்லை.”

ஒருகணம் திகைத்து நின்றனர். “இக்காட்டின் நடுப்பகுதியில் நாம் நிற்கிறோம். எவ்வளவு விரைவாக வெளியேற முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியேற வேண்டும்” என்றான்.

அடிபட்டவன் சொன்னான், “என்னைத் தூக்கிச் செல்வதன் மூலம் எல்லோரின் ஓட்டமும் தடைபடும். நாம் கொண்ட உறுதி நிறைவேறாமற் போய்விடும். எனவே, என்னை விட்டுவிட்டு இக்கூடையைக் கொண்டுசெல்லுங்கள். விரைந்து இக்காட்டைவிட்டு வெளியேறுங்கள்.”

காலம்பனாலும் மற்றவர்களாலும் இப்போது அவன் சொல்வதை மறுக்க முடியவில்லை. கூடையைத் தோள்மாற்றினர். சற்றுக் குறைந்திருந்த தேவாங்கின் சத்தம் மீண்டும் கூடியது. தோள்களில் பற்றியிருந்த அவன் கைகளை விலக்கமுடியவில்லை. அவர்களின் தயக்கத்தை உணர்ந்த அவன் வலியை மீறிய திறன்செலுத்தி கைகளைத்தூக்கி அவர்களிடமிருந்து விலக்கிக்கொண்டான்.

அவர்களைப் பார்த்தபடி அருகிருந்த ஈருவல்லி மரத்தின் ஓரம் சரிந்து உட்கார்ந்தான். அவர்கள் மீண்டும் முழுவேகத்தோடு ஓடத்தொடங்கினர். அவர்களைவிட விரைவாக அவை மரத்தின் மேலிருந்து இறங்கத்தொடங்கின.

திமலையின் இரண்டாம் மடிப்பை அடையும் வரை அவர்கள் ஓட்டம் குறையவே இல்லை. எரிவண்டுகளின் தாக்குதலைப் பாரி எப்படிச் சமாளிக்கப்போகிறானோ என்று நினைத்தபடி முன்னால் ஓடினர். ஒருமுறைகூட திரும்பிப் பார்க்கவில்லை. கொப்புகளைப் போகிறபோக்கிலே உடைத்து, கிட்டநெருங்கும் வண்டுகளை அடித்து விலக்குவது, முன்னால் செல்பவனுக்குப் பாதையின் திசையைச் சொல்வதென்று பாரியெழுப்பிய ஓசைகள் மட்டுமே ஆங்காங்கே கேட்டுக்கொண்டிருந்தன.

பாரி சொல்லும் திசை எங்கு போகிறது என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியவில்லை. ஈன்ற புலியல்ல, அதனைவிட வேகமாகப் பறக்கும் எரிவண்டு துரத்துகிறது; தப்பிக்க மட்டுமல்ல, எதிரிகளைத் தாக்கவும் நிகழும் ஓட்டமிது.  உச்சவேகத்தில் ஓடிக்கொண்டிருந்தனர் மாணவர்கள். ‘நாள்முழுவதும் ஓடினாலும் எரிவண்டுகள் விரட்டுவதை விடாது. மாணவர்கள் இன்னும் சிறிதுநேரத்தில் சோர்ந்து விடுவார்கள். என்ன செய்யலாம்’ என்று சிந்தித்த பாரி, வழியைச் சற்றே மாற்றி சரிவுப்பாறைகளுக்கு அருகிலிருக்கும் விருகமரத்தை நோக்கி அவர்களை ஓடவிட்டுக்கொண்டிருந்தான். 
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P85d
முன்னால் ஓடிக்கொண்டிருந்த முடிநாகன் விருகமரத்தைக் கடந்தபோது, பாரி ஓட்டத்தை நிறுத்தாமலேயே குனிந்து கற்களை எடுத்தான். எரிவண்டின் ஓசை காதைவிட்டு அகலாமல் துரத்தியபடியே இருந்தது. முடிநாகன் மரத்தை ஒட்டி இடப்புறம் திரும்பும்போது பாரி, கல்லை எடுப்பதை ஓரக்கண்ணால் பார்த்தான்.

‘விரட்டிவரும் இத்தனை வண்டுகளைக் கல்லால் அடித்து வீழ்த்திவிட முடியுமா? அதுவும் பறக்கும் வண்டுகளை ஒவ்வொன்றாய்க் கல்லெறிந்து வீழ்த்துவதென்பது முடிகிற செயலா? அதற்குள் வண்டு எத்தனை பேரைக் கடிக்குமோ? இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இவ்வளவு வேகமாக ஓடமுடியும்? அவசரப்பட்டுக் கூட்டைக் கலைத்துவிட்டோமோ?’ என்று சிந்தித்தபடியும் பாரியின் செயலைப் புரிந்துகொள்ள முடியாமலும் ஓடினான் முடிநாகன்.

எடுத்த கல்லை முழுவிசையோடு குறிபார்த்து எறிந்தான் பாரி. அவனது இலக்கு எரிவண்டல்ல; பாறையின் பொடவு. அப்பொடவுகளுக்குள் என்ன இருக்கிறது எனப் பாரிக்குத் தெரியும். அவன் எறிந்த கல், பொடவின் விளிம்பில்பட்டுத் தெறித்தது. கற்கள் சிதறிச் சரிந்தன.  கல்லோசை கேட்டதும் பொடவுக்குள் இருந்து கருங்கொண்டை வல்லூறுகளின் நீள்கழுத்துகள் எட்டிப்பார்த்தன. பார்த்த கணத்தில் அவை சிறகு விரித்து இறங்கத் தொடங்கின. சிறுபூச்சிகளை விட்டில் வேட்டையாடுவதைப் போல எரிவண்டுகளை வேட்டையாடத் தொடங்கின கருங்கொண்டை வல்லூறுகள்.

சடசடக்கும் வல்லூறுகளின் இறகுகள் குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தன. ஓடிக்கொண்டிருந்த கால்களின் வேகத்தைத் தளர்த்துவதற்குள் காற்றில் எரிவண்டுகளின் ஓசை எதுவும் மிச்சமில்லை. இறங்கிய வல்லூறுகள் வேலையை முடித்துவிட்டு மீண்டும் மலைப்பொடவை நோக்கி மேலேறின.

வல்லூறு ஒன்றின் அலகிலிருந்து உதிர்ந்த எரிவண்டின் இறகு ஒன்று முன்னால் ஓடிக்கொண்டிருந்த குறுங்கட்டியின் தோளிலே விழுந்தது. ஓடியபடியே அதனை எடுத்தான் உளியன். ‘இன்னும் சிறிதுநேரத்தில் பாரியின் வேட்டையும் இப்படித்தான் நிகழப்போகிறது. காற்றிலிருந்து கணநேரத்தில் எரிவண்டுகள் அகற்றப்பட்டதைப்போல, இக்காட்டிலிருந்து எதிரிகள் அகற்றப்படுவார்கள்’ என எண்ணியபடி ஓடினான். எரிவண்டு விரட்டியபொழுதைவிட கூடுதல் வேகங்கொண்டன மாணவர்களின் கால்கள்.

பின்னால் நடப்பது மட்டுமல்ல, முன்னால் தங்களை எப்படி நடத்திக்கொண்டிருக்கிறான் பாரி என்பதும் மாணவர்கள் அறியாததுதான். ஒரு கல் எறிந்து முடிநாகன் கூட்டைக் கலைத்தான். மறு கல் எறிந்து அந்த ஆபத்தைக் களைந்தான் பாரி. காட்டில் பிற எந்த ஆயுதத்தையும்விட வலிமைமிக்கது காடு பற்றிய அறிவுதான். அதில் பாரிக்கு இணைசொல்ல யாருமில்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P85e
இடைநில்லாது ஓடிவந்தவர்கள் ஆதிமலையின் இரண்டாம் மடிப்பை அடைந்தனர். கால்களுக்குச் சற்று ஓய்வு தேவைப்பட்டது. இளைப்பாறலாம் என நினைத்து மூச்சிரைக்க நின்றனர். ‘முடிநாகன் ஏன் இவ்வாறு நடந்துகொண்டான், மாணவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்’ என்ற எண்ணம் பாரியின் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. ‘எதிரிகள், தேக்கன்,  மச்சக்கடவு, எலிவால் முகடு என்று தனித்தனியாக அவர்கள் சொல்ல முயலும் முழுமையற்ற சொற்கள் எதைக் குறிக்கின்றன என்று சிந்திக்கும்போதெல்லாம் தேக்கன் கொடுக்கும் பயிற்சியின் எண்ணற்ற உத்திகள் எல்லாவற்றையும் விழுங்கி நிற்கின்றன.’

மாணவர்கள் இளைப்பாறட்டும் என்று நின்றுகொண்டிருந்த பாரி, நாற்புறக் காட்டையும் சுற்றிப் பார்த்தான். ஏதோவொரு திசையிலிருந்து மாறுபட்ட ஓசை  கேட்டது. மூன்றாம் மடிப்பின் இடப்புற மூலையில்தான் அது கேட்கிறது என்பதை அறிய முடிகிறது. என்ன ஓசை என்று கூர்ந்து கவனித்தான். `அது அழுகுரற் பறவையின் ஓசை. குத்துக்கல் பொடவுகளில்தான் அது தங்கும். அதனை யாரோ கலைத்துள்ளனர். இல்லையென்றால் இவ்வளவு ஓசை எழுப்பாது’ என எண்ணிய பாரி, ஓசையைக் கேட்டபடி அந்தத் திசையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். 

‘மூன்றாம் மடிப்பு முழுவதும் இருப்பது இரத்தச்சிலந்திகளின் காடு. எனவே, தேக்கன் இதற்குள் போயிருக்க மாட்டான். இக்காட்டைக் கடக்க வலப்புற ஓரத்தைப் பயன்படுத்த முடியாது. பெருஞ்சரிவுகளையும் பள்ளங்களையும் கொண்டது அவ்வோரம். இடப்புற ஓரத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். அப்பகுதியை நடந்து கடந்தால், அழுகுரற் பறவை ஏன் இப்படி கலைந்து கத்துகிறது?’ என்ற வினா தோன்றியபோது இன்னோர் எண்ணமும் தோன்றியது. ‘இரவுப் பயணத்தில் மாணவர்களில் யாரேனும் ஒருவன் குத்துக்கல் பொடவில் சரிந்து விழுந்திருப்பானோ? என்னவாயிருக்கும்? பெரும்பெரும் பிளவுகளைக்கொண்ட பள்ளமல்லவா?’ என்று எண்ணியபடி, “நீங்கள் இளைப்பாறிவிட்டு வாருங்கள், நான் முன்னே செல்கிறேன்” என்று சொல்லிவிட்டு  ஓடத்தொடங்கினான் பாரி.

பாரியின் கால்களைப் பார்த்தபடி இருந்த முடிநாகனின் முகத்தில் இதுவரை இல்லாத மகிழ்வு  பூக்க ஆரம்பித்தது. குனிந்து கால்முட்டியில் கை வைத்து மூச்சிரைத்தபடியே முணுமுணுத்தான், “தேக்கன் சொன்னதைச் செய்து விட்டேன்.”

தேக்கன் கணிப்பு மிக நிதானமாக இருந்தது. ‘அவர்கள் இரத்தச்சிலந்திகளின் காட்டுக்குள் இருந்து எளிதில் தப்பி வெளிவரமுடியாது. தன்னால் தாக்கப்பட்டவன் செயலற்றுப்போயிருப்பான். மீதமுள்ள நான்குபேரில் குறைந்தது இருவராவது சிலந்திகளால் தாக்குண்டு வீழ்ந்திருப்பர். அதற்குத் தப்பி ஒருவனோ, இருவரோதான் வெளியேற முடியும். அப்படி அவர்கள் வெளியேறும்போது மேற்பகுதியின் முனையில் வைத்து அவர்களை மறித்தடிக் கலாம். ஆனால், அவர்களின் உடல்வாகு பெரும்பலத்தோடு இருக்கிறது. எனது இடதுகை சேதமடைந்து இருக்கிறது. மாணவர்கள் எவ்விதப் பயிற்சியும் அற்றவர்கள். இந்நிலையில் அவர்களை வீழ்த்த வழியென்ன?’ என்று யோசித்துக்கொண்டே ஓடியவனுக்கு கருஞ்சுரைக் காயின் நினைவு வந்தது.

‘மாணவர்கள் வேறு எந்த ஆயுதத்தையும் பயன்படுத்து வதைவிட கவண் சுற்றி அடிப்பதைத் திறமையுடன்   செய்பவர்களாக  இருப்பார்கள். சிறுபிள்ளையிலிருந்து கவண் அடித்துப் பழகுவதால், மிக இயல்பாக அதில் தேர்ச்சி இருக்கும். கருஞ்சுரையைக் கவணில் வைத்து அடித்தால் என்ன?’ என்ற சிந்தனை தோன்றிய கணமே தேக்கனின் நம்பிக்கை பெருகத்தொடங்கியது. கருஞ்சுரைக்காய்க்குள் இருக்கும் பால், துளியளவு கண்ணில்பட்டாற்போதும்; கருவிழி உருகி ஓடிவிடும். மாணவர்களை, எதிரிகளின் முகம்நோக்கி அடிக்க வைத்துவிட முடியும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றது.

குத்துக்கல் பொடவுக்குள் கருஞ்சுரைக்கொடி படர்ந்துகிடப்பதைப் பலமுறை தேக்கன் பார்த்துள்ளான். அதனால்தான், அங்கு வந்து நின்று பிளவுகளை நோக்கி எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தான்.

பார்க்கவே அச்சங்கொள்ளவைக்கும் பெரும்பிளவுகள். பார்ப்பவனின் தலைசுற்றி உள்ளிழுக்கும் தன்மைகொண்டவை. ஏற்கெனவே ஓட்டத்தாலும், தாங்கிக்கொள்ள முடியாத கசப்பாலும் சற்றே மயக்க நிலையில்தான் மாணவர்கள் இருந்தனர். சிறிதுநேரம் இளைப்பாறவிட்டு எட்டிப்பார்க்க வைத்தான். காலைக்கதிரவனின் ஒளி பாறைப்பிளவுகளுக்குள் இன்னும் முழுமையாக ஊடுருவவில்லை. ‘ஆசான் ஏன் இதனைப் பார்க்கச் சொல்கிறார்?’ என்று புரியாமல் திகைத்தனர். அவரின் கண்கள் பொடவின் இடுக்குகளை அங்குமிங்குமாக உற்றுப்பார்த்துத் தேடிக்கொண்டிருந்தன. சற்றுநேரத்தில் அது கண்ணுக்குத் தட்டுப்பட்டது.

மாணவர்களை அழைத்துக் காண்பித்தார். “அதோ,அந்தப் பிளவுக்குக் கீழே பாறைவெடிப்புகளில் படர்ந்து கிடக்கிறதே, அதுதான் கருஞ்சுரைக்காய்க் கொடி. யாராவது ஒருவன் கீழே இறங்கி அதில் உள்ள காய்களைப் பறித்து வரவேண்டும்” என்றார்.

எல்லோருக்குள்ளும் தயக்கம் இருந்தது. ஆனாலும், தயக்கத்தை மீறி கீதானி தயாரானான். அருகில் விளைந்துகிடந்த கட்டுக்கொடியின் தூரை அறுத்து அவன் பிடித்து இறங்க வழிசெய்தனர். கீதானி உள்ளிறங்கினான். மேலே இருந்து அனைவரும் கொடியை இறுகப்பிடித்து இருந்தனர். தேக்கன் சற்றுத் தள்ளிநின்று பள்ளத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

கீதானி, பாறையின் செதில் பார்த்துக் கால்களைக் கவனமாகத் தூக்கிவைத்து இறங்கிக்கொண்டிருந்தான். சட்டென பொடவுக்குள் இருந்த அழுகுரற் பறவை ஒன்று சடசடத்து வெளியேறியது. ஒருகணம் கீதானி திடுக்கிட்டு மீண்டான். எழுந்த வேகத்தில் மேற்சென்ற அதன் அழுகுரல் எங்கும் கேட்டது. எளிதில் அது ஓய்வதாகவும் இல்லை. நடப்பதை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த தேக்கன் ஒரு கட்டத்தில் கீதானியைப் பார்த்துக் கையை மேல்நோக்கி அசைத்தார். மாணவர்கள் புரியாமல் விழித்தனர். ``அவன் மேலேறட்டும்” என்றார்.

‘பறவை எதிர்பாராமல் பறந்தபோது அவன் திடுக்கிட்டு அஞ்சியதால், தேக்கன் இம்முடிவெடுத்துவிட்டாரோ?’ என்று அவர்கள் நினைத்தனர். கீதானி இறங்குவதற்காகக் கால்தொடையில் கொடுத்திருந்த வலுவை  கைப்பிடிக்கு மாற்றி உன்னியபடி மேலேறி வந்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 P85f
அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்தார் தேக்கன். அவர் என்ன சிந்திக்கிறார் என்பது அலவனுக்கு மட்டும் புரிந்தது.

`கீழே கருஞ்சுரைக்காய்க்கொடி படர்ந்து கிடக்கும் இடமெல்லாம் ஈயல் புற்று கிடக்கிறது, தேக்கன் இப்போதுதான் அதனைப் பார்த்துள்ளார். நான் கீதானி இறங்குமுன்பே பார்த்துவிட்டேன்’ என்று மனதில் சொல்லிக்கொண்டான் அலவன்.

ஈயல் என்பது சிறகு முளைத்த மலையெறும்பு. மற்ற எறும்புகள் மண்ணுக்குள் துகள் எடுத்துப் புற்று உருவாக்குவதைப்போல, இது பாறைகளின் மேற்பரப்பை உரித்துப் புற்றமைக்கும். அதன் கொடுக்குகள் அவ்வளவு வலிமைமிக்கவை. அதுவும் ஏழுகண் வைத்துப் புற்றுக்கட்டக்கூடியவை. எந்த உயிரினமாவது அதற்கு ஆபத்து விளைவிக்கப்போகிறது என்று தெரிந்தால், ஒரே நேரத்தில் புற்றின் ஏழுகண்களிலும் இருந்து அவை பீச்சியடித்துக்கொண்டு வெளியில் வரக்கூடியவை. `ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று பாம்பின் சீற்றம்போல இறகடித்து வந்து மொய்க்கத் தொடங்கினால், உயிரினங்கள் எவையும் தப்பித்து வெளியேற முடியாது. பாறைகளையே உரிக்கும் கொடுக்குகளுக்குச் சதைகளைச் சிதைத்தெடுக்க அதிகநேரம் தேவைப்படாது.

கருஞ்சுரைக்காய் இப்போது அவசியத்தேவை. ஆனால், அதனைச்சுற்றி ஈயல் புற்று இருக்கிறது. என்ன செய்யலாம் எனத் தேக்கன் சிந்தித்தபோது கொடியைத் தனது இடுப்பிலே கட்டிக்கொண்டிருந்தான் அலவன்.
 
அவன் நஞ்சுமுறி உள்ளவன். ஈயலின் நஞ்சு அவனை ஒன்றும் செய்யாது. ஆனால், மிகக் கவனமாக எடுத்துவிட்டு வெளியேற வேண்டும். ஏனென்றால், அதன் கொடுக்கின் தாக்குதலுக்கு அலவனும் தப்பிக்க முடியாது. அதனால்தான், அலவனைக் கீழே இறக்க தேக்கன் தயங்கினான். ஆனால், வேறுயாரும் நெருங்கக்கூட முடியாத நிலையில், தான் இறங்குவதுதான் பொருத்தம் என முடிவுசெய்து கீழிறங்கினான் அலவன்.

இரத்தச்சிலந்திகளின் கால்கள் மனித உடலில் பட்டால் போதும்; பட்ட இடமெல்லாம் கணநேரத்தில் கொப்புளங்கள் பெருகத் தொடங்கும். அதன் காற்கொடுக்குகள் உள்ளேறி துடிதுடிக்க வைத்துவிடும்.

வேகமாக ஓடுவது முக்கியமல்ல, கவனமாக இதனிடமிருந்து தப்பிப்பதுதான் முக்கியம். காலம்பன், செடிகொடிகளை விலக்குவதை மிகக் கவனமாகச் செய்துகொண்டிருந்தான்.

“அவர்கள் நம்மைப் பார்த்துவிட்டார்கள். இவ்வளவு மெதுவாகச் சென்றால் வெளியேறும்போது சூழ்ந்துவிட மாட்டார்களா?” என்றான் மற்றொருவன்.

அடங்காச் சினத்தோடு இருந்த காலம்பன் சொன்னான், ``தனிமனிதர்கள் நம்மை என்ன செய்துவிடமுடியும்? அதுவும் குருதிநாளங்களில் வெறியேறியிருக்கும் இந்த நிலையில்.”

மிகக் கவனமாகக் கருஞ்சுரையின்  மூன்று காய்களைப் பறித்தான் அலவன். பாறையின் மீதிருந்து கண்ணிமைக்காமல் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தனர் அனைவரும்.

ஈயல்கள் அங்குமிங்குமாக ஒன்றிரண்டு பறந்துகொண்டிருந்தன. சில ஈயல்கள் புற்றுகளுக்கு உள்ளே போவதும் வெளியேறுவதுமாக இருந்தன. பறித்த காயைக் கவனமாக இடுப்புத்துணியிலே கட்டியபடி புற்றின் அப்பக்கம் எட்டிப்பார்த்தான் அலவன். அதன் ஒரு கண்ணுக்குள் பாம்பொன்று நுழைந்துகொண்டிருந்தது. ‘ஈயல் புற்றுக்குள் பாம்பு போகாதே, இது எப்படிப் போகிறது?’ என்று யோசிக்கும்போதுதான் அவனுக்குப் பிடிபட்டது, ஈயல் தனது இரைக்காகப் பாம்பைக் கொன்று உள்ளே இழுத்துச்செல்கிறது என்று. ஒருகணம் மனம் அதிர்ந்தது. அவன் கண்களில் நீல வளையங்கள் பூத்து அடங்கின. ‘விரைவாக மேலேறுவோம்’ என முடிவுசெய்து கையைக் காட்டியவுடன் மேலே இருந்தவர்கள் கொடியை சரசரவென இழுக்கத் தொடங்கினர்.

அவன் மேலேறிய வேகத்தில் இன்னோர் அழுகுரற் பறவை கத்திப் பறக்கத் தொடங்கியது. இதன் குரல் முன்னதைவிட அதிகமாக இருந்தது. அழுகுரற் பறவையின் ஓசையினாலோ, வேறுகாரணத்தினாலோ ஒன்றிரண்டு ஈயல்கள் மேல்நோக்கி வரத்தொடங்கின. அலவன் படுவேகமாக மேலேறி வந்துகொண்டிருந்தான்.

பாரி, குத்துக்கல் பொடவை நோக்கி ஓடிவரும்போது அழுகுரற் பறவையின் ஓசை மீண்டும் கேட்டது. “ஏன் மீண்டும் மீண்டும் இது கத்துகிறது? அங்கு என்னதான் நடக்கிறது” எனக் குழம்பிக்கொண்டிருக்கையில் வலப்புறக்காட்டுக்குளிருந்து உயிர் போக ஒரு மனிதன் கத்தும் ஓசை கேட்டது.

ஓடிவந்துகொண்டிருந்த பாரி இருபுறமுமிருந்து வந்த ஓசைகளைக் கேட்டு திகைத்து நின்றான். அழுகுரற் பறவையின் குரலைவிட கதறும் மனிதக்குரல் அவனது கவனத்தை ஈர்த்தது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 3:15 pm

லிவால் முகட்டின் செங்குத்தான ஏற்றத்தில் விரைந்துகொண்டிருந்தன பாரியின் கால்கள். வேட்டைவிலங்கின் காலடியைப்போல மண்ணில் கால்பாவாமல் விரைந்துகொண்டிருந்தன.

எவ்வியூரில் புறப்பட்டதிலிருந்து கற்றுத்தருதலிலேயே கவனம்கொண்டிருந்தான் பாரி. மாணவர்கள் எவ்வளவு முயன்றும் அவனை வேகங்கொள்ளச்செய்ய முடியவில்லை. எரிவண்டைக்கொண்டு அவனது ஓட்டத்தை வேகப்படுத்தினான் முடிநாகன். கருங்கொண்டை வல்லூறுகொண்டு அதனை மட்டுப்படுத்தினான் பாரி. அதன்பின் அழுகுரற் பறவையின் குரல் கேட்டு ஏதோ ஆபத்து என உணர்ந்தான். ஆனால், இப்பொழுதோ அந்த ஆபத்து என்னவென்று கண்ணெதிரே பார்த்துவிட்டான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p1
தேக்கன் அடித்துத் தூக்கி வீசப்பட்டதைப் பார்த்த கணத்தை இப்பொழுதுவரை நம்பமுடியவில்லை. அவர்களின் தாக்குதல் வேகத்தில் மாணவர்கள் காற்றில் பறந்தார்கள். பெருங்கூடைகளில் தெய்வவாக்கு விலங்கை அள்ளிக்கொண்டு பறம்பின் காடுகளுக்குள் யாரோ ஓடிக்கொண்டிருக்கிறார்கள். கண் பார்ப்பதை நம்பமுடியாத கணத்தில் கால்களின் வேகம் கட்டுக்கடங்காமல் இருந்தது.

அடர்காட்டுக்குள் மனிதக்குரல் கேட்டபொழுது பாரியின் அய்யம் தீர்ந்தது. ‘இரத்தச்சிலந்தி இருக்கும் இக்காட்டுக்குள் தேக்கன் மட்டுமல்ல, பறம்பு மக்கள் யாரும் போக மாட்டார்கள். அதற்குள் மனிதக்குரல் கேட்கிறது என்றால் வெளியில் இருந்து எவனோ உள்ளே நுழைந்திருக்கிறான். வந்தவன் ஒருவனாக இருந்தால் தேக்கன் நம்மை அழைத்துவர மாணவர்களை அனுப்பியிருக்க மாட்டான். அவர்கள் பல பேராக இருக்க வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டே குத்துக்கல் பொடவை நோக்கி ஓடினான் பாரி.

கருஞ்சுரைக்காயை எடுத்தபின் ஆதிமலையின் முகட்டை அடைந்தான் தேக்கன். அடர்காட்டுக்குள் மாட்டியிருக்கும் எதிரிகள் எப்படியும் இத்திசையில்தான் வெளியேற வேண்டும். வெளியேறிய கணத்தில் மாணவர்கள் அவர்களின் முகம் பார்த்து கவண் எறிய வேண்டும் என்று சொல்லி, ஈட்டியை இறுகப்பிடித்து ஆயத்தமாக இருந்தான். ஆனால், தேக்கனின் அதிர்ச்சி அவர்கள் வெளிவந்த கணத்திலேயே தொடங்கியது. ஒருவனைத் தவிர மற்ற நால்வரும் காட்டைவிட்டு வெளியே வந்தனர். ‘இரத்தச்சிலந்திகள் இருக்கும் காட்டை எப்படி இவர்கள் கடந்தனர்’ என்ற அதிர்ச்சி தேக்கனைச் சற்றே தாமதிக்க வைத்தது.

காட்டைவிட்டு வெளியேறிய கணத்தில் தாக்குதலைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற எதிர்பார்ப்போடு வந்த காலபன், தேக்கன் ஈட்டியெறியும் முன் தனது வளைத்தடியைச் சுழற்றினான். கண்ணிமைக்கும் நேரத்தில் அது தேக்கனின் கழுத்துக்கு வந்தது. கவனமாய் அதனைத் தட்டிவிட்டு விலகினான். திசைக்கு ஒன்றாய் நின்ற மாணவர்கள் கவண் வீசத் தொடங்கிய அந்தக் காட்சிதான் தொலைவில் ஓடிவந்துகொண்டிருந்த பாரியின் பார்வையில் முதலில் பட்டது.வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p2

அவர்கள் தேக்கனைத் தாக்கிய வேகத்தையும் மாணவர்களைச் சுழற்றி வீசியதையும் பார்த்தபடியே வெறிகொண்டு ஓடிவந்தான் பாரி. மலைச்சரிவில் பாறைகள் உருண்டன. மடுவன் வீசிய கவணிலிருந்து பறந்த கருஞ்சுரைக்காய் ஒருவனின் முகத்தில் அடித்துத்தெறித்த கணத்தில்தான் அந்த இடத்தை அவர்கள் சூறையாடினார்கள். அடிபட்டவன் முகத்தை மூடியபடி கதறிக்கொண்டு பாறையில் மோதி மண்ணில் உருண்டான்.

பறம்புநாட்டின் ஆசான், பகிரியை வேட்டையாடிய பெருவீரன், எத்தனையோ மாணவர்களைக் காடறிய அழைத்துச்சென்று மாவீரர்களாக உருவாக்கியவன், தனியொருவனாக எவ்விலங்கினையும் வீழ்த்தும் ஆற்றல்கொண்ட தேக்கன் தனது முழு ஆற்றலையும் திரட்டி மோதினான். ஆனால், அவனது ஆற்றல் முழுவதும் தற்காத்துக்கொள்ளவே போதுமானதாக இருந்தது. சூழப்பட்ட எதிரிகளின் வலிமை ஒப்பிட முடியாததாக இருந்தது. அவர்களின் தாக்குதலை உள்வாங்கியபடி மனம் அவர்களின் திறனைக் கணித்துக்கொண்டிருந்தது. ஆனால், உடலோ தூக்கிவீசப்பட்டுக்கொண்டிருந்தது.

பாரி இடம் வந்து சேர்ந்தபொழுது எல்லாம் முடிந்திருந்தது. கருவிழி ஒழுகி துடித்துக் கதறிக்கொண்டிருந்த ஒருவனின் முதுகில் இருந்த பெருங்கூடையை அறுத்து எடுத்தனர் மாணவர்கள். தேவவாக்கு விலங்கின் அடங்காத  கத்தலும், தூக்கிவீசப்பட்ட மாணவர்களின் வேதனைக்குரலும், கருவிழி கலங்கியவனின் கதறலும் எங்கும் எதிரொலித்துக்கொண்டிருந்தன.

ஆதிமலையின் முகட்டைக் கடந்த அவர்கள் சிறிது தொலைவு போவதற்குள், முகட்டின் பின்புறச் சுனையில் பதுங்கியிருந்த ஏழுபேர் அவர்களுடன் இணைந்துகொண்டனர். அவர்களின் ஓட்டம் மர இடுக்குகளுக்குள் மறைந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p3
தாக்குதல் முடிந்ததும் வந்துசேர்ந்த பாரி கணநேரமும் தாமதிக்காமல் துடித்துக் கிளம்பினான். கிளம்பிய வேகத்தில் அவனை இறுகப்பற்றி நிறுத்த முயன்றான் தேக்கன். தேக்கனின் செயலுக்குக் காரணம் புரியாமல் பாரி திகைத்தபொழுது, தேக்கனின் வாய் முணுமுணுத்தது “அவர்கள் பலர், நீ ஒருவனாகப் போகவேண்டாம்.”

தேக்கனின் சொல் பாரியை நிலைகுலையச்செய்தது. “பறம்பின் ஆசானா இப்படிப் பேசுவது? நான் ஒருவனா? இது எனது காடு. மரமும் செடியும் கொடியும் விலங்கும் இருக்கிற இக்காட்டில் நான் எப்படித் தனியனாவேன்?”

பிடித்த கையை உதறித்தள்ளிய பாரியின் ஆவேசம் பார்க்க முடியாத பெருஞ்சினங்கொண்டிருந்தது. ஓடினான் பாரி. காடதிர, காற்றதிர, கண்ணில் வெறிகொண்டு ஓடினான். பறம்பு நாட்டின் தேவவாக்கு விலங்கைத் தூக்கிக்கொண்டு ஆதிமலையை ஒரு கூட்டம் கடந்துவிட்டதென்ற உண்மையைக் கொன்று புதைக்க ஓடினான். எவ்விலங்கின் ஓட்டத்தையும் விஞ்சக்கூடியவன் வேள்பாரி. காட்டின் எத்தரையிலும் முழுவேகத்தோடு ஓடக்கூடிய விலங்கு எதுவுமில்லை. ஒவ்வொரு விலங்குக்கும் ஓட்டம் உச்சங்கொள்ளும் இடமும் உண்டு; ஊனங்கொள்ளும் இடமும் உண்டு.

எவ்வளவு வேகமாக பாய்ந்து வந்தாலும் கமரிப்புல் இருக்கும் காட்டில் வரிப்புலி காலடி எடுத்து வைக்காது. முக்கொற்றிக்கோரை முளைத்துக்கிடக்கும் தரையில் வேங்கைப்புலி கால் பதிக்காது. முசுறுப்புல் காட்டில் பாம்பு நகராது. வாட்கோரைக்குள் மான் ஓடாது. ஒவ்வொரு விலங்கின் ஓட்டத்துக்கும் நகர்வுக்குமான அடிப்படை முளைத்துக்கிடக்கும் செடிகொடிகளிலும் இருக்கிறது. பறம்பின் எந்த நிலத்திலும், எந்தப் புதரிலும் எந்தக் காட்டிலும் வேகங்குறையாமல் ஓடக்கூடியவன் வேள்பாரி. அவனது பாதத்தின் அகலமும் தோள்களின் வலிமையும் இணையற்றவை. பிடரிமயிர் சிலிர்க்க ஓடும் பாரியின் ஓட்டத்தை மறித்து நிற்கும் உயிர் எதுவும் பறம்புக்காட்டுக்குள் இதுவரை இல்லை.

ஓடிக்கொண்டிருந்த எதிரிகள் எதிர்த்திசைக் காட்டை நோக்கி ஓடாமல் வலப்புறச் சரிவை நோக்கி இறங்கத் தொடங்கினர். யாராவது பின்தொடர்ந்துவந்தால் அவர்களைத் திசைமாற்றவே இத்தந்திரத்தைச் செய்தனர். அவர்கள் தங்களின் வழியை மாற்றிவிட்டனர் என்பதைச் சிறிதுநேரத்திலே கண்டறிந்தான் பாரி.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p5
சிவப்புமூக்கு ஆக்காட்டி வலப்புற ஓடையின் பக்கம் நெடுநேரம் குரல்கொடுத்துக்கொண்டிருந்தது. அவர்கள் அப்பக்கம் திரும்புவார்கள் என யாரும் எதிர்பார்க்க முடியாது. அத்திசை நோக்கி படுவேகமாகப் பாரி இறங்கினான்.

‘எலிவால் முகட்டில் மோதல் நடந்தபொழுது மூன்று பேராக இருந்தவர்கள் இப்பொழுது எப்படி எண்ணற்றவர்களாக மாறினர். முகட்டின் கீழ்த்திசையில் ஏன் மறைந்திருக்க வேண்டும்? அப்படி என்றால் இன்னும் எத்தனை பேர் மறைந்துள்ளனர்?’ மனதில் வினாக்கள் அடுத்தடுத்து எழுந்துகொண்டிருந்தபொழுது அதற்கான விடையைக் கண்டறியும் முன்னே அடுத்த வினா எழுந்து வந்தது.

‘எலிவால் முகட்டைக் கடந்து கீழ்ப்புறம் இறங்கியவர்கள் அதற்குள் எப்படி முகட்டின் அடிவார ஓடையை அடைந்தார்கள்? தேக்கனிடம் சில சொற்களைப் பேச மட்டுமே நான் நேரஞ்செலவிட்டேன். ஆனால், அவர்கள் அதற்குள் ஓடைக்குப் போய்விட்டார்கள் என்றால் அவர்களின் வேகம் நினைத்துப் பார்க்க முடியாதபடி இருக்கிறது. தேக்கனும் மாணவர்களும் இணைந்து தாக்குதல் தொடுத்தபின் வேகத்தை இன்னும் கூட்டியுள்ளனர். என்ன கூட்டினாலும் என்ன; அவர்கள் பறம்பின் காட்டுக்குள்தானே ஓடிக்கொண்டிருக்கின்றனர்.’

பாரியின் மனம் எதிரிகளைப் புரிந்துகொள்ளவும் அவர்களின் வேகத்தைக் கணிக்கவும் தனது தாக்குதலுக்கான முறையை உருவாக்கவும் முயன்றுகொண்டிருந்தபொழுது, அவனது கால்கள் ஏறக்குறைய பறந்துகொண்டிருந்தன.

கீழ்த்திசை ஓடையை அவன் அடைந்தான். காட்டோடையில் நீர் பெருகி ஓடியது. ஓட்டத்தின் வேகம் முழுமையாக அறுந்தது. ஓடையை நீந்திக்கடந்தான். அவர்கள் வெகுநேரத்துக்கு முன்னமே ஓடையின் மறுகரைக்குப் போய்விட்டனர். அது அடர் மரங்களற்ற காடு. புல்மேவிய இரு குன்றுகளைக்கொண்டது.  ஓடுவதற்கு ஏற்ற நிலவாகு. பாரி கரையேறும் முன்னே அவர்கள் கண்பார்வையில் இருந்து மறைந்துவிட்டனர்.

`எதிரிகளின் ஆற்றல் ஓட்டத்தில் இருக்கிறது. அடர்ந்த மரங்களுக்கிடையிலே இவ்வளவு வேகமாக ஓடக்கூடியவர்கள், புதர்களற்ற நிலப்பரப்பில் இன்னும் விரைவுகொள்வர். அதுவும் தங்களைப் பறம்பினர் கண்டறிந்துவிட்டனர் என்பதனால் கட்டுக்கடங்காத வேகங்கொள்வர். அதனைத் தடுக்க என்னவழி?’ என்று சிந்தித்தபடியே கரையில் அடர்ந்து கிடக்கும் காட்டு மரங்களுக்கிடையே புகுந்து வெளியேறினான்.

வெளியேறிய இடத்தில் முடிச்சிட்டுக் கிடந்த பெருவேர்களைத் தாவிக்கடந்தபொழுது அவன் கண்ணிற்பட்டதொரு செடி. சட்டென ஓட்டத்தை நிறுத்திப் பெருமுடிச்சுகளை நோக்கித் திரும்பினான்.

மரவேர்களின் கீழ்ப்பக்கம் முளைத்துக் கிடந்ததைப் பார்த்ததும், மனதின் ஆழத்துக்குள் இருந்து சிறு மகிழ்ச்சி மேலேறி வரத் தொடங்கியது. மர வேர்களின் இடப்புறம் அனுவல்லிப்பூண்டு விளைந்து கிடந்தது.

சற்றே நின்று மூச்சுவாங்கினான். அதன் இலைகளை எடுத்து உண்போமா, வேண்டாமா என முடிவெடுக்கச் சிறிது தயங்கினான். அனுவல்லிப்பூண்டின் இலை மனிதனை மூர்க்கம் கொள்ளவைக்கும். இரத்த ஓட்டத்தைக் கூட்டி வெறியேற்றும். உடலுக்குள்ளிருக்கும் ஆற்றலின் விசையை பெருந்தீயெனக் கிளர்த்திவிடும். அவனது சிந்தனை என்னவாக இருக்கிறதோ அதனை நோக்கி பெருவேகத்தில் உடலை ஏவும். எனவே அதனை உட்கொள்வதில் மிகக்கவனம் தேவை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p4
ஏற்கெனவே உடலெங்கும் வெறிகூடிக்கிடந்த பாரி சற்றே சிந்தித்து ஒரு சில இலைகளை வாயில் போட்டுக்கொள்வோம் என நினைத்து அதன் ஒரு தண்டினை இழுத்தான். மொத்தச்செடியும் கையோடு வந்தது. எண்ணத்தின் வேகம் அப்படி இருக்கிறது என்பதை உணரமுடிந்தது. ஓரிரு இலைகளை மட்டும் பறித்து வாயிற்போட முனைந்தான். அப்பொழுது அருகில் இருந்த பாறையின் பின்புறம் மூச்சிரைக்கும் சிற்றோசை கேட்டது. ஏதோவொன்று இளைப்பாறுகிறது என நினைத்தான். ஆனால், ஓசையின் தன்மை சற்று மாறுபட்டிருந்தது. என்னவென பார்க்க பாறையின் பின்புறம் தலையை நீட்டினான்.

அங்கு சுண்டாப்பூனைகள் இரண்டு கலவி கொண்டிருந்தன. உச்சநிலையில் இயங்கிக் கொண்டிருந்த அவற்றின் கண்களைப் பாரியின் கண்கள் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தன. பன்றிப்பல்லினைப்போல் நீண்டு வளைந்த அவற்றின் பற்கள் வெளித்தெரிய  மூர்க்கமேறிச் சினந்துகொண்டிருந்தன. பார்த்தபடி அனுவல்லிப்பூண்டின் இலைகளை ஒவ்வொன்றாய் மென்றுகொண்டிருந்தான். ஆண்பூனையின் மூக்கின் முனையில் இருந்த துடிப்பும் ஆவேசமும் பாரியின் முகத்திலும் இருந்தன.

அவன் அம்முடிவையெடுப்பது என உறுதி கொண்டபொழுது பறித்த செடியில் இலைகள் எவையும் மிஞ்சவில்லை. அவனது வேகமும் வெறியும் அப்படி இருந்தன. அவை இயங்கி முடிக்கும் கணத்துக்காகக் காத்திருந்தான்.

அவை தமது பணியை முடித்துவிட்டன என்று அவன் முடிவுசெய்த கணம், வலதுகால் அருகிருந்த கல்லை எத்திவிட்டது. அந்தக் கல் கீழிருந்த பெண்பூனையின் முன் நெற்றியில் பட்டுத்தெறித்தது. சற்றே கண் சொருகியிருந்த அது இத்தாக்குதலால் வெகுண்டபொழுது மேலிருந்த ஆண்பூனை நிலைதடுமாறிச் சரிந்தது. இரண்டின் கண்களுக்கும் முன்னால் பாரி.

கலவி முடிந்ததும் உருவாகும் தீராப்பசியோடு சீண்டிவிடப்பட்ட சினமும் சேர்ந்தது. இரண்டும் நின்றுகொண்டிருப்பவனைத் தாக்க பாயத் தொடங்கியபொழுது, அவன் தனது வேலையைக் காட்டத்தொடங்கினான். கால்கள் முன்பாய்ந்து ஓடத்தொடங்கின. சுண்டாப்பூனையின் வெறி கணக்கில்லாத மடங்கு பெருகியது.

சீண்டலின் உச்சத்துக்கு இரு பூனைகளும் உள்ளாயின. சுண்டாப்பூனையின் மூர்க்கமும் அனுவல்லிப்பூண்டின் இலைகள் கிளர்த்திய மூர்க்கமும் காற்றைக் கிழித்து, காட்டை அதிரச்செய்தன. பாரியும் வெறிகொண்ட இருவிலங்குகளும் ஓடிய வேகம் இதுவரை காடு பார்த்திராதது. ஓட்டத்தின் வேகம் கூடக்கூட சுண்டாப்பூனைகளின் வெறி மேலேறியபடியே இருந்தது.  காலைப்பொழுதில் தொடங்கிய கலவி இவ்வுச்சிப்பொழுதில்தான் முடிவுக்கு வந்தது. உடல் மொத்தமும் இடைவிடாது இயங்கி முடித்ததும் அடிவயிறெங்கும் பற்றியெழும் பசிநெருப்பு அவற்றின் மூர்க்கத்தை எண்ணிலடங்காத மடங்கு அதிகப்படுத்தியது. கல்லாலடித்துச் சீண்டிவிட்டு, சீண்டியவனின் கால்கள் நிற்காமல் ஓடும்பொழுது அவை இதுவரை இல்லாத சினமும் சீற்றமும் மிக்கவைகளாயின.

காடறிய அடிநாக்கில் நஞ்சுக்கசப்பை உள்வாங்கிய மாணவர்கள் நேற்றிருந்து ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். கொடும் நஞ்சு இடைவிடாமல் அவர்களின் தொண்டைக்குள் சுரந்துகொண்டே இருக்க என்னவொரு வேதனையை அவர்கள் அனுபவித்திருப்பார்கள். வீரகுடி ஆசானை அடித்துத் தூக்கிப்போட்டு தேவவாக்கு விலங்கைத் தூக்கிச்செல்லும் வலிமை இவ்வுலகில் யாருக்கோ இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வதும் செத்துமடிவதும் ஒன்றுதான். பறம்புநாட்டின் அடையாளத்தை எடுத்துச்செல்லும் இவர்களின் உயிர் இன்னும் பறம்பின் எல்லைக்குள்தான் இருக்கிறது என்பதை சகித்துக்கொள்ள முடியாத கோபமும் வெறியும் பாரியைக் கட்டுக்கடங்காத ஆவேசங் கொள்ளச்செய்தன.

ஓட்டத்தின் வேகத்தைச் சரிந்துகிடக்கும் நிலமும் படர்ந்துகிடக்கும் செடிகொடிகளும் முடிவுசெய்கின்றன. சுண்டாப்பூனைகளின் முதுகெலும்பு வில்லைப்போல வளைந்து நீள நான்குகாற்பாய்ச்சலில் ஓடிவந்து கொண்டிருந்தபொழுதும் அவற்றால் நெருங்க முடியாத வேகங்கொண்டு பாரி ஓடுவதற்குக் காரணம், கண்ணுக்கு முன்னால் ஓடும் எதிரிகளும் கண் தெரியாத வெறியை உருவாக்கிய அனுவல்லிப்பூண்டுமே. விலங்குகள் தங்களின் இரை நழுவிப்போகும் காலம் நீளுகையில் இயல்பிலே பல மடங்கு ஆவேசத்தை அடைகின்றன. சுண்டாப்பூனைகள் இவ்வளவு வேகங்கொள்வதற்கு அதுதான் காரணம். பாரி அவற்றைவிட வேகமெடுத்து ஓடிக்கொண்டிருப்பதற்கும் அதுதான் காரணம். இப்பொழுது அவனது மனமும் செயலும் விலங்கினும் கொடுஞ்சினம் கொண்டிருந்தன.

அதையும் கடந்து ஒருவேளை சுண்டாப்பூனைகள் அவன்மீது பாயுமேயானால் இடுப்பில் இருக்கும் இரு கத்திகளும் அவற்றின் கீழ்த்தொண்டையில் இறங்க ஆயத்தமாகத்தான் இருந்தன. ஆனால், பாரி அதனைச் செய்யப்போவதில்லை. ஏனென்றால் விரட்டிவரும் இரண்டும் அவனுடைய இரையல்ல, ஆயுதங்கள்.

காமத்தில் ஏறிய வேகங்குறையாமல் அவற்றை இழுத்து வந்துகொண்டிருப் பதற்குக் காரணம், அதே வேகத்தோடு வேட்டையில் இறக்குவதற்காகத்தான். சுருள்வால் கொண்ட சுண்டாப்பூனையின் பன்றிப்பற்களும் நீள்வளைவு நகங்களும் பறம்பின் தரப்புக்காகக் களமிறங்கப்போகின்றன. தீராத காமம் தீரும்பொழுது கிடைக்கவேண்டிய உணவுக்கான விருந்துக்கு அழைத்துச்சென்றான் வேள்பாரி.

இதோ... விருந்து மிக அருகில் வந்துவிட்டது. அவன் அழைத்துவரும் விருந்தாளிகள் அதனைவிட அருகில் வந்து விட்டன. முன்னால் ஓடிக்கொண்டிருப்பது வேட்டை உணவு, பின்னால் வந்துகொண்டிருப்பன வேட்டை விலங்குகள். இரண்டுக்கும் இடையில் விட்டுவிலகும் சரியான கணத்தை, முன்வைத்த கால்விரல்கள் தீர்மானித்தன.

பாரி இடப்புறப்பள்ளம் நோக்கி எவ்விப்பாய்ந்து சரிந்த கணத்தினை சுண்டாப்பூனைகளால் நினைவுகொள்ள முடியாமல் இருந்ததற்குக் காரணம், கையளவு தொலைவில் ஓடிக்கொண்டிருந்த எண்ணற்ற மனிதர்களின் ஓட்டம். சரிவில் உருண்டு, வேர்கள் பிடித்து, இங்குமங்குமாக தூக்கிவீசப்பட்டு, அடிப்பள்ளத்தில் பாரி நிலைகொண்டபொழுது மேலே வேட்டை முழுவேகத்தில் நடந்துகொண்டிருந்தது. சுண்டாப்பூனைகளின் ஆவேசத்துக்கும் ஆற்றலுக்கும் இரை எதுவும் மிஞ்சாது.

கதறலும் தாக்குதலும் உச்சத்தில் நிகழ்ந்தன. எதிரிகள் என்னவென்றே கணிக்கமுடியாதபொழுது நிகழ்ந்த தாக்குதல் இது.  ஓசைகள் காற்றைக்  கிழித்துக்கொண்டிருந்தன. உயிர்போகும் கதறலும் ஆவேசங்கொண்ட கூக்குரலும் எங்கும் எதிரொலித்தன.

எத்தகைய ஆயுதத்தைக்கொண்டு தாக்கினாலும் இவ்வளவு வலிமைகொண்ட எதிரிகளின் கூட்டத்தை தனியொருவன் அழிப்பது எளிதன்று. பாரி இக்கூட்டத்தை அழிக்க, காட்டின் வலிமை மிகுந்த ஆயுதத்தை ஏவியுள்ளான். எந்தவொரு எதிரியாலும் நினைத்துப்பார்க்க முடியாத தாக்குதலாக இது இருக்கப்போகிறது.

சுண்டாப்பூனையின் முன்வளைந்த பன்றிப்பள்ளும் முனைநீண்ட அதன் கால்நகங்களும் ஓடிக்கொண்டிருப்பவர்களின் மேலே ஒருமுறை பட்டாற்போதும், அதன்பின் அவன் கொட்டும் குருதிக்கு அளவேதும் இருக்காது. 

அதுவும் பழக்கப்படுத்தவே முடியாத காட்டுவிலங்குகளை வைத்து நிகழ்த்தும் தாக்குதலை எதிர்கொண்டு மீள்வது எளிதல்ல. வேட்டை நாயைத் தவிர வேறு எவ்விலங்கையும் மனிதனை நோக்கி ஏவ முடியாது. அதுவும் இப்பயங்கர விலங்கை எப்படி ஏவினார்கள் என்ற திகைப்பு அடங்குமுன் அவர்களின் உயிர்மூச்சு அடங்கியிருக்கும்.

பாறையின் மேற்புரத்தில் கேட்டுக்கொண்டிருந்த பேரோசை கொஞ்சங்கொஞ்சமாகக் குறையத்தொடங்கியது. வேட்டை முடிவுக்கு வந்ததை எழும் ஓசைகள் சொல்லின. பாரி மேலேறிவர முடிவெடுத்தான். குருதி மிதக்கும் குளம்போல இருக்கும் அந்த இடத்தைக் காண திண்டுகளையும், வேர்களையும் பிடித்து மேலேறி வந்தான். ஒரு போர்க்களத்தின் உள்ளங்கையைப்போல் அவ்விடமிருந்தது.

இங்குமங்குமாகப் பலரும் சிதறிக்கிடந்தனர். அருகில் குடல்சரிந்து ஒரு சுண்டாப்பூனை கிடந்தது. இன்னொன்று  தப்பியோடியிருக்க வேண்டும். ஒரு கூடையைக் கடித்து இழுத்துள்ளதால் அதிலிருந்த தேவவாக்கு விலங்குகள் வெளியில் சிதறியிருக்கின்றன. அவற்றைத் தப்பியோடிய பூனை விழுங்கி முடித்திருக்க வேண்டும்.

குருதிக்களம்விட்டு பார்வையை நகர்த்தி அடுத்த குன்றைப் பார்த்தான் பாரி. தப்பித்த மூவர் சற்றுத்தொலைவில் நடுமலையின் விளிம்பை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள். மூவரின் தோள்களிலும் கூடைகள் இருந்தன. ஆவேசங்கொண்ட சுண்டாப்பூனைகளின் தாக்குதலையும் மிஞ்சி ஓடும் மூவரைப் பாரியின் கண்கள் வியப்புற்றுப் பார்த்தன.

ஏழுபேரைப் பலிகொடுத்தாலும் தூக்கிய மூன்று கூடைகளை விட்டுவிடாமல் அவர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றனர். பாரி மீண்டும் ஓடத் தொடங்கினான். எதிரிகளின் ஆற்றல் நம்பமுடியாதபடி இருந்தது. இவ்வளவு தாக்குதலுக்குப் பின்பும் அவர்களின் வேகம் குறையாமல் இருந்ததை அவனது கண்கள் கணித்துக்கொண்டிருந்தன. உடன் வந்தவர்களில் பெரும்பான்மையோரின் மரணம் அவர்களின் வேகத்தைச் சிறிதும் தளர்த்தவில்லை.

அவர்களின் உடலும் மனமும் எதனையும் பொருட்படுத்தாத வேகங்கொண்டிருக்கின்றன என்று அவனுக்குத் தோன்றியது. மீண்டும் அவன் ஓடத் தொடங்கினான். நடுமலையின் உச்சிக்கு வந்தான். அவன் கண்ணுக்கு முன்னால் தேவவாக்கு விலங்கை எடுத்துக்கொண்டு மூவர் நடுமலையின் முகட்டைக் கடந்திருந்தனர். அவர்கள் கீழிறங்கிய இடம் மனிதனால் சற்றும் நகரமுடியாத பெரும் மலைப்பள்ளத்தாக்கு. இதில் மிகமிகக் கவனமாகவே கால்களை நகர்த்தமுடியும். வேர்களையும் பாறையிடுக்குகளையும் பிடித்தபடியே இறங்கவேண்டும். இப்பகுதி முழுவதும் இப்படித்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p6
பொழுது மங்கத்தொடங்கிய நேரம் அவர்கள் பாறைகளின் இண்டு இடுக்குகளின் வழியே கவனமாக இறங்கிக்கொண்டிருந்தனர். பொருத்தமான இடத்தில் நின்று அவர்களைக் கவனிக்கத் தொடங்கினான். இப்பொழுது அவர்கள் மூன்று பேராக இல்லை. நிறைய தலைகள் தெரிந்தன. பாறையின் இடுக்குகளில் காத்திருந்தவர்கள் மீண்டும் இணைந்துவிட்டனர் என்பது புரிந்தது.வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p7

மூச்சிரைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தான். கண்களுக்கு முன்னால் வேட்டை தப்பித்துப் போய்க்கொண்டிருந்தது. சுண்டாப்பூனைகளை வீழ்த்திவிட்டுத் தப்பிப்போகும் மனிதர்களை அவனது கண்கள் முதன்முறையாகப் பார்த்தன. தாவிக்குதித்து அவர்களை விரட்டிச்செல்ல உடல் துடித்தபொழுது, மனம் சூழலைப் புரிந்துகொள்ளப் போராடியது. அடங்காத ஆவேசத்தோடு சற்றே பின்னால் திரும்பினான்.

ஆதிமலையின் எலிவால் முகட்டிற்கு நேரே சென்றிப்புகை மேலெழுந்து உச்சிவரை போய்க்கொண்டிருந்தது. பறம்பின் ஆசான் உதவிகேட்டு புகைபோட்டிருக்கிறான் என்பது புரிந்தது. ஆசான் புகைபோட்டு நீண்டநேரம் ஆகியுள்ளது.எதிர்திசையில் ஓடிக் கொண்டிருந்ததால் பாரியின் கண்களுக்கு அது தெரியவில்லை. இப்பொழுதுதான் பார்த்தான்.

பாரி அவர்களை விரட்டத்தொடங்கிய உடனே சென்றிப்புகை போட்டுவிட்டான் தேக்கன். ஆதிமலையின் இரண்டாவது மூன்றாவது குன்றுப் பகுதிகளில் பெரும் பரப்பளவில் ஊர்களே கிடையாது. இரத்தச்சிலந்திக் காடாதலால் மனிதர்களும் வேட்டைக்கோ, மற்றவைகளுக்கோ இப்பக்கம் வரமாட்டார்கள். எனவே புகை பார்த்து வருவதாக இருந்தால் மிகத்தொலைவில் இருந்துதான் வர வேண்டும். ஆனால், மழைக்காலமாதலால் மேகங்கள் கீழிறங்காமல் இருந்தால்தான் புகை உச்சிக்குப் போனாலும் மனிதர்களால் கண்டறிந்து வர முடியும்.

தேக்கன் புகைபோட்டு பாதிநாள் கடக்கப்போகிறது; யாரும் வரவில்லை. கடுமையான தாக்குதலுக்கு உள்ளானதால் மாணவர்கள் கொடும் வேதனையில் இருந்தார்கள். பொழுது மறைய சிறிதுநேரமே இருந்தது. அடுத்து என்ன செய்யலாம் என்பதைப் புகைபார்த்து வருகிற ஆளை வைத்துத்தான் முடிவுசெய்ய வேண்டும். இரண்டு, மூன்று திட்டங்களோடு தேக்கன் காத்திருந்தான்.

மடுவன் தொலைவில் கைநீட்டிக் காண்பித்தான். யாரோ வருவது தெரிந்தது. தேக்கன் உற்றுப்பார்த்தான். வந்து நின்றது வேட்டூர் பழையனும் இரு வீரர்களும். ஆதிமலையின் புலிவால் குகையில் தங்கியவன் காலை நேரங்கழித்து புறப்பட்டிருக்கிறான். இரண்டாம் குன்று தாண்டும்பொழுது பார்த்திருக்கிறான். இரத்தச்சிலந்தி காட்டுப்பகுதியில் இருந்து சென்றிப்புகை ஏற்றப்பட்டுள்ளது. மிகத்தொலைவில் புகை எழுந்துள்ளது. ஆனால், இப்பகுதிக் காட்டுக்குள் வேறு யாரும் இருக்கப்போவதில்லை. எனவே உதவிக்கு நாம்தான் இங்கிருந்து போக வேண்டும் என்று நினைத்து வீரர்களோடு நாள்முழுவதும் நடந்து வந்து சேர்ந்தான்.

வேட்டூர் பழையனுக்கு நடந்ததை தேக்கன் விளக்கினான். தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் வலியாலும் கசப்பின் கொடுமை தாங்காமலும் துடித்துக்கிடந்தார்கள். கருவிழி உருகி வழிந்தவன், உருண்டு பெரும்பள்ளத்தில் வீழ்ந்ததில் மயக்கநிலையை அடைந்தான். வேட்டூர் பழையனுக்குப் பார்க்கும் காட்சி, கேட்கும் கதை எதையும் நம்ப முடியாமல் இருந்தது.

தேக்கன் விழுந்து உருண்டதில் இடுப்பின் பின்பகுதியில் பெரும் ஈக்கி குத்தி உள்சொருகியிருந்தது. ஈக்கியை எடுத்துவிடச் சொன்னான். பழையன் கவனமாக அதனைப் பிடித்து வெளியே இழுத்தான். “ஆ”வென கத்திய தேக்கனின் குரல்  துண்டிக்கப்பட்டதைப்போல பாதியில் ஒலியற்று நின்றது. அவனது கண்கள் எதிரில் பார்த்த காட்சியே அதற்குக் காரணம். எதிரில் நடுமலையின் உச்சியில் சென்றிப்புகை மேலேறிக்கொண்டிருந்தது. தேக்கனின் கண்கள் அகலத்திறந்தபடி இருந்தன. மேலெழும் புகை பார்த்து வாய் மட்டும் முணுமுணுத்தது “அது...   பாரி.”

ஒரே நாளில் பறம்பின் ஆசானும், பறம்பின் தலைவனும் சென்றிப்புகைபோடும் நாளும் வந்தது.  

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 3:30 pm

முழுநிலவு கழிந்து இரு நாள்கள்தான் ஆகின்றன. நிலவின் ஒளியை, கூடிநிற்கும் கருமேகங்கள் முழுமையாக மறைத்திருந்தன. கடும் இருட்டுக்கு நடுவில் இங்கும் அங்குமாக மின்னல் வெட்டிச் சரிந்துகொண்டிருந்தது. தேக்கனும் வேட்டூர் பழையனும் உடன்வந்த வீரர்களோடு கீதானியையும் அலவனையும் மட்டும் அழைத்துக்கொண்டு நடுமலையில் இருந்த பாரியிடம் வந்தனர்.

கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த மாணவர்களுக்குச் சில மருத்துவங்களைச் செய்து, குகை ஒன்றில் தங்கச்சொல்லிவிட்டு வந்தனர். நடுமலையிலிருந்து சென்றிப்புகை மேலேறியதைப் பார்த்துக் காட்டுக்குள் இருந்த நால்வர் ஏற்கெனவே பாரியிடம் வந்திருந்தனர். அனைவரும் இப்போது ஒன்றிணைந்தனர்.

காயங்கள் அதிகமாக இருந்ததால், தேக்கனை பாரி எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவனோ, வேட்டூர் பழையனையும் சேர்த்து அழைத்து வந்தது வியப்பை ஏற்படுத்தியது. அடர் இருளுக்குள் மழை கொட்டித்தீர்க்கப்போகிறது. இடியோசையும் வெட்டும் மின்னல் ஒளியும் காட்டை மிரட்டிக்கொண்டிருந்தன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p4
ஏற்றுக்கொள்ள முடியாத உண்மைகள் கசப்பினும் கொடியவை. அவற்றை விழுங்கவோ, கரைக்கவோ முடியாது. சில கனிகளை வேட்டூர் பழையன் கொடுத்த பிறகு மாணவர்களின் தொண்டைக்குழியில் இருந்த கசப்பு சற்றே மட்டுப்பட்டது. ஆனால், பெரியவர்களின் உடல் முழுவதும் அது ஏறியிருந்தது.  ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவனும் விழுங்க முடியாத கசப்பை இந்தப் பெரியவர்களுக்கு வழங்கிவிட்டுப் போயிருக்கிறான்.  எனவே, இப்போது பெரியவர்கள் பேசப் பேச அவர்களுக்குள் மாணவர்களுக்குச் சுரந்ததைப்போல கசப்பு சுரந்துகொண்டிருந்தது. சகித்துக்கொள்ளவே முடியாத கசப்பு. தேவவாக்கு விலங்கைக் கண்ணெதிரே தூக்கிக்கொண்டு ஓடுவதைப் பற்றிப் பேசுவதைவிட கொடுங்கசப்பு வேறில்லை.

“இந்த மலைத்தொடரின் அமைப்பைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை என்பது கொற்றவையின் கூத்துக்களத்திலிருந்து நடுமலை வரை அவர்கள் ஓடிவந்த வழித்தடத்தின் வழியே அறிய முடிகிறது. அதே நேரத்தில் எவ்வளவு கொடுங்காட்டுக்குள்ளேயும் நுழைந்து வெளியேறக்கூடிய ஆற்றல்கொண்டவர்கள் என்பதும் அவர்கள் வந்த வழித்தடத்திலிருந்து அறிய முடிகிறது” என்றான் பாரி.

“யார் இவர்கள்? எத்தனை பேர் வந்துள்ளார்கள்? இந்தத் திசையை நோக்கிப் போனால் எந்த நாட்டை அடைவார்கள்?” என்று கேட்டான் வேட்டூர் பழையன்.

“அவர்கள் ஓடிக்கொண்டிருக்கும் திசையை வைத்து அவர்களின் நாட்டை நம்மால் கண்டறிய முடியாது. அவர்கள் எளிமையானதும் சரியானதுமான திசைவழியைத் தேர்வுசெய்து ஓடவில்லை. எந்த வழியில் ஓடினாலும் இலக்கை அடைய வேண்டும் என்ற உறுதியோடு ஓடுகின்றனர்” என்று சொன்ன பாரி, சற்றே இடைவெளிவிட்டுச் சொன்னான் “எந்தவொரு வேந்தனின் கட்டளைக்காகவும் இவர்கள் இந்தப் பணியைச் செய்யவில்லை. அரசர்களின் போர்வீரர்கள் இவ்வளவு உறுதிப்பாட்டை ஒருபோதும் கொண்டிருக்க  முடியாது. அதையும் தாண்டிய ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் இந்த வேலையை இவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்” என்றான். பாரியின் கணிப்பு மிகச்சரியானது எனத் தேக்கனுக்குத் தோன்றியது. அவர்கள் கண்களில் இருந்த ஆவேசம் எந்தக் கணத்திலும் குறையவில்லை. எல்லாவற்றையும் தகர்த்தெறியும் வலிமையும் உறுதியும் கொண்டவர்களாக அவர்களை உணர்ந்திருந்தான் தேக்கன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p1
வேட்டூர் பழையனோ பேசப்படும் சொற்களின் வழியே அவர்களின் வேகத்தையும் திறனையும் மனதுக்குள் உருவகித்துக்கொண்டிருந்தான். ‘இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்திவிட்டு எதிரிகள் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், பாரியும் தேக்கனும் நிதானமாகப் பேசிக்கொண்டிருக்கின்றனரே’ என்று புதிதாய் வந்து சேர்ந்த வீரர்கள் பதறியபடி நின்றிருந்தனர்.

நடுமலைக்கும் கடைசி மலையான காரமலைக்கும் இடையில் மூன்றாம் சரிவில் இருக்கும் காட்டாற்றின் நடுவில் அவர்களைத் தாக்கும் புதியதொரு தாக்குதல் முறையை வேட்டூர் பழையன் சொன்னான்.

‘`அவர்கள் உடலின் வடிவத்தையும் வலிமையையும் சிந்தித்தால், தண்ணீர்தான் இயல்பிலேயே அவர்களைக் கட்டுக்குள் கொண்டுவர ஏதுவான இடம். அவர்களின் பலத்தையே பலவீனமாக மாற்றலாம்” என்று வாதிட்டான்.

“நீரின் வேகம் வலிமையாக இருந்தால் மட்டுமே அது உதவிசெய்யும். இல்லையென்றால், மிக எளிதில் அந்தத் திட்டத்தை அவர்களால் முறியடித்துவிட முடியும்” என்றான் தேக்கன்.

வேறு வழியென்ன எனச் சிந்தித்தபோது பாரி சொன்னான், “நடுமலையிலிருந்து காரமலை வரை அவர்களைக் குறுக்கீடு செய்ய வேண்டாம். ஓடட்டும். அவர்களுடன் வந்துள்ளவர்கள் இன்னும் எத்தனை பேர் என்பது நமக்குத் தெரிய வேண்டும். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்த பிறகுதான் நாம் தாக்குதலைத் தொடுக்க வேண்டும்” என்றான்.

தேக்கனும் வேட்டூர் பழையனும் சற்றே அதிர்ந்தனர். காரமலையைத் தாண்டிவிட்டால் சில இடங்களில் ஒன்றிரண்டு குன்றுகள் இருக்கின்றன. சில இடங்களில் அதுவும் இல்லை. மிக எளிதாகச் சமதளக் காடுகளுக்குள் நுழைந்துவிடலாம். எனவே, பாரி சொல்வது ஆபத்தான திட்டமாக அவர்களுக்குத் தோன்றியது.

“இதைத் தவிர வேறு எந்தத் திட்டமிடலைச் செய்தாலும் நம்மால் அவர்களை வளைக்க முடியாது. அடிப்படையில் அவர்கள் எத்தனை பேர் என்பது தெரியாமல், எந்தத் திசையை நோக்கி ஓடுகிறார்கள் என்பதும் தெரியாமல் காட்டுக்குள் அவர்களை நம் வீரர்கள் மறித்துத் தாக்குவது கடினம். நீங்கள் சொன்னபடி, ரத்தச்சிலந்திகள் கீழ் இறங்குவதற்குள் புதரை விலக்கி அந்த இடத்தைக் கடந்துள்ளனர் என்றால், அது எளிதான செயல் அல்ல. அதைவிட அடர் கானகம் வேறு எதுவும் இல்லை. அதையே ஊடறுத்து வெளிவந்துள்ளனர். இனி அவர்கள் பச்சைமலைத்தொடரின் எந்த ஒரு காட்டையும் எளிதில் கடந்துவிடுவார்கள்.”வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p5

பாரி சொல்வது நம்ப முடியாத, ஆனால் நம்பியே ஆகவேண்டிய ஒன்றாக இருந்தது.

“இன்னும் சற்றுநேரத்தில் மழை இறங்கப் போகிறது. மழை தொடங்கிவிட்டால், அவர்களால் இந்தக் குத்துக்கல் பள்ளத்தாக்கில் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாது. மண்ணின் சரிவும் இறங்கியோடும் தண்ணீரின் வேகமும் யாரையும் இழுத்துக் கொண்டு போய்விடும். எனவே, இன்று இரவு முழுவதும் அவர்கள் ஏதேனும் ஓர் இடுக்கினில் தங்கித்தான் ஆக வேண்டும்.  மழை நின்ற பிறகு நாளைக் காலையில்தான் அவர்கள் இறங்கத் தொடங்குவார்கள். பகல் முழுவதும் இறங்கினால் மாலை நேரத்தில் அடிவாரத்தை அடையலாம். மண் நன்கு ஈரமாகிவிட்டால், நேரம் இன்னும் அதிகமாகும். அதன் பிறகு எவ்வளவு வேகமாக ஓடினாலும் காரமலையை அடைய அடுத்த நாள் உச்சிப்பொழுது கடந்துவிடும்.

ஆனால், நாம் இப்போது இங்கிருந்து ஓடைச் சரிவின் வழியே நடக்கத் தொடங்கினால் எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு பாதிப்பும் ஏற்படாது. நாளை மாலைக்குள் காரமலையின் உச்சியை அடைந்துவிடலாம். ஒரு முழு இரவு நம் கையில் இருக்கிறது. அங்கிருந்து தாக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்றான் பாரி.

நீண்டநேரம் அமைதியாகவே இருந்த தேக்கன், இப்போதும் அப்படியே இருந்தான். ஆனால், இவ்வளவு நேரம் உரையாடிக்கொண்டிருந்த வேட்டூர் பழையனோ, மறுமொழி ஏதும் கூறாமல் அமைதியானான். பாரி, பழையனை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான்.

சிறிது நேரத்துக்குப் பிறகு பழையன் சொன்னான், “எல்லாம் எதிர்திசையில் நடந்து கொண்டிருக்கின்றன.”

பழையன் சொல்லவருவது புரியவில்லை. பாரியின் முகமறிந்து பழையன் விளக்கினான், “மேற்கு திசைக் காடுகளில் பறம்பை நோக்கிப் படைகளை நகர்த்த பாதை அமைத்துக் கொண்டிருந்தான் சேரன். நாமும் மிகத்தீவிரமாக அதைக் கண்காணித்துக்கொண்டிருந்தோம். ஆனால், நேரெதிராகக் கிழக்கு திசையிலிருந்து பறம்புக்குள் நுழைந்து கொற்றவையின் கூத்துக்களம் வரை இவர்கள் வந்துள்ளனர். நமது கவனத்தைத் திருப்பி அதற்கு நேர் எதிர்திசையிலிருந்து உள்நுழைந்துள்ளனர். அதேபோன்ற சூழ்ச்சிதான் ஓடிக்கொண்டிருக்கும் இந்தச் செயலின் பின்னணியிலும் இருக்கும் என நினைக்கிறேன்” என்றான் பழையன்.

எவரும் மறுப்பேதும் சொல்லாமல் அவன் சொல்வதை மட்டும் கவனித்தனர்.

“தேவவாக்கு விலங்கை வைத்து என்ன செய்ய முடியும்? அதற்காக ஏன் உயிரைக்கொடுத்து அவர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றனர்?”

பழையனின் வினாவைத் தொடர்ந்து அமைதியே நீடித்தது.

பழையன் சொன்னான், “அவர்களின் தேவை அந்த விலங்கு அல்ல. அதைக் கவர்ந்து நம்மை இழுக்கப் பார்க்கின்றனர். அந்த விலங்குக்காகப் பறம்புமலையைவிட்டு சமதளத்தில் இறங்கப் போகும் மனிதனே அவர்களின் இலக்கு” என்று சொல்லி நிறுத்திக்கொண்டான் பழையன். அவன் யாரைச் சொல்ல வருகிறான் என்பது புரிந்தது.

இவ்வளவு தொலைவு மலையில் ஓடியவர்களை விட, காரமலையில் மறைந்திருப்பவர்கள்தான் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பர்.  ‘`நாமும் ஆயத்தமாக அவர்களை அங்கு எதிர்கொள்ளும் போது, நம் கையருகிலிருந்து நழுவி அவர்கள் மலையைவிட்டு இறங்கப் போகிறார்கள். பறம்பின் தேவவாக்கு விலங்கு நழுவிப்போவதை அனுமதிக்க முடியாத நாம், தாக்குதலின் தொடர்ச்சியாக நம்மை அறியாமலேயே மலையைவிட்டு நழுவி சமதளக் காட்டுக்குள் நுழையப்போகிறோம். அங்கே நம்மைச் சூழ அவர்கள் காத்திருப்பார்கள்” என்றான் பழையன்.
அவர் சொல்வதைச் சட்டென மறுத்துவிடும் நிலை இல்லை. உடன் நின்றிருந்த வீரன் சற்றே தயக்கத்தோடு கேட்டான், “ஆனால், பறம்பை இவ்வளவு குறைவாக மதிப்பிட்டு, இவ்வளவு துல்லியமான திட்டமிடலைச் செய்யும் அளவுக்கு யாருக்குத் துணிவிருக்கும்?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p2
“யாருக்குத் துணிவிருக்கும் என்பது நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், யாருக்கோ துணிவிருந்திருக்கிறது என்பதைத்தான் இப்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.”

“உங்களின் கருத்துதான் என்ன?”

“நடுமலைக்கும் காரமலைக்கும் இடையிலேயே அவர்களை அழித்தால்தான் உண்டு. எக்காரணம் கொண்டும் காரமலையின்மீது ஏற அவர்களை அனுமதிக்கக் கூடாது” என்று பாரி உறுதியாகச் சொன்னான். தொடர்ந்து, “அதற்கு வாய்ப்பில்லை. நாம் நின்று திட்டமிட முடியாது; ஓடிக்கொண்டேதான் திட்டமிட முடியும். இருவரின் ஓட்ட வேகத்தில் இருக்கும் இடைவெளிதான் நமக்குக் கிடைக்கும் நேரம். நாம் அவர்களைத் தாக்க ஆயத்தமாவதற்கான குறைந்தளவு நேரம் இந்தக் குறிப்பிட்ட தொலைவை ஓடிக் கடக்க அவர்களை அனுமதிப்பதன் வழியாகவே கிடைக்கும். அவர்கள் நம்மிலும் வேகமாக ஓடக்கூடியவர்கள். ஆனால், தவறான வழியில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நாம் சரியான வழியில் ஓடுவதால், அவர்களின் வேகத்தை எளிதாகக் கடந்து முன்னிலையை அடைய முடியும்.”

“சரி, நாம் காரமலையை விரைவில் அடைந்து விட்டால், அவர்கள் வந்துசேர்வதற்குள் நம்மால் எவ்வளவு வீரர்களைத் திரட்டிவிட முடியும்?” எனக் கேட்டான் பழையன்.

“போரிடப் புதிதாக வீரர்கள் தேவையில்லை. இங்கு இருப்பவர்களே போதும்” என்றான் பாரி.

அவனது சொல் தேக்கனையும் பழையனையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ‘பதற்றத்தில் பாரி நிதானம் தவறுகிறானோ’ எனத் தோன்றியது. தோன்றிய மறுகணமே, ‘இல்லை, பாரி உதிர்க்கும் சொற்கள் பறம்பைப்போல் நிலைகொண்டவை. ஒருபோதும் உதிராது. எந்தச் சூழலிலும் பாரி நிதானம் இழப்பவனல்லன்’ என்றும் தோன்றியது.

‘ஆனால் இப்போது ஏற்பட்டுள்ளது புதிய சூழல். இதை வழக்கமான ஒன்றைப்போல மதிப்பிடவும் முடியாது’ என்றும் தோன்றியது. இருவருக்கும் குழப்பமே மிஞ்சியது. பாரி குழப்பமற்று இருந்தான். அது இவர்கள் இருவரையும் மேலும் குழப்பத்துக்குள்ளாக்கியது.
பாரி தொடர்ந்தான், “எனக்கு வீரர்கள் தேவையில்லை. காட்டுக்குள் எதிரிகளின் நகர்வை உணர்த்தும் அடையாளக்காரர்கள் மட்டுமே தேவை” என்றவன் மேலும் சொன்னான், “அவர்களை வழக்கமான தாக்குதல் முறைகளால் ஒன்றும் செய்துவிட முடியாது. அவர்களை அழித்து, தேவவாக்கு விலங்கைக் காப்பாற்ற வேறு வழிமுறையைத்தான் பின்பற்ற வேண்டும். அதைப் பற்றி நான் சிந்தித்துவிட்டேன்” என்றான்.

பாரியின் குரலில் இருந்த உறுதி எதிர் கேள்விக்கான இடம் எதையும்  விட்டுவைக்கவில்லை.  ஆனாலும் பழையன் கேட்டான், “நீ இவ்வளவு உறுதிகொண்டு சொல்வதால் நான் ஏற்கிறேன். ஒருவேளை, அவர்கள் தேவவாக்கு விலங்கைத் தூக்கிக்கொண்டு சமதளக் காட்டுக்குள் நுழையும் சூழல் வந்தால், பறம்பைவிட்டு நீ கீழிறங்கக் கூடாது. நாங்கள் பின்தொடர்ந்து தாக்கி அதைக் கைப்பற்றுகிறோம்.’’

“இந்த உறுதியை அளிப்பதன் மூலம் எனது உறுதியைக் கேள்விக்குள்ளாக்க விரும்பவில்லை. அவர்களால் ஒருபோதும் பறம்பின் எல்லையைத் தாண்ட முடியாது.” பாரியின் சொல் பாறையென நிலைகொண்டது.

இடியோசையில் திசைகள் நடுங்கின. மழை இறங்கியது. வெட்டும் மின்னலொளியில் காட்டின் மேற்கூரை கழன்றுவிட்டதுபோல் தெரிந்தது. “தேவவாக்கு விலங்கு என்பது, கொற்றவையின் குறிசொல்லும் குழந்தை. அதை எதிரியிடம் பறிகொடுப்பது நமது உயிரைக் கொடுப்பதற்கு நிகர். ஒருபோதும் அது நிகழாது.’’  - முழங்கும் பாரியின் குரலே இடியோசையென காடெங்கும் ஒலித்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p6
எதிரிகளை அழிக்கும் பணி பாரியினுடைய தானது. அவர்கள் எந்த இடத்தில் காரமலையைக் கடக்கப்போகின்றனர் என்பதைக் கண்டடைவதும், அங்கிருந்து அவர்கள் போகும் வழியைத் தெளிவாகத் தெரியப்படுத்துவதும்தான் மற்றவர்களின் வேலை.

இருப்பவர்களை இருகூராகப் பிரித்தனர். பாரி தன்னுடன் கீதானியையும் அலவனையும் வைத்துக்கொண்டான். வந்த வீரர்களில் அம்பு எய்வதில் சிறந்த இருவரை உடன் அழைத்துக் கொண்டான். மற்ற எல்லோரையும் இன்னொரு குழுவாக்கினான். அவர்களுக்கான பணி உறுதியானவுடன் அவர்கள் நடுமலையின் தென்புறம் நோக்கிப் புறப்படத் தொடங்கினர். பாரி, வடதிசையை நோக்கிப் புறப்பட்டான்.

காட்டில் வீறுகொண்டு மழையடிக்கும்போது, நிலம் பார்த்து மிகக்கவனமாக அடியெடுத்து வைக்க வேண்டும். இல்லையென்றால், நீரும் நிலமும் மனிதனை விழுங்கிவிடக்கூடும். ஆனால், இப்போது நடப்பது வேறொன்று. மின்னலைக் கைக்கோலாகக்கொண்டு நடக்கும் மனிதர்களை, காடு பார்த்துக்கொண்டிருந்தது. தங்கள் தோளில் பட்டுத் தெறிக்கும் நீர்த்துளி மண்ணில் விழும் முன் மறுகுன்று கடக்க அவர்கள் முயன்று கொண்டிருந்தனர்.

தேக்கனும் வேட்டூர் பழையனும் உடன் வந்த நான்கு வீரர்களும் தென்திசை நோக்கி விரைந்தனர். அதிகாலைக்குள் குடிமனூரை அடைந்தே ஆகவேண்டும். அங்குதான் கூவல்குடியினர் இருக்கின்றனர்.

 ந்த ஆண்டு நடந்த கொற்றவைக் கூத்தில் எட்டாம் நாள் விழா கூவல்குடியினருடையது. கூவல்குடியினர், இயற்கையின் ஆதிமைந்தர்கள்; தவளையை வழிபடுபவர்கள். தவளையின் குரல்வளையிலிருந்து எழும் ஓசை, பறையின் அதிர்வோசையையும் விஞ்சக்கூடியது. அதனால்தான் தவளையை ‘ஓசையின் அரசி’ என்று அழைக்கின்றனர்.

அளவு சிறுத்த இடியை அடித்தொண்டையில் வைத்து இரவெல்லாம் கக்கிக்கொண்டே இருக்கும் உயிரினம் அது. களைப்பின்றி ஓசையை எழுப்பிக்கொண்டே இருப்பதில் தவளைக்கு நிகரானது எதுவும் இல்லை. கூவல்குடியினரும் அதைப்போல்தான். அவர்களின் குரல்வளை இடியோசைக்கு நிகரானது மட்டுமன்று, இளைப்பாறுதல் அற்றது. எவ்வளவு பெரிய மலைத்தொடரையும் ஒலிக்குறிப்புகளைக்கொண்டு இணைத்துவிடும் ஆற்றல்கொண்டது.

மலையில் ஓசையெழுப்பும் பெருங்கருவி என்றால், அது காரிக்கொம்புதான். எல்லா மலையூர்களிலும் அது இருக்கும். அதை எளிதாக எடுத்து ஊத முடியாது. அதை ஊத மிகச்சிறந்த பயிற்சி வேண்டும். முழுவலிமையோடு ஊதினால் மலை முழுவதும் எதிரொலிக்கும். ஒருமுறை ஊதுவது, இரட்டித்து ஊதுவது என்ற இரண்டு முறைகளால் மலைமக்கள் தங்களின் குறியீட்டு முறையைப் பயன்படுத்திச் செய்திகளைப் பரப்புகின்றனர்.

இதிலிருந்து சற்றே மாறுபட்டவர்கள் பறம்பின் மக்கள். அவர்கள் காரிக்கொம்பைச் சிறப்பாகப் பயன்படுத்துவர். ஆனால், அதை நிலைகொண்ட ஊர் இருக்கும் இடத்தில்தான் பொதுவாகப் பயன்படுத்த முடிகிறது. காட்டுக்குள் உள்ள ஒரு மனிதன், உதவி தேவைப்பட்டால் என்ன செய்ய முடியும் எனச் சிந்தித்து சென்றிக்கொடியைக் கண்டறிந்தனர்.

காரிக்கொம்பைத் தூக்கி ஊதப் பயிற்சி தேவை. அப்போதுதான் அது தொலைவுக்குக் கேட்கும். ஆனால், சென்றிக்கொடியால் புகைபோடுதல் மிக எளிது. சிறுவர்கூட தனக்கு உதவி தேவை என்று காட்டின் இன்னொரு மூலையில் இருப்பவருக்குத் தெரிவித்துவிட முடியும். அவ்வளவு எளியது மட்டுமன்று, சிறந்ததும்கூட. அதிலும் பிரச்னை இல்லாமல் இல்லை. புகையை, பகலில் மட்டுமே பயன்படுத்த முடியும். அதுவும் மழைக்காலத்தில் மேகங்கள் திரண்டுவிட்டால் மறைக்கப்பட்டுவிடும்.

மேளதாள ஓசைகள், காரிக்கொம்பு, சென்றிப்புகை என உதவி கேட்கும் வழிமுறைகள் பல இருந்தாலும், ஒவ்வொன்றிலும் நிறைகுறைகள் இருக்கின்றன. ஆனால், இந்தக் கருவிகள் எவையும் கூவல்குடியைச் சேர்ந்த ஒரு தனிமனிதனுக்கு இணையாகா. அவர்கள் இடியை விழுங்கி இரவெல்லாம் கக்கிக்கொண்டிருப்பவர்கள். பழுத்த கனியை பாறையில் எறிந்து தெறிக்கவைப்பதைப்போல, ஓசையைக் காற்றுடன் மோதவிட்டுத் தெறிக்கவிடக் கூடியவர்கள். தம் அடிநாக்கை மடித்து எழுப்பும் ஒலியால் காட்டுக்கே ஒலிவேலி கட்டுகிறவர்கள். அவர்களின் இருப்பிடமான குடிமனூரை நோக்கியே தென்புறம் சென்றுகொண்டிருக்கிறது தேக்கனின் தலைமையிலான குழு.

கொட்டும் மழையில், மிக மெதுவாகவே நடந்தான் பாரி. அவனுக்கு நிறையவே நேரம் இருந்தது. கீதானியும் அலவனும் கடந்த இரு நாள்களாக ஓடிய ஓட்டத்தை அவன் அறிவான். அதுமட்டுமல்ல, எதிரிகளின் தக்குதலாலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. தொண்டைக்கசப்புக்கு வேட்டூர் பழையன் மாற்று கொடுத்துள்ளான். அதனால்தான் இப்போது அவர்களால் சற்றே இயல்பாக இருக்க முடிகிறது. இல்லையென்றால், இந்நேரம் அவர்கள் குரல் நாளங்களைப் பிய்த்தெறிய ஆயத்தமாகியிருப்பார்கள்.

பாரி, இருவரையும் அரவணைத்து அழைத்துச்சென்றான். மற்ற வீரர்கள் இருவரும் ஆவேசத்தோடு முன்னால் ஓடிக்கொண்டிருந்தனர். காட்டோடையில் பெருகும் நீர் பார்த்து இரவெல்லாம் நடந்தனர். இடியும் மின்னலும் பாறையெங்கும் விழுந்து சரிந்துகொண்டிருந்தன. மழையோசை கேட்டு விலங்குகள் பம்மிக்கிடந்தன. நீரின் விதவிதமான ஒலிகளால் காடு நிறைந்துகிடந்தது.

ஒளிக்கீற்று மெள்ள பரவத் தொடங்கியபோது நாய்வாய் ஊற்றுக்கு வந்து சேர்ந்தனர். மழை சற்று முன்னர்தான் நின்றது. உடல்மேல் பொழிந்துகிடந்த நீர் உதிர்த்துப் பறவைகள் சிறகசைக்கத் தொடங்கின. காரமலையின் அடிவாரம் செல்ல இன்னும் சிறிதுதொலைவே இருந்தது. கிழக்குதிசை வெளிச்சம் காரமலையின் மேலிருந்து வழியத் தொடங்கியது . பாரியின் கண்களுக்குத் தூர் அகன்ற உடைமரம் ஒன்று கண்ணில் பட்டது. அதைப் பார்த்ததும் நின்றுவிட்டான். உடன் வந்தவர்களும் நின்றனர்.

இந்த மரத்தில் என்ன இருக்கிறது என்று மற்றவர்கள் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தனர். பாரி, வீரர்கள் இருவரையும் பார்த்துச் சொன்னான், “உடைமுற்களைக் கை நிறைய ஒடித்து வாருங்கள்.’’

வீரர்கள் இருவரும் முள் ஒடிக்கப் போனார்கள். அலவனையும் கீதானியையும் அருகில் இருக்கும் பறையின்மீது உட்காரச் சொன்னான். இருவரும் உட்கார்ந்தனர். ‘முள் ஒடித்து என்ன செய்யப்போகிறான் பாரி?’ என்ற எண்ணம் வீரர்கள் இருவருக்கும் இருந்ததைப்போலவே இவர்களுக்கும் இருந்தது.

வீரர்கள் மிகக்கவனமாக ஒவ்வொரு முள்ளாக ஒடிக்கத் தொடங்கினர். பாரி, அலவனைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். அலவனின் கவனம் உடைமரத்தில் இருந்ததால், அவன் பாரியைக் கவனிக்கவில்லை. கீதானி காலால் மெள்ளத் தட்டியபிறகுதான் கவனித்தான்.

“சிறுத்துக் கிடக்கும் உடைமரப் புதருக்குள் கொம்பேறி மூக்கன் கிடக்குமே, உன்னால் பிடித்துவிட முடியுமா?” என்று கேட்டான் பாரி.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p3
“முடியும்” என்றான் அலவன்.

“பிடித்து வா, பார்ப்போம்” என்றான் பாரி.

அலவன், கீதானியைத் துணைக்கு அழைத்துக்கொண்டான். கழி ஒன்றை எடுத்துக் கொண்டு புதரின் ஒரு பக்கத்தை அசைக்கச் சொல்லி, மறுபக்கத்தில் நின்று கவனித்தான். கொம்பேறி மூக்கன், கொப்புகளைவிட்டு மறுகொப்புக்கு மிக வேகமாகப் பயணிக்கக் கூடியது. பிடிப்பது எளிதல்ல. பார்த்த கணத்தில் கடந்து செல்லும் வல்லமைகொண்டது. கீதானி ஒவ்வொரு புதராகப் போய் அசைத்தான். அலவனின் கண்கள் கூர்மையாகத் தேடின.

முள் ஒடிக்கும் வீரர்களுக்கும் பாம்பு பிடிக்கும் மாணவர்களுக்கும், இந்தப் பணியைச் செய்யச் சொன்னதன் காரணம் விளங்கவில்லை. ‘எதிரிகளின் வலிமையைப் பற்றி நேற்றிரவு பேசிய பேச்சுக்கும், இப்போது செய்துகொண்டிருக்கும் செயலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ஒற்றைக் கையால் தேக்கனை அடித்துத் தூக்கும் அந்த வீரர்களை இந்தச் சிறுமுள்ளையும் பாம்பையும்கொண்டு தாக்கி வீழ்த்திவிட முடியுமா?’ சிந்திக்கச் சிந்திக்கக் குழப்பமே மிஞ்சியது. இவற்றை வைத்து பாரி என்ன செய்யப்போகிறான் என்பது புரிந்துகொள்ளவே முடியாததாக இருந்தது.
பாறையில் உட்கார்ந்த பாரி சொன்னான், “முள் ஒடிக்கும் முன் மூக்கனைப் பிடித்து வா அலவா.’’வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p7

முள் ஒடிக்கும் வீரர்களுக்கு அப்போதுதான் தோன்றியது, ‘சிறுவன் பாம்பை உடனே பிடித்து விட்டால், நாம் பின்தங்கிவிடுவோமே’ என்று. மாணவர்களுக்குத் தோன்றியது, ‘அவர்கள் எளிதில் முள் ஒடித்துவிடுவார்கள். அதற்குள் நாம் மூக்கனைப் பிடித்தாக வேண்டும்’ என்று. இருவரும் இப்போதுதான் கவனம்கொள்ளத் தொடங்கினர்.

வேகவேகமாக வேலை நடந்துகொண்டிருந்தது. வீரர்கள் சடசடவென ஒடிக்க நினைத்தனர். கவனமாக இல்லையென்றால், அது விரல்களைக் குத்திக் கிழித்துக்கொண்டே இருக்கும். அதுவும் இரவு முழுவதும் நனைந்ததால் அவர்களின் விரல்கள் ஊறிப்போய் இருந்தன. நகங்களின் முனையை வைத்தே ஒடித்துக்கொண்டிருந்தனர். இருவரும் கை நிறைய ஒடித்துவந்து பாறையில் கொட்டினர்.

சற்றே சாய்ந்து உட்கார்ந்த பாரி, விரல்களால் கிளறி, மிக நீளமாக இருக்கும் முள்களையும் நீளமற்று இருக்கும் முள்களையும் ஒதுக்கிவிட்டு நடுத்தரமான அளவுகொண்ட முள்களை மட்டும் தனியே பிரித்தெடுத்தான்.

பாரி இதை ஏன் செய்கிறான் என்று புரியாமல் வீரர்கள் இருவரும் முழித்துக்கொண்டிருந்தபோது அலவனிடமிருந்து குரல் கேட்டது, “கொம்பேறி மூக்கன் கிடைக்கவில்லை. கொடிமூக்கன்தான் கிடைத்துள்ளான். போதுமா, இல்லை இன்னும் தேடவா?”

“கொண்டு வா, அதன் அளவைப் பார்ப்போம்” என்றான் பாரி.

புதர் விலக்கி அவர்கள் வெளிவந்தபோது அதன் நீளத்தைப் பார்த்து வீரர்கள் இருவரும் விக்கித்துப்போனார்கள். அலவன் அதன் கழுத்தைப் பிடித்திருந்தான். கீதானி அதன் நடுப்பகுதியைப் பிடித்திருந்தான். கை முழுவதும் சுற்றிச் சுருண்டிருந்த அதன் நீளம் பார்க்கவே அச்சமூட்டுவதாக இருந்தது.

‘கொம்பேறி மூக்கன் கிடைக்கவில்லையே’ எனச் சிந்தித்த பாரி, பிடிபட்ட கொடிமூக்கனைக் கொண்டுவரச் சொன்னதற்குக் காரணம் அதன் நீளத்தை அறியத்தான். அவன் எதிர்பார்த்ததைவிட வயது முதிர்ந்ததாக அது இருந்தது.

 “இது போதும், வா” என்றான் பாரி.

இருவரும் பாறை நோக்கி வந்தனர். தனக்கான ஆயுதத்தைப் பாரி தயார் செய்யத் தொடங்கியபோது, காரமலையின் மேல்விளிம்பிலிருந்து எட்டிப்பார்த்தான் கதிரவன்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 4:16 pm

கூவல்குடியினர் எட்டுப்பேரை அழைத்துவந்தான் தேக்கன். அதில் மூன்று பேர் வயதானவர்கள். ஐந்து பேர் இளைஞர்கள். வயதானவர்கள் எழுப்பும் ஓசை இணையற்றதாக இருக்கும். மலையின் எந்த எல்லைக்கும் அவர்களால் குறிப்புச் சொல்ல முடியும். ஆற்றுநீரில் சுழி ஏற்படுவதுபோல காற்றில் ஓசைகொண்டு சுழிக்கச்செய்யும் ஆற்றல்கொண்டவர்கள். ஆனால், காட்டை ஊடறுத்து வேகமாக ஓட முடியாது. இளைஞர்களால் அவர்களின் அளவுக்கு ஓசையைக் காடுதாண்டி வீச முடியாது. ஆனால், தங்களின் ஓட்டத்தால் அந்த இடைவெளியை நிரப்பிவிடுவார்கள்.
ஊரிலிருந்த எட்டுப்பேரை அழைத்துக்கொண்டு அதிகாலையிலேயே காரமலையில் ஏறத் தொடங்கிவிட்டான் தேக்கன். மிக விரைவாகவே அவர்கள் மலையுச்சியை அடைந்துவிட்டனர். காரமலையின் ஒவ்வொரு முகட்டுக்கும் ஒவ்வொருவராகப் பிரித்து அனுப்பப்பட்டனர். பொழுதடைவதற்குள் அவர்கள் தங்களின் இருப்பிடங்களில் நிலைகொண்டனர்.

ஒரு திசையிலிருந்து மறுதிசைக்குக் கண்ணுக்கெட்டிய தொலைவுவரை காரமலை, இப்பொழுது ஒலிக்கண்ணிகளால் பின்னப்பட்டுவிட்டது. இந்த எல்லைக்குள் எதிரிகள் எவ்விடத்தில் மலையைக் கடந்தாலும், கண்டறிந்து ஒலியெழுப்பிக் குறிப்புகொடுக்க அவர்கள் ஆயத்தமாக இருந்தனர்.
மலைமுகட்டுக்கு வந்ததும் வேட்டூர் பழையன் புறப்படத் தயாரானான். எதிரிகளை வீழ்த்த பாரி என்ன உத்தியை வகுத்திருக்கிறான் என்பதைச் சொல்லவில்லை. ஆனாலும் மலையடிவாரத்தில் முழு தயாரிப்போடு இருக்க வேண்டியது கட்டாயம் என்று தோன்றியது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p1
“இங்கிருந்து காரிக்கொம்பை ஊதினாலே கீழே வேட்டுவன் பறையிலிருக்கும் நீலன் வீரர்களோடு ஆயத்தமாகிவிடுவான். ஆனால், அந்த ஓசை எதிரிகளையும் விழிப்படையச் செய்துவிடும். எனவே, நான் நேரில் போகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டான் வேட்டூர் பழையன்.

பழையனைக் கீழே அனுப்புவது முறையல்ல என்று தேக்கனுக்குத் தோன்றியது. மலையின் மீதிருந்து எதிரிகளை வீழ்த்தப் பாரி போரிடும் போது, நாம் உடனிருப்பது  கட்டாயம் என்று தோன்றிய அதே நேரத்தில் முன்னெச்சரிக்கை யாகச் சிலவற்றைச் செய்ய வேண்டியதும் அவசியம் எனத் தோன்றியது. முடிவெடுக்கத் தயங்கினான் தேக்கன்.

வேட்டூர் பழையனால் தேக்கனைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவன் எதிரிகளைக் கூத்துக்களத்திலிருந்து விரட்டிவருகிறான். அவனது எல்லா முயற்சிகளையும் முறியடித்து அவர்கள் முன்னேறிவருகின்றனர். பறம்புநாடு,  தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை இப்படியோர் எதிரியைக் கண்டதில்லை. அதே நேரம் பாரி, ‘அவர்களை வீழ்த்தும் வழிமுறையைக் கண்டறிந்துவிட்டேன்’ என்று திடமான சொல்கொண்டு காத்திருக்கிறான்.வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p3

எதிரிகளின் தாக்குதலைத் தனது உடல் முழுவதும் ஏற்றிருக்கிறான் தேக்கன். அவர்களின் ஆற்றல்பற்றி அவனுக்கு ஆழமான கருத்து உருவாகியிருக்கிறது. அவர்களை வீழ்த்தும் உத்தியைப்பற்றி பாரி எதுவும் சொல்லாததால், தேக்கனின் மனம் நிலைகொள்ளவில்லை. தடுமாற்றம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

புரிந்துகொண்ட பழையன், புரியாததைப்போல அவனைவிட்டு விலகி நடக்கத் தொடங்குகிறான். இரண்டு கிழவர்களின் மனநிலையும் இரண்டு விதமாக இருக்கின்றன.

ஆனால், இருவரும் பாரியின் சொல்லை ஏதோ ஒருவகையில் கடந்துகொண்டிருக்கின்றனர். ஒருவேளை, பாரியால் எதிரிகளை வீழ்த்த முடியாமற்போய்விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் மனதின் ஆழத்தில் உருவாகியிருக்கிறது. அதனை அவர்கள் நம்பாமலிருக்க முயல்கின்றனர். ஆனால், எதிரியின் இணையற்ற ஆற்றல் அவர்களை அடுத்தடுத்து சிந்திக்கச் செய்கிறது. அச்சிந்தனை பாரியின் சொல்லைக் கடந்தும் போய்க்கொண்டிருக்கிறது.

மூன்று மலைகளைக் கடந்து உள்ளே வருவதுதான் எல்லாவகையிலும் கடினமானது. உள்ளே வந்துவிட்டால், வெளியேறுவது அவ்வளவு கடினமல்ல. இயற்கையில் அமைந்துள்ள இந்தச் சாதகமான நிலையை இரு கிழவர்களும் அறிவர். காட்டுக்குள் தப்பியோடும் ஒருவனை விரட்டிச்சென்று மறிப்பது எளிதல்ல. அதுவும் இவர்கள் அபாரமான ஆற்றல் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

எண்ணங்கள் ஓடியபடி இருக்க, வேட்டூர் பழையன் புறப்பட்டான். காரமலையின் கீழ்த்திசைச் சரிவில் இருக்கும் ஒவ்வொரு பாறையும், பிளவும், முடிச்சும், மரமும், செடியும், விலங்கும் அவன் சொல் கேட்பன. எதிரிகளைப்பற்றி இவ்வளவு நேரம் கேட்ட செய்திகளிலிருந்து அவன் சில முடிவுகளுக்கு வந்திருந்தான். எதிரிகளை வீழ்த்த எவற்றைச் செய்யக் கூடாது என மனதில் பட்டியலிட்டான். ‘வேட்டுவன் பாறையில் மிகச் சிறந்த வேட்டைநாய்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றைத் தாக்குதலில் ஈடுபடுத்தக் கூடாது. சுண்டாப்பூனையையே கொன்று வீசியவர்கள் வேட்டைநாயை எளிதில் வீழ்த்திவிடுவார்கள்.

தேக்கனையே  அடித்துத்தூக்கியவர்கள், எவ்வளவு பெரியவீரனையும் சரித்துவிடுவார்கள். எனவே, அவர்களை நேர்நிலையில் எதிர்கொள்ளக் கூடாது. உடலின் வலிமையும் காட்டுச்செடியைக் கிழித்து முன்னகரும் ஆற்றலும் இணையற்றவையாக இருக்கின்றன. எனவே, அவர்களைப் பின்தொடர்ந்து விரட்டித்தாக்க முடியாது. இவற்றையெல்லாம் கடந்த வழியென்ன இருக்கிறது என்று  சிந்தித்தபடியே மலையிறங்கினான் வேட்டூர் பழையன்.
நீண்டநேரம் சிந்தித்தாலும் விடையேதும் கிடைக்கவில்லை. ஆனால், பாரி எதனை யோசித்து அவ்வளவுத் தெளிவாகச் சொன்னான். இவற்றைக் கடந்த தாக்குதல்முறையைப்பற்றி பாரி சிந்தித்திருப்பான். அது என்னவாக இருக்கும்?’ வினாவிற்கான விடையேதும் கிடைக்காமலே கால்கள் நடந்துகொண்டிருந்தன.

வெகுதொலைவு இறங்கியபின் வேறோர் எண்ணம் தோன்றியது. ‘இவ்வழிகள் அல்லாத வேறுவழி பற்றிய திட்டம் இல்லாமல் நாம் கீழே போய் என்ன செய்யப்போகிறோம்?  மாற்றுவழியைக் கண்டுபிடித்திருக்கும் பாரியுடன் இணைந்து தாக்குதல் தொடுப்பதுதானே இப்போதைய தேவை.’
மனம் நிலைகொள்ள மறுத்தது. ‘இதே குழப்பம் தேக்கனுக்கும் இருக்கிறது. ஆனால், பாரி மட்டும் எப்படி குழப்பம் சிறிதுமின்றித் தெளிவான முடிவெடுத்தான்?’ என்று நினைத்த கணம் நடையை நிறுத்தி, ‘மீண்டும் காரமலை ஏறிவிடலாமா?’ என்று தோன்றியது.

வேட்டூர் பழையன் நிலைதடுமாறினான். ஆனாலும் சட்டெனத் தெளிந்தான். ‘வீழ்த்த முடியாத மனிதர் யார் இருக்கிறார்? காக்காவிரிச்சியையே வீழ்த்த முடிந்த  பாரியால் மனிதனை வீழ்த்த முடியாதா? எவ்வளவு பெரும்வீரனாக இருந்தாலும்  திருடிச்செல்பவனின் உள்ளம் அச்சங்கொள்ளத்தானே செய்யும். அதனைத் தடுக்க நினைப்பவன் வெற்றிபெறுவதற்கு வீரத்தைக் கடந்த ஆயுதங்களும் உண்டு. எண்ணங்கள் உருவேறியபடி இருக்க, வேட்டூர் பழையனின் கால்கள் பலமடங்கு வேகத்தோடு வேட்டுவன் பாறையை நோக்கிக் கீழிறங்கிக் கொண்டிருக்கின்றன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p4
கொற்றவைக் கூத்திற்குப் போனதிலிருந்து எவ்வியூரிலே தங்கியிருந்த மயிலா,  சில நாள்களுக்கு முன்புதான் கீழிறங்கி வந்தாள். வந்ததும் வேட்டுவன் பாறையிலிருந்த நீலனைப் பார்க்கப் போனாள்.  நீலனோ பகரி வேட்டைக்குச் செல்பவர்களோடு இணைந்து உள்காட்டுக்குப் போயிருந்தான். மூன்று நாள்களாக அவன் வந்து சேரவில்லை. அதன்பின் இருவரும் சந்தித்துக்கொண்டாலும் முழுப் பொழுதையும் சேர்ந்து கழிக்கும் வாய்ப்பின்றியே இருந்தது.

நேற்று பகலில்தான் இருவரும் சந்தித்தனர். மாதங்கள் கடந்ததால், தவித்தலையும் கண்களோடு மயிலா கேட்டாள், “நான் சொல்லும் இடத்துக்கு என்னை அழைத்துச்செல்.”

“எங்கே?” என்றான் நீலன்.

“சுனைவால் முடுக்கிற்கு.”

நீலன் எதிர்பார்க்கவில்லை. “வழக்கமாக அருகிலிருக்கும் குன்றுக்குத்தானே செல்வோம். இப்பொழுது ஏன் அங்கு அழைத்துச்செல்லச் சொல்கிறாய்?”

“காரணமிருக்கிறது. அழைத்துச்செல்.”

‘அங்கு சிறிய நீர்க்குட்டை மட்டுமே உண்டு. அதைக்காணவா அவ்வளவு தொலைவு செல்ல வேண்டும்?’ என நீலன் தயங்கினான்.

“ஏன் தயங்குகிறாய்?” எனக் கேட்டாள் மயிலா.

“சுனைவால் முடுக்கு, காரமலையின் பின்புறச்சரிவில் இருக்கிறது. நாம் போய்ச் சேரவே இரவாகிவிடுமே” என்றான்.

“ஆமாம். அது இருளுக்குள் இருந்து காணவேண்டிய இடம்” என்றாள்.

நீலனுக்குப் புரியவில்லை. “அவ்விடம் சிறிய நீர்க்குட்டை மட்டுமே உண்டு. நீ வேறு இடத்தை நினைத்துக்கொண்டு சுனைவால் முடுக்கைச் சொல்கிறாய் என்று நினைக்கிறேன்” என்றான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p5
“இல்லை. நான் தெரிந்தேதான் சொல்கிறேன். என்னை அவ்விடம் அழைத்துச்செல்.”

“வானில் கருமேகங்கள் ஏறிவருகின்றன. பொழுது மறைவதற்குள் மழை வந்துவிடும். இரவெல்லாம் கொட்டித்தீர்ப்பதற்கான வாய்ப்பிருக்கிறது” என்றான் நீலன்.

அவனது அறியாமையை  எண்ணிச் சிரித்தபடி மயிலா சொன்னாள், “அதற்காகத்தான் என்னை அழைத்துச்செல்லச் சொல்கிறேன்.”

இப்பொழுதும் அவனுக்குப் புரியவில்லை. `அது, கண்டுமகிழும் இடமுமில்லை; காதல்கொள்ள ஏற்ற இடமுமில்லை. அங்கு ஏன் அழைத்துச்செல்லச் சொல்லி இவ்வளவு வலியுறுத்துகிறாள்?’ எனச்  சிந்தித்தபடியே அவ்விடம் நோக்கி நடக்கத் தொடங்கினான் நீலன்.

மயிலாவுக்குக் கபிலரோடு இருந்த காலத்தைப்பற்றி நீலனிடம் பகிர்ந்துகொள்ள எண்ணற்ற செய்திகள் இருந்தன. அதேபோலத்தான் நீலனுக்கும். கடந்த வாரம் முழுவதும் உள்காட்டிற்கு வேட்டைக்குப் போனதால் சொல்லத் தவித்துக்கொண்டிருக்கும்  சொற்களோடு காத்திருந்தான்.

பொதுவாக எல்லையில் கவனம் செலுத்துவதால்,  பிற வீரர்களோடு சேர்ந்து உள்காட்டு வேட்டைக்கு நீலன் போவதில்லை. ஆனால், மயிலா இல்லாத வெறுமையைக் கடக்க முடியாததால் மனமாற்றத்திற்காகத் தான் இம்முறை பகரி வேட்டைக்குச் செல்பவர்களோடு இணைந்து போனான்.
 
கார்காலம், உயிரினங்கள் இணை சேரும் காலம். அதுவும் உள்காடுகளில் பெருங்குன்றுகளே ஒன்றினையொன்று கட்டியணைத்துக் கிடப்பதைப் போலத்தான் காட்சிக்குத் தெரியும். தும்பிகளில் தொடங்கி துதிக்கைத் திருகும் யானைகள் வரை இணையும் காலஅளவைப்பற்றியே பார்த்தும் கணித்தும் பேசிச்சென்றனர் அனைவரும்.

வேட்டையாட வேண்டிய விலங்கினைக்கூட எல்லா காலங்களிலும் வேட்டையாடிவிட முடியாது. இணை சேர வழியின்றிக் கூட்டங்களிலிருந்து தப்பிய விலங்குகள் மட்டுமே கார்காலத்து வேட்டைக்கு உகந்தவை. தாவரங்கள் ஒன்றிணையொன்று பின்னுவதுபோல விலங்குகளும் பின்னுகின்றன. விலங்குகள் பிடறிக்கவ்வி முயங்குவதைப்போல தாவரங்களும் முயங்குகின்றன.

பகரி வேட்டையாடச் செல்லும் அனைவருமே வயதில் மூத்த பெரியவர்கள்தான். அவர்களின் உதவிக்காக இளைஞர்கள் சிலர் உடன் சென்றனர். கார்காலத்தில் கனிந்தி ருக்கும் உயிரினங்களின் காதல் வாழ்வைப் பெரியவர்கள் எளிதில் கடந்துபோய்விடுவர். ஆனால், இளைஞர்களால் அப்படிக் கடக்க முடியவில்லை. இணைசேருதல் உயிரினப் பொதுமை. ஆனால், அக்காட்சி காணும் கண்களுக்குள் கடத்தும் உணர்வு பொதுமையானதல்ல. வாழ்வின் எந்நிலையில் அவன் நிற்கிறானோ, அந்நிலையோடு தொடர்புடையது.  இளைஞர்கள் நிற்கும் நிலையில் நிலைகொள்ளாமல் இருந்தனர். காமம் நிலை கொள்ளாமையை அடிப்படையாகக் கொண்டது. அது நடப்பன, ஊர்வன, பறப்பன என எவ்வொன்றிலுமிருந்து பாய்ந்துவந்து மனிதனைக் கவ்விப் பிடித்துக்கொள்ளக் கூடியது.

விளார் விளாராக உடம்பிற் பதிந்த தடம்போல, மண்ணிற்பதிந்து கிடக்கும் தடத்தைப் பார்த்ததும் ஒரு பெரியவர் சொன்னார், “இது புலியின் முதற்கூடுகை. வால்கொண்டு அடித்த தடங்கள் இவை” கடக்கும்பொழுது சொல்லும் செய்திகள் கடக்க முடியாதவைகளாக மாறுவதை இளைஞர்கள் உணர்ந்தபடியே இருந்தனர். மயிலாவின் சடை பின்னிய கூந்தலின் தடம் தனது மார்பில் பதிந்துகிடந்த நினைவு நீலனைத் தாக்கிச்சென்றது.

பெரியவர்கள் தடங்களை மண்ணிற் பார்த்துச் சொன்னபடிக் கடப்பதை, இளைஞர்கள் நினைவிற் பார்த்துக் கடக்க முடியாமல் நின்றனர். 

“மண்ணில் காதல்கொண்டால் அடுத்தவர் கண்ணில் தடம்படும் என்பதால்தான் முருகன் பரண் அமைத்தான். அடுத்து வந்தவர்கள் நான்கு காலூன்றிச் சிறுபரண் அமைத்து, இறுகக்கட்டிக்கொண்டனர். அதனைக் ‘கட்டில்’ என்றும் அழைத்தனர்” என்றார் முன்னால் போன பெரியவர்.
இளைஞர்களின் விழிக்குறிப்பறிந்து அவர் இப்பேச்சைத் தொடங்கினார். பேச்சு எந்தக் கணம் காமத்தின் பக்கம் போகிறதோ, அதன்பின் அதிலிருந்து விலகுதலை அதுதான் முடிவுசெய்யும்; நாம் முடிவுசெய்ய முடியாது.

விலகுதலும் இணைதலும் எப்பொழுது என்பதைக் கணிப்பதில்தான் இருக்கிறது காமத்தைக் கைக்கொள்ளும் வித்தை. அந்தப் பெரியவர் வித்தை தெரிந்த வீரனாக இருந்தார். இந்தவொரு குறிப்புச்சொன்னதும் இளைஞர்கள் மிகக் கவனமாக அவரைச் சூழ்ந்து வந்தனர். தனது சொல்லோடு அவர்களை இணைத்த பெரியவர் அதன்பின் வீடு திரும்பும்வரை அவர்கள் விலகாமல் பார்த்துக்கொண்டார். “தேனின் சுவை சுவைப்பதில் அல்ல, சுவைத்ததில் இருக்கிறது. காமமும் அப்படித்தான்” என்று அவர் சொன்ன சொல்லின் ஆழம்செல்ல அவர்களால் முடியவில்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p6
மயிலா மட்டுமல்ல, அந்தக் கிழவன் சொன்ன சொற்கள் அனைத்தும் நீலனைப் பின்தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தன. அவன் சுனைவால் முடுக்கு நோக்கி மிக வேகமாக அவளை அழைத்துச் சென்றுகொண்டிருந்தான். மழை இறங்கும்முன் காரமலையின் முகட்டைத் தாண்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு நடந்துகொண்டிருந்தான்.

சற்றுத் தொலைவில் சமதளமான இடமொன்றில் மண் பிரண்டு கிடந்தது. இவ்வளவு அகலமாக மண் பிரண்டு கிடக்கிறதே என்று சற்று அருகில் சென்றான். உள்ளுக்குள் இருந்து பிரண்ட மண் எங்கும் சிதறிக்கிடந்தது. அதன் நடுவில் பெரும்பள்ளம் உருவாகியிருந்தது. அவ்விடத்தை நின்று பார்த்தான் நீலன். அருகில் வந்த மயிலா, “இங்கு என்ன நடந்துள்ளது?” எனக் கேட்டாள்.

உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த நீலன் சொன்னான். “தங்களின் கூட்டத்திலிருந்து பிரிந்துவிட்ட காட்டெருமைகள் தனித்து அலைகின்றன. அவ்வகைக் காட்டெருமைகள் மிக ஆபத்தானவை. அவ்வாறு தனித்தலையும் இரு காட்டெருமைகள் எதிர்பட்டால், ஒன்றினையொன்று தாக்கத்துவங்கும். மிகக் கொடூரமாக அத்தாக்குதல் நிகழும். மரணம் வரை இரண்டும் தாக்குவதை நிறுத்தாது. மூன்று அல்லது நான்கு நாள்களுக்குக்கூட அத்தாக்குதல் நீடிக்கும். இறுதியில் அவற்றிலொன்று மடிந்து வீழ்ந்தபின்தான் அம்மோதல் முடிவுக்கு வரும்” என்று சொன்னவன் மேலும் சொன்னான், “இவ்விடத்தில் குறைந்தது மூன்று நாள்கள் இரு காட்டெருமைகள் சண்டையிட்டுள்ளன. இல்லையென்றால், இவ்வளவு பெரும்பரப்பில் மண் பள்ளமாகி இருக்காது” என்றான்.

“தோற்றது என்ன ஆகியிருக்கும்?” என்று மயிலா கேட்டாள்.

“தோற்றது ஓடத் தொடங்கும். ஓடத் தொடங்கிவிட்டாலே அதன் மரணம் அடுத்த சில அடிகளில் நிகழப்போகிறது என்று பொருள். வென்றது, அதனைக் குத்தித்தூக்கிப் பள்ளத்தில்  வீசியிருக்கும்” என்றான்.

பள்ளத்தை வியந்து பார்த்துக்கொண்டிருந்த மயிலாவை, “சரி. வேகமாகச் செல்ல வேண்டும்” என்று அழைத்தபடி விரைந்தான் நீலன். காரமலை உச்சியைத் தாண்டும்முன் மழை இறங்கத் தொடங்கியது. அங்கங்கு பாறை இடுக்குகளிலும் குகைகளிலும் அண்டியபடி மழை பார்த்து நகர்ந்தனர்.
நள்ளிரவில் பெருமழை கொட்டித்தீர்க்கும் பொழுது அவர்கள் சுனைவால் முடுக்குக்கு வந்துவிட்டனர். சுனையோரமிருக்கும் பாறைமறைப்பில் பதுங்கினர். எதிரிலிருந்த சிறியகுளம், கொட்டும் மழையில் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. ‘இவ்விடம் வர ஏன் மயிலா விருப்பப்பட்டாள்?’ என்று நீலன் சிந்தித்துக்கொண்டே இருந்தான். மழை நின்றது. பாறைகளின் மேலிருந்து பாய்ந்து கடக்கும் நீரினோட்டம் மட்டுப்படத் தொடங்கியது.

சுனைக்கு முன் பெருகித்தேங்கியிருந்த நீர் முழுவதும் சிறிதுநேரத்தில் வழிந்தோடியது. தேங்கிய நீர் எப்பொழுது வடியும் என்று காத்திருந்த மயிலாவின் கண்கள் இங்குமங்குமாக அலைமோதிக்கொண்டிருந்தன. நீர் முழுமையும் வழிந்தோடியபின் அவள் காணவந்த காட்சியைக் கண்டாள். மனம் மகிழ்வில் மலர்ந்தது. பாறையில் சாய்ந்தபடி குகையைப் பார்த்து உட்கார்ந்திருந்த நீலனின் தோள்தொட்டுத் திருப்பினாள்.

‘எதைப் பார்க்கச் சொல்கிறாள்?’ எனக் குழம்பியபடியே அவன் திரும்பிய கணம், அப்படியே சிலிர்த்து அடங்கினான். அந்தச் சிறு நீர்த்தேக்கம் முழுவதும், சின்னஞ்சிறு சுடர்கள் எரிந்துகொண்டிருந்தன.

நீலனுக்கு, தான் காண்பதை நம்ப முடியவில்லை. “என்ன இது... விளக்கேற்றி வைத்ததைப்போல எங்கும் அசையும் சுடர்?”

அவன் வியந்துசொல்லி முடிக்கும்முன் மயிலா சொன்னாள், “இதுதான் தீப்புல்.”

நீலனின் கண்கள் சிற்றொளி கண்டு உறைந்து நின்றன. நீர்பட்டு அடங்கியவுடன் ஒளிரும் தன்மைகொண்டது தீப்புல். மின்மினிப்பூச்சியின் உடல்போல இப்புல்லின் உடல் இன்னும் சிறிதுநேரம் ஒளிர்ந்து அடங்கும். அதனைப்பற்றி நீலன் கேள்விப்பட்டிருக்கிறான். அறுபதாம் கோழியின் கழிவில்தான் இப்புல் முளைக்கிறது என்று சொல்வதும் அவன் அறிந்ததே. ஆனால், இன்றுதான் முதன்முறையாகப் பார்க்கிறான்.

மயக்கம் நீங்க நெடுநேரமானது. இருளுக்குள் நெளியும் ஒளியின் அழகைவிட்டுக் கண்கள் எப்படி விலகும்? விலகாத கண்களைத் தன்னை நோக்கித் திருப்பக் கன்னம்தொட்டு இழுத்தாள் மயிலா.

கருவிழி, தீப்புல்லில் நிலைகுத்தி நிற்க, முகம் மட்டும் திரும்பியது.  “இவ்விடம் தீப்புல் இருக்கிறது என்பதை நீ எப்படி அறிந்தாய்?”

மெல்லிய காற்றுக்குப் புற்கள் ஆட, தீயின் நாவுகள் எங்கும் அசைந்தாடின. பார்க்கக் கிடைக்காத காட்சியை இமை மூடாமல் பார்த்தபடியே சொன்னாள். “இவ்விடம் தீப்புல் இருக்கிறது என்பதை அங்கவை சொன்னாள்.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p7
வியப்பு அடுத்த கட்டத்தை அடைந்தது.

“அவள் எப்படி இவ்விடம் அறிந்தாள்?”

“அவளின் காதலன் சொன்னானாம்.”

வியப்பு உறைநிலை அடைந்ததைப் போலானது.

“இது எப்பொழுதிருந்து?” எனக் கேட்டான் நீலன்.

சற்றே சிரித்தபடி சொன்னாள், “நாம் தொடங்கி நீண்டகாலத்துக்குப் பின்தான் அவர்கள் தொடங்கியுள்ளனர்” சொல்லும் பொழுது முகம் முழுவதும் தீப்புல்லாய் ஒளிர்ந்தது.

கைநீட்டி அருகிருந்த தீப்புல் ஒன்றைப் பறித்தாள். அவனை தனது மடியிற்கிடத்தி புல்கொண்டு மார்பில் எழுதினாள்.

சற்றே கூசிச் சிலிர்த்தபடி அவன் கேட்டான், “என்ன செய்கிறாய்?”

“தீப்புல்கொண்டு உன் பெயர் எழுதுகிறேன்.”

அவன் அமைதியானான். தீயின் நாவுகள் அவன் உடலுக்குள் இறங்கிக்கொண்டிருந்தன. மழையில் குளிர்ந்து நடுங்கிய உடலுக்குள்ளிருந்து அனல் மேலேறிவரத் தொடங்கியது. தீயின் நாவுகள்கொண்டு எழுதியவளின் மீது, நாவின் நுனிகொண்டு தீ ஊற்றினான் நீலன். சுடர்விட்டு எரிந்தது தீ. சுனை நீரோடையின் ஈரம்பட்டு நனைந்த பாறைகளின் மீது, அவர்களது மேனியின் இளம்சூடு படர்ந்து மறைந்தது.

மயங்கி, கிறங்கி, உருகி, கரைந்த நீலன் அவளது மடியினில் தலைசாய்த்தான். அவள் அவனது தலையைக் கோதியபடி தீப்புல்லின் அசைவுகளைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். புல்லின் அகலத்துக்கும் உயரத்துக்கும் ஏற்றாற்போல் திரியின் சுடர் அசைந்தாடிக் கொண்டிருந்தது. இருளப்பிக்கிடக்கும் காட்டுக்குள் ஒளிரும் சுடர்களைப் பார்த்தபடியே அவள் மயங்கிக் கண்சொருகினாள்.

கடைசியாய் இருந்த தீப்புல் மீண்டும் நீரில் மூழ்கியது. மயங்கிய நிலையிலிருந்த மயிலா சற்றே கவனம்கொண்டு பார்த்தாள். அங்குமிங்குமாக மீண்டும் தீப்புல்கள் நீரில் மூழ்கின. சுனைநீரின் ஓசையில் வேறு ஓசை கேட்கவில்லை. கண்ணிமைத்து உற்றுப்பார்த்தாள். கால்கள் மிதித்தோடி அவ்விடத்தைக் கடந்து கொண்டிருந்தன. மிருகங்கள் ஓடுகின்றனவோ என நினைத்தாள். ஆனால், அவளின் கண்ணிற்பட்ட உருவங்கள் மனிதவடிவில் இருந்தன. மயக்கம் கலைந்து விழித்துப் பார்ப்பதற்குள் ஓடி மறைந்துவிட்டன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p2
மடியிற்கிடந்த நீலனிடம் சொன்னாள், “மனிதர்கள் ஓடுகிறார்கள்.”

“எங்கு?”

“காட்டுக்குள்.”

சற்றுத் தலைநிமிர்ந்து பார்த்தான். “இந்த இருளுக்குள் விலங்குகள் மட்டுமே மலைப்புதரில் நுழைந்து ஓட முடியும்?”  

‘விலங்குகளைத்தான் நாம் தவறாக நினைத்து விட்டோமோ?’ என்று மயிலாவுக்குத் தோன்றியது. தோன்றிய கணமே இல்லையென்ற முடிவுக்கு வந்தாள். அவளின் கண்கள் உருவங்களைத் தெளிவாகவே பார்த்திருந்தன.

பொழுதுவிடியும்வரை அவள் பதற்றங் கொண்டே இருந்தாள். நன்றாக விடிந்ததும் அவ்விடம் போய்ப் பார்த்தனர். நீர்நிலை கடந்து கிடந்தன மனிதர்களின் காலடித்தடங்கள்.

நீலனுக்குப் பொறி கலங்கியதுபோல இருந்தது. அவனால் நம்ப முடியவில்லை. ‘யார் இவர்கள், ஏன் நள்ளிரவில் இப்படி ஓடினர், எதை எடுத்துச் செல்கின்றனர்?’ வினாக்கள் உடலை வெறியேற்றின. “எத்தனை பேர் இருந்தார்கள்?”

“பத்துக்கும் மேல்” என்றாள் மயிலா.

“நீ வழிபார்த்து வா. நான் புறப்படுகிறேன்” எனச் சொல்லி ஈட்டியேந்தியபடி அவர்கள் சென்ற திசையில் காரமலையின் மேல்விளிம்பை நோக்கி ஓடத் தொடங்கினான் நீலன்.

எதிரிகள் காரமலையின் விளிம்பை நரிப்பாறையின் முகட்டோரமாகக் கடந்தனர். சற்றுத் தொலைவிலிருந்தபடி அவர்களைப் பார்த்த கூவல்குடி கிழவன் நீட்டியிழுத்து ஓரோசையைக் குறிப்பிட்ட பாறையை நோக்கி வீசினான். பாறையிடுக்கில் மோதிய ஓசை காரமலையெங்கும் எதிரொலித்தது. நரி ஊளையிடும் ஓசையது. புதிய ஆட்களால் எளிதில் ஐயங்கொள்ள முடியாது. ஆனால், பறம்பின் மக்களுக்குத் தெரியும்.

கிழவன் ஓசைகொடுத்த இடத்தை மலை யெங்கும் நிற்கும் கூவல்குடியினர் கணித்தனர். நரிப்பாறையைக் கடந்தோடும் எதிரிகளைப்  பின்தொடர்ந்து ஓசையெழுப்பியபடி அவர்கள் ஓட வேண்டும். எனவே, தாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்து அவர்களை நோக்கி குறுக்குவெட்டாக இறங்கிக்கொண்டிருந்தனர். தேக்கனும் அவ்வாறே இறங்கிக்கொண்டிருந்தான்.

காத்திருந்த பாரி ஓசை கேட்டதும் அவர்களின் ஓட்டத்தைக் கணக்கிட்டு, தானிருக்கும் இடத்தி லிருந்து ஊடறுத்து இறங்கினால் எவ்விடம் அவர்களின் மீது தாக்குதல் தொடுக்கலாம் என்பதைக் கணித்து சரசரவென கீழிறங்கத் தொடங்கினான்.

ஓசை கேட்டதும் கீழ்மலையில் இருந்த வேட்டூர் பழையனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவனால் நீலனைக் கண்டறிய முடியவில்லை. நீலனைப்போன்ற சிறந்த வீரனில்லாது இவ்வளவு வலிமை மிகுந்த எதிரியை எதிர்கொள்வது கடினம். ஆனாலும் கூவல்குடியினரின் ஓசை கேட்டதும் எதிரிகள் இறங்கும் திசை நோக்கி வீரர்களோடு ஆயத்தமானான் பழையன்.

ஓசை கேட்ட சிறிதுநேரத்திலே காரமலையின் முகட்டை அடைந்தான் நீலன். இது நரியின் ஊளையல்ல; கூவல்குடியினரின் குரல் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். என்ன நடக்கிறது இவ்விடம் என்ற குழப்பம் அவனைத் தாக்கியது. எதிரிகள் எதையோ செய்துவிட்டுத் தப்பி ஓடுகின்றனர். இந்நேரத்தில் அவர்களை எதிர்கொண்டு வீழ்த்த வேட்டுவன் பாறையில் இல்லாமல், இப்படிப் பின்னால் ஓட வேண்டியதாகி விட்டதே என்று வேதனை உருவானது. வேதனை, கட்டுக்கடங்கா வேகங் கொள்ளச்செய்தது.

அனைத்துத் திசைகளிலிருந்தும் எதிரிகளை நோக்கிப் பறம்புமக்கள் இறங்கிக் கொண்டிருக்கும் பொழுது காலம்பனின் முகம் இதுவரை இல்லாத பெருமகிழ்வைக்கொண்டது. காரமலையின் மேல்விளிம்பைக் கடந்ததும் அவன் முடிவு செய்துவிட்டான், ‘பச்சைமலைத் தொடரின் இரண்டு மலைகளைக் கடந்து கடைசி மலையின் விளிம்பையும் கடந்துவிட்டோம். இனி இந்தவொரு சரிவு மட்டுமே. இச்சரிவில் பெரும்படையே எதிர்வந்து நின்றாலும் அடித்துத்தூக்கும் வல்லமை உண்டு. இதுவரை இல்லாத அளவு இருபதுக்கும் மேற்பட்ட வர்களோடு இப்பொழுது ஓடுகிறோம். இப்பெரும் எண்ணிக்கையை எதிர்த்து நிற்க எவராலும் முடியாது. கண்ணுக்கு எதிரில் பறம்பின் எல்லை தெரியத் தொடங்கிவிட்டது. மலையடிவார சமதளக்காடுகள் கரம்விரித்து அழைக்கின்றன.’

விடாமல் ஓடிவந்த அயர்வும் சோர்வும் கணநேரத்தில் மறைந்தன. கால்கள் மேலும் வேகங்கொண்டன. சரிவுப்பாறையில் பெருங்கற்கள் உருள, கால்கள் ககனத்தில் பறந்துகொண்டிருந்தன. காலம்பனின் மனம் இலக்கை அடையப்போகும் நேரத்தைத் துல்லியமாகக் கணித்தது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 4:36 pm

நேற்று அதிகாலை நாய்வாய்ஊற்றின் இடப்புறப் பாறையின் மீதிருந்துதான் பாரி தனது ஆயுதத்தை உருவாக்கத் தொடங்கினான். கொடிமூக்கனைப் பிடித்தபடி அலவனும் கீதானியும் நின்றிருந்தனர். மற்ற இருவீரர்களும் உடைமர முட்களை ஒடித்துமுடித்து அடுத்து என்ன செய்யப்போகிறான் பாரி என்று எதிர்பார்த்து நின்றிருந்தனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p2
“கொடிமூக்கனின் வாயைத்திற” என்றான் பாரி.

அலவன் அதன் கழுத்துப்பகுதியில் இருக்கும் தாடையை அழுத்தப்போகும்பொழுது பாரி சொன்னான், “அது சிலநேரம் நஞ்சை பீச்சியடிக்கக் கூடியது, அப்பக்கம் திருப்பிக் கொள்.”

அலவன் இடப்புறம் திருப்பியபடி அடிக்கழுத்தை அமுக்கிப் பெருவிரலை சற்று மேலேற்றினான். மேலுங்கீழுமாகத் தாடை அகன்றதும் கண்ணிமைக்கும் நேரத்தில் நஞ்சைப் பீய்ச்சியடித்தது. நஞ்சின் சீற்றம் கண்டு அதிர்ந்தனர்.

பெரிதுமில்லாமல், சிறியதுமில்லாமல் நடுத்தரமான நீளத்தோடு இருந்த முட்களைக் கை நிறைய அள்ளி கொடிமூக்கனின் வாய்க்குள் போட கையை அருகில் கொண்டுவந்தான் பாரி. அவனது உள்ளங்கையிலிருந்த ரேகை இடுக்கின் வழியே முட்கள் வரிசையாக இறங்கிக் கொடிமூக்கனின் நாக்கோடு இணைந்து படிந்தன. அகன்ற அதன் வாய்க்குள் சுமார் முப்பது முட்கள் அடங்கின. முட்கள் எதுவும் மேல்நோக்கி இல்லாமல் சமநிலையில் கிடப்பதைப்போலத்  தாடையைச் சற்றே அசைத்துச் சமப்படுத்தினான் அலவன். 

“இப்பொழுது வாயை மூடு” என்றான் பாரி.

கழுத்துப்பகுதியை அழுத்திக்கொண்டிருந்த அவனது விரல்கள் இப்பொழுது மேல்வாயையும் கீழ்வாயையும் சேர்த்து அமுக்கி வாயை மூடின. அலவனின் கையெலும்பை நொறுக்குவதைப்போல் கொடிமூக்கன் இறுக்கிச் சுருண்டுகொண்டிருந்தது. பாதி உடலைக் கீதானிப் பிடித்திருந்தான். ஆனாலும், முறுக்கித் திருகும் அதன் ஆற்றலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“எருக்குநாரைக்கொண்டு வாயைக்கட்டு” என்றான் பாரி.

வீரர்கள் இங்குமங்குமாக அலைந்து நாரெடுத்து வந்தனர். கொடிமூக்கனின் வாயை நார்கொண்டு இறுகச் சுற்றினர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p3
“குறைந்தது மூன்று சுற்றாவது சுற்று. முடிச்சு, எக்காரணம்கொண்டும் கீழ்த்தாடையில் இருக்கக் கூடாது. மேல்தாடையின் மேலே இருக்க வேண்டும்” என்றான் பாரி. அவனது ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் இருக்கும் பொருள் அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. 

அதன் வால் சுழற்றிச் சுழற்றி அடித்துக்கொண்டிருந்தது. உடலின் கீழ்ப்பகுதி வரை அழுத்திப்பிடித்திருந்த கீதானி வால்பகுதியையும் சேர்த்து அமுக்கிப்பிடிக்க முயலும்பொழுது பாரி சொன்னான், “வாலினைச் சுழற்றி அடிக்கட்டும். உன்மேல் படாமல் மட்டும் பார்த்துக்கொள்” என்றான்.
“சரி” யென்று சொல்லி அதற்குத் தகுந்தாற்போல் அலவனும் கீதானியும் கொடிமூக்கனைப் பிடித்துக்கொண்டனர். கொடிமூக்கன் தாடையைத் திறக்க முயலும்போதெல்லாம் அதன் நஞ்சுப்பை விரிந்து, வாய் நிறைய நஞ்சை உமிழ்ந்துகொண்டே இருந்தது. வாய்க்குள் இருக்கும் முட்கள் நஞ்சில் ஊறிக்கொண்டே இருந்தன.

எப்பொழுதெல்லாம் வாலைச் சுழற்றுகிறதோ அப்பொழுதெல்லாம் நஞ்சுப்பை திறந்தது. அதனால்தான் வாலைச் சுழற்றி அடிக்கட்டும் என்றான் பாரி. 

வாயைக்கட்டியவுடன் மலையேறத் தொடங்கினர். விரைந்து ஓட வேண்டிய தேவையில்லை. ஆனாலும், உள்ளத்தின் வெறி வேகத்தைக் கூட்டியபடியே இருந்தது. காரமலையின் நான்கில் ஒரு பங்கைக் கடந்தனர். முதலில் கையெலும்பு நொறுங்குவதைப்போல முறுக்கிய கொடிமூக்கன் சற்றே அமைதியடையத் தொடங்கியது. அதனைக் கவனித்த பாரி, “வீரனிடம் பாம்பினைக் கொடு” என்றான். “சரி”யென்று சொல்லி அலவன் அதனை வீரனின் கைக்கு மாறினான்.வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p4

வாங்கிய கணத்தில் மீண்டும் வெகு ஆற்றலோடு உடல்முறுக்கி சீறித் தலைநெளித்து எழப்பார்த்தது. வீரன் சற்றே பதற்றமடைந்தான். அவனது கை முழுவதும் சுற்றித் திருகியது. வால் பகுதியின் துடிப்பு மிக அதிகமானது. புதிய உடற்சூட்டுக்கு மாறும்பொழுது அது மீண்டும் எழுச்சிகொண்டு தாக்கத் தலைப்படும். வால்சுழற்றி விடாது அடிக்க, நஞ்சுப்பை இடைவிடாது நஞ்சை உமிழும். அதனால்தான், குறிப்பிட்ட இடைவெளி வந்ததும் பாரி அலவனிடமிருந்து இன்னொருவனுக்குக் கொடிமூக்கனை மாற்றினான்.

இப்பொழுது இன்னும் வேகத்தோடு அவர்கள் காரமலையின் மீது ஏறிக்கொண்டிருந்தனர். ‘நேற்று இரவு முழுவதும் பெருமழை கொட்டித்தீர்த்தது. எனவே, எதிரிகளால் குத்துக்கல் பள்ளத்தாக்கில் ஓரடிகூட எடுத்துவைத்திருக்க முடியாது. சரியான இடம் பார்த்து பதுங்கினால் மட்டுமே அவர்கள் உயிர்தப்பிக்க முடியும். இல்லையென்றால், நீரின் வேகம் அவர்களை இழுத்துவந்து பெரும்பாறையில் அடித்துச் சிதறவைக்கும். அவர்கள் மழை நின்ற அதிகாலையில்தான் இறங்கத் தொடங்குவார்கள்.

பகல் முழுவதும் இறங்கினால்தான் பொழுதடையும் நேரம் சமதளத்தை அடைய முடியும். அதன்பின் முழுவேகத்தோடு ஓடுவார்கள். பகலும் இரவுமாக ஓடினாலும் காரமலையின் உச்சியை வந்தடைய மறுநாள் பொழுதுவிடியும்’ என்று கணித்தபடியே பாரி நடந்துகொண்டிருந்தான்.
அவனது கண்ணில் இச்சி மரமொன்றுபட்டது. “அதனது செதில்களில் வழிந்திருக்கும் பிசினை எடுத்துக்கொள்” என்று கீதானியைப் பார்த்துச் சொன்னான். கீதானியும் அவ்வாறே பிசினைப் பிய்த்தெடுத்துக்கொண்டான். ஓட்டம் படுவேகமாக இருந்தது. நடுப்பொழுது கடந்ததும் கொடிமூக்கனை இன்னொருவீரனின் கைக்கு மாற்றச்சொன்னான் பாரி. புதியசூடு கண்டு மீண்டும் சீறி வால் முறித்து, நஞ்சைக் கக்கியது. முட்கள் நஞ்சினைக் குடித்து ஊறின.

பாரி மிக நிதானமாக ஆனால், தெளிவான தயாரிப்புகளோடு போய்க்கொண்டிருந்தான். கடக்கும் வழியில் மலைப்பருத்தியைப் பார்த்தான். “அதன் இலையைப் பறித்துக்கொள்” என்றான். கீதானி பறித்துக்கொண்டான்.  இடுக்குப்பாறையின் வழியே வேர்களைப் பிடித்து மேலேற வேண்டிய சூழல் வந்தது. ஒருகையில் பாம்பைப் பிடித்துக்கொண்டிருக்கும் வீரனால், வேர்களைப் பிடித்து மேலேற முடியாது. என்ன செய்யலாம் என்று சிந்தித்தனர்.

‘பெரும்பாறையைக் கடக்க இவ்வழியன்றி வேறுவழியைப் பயன்படுத்தினால் அதிகத் தொலைவு நடக்க வேண்டியிருக்கும். இப்பொழுது கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்வது நல்லதல்ல. குத்துக்கல் பள்ளத்தாக்கைவிட்டுச் சமதளத்தை அடைந்துவிட்டால் எதிரிகள் என்ன வேகம் எடுப்பார்கள் என்பதை முடிவுசெய்வது கடினம். நாம் மிகவிரைவாக முன்நோக்கிச் செல்ல வேண்டும்’ என்று சிந்தித்த பாரி கொடிமூக்கனை அலவனிடம் கொடுக்கச் சொன்னான். உடற்சூடு மாறியவுடன் அது மீண்டும் வால்முறுக்கி நஞ்சை உமிழ்ந்தது. வேர்களால் அலவனை முறுக்கிக்கட்டி மேலே தூக்குவது எனப் பாரி முடிவெடுத்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p1
சரசரவென மேலேறியவர்கள் அவ்வாறே அலவனைக் கட்டித்தூக்கினர். வேர்கள் உடலையும் பாம்பு கையையும் சுற்றி இருக்க அலவன் காற்றில் சுழன்றபடி மேலேறிக்கொண்டிருந்தான். பாறையை மேலேறிக்கடந்ததும் மீண்டும் ஓட்டம் தொடங்கியது. ஓட்டம் ஒருவனின் காலில் இருந்து இன்னொருவனின் காலுக்கு விரைந்து பரவக்கூடியது. முன்செல்பவனின் கால்கள் தன்னியல்பிலேயே பின்வரும் கால்களை இயக்கத் தொடங்கிவிடுகிறது.

அவர்கள் விரைவுகொண்டு ஓடினர். சற்றுத் தொலைவு கடந்ததும் உக்காமூங்கில் மரம் பெரும்புதரெனக்  கிடந்தது. “அதன் இலைகளையும் பறித்துக்கொள்” என்றான் பாரி. நீண்ட ஈட்டிபோல இருக்கும் அதன் இலைகளையும் வீரர்கள் பறித்துக்கொண்டனர்.

நடையின் வேகம் குறையாமல் இருந்தது.  முந்தைய நாள் இரவில் பெய்த பெருமழையால் காடு  குளிர்ந்து எங்கும் மணம்  வீசிக்கொண்டிருந்தது. அனைத்தையும் கவனித்தபடி நடந்த பாரி எதனின்பாலும் எண்ணங்களைச் செலுத்தாமல் போய்க்கொண்டிருந்தான். அவன் மனமெங்கும் எதிரிகளே நிறைந்திருந்தனர்.

மாலைப்பொழுதுக்குள் காரமலையின் உச்சியை அடைந்தனர். ‘தேக்கனும் இந்நேரம் கூவல்குடியினரை அழைத்து வந்திருப்பான். அவர்களும் மலைவிளிம்புகளில் அணிவகுத்திருப்பர்’ என்று எண்ணியபடிப் பார்வையின் கோணம் மறையாத இடத்தைத் தேர்வு செய்தான். 

அனைவரையும் நன்றாக ஓய்வெடுக்கச் சொன்னான். இரவு முழுக்கக் கொடிமூக்கனைக் குறிப்பிட்ட நேர இடைவெளியில் கைமாற்றிக்கொண்டே இருந்தான். நஞ்சுப்பை விடாது கக்கிக்கொண்டே இருந்தது. ஒரு பகல் முழுவதும் நஞ்சூரிய முட்கள் உடலில் தைத்தால், அதன் நஞ்சைத் தாங்கும் சக்தி எந்த உயிருக்கும் கிடையாது. ஆனால், இப்பொழுதோ பகலும் இரவுமாக இருமடங்கு நேரம் முட்கள் நஞ்சேறிக்கிடக்கின்றன. இதன் வீரியம் அளவற்றதாக இருக்கும். கொம்பேறி மூக்கனை ஒப்பிட்டால் கொடிமூக்கனின் நஞ்சு வீரியம் குறைந்ததுதான். ஆனால், நஞ்சேறும் பதத்துக்கு இருமடங்கு நேரம் கிடைத்ததால், இதுவும் அளவற்ற வீரியத்தோடுதான் இருக்கும்.

காரமலையின் உச்சியின் மீது இரவு முழுவதும் கவனம்கொண்டிருந்தனர். பொழுது விடியத் தொடங்கியது. கதிரவனின் ஒளிக்கீற்று மேலேறின. வீரர்கள் வைத்திருந்த அம்பின் முனையைக் கத்தியால் சிறிதாகப் பிளக்கச் சொன்னான் பாரி. அவர்களும் அவ்வாறே பிளந்தனர்.
குகையை ஒட்டி உப்பறுகஞ்செடி இருந்தது. “அதன் இலையையும் கணுவையும் உடைத்தால் பால் வரும். அந்தப் பாலை விரல்கள் முழுவதும் தேய்த்துக் கொள்” என்று கீதானியைப் பார்த்துச் சொன்னான். கீதானியும் அதன் கணுவையும் இலையையும் உடைத்தான். பாலூறி வந்தது. ஊற ஊறத் தனது வலதுகையின் ஐந்து விரல்களிலும் படும்படி அதனைத் தேய்த்துக்கொண்டான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p5
“கொடிமூக்கனின் வாய்க்கட்டைக் கழற்று” என்றான்.

அலவன் பாம்பைப் பிடித்திருக்க வீரனொருவன் எருக்குநாரின் முடிச்சை அவிழ்த்து கட்டைக் கழற்றினான். கழற்றிய வேகத்தில் அது வாய்திறந்து சீறாமல் இருக்க அலவனின் விரல்கள் அதன் தாடையை அழுத்திப் பிடித்திருந்தன. மலைப்பருத்தி இலையைப் புரட்டிவைத்து, கொடிமூக்கனின் வாயை அதில் கவிழ்க்கச்சொன்னான். அலவனும் அவ்வாறே செய்தான். நஞ்சேறிய முட்கள் அவ்விலையில் கொட்டப்பட்டன. முட்களோடு சேர்ந்து கொடிமூக்கனின் நஞ்சு எச்சிலாய் வடிந்துகொண்டிருந்தது. வடியும் நஞ்சுநூல் அறுபட நேரமானது. பொறுமையோடு அனைவரும் அதைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

முற்றிலும் வடிந்தவுடன், “அதனை வெளியில் போய்விட்டுவிடு” என்றான் பாரி. அலவன் குகைக்கு வெளியே போய்ப் புதர் ஒன்றின்மீது கைநீட்டி, அது வெளியேற வாகாகப் பிடியைத் தளர்த்தினான். அம்பு பாய்வதைப்போல அவன் கையிலிருந்து பாய்ந்து மறைந்தான் கொடிமூக்கன்.
மலைப்பருத்தியின் மீது கொட்டிக்கிடப்பவை உடைமர முட்கள் அல்ல, நஞ்சு நிரம்பிய பாம்பின் பற்கள். அவற்றைப் பார்த்த வீரன் ஒருவன், `ஒரே ஒரு பாம்பிலிருந்து இத்தனை பாம்புகளை உருவாக்கிவிட்டானே பாரி’ என வியந்து நின்றான்.

பாரி சொன்னான், “தாக்குதல் தொடுக்கும்போது ஒவ்வொரு முள்ளாய் எடுத்து அம்பின் முனையில் இருக்கும் சிறுபிளவுக்குள் பொருத்தித் தர வேண்டியது அலவனும் கீதானியும் செய்ய வேண்டிய வேலை. முட்களை மிகக்கவனமாக எடுக்க வேண்டும். எடுக்கும்பொழுது சின்னதாய்த் குத்தினாலும் எடுப்பவனின் மேலே நஞ்சு ஏறிவிடும்”  என்றான். அதனால்தான் உப்பறுகஞ்செடியின் பாலை விரல் முழுவதும் தேய்த்துக்கொள்ளச் சொன்னான் பாரி. பால்தேய்த்துக் காய்ந்த விரல்களின் மேல் உக்காமூங்கிலின் இலையைக் கசக்கித்தேய்த்தபடி இச்சிப் பிசினை பூசிக்கொள்ளச் சொன்னான். பிசினைப் பூசிக்கொண்ட சிறிதுநேரத்திலே அது காய்ந்து இறுகி விரல்கவசம்போல் ஆனது. இனி முட்கள் விரல்களில் தைக்க முடியாது. கீதானியால் நஞ்சேறிய முட்களை எடுத்துத் தர முடியும். அவனுக்கு நஞ்சால் தீங்கும் நேராது. இந்த விரல்கவசம் எதுவும் அலவனுக்குத் தேவையில்லை. அவன் பாம்பின் வாயில் இருந்தே அதனை எடுத்துத்தரும் வல்லமை கொண்டவன்.

பாரியின் செய்முறைகள் சிறிது சிறிதாகப் புரியத் தொடங்கும்பொழுது உருவான நம்பிக்கை அளவற்றதாக இருந்தது. வீரர்கள் தாக்குதலுக்கு ஆயத்தமாயினர். பெருவில் ஒன்றைப் பாரிக்குத் தந்தனர். மற்ற இருவில்களை ஏந்தி நின்றனர் வீரர்கள் இருவரும்.

பாறையின் மேல் நின்று காரமலையின் நாலாபுறமும் கண்களைச் சுழலவிட்டுக் கொண்டிருந்தான் பாரி. அவன் கணித்த நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. ‘நேற்று இரவு சிறிதுநேரம் கனமழை பெய்ததால் எதிரிகளின் ஓட்டம் சற்றே தடைபட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. அதுதான் இந்தத் தாமதத்துக்குக் காரணம்’ என்று மனதுக்குள் கணக்குப்போட்டுக் கொண்டிருந்தான்.

பாரியைச் சுற்றி நான்குபேரும் பாய்ந்துசெல்லத் தயார் நிலையில் இருந்தனர்.  கைவிட்டுப்பிரியும்பொழுது கொடிமூக்கனிடம் இருந்த சீற்றம், இப்பொழுது நான்குபேரின் உடலிலும் இருந்தது. நஞ்சேறிய முள்ளும், பகையேறிய கண்ணும், முறுக்கேறிய நரம்புமாக அவர்கள் கொதிப்பேறி நின்றிருந்தனர். காரமலையின் கீழ்த்திசைக் காட்டைக் கிழித்துச்செல்லக் கால்கள் காத்திருந்தன. வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p6

பொழுதுவிடிந்து நீண்ட நேரமாயிருந்தது. காடெங்கும் இருந்து பறவைகள் கலைந்து பறந்தன. கண்கள் இங்குமங்குமாக அலைமோதிக்கொண்டிருந்தன. சற்றும் எதிர்பாராத திசையிலிருந்து நரி ஊளையிடும் ஓசை எதிரொலித்தது. இது கூவல் குடியினரின் ஓசை. எதிரிகள் நரிப்பாறையின் வழியே காரமலை விளிம்பைக் கடந்துள்ளனர். கணநேரத்தில் பாரி எல்லாவற்றையும் கணித்தான்.

தானிருக்கும் இடத்திலிருந்து அவர்கள் இறங்குமிடத்திற்குச் செல்ல ஆகும் நேரத்தையும் வழித்தடத்தையும் அவனது மனம் திட்டமிட்டது. கணிப்புகளை விஞ்சும் வேகத்தில் கால்கள் பாய்ந்துகொண்டிருந்தன. நெடுந்தொடர்கொண்ட காரமலை, குன்றுகளும் பிளவுகளும் நிறைந்தது. பாரி இருக்குமிடத்திலிருந்து இரு பெரும்பிளவுகள் தாண்டி அங்கு செல்ல வேண்டும். ‘கூவல்குடியைச் சேர்ந்த பிறரும் அவர்கள் இறங்கும் திசைநோக்கி இந்நேரம் பாய்ந்து சென்றுகொண்டிருப்பர். எதிரிகளின் ஓட்டம் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஓசையாகக் காடெங்கும் எதிரொலிக்கும்’ எனப் பாரியின் மனம் எண்ணிக்கொண்டிருந்தது.

மலைச்சரிவில் ஓடும் வழித்தடத்தைக் கண்கள் பார்த்திருக்க, கூவல்குடியினர் எழுப்பும் ஓசையைக் காது கூர்மையாய் கவனிக்க, கால்கள் இணையற்ற வேகத்தில் பாய்ந்து கொண்டிருந்தன.

லைச்சரிவில் கால்களில் மிதிபட்டுக் கற்கள் உருண்டு தெறித்தன. கதிரவன் மேலேறுவதைப் பார்த்தபடி காலம்பன் ஓடிக்கொண்டிருந்தான். ‘பறம்பு வீரர்கள் எப்படியும் மறிக்க முயல்வார்கள். வேட்டுவன் பாறையின் அருகே ஓர் ஊர் உள்ளது. அப்பக்கம் போகாமல் வேறு திசைநோக்கி இறங்க வேண்டும்’ என்று சிந்தித்தபடியே அவன் ஓடினான். வெற்றியின் எல்லையை நெருங்கும்போது களைப்பு தானே மறைந்து போய்விடும்; புது உத்வேகத்தை எண்ணத்தின் வழியே உடல் எடுத்துக்கொள்ளும்.

அவர்களுடைய ஓட்டத்தின் வேகம் இவ்வளவு கூடுவதற்கு அதுவே காரணம். காலம்பனின் கவனம் இறங்கும் திசையில், கீழே மறித்துத் தாக்க வாய்ப்புள்ள இடங்கள் பற்றியே இருந்தது. பின்னால் அவ்வப்பொழுது எழும் ஓசையை அவன் கவனம் கொள்ளவில்லை.

காரமலையில் நான்கில் ஒரு பகுதித் தொலைவைக் கடந்தபொழுதுதான் அவனது கவனம் சற்றே அதன்மீது சென்றது. இரண்டொரு முறை நரி ஊளையிடும் ஓசை கேட்டது. உச்சிமலையின் மீது நரிக்கென்ன வேலை என்று சிந்திக்க நேரமின்றி ஓடிக்கொண்டிருந்தான். பின்னர் காட்டுக்கோழியின் கூவல் ஓசை கேட்டது. கூவலின் அளவு பெரிதாக இருந்தது. ‘மிக அருகில் இருந்து கூவுகிறது. அதனால்தான் இவ்வளவு சத்தமாகக் கேட்கிறது’ என்று காலம்பனும் மற்றவர்களும் நினைத்துக்கொண்டனர்.

காலம்பனின் கவனம், இறங்கும் திசையில் எதிர்கொள்ளப்போகும் எதிரிகளின் மீதே இருந்தது. பின்னால் சங்கிலித்தொடர்போல் பின்னப்பட்டுவரும் ஓசைகளின் குறிப்புகளை அவன் அறியவில்லை. நேரம் செல்லச்செல்ல அவர்களின் கால்கள் வேகத்தைக் கூட்டின. ஆனால், அதே அளவு வேகத்தோடு காரமலையின் பல இடங்களில் இருந்து அவர்களை நோக்கிக் கால்கள் வந்துகொண்டிருந்தன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p7
எதிரிகளின் ஓட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாது. ஆனால், அவர்கள் இறங்கும் திசையறிந்து அதனை நோக்கிக் குறுக்கிட்டு வருவதால், கூவல்குடியினரும் பாரியும் மிகத்துல்லியமாக அவர்களை நெருங்கிக் கொண்டிருந்தனர்.

காரமலையின் சரிபாதியை அவர்கள் கடந்துவிட்டனர் என்பதைக் கூவல்குடியினர் வீசியெறியும் கூகையின் குழறல் சொன்னது.  வேட்டுவன் பாறையின் மீது நின்றிருந்த வேட்டூர் பழையன் ஓசைவந்த இடத்தைக் கணித்ததும் அதிர்ச்சியடைந்தான். ‘அவர்கள் சரிபாதித் தொலைவைக் கடந்துவிட்டனர். இன்னும் ஏன் பாரியின் தாக்குதல் நிகழாமல் இருக்கிறது. பாரி எவ்விடத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறான்? இவ்வளவு நேரமாகியும் வந்துசேர முடியவில்லை யென்றால் அவன் மிகத்தொலைவில் இருந்து வந்துகொண்டிருக்க வேண்டும்.

காரமலையில் வைத்து அவர்களைத் தாக்குவது என்ற திட்டமே ஆபத்தானது. இப்பொழுதோ அவர்கள் பாதிமலையைக் கடந்துவிட்டனர். இனி அவர்களைத் தாக்குவது இன்னும் ஆபத்தானது’ பழையனின் மனம் குழம்பியது. தவறிழைத்துவிட்டோமோ என்று தோன்றியது. பாரி இந்த ஆலோசனையைச் சொன்னபோது உறுதியாக மறுத்திருக்க வேண்டும், அவ்வாறு செய்யாதது சரியன்று என்று தனக்குத்தானே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தான்.

எதிரிகளைப் பின்தொடர்ந்து ஓடிவரும் நீலனுக்கு எதுவும் புரியவில்லை. ‘ஓடிக்கொண்டிருப்பவர்கள் யார்? கூவல்குடியினர் ஓசையை எழுப்பியபடியே இருக்கின்றனரே, அவர்கள் யாருக்காக ஓசையெழுப்புகின்றனர்? ஓடுகிறவர்கள் எங்கெங்கோ வளைந்து செல்கின்றனர். கணிக்க முடியாத பாதையில் அவர்கள் செல்கின்றனர். ஓடுபவர்கள் எதிரிகளாக இருந்தால் மேலே இருந்து காரிக்கொம்பு ஊதினால் போதுமே, கீழே இருக்கும் வீரர்கள் ஆயத்தமாகிவிடுவார்களே. அவ்வாறு செய்யாமல் வேறுபட்ட ஒலியெழுப்பியபடி ஏன் கூவல்குடியினர் ஓடுகின்றனர்?’

காரமலையில் தன்னால் சிந்திக்க முடியாத செயல்கள் நடந்துகொண்டிருப்பதை நினைத்து மிகவும் குழம்பிப்போனான் நீலன். அக்குழப்பம் மனதுக்குள் ஆத்திரத்தைக் கூட்டவே செய்தது. ஆற்றல்பெருக்கி ஓடினான். எவ்வளவு விரைந்து ஓடினாலும், ஓசை கேட்கும் பகுதியை அவனால் நெருங்கவே முடியவில்லை. ‘இவ்வளவு வேகமாகவா அவர்கள் ஓடுகின்றனர்?’ நம்ப முடியாத குழப்பம் அவனைத் திண்டாடவைத்தது.

கீழ்த்திசைக் காவல் பொறுப்பாளனான தனக்குள் ஏற்படும் தடுமாற்றத்தை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கூவல்குடியினர் யாராவது கண்ணிற்பட்டால் நடப்பதென்ன என்பதை அறிந்துகொள்ளலாம். ஆனால், ஓசை கேட்கும் இடங்கள் நேர்கோட்டில் இல்லாமல் இங்குமங்குமாக இருக்கின்றன. எனவே யாரும் கண்ணிற்பட வாய்ப்பின்றி இருக்கிறது.

தேக்கன் தன்னால் முடிந்த அளவு வேகமாக ஓடிவந்துகொண்டிருந்தான். அவனது உடலில் அடிவிழாத இடமே இல்லை. கைக்கட்டை இன்னும் கழற்றவில்லை. ஆனாலும் விடாது துரத்திவருகிறான். கூவல்குடியினரிடம் தெளிவாகச் சொன்னான், “எக்காரணங் கொண்டும் எனக்காக நீங்கள் நிற்கக் கூடாது. எதிரிகளைப் பின்தொடர்ந்து நீங்கள் போய்க்கொண்டே இருக்க வேண்டும். நான் குரல் கேட்டு வந்துவிடுவேன்” என்று.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p8
மிகவும் தள்ளித்தான் தேக்கன் வந்து கொண்டிருந்தான். அவனது கண்ணில் தனித்துச்செல்லும் மனித உருவம் ஒன்றுபட்டது. சற்றே நின்று பார்த்து நெருங்கினான். அது பெண் என்பதை உறுதிப்படுத்திய கணம் சத்தம் கொடுத்தான். தொலைவில் போய்க்கொண்டிருந்த மயிலா பதில் கொடுத்தாள்.

யாரெனத் தெரியாமல் நீலன் விரட்டிச் செல்வதை மயிலா சொன்னவுடன் தேக்கனின் கவலை இரட்டிப்பாகியது. நீலனை வைத்துதான் தாக்குதல் திட்டத்தை வேட்டூர் பழையன் தீட்டியிருந்தான். ஆனால், நீலனோ எதிரிகளின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறான் என்பதை அறிந்தபோது தேக்கனைச் சோர்வு தாக்கியது. நீலன் இல்லாமல் வேட்டூர் பழையன் என்ன செய்துகொண்டிருப்பான் எனச் சிந்தித்தபடி நடந்தான். நடையின் வேகம் குறையக் கூடாது என மனதில் நினைத்துக்கொண்டே நடந்தான். ஆனால், தேக்கனைவிட பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானது மயிலாதான். உடலெல்லாம் இரத்தவிளாராக இருக்க, கையில் கட்டுபோடப்பட்ட நிலையில் தேக்கனைப் பார்த்ததும் அவள் அதிர்ந்து போனாள். ‘பறம்பின் ஆசானை இவ்வளவு கொடுமையாகத் தாக்கிவிட்டு ஓடும் வலிமைகொண்டவர்கள் யார்? அவர்களை நீலன் இன்னும் ஏன் கொல்லாமல் இருக்கிறான்?’ என்று அதிர்ந்து நின்றுவிட்டாள்.

நடுவில் பாறைகளில் விழுந்து சிற்றாறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதனைக் கடக்க கவனமாக இறங்க வேண்டியிருந்தது. காலம்பன் முதலிலே இறங்கினான். அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இறங்கினர். சிலர் நீர்பருகினர். ஆனாலும் ஓட்டத்தின் வேகம் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக அளவோடு பருகினர். சிலர் அதனையும் தவிர்த்தனர். தேவாங்கு விலங்கு திடீர் திடீரென ஓசை எழுப்புவதும், அடங்குவதுமாக இருந்தது.

ஓடையின் மறுகரைப்பாறையின் மீது காலம்பன் ஏறினான். அவனைத் தொடர்ந்து ஒவ்வொருவராய் ஏறினர். மீண்டும் கால்கள் வேகமெடுக்கத் தொடங்கியபொழுது ஓடையின் அக்கரையில் இருந்து செந்நாய் ஊளையிடுவதைப் போன்ற ஓசை கேட்டது. முன்னெடுத்து ஓடிக்கொண்டிருந்த காலம்பனுக்கு சற்றே ஐயம் வரத்தொடங்கியது. ஓட்டத்தை நிறுத்தி மீண்டும் ஓடைக்கரை விளிம்புக்கு மரங்களினூடே மறைந்தபடி வந்தான்.

பாரியின் வேகம் இதனைப்போல் இருமடங்கு. ஆனால், அலவனையும், கீதானியையும் அழைத்துவர வேண்டும் என்பதற்காகப் போதுமான வேகத்திலே வந்துகொண்டிருந்தான். கூவல்குடியினரின் ஓசையைக் கணக்கிட்டு சிற்றோடையை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தான். இடையில் ஒரு சிறுகுன்று இருந்தது. அதனைக் கடந்த கணத்தில் எதிரிகளை வீழ்த்தலாம் என்ற முடிவோடு வந்து கொண்டிருந்தான் பாரி.

மீண்டும் செந்நாய் ஊளையிடும் ஓசை கேட்டது. அவர்கள் ஓடையைக் கடந்துவிட்டனர் என்பதனை அந்தக் குறிப்புச் சொன்னது. தனது வேகத்தை இன்னும் கூட்ட வேண்டும் என்று அவன் முடிவெடுக்கும்போது ஊளையின் ஓசை பாதியில் அறுபட்டு நின்றது.
ஓடிக்கொண்டிருந்த பாரியின் கால்கள் அப்படியே நின்றன. மற்றவர்களும் நின்றனர். மேல்மூச்சும் கீழ்மூச்சுமாகத் தவித்தபடி எல்லோரும் பாரியின் முகத்தைப் பார்த்தனர். சற்று அமைதிக்குப் பின் பாரி சொன்னான், “எதிரிகள் கூவுகிறவனின் தொண்டைக்குழியில் ஈட்டியை இறக்கிவிட்டனர்”.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 5:03 pm

விலங்கின் பாய்ச்சலைப் பின்னுக்குத் தள்ளும் ஆற்றல்கொண்டது வேள்பாரியின் பாய்ச்சல். ஆனால், இன்று அதையும் விஞ்சும் வேகத்தை, காடு பார்த்துக்கொண்டிருந்தது. பாரி வேட்டை தொடங்கியது. நாணேற்ற துடித்துக்கொண்டிருந்த விரல்களைக் கட்டுப்படுத்தப் போராடினான் பாரி. கட்டுப்பாடுகளை எல்லா நேரங்களிலும் மனம் சிறப்பாகக் கையாள்வதில்லை. ரத்தக்கறை படிந்த கணத்தில் அதன் முடிவு எப்படி இருக்கும் என்பது ஊகத்துக்கு அப்பாற்பட்டது.

அவன் நினைத்ததைவிட விரைவாக இந்த இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டான். சிறு குன்றின் மறுபக்கத்தில் எதிரிகளின் வருகைக்காகக் காத்திருந்தான். வீரர்கள் இருவரும் ஆயத்தநிலையில் நின்றனர். அலவனும் கீதானியும் அம்பின் முனையில் நஞ்சு முள்ளைச் செருகிக் கொடுத்துவிட்டு மறு அம்பினைக் கொடுக்கக் காத்திருந்தனர். காஞ்சிரை மரத்தின் பின்னணியில் அவர்களின் உருவம் கண்ணில்படும் பொழுதுக்காகக் காத்திருந்தனர் அனைவரும்.

சை எழுப்பியவனின் தொண்டைக்குழியில் ஈட்டியைச் செருகியவுடன் அவன் ஓடைக்குள் சரிந்துவிழுந்தான். அவன் விழுந்து மடிந்ததைப் பார்த்தபிறகுதான் காலம்பன் அந்த இடம்விட்டுப் புறப்பட்டான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 65p1
ஓட்டத்தை நிறுத்தி ஓசை கேட்டுத் திரும்பியதும், அவனைத் தேடித் தாக்கவும் அவன் இறந்துவிட்டானா என்பதை உறுதிப் படுத்தவும் காலம்பன் செலவழித்த நேரம்தான் பாரி முன்வந்து சேரக் கூடுதல் வாய்ப்பை உருவாக்கியது. முன்னோக்கிச் சென்று மிகப் பொருத்தமான இடத்தைத் தேர்வுசெய்து காத்திருந்தான் பாரி.

ஓசை கொடுப்பவனைக் கொன்றபிறகுதான் காலம்பனின் மனதில் குழப்பங்கள் தோன்றத் தொடங்கின.  ‘காரமலையின் மேல் விளிம்பிலிருந்து அவ்வப்போது ஓசை கேட்டது. காலை நேரத்து உயிரினங்களின் ஓசை என்றே கவனம்கொள்ளாமல் விட்டுவிட்டோம். அவை அனைத்தும் மனிதர்கள் எழுப்பிய ஓசையென்றால், அவர்கள் யாருக்காக எழுப்பி னார்கள்? இந்த ஓசை கேட்டு வரப்போகிறவர்கள் யார்? அல்லது ஆயத்தநிலையில் நிற்கப் போகிறவர்கள் யார்? நம்மீது தாக்குதல் தொடுக்க எந்த இடத்தை அவர்கள் தேர்வுசெய்துள்ளனர்?’ என்று அவன் சிந்தித்துக்கொண்டிருந்தபோது, பாரி தேர்வுசெய்த இடத்தில் மிகச்சரியாக வந்துகொண்டிருந்தான் காலம்பன்.

வில்லில் இழுபடும் நாண், விடுபடும் கணத்துக்காகக் காத்திருந்தது. வீரர்கள் இருவரும் பாரியின் தொடக்கத்தை எதிர்பார்த்திருந்தனர். வலதுகையின் பிடரி நரம்பு முறுக்கேறியபோது, விரல்களின் வலு இன்னும் கூடியது. ஆனாலும், முதன்மையாக ஓடிக்கொண்டிருக்கும் காலம்பனை நோக்கிப் பாரி அம்பினை எய்தவில்லை.

அடுத்தடுத்து மூன்று முறை அம்பை எய்துவதற்கு ஏற்றாற்போல் எதிரிகளின் கூட்டம் தடுப்பேதும் இல்லாமல் முழுமையாக முன்னால் வரும்வரை காத்திருந்தான் பாரி. தனது தாக்குதல் இலக்குக்குள் எதிரி வந்தபிறகும் தாக்காமல் காத்திருக்கப் பயிற்சி கைக்கொடுப்பதில்லை. அங்கு கைக்கொடுப்பதெல்லாம் முழுமையையும் அழிக்க வேண்டும் என்ற வெறி மட்டும்தான். அடங்காத வெறிகொண்டு நிதானத்தைக் கைக்கொள்வது மட்டுமே மனம் பக்குவப்பட்டதன் உச்ச அடையாளம். அம்பின் முனை கண்ணிமைப் பொழுதுகூட முன்பாய்ந்தோ, பின்தங்கியோ சென்றுவிடக் கூடாது என்பதில் மிகக் கவனம்கொண்டிருந்தான் பாரி.

குன்றின் மேடான பகுதியிலிருந்து சிறு ஓசை கேட்டுக் காலம்பன் திரும்பிய கணத்தில் அம்புகள் காற்றைக் கிழித்துக்கொண்டு வந்தன. தற்காத்துக்கொள்ள மரங்களோ பெரும்பாறையோ அற்று வெறும் கொடிகள் மட்டுமே படர்ந்து கிடக்கும் இடத்தில் பாய்ந்துவந்த அம்பில் ஒன்றுகூட இலக்குத் தப்பவில்லை. இரண்டாவது அம்பைத் தொடுக்க எடுத்துக்கொண்ட நேரம் மட்டுமே எதிரிகளுக்குக் கிடைத்த சிறு வாய்ப்பாக அமைந்தது.

எதிர்பாராத தாக்குதலை எதிர்கொள்ள, சில கணங்கள் தேவைப்பட்டன. கூட்டத்தின் தலைவன் யார் என்பது தெரியாவிட்டாலும் முன்னால் வருகிறவர்கள் சட்டென மறைந்து கொள்ள மரமோ, பாறைகளோ இல்லை. ஆனால், பின்னால் வருகிறவர்களுக்கு அந்த வாய்ப்பு இருக்கிறது என முடிவுசெய்த பாரி, தாக்குதலின் முதல் இலக்காகக் கடைசியாக வந்துகொண்டிருப்பவர்களைக் குறிவைத்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 65p2
ன்னுடைய தோள்பட்டையில் வந்து செருகிய அம்பை உருவி எடுத்தான் ஒருவன். சிறு விரல்நுனி அளவே அது உள்ளே போயிருந்தது. அம்பைத்  தொலைவில் வீசியபடிச் சொன்னான், “இது தைத்து நாம் வீழ்வோம் என நினைத்துப் போரிடுபவர்களை என்ன சொல்வது?”

“அவர்கள் நம்மைக் கண்டுணர்ந்து நெருங்கிவிட்டார்கள். நாம் இந்த இடத்தைவிட்டு விரைவாக அகல்வோம்” என்று கத்தியபடி காலம்பன் ஓட்டத்தின் வேகத்தைக் கூட்டினான். மரமோ, பெரும்பாறையோ அற்ற இந்தப் பகுதி அம்பு எய்தித் தாக்குவதற்கு ஏற்றது. இதை விரைவில் கடக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தபோது கால்களின் விசை இரட்டிப்பானது. ஓடிக்கொண்டே அடுத்து செய்யவேண்டியது என்ன என்று சிந்தித்தபோதுதான் ஏதோ ஒரு மாற்றத்தை உணர்ந்தான். என்னவென்று நிதானிப்பதற்குள் புரிந்துவிட்டது, தனக்குப் பின்னால் விரைந்து வரும் கால்களின் ஓசை அறுபட்டுவிட்டதென்று. என்ன ஆனது எனத் திரும்பி, புதர் விலக்கி அந்த இடம் வந்தபோது அம்பு தைத்த அறுவர், மண்ணில் சாய்ந்துகிடந்தனர்.

மற்றவர்கள் மறைப்புகளில் அண்டியபடி சாய்ந்து கிடந்த ஒருவனின் முதுகில் இருந்த கூடையை எடுக்க முயன்றனர். அம்பு எய்துகிறவர்கள்  உயரமான,  மிகப் பொருத்தமான இடத்திலிருந்து எய்துவதால் தப்பிப்பது கடினமாக இருந்தது. கூடையைக் கழற்ற முற்பட்டபோது இன்னொருவனின் கழுத்தில் செருகியது அம்பு. அவன் மயங்கிச் சரிய அதிக நேரம் ஆகவில்லை.

நிலைமையின் விபரீதத்தைக் காலம்பன் உணரத் தொடங்கினான். அவை வெறும் அம்புகள் அல்ல; நஞ்சு தடவிய அம்புகள்கூட. உடலைச் செயழிலக்கச்செய்ய நாள்கணக்கில் ஆகும். அதனினும் கொடும் ஆயுதம்கொண்டு தாக்குதல் நடக்கிறது. புரிந்துகொண்ட கணம் ``விழுந்து கிடப்பவனிடம் இருக்கும் கூடையை எடுக்க முயலாதீர்கள். விரைந்து இந்த இடம்விட்டு வெளியேறுங்கள்” என்று கத்தினான். அவனது குரலின் அதிர்வு அடங்குமுன் அனைவரும் பாய்ந்து வெளியேறினர். ஆனால், நீண்ட தொலைவுக்கு மறைப்புகள் ஏதுமின்றி இடுப்பளவு இருக்கும் செடிகொடிகளுக்குள்தான் ஓடவேண்டியிருந்தது. அம்புகள் கணக்கின்றி சீறிக்கொண்டிருந்தன.  பாரி, முழு வேட்டையையும் முடிக்க முயன்று கொண்டிருந்தான்.

முன்னால் சென்றுகொண்டிருந்த காலம்பனின் பாய்ச்சல், மின்னல் வேகம்கொண்டது. கணிக்க முடியாத வேகத்தில் அவர்களின் கால்கள் பாய்ந்துகொண்டிருந்தன. தங்களின் போக்கைச் ‘சட்’டென மாற்றி இடப்புறச் சரிவில் இறங்கலாம் எனக் காலம்பன் முடிவுசெய்தான். அது தாக்குதல் தொடுப்பவர்களுக்குக் குழப்பத்தை உருவாக்கக் கூடியது. தங்களின் வேகத்தை இனி எவனாலும் பின்தொடர்ந்து நெருங்க முடியாது என அவன் எண்ணிய கணத்தில், அவன் ஓடும் திசையின் மேட்டுப் பகுதியிலிருந்து மீண்டும் ஒரு செந்நாய் ஊளையிட்டது.

விக்கித்து நின்றான் காலம்பன். ‘என்ன நடக்கிறது இங்கு? இன்னொருவன் ஓசை எழுப்பிக்கொண்டிருக்கிறான். ஓசை எழுப்புவதை எத்தனை பேர் செய்கிறார்கள்? மூன்று மலைகளிலும்  நாம் ஆட்களை நிறுத்தியதைப்போல, மூன்றாம் மலையெங்கும் அவர்கள் நிறுத்தியுள்ளார்களா?’ என நினைத்துக்கொண்டே பாதையை மாற்றிப் புதர்க்காட்டுக்குள் நுழைந்தான்.

பெருமரங்களும் அடர்ந்த புதர்களும் இனி இல்லை. குறுமரங்களின் காடும் பனைமரக் கூட்டமே விளைந்து கிடக்கின்றன. கண்காணாமல் மறைந்து விரைவதற்கு இனி வாய்ப்பில்லை என்று காலம்பன் கணித்தபோது, அவன் போன புதிய திசையின் எதிர்புறத்திலிருந்து கோட்டானின் குரல் கேட்டது.

பனங்காட்டிலிருந்து இயல்பாகக் கேட்கும் ஓசைதான் அது. ஆனால், அது கோட்டானின் ஓசை என்று நம்பக் காலம்பன் ஆயத்தமாக இல்லை. எந்தத் திசையும் அவர்கள் சூழ்ந்துவிட்டார்கள் என்ற முடிவுக்குப் போனான். சற்றே வேகம் குறைத்தபோது உடன்வந்து நிற்பவர்களின் எண்ணிக்கை பேரதிர்ச்சியைக் கொடுத்தது. அம்புகளுக்குத் தப்பி வந்து சேர்ந்தது அறுவர் மட்டுமே. பேரழிவு, பத்து பனை தொலைவைத் தாண்டுமுன் நிகழ்ந்து முடிந்துவிட்டது. அப்படியென்றால், பறம்பின் வீரர்கள் எவ்வளவு துல்லியமான  ஆயத்தத்தோடு இருந்துள்ளனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 65p3
மனம் ஒருகணம் கலங்கியது. மறுகணம் மீண்டது. இனிச் சமவெளியல்லாத பகுதியின் வழியே செல்வோம். இந்த அறுவர் போதும். அவர்களின் தோளிலே இருக்கும் இரு கூடை போதும். எண்ணிக்கொண்டே அதற்குத் தகுந்த திசை வழியைத் தேர்வுசெய்தான் காலம்பன். சற்றே பின்வாங்கிச் சிற்றோடையைக் கடந்து இடப்புறக் காட்டை ஊடறுத்துச் செல்ல முயன்றான்.

அவனது வருகைக்காகக் காத்திருந்தான் பாரி. குறிப்பொலிகள் சரியான அடையாளங்களைப் பாரிக்குக் காட்டிக்கொண்டிருந்தன. மிகவும் கவனமாகத்தான் சிற்றோடையில் காலம்பன் இறங்கினான். அதைவிடக் கவனமாகப் பாரி அவனை நோக்கிக் கொண்டிருந் தான். அடுத்தடுத்து அவர்கள் உள்ளே இறங்கினர். காத்திருந்த பாரியின் விரல்கள் நாணை விடுவித்தபோது அம்புகள் சீறின.

ஓசை கேட்டதும் எதிரிகள் சிற்றோடையெங்கும் கிடக்கும் பாறைகளின் மறைவில் பதுங்கினர். ``இருவரின் மீது அம்பு தைத்தது உறுதி’’ என்று வீரர்கள் சொன்னார்கள். ஆனால், எல்லோரும் பாறையின் மறைவில் பதுங்கியதால் தாக்கப் பட்டவர்கள் எத்தனை பேர் எனத் தெரியவில்லை.
சற்றே விலகி அவர்களை எதிர் கொள்ளும் முகமாகக் கீழ்த்திசைக்குப் போக முடிவெடுத்தான் பாரி. புதர்க்காட்டைக் கிழித்துக்கொண்டு ஓடைக்கரையோரம் ஓடின கால்கள். சரிபாதிக்கு மேல் வீழ்த்திவிட்ட மகிழ்வில் வீரர்களின் வேகம் பல மடங்கு அதிகரித்தது. பாரியின் கணிப்பையும், நுட்பத்தையும், வீரத்தையும், ஆவேசத்தையும் அருகிருந்து பார்க்கும் இந்தக் கணம், மற்ற நால்வருக்கும் இணையற்றதாக இருந்தது.

சிற்றோடையின் கீழ்த்திசைக்கு வந்ததும் பொருத்தமான இடத்தில் நின்று பார்த்தான் பாரி. தாக்கப்பட்ட இடத்தில் சரிந்து கிடந்த இருவரைத் தவிர, வேறு யாரும் இல்லை. `அதற்குள் எங்கே போனார்கள்?’ என அவன் தேடியபோது கூவல்குடியினரின் ஓசை, ஓடையின் மேல்புறத்திலிருந்து கேட்டது. காலம்பன் தனது முடிவை மாற்றினான். `தேவாங்கு விலங்கை எடுத்துச் செல்வதுதான் தனது நோக்கம். பறம்பின் மக்களைத் தாக்கி அழிப்பது தனது வேலையில்லை’ என்று சொல்லிவந்த அவன், இப்போது வேறு சிந்தனைக்குப் போனான். தங்களை நோக்கித் தாக்குதல் தொடுப்பவர்களை அழிக்காமல் தங்களால் தேவாங்கு விலங்கைக் கொண்டு செல்ல முடியாது என்பது தெரிந்துவிட்டது. எனவே, எதிர்த்தாக்குதல் நடத்தும் உத்தியை வகுத்தான்.

கூடையைச் சுமந்திருக்கும் இருவரை மலையின் சரிவொன்றில் பதுங்கி இருக்கச் செய்தான். மீதம் உள்ள நால்வரும் தாக்குதலுக்கு ஆயத்தமாகினர். ஓடையின் மறுகரையில் உள்ள புதர்க்காட்டைக் கிழித்துத் தாக்குதல் தொடுப்பவர்களைத் தேடி அவர்கள் முன்னேறினர். பச்சைமலைத் தொடரில் ஏறத் தொடங்கிப் பத்து நாள்கள் ஆகிவிட்டன. ஆனால், இந்தப் பத்து நாள்களும் பதுங்கியே செயல்பட்டுக்கொண்டிருந்த அவர்கள், முதன்முறையாகத் தாக்குதல் தொடுக்கும் ஆவேசத்தோடு பீறிட்டு ஓடினர். காலம்பன், மரங்களை முறித்துக்கொண்டு முன்னகர்ந்தான். அவனது கண்ணில்படும் மனிதனை ஒற்றைக்கையால் ஒடித்தெறியும் வேகம்கொண்டான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 65p4
சற்றும் எதிர்பாராமல் கூடையோடு மலைச்சரிவில் பதுங்கி இருப்பவர்களின் திசையிலிருந்து கூவலோசை கேட்டது. ஓடிக்கொண்டிருந்த காலம்பன் அதிர்ந்து நின்றான். சிற்றோடையில் இருக்கும்போது தங்களைத் தாக்கியவர்கள் இந்த மேட்டின்மீது நின்றுதான் அம்பு எய்தார்கள். அவர்களைத் தேடித்தான் அவன் போய்க்கொண்டிருந்தான். ஆனால், இப்போது தேவாங்கு விலங்குகளோடு இருப்பவர்களை நோக்கி ஆபத்து வரப்போகிறது எனத் தெரிந்ததும் மீண்டும் அவர்களை நோக்கித் திரும்பினான்.

கூவல்குடியினரின் ஓசை கேட்டதும் சிற்றோடையின் கீழ்ப்புறம் இருந்த பாரி அதை நோக்கி ஓடத் தொடங்கினான். காலம்பன், ஓடையின் வலப்புறப் புதர்களின் வழியேயும் பாரி, ஓடையின் இடப்புறப் புதர்களின் வழியேயும் ஓடிக்கொண்டிருக்கும் போது ஓசை வந்த திசையை நோக்கி மலைக்கு மேலே இருந்து இணை சொல்ல முடியாத வேகத்துடன் கீழிறங்கிக் கொண்டிருந்தான் நீலன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 65p5
ஓடையைச் சுற்றியே மீண்டும் மீண்டும் கூவல்குடியின் குரல் கேட்கிறது, அங்கு என்னதான் நடக்கிறது என்பது புரியாது தத்தளித்தான் பழையன். மலையின் சரிபாதிக்கும் கீழ், தந்தரைக்கு மிக அருகில்தான் அந்த இடம் இருக்கிறது. `நாம் வீரர்களோடு அந்த இடம் போவோமா?’ எனத் தோன்றியது. `ஒருவேளை வேறு வழியில் அவர்கள் கீழிறங்கித் தப்பிக்க முற்பட்டால் என்ன செய்வது?’ என்று சிந்தித்து, மேலேறிப் போகும் திட்டத்தைக் கைவிட்டான். அவர்கள் இறங்க வாய்ப்புள்ள பகுதியைக் கணித்தபடி ஆயத்தநிலையில் இருந்தான் வேட்டூர் பழையன்.

இதுவரை இல்லாத சினம், காலம்பனின் மனதில் உருவேறியபடி இருந்தது. ‘இந்த விலங்கை எடுத்துச் செல்லத்தான் எவ்வளவு இழப்புகளைச் சந்தித்து எவ்வளவு பெரிய முயற்சியைச் செய்துள்ளோம். அது வெற்றிகரமாக முடியப்போகும் இறுதிக்கட்டத்தில் முற்றிலும் எதிர்பாராத தாக்குதலை எதிர்கொள்ளவேண்டியதாகிவிட்டது. ஆனாலும், எந்தக் காரணம்கொண்டும் இந்த முயற்சியில் நாங்கள் தோற்க மாட்டோம். அதையும் மீறி நாங்கள் தோற்க நேர்ந்தால், எங்கள் அத்தனை பேரின் உயிரும் இந்த மலையில் மடிந்தாலும் எம்மில் ஒருவன் அந்தக் கூடையைச் சுமந்து பறம்பின் எல்லையைத் தாண்டி வெளியேறிப் போவதைத் தடுக்கும் வலிமை எவனுக்கும் இல்லை.’

காலம்பனின் நாடிநரம்புகள் எல்லாம் கனன்றுகொண்டிருந்தன. எதிர்படும் பாறையைக் கையால் குத்தி நொறுக்கிவிடும் ஆவேசத்தோடு ஓடிக்கொண்டிருந்தான். சிற்றோடையின் இரு கரைகளிலும் பறவைகள் படபடத்து விலகியபோது இருவரும் உணர்ந்தனர் இணையாக ஓடிவரும் எதிரியை. தேவாங்கின் கூடை சுமந்து உட்கார்ந்திருப்பவர்களை நோக்கி பாரி விசைகொண்டு ஓடியபோது எதிரிகளின் ஈட்டி பாரியின் பின்னால் வந்துகொண்டிருந்த வீரன் ஒருவனைச் சாய்த்தது.

ஓடையின் நாணல்களுக்கு இடையிலும் அம்புகள் இறங்கிக்கொண்டுதான் இருந்தன. காட்டின் தன்மையும் காற்றின் வேகமும் அறிந்து அம்பு எய்துவதில் பறம்பின் வீரர்களுக்கு இணை சொல்ல முடியாது. ஆனால், இந்த இரண்டு குறிப்புகளையும் அறியாமலேயே எதிரிகள் எறியும் ஈட்டியின் வலிமை மரங்களைத் துளைத்துச் செல்லக்கூடியதாக இருந்தது.

கூடையோடு பதுங்கி இருந்தவனை நோக்கிப் பாரியின் அம்புகள் பாய்ந்தபோது, எதிர்த்திசையில் ஓடிவந்துகொண்டிருந்த எதிரிகளின் மீது நீலனின் ஈட்டி இறங்கியது. மேலிருந்து வந்த வேகத்தில் இணையற்ற விசையோடு எறியப்பட்ட ஈட்டி எதிரியின் மார்பில் தைத்து அம்பினைப்போல் நின்றபோது, அவர்கள் எறிந்த ஈட்டி பாரியோடு வந்துகொண்டிருந்த இன்னொரு வீரனின் மார்பைத் துளைத்து வெளியேறியது.

சூழலை யாராலும் கணிக்க முடியவில்லை. பின்னால் வந்தவர்கள் பதுங்கினார்களா, வீழ்ந்தார்களா, மறைந்தார்களா எனக் காலம்பனால் கணிக்க முடியாததைப்போல பாரியாலும் கணிக்க முடியவில்லை. அலவனும் கீதானியும் ஓட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தொலைவில் ஓடிவந்துகொண்டிருந்தார்கள்.

கூடையோடு பதுங்கிய இருவரின் மீதும் அம்புகள் பாய்ந்ததைக் காலம்பன் உறுதிப்படுத்தியபோது, தனக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த இரு வீரர்களும் இல்லை என்பதைப் பாரி உணர்ந்துகொண்டான். காலம்பன் வெறியின் உச்சத்தில் இருந்தபோது அதனினும் மூர்க்கம்கொண்டிருந்தான் பாரி. அம்புகளற்று நின்றிருந்த பாரியை நோக்கி ஓடிவந்துகொண்டிருந்தனர் கீதானியும் அலவனும். மேலிருந்து ஈட்டியைப் பாய்ச்சிய வேகத்தில் நிலைதடுமாறி உருண்டு கொண்டிருந்தான் நீலன்.  

உருளும் திசை பார்த்துப் பாரியும் காலம்பனும் கவனம் சிதறவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் முதன்முறையாக நேர்கொண்டு பார்த்தனர். தன்னை நோக்கி ஓடிவந்துகொண்டிருக்கும் கீதானியின் பக்கம் திரும்பாமலே அவன் வரும் வேகத்தைக் கணித்து அம்பை வாங்கக் கையை நீட்டினான் பாரி. தனது முழு வேகத்தோடு வந்துகொண்டிருந்த கீதானி, அம்பை பாரியிடம் நீட்ட முனைந்தபோது அவனது முதுகைத் துளைத்து வெளியேறிக்கொண்டிருந்தது காலம்பன் எறிந்த ஈட்டி. ஒரு கணம் அதிர்ந்து நின்றான் பாரி. அம்பைத் தர முடியாத ஏக்கத் தோடு கீதானி மண்ணில் சரிந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்து கொண்டிருந்த அலவன் தடுமாறிப் பள்ளத்தில் உருண்டுகொண்டிருந்தான்.

களத்தில் மிஞ்சி நின்றது காலம்பனும் பாரியும் மட்டுமே. விழுந்த இடத்திலிருந்து தலைநிமிர்ந்து நீலன் பார்த்தபோது அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை. அவன் வீழ்ந்த பள்ளத்திலிருந்து மேலேறும் முன், பாறைகளும் மரங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி நொறுங்குவதைப்போல் உணர்ந்தான். ‘பாரி இங்கு எப்படி வந்தான்? யார் அந்த எதிரி? என்ன நடக்கிறது?’ எதுவும் புரிபடவில்லை. பள்ளத்திலிருந்து வேரினைப் பிடித்து மேலேறி வந்த நீலனின் கண்களில் இருவரும் தென்படவில்லை.

இங்கும் அங்குமாக அலைமோதி ஓடையோரத்துப் பாறையின் பின்புறம் நோக்கி ஓசை கேட்டுப் போனான். நேற்று மயிலாவோடு வந்தபோது மண் பிரண்டு பெரும்பள்ளமாகக் கிடக்கும் இந்த இடத்தில் காட்டெருமைகள் மோதிய கதையை நீலன் சொன்னான். இப்போது அந்த இடத்தில் காட்டெருமையினும் வலுகொண்டு இருவர் மோதிக்கொண்டிருந்தனர்.

காலம்பனின் தோள்கள் பாறையைச் சிதைக்கவல்லது. பாரியின் தோள்களோ பாறைகொண்டும் சிதைக்க முடியாதது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று நேர்கொண்டு மோதிச் சரிந்தன. காட்டெருமைகளின் ஆற்றல் கொம்புகளில் இல்லை; அவற்றிலும் வலிமையான முன்னெற்றியின் குமிழ்தான். அதே குமிழ்கள் பிடரியோடு சேர்ந்த முன் மார்பில் இறுகியிருந்தது. மோதும் வேகமும் ஓசையும் காடு அதிரச்செய்தன.

காலம்பன் தனது எதிரியின் உடலை இரு கூராக்க முற்பட்டபோது, எதிரியும் அதற்குத்தான் முயல்கிறான் என்பதை உணர்ந்தான். சற்றே உடல் விலக்கி பின்விசை கொடுத்து முட்டித் தூக்கினான் காலம்பன். பாரியின் கால்கள் எளிதில் மண்விட்டு அகலவில்லை. நிலத்தில் வேர் ஊன்றுவதைப்போல ஊன்றி நிற்கும் பாரியை அவ்வளவு எளிதில் காலம்பனால் அசைத்து எடுத்துவிட முடியவில்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 65p6
காலம்பனின் தோள்கள் மிகவும் விரிந்தவை. உறுதியிலும் உயரத்திலும் ஒப்பிட முடியாதவை. பாரியை அப்படிச் சொல்லிவிட முடியாது. ஆனால், தோற்றத்தின் அளவுகள் தீர்மானித்து விடுவதில்லை என்பதைப் பாரியைச் சரிக்க முடியாத கணத்தில் காலம்பனும் உணர்ந்தான்.
இருவர் சமநிலையில் மற்போர் புரியும்போது, இணைதலும் விலக்குதலும் மரபன்று. நீலன் திகைத்து நின்றான். முன்காலால் மண்ணைத் தொடர்ந்து வாரியெடுத்து பெரும்பள்ளத்தை உருவாக்கி வைத்திருந்தன காட்டெருமைகள். கொம்புகள் முட்டித்தூக்கி வீசியதால், சிதறிய மண்கட்டிகள் எங்கும் கிடந்தன. ஆனால், அதனினும் பெரும்பள்ளமும் மண் சிதறலும் நிகழ்ந்துகொண்டிருந்தன.

மூர்க்கம்கொண்டு மோதுவதற்கு உருவேறியிருக்கும் வெறியே அடிப்படையாகிறது. ‘இவ்வளவு பெரும் வீரர்களோடு காட்டைக் கிழித்து, உள்நுழைந்து, தேவாங்கைக் கைப்பற்றி, வெளியேறப்போகும் கடைசிப் பொழுதில் மறித்து அழிக்கும் இவனின் உயிர் எடுக்காமல் விடேன்’ என்று மண் பிளப்பதைப்போல் அடித்து நகர்த்தினான் காலம்பன்.

‘பறம்பின் குல அடையாளத்தைக் கைப்பற்றி, மூன்று மலை கடந்து, உயிர் பல சிதைத்து, காரமலையின் கரை தொட நினைக்கும் இவனின் எலும்புகொண்டு இந்த இடம் அகழ்ந்து கீதானியை அடக்கம் செய்ய குழியமைப்பேன்’ என்று மனதுக்குள் முழங்கினான் வேள்பாரி.
காட்டெருமைகளின் குணங்கள் மாற்ற முடியாதவை. ஒன்றுடன் ஒன்று மோதி, எதிரியின் மரணம் பார்த்துத்தான் களம்விட்டு அகலும். அது எத்தனை பகல், எத்தனை இரவானாலும் பின்வாங்காது. பாதக் குளம்பிலிருந்து உச்சிக்கொம்பு வரை அடங்கா சினம் தேங்கி நிற்கும். அந்தச் சினமே கிழிபடும் மேல் தோளினைத் தனது கொம்புகொண்டு கூடுதலாகக் கிழித்துத் தனக்குத்தானே வெறியேற்றிக்கொள்ளச் செய்யும். இருவரும் அதனையே செய்தனர்.

சோர்வும் தளர்வும் நெருங்காதவண்ணம் உள்ளுக்குள்ளிருந்து ஆத்திரத்தை ஊதிப்பெருக்கிக்கொண்டனர். எதிரியைச் சாய்க்கக்கூடிய வேளை நீடிப்பதை ஒருவராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இரண்டுமுறை காலம்பனின் அடித்தொடையின் பின்நரம்பு பாரிக்கு வசப்பட்டது. அதில் சுழித்து அடித்தால் சரிவான் அவன். ஆனால், மற்போரில் அதைச் செய்யக் கூடாது என மனதைத் திசை மாற்றினான் பாரி.

காலம்பனின் இடுப்பில் கட்டியிருந்த ஆடையின் தடித்த சரடுக்குள் கழுத்தினில் இறக்கக்கூடிய குத்துக்கோல் இருந்தது. சட்டென அதை எடுத்து எதிரியின் தோளிலே இறக்கும் வாய்ப்பு வந்த கணம் காலம்பன் தன்னையே அவமானமாகக் கருதினான். `எனது வீரத்தை எனது கையால் சிதைக்கும் செயலைவிட நான் மரணத்தையே தழுவுவேன்’ என்று உறுதிகொண்டான்.

அவனது எண்ணம் அந்த உறுதி ஏற்கும் கணம் பாரியின் எதிர்பாராத தாக்குதலில் தூக்கி அடிக்கப்பட்டான். மண் சிதைந்து எங்கும் தூசி படர்ந்துகொண்டிருந்தபோது சரிவிலிருந்து இறங்கி வந்து சேர்ந்தான் தேக்கன். பாரியின் மீது எண்ணிலடங்காத கற்கள் சரிந்து விழுவதைப் போல இருந்தது அதன் பிறகான காலம்பனின் தாக்குதல்.

கண்ணின் ஓரத்தில் தேக்கன் வந்தது பாரிக்குத் தெரிந்தது. இவ்வளவு வலிமைவாய்ந்த எதிரிகளைத் தன்னந்தனியாகச் சந்தித்து இருமுறை மோதி, இருவரை வீழ்த்தி, தனது உடலெங்கும் பெரும் தாக்குதலைத் தாங்கி சற்றும் அசராமல் மூன்று மலைகளைக் கடந்து, கடைசிக் கணம்வரை ஆறாத சினத்தோடு வந்து கொண்டிருக்கும் பறம்பின் ஆசான் கண்ணில்பட்ட கணம் பாரியின் ஆவேசம் சூறைக்காற்றாய் மேலெழுந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 65p7
கண்ணிமைக்கும் நேரத்தில் நெருப்பை ஊடறுத்துச் செல்லும் விட்டிலைப்போல காலம்பனைப் பிளந்து நுழையும் வேகத்தோடு முன் தலையால் குத்தி நகர்த்தினான் பாரி. இதுவரையிலான தாக்குதலைவிட இருமடங்கு வேகத்தோடு, தான் தூக்கி வீசப்படுவதைக் காலம்பன் உணர்ந்தான்.
தனியொரு வீரன் தன்னை முட்டிச் சாய்க்கும் வீரத்தோடு இருப்பதை முதன்முறையாக உணர்ந்த காலம்பன், அதே முன் தலை முட்டின் வழியே விலா எலும்பை நொறுக்கி அவனது வீரத்துக்குக் கைம்மாறு வழங்க வேண்டும் என்ற வெறிகொண்டபடி, மண்ணில் விழுந்த வேகத்தில் புரண்டு எழுந்தான். விழுந்து புரண்டதில் அவன் இடுப்பில் முடிச்சிடப்பட்ட ஆடை கிழிபட்டதால், சரட்டுக்குள் குத்துக்கோல் இருப்பது சூரிய ஒளியில் பளிச்சிட்டது. அதைப் பார்த்த கணத்தில் தேக்கன் கத்தினான். “பாரி... மோதுவதற்காக அவன் அருகில் செல்லாதே, குத்துக்கோல் மறைத்துள்ளான்” என்று கத்தியபடி தனது இடுப்பிலிருந்த குறுவாளைத் தூக்கி வீசினான்.

வெறிகொண்ட பாரியின் கண்கள், காலம்பனையே பார்த்துக்கொண்டிருந்தன. குறுவாள் எங்கு விழுந்தது எனத் தெரியாது. விழுந்த கணம் வெகுண்டெழுந்த காலம்பன், பாரியின் மீது பாயப்போகும் கணத்தில் பின்னாலிருந்து கத்திய கிழவனின் குரல் மனதை இடியெனத் தாக்கியது. எழும் புழுதிக்கு நடுவே உறையவைக்கும் சொல்லாக அது இருந்தது. சற்றே தடுமாறி அவன் சொல்லிய பெயரை இன்னொரு முறை நினைவுபடுத்திப்பார்த்தான்.

அவனது தாக்குதலை எதிர்கொள்ள பாரி நின்றபோது, காலம்பனின் வாய், கிழவன் சொன்ன பெயரை உச்சரித்தது. “பா……ரி”

‘நான் பாரி எனும் மாமனிதனுடனா இவ்வளவு நேரமும் மோதிக்கொண்டிருந்தேன்’ மனம் நம்ப மறுத்தது. எதிரியைப் பாரியாக எண்ணத் தொடங்கிய கணத்திலிருந்து அவனது ஆவேசம் உதிரத் தொடங்கியது. அடிவேர் அறுபட்ட மரம்போல் உணர்ந்தான் காலம்பன். தாக்குதலுக்காகப் பறவையின் சிறகுபோல விரிந்த அவனது கைகள் அவனை அறியாமலேயே ஒன்றிணைந்துகொண்டிருந்தன.

அவனது செயல்கள் எவையும் அவன் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. பாரியைப் பற்றி சிறுவயது முதல் கேள்விப்பட்ட கதைகள் காலம்பனின் செயலைத் தம்வயம் எடுத்துக்கொண்டன. பெருக்கெடுத்த குருதியின் ஆவேசத்தை, குலக்கதைகள் கீழிறக்கின. அவனது கைகள் குவியத் தொடங்கும்போது, கால்கள் மண்ணை நோக்கிச் சரிந்துகொண்டிருந்தன.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 5:19 pm

பொதியவெற்பனுக்குப் பெண்பார்க்கும் நிகழ்வு இரண்டாண்டுகளுக்கும் மேலாக நடந்தது. பாண்டியநாட்டுக்கு இளவரசியாகவும் பின்னாளில் பேரரசியாகவும் முடிசூட்டப்படப் போகிறவளைத் தேர்வுசெய்ய எத்தனையோ வழிமுறைகளும் விதிமுறைகளும் இருக்கின்றன. சேர, சோழப் பேரரசுகளிலிருந்து பெண்ணெடுக்கும் அளவிற்கு மூவருக்குமிடையே இனிய உறவு இல்லை. அதேநேரம் சிற்றரசர்களிடமிருந்து பெண்ணெடுப்பது பேரரசுக்கு அழகன்று. முன்புபோல இருந்தாற்கூட அதனைச் சிலர் ஏற்பர். ஆனால், குலசேகரபாண்டியன் காலத்தில் பாண்டியநாடு முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது. அந்த நிலை இத்திருமணத்திலும் எதிரொலிக்க வேண்டும் எனப் பேரரசர் விரும்புகிறார்.

வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த இளவரசிகளைப் போய் பார்த்துத் திரும்பியது பாண்டிய நாட்டுக்குழு. அவர்கள் சொல்லும் ஆலோசனைகளை அரண்மனைவாசிகள் ஏற்க மறுத்தனர். செல்வச்செழிப்பான நாட்டின் இளவரசியையும் பார்த்த கணமே ஆண்கள் மயங்கும் பேரழகிகளையும் அவர்கள் நிராகரிக்கத்தான் செய்தார்கள். 
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p1
எதனால் இப்படிச் செய்கிறார்கள் என்பது முதலில் விளங்காமல் இருந்தது. பின்னர்தான் செய்தி மெல்லக் கசியத் தொடங்கியது. பொதியவெற்பன் உயரத்தில் சற்றே குறைந்தவன். அவனைவிட உயரமான பெண் எவ்வளவு அழகியாக இருந்தாலும், பொதியவெற்பன் ஏற்பதில்லை; நிராகரித்துவிடுகிறான். ஆனால், அவனது உயரத்துக்கோ அல்லது அவனைவிட உயரத்தில் சற்றே குறைவான உயரமுள்ள பெண்ணையோ தேர்வுசெய்தால் பேரரசர் ஏற்றுக்கொள்வதில்லை. அவர் நிராகரித்துவிடுகிறார்.

இளவரசர்  நிராகரிக்கக் காரணமிருப்பதைப்போல பேரரசர் நிராகரிப்பதற்கும் காரணமிருக்கத்தான் செய்தது. வணிகம் தொடங்கிப் பாதுகாப்பு வரை ஒருநாட்டில் அளவைகள் மிக முக்கியமானவைகளாக இருக்கின்றன. பேரரசின் நிர்வாகத்துக்கு மிக முக்கியமானவை கணக்குகளே. நிலவியல் சார்ந்த கணக்குகளுக்கு அடிப்படையாக நீட்டல் அளவைகள் இருக்கின்றன.

நீட்டல் அளவையின் அடிப்படையாகக் கோல் அளவு இருக்கிறது. கோல் அளவினைக்கொண்ட குறிப்புகளே அரசின் கணக்குகளாகப் பாதுகாக்கப் படுகின்றன. ஒரு கோல் எவ்வளவு நீளமுடையதாக இருக்க வேண்டும் என்ற கேள்வி வந்தபொழுது நாட்டினை ஆளும் பேரரசரின் கை முழ அளவே கோலின் அளவு என்று முடிவாகியுள்ளது. பலநாடுகளிலும் இதுவே வழக்கமாகவும் இருக்கிறது.

பேரரசர் குலசேகரபாண்டியனைவிட பொதியவெற்பன் குள்ளமானவனாக இருப்பதால், கை முழ அளவும் குறைவானதாகவே இருக்கிறது. இது எதிர்காலத்தில் பல மாற்றங்களுக்கும் குழப்பங்களுக்கும் காரணமாக அமையப்போகிறது என்பதை அரண்மனையில் பலரும் பலகாலமாக ரகசியக் குரலில் பேசிக்கொள்கின்றனர். இது அவ்வப்போது பேரரசரின் காதுக்கும் போய்ச் சேருகிறது.

இந்நிலையில் பெண்பார்க்கும்பொழுது அவனது உயரத்துக்குச் சற்றே மேலான பெண்ணாக இருந்தால், பிறக்கப்போகும் குழந்தை நல்ல உயரத்துடன் பிறக்க வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால் குழந்தை இவனைவிடக் குள்ளமாகப் பிறந்துவிடும். அது நாட்டின் எதிர்காலத்தில் குழப்பத்தை இன்னும் அதிகமாக்கும். எனவே, உயரமான பெண்ணாகப் பார்க்க வேண்டும் என்பது பேரரசரின் உத்தரவு. இந்த உத்தரவு இளவரசருக்குத் தெரிவிக்கப்படவில்லை. அவரோ தன்னைவிட உயரமான பெண்ணை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இதனால் தேர்வு செய்யும்  எந்தப் பெண்ணும் முடிவாகாமலே போகிறாள்.

தந்தையின் முடிவும் மகனின் முடிவும் இருவேறுவிதமாக இருப்பதால் பெண்பார்க்கும் பணியில் ஈடுபட்டவர்கள் பெருங்குழப்பத்தில் சிக்கித்தவித்தனர். இந்நிலையில்தான் ‘சூல்கடல் முதுவனின் மகள் பொற்சுவையை நமது இளவரசருக்கு மணமுடித்தால் என்ன?’ என்ற கேள்வி எழுந்தது. இதே கேள்வி சோழநாட்டு அரண்மனையிலும் பேசப்படும் செய்தியும் வந்து சேர்ந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p2
சூல்கடல் முதுவனின் செல்வச்செழிப்பும் யவன அரசாட்சியுடனும் யவன வணிகர் களுடனும் அவருக்கு இருக்கும் தொடர்பும் சாத்துக்களின் தலைவன் என்ற பெரும்பதவியும் யாரையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை. எனவே, இதில் நாம் முந்திக்கொள்ள வேண்டும் என்று பேரரசர் நினைத்தார். இளவரசன் பொதியவெற்பனோ, அப்பெண்ணைப் பற்றிய எந்த விபரத்தையும் கேட்கக்கூட ஆயத்தமாக இல்லை. வணிகமே அரசாட்சியின் அச்சாணியாக இருக்கிறது என்பதை நன்கு அறிந்தவனாக இருந்தான் அவன். சேரநாட்டினர் யவன வணிகத்தின் மூலமே உச்சத்தை அடைந்தனர் என்பதை யாவரும் அறிவர். எனவே, அவன் உடனடியாகச் சம்மதித்தான்.

பாண்டியநாட்டு சம்மதம் தெரிவிக்கப் பட்டவுடன் அடுத்தகட்டப் பணிகள் தொடங்கின. சிறிதுகாலத்திலே பேரரசருக்கு மற்றுமொரு மகிழ்வான செய்தியும்  வந்து சேர்ந்தது. அவர் எதிர்பார்த்ததுபோலவே பொதியவெற்பனைவிட பொற்சுவை சற்றே உயரமானவள் என்று. அவர் அன்று அடைந்த மகிழ்வுக்கு அளவில்லை. பொதியவெற்பனுக்கு இப்பொழுது இதுவெல்லாம் ஒரு பொருட்டே அன்று. சூழ்கடல் முதுவனின் மகள் அரண்மனைக்கு வந்துசேரும்பொழுது, பறவைகள் எல்லாம் மரத்தில் வந்து அடைவதைப்போல, கடலில் மிதக்கும் கப்பல்கள் எல்லாம் பாண்டியநாட்டுத் துறையில் வந்து அடையப்போகின்றன. அது கடல் மேலாதிக்கத்துக்கான வாசலைத் திறக்கும்.

வணிகம் சூழ்ச்சியை அடி உரமாகக் கொண்டது. அது கொடுத்து, வாங்கும் இரு கைகளுக்குள்ளும் குருதியைப்போல் ஓடுவது. சாத்துக்களின் பெருந்தலைவன் பலநாடுகளின் அரசியல் அறிந்தவனாக இருப்பான். எந்தவொரு நாட்டின் உள்விவகாரங்களையும் அவனால் எளிதில் அறிந்து சொல்ல முடியும்.

சாத்துக்கள் என்ற இவ்வமைப்பின் கீழுள்ள பெருவணிகர்கள் பலரும் சிற்றரசர்கள் பலருக்குப் பெண்கொடுத்துப் பெண்ணெடுத்தவர்கள். அவ்வணிகக் கூட்டத்தின் தலைவனின் மகளைப் பெண்ணெடுப்பதன் மூலம் பாண்டியநாட்டு எல்லைக்கு அப்பால் இருக்கும் பல அரசர்களினும் மேல்நிலையை இயல்பிலே பாண்டியநாடு அடைந்துவிடுகிறது.

பொதியவெற்பனின் எண்ண ஓட்டங்கள் மிகத்தீவிரமாக இருந்தன. அவ்வெண்ண ஓட்டங்களுக்கு இடையில் மணமகளின் உயரமோ, அழகோ மட்டுமல்ல; மணமகள் என்ற பெண்ணே தெரியவில்லை. கொடுத்து வாங்கும் கைகளான குலசேகரபாண்டியனின் கையிலும் சூல்கடல் முதுவனின் கையிலும் ஒரே ரத்தம்தான் ஓடிக்கொண்டிருந்தது. இருவரும் மிகுந்த மகிழ்வோடு மணமுடிப்புக்கு ஒப்புக்கொண்டு மணவிழாவுக்கான ஏற்பாடுகளைப்பற்றிப் பேசத்தொடங்கினர்.

இந்நிலையில்தான் சூல்கடல் முதுவனின் செல்லச்செழிப்பைப் பற்றிய பல்வேறு செய்திகள் பேரரசருக்குத் தெரியவந்தன. உலகின் பல தீவுகளில் கிடைக்கும் மிக உயர்ந்த மணிக்கற்கள் எண்ணற்றவை அவரிடம் உண்டு. அதுமட்டுமல்ல, வணிகர்கள் பலரும் திருமணப்பரிசாகத் தர உள்ள பொருள்களைப்பற்றி பல்வேறு வகையான செய்திகள் வந்து சேர்ந்த வண்ணமே இருந்தன.

ஒருநாள் பேரரசர், “இத்திருமணத்தை முன்னிட்டு சாத்துக்களின் தலைவன் என்ற முறையில் சூல்கடல் முதுவனுக்கு நான் மிக உயர்ந்த பரிசுப்பொருள் ஒன்றினைத் தர விரும்புகிறேன்” என்றார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p3
அவையோர் அனைவரும், “கட்டாயம் தர வேண்டும் பேரரசே’’ என்றனர்.

“என்ன தருவது?”

“விலை உயர்ந்த முத்துக்கள் எண்ணற்றவை நம்மிடம் உண்டு. ஆனால், வணிகர்குலத் தலைவனுக்கு அவற்றை வழங்குதல் வியப்பை ஏற்படுத்தாது.”

“வேறென்ன வழங்குவது?”

“யவனம் மட்டுமன்று; உலகின் பல இடங்களில் செய்யப்பட்ட அழகுப்பொருள்களைப் பார்த்து மகிழ்ந்தவராகவே அவர் இருப்பார். அவரிடம் பாண்டியநாட்டு அழகுப்பொருளைக் கொடுப்பதும் பொருட்டாக இருக்காது.”

“வேறென்னதான் தருவது?”

அவையோர் சளைக்காமல் ஆலோசனை வழங்கினர். வணிகர்கள் மூலம் கொண்டு வரப்பட்ட பொருள்களைப் பற்றிய ஆலோசனைகளாகவே அவைகள் இருந்தன. எனவே, எந்தப் பொருளைக் கொடுப்பது என்பது தெரியாமல் திகைத்தனர். வியப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு பரிசுப்பொருள் பற்றிய ஆலோசனையை யாராலும் வழங்க முடியவில்லை.

பேரரசருக்கு சோர்வே மிஞ்சியது. அவையின் நடவடிக்கையை நன்கு அறிந்தவர்கள் பேரரசரின் சோர்வை எதிர்பார்த்துக் காத்திருப்பர். அந்நேரம்தான் அவர்கள் பேசத் தொடங்குவார்கள். சோர்வோடு இருக்கும் பேரரசர் அவர்கள் சொல்லும் கருத்தை இயல்பிலே பற்ற நினைப்பார் என்பது அவர்களது எண்ணம். ஆனால், அவர்கள்கூட இன்று எழுந்து பேசவில்லை. ஏனென்றால், எல்லா கருத்துகளும் சொல்லப்பட்டாகிவிட்டது. இனிச் சொல்ல ஒன்றும் இல்லை என்ற நிலையில் தளபதி கருங்கைவாணன் எழுந்தான்.

யாரும் எதிர்பார்க்காமல்தான் இருந்தது கருங்கைவாணன் முன்வந்தது. பேரரசரை வணங்கிவிட்டுச் சொன்னான். “பேரரசர் அனுமதித்தால் சூல்கடல் முதுவன் வியக்கும் பரிசுப்பொருள் பற்றி என்னால் கூற முடியும்?”

“என்ன அது?”

“சூல்கடல் முதுவன் தனக்காகவும் தனது குடும்பத்தினருக்காகவும் செய்துள்ள மிகச்சிறந்த கப்பல் ஒன்றுண்டு. அதன் பெயர் `கடற்கோதை’. அந்தக் கப்பலைக்கண்டு யவன அரச குடும்பமே வியந்ததாம். அதன் வேலைப்பாடுகள் அப்படி.

கடற்கோதையை மற்ற எல்லா கப்பலையும்போல ஒவ்வொரு துறைமுகத்திலும் நிறுத்தி, அடிமைகளை மாற்றி அல்லது ஓய்வெடுக்கவைத்து மீண்டும் கொண்டு செல்வது அவருக்குப் பிடிக்கவில்லை. தொலைதூரம்  வரை கப்பலை நிறுத்தாமல் கொண்டுசெல்லும் ஆற்றல்கொண்ட அடிமைகள் யவனர்களிடமே உண்டு. சிறைபிடிக்கப்பட்ட கருங் கொள்ளை யர்களையே அவர்கள் கப்பல் அடிமைகளாகப் பயன்படுத்துகின்றனர். அவ்வடிமைகளின் தோள்கள் சோர்வின்றி நெடுந் தொலைவுக்குக் கப்பலைக் கொண்டுசேர்க்கும். எனவே, யவனர்களிடம் எவ்விலையும் கொடுக்கிறேன், அவ்வகை அடிமைகளை எனக்குத் தாருங்கள் எனக் கேட்டுள்ளார். அவரின் வேண்டுதலை மறுக்கவில்லை; ஆனால், இன்னும் கொடுக்கவில்லை” என்று சொல்லி நிறுத்தினான் கருங்கைவாணன். 

பேரரசர் உள்ளிட்ட அவையோர் அனைவரும் கருங்கைவாணன் அடுத்துச் சொல்லப் போவதை உற்றுக் கவனித்தனர். “கருங்கொள்ளையர்களுக்கு இணையான திறள் தோளும் பேருடல் வலிமையுங்கொண்டவர்கள் இம்மண்ணிலும் உண்டு.”

எல்லோரும் வாய்பிளந்து கேட்டனர். “யார் அவர்கள்?” என்று பேரரசர் கேட்கும்படி எண்ணத்தைத்தூண்டி. ஆனால், அவர் கேட்பதற்கு முன் பணிந்து சொல்வது அரசவை வித்தைகளில் ஒன்று. கருங்கைவாணன் பணிந்து சொன்னான். “திரையர் கூட்டம் ஒன்றிருக்கிறது. மேற்குமலையின் ஆதிப்பழங்குடிக் கூட்டம். அவர்களை வென்று அடிமைகளாக்கினால், சூல்கடல் முதுவனை வியப்பிலே திகைக்கச் செய்யும் பரிசுப்பொருளை வழங்கலாம்.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p4
குலசேகரபாண்டியனின் முகத்தில் மகிழ்வு பூத்தது. அரசவை வித்தைகளில் நம் எல்லோரையும் விஞ்சிக்கொண்டிருக்கிறான் கருங்கைவாணன் என்ற பேச்சு அவையில் கேட்டுக் கொண்டிருந்தபொழுது சிலரின் மனதில் மட்டும் எண்ணங்கள் வேறுவிதமாக இருந்தன. ‘கருங்கைவாணன் வலியப்போய் தலையைக் கொடுத்துவிட்டான். திரையர்கள் உள்காடுகளில் இருக்கும் மாவீரர்கள். அம்மலையடிவாரத்தில் இருக்கும் சோழன் பெரும்படை திரட்டி மாதக்கணக்கில் போரிட்டு அவர்களை வெல்ல முடியாமல் திரும்பிவிட்டான். நாம் மிகத்தொலைவில் இருப்பவர்கள். இங்கிருந்து படைதிரட்டிப் போய் அவர்களை வெல்வதெல்லாம் ஒருபோதும் நிகழாத செயல். கருங்கைவாணன் தன்பெயரைத் தானே கெடுத்துக்கொள்ள வழியமைத்துக்கொள்கிறான்’ என்று கருதினர்.

கருங்கைவாணனை நன்கு அறிந்த சிலர்தான் உண்மையான காரணத்தைச் சிந்திக்க முடிந்தது. போரினை அரசகடமையாக நினைப்பவன் அல்ல கருங்கைவாணன். அவனுக்கு அதுதான் செயல், சிந்தனை, வாழ்வு எல்லாம். போரின் அனைத்து முகத்தையும் அறியும் அவனது ஆவல் ஒருபோதும் குறைந்ததில்லை. தனது வீரர்களுக்கு எதிரியை வைத்துப் போரினைப் பயிற்றுவிக்கும் வேலையை ஒவ்வொரு போர்க்களத்திலும் செய்பவன். மிகச்சிறந்த எதிரிகளைத்தேடி களம் அமைத்துக்கொண்டே இருப்பவன்.

திரையர்களின் வீரம் பற்றி எண்ணற்ற கதைகளைக் கேட்டு வளர்ந்தவன்தான் கருங்கைவாணன். இன்று உலகம்போற்றும் பாண்டிநாட்டுத் தளபதி. ஆனாலும், கதைகள் உருவாக்கி வைத்திருக்கும் பகை ஒருபோதும் அழியாது. பகை மட்டுமே வீரத்தின் விசையைக் கூட்டவல்லது. பகையின்றி ஒருவன் வீரனாக உயிர் வாழ்ந்துவிட முடிவதில்லை. கருங்கைவாணன் எல்லா போரிலும் வெற்றியைத் தழுவினான். ஒருநிலைக்குப்பின் வெற்றி ஏற்படுத்தும் சுவை பழக்கப்பட்டதாக மாறிவிடுகிறது. அது இன்னொரு செய்தியாகத் தன்னைத்தானே கீழிறக்கிக்கொள்கிறது.

பழக்கப்பட்டதை மீறி புதிய சுவைக்கான விருப்பத்துடனே போர்க்களத்தில் அலைந்து திரிபவன் கருங்கைவாணன். அவனது மனதில் சிறுகுழந்தையாக இருந்தபொழுது விதைக்கப்பட்ட ஆதிவிதையாகத் திரையர்களின் வீரம் இருந்தது. அவர்களை வெல்லும் அவனது ஆவேசம் பெருகிக்கொண்டேதான் இருந்தது. ஆனால், எந்த ஓர் அரசும் விலையில்லா இழப்பைத் தளபதியின் விருப்பத்தின் பொருட்டுச் சந்திப்பதில்லை. அதுவும் குலசேகரபாண்டியன் போன்றதோர் அறிவுக்கூர்மையுள்ள பேரரசனிடம் எளிதில் ஒப்புதலைப் பெற்றுவிட முடியாது. ஏனென்றால், எவ்வித நிலவியல் தொடர்பும் அரசியல் தொடர்பும் இல்லாத காட்டுப்பகுதிக்குள் திரையர்கள் இருக்கிறார்கள். 

காத்திருந்த கருங்கைவாணன் சரியான வாய்ப்பைப் பயன்படுத்தினான். சூல்கடல்முதுவனின் பொருட்டு பாண்டியப்படையின் பெரும் அணிவகுப்பு வடதிசை நோக்கி நகரத்தொடங்கியது. கதையும் பகையும் வனம்நோக்கி நகர்ந்தன.

பெரும் யானைப்படையோடு புறப்பட்டுப்போனான் கருங்கைவாணன். திரையர்களைப் போரிட்டு வீழ்த்துவது எளிதான காரியமல்ல. அவர்களிடம் போரிட்டு சோழன் தோல்வியைத் தழுவினான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அப்போரின் மூலம் கற்றவைகளே மிக முக்கியமானவை. திரையர்கள் எண்ணிக்கையில் மிகக்குறைந்த கூட்டம். அவர்களை நேர்போரில் தோற்கடிக்க முடியாது.

அப்போரில் பங்கெடுத்த இரண்டாம்நிலை தளபதியான திதியனை விலைக்கு வாங்கினான் கருங்கைவாணன். அவனிடமிருந்து பல செய்திகள் கிடைத்தன. சோழர்படை போரிலே தோற்றது. ஆனால், திரையர்களின் எண்ணிக்கையில் சரிபாதியை அது அழித்தது. எனவே, மிக விரைவாக இன்னொரு தாக்குதலுக்குத் திட்டமிடுவோம் என்று அவன் மன்னனுக்குத் தெரிவித்துள்ளான். சோழமன்னன் செங்கனச்சோழனோ அதனை ஏற்கவில்லை. திரையர்களை வீழ்த்த முனைவது வீண்வேலை என்று மறுத்துவிட்டான்.

திதியன் வழங்கிய ஆலோசனையின் படிதான் கருங்கைவாணன் படை நடத்திச்செல்கிறான். கார்காலத்தின் முன்மழை கொட்டத்தொடங்கியது. திரையர்கள் வசிக்கும் மலைப்பகுதியில் மழையின் கால அளவு சற்றுமுன்னதாகவே வேகம்கொள்வதாக இருந்தது. அதனைக் கணித்துத்தான் திதியன் கூட்டிச்சென்றான்.

ஆற்றுவழிப்பாதையில் கவசவீரர்கள் அணிவகுக்க, யானைப்படை மேலேறிச்சென்றது. சரிபாதித்தொலைவு ஆற்றுவழிப்பாதையில் மேலேறிச் சென்றதும் அடைமழை தொடங்கியது. அதற்காகத்தான் திதியன் காத்திருந்தான். அடைமழை தொடங்கியவுடன் ஆற்றுவழியில் இருந்து கரையேறினான். எந்தக் கணமும் வெள்ளம் பெருகி வரலாம் என்பது மட்டுமல்ல காரணம். அடைமழையின்பொழுது யானைப்படையைக் காடறுத்து வேகமாக உள்ளே கொண்டுசெல்ல முடியும். மழையோசைக்குள் இச்செயலின் தன்மை வெளியே தெரியாது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p5
திதியன் கணித்ததைப்போலவே அடைமழை காடு கரைவதைப்போல கொட்டியது. முதல் நாளினைவிட இரண்டாம் நாளும் இரண்டாம் நாளினைவிட மூன்றாம் நாளும் அதன் தன்மை அதிகரிக்கவே செய்தது. அடைமழையின் தன்மை மிகக்கடினமாக இருந்ததால், திரையர்கள் குடில்விட்டு வெளிவராமலே இருந்தனர். சிலர் மலைக்குகைக்குள் அடைந்துகிடந்தனர்.

கவசவீரர்களைக்கொண்ட கருங்கைவாணனின் யானைப்படையைத் திரையர்களின் குடிக்குக் கொண்டுவந்து சேர்த்தான் திதியன். குடிலின் அருகில் யானையின் பிளிறல் கேட்டபொழுது ஒரு கிழவன் மட்டும் வேய்ந்த கூரையை விலக்கிப்பார்த்தான். யானைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தன. கொட்டும் மழையின் சத்தத்தோடு காற்றும் சேர்ந்துகொண்டது. பயிற்சி பெற்ற யானைகள் அவ்வெளிய குடிலைச் சுழற்றி எறிந்தன. உள்ளுக்குள் இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்பதை அறியும் முன்னே இரும்புவலைப் பின்னல்களைக்கொண்டு வீசிப்பிடிக்கப் பட்டனர்.  குடிலுக்குப் பதில் கூர்முனைகொண்ட இரும்பு வலைப் பின்னல்களால் போர்த்தப்பட்டனர். உள்ளுக்குள் இருந்த யாரும், துளியளவு அசைந்தாலும் இரும்பின் கூர்முனைக் கிழித்து உள்ளிறங்கிக்கொண்டிருந்தது.

குடில்கள் ஒவ்வொன்றாகத் தாக்கப்பட்டன. திரையர்குடி வீரன் நான்குபேர்கூட எந்தக் கணமும் ஒன்றுசேர முடியவில்லை. குடிலுக்குள்ளிருக்கும் ஆண்களைக் கவசம் அணிந்த இருபது வீரர்கள் ஒன்று சேர்ந்து தனியே பிரித்தனர். அவ்வாறு பிரிக்கும்போதுதான் மோதல் உக்கிரங்கொண்டது. கவசவீரர்கள் நாலாபுறமும் சிதறியபடியே இருந்தனர். ஆனால், அவர்களின் கண்முன்னே குடும்பத்தினரின் மேலெல்லாம் இரும்பின் கூர்முனை குத்திக் கிழித்தபடியிருக்க, காணச்சகிக்காதுப் போரிட்டு வீழ்ந்தனர்.

வெட்டி வீசப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. வீறுகொண்டு தாக்கிய சிலர்தான் கொன்றழிக்கப் பட்டனர். மற்ற எல்லோரும் சிறைப்பிடிக்கப்பட்டனர். கதறல் ஓலம் மேலெழ எக்கட்டத்திலும் அடைமழை வாய்ப்புக்கொடுக்கவில்லை. சரியான திட்டமிடலோடு வந்த திதியன் மிகத்துல்லியமாகத் தாக்குதலை நிறைவேற்றினான். அதற்கு அடிப்படையாக இருந்தது கருங்கைவாணனின் துணிவு.

இக்காட்டின் உச்சியில் இருக்கும் திரையர்களைப் பிடித்துவிட முடியும் என்று தளபதிக்குத் துணிவு வருதல் எளிதல்ல. சோழன் அத்தனை ஆயிரம் படைவீரர்களைத் திரட்டிவந்து தாக்குதல் நடத்தித் தோற்றான். அவனின் தாக்குதல் நிகழாமல் இருந்திருந்தால், இவ்வெற்றி சாத்தியமில்லை. திரையர்களின் எண்ணிக்கை சரிபாதி குறைந்திருக்காது. அவர்களின் இருப்பிடம், வழித்தடம் பற்றிய  செய்திகள் எவையும் கிடைத்திருக்காது. சோழனின் படையெடுப்பே இவ்வெற்றிக்குக் காரணம். ஆனால், வெற்றியை அறுவடை செய்தது பாண்டியப்படை.

குடில்கள் எல்லாம் அழிக்கப்பட்டு ஆண், பெண் குழந்தைகள் எல்லாம் சிறைப்பிடிக்கப் பட்டுவிட்டனர். பிடிபட்ட ஆண்களின் கழுத்தில் இரும்பு வளையங்கள் தொங்கக் கைகால்களுடன் அவை பிணைக்கப்பட்டன. வீரர்கள் அறுவர் அறுவராக இணைக்கப்பட்டு யானையின் மேல்வாரச் சங்கிலிகளுடன் இறுகக்கட்டப்பட்டனர். மற்றவர்களை மொத்தமொத்தமாக அடைக்கப் பட்டதைப்போல் சுற்றுவட்டத்தில் கட்டி யாரும் துளியும் பிசுற முடியாமல் இறுக்கப்பட்டனர்.

கருங்கைவாணனின் கீழ்நிலையில் இருக்கும் தளபதிகள் மூவரும் புறப்படலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது திதியன் மட்டும் பதில் சொல்லாமல் இருந்தான். மழைகொட்டிக் கொண்டிருந்தது. அழுகையும் ஓலமும் ஆவேசமுமாக இருந்தது. எல்லாவற்றையும் மழையின் ஓசை விழுங்கியபடி இருந்தது. யார் பேசினாலும் காதருகே போய் சத்தமாகப் பேச வேண்டியிருந்தது.

“எல்லோரையும் பிடித்துவிட்டோம். உடனே இவ்விடம்விட்டு நகர்ந்து விடுவோம்” என்ற பொழுது திதியன் சொன்னான். “இல்லை. இவர்களின் தலைவனைக் காணவில்லை. அவனைத்தான் அப்பொழுதிருந்து தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று பிடிபட்ட ஒவ்வொருவனின் முகத்தையும் அருகில்போய் பார்த்தபடியே சொல்லிக் கொண்டிருந்தான்.

கொட்டும் மழையில் கைகால்களில் எல்லாம் குருதி வழிய நின்றிருந்த வீரர்களை மீண்டும் மீண்டும் பார்த்தான். அவன் தேடிய தலைவன் இல்லை.

“அவன் இல்லையென்றால் என்ன? கிடைத்தவர்கள் போதுமே, நாம் புறப்படலாம்” என்று மற்றவர்கள் சொன்னபொழுது திதியன் சொன்னான், “அவனை இவ்விடம் வைத்துக் கைதுசெய்ய வேண்டும் அல்லது கொன்று முடிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் நாம் புறப்பட்டால் காட்டினைவிட்டுக் கீழிறங்கும்போது நம்மில் ஒருவர்கூட உயிரோடு இருக்க மாட்டோம்.” 

திதியன் சொன்னபின்புதான் ஆபத்தின் அளவு புரிந்தது. “இது அவனது காடு. அவனோடு ஐந்து வீரர்கள் இருந்தால் போதும், நமது மொத்தப்படையையும் அழித்துவிடு வான். மலைச்சரிவுகளில் ஆடுகளைப் போல நமது யானைகள் உருண்டு செல்வதைப் பார்க்க நீங்கள் ஆசைப்படுகிறீர்களா?” எனக் கேட்டான்.

அனைவரும் விக்கித்து நின்றனர்.

“எனது படையின் ஐநூறு வீரர்களையும் அழித்தவன் அவன்.”

கேட்பவர்களின் நெஞ்சில் அச்சம் பரவிக்கொண்டிருந்தது. “அவனைப் பிடிக்க இதுவே ஏற்ற இடம். அவனை இவ்விடம் வரவைத்தால் மட்டுமே நாம் வெல்ல முடியும். இவ்விடம்விட்டு நகர்ந்தால் அவனது தாக்குதலை நம்மால் சந்திக்க முடியாது.”

மழை கொட்டிக்கொண்டிருந்தது. பிடிபட்ட வீரர்கள் ஆவேசங்கொண்டு கத்தியபடி பிணைக்கப்பட்ட இரும்புக் கம்பிகளை வளைத்து நொறுக்க முயன்றுகொண்டிருந்தனர். திதியனின் மனதில் பகை கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. எப்படியும் இன்று அவனைச் சிறைபிடிக்காமல் இவ்விடம்விட்டு நகரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். பல்வேறு வகையில் சிந்தித்த அவன் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான்.

அவனுக்குக் குழந்தைகள் உண்டு என்று கேள்விப்பட்டுள்ளான். அது நினைவுக்கு வந்த கணம் ஆவேசங்கொண்டு கத்தினான். அவனது குழந்தை எதுவென சொல்லவில்லையென்றால் எல்லா குழந்தையையும் வெட்டி வீசுவேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது அது நிகழ்ந்துகொண்டும் இருந்தது. யாரும் சிந்திப்பதற்குக் கணப்பொழுதுகூட அவன் நேரம் வழங்கவில்லை. வார்த்தைகள் முடியும்முன் செயல்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் அவனது சினம் கண்டு கருங்கைவாணனே அதிர்ந்தான்.

முன்னால் நின்றிருந்த ஒரு சிலரால்தான் அவன் பேசுவதைத் தெளிவாகக் கேட்க முடிந்ததது. மற்ற எல்லோரும் அவனது செயலைக்கண்டு வெறியேறியபடி கத்தியபொழுது முன்னால் நின்றிருந்த பெண்ணொருத்தி தலைவனின் மூன்று குழந்தைகளையும் அடையாளம் காட்டினாள்.
அம்மூன்று குழந்தைகளின் இடதுகால்களையும் ஒன்றாய்க் கட்டி மரத்தின் உச்சிக்குத் தூக்கினான் திதியன். கைதானவர்களின் கதறல் மழையோசையையும் தாண்டி காட்டை உலுக்கியது. மழையின் வேகம் குறையத் தொடங்கியது.  திதியன் கடைசி வாய்ப்பை வழங்குவதாகச் சொல்லி பெரும் ஓசையை எழுப்பினான்.

அவனது வீரர்கள் மர உச்சியில் தொங்கவிடப் பட்ட குழந்தைகளை நோக்கி அம்பெய்ய ஆயத்தமாயினர். கைதான வீரர்களின் ஆவேசம் அடக்க முடியாதபடி இருந்தது. யானையோடு கட்டப்பட்ட அறுவரும் இழுத்து நகர்த்திய பொழுது நிலைகொள்ள முடியாத யானைகள் பிளிறத்தொடங்கின. அவற்றின் கால்கள் நீரோடும் ஈரமண்ணில் வழுக்க ஆரம்பித்தன. முன்புற யானைகள் நிலைகொள்ளத் திணறியபொழுது பின்புற யானையொன்று சரிந்து உட்கார்ந்தது.

திரையர்கள் யானையை நகர்த்தும் ஆவேசங்கண்டு பாண்டியப்படை உறைநிலை கொண்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்தது. ஆனால், திதியன் எதற்கும் கலங்கவில்லை. அவனது வெறி கருங்கைவாணனையே அஞ்சச்செய்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p6
திதியனோ, கருங்கைவாணன் உள்ளிட்ட யார் முகத்தையும் பார்க்கவில்லை. யார் உத்தரவையும் கேட்கும் நிலையிலும் இல்லை. இந்தக் கணத்தை இழந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். வில்லேந்திய வீரன் ஒருவனை மட்டும் தனியாக நிறுத்தி ஆயத்தமாகச் சொன்னான். கயிற்றில் கட்டித் தொங்கிக் கொண்டிருந்த மூவரில் ஒருவனை நோக்கி அவன் குறி பார்த்தான்.

அதனைக் கவனித்த  திதியன் ஆவேசங்கொண்டு அவனது முகத்தில் தாக்க முற்பட்டான். “நான் ஒரு குழந்தைக்குக் குறிவைக்கச் சொல்லவில்லை. கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் கயிற்றுக்குக் குறி வை. உனது ஒற்றை அம்பு அக்கயிற்றை அறுத்துச்செல்ல வேண்டும். மூவரும் கீழே விழுந்து சிதறிச் சாகவேண்டும்.”

பதறிய கவசவீரன் அம்பின் நுனியை சற்றே மேலே உயர்த்தி ஆடியபடி இருக்கும் கயிற்றுக்குக் குறிபார்த்தான். பெண்கள் கதறித்துடித்தனர். அடுத்து நிகழப்போவதை எண்ணுவதற்குள் நிகழ்த்தி முடிப்பான் என்பதை அவர்கள் அறிந்ததால் விபரீதத்தால் உயிர் கலங்கினர்.

அப்பொழுது என்ன ஓசை கேட்டதென கருங்கைவாணனுக்கோ, திதியனுக்கோ புரியவில்லை. ஆனால், கதறும் பெண்கள் தங்களின் அழுகையை நிறுத்தினர். யானையை இழுத்து நகர்த்திக்கொண்டிருந்த திரையர்குல ஆண்கள் தங்களின் ஆவேசம் அடக்கினர்.

கணநேரத்தில் முழு ஓசையும் அடங்கியது. கயிற்றில் தொங்கும் மூன்று சிறுவர்களின் ஓசை மட்டுமே கேட்டது. அம்பினை இழுத்தபடி நின்ற கவசவீரன் அப்படியே நிறுத்தினான். திதியனும் கருங்கைவாணனும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். எங்கிருந்து என்ன  குறிப்பு வந்தது என்பது தெரியாமல் விழித்தனர். ஆனாலும் திதியன் தினவோடு நின்றான்.

தனது குலமே சிறைப்பட்டு நிற்கும் கொடுமையைக் காணச்சகிக்காது, கையறு நிலையில், வேறுவழியேயின்றி புதர் விலக்கி வெளிவந்தான் திரையர் குலத்தலைவன் காலம்பன்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 6:11 pm

திரையர் கூட்டத்தை வென்று, அவர்களை மதுரைக்குக் கொண்டுவந்து சேர்த்தான் கருங்கைவாணன். மதுரை மணவிழாக் கொண்டாட்டத்தில் மூழ்கித் திளைத்துக்கொண்டிருந்தது. யவனர்கள் அளவிட முடியாத பரிசுப் பொருள்களோடு வந்திருந்தனர். அவர்களை மகிழ்விக்க நூறுகால் மண்டபத்தில் பெரும் நாட்டிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்று இரவு முழுவதும் கொண்டாட்டங்கள் தொடர்ந்தன. நள்ளிரவுக்குப் பின்தான் வென்றவர்களோடு கோட்டைக்குள் நுழைந்தான் கருங்கைவாணன்.

மற்றொரு காலத்தில் இது நிகழ்ந்திருந்தால், இவ்வெற்றியே பெருங்கொண்டாட்டமாக மாறியிருந்திருக்கும். ஆனால், மணவிழாவில் நகரமே திளைத்துக்கொண்டிருக்க, இவ்வெற்றி வெளித்தெரியாமல் மூழ்கியது. யவனர்கள் இவ்விழாவின் பொருட்டுப் பாண்டிய நாட்டினைச் சிறப்பிக்க `மீனாள்’ என்ற நாணயத்தை வெளியிட்டனர். மாமன்னர் அளவற்ற மகிழ்ச்சியில் இருந்த அன்றைய நள்ளிரவுதான் கருங்கைவாணன் வந்துசேர்ந்த செய்தி சொல்லப்பட்டது.

அதிகாலையிலையே கருங்கைவாணனை அழைத்து ஆரத்தழுவினார் பேரரசர். சூல்கடல் முதுவனை வியக்கவைக்கும் பரிசுப்பொருளினைத் தர வேண்டும் என்ற தனது விருப்பத்தை நிறைவேற்றினான் தளபதி. அவனது இச்செயலுக்காக எண்ணற்ற பரிசுகளை அள்ளி வழங்கினார். இப்போரில் துணைநின்ற திதியனுக்கும் மாமன்னர் பரிசுகளை வழங்கினார். பெரும் உற்சாகத்தோடு அன்று மாலையிலிருந்து மணவிழா விருந்தில் பங்கெடுக்கத் தொடங்கினான் கருங்கைவாணன்.

திருமணக்கொண்டாட்டம் எண்ணிலடங்காத நிகழ்வுகளாக மதுரை எங்கும் நிகழ்ந்துகொண்டிருந்தது. வைகை ததும்பி ஓட, கரையெங்கும் ஊன்றப்பட்ட எண்ணாயிரம் விளக்குகள் சுடர்விட்டுக்கொண்டிருந்தன. பார்க்கும் கண்கள் பரவசத்தில் திளைத்தன. இவ்வுலகின் வியத்தகு நகரமாக மதுரை ஒளிவீசிக்கொண்டிருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p1
வைகையின் அலைகள் சுடரொலியை ஏந்தியபடி நகர்ந்துகொண்டிருந்தன. நதியின் நடுவில் அலங்கரிக்கப்பட்ட ஓடத்தில் பொற்சுவை போய்க்கொண்டிருந்தாள். கரையின் இருபுறமும் விளக்கொளி மின்ன, எண்ணிலடங்காத மக்கள் கூட்டம் திரண்டிருந்தது.
கரையெங்கும் யாராலும் பிடிக்கப்படாமலேயே இத்தனை ஆயிரம் விளக்குகள் எப்படி நிற்கின்றன என்பதே காண்போருக்குப் பெரும் வியப்பாக இருந்தது. விளக்கின் கீழ்ப்பகுதி ஈட்டியின் முனைபோல் கூர்முனைகொண்டிருக்க, அதனை மண்ணில் குத்தி அதன் மேற்பகுதியில் அழகிய அகல் விரிந்திருக்க, அதில் இடப்பட்டிருந்த திரியில் இருந்து சுடர் எரிந்துகொண்டிருந்தது. இதன் பெயர் குத்துவிளக்கென்றும் இத்திருமணத்தின் பொருட்டு வைகைக்கரையில் இதுபோல எண்ணாயிரம் விளக்குகளை ஏற்ற வேண்டியுள்ளதால், அவற்றைப் பொருத்தமான தன்மையோடு வடிவமையுங்கள் என்றும் பேரரசர் சொன்னதனால் பாண்டியநாட்டுக் கலைஞர்கள் இக்குத்துவிளக்குகளை வடிவமைத்தனர்.

ஆற்றங்கரையில் யாரும் தொடாமலேயே ஆளுயரத்துக்கு நின்று ஒளிவீசும் இவ்விளக்கு களைக் காண்பதே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வைகையில் பேரலங்காரத்தோடு நகரும்  சிற்றோடத்தின் மீதிருந்து இருகரைகளையும் பார்த்துக்கொண்டிருந்தாள் பொற்சுவை. சற்றுப் பின்தள்ளி அமர்ந்திருந்தாள் சுகமதி. அன்னகர்கள் இருவர் ஓடத்தை நீர்வலித்து ஓட்டிக்கொண்டிருந்தனர்

“ஈட்டிகளைத் தலைகீழாக மண்ணிற்குத்தி அதன் மேற்புறத்தில் அகலமைத்து விளக்காக்கி இருக்கிறார்கள். அதனால்தான் யாரும் பிடிக்காமலேயே நின்று ஒளிவீசுகின்றன” என்று புதுமையான குத்துவிளக்கைப் பற்றிச் சொன்னாள் சுகமதி.

வழக்கம்போல் சற்றே அசட்டையான குரலில் பொற்சுவை சொன்னாள், “இத்திருமணத்தில் எத்தனை  நிகழ்வுகள் தலைகீழாக இருக்கின்றன பார்த்தாயா?”

தாக்குதலுக்கு உள்ளாதல் சுகமதிக்குப் புதிதன்று. ஆனாலும், இம்முறை அதனை எதிர்கொள்வது என முடிவெடுத்தாள். மணநாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் கடந்தகாலத்திலேயே மூழ்கி இருப்பது பொருத்தமல்ல என்றுபட்டது. “தலைகீழாக மண்ணில் புதைந்ததைப் பற்றியே ஏன் நினைவைச் செலுத்த வேண்டும். புதிதாய் ஒளிவீசும் எண்ணற்ற சுடர்களும் நமது கண்களுக்குத் தெரியத்தானே செய்கின்றன” சற்றே மெல்லிய குரலில் ஆனால், உறுதியோடு சொன்னாள் சுகமதி.

மறுமொழியெதுவும் இல்லை. முதன்முறை பொற்சுவை அமைதியானாள்.

ஓடம் நகர்ந்துகொண்டே இருந்தது. பேச்சொலி எதுவும் இல்லை. சிறிது நேரங்கழித்து சுகமதி அன்னகர்களைப் பார்த்துச் சொன்னாள். “ஓடத்தைப் படித்துறைக்குக் கொண்டு செல்லுங்கள். மலரணியும் சடங்கிற்குச் செல்ல வேண்டும்.”

அன்னகர்கள் ஓடத்தைக் கரை நோக்கித் திருப்பினர். பொற்சுவை எதுவும் பேசாமல் இருந்தாள். சுகமதியின் மனதுக்குள் அச்சம் வளரத்தொடங்கியது. ஓடம் கரைநோக்கிப் போய்க்கொண்டிருந்தது. பொற்சுவையின் அமைதியைப் பொறுக்க முடியாமல் சுகமதி சொன்னாள், “மலரணியும் சடங்கிற்குப் பொழுதாகிவிட்டது, நாம் அலங்காரம் முடித்து அவைக்குச் சென்றாக வேண்டும், பேரரசரும் இளவரசரும் வந்துவிடுவார்கள். அதனால்தான் சொன்னேன்” என்றாள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p2
வைகையின் மெல்லிய அலைகளைப் பார்த்தபடியே பொற்சுவை சொன்னாள், “எனது ஓடம் எப்பொழுதோ திருப்பப்பட்டுவிட்டது சுகமதி. இப்பொழுது உனது பங்கிற்கு நீயும் திருப்புகிறாய்; அவ்வளவுதான்.”

பேரரசரின் தனிமாளிகையில் நடந்த உரையாடல் பெருங்கலக்கத்தையே உருவாக்கியது. தேவாங்கு விலங்கைக் கைப்பற்றப் போர்தொடுக்கலாம் என்று கருங்கைவாணனும் இளவரசரும் சொன்ன  கருத்தை மையூர்கிழார் ஒரு மதயானையின் கதையைச் சொல்லித் தகர்த்துவிட்டார். என்ன செய்வதென்று தெரியாத நிலையில் மாமன்னர் எழுந்து மலரணியும் சடங்கிற்கு வந்துவிட்டார். இளவரசனும் சூழ்கடல் முதுவனும் அதற்கு முன்பே விரைந்து வந்தனர். எல்லோரின் ஓடங்களும் திசைமாறித்தான் சடங்கு நடக்கும் அவைக்கு வந்து சேர்ந்தன.

என்ன செய்யலாம் என்பது குறித்துத் தீவிரமாகச் சிந்தித்தான் கருங்கைவாணன், ‘நாம் படையெடுத்துச் செல்வதைப் பேரரசர் அனுமதிக்கப் போவதில்லை. வேறு என்னதான் வழி? எப்படியாவது தேவாங்கு விலங்கைக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். திரையர் போன்ற மாவீரர்களையே வென்று கொண்டுவர முடிந்த நம்மால் இதனைச் செய்ய முடியாதா’ என்று எண்ணிய கணத்தில்தான் இச்சிந்தனை தோன்றியது. தோன்றிய கணத்திலே முடிவு செய்தான்; `திரையர்களே இதற்குப் பொருத்தமானவர்கள்.’

மலரணியும் சடங்கு முடித்துப் பள்ளியறைக்குத் திரும்பிக்கொண்டிருந்த பேரரசரைக் காணக் காத்திருந்தான் கருங்கைவாணன். இரவு நெடுநேரமாகியிருந்தது. இப்பொழுதே சொல்ல வேண்டிய அளவுக்கு என்ன முக்கியச் செய்தி எனக் கேட்ட பேரரசரிடம் விளக்கிச் சொன்னான் கருங்கைவாணன்.

சமவெளி மனிதர்கள் யாராக இருந்தாலும் காட்டுக்குள் ஊடறுத்து உள் நுழைய முடியாது. பெரும்வீரன்கூட காட்டின் சிறு பூச்சிக்கடிக்கு எளிதில் பலியாவான். பாதையற்ற பாதைகளைக்கொண்ட மலைத்தொடர்களைத் தாண்டிச்செல்ல காடுபற்றிய அளவற்ற அறிவும் இயல்பிலேயே அதற்கான உடல்வாகும் வாழ்வெல்லாம் காட்டில் உடல் வளர்த்த மனிதனாகவும் இருத்தல் வேண்டும். மலைமக்கள் எல்லோரையுங்கூட இதில் ஈடுபடுத்திவிட முடியாது. பாரியின் ஆற்றலும் பறம்பு மக்களின் வீரமும் யாவரும் அறிந்தது. அவற்றை எதிர்கொண்டு மீண்டு வர வேண்டுமென்றால், அவர்களைவிடப் பெரும் வீரர்களால்தான் முடியும். அதற்கு இம்மண்ணில் பொருத்தமானவர்கள் திரையர்கள் மட்டுமே. எனவே, அவர்களை இதில் ஈடுபடுத்தலாம் என்று சொல்லி அதற்கான திட்டத்தையும் சொன்னான் கருங்கைவாணன்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தேவாங்கைக் கொண்டுவர, அரசவையில் எண்ணற்ற வழிமுறைகள் சொல்லப்பட்டன. அதில் ஒன்றுகூட பொருத்தமானதாகப் பேரரசருக்குப் படவில்லை. பறம்பின் தன்மையும் பாரியின் ஆற்றலும் அறியாமல் இவர்கள் பேசுகின்றனர் என்றே அவருக்குத் தோன்றியது. மாற்றுவழியைக் கண்டறிய முடியாத மனநிலையோடு மலரணியும் சடங்கிற்குச் சென்ற பேரரசர், அன்றிரவே இவ்வளவு சிறப்பானதொரு வழி கண்டறியப்படும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. 

“இன்று அரசவையில் நடந்த முக்கியமான உரையாடலால் வைகைக்கரையில் எண்ணாயிரம் குத்துவிளக்குகள் ஏற்றப்பட்ட காட்சியைக் காண முடியாமல் போய்விட்டதே என்று மனம் மிகுந்த கவலைகொண்டிருந்தது. ஆனால், உனது ஆலோசனை அளவற்ற மகிழ்வோடு என்னைப் பள்ளியறைக்கு அனுப்புகிறது” எனச் சொல்லி கருங்கைவாணனைப் பாராட்டி அனுப்பி வைத்தார் பேரரசர்.

இரவோடு இரவாக சிறைக்கொட்டடிக்குள் நுழைந்தான் கருங்கைவாணன். இரும்புக் கம்பிகளால் இறுகப் பிணைக்கப்பட்ட காலம்பனிடம் பேசத் தொடங்கினான். சென்ற போரில் திதியன் ஆற்றிய பணியை இப்பொழுது காலம்பனுக்கு வழங்குவதுதான் அவனது திட்டம். ஆனால், அது அவ்வளவு எளிதானதன்று.

“கடற்பயணத்துக்கு வலிமை மிகுந்த அடிமைகள் தேவை என்பதற்காகத்தான் உங்களைச் சிறைபிடித்தோம். ஆனால், எதிர்பாராத காரணத்தால் நாங்களே உங்களுக்கு உதவிசெய்யும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று பேச்சைத் தொடங்கினான் கருங்கைவாணன். சுற்றிக் கவசவீரர்கள் நின்றிருந்தாலும் இக்கணம்கூட அவனைக் கொன்றுவிட காலம்பனால் முடியும். ஆனால், தன் குலம் முழுவதும் சிறைப்பட்டிருப்பதால் அமைதி காப்பதே முறை என்று எண்ணிக்கொண்டிருந்தான். கருங்கைவாணன் என்ன சொன்னான் என்பது அவனது காதிலே விழவில்லை.

வெறியேறிக் கிடக்கும் ஒருவனிடம் ஆசையைத் தூண்டுவது எளிதல்ல, தனது குலமும் குடியும் சூறையாடப்பட்டிருக்கும் நிலையில் அவனை ஆற்றுப்படுத்த யாராலும் இயலாது. அரச வாழ்வை அனுபவித்தவனின் மனம் ஆசையின் வழியே சிந்தித்துப் பழகியிருக்கும். தனக்கான உடைமையை, பொன்னை, பொருளைச் சேர்த்துச் சிறப்பாக வாழநினைக்கும் குடிகளுக்கு இவ்வாசைகள் எண்ணற்றனவாக இருக்கின்றன. ஆனால், மலைமக்களின் கனவில் இவை எவையும் இடம்பெறுவதில்லை. திதியனைப்போல காலம்பனை விலைபேசிவிட முடியாது என்பதை பல முயற்சிகளுக்குப் பின்னால்தான் அவர்கள் உணர்ந்தனர்.

பறம்பின் மக்கள் திரையர்களோடு இரத்த உறவுகொண்டவர்கள். அவர்களுக்கு எதிரான எந்தவொரு சிறு செயலையும் செய்வதைவிட தாம் மரணிப்பதே மேல் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். குலச்சமூகத்தில் முன்னோர்களின் வாக்கிற்கு இருக்கும் இடத்தை சமவெளி மனிதர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாது. தம் கூட்டம் முழுமையும் அழிந்தாலும் குலத்தின் நம்பிக்கைக்குத் தீங்கிழைக்க மாட்டோம் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p3
‘என்ன செய்யலாம்?’ என்று சிந்தித்த கருங்கைவாணனுக்கு  இணையற்ற பெரும்வீரனான காலம்பன் அவனாக வந்து கைதான அந்தக் கணம் நினைவுக்கு வந்தது. மூன்று குழந்தைகளை வைத்து அதனைத் திதியனால் செய்ய முடிந்ததை மொத்தக்கூட்டத்தையும் வைத்து நாம் செய்தால் என்ன என்று தோன்றியது. கருங்கைவாணன் உறுதியான குரலில் தனது திட்டத்தை அறிவித்தான்.

“எமது பேரரசுக்கு இப்பொழுது தேவாங்கு விலங்கு மிகவும் தேவை. உங்களில் எத்தனை பேர் போக வேண்டும் என்று சொல்லுங்கள் அவர்களை அனுப்புகிறோம். நாங்கள் விரும்பியபடி அவற்றை நீங்கள் கொண்டு வந்துவிட்டால் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் விடுவிக்கப் பேரரசர் இசைவு தெரிவித்துள்ளார். இப்பணியைச் செய்ய மறுத்தால், ஆண்கள் எல்லோரும் கப்பலில் அடிமைகளாகச் செல்லத் தொடங்குவீர்கள். ஆனால், மற்றவர்கள் என்னாவார்கள் என்று தெரியாது. ஓர் உத்தரவில் எல்லாம் முடிந்துவிடும். நாளைக் காலைக்குள் முடிவினைச் சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றான் கருங்கைவாணன்.

கூட்டத்தில் இருந்த எல்லோர்க்கும் இச்செய்தி சொல்லப்பட்டது. காலம்பன் கடைசிவரை மறுத்தான். ஆனால், திரையர்குலக் கிழவன் சொன்னான், “உயிர் ஒரு பொருட்டல்ல, ஆனால், கருங்கைவாணனைக் கொல்லும் ஒரு வாய்ப்புக்காக அதனைப் பயன்படுத்தினால் எவ்வளவு  பொருளுள்ளதாக மாறும்?”

இவ்வினா காலம்பனுக்குப் புதிய திசைவழியைக் காட்டத் தொடங்கியது. கிழவன் மேலும் சொன்னான், “பறம்பின் மக்களைப் பிடித்துவரச் சொல்லவில்லை. அவ்விலங்கைத்தான் கொண்டுவரச் சொல்லுகிறார்கள். நம் கூட்டமே அதனால் உயிர்வாழும் என்றால், அதனைத் துணிந்து செய்யலாம். நம் மூதாதையர்களே அதற்குத் துணைநிற்பார்கள். நம்மிடத்தில் வைத்து நம்மைச் சிறைப்பிடித்த அவர்களே, அவர்களின் இடத்தில் வைத்து நம்மை விடுவிக்கும் சூழல் வந்துள்ளது. இதனை முதலில் பயன்படுத்துவோம். நாளை இதுவும் மாறும்.”

கிழவனின் சொல் இரவு முழுவதும் காலம்பனின் காதுகளுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. மறுநாள் காலை காலம்பன் உள்ளிட்ட முப்பது பேரைப் பிணைத்திருந்த கூர்முனை இரும்புச் சங்கிலி கழற்றப்பட்டது.

காலம்பன் நடந்ததைச் சொல்லிக்கொண்டிருந்த பொழுதே பாரியின் கால்கள் நடுங்கத்தொடங்கின. அவனது சொற்கள் உள்ளெலும்புகளை நொறுக்கிக்கொண்டிருந்தன. அவர்கள் திரையர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உணர்ந்த கணம் பாரியின் மூச்சுக்காற்று உறைந்தது. 
காலம்பனின் பாறை போன்ற தாக்குதலை எதிர்கொண்ட பாரியால், முணங்கியபடி சொல்லும் அவனது சொற்களை எதிர்கொள்ள முடியவில்லை. துயரத்தின் கொடூரத்தை செவியினில் வாங்க முடியாத பாரி “அய்யோ…” வென வெடித்துச் சிதறினான்.  “என் மூதாதையர்களையா கொன்றழித்தேன்? பெரியாத்தா தூதுவையின் பிள்ளைகளையா மாய்த்தேன்?” பாரியின் குரல்வளையிலிருந்து பீறிடும் சொற்கள் அவனைச் சரித்து மண்ணில் வீழ்த்தின.

அதனையும் மீறிப் பீறிட்டது காலம்பனின் கதறல். “நாங்கள்தான் தவறிழைத்தோம். எம் குலம்காக்கும் எண்ணத்துக்காகத் தெரிந்தே தவறிழைத்தோம். சூலிவேளின் குலத்தைக் கொன்றழித்த கொடியவன் நான். இனியும் நான் உயிரோடு இருக்கக் கூடாது” எனச் சொல்லிக் கொண்டே இடுப்பில் இருந்த குத்துக்கோலை உருவித் தனது கழுத்தில் செருகத்துணிந்தான் காலம்பன். கணநேரத்தில் பாய்ந்து தடுத்தான் தேக்கன்.

இடக்கை ஒடிந்து கட்டுப்போடப்பட்ட நிலையில் ஒருகைகொண்டு காலம்பனைத் தேக்கன் தடுத்தபொழுது, அவனது முகத்தை நேர்கொண்டு பார்க்க முடியாமல் காலில் விழுந்து மன்றாடினான் காலம்பன். “நீங்கள் எங்களின் தாயாதிகள். உங்களைக் கொன்று குவித்த கொலைகாரர்கள் நாங்கள்…” சொல்லிக் கதறும் அவனது கையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. சூழலின் அவலம் தாங்க முடியாததாக இருந்தது. நெஞ்சு வெடிப்பதைப்போல கதறும் பாரியின் கதறலைப் பறம்பு முதன்முறையாகக் கேட்டது. காலம்பனைத் தனது மார்போடு அணைத்துப் பிடித்த தேக்கன் பாரியைப் பார்த்துக் கைக்குவித்து வேண்டினான். “கதறாதே, நீ பறம்பின் தலைவன்.  உனது கண்ணீரை இம்மண் அறியக் கூடாது. கதறாதே பாரி” சொல்லிக் கதறினான் தேக்கன்.

பாரியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. “நம்மால் எப்படிக் கண்டறிய முடியாமற் போனது. ஓடுவது நம்குல மாந்தர்கள் என்று நாம் எப்படி அறியாமற் போனோம். எல்லா குலங்களையும் அழியவிடாமற்காத்த நாம், நம் குலத்தை நமது மண்ணில் வைத்தே அழிக்கத்   துணிந்துவிட்டோமே” என்று அவன் கதறியபொழுது, “இல்லை பாரி, இல்லை. நாங்கள் உம் குலத்தவரல்லர்,  அச்சொல்லிற்கான தகுதியை இழந்துவிட்டோம். எம்மைக் கொன்றழித்துவிடு. நாங்கள் செய்த இழிச்செயலுக்கு அதுதான் கைமாறு” சொற்களின் வழியே சாவின் கதவினை வெறிகொண்டு முட்டினான் காலம்பன்.

எந்தக் கையைக்கொண்டு காலம்பன் தனது காலடியைப் பற்றி வணங்கினானோ, அந்தக் கையை ஏந்தி தனது முகத்தில் அறைந்துகொண்டு துடித்தான் பாரி. “மூதாதை தூதுவை எம்மை மன்னிப்பாளா?” என்று கதறும் பாரியின் குரல்கேட்டு தேக்கன் நிலைகுலைந்து மண்ணிற் சரிந்தான். 

``தம் குலத்தைக் காக்கப் பாரியெனும் மாமனிதனையே கொல்லத் துணிந்தேனே” எனச் சொல்லி முகத்தில் அறைந்துகொண்டு துடித்தான் காலம்பன். இணையற்ற வீரர்கள் இருவர் உதிர்க்கும் கண்ணீர் தாங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது.

வேட்டூர் பழையனும் வந்து சேர்ந்தான். அவலத்தைக் கண்கொண்டு பார்க்க  முடியவில்லை. யாராலும் ஆற்றுப்படுத்த முடியாத சூழல் நிலவியது. உணர்வின் பேரலையால் கிழிபட்டுக்கொண்டிருந்தனர் அனைவரும். நிலைமையை மாற்ற வேண்டும் என்று சிந்தித்த கணத்தில் பெருங்குரலெடுத்துக் கத்தினான் பழையன். “பாரி... அழுவதற்குப் பொழுதில்லை. வீழ்ந்தவர்களைக் காப்பாற்ற வேண்டும். அடுத்து செய்ய வேண்டியதைப் பற்றிச் சிந்திப்பாயாக.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p4
ஒற்றைச்சொல்கொண்டு சூழலையே புரட்டினான் பழையன். மனித மனத்தை இயக்கும் விசையை அறிதலே கலையின் உச்சம். சிக்கலுக்குள் தன்வயப்பட்டுவிட்ட தேக்கனால் அதனைச் செய்ய முடியவில்லை. நிலைமையைப் பழையன் கையிலெடுத்துக்கொண்டான்.

அவனது சொற்கேட்ட கணம் பாரியின் கதறல் உருமாறத் தொடங்கியது. “ஒருவரையும் சாகவிடக் கூடாது. நம்மால் வீழ்த்தப்பட்ட திரையர் குல வீரர்களை உடனடியாகக் காப்பாற்ற வேண்டும்” பதறினான் பாரி. கண்ணீரும் அவலமும் மரணத்தை வெல்லும் வெறியாக மாறியது.

பழையனோடு வந்த வீரர்கள் காடெங்கும் நுழைந்தனர். யார் யார் எங்கெங்கு வீழ்ந்தனர் என்பது பாரிக்கும் தேக்கனுக்கும் துல்லியமாகத் தெரியும். குறிப்புகள் சொல்லி எல்லா இடங்களுக்கும் வீரர்களை அனுப்பினர். ஊர்களில் இருந்த வயதான மருத்துவர்களைத் தோளிலே தூக்கிக்கொண்டு காடெங்கும் ஓடினர் பறம்பின் மக்கள்.

கொம்பேறிமூக்கனின் நஞ்சென்றால் பிழைக்கவைக்க எம்முயற்சியும் எடுக்க முடியாது. ஆனால், கொடிமூக்கனின் நஞ்சு என்பதால் மருத்துவர்கள்   நம்பிக்கையை வெளிப்படுத்தினர். உறுதியாகப் பலரையும் காப்பாற்ற முடியும் என்று அவர்கள் சொன்ன சொல்லே பாரியின் துயரத்தைக் கட்டுப்படுத்தியது.

அவனும் வீழ்ந்தவர்களை நோக்கி ஓடத்தலைப்பட்டான். காலம்பனால் காலெடுத்து வைக்க முடியவில்லை. குற்றவுணர்வு அவனது முழு ஆற்றலையும் விழுங்கிவிட்டது.  `இம்மண்ணில் நடக்கும் தகுதியை நான் இழந்துவிட்டேன் பாரி’  என்று மனம் மன்றாடியபடி இருந்தது. தாங்க முடியாத அவலத்தால் நிலைதடுமாறும் திரையர்குலத் தலைவனைத் தனித்துவிட, பாரி ஆயத்தமாக இல்லை. அவனைத் தாங்கிப்பிடிக்க தனது இருகை ஏந்தினான்.

காலம்பனின் வீரத்தை எதிர்கொள்ள முடிந்த பாரியால் அவனது வேதனையை எதிர்கொள்ள முடியவில்லை. தான் செய்த தவறைக் காலம்பன் மன்னிப்பானா என்று பாரி ஏங்கிய பொழுதெல்லாம், “மன்னிக்கக் கூடாத கொடியவன் நான். என்னைக் கொன்று அழித்துவிடு பாரி” என்று மன்றாடினான் காலம்பன்.

வெல்ல முடியாத தோள்வலிமைகொண்ட இருவரும் ஒருவரின் அரவணைப்பில் மற்றவர் நிலைகொண்டனர்.

ழுத்திலே அம்பு பாய்ந்தவனைக் காப்பாற்ற முடியவில்லை. உடலின் பிற இடங்களில் அம்பு பாய்ந்தவர்களையெல்லாம் காப்பாற்றிவிட முடியும் என்று மருத்துவர்கள் உறுதியாகச் சொன்னார்கள். பொருத்தமான மூலிகைகள்கொண்டு சிகிச்சை மிகத்தீவிரமாக நடந்தது. உயிர்மீட்கும் களத்தில் மூலிகைகளை ஏந்தி நிற்கும் பறம்பின் மருத்துவன் எளிதில் தோற்பதில்லை. சுண்டாப்பூனையாலும் இரத்தச் சிலந்தியாலும் கொல்லப்பட்டவர்கள்போக மீதமுள்ள அனைவரையும் காப்பாற்றும் வேலை நடந்துகொண்டிருந்தது. மருத்துவக் குடில்விட்டு நகரவில்லை பாரி.

கண்ணிலே கருஞ்சுரைக்காய் எறிந்து அடிபட்டு வீழ்ந்தவருக்கும் சுண்டாப்பூனையின் தாக்குதலால் கைகால்களை இழந்த மூவருக்கும் சிகிச்சை தீவிரமாக நடந்தது. அவர்களை உயிர்பிழைக்க வைத்துவிட முடியும். ஆனால், உடலுறுப்புகள் இழந்தது இழந்ததுதான்.

பாரியோடு இணைந்து போரிட்ட இரண்டு வீரர்களையும், கீதானியையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஈட்டி நெஞ்சுக்கூட்டைப் பிளந்து வெளியேறியிருந்தது. அவ்விரு வீரர்களின் உடல்களும் அவர்களின் ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டுப் புதைக்கப்பட்டது. கீதானியை எவ்வியூருக்கு தூக்கி வந்தனர்.

தாய்மார்களின் அழுகை ஊரையே உலுக்கியது. கீதானியின் வேகமும் துடிப்பும், பாரியின் கண்களைவிட்டு அகலவில்லை. பெருகும் கண்ணீரைக் காலம்பன் பார்த்துவிடக் கூடாது என்று கட்டுப்படுத்திக்கொண்டிருந்தான்; முடியவில்லை.

கீதானியை நோக்கி ஈட்டியெறிந்த தனது கையை வெட்டி எறிய வேண்டும்போல் இருந்தது காலம்பனுக்கு, ஆனால், அக்கையை இப்போது தனது நெஞ்சோடு அணைத்துப் பிடித்துக்கொண்டிருந்தான் பாரி.

இறந்துபோன திரையர்களோடு கீதானியையும் ஒன்றாய்ச் சேர்த்துப் புதைத்தனர். கொன்ற எல்லோரும் ஒன்றுசேர்ந்து கொல்லப்பட்டவர் களுக்காக அழுது புலம்பினர். குலச்சமூகத்தில் மரணங்களைக் கண்ணீர்கொண்டு கடப்பது மரபன்று. ஆனால், இப்பொழுது அதைத்தவிர வேறு என்ன செய்வதென்று தெரியவில்லை.

புதைகுழிகளை மண்மூடுதலைக் காண முடியாமல் முதலில் அவ்விடம்விட்டு நகர்ந்தது தேக்கன்தான். ‘தவறிழைத்தது நான்தான்’ என்பது தேக்கனின் மனதில் மிக உறுதியாக நிலைபெற்றுவிட்டது. ‘மூன்று மலைகளைக் கடந்து கொற்றவையின் கூத்துக்களத்துக்கு வந்துள்ளார்கள் என்றால், அது யாரால் முடியும் என்று கணிக்காமல் விட்டுவிட்டேன். பதற்றத்தில் முதலில் தவறிழைத்தது நான்தான். அதுவே அடுத்தடுத்த தவறுகளுக்குக் காரணமாகிவிட்டது.’
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 83p5
`வேந்தர்களின் வீரர்களுக்கு இவ்வளவு ஆற்றல் இருக்காது, அதனினும் உயர்ந்த காரணத்துக்காகவே இது நடக்கிறது என்று பாரி மிகச்சரியாக கணித்துச் சொன்னானே... அப்பொழுதுகூட எனக்குப் புரியாமற் போய்விட்டதே’ தனியே புலம்பித் தவித்து ஆற்றாது அழுதுவடியும் கண்ணீர் நிற்கவே இல்லை. தேக்கனா இது என்று காண்போர் நம்ப முடியாத அளவு மனமொடிந்து இருந்தான் தேக்கன். நடந்ததையெல்லாம் கேள்விப்பட்ட கபிலர் நிலைகுலைந்து போனார். ‘குலசேகர பாண்டியன் ஏன் இந்த முடிவெடுத்தான். தேவவாக்கு விலங்கை எடுத்துவர வேண்டிய தேவையென்ன? இம்முயற்சிக்கு வேறென்னென்ன காரணங்கள் இருக்க முடியும்?’ என்று சிந்தித்தபடி இருந்தார்.

பழையன்தான் வேலைகள் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துக்கொண்டிருக்கிறான். தேக்கனால் எதுவும் செய்ய முடியவில்லை. பாரியோ முழுமுற்றாக உடைந்து போயிருந்தான். புதைக்கப்பட்ட இடத்தில் மறுநாள் நீரெடுத்து ஊற்றிச் செடிநட்டனர். மாணவர்களைக் கசப்பில் இருந்து மீட்கும் வழிமுறைகளைச் செய்யவேண்டியிருந்தது. மாணவர்களில் காயம்படாதவர்கள் யாரும் இல்லை. ஆனால், கடைசியாகப் பெரும்பள்ளத்தில் உருண்டதால் அலவன் மிகக்கடுமையாகப் பாதிக்கப் பட்டிருந்தான்.

காலம்பனைத் தனது மாளிகையிலே தங்கவைத்துக்கொண்டான் பாரி. தனது மொத்தக்குலமும் அடிமையாகி, இழுத்துச் செல்லப்பட்டு, அதனை மீட்கும் ஒரு வாய்ப்பு வந்தபொழுது அதனைச் செய்வோமா வேண்டாமா என்று பெருங்குழப்பத்துக்கு உள்ளாகி, பின் செய்யத்துணிந்து அதுவும் கைகூடாமற்போன நிலையில் இருக்கும் காலம்பனைப் பற்றிய சிந்தனையிலே இருந்தான் பாரி.

செய்தி அறிந்து தென்திசைக் காவலன் கூழையனும் வடதிசை சென்றிருந்த முடியனும் எவ்வியூர் வந்தடைந்தனர். சேரனின் முயற்சிகளிலே கவனம் குவித்திருந்த அவர்களுக்குப் பாண்டியனின் எதிர்பாராத இந்தத் திட்டம் புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது. உண்மையில் பாண்டியனின் நோக்கம்தான் என்ன என்பதை அவர்களால் சிந்திக்க முடியவில்லை.

இவற்றைப்பற்றிப் பேச வேண்டும் என நினைத்த தேக்கன், பாரியைத் தேடி வந்தான். அவனோ எவ்வியூரின் உச்சிப்பாறையின் மீதிருப்பதாக வீரர்கள் சொன்னார்கள். உச்சிப்பாறை நோக்கிச் சென்றான் தேக்கன்.

மாலைநேரக் கதிரவன் மறைந்து கொண்டிருந்தான். தனித்து உட்கார்ந்திருந்த பாரியின் மீது பெருங்கவலை கவிந்திருந்தது. காலம்பனோடு தாக்குதல் நடந்த அந்தப் பொழுதுக்குப்பின் இருவரும் பேசிக்கொள்ள வில்லை. தாங்கள் கவனிக்கத் தவறிய பிழைகளை நினைத்து இருவருமே மனமொடிந்து இருந்தனர்.

பாரியின் அருகில் தேக்கன் வந்ததும், அதற்காகக் காத்திருந்தவனைப்போல பேச்சைத் தொடங்கினான் பாரி. “தன் குலத்தைக் காப்பாற்றத்தானே காலம்பன் இம்முயற்சியில் ஈடுபட்டான். தூதுவையின் குலக்கொடிகள் நமக்கும் ரத்த உறவுதானே, அதுவும் நம் குலம்தானே. அதனை மீட்க வேண்டிய பொறுப்பு நம்முடையதுதானே.”

பாரியின் சொற்கள் சடசடவென இறங்கின. அதைவிட வேகமாக அச்சொற்களைச் சுமந்து கீழிறங்கிக்கொண்டிருந்தான் தேக்கன்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 12, 2018 6:41 pm

ரு வாரத்துக்குப் பின்னர் புறப்பட்டனர். நஞ்சுத்தாக்குதலிருந்து விடுபடத் தொடர்ந்து சிகிச்சைத் தேவைப்படுபவர்களும் மிகக் கடுமையாகக் காயம்பட்டவர்களும் எவ்வியூரிலேயே தங்க வைக்கப்பட்டனர். ஓரளவு சமாளிக்கக்கூடிய காயங்களோடு இருக்கும் பதினாறு பேர் புறப்பட்டனர். அவர்களின் தோளிலே நாற்பது தேவவாக்கு விலங்குகள் அடைக்கப்பட்ட இரண்டு கூடைகள் கட்டப்பட்டன. திரையர்களின் இக்கூட்டத்துக்குள் பறம்பின் வீரர்கள் அறுவர் இணைந்தனர். நீலன் உள்ளிட்ட அவர்கள் ஆறு பேரும் நல்ல உடல்வாகுகொண்டவர்கள்தான். அப்படிப்பட்டவர்களைத் தேர்வு செய்துதான் இக்கூட்டத்தோடு இணைத்தான் பாரி. ஆனாலும், திரையர்களுக்கும் இவர்களுக்குமிடையே இருக்கும் வேறுபாடு எளிதில் தெரியக்கூடியதுதான்.

“இவர்களுக்கு இன்னல் ஏதும் வந்துவிடாதா?” என்று காலம்பன் பதறியபொழுது பாரி சொன்னான். “எதிரிகளின் கவனம் முழுவதும் தேவவாக்கு விலங்குகளின் மீதுதான் இருக்கும். வெற்றிக்களிப்பில் இருக்கும் அவர்களின் கண்களுக்கு இந்த வேறுபாடு எதுவும் தெரியாது. கைகால்களில் அடிபட்டு உடல் நெளிந்து குறுகி நிற்கும் பலருக்கு இடையேதான் இவர்கள் இருக்கப்போகிறார்கள். எனவே கவலை வேண்டாம்” என்று சொல்லிய பாரி சற்றே  நிறுத்திவிட்டுச் சொன்னான், “ஒருவேளை இவர்கள் கண்டறியப்பட்டால் எப்படி மீள்வது என்று அவர்களுக்குத் தெரியும். இந்த அறுவரில் நீலன் மட்டுமே சிறந்த வீரன். மற்றவர்களும் திறன்மிக்கவர்கள்தான். ஆனால், போரிடுவதில் அல்ல; அதற்குத்தான் நீங்கள் இருக்கிறீர்களே” என்று சொல்லி வழியனுப்பினான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p1
எவ்வியூரிலிருந்து அவர்கள் புறப்பட்டனர். நாள்கள் அதிகமானதால் ஐயம் வந்துவிடக் கூடாது எனக் கருதி எங்கும் தங்கவில்லை. ஓர் இரவு இரு பகல்களில் மூன்று மலைகளையும் கடந்து அடிவாரம் வந்தனர். பறம்பின் எல்லையைவிட்டு அகன்று சமதளக்காட்டின் உட்பகுதியிலிருந்த கல்மண்டபத்துக்குத் தன் கூட்டத்தோடு வந்து சேர்ந்தான் காலம்பன். அவனது வரவை எதிர்நோக்கியிருந்தனர் பாண்டியநாட்டு வீரர்கள். காலம்பன் இரு கூடைகளில் எண்ணற்ற தேவாங்குகளோடு வந்தது அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது. அனைவரையும் தேரிலே ஏற்றி உடனடியாக மதுரை நோக்கிப் புறப்பட்டனர்.

ணவிழா முடிந்து மூன்று வாரங்கள் ஆகியிருந்தன. தனது வாழ்வில் காணாத பெருவிழாவினைக் கண்டுமுடித்த மதுரை இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தது. பெரும்பாலான விருந்தினர்கள் விழா முடித்துப் புறப்பட்டுவிட்டனர். மிகச் சிலர் மட்டுமே இன்னும் இருக்கின்றனர்.
பொற்சுவை இப்போது பாண்டியகுல இளவரசி. இப்பேரரசின் குலவழக்கமும் அரசவிதிகளும் எளிதிற் புரிந்துகொள்ளக்கூடியவை அல்ல. ஒரு பேரியக்கத்துக்கு நடுவில் சிக்கி நகரும் சிற்றுயிராகத் தன்னை உணர்ந்தாள். தனது போக்கில் எல்லாம் போய்க்கொண்டிருந்தன. யாரால் எங்கு, எது முடிவுசெய்யப்படுகிறது என்பதை அவளால் எளிதில் கண்டறிய முடியவில்லை.

அவளது கண்கள் எப்போதும் தேடிக்கொண்டிருப்பது சக்கரவாகப் பறவைகளையும் சுகமதியையும்தான். நாள்தோறும் பார்க்க ஆசைப்பட்டும் சுகமதி, பொற்சுவையின் கண்களில் படவேயில்லை. அவளால், தான் இருக்கும் இடத்திற்குள்ளே எளிதில் நுழைய முடியவில்லை என்பதைப் புரிந்துகொண்டாள் பொற்சுவை. இருவாரங்களுக்கு மேல் காத்திருந்த அவள், பொருத்தமான நேரத்தில் அரண்மனைக்கான மொழியில் பேசத் தொடங்கினாள்.

துறைமுகம் நோக்கிச் செல்ல இருந்த வணிகக் குடும்பங்களோடு புறப்பட ஆயத்தமாக இருந்தாள் சுகமதி. அரண்மனையிலிருந்து  `விரைந்து வா’ என அழைப்பு வந்தது. மூன்று வாரங்களுக்குப் பின் பொற்சுவையைப் பார்க்கப் புறப்பட்டாள் சுகமதி. மனதுக்குள் எண்ணங்கள் பேரலைகளாய் எழுந்து வந்தன. பார்க்கப்போகும் அந்தக் கணத்தை நெருங்க முடியாமலும் விலக்க முடியாமலும் தவித்தபடி அந்தப்புரத்துக்குள் நுழைந்தாள்.

ஒவ்வொரு நெடுங்கதவைத் தாண்டும்பொழுதும் விசாரிக்கப் பட்டாள். எல்லாம் நடுத்தர வயதுப் பெண்கள். பார்வையின் இறுக்கமே விருப்பமற்ற அனுமதியைச் சொன்னது. எல்லாவற்றையும் கடந்து உள்நுழைந்தாள்.

பொற்சுவையைப் பார்க்கும் அந்த முதற்கணத்தில் தனது முகம் வெளிப்படுத்தப்போகும் உணர்வு என்னவாக இருக்கப்போகிறது, கவலையின் கோடு படியாத, அதே நேரம் அவளின் கவலையை அதிகப்படுத்தாத ஓர் உணர்வுநிலையில் இருக்கத் தன்னை ஆயத்தப்படுத்தியவாறே அறைக்குள் நுழைந்தாள்.

சுகமதிக்காகக் காத்திருந்த பொற்சுவை மலர்ந்த முகத்தோடு அணைத்து வரவேற்றாள். மதுரைக்கு வந்ததிலிருந்து பொற்சுவையின் முகம் இவ்வளவு மலர்ந்து யாரும் பார்த்ததில்லை. சுகமதி திகைத்துப் போனாள். ‘எளிதில் மயங்கி மகிழும் பெண்ணல்ல பொற்சுவை, அப்படியிருக்க அவளின் முகத்திலிருக்கும் இந்த மகிழ்வின் காரணமென்ன?’ சுகமதிக்குப் பிடிபடவில்லை.

மனம் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கியது. முகத்தின் குறிப்பை எளிதில் கண்டறிவாள் பொற்சுவை என்பதறிந்து அவளை நேர்கொண்டு பார்க்காமல் சக்கரவாகப் பறவைக்கூண்டு இருந்த மேடைநோக்கி இயல்பாய்த் திரும்பினாள். திரும்பிய கணம் அவளுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. கூட்டிற்குள் பறவைகளில்லை. “அவை..?”

சுகமதி வினாவை முடிக்கும் முன்னே பொற்சுவை சொன்னாள், “ஆம் சுகமதி. பறந்துவிட்டன.”

சட்டென வந்த பொற்சுவையின் மறுமொழிக்குள் இழப்பின் கவலை எதுவுமில்லை. மணவாழ்வு எல்லாவற்றையும் மறக்கவைத்து புத்துலகைக் காண்பிக்கத் தொடங்கிவிட்டது என்பதைப் புரிந்துகொண்ட சுகமதி, தனது கவலை வெளிவராத தன்மையோடு உடனே கேட்டாள், “எப்பொழுது பறந்தன இளவரசி?”

“எனது திருமணம் முடிந்த ஏழாம்நாள் இரவு அவை பறந்துவிட்டன.”

”நீங்கள் பார்த்தீர்களா?”

”இல்லை.அன்றிரவுதான் அயர்ந்து தூங்கினேன்.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p2
“ஆறு நாள்களும் தூங்காமலா இருந்தீர்கள்?” என்ற கேள்விக்குள் நக்கல் ஓடி மறைந்தது. “புது மணப்பெண்ணுக்கு தூக்கம் எப்படி வரும்?” என்று தனக்குத்தானே சொல்லிச் சிரித்தபடி கார்காலத்துப் பள்ளியறையின் வியப்புக்குள் மூழ்கினாள். பள்ளியறையின் மேற்கூரை முழுவதிலும் விண்மீன்கள் வரையப்பட்டிருந்தன. சுவர் முழுவதிலும் அழகிய ஓவியம் இடம்பெற்றிருந்தது. கண்களை எங்கும் ஓடவிட்டுக்கொண்டிருந்தாள்.

படுக்கையின்மேல், பட்டு இழைகளால் நெய்யப்பட்ட எலிமயிர்ப் போர்வை கிடந்தது. அதன் வண்ணங்கள் கண்களைப் பறித்தன. பார்த்தபடி நின்றாள்.

”எதைப் பார்த்து வியந்து நிற்கிறாய் சுகமதி?”

“வெண்பட்டால் ஒளிமிதக்கும் இவ்வளவு அகலமான படுக்கையை நான் பார்த்ததேயில்லை இளவரசி.”

“அப்படியா?”

“ஆம், இளவரசி.”

“உனக்கு மணமாகும்பொழுது சின்னஞ்சிறு கட்டிலில் படுக்கையை அமைத்துக்கொள்.”

சரியென்பதுபோலத் தலையாட்டினாள். ஆனால், அவளது கண்கள் காரணத்தைக் கோரின. பொற்சுவை சொன்னாள், “கணவன் மனைவிக்கான அகவாழ்வுக்கு அகன்ற படுக்கையைப்போல் இடையூறான இன்னொரு பொருள் எதுவுமில்லை.”

சொல்லியபடி நடந்தாள் பொற்சுவை. அவள் கண்டறிந்து சொல்லும் உண்மை காட்சியாய் சுகமதியின் மனதுக்குள் விரிந்துகொண்டிருந்தது.

“காதலுக்குத் தேவை கட்டிலின் அகலமல்ல; இது பறக்க வேண்டிய இடமல்ல; புதைய வேண்டிய இடம். அது தெரியாத மூடர்களே அறையில் பாதியைக் கட்டிலாகச் செய்கின்றனர்.”

பொற்சுவையின் விளக்கம் சுகமதியை மயக்கியது. கட்டில் செய்த கலைஞனின் மீதான அவளது கோபத்தை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்தாள் சுகமதி. வாழ்வின் இன்னொரு வாசலின் வழியே உள் நுழைந்துவிட்டாள் என்பது பொற்சுவை உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்படுகிறது. அதனை நினைத்து மகிழ்ந்தபடியே அவளைப் பின்தொடர்ந்தாள் சுகமதி.

அறையைவிட்டு வெளியில் வந்தாள் பொற்சுவை. சக்கரவாகப் பறவைக் கூண்டருகில் நின்றபடி சொன்னாள், “மழையோடு வந்த பறவைகள், மழை நிற்கும்போது மழைபெய்யும் பகுதிக்கு மழையோடு சேர்ந்து போய்விடுகின்றன. அவற்றின் இறகுகள் எப்பொழுதும் ஈரத்துடனே இருக்கின்றன. அவற்றின் அலகைவிட்டு மழையின் வாசனை மறைவதேயில்லை. மழைநீர் மட்டுமே அருந்துகின்றன. மற்ற பறவைகளைப்போல இவையும் முட்டையிட்டு அடைகாத்துத்தான் குஞ்சு பொறிக்கின்றன. ஆனால் மழைத் துளிப்பட்டே முட்டையோடு உடைந்து குஞ்சு வெளிவரும் நிகழ்வு இவற்றுக்குத்தான் நிகழ்கிறது.”

பொற்சுவை சொல்லி முடிக்கும்முன் சுகமதி கேட்டாள், “மழைக்காலம் இன்னும் முடியவில்லையே,  அதற்குள் ஏன் பறந்துவிட்டன?’’

``அவை காதல் பறவைகளல்லவா? அதனால்தான் பறந்துவிட்டன.”

”காதல்கொள்வதற்கும் மழைக்காலம் முடிவதற்குள் பறப்பதற்கும் என்ன தொடர்பிருக்கிறது?”

சுகமதியின் வினாவைத் தனது அசட்டுச் சிரிப்பால் எதிர்கொண்ட பொற்சுவை சொன்னாள், ”படுக்கையில் தனித்திருக்கும் ஒருத்தியை எத்தனை இரவுகள்தான் அவற்றால் பார்த்துக்கொண்டிருக்க முடியும்?”

அதிர்ந்தாள் சுகமதி. அதுவரை பொற்சுவை பேசிய சொற்களுக்கும், மலர்ந்திருக்கும் அவளது முகத்துக்கும் காரணம் அறியவந்தபொழுது நடுங்கி நின்றாள்.

வர்களின் தேர், மாலைக்குள் கோட்டையின் மேற்குவாசலுக்குள் நுழையும் என்று முன்வந்த வீரன் செய்தி சொன்னான். அச்சொல்லில் இருந்து பரவியது பரபரப்பு. நம்ப முடியாதவற்றை நம்பப்போகும் பொழுதுக்காக ஆயத்தமாயினர். இளவரசன் பொதியவெற்பன் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான். வெற்றிச்செருக்கோடு இருந்த கருங்கைவாணன் அவர்களின் நுழைவை எதிர்பார்த்து மேற்குவாசல் மாடத்திலே காத்திருந்தான்.

பேரரசர் குலசேகரபாண்டியனை இவ்வளவு மகிழ்வோடு யாரும் பார்த்ததில்லை. முசுகுந்தர் போன்று நெடுங்காலம் அவருக்கு அருகிலே இருக்கும் மனிதர்களுக்கே அது வியப்பாக இருந்தது. மகிழ்வோ, துக்கமோ உணர்ச்சியை எளிதில் காட்டிக்கொள்ளாதவர் பேரரசர். அவரது முகக்குறிப்பிலிருந்து அவரை கணித்துவிட முடியாதென்பது பலரும் அறிந்த உண்மை. ஆனால், இன்று பேரரசரின் உடலும் மனமும் பூரிப்பில் திளைத்தன.வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p3

அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. உலகமே வியக்குமளவிற்கு மிகச் சிறப்பாக நடந்து முடிந்த திருமணம், அத்திருமணத்தை முன்னிட்டு கடல்வணிகத்துக்கு அச்சாணி போன்று திசைகாட்டும் விலங்கொன்றைக் கண்டறிந்தது, அதனை எடுத்துவர எந்த வாய்ப்புமில்லை என்று கவலைப்பட்டபொழுது மிகச் சிறப்பான திட்டமிட்டு அதனை எடுத்து வந்தது என எண்ணற்ற காரணங்கள் ஒன்று சேர்ந்துகொண்டன. அதனால்தான் பேரரசர் மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைக்கிறார் என வெள்ளிகொண்டார் நினைத்தார். ஆனால், முசுகுந்தர்தான் இன்னும் ஆழத்துக்குப்போய்ச் சிந்தித்தார். யாரும் உள்நுழைய முடியா இடமெனக் கருதப்பட்ட பறம்பிக்குள் செல்லும் ஆற்றலை நாம் மெய்ப்பித்துள்ளோம். இன்றுவரை பிற பேரரசுகளால் நினைத்துப் பார்க்க முடியாத செயல் அது. 

கடற்பரப்பில் பாண்டிய நாட்டின் ஆற்றல் பன்மடங்கு உயரப்போகிறது. வணிகத்திலும் அரசியலிலும் அது ஏற்படுத்தப்போகும் தாக்கம் அளவிட முடியாததாக இருக்கும். இத்திருமணம் எந்த நோக்கத்தை உள்ளீடாகக்கொண்டிருந்ததோ, அந்த நோக்கம் கனிந்து பழுக்கத் தொடங்கியுள்ளது. முசுகுந்தரின் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

ஒன்றுடன் மற்றொன்று சேரும்பொழுது இரண்டாகும் என்றுதான் பலரும் நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் அப்படி நடப்பதில்லை. இரண்டு ஆற்றல்கள் இணையும்பொழுது அவை பலவாகத்தான் மாறுகின்றன. நாம் எண்ணிப்பார்க்க முடியாத மடங்குகளாக அவை பரிணமிக்கின்றன.
தனது இருக்கையிலிருந்து எழுந்த பேரரசர் மாளிகையின் மேன்மாடம் நோக்கிச் சென்றார். அவரின் முகக்குறிப்பறிந்து முசுகுந்தர் பின்சென்றார். தேவாங்கினைக் கொண்டு வருகிறவர்கள் வந்துசேரும் நேரம் வரை பொழுதைக் கடப்பது கடினமாகவே இருந்தது. இட்டுநிரப்ப முடியாத காலத்தைக் கையில் வைத்துக்கொண்டு தத்தளித்தனர் இருவரும். மனம் அதனை எவ்வளவு எதிர்பார்த்திருக்கிறது என்பதை எதிர்படும் ஒவ்வொரு கணமும் சொல்லியது.

பேரரசர் மேலேறி வரவும் காவல்வீரர்கள் அகன்று விலகினர். மாடத்திலிருந்த புறாக்கள் படபடத்து வெளியேறின. அவற்றைப் பார்த்தபடி பேரரசர் கேட்டார், “புதிய வரவு அறிந்து, ஏற்கெனவே நிலைகொண்டவை விலக வேண்டியது விதிதானே?”

முசுகுந்தர் சற்றே திகைத்தார். மகிழ்வின் ஆழத்துக்குள் இருந்தபடியே அடுத்த கட்டத்திற்கு பேரரசர் ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது. எப்பொழுதும்போல் முகம் பார்த்துக் கணிக்க முடியாத இடத்தில்தான் இப்பொழுதும் அவர் இருக்கிறார் என்பதை முசுகுந்தர் உணர்ந்தார்.

“என்ன அமைதியாய் இருக்கிறாய்?”

“தாங்கள் சொன்னதைப் பற்றித்தான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன் பேரரசே. வீரர்களைப்போல தள்ளி நிறுத்த வேண்டியது யாரை? புறாக்களைப்போல தொலைவிற்கு விரட்ட வேண்டியது யாரை?”

சொல்லிவிட்டு அமைதியானார் முசுகுந்தர். ‘தான் சொல்லைச் சிதறவிட்டுவிட்டோம். இனி அதனை நிரப்புவது எளிதல்ல’ எனத் தோன்றியது. யவனர்கள், சூல்கடல் முதுவன் ஆகிய இருபெரும் ஆற்றல்கொண்டோரோடு விளையாட வேண்டிய விளையாட்டிது. இதில் யாரை அருகில் வைப்பது? யாரைத் தொலைவில் வைப்பது? பேரரசர் என்ன நினைக்கிறார்? அதனை அறியாமல் எதுவும் சொல்லிவிடக் கூடாது’ என மனம் திணறியது.

உலகில் எங்கும் இல்லாத  முத்துக்களையுடையது பாண்டிய நாடு. என்ன விலை கொடுத்தேனும் அம்முத்துக்களை வாங்கி மகிழும் யவனர்கள். இவை இரண்டுக்கும் இடையில் பரவியிருக்கும் பெருங்கடலை விடாது கடக்கும் வணிகர்கள். இம்மூன்றின் வரிசைப்படிநிலையில் மாற்றம் வரும் சூழல் உருவாகப்போகிறது. இதில் யாரை எங்கு நகர்த்துவது என்பதே தலையாய முடிவு. நாம் கண்டறிந்து கைப்பற்றியுள்ளதோ, வணிகர்களையும் யவனர்களையும் ஒருசேரத் திகைக்கவைக்கப் போகிறது.

கடலை வெல்லும் கண்டுபிடிப்பு இது. இதன் மதிப்பு எல்லையற்றது. காலம் கடந்தாலும் மதிப்பிழக்காதது. அதனை முழுமையாகப் புரிந்துகொண்டு நாம் முடிவெடுக்க வேண்டும். பதட்டத்தில் எதனையும் செய்துவிடக் கூடாது.”

பேரரசர் உச்சரிக்கும் சொற்கள் மிகக் கவனமானவை என்பதை முசுகுந்தர் உணர்வார். பதற்றத்தில் ஏதோவொரு முடிவு எடுக்கப்பட்டு விட்டது. அதனால்தான் இச்சொல்லை அவர் பயன்படுத்துகிறார் என்று முசுகுந்தரால் கணிக்க முடிந்தது. என்ன நடந்திருக்கும் என நினைவுகூர்ந்தபொழுது அவரது சிந்தனைக்கு எட்டியவர் சூல்கடல் முதுவன்.தேவாங்கினைக் கொண்டுவந்துகொண்டிருக்கும் செய்தி பேரரசருக்குச் சொல்லப்பட்டவுடனேயே அவருக்கும் சொல்லப்பட்டுவிட்டது. சூல்கடல் முதுவனும் அரங்கிற்கு வந்துவிட்டார். ஏதோ ஒருவகையில் அது தவறு என்று பேரரசர் கருதுகிறார் என்பதை முசுகுந்தர் உணர்ந்தார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p4
அன்பு, உறவு, ஆசை, மகிழ்வு என உணர்வுகளால் நெருங்க முடியாததாக இருக்க வேண்டும் அரசாட்சி. அதன் விதிகள் எதன் பொருட்டும் கீழிறங்கக் கூடாது. நாட்டின் விதியை எழுதுகிறவனுக்கு வேறு எவையும் பொருட்டல்ல. பேரரசர் குலசேகரபாண்டியன் மாடத்திலிருந்து கீழிறங்க முனைந்தபோது தள்ளி நிறுத்த வேண்டியவர்களையும் தொலைவிற்கு விலக்க வேண்டியவர்களையும் பற்றிய கணிப்புக்கு வந்தார் முசுகுந்தர். அதில், தான் நிற்கவேண்டிய இடம் எது என்பது மட்டும் அவருக்குப் பிடிபடவில்லை.

ழக்கம்போல் நாழிகையின் மணியோசை கோட்டையின் நடுவிலிருந்து ஒலித்தது. கோட்டையின் நெடுங்கதவுகளை மூடச்சொல்லும் உத்தரவது. மேற்குவாசலின் மேல்மாடத்தில் தளபதி கருங்கைவாணன் நின்றுகொண்டிருந்தான். அவனோடு கோட்டைத்தளபதி சாகலைவன் நின்றான். இளமாறனும் செவியனும் சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்தனர்.

கீழ்நின்றுகொண்டிருந்த காவல்வீரர்களுக்கு நெடுங்கதவை மூடலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க முடியவில்லை. முக்கியமானவர்களின் வரவை எதிர்பார்த்துத் தளபதி உள்ளிட்டவர்கள் மேலே நின்றுகொண்டிருக்கின்றனர். அப்படியிருக்க நாம் கதவினை மூடினால் என்னவாகும் என நினைத்துக் குழம்பிப்போய் நின்றனர். கட்டுத்தறியில் இருந்து யானை வந்து சேர்ந்தது. கோட்டைக்கதவின் குறுக்குத்தடியை யானையைக்கொண்டே தூக்கிச்செருக வேண்டும். காவல் வீரர்கள் யானைப்பாகனைப் பொறுத்திருக்கச் சொன்னார்கள். அவனுக்குக் காரணம் புரியவில்லை. சரி நிற்போம் என முடிவெடுத்து நின்றான்.
மேல்தளத்தில் நின்றுகொண்டிருந்த இளமாறனுக்கும் செவியனுக்கும் கோட்டைவாசல் தளபதி மாரையனின் நினைவு வந்துபோனது. அன்று இரு தேவாங்குகளோடு நாம் வந்தபோது நெடுநேரம் கோட்டையின் வெளிப்புறம் நின்றோம். ஆனால், இன்று அதே தேவாங்கு வரவிருப்பதற்காகக் கோட்டையின் மேலே தளபதி நிற்கிறார்; கோட்டைக்குள்ளே யானை வந்து நின்றுகொண்டிருக்கிறது.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் குதிரைகள் பாய்ந்து வந்துகொண்டிருந்தன. திரையர்களையும் தேவாங்குகளையும் கொண்டுவரும் வண்டிகள் வேகம் குறையாமல் கோட்டைக்குள்ளே நுழைந்தன. குதிரைகளின் பாய்ச்சல்கண்டு நிறுத்தப்பட்டிருந்த யானை பிளிறியது.

இளமருதனும் செவியனும் கோட்டையின் உட்பக்கமாகப் பார்க்க, நான்கு வண்டிகள் வரிசையாகக் கோட்டைக்குள் நுழைந்தன. வண்டியின் முன்னும் பின்னும் குதிரையில் ஆயுதம் தாங்கிய காவல்வீரர்கள் வந்தனர். வண்டிக்குள் இருந்தவர்கள் அனைவரும் சங்கிலி கொண்டு பூட்டப்பட்டிருந்தனர். கோட்டையை நெருங்கும்பொழுது அனைவரையும் சங்கிலி கொண்டு பூட்டியுள்ளனர். மூன்று வண்டிகளில் திரையர்கள் இருந்தனர். ஒரு வண்டியில் தேவாங்கு விலங்குகள் இருக்கும் இரண்டு கூடைகளை வைத்துக்கொண்டு மதுரை வீரர்கள் அமர்ந்திருந்தனர்.

கூட்டுவண்டியின் சட்டகங்களின் இடைவெளியின் வழியே மதுரையைப் பார்த்தான் நீலன். கோட்டையின் உயரமும் பெருங் கட்டடங்களும் விரிந்து நீண்ட வீதிகளும் பெரும்வியப்பை ஏற்படுத்துவனதான்; ஆனால், நீலனின் கண்களுக்கு அவைப் பொருட்டாகப் படவில்லை. அவனது கண்கள் பிளிறிய யானையைப் பார்த்தன. அதன்மீது அகுதை வீற்றிருப்பதுபோலத் தெரிந்தது. இசைகேட்டு மகிழும் அசுனமாக்கள் நினைவில் வந்து முட்டிக்கொண்டிருந்தன. காலங்காலமாய் கதைகளின் வழியே அவன் அறிந்த மதுரையைக் கண்களின் வழியே அறிந்துகொண்டிருந்தான். மதுரை அவனுக்குள்ளிருந்து எட்டிப்பார்த்தது. ஒரு கணம் உடல் சிலிர்த்து அடங்கியது.

அவனது கண்கள் வைகையைத் தேடின. வண்டிகள் நகரின் நெடுவீதியின் வழியே நுழைந்து சென்றன. உடன் வந்தவர்களின் கண்களில் அடுத்து நடக்கப்போவதன் பதற்றம் தெரியத் தொடங்கியது. நீலனின் கண்கள் பரிதவித்தன. அருகிலிருந்த காலம்பனிடம் கேட்டான், “வைகை எங்கே இருக்கிறது?”

`ஏதோவொரு திசையைச் சொன்னார்களே’ என்று காலம்பன்  சிந்தித்துக்கொண்டிருக்கையில் வண்டிகள் நின்றன.

அனைவரும் கீழே இறக்கப்பட்டனர். மதுரையின் வீரர்கள் தேவாங்குகள் இருந்த கூடைகளைச் சுமந்தபடி அரண்மனைக்குள் சென்றனர். சிறிதுநேரம் கழித்துத் திரையர்களைக் கவசவீரர்கள் சூழ்ந்தபடி வண்டியிலிருந்து இறக்கித் தொலைவில் இருந்த மாளிகை ஒன்றில் நிறுத்தினர்.

பேரரசரின் தனித்த மாளிகை. அலங்கார வேலைப்பாடுகளில் இதற்கு இணைசொல்ல எதுவுமில்லை. குலசேகரபாண்டியன் தனது இருக்கையில் அமர்ந்திருக்க, அவரின் கண்முன்னால் பறம்புநாட்டின் தேவவாக்கு விலங்குகளைக் கொண்டுவந்து இறக்கினர் வீரர்கள். இக்காட்சியைப் பார்க்கும் யாவரும் மெய்சிலிர்த்து உறைந்தனர். 
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p5
இது நடந்துவிட்டது என்பதை மனம் இன்னும் நம்ப மறுத்துக்கொண்டுதான் இருந்தது. ஆனால், கண்களுக்கு முன்னால் நாற்பது தேவாங்குகள் இருந்தன. இரண்டின் இடுப்பில் தோல்கொண்டு கட்டி மாமன்னரின் கைதொடத் தாங்கி நின்றனர் வீரர்கள். தனது வலக்கையின் நடுவிரலால் அவற்றின் தலைதொட்டுத் தடவினார் பேரரசர். வடதிசை நோக்கிச் சரியும் காலக்கோடு அவரின் விரல்வழியே நகர்ந்தது இறங்கியது.

அரசவை மகிழ்வில் திளைத்தது. கருங்கைவாணனை வானளாவப் பாராட்டினார் பேரரசர். இளமருதனும் செவியனுங்கூட பாராட்டப்பட்டனர். மையூர்கிழார் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார். பொதியவெற்பனின் கண்கள் அந்த விலங்குகளைவிட்டு அகலவேயில்லை. பாண்டியப்பேரரசின் வளமிக்க எதிர்காலத்தை அவற்றின் வட்டவடிவ கண்களுக்குள் பார்த்துக்கொண்டிருந்தான். 
அந்துவன் மிக அடக்கமாகத் திசைவேழருக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தான். தன் தலைமாணாக்கனை நினைத்து, பேரறிவின் செருக்கோடு வீற்றிருந்தார் திசைவேழர். கூடையிலிருந்த ஒரு தேவாங்கைப் பிடித்துவந்து அவரின் கைகளில் ஒப்படைத்தான் மாணவன் ஒருவன். அதனை வாங்கியபடி உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார் திசைவேழர். கைகளுக்குள் அடங்கும் ஒரு சின்னஞ்சிறு உயிரினம் காலப்பெருவெளியின் ஆதி ரகசியத்தைத் தன்னுள் கொண்டுள்ளது. இயற்கை ஒன்றுக்குள் ஒன்றாகத் தனது உண்மைகளை மறைத்துவைத்து விளையாடுகிறது. இவற்றையெல்லாம் கண்டறிவதும், இணைப்பதும், புரிந்துகொள்வதும் எவ்வளவு சுவையூட்டக்கூடிய ஒன்று.

திசைவேழர் சிந்தித்துக்கொண்டிருக்கையில் `கண்டறியப்பட்ட திசைகாட்டும் தேவாங்கை எவற்றோடு இணைக்க வேண்டும், யாரும் புரிந்துகொள்ள முடியாத விளையாட்டை எப்படி விளையாட வேண்டும்’ என மனதுக்குள் திட்டம் வகுத்துக்கொண்டிருந்தார் பேரரசர்.

சூல்கடல் முதுவனைப் பார்த்துப் பெருமகிழ்வோடு பேரரசர் கூறினார், “இருபது தேவாங்குகளைப் பத்துக் கப்பல்களிலேற்றி முதல் பயணத்தைத் தொடங்குங்கள். காற்றையும் கடலையும் வெல்லும் பயணமாக அது அமையட்டும். நாடுகளையும் கடலோடிகளையும் வணிகர்களையும் பெருவியப்பில் ஆழ்த்துங்கள். நடுக்கடலில்கூட இயல்பாய் திசை திரும்பிப் பயணிக்கும் துணிச்சலைக்கண்டு யவனர்களே வியந்து நிற்கட்டும்.”

பேரரசரின் அறிவிப்பால் அவை மகிழ்வில் திளைத்தது. சூல்கடல் முதுவன் மீண்டும் மீண்டும் வணங்கித் தனது நன்றியறிதலைத் தெரிவித்தான். முசுகுந்தர் மட்டும் ஆழ்ந்து சிந்தித்து நடப்பதைப் புரிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தார். இது தேவாங்கோடு சேர்த்து சூல்கடல் முதுவனையும் சோதித்துப்பார்க்கும் திட்டம் என்று அவருக்குத் தோன்றியது.

மறுகணம் அறிவித்தார், “திறன்மிகு தோளும் பாறை மார்பும்கொண்ட இத்திரையர்களை நான் யவனர்களுக்குப் பரிசாக வழங்குகிறேன்.”

அவை திகைத்து நின்றது. “அவர்களின் குடும்பங்கள் அனைத்தையும் விடுதலை செய்கிறேன்” என்றும் கூறினார்.

திருமணத்தை முன்னிட்டு சூல்கடல் முதுவனுக்குப் பரிசாக வழங்கத்தான் திரையர்கள் சிறைபிடித்து வரப்பட்டனர். ஆனால், முற்றிலும் மாறுபட்டு யவனர்களுக்கு ஏன் பரிசாக வழங்குகிறார் என்று கருங்கைவாணனுக்கு விளங்கவில்லை, பொதியவெற்பனுக்கும் விளங்கவில்லை. ஆனால், முசுகுந்தரால் ஓரளவு விளங்கிக்கொள்ள முடிந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 6 85p6
பேராற்றல்கொண்ட கருங்கொள்ளையர் களுக்கு இணையானவர்கள் எங்களிடமும் உண்டு.  அவர்களை அடிமைகளாகப் பயன்படுத்துகிறோம் என்றால், பாண்டியநாட்டின் ஆற்றல் எவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருக்கும் என்பதை யவனர்களுக்கு மறைமுகமாக உணர்த்தும் ஏற்பாடு இது.
நடந்து முடிந்துள்ள திருமணம் பாண்டியநாட்டின் செல்வ வளத்தைப் பறைசாற்றியுள்ளது. அதேநேரத்தில் தேவாங்கின் மூலம் கடற்பயணத்தில் ஏற்படப்போகும் மாற்றத்தையும் அது பற்றிய செய்தியையும் யவனர்கள் அறியப்போகின்றனர். அதற்கு முன்பே பாண்டியநாட்டின் வலிமையை அவர்கள் அறிவது அவசியம்.

சிதறும் பரல்போல அரங்கு முழுவதும் மகிழ்வின் ஒளி பரவிக்கிடந்தது. பேரரசர் இருக்கையைவிட்டு அகன்றார். கொண்டுவந்ததில் மீதமுள்ள தேவாங்குகள் அரசின் பாதுகாப்பில் இருக்கட்டும் என்று முடிவெடுத்து அதனை நடைமுறைப்படுத்தும் பணி தொடங்கியது.

தனித்த மாளிகையில் நிறுத்தப்பட்டிருந்த திரையர்களைக் கவசவீரர்கள் வெளிப்புறமாக அழைத்துச்சென்றனர். உள்ளே என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. காலம்பனால் நிலைமையைக் கணிக்க முடியவில்லை என்பதை அவனது முகக்குறி சொன்னது. நீலன், காலம்பனை மட்டுமே கவனித்துக்கொண்டிருந்தான்.

கடினமான இரும்புச்சங்கிலிகள் பட்டியக்கல்லை உரசி நகர, அவர்கள் கவச வீரர்களின் பின்னால் நடந்துகொண்டிருந்தனர்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


Sponsored content

PostSponsored content



Page 6 of 19 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக