புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10 
4 Posts - 3%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10 
1 Post - 1%
Kavithas
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10 
1 Post - 1%
bala_t
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10 
293 Posts - 42%
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10 
6 Posts - 1%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10 
4 Posts - 1%
manikavi
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்


   
   

Page 14 of 19 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 01, 2018 10:06 pm

First topic message reminder :

"வீரயுக நாயகன் வேள் பாரி"

ஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" (அரவான் படத்தின் மூலகதை)  ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 P100bnew

"வீரயுக நாயகன் வேள் பாரி" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.. அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்



நன்றிஆசிரியர் : சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., , விகடன்  நன்றி


முன்னுரை

இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 P100a

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.

தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.

மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.

பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.

வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.

இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...

Readre இந்த பதிவை விரும்பியுள்ளார்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 02, 2018 10:23 am

பிரபாகரன் ஒற்றன் wrote:தங்களை என்னை மன்னிக்கவும்...
இதில் படத்தை இணைக்கவில்லை
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 1757813334 வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 1757813334 ...
மேற்கோள் செய்த பதிவு: 1275967

வருக பிரபாகரன் அவர்களே.வித்தியாசமான பெயர். :நல்வரவு:  :நல்வரவு:
வரவேற்பறை/உறுப்பினர் அறிமுகம் /புதிய பதிவிடல்-- பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு,உங்களை பற்றிய மேலதிக தகவல்களை தாருங்கள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பிரபாகரன் ஒற்றன்
பிரபாகரன் ஒற்றன்
பண்பாளர்

பதிவுகள் : 52
இணைந்தது : 31/08/2018

Postபிரபாகரன் ஒற்றன் Thu Sep 06, 2018 10:25 am

வீரயுக நாயகன் வேள் பாரி - 99


திரிப்படையைச் சூழ்ந்து முற்றுகையிடுவது என்பது, தாக்குதல் போரில் உச்சமானதோர் உத்தி. ஏறக்குறைய முழுமுற்றாக எதிரியை அழித்துவிட முடியும் என்ற நிலையில்தான் இப்படியோர் உத்தியைக் கையாள முடியும். `பறம்புப்படை வலுவிழந்த நிலையில் இல்லை; வேந்தர்படை மிகுவலிமையோடும் இல்லை. அப்படியிருந்தும் கருங்கைவாணன் இப்படியோர் உத்தியை ஏன் தேர்வுசெய்தான்? வேந்தர்கள் எப்படி இதற்கு ஒப்புதல் வழங்கினர்?’ என்ற ஐயத்தின் பிடியிலிருந்து ஆயுதவாரியால் மீளவே முடியவில்லை. கேட்டு அறிந்துகொள்ளும் சூழலும் இல்லை. போர் தொடங்கும் முரசின் ஓசை கேட்டும்கூடப் படைக்கலப் பேரரங்கின் முன்னால் ஆயுதங்களைப் பெற்றுச் செல்லும் வண்டிகள் வருவது குறையவில்லை.

கருங்கைவாணன் வகுத்த உத்தியில் ஒரு பகுதிதான் எதிரிப்படையை முற்றுகையிடுவது. இன்னொரு பகுதி எதிரியின் எல்லைக்குள் துணிந்து நுழைவது. இரண்டையும் ஒருசேர வகுத்திருந்தான். இன்றைய தாக்குதலின் கூர்முனையாக பறம்பின் விற்படையைத்தான் இலக்கிட்டான். பறம்புப்படையின் மைய அச்சாக விற்படையினரே செயல்படுகின்றனர். விற்படையினரின் ஆற்றலைக் குறைத்து அவர்களை வீழ்த்துவது மட்டுமே பறம்பின் பிற படைகளை வெற்றிகொள்ள வழிவகுக்கும் என முடிவுசெய்து அதற்கான திட்டத்தைத் தீட்டினான்.

வேந்தர்களின் யானைப்படை, எந்த நேரத்திலும் பறம்புக்குள் நுழைய ஆயத்தநிலையில் இருந்தது. பறம்பினர் யானைப்போர் நிகழ்த்த விரும்பாத நிலையில், வேந்தர்களின் யானைகள் பறம்பின் எல்லைக்குள் நுழையும் உரிமை பெற்றவையாயின. அந்த வாய்ப்பைப் பொருத்தமாகப் பயன்படுத்தலாம் என்று வேந்தர்படை காத்திருந்தது. இன்றைய தாக்குதல் திட்டத்தின் மிகமுக்கியப் பணியை யானைப்படைக்கு வழங்கினான் கருங்கைவாணன்.

போருக்கான சங்கொலி கேட்டதும் வேந்தர் படை பறம்பின் படையைச் சூழ்ந்து முற்றுகையிடத் தொடங்கியது. அதே பொழுதில் வேந்தர்களின் யானைப்படை வடகோடியில் நாகக்கரட்டுக்கும் காரமலைக்கும் இடைப்பட்ட பள்ளத்தாக்குக்குள் நுழைந்தது. சில காதத்தொலைவே கொண்ட இந்தப் பள்ளத்தாக்கில், மிக வேகமாக யானைப் படையை விரட்டி வந்தான் அதன் தளபதி உச்சங்காரி. இந்தப் பள்ளத்தாக்கின் தென்பகுதி எல்லையை இரண்டு பொழுதுக்குள் அடையவேண்டும் என்பதுதான் உச்சங்காரிக்கு இடப்பட்ட கட்டளை. அதாவது பறம்புப்படையை முற்றுகையிட வேந்தர்படை சுற்றிவளைத்து முடிக்கும்போது, யானைப்படை பள்ளத்தாக்கின் தென் எல்லையைத் தொட்டிருக்க வேண்டும்.

நாகக்கரட்டின் பின்னால் உள்ள காரமலையில் தான் இரலிமேடு இருக்கிறது. இரண்டுக்கும் இடைப்பட்ட பள்ளத்தாக்கில்தான் பறம்புப் படையினர் தங்கும் குடில்களும், உணவும், இதர தேவைகளுக்கான ஏற்பாடுகளும் இருந்தன. இன்றைய போர் தொடங்கிய கணமே மிக வேகமாக இந்தப் பகுதிக்குள் நுழைந்தது வேந்தர்களின் யானைப்படை. அவர்களின் நோக்கம், இரலிமேட்டுக்கும் நாகக்கரட்டுக்குமான தொடர்பைத் துண்டித்தல்தான். இரலிமேட்டில் உள்ள குகைகளில்தான் பறம்பு வீரர்களுக்கான ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து தான் போர்க்களத்துக்கு ஆயுதங்கள் கொண்டுவரப்படுகின்றன.

பறம்புப்படையை முற்றுகையிட்டுப் போர்புரியும் இன்றைய நாளில், வேந்தர்களின் முழுப்படையோடு பறம்புப்படை மோத உள்ளது. தன்னைவிடப் பல மடங்கு அதிகமான வீரர்களை எதிர்த்துப் போரிடும்போது பறம்புப்படைக்குப் பல மடங்கு ஆயுதங்கள் தேவை. ஆனால், ஆயுதங்கள் இரலிமேட்டிலிருந்து வந்துசேரும் வழி இப்போது அடைக்கப்பட்டாகிவிட்டது. இதனால், நண்பகலுக்குமேல் பறம்புவீரர்களின் அம்பறாத்தூணியில் அம்பு எதுவும் மிஞ்சாது. பிற வகை ஆயுதங்களும் போதிய அளவு இருக்காது. சூழப்பட்ட பறம்புப்படை ஆயுதங்களின் போதாமையால், முழு வேகத்தோடு தாக்குதலைத் தொடுக்க முடியாது. இதுவே அவர்களை நசுக்கி அழிக்கச் சிறந்த வழி என உத்தியை வகுத்திருந்தான் கருங்கைவாணன்.

போர் தொடங்கிய வேகத்தில் உச்சங்காரியின் யானைப்படை பள்ளத்தாக்கில் விரைந்து முன்னேறியது. அங்கு வீரர்களோ, தடுப்புகளோ, எதிரிகளின் யானைப்படையோ இல்லாத நிலையில் உச்சங்காரியின் வேலை மிக எளிதாக மாறியது. கருங்கைவாணன் கூறிய நேரத்தைவிட விரைவாகத் தென்கோடிக்கு வந்து சேர்ந்தான் உச்சங்காரி.

இப்போது நாகக்கரடும் இரலிமேடும் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டன. பறம்பின் ஆயுதங்களும் ஆயுதப் பொறுப்பாளரான முதுவேலரும் கபிலரும் இரலிமேட்டில் இருக்கும் குகைகளில் இருந்தனர். முறியன் ஆசானும் வாரிக்கையனும் கூவல்குடியினரும் நாகக்கரட்டின் மேல் இருந்தனர். படைக்குத் தேவையான பணியைச் செய்பவர்கள், காயம்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் என எண்ணற்ற வீரர்கள் இருபக்கமாகப் பிரிந்து இருந்தனர்.

நாகக்கரட்டின் மீதிருந்த வாரிக்கையன்தான் எதிரிகளின் யானைப்படையை என்ன செய்வது என முடிவெடுக்க வேண்டியவன். பறம்பின் யானைப்படைத் தளபதி வேட்டூர்பழையன் நேற்றைய போரில் இறந்துவிட்டான். பறம்பின் யானைகளும் அதன் வழிகாட்டிகளுமான தந்தமுத்தக்காரர்களும் இரண்டு குன்றுகளுக்கு அப்பால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வந்து தாக்குதலைத் தொடுக்க வேண்டுமென்றால், நீண்டபொழுதாகிவிடும் என்று சிந்தித்த வாரிக்கையன், ``செய்தியை முதலில் பாரிக்குத் தெரியப்படுத்துங்கள்’’ என்றான்.

பாரி நிற்கும் குளவன்திட்டின் மேலிருந்து பார்த்தால் எதிரில் இருக்கும் தட்டியங்காட்டுப் பரப்பு முழுமையாகத் தெரியும். இடதுபுறமாக நாகக்கரடும் அதன் பின்னணியில் இருக்கும் இரலிமேடும் தெரியும். ஆனால், நாகக்கரட்டுக்கும் இரலிமேட்டுக்கும் நடுவில் இருக்கும் பள்ளத்தாக்கு தெரியாது. எனவே, யானைப்படைகள் பள்ளத் தாக்குக்குள் நுழைந்ததை, பாரியால் குளவன் திட்டிலிருந்து பார்க்க முடியாது. அதனால்தான் பாரிக்குச் செய்தியைத் தெரிவிக்க, கூவல் குடியினருக்கு உத்தரவிட்டான் வாரிக்கையன்.

இரிக்கிச்செடியின் பால்கொண்ட குறியீட்டைக் காட்டியபடி கூவல்குடியினரின் நீள்கொம்பு சுழியோசை குளவன்திட்டில் பட்டு எதிரொலித்தது. அதுவரை தட்டியங்காட்டில் சுற்றிவளைக்கும் எதிரிகளின் படையைப் பார்த்துக்கொண்டிருந்த பாரி, ஓசை கேட்டவுடன் நாகக்கரட்டுப் பக்கம் திரும்பிப் பார்த்தான். பள்ளத்தாக்குக்குள் ஏற்பட்டுள்ள ஆபத்து என்னவென்று தெரியவில்லை.

இகுளிக்கிழவன் பின்புறம் சற்றுத் தள்ளியிருக்கும் பாறை ஒன்றைக் கைகாட்டியபடி சொன்னான், ``அவ்விடம் போய்ப் பாருங்கள்; பள்ளத்தாக்கு தெளிவாகத் தெரியும்.’’

பாரியும் காலம்பனும் உடன் நின்றிருந்த கூவல்குடியினரும் அந்தப் பாறையை நோக்கி விரைந்தனர்.

ங்கே என்ன வகையான ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பதை அறிய, நாகக்கரட்டை நோக்கி வீரர்களை அனுப்பினான் முடியன். எதிரிகளின் தேர் பறம்புப்படையை முழுமையாகச் சுற்றிவளைத்து நின்றது.

``ஈக்கிமணலில் இவனது குதிரைகளால் அதிக தொலைவு பாய்ந்தோட முடியாது எனத் தெரிந்தும் படையைச் சுற்றிவளைத்து நிற்கிறான் என்றால், இவனுக்கு உரிய பாடத்தை நாம் புகட்டியே ஆகவேண்டும்’’ என்று சொல்லியபடி குதிரையில் வேகமாக ஏறினான் முடியன்.

``கொஞ்சம் பொறு. ஆபத்தை அறியச் சென்ற வீரர்கள் வரும் வரை தற்காப்புப் போரை நடத்துவோம். அது என்ன வகை ஆபத்து என அறிந்த பிறகு தாக்குதல் போரைத் தொடங்குவோம்’’ என்றான் தேக்கன்.

``பறம்புப்படையை முற்றுகையிடும் துணிவு இவனுக்கு எங்கிருந்து வந்தது? எண்ணிக்கையில் பெருங்கூட்டம் என்பதால்தானே ஏறிவந்து நிற்கிறான். பாறைகளை உருட்டும் பேய்க்காற்றைப்போல இவனின் படைவீரர்களின் தலைகளை உருட்டித் தள்ளுவோம்’’ என்று கத்தியபடி புறப்பட ஆயத்தமானான் முடியன்.

``அவசரப்படாதே... நில்’’ என்று கத்தினான் தேக்கன்.

``இல்லை. இப்போது பொறுமையுடன் தற்காப்புப் போரை நடத்தினால், நாம் அஞ்சிவிட்டோம் என எதிரி புரிந்துகொள்வான். நம்மீதான தாக்குதல் மிகக் கடுமையானதாக இருக்கும். நாம் இப்போது ஏறித் தாக்கினால் மட்டுமே அவனது வேகத்தையும் சீற்றத்தையும் முறித்துத்தள்ள முடியும். நாம் அஞ்சாதவர்களாக இருப்பது முக்கியமல்ல, அஞ்சாதவர்களாக இருக்கிறோம் எனக் காட்டிக்கொள்வது போர்க்களத்தில் மிக முக்கியம்’’ என்றான் முடியன்.

``உனது வேகத்தையும் தாக்குதலையும் நீ தீர்மானி. அவன் தீர்மானித்த ஒன்றை நோக்கி நகராதே’’ என்று உரத்த குரலில் சொல்லிவிட்டு, தனது கையில் இருக்கும் ஈட்டியை மண்ணில் அழுத்திக் குத்தியபடி முடியனின் கண்களை உற்றுப்பார்த்தான் தேக்கன்.

பறம்பு ஆசானின் பார்வையை அவ்வளவு எளிதில் யாரும் கடந்துவிட முடிவதில்லை. முடியனாக இருந்தாலும் மடங்கவேண்டியதோர் இடமுண்டு. இழுத்துப் பிடித்த குதிரையின் கடிவாளத்தை விரல்கள் விடுவித்தன. தேக்கனை இமைக்காமல் பார்த்துவிட்டுச் சொன்னான், ``சரி, நாகக்கரட்டிலிருந்து செய்தி வந்துசேரும் வரை தற்காப்புப் போரையே நடத்துகிறேன். நீங்கள் படையின் நடுப்பகுதிக்குச் செல்லுங்கள்.’’

முடியனின் சொல் கேட்டுப் பணிந்து நடந்தான் தேக்கன்.

தேக்கனின் சொல் கேட்டு விரைந்து சென்றான் முடியன்.

குளிக்கிழவன் சொன்ன பாறையின் உச்சியில் ஏறி நின்று பார்த்தான் பாரி. இரலிமேட்டுக்கும் நாகக்கரட்டுக்கும் நடுவில் யானைப்படை நிரம்பி நின்றது. தட்டியங்காட்டில் முழுப்படையையும் சூழ்ந்து தாக்கத் திட்டம் தீட்டியுள்ளனர். இன்னொருபுறம் ஆயுதங்களைப் போர்க் களத்துக்குக் கொண்டுசெல்ல விடாமல் தடுக்கும் உத்தியைச் செயல்படுத்துகின்றனர் என்று பாரி எண்ணிக்கொண்டிருக்கையில், காலம்பன் இறைஞ்சிக் கேட்கும் குரல் ஒலித்தது, ``நாங்கள் களமிறங்க இப்போதாவது அனுமதி வழங்கு பாரி.’’

``அனுமதிக்கிறேன். ஆனால், தட்டியங் காட்டுக்கல்ல, பள்ளத்தாக்குக்கு.’’

பெருமகிழ்வடைந்தான் காலம்பன். ``திரையர்குலம் எதிரிகளின் யானைப்படையை முழுமுற்றாக அழித்தொழிக்கும்’’ என்று சொல்லிய படி புறப்படப்போகிறவனைப் பார்த்துப் பாரி சொன்னான், ``நான் யானைப்படையை அழிக்கச் சொல்லவில்லையே.’’

அதிர்ந்து நின்றான் காலம்பன்.

``இப்போது அந்தப் படையை அழிக்கவேண்டிய தேவையேதும் நமக்கில்லை. இரலிமேட்டிலிருந்து தட்டியங்காட்டுக்கு ஆயுதங்களைக் கொண்டு செல்ல வழிவகுத்தால் போதும். எனவே, யானைப் படையோடு நாம் போரிட வேண்டாம்.’’

``வேறென்ன செய்வது?’’ எனக் காலம்பன் கேட்க.

``அணங்கன் எங்கே?’’ என்றான் பாரி.

காலம்பனுக்குப் புரிந்தது. பின்புறம் இருந்த மலைக்குன்றைக் கைகாட்டி, ``பெருங்காட்டெருமை மந்தையோடு அந்தக் குன்றில் நிற்கிறான் அணங்கன்.’’ மேலே இருக்கும் காரமலை முகட்டைக் கைகாட்டி, ``இன்னொரு காட்டெருமை மந்தையோடு செதிலன் அந்த முகட்டில் நிற்கிறான். எதிரி வேறு திசையில் மேலேறிவிடக் கூடாது என்பதால் அங்கு நிற்கச் சொன்னேன்’’ என்றான்.

``சரி. அணங்கனுக்கு உத்தரவிடு. காட்டெருமை மந்தையை இரலிமேட்டுக்கு நேராகக் கீழே இறக்கி, யானைப்படையை இருகூறாக்கு. இரலிமேட்டில் இருக்கும் ஆயுதங்களை நடுப்பகலுக்குள் தட்டியங்காட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்’’ என்றான்.

சொல்லிக்கொண்டிருக்கும்போதே காலம்பன் வெளிப்படுத்திய சீழ்க்கை ஓசை அணங்கன் இருக்கும் குன்றில் எதிரொலித்தது. கண நேரத்துக்குள் மறு ஓசை மேலே இருந்து கீழே வந்தது.

``மந்தை நகரத் தொடங்கிவிட்டது. நான் உடனடியாக எதிர்த்திசைக்குப் போகிறேன். அப்போதுதான் எந்த இடத்தில் மந்தையைக் கீழே இறக்குவது என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியும்’’ என்று சொன்ன காலம்பன், ``திமிறிப் பாயும் காட்டெருமை மந்தையைக் கண்டால் யானை தெறித்து ஓடும். எனவே, பள்ளத்தாக்கில் இறங்கிய வேகத்தில் படையைப் பிளந்து பாதையை உருவாக்கிவிடலாம். ஆனால், அதைவிட முக்கியம், காட்டெருமை மந்தையைக் கொண்டே நூற்றுக்கணக்கான யானைகளை மடக்கி நிறுத்திவிடலாம். பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் மிகவும் கோழைகள். காட்டெருமையின் கனைப்பொலியைக் கேட்டு அவை தேங்கி நின்றுவிடும். எந்தப் பாகனாலும் நகர்த்திச் செல்ல முடியாது. எண்ணற்ற யானைகளை நாம் வசப்படுத்திப் பயன்படுத்திக்கொள்ளலாம்’’ என்றான்.

``நம்மிடம்தான் போதுமான யானைகள் இருக்கின்றனவே. பிறகு நமக்கு எதற்கு யானைகள்?’’ என்றான் பாரி.

``தந்தமுத்தக்காரர்களிடம் நாற்பது, ஐம்பது யானைகள்தான் இருக்கின்றன என்று கேள்விப்பட்டேன். அவை போதுமா?’’

சின்னச் சிரிப்போடு பாரி சொன்னான், ``நீதான் பழக்கப்படுத்தப்பட்ட யானைகளை `கோழைகள்’ என்று சொல்லிவிட்டாயே! பிறகு எப்படி நம் படையில் அவற்றைச் சேர்க்க முடியும்?’’

என்ன சொல்வதென்று தெரியவில்லை, `சரி’ எனத் தலையாட்டியபடி எதிர்த்திசையில் உள்ள மலை நோக்கி ஓடத் தொடங்கினான் காலம்பன்.

ற்காப்புப் போரைத் தொடங்கினான் முடியன். வேந்தர்களின் படையோ முழுவேகத்தோடு தாக்குதலைத் தொடங்கியது. காலையில் பள்ளத்தாக்குக்குள் யானைப்படை முழுமையும் சென்றதை உறுதிப்படுத்திய பிறகுதான் தட்டியங்காட்டுப் போர்முனைக்கு வந்தான் கருங்கைவாணன். தனது படையின் தாக்கும் உத்தியை மூன்றாகப் பிரித்தான். நெற்றிப் பகுதியே வலிமையான தாக்குதலை முன்னெடுக்கும் ஆற்றல் வாய்ந்தது. அதற்கு அவனே தலைமை ஏற்றான். வலக்கைப் பகுதியில் இருந்த படைப்பிரிவுக்குத் துடும்பனையும், இடக்கைப் பகுதியில் இருந்த படைப்பிரிவுக்கு உறுமன்கொடியையும் தலைமை ஏற்கச் செய்தான்.

கருங்கைவாணன் நெற்றிப்பகுதியின் முன்படையில் வந்து நின்றதும் முடியனும் அந்தத் திசையையே தேர்வுசெய்தான். வலக்கைப் பக்கம் இரவாதனையும், இடக்கைப் பக்கம் உதிரனையும் தலைமை ஏற்கச் செய்தான். தாக்குதல் தொடங்கிய கணமே வேந்தர்களின் படை ஆற்றலின் உச்சத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது. `தட்டியங்காட்டுப் போரில் எதிரியை வீழ்த்த இன்றைய நாளே சிறந்தது!’ என உறுதியாக நினைத்தான் கருங்கைவாணன். நிறைந்த அவையில் தன்னை அவமானப்படுத்தியவர்களுக்கு, தான் யார் என்பதை மெய்ப்பிக்கும் நாளாக இந்த நாளைக் கருதினான்.

கூட்டுப்படைத் தளபதி முன்களப்போருக்கு வருவது எந்தவிதத்திலும் அறிவுடைமையாகாது. ஆனால், தெரிந்தே இன்று முன்களத்துக்குக் கருங்கைவாணன் வந்துள்ளான். அவனது முக்கியமான இலக்கே விற்படைதான். பறம்பின் விற்படை இடக்கைப் பக்கம் நிற்கிறது. அந்தத் திசையில் வேந்தர்படைக்கு உறுமன்கொடியைத் தலைமையேற்கச் செய்தான். வேந்தர்படையின் மிக வலிமையான கவச அணிவீரர்களின் பத்துக்கும் மேற்பட்ட சேனைமுதலிகளை உறுமன்கொடிக்குக் கீழே நிறுத்தினான். பறம்பின் விற்படையினர் என்ன தாக்குதல் நடத்தினாலும் கவச அணிவீரர்களை ஒன்றும் செய்ய முடியாது. வேந்தர்படையைத் தடுக்க அம்புகளைப் பொழிந்து தள்ளுவர். நண்பகலுக்குள் அம்புக்கட்டுகள் தீர்ந்துபோக பறம்புப்படை கையறுநிலையில் நிற்கும். அதேநேரம் பறம்பின் விற்படையை எதிர்த்து வலிமையான தாக்குதல் நடக்கிறது என்பதை மற்றவர்கள் அறியாமல் இருக்க, கருங்கைவாணன் தானே நெற்றிப்பக்கம் உள்ள படைக்குத் தலைமையேற்றான். இயல்பாகவே கருங்கைவாணன் எந்தத் திசையில் வந்து நிற்கிறானோ அந்தத் திசையே கவனத்தை ஈர்க்கும்.

மூவேந்தர்களின் தலைமைத் தளபதிக்கு எதிராக முழு ஆற்றலையும் குவித்துப் பறம்புமக்கள் போர்புரிவர். ஆனால், பறம்பின் விற்படையினரின் மீது வேந்தர்படை நடத்திக்கொண்டிருக்கும் வலிமைமிகுந்த தாக்குதல் உடனடி கவனத்தைப் பெறாமல்போகும். போர்க்களத்தில் தாக்குதலின் போக்கு திசைமாற சில கணங்களே போதுமானவை. ஒருமுறை திசைமாறிவிட்டால் அதன்பிறகு பழைய நிலைமைக்குக் கொண்டுவர, பேரிழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

இவ்வளவு திட்டமிட்ட கருங்கைவாணன், பறம்பின் விற்படைத்தளபதி உதிரனைப் பற்றி அறிந்திருக்கவில்லை. வேந்தர்படையின் தாக்கும் ஆற்றலைப் பன்னிருவகையான வில்கொண்டு முறித்துத்தள்ளும் மாவீரன் அவன். இழுபடு நாண்கள், விடுபடு விசை, அலையலையாய் மேலெழும் அம்புகளால் காற்றையே கட்டுப்படுத்த முயல்பவன். போர் தொடங்கிய பிறகு வேந்தர்படையின் குதிரைகள் குடித்த நீரைவிட உதிரனின் விற்படையினருடைய அம்புகள் குடித்த குருதி அதிகம்.

வில்லே மலைமனிதர்களின் தலையாய ஆயுதம். காட்சியைப் பார்த்தலின் மூலமும், ஓசையைக் கேட்டலின் மூலமும் இலக்கை வீழ்த்தும் ஆற்றல்கொண்டவன் வில்லாளி மட்டுமே. பகழி அம்பும் விரி அம்பும் செலுத்தத் தெரிந்த விற்படையினரை எதிர்கொண்டு நிற்கும் படை இதுவரை இந்த மண்ணில் இல்லை. மூங்கிலம்பு பறவையைத் துளைக்கும். விரி அம்பு பனையைத் துளைக்கும். பகழி அம்பு பாறையைத் துளைக்கும். குறுங்காது முயலின் குருதி தோய்ந்த நாணிலிருந்து பறம்புவீரர்கள் விடுவிக்கும் பகழி அம்பை எதிர்கொள்ளும் கவசம் எவனிடமும் இல்லை.

ஆனாலும் பறம்பின் விற்படைக்கு முழு விசையோடு ஏறித்தாக்கும் அனுமதியை இன்றுவரை முடியன் வழங்கவில்லை. மூஞ்சலின் இருப்பிடம் மிகத்தொலைவில் உள்ளது. குதிரைப்படையால்தான் அவ்வளவு தொலைவுக்குச் சென்று மூஞ்சலைத் தாக்க முடியும். எனவே, இரவாதனுக்கே மூஞ்சலை நோக்கி முன்னேற அனுமதி கொடுக்கப்பட்டது. முன்னகர்ந்து வரும் எதிரிப்படையைத் தடுத்துப் பின்னுக்குத் தள்ளும் வேலை மட்டுமே உதிரனுக்கு வழங்கப்பட்டது. அப்படியிருந்தும் இதுவரையிலான போரில் அவன் நிகழ்த்திய அழிவை பறம்பின் வேறெந்தப் படைப்பிரிவும் நிகழ்த்தவில்லை.

வேந்தர்களின் இன்றைய போர் தனது விற்படைக்கு எதிரான உத்தியைக் கொண்டது என்பது உதிரனுக்குத் தெரியாது. ஆனால், எதிரிகள் பறம்புப்படையை முற்றுகையிட்டுத் தாக்கும் முயற்சி கடுஞ்சினத்தை உருவாக்கியிருந்தது. அவன் கண்ணெதிரே கவசம்பூண்ட பெரும்படையோடு உறுமன்கொடி வந்து கொண்டிருந்தான். தற்காப்புப் போரை மட்டுமே நடத்த வேண்டும் என்று முடியன் உத்தரவிட்டிருந்ததால், வேறு வழியில்லாமல் இடையிலக்கு ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தினான் உதிரன்.

உதிரன் மட்டுமல்ல, பறம்பின் மற்ற இரு தளபதிகளும் இடையிலக்கு ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தினர். கருவிகள் விடும் ஆயுதம், கைகள் விடும் ஆயுதம், கைகள் விடாத ஆயுதம் என்று போர் ஆயுதங்களை மூன்று வகையாகத்தான் எல்லோரும் பகுத்துள்ளனர். அம்பு, சிலை, ராயம், கொடிமரம், வல்வில், கவண், சக்கரம் ஆகியவை கருவிகள் விடும் ஆயுதங்கள். வேல், எஃகம், அயில், ஆலம், ஈட்டி உள்ளிட்டவை கைகள் விடும் ஆயுதங்கள். வாள், ஈர்வாள், கொடுவாள், மழு, நவியம், குறுந்தடி உள்ளிட்டவை கைகள் விடாத ஆயுதங்கள். ஒரு படை எந்தவிதமான ஆயுதத்தைப் பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே எதிரில் உள்ள படை தனது ஆயுதத்தைத் தேர்வுசெய்கிறது.

தட்டியங்காட்டுப் போரில் வேந்தர்படைக்குக் குழப்பம் ஏற்படும் இடமே இதுதான். கருவிகள் விடும் ஆயுதத்தைப் பொறுத்தவரை, அது மூன்று தன்மைகளால் அறியப்படுகிறது. தொலையிலக்கு ஆயுதங்கள், இடையிலக்கு ஆயுதங்கள், அண்மையிலக்கு ஆயுதங்கள். விற்படையைப் பொறுத்தவரை எந்த வகையான வில்லில் எந்த வகையான அம்பைப் பொருத்தி எய்தால், அந்த அம்பு எவ்வளவு தொலைவில் உள்ள இலக்கை அடையும் என்பதை, வீரக்கலையைப் பயிற்றுவிக்கும் ஆசான்கள் தங்களின் பயிற்சிக்கூடத்தில் மாணவர்களுக்குச் சொல்லித்தருவர். மூவேந்தர்களின் படையணியில் வந்து நிற்கும் வீரர்கள் எல்லோரும் வீரக்கலை ஆசான்களிடம் பயிற்சிபெற்ற மாணவர்களே.

பறம்பின் வில்லும், பூட்டப்பட்ட நாணும், அம்பின் தன்மையும் முற்றும் மாறுபட்டவை. அதாவது பறம்பினர் பயன்படுத்தும் இடையிலக்கு ஆயுதங்கள் செல்லும் தொலைவுக்கு வேந்தர்படையின் தொலையிலக்கு ஆயுதங்கள் செல்வதில்லை. எனவேதான், `தற்காத்துப் போர்புரி’ என்று முடியன் சொன்னதும் உதிரன் இடையிலக்கு அம்புகளை மட்டுமே பயன்படுத்தத் தனது அணிக்கு உத்தரவிட்டான். ஆனால், அந்தத் தொலைவே வேந்தர்களின் விற்படையால் அம்பெய்ய முடியாத தொலைவாக இருந்தது. அதனால் பறம்புப்படையினர் தொலையிலக்கு அம்புகளைப் பயன்படுத்துகின்றனர் என்று நினைத்த உறுமன்கொடி, எவ்வளவு தொலைவு முன்னேற முடியுமோ அவ்வளவு தொலைவுக்கு முன்னேறித் தாக்கச் சொல்லி உத்தரவிட்டான். இதனால், பறம்புப்படை தாக்கி அழிக்கும் பொறிக்குள் வந்து நின்று போரிட்டுக்கொண்டிருந்தது வேந்தர்படை.

தற்காப்பை விடுத்து, தொலையிலக்கு அம்புகளைப் பயன்படுத்த முடியன் எப்போது உத்தரவிடுவான் என்று ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்திருந்தான் உதிரன். அதே தவிப்போடு இருந்தான் இரவாதன்.

நாகக்கரட்டுக்குச் செய்தி கேட்கப் போன வீரன் திரும்பி வந்து முடியனிடம் நிலைமையைச் சொன்னான். ``காட்டெருமைகள் பாதை வகுத்த பிறகுதான் ஆயுதங்களைத் தட்டியங்காட்டுக்குக் கொண்டுவந்து சேர்க்க முடியும். அதற்கு நண்பகலைக் கடந்து இருபொழுதாகலாம். அதுவரை இருப்பதைக் கொண்டு எதிரிகளைச் சமாளியுங்கள்’’ என்று வாரிக்கையன் சொல்லியதைக் கூறினான்.

``நிலைமையைத் தெரிந்த பிறகு முடிவெடுப்போம்’’ என்று தேக்கன் சொன்னது எவ்வளவு சரியானது என்று உணரும்போதே, முடியனுக்கு அடுத்த கவலை தொடங்கியது. நண்பகல் கடந்து இரண்டு பொழுது வரை தற்காப்புப் போரில் இழப்புகள் இல்லாமல் நீடிப்பது மிகவும் கடினமான ஒன்று. எனவே, வேறு வழியென்ன எனச் சிந்தித்தான்.

உதிரனையும் இரவாதனையும் தேக்கன் இருக்கும் நடுப்பகுதிக்கு வரச்சொல்லிச் செய்தி அனுப்பிவிட்டு, தானும் பின்னகர்ந்தான். பறம்பின் முன்கள வீரர்கள் ஆவேசத்தோடு போரிட்டு வேந்தர்படையைச் சமாளித்துக் கொண்டிருந்தனர்.

``போர் தொடங்கிப் பத்து நாழிகைகூட ஆகவில்லை. ஆனால், இன்னும் பத்து நாழிகைக்குமேல் நிலைமையைச் சமாளித்தாக வேண்டிய நிலை. அது முடியுமா என்பது பெரும் கேள்வியாக எழுந்தது. வேந்தர்படையின் ஒட்டுமொத்த வீரர்களும் இன்றைய போரில் தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கின்றனர். காற்றில் இடைவெளியின்றி அம்புகள் பறந்துகொண்டிருக்கின்றன. பறம்புப்படை, முடிந்தளவுக்குச் சமாளித்துப் போரிட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், புதிதாக ஆயுதங்கள் வந்துசேராத நிலையில், இருப்பதைக் குறைத்துப் பயன்படுத்தும் சூழல் உருவானால் வேந்தர்படையின் கை ஓங்கும் நிலை உடனடியாக உருவாகும். அது இழப்புகளை அதிகப்படுத்தும் வாய்ப்புண்டு. இன்னும் பத்து நாழிகைக்கு இதே வேகத்தோடு போரிட நம்மிடம் ஆயுதங்கள் இல்லை. வேறென்ன செய்வது?’’ என்று ஆலோசனை கேட்டான் முடியன்.

கட்டளைகளைக் கணநேரத்துக்குள் நிறைவேற்றும் பயிற்சிகொண்ட உதிரனும் இரவாதனும் களத்தில் மேலெழும் கேள்விக்குமுன் திகைத்து நின்றனர். குருதி குடிக்கும் வெறி மட்டுமே அவர்களின் கண்களில் கனன்றுகொண்டிருந்தது. எல்லாவற்றுக்குமான விடையைச் சிந்தித்துவைத்திருந்தான் தேக்கன். படையின் நடுப்பகுதியில் நின்று போர்க்களத்தின் மொத்தச் செயல்பாட்டையும் கவனித்த அவன் சொன்னான், ``நம்மிடம் இருக்கும் ஆயுதங்கள் இன்னும் ஐந்துபொழுதுக்குமேல் தாங்காது. எனவே, வேந்தர்படையை எதிர்த்தாக்குதல் நடத்தி நீண்டநேரம் சமாளிக்க முடியாது.’’

``வேறென்ன செய்வது?’’ என விரைந்து கேட்டான் இரவாதன்.

``அவர்கள் தாக்குதல் வேகத்தைக் குறைத்தால் மட்டுமே நம்மால் நிலைமையைச் சமாளிக்க முடியும்.’’

``அவர்களின் மீது வலிமையான எதிர்த்தாக்குதல் செய்ய, போதிய ஆயுதங்கள் இல்லை. பிறகு எப்படி அதைச் செய்வது?’’ எனக் கேட்டான் உதிரன்.

``அவர்களின் கவனத்தைத் திசைதிருப்புவதன் மூலமும், குழப்பத்தை உருவாக்குவதன் மூலமும் அவர்களின் வேகத்தை மட்டுப்படுத்த முடியும்.’’

``என்ன செய்ய வேண்டும்?’’ என்று கேட்டான் முடியன்.

``காலையில் நீ சொன்னதை இப்போது செய்ய வேண்டும்.’’

மூவரும் கூர்ந்து கவனிக்க, தேக்கன் சொன்னான், ``இரவாதனின் குதிரைப்படைக்கு, முன்னேறித் தாக்கும் அனுமதியைக் கொடு. சூழ்ந்திருக்கும் வேந்தர்படையின் எந்தவோர் இடத்தையும் பிளந்துகொண்டு அவனால் வெளியேற முடியும். நமது குதிரைப்படையின் வேகமும் வீச்சும் எதிரிகளின் கனவிலும் நடுக்கத்தை உருவாக்கக்கூடியவை. உதிரனின் விற்படை தற்காத்துப் போரிடட்டும். நெற்றியில் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் நீ, படையைப் பின்வாங்கச்செய்து நான் இருக்கும் இந்த இடம் வரை வந்துவிடு. உன்னை எதிர்த்துப் போரிடும் கருங்கைவாணனின் அணி வேகமாக முன்னேறி வரும். அப்போது நீ இந்த இடம் விட்டு அகன்றுவிடு. நானும் ஈங்கையனும் இங்கு தலைமையேற்று நின்றுகொள்கிறோம். அவன் இங்கு வந்துசேரும் நேரம், இரவாதனின் குதிரைப்படை எதிரிகளின் முற்றுகையை உடைத்து மூஞ்சலில் போய் தாக்குதலைத் தொடக்கியிருக்கும். இங்கு வந்துசேரும் கருங்கைவாணன் என்னைப் பார்க்கும்போதே `பின்னணியில் மூஞ்சலைத் தாக்கப் பெருந்திட்டம் நடந்துகொண்டிருக்கிறது’ என நினைப்பான். நான் கொடுக்கும் ஓசையின் மூலம் அவன் அதை மேலும் உறுதிப்படுத்திக்கொள்வான். அவனது கவனம் முழுவதும் மூஞ்சலை நோக்கித் திரும்பும். அந்நிலையில் நம் படைகள் எல்லா திசைகளிலிருந்தும் கூவல் ஒலிகளை எழுப்பிக்கொண்டே இருக்க வேண்டும். அவனது குழப்பம் பலமடங்கு அதிகமாகும். அந்நிலையில் தொடர்ந்து தாக்கி முன்னேற படைகளை அனுமதிக்க மாட்டான். தற்காப்புப் போருக்கு மாறுவான் அல்லது சற்றே பின்னேறி நிற்பான். அவனுக்குள் ஏற்படும் குழப்பம் மூஞ்சலில் நடக்கும் தாக்குதலின் தன்மையை முழுமையாக அறிந்த பிறகுதான் நீங்கும். அந்தக் கால அளவு போதும், நாம் நிலைமையைச் சமாளிக்கவும் ஆயுதங்கள் வந்துசேரவும்’’ என்றான் தேக்கன்.

தேக்கன் சொல்வதைப் பணிந்துகேட்டான் முடியன்.

தேக்கன் சொல்லியதும் பாய்ந்து விரைந்தனர் இரவாதனும் உதிரனும்.

ற்களும் பாறைகளும் உருண்டன. சிறு மரங்களும் கொப்புகளும் உடைந்தன. கனைப்பின் பேரொலியால் காடே நடுங்குவதுபோல் இருந்தது. இரலிமேட்டில் இருந்தவர்கள் இடதுபக்கமாகத் திரும்பிப் பார்த்தனர். மூக்கு விடைத்துக் கனைத்தபடி பள்ளத்தாக்குக்குள் பாய்ந்து இறங்கின காட்டெருமைகள். இரும்பினும் கடுமைகொண்ட அவற்றின் நெற்றி யானைகளின் ஆழ்நினைவுகளுக்குள் பதிந்தவை. தலையில் திருகி நீண்டிருக்கும் பெருங்கொம்புகளை ஆட்டியபடி மந்தையை வழிநடத்தும் காட்டெருமை சீறிப்பாய்ந்தது. அணங்கன், அதனருகே ஒலிக்குறிப்புகளைக் கொடுத்தபடி ஓடிக்கொண்டிருந்தான்.

உள்காட்டிலிருந்து ஒற்றைக் காட்டெருமை வருவதுதான் முதலில் தெரிந்தது. பின்னால் அணங்கன் ஓடிக்கொண்டிருப்பதைக் கபிலர் மட்டும் கவனித்தார். சிறிது நேரத்தில் பெருமந்தை ஒன்று கீழ்நோக்கி இறங்கியது. காட்டையே சரித்து இறங்கும் அதன் வேகத்தைப் பார்த்தபடி இருந்த முதுவேலர், சட்டெனத் திரும்பிப் பள்ளத்தாக்கைப் பார்த்தார். அடர்த்தியாக அணிவகுத்து நின்றுகொண்டிருந்த யானைகள், முன்னும் பின்னுமாக மிரண்டு ஓடத்தொடங்கின.

யானைப்பாகர்களும் மேலே இருக்கும் போர்வீரர்களும் ஏதேதோ செய்தனர். ஆனால், கண நேரத்துக்குள் யானைகளைக் காட்டின் நினைவுகள் ஆக்கிரமிக்கத் தொடங்கின. இறுகிய பாறை போன்ற உடலும், இரும்பென முன் நெற்றியும், இணையில்லாத கொம்புகளும் கொண்ட காட்டெருமைகள் தாவிக்குதித்து வரும்போது, தளர்ந்த சதையும் தொங்கும் தோலும் கொண்ட யானைகள் தம் தந்தங்களை மட்டும் நம்பி நின்றுவிட முடியாது. கனைப்பொலியைக் காதில் கேட்ட கணத்திலேயே பிளிறல் தொடங்கியது. பிளிறல் ஓசையால் காடே கலங்கியது. நாலாபுறமும் பாகன்களும் வீரர்களும் தூக்கிவீசப்பட அணங்கன் பள்ளத்தாக்கின் பாதித்தொலைவில் போய்க்கொண்டிருந்தான்.

இரலிமேட்டிலிருந்து முதுவேலரும் கபிலரும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

எறும்புக்கூட்டத்துக்கு இடையே இழுத்துக் கோடுபோடுவதுபோல, எதிர்கொண்டு நிற்க எதுவும் இல்லாமல் பிளந்து உள்நுழைந்துகொண்டிருந்தன காட்டெருமைகள். குகைக்குள் இருக்கும் ஆயுதங்களைத் திரையர்கள் தூக்கிச் செல்லத் தொடங்கினர். பெருவண்டிகளில் ஏற்றும் ஆயுதங்களை ஒவ்வொரு வீரனும் தனித்தனியே சுமந்து சென்றான். காட்டெருமை மந்தை பாதித்தொலைவு உள்ளே போனபோது, காலம்பனும் அவன் தோழர்களும் மந்தைக்குப் பின்னே வேகமாக ஓடினர். இவர்கள் அங்கு எதற்கு ஓடுகின்றனர் என்று கபிலரும் முதுவேலரும் உற்றுப்பார்த்தனர்.

முன்னோடிய காலம்பன் காட்டெருமை ஒன்றின் பின்கால்நரம்பை நோக்கி ஓங்கி அடித்தான். அந்தக் காட்டெருமை பெருங்கனைப்பொலியோடு அவ்விடமே நின்று முன்னும் பின்னுமாகச் சுற்றியது. இதேபோல அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காட்டெருமைகளின் கால்நரம்பை அடித்து, பத்துக்கும் மேற்பட்டவற்றை வழியெங்கும் நிறுத்தினர். இருபக்கமும் தெறித்து ஓடிய யானைகளுள் எதுவும் இனி இந்தப் பக்கம் தலை திருப்பாது. திரையர்கள், ஆயுதங்களின் பெருஞ்சுமையைத் தூக்கிக்கொண்டு நின்று விளையாடும் காட்டெருமைகளுக்கு நடுவில் ஓடிக்கொண்டிருந்தனர்.

தேக்கனின் திட்டம் மிகச்சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது. இரவாதன், எதிரிகளைப் பிளந்து மூஞ்சலை அடைந்தான். கருங்கைவாணன் முன்னேறி வந்து தேக்கனை அடைந்தான். களமெங்கும் கூவல்குடியினரின் குறிப்போசை மேலெழுந்தது. பெருங்குழப்பத்தோடு கருங்கைவாணன் நிற்க, அவன் கண்களுக்குத் தெரியாத திசையில் நின்றுகொண்டிருந்த முடியன் தற்செயலாக நாகக்கரட்டுப் பக்கம் திரும்பினான். கரட்டின் உச்சிவிளிம்பில் காட்டெருமை ஒன்று குதித்து ஓடியது.

பார்த்த கணத்தில் முன்னேறித் தாக்கும் பேரோசையை வெளிப்படுத்தினான் முடியன். அதற்காகவே காத்திருந்த உதிரனின் உத்தரவு இமைப்பொழுது இடைவெளியின்றி வெளிவந்தது.

பாறைகளைத் துளைக்கும் பகழி அம்புகள் காற்றெங்கும் சீறத் தொடங்கின.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


பிரபாகரன் ஒற்றன்
பிரபாகரன் ஒற்றன்
பண்பாளர்

பதிவுகள் : 52
இணைந்தது : 31/08/2018

Postபிரபாகரன் ஒற்றன் Thu Sep 13, 2018 8:52 am

வீரயுக நாயகன் வேள் பாரி - 100

முதன்முறையாக இன்றைய போரின் பிற்பகுதியில்தான் பறம்பின் விற்படையினருக்கு முழுமையாக ஏறித்தாக்கி முன்னேறும் அனுமதியைக் கொடுத்தான் முடியன். இந்த உத்தரவுக்காகத்தான் போர் தொடங்கிய நாளிலிருந்து உதிரன் காத்திருந்தான். விற்படையின் முழு ஆற்றலும் பீறிட்டுக் கிளம்பியது. விரி அம்புகளும் பகழி அம்புகளும் இடைவெளியின்றிச் செலுத்தப்பட்டன. பறம்புப்படையை முற்றுகையிடத் துணிந்தவனுக்கு தாங்கள் யார் என்பதை உணர்த்த, ஒவ்வொரு வீரனும் துடித்தான். போர்க்களம், இதுவரை காணாத அளவுக்கு மரணத்தைக் கண்டது.  எதிரிகளின் படையை முழுமையாகச் சுற்றிவளைத்த கருங்கைவாணன், நிலைமை இப்படித் தலைகீழாக மாறும் என எதிர்பார்க்கவில்லை. எதிரிகளால் யானைப்படையைப் பிளந்துகொண்டு நண்பகலுக்குள் போர்க்களத்துக்கு ஆயுதங்களைக் கொண்டுவர முடியும் என்பதை அவனால் நினைத்துப்பார்க்கக்கூட முடியவில்லை.
பறம்புப்படையின் தாக்குதல் எல்லைக்குள் வேந்தர்படையின் முன்கள வீரர்கள் பெரும்பான்மையோர் சிக்கிக்கொண்டனர். பேரழிவுக்குப் பின்னரே நிலைமையை உணர முடிந்தது. ஆனால், உடனடியாகப் படையைப் பின்வாங்க முடியவில்லை. ஒரே பகுதியில் ஏறி நின்று தாக்கினால் பின்வாங்குதல் எளிது. ஆனால், வேந்தர்படையோ அரைச்சுற்று வட்டத்தில் பறம்புப்படையைச் சூழ்ந்து நின்றது. இத்தகைய உத்தியில் பின்வாங்குதல் எளிதல்ல.

எதிரிப்படையை முற்றுகையிட்டுத் தாக்கும் முடிவை எந்தத் தளபதியும் எளிதில் எடுக்க மாட்டான். முற்றுகை என்பது, எதிரிப்படையின் மீது முழுமையான அடைப்பை உருவாக்குவது. அந்த உத்தியை வகுத்துவிட்டால் பின்வாங்கல் என்பதற்கு இடமேயில்லை. எனவேதான் பின்வாங்கும் சூழல் ஒருபோதும் உருவாகாது என்ற முழு நம்பிக்கை இருக்கும்போது மட்டுமே முற்றுகைப்போரை நடத்துவர்.

கருங்கைவாணன், முழு நம்பிக்கையோடுதான் இந்த உத்தியை முன்னெடுத்தான். எதிரிகளின் கைகளில் ஆயுதங்கள் வந்து சேராமல் இருக்க யானைப்படையையும் கொண்டுபோய் அடைத்து நிறுத்தினான். அவன் திட்டமிட்டதைப்போலவே முற்பகலுக்குள் பறம்புவீரர்களின் கைகளில் இருந்த பெரும்பான்மையான ஆயுதங்கள் தீர்ந்தன. நிலைமை பறம்புப்படைக்கான பேரழிவை நோக்கி நகர்ந்தது. ஆனால், தேக்கன் வகுத்த உத்தியால் வேந்தர்படையின் வேகம் குறைந்தது. குழப்பத்தை உருவாக்கி கருங்கைவாணனைத் திசைதிருப்பினான். மூஞ்சலுக்கு ஆபத்து ஏதுமில்லை என உறுதிப்படுத்திக்கொள்ளும் வரை கருங்கைவாணன் முழு வேகத்தோடு தாக்குதலை முன்னெடுக்கவில்லை. அதற்குள் நிலைமை தலைகீழாக மாறியது.

பறம்பின் ஆற்றல் பீறிடத் தொடங்கியது. கடைசி ஐந்து நாழிகையில் விற்படையினர் நிகழ்த்திய தாக்குதல், இதுவரை நடந்த மொத்தத் தாக்குதல்களுக்கும் நிகரானது. அழிவு... அழிவு... வேந்தர்படையில் பேரழிவு. களத்தில் கருங்கைவாணன் கையறுநிலையில் நின்றான். யானைப்படையை அழித்து நண்பகலுக்குள் ஆயுதங்களை எப்படிக் கொண்டுவந்தனர் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. மனம் மிரட்சியில் இருக்கும்போது ஆற்றலைக் கைக்கொள்ள முடியாது. படையினர் மீள வழிகாட்ட முடியவில்லை. நெருக்கடி நிலையில் ஒருவன் சிறந்த முடிவை எடுக்க, அவனது போர் அனுபவமே கைகொடுக்கும். ஆனால், கருங்கைவாணன் சந்தித்த எந்தப் போரும் இந்தப் போருடன் ஒப்பிடக்கூடியதன்று. அவன் அதிகமான போர்களில் வெற்றிபெற்றுள்ளான். ஒருசில போர்க்களங்களை விட்டுப் பின்வாங்கி வெளியேறியுள்ளான். ஆனால், இன்று அவனுக்கு ஏற்பட்ட அனுபவம் முற்றிலும் வேறொன்று. பறம்போடு போரிட, தனது படைக்கு எந்தத் தகுதியும் இல்லையா என்ற கேள்வியை அடிமனதில் உருவாக்கியது அது.
அதன் பிறகு அந்தக் கேள்வியே அவனை ஆக்கிரமித்தது. அதிலிருந்து அவன் மீண்டுவர நெடுநேரமானது. அதற்குள் நிலைமை கைமீறியது. முன்களத்தில் எண்ணற்ற வீரர்கள் பகழி அம்புக்குப் பலியாகி மடிந்தனர். கவசவீரர்களின் படைக்கே இந்நிலையானதும் மற்ற வீரர்கள் பறம்பினரை நெருங்கவே அஞ்சினர். கைவிடப்பட்ட படைவீரர்கள் மலையெனக் கொன்றுகுவிக்கப்பட்டனர். தட்டியங்காடெங்கும் குருதி பெருகி ஓடியது.

எல்லாவற்றையும் பரண் மீதிருந்து பார்த்துக்கொண்டு நின்றார் திசைவேழர். நேற்றிரவுதான் அவர் கபிலரிடம் சொன்னார், ``இனி, மரணமே இந்நிலத்தை ஆட்சிசெய்யும்.” அந்தக் காட்சியைத்தான் அவர் இப்போது பார்த்துக்கொண்டிருந்தார். உடல் முழுவதும் செயலிழந்ததுபோல் இருந்தது. கண்விழி உயிரற்று அசைந்துகொண்டிருந்தது. ஆனாலும் நாழிகைக்கோலினைப் பார்த்தபடி தன் கைகளை மெள்ள உயர்த்தினார். முரசின் ஓசை எங்கும் எதிரொலித்தது. தட்டியங்காட்டின் நான்காம் நாள்
போர் முடிவுக்கு வந்தது.

மலையடிவாரமெங்கும், விரட்டப்பட்ட யானைகள் சிதறித் திரிந்தன. நண்பகலுக்குப் பிறகு யானைப்படை முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்தது. தளபதி உச்சங்காரிக்கு என்ன நடந்தது என்பதே புரியவில்லை. திடீரென யானைகள் மிரளத் தொடங்கின. நடுப்பகுதி யானைகள் பாகன்களின் கட்டுப்பாட்டை மீறி மிரண்டு திமிறின. பயம்கொள்ளும் யானையின் பிளிறல் தனித்துவமாகத் தெரியக்கூடியது. ஒன்றுக்கும் மேற்பட்ட யானைகள் அதேபோலப் பிளிறியவுடன் படையின்தன்மை உருமாறியது. பெரும் எண்ணிக்கையில் காட்டெருமைகள் மொத்தமாக உள்ளே நுழைந்தபோது படை தனது கட்டுப்பாட்டை இழந்தது. மேலே இருந்த வீரர்கள் தூக்கி வீசப்பட்டனர். நாலாபக்கமும் யானைகள் சிதறி ஓடின. காட்டுக்குள் ஓடத்தொடங்கிய யானையின் மீது பாகனோ, வீரனோ உட்கார முடியாது. எல்லோரும் உயிர்பிழைத்தால் போதும் என்ற நிலையை அடைந்தனர். காரமலையின் கீழ்ப்பகுதி முழுக்க வேந்தர்படையின் யானைகளும் வீரர்களும் தவித்து அலைந்தனர்.

எதிரிநாட்டுக்குள் போரிட நுழைந்த வர்களில் பிடிபட்டவர்களை முழுமையாக அழித்தொழிப்பதே மரபு. ஆனால், பறம்பின் தரப்பில் சொல்லப்பட்டுவிட்டது, `உயிர்பிழைக்க ஓடும் பாகன்களையோ வீரர்களையோ கொல்லவேண்டாம்’ என்று. போரிடுபவர்களை மட்டுமே எதிர்கொள்வோம். அஞ்சி ஓடுபவர்களை அழிப்பது வீரமாகாது.

நடுப்பகலிலிருந்து வேந்தர்களின் வீரர்கள் நாலாபக்கமும் ஓடிக்கொண்டி ருந்தனர். மாலையில் போர் முடிவுற்றதன் அடையாளமாக முரசின் ஓசை பரண் மேலிருந்து வெளிப்பட்டது. இன்றைய போர், வேந்தர்களுக்கானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தொடங்கி பறம்புக்கானதாக முடிவுற்றது. பறம்புவீரர்கள் பெருமகிழ்வோடு போர்க்களத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்தனர். கபிலர் இரலிமேட்டில் பாட்டாப்பிறையில் அமர்ந்திருந்தார். வழக்கமாக போர் முடிவுறும்போது நாகக்கரட்டின் மீதிருந்து நிலைமையைப் பார்ப்பது வழக்கம். ஆனால், இன்று இரலிமேட்டிலே இருந்துவிட்டார். சிதறுண்ட யானைகள் எங்கும் அலைவது ஒரு காரணம்.  இன்னொரு காரணம், நேற்று திசைவேழர் கூறிய சொற்கள். போர்க்களத்தின் பேரழிவைக் கண்கொண்டு பார்க்க முடியாத நிலையில், `இங்கேயே இருப்போம்... எல்லோரும் வந்து சேரட்டும்’ என்று அமர்ந்திருந்தார்.

பொழுது மறையத் தொடங்கியது. வீரர்களின் ஓசை, மலையெங்கும் கேட்டுக்கொண்டிருந்தது. கபிலரின் மனக்கண்ணில் அணங்கனே நிலைகொண்டிருந்தான். `எவ்வியூரின் வடதிசையில் ஏதோ ஒரு காட்டுக்குள் நுழைந்தவன் இத்தனை காட்டெருமைகளோடு எப்படி இங்கு வந்துசேர்ந்தான்? மனிதனின் பேராற்றலை எப்படிப் புரிந்துகொள்வது? மீண்டும் அவன் காரமலையில் ஏறிவிட்டதாகச் சொல்கிறார்கள். அவனைக் கண்டு பேசவேண்டும் எனத் தோன்றுகிறது. ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியவில்லை’ எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கையில் கபிலரின் முன்னால் வந்து வணங்கி நின்றான் ஒருவன்.

எண்ணங்களிலிருந்து விடுபட்டு அவனைப் பார்த்தார் கபிலர். முதலில் வேந்தர்படையைச் சேர்ந்தவன் எனத் தோன்றியது. ஆனால், போர்வீரனுக்குரிய அடையாளங்கள் எவையும் அவனிடம் இல்லை. `யாராக இருக்கும்?’ என்ற சிந்தனையிலேயே, வணங்கிய அவனுக்கு வாழ்த்து சொன்னார்.

மறுகணமே அவன் தனது கையில் இருந்த சுருட்டப்பட்ட துணி ஓலை ஒன்றைக் கொடுத்தான்.

தான் யார் என்று சொல்லாமலேயே ஏன் இதைக் கொடுக்கிறான் என்று நினைத்தபடியே வாங்கி அதை விரித்துப் பார்த்தார்.
பார்த்த கணத்தில் பேரதிர்ச்சிக்குள்ளானார் கபிலர். சிறிது நேரத்தில் அவரின் கண்களில் நீர் பெருகியது. ``என் தலைமாணவி பொற்சுவை” என்று உதடுகள் துடித்தபடியே உச்சரித்தன.

``என் பெயர் காராளி” என்று வந்தவன் தன்னை அறிமுகம் செய்துகொண்டான். தான் வெங்கல்நாட்டைச் சேர்ந்தவன் என்றும், போரில் ஈடுபடாத ஆறு ஊர்களில் ஒன்றைச் சேர்ந்தவன் என்றும் தன்னைப் பற்றிக் கூறினான்.

அவன் வரைந்த ஓவியம்தான் அது. அவளே திரைச்சீலைக்குப் பின்னால் நின்று பார்ப்பதுபோல் இருந்தது. ஓவியத்தை விட்டு கபிலரின் பார்வை நகரவில்லை. உள்ளுக்குள் எண்ணங்கள் பீறிட்டுக்கொண்டி ருந்தன. காராளியின் சொற்களை மனம் பெரிதாகக் கவனம்கொள்ளவில்லை.

சற்றே அவசரத்தோடு காராளி தொடங்கினான், ``இளவரசி உங்களைக் காண வேண்டும் எனக் காத்திருக்கிறார். அதற்கு உங்களின் அனுமதி வேண்டி வந்தேன்.”

காராளியின் சொல் கேட்டுத் திடுக்கிட்டார் கபிலர், ``இந்தப் போர்ச் சூழலில் அவர் ஏன் என்னைக் காண வேண்டும்?”

காராளியிடம் பதில் இல்லை.

சற்று நேரம் கழித்து, ``போர் முடிவுற்றவுடன் காணலாம் என்று சொல்.”

``இல்லை ஐயா, அவர் உங்களைக் காண விரும்புவதே போர்குறித்துப் பேசத்தானாம். போர் தொடங்கும் முன்பே உங்களிடம் அழைத்துப்போகச் சொன்னார். நானும் கடந்த ஐந்து நாள்களாகப் பெருமுயற்சி செய்துவருகிறேன். அதற்கான வாய்ப்பே கிட்டவில்லை. இன்று நடுப்பகலுக்குப் பிறகுதான் வாய்ப்பு கிட்டியது.”

`எப்படி?’ என்று கேட்பதைப்போல இருந்தது கபிலரின் பார்வை.

``நடுப்பகலுக்குப் பிறகு, வேந்தர்களின் யானைப்படை சிதறி ஓடியது. காடெங்கும் வேந்தர்படையின் வீரர்கள் உயிர்பிழைக்க இங்குமங்குமாக ஓடிக்கொண்டி ருக்கிறார்கள். இதுதான் பொருத்தமான நேரம். இதைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்தால் யாரும் ஐயம்கொள்ள மாட்டார்கள் என்றுதான் இன்று வந்துசேர்ந்தேன்” என்றான்.

அவனது அக்கறையும் அறிவுக்கூர்மையும் கபிலரை ஈர்த்தன. ஆனாலும் தயக்கத்துடனே, ``இந்தச் சூழலில் இங்கு வருவது அவருக்கு ஆபத்தாக அமைந்துவிடாதா?”

``ஓர் ஆபத்தும் வராது. நிலைமை குழப்பத்தில் இருக்கும்போதே அவரை அழைத்துவருதல் சிறந்தது. யாருக்கும் எந்தவித ஐயமும் வராது” என்றான்.

தேக்கனிடமோ முடியனிடமோ கலந்து பேசிவிட்டுச் சொல்லலாம் என்று முடிவுசெய்தார். வழக்கமாக அவர்கள் வந்து சேரும் நேரம் கடந்துவிட்டது. ஆனாலும் இருவரும் வந்துசேரவில்லை.

காராளியோ, பொழுதாகிக்கொண்டி ருப்பதால் சற்று பதற்றத்தோடு இருந்தான். அப்போது இரலிமேட்டின் குகைப்பகுதியிலிருந்து வேகமாகக் கீழிறங்கிக்கொண்டிருந்தான் இரவாதன். அவனைப் பார்த்து ``தேக்கனும் முடியனும் ஏன் இன்னும் வந்துசேரவில்லை?” என்று சத்தம்போட்டுக் கேட்டார் கபிலர்.

``தேக்கனுக்கு சற்று ஓய்வு தேவைப்படுவதால் இங்கு வரவில்லை. அவருக்கான குடிலிலேயே தங்கிவிட்டார். அவரைக் கண்டு பேசுவதற்காக முடியன் அங்கு போயுள்ளார். அவர்கள் இருவரையும் பார்க்கத்தான் நான் போகிறேன். எதுவும் சொல்ல வேண்டுமா?” என்று கேட்டுக்கொண்டே நடந்தான் இரவாதன்.

அவசர வேலையாகப் போய்க்கொண்டி ருக்கிறான் என்று சிந்தித்த கபிலர், ``இல்லை, வந்தவுடன் நேரில் பேசிக்கொள்கிறேன்” என்றார்.

என்ன முடிவெடுப்பது எனத் தெரியவில்லை. குழப்பம் சற்று அதிகமானது. காராளியின் பதற்றமும் அதிகமானது. ``நான் விரைந்து போய்ச் சேரவேண்டும். அப்போதுதான் இரவுக்குள் இளவரசிக்குச் செய்தி சொல்ல முடியும்” என்று வற்புறுத்திக் கேட்டான்.

மீண்டும் அவனைக் கூர்ந்து பார்த்தார் கபிலர்.

``நாளையோ, நாளை மறுநாளோ இதே பொழுதில் அழைத்துவருகிறேன். அனுமதி கொடுங்கள் ஐயா” என்றான்.

மனம் முடிவெடுக்க முடியாமல் குழம்பிய நிலையில் தலை மட்டும் சம்மதித்து அசைந்தது.

கால் தொட்டு வணங்கி விடைபெற்றான் காராளி.

தட்டியங்காட்டின் பேரழிவுக்குமுன் செய்வதறியாது நின்றிருந்தான் கருங்கைவாணன். பொழுதும் மங்கி இருள் சூழ்ந்தது. தீப்பந்தங்களோடு உடல்களை அப்புறப்படுத்தும் வேலையில் கணக்கற்றோர் ஈடுபட்டனர். எங்கும் மரணத்தின் பேரோலம். இழுபடும் குரல்கள் உயிரை உதற முடியாமல் துடித்துத் தவித்தன. கருங்கைவாணனால் கூடாரத்துக்குள் இருக்கவும் முடியவில்லை; வெளியில் வந்து நிற்கவும் முடியவில்லை.

தலைமைத் தளபதியின் போர் உத்தி தோல்வியடைந்தால் ஏற்படும் இழப்புகள் எவ்வளவு கொடியவை என்பதை இன்றைய போர்க்களம் உணர்த்திக்கொண்டிருந்தது. யானைப்படைத் தளபதி உச்சங்காரி என்ன ஆனான் என்ற செய்தி ஏதும் இதுவரை கிட்டவில்லை. யானைப்படையை எப்படி நடுப்பொழுதுக்குள் கலைத்தனர் என்பது புரியவில்லை. காட்டெருமைகள் யானைப்படைக்குள் நுழைந்த இடத்தைப் பார்த்த வீரர்கள் யாரும் உயிரோடு இல்லை. முன்னும் பின்னுமாக இருந்த யாருக்கும் என்ன நடந்தது என்பது விளங்கவில்லை. பெருந்தாக்குதலால் படையைச் சிதறச்செய்துவிட்டார்கள் என்பதுதான் புரிந்தது. கருங்கைவாணன் குழம்பித் தவித்து வேதனையில் மூழ்கிக்கொண்டிருந்தான்.

வழக்கமாக வேந்தர்கள் கூடிப்பேசும் நேரம் நெருங்கிவிட்டது. ஆனால், யாரும் இன்னும் மையக்கூடாரத்துக்கு வந்துசேரவில்லை. வேந்தர்களைக் கண்டு என்ன சொல்லப்போகிறோம் என்பது புரியவில்லை. கருங்கைவாணன் வாழ்வில் இவ்வளவு மோசமான இழப்பு எந்த ஒரு போர்க்களத்திலும் அவனுக்கு ஏற்பட்ட தில்லை. ஏறக்குறைய கையறுநிலையில் அவன் நின்றான். வேந்தர்கள் ஏன் இன்னும் தங்களின் கூடாரங்களை விட்டு மையக்கூடாரத்துக்கு வராமல் இருக்கின்றனர் என்பதும் அவனுக்குப் புரியவில்லை. குழப்பத்தோடேயே உட்கார்ந்திருந்தான்.

மூவேந்தர்களும் தங்களின் படைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பைப் பற்றிய முழுமையான செய்தியை அறிந்துகொண்ட பிறகு கூடாரத்துக்கு வரலாம் எனக் காத்திருந்தனர். ஏற்பட்டுள்ளது பேரிழப்பு. போர்க்களத்திலிருந்து எண்ணிலடங்காத பிணங்களை வெளியேற்றவேண்டியிருந்தது. எண்ணிக்கையைக் கண்டறிவது இரவுக்குள் இயலாது என்று அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
போரின் போக்கு பற்றி உதியஞ்சேரலுக்கு மறுசிந்தனை உருவாகத் தொடங்கியது. `பாண்டியனை நம்பிப் பெரும்படையோடு களம்புகுந்தது சரியா?’ என்ற கேள்வி மேலெழுந்தது. இந்தக் கேள்விக்கு அடிப்படைக் காரணம் பறம்புவீரர்கள் ஒரே நேரத்தில் முற்றுகையைத் தகர்த்து அளவில்லாத இழப்பை உருவாக்கியதும், யானைப்படையைச் சிதறடித்ததும்தான். பறம்புப்படைக்கு இதைவிடப் பெரிய நெருக்கடியை இனி கொடுத்துவிட முடியாது. எனவே, இந்தப் போரின் போக்கு தனக்கான வெற்றிவாய்ப்பை இழக்கத் தொடங்கிவிட்டது என அவன் எண்ணினான். அப்போது கூடாரத்துக்குள் வந்த பணியாள் சொன்னான், ``சோழப்பேரரசர் தங்களைக் காணக் காத்திருக்கிறார்” என்று.

தன்னைப்போல நம்பிக்கை இழந்த நிலையில், அடுத்து என்ன செய்யலாம் என்பதைப் பற்றிப் பேச செங்கனச்சோழன் வந்திருப்பான் என நினைத்தான் உதியஞ்சேரல். ஆனால், உள்ளே வந்தவனின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. உதியஞ்சேரலுக்குப் புரியவில்லை.

வந்ததும் ஊன்றுகோலைச் சாய்த்துவிட்டு இருக்கையில் அமர்ந்தபடி செங்கனச்சோழன் சொன்னான், ``எல்லாம் நல்லபடியாக முடிந்தது.”

உதியஞ்சேரலுக்குப் புரியவில்லை. முகத்தில் குழப்பமே மிஞ்சியது.

அதை உணர்ந்தவாறு செங்கனச்சோழன் கூறினான், ``ஈங்கையனிடம் பேசிக்கொண்டி ருக்கிறோம் என்று சொன்னேன் அல்லவா; அது நல்லபடியாக முடிந்தது.”

உதியஞ்சேரலுக்கு உயிர்வந்தது போலிருந்தது. ``உண்மையாகவா? நீங்கள் சொல்வதைச் செய்ய ஒப்புக்கொண்டு விட்டானா?” என்று வேகமாகவும் உணர்ச்சிவசப்பட்டும் கேட்டான்.

``ஆம்” என்று தலையசைத்தான் செங்கனச்சோழன்.

அதன் பிறகு உரையாடல் தொடரவில்லை. அமைதி நீடித்தது. என்ன நடந்தது என்று அவன் சொல்வான் எனக் காத்திருந்தான் உதியஞ்சேரல்.

சற்று நேரத்துக்குப் பிறகு செங்கனச்சோழன் சொன்னான், ``நாளை இரவு பாரி பத்தாம் குகையில் தங்குகிறான். அங்கே ஈங்கையனின் காவல்.”

உதியஞ்சேரலுக்குப் புரியவேண்டியது புரிந்தது.

எழுந்துபோய் அவனைக் கட்டியணைத்துக்கொண்டான்.

மையக்கூடாரத்தில் வேந்தர்கள் கூடினர். கருங்கைவாணனோடு சேர்த்து மையூர்கிழாரையும் அழைத்திருந்தனர். இருவரும் வந்து வேந்தர்களுக்கு முன் நின்றனர். அவர்களுக்குச் சற்றுப் பின்னால் தளபதிகளான உறுமன்கொடி, துடும்பன், வெறுகாளன், மாகனகன் ஆகிய நால்வரும் நின்றனர்.

இரலிமேட்டின் குகையிலிருந்துதான் ஆயுதங்கள் தட்டியங்காட்டுக்கு வந்து சேர்கின்றன. இரலிமேட்டுக்கும் நாகக்கரட்டுக்கும் நடுவில் இருக்கும் பள்ளத்தாக்கு மிகக்குறுகியது. யானைப்படையைக் கொண்டுபோய் அடைத்து நிறுத்திவிடலாம். எதிரிகள் தங்களின் யானைப்படை மூலம் தாக்குதல் தொடுத்தாலும் பகற்பொழுதுக்குள் ஆயுதங்களைக் குகைகளிலிருந்து போர்க்களத்துக்கு எடுத்துவந்துவிட முடியாது. ஏனென்றால், பள்ளத்தாக்கு முழுவதும் இருதரப்பு யானைகளுமே ஆவேசம்கொண்டிருக்கும் என்று ஆலோசனையைச் சொன்னது மையூர்கிழார்தான். எனவே, இன்று விளக்கம் சொல்லவேண்டிய முதல் இடத்தில் அவரும் இருந்தார்.

கருங்கைவாணனால் வேந்தர்கள் யாருடைய முகத்தையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. மையூர்கிழாரின் முகமும் மிகுந்த கலக்கத்தில்தான் இருந்தது. ஆனால், நிமிர்ந்தே இருந்தார்.

``ஏன் இவ்வாறு நடந்தது?”

சோழவேழனின் கேள்வி யாரை நோக்கி எனத் தெரியாததால், இருவரும் சற்று அமைதியாக நின்றனர். கருங்கைவாணனால் உடனடியாக பதில் சொல்லிவிட முடியாது என்பதால், மையூர்கிழார் பேசத் தொடங்கினார்.

``இவ்வாறு நடக்காது என்பதை நம்மில் யாராலும் ஏன் முன்னாலேயே சிந்திக்க முடியவில்லை?”

சோழவேழன் கேட்ட கேள்வியை அவையில் இருக்கும் எல்லோரையும் நோக்கிய கேள்வியாகத் திருப்பினார் மையூர்கிழார்.

முற்றுகைத் திட்டத்தைக் கருங்கைவாணன் முன்வைத்தான். ஆனால், இப்படித் தலைகீழாக மாறும் வாய்ப்பிருக்கிறது என யாரும் சிந்திக்க வில்லை. அதனால்தான் மையூர்கிழாரின் கேள்விக்கு யாரும் மறுமொழி சொல்லவில்லை.

சிறிது நேரத்துக்குப் பிறகு சோழவேழன் கேட்டார், ``நீ என்ன சொல்ல நினைக்கிறாய்?”

``நடந்த உண்மையைத் தெரிந்துகொண்டால் நம் வீரர்கள் போரிடும் முடிவையே கைவிட்டுவிடுவார்களோ என அஞ்சுகிறேன்.”

அதிர்ந்தது அவை.

``அப்படி என்ன நடந்தது?” எனக் கேட்டார் சோழவேழன்.

``அவர்கள் காட்டெருமைப் படையை நமது யானைப்படையின் மீது ஏவியுள்ளனர். அதனால்தான் நம் யானைகள் போரிடாமலே சிதறி ஓடியிருக்கின்றன.”

``காட்டெருமைப் படையா?”

அவையில் இருந்த தளபதிகள் பலரும் நடுக்குற்று மீண்டனர்.

நேரம் கடந்து சற்றே குறைந்த குரலில் பொதியவெற்பன் சொன்னான், ``நம்பும்படியாக இல்லையே!”

``நம்மால் நம்பவே முடியாத ஆற்றல் எதிரிகளிடம் உள்ளது என்றுதானே தலைமைத் தளபதி முதலிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்.”

கருங்கைவாணனுக்கு மூச்சு வந்தது. தான் தொடர்ச்சியாகச் சொல்லிவந்ததை இன்னொருவர் வலியுறுத்திப் பேசுவது, அதுவும் இப்படியொரு நெருக்கடியான நேரத்தில் பேசுவது, சற்று ஆறுதலைத் தந்தது.

``நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள்?” எனக் கேட்டான் உதியஞ்சேரல்.

``இப்போரை இப்படி நடத்தினால் வெல்ல முடியாது.”

``ஏன்?”

``ஏனென்றால், இப்போர் பாரிக்கு எதிராக நடைபெறுகிறது.”

``பாரிக்கு எதிராகத்தான் நடைபெறுகிறது. அதை யாரும் மறுக்கவில்லையே!”

``மறுக்கவில்லை. ஆனால், உங்களுக்கு அது புரியவில்லை.”

வேந்தர்களின் முன்னால் மையூர்கிழாரின் பேச்சு மிகத்துணிச்சலாக இருந்தது. ஏற்பட்டுள்ள பேரிழப்பு இதுபோன்ற பேச்சுக்கான இடத்தை இயல்பாக உருவாக்கியது.

``என்ன புரியவில்லை என நினைக்கிறாய்?” எனக் கேட்டார் சோழவேழன்.

``நேற்று எதிரிகள் காற்றைக்கொண்டு அம்பெய்திப் பெரும்பாதிப்பை உருவாக்கினர். அது எப்படியென்று இன்னும் புரியவில்லை. இன்றோ காட்டெருமைப்படையைக்கொண்டு தாக்கியுள்ளனர். இதுவும் எப்படியென்று புரியவில்லை. நாளை அவர்கள் நடத்தப்போகும் தாக்குதலும் புரியப்போவதில்லை.”

``நீ என்னதான் சொல்ல வருகிறாய் என்பதைத் தெளிவாகச் சொல்.”

``நான் முதல் நாளிலிருந்து தெளிவாகத்தான் சொல்லிவருகிறேன். ஆனால், இந்த அவை எனது சொல்லை ஏற்க மறுக்கிறதே” என்று குற்றம்சாட்டினான் மையூர்கிழார்.

பாண்டியப் பேரரசுக்கு உட்பட்ட ஒரு குறுநில மன்னன், பேரரசரும் பிற வேந்தர்களும் இருக்கும் அவையில் இவ்வளவு துணிந்து பேசுவது வியப்பைத் தந்தது. ஆனாலும் அவனிடம்தான் பாரியைப் பற்றியும் பறம்பைப் பற்றியும் அறிந்துகொள்ளவேண்டிய செய்திகள் இருக்கின்றன என்பதால், மற்ற இரு வேந்தர்களும் சற்றே ஆர்வத்துடன் கேட்டனர்.

ஆனால், மையூர்கிழாரின் பேச்சால் கடும்சினம்கொண்டான் பொதியவெற்பன். சற்றே உரத்தகுரலில் சொன்னான், ``புதிய தாக்குதல் திட்டத்தை நீ வைத்திருந்தால் அதை நேரடியாகச் சொல். சுற்றிவளைத்துப் பேசாதே!”

``இளவரசர் என்னை மன்னிக்க வேண்டும். நான்கு நாள் போரையும் முழுமையாகக் கவனித்ததால் சொல்கிறேன். தலைமைத் தளபதி உள்ளிட்ட நம் தளபதிகள் யாருக்கும் இந்தப் போரை எப்படி நடத்துவதென்றே தெரியவில்லை.”

அவை அதிர்ந்தது. கருங்கைவாணன் அதனினும் அதிர்ந்தான். இப்போதுதான் தனக்கு ஆறுதலாக அவனது பேச்சு இருக்கிறது என நினைத்தான். ஆனால், அடுத்த கணமே அவனைத் தகுதியற்றவனாக்கினான்.

``கருங்கைவாணன் வகுத்த திட்டத்தில் நீ கண்ட குறை என்ன?”

சோழவேழனின் கேள்விக்கு மையூர்கிழார் சொன்னார், ``ஒவ்வொரு நாளும் எதிரியின் படையை வெல்வதற்கான உத்தியையே அவர் உருவாக்கினார். அது முற்றிலும் தவறு.”

``என்ன உளறுகிறாய்... எதிரியின் படையை வெல்வதற்குத்தானே போர் நடக்கிறது. அதைச் செய்வதற்கு உத்தியை உருவாக்குவதில் தவறென்ன இருக்க முடியும்?”

``எதிரிப்படையை வெல்வது நமது இறுதி இலக்கு. ஆனால், ஒவ்வொரு நாள் போரிலும் இறுதி இலக்குக்கான உத்தியையே உருவாக்கக் கூடாது.”

அவையின் ஆழ்ந்த கவனிப்பு மையூர்கிழாரின் சொல்லின்மேல் குவியத் தொடங்கியது.

மையூர்கிழார் தொடர்ந்து சொன்னார், ``இந்தப் போர் பாரிக்கு எதிரானது. ஆனால், இன்று வரை அவன் போர்க்களத்துக்கே வரவில்லை. அவன் எங்கே இருக்கிறான் என்றே தெரியாது. பிறகு எப்படி இந்தப் போர்க்களத்தை நம்மால் வெற்றிகொள்ள முடியும்?”

அவையின் அமைதி மேலும் அடர்த்திகொண்டது.

``அவன் மிக உயரமான இடத்திலிருந்து இந்தப் போரை வழிநடத்துகிறான். நமது படையின் ஒவ்வொரு நகர்வையும் அவனால் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அடுத்த நகர்வை அவனால் உணர முடிகிறது. நாம் செய்வதையும் செய்யப்போவதையும் அவன் எளிதில் கணிக்கிறான். நாம் அவனது கால்களுக்கு அடியிலிருந்து சண்டைபோட்டுக்கொண்டிருக்கிறோம். அவனோ நமது தலைக்கு மேலே இருந்து தாக்குதலை வழிநடத்துகிறான். காற்றையும் காட்டெருமையையும் பயன்படுத்தியது, போரிட்டுக்கொண்டிருக்கும் அவர்களின் தளபதிகள் எடுத்த முடிவுகளல்ல. இன்னும் சொல்லப்போனால், இப்படிப்பட்ட முடிவுகள் எடுக்கப்படக்கூடும் என்பதுகூட அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பாரி, மலையின் மாமனிதன்; உருளும் கற்களையும் வீசும் காற்றையும் பயன்படுத்தத் தெரிந்த பேரறிவாளன். அவனோடு போரிட்டுக்கொண்டிருக்கும் நம் தளபதிகளோ வாளையும் வேலையும் நம்பிப் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.”

அவை, அதிர்ச்சிமேல் அதிர்ச்சிகண்டு உறைநிலை அடையத் தொடங்கியது. குலசேகரபாண்டியன், எதுவும் சொல்லாமல் மையூர்கிழாரையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். மற்றவர்களோ ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்துக்கொள்ள முடியாத நிலையில் அமைதிகொண்டிருந்தனர். மையூர்கிழாரோ வேகம் குறையாமல் தொடர்ந்தார்.

``இரண்டாம் நாள் போரிலேயே தேக்கனை வெட்டி எறியும் வாய்ப்பு கிட்டியது. அதைத் தலைமைத் தளபதி தவறவிட்டார். அன்று அது நடந்திருந்தால் போரின் போக்கே மாறியிருக்கும். அதனால்தான் நான் முதலிலேயே சொன்னேன், நமது உத்தி தேக்கனுக்கும் முடியனுக்குமானதாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அது தளபதிகளுக்குப் புரியவேயில்லை. `வேட்டூர்பழையனை விரட்டிக்கொண்டு காட்டுக்குள் போகாதீர்கள்!’ என்று கத்தினேன். அதைப் பொருட்டாகவே அவர்கள் நினைக்கவில்லை. இப்படித்தான் இந்தப் போர்க்களத்தில் ஒவ்வொரு நாளும் நடக்கிறது.”

கருங்கைவாணனையும் மற்ற தளபதிகளையும் நேரடியாகத் தாக்கி, குற்றம்சாட்டின மையூர்கிழாரின் சொற்கள். ஆனால், அவற்றில் எதையும் அவர்களால் மறுக்க முடியாது. நேற்று இதே அவையில் சோழவேழன் பேசியதுக்குச் சினம்கொண்டு மறுத்துரைத்தான் கருங்கைவாணன். ஆனால், இன்று அதன் தலைகீழ் நிலை நடந்துகொண்டிருந்தது. வேந்தர்களுக்கு முன்னால் தளபதிகளின் தவறுகளையும் செயலின்மையையும் வெளிப்படையாக எடுத்துக் கூறினார் மையூர்கிழார்.

``நான் இக்கணத்தில் என் மகன் இளமாறன் உயிரோடு இல்லையே என வேதனைப்படுகிறேன். தட்டியங்காட்டையும் நாகக்கரட்டையும் இரலிமேட்டையும் அவன் அளவுக்கு அறிந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவ்வளவு பெரும்படையோடு மூவேந்தர்களும் அணிவகுத்து நிற்கும் இந்தப் போர்க்களத்தில் அவன் நின்றிருப்பானேயானால், பறம்பின் கதறலை இந்நேரம் நாம் கேட்டுக்கொண்டிருப்போம். இப்போதோ நமது கதறலை அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.”

இவன் கூறுவதை எதிர்கொள்வதற்கான சொல்லே யாருக்கும் சிக்கவில்லை. பாரி ஏற்படுத்திய பேரழிவை தனக்கான முழுவாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கி றான். அதேநேரம் தனது விசுவாசத்தை வலிமையாக நிலைநிறுத்துகிறான். இவன் நோக்கம்தான் என்ன என்பது கருங்கைவாணனுக்குப் பிடிபடவில்லை.

``சரி, இப்போது என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாய்?” கேள்வி சோழவேழனிடம் இருந்து வந்தது.

``பாரியை உடனடியாகப் போர்க்களத்துக்கு வரவழைக்க வேண்டும்.”

நீண்டநேர அமைதியை உடைத்து வெளிவந்தது பொதியவெற்பனின் குரல், ``நாளைய போர்க்களத்தில் தேக்கனையோ முடியனையோ வெட்டிச்சாய்க்கும் உறுதியை தலைமைத் தளபதி இந்த அவைக்குத் தரவேண்டும்.”

உண்மையில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கருங்கைவாணனால் புரிந்துகொள்ள முடியவில்லை. இளவரசர் சொல்லை இந்த அவையில் ஏற்பதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக்கொள்வது சரியான ஒன்றாக இருக்குமா என நினைத்துக்கொண்டிருக்கும்போதே, மையூர்கிழாரின் குரல் கேட்டது.

``இனி அந்த உத்தியின் மூலம் பலன் கிடைக்காது. அதற்குரிய காலம் கடந்துவிட்டது.”

``ஏன் அப்படிச் சொல்கிறாய்?”

``தேக்கனையோ முடியனையோ ஒரே நாள் போரில் வீழ்த்திவிட முடியாது. வேந்தர்படை முழு ஆற்றலோடு இருக்கும்போது அது நடந்திருக்கலாம். இன்றுள்ள நிலையில் அதைச் செய்ய முடியும் என நான் நம்பவில்லை. ஒருவேளை, கருங்கைவாணன் தேக்கனின் தலையை வெட்டினால்கூட, அவன் கரப்பான்பூச்சியைப்போல அதன் பிறகும் பத்து நாள் உயிர் வாழ்வான். பறம்பு மருத்துவர்களால் எதையும் செய்ய முடியும்.”

``வேறு என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாய்?”

சட்டென மறுமொழி சொல்லி விடவில்லை. கேள்வி எழுப்பிய உதியஞ்சேரலை மட்டுமல்ல, எல்லோரையும் நோக்கி பார்வையைச் செலுத்தியபடி சொன்னார், ``என்னிடம் இருக்கும் ஆலோசனையை நான் சொல்ல ஆயத்தமாய் இருக்கிறேன். அதை நீங்கள் ஏற்பீர்களா என்பது ஐயமே!”

``ஏன் ஐயம்கொள்கிறாய்? துணிந்து சொல். பொருத்தமுடையதென்றால் ஏற்போம்.”

சோழவேழனின் சொல்லில் நின்றுகொண்டு மையூர்கிழார் சொன்னார், ``காலையில் போர் தொடங்கும்போது, பறம்பின் திசைநோக்கி நீலனின் தலையை வெட்டி வீச வேண்டும். அடுத்த பொழுதுக்குள் களம் வந்து நிற்பான் பாரி.”

பதறியது அவை. துடித்தெழுந்தான் உதியஞ்சேரல், ``உனது ஆலோசனை பைத்தியக்காரத்தனமானது. எதிரியை வீழ்த்த அவனது வலிமையைக் குறைக்கவேண்டுமேயொழிய, ஆவேசத்தைப் பெருக்கக் கூடாது.”

செங்கனச்சோழனும் அதே சீற்றத்தை வெளிப்படுத்தினான். ``பாரியை வரவழைப்பதைவிட முக்கியமானது அவனை வெற்றிகொள்வது. அதற்கான தெளிவான திட்டம் இல்லாமல் அதைச் செய்வது அறிவுடைமையாகாது.’’

``தூண்டில் முள்ளை வீசுவதற்கும் கொலைவாளை வீசுவதற்கும் வேறுபாடு தெரியாதவனை முட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்” என்றான் சோழவேழன்.

சற்றும் பின்வாங்கவில்லை மையூர்கிழார், ``எனக்குத் தெரியும், நீங்கள் இதை ஒப்புக்கொள்ள மாட்டீர்கள் என்று. தீராப்பகையும் வஞ்சினமும் இருக்கும் ஒருவனால் மட்டுமே இந்தச் செயலைச் செய்ய முடியும். எதிரியை வெட்டி வீழ்த்த நினைக்கும் தளபதிகளை வைத்துக்கொண்டு போரிடத்தான் முடியும். போர்க்களத்தில் எல்லோரும்தான் போரிடுவார்கள். அவர்களை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. மரத்தின் கிளையை வெட்டுபவனுக்கும் மரத்தையே பிடுங்கி எறிபவனுக்கும் வேறுபாடு இருக்கிறது. குருதியைக் குடிக்கும் வெறியிருப்பவனால் மட்டுமே தட்டியங்காட்டைத் தனதாக்க முடியும்.”

ஏறி மிதித்தாலும் திமிறி எழும் மையூர்கிழாரின் உறுதியும் ஆவேசமும் சோழவேழனை உலுக்கின. சட்டெனச் சொன்னான், ``இனிவரும் நாள்களுக்கு மையூர்கிழாரை ஏன் தலைமைத் தளபதியாக ஆக்கக் கூடாது?”

கொந்தளிப்பு ஏறி நிற்கும் இந்த அவையை யார் எப்படிக் கைக்கொள்வார்கள் என யாராலும் கணிக்க முடியவில்லை. சோழவேழனின் சொல், அவையைக் கூர்முனையில் நிறுத்தியது. அவையின் நடுவில் தலைகவிழ்ந்து இருந்த கருங்கைவாணன், மெள்ளத் தலைநிமிர்ந்து குலசேகரபாண்டியனைப் பார்த்தான்.

பாண்டியப் பேரரசர் பதற்றம் ஏதுமின்றிச் சொன்னார், ``இன்றைய நாள் நமக்கானதாக இல்லை. எனவே, எந்த முடிவையும் இன்று எடுக்க வேண்டாம். வழக்கம்போல் நாளைய போரை கருங்கைவாணன் முன்னெடுக்கட்டும். மற்றவற்றை நாளை இரவு பேசிக்கொள்வோம்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Sep 15, 2018 9:11 pm

நன்றி நண்பரே ... வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 3838410834

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 9:18 pm

ரா.ரமேஷ்குமார் wrote:நன்றி நண்பரே ... வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1277798

வணக்கம் ரமேஷ்!

ஈகரையில் நாவல்களுக்கென தனிப்பிரிவாக கதைகள் பகுதியின் கீழ் “நாவல்கள்” என்று உருவாக்கப்பட்டுள்ளது, அங்கு இந்தத் திரியை மாற்றுகிறேன்!



வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Sep 15, 2018 9:21 pm

வணக்கம் அண்ணா ... :வணக்கம்: :வணக்கம்:  மாற்றங்கள் அருமை ... சூப்பருங்க சூப்பருங்க

சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1277798

வணக்கம் ரமேஷ்!

ஈகரையில் நாவல்களுக்கென தனிப்பிரிவாக கதைகள் பகுதியின் கீழ் “நாவல்கள்” என்று உருவாக்கப்பட்டுள்ளது, அங்கு இந்தத் திரியை மாற்றுகிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1277799

நன்றி நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பிரபாகரன் ஒற்றன்
பிரபாகரன் ஒற்றன்
பண்பாளர்

பதிவுகள் : 52
இணைந்தது : 31/08/2018

Postபிரபாகரன் ஒற்றன் Thu Sep 20, 2018 5:01 pm

வீரயுக நாயகன் வேள்பாரி - 101
நாகக்கரட்டி லிருந்து முன்னி ரவுக்குள் யானை கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. இரலிமேட்டின் பக்கம் யானைகள் ஏறவே யில்லை. ஏனெனில், அந்தப் பக்கம் இருந்துதான் காட்டெருமைகள் இறங்கி வந்தன. விரட்டப்பட்ட யானைகள், காரமலையின் வலதுபுறமும் இடது புறமுமாகச் சிதறி ஓடின. பள்ளத்தாக்கின் இறுதிப் பகுதியில் நின்றிருந்த யானைகளில் ஒரு பகுதி மட்டும் மீண்டும் வேந்தர் படையின் பாசறைக்குத் திரும்பியுள்ளது. ஆனால், தளபதி உச்சங்காரி என்ன ஆனான் எனத் தெரியவில்லை.
நாகக்கரட்டெங்கும் பறம்புவீரர்களின் உணர்ச்சிப் பேரொலி இடைவிடாது கேட்டது. போர் முடிவுற்றவுடன் அங்கு இருக்கும் குடிலில் வந்து ஆயுதங்களை வைத்துவிட்டு உணவு அருந்திய பிறகு இரலிமேட்டில் இருக்கும் பாட்டாப்பிறைக்குப் போவார் தேக்கன். ஆனால், இன்று குடிலுக்கு வந்தவர் ஆயுதங்களை வைத்துவிட்டு சற்றே தலை சாய்த்துப் படுத்தார். வீரன் ஒருவன் கலயத்தில் கொண்டுவந்த கஞ்சியையும் குடிக்கவில்லை. ``சிறிது பொழுதாகட்டும். இங்கு வைத்துவிட்டுப் போ” என்று சொல்லிவிட்டார்.
 
இருள் கவியத் தொடங்கி நெடுநேரம் ஆன பிறகு, தேக்கனைத் தேடி முடியன் வந்தான். பறம்பு ஆசானுக்கென்று அமைக்கப்பட்டிருந்த தனிக் கூடாரத்தில் அவர் படுத்திருந்தார். முடியன் வந்த பிறகுதான் எழுந்து அமர்ந்தார். முடியனின் பார்வை கலயத்தை நோக்கிப் போனபோதுதான் கஞ்சியை எடுத்துக் குடிக்கத் தொடங்கினார்.
 
தேக்கனின் உடல்நிலை என்ன பாடுபடுகிறது என்பதை முடியனால் உணர முடிந்தது. ஆனாலும் அவர் போர்க்களத்தில் நிற்பது எவ்வளவு முக்கியம் என்பதை இன்றைய நாள் உணர்த்தியது. தேக்கன் சொன்ன வழிமுறைப்படி உத்தியை வகுத்திராவிட்டால், பறம்புக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு அளவிடற்கரியதாக இருந்திருக்கும். ஆனால், அது நிகழாமல் தடுக்கப்பட்டது. அப்படியிருந்தும் பறம்புவீரர்கள் அதிக இழப்பைக் கண்ட நாள் இதுதான். நண்பகல் பொழுதில் வேந்தர்படை மிகுந்த ஆவேசத்தோடு தாக்கி முன்னேறியபோது பறம்புப்படை தற்காப்புப் போரை நடத்தவேண்டிய நிலை இருந்தது. அந்நிலையில் பறம்புப்படைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது பற்றி ஆசானிடம் பேச இரலிமேட்டில் இருக்கும் பாட்டாப்பிறை நோக்கிச் சென்றான் முடியன். ஆனால், தேக்கன் ஓய்வெடுப்பதற்காக இன்று தனது குடிலிலேயே இருக்கிறார் என்ற செய்தியை அறிந்ததும் பாட்டாப்பிறைக்குச் செல்லாமல் பாதியிலேயே திரும்பி இங்கு வந்து சேர்ந்தான்.
 
``இதுவரை நடந்த நான்கு நாள் போரிலும் வேந்தர்படையின் எண்ணிக்கையை சரிபாதிக்குமேல் குறைத்துள்ளோம். ஆனால், நமது படையின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதே நிலையில் இந்தப் போரை நீட்டிக்க முடியாது. வேறு திட்டங்களுக்கு நாம் சென்றாக வேண்டும்” என்றான்.
 
``எனது சிந்தனையும் அதை நோக்கித்தான் இருக்கிறது” என்றார் தேக்கன்.
 
அப்போது இரவாதன் உள்ளே நுழைந்தான். இருவரையும் தேடி பாட்டாப்பிறைக்குப் போனவன் அங்கு இல்லை என்பது அறிந்து இங்கு வந்துசேர்ந்தான். `முதலில், அவன் வந்துள்ள செய்தியைக் கேட்டறிந்த பிறகு நாம் பேசிக்கொள்ளலாம்’ என்று இருவரும் பார்வையிலே முடிவுசெய்தனர்.
 
பறம்புப்படை பெருவெற்றியை ஈட்டிய நாளில் அதற்குரிய முழு மகிழ்வோடு இருந்தது இரவாதனின் முகம். தான் வந்துள்ளதன் காரணத்தை அவன் சொன்னான், ``நான் இன்று மூஞ்சலை முழுமையாகப் பார்த்தேன்.”
 
முடியனும் தேக்கனும் இரவாதனைக் கூர்ந்து பார்க்கத் தொடங்கினர். நேற்றைய போரில் முடியனும் இரவாதனும் மூஞ்சலை நெருங்கினர். அப்போதுதான் முரசின் ஓசை கேட்டு, போர் முடிவுற்றது. ஆனால், இன்றைக்கு வேந்தர்களின் படை மொத்தமும் கீழிறங்கி பறம்புப்படையைச் சூழ்ந்து முற்றுகைத் தாக்குதலை நடத்தியது. மிகச்சிறிய படைதான் மூஞ்சலைக் காத்து நின்றது. தேக்கனின் திட்டப்படி இரவாதனின் குதிரைப்படை,  முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியேறி மூஞ்சலை அடைந்தது. அங்கு எண்ணிக்கையில் குறைந்த கவசவீரர்களும் அகப்படை வீரர்களும் காத்து நின்றனர். சின்னஞ்சிறுபடை காத்து நின்றதால் மூஞ்சலை முழு வட்டமடித்துத் தாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டான். ஆனால், இரவாதனின் குதிரைப் படையும் சிறியதாக இருந்ததால் அவனால் உள்நுழைய முடியவில்லை. ஆனால், மூஞ்சலின் தன்மை முழுமையும் அவனால் கவனித்தறிய முடிந்தது.
முடியனிடமும் தேக்கனிடமும் விளக்கினான், ``நேற்று மூஞ்சலைச் சுற்றிப் பல்லாயிரம் வீரர்களைக்கொண்ட பெரும்படை இருந்தது. நாம் அதன் அருகில் சென்றாலும் அதன் தன்மையை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. ஆனால், இன்று அப்படியல்ல; மிகக் குறைந்த வீரர்களே இருந்தனர். அவர்கள் மூஞ்சலை அமைத்துள்ள விதத்தையும் அதைப் பாதுகாக்கச் செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டையும் முழுமையாக என்னால் பார்க்க முடிந்தது” என்றான்.
 
மருந்து தேய்க்கப்பட்டு, காய்ந்த வாழைமட்டை ஒன்றை அருகில் இருந்த விளக்கின் சுடரில் தேக்கன் வைத்தான். நெருப்பு சட்டெனப் பற்றியது. போதுமான அளவுக்கு அதை எரியவிட்டு விலா எலும்போடு எரிமட்டையை அமுக்கித் தேய்த்தார். கணநேரத்தில் கருகித் திரிந்தது. தேய்த்த விரல்களின் வழியே புகை வெளியேறிய படியே இருக்க, சதையின் மேல் போதுமான சூட்டோடு மருந்து அப்பி உள்ளிறங்கியது. தேக்கனின் இந்தச் செயலைப் பார்த்தபடியே இரவாதன் தொடர்ந்தான். ``மூஞ்சலை உடைக்க நமக்குப் புதிய திட்டம் வேண்டும்.”
 
``என்ன செய்யலாம்?”
 
சிறிதும் இடைவெளியின்றி இரவாதன் சொன்னான், ``அரிமான்களை உள்ளிறக்க வேண்டும்.”
 
அதிர்ந்தான் முடியன்.
 
சற்றே சிரித்தான் தேக்கன். ``இளவயது என்பதால், சட்டெனக் கேட்டுவிட்டாய். ஆனால், அதற்கு வாய்ப்பேதும் இல்லை. வேறு என்ன செய்யலாம் என்று சொல்.”
 
``இடர்மிகுந்த நேரத்தில்தானே அவர்களைக் களம் இறக்கலாம் என்று சொல்கிறேன்” என்று இரவாதன் தொடர்ந்தபோது முடியன் சொன்னான், ``தேக்கனின் சொல்லைப் பணிந்து கேள்.”
 
இப்போது தேக்கன், முடியனைப் பார்த்தான். தேக்கன் பயன்படுத்திய ஈட்டி, ஓரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. கண்களை விலக்கித் தாழ்த்திக்கொள்வதன் மூலம் எவ்வளவு உணர்வுகளைக் கடத்திவிட முடிகிறது?
 
முடியனின் சொல்லை ஏற்றுக்கொண்ட இரவாதன் அடுத்து கேட்டான், ``சரி, திரையர்களையாவது உள்ளிறக்கலாமா?”
 
``ஏன்... நம்மால் முடியாது என்ற முடிவுக்கே வந்துவிட்டாயா?” எனக் கேட்டான் முடியன்.
 
``மூஞ்சலைத் தகர்த்தெறியவும் அழித் தொழிக்கவும் நம்மால் முடியும். ஆனால், உள்ளே நுழைந்து நீலனை மீட்டு வெளிவருவதற்கு, கூடுதல் ஆற்றலும் தெளிவான திட்டங்களும் பலவிதமான தாக்குதல் முறைகளை ஒருங்கிணைத்தலும் வேண்டும்.”
 
``ஏன்?”
 
``ஏனென்றால், மூஞ்சல் அமைக்கப்பட்டுள்ள விதம் அப்படி. மணற்பரப்பில் பள்ளம் பறித்தால் மறுகணமே சுற்றியுள்ள மணலெல்லாம் சரிந்து மூடிக்கொள்வதைப்போல் அதை வடிவமைத் துள்ளனர். ஆயுதங்கள் ஒன்றோடு ஒன்று செருகப் பட்டு வெளிப்புறச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்பகுதியில் கவசவீரர்களின் அணிவகுப்பு நிற்கிறது. அவர்களுக்குப் பின் மீண்டும் ஆயுதங்களின் சுவர், பிறகு வீரர்கள் என்று மூன்று அடுக்கு இருக்கின்றன. இந்தச் சுவரை எந்த இடத்தில் தகர்த்தாலும் மறுகணமே அருகில் பின்னப்பட்டு இறுகியிருக்கும் ஆயுதச்சுவர் விரிந்துகொடுத்து, தகர்க்கப்பட்ட இடத்தை மறைத்து நிரப்பிவிடும். அதேபோல வீரர்களை வீழ்த்தினாலும் அருகில் கோத்து நிற்கும் வீரர்கள் அந்த இடைவெளியை உடனே நிரப்புவர்” என்று சொன்னவன் முடியனைப் பார்த்துக் கேட்டான், ``நேற்றைய போர் நாம் மூஞ்சலை நெருங்கியவுடன் முடிவுற்றது. நான் அந்த இடம் நீண்டநேரம் நின்றேனே கவனித்தீர்களா?”
 
``ஆமாம். இவ்வளவு அருகில் வந்தும் பயனில்லாமற்போய்விட்டதே என்ற தவிப்பில் நின்றிருந்தாய்.”
 
``ஆமாம். எல்லோரும் அப்படி நினைக்க வேண்டும் என்பதால்தான் நீண்ட நேரம் நின்றிருந்தேன். ஆனால், எனது நோக்கம் வேறொன்றாக இருந்தது. போரிட்டுக் கொண்டிருந்தபோது மூஞ்சலைச் சுற்றிப் பெரும் எண்ணிக்கையில் வீரர்கள் இருந்தனர். தேர்களும் குதிரைகளும் இங்கும் அங்குமாக நின்றிருந்தன. ஆனால், போர் முடிவுற்ற முரசின் ஓசை கேட்டதும் வீரர்கள் தங்களின் பாசறைக்குத் திரும்பத் தொடங்கினர். அப்போது செய்வதறியாத தன்மையில் சற்றுக் கூடுதல் நேரம் அங்கு நின்றேன். காரணம், மூஞ்சலுக்குள் எத்தனை கூடாரங்கள், எந்தத் தன்மையில் அமைக்கப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாகப் பார்க்க வேண்டும் என்பதால்தான் அப்படிச் செய்தேன். மூஞ்சலைத் தெளிவாகவும் பார்த்தேன். பன்னிரண்டு கூடாரங்கள் இருந்தன” என்றான்.
 
தெரிந்த எண்ணிக்கையைத்தான் அவன் சொல்கிறான் என்பதால், முடியனின் பார்வையில் வியப்பேதுமில்லை. தேக்கனோ மருந்து தேய்க்கப்பட்ட அடுத்த வாழைமட்டையை எடுத்து, சுடரில் காட்டிப் பற்றவைத்தான். அப்போது இரவாதன் சொன்னான், ``இன்றைக்குப் பார்த்தபோது பதினைந்து கூடாரங்கள் இருந்தன.”
 
சுடரை நோக்கியிருந்த தேக்கனின் பார்வை, இரவாதனை நோக்கித் திரும்பியது. அவனது கண்ணுள் சுடரின் முனை சுழன்று கொண்டிருந்தது. முடியனோ சற்றே வியப்போடு அவன் சொல்லவருவதைக் கவனித்தான்.
 
இரவாதன் சொன்னான், ``அவை உண்மையான கூடாரங்கள் அல்ல. நூற்றுக்கணக்கான படை வீரர்கள் உள்மறைந்திருக்கும் பொய்க்கூடாரங்கள். அந்த வகைக் கூடாரங்கள் சிறியதும் பெரியதுமாக நிறைய இருக்கின்றன.”
பாதி எரிந்த மட்டையை விலாவெலும்பில் தேய்த்தபடி தேக்கன் கேட்டான், ``அரிமான்களும் திரையர்களும் இல்லாமல் மூஞ்சலை உடைத்து நீலனை வெளிக்கொண்டுவர, நீ சொல்லும் உத்தி என்ன?”
 
இரவாதனின் கண்கள் அகல விரிந்தன. பறம்பு ஆசான், இந்தப் போரின் இலக்கை அடைவதற்கான உத்தியைப் பற்றி தன்னிடம் ஆலோசனை கேட்கிறார் என்றதும் உடலெங்கும் உற்சாகம் பீறிட்டது. நீண்ட தன் இரு கைகளையும் விரித்தபடி சொல்லத் தொடங்கினான். ``மூஞ்சலை ஒரு குழு ஓர் இடத்தில் உடைத்து முன்னேற முடியாது. ஒரே நேரத்தில் மூன்று திசைகளிலும் உடைத்து உள்நுழைய வேண்டும். அப்போதுதான் அவர்களின் சங்கிலித்தொடர் காப்புமுறையைச் செயலிழக்கச் செய்ய முடியும். அதே நேரத்தில் பொய்க்கூடாரங்களை நோக்கிக் குறிவைத்துத் தாக்க வேண்டும்” என்று சொன்னவன் அம்பு ஒன்றை எடுத்துத் தரையில் கீறி, மூஞ்சலின் வரைபடத்தை உருவாக்கினான்.
 
``மூன்று திசைகளிலிருந்தும் மூஞ்சலை ஒரே நேரத்தில் தாக்கி முன்னேறுவோம். முடியன் இடதுபுறமும் உதிரன் வலதுபுறமும் மூஞ்சலின் தடுப்பரணை உடைக்கட்டும். நான் நேர்கொண்டு தாக்கி உள்நுழைகிறேன். மற்ற இருவரும் மூஞ்சலை உடைத்த இடத்திலிருந்து உள்நுழையாமல் ஆயுதங்களாலும் வீரர்களாலும் காக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வட்டவடிவ வெளிப்புறச் சுவரை முற்றிலும் அழிக்கும் வேலையைச் செய்யவேண்டும். நான் எனது குதிரைப்படையோடு உள்நுழைகிறேன். உள்ளே நுழைந்ததும் எனது படை மூன்றாகப் பிரியும். பிடறிமான் தலைமையிலான பிரிவு, பொய்க்கூடாரங்களில் உள்ளவர்களை மட்டும் தாக்கும். கரிணி தலைமையிலான பிரிவு, உள்ளுக்குள் காத்து நிற்கும் அகப்படை வீரர்களை மட்டும் தாக்கும். எனது தலைமையிலான பிரிவு, நீலனின் கூடாரத்தை நோக்கி முன்னேறி அவனை மீட்கும். இந்தத் தாக்குதலின்போது எதிரிகளின் முழுக் கவனமும் மூஞ்சலை நோக்கிக் குவியாமலிருக்க மூஞ்சலை விட்டு மிகத்தள்ளி, களத்தின் மையப்பகுதியில் வலிமைமிகுந்த தாக்குதலைத் தேக்கனும் ஈங்கையனும் நடத்தவேண்டும்” என்றான். 
  
``ஓரளவுக்கு சரியான திட்டம்தான். இதில் இருக்கும் பிழை என்ன? இதை நடைமுறைப் படுத்துவதில் உள்ள  சிக்கல் என்ன?” என்று கேட்டான் தேக்கன்.
 
``பிழை ஏதும் இருப்பதாக நினைக்கவில்லை. சிக்கல் என்பது பிடறிமானும் கரிணியும் இந்தத் திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். கூடாரத்தைச் சுற்றிக் காத்து நிற்கும் கவசவீரர்களைத் தாக்கவும் பொய்க்கூடாரங்களில் குவிந்திருக்கும் வீரர்களைத் தாக்கவும் இரு வேறு தாக்குதல் உத்திகளைப் பின்பற்ற வேண்டும். அதற்கான தெளிவான பயிற்சி வேண்டும்” என்றான் இரவாதன்.
 
முடியன் சொன்னான், ``உதிரன் விற்படை மூஞ்சலை விட்டு மிகத்தள்ளி நின்றால்தான் எதிரிகளின் பெரும்படை மூஞ்சலை விட்டு விலகி நிற்கும். அவர்களின் கவனமும் இருகூறாகப் பிரிந்திருக்கும். எனவே, உதிரனை வெளியில்தான் வைத்திருக்க வேண்டும்” என்றான்.
 
``சரி. அப்படியென்றால் ஈங்கையனின் தலைமையிலான படையை மூஞ்சலில் வலதுபுறத் தாக்குதலுக்குப் பயன்படுத்தலாமா?” எனக் கேட்டான் இரவாதன்.
 
``போரில் யாரை, எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதுதான் மிக முக்கியம்” என்று சொல்லியபடி அடுத்த வாழைமட்டையை எடுத்தான் தேக்கன்.
 
முடியனோ தேக்கன் சொல்லப்போவதைக் கேட்காமல் தரையில் வரையப்பட்ட வரைபடத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். இரவாதனோ தேக்கன் ஏன் இப்படிச் சொல்கிறான் என்ற வியப்போடு அவனைப் பார்த்தான். தேக்கன் சொன்னான், ``இத்தனை நாள் போரிலும் ஈங்கையன் சொல்லிக்கொள்ளும்படியான எந்தத் தாக்குதலையும் நடத்தி முன்னேறவில்லை. படைக்குத் தலைமையேற்று முன்னேறுவதற்குரிய பயிற்சியும் ஆற்றலும் அவனுக்கு இல்லை என நினைக்கிறேன்.”
 
சற்றே வியப்போடு இரவாதன் கேட்டான், ``சோழப்படையை வீறுகொண்டு தாக்கி அழித்தவன் என்று அவனையும் அவனுடன் உள்ள வீரர்களையும் பற்றி நீலனும் உதிரனும் சொன்னார்களே!”
 
``இருக்கலாம். அது தாக்குதல் போர் என்பதால், அவர்கள் பெரும்வீரத்தை வெளிப்படுத்தி எதிரியை ஓடச்செய்திருக்கலாம். ஆனால், படைப்பிரிவினூடாக முன்னேறும் போர் என்பது அவர்களுக்கு வசப்படவில்லை என நினைக்கிறேன்” என்றான் தேக்கன்.
வரைபடத்திலிருந்து கண்களை அகற்றாமலேயே முடியன் சொன்னான், ``தேக்கனும் ஈங்கையனும் பின்களத்தில் நிற்கட்டும். உதிரன் தட்டியங்காட்டின் இடதுபுறமிருந்து எதிரியை நோக்கி முன்னேறட்டும். நாளைய போரில் தேர்ப்படைத் தளபதி கூழையனுக்குப் பதில் விண்டன் களமிறங்க இருக்கிறான். நீ சொன்ன திட்டப்படியே அவனும் நானும் நீயும் மூஞ்சலுக்குள் நுழைவோம்” என்றான்.
 
இரவாதனின் முகத்தில் சுடரின் ஒளி பரவி நின்றது. விண்டன், அவனது வயதொத்த இளம்வீரன். பாரி தனிப் பயணம் மேற்கொள்ளும் போது தேக்கனால் மறை பாதுகாப்புக்காக அனுப்பப்படுபவர்களில் ஒருவன். அவனும் நானும் தந்தையோடு இணைந்து போரிட்டால் மூஞ்சலை உடைத்து நீலனை மீட்கலாம்.
 
இந்தமுறை எடுத்த வாழைமட்டையைச் சுடரில் பற்றவைக்கவில்லை; கலயத்தில் இருந்த மூலிகைச்சாற்றில் நனைத்து இதுவரை சுட்டுத்தீய்த்த பகுதியின் மீது ஒட்டவைத்தான். ``நாளை நாம் தாக்குதல் போரை நடத்த வேண்டாம். உதிரனின் விற்படையும் குதிரைப்படையும் இன்றைய போரில் பேராற்றலை வெளிப்படுத்தி யிருக்கின்றன. அவர்களுக்கு சற்று இளைப்பாறுதல் தேவை. அப்போதுதான் நாளை மறுநாள் மூஞ்சலின் மீதான தாக்குதலை முழு வலிமையோடு நடத்த முடியும்” என்றான்.
 
சரியென ஏற்றுக்கொண்ட இரவாதன், ``ஆமாம். பிடறிமான், கரிணி ஆகிய இருவர் தலைமையிலான படைக்கும் தனித்த பயிற்சிகள் தேவை. இன்று மிகவும் களைத்துப்போய் இருப்பார்கள். நாளை இரவு அந்தப் பயிற்சியை முழுமையாக எடுத்துக்கொண்டு நாளை மறுநாள் தாக்குதலைத் தொடுக்கலாம்” என்றான் இரவாதன்.
 
ஈரமட்டையை விலாவெலும்பின் மேல் போர்த்தியபடி மீண்டும் கட்டிலில் சாய்ந்தான் தேக்கன். இரவாதன் வெளியேறிய பிறகு முடியனும் தேக்கனும் பேசிக்கொள்ளத் தேவையேதுமில்லை. இரவாதனின் பேச்சினூடே பேசவேண்டிய எல்லாம் பேசப்பட்டுவிட்டன.
 
பொழுது விடிந்தது. தட்டியங்காடெங்கும் சிதறிக்கிடக்கும் பிணங்களின் மீது கதிரவனின் ஒளி படர்ந்தது. இரவெல்லாம் முயன்றும் கொல்லப்பட்டுக் கிடக்கும் தன் வீரர்களின் உடல்களை வேந்தர்படையால் முழுமையாக அகற்ற முடியவில்லை. நேற்று மாலையிலிருந்து குதிரைகளும் மாடுகள் பூட்டிய வண்டிகளும் பிணங்களை எடுத்துச் சென்றபடியே இருந்தன. ஆனாலும் முடிந்தபாடில்லை. முற்றுகைப்போர் என்பதால், பறம்புப்படையினர் அணிவகுக்கும் பகுதிக்குப் பின்புறமும் எண்ணற்ற வேந்தர் படைவீரர்கள் நின்று போரிட்டனர். ஏறக்குறைய அந்தப் படைப்பிரிவினர் முழுக்க அழிக்கப் பட்டனர். எனவே, பறம்புப்பக்கம் எண்ணி லடங்காத வேந்தர்படை வீரர்களின் உடல்கள் கிடந்தன.
போர்க்களப் பணியாளர்கள், இரவெல்லாம் பந்தங்களின் வெளிச்சத்தில் எண்ணிலடங்கா உடல்களை அப்புறப்படுத்தினர். ஆனால், பொழுது விடிந்த பிறகுதான் தெரிந்தது இன்னும் நெடுந்தொலைவுக்கு வீரர்களின் உடல்கள் கிடக்கின்றன என்பது. அதுவும் எதிரிப்படையினர் நிற்கும் பகுதியில் தன் வீரர்களின் உடல்கள் கிடப்பது அவமானமாகக் கருதப்படும். போர் தொடங்கிவிட்டால் அந்த உடல்கள் எதிரிகளின் கால்களிலோ, அவர்களுடைய குதிரைகளின் கால்களிலோ, தேர்ச்சக்கரங்களிலோ நசுங்கிச் சிதைவது கொடிதிலும் கொடிது. எனவே,  அவற்றை அப்புறப்படுத்த, பணியாளர்கள் விரைந்து செயல்பட்டனர்.
 
மாடுகள் பூட்டிய வண்டி களிலும் குதிரை பூட்டிய வண்டிகளிலும் அப்புறப் படுத்தியவர்கள், இனி அவ்வாறு செய்து முடிக்க பொழுதில்லை என அறிந்துகொண்டனர். மாளிகையின் தரையில் இருக்கும் பெருவிரிப்புப்போல மரப் பலகைகளைக் கொண்டுவந்து ஒன்றோடொன்று இணைத்துப் பூட்டி பெருஞ்சட்டகத்தை உருவாக்கினர். இறந்துகிடக்கும் வீரர்களின் உடல்களை இழுத்துவந்து சட்டகத்தின் மீது போட்டனர். ஐந்து வண்டிகளில் கொண்டுசெல்லும் பிணங்களை ஒரு சட்டகத்தின் மேலே கிடத்தி இழுத்துச்செல்லலாம்.
 
ஆனாலும் வேலைகளை வேகப்படுத்துவது எளிதன்று. ஈட்டி பாய்ந்து கிடந்த வீரனின் உடலிலிருந்து ஈட்டியைப் பிடிங்கி எறிந்த பிறகே அந்த உடலைத் தூக்கி மரச்சட்டத்தின் மீது போட முடியும். இல்லையெனில், அடுத்த உடலைத் தூக்கிப்போட அது தடையாக இருக்கும். ஒவ்வோர் உடலில் இருந்தும் ஈட்டியை இழுத்துப் பிடுங்கவேண்டியிருந்தது. எல்லா உடல்களிலும் எண்ணற்ற அம்புகள் தைத்துக்கிடந்ததால் அவற்றை அப்புறப்படுத்துவது எளிய செயலாக இல்லை. அம்பு முனையின் இரு காதுப் பகுதிகளும் மிகக்கூர்மையானவை. தசைகளையும் நரம்புகளையும் இழுத்துக்கொண்டுதான் வெளியில் வரும். மருத்துவனால்கூட அதை எளிதில் வெளியே எடுக்க முடியாது. ஆனால், போர்ப் பணியாளர்களோ கைகளுக்குச் சிக்கியவற்றையெல்லாம் பிடுங்கி எறிந்து உடல்களைத் தூக்கி மரச்சட்டகங்களில் போட்டனர். வேலை வேகவேகமாக நடந்தது. இரண்டு ஆள் உயரத்துக்கு உடல்களைக் குவித்தனர். மரச்சட்டகங்களை இழுத்துச் செல்ல யானைகள் வந்தன.
 
உடலின் இரு பக்கங்களிலும் கட்டப்பட்ட பெருவடங்களால் மரச்சட்டங்களை யானைகள் இழுக்கத் தொடங்கின. குன்றெனக் குவிக்கப்பட்ட பிணக்குவியல்கள் தட்டியங்காட்டை விட்டு மெள்ள நகர்ந்தன. தனது முதுகுப் பகுதியில் எண்ணிலடங்காத மனித உடல்களைச் சுமந்தபடி நத்தைபோல ஊர்ந்தது மரச்சட்டகம். இழுபடும் மரச்சட்டகங்களிலிருந்து வழுவிய பிணங்களை மீண்டும் இழுத்துப்போட்டு நகர்ந்தனர்.
 
போர்ப்பணியாளர்கள்தாம், தாக்குதலின் தன்மையைக் கணிப்பவர்கள்; ஒவ்வொரு நாளும் தாக்குண்டு கிடக்கும் ஒவ்வொரு வீரனையும் வைத்து தாக்குவோரின் திறனை மதிப்பிடுபவர்கள். இன்றைய நாளில் வேந்தர்படையின் எண்ணிலடங்காத கவச அணிவீரர்களின் கழுத்துப் பகுதியில் அம்பு பாய்ந்து இறந்துகிடந்தனர். கவச அணிவீரர்கள் ஓரிருவர் கழுத்துப் பகுதியில் அம்பு பாய்ந்து இறக்கலாம். ஆனால், இத்தனை பேர் எப்படி குறிபார்த்து வீழ்த்தப்பட்டார்கள்? நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. அதுவும் கவச அணிவீரர்களின் உடல்களைத் தூக்கி மரச்சட்டகத்தில் போடுவது மிகக்கடினமான ஒன்று. சிலநேரத்தில் மூன்று பேர் சேர்ந்துகூட ஒருவரைத் தூக்கிப்போட முடியாது. ஆனாலும் அந்தப் பணியை வேகமாகச் செய்ய முயன்றனர்.
 
பிணங்களை இழுக்கும் யானையும் அதன் பாகனும் யட்சினியின் வடிவாகவே பார்க்கப்படுவர். போர் தொடங்கும்போது அழிவின் தேவதை யட்சினிக்காக பவளவந்திகையைப் பலியிட்டனர். அதேபோல போர் வெற்றியுடன் முடிந்தால் போர்க்களத்தில் பிணங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட யானைகளையும் அவற்றின் பாகன்களையும் யட்சினிக்குப் பலியிட்டுக் குளிரூட்டுவர்.
 
வழக்கம்போல் நாழிகை பரண் நோக்கித் தேரிலே வந்தார் திசைவேழர். ஆனால், தேரை ஓட்டும் வளவனால் குறிப்பிட்ட தொலைவைக் கடந்து தட்டியங்காட்டுக்குள் தேரைச் செலுத்த முடியவில்லை. வீரர்களின் உடல்கள் எங்கும் கிடந்தன. உயிர்த்துடிப்பு முடிவுறாமல் தவித்து மேலெழும் குரல் ஆங்காங்கே கேட்டது. உடல்களைத் தேர்ச்சக்கரங்களால் ஏற்றிவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்த வளவனால், ஒருகட்டத்துக்குப் பிறகு தேரைச் செலுத்த முடியவில்லை. கடிவாளத்தை இழுத்துக் குதிரையை நிறுத்தினான்.
 
தேரை விட்டுக் கீழிறங்கினார் திசைவேழர். மரணத்தின் ஆட்சி நடக்கிற நிலத்தை, கண்கொண்டு பார்க்கவும் கால்கொண்டு கடக்கவும் முடியாமல் அப்படியே நின்றார். என்ன செய்வதென்று தெரியவில்லை. நீண்டுவிழுந்த அவரது நிழல், பொழுதாவதை உணர்த்தியது. வேறு வழியேயின்றி பரண் நோக்கி நடக்கத் தொடங்கினார்.
 
மூஞ்சல் எங்கும் போர் தொடங்கப்போகும் நேரத்துக்குரிய பரபரப்புடன் இருந்தது. உதியஞ்சேரல் மட்டும் போருக்கான கவச உடை அணிந்து தனது கூடாரத்தை விட்டு வெளியேறினான். மற்ற இரு பேரரசர்களும் இன்னும் கூடாரம் விட்டு வெளிவரவில்லை. மெய்க்காப்பாளர்களும் அகப் படையினரும் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.
 
குலசேகரபாண்டியன் கூடாரத்தை விட்டு வெளியேறும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போது பொதியவெற்பன் அவரைக் காண வந்தான். நேற்று இரவு நடந்த உரையாடல், அவனுக்குப் பெருங்குழப்பத்தையும் கோபத்தையும் உருவாக்கியிருந்தது. ``மையூர்கிழாருக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு துணிச்சல்? மூவேந்தர்களின் தலைமைத் தளபதியை பாண்டியப் பேரரசர் இருக்கும் அவையில் அவரின் முன் தாக்குதலுக்குத் தகுதியற்ற தளபதி என்று எப்படி அவனால் சொல்ல முடிந்தது?” கொந்தளிக்கும் கேள்விகளை குலசேகரபாண்டியனிடம் முன்வைத்தான் பொதியவெற்பன்.
 
`இதைக்கூடப் புரிந்துகொள்ள முடியவில்லையா?’ என்றதோர் ஏளனமான பார்வையோடு குலசேகரபாண்டியன் சொன்னான், ``நேற்று நமது படை பேரழிவைக் கண்டது. முற்றுகை தகர்க்கப்பட்டு முற்றுகையிட்டவர்கள் பெருந்தாக்குதலைக் காண்பது போர்க்களத்தில் தோல்விக்கு இணையான ஒன்று. எந்த ஒரு மன்னனும் அதன் பிறகு போரிடும் முடிவைத் தொடர விரும்ப மாட்டான். சேரனுக்கும் சோழனுக்கும் நம்மீதான நம்பிக்கை முற்றிலும் சிதையும்படியான நாள் நேற்று. அந்நிலையில் வழக்கம்போல் இரவில் மூவரின் சந்திப்பு அமைந்தால் பேச்சும் முடிவும் நமக்கு எதிரானதாகத் தான் இருக்கும். அதை மாற்ற வேண்டும் எனச் சிந்தித்தேன். மையூர்கிழாரை அழைத்து, `அவையில் மூவேந்தர்களின் அனைத்து தளபதிகளின் மீதும் கடுங்குற்றச்சாட்டை முன்வைத்துப் பேசு’ என்றேன்.”
 
பொதியவெற்பன் வழக்கம்போல் திகைப்புற்றான். குலசேகரபாண்டியன் தொடர்ந்தார், ``ஆனால், மையூர்கிழார் இந்த வாய்ப்பைத் தனக்கானதாக முழுமையாக மாற்றிக் கொண்டான். நானே எதிர்பார்க்காத அளவு இருந்தது அவனது சீற்றம்.”
 
பொதியவெற்பனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ``ஆனாலும் தலைமைத் தளபதியை அவன் அவ்வாறு சொல்லியிருக்கக் கூடாது” என்று பேச்சைத் தொடர்ந்தபோது குலசேகர பாண்டியன் குறுக்கிட்டுச் சொன்னார், ``அதுவல்ல இப்போது முக்கியம். மகிழ்வூட்டும் செய்தி ஒன்று அதிகாலை என்னை வந்தடைந்தது” என்றார்.
 
பொதியவெற்பன், வேந்தரின் முகத்தை உற்றுப்பார்த்தபடி அவர் அடுத்து உதிர்க்கப்போகும் சொல்லுக்காகக் காத்திருந்தான். குலசேகர பாண்டியன் சொன்னான், ``இன்று மாலை பொற்சுவை, பாரியைக் காண இரலிமேட்டுக்குச் செல்கிறாள். நம் வீரர்கள் அவள் அறியாதபடி உடன் செல்லவுள்ளனர். நாம் எதிர்பார்த்த நாள் இது.”
 
திசைவேழரின் கை உயர்ந்ததும் தட்டியங் காட்டின் ஐந்தாம் நாள் போருக்கான முரசின் ஓசை ஒலிக்கத் தொடங்கியது. ஆனால், தட்டியங்காடெங்கும் பிணங்களை அகற்றும் பணி முழுமையாக முடியவில்லை. பெருமரச் சட்டங்களை யானைகள் இழுத்தபடியே இருந்தன. பறம்புவீரர்கள் அணிவகுத்து நிற்பதற்கு முன்பும் பின்பும் இன்னும் உடல்கள் கிடந்தன. ``உடல்களை முழுமையாக அகற்றாமல் நாம் முன்னேறிச் செல்ல வேண்டாம்” என்று கூறினான் முடியன்.
 
வேந்தர்களின் படையோ வெகுதொலைவில் அணிவகுத்தபடி அப்படியே இருந்தது. பறம்புப்படை முன் நகராததால் அவர்களும் முன் நகரவில்லை. யட்சினி யானைகள், பிளிறலுடன் மரச்சட்டங்களை இழுத்துக்கொண்டிருந்தன.
 
கருங்கைவாணன் எந்த முடிவையும் எடுக்கவில்லை. பேரரசரின் உத்தரவுக்கேற்பச் செயல்படுவோம் எனக் காத்திருந்தான். பேரரசரோ கூடாரம் விட்டு காலம் தாழ்த்தித்தான் வெளியேறி வந்தார். கருங்கைவாணன், அவரின் பார்வையில் நின்றிருந்தான். அவனது முகம் இருண்டிருந்தது. அதைப் பார்த்தபடி தனது இறுக்கத்தைத் தளர்த்தாமலே பேரரசர் சொன்னார். ``தற்காத்து நில். எதிரிகள் முன்னேறிவந்தால் மட்டும் தாக்கு.”
முடியனும் அதே முடிவில்தான் இருந்தான். விற்படை வீரர்களுக்கு இன்று அதிக வேலை கொடுக்கக் கூடாது. அதேபோல குதிரைப் படையையும் இன்று கடினமான தாக்குதலுக்கு உட்படுத்தக் கூடாது. எனவே, காலாட்படை வீரர் களையும் தேர்ப்படை வீரர்களையும் முன்புறமாக அணிவகுக்கச் செய்தான். தேர்ப்படைத் தளபதியாக விண்டனுக்கு இன்றுதான் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவன் ஏறிச்சென்று தாக்கும் துடிப்போடு இருப்பான். எனவே, அவனிடம் தெளிவான கட்டளைகளைப் பிறப்பித்தான் முடியன்.
 
தட்டியங்காடெங்கும் பேரமைதி நிலவியது. `மரணத்தின் ஆட்சி கண்டு மனிதன் நிலைகுலைந்து நிற்கிறான்’ என்று திசைவேழருக்குத் தோன்றியது. போர் தொடங்குவதற்கான முரசின் ஓசையைக் கேட்ட பிறகும் இருபக்கப் படைகளும் பாய்ந்து முன் நகரவில்லை. மரணத்தின் பேயுருவுக்கு முன்பு அசைவற்று நிற்கும் காட்சி தெளிவாகத் தெரிந்தது. யட்சினி யானைகள் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பெரும்சட்டகங்களை இழுத்துக்கொண்டிருந்தன. பொழுதாகிக் கொண்டிருந்தது. போர்க்களத்தின் ஓர் எல்லையிலிருந்து மறு எல்லை வரை கண்களை ஓடவிட்டுத் துல்லியமாகப் பார்த்தார் திசைவேழர். வேறு எங்கிருந்தாவது தாக்கி முன்வருவதற்கான திட்டம் ஏதும் இருக்கிறதா எனக் கவனித்தார். அதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.
 
காலாட்படையின் சில அணிகள் முன் நகரத் தொடங்கின. பிற்பகலுக்குப் பிறகு அங்குமிங்குமாக சிறுசிறு மோதல்களைத் தேர்படையினர் நடத்தினர். ஆனாலும் இரு தரப்பும் மொத்தப் படையை முன் நகர்த்தவில்லை. இருபடை தலைமைத் தளபதிகளும் தெரிந்தே ஒரு விளையாட்டை விளையாடுகின்றனர். ஆனால், இறுதி நாழிகையில் பெருந்தாக்குதல் ஒன்று நடக்கும் எனக் கணித்தார் திசைவேழர்.
 
அந்தத் தாக்குதலின்போது நாம் கவனமாகப் பார்த்தறியவேண்டும். கடைசி நாழிகையைப் பயன்படுத்தி சதியை நிகழ்த்தலாம் என எண்ணினார். எந்தச் சூழலிலும் களத்தின் நடுவில் இருக்கும் இந்தப் பரணில் நிற்கக் கூடாது. படைகளின் போக்கிற்கேற்ப வேந்தர் தரப்பில் இருக்கும் பரண்களின் மீதோ அல்லது பறம்பின் தரப்பில் இருக்கும் பரண்களின் மீதோ ஏறி நின்று உற்றுக்கவனிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால், பிற்பகலிலும் போக்குக்காட்டும் போரைத் தான் இருதரப்பும் நடத்தின. அங்குகொன்றும் இங்கொன்றுமாக ஈட்டிகள் குறுக்கிட்டுப் பாய்ந்தன. அம்புகள் விடுக்கும் ஓசை மிக மெல்லியதாகக் காற்றில் ஏறிவந்தது. இரண்டொரு தேர்கள் அவ்வப்போது விரைந்து கடந்தன. சட்டென நினைவுவந்தவராக திசைவேழர் நாழிகைவட்டிலைக் குனிந்து பார்த்தார். அவரால் நம்பவே முடியாத ஒரு நாளாக இன்றைய நாள் முடிய இருந்தது. நீண்ட நிழல் மூன்றாம் கோட்டைத் தொட்டது. அவர் கைகளை உயர்த்தினார். முரசின் ஓசை எங்கும் மேலெழுந்தது. ஐந்தாம் நாள் போர் முடிவுற்றது.
 
இருதரப்புப் படைகளும் தங்களின் பாசறைக்குத் திரும்பின. கதிரவன், காரமலையின் பின்புறம் இறங்கத் தொடங்கினான். ஒளியின் கைகள் மறையத் தொடங்கின. சேரன், செங்கனச்சோழனின் கூடாரத்துக்குள் வந்தான். குலசேகரபாண்டியனின் கூடாரம் நோக்கி பொதியவெற்பன் விரைந்தான். அனைவரும் எதிர்பார்த்திருந்த இரவு வரத் தொடங்கியது.
 
- பறம்பின் குரல் ஒலிக்கும்...

பிரபாகரன் ஒற்றன்
பிரபாகரன் ஒற்றன்
பண்பாளர்

பதிவுகள் : 52
இணைந்தது : 31/08/2018

Postபிரபாகரன் ஒற்றன் Thu Sep 27, 2018 8:32 am

வீரயுக நாயகன் வேள்பாரி - 102

பொழுது இருளத் தொடங்கியது. மேட்டுக்கரை யிலிருந்து ஒரு பல்லக்கு புறப்பட்டது. வழிகாட்டியாக முன்னே சென்றான் காராளி. அவன் மனம் அளவுகடந்த பதற்றத்தில் இருந்தது. இன்றோ, நாளையோ பொற்சுவையை அழைத்துக்கொண்டு வருவதாகக் கபிலரிடம் சொல்லிவந்தான். வேந்தர்களின் யானைப்படை வீரர்கள், காடுகளுக்குள்ளிருந்து முற்றிலும் அகன்று விடவில்லை. அங்கொருவர் இங்கொரு வராகத் தட்டுப்படுகின்றனர். பறம்புப்படையினர் கண்ணில்பட்டால் கொன்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில் பதுங்கித் திரிகிறார்கள். இன்று ஒரு பொழுது கடந்துவிட்டால் பதுங்கி இருக்கும் ஒருசிலரும் வெளியேறிவிடுவார்கள். எனவே, நாளை இரவு இரலிமேட்டுக்குப் போகலாம் என்று எவ்வளவோ சொல்லியும் பொற்சுவை கேட்கவில்லை. ``இன்றே போக வேண்டும்’’ என்று சொல்லிவிட்டார். எனவே, மிகுந்த பதற்றத்தோடு முன்னே சென்று கொண்டிருந்தான் காராளி.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 K5pEFCRKSN2gfotzSjSi+1
அவன் இருக்கும் இடத்திலிருந்து இரலிமேட்டுக்குச் செல்ல, குறுக்காக நடந்தால் இரு பொழுதுகளில் போய்விடலாம். ஆனால், புதர்கள் நிறைந்த அந்தப் பாதையில் பல்லக்கைத் தூக்கிச்செல்வது கடினம். எனவே, சுற்றிச்செல்லும் ஒற்றையடிப்பாதை ஒன்றின் வழியே அழைத்துச் சென்றான். இரவு வேளை என்பதால் அவனது பதற்றம் அதிகமாக இருந்தது. அவன் இந்த மலைப்பகுதியை நன்கு அறிந்தவன். விலங்குகளால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், இளவரசி யாரின் பயணத்தை வேந்தர்படையினரோ, வெங்கல்நாட்டினரோ பார்த்துவிடக் கூடாது. அப்படி நேர்ந்தால் அஃது இளவரசியின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். எனவே, மிகுந்த எச்சரிக்கையோடு அழைத்துச்சென்றான்.

பல்லக்குக்குள் பொற்சுவையும் சுகமதியும் எதிரெதிராக உட்கார்ந்திருந்தனர். அது, பெருமெத்தையும் விரிசிறகும்கொண்ட பெரும்பல்லக்கன்று; ஒரு நார்க்கயிறும் இளம்பஞ்சு தூவியும்கொண்ட குறும்பல்லக்கு. ஒருவர் மட்டுமே பயணிப்பதற்கானது. ஆனால், அதில் இருவர் பயணித்தனர். ``நான் இறங்கி நடந்து வருகிறேன்” என்று சுகமதி எவ்வளவோ சொல்லிப்பார்த்தாள். பொற்சுவை கேட்கவில்லை. ``நீ பல்லக்கில்தான் வரவேண்டும்” என்று உள்ளே அமர வைத்துக்கொண்டாள். அண்ணகர்கள், பல்லக்கைத் தூக்கி நடந்தனர்.

``இந்தச் சிறிய இடத்தில் நீங்கள் தனியே அமர்ந்து வருவதுதான் வசதியாக இருக்கும். இப்போது பாருங்கள், கால் நீட்டக்கூட முடியாமல் குறுக்கி உட்கார்ந்திருக்கிறீர்கள். எனது மனதுக்கு வேதனையாக இருக்கிறது. நான் இறங்கி நடந்து வருகிறேன் இளவரசி” என்று சொல்லி, பல்லக்கை விட்டு இறங்க மீண்டும் அனுமதி கேட்டாள்.

``எனது வாழ்வின் மிக முக்கியமான இந்த நேரத்தில், நீ எனக்கு மிக அருகில் இருக்க வேண்டும் சுகமதி.’’

``எல்லா நேரங்களிலும் நான் உங்களுக்கு அருகில்தானே இருக்கிறேன் இளவரசி?”

இளஞ்சிரிப்போடு பொற்சுவை சொன்னாள், ``நீ என்னை விட்டகலாத நிழல். ஒளியின்போது நிழல் வெளியில் இருக்கும். இருளின்போது நிழல் உள்ளுக்குள் வந்து உட்கார்ந்துகொள்ளும். அதனால்தான் இந்த இருளில் என் அருகில் உன்னை உட்காரவைத்துக்கொண்டேன்.”

பொற்சுவையின் சொற்கள் அன்பால் மயக்கின. ஆனால், அன்பைப் பெறத் தகுதியானவர்கள்தாம் அதை உள்வாங்க வேண்டும். சுகமதியோ தனக்கு அந்தத் தகுதி இல்லை என்று எப்போதும் நம்புகிறவள். தான் பொற்சுவையின் பணிப்பெண். `நீரோ, பாலோ, தேனோ தன்மீது எது கொட்டினாலும் உள்ளிறங்க அனுமதிக்காத கல்போலத்தான் பணிப்பெண்ணின் மனம் இருக்க வேண்டும்’ என்று சிறு வயது முதல் சொல்லி வளர்க்கப்பட்டவள். எனவே, சுகமதியை அந்த வார்த்தைகள் ஒன்றும் செய்துவிடவில்லை. ஆனாலும் பொற்சுவையின் வார்த்தைகளை வேறு திசைக்கு மாற்ற விரும்பினாள் சுகமதி.

பல்லக்கில் சிறு கண்ணாடிக்குடுவையில் விளக்கொளி சிந்திக்கொண்டிருந்தது. பொற்சுவையின் முகத்தை உற்றுப்பார்த்தபடியே சொன்னாள், ``நீண்டகாலத்துக்குப் பிறகு உங்களின் முகம் பூத்து மிளிர்கிறது இளவரசி.”

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 4bFtTUYXTD2xZbDvU2k2+2


``அப்படியா..!” என்று மகிழ்வு பொங்கக் கேட்டவள், ``பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆசானையும் பார்த்தறியாத பாரியையும் காணப்போகிறேன் அல்லவா... எனது முகம் மலராமல் என்ன செய்யும்? நான் காற்றில் மிதந்துகொண்டிருக்கிறேன் சுகமதி. எனக்குள் கவிதைகள் ஊற்றெடுக்கின்றன. சக்கரவாகப்பறவை வந்திறங்கும் நாளன்று நாம் எப்படி மகிழ்ந்திருப்போமோ, அதைவிடப் பலமடங்கு மகிழ்வில் மனம் கூத்தாடுகிறது.”

``எனது மனமும் மகிழ்வில்தான் இருக்கிறது இளவரசி. அதேநேரம் உள்ளுக்குள்ளிருக்கும் அச்சம், நேரம் கூடக்கூடப் பெருகுகிறது.”

``ஏன்?”

``இந்தப் பயணத்தின் ரகசியம் வெளியில் தெரிந்துவிட்டால்..?”வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 Q384t4ppTiK5eHK2mFU2+s

``இந்தப் பயணத்தின் நோக்கம் நிறைவேறுகிறதா என்பதுதான் முக்கியம். மற்றதெல்லாம் பொருட்டல்ல.”

``நீங்கள் ஒரு முடிவெடுத்துவிட்டால் அந்த முடிவை மட்டும்தான் பொருட்படுத்துவீர்கள். ஆனால், நீங்கள் எடுக்கும் எந்த முடிவையும்விட நீங்கள்தான் எனக்கு முக்கியம்.”

சிரித்தாள் பொற்சுவை.

போர்க்களம் விட்டு அகன்று நாகக்கரட்டுக்கு வந்த பிறகு கூடாரங்களில் ஆயுதங்களை வைத்துவிட்டு வீரர்கள் உணவருந்தினர். இன்றைய போர், சிறுபாதிப்புகூட யாருக்கும் ஏற்படாத வகையில் முடிவுக்கு வந்தது. உணவருந்தி முடித்தவுடன் இரவாதனின் தலைமையிலான விற்படையின் பெரும்பிரிவு தென்திசை நோக்கிப் புறப்பட்டது.

இருளினூடே புரவிகள் வேகம்கொண்டன. சற்றே நீண்ட பயணம் அது. குளவன்திட்டின் பின்புறத்தை அடைய குதிரைகள் விரைந்தன. வீரர்கள் வருவதற்கு முன்பே அங்கு எண்ணற்ற தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு எல்லாவிதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. நேற்றிரவே இந்தத் திட்டம் பேசப்பட்டுவிட்டதால், அதற்கான ஏற்பாட்டை முன்கூட்டியே தொடங்கி விட்டான் இரவாதன். இந்தப் பணிக்காகப் பகல் முழுவதும் இந்த இடத்தில் பலர் வேலைபார்த்துள்ளனர். வீரர்கள் வந்தடையும்போது அவர்களின் பயிற்சிக்கான ஆயத்தம் முழுமை பெற்றிருந்தது.

இந்தத் தாக்குதலுக்கு, இரவாதனுடன் பிடறிமானும் கரிணியும் தலைமை யேற்கவிருந்தனர். மூஞ்சலுக்குள் மூன்று விதமான தாக்குதலை நடத்த வேண்டி யுள்ளது. கவச உடை பூண்ட அகப்படை வீரர்களைத் தாக்கி அழிப்பது ஒன்று. பொய்க்கூடாரங்களில் குவிந்துள்ள வீரர்கள் சாரிசாரியாக வெளிவந்து தாக்குதலைத் தொடுப்பர்; அவர்களைத் தாக்கி அழிப்பது இரண்டு. நீலன் இருக்கும் கூடாரம் நோக்கி முன்னேறிப் போய் அவனை மீட்பது மூன்று. இந்த மூன்றும் தனித்தனியான தன்மைகளோடு செய்யப்படவேண்டிய தாக்குதல்கள்.

குறிப்பாக, மூஞ்சலுக்குள் நுழைந்த பிறகு வில்லால் தாக்குவதற்குத் தேவையான இடைவெளிகள் போதுமான அளவுக்கு இருக்காது. பெரும்பாலும் வாள்வீச்சுக்கும் ஈட்டி உள்ளிட்ட ஆயுதங்களாலான தாக்குதலுக்கும்தான் அதிக தேவை இருக்கும். பறம்புப்படையின் முதற்பெரும் ஆற்றல், வில்லில்தான் இருக்கிறது. அதை அதிகம் பயன்படுத்த முடியாத நிலையில், மாற்றுத்திட்டத்தையும் அதற்குப் பொருத்தமான ஆயுதங்களையும் முடிவுசெய்யவேண்டியிருந்தது.

மூஞ்சலுக்குள் நுழையவிருக்கும் அனைத்து வீரர்களுக்கும், நடத்தப்போகும் தாக்குதலைப் பற்றிய முழுமையான புரிதல் தேவை. இரவாதன் முன்சொல்லியபடி, மூஞ்சலின் முழு வரைபடம் ஆயத்தநிலையில் இருந்தது. அதை வைத்து, தாக்குதல் திட்டத்தைத் தனது படைக்கு விளக்கத் தொடங்கினான். இரவு முழுமைக்கும் நீளும் பயிற்சி தொடங்கியது.

வெங்கல்நாட்டின் கடைசிக் குன்றைக் கடந்து பல்லக்குப் பயணித்துக்கொண்டி ருந்தது. மலைமீது பல்லக்கைத் தூக்கிச் செல்லும்போது உள்ளுக்குள் அசைவும் சரிவுமாக இருந்தது. சிறுபல்லக்கில் இருவர் எதிரெதிரே உட்கார்ந்திருந்ததால் சரிவில் இறங்கும்போதும் மேட்டில் ஏறும்போதும் பிடித்துக்கொள்ள வசதியாக இருந்தது. தனது கையோ, காலோ பொற்சுவையின் மீது படும்போதெல்லாம் மன்னிப்பு கேட்டபடியே இருந்தாள் சுகமதி.

அண்ணகர்கள், பெருஞ்சரிவு ஒன்றில் பல்லக்கை இறக்கிக்கொண்டிருந்தனர். முன்புறம் கால் மடக்கி உட்கார்ந்திருந்த சுகமதியின் கால்களை இறுகப் பிடித்தபடி சரிந்துவிடாமல் தன்னை நிலை நிறுத்திக்கொண்டாள் பொற்சுவை. சுகமதியோ தனது கால் பகுதியை இளவரசி பிடித்தபோது துடித்துப்போனாள். எவ்வளவு முயன்றும் விலக்க முடியவில்லை. ஆனால், பொற்சுவையோ சரிந்து கொண்டிருப்பதால் மட்டும் பிடிக்கவில்லை; அவளுக்கு அது பிடித்திருந்தது.

`உனது கை, எனது உடலில் பட்டால் அத்தனை முறை மன்னிப்பு கோருகிறாயே, எனது கை உனது காலில் பட்டால் என்ன செய்வாய்?’ என்பதுபோலத்தான் இருந்தது அவளது செய்கை. பல்லக்கு, சரிவு நிலையிலிருந்து சற்றே சமநிலை அடைந்தது. பொற்சுவை, பல்லக்கில் இருந்த சிறுமணியில் ஓசையெழுப்பினாள். அண்ணகர்கள் நடப்பதை நிறுத்தி, தாங்குகோல்களால் பல்லக்குக்கு முட்டுக்கொடுத்தனர். முன்னால் சென்றுகொண்டிருந்த காராளி, வேகவேகமாகப் பல்லக்கின் அருகில் வந்து நின்றான்.

திரையைச் சிறிதே விலக்கி ``வெங்கல்நாட்டின் ஆறு ஊர்களின் எல்லையைக் கடந்துவிட்டோமா?” எனக் கேட்டாள்.

``இன்னும் சிறுபொழுதில் கடந்துவிடுவோம் இளவரசி. பள்ளத்தாக்குக்கு அருகில் வந்துவிட்டோம்” என்றான்.

``விரைவுபடுத்து” என்று சொல்லியபடி திரையை மூடிக்கொண்டாள். அண்ணகர்கள் மீண்டும் நடக்கத் தொடங்கினர்.


வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 0Am1OV4ZQAycAveVRGqi+3
``ஏன் இளவரசி இவ்வளவு முக்கியமாகக் கேட்கிறீர்கள்?” என்று வினவினாள் சுகமதி.

அண்ணகர்கள் முழுவேகமாக நடக்கத் தொடங்கும் வரை அமைதிகாத்தவள் பிறகு சொன்னாள், ``இந்தப் போரின் ஒரு பகுதிதான் தட்டியங்காட்டில் நடக்கிறது. இன்னொரு பகுதி இந்த ஆறு ஊர்களில்தான் நடந்துகொண்டிருக்கிறது.”

புரியாமல் விழித்தாள் சுகமதி. ``இந்த ஆறு ஊர்க்காரர்கள்தாம் போரிலே ஈடுபட மாட்டோம் என்று சொல்லிவிட்டார்களே. பிறகு எப்படி..?”

``அதனால்தான் எல்லா வகையான உளவுத்தொழிலுக்கும் இந்த ஊர்கள் களமாக அமைந்துவிட்டன. மூவேந்தர்களும் தனித்தனியாக இந்த ஊரார்களைக்கொண்டு பறம்பை உளவுபார்க்கின்றனர்.”

சற்றே அதிர்ச்சியோடு சுகமதி கேட்டாள் ``அப்படியென்றால், நாம் செல்லும் செய்திகூட உளவுபார்க்கப்பட்டிருக்குமா?”

சுகமதியின் கண்களை உற்றுப்பார்த்தபடி பொற்சுவை சொன்னாள், ``பேரரசர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்கும் போது, நாம் என்ன செய்கிறோம் என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு அல்லவா?”

திடுக்கிட்டாள். ``பேரரசர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா இளவரசி?”

``ஆம். அந்தச் செய்தியை அறிந்ததால்தான் இன்றே செல்ல வேண்டும் என முடிவுசெய்தேன்.”

``போரை நிறுத்துவதற்கான பேச்சுக்குத்தானே பாரியைப் பார்க்கப்போவதாகக் கூறினீர்கள்?”

``அது கடந்த வாரச் சூழல். இனி இந்தப் போரை யாராலும் நிறுத்த முடியாது. அந்நிலை கடந்துவிட்டது.”

``அப்படியென்றால், யாருடைய வெற்றிக்காவது உதவப்போகிறீர்களா?”

``வெற்றி தோல்வியைப் போர்க்களம்தான் தீர்மானிக்கும். அதில் நாம் ஏன் உதவ வேண்டும்?”

``பிறகு, இந்தப் பயணத்தின் நோக்கம்தான் என்ன?”

``பாரியை, சதியால் வீழ்த்தத் திட்டமிட்டுள்ளனர். இன்றிரவு அந்தச் சதி நிகழப்போகிறது. அதைத் தடுக்கவே நான் போகிறேன்.”

மிரண்டது சுகமதியின் முகம். ``நீங்கள் சொல்வது உண்மையா இளவரசி? நம் பேரரசரா இந்தச் செயலைச் செய்யப்போகிறார்?”

``நம் பேரரசர் அல்ல. சோழப்பேரரசர் அந்தச் செயலைச் செய்யப்போகிறார்.”

சற்றே நிம்மதியானாள் சுகமதி. தமது பேரரசுக்கு எதிரான செயலில் தாம் ஈடுபடவில்லை என்பது அவளின் பெருமூச்சுக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், அதைப் பொற்சுவை கவனிக்காததுபோல இருந்துகொண்டாள்.

``கொலைச் சதியை நிறுத்தப்போகும்போதுகூட உங்களின் முகம் பதற்றமேதுமின்றி இருக்கிறதே!”

``செய்யப்போகும் செயலின் முக்கியத்துவம். சிறு ஐயம்கூட எனது நடவடிக்கையின் மீது ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் உள்ள தெளிவு. உண்மையில் எனது வாழ்நாளில் இவ்வளவு பதற்றத்தை நான் இதற்கு முன்னர் அடைந்ததில்லை. ஆனால், அதை வெளிக்காட்டிவிடக் கூடாது என்பதில் முழு கவனத்தோடு இருக்கிறேன். எனது முகம் முழுமையாகப் பூத்திருக்கிறது என்பதை நீயே நம்பிய பிறகு, வேறு யார் ஐயம்கொள்ள முடியும்?”


வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 MOERIKaWTeCBSVXb2HJW+4


இந்தப் பயணத்தின் தன்மை, இப்போதுதான் சுகமதிக்கு முழுமையாகப் புரியத் தொடங்கியது. ``நான் மறுபடியும் கேட்கிறேன், இதனால் உங்களுக்கு ஆபத்து ஏதும் வந்துவிடாதே!”

``அது, நம் பேரரசர் எவ்வளவு ஒற்றறிகிறார் என்பதைப் பொறுத்தது.”

``இளவரசியாரின் செயலை அவ்வளவு துல்லியமாக ஒற்றறிகின்றனரா?”

``ஆம். காராளியின் எல்லா நடவடிக்கைகளும் அவர்களால் கண்காணிக்கப்படுகின்றன.”

நடுங்கிப்போனாள் சுகமதி. ``என்ன சொல்கிறீர்கள் இளவரசி? அவனை நம்பித்தானே இந்தப் பயணத்தையே மேற்கொள்கிறோம். அப்படியென்றால், இது உறுதியாக ஆபத்தில் போய்த்தான் முடியும்.”

``காராளியிடம் பொய் இல்லை. அவன் உண்மையான கலைஞன். ஆனால், அவனுடைய எல்லா நடவடிக்கைகளும் ஒற்றறியப்படுகின்றன. அவன் நமக்குச் சொல்வதைப்போல அவனைப் பற்றி வேறு யாரோ சொல்லிக் கொண்டிருக்கின்றனர். போர்நிறுத்ததுக்காகப் பேசப்போவதாக இருந்தால் இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டிருக்க மாட்டேன். ஆனால், இது பாரியின் உயிர் பறிக்கும் சதி தொடர்பானது. இதைக் கேள்வியுற்ற பிறகு எப்படி நான் போகாமல் இருக்க முடியும்?”

``கேள்விப்பட்டது உண்மை என எப்படி நம்பினீர்கள்?”

``எல்லாவற்றையும் உண்மையில்லை என நம்பு. அப்போதுதான் உண்மை எதுவோ அது மட்டும் தனித்துத் துலங்கும்.”

``உங்களைப் போன்ற இளவரசியார்களுக்குத் தான் அது முடியும். எங்களைப் போன்றோர் எல்லாவற்றையும் நம்பவே பயிற்றுவிக்கப் பட்டவர்கள்.”

``பிறகு ஏன் கேள்வி எழுகிறது சுகமதி?”

அமைதி சூழ்ந்தது.


பிரபாகரன் ஒற்றன்
பிரபாகரன் ஒற்றன்
பண்பாளர்

பதிவுகள் : 52
இணைந்தது : 31/08/2018

Postபிரபாகரன் ஒற்றன் Thu Sep 27, 2018 8:34 am

குளவன்திட்டிலிருந்து வந்த பாரியும் காலம்பனும் குடிலில் உணவருந்திக்கொண்டி ருந்தனர். மற்றவர்கள் பாட்டாப்பிறையில் அமர்ந்திருந்தனர். தேக்கன் நேற்றைப்போல் இன்றைக்கும் வரவில்லை. தனது குடிலிலேயே தங்கிவிட்டான். வாரிக்கையனும் நாகக்கரட்டின் மீதே இருந்துவிட்டார். உதிரனும் ஈங்கையனும் விண்டனும் எதிர்ப்புறம் நின்று பேசிக்கொண்டிருக்க, அவர்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் கபிலர். அவரது மனம் மிகுந்த கலக்கத்தில் இருந்தது.
தேக்கனிடமோ, முடியனிடமோ கலந்துகொள்ளாமலேயே பொற்சுவையை அழைத்துவரச் சொல்லிவிட்டோமே என்ற தவிப்பு அடங்கவில்லை. அந்நேரம், பாரியைப் பார்த்துவிட்டு முடியன் பாட்டாப்பிறை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவன் இங்கு வருவதற்குள் எதிர் சென்று பேசிவிடலாம் என அவனை நோக்கி நடந்தார். தீப்பந்த வெளிச்சம் சிறிது தொலைவுக்குத்தான் இருந்தது. ஆனாலும் வேகமாக நடந்து முன் சென்றார்.
மேலேயிருந்து இறங்கிக்கொண்டிருந்த முடியனைப் பார்த்ததும் தேக்கனின் உடல்நலம் பற்றிக் கேட்டறிந்தார். சொற்களின் வழியே தனது கவலை வெளிப்பட்டுவிடாதவாறு சொல்ல முனைந்தான் முடியன். அதே முயற்சியோடுதான் தொடர்ந்து வந்த கபிலரின் சொற்களும் இருந்தன. நேற்று தன்னைத் தேடி வந்த காராளி சொல்லிய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். ``தேக்கனையோ, உன்னையோ கலந்துகொண்டுதான் அவனுக்கு மறுசொல் சொல்லவேண்டும் என்று நெடுநேரம் காத்திருந்தேன். ஆனால், இருவரும் வந்துசேரவில்லை. வேறு வழியில்லாமல் அழைத்துவரச் சொல்லிவிட்டேன்” என்றார்.
அதிர்ச்சிக்குள்ளானான் முடியன். ``ஏன் அப்படிச் சொன்னீர்கள்? போர்ச்சூழல் எவ்வளவு மோசமாகிக்கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறீர்கள். இந்நிலையில் அவர்கள் இங்கு வருவது எந்த வகையிலும் பொருத்தமல்ல” என்று கூறினான்.

``எனக்கும் புரிந்தது. அதனால்தான் அதைத் தவிர்க்க முயன்றேன். ஆனால், முடியவில்லை. நீங்கள் இருவரும் வந்து சேராததால் என்னால் வேறு முடிவெடுக்க முடியவில்லை” என்றார்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் வீரன் ஒருவன் முடியனைக் கண்டு பேச பாட்டாப்பிறையிலிருந்து மேலேறி வந்தான்.

``காராளி என்பவன், நாகக்கரட்டின் வடமுனைப் பள்ளத்தாக்குக்கு வந்துள்ளான். அவனோடு பல்லக்கு ஒன்றும் வந்துள்ளது. கபிலரிடம் கேட்டுவிட்டுத்தான் வருவதாகச் சொல்கிறான். உள்ளே அனுமதிக்கலாமா?” என்று கேட்டான்.
முடியன், கபிலரைப் பார்த்தான். ``நாளைதான் வருவான் என நினைத்தேன்” என்று மெல்லிய குரலில் சொன்னார் கபிலர்.
வருவதன் நோக்கம் என்னவாக இருக்கும் என முடியனால் புரிந்துகொள்ள முடியவில்லை. இவ்வளவு தொலைவு வந்த பிறகு திருப்பி அனுப்புதல் முறையல்ல என்று மட்டும் தோன்றியது. ``சரி, காராளியை அங்கேயே நிறுத்திவிடுங்கள். பல்லக்கை மட்டும் அனுப்பிவையுங்கள். வழிகாட்ட நம் வீரர்கள் வரட்டும்” என்றான்.
                                                                                  வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 14 6msrkTFCSHqtuH0Q2myA+6
பள்ளத்தாக்கின் நுழைவுப்பகுதியில் காராளி நிறுத்தப்பட்டான். பறம்புவீரர்கள் இருவர் வழிகாட்ட அண்ணகர்கள் பல்லக்கைத் தூக்கிக்கொண்டு பின்தொடர்ந்தனர்.
பல்லக்குக்குள் உரையாடல் இறுக்கம்கொள்ளத் தொடங்கியது. சுகமதிக்கு அச்சமும் பதற்றமும் அதிகமாகின. அடுத்து என்ன நடக்கும் என்பதை அவளால் எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. முகத்தில் வியர்வை துளிர்த்தது. ``சிறு பல்லக்கு என்பதால் காற்றோட்டமாக இல்லை” என்று பொற்சுவையிடம் சமாதானம் சொல்லிக் கொண்டாள். ஆனால், பொற்சுவைக்கு வியர்க்கவில்லை. அவள் தெளிவுகொண்டிருந்ததால், தான் செய்யப்போகும் வேலை எத்தகையது என்பதைப் பற்றிப் பலமுறை மனதுக்குள் சிந்தித்துப் பார்த்துக்கொண்டாள். வாழ்வு, முன்னிலும் பொருள்பொதிந்த இடத்துக்குத் தன்னை இட்டுச்செல்வதாக உணர்ந்தாள்.
சுகமதியால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. `இவ்வளவு பெரிய செயலுக்குப் போகும்போதுகூட இளவரசியால் எப்படி இயல்பு மாறாமல் இருக்க முடிகிறது? என்னதான் சிந்தனையை ஒருமுகப்படுத்தினாலும் மனதின் ஆழத்திலிருக்கும் உணர்வு, நீருக்குள் இருக்கும் காற்றுக்குமிழியைப்போல முகத்தில் வெளிப்பட்டுத்தானே ஆகவேண்டும். ஆனால், பொற்சுவையின் முகத்தில் எதையும் கண்டறியவே முடியவில்லையே?’ எனச் சிந்தித்தவண்ணமே இருந்தாள்.
இரலிமேட்டுக்கும் நாகக்கரட்டுக்கும் இடைப்பட்ட பள்ளத்தாக்கில் சமதளப்பயணம் என்பதால் இடுக்கி நெருக்கி உட்காரும் நிலையில்லை. ஆனாலும் சுகமதியால் இயல்பாய் இருக்க முடியவில்லை. என்ன செய்வது எனத் தெரியாமல், பொற்சுவையின் முகத்தைப் பார்ப்பதும், பிறகு பார்வையைத் தவிர்த்து, குனிந்து கால்விரல்களைப் பார்ப்பதும், சிறு விளக்கின் அசைவைப் பார்ப்பதுமாக வந்தாள்.
சிறிது நேரத்துக்குப் பிறகு, எதையோ சொல்ல, தலை நிமிர்ந்து பொற்சுவையைப் பார்த்தாள். அவளது முகத்தில் மாற்றங்கள் தெரிந்தன. தனது எண்ணத்திலிருக்கும் குழப்பம்தான் அப்படித் தோன்றுகிறது என நினைத்துக் குனிந்து கொண்டாள்.
சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பொற்சுவையின் முகத்தைப் பார்த்தாள். அவளது முகத்தில் வியர்வைத் துளிகள் இருந்தன. சுகமதி அதிர்ச்சிக்குள்ளானாள். திடீரென இளவரசிக்கு என்ன ஆயிற்று எனப் புரியவில்லை. `காற்றோட்டம் குறைவாக இருப்பதால் வியர்க்கிறதோ!’ என நினைத்து, ``பல்லக்கின் திரையை விலக்கட்டுமா இளவரசி?” என்று கேட்டாள்.

``வேண்டாம்” என்று மறுத்தாள் பொற்சுவை. இவ்வளவு நேரம் பேசிவந்த குரலின் இனிமை இப்போது இல்லை. அவளது எண்ணம் குழப்பத்துக்குள் மூழ்குவது தெரிந்தது. சுகமதி, அவளது முகத்தையே உற்றுப்பார்த்தாள்.
பொற்சுவையின் கண்கள் இங்குமங்குமாக அலைமோதின. சுகமதி தன்னைக் கண்டறிகிறாள் என்றுகூட அவளால் கணிக்க முடியவில்லை. மனம் தத்தளித்தபடி இருந்தது. என்ன செய்வதென அறியாத பதற்றம் சூழ்ந்தது. சட்டெனச் சொன்னாள், ``உனது காதில் இருக்கும் அணிகலனைக் கழற்று.”
சுகமதிக்குப் புரியவில்லை. `எனது காதணியை ஏன் கழற்றச் சொல்கிறாள்?’ என்று மனம் குழம்பியபடி இருக்க, கைகள் காதணியின் திருகாணியைத் திருகிக்கொண்டிருந்தன.
அவளின் கைகள் செய்துகொண்டிருந்த அதே வேலையை, பொற்சுவையின் விரல்களும் செய்துகொண்டிருந்தன. அவள் தனது காதணியின் திருகாணியைக் கழற்றிக் கொண்டிருந்தாள். ஏன் இதைச் செய்கிறாள் என்று சுகமதிக்கு முற்றிலும் விளங்கவில்லை.
சுகமதி அணிந்திருந்தது சிறிய வடிவிலான பூங்குழைக் காதணி. அதை அவள் கழற்றும்போதே பொற்சுவை தான் அணிந்திருந்த பெரிய வடிவிலான மகரக்குழைக் காதணியைக் கழற்றி சுகமதியின் கைகளில் கொடுத்தாள்.
அதை வாங்கியபடி புரியாமல் விழித்த சுகமதியைப் பார்த்து ``நீ இந்தக் காதணியை இட்டுக்கொள்” என்றாள்.

``இளவரசி அணிந்திருக்கும் மகரக்குழைக் காதணியை நான் மாட்டுவதா?!” சொல்லும்போதே அச்சத்தில் நடுங்கினாள்.
ஆனால் பொற்சுவையோ, ``நான் வேறு காரணத்துக்காகச் சொல்கிறேன், அணிந்துகொள்” என்றாள். சுகமதி மீண்டும் மறுக்கவே, சற்றே கோபத்தை வெளிக்காட்டினாள்.
அதன் பிறகு சுகமதியால் மறுக்க முடியவில்லை. பாண்டியநாட்டு இளவரசியின் விலைமதிப்பற்ற மகரக்குழைக் காதணியைத் தனது காதில் மாட்டிக்கொண்டாள்.
பொற்சுவை, சுகமதியின் காதுகளையே உற்றுப்பார்த்தாள். மகரக்குழைக் காதணி ஆடியபடியே வந்தது.
காதணியையே பார்த்துக்கொண்டிருந்த பொற்சுவை, பல்லக்கில் சுடர்விட்டுக்கொண்டிருந்த சிறுவிளக்கை எடுத்து அதை சுகமதியின் கைகளில் கொடுத்தாள்.
அவள் என்ன செய்கிறார் என, சுகமதிக்குப் புரியவில்லை. ஆனாலும் அவள் சொன்னபடி விளக்கை இறக்கிப் பிடித்துக்கொண்டாள்.
பொற்சுவையோ, பல்லக்கின் திரையை மிகச்சிறிய அளவு மட்டும் விலக்கி வெளிப்புறமாகப் பார்த்தாள்.
இவ்வளவு சிறிய அளவு விளக்கொளியில் எதைப் பார்த்துவிட முடியும் எனப் புரியாமல் தவித்தாள் சுகமதி.
சிறிது நேரத்துக்குப் பிறகு விளக்கை மீண்டும் மேலே மாட்டச் சொன்னாள்.
சுகமதி விளக்கை மாட்டினாள்.

``தங்களின் நடவடிக்கை எதுவும் புரியும்படி இல்லை இளவரசி.”

``சிறிது நேரம் பொறு சொல்கிறேன்.”
பொற்சுவையின் மனம் சற்றே அமைதிகொண்டது. அடுத்து என்ன செய்யவேண்டும் என விரைவாக முடிவெடுக்கத் தொடங்கினாள். இதை சுகமதிக்குத் தெரியப்படுத்துவது அவசியம் எனத் தோன்றியது.
இதுவரை பேசியதைவிட மெல்லிய குரலில் சொன்னாள், ``நான் சொல்வதைக் கேட்டு அச்சப்படாதே. நமது பல்லக்கைத் தூக்கி வருகிறவர்கள் அண்ணகர்கள் அல்லர்.”
ஒரு கணம் நடுங்கி மீண்டாள் சுகமதி, ``என்ன சொல்கிறீர்கள் இளவரசி?”

``ஆம். நினைவுதெரிந்த நாள் முதல் பல்லக்கில் பயணிப்பவள் நான். பல்லக்குப் பயணத்தின் அத்தனை விதத்தையும் என்னால் எளிதில் கண்டறிய முடியும்.”
கண்ணிமைக்காமல் பார்த்தாள் சுகமதி.

``அண்ணகர்கள் பல்லக்கைத் தூக்குவதற்கும் மற்றவர்கள் பல்லக்கைத் தூக்குவதற்கும் எவ்வளவோ வேறுபாடுகள் உண்டு. அண்ணகர்கள் பல்லக்கைத் தூக்கிச்செல்வது நீரில் மிதக்கும் பூவைப் போன்றது. அதுவே மற்றவர்கள் தூக்கிச்செல்வது கூடையில் தூக்கிச்செல்லும் பூவைப்போன்றது. வீசும் காற்றுக்கும் தூக்கிச்செல்பவரின் தோள் குலுங்கலுக்கும் பூ ஆடிக்கொண்டேதான் இருக்கும்.”

``இவர்கள் அண்ணகர்கள் இல்லையா இளவரசி?”

``ஆம். எனக்கு முதலிலேயே சிறிய ஐயம் வந்தது. ஆனால், மேடு பள்ளத்தில் பல்லக்கைத் தூக்கி வந்ததாலும், சிறுபல்லக்கில் இருவர் மிக நெருக்கமாக உட்கார்ந்திருந்ததாலும் கண்டறியாமல் விட்டுவிட்டேன். இப்போது சமதளத்தில் செல்லும்போது எனது மகரக்குழைக் காதணிகள் காதுமடல்களிலிருந்து அசைந்து அசைந்து கழுத்தைப் போய்த் தட்டிக்கொண்டே இருந்தன. இவ்வளவு கனமான காதணிகள் இப்படி அசையும்படி அண்ணகர்கள் ஒருபோதும் பல்லக்கைத் தூக்கிச்செல்ல மாட்டார்கள். அதனால்தான் உனது காதில் மாட்டி அவை அசையும் விதத்தைப் பார்த்தேன்.”

``திரையை விலக்கிக் கீழே பார்த்தது?” என்று கேட்டு முடிக்கும் முன் பொற்சுவை சொன்னாள், ``ஐயத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமல்லவா? அதனால் விளக்கின் ஒளியில் தூக்கிச்செல்பவர்களின் கால்களைப் பார்த்தேன்.”
சுகமதியின் கண்கள் நடுங்கியபடியே அவளது முகத்தைப் பார்த்தன. பொற்சுவை சொன்னாள், ``அண்ணகர்களின் கால்களில் முடி இருக்காது. ஆனால், இந்தக் கால்களை நீ பார்க்கிறாயா?” என்றாள்.
பதறினாள் சுகமதி, ``அப்படியென்றால் நம்மைத் தூக்கிச்செல்வது யார் இளவரசி?”
சற்று அமைதிக்குப் பிறகு சொன்னாள், ``நம் அண்ணகர்களை நமக்குத் தெரியாமலேயே மாற்ற, வேறு யாரால் முடியும்? நம் பேரரசர்தான் இதைச் செய்திருப்பார்.”

``ஏன்?”

``பாரியைக் கொல்ல நம் மூலம் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடாக இஃது இருக்கலாம்.”
சொல்லும்போதே பொற்சுவைக்கு வியர்த்து அடங்கியது. ``கொலையைத் தடுக்க வருவதாக நினைத்து, கொலையாளிகளை அழைத்து வந்துள்ளேன்.”
சுகமதிக்கு மயக்கம் வருவதுபோல் இருந்தது. பொற்சுவையின் கண்களைக்கூட அவளால் பார்க்க முடியவில்லை; நீர் பெருகியது.
பல்லக்கு சட்டென நின்றது. பறம்புவீரர்கள், ``பல்லக்கை இங்கு இறக்குங்கள்” என்று சொல்வது கேட்டது.
பதறிய சுகமதி, பொற்சுவையின் கைகளை இறுகப்பற்றினாள்.

``நான் உங்களை இறங்க விட மாட்டேன்” சொல்லிக்கொண்டிருக்கும்போதே கண்ணீர் பொங்கியது.
அவளின் பிடியிலிருந்து கைகளை விலக்கி, அவளின் தலையைத் தொட்டபடி பொற்சுவை சொன்னாள், ``பதற்றப்படாதே. நாம் எண்ணிய இடத்துக்குத்தான் வந்துள்ளோம். இனி பின்வாங்க முடியாது. நமது அறிவு நமக்குக் கைகொடுக்கும். நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.”

``இல்லை. நான் கடமை வழுவ மாட்டேன். உங்களுக்கு எந்தத் தீங்கும் நேர அனுமதிக்க மாட்டேன்” என்று பதறினாள்.

``நீ எனது கனவின் மிச்சம். உனது வார்த்தைகளில்தான் அது முழுமைகொள்ளப் போகிறது. இங்கு என்ன நடந்தாலும் பல்லக்கை விட்டு நீ கீழிறங்கக் கூடாது” என்று சொல்லியபடி சட்டெனத் திரை விலக்கி வெளியேறினாள் பொற்சுவை.
தூக்கிவந்த அறுவர் தலைவணங்கி நின்றிருந்தனர். அவர்களுக்கு அருகில் பறம்பு வீரர்கள் நால்வர் நின்றிருந்தனர். பல்லக்கிலிருந்து வெளிவந்ததும் எதிரில் இருந்த மரத்தின் அடிவாரத்தைப் பார்த்தாள். அங்கு நிறைய தீப்பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. மரத்தின் அடிவாரத்தில் இருந்த கல் இருக்கைகளில் ஆறேழு பேர் பேசிக்கொண்டிருந்தனர். இடது ஓரத்தில் ஆசான் கபிலர் இருந்தார்.
பாட்டாப்பிறையின் வலது ஓரத்தில் பாரி இருந்தான். இடையில் முடியன், ஈங்கையன், உதிரன், விண்டன், காலம்பன் ஆகியோர் இருந்தனர். ஆனால், பொற்சுவை யாரையும் பார்க்கவில்லை. நேராக, கபிலரை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
மனதுக்குள் எண்ணங்கள் புரண்டெழுந்து கொண்டிருந்தன. சோழனின் சதித்திட்டத்தை எப்படிச் சொல்வது? உடன் வந்துள்ள பாண்டிய வீரர்களின் தாக்குதலை எப்படித் தடுப்பது? எதுவுமே அவளுக்குப் பிடிபடவில்லை. கண்களுக்கு வேறெதுவும் தெரியவில்லை. ஆசானின் முகம் மட்டுமே தெரிந்தது. அவரின் அருகில் வந்து நின்றாள் பொற்சுவை. `வேகமாக வந்துவிட்டோமா?’ என ஒரு கணம் எண்ணினாள். என்ன முடிவெடுப்பது என்பதறியாத பதற்றத்தோடு பணிந்து ஆசானின் கால்களைத் தொட்டாள்.
கண் கலங்கிய கபிலர், அவளுக்கு வாழ்த்து சொல்லி எழுந்திருக்கச் சொன்னார். ஆனால், பொற்சுவையால் எழுந்திருக்க முடியவில்லை. அடுத்து என்ன செய்வது என்பது அவளுக்குப் பிடிபடவில்லை. குனிந்து வணங்கியபடி இருந்தவளின் மனம் கொந்தளித்தபடி இருந்தது. தன் வழியாகப் பாரியை எப்படி அடையாளம் கண்டறிவார்கள்; தாக்குதலுக்கு என்ன உத்தியை வகுத்திருப்பார்கள் எனச் சிந்தித்தபடியே எழுந்தாள்.
ஆசான் வாஞ்சையோடு அவளின் தலையைத் தொட்டு வாழ்த்து சொல்லியபடி இருக்க, அவர் முகத்தைப் பார்த்ததும் பொற்சுவை கேட்டாள், ``ஈங்கையன் எங்கு இருக்கிறார் ஆசானே?”
சற்றே அதிர்ச்சிக்குள்ளானார் கபிலர். `பாரியைத்தானே கேட்பாள் என நினைத்தோம். ஏன் ஈங்கையனைக் கேட்கிறாள்?’ எதுவும் புரியவில்லை. இடதுகையை நீட்டி மூன்றாவதாக நிற்பவனைக் காட்டினார் கபிலர்.
பொற்சுவையின் கால்கள் அவனை நோக்கித் திரும்பின. பல்லக்கின் மேற்பிடிமானங்கள் முழுவதும் உள்ளொடுங்கிய ஈட்டிகளால் ஆனவை. `பொற்சுவை, கபிலரை வணங்கிய பிறகு பாரியை வணங்கிப் பேசுவாள். அந்தக் கணத்தில் அவனைத் தாக்கி அழிக்கவேண்டும்’ என்னும் ஆணையோடுதான் நன்கு பயிற்சிபெற்ற வீரர்களைக் குலசேகரபாண்டியன் அனுப்பியிருந்தார். பொற்சுவையின் கால்கள் ஈங்கையனை நோக்கி நகரத் தொடங்கியபோது பாண்டிய வீரர்கள் பல்லக்கோடு ஒட்டியுள்ள ஈட்டியை இறுகப்பற்றினர்.
பொற்சுவையின் மனம் தள்ளாடியது. `பாரி எங்கு இருக்கிறான்; ஒரு கணமேனும் அவன் முகத்தைப் பார்க்க வேண்டும்’ என மனதுக்குள் தோன்றியது. `ஒருவேளை அந்த முகத்தைப் பார்த்துவிட்டால், தன்னை அறியாமலே கைகள் குவிந்து தாள்பணிந்துவிடுவோம். வேண்டாம்’ என மனதின் அடங்காத தவிப்போடு மூன்றாம் நிலையில் இருந்த ஈங்கையனின் முன்னால் வந்து நின்றாள். உடன் நிற்கும் யாருக்கும் எதுவும் புரியவில்லை.
ஈங்கையனைப் பார்த்தபடி கைகளைக் குவித்து கால் தொட்டு வணங்க மண்டியிட்டாள் பொற்சுவை. ஈங்கையன் பதற்றத்தோடு அவளைத் தடுக்க முற்படும்போது பாண்டிய வீரர்களின் ஈட்டிகள் மின்னலெனப் பாய்ந்தன. அருகில் நிற்பவர்கள் என்னவென்று அறியும் முன்பு அடுத்தடுத்து இறங்கின ஈட்டிகள். மற்றவர்கள் ஈங்கையனை நோக்கி ஓடிவருவதற்குள் கபிலரின் முகம் நோக்கிப் பீய்ச்சியடித்தது ஈங்கையனின் குருதி. கணநேரத்தில் பாட்டாப்பிறை போர்க்களமானது.
எதிர்பாராத கணத்தில் தாக்குதலில் இறங்கிய பல்லக்குத் தூக்கிகளைச் சுற்றி நின்றிருந்த பறம்புவீரர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டிச் சரித்தனர். ஒருவன்கூட உயிர் தப்பவில்லை. அலறல் ஒலி மேலெழும் முன்பே எல்லாம் முடிந்தன.
தாக்குதல் ஓசை கேட்டுப் பதற்றத்தோடு பல்லக்கை விட்டு வெளியில் வந்தாள் சுகமதி. மரத்தடியைப் பார்த்த கணத்தில் ``ஐயோ... இளவரசி..!” என்று உயிர் உருகக் கத்திக்கொண்டு ஓடினாள்.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Sep 27, 2018 6:27 pm

இப்பொழுது தான் படித்து முடித்தேன் நண்பரே ...பகிரலாம் படங்களுடன் என்று நினைத்தேன்...
ஓவியங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் ... சூப்பருங்க

பிற செய்திகளிலும் கலந்து கொள்ளுங்கள் நண்பரே ... அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 14 of 19 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக