புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுட சுட செய்திகள்...அச்சலா
Page 13 of 37 •
Page 13 of 37 • 1 ... 8 ... 12, 13, 14 ... 25 ... 37
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
First topic message reminder :
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சூப்பரோ உங்க செய்திகள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
2016ல் "சுகாய்-30' போர் விமான தளமாக மாறுகிறது சூலூர்:இந்திய பெருங்கடல் அச்சுறுத்தலை சமாளிக்க நடவடிக்கை
கோவை:""இந்திய பெருங்கடல் பகுதியில் எதிரி நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதத்தில், தென்பிராந்திய விமானப்படை பிரிவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. "சுகாய்-30' உள்ளிட்ட போர் விமானங்களை கையாளும் விதத்தில், சூலூர் விமான படை தளம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. 2016ம் ஆண்டில், இது முழு அளவில், செயல்பாட்டுக்கு வரும்,'' என, தென்பிராந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் ஆர்.கே.ஜாலி தெரிவித்தார்.
கோவை அருகேயுள்ள சூலூர் விமானப்படை தளத்தில், நேற்று ஏர்மார்ஷல் ஜாலி நிருபர்களிடம் கூறியதாவது:இந்திய பெருங்கடல் பகுதி, 4000 கி.மீ., நீளத்தில் மிகப்பெரிய கடற்கரையை கொண்டது. இப்பகுதியில் 97 சதவீத வர்த்தகமும் கடல் போக்குவரத்தை நம்பி உள்ளது. நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ தளவாடங்கள், பாதுகாப்பு அமைப்புகள், அணுமின்நிலையங்கள், விமான தொழிற்சாலைகள், விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் இங்கு அமைந்துள்ளன. இதனால், இப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
எதிரி நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதத்தில் தென்பிராந்திய படைப்பிரிவுகள், அதிநவீன தளவாடங்களுடன் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. சூலூர் விமான படைதளத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. விமான ஓடுதளம் (ரன்வே) நவீனப்படுத்தப்பட்டு, அடுத்த மாதம் முதல் தயார் நிலையில் வரும். தற்போது, கூடுதலாக "டாக்ஸி வே' அமைக்கப்பட்டுள்ளது.
"தேஜாஸ்' இலகுரக போர் விமானங்களை கையாளும் நாட்டின் முதல் விமான தளமாகவும் சூலூர் படைதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும். 2016ம் ஆண்டில் "சுகாய்-30' போர் விமானங்களை கையாளும் விதத்தில் சூலூர் தளம் உருவாக்கப்படும். அதிநவீன போர்விமானங்கள், @ரடார்கள் மற்றும் பாதுகாப்பு தளவாட கருவிகள் நிறுவப்படும்.கடல் வழியான நடமாட்டத்தை கண்காணிக்கவும் , எந்த அச்சுறுத்தல் வந்தாலும் எளிதில் இயங்கவும், நிலை நிறுத்தவும் தயாராக விமானப்படை தளங்கள் உள்ளன. தேவைப்பட்டால், இங்குள்ள படைப்பிரிவு (ஸ்குவாட்ரன்) நிர்வாக வசதிக்காக, வேறு இடத்தில் மாற்றப்படும்.இதேபோல், தஞசாவூரிலும் விரைவில் முழு அளவிலான விமான படைதளம் செயல்படத் துவங்கும். ஒரு படைத் தளம் உருவாக்க 10 ஆண்டுகள் வரை தேவைப்படும். இதற்கு 2,000 கோடி முதல் 3,000 கோடி ரூபாய் வரை செலவாகும்.
விமானப்படையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பற்றாக்குறை எதுவும் இல்லை. ஓய்வு காலத்துக்கு முன்பே அலுவலர்கள் பணியில் இருந்து விலகுவதாக கூறுவது, கவலை அளிக்கக் கூடியதாக இல்லை. ஆண்டுதோறும் புதிய அலுவலர்கள் பலர் பணியில் சேர்ந்து வருகின்றனர். இதில், தென் மாநிலங்களின் பங்களிப்பு பாராட்டும் வகையில் உள்ளது. கால நிலை மாற்றத்தால், போர் விமானங்களை இயக்குவதில் சிரமம் எதுவும் இல்லை. இயற்கை சூழல் மாற்றம், இடர்பாடுகளை சமாளிக்கும் வகையில், பைலட்களுக்கு அதிநவீன பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, ஏர் மார்ஷல் ஜாலி தெரிவித்தார்.
-தினமலர்
கோவை:""இந்திய பெருங்கடல் பகுதியில் எதிரி நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதத்தில், தென்பிராந்திய விமானப்படை பிரிவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. "சுகாய்-30' உள்ளிட்ட போர் விமானங்களை கையாளும் விதத்தில், சூலூர் விமான படை தளம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. 2016ம் ஆண்டில், இது முழு அளவில், செயல்பாட்டுக்கு வரும்,'' என, தென்பிராந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் ஆர்.கே.ஜாலி தெரிவித்தார்.
கோவை அருகேயுள்ள சூலூர் விமானப்படை தளத்தில், நேற்று ஏர்மார்ஷல் ஜாலி நிருபர்களிடம் கூறியதாவது:இந்திய பெருங்கடல் பகுதி, 4000 கி.மீ., நீளத்தில் மிகப்பெரிய கடற்கரையை கொண்டது. இப்பகுதியில் 97 சதவீத வர்த்தகமும் கடல் போக்குவரத்தை நம்பி உள்ளது. நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ தளவாடங்கள், பாதுகாப்பு அமைப்புகள், அணுமின்நிலையங்கள், விமான தொழிற்சாலைகள், விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் இங்கு அமைந்துள்ளன. இதனால், இப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
எதிரி நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதத்தில் தென்பிராந்திய படைப்பிரிவுகள், அதிநவீன தளவாடங்களுடன் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. சூலூர் விமான படைதளத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. விமான ஓடுதளம் (ரன்வே) நவீனப்படுத்தப்பட்டு, அடுத்த மாதம் முதல் தயார் நிலையில் வரும். தற்போது, கூடுதலாக "டாக்ஸி வே' அமைக்கப்பட்டுள்ளது.
"தேஜாஸ்' இலகுரக போர் விமானங்களை கையாளும் நாட்டின் முதல் விமான தளமாகவும் சூலூர் படைதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும். 2016ம் ஆண்டில் "சுகாய்-30' போர் விமானங்களை கையாளும் விதத்தில் சூலூர் தளம் உருவாக்கப்படும். அதிநவீன போர்விமானங்கள், @ரடார்கள் மற்றும் பாதுகாப்பு தளவாட கருவிகள் நிறுவப்படும்.கடல் வழியான நடமாட்டத்தை கண்காணிக்கவும் , எந்த அச்சுறுத்தல் வந்தாலும் எளிதில் இயங்கவும், நிலை நிறுத்தவும் தயாராக விமானப்படை தளங்கள் உள்ளன. தேவைப்பட்டால், இங்குள்ள படைப்பிரிவு (ஸ்குவாட்ரன்) நிர்வாக வசதிக்காக, வேறு இடத்தில் மாற்றப்படும்.இதேபோல், தஞசாவூரிலும் விரைவில் முழு அளவிலான விமான படைதளம் செயல்படத் துவங்கும். ஒரு படைத் தளம் உருவாக்க 10 ஆண்டுகள் வரை தேவைப்படும். இதற்கு 2,000 கோடி முதல் 3,000 கோடி ரூபாய் வரை செலவாகும்.
விமானப்படையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பற்றாக்குறை எதுவும் இல்லை. ஓய்வு காலத்துக்கு முன்பே அலுவலர்கள் பணியில் இருந்து விலகுவதாக கூறுவது, கவலை அளிக்கக் கூடியதாக இல்லை. ஆண்டுதோறும் புதிய அலுவலர்கள் பலர் பணியில் சேர்ந்து வருகின்றனர். இதில், தென் மாநிலங்களின் பங்களிப்பு பாராட்டும் வகையில் உள்ளது. கால நிலை மாற்றத்தால், போர் விமானங்களை இயக்குவதில் சிரமம் எதுவும் இல்லை. இயற்கை சூழல் மாற்றம், இடர்பாடுகளை சமாளிக்கும் வகையில், பைலட்களுக்கு அதிநவீன பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, ஏர் மார்ஷல் ஜாலி தெரிவித்தார்.
-தினமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
ஹைதராபாத் ஆஸ்பத்திரியில் குழந்தையின் கைவிரல்களை பூனை கடித்து தின்றதாக பெற்றோர்கள் புகார்
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஹைதராபாத்தின் அரசு மருத்துவமனையில் தினக்கூலி ஒருவரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அங்கு தங்கி தாயும் சேயும் சிகிச்சை பெற்றுவந்த போது குழந்தையின் கையை பூனை கடித்துள்ளது. மருத்துவர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த இந்த தவறை மறைக்க பெற்றோர்களுக்கு தெரியாமல் கையில் கட்டு போட்டு அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்திருக்கின்றனர்.
குழந்தையின் கையை பிரிக்கவேண்டாம் மற்றும் யாருக்கும் இந்த குழந்தையை காட்டவேண்டாம் என்று கூறி அந்த குழந்தையை ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி அவர்களுடைய கிராமத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். வீட்டுக்கு சென்ற அந்த தினக்கூலி பெற்றோர்கள் குழந்தையின் கையில் சுற்றியிருந்த துணியை பிரித்து பார்த்தனர்.
அப்போது குழந்தையின் கையில் விரல்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் மனித உரிமை அமைப்பினர் அங்கு விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைக்கு, அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-மாலைமலர்
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஹைதராபாத்தின் அரசு மருத்துவமனையில் தினக்கூலி ஒருவரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அங்கு தங்கி தாயும் சேயும் சிகிச்சை பெற்றுவந்த போது குழந்தையின் கையை பூனை கடித்துள்ளது. மருத்துவர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த இந்த தவறை மறைக்க பெற்றோர்களுக்கு தெரியாமல் கையில் கட்டு போட்டு அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்திருக்கின்றனர்.
குழந்தையின் கையை பிரிக்கவேண்டாம் மற்றும் யாருக்கும் இந்த குழந்தையை காட்டவேண்டாம் என்று கூறி அந்த குழந்தையை ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி அவர்களுடைய கிராமத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். வீட்டுக்கு சென்ற அந்த தினக்கூலி பெற்றோர்கள் குழந்தையின் கையில் சுற்றியிருந்த துணியை பிரித்து பார்த்தனர்.
அப்போது குழந்தையின் கையில் விரல்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் மனித உரிமை அமைப்பினர் அங்கு விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைக்கு, அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-மாலைமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
மரண தண்டனை குற்றவாளி அப்சல் குருவை உடனே தூக்கிலிடவேண்டும்: திக் விஜய்சிங் வலியுறுத்தல்
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் இன்று தனது சொந்த நகரமான மத்தியப் பிரதேச மாநிலம் ரகோகருக்கு சென்று இருந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் பாராளுமன்ற தாக்குதல் மரண தண்டனை குற்றவாளி அப்சல் குரு பற்றி கூறியதாவது:-
பாராளுமன்ற தாக்குதலில் மரண தண்டனை குற்றவாளி அப்சல் குருவை விரைவில் தூக்கிலிடப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன். அப்சல் குருவால் கொடுக்கப்படும் கருணை மனுவை பரிசீலனை செய்து உடனடியாக மரணதண்டனையை நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்க வேண்டும்.
அப்சல் குருவை தூக்கிலிடப்படுவது குறித்து பாரதீய ஜனதா இரட்டை நிலைபாட்டுடன் இருக்கிறது. ஒரு புறம் அப்சல் குருவை தூக்கிலிடவேண்டும் என்கிறது. மற்றொரு புறம் பஞ்சாப் தீவிரவாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை குறைக்கவேண்டும் என்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலைமலர்
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் இன்று தனது சொந்த நகரமான மத்தியப் பிரதேச மாநிலம் ரகோகருக்கு சென்று இருந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் பாராளுமன்ற தாக்குதல் மரண தண்டனை குற்றவாளி அப்சல் குரு பற்றி கூறியதாவது:-
பாராளுமன்ற தாக்குதலில் மரண தண்டனை குற்றவாளி அப்சல் குருவை விரைவில் தூக்கிலிடப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன். அப்சல் குருவால் கொடுக்கப்படும் கருணை மனுவை பரிசீலனை செய்து உடனடியாக மரணதண்டனையை நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்க வேண்டும்.
அப்சல் குருவை தூக்கிலிடப்படுவது குறித்து பாரதீய ஜனதா இரட்டை நிலைபாட்டுடன் இருக்கிறது. ஒரு புறம் அப்சல் குருவை தூக்கிலிடவேண்டும் என்கிறது. மற்றொரு புறம் பஞ்சாப் தீவிரவாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை குறைக்கவேண்டும் என்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலைமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
அடுத்த வருடம் முதல் செல்போன் ரோமிங் கட்டணம் ரத்து: மத்திய மந்திரி கபில் சிபல் உறுதி
இந்தியாவிலுள்ள மொபைல் போன் பயன்பாட்டாளர்கள் அடுத்த வருடம் முதல் ரோமிங் கட்டணம் கட்ட தேவையில்லை என்று மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மந்திரி கபில் சிபல் என்று கூறினார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
தகவல் தொடர்பு துறை கொள்கை 2012-ன் படி 'ஒன் நேசன் - பிரீ ரோமிங்' என்ற குறிக்கோளை நடைமுறைப் படுத்துவோம் என்று முன்னதாகவே சொல்லியிருந்தோம். நாடு முழுவதும் ஒரே போன் நம்பரை பயன்படுத்துவதற்கு ரோமிங் கட்டணம் கட்ட வேண்டும் என்ற நடைமுறையை நீக்குவது தொடர்பான கொள்கைக்கு கடந்த மே மாதமே எங்கள் துறை ஒப்புதல் அளித்து விட்டது.
அதன் படி 2013-ம் ஆண்டு முதல் ரோமிங் கட்டணம் கட்ட வேண்டிய அவசியம் இருக்காது. இதற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளிக்கும். அதன் பிறகு இந்த சலுகை நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலைமலர்
இந்தியாவிலுள்ள மொபைல் போன் பயன்பாட்டாளர்கள் அடுத்த வருடம் முதல் ரோமிங் கட்டணம் கட்ட தேவையில்லை என்று மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மந்திரி கபில் சிபல் என்று கூறினார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
தகவல் தொடர்பு துறை கொள்கை 2012-ன் படி 'ஒன் நேசன் - பிரீ ரோமிங்' என்ற குறிக்கோளை நடைமுறைப் படுத்துவோம் என்று முன்னதாகவே சொல்லியிருந்தோம். நாடு முழுவதும் ஒரே போன் நம்பரை பயன்படுத்துவதற்கு ரோமிங் கட்டணம் கட்ட வேண்டும் என்ற நடைமுறையை நீக்குவது தொடர்பான கொள்கைக்கு கடந்த மே மாதமே எங்கள் துறை ஒப்புதல் அளித்து விட்டது.
அதன் படி 2013-ம் ஆண்டு முதல் ரோமிங் கட்டணம் கட்ட வேண்டிய அவசியம் இருக்காது. இதற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளிக்கும். அதன் பிறகு இந்த சலுகை நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலைமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதல் 27 லட்சம் லிட்டராக உயர்வு: அமைச்சர் மூர்த்தி தகவல்
நந்தனம் ஆவின் வளாகத்தில் 'ஆவின் புரோ பால்' என்ற புதிய வகை பாலை அமைச்சர் மூர்த்தி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அண்ணாநகர் பகுதிக்குட்பட்ட ஆசிய விளையாட்டு கிராமத்தில் குடியிருக்கும் ஆவின் நுகர்வோர்களுக்கு ஆவின் மற்றும் சிட்டி யூனியன் வங்கி இணைந்து வழங்கும் 'ஆவின் ஸ்மார்ட் கார்டு' வழங்கினார். நிகழ்ச்சிக்கு பால்வளத்துறை ஆணையர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குநர் ராமச்சந்திரன், முன்னிலை வகித்தார். இதில் பங்கேற்று அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:-
முதல்-அமைச்சர் தமிழகத்தில் இரண்டாவது வெண்மைப் புரட்சியை உருவாக்கிட பல்வேறு பால் வளத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் காரணமாக தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் சரித்திர சாதனையாக நாளொன்றுக்கு 27 லட்சம் லிட்டர் என்ற அளவினை எட்டியுள்ளது. தற்பொழுது சென்னை மாநகரில் 4 வகையான பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
1.5 சதவிகித கொழுப்புச்சத்து, 8.5 சதவிகித இதர சத்துக்கள் கொண்ட இருமுறை சமன்படுத்திய பால், 3 சதவிகித கொழுப்புச்சத்து, 8.5 சதவிகித இதர சத்து கொண்ட சமன்படுத்திய பால், 4.5 சதவிகித கொழுப்புச்சத்து, 8.5 சதவிகித நிலைப்படுத்திய பால் ஆகியவையாகும். இன்று ஆவின் புதிதாக 3.5 சதவீத கொழுப்புச்சத்தும் 10 சதவீத இதர சத்துக்களும் கொண்ட 'ஆவின் புரோ' என்ற புதிய வகை பால் 500 மி.லி ரூ.17-க்கு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக 'ஆவின் புரோ பால்' மொத்த விற்பனையாளர்கள் மூலம் தனியார் சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கும். ஆவின் நுகர்வோர்களுக்கு பால் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. அண்ணா நகர் பகுதிக்குட்பட்ட ஆவின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் கார்டு இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளுக்கும் ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்படும். இணையதளம் மூலம் 658 நுகர்வோர்கள் ஸ்மார்ட் கார்டு பெற விண்ணப்பித்துள்ளனர். புதிய மாதாந்திர பால் அட்டை பெற 159 நுகர்வோர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு புதிய பால் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
-மாலைமலர்
நந்தனம் ஆவின் வளாகத்தில் 'ஆவின் புரோ பால்' என்ற புதிய வகை பாலை அமைச்சர் மூர்த்தி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அண்ணாநகர் பகுதிக்குட்பட்ட ஆசிய விளையாட்டு கிராமத்தில் குடியிருக்கும் ஆவின் நுகர்வோர்களுக்கு ஆவின் மற்றும் சிட்டி யூனியன் வங்கி இணைந்து வழங்கும் 'ஆவின் ஸ்மார்ட் கார்டு' வழங்கினார். நிகழ்ச்சிக்கு பால்வளத்துறை ஆணையர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குநர் ராமச்சந்திரன், முன்னிலை வகித்தார். இதில் பங்கேற்று அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:-
முதல்-அமைச்சர் தமிழகத்தில் இரண்டாவது வெண்மைப் புரட்சியை உருவாக்கிட பல்வேறு பால் வளத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் காரணமாக தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் சரித்திர சாதனையாக நாளொன்றுக்கு 27 லட்சம் லிட்டர் என்ற அளவினை எட்டியுள்ளது. தற்பொழுது சென்னை மாநகரில் 4 வகையான பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
1.5 சதவிகித கொழுப்புச்சத்து, 8.5 சதவிகித இதர சத்துக்கள் கொண்ட இருமுறை சமன்படுத்திய பால், 3 சதவிகித கொழுப்புச்சத்து, 8.5 சதவிகித இதர சத்து கொண்ட சமன்படுத்திய பால், 4.5 சதவிகித கொழுப்புச்சத்து, 8.5 சதவிகித நிலைப்படுத்திய பால் ஆகியவையாகும். இன்று ஆவின் புதிதாக 3.5 சதவீத கொழுப்புச்சத்தும் 10 சதவீத இதர சத்துக்களும் கொண்ட 'ஆவின் புரோ' என்ற புதிய வகை பால் 500 மி.லி ரூ.17-க்கு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக 'ஆவின் புரோ பால்' மொத்த விற்பனையாளர்கள் மூலம் தனியார் சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கும். ஆவின் நுகர்வோர்களுக்கு பால் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. அண்ணா நகர் பகுதிக்குட்பட்ட ஆவின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் கார்டு இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளுக்கும் ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்படும். இணையதளம் மூலம் 658 நுகர்வோர்கள் ஸ்மார்ட் கார்டு பெற விண்ணப்பித்துள்ளனர். புதிய மாதாந்திர பால் அட்டை பெற 159 நுகர்வோர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு புதிய பால் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
-மாலைமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
மரணம் அடைந்த 5 போலீசார் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் உதவி: ஜெயலலிதா அறிவிப்பு
முதல் - அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை பெருநகர காவல், ஏழுகிணறு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த காமராஜ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 7.12.2012 அன்று காலமானார்.
நீலகிரி மாவட்டம், சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த கல்லன் 7.12.2012 அன்று சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த துளசி 8.12.2012 அன்று சென்னை, கிழக்குக் கடற்கரை சாலையில், கானாத்தூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படைப் பிரிவு முதல் நிலைக் காவலராகப் பணி புரிந்து வந்த லெட்சுமிநாதன் 6.12.2012 அன்று பணியில் இருக்கும் போது வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்தில் பலத்த காயமடைந்து, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 8.12.2012 அன்று உயிரிழந்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகரம், பாலக்கரை போக்கு வரத்து ஒழுங்கு பிரிவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த ராதாகிருஷ்ணன் 8.12.2012 அன்று தனது இரு சக்கர வாகனத்தில் மல்லாச்சிப்புரம் அருகே சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் சதீஷ்குமார் 8.12.2012 அன்று காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், யு.கொத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த துர்வாசன் என்பவரின் மகன் கிருஷ்ணப்பா 9.12.2012 அன்று தேன்கனிகோட்டை வட்டம், சின்ன நாகதுணை கிராமம் அருகே காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவங்களில் காலமான சதீஷ்குமார் மற்றும் கிருஷ்ணப்பா ஆகியோரின் குடும்பத்திற்கு வனத்துறை மூலம் தலா மூன்று லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், சோழசிராமணி கிராமம், தமிழ் நாடு மின்சார வாரியத்தின் பவானி கட்டளை தடுப்பணை- 3ல் 5.12.2012 அன்று ஜெனரேட்டர் இயந்திரத்தின் சோதனை ஓட்டத்தின் போது, சேலம் மாவட்டம், மேச்சேரி, காவேரி புரத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் ரமேஷ் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
ஈரோடு நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் கணேஷ் மற்றும் சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், குள்ளவீரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் தர்மன் ஆகியோர் காயமடைந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ரமேஷின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்த கணேஷ் மற்றும் தர்மன் ஆகியோருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-மாலைமலர்
முதல் - அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை பெருநகர காவல், ஏழுகிணறு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த காமராஜ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 7.12.2012 அன்று காலமானார்.
நீலகிரி மாவட்டம், சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த கல்லன் 7.12.2012 அன்று சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த துளசி 8.12.2012 அன்று சென்னை, கிழக்குக் கடற்கரை சாலையில், கானாத்தூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படைப் பிரிவு முதல் நிலைக் காவலராகப் பணி புரிந்து வந்த லெட்சுமிநாதன் 6.12.2012 அன்று பணியில் இருக்கும் போது வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்தில் பலத்த காயமடைந்து, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 8.12.2012 அன்று உயிரிழந்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகரம், பாலக்கரை போக்கு வரத்து ஒழுங்கு பிரிவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த ராதாகிருஷ்ணன் 8.12.2012 அன்று தனது இரு சக்கர வாகனத்தில் மல்லாச்சிப்புரம் அருகே சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் சதீஷ்குமார் 8.12.2012 அன்று காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், யு.கொத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த துர்வாசன் என்பவரின் மகன் கிருஷ்ணப்பா 9.12.2012 அன்று தேன்கனிகோட்டை வட்டம், சின்ன நாகதுணை கிராமம் அருகே காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவங்களில் காலமான சதீஷ்குமார் மற்றும் கிருஷ்ணப்பா ஆகியோரின் குடும்பத்திற்கு வனத்துறை மூலம் தலா மூன்று லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், சோழசிராமணி கிராமம், தமிழ் நாடு மின்சார வாரியத்தின் பவானி கட்டளை தடுப்பணை- 3ல் 5.12.2012 அன்று ஜெனரேட்டர் இயந்திரத்தின் சோதனை ஓட்டத்தின் போது, சேலம் மாவட்டம், மேச்சேரி, காவேரி புரத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் ரமேஷ் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
ஈரோடு நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் கணேஷ் மற்றும் சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், குள்ளவீரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் தர்மன் ஆகியோர் காயமடைந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ரமேஷின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்த கணேஷ் மற்றும் தர்மன் ஆகியோருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-மாலைமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கிறிஸ்துமஸ்-பொங்கலுக்கு முன்னதாக ஒரே தவணையில் ரேசன் பொருட்கள்: அமைச்சர் செல்லூர் ராஜு உத்தரவு
கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கே.கே.நகர், அசோக் பில்லர், போரூர், குன்றத்தூர் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் சோதனையில் ஈடுபட்டார். பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, மண்எண்ணை, சமையல் எண்ணை, பருப்பு வகைகள் ஒரே தவணையில் கொடுக்க வேண்டும் என்றும் ரேசன் கடை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகை வர இருப்பதால் அத்தியாவசிய பொருட்களை முன்னதாக வழங்க வேண்டும். பொருட்களின் அளவு குறையாமல் வினியோகிக்க வேண்டும். இதில் தவறு செய்யும் ஊழியர்கள் மீது தயவு தாட்சன்யம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
இந்த ஆய்வின் போது, கூடுதல் பதிவாளர் கலையரசி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
-மாலைமலர்
கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கே.கே.நகர், அசோக் பில்லர், போரூர், குன்றத்தூர் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் சோதனையில் ஈடுபட்டார். பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, மண்எண்ணை, சமையல் எண்ணை, பருப்பு வகைகள் ஒரே தவணையில் கொடுக்க வேண்டும் என்றும் ரேசன் கடை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகை வர இருப்பதால் அத்தியாவசிய பொருட்களை முன்னதாக வழங்க வேண்டும். பொருட்களின் அளவு குறையாமல் வினியோகிக்க வேண்டும். இதில் தவறு செய்யும் ஊழியர்கள் மீது தயவு தாட்சன்யம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
இந்த ஆய்வின் போது, கூடுதல் பதிவாளர் கலையரசி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
-மாலைமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கடும் கோபத்தில் தாயை 94 தடவை குத்தி கொன்ற சிறுவன்
இங்கிலாந்தில் டார்செட் பகுதியில் உள்ள வேமவுத் என்ற இடத்தை சேர்ந்தவர் லீ விட்டில் (42). இவரது மகன் கிரன் ஸ்மித் (17). சம்பவத்தன்று விட்டில் உள்ள படுக்கை அறையில் வீட்டில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் ஸ்மித்திடம் விசாரித்தனர்.
அப்போது, போதை மருந்து விவகாரத்தில் எனது அண்ணன் சிக்கி கொண்டான். இதையடுத்து யார்க்ஷயரில் உள்ள டோன் காஸ்டரில் இருந்து வந்த மர்ம நபர்கள் எனது தாயுடன் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் அவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொன்று விட்டு எனது தாயாரிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி விட்டனர் என்று கதை அளந்தான். இதை போலீசார் நம்ப வில்லை.
மேலும், அவனது நடத்தையில் சந்தேகமும் ஏற்பட்டது. எனவே, அவனிடம் துருவி துருவி விசாரணை நடத்திய போது தாயை தானே கத்தியால் குத்தி கொன்றதை ஒப்புக் கொண்டான். தாயாருக்கு என்னை அதிகமாக பிடிக்காது. இதனால் அவர் மீது கடுமையான கோபம் ஏற்பட்டது. எனவே, அவருடன் வாக்குவாதம் ஏற்பட்ட போது ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தி கொன்று விட்டு பால்கனி வழியாக பைப் மூலம் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டேன் என்றான்.
கொலை செய்யப்பட்ட லீ விட்டிலின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பபட்டது. அங்கு அவரது உடலில் தலை, முகம், கை, கால்கள், முதுகு, தண்டு வடம் உள்ளிடட் 94 இடங்களில் கத்திகுத்து காயங்கள் இருந்தன. இதனால் அவரை ஸ்மித் 94 தடவை கத்தியால் குத்தி கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
-மாலைமலர்
இங்கிலாந்தில் டார்செட் பகுதியில் உள்ள வேமவுத் என்ற இடத்தை சேர்ந்தவர் லீ விட்டில் (42). இவரது மகன் கிரன் ஸ்மித் (17). சம்பவத்தன்று விட்டில் உள்ள படுக்கை அறையில் வீட்டில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் ஸ்மித்திடம் விசாரித்தனர்.
அப்போது, போதை மருந்து விவகாரத்தில் எனது அண்ணன் சிக்கி கொண்டான். இதையடுத்து யார்க்ஷயரில் உள்ள டோன் காஸ்டரில் இருந்து வந்த மர்ம நபர்கள் எனது தாயுடன் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் அவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொன்று விட்டு எனது தாயாரிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி விட்டனர் என்று கதை அளந்தான். இதை போலீசார் நம்ப வில்லை.
மேலும், அவனது நடத்தையில் சந்தேகமும் ஏற்பட்டது. எனவே, அவனிடம் துருவி துருவி விசாரணை நடத்திய போது தாயை தானே கத்தியால் குத்தி கொன்றதை ஒப்புக் கொண்டான். தாயாருக்கு என்னை அதிகமாக பிடிக்காது. இதனால் அவர் மீது கடுமையான கோபம் ஏற்பட்டது. எனவே, அவருடன் வாக்குவாதம் ஏற்பட்ட போது ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தி கொன்று விட்டு பால்கனி வழியாக பைப் மூலம் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டேன் என்றான்.
கொலை செய்யப்பட்ட லீ விட்டிலின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பபட்டது. அங்கு அவரது உடலில் தலை, முகம், கை, கால்கள், முதுகு, தண்டு வடம் உள்ளிடட் 94 இடங்களில் கத்திகுத்து காயங்கள் இருந்தன. இதனால் அவரை ஸ்மித் 94 தடவை கத்தியால் குத்தி கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
-மாலைமலர்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கொழும்பில் சிங்களர்களை விட தமிழர்களே அதிகம்: மக்கள் தொகை கணக்கெடுப்பில் தகவல்
இலங்கையில் சமீபத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மாகாணம் வாரியாகவும், நகரங்கள் மற்றும் கிராமங்கள் வாரியாகவும் இது தனித்தனியாக நடைபெற்றது.
அதில், தலைநகர் கொழும்பில் சிங்களர்களைவிட தமிழர்கள் அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. அப்போது கொழும்பில் 50 சதவீத சிங்களர்கள் குடியேறி இருந்தனர். தற்போது நடைபெற்ற மக்கள்தொகை புள்ளி விவரப்படி அங்கு சிங்களர்களின் மக்கள் தொகை 24 சதவீதமாக குறைந்துள்ளது.
மாறாக 24.5 சதவீதம் இருந்த தமிழர்களின் தொகை 33 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோன்று 19 சதவீதமாக இந்த முஸ்லிம்களின் தொகையும் 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கொழும்பு நகரில் தற்போது 79,468 சிங்களர்களும், 1 லட்சத்து 6 ஆயிரத்து 325 தமிழர்களும், 1 லட்சத்து 26 ஆயிரத்து 345 முஸ்லிம்களும் உள்ளனர்.
-மாலைமலர்
இலங்கையில் சமீபத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மாகாணம் வாரியாகவும், நகரங்கள் மற்றும் கிராமங்கள் வாரியாகவும் இது தனித்தனியாக நடைபெற்றது.
அதில், தலைநகர் கொழும்பில் சிங்களர்களைவிட தமிழர்கள் அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. அப்போது கொழும்பில் 50 சதவீத சிங்களர்கள் குடியேறி இருந்தனர். தற்போது நடைபெற்ற மக்கள்தொகை புள்ளி விவரப்படி அங்கு சிங்களர்களின் மக்கள் தொகை 24 சதவீதமாக குறைந்துள்ளது.
மாறாக 24.5 சதவீதம் இருந்த தமிழர்களின் தொகை 33 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோன்று 19 சதவீதமாக இந்த முஸ்லிம்களின் தொகையும் 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கொழும்பு நகரில் தற்போது 79,468 சிங்களர்களும், 1 லட்சத்து 6 ஆயிரத்து 325 தமிழர்களும், 1 லட்சத்து 26 ஆயிரத்து 345 முஸ்லிம்களும் உள்ளனர்.
-மாலைமலர்
- Sponsored content
Page 13 of 37 • 1 ... 8 ... 12, 13, 14 ... 25 ... 37
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 37
|
|