புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_c10 
1 Post - 14%
Manimegala
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_c10 
11 Posts - 4%
prajai
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_c10 
9 Posts - 4%
Jenila
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_c10 
4 Posts - 2%
Rutu
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_c10 
2 Posts - 1%
Barushree
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_c10 
2 Posts - 1%
jairam
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட செய்திகள்...அச்சலா


   
   

Page 14 of 37 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 25 ... 37  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 78f3e7ac-22fc-41bf-9b54-dd6933912bb0_S_secvpf

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 12:14 am

தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதல் 27 லட்சம் லிட்டராக உயர்வு: அமைச்சர் மூர்த்தி தகவல்

நந்தனம் ஆவின் வளாகத்தில் 'ஆவின் புரோ பால்' என்ற புதிய வகை பாலை அமைச்சர் மூர்த்தி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அண்ணாநகர் பகுதிக்குட்பட்ட ஆசிய விளையாட்டு கிராமத்தில் குடியிருக்கும் ஆவின் நுகர்வோர்களுக்கு ஆவின் மற்றும் சிட்டி யூனியன் வங்கி இணைந்து வழங்கும் 'ஆவின் ஸ்மார்ட் கார்டு' வழங்கினார். நிகழ்ச்சிக்கு பால்வளத்துறை ஆணையர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குநர் ராமச்சந்திரன், முன்னிலை வகித்தார். இதில் பங்கேற்று அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:-

முதல்-அமைச்சர் தமிழகத்தில் இரண்டாவது வெண்மைப் புரட்சியை உருவாக்கிட பல்வேறு பால் வளத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் காரணமாக தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் சரித்திர சாதனையாக நாளொன்றுக்கு 27 லட்சம் லிட்டர் என்ற அளவினை எட்டியுள்ளது. தற்பொழுது சென்னை மாநகரில் 4 வகையான பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

1.5 சதவிகித கொழுப்புச்சத்து, 8.5 சதவிகித இதர சத்துக்கள் கொண்ட இருமுறை சமன்படுத்திய பால், 3 சதவிகித கொழுப்புச்சத்து, 8.5 சதவிகித இதர சத்து கொண்ட சமன்படுத்திய பால், 4.5 சதவிகித கொழுப்புச்சத்து, 8.5 சதவிகித நிலைப்படுத்திய பால் ஆகியவையாகும். இன்று ஆவின் புதிதாக 3.5 சதவீத கொழுப்புச்சத்தும் 10 சதவீத இதர சத்துக்களும் கொண்ட 'ஆவின் புரோ' என்ற புதிய வகை பால் 500 மி.லி ரூ.17-க்கு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

முதற்கட்டமாக 'ஆவின் புரோ பால்' மொத்த விற்பனையாளர்கள் மூலம் தனியார் சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கும். ஆவின் நுகர்வோர்களுக்கு பால் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. அண்ணா நகர் பகுதிக்குட்பட்ட ஆவின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் கார்டு இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளுக்கும் ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்படும். இணையதளம் மூலம் 658 நுகர்வோர்கள் ஸ்மார்ட் கார்டு பெற விண்ணப்பித்துள்ளனர். புதிய மாதாந்திர பால் அட்டை பெற 159 நுகர்வோர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு புதிய பால் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


-மாலைமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 12:15 am

மரணம் அடைந்த 5 போலீசார் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் உதவி: ஜெயலலிதா அறிவிப்பு

முதல் - அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை பெருநகர காவல், ஏழுகிணறு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த காமராஜ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 7.12.2012 அன்று காலமானார்.

நீலகிரி மாவட்டம், சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த கல்லன் 7.12.2012 அன்று சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த துளசி 8.12.2012 அன்று சென்னை, கிழக்குக் கடற்கரை சாலையில், கானாத்தூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படைப் பிரிவு முதல் நிலைக் காவலராகப் பணி புரிந்து வந்த லெட்சுமிநாதன் 6.12.2012 அன்று பணியில் இருக்கும் போது வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்தில் பலத்த காயமடைந்து, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 8.12.2012 அன்று உயிரிழந்தார்.

திருச்சிராப்பள்ளி மாநகரம், பாலக்கரை போக்கு வரத்து ஒழுங்கு பிரிவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த ராதாகிருஷ்ணன் 8.12.2012 அன்று தனது இரு சக்கர வாகனத்தில் மல்லாச்சிப்புரம் அருகே சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் சதீஷ்குமார் 8.12.2012 அன்று காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், யு.கொத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த துர்வாசன் என்பவரின் மகன் கிருஷ்ணப்பா 9.12.2012 அன்று தேன்கனிகோட்டை வட்டம், சின்ன நாகதுணை கிராமம் அருகே காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவங்களில் காலமான சதீஷ்குமார் மற்றும் கிருஷ்ணப்பா ஆகியோரின் குடும்பத்திற்கு வனத்துறை மூலம் தலா மூன்று லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், சோழசிராமணி கிராமம், தமிழ் நாடு மின்சார வாரியத்தின் பவானி கட்டளை தடுப்பணை- 3ல் 5.12.2012 அன்று ஜெனரேட்டர் இயந்திரத்தின் சோதனை ஓட்டத்தின் போது, சேலம் மாவட்டம், மேச்சேரி, காவேரி புரத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் ரமேஷ் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.

ஈரோடு நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் கணேஷ் மற்றும் சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், குள்ளவீரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் தர்மன் ஆகியோர் காயமடைந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ரமேஷின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்த கணேஷ் மற்றும் தர்மன் ஆகியோருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-மாலைமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 12:15 am

கிறிஸ்துமஸ்-பொங்கலுக்கு முன்னதாக ஒரே தவணையில் ரேசன் பொருட்கள்: அமைச்சர் செல்லூர் ராஜு உத்தரவு

கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கே.கே.நகர், அசோக் பில்லர், போரூர், குன்றத்தூர் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் சோதனையில் ஈடுபட்டார். பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, மண்எண்ணை, சமையல் எண்ணை, பருப்பு வகைகள் ஒரே தவணையில் கொடுக்க வேண்டும் என்றும் ரேசன் கடை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகை வர இருப்பதால் அத்தியாவசிய பொருட்களை முன்னதாக வழங்க வேண்டும். பொருட்களின் அளவு குறையாமல் வினியோகிக்க வேண்டும். இதில் தவறு செய்யும் ஊழியர்கள் மீது தயவு தாட்சன்யம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

இந்த ஆய்வின் போது, கூடுதல் பதிவாளர் கலையரசி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

-மாலைமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 12:16 am

கடும் கோபத்தில் தாயை 94 தடவை குத்தி கொன்ற சிறுவன்

இங்கிலாந்தில் டார்செட் பகுதியில் உள்ள வேமவுத் என்ற இடத்தை சேர்ந்தவர் லீ விட்டில் (42). இவரது மகன் கிரன் ஸ்மித் (17). சம்பவத்தன்று விட்டில் உள்ள படுக்கை அறையில் வீட்டில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் ஸ்மித்திடம் விசாரித்தனர்.

அப்போது, போதை மருந்து விவகாரத்தில் எனது அண்ணன் சிக்கி கொண்டான். இதையடுத்து யார்க்ஷயரில் உள்ள டோன் காஸ்டரில் இருந்து வந்த மர்ம நபர்கள் எனது தாயுடன் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் அவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொன்று விட்டு எனது தாயாரிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி விட்டனர் என்று கதை அளந்தான். இதை போலீசார் நம்ப வில்லை.

மேலும், அவனது நடத்தையில் சந்தேகமும் ஏற்பட்டது. எனவே, அவனிடம் துருவி துருவி விசாரணை நடத்திய போது தாயை தானே கத்தியால் குத்தி கொன்றதை ஒப்புக் கொண்டான். தாயாருக்கு என்னை அதிகமாக பிடிக்காது. இதனால் அவர் மீது கடுமையான கோபம் ஏற்பட்டது. எனவே, அவருடன் வாக்குவாதம் ஏற்பட்ட போது ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தி கொன்று விட்டு பால்கனி வழியாக பைப் மூலம் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டேன் என்றான்.

கொலை செய்யப்பட்ட லீ விட்டிலின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பபட்டது. அங்கு அவரது உடலில் தலை, முகம், கை, கால்கள், முதுகு, தண்டு வடம் உள்ளிடட் 94 இடங்களில் கத்திகுத்து காயங்கள் இருந்தன. இதனால் அவரை ஸ்மித் 94 தடவை கத்தியால் குத்தி கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது.

-மாலைமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 12:17 am

கொழும்பில் சிங்களர்களை விட தமிழர்களே அதிகம்: மக்கள் தொகை கணக்கெடுப்பில் தகவல்

இலங்கையில் சமீபத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மாகாணம் வாரியாகவும், நகரங்கள் மற்றும் கிராமங்கள் வாரியாகவும் இது தனித்தனியாக நடைபெற்றது.

அதில், தலைநகர் கொழும்பில் சிங்களர்களைவிட தமிழர்கள் அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. அப்போது கொழும்பில் 50 சதவீத சிங்களர்கள் குடியேறி இருந்தனர். தற்போது நடைபெற்ற மக்கள்தொகை புள்ளி விவரப்படி அங்கு சிங்களர்களின் மக்கள் தொகை 24 சதவீதமாக குறைந்துள்ளது.

மாறாக 24.5 சதவீதம் இருந்த தமிழர்களின் தொகை 33 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோன்று 19 சதவீதமாக இந்த முஸ்லிம்களின் தொகையும் 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கொழும்பு நகரில் தற்போது 79,468 சிங்களர்களும், 1 லட்சத்து 6 ஆயிரத்து 325 தமிழர்களும், 1 லட்சத்து 26 ஆயிரத்து 345 முஸ்லிம்களும் உள்ளனர்.

-மாலைமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 12:18 am

1000 கிலோ வெடிபொருள் ஏந்தி செல்லும் அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி
இந்தியாவின் பாதுகாப்புக்காக அக்னி ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் அக்னி-1 ரக ஏவுகணைகள் ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அக்னி-1 ரக ஏவுகணைகளை இந்திய ராணுவ அதிகாரிகள் அடிக்கடி சோதித்து பார்த்து வருகிறார்கள். கடைசியாக இந்த ரக ஏவுகணை கடந்த ஜுலை மாதம் 13-ந் தேதி சோதித்து பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அக்னி-1 ரக ஏவுகணை இன்று காலை மீண்டும் சோதிக்கப்பட்டது. வழக்கம் போல் ஓடிசா மாநில கடலோரத்தில் இந்த சோதனை நடந்தது. ஓடிசாவில் இருந்து கடலுக்குள் சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீலர் தீவில் இருந்து காலை 8.30 மணிக்கு அக்னி-1 ஏவுகணை ஏவப்பட்டது.

இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக ராணுவ அதிகாரி பிரசாத் அறிவித்துள்ளார். இன்றைய சோதனையின் போது அக்னி-1 ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை சரியாக தாக்கியது. இத்தகைய சோதனை தொடந்து நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்னி-1 ஏவுகணை சுமார் 12 டன் எடை கொண்டது.15 மீட்டர் நீளம் உடையது. இந்த ஏவுகணை சுமார் 1000 கிலோ எடை கொண்ட வெடிப் பொருட்களை ஏந்திச் செல்லும். 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது.

-மாலைமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 12:20 am

வில்லிவாக்கம்: ஆட்டோவில் பயணி தவற விட்ட ரூ. 2 லட்சம் நகைகள் - டிரைவர் போலீசில் ஒப்படைத்தார்

அண்ணாநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் கந்தன் (43). ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை சவுகார்பேட்டையில் இருந்து அயனாவரத்துக்கு பயணிகளை ஏற்றி வந்தார். அவர்கள் இறங்கிச் சென்றதும் வீடு திரும்பி ஆட்டோவை நிறுத்தினார். மறுநாள் காலை ஆட்டோவை சுத்தம் செய்தபோது இருக்கையின் பின்னால் துணிப்பையில் புடவை, ஜாக்கெட் மற்றும் தங்க நெக்லஸ், கம்மல், வளையல், செயின், மோதிரம், செல்போன் போன்றவை இருந்ததை பார்த்து திடுக்கிட்டார். யாராவது தவற விட்ட பயணி வருவார்களா? என 2 நாட்களாக எதிர்பார்த்து இருந்தார்.

நகைகளையும் வீட்டில் வைத்து இருந்தார். ஆனால் யாரும் வராததால் இன்று காலை ஆட்டோ டிரைவர் கந்தன் நகைப்பையுடன் செகரட்டரியேட் காலனி போலீஸ் நிலையம் சென்றார். அங்கு போலீஸ் அதிகாரிகளிடம் நகைகளை ஒப்படைத்தார். இதை தவற விட்ட பயணிகள் உரிய அடையாளங்களை கூறி பெற்றுச் செல்லலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

-மாலைமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 13, 2012 12:23 am

நாக்பூரில் நாளை 4-வது டெஸ்ட்: வெற்றி நெருக்கடியில் இந்தியா
கூக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது. மும்பையில் நடந்த 2-வது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடந்த 3-வது டெஸ்டில் 7 விக்கெட்டிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாக்பூரில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. டெஸ்ட் தொடரை சமன் செய்ய இந்த டெஸ்டில் கட்டாய வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. தொடர்ந்து 2 டெஸ்டில் டோனி தலைமையிலான இந்திய அணி தோற்றதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்த தோல்வி காரணமாக தேர்வு குழு இந்திய அணியில் அதிரடி மாற்றம் செய்துள்ளது. யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங், ஜாகீர்கான் ஆகியோருக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா, பிïஸ் சாவ்லா, பர்வீந்தர் அவன்னா இடம் பெற்று உள்ளனர். இந்திய அணி மும்பை மற்றும் கொல்கத்தா டெஸ்டில் அனைத்து வகையிலும் இங்கிலாந்திடம் சரண்டர் ஆனது. இந்திய அணியின் பேட்டிங்கும் சரியில்லை. பந்துவீச்சும் கவலை அளித்தது. இதையெல்லாம் நாக்பூர் டெஸ்டில் சரி கட்ட வேண்டிய நிலை உள்ளது. ஒட்டு மொத்த பேட்டிங்கும் மோசமாக உள்ளது.

சீனியர் வீரர்களான தெண்டுல்கர், ஷேவாக், காம்பீர் நிலைத்து நின்று ஆடி ரன்களை குவிப்பது அவசியமாகிறது. இதேபோல இளம் வீரர்களான புஜாரா, கோலி ஆகியோர் தங்களது பங்களிப்பை உணர்ந்து ஆட வேண்டும். மோசமான நிலையில் இருக்கும் கேப்டன் டோனி தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

பேட்டிங் திறன் குறைந்து காணப்படும் தெண்டுல்கர் ஓய்வு நெருக்கடியில் உள்ளார். நாக்பூர் டெஸ்டோடு அவர் ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் இந்த டெஸ்ட் அவருக்கு கடைசி டெஸ்டாக இருக்குமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த டெஸ்டில் அவர் சிறப்பாக ஆட வேண்டிய நிலையில் உள்ளார். யுவராஜ்சிங் இடத்தில் ரவிந்திர ஜடேஜா இடம் பெறலாம். ஏனென்றால் அவர் சமீபத்தில் ரஞ்சி டிராபியில் டிரிபிள் செஞ்சூரி அடித்தார். அதோடு ரகானேவும், முரளி விஜய்யும் தொடக்க வீரர்கள் என்பதால் ஜடேஜாவுக்கே வாய்ப்பு கிடைக்கும்.

ஜாகீர்கான் நீக்கப்பட்டதால் அந்த இடத்தில் அசோக் திண்டா இடம் பெறுவார். அவரும், இஷாந்த் சர்மாவும் வேகப்பந்து வீரர்களாக இருப்பார்கள். புதுமுக வீரர் அவன்னாவுக்கு வாய்ப்பு குறைவே. சுழற்பந்தில் அஸ்வின், ஒஜா தொடர்ந்து ஆடுவார்கள். பியூஸ் சாவ்லாவுக்கு குறைவான வாய்ப்பே இருக்கிறது.

இங்கிலாந்து அணி பொறுத்தவரை `டிரா' செய்தாலே தொடரை கைப்பற்றும். ஆனால் அந்த அணி இந்த டெஸ்டிலும் வென்று `ஹாட்ரிக்' வெற்றியை பெற்று தொடரை வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது. இங்கிலாந்து அணி கடைசியாக 1984-85-ம் ஆண்டு இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. டெவிட் கோவர் தலைமையிலான அந்த அணி 5 டேஸ்ட் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 28 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை வெல்லும் ஆர்வத்தில் இங்கிலாந்து உள்ளது.

இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் கேப்டன் கூக், பீட்டர்சன், டிராட், பிரையர் ஆகியோரும், பந்துவீச்சில் ஆண்டர்சன், ஸ்டீவன்பின், பனேசர், சுவான் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். நாளைய டெஸ்ட் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

-மாலைமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 13, 2012 1:14 pm

முலாயம் மீது சிபிஐ விசாரணையைத் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி



சமாஜ்வாடிக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் மற்றும் அவரது மகன் அகிலேஷ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முலாயம் சிங், அகிலேஷ் யாதவ் மற்றும் டிம்பிள் யாதவ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சிபிஐ விசாரணை நடத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று வெளியானது. அதில், முலாயம் சிங் மற்றும் அகிலேஷ் யாதவ் மீதான சிபிஐ விசாரணையை எவ்வித இடையூறும் இன்றி சுதந்திரமாக சிபிஐ நடத்தலாம் என்றும், டிம்பிள் யாதவ் மீதான விசாரணையை கைவிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், சிபிஐ தனது விசாரணை அறிக்கையை, மத்திய அரசிடம் தாக்கல் செய்யாமல், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்திக் கொள்வதாக முலாயம் சிங் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி





சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 13, 2012 1:16 pm

ஈரான் சிறையில் 22 இந்திய மீனவர்கள்! மத்திய, மாநில அரசுகள் தலையிடுமா?

இந்திய மீனவர்கள் 22 பேர் ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவரம் அவர்களது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த மனித உரிமை மீறலை தடுத்துநிறுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று மீனவர் அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
மீனவர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது குறித்து தங்களுக்கு அதிகாரபூர்வ தகவல் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினரும் தங்களை தொடர்பு கொண்டுள்ளதாகவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுசெயலர் அருள்தந்தை சர்ச்சில் புதன்கிழமை தெரிவித்தார்.
வளைகுடா நாடுகளில் தமிழகத்தை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 90 சதவிகிதம் பேர் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
இந்திய தீபகற்ப பகுதியில் இருப்பதாலும் பெரும் கடல்பரப்பு உள்ளதாலும் மீனவர்கள் அடுத்த நாட்டு கடல் எல்லையை தாண்டும் பிரச்னைகள் அவ்வளவாக எழவில்லை. ஆனால், வளைகுடா நாடுகளின் கடற்பகுதி குறுகியது.
இதனால் அங்கு கடலில் மீன்பிடிக்க படகுகளில் செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வது அவர்களுக்கு தெரியாமலேயே நடந்து விடுகிறது.
இதனால் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்படுவது கடந்த பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது.
அந்த வகையில் கடந்த அக்டோபர் 10-ம் தேதி கத்தார் நாட்டிலிருந்து 6 விசைப்படகுகளில் 29 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
அவர்களில் 26 பேர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரோக்கியபுரம், கடியப்பட்டினம், குளச்சல், சைமன் காலனி, இனையம், இனையம்புத்தன்துறை, ராமன்துறை, பூத்துறை ஆகிய கடற்கரை கிராமங்களை சேர்ந்தவர்கள். ஒருவர் காரைக்காலை சேர்ந்தவர், மேலும் இருவர் கேரள மாநிலத்தவர்.
கத்தார் நாட்டில் தங்கியிருந்து பல ஆண்டுகளாக மீன்பிடித்து வந்த இவர்கள்,அன்று ஈரான் கடல் எல்லையை தாண்டியதாக அந்நாட்டு கடலோர காவல் படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.
சிறைபிடிக்கப்படும் மீனவர்கள் வழக்கமாக ஓரிரு நாளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்படுவார்கள்.
ஆனால் இந்த மீனவர்கள் கடலுக்குள் படகுகளிலேயே 60 நாள்களுக்கு மேல் சிறைவைக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு சிறைவைக்கப்பட்டிருந்தோருக்குப் பசியாற போதிய உணவு அளிக்கப்படவில்லை. மாற்று உடைகளும் வழங்கப்படவில்லை. இது குறித்து மீனவர்களின் உறவினர்களுக்கு தெரியவந்ததும் அவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு இந்த விவகாரத்தில் தலையிட்டு சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு அந்த அமைப்பின் கத்தார் நாட்டு ஒருங்கிணைப்பாளர் எலியாஸ் மூலம் உதவிகள் கிடைக்கச்செய்தது.
இதனிடையே கடந்த 8-ம் தேதி 22 மீனவர்களை படகுகளில் இருந்து கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருக்கிறார்கள். மற்ற 7 பேரும் படகுகளிலேயே சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் தற்போது இக்கிஸ் என்ற தீவுப்பகுதியிலுள்ள பெட்ராபாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சிறையில் அடைக்கப்பட்டுல்ள மீனவர் ரவி என்பவர், தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் வளைகுடா நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் தங்கனிடம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் கண்ணீர்விட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டால் உணவு, மாற்று உடை, பாதுகாப்பு கிடைக்கும் என்று மீனவர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அதற்குமாறாக சிறையில் மனித உரிமை மீறல் நடந்து வருவது தெரியவந்துள்ளது. 22 மீனவர்களும் உட்காரகூட முடியாத அளவுக்கு குறுகிய அறைக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இரவில் நின்றுகொண்டே தூங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. காலை, மாலை வேளைகளில் ஒரே ஒரு குப்பாஸ் எனப்படும் வெண்ணெய் தடவிய ரொட்டித்துண்டு மட்டும் அளிக்கப்படுகிறது.
ஆனால் மீன்பிடி தொழிலில் ஈடுபடும்போது ஒரு நேரத்துக்கு 5 குப்பாஸ் வரையில் சாப்பிடுவார்கள். தற்போது 22 மீனவர்களுக்கும் மதியம் ஒரே ஒரு தட்டில் மிகக்குறைந்த அளவுக்கே சாப்பாடு அளிக்கப்படுகிறது. ஒரு தட்டிலுள்ள சோற்றை காக்கைகள் கொத்தி தின்பதுபோல் 22 மீனவர்களும் சாப்பிட நேரிட்டுள்ளது. இதனால் அவர்கள் பசியால் வாடுகிறார்கள்.
இந்த மனித உரிமை மீறல் குறித்து தெற்காசிய மீனவர் தோழமை ஆலோசகர் வழக்குரைஞர் கொச்சேரி ஈரானிலுள்ள இந்திய தூதரகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
இந்த மனித உரிமை மீறலை தடுக்கவும், சிறையிலுள்ள மீனவர்களுக்கு உணவு கிடைக்கவும், அப்பாவி இந்திய மீனவர்களை விடுவிக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்ச்சில் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் உடனே நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வளைகுடா நாடுகளில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்கவும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கவும், அந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

தினமணி




சுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 14 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 14 of 37 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 25 ... 37  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக