புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை
Page 16 of 17 •
Page 16 of 17 • 1 ... 9 ... 15, 16, 17
- GuestGuest
First topic message reminder :
தாக்குதல் தொடர்ந்தால் ஒரு லாரியும் கேரளாவுக்குப் போகாது- தமிழக லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை
நாமக்கல்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் லாரிகளை தொடர்ந்து தாக்கினால் ஒரு லாரி கூட கேரளாவுக்கு போகாது. அதேபோல அங்கிருந்து ஒரு லாரியையும் இங்கேவர விட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்திலிருந்துதான் கேரளாவுக்கு அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களும் போகின்றன. தினசரி தமிழகத்திலிருந்து 1000 லாரிகள் வரை கேரளாவுக்குப் போய் வருகின்றன.
ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை என்ற பெயரில் தமிழக லாரிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். குமுளியில் தமிழக லாரிகளைத் தாக்கியதோடு,அதன் டிரைவர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்த சம்பவத்தால் தமிழக லாரிகளுக்கும், எங்களின் டிரைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை கேரளாவில் நிலவுகிறது. எனவே எங்களது லாரிகளை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.
இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து ஒரு லாரி கூட கேரளாவுக்குப் போகாது. எந்தப் பொருளையும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல மாட்டோம். அதேபோல கேரளாவிலிருந்து ஒரு லாரியையும் இங்கே நுழைய அனுமதிக்க மாட்டோம்.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் லாரிகளுக்கும், அதன் டிரைவர்களுக்கும், கிளீனர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பாகும் என்றார் நல்லதம்பி.
தாக்குதல் தொடர்ந்தால் ஒரு லாரியும் கேரளாவுக்குப் போகாது- தமிழக லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை
நாமக்கல்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் லாரிகளை தொடர்ந்து தாக்கினால் ஒரு லாரி கூட கேரளாவுக்கு போகாது. அதேபோல அங்கிருந்து ஒரு லாரியையும் இங்கேவர விட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்திலிருந்துதான் கேரளாவுக்கு அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களும் போகின்றன. தினசரி தமிழகத்திலிருந்து 1000 லாரிகள் வரை கேரளாவுக்குப் போய் வருகின்றன.
ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை என்ற பெயரில் தமிழக லாரிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். குமுளியில் தமிழக லாரிகளைத் தாக்கியதோடு,அதன் டிரைவர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்த சம்பவத்தால் தமிழக லாரிகளுக்கும், எங்களின் டிரைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை கேரளாவில் நிலவுகிறது. எனவே எங்களது லாரிகளை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.
இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து ஒரு லாரி கூட கேரளாவுக்குப் போகாது. எந்தப் பொருளையும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல மாட்டோம். அதேபோல கேரளாவிலிருந்து ஒரு லாரியையும் இங்கே நுழைய அனுமதிக்க மாட்டோம்.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் லாரிகளுக்கும், அதன் டிரைவர்களுக்கும், கிளீனர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பாகும் என்றார் நல்லதம்பி.
- GuestGuest
தேனியில் நடைபெற்று வருகின்ற உண்ணா நிலை போராட்டதில் சீமான் பங்கேற்று வருகிறார் ...நாம் தமிழர் மற்றும் தமிழர் தேசிய பேரவை பேச்சாளர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள் ...
அய்யா பழ நெடுமாறன் அவர்கள் பங்கேற்கவில்லை ...
அய்யா பழ நெடுமாறன் அவர்கள் பங்கேற்கவில்லை ...
- GuestGuest
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தேனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளாவின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உரிமைப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
இதனிடையே தேனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதன்மை ஒருங்கிணைப்hளர் கா.கலைக்கோட்டுதயம், சாகுல்அமீது, அய்யனாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெற்றிச்செல்வன், அமுதாநம்பி உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழன் தொலைக்காட்சி
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளாவின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உரிமைப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
இதனிடையே தேனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதன்மை ஒருங்கிணைப்hளர் கா.கலைக்கோட்டுதயம், சாகுல்அமீது, அய்யனாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெற்றிச்செல்வன், அமுதாநம்பி உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழன் தொலைக்காட்சி
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
சீமானயும் மாமாமனயும் நம்பி ஒரு தீர்வும் இல்லை!! மக்கள் ஒன்றுபட்டால் தான்!! UNION IS STRENGTH
- GuestGuest
போலீஸ் உதவியோடு திருச்சூரில் 20க்கும் மேற்பட்ட தமிழக ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் மீது தாக்குதல்!!
கோவை: கோவை மாவட்டம் வழியாக கேரளாவுக்கு தடையின்றி நடைபெற்றுக் கொண்டிருந்த வாகனப் போக்குவரத்திலும் தற்போது சிக்கல் வந்து விட்டது. தமிழகத்திலிருந்து போன ஐயப்ப பக்தர்கள் வாகனத்தை கேரள போலீஸாரின் பெரும் துணையோடு மலையாளிகள் தாக்கி சேதப்படுத்தினர். குருவாயூரில் ஒரு பேருந்து தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இதனால் கோவை மாவட்டம் வழியாக வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2 வாரங்களாக கேரளாவில் தமிழர்களைக் குறி வைத்தும், தமிழக வாகனங்களைக் குறி வைத்தும், ஐயப்ப பக்தர்களைக் குறி வைத்தும் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதற்குப் பதிலடியாக தமிழகத்திலும் ஆங்காங்கு மலையாளிகளின் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தாக்கப்பட்டு வருகின்றன.
இதனால் தேனி மாவட்டம் வழியாக கேரளாவுக்கும், அங்கிருந்து தமிழகத்திற்கும் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.
அதேசமயம், செங்கோட்டை வழியாகவும், கோவை வழியாகவும் வாகனப் போக்குவரத்து பிரச்சினையின்றி நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவை வழியாக கேரளாவுக்குச் செல்லும் வாகனப் போக்குவரத்திற்கும் தற்போது சிக்கல் வந்து விட்டது.
கோவை மாவட்டம் வாளையாறு பகுதி தமிழக, கேரள எல்லையாகும். இந்த வழியாகப் போவது எளிதானது என்பதாலும், மலைப் பிரதேசம் எதுவும் இந்த வழியில் குறுக்கிடாது என்பதாலும் வாகனதாரிகள் இந்த வழியை அதிகம் விரும்புவார்கள். மேலும் எர்ணாகுளம், கொச்சி, திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குச் செல்ல இதுதான் எளிய வழியாகும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பிரச்சினை வெடித்த நிலையில் தேனி மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில் வாளையாறு பகுதியில் பிரச்சினை இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு இந்தப் பகுதி வழியாக சபரிமலைக்குச் சென்ற ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை ஒரு சமூக விரோதக் கும்பல் சரமாரியாக கல்வீசித் தாக்கியது. இதில் 20க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. மேலும் ஐயப்ப பக்தர்களையும் தாக்கியுள்ளனர் அந்த சமூக விரோதக் கும்பலைச் சேர்ந்த மலையாளிகள்.
இதையடுத்து அங்கிருந்த போலீஸாரிடம் விரைந்து சென்று தமிழக பக்தர்கள் பாதுகாப்பு கேட்டபோது, நான்தாண்டா அடிக்க் சொன்னேன், ஓடுங்கடா என்று அவர்கள் வெறித்தனமாக பேசியுள்ளனர். இதனால் செய்வதறியாமல் திகைத்த தமிழக பக்தர்கள் வண்டிகளை எடுத்துக் கொண்டு மீண்டும் கோவை திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து பெருந்துறையைச் சேர்ந்த ஒரு பக்தர் கூறுகையில், தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு கேரளாவில் சுத்தமாக பாதுகாப்பு இல்லை. போலீஸாரின் உதவியுடன்தான் மலையாளிகள் நம்மைத் தாக்குகின்றனர். போலீஸாரே தாக்கச் சொல்லி தூண்டுகின்றனர்.
உங்கள் ஊரில் உள்ள முருகன் கோவிலுக்குப் போக வேண்டியதுதானேடா, இங்கு எதுக்குடா வர்றீங்க என்று கேட்டு படு மோசமான கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டுகின்றனர். இதனால் வேறு வழியில்லாமல் நாங்கள் ஊர் திரும்பி விட்டோம் என்றார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து வாளையாறு சோதனைச் சாவடியுடன் தமிழகத்திலிருந்து போகும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதற்கு மேல் போக போலீஸார் அனுமதி தரவில்லை. இதனால் கோவை மாவட்டம் வழியாக கேரளாவுக்கான போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் வழியாக கேரளாவுக்கு தடையின்றி நடைபெற்றுக் கொண்டிருந்த வாகனப் போக்குவரத்திலும் தற்போது சிக்கல் வந்து விட்டது. தமிழகத்திலிருந்து போன ஐயப்ப பக்தர்கள் வாகனத்தை கேரள போலீஸாரின் பெரும் துணையோடு மலையாளிகள் தாக்கி சேதப்படுத்தினர். குருவாயூரில் ஒரு பேருந்து தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இதனால் கோவை மாவட்டம் வழியாக வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2 வாரங்களாக கேரளாவில் தமிழர்களைக் குறி வைத்தும், தமிழக வாகனங்களைக் குறி வைத்தும், ஐயப்ப பக்தர்களைக் குறி வைத்தும் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதற்குப் பதிலடியாக தமிழகத்திலும் ஆங்காங்கு மலையாளிகளின் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தாக்கப்பட்டு வருகின்றன.
இதனால் தேனி மாவட்டம் வழியாக கேரளாவுக்கும், அங்கிருந்து தமிழகத்திற்கும் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.
அதேசமயம், செங்கோட்டை வழியாகவும், கோவை வழியாகவும் வாகனப் போக்குவரத்து பிரச்சினையின்றி நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவை வழியாக கேரளாவுக்குச் செல்லும் வாகனப் போக்குவரத்திற்கும் தற்போது சிக்கல் வந்து விட்டது.
கோவை மாவட்டம் வாளையாறு பகுதி தமிழக, கேரள எல்லையாகும். இந்த வழியாகப் போவது எளிதானது என்பதாலும், மலைப் பிரதேசம் எதுவும் இந்த வழியில் குறுக்கிடாது என்பதாலும் வாகனதாரிகள் இந்த வழியை அதிகம் விரும்புவார்கள். மேலும் எர்ணாகுளம், கொச்சி, திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குச் செல்ல இதுதான் எளிய வழியாகும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பிரச்சினை வெடித்த நிலையில் தேனி மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில் வாளையாறு பகுதியில் பிரச்சினை இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு இந்தப் பகுதி வழியாக சபரிமலைக்குச் சென்ற ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை ஒரு சமூக விரோதக் கும்பல் சரமாரியாக கல்வீசித் தாக்கியது. இதில் 20க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. மேலும் ஐயப்ப பக்தர்களையும் தாக்கியுள்ளனர் அந்த சமூக விரோதக் கும்பலைச் சேர்ந்த மலையாளிகள்.
இதையடுத்து அங்கிருந்த போலீஸாரிடம் விரைந்து சென்று தமிழக பக்தர்கள் பாதுகாப்பு கேட்டபோது, நான்தாண்டா அடிக்க் சொன்னேன், ஓடுங்கடா என்று அவர்கள் வெறித்தனமாக பேசியுள்ளனர். இதனால் செய்வதறியாமல் திகைத்த தமிழக பக்தர்கள் வண்டிகளை எடுத்துக் கொண்டு மீண்டும் கோவை திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து பெருந்துறையைச் சேர்ந்த ஒரு பக்தர் கூறுகையில், தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு கேரளாவில் சுத்தமாக பாதுகாப்பு இல்லை. போலீஸாரின் உதவியுடன்தான் மலையாளிகள் நம்மைத் தாக்குகின்றனர். போலீஸாரே தாக்கச் சொல்லி தூண்டுகின்றனர்.
உங்கள் ஊரில் உள்ள முருகன் கோவிலுக்குப் போக வேண்டியதுதானேடா, இங்கு எதுக்குடா வர்றீங்க என்று கேட்டு படு மோசமான கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டுகின்றனர். இதனால் வேறு வழியில்லாமல் நாங்கள் ஊர் திரும்பி விட்டோம் என்றார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து வாளையாறு சோதனைச் சாவடியுடன் தமிழகத்திலிருந்து போகும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதற்கு மேல் போக போலீஸார் அனுமதி தரவில்லை. இதனால் கோவை மாவட்டம் வழியாக கேரளாவுக்கான போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
- GuestGuest
கேரளாவைக் கண்டித்து கூடலூரில் 1 லட்சம் பேர் திரண்டு பேரணி-போடியில் உண்ணாவிரதம்
கூடலூர்: கேரளாவைக் கண்டித்து இன்றும் தேனி மாவட்டத்தில் ஒரு லட்சம் பேர் திரண்டு மாபெரும் பேரணி நடத்தியுள்ளனர். மேலும் போடிநாயக்கனூரில் 3000 பேர் திரண்டு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.
தேனி மாவட்டத்தில் கடந்த 14 நாட்களாக கேரளாவைக் கண்டித்து தொடர் பேரணிகள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், சாலை மறியல்கள் நடந்து வருகின்றன.
கேரளாவைக் கண்டித்து நடந்து வரும் தொடர் போராட்டங்கள், கொந்தளிப்பு காரணமாக கேரளாவுக்கான குமுளி வழியே போக்குவரத்து தொடர்ந்து முடங்கிப் போயுள்ளது.
தொடர்ந்து லட்சக்கணக்கானோர் திரண்டு தினசரி பேரணி நடத்தி காவல்துறையை திக்குமுக்காட வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்றும் கூடலூர் வழியாக குமுளியை நோக்கி லட்சம் பேர் திரண்டு மாபெரும் பேரணி நடத்தினர். ஆனால் அவர்களை போலீஸார் தொடர்ந்து செல்ல அனுமதிக்கவில்லை.
இதையடுத்து தேனி சாலையில் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரும் திரளான பெண்களும் இதில் கலந்து கொண்டனர்.
போராட்டம் நடத்தியவர்கள் கூறுகையில், கேரள அரசு புதிய அணை கட்டக் கூடாது.முல்லைப் பெரியாறு அணையை இடிக்கக் கூடாது. இடித்தால் ஆயுதப் போராட்டத்திலும் குதிக்கத் தயங்க மாட்டோம் என்று எச்சரித்தனர்.
இதற்கிடையே போடிநாயக்கனூரில் உள்ள வ.உ.சி. திடலில் 3000 பேர் கூடி உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று நடத்தினர்.
கூடலூர்: கேரளாவைக் கண்டித்து இன்றும் தேனி மாவட்டத்தில் ஒரு லட்சம் பேர் திரண்டு மாபெரும் பேரணி நடத்தியுள்ளனர். மேலும் போடிநாயக்கனூரில் 3000 பேர் திரண்டு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.
தேனி மாவட்டத்தில் கடந்த 14 நாட்களாக கேரளாவைக் கண்டித்து தொடர் பேரணிகள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், சாலை மறியல்கள் நடந்து வருகின்றன.
கேரளாவைக் கண்டித்து நடந்து வரும் தொடர் போராட்டங்கள், கொந்தளிப்பு காரணமாக கேரளாவுக்கான குமுளி வழியே போக்குவரத்து தொடர்ந்து முடங்கிப் போயுள்ளது.
தொடர்ந்து லட்சக்கணக்கானோர் திரண்டு தினசரி பேரணி நடத்தி காவல்துறையை திக்குமுக்காட வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்றும் கூடலூர் வழியாக குமுளியை நோக்கி லட்சம் பேர் திரண்டு மாபெரும் பேரணி நடத்தினர். ஆனால் அவர்களை போலீஸார் தொடர்ந்து செல்ல அனுமதிக்கவில்லை.
இதையடுத்து தேனி சாலையில் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரும் திரளான பெண்களும் இதில் கலந்து கொண்டனர்.
போராட்டம் நடத்தியவர்கள் கூறுகையில், கேரள அரசு புதிய அணை கட்டக் கூடாது.முல்லைப் பெரியாறு அணையை இடிக்கக் கூடாது. இடித்தால் ஆயுதப் போராட்டத்திலும் குதிக்கத் தயங்க மாட்டோம் என்று எச்சரித்தனர்.
இதற்கிடையே போடிநாயக்கனூரில் உள்ள வ.உ.சி. திடலில் 3000 பேர் கூடி உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று நடத்தினர்.
- GuestGuest
தமிழர்கள் மீது தாக்குதல்: கேரளாவில் இருந்து நெல்லை திரும்பும் வியாபாரிகள்
நெல்லை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையால் கேரளாவில் வசிக்கும் தமிழக வியாபாரிகள் அதிக அளவில் ஊர் திரும்பி வருகின்றனர்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையால் தமிழகம் மற்றும் கேரளா இடையேயான உறவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மலையாளிகளின் கடைகள் தாக்கப்பட்டு வருகின்றன. இதே போன்று கேரளாவில் வசிக்கும் தமிழர்களை மலையாளிகள் தாக்கி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் மூன்று வழித்தடங்களும் அடைக்கப்பட்டுள்ளன. கடந்த 10 நாட்களாக தமிழக-கேரள எல்லைப் பகுதியை நோக்கி பொதுமக்கள் செல்வதும், போலீசார் அவர்களை விரட்டியடிப்பதும் நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம், கடையம், சுரண்டை, அம்பை, சேரன்மகாதேவி, தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பல ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் கேரளாவில் தங்கி பாத்திர வியாபாரம், கட்டிட தொழில், ஹோட்டல்களில் பணிபுரிந்து வருகின்றனர். கடையம் அருகே உள்ள புலவன் என்ற ஊரைச் சேர்ந்தவர் தாவீது. கோட்டயம் அருகே உள்ள ஏழாம் மைலில் 25 கடைகள் வைத்து கடந்த 20 வருடமாக பாத்திர வியாபாரம் செய்து வருகிறார்.
முல்லைப் பெரியாறு பிரச்சனை காரணமாக கேரளாவில் வாழும் தமிழர்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதால் ஏழாம் மைல் பஞ்சாயத்து தலைவர் தாவீதுவிடம் ஊருக்கு சென்று விடுங்கள், பிரச்சனை தீர்ந்ததும் திரும்பி வாருங்கள் என பலர் ஆலோசனை கூறியுள்ளனர். இதனால் அவர் உள்பட அப்பகுதியில் வியாபாரம் செய்து வந்த பல தமிழர்கள் ஊருக்கு வந்துவிட்டனர். இது போல் 1000க்கும் அதிகமானோர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளளனர்.
இருப்பினும் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் ஆரியங்காவு, தென்மலை, புனலூர், கொல்லம் போன்ற பகுதிகளில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையால் கேரளாவில் வசிக்கும் தமிழக வியாபாரிகள் அதிக அளவில் ஊர் திரும்பி வருகின்றனர்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையால் தமிழகம் மற்றும் கேரளா இடையேயான உறவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மலையாளிகளின் கடைகள் தாக்கப்பட்டு வருகின்றன. இதே போன்று கேரளாவில் வசிக்கும் தமிழர்களை மலையாளிகள் தாக்கி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் மூன்று வழித்தடங்களும் அடைக்கப்பட்டுள்ளன. கடந்த 10 நாட்களாக தமிழக-கேரள எல்லைப் பகுதியை நோக்கி பொதுமக்கள் செல்வதும், போலீசார் அவர்களை விரட்டியடிப்பதும் நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம், கடையம், சுரண்டை, அம்பை, சேரன்மகாதேவி, தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பல ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் கேரளாவில் தங்கி பாத்திர வியாபாரம், கட்டிட தொழில், ஹோட்டல்களில் பணிபுரிந்து வருகின்றனர். கடையம் அருகே உள்ள புலவன் என்ற ஊரைச் சேர்ந்தவர் தாவீது. கோட்டயம் அருகே உள்ள ஏழாம் மைலில் 25 கடைகள் வைத்து கடந்த 20 வருடமாக பாத்திர வியாபாரம் செய்து வருகிறார்.
முல்லைப் பெரியாறு பிரச்சனை காரணமாக கேரளாவில் வாழும் தமிழர்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதால் ஏழாம் மைல் பஞ்சாயத்து தலைவர் தாவீதுவிடம் ஊருக்கு சென்று விடுங்கள், பிரச்சனை தீர்ந்ததும் திரும்பி வாருங்கள் என பலர் ஆலோசனை கூறியுள்ளனர். இதனால் அவர் உள்பட அப்பகுதியில் வியாபாரம் செய்து வந்த பல தமிழர்கள் ஊருக்கு வந்துவிட்டனர். இது போல் 1000க்கும் அதிகமானோர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளளனர்.
இருப்பினும் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் ஆரியங்காவு, தென்மலை, புனலூர், கொல்லம் போன்ற பகுதிகளில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- GuestGuest
முல்லைப் பெரியாறு: குருவாயூர் எக்ஸ்பிரஸ் மறிப்பு, தமிழக-கேரள பஸ்கள் மீது தாக்குதல்-4 பேர் காயம்
கோவை: முல்லைப் பெரியாறு விவகாரம் காரணமாக கேரளா நோக்கி சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ஜனநாயக கட்சியினர் மறித்து போராட்டம் நடத்தினர்.
நேற்று முன்தினம் இரவு கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கோவைக்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்து வாளையாரை அடுத்த ஆத்துபதி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி மீது கல்வீசினர். இதில் பேருந்தில் இருந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் இரவு 10.15 மணி அளவில் நடந்தது.
இதே போன்று அன்றிரவு 11 மணிக்கு பாலக்காட்டில் இருந்து கோவைக்கு வந்த தமிழகப் பேருந்து நரிமேடு அருகே வந்தபோது காரி்ல் வந்தவர்கள் அதன் மீது கல்வீசித் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
மேலும் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற கேரள அரசுப் பேருந்து இரவிபுதூர்கடை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அதன் மீது கல்வீசித் தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். இதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடிகள் உடைந்தன. இதே போன்று குமரி மாவட்டத்தில் கேரள அரசுப் பேருந்தை சிறைபிடித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கையைக் கண்டித்து இந்திய ஜனநாயக கட்சியினர் திண்டுக்கல் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்ததினர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீர் என்று ரயில் நிலையத்திற்குள் புகுந்து ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸை மறித்து போராட்டம் நடத்தப்போவதாக இந்திய ஜனநாயக்க கட்சியினர் அறிவித்திருந்தனர். இதற்காக சிலர் திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு ரயில் வந்தபோது அதில் ஏறினர். ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தை அடைய 2 கிமீ இருக்கும்போது அவர்கள் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி சுமார் 25 நிமிடம் போராட்டம் நடத்தினர். ரயில் மறியலில் ஈடுபட்ட 253 பேர் கைது செய்யப்பட்டனர்.
முல்லைப் பெரியாறு பிரச்சனை காரணமாக சென்னை மைலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள மலையாளிகளின் குளிர்பான கடையும், ஒரு தேனீர் கடையும் அடித்து நொறுக்கப்பட்டன. வேறொரு இடத்தில் மலையாளியின் கடை என்று நினைத்து தங்கராஜ் என்பவரின் கடை தாக்கப்பட்டது. இது குறித்து மைலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி சிலரை கைது செய்தனர்.
கைதானவர்களில் ஒருவர் ஐயப்ப பக்தர் ஆவார். அவரது மாலையை போலீஸ் அதிகாரி அறுத்துவிட்டதாகவும், அவரை அரை நிர்வாணமாக்கி அறையில் அடைத்ததாகவும் கூறி அவரது உறவினர்கள் மைலாப்பூர் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மார்கெட்டில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து அந்த மார்க்கெட் வியாபாரிகள் நேற்று கடையடைப்பு மற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த மார்க்கெட்டில் உள்ள 1,500 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன, அங்கிருந்து கேரளாவுக்கு காய்கறிகளும் அனுப்பப்படவில்லை.
மதுரை, சிவகாசி, சிவகங்கையில் கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. கோவையில் மலையாளி ஒருவருக்கு சொந்தமான மருத்துவமனையை தாக்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதே போன்று ஆப்பக்கூடல் பகுதியில் வியாபாரிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது.
கோவை: முல்லைப் பெரியாறு விவகாரம் காரணமாக கேரளா நோக்கி சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ஜனநாயக கட்சியினர் மறித்து போராட்டம் நடத்தினர்.
நேற்று முன்தினம் இரவு கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கோவைக்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்து வாளையாரை அடுத்த ஆத்துபதி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி மீது கல்வீசினர். இதில் பேருந்தில் இருந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் இரவு 10.15 மணி அளவில் நடந்தது.
இதே போன்று அன்றிரவு 11 மணிக்கு பாலக்காட்டில் இருந்து கோவைக்கு வந்த தமிழகப் பேருந்து நரிமேடு அருகே வந்தபோது காரி்ல் வந்தவர்கள் அதன் மீது கல்வீசித் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
மேலும் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற கேரள அரசுப் பேருந்து இரவிபுதூர்கடை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அதன் மீது கல்வீசித் தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். இதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடிகள் உடைந்தன. இதே போன்று குமரி மாவட்டத்தில் கேரள அரசுப் பேருந்தை சிறைபிடித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கையைக் கண்டித்து இந்திய ஜனநாயக கட்சியினர் திண்டுக்கல் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்ததினர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீர் என்று ரயில் நிலையத்திற்குள் புகுந்து ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸை மறித்து போராட்டம் நடத்தப்போவதாக இந்திய ஜனநாயக்க கட்சியினர் அறிவித்திருந்தனர். இதற்காக சிலர் திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு ரயில் வந்தபோது அதில் ஏறினர். ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தை அடைய 2 கிமீ இருக்கும்போது அவர்கள் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி சுமார் 25 நிமிடம் போராட்டம் நடத்தினர். ரயில் மறியலில் ஈடுபட்ட 253 பேர் கைது செய்யப்பட்டனர்.
முல்லைப் பெரியாறு பிரச்சனை காரணமாக சென்னை மைலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள மலையாளிகளின் குளிர்பான கடையும், ஒரு தேனீர் கடையும் அடித்து நொறுக்கப்பட்டன. வேறொரு இடத்தில் மலையாளியின் கடை என்று நினைத்து தங்கராஜ் என்பவரின் கடை தாக்கப்பட்டது. இது குறித்து மைலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி சிலரை கைது செய்தனர்.
கைதானவர்களில் ஒருவர் ஐயப்ப பக்தர் ஆவார். அவரது மாலையை போலீஸ் அதிகாரி அறுத்துவிட்டதாகவும், அவரை அரை நிர்வாணமாக்கி அறையில் அடைத்ததாகவும் கூறி அவரது உறவினர்கள் மைலாப்பூர் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மார்கெட்டில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து அந்த மார்க்கெட் வியாபாரிகள் நேற்று கடையடைப்பு மற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த மார்க்கெட்டில் உள்ள 1,500 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன, அங்கிருந்து கேரளாவுக்கு காய்கறிகளும் அனுப்பப்படவில்லை.
மதுரை, சிவகாசி, சிவகங்கையில் கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. கோவையில் மலையாளி ஒருவருக்கு சொந்தமான மருத்துவமனையை தாக்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதே போன்று ஆப்பக்கூடல் பகுதியில் வியாபாரிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது.
- GuestGuest
தமிழகத்திற்கு தண்ணீர் தராத கேரளாவுக்கு எந்த பொருளும் அனுப்பக் கூடாது- வியாபாரிகள் முடிவு
நெல்லை: தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கேரளாவுக்கு எந்த பொருளும் அனுப்பக் கூடாது என நெல்லை, தூத்துக்குடி மாவட்ட வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை ஒரு நாளும் விட்டுத் தரமாட்டோம் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கேரளத்தினர் தமிழர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் கேரளாவில் உள்ள தமிழக் குடும்பங்கள் உயிருக்கு பயந்து தமிழகத்திற்கு தப்பியோடி வருகின்றனர்.
இந்நிலையில் வரும் 21ம் தேதி் மதிமுக சார்பில் கேரள சாலைகளில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. நெல்லையில் நேற்று பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் ரயில் சந்திப்பு முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அடுத்த கட்டமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட வியாபாரிகள் சங்கத்தினரும் போராட்ட களத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர்.
போராட்டத்தின் உச்ச கட்டமாக நெல்லை, தூத்துக்குடி வியாபாரிகள் கேரளாவுக்கு பொருட்கள் கொண்டு செல்வதை 100 சதவீதம் நிறுத்தும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். தமிழகத்திற்கு தண்ணீர் தராத கேரளாவுக்கு எந்த பொருளையும் அனுப்பபக் கூடாது என்ற முடிவுக்கு வியாபாரிகள் வந்துள்ளனர்.
தட்ஸ் தமிழ்
நெல்லை: தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கேரளாவுக்கு எந்த பொருளும் அனுப்பக் கூடாது என நெல்லை, தூத்துக்குடி மாவட்ட வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை ஒரு நாளும் விட்டுத் தரமாட்டோம் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கேரளத்தினர் தமிழர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் கேரளாவில் உள்ள தமிழக் குடும்பங்கள் உயிருக்கு பயந்து தமிழகத்திற்கு தப்பியோடி வருகின்றனர்.
இந்நிலையில் வரும் 21ம் தேதி் மதிமுக சார்பில் கேரள சாலைகளில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. நெல்லையில் நேற்று பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் ரயில் சந்திப்பு முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அடுத்த கட்டமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட வியாபாரிகள் சங்கத்தினரும் போராட்ட களத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர்.
போராட்டத்தின் உச்ச கட்டமாக நெல்லை, தூத்துக்குடி வியாபாரிகள் கேரளாவுக்கு பொருட்கள் கொண்டு செல்வதை 100 சதவீதம் நிறுத்தும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். தமிழகத்திற்கு தண்ணீர் தராத கேரளாவுக்கு எந்த பொருளையும் அனுப்பபக் கூடாது என்ற முடிவுக்கு வியாபாரிகள் வந்துள்ளனர்.
தட்ஸ் தமிழ்
- GuestGuest
முல்லைப்பெரியாறு: கூடலூரில் போலீஸார் திடீர் தாக்குதல்-தடியடி கண்ணீர்புகை வீச்சு- பலர் காயம்
கூடலூர்: தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்ப் பகுதியில் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. குமுளியை நோக்கி முன்னேறிய மக்களை தடுத்த போலீஸார் திடீரென கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் ஓட ஓட விரட்டியடித்ததால் பெரும் பதட்டம் நிலவுகிறது. 5 முறை தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையை காக்க வலியுறுத்தி தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கம்பம், குமுளி, கூடலூர் பகுதியில் தென்மண்டல ஐஜி ராஜேஸ்தாஸ் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீண்டும் வன்முறை
இந்த நிலையில் இன்று கூடலூரை அடுத்த லோயர் கேம்ப் பகுதியில் ஒரு லட்சம் பொதுமக்கள் வரை கூடியிருந்தனர். அவர்களை கலைந்து போக கூறி போலீசார் அறிவுறுத்தவே, அதனை கேட்காமல் குமுளியை நோக்கி மக்கள் முன்னேற முயன்றனர். இதனால் போலீசார் லேசாக தடியடி நடத்த நேரிட்டது. இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை அப்புறப்படுத்த போலீசார் மீண்டும் தடியடி நடத்தினர். இதில் 200 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
போலீஸ் மீது கல்வீச்சு
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போலீஸ் மீது கற்களை வீசி தாக்கினர். உடனே போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், அதிக அளவில் தடியடியும் நடத்தினர். இன்று மட்டும் 5 முறை தடியடி நடத்தப்பட்டது. இதில் கூடலூர் பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. போலீசார் நடத்திய தடியடியில் காயமடைந்த அனைவரும் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த வன்முறையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் வேன் ஒன்றும் சேதமடைந்தது.
மன்னிப்பு கேட்க வேண்டும்
தமிழ்நாடு போலீசரே தங்களின் மீது தடியடி நடத்தியதில் பொதுமக்கள் கொதித்து போயுள்ளனர். தாக்குதல் நடத்திய போலீசார் மன்னிப்பு கேட்கும் வரை விடப்போவதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தட்ஸ் தமிழ்
கூடலூர்: தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்ப் பகுதியில் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. குமுளியை நோக்கி முன்னேறிய மக்களை தடுத்த போலீஸார் திடீரென கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் ஓட ஓட விரட்டியடித்ததால் பெரும் பதட்டம் நிலவுகிறது. 5 முறை தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையை காக்க வலியுறுத்தி தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கம்பம், குமுளி, கூடலூர் பகுதியில் தென்மண்டல ஐஜி ராஜேஸ்தாஸ் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீண்டும் வன்முறை
இந்த நிலையில் இன்று கூடலூரை அடுத்த லோயர் கேம்ப் பகுதியில் ஒரு லட்சம் பொதுமக்கள் வரை கூடியிருந்தனர். அவர்களை கலைந்து போக கூறி போலீசார் அறிவுறுத்தவே, அதனை கேட்காமல் குமுளியை நோக்கி மக்கள் முன்னேற முயன்றனர். இதனால் போலீசார் லேசாக தடியடி நடத்த நேரிட்டது. இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை அப்புறப்படுத்த போலீசார் மீண்டும் தடியடி நடத்தினர். இதில் 200 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
போலீஸ் மீது கல்வீச்சு
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போலீஸ் மீது கற்களை வீசி தாக்கினர். உடனே போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், அதிக அளவில் தடியடியும் நடத்தினர். இன்று மட்டும் 5 முறை தடியடி நடத்தப்பட்டது. இதில் கூடலூர் பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. போலீசார் நடத்திய தடியடியில் காயமடைந்த அனைவரும் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த வன்முறையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் வேன் ஒன்றும் சேதமடைந்தது.
மன்னிப்பு கேட்க வேண்டும்
தமிழ்நாடு போலீசரே தங்களின் மீது தடியடி நடத்தியதில் பொதுமக்கள் கொதித்து போயுள்ளனர். தாக்குதல் நடத்திய போலீசார் மன்னிப்பு கேட்கும் வரை விடப்போவதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தட்ஸ் தமிழ்
- Sponsored content
Page 16 of 17 • 1 ... 9 ... 15, 16, 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 17
|
|