புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10 
2 Posts - 18%
heezulia
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10 
372 Posts - 49%
heezulia
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10 
25 Posts - 3%
prajai
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது சமுதாயம் - கவிதைத் தொடர்


   
   

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 05, 2011 10:44 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே

நான் இந்த திரியில், நமது சமுதாயத்தில் மக்கள் செய்யும், நம் அனைவருக்கும் தெரிந்த மற்றும் தெரியாத பல தொழில்களுக்கு, கவிதை வடிவிலே, அந்த தொழிலின் தன்மை, அதில் உள்ள கஷ்டங்கள், நன்மைகள் என அலசி இங்கு தர உள்ளேன். இதற்காக நான் தொழில்களை கீழ்க்கண்டவாறு பாகுபாடு செய்துள்ளேன்.

1. சுகாதாரம் பேணுவோர்
2. கலைஞர்கள்
3. குறும்வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள்
4. கடின உழைப்பாளர்கள்
5. முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள்
6. இதர பணியாளர்கள்

மேலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அது சம்பந்தமான தொழில்கள் இடம் பெரும். நான் அந்த பகுதியில் வேறு ஏதாவது தொழிலை சேர்க்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றினால் எனக்கு தனிமடலிலோ அல்லது இதே திரியில் தங்கள் பின்னூட்டதுடன் இணைத்தோ தெரிவிக்கலாம் நண்பர்களே.....

இது என்னுடைய 2000 ஆம் பதிவு எனபதையும், தங்கள் ஊக்கமும் ஆசியும் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு, இந்த திரியை ஒரு தமிழ்வாழ்த்துப் பாடலுடன் தொடங்குகிறேன்.

நன்றிகள் உறவுகளே


நற்றமிழ் நாற்பொழுதும் நான் பயிலவே
கற்பக நன்மரம்போல் கல்வியை நீத்தர
சொற்களால் என்றன்தீஞ் சோர்வு அகற்றிடும்
அற்புதஅன் னைத்தமிழ்வாழ் க


1. சுகாதாரம் பேணுவோர்

சாக்கடைத் தூய்மையாளர்கள்




ஊர்சேர்ந்து உண்டாக்கும் கழிவுகள்
ஒருசேர தேங்கிடும் தொட்டியில்
குப்பைகள் சேரவே தொட்டியில்
அடைப்புகள் தன்னால் ஏற்படும்

மக்களின் நலனினை மனதிலும்
வறுமையை தன் வயிற்றிலும்
சுமந்திடும் சாக்கடைப் பணியாளர்
இறங்குவார் அந்நரகக் குழியிலே


ஒருநிமிடம் செல்லவே அவ்வழியிலே
மூக்கது மூடிடும் முகமது சுழிந்திடும்
பலமணிகள் அக்குழியுள் இருப்பரே
உழைப்பரே நமைக்காக்கும் கடவுளர்

கீழ்மட்ட மக்களும் தாழ்தப்பட்டோரும்
ஒழிந்தது எனநாம் கூறிடும்சொல்லான
தீண்டத் தகாதவரும் தினஞ்செய்வரே
இவ்வேதனை நிரம்பிய தொழிலினை

சாதாரண மக்களொடு ஒப்பிடவேஇவர்
வாழும்விகிதம் பத்தாண்டு முந்தியது
பணியிலிருந்து ஓய்வுபெரும் முன்னரே
உயிரது போயிடும் கொடுமையும் உண்டு

ஊரே நோயின்றிவாழும் வழிசெய்யுமிவர்
ஊரிலுள்ள நோயனைத்தின் கூடாரமானரே
ஒன்றிரண்டு பெற்றிடும் கூலிப்பணமும்
நோய்தீர்க்க விரையமாய்க் கழியுமே


தொழிநுட்பம் வளர்ந்த இக்காலத்தில்
எத்தனையோ பணிசெய்ய கண்டனர்
பலகருவியை கோடிபணம் செலவளித்து
இதற்கொரு கருவியைக் கண்டறியாததேன்??

தங்கள் வாழ்விலே துயரங்கள் பலச்சந்தித்தாலும்
எப்படி நினைக்கிறீர் இத்தொழிலினை எனக்கேட்க
மக்கட்கு தூய்மையைத் தருவாதல், நெஞ்சமது
கொஞ்சம் துயரத்தை மறக்குது, எனசொல்லக்கேட்க
நெஞ்சமது கனக்குது கண்ணில்நீர் பெருகுது


இத்தூய்மையாளர் வாழ்வும் தூய்மையாகவும்
பாதுகாப்பு வழிகளைக் கைக்கொள்ளவும்அரசு
ஒருபகுதி நிதியாவது ஒதுக்கவேஇவர்கள்
வாழ்வதில் கொஞ்சம் வெளிச்சம் பிறக்குமே

கழிவை அகற்றும் கடவுளரை நாமும்
இழிவாய் நினைத்தல்வேண் டாம்






காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 09, 2011 9:17 am

சுந்தரராஜ் தயாளன் wrote:முடிதிருத்தி மக்கள் முகத்திற்கு நன்றாய்
வடிவந் தருவோர் இவர்


அருமை...இராமன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் ஐயா...... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 10, 2011 9:35 pm

1. சுகாதாரம் பேணுவோர்

சவக்கிடங்கு ஊழியர்கள்




வீட்டினிலே இறப்பவர் நேராய் - சுடும்
காட்டிற்கோ இடும் காட்டிற்கோ செல்வர்
விபத்தினில் உயிர்நீப்பாரோ, சென்றிடும்
முதலிடம் சவக்கிடங்கு ஒன்றுதானே

சவத்தை மனையிலே ஒருநாள் மிகுந்து
வைக்கவே நம்மக்கள் யோசித்திடுவர்
தினம்தினம் சவத்துடனே தம்வாழ்வை
நகர்த்திடுவர் இச்சவக்கிடங்கு ஊழியர்கள்


கொஞ்சம் காயம் அதிகம் படவேநாம்
பார்க்கச் சகிக்காது முகத்தை திருப்புவோம்
உடலது சிதைந்து, செதிலாய் இருந்தாலும்
தம்கையால் தூக்கிடுவர் இவர்கள்

கையுறையும் தரமாட்டார் - மூக்கிற்கு
முகவுறையும் தரமாட்டார், இடத்தை
தூய்மையும் செய்யமாட்டார், பிணத்தை
பராமரி என்றுமட்டும் கூறிடுவர்


சவக்கிடங்கதன் நிலையுடன் ஒப்பிட
கழிவறையும் தோற்று வெட்குமே.
செத்தவற்கு தேவையில்லை சுகாதாரம்
சவத்தைக் காப்பவற்கு தேவைதானே

துயரத்தில் உறைந்து நிற்கும் மக்களிடம்
பணம் கேட்டு நிந்திக்கும் சிலரும்உளர்
சவத்துடன் தங்கியதாலே, அவருளமும்
செத்து மடிந்ததோ இல்லை கல்லானதோ


பிணத்தைப் பார்க்கவும் பணம், வெளியே
கொண்டுபோகவும் பணம், இருப்பவர்
கெட்டொழி என்று கொடுக்கின்றனர், மாறாய்
இல்லாதவரோ கடன்பெற்று தருகின்றார்

எதற்கிந்த ஈனப்பணம், இதனால் கிடைக்கும்
லாபமென்ன, கோரச்சாவுகள் பலகண்டநீ
உனக்கும் இந்நிலை ஏற்படலாம் என்பதை
மறந்தாயோ, மறக்காதே மனிதநேயத்தை


சுகாதாரம் பேணிடும் நீங்கள், மனதை
சாக்கடையாய் வைக்காது, மணம்கமழும்
சந்தனமாய் வைத்திருக்க, துக்கதிலும்
மக்கள் உம்மைப்பூசி போற்றிச் செல்வர்

சவத்துடன் தங்கிடும் சாமர்த்தி யம்நம்
சவக்கிடங்கு ஊழியற்கு உண்டு




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 14, 2011 5:10 pm

1. சுகாதாரம் பேணுவோர்

வெட்டியான்கள்


விந்தையான உலகத்திலே - ஊரின்
எல்லையில் நடந்திடும் காரியமே
அங்கே வீற்றிருக்கும் மனிதராலே
காரியம் நடந்தேறிடும் தன்னாலே

மனிதன் தன்வாழ்வினிலே சந்திக்க
வெறுக்கும் மனிதரவர் - இவரின்றி
இறுதிக் காரியமும், எச்சடங்குகளும்
நடப்பது என்பது இயலாதே

மனிதனின் இறப்பின் - செய்தியது
முதலாக சேர்வது இவர்செவியினையே
இறப்பின் சேதிகூறுவோர்கள்,இனித்திடும்
சேதியினை கூறாதிருப்பது வேதனையே

இறப்புச் செய்தி கேட்டவுடன் - இவர்
தாரை தப்பட்டை இன்னும்பல
நிகழ்வுகளுக்கு சொல்லிடுவார்- அதற்கு
தனியே ஊதியமும் பெற்றிடுவார்


இறந்தவர் உடலினை குழிதோண்டியோ
மண்ணெண்ணை சடலத்தில் ஊற்றியோ
புதைத்தோ இல்லை எரித்தோ, தங்கள்
வாழ்வினை நடத்துவரே

அரசின் கீழுள்ள மயானம் - அதிலே
பெற்றார் அரசுப் பணியினையே
அரசு நிலையாய் ஊதியம் தந்துங்கூட
இவர் கையை நீட்டுதல் செய்கிறாரே


கையை நீட்டுதல் செய்தாலும் - இவரின்
கையது பணியை ஆற்றாது, எப்பிணமும்
நிம்மதிப் பயணம் செய்யாது

மனிதன் இறப்பாலே மண்ணிலே வாழும்
தனித்தவெட்டி யான்தான் இவர்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 14, 2011 5:13 pm

பிஜிராமன் wrote:

சுகாதாரம் பேணிடும் நீங்கள், மனதை
சாக்கடையாய் வைக்காது, மணம்கமழும்
சந்தனமாய் வைத்திருக்க, துக்கதிலும்
மக்கள் உம்மைப்பூசி போற்றிச் செல்வர்
இது அவர்களுக்கான சிறந்த பாராட்டு...
வாழ்த்துக்கள் சூப்பருங்க



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 14, 2011 6:21 pm

இது அவர்களுக்கான சிறந்த பாராட்டு...
வாழ்த்துக்கள் சூப்பருங்க


மிக்க நன்றிகள் ரேவதி......... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Dec 14, 2011 7:45 pm

வாழ்த்துக்கள் கவிஞரே
சூப்பருங்க

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Dec 14, 2011 8:38 pm

வாழ்த்துக்கள் நண்பரே...
உங்களின் பல புதிய திரிகள். பிரமாதமாக இருக்கின்றன...
தொடரட்டும்!



நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 14, 2011 8:48 pm

மகா பிரபு wrote:வாழ்த்துக்கள் கவிஞரே
சூப்பருங்க

மிக்க நன்றிகள் அண்ணா....... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 14, 2011 8:48 pm

ANTHAPPAARVAI wrote:வாழ்த்துக்கள் நண்பரே...
உங்களின் பல புதிய திரிகள். பிரமாதமாக இருக்கின்றன...
தொடரட்டும்!

மிக்க நன்றிகள் நண்பா...... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 15, 2011 4:35 pm

பிஜிராமன் wrote:

சவக்கிடங்கு ஊழியர்கள்


கொஞ்சம் காயம் அதிகம் படவேநாம்
பார்க்கச் சகிக்காது முகத்தை திருப்புவோம்
உடலது சிதைந்து, செதிலாய் இருந்தாலும்
தம்கையால் தூக்கிடுவர் இவர்கள்

கையுறையும் தரமாட்டார் - மூக்கிற்கு
முகவுறையும் தரமாட்டார், இடத்தை
தூய்மையும் செய்யமாட்டார், பிணத்தை
பராமரி என்றுமட்டும் கூறிடுவர்


சவக்கிடங்கதன் நிலையுடன் ஒப்பிட
கழிவறையும் தோற்று வெட்குமே.
செத்தவற்கு தேவையில்லை சுகாதாரம்
சவத்தைக் காப்பவற்கு தேவைதானே

அவர்களின் நிறையை சொன்ன விதம் படிக்கவே கஷ்டமாக இருந்தது.
அவர்களை கண்டால் மரியாதையுடனே நடந்து கொள்ள வேண்டும்.
பாவம் அவர்கள்...எத்தனை துயரம்.வேதனை.மனமே மறுத்து போயி தானே அந்த வேலையினை செய்வார்கள்.



பிஜிராமன் wrote:பிணத்தைப் பார்க்கவும் பணம், வெளியே
கொண்டுபோகவும் பணம், இருப்பவர்
கெட்டொழி என்று கொடுக்கின்றனர், மாறாய்
இல்லாதவரோ கடன்பெற்று தருகின்றார்


ஆதியிலே சிலர் துவங்கி வைத்த லஞ்சம்...
பிறப்பு முதை இறப்பு வரை அனைத்திலுமே உள்ளது.
இதை மாற்றவே முடியாது.


பிஜிராமன் wrote:எதற்கிந்த ஈனப்பணம், இதனால் கிடைக்கும்
லாபமென்ன, கோரச்சாவுகள் பலகண்டநீ
உனக்கும் இந்நிலை ஏற்படலாம் என்பதை
மறந்தாயோ, மறக்காதே மனிதநேயத்தை


நினைத்தால் யாருமே பணம் என்று கேட்டு நிர்க்க மாட்டார்கள்.
அந்த பணமில்லா காரணத்தால் காரியங்களுமே நிர்க்கிறது.
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 440806 நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 440806


பிஜிராமன் wrote:சுகாதாரம் பேணிடும் நீங்கள், மனதை
சாக்கடையாய் வைக்காது, மணம்கமழும்
சந்தனமாய் வைத்திருக்க, துக்கதிலும்
மக்கள் உம்மைப்பூசி போற்றிச் செல்வர்

மிகவும் சரியான வரிகளே.இவற்றை அனைவருமே உணர வேண்டும்.
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 677196 நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 677196 நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 677196 நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 677196 நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 677196 நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 677196 நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 677196 நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 677196 நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 677196 நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 677196 நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 677196 நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 677196 நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 677196 நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 677196 நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 4 677196

சவத்துடன் தங்கிடும் சாமர்த்தி யம்நம்
சவக்கிடங்கு ஊழியற்கு உண்டு

நீயே எழுதும் குரளா ... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக