புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_c10 
21 Posts - 4%
prajai
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_c10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_m10தமிழகச் சுற்றுலா தகவல்கள் - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகச் சுற்றுலா தகவல்கள்


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 2:19 pm

First topic message reminder :

ஓ மெரீனா....ஓ மெரீனா....

மெரீனா...கார்பன் மோனாக்ஸைடு சுவாசத்தில் திணறும் சென்னைவாசிகளுக்கு இளைப்பாறுதல் தரும் இடம்.

மெரீனா எப்படி ஒரு நாளை ஆரம்பிக்கிறது?

இதோ...மெரீனா கடற்கரையில் அதிகாலை 4 மணியிலிருந்து ஒரு "லைவ் ரிலே'... அந்தப் பிரம்ம முகூர்த்த வேளையில் சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் பளபளக்கிறது கடற்கரைச் சாலை. அதில், கலப்படமற்ற காற்றைச் சுவாசித்தபடி வாகனத்தில் சீறுவது அலாதி சுகமாய்த்தான் இருக்கிறது.

கலங்கரை விளக்கம் அருகே நமது வாகனத்தை ஓரங்கட்டிவிட்டு நடையைக் கட்டுகிறோம்.

வெளிச்ச மழையில் வெள்ளை மாளிகையாய்த் தகதகத்துக் கொண்டிருக்கிறது, டி.ஜி.பி. அலுவலகம். வாகன ஓட்டிகளை ஸ்பீக்கரில் எச்சரித்தபடி விரைகிறது, புதிய குவாலிஸ் காவல்துறை ரோந்து வாகனம்.

கடற்கரை உள்சாலையை ஒட்டியும் பரந்த மணல்வெளியிலும் வானமே கூரையாய்க் கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர் இந்நாட்டு "மன்னர்கள்'.

சீரணி அரங்கத்துக்குப் பின்புறம் உள்ள புறக்காவல் நிலையம் தூங்கி வழிந்து கொண்டிருக்க, கரகரத்துக் கொண்டிருக்கிறது ஒயர்லெஸ்.

தூரத்தே கடலில் ஜொலி ஜொலிக்கும் தீவுகளாய் மிதக்கின்றன கப்பல்கள்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 3:57 pm

டாப்சிலிப்பின் கதை

கோவை மாவட்டத்தில் இந்திரா காந்தி வனவிலங்குச் சரணாலயப் பகுதிக்கு வருபவர்கள் டாப்சிலிப்பில் தங்குவதை பெரிதும் விரும்புவார்கள்.

இங்கிலாந்தில் கப்பல் கட்டுவதற்குத் தேவைப்பட்ட தேக்கு, ஈட்டி, ஆய்மி மரங்களைப் பயிரிடக் கடந்த 1847-ல் பிரிட்டிஷ் அரசு இப்பகுதியில் விஞ்ஞான வன மேலாண்மையைத் துவக்கியது.

வனப்பகுதியில் வெட்டப்பட்ட மரங்களை யானைகளின் மூலம் கொண்டு வந்து டாப்சிலிப் பகுதியில் இருந்து உருட்டி விட்டால் மலையடிவாரத்துக்கு அவை வந்துவிடுமாம். இதன்பின் துறைமுகங்களுக்கு மரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

மரங்களை உருட்டிவிடும் மிக உயரமான இடம் டாப்சிலிப் என அழைக்கப்பட்டது. இம்முறையைக் கேப்டன் மைக்கேல் என்பவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

டாப்சிலிப்பில் தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கே மான், காட்டுப் பன்றிகள் ஆகியவற்றைக் கூட்டம் கூட்டமாக மிக அருகாமையில் பார்க்க முடியும். இங்கு மூலிகைப் பண்ணையும் அமைக்கப்பட்டுள்ளது.

டாப்சிலிப்பில் யானைச் சவாரி செய்யலாம். கோழிக்கமுத்தி யானைகள் முகாமுக்குச் செல்லலாம். போகும் வழியில் பல்வேறு மிருகங்களைக் கண்டும் ரசிக்கலாம்.

பி.கு: டாப்சிலிப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கே பல சினிமா படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன. இங்குள்ள கண்ணாடி மாளிகை "சூரியன்' படத்தில் நடித்துள்ளது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 3:58 pm

தஞ்சை மண்ணில்...

தென்னகப் பண்பாட்டு மையம்: தஞ்சை நகரிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது. சம கால ஓவியங்கள், சிற்பங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்: தஞ்சை - நாகை சாலையில் தஞ்சையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது.

திருவையாறு: தஞ்சையிலிருந்து 13 கி.மீ. தூரத்தில் உள்ளது. கர்நாடக இசையின் மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் வாழ்ந்த வீடு; காவிரிக் கரையில் அவரது சமாதியில் அமைந்துள்ள ஆசிரமம் ஆகியவை உள்ளன. மிகப் பெரிய "பஞ்சநதீஸ்வரர் கோயில்' உள்ளது.

கல்லணை: கரிகால் சோழனால் கி.பி. 2-ம் நூற்றாண்டில் காவிரியில் வெள்ளத் தடுப்புக்காகக் கட்டப்பட்டது. காவிரியிலிருந்து வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவை பிரிகின்ற இடம். சிறந்த பூங்கா உள்ளது.

சுவாமிமலை: முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை, தஞ்சையிலிருந்து 32 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. செயற்கை மலை மீது கோயில் அமைந்துள்ளது. சுவாமிமலையில் உருவாக்கப்படும் வெண்கலச் சிலைகள் உலகப் பிரசித்திப் பெற்றவை.

பட்டீஸ்வரம்: பட்டீஸ்வரம் துர்க்கை கோயில் சுவாமிமலை ரயில் நிலையத்திலிருந்து ஒன்றரை கி.மீ. தூரத்தில் உள்ளது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 3:59 pm

சரஸ்வதி மகால் நூலகம்

மன்னர் சரபோஜி சேகரித்த சமஸ்கிருத, தமிழ், தெலுங்கு ஓலைச் சுவடிகள், நூல்கள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சரஸ்வதி மகால் நூலகம், அரண்மனை வளாகத்தில் தான் அமைந்துள்ளது.

அரிய சுவடிகள், ஓவியங்கள் ஆகியவற்றைக் கொண்ட அருங்காட்சியகம் ஒன்றும் இந்த நூலகத்தில் உள்ளது. சித்த வைத்திய முறைகள், தத்துவங்கள், ஜோதிடம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களில் அரிய நூல்களை சரஸ்வதி மகால் நூலகம் பதிப்பித்துள்ளது.

சங்கீத மகால்

அரண்மனை வளாகத்தில் பார்க்க வேண்டிய மற்றொரு இடம் சங்கீத மகால். இதன் முதல் தளத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் கைவினைப் பொருள்கள் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் தஞ்சை கலைத் தட்டுகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், காகித, மண் பொம்மைகள், தஞ்சாவூர் பாணி ஓவியங்கள், நாச்சியார்கோயில் குத்து விளக்குகள், சுவாமிமலை உலோகச் சிலைகள், சந்தன மாலைகள், மரச் சிற்பங்கள் நியாயமான விலையில் கிடைக்கின்றன.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் தஞ்சை மண், தமிழ்க் கலை, பண்பாட்டின் உறைவிடமாகவும் திகழ்வதை இங்கு வந்து சென்றால் உணரலாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 3:59 pm

தஞ்சைக்கு வந்து சேர...

போக்குவரத்து வசதி: சென்னை எழும்பூர், தாம்பரம், திருச்சி, மைசூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமேஸ்வரம், மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து தஞ்சைக்கு நேரடி ரயில் வசதி உள்ளது.

தஞ்சையிலிருந்து தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களுக்கும், கேரள, கர்நாடக மாநில நகரங்களுக்கும், திருப்பதிக்கும் நேரடிப் பேருந்துகள் இயங்குகின்றன.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது பெரியகோயில். ரயில் நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது.

தங்கும் இடங்கள்: தஞ்சை சத்திரம் நிர்வாகம் சார்பில் நிர்வகிக்கப்படும் அரசர் வழித்தங்கல் மனையில் (ராஜா ரெஸ்ட் ஹவுஸ்) மிகவும் குறைந்த கட்டணத்தில் அறைகள் (ரூ. 100, ரூ. 150, ரூ. 190) வாடகைக்கு கிடைக்கும்.
(தொலைபேசி எண்: (04362) 330515).

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் "ஹோட்டல் தமிழ்நாடு', காந்திஜி சாலையில் குளிர்பதன வசதி செய்யப்பட்ட, செய்யப்படாத அறைகள் வாடகைக்குக் கிடைக்கும். தொலைபேசி எண்கள்: 331325, 331024.

பூண்டி மாதா கோயில்: தஞ்சையிலிருந்து 35 கி.மீ. தூரத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ளது. மே 6 முதல் 15 வரை நடைபெறும் ஆண்டுத் திருவிழா மற்றும் செப்டம்பர் மாதம் அன்னை மரியாள் பிறப்புத் திருவிழா ஆகியவை சிறப்பானவை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 4:00 pm

கொடைக்கானலுக்கு இன்பச் சுற்றுலா



கோடையின் வசந்தமாகத் திகழும் கொடைக்கானலுக்கு சிறப்புச் சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (டி.டி.டி.சி) இயக்கி வருகிறது.

கட்டணம்: சென்னை-கொடைக்கானல் உல்லாசப் பயணம் செல்ல, பெரியவர்களுக்கு கட்டணம் தலா ரூ. 2,500. சிறியவர்களுக்கு தலா ரூ. 1,900. (தங்கும் வசதி, 6 வேளை உணவு, படகுச் சவாரி ஆகியவற்றுக்கான கட்டணங்களும் இதில் அடங்கும்).

கொடைக்கானலில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி நிறுவனத்தின் தங்கும் விடுதிகளில் பயணிகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்படும்.

பயணிகள் தங்குவதற்காக சொகுசு அறைகளும், ஆயுர்வேத மசாஜ் மையமும் இவ் விடுதியில் உள்ளன.

கடல் மட்டத்தில் இருந்து 2133 மீட்டர் உயரத்தில் கொடைக்கானல் அமைந்துள்ளது.

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் தற்போது ரம்மியமான சூழ்நிலை நிலவுகிறது.

வெள்ளி அருவி, பீர் சோளா அருவி, ஃபெய்ரி ஃபால்ஸ் உள்ளிட்ட நீர் வீழ்ச்சிகளில் அதிக அளவு தண்ணீர் கொட்டுகிறது.

கொடைக்கானல் பகுதியில் எங்கு பார்த்தாலும் செடிகள், மரங்களில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

அண்மையில் பெய்த மழையால் புல்வெளிகள், பள்ளத் தாக்குகள் அனைத்தும் பச்சைப் பசேலெனக் காட்சி தருகின்றன.

கொடைக்கானல் ஏரி, பேரிஜாம் ஏரி மற்றும் மஞ்சளாறு அணையில் நீர் நிரம்பி வழிகிறது.

இனிய பயணம்: சென்னையில் இருந்து புதன்கிழமைதோறும் இரவு 9.30-க்குப் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு மறுநாள் (வியாழக்கிழமை) காலை 5.30-க்கு கொடைக்கானல் ரோடு நிலையத்துக்குச் செல்லலாம்.

அங்கு தயாராக நிறுத்தப்பட்டுள்ள சொகுசு மினி பஸ்ஸில் புறப்பட்டு, 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொடைக்கானலுக்கு "ஹேர்பின்' வளைவுகளைக் கடந்து இந்த உல்லாசப் பயணம் சுமார் 3 மணி நேரம் தொடர்கிறது.

கொடைக்கானல் அடைந்த பின் வெள்ளி அருவி, குறிஞ்சி ஆண்டவர் கோயில் ஆகிய இடங்களையும் காணலாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 4:01 pm

பில்லர் ராக்ஸ் (தூண் பாறைகள்) மற்றும் "கிரீன் வேலீ' எனப்படும் பசுமைப் பள்ளத்தாக்கின் அழகையும் பார்த்து ரசிக்கலாம்.

பனி மேகங்கள் சூழ்ந்த இப் பள்ளத்தாக்கு இயற்கையின் எழிலுக்குக் கட்டியம் கூறுகிறது.

கொடைக்கானலில் உள்ள கோக்கர்ஸ் வால்க், பிரையன்ட் பூங்கா, பழைமையான சர்ச், செட்டியார் பூங்கா, செண்பகனூர் அருங்காட்சியகம் ஆகிய இடங்களையும் பார்வையிடலாம்.

டெலஸ்கோப் மையம்: இதன்பின் தொலைநோக்கி (டெலஸ்கோப்) மையத்துக்குச் செல்லலாம்.

இம் மையத்தில் நிறுவப்பட்டுள்ள 3 டெலஸ்கோப் சாதனங்கள் மூலம் வைகை அணை, பெரியகுளம் நகர் மற்றும் "குணா' தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மலை உச்சியில் உள்ள பழங்கால சர்ச் ஆகியவற்றைக் காணலாம்.

கொடைக்கானல் ஏரியின் அழகை ரசித்தவாறு பெரிய அன்னங்களைப் போல வடிவமைத்த வண்ணப் படகுகளில், பெடல்களை மிதித்து இயக்கியவாறு உல்லாசமாகச் செல்லலாம்.

இந்த ஏரியைச் சுற்றியுள்ள சாலையில் குதிரை சவாரி செய்ய ரூ. 40 முதல் ரூ. 50 வரை கட்டணம்.

பயணிகள் விரும்பினால் ஒரு மணி நேரத்துக்கு ரூ. 10 வாடகைக் கட்டணத்தில் சைக்கிளில் ஏரிக் கரையைச் சுற்றி உலா வரலாம்.

வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் சுற்றுலா விடுதியில் தங்கியிருந்தபின் சனிக்கிழமை மாலை 5 மணிக்குக் கொடைக்கானலில் இருந்து புறப்பட்டு, கொடை ரோட்டில் இருந்து இரவு 9 மணிக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து சேரலாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 4:01 pm

பஸ்களில் சுற்றுலா

இது தவிர சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு பஸ்களில் சுற்றுலா செல்வதற்கான பயணச் சேவையையும் டி.டி.டி.சி. நிறுவனம் நடத்தி வருகிறது.

இதற்கான கட்டணம் ரூ. 1,450. 6 வேளை உணவு, தங்கும் இடம் ஆகியவையும் இதில் அடங்கும்.

கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்ல விரும்பும் பயணிகள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், 2, வாலாஜா சாலை, சென்னை 600 002. தொ.பே.எண்கள்: 25383333, 25384444 25367850.

இந் நிறுவனத்தின் கொடைக்கானல் விடுதியின் தொ.பே. எண்: 04542-241336; 0452-241337.

கொடைக்கானல் தூண் பாறை!

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 4:04 pm

உவகையூட்டும் உல்லாசபுரி!

சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் "மலைகளின் அரசி'யான உதகமண்டலம் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் "நீலா' என அழைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான உதகையை 1819 - ம் ஆண்டில் அப்போதை கோவை மாவட்ட ஆட்சியரான சர். ஜான் சலிவன் உருவாக்கினார்.

25 முதல் 10 டிகிரி வரை பொதுவான தட்பவெப்ப நிலையும், டிசம்பர் மாதத்தில் குறைந்தபட்சமாக 2 டிகிரி வரையிலான தட்பவெப்ப நிலையும் உதகையில் நிலவுகிறது. ஜூன் முதல் ஆகஸ்டு வரை பருவமழைக் காலமாகும்.

அரசினர் தாவரவியல் பூங்கா: இப்பூங்காவில் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மலர்ச் செடிகளும், தென்னிந்தியாவிலேயே மிகச்சிறந்த பெரணி பூங்காவும், 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கல் மரம் ஒன்றும் உள்ளன.

படகு இல்லம்: 1824-ம் ஆண்டில் ஜான் சலிவனால் உருவாக்கப்பட்ட இச் செயற்கை ஏரியில் படகுச் சவாரி செய்வது அலாதியானது. மிதி படகுகள், மோட்டார் படகுகள், துடுப்புப் படகுகள், வாட்டர் சைக்கிள் என அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது இப்படகு இல்லம்.

தொட்டபெட்டா சிகரம்: தென்னிந்தியாவின் இரண்டாவது பெரிய சிகரமான தொட்டபெட்டாவில் பொருத்தப்பட்டுள்ள நவீனத் தொலைநோக்கி மூலம் மலையின் தூரத்து ரகசியங்களை ரசிக்க முடியும். இங்கிருந்து சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதும் ஒரு புதிய அனுபவம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 4:04 pm

நீலகிரி மாவட்டத்திலே...

நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி, அப்பர் பவானி, முக்குருத்தி மலைச் சிகரம், பைக்காரா, கிளன்மார்கன், கல்லட்டி நீர்வீழ்ச்சி, வென்லாக் டவுன்ஸ், வெஸ்டர்ன் கேட்ச்மென்ட் ஆகிய பகுதிகளும் குறிப்பிடத்தக்கவையாகும்.

முதுமலை வனவிலங்கு சரணாலயம்: உதகையிலிருந்து 35 கி.மீ.தொலைவிலும், கூடலூரிலிருந்து 10 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ள முதுமலை வனச் சரணாலயம் கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் வனச் சரணாலயத்தையும், கேரளத்தின் வயநாடு தேசியப் பூங்காவையும் தொட்டாற்போல அமைந்துள்ளது.

முதுமலை வனச்சரணாலயத்தில் யானைகளின் எண்ணிக்கை அதிகம். மேலும் இங்கு புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, புள்ளிமான், கடமான், குரைக்கும் மான், கழுதைப்புலி, மயில் ஹார்ன்பில் என கணக்கிலடங்காத வனவிலங்குகள் உள்ளன. இப்பகுதியில் மாயார் நீர்வீழ்ச்சியும் அமைந்துள்ளது.

முதுமலையில் குடும்பத்துடன் யானைச் சவாரி செய்யலாம். ஆசியாவின் மிகப் பெரிய யானைப் பயிற்சி மையம் இங்கு உள்ளது.

குன்னூர்: குன்னூரில் சுற்றுலா பயணிகள் விஜயம் செய்யத் தகுந்த பகுதிகளாக சிம்ஸ் பார்க், லேம்ப்ஸ் ராக், டால்பின்ஸ் நோஸ், லாஸ் பால்ஸ், காட்டேரி பால்ஸ் மற்றும் டிரூக் ஆகியவை உள்ளன.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Dec 07, 2008 4:05 pm

உதகை, முதுமலையில் போக்குவரத்து, தங்குமிட வசதிகள்

கோவையிலிருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள உதகை, ரயில் போக்குவரத்து மூலம் மேட்டுப்பாளையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து பெங்களூர், கள்ளிக்கோட்டை போன்ற இடங்களுக்கு தினசரி பேருந்து வசதி உள்ளது.

தரமான சைவ மற்றும் அசைவ உணவகங்களும், நாளொன்றுக்கு ரூ. 200 முதல் ரூ. 5000 வரையிலான தங்குமிடங்களும் உதகையில் உள்ளன. முதுமலையில் தங்குவதற்கு வனத்துறையினரின் தங்கும் விடுதிகள் நாளொன்றுக்கு ரூ. 200 என்ற வாடகை விகிதத்தில் தொடங்கிக் கிடைக்கும்.

Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக