புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகச் சுற்றுலா தகவல்கள்
Page 2 of 7 •
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
ஓ மெரீனா....ஓ மெரீனா....
மெரீனா...கார்பன் மோனாக்ஸைடு சுவாசத்தில் திணறும் சென்னைவாசிகளுக்கு இளைப்பாறுதல் தரும் இடம்.
மெரீனா எப்படி ஒரு நாளை ஆரம்பிக்கிறது?
இதோ...மெரீனா கடற்கரையில் அதிகாலை 4 மணியிலிருந்து ஒரு "லைவ் ரிலே'... அந்தப் பிரம்ம முகூர்த்த வேளையில் சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் பளபளக்கிறது கடற்கரைச் சாலை. அதில், கலப்படமற்ற காற்றைச் சுவாசித்தபடி வாகனத்தில் சீறுவது அலாதி சுகமாய்த்தான் இருக்கிறது.
கலங்கரை விளக்கம் அருகே நமது வாகனத்தை ஓரங்கட்டிவிட்டு நடையைக் கட்டுகிறோம்.
வெளிச்ச மழையில் வெள்ளை மாளிகையாய்த் தகதகத்துக் கொண்டிருக்கிறது, டி.ஜி.பி. அலுவலகம். வாகன ஓட்டிகளை ஸ்பீக்கரில் எச்சரித்தபடி விரைகிறது, புதிய குவாலிஸ் காவல்துறை ரோந்து வாகனம்.
கடற்கரை உள்சாலையை ஒட்டியும் பரந்த மணல்வெளியிலும் வானமே கூரையாய்க் கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர் இந்நாட்டு "மன்னர்கள்'.
சீரணி அரங்கத்துக்குப் பின்புறம் உள்ள புறக்காவல் நிலையம் தூங்கி வழிந்து கொண்டிருக்க, கரகரத்துக் கொண்டிருக்கிறது ஒயர்லெஸ்.
தூரத்தே கடலில் ஜொலி ஜொலிக்கும் தீவுகளாய் மிதக்கின்றன கப்பல்கள்.
ஓ மெரீனா....ஓ மெரீனா....
மெரீனா...கார்பன் மோனாக்ஸைடு சுவாசத்தில் திணறும் சென்னைவாசிகளுக்கு இளைப்பாறுதல் தரும் இடம்.
மெரீனா எப்படி ஒரு நாளை ஆரம்பிக்கிறது?
இதோ...மெரீனா கடற்கரையில் அதிகாலை 4 மணியிலிருந்து ஒரு "லைவ் ரிலே'... அந்தப் பிரம்ம முகூர்த்த வேளையில் சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் பளபளக்கிறது கடற்கரைச் சாலை. அதில், கலப்படமற்ற காற்றைச் சுவாசித்தபடி வாகனத்தில் சீறுவது அலாதி சுகமாய்த்தான் இருக்கிறது.
கலங்கரை விளக்கம் அருகே நமது வாகனத்தை ஓரங்கட்டிவிட்டு நடையைக் கட்டுகிறோம்.
வெளிச்ச மழையில் வெள்ளை மாளிகையாய்த் தகதகத்துக் கொண்டிருக்கிறது, டி.ஜி.பி. அலுவலகம். வாகன ஓட்டிகளை ஸ்பீக்கரில் எச்சரித்தபடி விரைகிறது, புதிய குவாலிஸ் காவல்துறை ரோந்து வாகனம்.
கடற்கரை உள்சாலையை ஒட்டியும் பரந்த மணல்வெளியிலும் வானமே கூரையாய்க் கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர் இந்நாட்டு "மன்னர்கள்'.
சீரணி அரங்கத்துக்குப் பின்புறம் உள்ள புறக்காவல் நிலையம் தூங்கி வழிந்து கொண்டிருக்க, கரகரத்துக் கொண்டிருக்கிறது ஒயர்லெஸ்.
தூரத்தே கடலில் ஜொலி ஜொலிக்கும் தீவுகளாய் மிதக்கின்றன கப்பல்கள்.
துறைமுகத்திற்கு பூம்புகார்
பூம்புகார் தமிழகத்தின் பழமைமிக்க நகரங்களில் ஒன்றாகும். இவ்வூர் காவிரிபூம்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.
இங்கு பழங்காலத்திலேயே துறைமுகம் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடல்சீற்றத்தால் இந்நகரம் முழுமையாக அழிந்துவிட்டது. சிலப்பதிகாரத்தில் உள்ள இந்நகரம் பற்றிய குறிப்புகள் அடிப்படையில் தற்போது பூம்புகார் சுற்றுலாத் தலம் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பூம்புகார் தமிழகத்தின் பழமைமிக்க நகரங்களில் ஒன்றாகும். இவ்வூர் காவிரிபூம்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.
இங்கு பழங்காலத்திலேயே துறைமுகம் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடல்சீற்றத்தால் இந்நகரம் முழுமையாக அழிந்துவிட்டது. சிலப்பதிகாரத்தில் உள்ள இந்நகரம் பற்றிய குறிப்புகள் அடிப்படையில் தற்போது பூம்புகார் சுற்றுலாத் தலம் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் பயணம்
ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்டசோழபுரம் கோயில், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில், செட்டிக்குளம் தண்டாயுதபாணி கோயில் ஆகியவை இங்கு சுற்றுலா வருபவர்கள் தவறாமல் பார்க்கவேண்டிய திருத்தலங்கள்.
வீரமாமுனிவர் என அழைக்கப்படும் கிறிஸ்தவப் பாதிரியார் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி அவர்களால் சீரமைக்கப்பட்ட தேவாலயம் எலக்குறிச்சியில் அமைந்துள்ளது.
ஆற்காடு நவாபின் ஜாகீர்தார்களால் கட்டப்பட்ட ரஞ்சன்குடி கோட்டை பெரம்பலூரிலிருந்து 16 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
வேட்டக்குடி தரைவெட்டி பறவைகள் சரணாலயம், கீழப்பலுவார், மேலப்பலுவார் நினைவுச் சின்னங்கள் ஆகியவை மிகப் பிரபலமானவை.
ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்டசோழபுரம் கோயில், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில், செட்டிக்குளம் தண்டாயுதபாணி கோயில் ஆகியவை இங்கு சுற்றுலா வருபவர்கள் தவறாமல் பார்க்கவேண்டிய திருத்தலங்கள்.
வீரமாமுனிவர் என அழைக்கப்படும் கிறிஸ்தவப் பாதிரியார் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி அவர்களால் சீரமைக்கப்பட்ட தேவாலயம் எலக்குறிச்சியில் அமைந்துள்ளது.
ஆற்காடு நவாபின் ஜாகீர்தார்களால் கட்டப்பட்ட ரஞ்சன்குடி கோட்டை பெரம்பலூரிலிருந்து 16 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
வேட்டக்குடி தரைவெட்டி பறவைகள் சரணாலயம், கீழப்பலுவார், மேலப்பலுவார் நினைவுச் சின்னங்கள் ஆகியவை மிகப் பிரபலமானவை.
முக்கடலின் தாலாட்டு
நாட்டின் தென்கோடி முனையாக உள்ள கன்னியாகுமரி, எண்ணற்ற சிறப்புகளின் உறைவிடமாக உள்ளது.
இந்து மதத்தின் பெருமையை உலகத்தோரெல்லாம் உணரும் வகையில் உரைத்த வீரத்துறவி விவேகானந்தர் தியானமிருந்தது, முக்கடலால் தலாட்டப்படும் இந்த இடத்தில்தான்.
இங்கு சூரியோதயத்தையும் அஸ்தனத்தையும் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சி. சித்ரா பெüர்ணமியன்று சந்திரோதயத்தையும் சூரியோத அஸ்தமனத்தையும் ஒரே நேரத்தில் காண்பதும் அற்புதமானது.
கன்னியாகுமரியின் முக்கிய இடங்களுக்கு ஓர் உலா போகலாமா?
பகவதி அம்மன் கோயில்
கன்னியாகுமரியில் அருள்பாலித்துவரும் பகவதி அம்மனின் மூக்குத்தி புகழ்பெற்றது. இம்மூக்குத்தி சிந்தும் பேரொளியால் கப்பல்கள் கவரப்படலாம் எனக் கருதி கோயிலின் கிழக்கு வாயில் மூடப்பட்டதாக செவிவழிச் செய்தி.
பகவதி அம்மனுக்கு சித்ரா பெüர்ணமி உள்ளிட்ட நாள்களில் அணிவிக்கப்படும் வைரக் கிரீடம், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் உபயமாக வழங்கப்பட்டது.
வைகாசித் திருவிழா, நவராத்திரி விழா, ஆடி மற்றும் தை அமாவாசை, சித்ரா பெüர்ணமி ஆகிய நாள்களில் இக்கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
நாட்டின் தென்கோடி முனையாக உள்ள கன்னியாகுமரி, எண்ணற்ற சிறப்புகளின் உறைவிடமாக உள்ளது.
இந்து மதத்தின் பெருமையை உலகத்தோரெல்லாம் உணரும் வகையில் உரைத்த வீரத்துறவி விவேகானந்தர் தியானமிருந்தது, முக்கடலால் தலாட்டப்படும் இந்த இடத்தில்தான்.
இங்கு சூரியோதயத்தையும் அஸ்தனத்தையும் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சி. சித்ரா பெüர்ணமியன்று சந்திரோதயத்தையும் சூரியோத அஸ்தமனத்தையும் ஒரே நேரத்தில் காண்பதும் அற்புதமானது.
கன்னியாகுமரியின் முக்கிய இடங்களுக்கு ஓர் உலா போகலாமா?
பகவதி அம்மன் கோயில்
கன்னியாகுமரியில் அருள்பாலித்துவரும் பகவதி அம்மனின் மூக்குத்தி புகழ்பெற்றது. இம்மூக்குத்தி சிந்தும் பேரொளியால் கப்பல்கள் கவரப்படலாம் எனக் கருதி கோயிலின் கிழக்கு வாயில் மூடப்பட்டதாக செவிவழிச் செய்தி.
பகவதி அம்மனுக்கு சித்ரா பெüர்ணமி உள்ளிட்ட நாள்களில் அணிவிக்கப்படும் வைரக் கிரீடம், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் உபயமாக வழங்கப்பட்டது.
வைகாசித் திருவிழா, நவராத்திரி விழா, ஆடி மற்றும் தை அமாவாசை, சித்ரா பெüர்ணமி ஆகிய நாள்களில் இக்கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
விவேகானந்தர் மண்டபம்
விவேகானந்தர் நினைவாகக் கடற்பாறையில் வட - தென்னிந்திய சிற்பக் கலைகளின் சங்கமமாகக் கட்டப்பட்டுள்ளது, இம்மண்டபம். இம்மண்டப வளாகத்தில் அம்மனின் திருவடி பதிந்த பாறையைக் காணலாம்.
விவேகானந்தர் மண்டபத்துக்கு அருகே, உலகப் பொதுமறை தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவர் 133 அடி உயரச் சிலையாக ஓங்கி உயர்ந்து நிற்கிறார்.
காந்தி மண்டபம்
தேசத் தந்தையின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்திகரிக்கும் அபூர்வப் புகைப்படங்கள் இம்மண்டபத்தில் இடம்பெற்றுள்ளன.
மகாத்மா அவதரித்த அக். 2-ல் அவரது அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் ஆதவனின் சுடரொளிக் கதிர்கள் வீழ்ந்து வணங்கும் அபூர்வச் சிறப்புடன் இம்மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
தங்கச் சிலுவையுடன் ஜொலிக்கும் கன்னியாகுமரி புனித அலங்கார மாதா ஆலயம், காமராஜர் மணிமண்டபம், கலங்கரை விளக்கம், தமிழன்னை பூங்கா, அருங்காட்சியகம், விவேகானந்தா நூலகம், முருகன் குன்றம் ஆகியவையும் கன்னியாகுமரியில் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
விவேகானந்தர் நினைவாகக் கடற்பாறையில் வட - தென்னிந்திய சிற்பக் கலைகளின் சங்கமமாகக் கட்டப்பட்டுள்ளது, இம்மண்டபம். இம்மண்டப வளாகத்தில் அம்மனின் திருவடி பதிந்த பாறையைக் காணலாம்.
விவேகானந்தர் மண்டபத்துக்கு அருகே, உலகப் பொதுமறை தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவர் 133 அடி உயரச் சிலையாக ஓங்கி உயர்ந்து நிற்கிறார்.
காந்தி மண்டபம்
தேசத் தந்தையின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்திகரிக்கும் அபூர்வப் புகைப்படங்கள் இம்மண்டபத்தில் இடம்பெற்றுள்ளன.
மகாத்மா அவதரித்த அக். 2-ல் அவரது அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் ஆதவனின் சுடரொளிக் கதிர்கள் வீழ்ந்து வணங்கும் அபூர்வச் சிறப்புடன் இம்மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
தங்கச் சிலுவையுடன் ஜொலிக்கும் கன்னியாகுமரி புனித அலங்கார மாதா ஆலயம், காமராஜர் மணிமண்டபம், கலங்கரை விளக்கம், தமிழன்னை பூங்கா, அருங்காட்சியகம், விவேகானந்தா நூலகம், முருகன் குன்றம் ஆகியவையும் கன்னியாகுமரியில் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
குமரி மாவட்டத்தில்...
வரலாற்றுச் சிறப்புமிக்க குமரி மாவட்டத்தில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பல உள்ளன. அவை பற்றி...
சுசீந்திரம் தாணுமாலயமூர்த்தி கோயில்: நவபாஷாணத்தால் ஆன மகாவிஷ்ணு, விசுவரூப ஆஞ்சநேயர், சித்திரசபை, இசைத்தூண்கள், வெள்ளை நந்தி, ஆபூர்வ மூலிகை ஓவியங்கள், கல்வெட்டு...என வரலாற்றுக் கலைக்கூடமாகத் திகழ்கிறது, இக்கோயில்.
பத்மநாபபுரம் அரண்மனை: திருவாங்கூர் சமஸ்தானத்தின் செழிப்பை, கட்டடக் கலைச் சிறப்பை இங்கு காணலாம். தற்போது கேரள அரசின் பராமரிப்பில் உள்ள இந்த அரண்மனையை திங்கள்கிழமை தவிர இதர நாள்களில் கண்டுகளிக்கலாம்.
தென்னகத்திலேயே நாகருக்குத் தனிக் கோயில் எழுப்பப்பட்ட நாகராஜா சுவாமி கோயில், 108 வைணவத் திருப்பதிகளுள் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில், திருப்பதிசாரம் திருவாழிமார்பன் கோயில், தமிழகத்திலேயே மிக உயரமான மூலவர் சிலை உள்ள குமாரகோவில் உள்ளிட்ட கோயில்களும் சுற்றுலா மையங்களாகத் திகழ்கின்றன.
நாகர்கோயிலில் சமய நல்லிணக்கத்துடன் வழிபடப்படும் கேட்டவரம் தரும் கோட்டார் புனித சவேரியார் ஆலயம், கைதிகள் கட்டிய கல்கோவில் உள்ளிட்ட ஏராளமான தேவாலயங்கள் உள்ளன.
மேலும் வட்டக்கோட்டை, உதயகிரிக்கோட்டை, முட்டம், தேங்காய்ப்பட்டினம், சங்குத்துறை, சொத்தவிளை ஆகிய கடற்கரைகள், திற்பரப்பு, காளிகேசம் அருவிகள், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகள் என குமரி மாவட்டச் சுற்றுலா மையங்களின் பட்டியல் நீள்கிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க குமரி மாவட்டத்தில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பல உள்ளன. அவை பற்றி...
சுசீந்திரம் தாணுமாலயமூர்த்தி கோயில்: நவபாஷாணத்தால் ஆன மகாவிஷ்ணு, விசுவரூப ஆஞ்சநேயர், சித்திரசபை, இசைத்தூண்கள், வெள்ளை நந்தி, ஆபூர்வ மூலிகை ஓவியங்கள், கல்வெட்டு...என வரலாற்றுக் கலைக்கூடமாகத் திகழ்கிறது, இக்கோயில்.
பத்மநாபபுரம் அரண்மனை: திருவாங்கூர் சமஸ்தானத்தின் செழிப்பை, கட்டடக் கலைச் சிறப்பை இங்கு காணலாம். தற்போது கேரள அரசின் பராமரிப்பில் உள்ள இந்த அரண்மனையை திங்கள்கிழமை தவிர இதர நாள்களில் கண்டுகளிக்கலாம்.
தென்னகத்திலேயே நாகருக்குத் தனிக் கோயில் எழுப்பப்பட்ட நாகராஜா சுவாமி கோயில், 108 வைணவத் திருப்பதிகளுள் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில், திருப்பதிசாரம் திருவாழிமார்பன் கோயில், தமிழகத்திலேயே மிக உயரமான மூலவர் சிலை உள்ள குமாரகோவில் உள்ளிட்ட கோயில்களும் சுற்றுலா மையங்களாகத் திகழ்கின்றன.
நாகர்கோயிலில் சமய நல்லிணக்கத்துடன் வழிபடப்படும் கேட்டவரம் தரும் கோட்டார் புனித சவேரியார் ஆலயம், கைதிகள் கட்டிய கல்கோவில் உள்ளிட்ட ஏராளமான தேவாலயங்கள் உள்ளன.
மேலும் வட்டக்கோட்டை, உதயகிரிக்கோட்டை, முட்டம், தேங்காய்ப்பட்டினம், சங்குத்துறை, சொத்தவிளை ஆகிய கடற்கரைகள், திற்பரப்பு, காளிகேசம் அருவிகள், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகள் என குமரி மாவட்டச் சுற்றுலா மையங்களின் பட்டியல் நீள்கிறது.
கன்னியாகுமரி: சில விவரங்கள்...
பகவதி அம்மன் கோயில் நடை திறந்திருக்கும் நேரம்: அதிகாலை 4.30 முதல் பகல் 12.30 வரை; மாலை 4 முதல் இரவு 8.15 வரை.
படகுச் சேவை: விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல பூம்புகார் படகுத் துறையிலிருந்து படகுச் சேவை உண்டு. கட்டணம் - பெரியவர்களுக்கு ரூ. 20; சிறார்களுக்கு ரூ. 10. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 வரை டிக்கெட் பெறலாம். கல்விச் சுற்றுலா வரும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு படகுச் சேவையில் கட்டணச் சலுகை உண்டு.
சூரியோதத்தைத் காண்பதற்கான காட்சிக் கோபுரத்துக்குச் செல்ல பெரியவர்களுக்கு ரூ. 2, சிறார்களுக்கு ரூ. 1 கட்டணம்.
போக்குவரத்து வசதி: சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு நேரடியாகக் குமரி எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள்களில் சென்னை - திருவனந்தபுரம் ஆனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நாகர்கோவிலுக்கு வந்து அங்கிருந்து கன்னியாகுமரி செல்லலாம். சென்னையிலிருந்து அரசு விரைவுப் பேருந்து இயக்கப்படுகிறது. கட்டணம் ரூ. 280.
தங்கும் வசதி: கன்னியாகுமரியின் நுழைவாயிலில் அமைந்துள்ள விவேகானந்தா கேந்திரத்தில் தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்ளன. அறைகளுக்குக் கட்டணம் ரூ. 40 முதல் 300.
தனியார் ஹோட்டல்களில் தங்கும் அறைகளுக்கு வாடகை ரூ. 200 முதல் ரூ. 1500 வரை.
பகவதி அம்மன் கோயில் நடை திறந்திருக்கும் நேரம்: அதிகாலை 4.30 முதல் பகல் 12.30 வரை; மாலை 4 முதல் இரவு 8.15 வரை.
படகுச் சேவை: விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல பூம்புகார் படகுத் துறையிலிருந்து படகுச் சேவை உண்டு. கட்டணம் - பெரியவர்களுக்கு ரூ. 20; சிறார்களுக்கு ரூ. 10. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 வரை டிக்கெட் பெறலாம். கல்விச் சுற்றுலா வரும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு படகுச் சேவையில் கட்டணச் சலுகை உண்டு.
சூரியோதத்தைத் காண்பதற்கான காட்சிக் கோபுரத்துக்குச் செல்ல பெரியவர்களுக்கு ரூ. 2, சிறார்களுக்கு ரூ. 1 கட்டணம்.
போக்குவரத்து வசதி: சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு நேரடியாகக் குமரி எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள்களில் சென்னை - திருவனந்தபுரம் ஆனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நாகர்கோவிலுக்கு வந்து அங்கிருந்து கன்னியாகுமரி செல்லலாம். சென்னையிலிருந்து அரசு விரைவுப் பேருந்து இயக்கப்படுகிறது. கட்டணம் ரூ. 280.
தங்கும் வசதி: கன்னியாகுமரியின் நுழைவாயிலில் அமைந்துள்ள விவேகானந்தா கேந்திரத்தில் தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்ளன. அறைகளுக்குக் கட்டணம் ரூ. 40 முதல் 300.
தனியார் ஹோட்டல்களில் தங்கும் அறைகளுக்கு வாடகை ரூ. 200 முதல் ரூ. 1500 வரை.
தேசிய புண்ணியஸ்தலம்
ராமாயணத்தில் முக்கிய இடம் பெறும் திருத்தலம், ராமேஸ்வரம்.
தென்னிந்தியாவில் உள்ள ஒரே ஜோதிர்லிங்க ஸ்தலமான இது, மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் ஆகிய முப்பெருமை உடையது.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், தாயுமானசுவாமிகள் ஆகிய நான்கு பெரிய தமிழ் ஞானிகளால் பாடப்பெற்ற சிறப்பும் இத்தலத்துக்கு உண்டு.
ராமாவதாரம் எடுத்த விஷ்ணுவின் கையிலிருக்கும் சங்கு போன்ற வடிவத்தில் உள்ள ராமேஸ்வரம் தீவில் ராமநாதசுவாமியும் பர்வதவர்த்தினி அம்பாளும் அருள்பாலித்து வருகின்றனர்.
காசிக்கு நிகரானது :
தேசியப் புண்ணியஸ்தலமாக உள்ள ராமேஸ்வரம், காசிக்கு நிகராகப் புகழ்பெற்று விளங்குகிறது. காசியில் தொடங்கப்பட்ட யாத்திரை ராமேஸ்வரத்தில்தான் நிறைவு பெறுகிறது.
இங்கு மகோததி எனப்படும் வங்காள விரிகுடாவும் ரத்தினாகரம் எனப்படும் இந்துமாக்கடலும் கூடும் தனுஷ்கோடியில் யாத்ரீகர்கள் முழுக்கு போடும்போதுதான் காசி யாத்திரை பூர்த்தியாகிறது.
இங்குள்ள தீர்த்தங்கள் மானிடப் பிறவியின் பாவச் சுமையைக் கரைக்கின்றன; தோஷங்களைப் போக்குகின்றன என்பது நம்பிக்கை. ராவண சம்ஹாரம் முடிந்ததும் அவனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக ராமர் இங்கே சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
ராமாயணத்தில் முக்கிய இடம் பெறும் திருத்தலம், ராமேஸ்வரம்.
தென்னிந்தியாவில் உள்ள ஒரே ஜோதிர்லிங்க ஸ்தலமான இது, மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் ஆகிய முப்பெருமை உடையது.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், தாயுமானசுவாமிகள் ஆகிய நான்கு பெரிய தமிழ் ஞானிகளால் பாடப்பெற்ற சிறப்பும் இத்தலத்துக்கு உண்டு.
ராமாவதாரம் எடுத்த விஷ்ணுவின் கையிலிருக்கும் சங்கு போன்ற வடிவத்தில் உள்ள ராமேஸ்வரம் தீவில் ராமநாதசுவாமியும் பர்வதவர்த்தினி அம்பாளும் அருள்பாலித்து வருகின்றனர்.
காசிக்கு நிகரானது :
தேசியப் புண்ணியஸ்தலமாக உள்ள ராமேஸ்வரம், காசிக்கு நிகராகப் புகழ்பெற்று விளங்குகிறது. காசியில் தொடங்கப்பட்ட யாத்திரை ராமேஸ்வரத்தில்தான் நிறைவு பெறுகிறது.
இங்கு மகோததி எனப்படும் வங்காள விரிகுடாவும் ரத்தினாகரம் எனப்படும் இந்துமாக்கடலும் கூடும் தனுஷ்கோடியில் யாத்ரீகர்கள் முழுக்கு போடும்போதுதான் காசி யாத்திரை பூர்த்தியாகிறது.
இங்குள்ள தீர்த்தங்கள் மானிடப் பிறவியின் பாவச் சுமையைக் கரைக்கின்றன; தோஷங்களைப் போக்குகின்றன என்பது நம்பிக்கை. ராவண சம்ஹாரம் முடிந்ததும் அவனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக ராமர் இங்கே சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
பிரதிஷ்டை செய்வதற்கு நல்ல வேளை குறித்த ராமர், கைலாயத்தில் இருந்து லிங்கம் கொண்டு வர அனுமனைப் பணித்தார். அவர் வர தாமதமானதால் கடல் மணலில் சீதை செய்த லிங்கத்தை வழிபட்டார் ராமர். தாமதமாக வந்த அனுமன் கோபம் கொண்டு மணல் லிங்கத்தை அகற்ற முயன்றும் அது முடியவில்லை. அனுமனை ஆறுதல் படுத்துவதற்காக அவர் கொண்டு வந்த லிங்கத்துக்கே முதலில் பூஜை செய்ய வேண்டும் என ராமர் ஆணையிட்டார் என்கிறது புராணம்.
வைணவரான ராமர் சைவக் கடவுளான ஈஸ்வரனை சிவலிங்க வடிவத்தில் வழிபட்டதால் சைவர்களும் வைணவர்களும் நாடு முழுவதிலும் இருந்து வந்து வழிபடும் முக்கியத் தலமாக உள்ளது ராமேஸ்வரம்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அமைப்பும், அடுக்கடுக்கான பிரகாரங்களும் திராவிடக் கட்டடக் கலையின் சிறப்பை எடுத்துக்காட்டுபவையாக உள்ளன.
வைணவரான ராமர் சைவக் கடவுளான ஈஸ்வரனை சிவலிங்க வடிவத்தில் வழிபட்டதால் சைவர்களும் வைணவர்களும் நாடு முழுவதிலும் இருந்து வந்து வழிபடும் முக்கியத் தலமாக உள்ளது ராமேஸ்வரம்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அமைப்பும், அடுக்கடுக்கான பிரகாரங்களும் திராவிடக் கட்டடக் கலையின் சிறப்பை எடுத்துக்காட்டுபவையாக உள்ளன.
மாபெரும் மூன்றாம் பிரகாரம்
இக்கோயிலில் 1212 தூண்களும் 2250 அடி சுற்றளவும் கொண்ட மூன்றாம் பிரகாரம் உலகிலேயே மிக நீளமானது என்ற பெருமைக்குரியது.
ராமாயண காலத்திலேயே தோன்றியுள்ள இக்கோயில் 12-ம் நூற்றாண்டு வரை கூரைக் கொட்டகையாக இருந்தது.
கி.பி. 12-ம் நூற்றாண்டில் இலங்கை அரசர் பராக்கிமபாகு இத்திருக்கோயிலின் கர்ப்பக்கிரகத்தைக் கட்டியுள்ளார். பின்னர் இக்கோயிலில் திருப்பணி செய்தவர்களில் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு முக்கிய இடம் உண்டு.
1904-ல் தேவகோட்டை ஜமீன்தார் ஏ.எல்.ஏ.ஆர். குடும்பத்தினர் திருப்பணி நிதி திரட்டி 9 நிலைகளுடைய கிழக்குக் கோபுரத்தைக் கட்டி முடித்தனர்.
பல நூற்றாண்டுகளாகக் கட்டி முடிக்கப்படாமல் இருந்த வடக்கு, தெற்கு ராஜகோபுரங்களை ரூ. 2.70 கோடி மதிப்பீட்டில் 5 நிலைகளுடன் கட்டி முடிக்க காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்வந்தார். தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
புத்த மதத் தலைவர் தலாய் லாமா ஒருமுறை கூறியது போல், ஆன்மிக உயர்வுக்கான அருள் கிரகணங்களை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தொடர்ந்து பொழிந்து வருகிறது.
இக்கோயிலில் 1212 தூண்களும் 2250 அடி சுற்றளவும் கொண்ட மூன்றாம் பிரகாரம் உலகிலேயே மிக நீளமானது என்ற பெருமைக்குரியது.
ராமாயண காலத்திலேயே தோன்றியுள்ள இக்கோயில் 12-ம் நூற்றாண்டு வரை கூரைக் கொட்டகையாக இருந்தது.
கி.பி. 12-ம் நூற்றாண்டில் இலங்கை அரசர் பராக்கிமபாகு இத்திருக்கோயிலின் கர்ப்பக்கிரகத்தைக் கட்டியுள்ளார். பின்னர் இக்கோயிலில் திருப்பணி செய்தவர்களில் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு முக்கிய இடம் உண்டு.
1904-ல் தேவகோட்டை ஜமீன்தார் ஏ.எல்.ஏ.ஆர். குடும்பத்தினர் திருப்பணி நிதி திரட்டி 9 நிலைகளுடைய கிழக்குக் கோபுரத்தைக் கட்டி முடித்தனர்.
பல நூற்றாண்டுகளாகக் கட்டி முடிக்கப்படாமல் இருந்த வடக்கு, தெற்கு ராஜகோபுரங்களை ரூ. 2.70 கோடி மதிப்பீட்டில் 5 நிலைகளுடன் கட்டி முடிக்க காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்வந்தார். தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
புத்த மதத் தலைவர் தலாய் லாமா ஒருமுறை கூறியது போல், ஆன்மிக உயர்வுக்கான அருள் கிரகணங்களை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தொடர்ந்து பொழிந்து வருகிறது.
கோயில் தீவு:
கோயில் தீவு என்று கூறத்தக்க வகையில் ராமேஸ்வரம் தீவு முழுவதும் கோயில்களாகக் காணப்படுகின்றன.
"ராமர் பாதம்' உள்ள கந்தமாதன பர்வதம், கோதண்டராமசுவாமி கோயில், ஜடாயு தீர்த்தம், சாட்சி அனுமன் கோயில், ஐந்து முக அனுமன் கோயில் (இங்கு இலங்கைக்குப் பாலம் கட்டப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் மிதக்கும் கற்களைக் காணலாம்.), பத்ரகாளியம்மன் கோயில், நம்புநாயகி அம்மன் கோயில், வில்லுண்டித் தீர்த்தம் ஆகியவை அவை.
தனுஷ்கோடி: ராமேஸ்வரம் தீவின் தெற்குக் கோடி முனையான தனுஷ்கோடி ஓர் அழிந்த சிறு நகரம். ராமேஸ்வரத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள தனுஷ்கோடி 1964-ல் அடித்த புயலில் காணாமல் போனது. முன்பிருந்த ரயில் நிலையம், சர்ச், கோயில் போன்றவற்றின் மிச்சங்கள் ஒரு வரலாற்று சோகத்தின் மெüன சாட்சிகளாக நின்று கொண்டிருக்கின்றன.
இந்திரா காந்தி பாலம்: பாம்பன் பாலம் என்று அழைக்கப்படும் இந்த 2.2 கி.மீ. பாலம் இந்தியாவிலே மிக நீளமானது. ராமேஸ்வரம் தீவைப் பிரதான நிலப் பரப்புடன் இணைக்கிறது. கடலுக்கு மேல் பயணிக்கும் அற்புதமான அனுபவத்தைத் தருகிறது இப்பாலம். (இரவில் இப்பாலத்தில் விளக்குப் போட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்குப் புண்ணியமாப் போகும்!) இதன்அருகில் பெரிய படகுகள் செல்ல அனுமதிக்கும் திறப்புடன் கூடிய ரயில்வே பாலமும் பார்த்து ரசிக்கத்தக்கது.
கோயில் தீவு என்று கூறத்தக்க வகையில் ராமேஸ்வரம் தீவு முழுவதும் கோயில்களாகக் காணப்படுகின்றன.
"ராமர் பாதம்' உள்ள கந்தமாதன பர்வதம், கோதண்டராமசுவாமி கோயில், ஜடாயு தீர்த்தம், சாட்சி அனுமன் கோயில், ஐந்து முக அனுமன் கோயில் (இங்கு இலங்கைக்குப் பாலம் கட்டப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் மிதக்கும் கற்களைக் காணலாம்.), பத்ரகாளியம்மன் கோயில், நம்புநாயகி அம்மன் கோயில், வில்லுண்டித் தீர்த்தம் ஆகியவை அவை.
தனுஷ்கோடி: ராமேஸ்வரம் தீவின் தெற்குக் கோடி முனையான தனுஷ்கோடி ஓர் அழிந்த சிறு நகரம். ராமேஸ்வரத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள தனுஷ்கோடி 1964-ல் அடித்த புயலில் காணாமல் போனது. முன்பிருந்த ரயில் நிலையம், சர்ச், கோயில் போன்றவற்றின் மிச்சங்கள் ஒரு வரலாற்று சோகத்தின் மெüன சாட்சிகளாக நின்று கொண்டிருக்கின்றன.
இந்திரா காந்தி பாலம்: பாம்பன் பாலம் என்று அழைக்கப்படும் இந்த 2.2 கி.மீ. பாலம் இந்தியாவிலே மிக நீளமானது. ராமேஸ்வரம் தீவைப் பிரதான நிலப் பரப்புடன் இணைக்கிறது. கடலுக்கு மேல் பயணிக்கும் அற்புதமான அனுபவத்தைத் தருகிறது இப்பாலம். (இரவில் இப்பாலத்தில் விளக்குப் போட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்குப் புண்ணியமாப் போகும்!) இதன்அருகில் பெரிய படகுகள் செல்ல அனுமதிக்கும் திறப்புடன் கூடிய ரயில்வே பாலமும் பார்த்து ரசிக்கத்தக்கது.
- Sponsored content
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 7
|
|