புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 10 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா


   
   

Page 10 of 14 Previous  1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 5:01 pm

First topic message reminder :



பால முருகன்


சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்

வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன்-கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்

பிள்ளையாரின் நல்லதம்பி
எங்கள் பாலமுருகன்-சிறு
பிள்ளைகளின் இனியதோழன்
எங்கள் பாலமுருகன்

கள்ளமில்லா உள்ளங்கொண்டால்
எங்கள் பாலமுருகன்-நம்மைக்
காத்தருள்வான், காத்தருள்வான்
எங்கள் பாலமுருகன்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:38 pm

நாயும் நிலவும்

வட்ட மான வெண்ணி லாவைப்
பார்த்துப் பார்த்துமே
வள்வள் ளென்று எங்கள் வீட்டு
நாய் குரைத்தது.
கிட்டச் சென்றே என்ன சொல்லிக்
குரைக்கு தென்றுநான்
கேட்டு வந்தேன்; அந்தச் செய்தி
கூறப் போகிறேன்:

நிலாவிடம் நாய் சொன்னது:

அமா வாசை இருட்டிலே
ஆகா யத்தில் தேடினேன்.

எங்கே போனாய்? நிலவேநீ
எவரைக் கண்டே அஞ்சினாய்?

அமா வாசை நாளிலே
அண்டங் காக்கை இருளிலே

திருட்டு முனியன் பூனைபோல்
தெருவில் நடந்து வந்தனன்.

பார்த்து விட்டேன் நானுமே.
பாய்ந்தேன் அந்த நிமிடமே.

கோபக் குரலில் கத்தினேன்;
குரைத்துக் கொண்டே துரத்தினேன்.

என்னைப் பார்த்துத் திருடனும்
எடுத்தான் ஓட்டம் வேகமாய்.

தலை தெறிக்க ஓடியே
தப்பிப் பிழைத்து விட்டனன்.

ஆனை போல உருவமும்
ஆட்டுக் கடா மீசையும்

கோவைப் பழத்துக் கண்களும்
கொண்ட திருடன் முனியனைப்

பார்த்துத் தானே நீயுமே
பயந்தே ஓடிப் பதுங்கினாய்?

அமா வாசை இருளிலே
அஞ்சி ஓடி ஒளிந்தநீ

திருடன் போன மறுதினம்
சிறிதே தலையை நீட்டினாய்.

மெல்ல மெல்லத் தினமுமே
வெளியே எட்டிப் பார்த்தநீ

திருடன் இல்லை என்பதைத்
தெரிந்து கொண்டாய் இன்றுதான்.

வாரம் இரண்டு ஆனபின்
வந்து முழுசாய் நிற்கிறாய்.

ஏனோ என்னைப் பார்த்துநீ
இளப்ப மாகச் சிரிக்கிறாய்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:39 pm

உறுதி! உறுதி! உறுதி!

உண்மை பேச நானுமே
உறுதி கொண்டேன். ஆயினும்
சின்னச் சின்னப் பொய்களைத்
தினமும் ஏனோ சொல்கிறேன்.

“என்றன் மாமா லண்டனில்
இருக்கி றாரே, தெரியுமா?”
என்று நானும் புளுகுவேன்.
இதிலே பெருமை கொள்ளுவேன்.

நல்ல பாம்பு, பாம்பென
நண்பர் கூடி இருக்கையில்
சொல்வேன். அவர்கள் யாவரும்
துடித்தே ஓட மகிழுவேன்.

கவனக் குறைவால் நானுமே
கண்ணா டியை உடைத்தபின்
தவறு தங்கை செய்ததாய்த்
தந்தை யிடத்தில் கூறுவேன்.

எனக்குப் படிப்பில் போட்டியாய்
இருக்கும் கோபு, முரளியின்
கணக்கைக் காப்பி அடித்ததாய்க்
கதையும் கட்டி விடுகிறேன்.

அன்னை தூங்கும் வேளையில்
ஆசை யாக லட்டையே
தின்று விட்டு யார்அந்தத்
திருடன் என்று தேடுவேன்.

ஃ ஃ ஃ

தினம் தினம் இப்படி நான்சொன்ன
சிறுசிறு பொய்கள் எத்தனையோ?
கணக்கே இல்லை. இதற்கெல்லாம்
காரணம் என்ன? நானறிவேன்.

பெருமைக் காகப் பொய்சொன்னேன்.
பிறரை ஏய்க்கப் பொய்சொன்னேன்.

அடிக்குப் பயந்து பொய்சொன்னேன்.
ஆத்திரத் தாலே பொய்சொன்னேன்.

ஆசையி னாலும் பொய்சொன்னேன்.
ஐயோ! தினமும் பொய்சொன்னேன்.

ஃ ஃ ஃ

இப்படித் தினம்தினம் பொய்சொன்னால்
எவர்தான் என்னை நம்பிடுவார்?
தப்பிதம் அன்றோ? இதைநானும்
சரியாய் உணர்ந்தேன். எப்பொழுது?

காந்தித் தாத்தா வரலாற்றைக்
கருத்துடன் இன்று படிக்கையிலே,

உண்மை ஒன்றே இவ்வுலகில்
உயர்ந்தது, மிகவும் உயர்ந்ததென

உணர்ந்தேன். இனிமேல் எப்பொழுதும்
உத்தமர் காந்தி வழிநடப்பேன்.

சோதனை பற்பல தோன்றிடினும்,
தொல்லைகள் தொடர்ந்து வந்திடினும்

உண்மை ஒன்றே பேசிடுவேன்.
உறுதி, உறுதி, உறுதி இது !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:40 pm

நடந்து போன நாற்காலி !

இரண்டு கால்கள் உள்ள மனிதர்
இங்கும் அங்கும் நடக்கிறார்.
ஏணி மேலே காலை வைத்தே
ஏறி ஏறிச் செல்கிறார்.

குறுக்கே பள்ளம் இருந்தால் உடனே
குதித்துத் தாவிக் கடக்கிறார்.
குடுகு டென்று வேக மாகக்
குதிரை போலச் செல்கிறார்.

இரண்டு கால்கள் உள்ள மனிதர்
இவற்றை யெல்லாம் செய்கையில்
இரண்டு மடங்கு கால்கள் எனக்கு
இருந்தும் சும்மா இருப்பதோ?

இருந்த இடத்தில் இருந்து இருந்து
எனக்குச் சலித்துப் போனதே.
இன்றே நானும் மனிதர் போலே
எங்கும் நடந்து செல்லுவேன்.

இப்படி -

நான்கு கால்கள் கொண்டஒரு
நாற்கா லியுமே நினைத்ததுவே.

நகர்ந்து நகர்ந்து சென்றதுவே;
நலமாய் முகப்பை அடைந்ததுவே.

எட்டுப் படிகள் வாசலிலே
இருந்தன. அவற்றில் இறங்கிடவே

முன்னங் கால்கள் இரண்டையுமே
முதலாம் படியில் வைத்ததுவே.

மடித்துக் காலை வைக்காமல்
வாயிற் படியில் இறங்கியதால்

அடுத்த நிமிடம் தடதடென
அங்கே சத்தம் கேட்டதுவே.

உருண்டு விழுந்தது நாற்காலி !
ஒடிந்தன மூன்று கால்களுமே !

மிச்சம் ஒற்றைக் காலுடனே
முடமாய்க் கிடந்தது நாற்காலி.

நடக்கும் முன்னே நாற்காலி.
நடந்த பிறகோ ஒருகாலி !

இருந்த இடத்தில் இருந்திருந்தால்
இன்னும் அதன்பெயர் நாற்காலி !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:41 pm

பச்சைக் கண்ணன்

சீனி மிட்டாய்க் கடையிலே
சின்னச் சின்னப் பொம்மைகள்.
சின்னச் சின்னப் பொம்மைகள்
சீனி மிட்டாய்ப் பொம்மைகள்.

கண்ணன் பொம்மை இருந்தது.
காந்தி பொம்மை இருந்தது.
வண்ண வண்ணப் பொம்மைகள்
வரிசை யாக இருந்தன.

காசு கொடுத்து நானுமே
கண்ணன் பொம்மை வாங்கினேன்.
ஆசை யாக எனதுவாய்
அருகில் கொண்டு போயினேன்.

பச்சை நிறத்துக் கண்ணனோ
பார்க்க அழகாய் இருந்ததால்
எச்சில் படுத்தித் தின்னவே
எனக்கு விருப்பம் இல்லையே!

அறையில் மாடம் இருந்தது.
அதிலே வைத்தேன், கண்ணனை!
உறங்கிப் போனேன், இரவிலே.
ஒன்றும் அறியேன் நானுமே.

காலை எழுந்து பார்க்கையில்
காண வில்லை கண்ணனை.
நாலு புறமும் வீட்டினுள்
நன்கு நானும் தேடினேன்.

அப்பா வந்தார்; கூறினேன்.
அவரும் தேடிப் பார்த்தனர்.
அப்போ தவரின் கண்களோ
அறையின் ஓரம் பார்த்தன.

ஓர மாகச் சென்றுநான்
உற்றுப் பார்த்தேன் அவருடன்.
சாரை சாரை யாகவே
தரையில் கண்டேன், எறும்புகள்.

பச்சை நிறத்துக் கண்ணனைப்
பங்கு போட்டே எறும்புகள்
இச்சை யோடு வாயிலே
எடுத்துக் கொண்டு சென்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:42 pm

நான் :

கண்ணன் பொம்மை முழுவதும்
கடித்துக் கடித்தே எறும்புகள்
கொண்டு செல்லு கின்றன.
கொடுமை கொடுமை, கொடுமையே !

அப்பா :

பச்சைக் கண்ணன் இவைகளின்
பசியைப் போக்கத் தன்னையே
மிச்ச மின்றி உதவினன்.
வீணில் வருத்தம் கொள்வதேன்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:42 pm

பல்லில்லாத பாட்டி

பல்லில் லாத பாட்டிக்குப்
பத்துப் பேரப் பிள்ளைகள்.
எல்லாப் பேரப் பிள்ளையும்
எதிரே ஒருநாள் வந்தனர்.

“பத்துப் பத்துச் சீடைகள்
பாட்டி உனக்கே” என்றனர்.
மொத்தம் நூறு சீடைகள்
முன்னே வைத்துச் சென்றனர்.

ஏக்கத் தோடு பாட்டியும்
எதிரே இருந்த சீடையைப்
பார்க்க வில்லை; சிரித்தனள்;
பைய எழுந்து நின்றனள்.

சின்னத் தூக்கு ஒன்றிலே
சீடை யாவும் வைத்தனள்.
என்ன செய்தாள், தெரியுமா?
எடுத்துச் சொல்வேன், கேளுங்கள்;


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:43 pm

தடியை ஊன்றி ஊன்றியே
தன்னந் தனியாய்ப் பாட்டியும்
நடந்து நடந்து சென்றனள்;
நான்கு தெருவைக் கடந்தனள்.

மாவு அரைக்கும் ஓரிடம்
வந்த பிறகே நின்றனள்.
ஆவ லாக நுழைந்தனள்;
“அரைத்துக் கொடுப்பீர்” என்றனள்.

உருண்டைச் சீடை யாவுமே
உடைந்து நொறுங்கிக் கடைசியில்
அருமை மாவாய் மாறின.
ஆஹா ! பாட்டி மகிழ்ந்தனள்.

வீடு வந்து சேர்ந்தனள்
வேக மாகப் பாட்டியும்.
சீடை மாவில் நெய்யுடன்
சீனி சேர்த்துப் பிசைந்தனள்.

தின்னப் போகும் வேளையில்
சேர்ந்து பேரப் பிள்ளைகள்
முன்னே வந்து நின்றனர்.
“என்ன பாட்டி?” என்றனர்.

பாட்டி சீடை மாவினைப்
பத்துப் பேரப் பிள்ளைக்கும்
ஊட்டி ஊட்டி விட்டனள்;
ஒருவாய் அவளும் உண்டனள் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:43 pm

எட்டுக் கோழிக் குஞ்சுகள்

எட்டுக் கோழிக் குஞ்சுகள்
இரையைத் தேடிச் சென்றன.
குட்டை யாக ஒருபுழு
குறுக்கே செல்லக் கண்டன.

பார்த்த வுடனே எட்டுமே
பாய்ந்து கொல்ல முயன்றன.
யார்தான் புழுவைத் தின்பது?
என்று சண்டை போட்டன.

சிறகை அடித்துக் கொண்டன;
சீறித் தாவிக் கொத்தின;
குரலைக் காட்டி வேகமாய்க்
கோபத் தோடு கூவின.

அம்மாக் கோழி குரலுமே
அந்தச் சமயம் கேட்கவே,
வம்புச் சண்டை நிறுத்தின.
மனத்தைக் கட்டுப் படுத்தின.

சண்டை ஓய்ந்து போனதும்
தரையைக் கூர்ந்து நோக்கின.
கண்ணில் அந்தப் புழுவையே
காண வில்லை; இல்லையே !

சண்டை முடியும் வரையிலும்
சாவ தற்கு நிற்குமோ ?
மண்டு அல்ல அப்புழு.
மகிழ்ந்து தப்பி விட்டதே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:44 pm

நன்றி

மாட்டு வண்டி ஒன்றில் கறுப்பன்
மூட்டை ஏற்றிச் சென்றான்.
மேட்டில் வண்டி ஏறும் போது
மூட்டை விழவே நின்றான்.

உருளைக் கிழங்கு மூட்டை அதனை
ஒருவ னாகத் தூக்கப்,
பெரிதும் கறுப்பன் முயன்ற போது
பெரியார் ஒருவர் வந்தார்.

“இருவர் நாமும் சேர்ந்தால் இதனை
எளிதில் தூக்க முடியும்.
சிரமம் இன்றி இருந்த இடத்தில்
திரும்ப வைத்து விடலாம்”

பெரியார் இதனைக் கூறிவிட்டுப்
பெரிய மூட்டை அதனைக்
கறுப்ப னோடு சேர்ந்து தூக்கிக்
கட்டை வண்டி சேர்த்தார்.

“இந்த ஏழை சிரமம் தீர்க்க
இனிய உதவி செய்தீர்.
எந்த வகையில் நன்றி சொல்வேன்?”
என்று கறுப்பன் கூற,

“வாயால் நன்றி கூற வேண்டாம்.
மகிழ்ச்சி யோடு பிறர்க்கு
நீயும் உதவி செய்தால் எனது
நெஞ்சு குளிரும்” என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:45 pm

கழுகுக் காட்சி

திருக்கழுக் குன்ற மலையினிலே
தினமும் உச்சி வேளையிலே
அருமைக் காட்சி கண்டிடவே
அங்கே மக்கள் கூடுவரே.

வானை நிமிர்ந்து பார்த்திடுவர்;
வருகை தன்னை நோக்கிடுவர்;
ஏனோ இன்னும் வரவில்லை?
என்றே சிலரும் ஏங்கிடுவர்.

சட்டென வானில் இருகழுகு
வட்டம் போடும் காட்சியினைச்
சுட்டிக் காட்டுவர் சிலபேர்கள்.
துள்ளிச் சிறுவர் குதித்திடுவர்.

Sponsored content

PostSponsored content



Page 10 of 14 Previous  1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக