புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா


   
   

Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 5:01 pm

First topic message reminder :



பால முருகன்


சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்

வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன்-கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்

பிள்ளையாரின் நல்லதம்பி
எங்கள் பாலமுருகன்-சிறு
பிள்ளைகளின் இனியதோழன்
எங்கள் பாலமுருகன்

கள்ளமில்லா உள்ளங்கொண்டால்
எங்கள் பாலமுருகன்-நம்மைக்
காத்தருள்வான், காத்தருள்வான்
எங்கள் பாலமுருகன்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:34 pm


கண்ணன் வீட்டுத் தோட்டம்

கண்ணன் வீட்டுத் தோட்டத்திலே
வண்ண வண்ண மலர்கள் உண்டு.

வண்ண மலர்கள் கூட்டத்திலே
வாச னைகள் அதிகமுண்டு.

வாச னையை அறிந்துகொண்டு
வண்டு தேடி வருவதுண்டு.

வண்டின் பசியைத் தீர்த்திடவே
மலர்கள் தேனைத் தருவதுண்டு.

மலர்கள் தந்த தேனைஉண்டு
வண்டு சுற்றி வருவதுண்டு.

வண்டு சுற்றிச் சுற்றிவந்து
வாழ்த்துப் பாடி மகிழ்வதுண்டு.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:35 pm


கண்ணன் கையில் கண்டது....?

கோகு லத்துக் கண்ணன் அதோ
தெருவில் வருகிறான்.
குறும்புச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே
அருகில் வருகிறான்.

மேக வண்ணக் கண்ணன் அதோ
தெருவில் வருகிறான்.
மெல்ல, மெல்ல நடந்து நடந்தே
அருகில் வருகிறான்.

கையைப் பின்னால் மறைத்துக் கொண்டே
கண்ணன் வருகிறான்.
கள்ளச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே
கண்ணன் வருகிறான்.

பையப் பைய நடந்து நடந்து
கண்ணன் வருகிறான்.
பார்த்துக் கண்ணைச் சிமிட்டிக் கொண்டே
கண்ணன் வருகிறான்.

ஃ ஃ ஃ

கண்ணன் எதையோ பின்புறம்
கையில் வைத்து மறைக்கிறான்.
என்ன வாக இருக்குமோ?
எட்டிப் பார்த்தேன், ஆவலாய்.

எட்டி எட்டிப் பார்த்துமே
எனக்குத் தெரிய வில்லையே !
சுற்றி வந்தேன் கண்ணனை.
சுற்றி அவனும் ஏய்த்தனன் !

மாயக் காரன் கைகளை
மறைத்து மறைத்து வைத்ததால்,
ஓய்ந்து போனேன். கடைசியில்
உயரே கையைத் தூக்கினான்.

கண்ணன் கையில் இருந்ததைக்
கண்ட வுடனே நானுமே
கொண்டேன் மிகவும் இன்பமே
குதிக்க லானேன், மகிழ்ச்சியில் !

கண்ணன் கையில் இருந்தது
என்ன என்று தெரியுமா ?
வெண்ணெய் இல்லை; குழல் இல்லை.
வேறே என்ன இருந்தது ?

கண்ணன் கையில் இருந்தது
கால மெல்லாம் உதவிடும்
உண்மை கூறும் புத்தகம்
உயர்ந்த பகவத் கீதையாம் !


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:36 pm

பெரிய கண்டம்

கண்டங் களிலே மிகவும் பெரிய
கண்டம் ஆசியா.
காடு மலை பீட பூமி
நிறைந்த ஆசியா.

பண்டைக் கால ஆதி மனிதர்
பிறந்த ஆசியா.
பழமை யான நாக ரிகம்
சிறந்த ஆசியா.

புத்தர், ஏசு, நபிகள், காந்தி
பிறந்த ஆசியா.
புனித மான மதங்கள் பிறந்து
வளர்ந்த ஆசியா.

மொத்தம் இந்த உலகில் உள்ள
கண்டம் ஐந்திலே
மிகவும் அதிக மக்கள் வாழும்
கண்டம் ஆசியா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:36 pm

சிரிக்கும் பூக்கள்

வண்ண வண்ணப் பூக்கள்-நல்ல
மணம் நிறைந்த பூக்கள்.
என்னைப் பார்த்துச் சிரிக்கும்-அவை
இனிய நல்ல பூக்கள்.

நீலம், பச்சை, சிவப்பு-இன்னும்
நிறங்கள் பலவும் உண்டு.
காலை நேரம் வருவேன்-இந்தக்
காட்சி கண்டு மகிழ்வேன்.

ஆடி அசையும் பூக்கள்-நான்
அருகில் சென்று பறிப்பேன்.
கூடை நிறைந்து போகும்-நான்
கொய்த மலர்கள் சிரிக்கும்.

பார்க்கும் போதும் சிரிக்கும்-நான்
பறிக்கும்போதும் சிரிக்கும்.
சேர்த்துக் கட்டும் போதும்-அவை
சிரித்துக் கொண்டே இருக்கும் !

கண்ணன் சிலைக்குப் போட-நான்
கட்டி வைத்த பூக்கள்
என்னைப் பார்த்துச் சிரிக்கும்-என்
சின்னத் தம்பி போல !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:39 pm

குரங்குக் குடும்பம்
(மாமல்லபுரச் சிற்பம்)

அப்பாக் குரங்கு பின்புறத்தில்
அமர்ந்தி ருக்குது;
அம்மாக் குரங்கின் தலையி லிருந்து
பேன் எடுக்குது.

பிள்ளைக் குரங்கு அம்மா மடியில்
படுத்தி ருக்குது.
பிரிய மாக அம்மா அதற்குப்
பால் கொடுக்குது.

அன்பு, பாசம், கடமை யெல்லாம்
கல்லில் காட்டிடும்
அற்பு தத்தைச் செய்த சிற்பி
அவரைத் தெரியுமோ?

இன்று அவரைத் தெரிய வி்ல்லை
என்ற போதிலும்,
இந்தக் காட்சி நமது நெஞ்சில்
என்றும் நிற்குமே !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:39 pm

அவர் யார்?

தட்டில் இருந்த சோளப் பொரியை
விட்டு எறிந்த தார்? -பின்
நட்ட நடுவே அந்த வெள்ளித்
தட்டை வைத்த தார்?

வட்ட மாக நீலத் திரையில்
வெட்டி எடுத்த தார்?- சுற்றிப்
பொட்டுப் பொட்டாய் எங்கும் சரிகைப்
புள்ளி வைத்த தார்?

பட்டுத் துணியில் முத்தை எங்கும்
ஒட்டி வைத்த தார்?-அதன்
நட்ட நடுவே குண்டு விளக்கைக்
கட்டி விட்ட தார்?

பட்டப் பகலாய் ஒளியை வீசும்
வட்ட நிலவைப் பார்-உடன்
வெட்ட வெளிச்ச மாகத் தெரியும்,
இந்தப் பாடல் பார் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:40 pm

கந்தன் சொல்கிறான்


ஊரின் கோடியில் ஒருகுடிசை-அந்த
ஓலைக் குடிசை என்குடிசை.

சூறைக் காற்றில் பறக்கும் அது.
சிறுமழை பெய்யினும் ஒழுகும் அது.
யாரும் உள்ளே நுழைந்திடலாம்.
இழுத்துச் சாத்திடக் கதவில்லை.

ஊரின் கோடியில் ஒருகுடிசை-அந்த
ஓலைக் குடிசை என்குடிசை.

அருகில் எந்தத் தெருவுமில்லை.
அந்திபட் டாலோ விளக்குமில்லை.
சிறுஅகல் விளக்கில் படித்திடுவேன்.
தேர்வில் நிச்சயம் வென்றிடுவேன்.

ஊரின் கோடியில் ஒருகுடிசை-அந்த
ஓலைக் குடிசை என்குடிசை.

ஏழைக் குடிசையில் பிறந்தாலும்
எத்தனை துன்பப் பட்டாலும்
நாளைய தலைவன் ஆவதற்கு
நாளும் முயற்சி செய்திடுவேன்.

ஊரின் கோடியில் ஒருகுடிசை-அந்த
ஓலைக் குடிசை என்குடிசை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:41 pm

ராமனும் கண்ணனும்


ராமன் பிறந்தது நவமியிலே.
நட்ட நடுப்பகல் வேளையிலே.

கண்ணன் பிறந்தது அஷ்டமியில்
காரிருள் நடுநிசி வேளையிலே.

ராமன் பிறந்தது அரண்மனையில்
நன்றாய்ப் பார்த்தனர் மக்களெல்லாம்.

கண்ணன் பிறந்தது கடும்சிறையில்.
கண்டவர் தாயும் தந்தையுமே.

சூரிய குலத்தில் ராமனுமே
தோன்றினன், பெருமை தோன்றிடவே.

சந்திர குலத்தில் கண்ணனுமே
வந்தனன், பெருமை தந்திடவே.

மனிதர் போல இவ்வுலகில்
வாழ்ந்து காட்டினன் ராமனுமே.

மாயா ஜாலம் பலபுரிந்து
வாழ்ந்தனன் நீலக் கண்ணனுமே.

ராமன் வாழ்வைப் பின்பற்றி
நடந்திட நம்மால் முடிந்திடுமே.

கண்ணன் வாழ்வும் அப்படியா?
எண்ணிப் பார்க்கவும் முடியாதே !

ராமன் பெற்ற குணங்களெலாம்
நாமும் பெற்றுச் சிறந்திடுவோம்.

கண்ணன் கீதையில் கூறியதைக்
கற்றே நாமும் உயர்ந்திடுவோம்.

வாழ்ந்து காட்டிய ராமனையும்
வழியைக் காட்டிய கண்ணனையும்

வாழ்வில் என்றும் மறவோமே !
மறவோம், மறவோம், மறவோமே !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:41 pm

சிரிக்கும் தாத்தா

எங்கள் வீட்டுக் கூடம் அதிலே
இருக்கும் காந்தித் தாத்தா.
என்றும் என்னைப் பார்த்துப் பார்த்துச்
சிரிக்கும் காந்தித் தாத்தா.

‘உண்மை, அகிம்சை, இரண்டும் நமது
கண்கள்’ என்னும் தாத்தா.
‘உயிர்கள் யாவும் உறவு’ என்றே
உணர்த்தும் காந்தித் தாத்தா.

உழைத்தி டாமல் உண்ணு வோரைத்
திருடர் என்பார் தாத்தா.
உலகில் உள்ள இருளைப் போக்கும்
ஒளியாய் வந்த தாத்தா.

நமது நாட்டின் சுதந்தி ரத்தைப்
பெற்றுத் தந்த தாத்தா.
நாமெல் லாரும் வாழும் வழியைக்
கற்றுத் தந்த தாத்தா.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:43 pm

கூடப் பிறந்தவர்

கோடி கோடி பேர்கள் என்றன்
கூடப் பிறந்தவர்.
குமரி முதலாய் இமயம் வரையில்
வாழ்ந்து வருபவர்.

ஓடி ஓடி உழைத்து நாட்டை
உயரச் செய்பவர்.
உரிமை, கடமை இரண்டும் இரண்டு
கண்கள் என்பவர்.

வேறு வேறு மொழிகள் பேசும்
மக்க ளாயினும்
வெறுப் பில்லாமல் விருப்ப மோடு
கூடி வாழ்பவர்.

சீரும் சிறப்பும் பெற்று நமது
நாடு திகழவே
திட்ட மிட்டு வேலை செய்யும்
திறமை மிக்கவர்.

புத்தர், காந்தி, நேரு பிறந்த
நாட்டில் பிறந்ததைப்
பெருமை யாக எண்ணி மேலும்
பெருமை சேர்ப்பவர்.

இத்த லத்தில் பார தம்போல்
இல்லை எங்குமே
என்று சொல்லும் நல்ல நாளைக்
காணத் துடிப்பவர்.

Sponsored content

PostSponsored content



Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக