புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10 
5 Posts - 3%
prajai
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10 
2 Posts - 1%
சிவா
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10 
435 Posts - 47%
heezulia
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10 
30 Posts - 3%
prajai
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_m10சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - Page 13 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா


   
   

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 5:01 pm

First topic message reminder :



பால முருகன்


சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்

வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன்-கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்

பிள்ளையாரின் நல்லதம்பி
எங்கள் பாலமுருகன்-சிறு
பிள்ளைகளின் இனியதோழன்
எங்கள் பாலமுருகன்

கள்ளமில்லா உள்ளங்கொண்டால்
எங்கள் பாலமுருகன்-நம்மைக்
காத்தருள்வான், காத்தருள்வான்
எங்கள் பாலமுருகன்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:58 pm

கணபதி

தொந்தி இல்லாத கணபதியாம்
துதிக்கை இல்லாத கணபதியாம்
தந்தம் இல்லாத கணபதியாம்
என் தம்பியே அந்தக் கணபதியாம்!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 11:59 pm

நத்தையின் கேள்வி

நத்தை என்னைப் பார்த்துப் பார்த்து
முத்து! ஏனோ சிரிக்கிறாய்?

நகர்ந்து நகர்ந்து மெல்ல நானும்
நடப்ப தாகச் சொல்கிறாய்.

வீட்டை முதுகில் தூக்கிக் கொண்டு
விரைந்து செல்லும் மனிதரைக்

காட்டு வாயோ, காட்டு வாயோ,
காட்டு வாயோ, நண்பனே?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 12:00 am

பாட்டியும் மாமாவும்

சுப்பு வுடைய பாட்டி வயது
தொண்ணுற் றொன்பது-அவள்
சுறுசு றுப்பைப் பார்க்கும் போது
இருபத் தொன்பது!

குப்பு மாமா வயது என்ன?
இப்போ இருபது-அவர்
கூனிக் குறுகி நடக்கும் போது
அறுபத் தொன்பது!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 12:00 am

செடியும் சின்னத் தம்பியும்

சின்னச் செடியை நட்டுநான்
தினமும் தண்ணீர் ஊற்றினேன்.
நன்கு செடியும் வளர்ந்தது;
நான்கு மீட்டர் உயர்ந்தது!

சின்னத் தம்பி சேகரும்
செடிபோல் வளர வில்லையே!
இன்னும் குள்ள மாகவே
இருக்க லாமோ? ஆதலால்,

சிறுவன் அவனைத் தினமுமே
செடியின் அருகில் நிறுத்தியே
தண்ணீர் விட்டேன் நாலுநாள்.
சளி பிடித்துக் கொண்டதே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 12:01 am

ஓடுவது ஏன்?

எலியே, எலியே, ஓடுவதேன்?
என்னைப் பூனை துரத்துவதால்.

பூனையே, பூனையே, ஓடுவதேன்?
பொல்லா வெறிநாய் துரத்துவதால்.

நாயே, நாயே, ஓடுவதேன்?
நாலடிச் சிறுவன் துரத்துவதால்.

சிறுவா, சிறுவா ஓடுவதேன்?
சிறுத்தை பின்னால் துரத்துவதால்.

சிறுத்தையே, சிறுத்தையே, ஓடுவதேன்?
சிங்கம் என்னைத் துரத்துவதால்.

சிங்கமே, சிங்கமே, ஓடுவதேன்?
எங்கோ வேட்டுக் கேட்டதனால்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 12:01 am

கோழியின் வயது

“கோழிகள் எத்தனை
ஆண்டுகள் உலகில்
வாழும் என்பதை
அறிவாயோ?”

“அறிவேன்; அறிவேன்,
மக்கள் அவற்றை
அறுத்துத் தின்றிடும்
நாள் வரைதான் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 12:02 am

கட்டியவர் யார் ?

தாஜ்மகாலைக் கட்டியவர்
யார்? யார்? யார்?
சக்ரவர்த்தி ஷாஜகானாம்
கேள், கேள், கேள்.

தஞ்சைக்கோயில் கட்டியவர்
யார்? யார்? யார்?
தரணிபோற்றும் ராஜராஜன்
கேள், கேள், கேள்.

கல்ல ணையைக் கட்டியவர்
யார்? யார்? யார்?
கரிகால மன்னவனாம்
கேள், கேள், கேள்.

குதுப்மினாரைக் கட்டியவர்
யார்? யார்? யார்?

குஷவுபுஷனுனாம் அடிமைமன்னன்
கேள், கேள், கேள்.

முழங்காலைக் கட்டியவன்
யார்? யார்? யார்?

முனியன்எனும் சோம்பேறி
கேள், கேள், கேள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 12:03 am

சட்டை போட்ட ஒட்டைச் சிவிங்கி

ஒட்டைச் சிவிங்கி ஒன்றுக்குச்
சட்டை போட்டுப் பார்க்கவே
எட்டுக் குரங்கு கூடின.
என்ன என்ன செய்தன?

ஒருகுரங்கு பாய்ந்து பாய்ந்தே
ஓடிச் சென்றது.
ஊருக் குள்ளே துணிக் கடைக்குள்
புகுந்து விட்டது.

பூக்கள் போட்ட பட்டுத் துணியை
அள்ளிக் கொண்டது.
பிடிக்க வந்தால் ‘உர்உர்’ என்று
கடிக்க வந்தது.

வேல மரத்தில் ஒருகுரங்கு
ஏறிக் கொண்டது.
வேண்டு மட்டும் முள்ளை யெல்லாம்
திரட்டி வந்தது.

காலின் அருகே நாலுகுரங்கு
நின்று கொண்டன.
கர்ணம் போட்டு இரண்டு குரங்கு
முதுகில் ஏறின.

ஒட்டைச் சிவிங்கி உடம்பில் துணியைப்
போர்த்தி விட்டன.
ஒழுங்கு பார்த்து மீதித் துணியைக்
கடித்துக் கிழித்தன.

அந்தத் துணியில் சமமாய் ஐந்து
பங்கு போட்டன.
அவற்றில் நான்கை நான்கு, காலில்
நன்கு சுற்றின.

மீதம் உள்ள துண்டுத் துணியால்
கழுத்தை மூடின.
விரைந்து கூடி எட்டுக் குரங்கும்
வேலை செய்தன.

ஓரம் முழுதும் முட்க ளாலே
பொருத்தி விட்டன.
உடனே எட்டுக் குரங்கும் எதிரே
வந்து நின்றன.

‘ஓஹோ! ஓஹோ!’ என்றே அவைகள்
குதிக்க லாயின.
உடுப்புப் போட்ட சிவிங்கி யாரைப்
பார்த்து மகிழ்ந்தன!

பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி யாலே
துள்ளிக் குதித்தன!
பாய்ந்து சென்று சிவிங்கி முதுகில்
ஏறிக் கொண்டன.

எட்டுக் குரங்கை முதுகில் ஏற்றிக்
கொண்ட சிவிங்கியும்
இன்ப மாகக் காடு முழுதும்
சுற்றி வந்தது.

ஒட்டைச் சிவிங்கி சட்டை போட்டு
எட்டுக் குரங்குடன்
வெற்றி பெற்ற வீரன் போலச்
சுற்றி வந்ததை,

மற்ற மிருகம் யாவும் பார்த்து
மகிழ்ச்சி கொண்டன.
மரத்தி லிருந்த பறவை யெல்லாம்
வியப்புக் கொண்டன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 12:04 am

கண்ணனும் அண்ணனும்

அண்ணன் : கண்ணா, அருகில் வந்திடுவாய்.
கண்ணன் : காலில் சுளுக்கு; முடியாது.
அண்ணன் : கண்ணா, கணக்குப் போட்டிடுவாய்.
கண்ணன் : கையை வலிக்குது; முடியாது.
அண்ணன் : கண்ணா, பாடம் படித்திடுவாய்.
கண்ணன் : கடைவா யில்புண்; முடியாது.

அண்ணன் : கண்ணா, மாடி அறைக்குள்ளே
கறுத்த அட்டைப் பெட்டியிலே,
காசுகள் நிறைய வைத்துள்ளேன்.
கணக்காய் எண்ணிச் சொல்லிடுவாய்.
சரியாய்ச் சொன்னால், அத்தனையும்
தருவேன் உனக்கு, உனக்கேதான்!
சீடை முறுக்கு வாங்கிடலாம்;
தின்று நீயும் மகிழ்ந்திடலாம்.

கண்ணன் : அண்ணா, அண்ணா, இப்பொழுதே
அத்தனை படியும் ஏறிடுவேன்.
எட்டிப் பாய்ந்து பெட்டியிலே
இருக்கும் பணத்தை எண்ணிடுவேன்.
சீக்கிரம் எண்ணிச் சொல்லிடுவேன்.
சீடை முறுக்கு வாங்கிடுவேன்.
ஆசை தீரத் தின்றிடுவேன்.
அண்ணன் சொல்லைத் தட்டுவதா?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 12:05 am

சந்தைக்குப் போனேன்

சந்தைக்குப் போனேன்; சந்தைக்குப் போனேன்
சாம்பல் பூசணி வாங்கிடவே.
சண்டைக்குப் போனேன், சண்டைக்குப் போனேன்
தாய்த்திரு நாட்டைக் காத்திடவே.

வெல்லத்தைப் பார்த்தேன்; வெல்லத்தைப் பார்த்தேன்
வேலுச் சாமி கடையினிலே.
வெள்ளத்தைப் பார்த்தேன்; வெள்ளத்தைப் பார்த்தேன்
விடாது பெய்த மழையினிலே.

தவளை பார்த்தேன்; தவளை பார்த்தேன்
தரையில் தத்திச் செல்கையிலே.
தவலையைப் பார்த்தேன்; தவலையைப் பார்த்தேன்
தங்கை தூக்கி வருகையிலே.

கொல்லையில் கிடைத்தது; கொல்லையில் கிடைத்தது
கொத்துக் கொத்தாய் மல்லிகையே.
கொள்ளையில் கிடைத்தது; கொள்ளையில் கிடைத்தது
கொடியவ னுக்குத் தண்டனையே!

Sponsored content

PostSponsored content



Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக