புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிக்கும் பூக்கள் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
Page 12 of 14 •
Page 12 of 14 • 1 ... 7 ... 11, 12, 13, 14
First topic message reminder :
பால முருகன்
சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்
வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன்-கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்
பிள்ளையாரின் நல்லதம்பி
எங்கள் பாலமுருகன்-சிறு
பிள்ளைகளின் இனியதோழன்
எங்கள் பாலமுருகன்
கள்ளமில்லா உள்ளங்கொண்டால்
எங்கள் பாலமுருகன்-நம்மைக்
காத்தருள்வான், காத்தருள்வான்
எங்கள் பாலமுருகன்
பால முருகன்
சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்
வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன்-கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்
பிள்ளையாரின் நல்லதம்பி
எங்கள் பாலமுருகன்-சிறு
பிள்ளைகளின் இனியதோழன்
எங்கள் பாலமுருகன்
கள்ளமில்லா உள்ளங்கொண்டால்
எங்கள் பாலமுருகன்-நம்மைக்
காத்தருள்வான், காத்தருள்வான்
எங்கள் பாலமுருகன்
அழகு மிக்க நிலவைக் கண்டு
மகிழும் வேளையில்
அங்கே வந்த மேகக் கூட்டம்
அதை மறைத்ததால்,
அழுது விட்டான் சின்னத் தம்பி
ஏங்கி ஏங்கியே!
அழுத பிள்ளை சிரித்த தேனோ?
அதையும் சொல்லுவேன்;
மறைந்தி ருந்த மேகம் பின்னர்
கலைந்து போனதால்
வானில் நிலா முன்பு போலத்
தெரிய லானது!
மறைந்த நிலவை வானில் மீண்டும்
கண்ட தம்பியின்
மறைந்த சிரிப்பும் நிலவைப் போலத்
திரும்பி வந்ததே!
மகிழும் வேளையில்
அங்கே வந்த மேகக் கூட்டம்
அதை மறைத்ததால்,
அழுது விட்டான் சின்னத் தம்பி
ஏங்கி ஏங்கியே!
அழுத பிள்ளை சிரித்த தேனோ?
அதையும் சொல்லுவேன்;
மறைந்தி ருந்த மேகம் பின்னர்
கலைந்து போனதால்
வானில் நிலா முன்பு போலத்
தெரிய லானது!
மறைந்த நிலவை வானில் மீண்டும்
கண்ட தம்பியின்
மறைந்த சிரிப்பும் நிலவைப் போலத்
திரும்பி வந்ததே!
ராஜாஜியும் சிறுவனும்
கல்கத் தாவில் ராஜாஜி
கவர்ன ரானபின்
களிப்பை ஊட்டும் செய்தி யொன்று
வெளியில் வந்ததே.
நல்ல அந்தச் செய்தி தன்னை
உங்க ளிடத்திலே
நானிப் போது கூற வந்தேன்;
கேளும் நண்பரே !
சிறுவர் தம்மை மாளி கைக்கு
அவர் அழைத்தனர்.
தித்திப் பான பண்டத் தோடு
விருந்து வைத்தனர்.
விருந்து கவர்னர் அளித்த தாலே
பெருமை கொண்டனர்;
மிக்க மகிழ்ச்சி யோடு சிறுவர்
உண்ண லாயினர்.
அந்தச் சமயம் ராஜாஜி,
சிறுவன் ஒருவனின்
அருகில் சென்று சிரித்துக் கொண்டே
காதைப் பிடித்தனர்.
“உன்றன் காதைப் பிடித்து நானும்
முறுக்கும் போதிலே
உனது மனத்தில் இதனைப் பற்றி
என்ன நினைக்கிறாய்?
அகிம்சை என்று இதனை நீயும்
கருது கின்றாயா?
அன்றி இம்சை என்றே இதனைக்
கூறு கின்றாயா?”
மகிமை மி்க்க தலைவர் இதனைக்
கேட்ட வுடனேயே
மகிழ்ச்சி மிகவும் கொண்ட சிறுவன்
கூற லாயினன்:
“அகிம்சை இல்லை; இம்சை இல்லை;
தாங்கள் காட்டிடும்
அன்பு, அன்பு, அன்பு” என்றே
அவன் உரைத்தனன்.
மிகவும் மகிழ்ச்சி கொண்ட தலைவர்
அவனை மெச்சினார்.
விவரம் அறிந்த சிறுவர் அங்கே
சிரிக்க லாயினர்.
கல்கத் தாவில் ராஜாஜி
கவர்ன ரானபின்
களிப்பை ஊட்டும் செய்தி யொன்று
வெளியில் வந்ததே.
நல்ல அந்தச் செய்தி தன்னை
உங்க ளிடத்திலே
நானிப் போது கூற வந்தேன்;
கேளும் நண்பரே !
சிறுவர் தம்மை மாளி கைக்கு
அவர் அழைத்தனர்.
தித்திப் பான பண்டத் தோடு
விருந்து வைத்தனர்.
விருந்து கவர்னர் அளித்த தாலே
பெருமை கொண்டனர்;
மிக்க மகிழ்ச்சி யோடு சிறுவர்
உண்ண லாயினர்.
அந்தச் சமயம் ராஜாஜி,
சிறுவன் ஒருவனின்
அருகில் சென்று சிரித்துக் கொண்டே
காதைப் பிடித்தனர்.
“உன்றன் காதைப் பிடித்து நானும்
முறுக்கும் போதிலே
உனது மனத்தில் இதனைப் பற்றி
என்ன நினைக்கிறாய்?
அகிம்சை என்று இதனை நீயும்
கருது கின்றாயா?
அன்றி இம்சை என்றே இதனைக்
கூறு கின்றாயா?”
மகிமை மி்க்க தலைவர் இதனைக்
கேட்ட வுடனேயே
மகிழ்ச்சி மிகவும் கொண்ட சிறுவன்
கூற லாயினன்:
“அகிம்சை இல்லை; இம்சை இல்லை;
தாங்கள் காட்டிடும்
அன்பு, அன்பு, அன்பு” என்றே
அவன் உரைத்தனன்.
மிகவும் மகிழ்ச்சி கொண்ட தலைவர்
அவனை மெச்சினார்.
விவரம் அறிந்த சிறுவர் அங்கே
சிரிக்க லாயினர்.
லண்டனில் தீபாவளி
லண்டனில் இந்திய மாணவர்கள்-மிக
நன்றாகத் தீபா வளிதினத்தைக்
கொண்டாடத் திட்டங்கள் போட்டனரே-ஒன்று
கூடிநல் ஏற்பாடு செய்தனரே !
பண்டிகை கொண்டாட வேண்டுமெனில்-அங்கே
பலமாய் விருந்து வேண்டுமன்றோ?
ஒன்றாகச் சேர்ந்து மாணவர்கள்-மிக
உற்சாக மாகச் சமைத்தனரே.
அந்தச் சமயத்தில் அவ்விடத்தே-ஓர்
அப்பாவி இந்தியர் வந்தடைந்தார்.
வந்தவர் யார்என ஒருவருமே-அந்த
மாணவர் கூட்டத்தில் கேட்கவில்லை.
ஏதும் விசாரணை செய்யவில்லை-ஆனால்,
ஏவினர் வேலைகள் செய்திடவே.
சாதுவாம் அந்த மனிதருமே-சற்றும்
தயங்கிட வேண்டுமே! இல்லை, இல்லை!
பாத்திரம் தேய்த்தனர்; பற்றுத் துலக்கினர்;
பம்பர மாய்வேலை செய்தனரே.
வேர்த்து விறுவிறுத் தேஅவரும்-பல
வேலைகள் செய்திடும் வேளையிலே,
வ.வே.சு. ஐயர் எனும்பெரியார்-அங்கு
வந்தனர்; சுற்றிலும் பார்த்தனரே.
ஏவல் புரியும் மனிதரைக் கண்டதும்
ஏனோ துடியாய்த் துடித்தனரே.
“அடடே, இவர்தாம் காந்தி!” யென்றார்-“நம்
அருமை விருந்தினர் இவரே” என்றார்.
உடனே அனைவரும் மன்னிப்புக் கோரிட,
உத்தமர் காந்தி உரைத்திடுவார்:
“ஒன்றாகச் சேர்ந்து சமையல்செய்தோம்-இது
ஒற்றுமை தன்னையே காட்டுமன்றோ?
நன்றாய் உழைத்துநாம் உண்பதிலே-சற்றும்
நாணமே இல்லை; உணர்ந்திடுவோம் !”
லண்டனில் இந்திய மாணவர்கள்-மிக
நன்றாகத் தீபா வளிதினத்தைக்
கொண்டாடத் திட்டங்கள் போட்டனரே-ஒன்று
கூடிநல் ஏற்பாடு செய்தனரே !
பண்டிகை கொண்டாட வேண்டுமெனில்-அங்கே
பலமாய் விருந்து வேண்டுமன்றோ?
ஒன்றாகச் சேர்ந்து மாணவர்கள்-மிக
உற்சாக மாகச் சமைத்தனரே.
அந்தச் சமயத்தில் அவ்விடத்தே-ஓர்
அப்பாவி இந்தியர் வந்தடைந்தார்.
வந்தவர் யார்என ஒருவருமே-அந்த
மாணவர் கூட்டத்தில் கேட்கவில்லை.
ஏதும் விசாரணை செய்யவில்லை-ஆனால்,
ஏவினர் வேலைகள் செய்திடவே.
சாதுவாம் அந்த மனிதருமே-சற்றும்
தயங்கிட வேண்டுமே! இல்லை, இல்லை!
பாத்திரம் தேய்த்தனர்; பற்றுத் துலக்கினர்;
பம்பர மாய்வேலை செய்தனரே.
வேர்த்து விறுவிறுத் தேஅவரும்-பல
வேலைகள் செய்திடும் வேளையிலே,
வ.வே.சு. ஐயர் எனும்பெரியார்-அங்கு
வந்தனர்; சுற்றிலும் பார்த்தனரே.
ஏவல் புரியும் மனிதரைக் கண்டதும்
ஏனோ துடியாய்த் துடித்தனரே.
“அடடே, இவர்தாம் காந்தி!” யென்றார்-“நம்
அருமை விருந்தினர் இவரே” என்றார்.
உடனே அனைவரும் மன்னிப்புக் கோரிட,
உத்தமர் காந்தி உரைத்திடுவார்:
“ஒன்றாகச் சேர்ந்து சமையல்செய்தோம்-இது
ஒற்றுமை தன்னையே காட்டுமன்றோ?
நன்றாய் உழைத்துநாம் உண்பதிலே-சற்றும்
நாணமே இல்லை; உணர்ந்திடுவோம் !”
நாட்டிய நாடகம் - சண்டையும் சமாதானமும்
கமலா :
என்ன, என்ன, என்ன அதோ
சப்தம் கேட்குதே!-அடே,
எங்கள் வீட்டுத் தோட்டத் திலே
சப்தம் கேட்குதே!
சென்று நாமும் பார்த்து வரலாம்
வருவாய் தோழியே-என்ன
செய்தி என்றே அறிந்து வரலாம்
வருவாய் தோழியே!
விமலா :
வாய்தி றந்து ஏதோ வார்த்தை
சிரித்து வருகுது!
மல்லி கைப்பூ அதோ, அதோ
சொல்ல வருகுது!
மல்லிகைப் பூ :
மல்லி கைப்பூ என்ற வுடனே
மணம ணக்குமே.
மக்க ளுடைய உள்ள மெல்லாம்
மயங்கி நிற்குமே.
உள்ளம் குளிரப் பெண்கள் தலையில்
என்னை அணிவரே.
உருவம் சிறிதே ஆன போதும்
உயர்ந்த வள்நானே !
முத்து வடிவம் கொண்ட என்றன்
உடலைப் பாருங்கள்.
வெள்ளை உள்ளம் போன்ற என்றன்
நிறத்தைப் பாருங்கள்.
இத்த லத்தில் மலர்க ளுக்குள்
சிறப்பு மிக்கவள்
என்னைப் போல ஒருத்தி உண்டோ ?
இல்லை, இல்லையே !
கமலா :
என்ன, என்ன, என்ன அதோ
சப்தம் கேட்குதே!-அடே,
எங்கள் வீட்டுத் தோட்டத் திலே
சப்தம் கேட்குதே!
சென்று நாமும் பார்த்து வரலாம்
வருவாய் தோழியே-என்ன
செய்தி என்றே அறிந்து வரலாம்
வருவாய் தோழியே!
விமலா :
வாய்தி றந்து ஏதோ வார்த்தை
சிரித்து வருகுது!
மல்லி கைப்பூ அதோ, அதோ
சொல்ல வருகுது!
மல்லிகைப் பூ :
மல்லி கைப்பூ என்ற வுடனே
மணம ணக்குமே.
மக்க ளுடைய உள்ள மெல்லாம்
மயங்கி நிற்குமே.
உள்ளம் குளிரப் பெண்கள் தலையில்
என்னை அணிவரே.
உருவம் சிறிதே ஆன போதும்
உயர்ந்த வள்நானே !
முத்து வடிவம் கொண்ட என்றன்
உடலைப் பாருங்கள்.
வெள்ளை உள்ளம் போன்ற என்றன்
நிறத்தைப் பாருங்கள்.
இத்த லத்தில் மலர்க ளுக்குள்
சிறப்பு மிக்கவள்
என்னைப் போல ஒருத்தி உண்டோ ?
இல்லை, இல்லையே !
கமலா :
குவிந்தி ருக்கும் தாம ரைப்பூ
அதோ வருகுது!
கோபு ரத்துக் கலசம் போல
அதோ வருகுது!
தாமரைப் பூ :
சின்னப் பூவே மல்லிகை,
என்ன பேச்சுப் பேசினாய்?
என்னைப் போல ஒருத்தியை
எண்ணிப் பார்க்க வில்லையோ?
தண்ணீர் மேலே நிற்பவன்
தட்டைப் போல விரிபவள்
கண்ணுக் கினிதாய்த் தெரிபவள்
கடவுள் பூசைக் குரியவள்!
சிறப்பு மிக்க கலைமகள்
செல்வம் நல்கும் திருமகள்
இருவர் என்மேல் இருப்பரே.
என்போல் உண்டோ சொல்லடி?
குவிந்தி ருக்கும் தாம ரைப்பூ
அதோ வருகுது!
கோபு ரத்துக் கலசம் போல
அதோ வருகுது!
தாமரைப் பூ :
சின்னப் பூவே மல்லிகை,
என்ன பேச்சுப் பேசினாய்?
என்னைப் போல ஒருத்தியை
எண்ணிப் பார்க்க வில்லையோ?
தண்ணீர் மேலே நிற்பவன்
தட்டைப் போல விரிபவள்
கண்ணுக் கினிதாய்த் தெரிபவள்
கடவுள் பூசைக் குரியவள்!
சிறப்பு மிக்க கலைமகள்
செல்வம் நல்கும் திருமகள்
இருவர் என்மேல் இருப்பரே.
என்போல் உண்டோ சொல்லடி?
விமலா :
தங்க நிறத்து அரளி அதோ
குலுங்கி வருகுது !
சண்டை போடத் தானோ அதுவும்
நெருங்கி வருகுது?
அரளிப் பூ :
மல்லி கையே! தாமரையே!
என்ன சொன்னீர்கள்?
மனித ருக்கே நீங்கள் உதவும்
கதையைச் சொன்னீர்கள்.
எல்லாம் வல்ல இறைவ னுக்கும்
பூசை செய்யவே,
இந்த உலகில் நான் பிறந்தேன்;
தெரிந்து கொள்ளுங்கள்.
அங்கம் முழுதும் மஞ்சள் பூசி
நிற்கும் என்னையே
தங்க அரளி என்றே மக்கள்
புகழ்ந்து கூறுவார்.
இங்கே உள்ள மலர்க ளுக்குள்
நானே சிறந்தவள் !
எதிர்த்துப் பேச எவருக் கேனும்
துணிச்சல் உண்டோடி?
தங்க நிறத்து அரளி அதோ
குலுங்கி வருகுது !
சண்டை போடத் தானோ அதுவும்
நெருங்கி வருகுது?
அரளிப் பூ :
மல்லி கையே! தாமரையே!
என்ன சொன்னீர்கள்?
மனித ருக்கே நீங்கள் உதவும்
கதையைச் சொன்னீர்கள்.
எல்லாம் வல்ல இறைவ னுக்கும்
பூசை செய்யவே,
இந்த உலகில் நான் பிறந்தேன்;
தெரிந்து கொள்ளுங்கள்.
அங்கம் முழுதும் மஞ்சள் பூசி
நிற்கும் என்னையே
தங்க அரளி என்றே மக்கள்
புகழ்ந்து கூறுவார்.
இங்கே உள்ள மலர்க ளுக்குள்
நானே சிறந்தவள் !
எதிர்த்துப் பேச எவருக் கேனும்
துணிச்சல் உண்டோடி?
கமலா :
அதோ, அதோ சாமந்தியும்
அருகில் வருகுதே!
அதுவும் இந்தச் சண்டையிலே
குதிக்கப் போகுதோ?
சாமந்திப் பூ :
மல்லிகை, தாமரை, தங்கரளி -
உங்கள்
மகிமையைக் கேட்டுச் சலித்து
விட்டேன்.
இல்லாத நில்லாத பெருமை
யெல்லாம்-நீங்கள்
ஏனோதான் பேசி மகிழுகின்றீர்?
தங்கம் போல் நானும் நிறமுடையேன்-ஈசன்
தலையிலும் கழுத்திலும் விளங்கிடுவேன்.
மங்கல காரியம் யாவிலுமே-என்னை
மக்கள் மறப்பதே இல்லையடி.
ஓரிரு நாள்களே வாழுகின்றீர்-நீங்கள்
உடலெல்லாம் வாடி வதங்குகின்றீர்.
ஆறேழு நாள்களே ஆயிடினும்-மணம்
அள்ளிப் பரப்புவேன் நான்அறிவீர்.
என்னை விரும்பி அணிந்திடுவார்-மிக்க
ஏழை எளியவர் யாவருமே.
பொன்னொளி வீசிடும் என்னைவிட-இந்தப்
பூக்களில் சிறந்தவள் யாரடியோ?
அதோ, அதோ சாமந்தியும்
அருகில் வருகுதே!
அதுவும் இந்தச் சண்டையிலே
குதிக்கப் போகுதோ?
சாமந்திப் பூ :
மல்லிகை, தாமரை, தங்கரளி -
உங்கள்
மகிமையைக் கேட்டுச் சலித்து
விட்டேன்.
இல்லாத நில்லாத பெருமை
யெல்லாம்-நீங்கள்
ஏனோதான் பேசி மகிழுகின்றீர்?
தங்கம் போல் நானும் நிறமுடையேன்-ஈசன்
தலையிலும் கழுத்திலும் விளங்கிடுவேன்.
மங்கல காரியம் யாவிலுமே-என்னை
மக்கள் மறப்பதே இல்லையடி.
ஓரிரு நாள்களே வாழுகின்றீர்-நீங்கள்
உடலெல்லாம் வாடி வதங்குகின்றீர்.
ஆறேழு நாள்களே ஆயிடினும்-மணம்
அள்ளிப் பரப்புவேன் நான்அறிவீர்.
என்னை விரும்பி அணிந்திடுவார்-மிக்க
ஏழை எளியவர் யாவருமே.
பொன்னொளி வீசிடும் என்னைவிட-இந்தப்
பூக்களில் சிறந்தவள் யாரடியோ?
விமலா :
ஆகா ! ஆகா ! அதோ பார்.
அழகு ரோஜா மலரைப் பார் !
வேக மில்லை, கோப மில்லை,
மெல்ல மெல்ல வருகுது பார்!
கமலா :
பட்டுப் போன்ற மலர்இது
பையப் பைய வருகுது.
தொட்டுப் பார்க்கும் ஆசையைத்
தூண்டு கின்ற மலர்இது!
விமலா :
மலர்க ளுக்குள் அரசியாய்,
மணம் பரப்பும் மலரிது!
உலக முழுதும் போற்றிடும்
உயர்ந்த ஜாதி மலரிது!
கமலா :
தெய்வத் திற்குச் சூட்டலாம்;
திரும ணத்தில் அணியலாம்;
கையில் ஏந்தி நுகரலாம்;
களிப்பை ஊட்டும் மலரிது!
விமலா :
நேரு வுக்குப் பிடித்தது;
நெஞ்ச மெல்லாம் கவர்ந்தது;
பாரில் இதனைப் போலவே
பார்த்த துண்டோ ஒருமலர்!
கமலா :
இல்லை இல்லை, ரோஜாவும்
ஏதோ பேசப் போகுதே!
விமலா :
நல்ல தைத்தான் பேசிடும்;
நாமும் அதனைக் கேட்கலாம்.
ஆகா ! ஆகா ! அதோ பார்.
அழகு ரோஜா மலரைப் பார் !
வேக மில்லை, கோப மில்லை,
மெல்ல மெல்ல வருகுது பார்!
கமலா :
பட்டுப் போன்ற மலர்இது
பையப் பைய வருகுது.
தொட்டுப் பார்க்கும் ஆசையைத்
தூண்டு கின்ற மலர்இது!
விமலா :
மலர்க ளுக்குள் அரசியாய்,
மணம் பரப்பும் மலரிது!
உலக முழுதும் போற்றிடும்
உயர்ந்த ஜாதி மலரிது!
கமலா :
தெய்வத் திற்குச் சூட்டலாம்;
திரும ணத்தில் அணியலாம்;
கையில் ஏந்தி நுகரலாம்;
களிப்பை ஊட்டும் மலரிது!
விமலா :
நேரு வுக்குப் பிடித்தது;
நெஞ்ச மெல்லாம் கவர்ந்தது;
பாரில் இதனைப் போலவே
பார்த்த துண்டோ ஒருமலர்!
கமலா :
இல்லை இல்லை, ரோஜாவும்
ஏதோ பேசப் போகுதே!
விமலா :
நல்ல தைத்தான் பேசிடும்;
நாமும் அதனைக் கேட்கலாம்.
ரோஜாப் பூ :
அருமைப் பூவே, மல்லிகையே!
அழகுப் பூவே, தாமரையே!
பெருமை யூட்டும் தங்கரளி!
பிரிய மான சாமந்தியே!
உங்களின் சண்டையைப் பார்த்ததுமே-என்
உள்ளம் மிகமிக வாடியதே.
இங்குள நாமெல்லாம் ஓரினமே-இதை
ஏனோ மறந்தீர், தோழியரே?
வண்ணத்தில் வேற்றுமை இருந்திடினும்-நம்
வடிவத்தில் வேற்றுமை இருந்திடினும்
எண்ணத்தில் வேற்றுமை இல்லாமல்-நாம்
இணைந்து வாழுவோம் ஒற்றுமையாய்.
கண்டவர் உள்ளம் கவர்ந்திடவே-நல்ல
காட்சி அளித்து விளங்குகிறோம்.
வண்டுகள் வயிறார உண்டிடவே-நாம்
வாரித் தேனை வழங்குகிறோம்.
திருவிழா, திருமணம், பண்டிககைள்-எல்லாம்
சிறந்திட நாமும் உதவிடுவோம்.
நறுமணம் எங்கும் பரப்பிடுவோம்-என்றும்
நன்மைகள் செய்யவே நாம்பிறந்தோம்.
அருமைப் பூவே, மல்லிகையே!
அழகுப் பூவே, தாமரையே!
பெருமை யூட்டும் தங்கரளி!
பிரிய மான சாமந்தியே!
உங்களின் சண்டையைப் பார்த்ததுமே-என்
உள்ளம் மிகமிக வாடியதே.
இங்குள நாமெல்லாம் ஓரினமே-இதை
ஏனோ மறந்தீர், தோழியரே?
வண்ணத்தில் வேற்றுமை இருந்திடினும்-நம்
வடிவத்தில் வேற்றுமை இருந்திடினும்
எண்ணத்தில் வேற்றுமை இல்லாமல்-நாம்
இணைந்து வாழுவோம் ஒற்றுமையாய்.
கண்டவர் உள்ளம் கவர்ந்திடவே-நல்ல
காட்சி அளித்து விளங்குகிறோம்.
வண்டுகள் வயிறார உண்டிடவே-நாம்
வாரித் தேனை வழங்குகிறோம்.
திருவிழா, திருமணம், பண்டிககைள்-எல்லாம்
சிறந்திட நாமும் உதவிடுவோம்.
நறுமணம் எங்கும் பரப்பிடுவோம்-என்றும்
நன்மைகள் செய்யவே நாம்பிறந்தோம்.
என்னை விரும்பி அணிபவராம்-நேரு
இந்திய நாட்டின் சுடர்மணியாம்!
சண்டை விரும்பாத உத்தமராம்-அவர்
சாந்த வழியிலே சென்றவராம்.
சாந்த வழியிலே சென்றவராம்-அந்தத்
தங்கத் தலைவரின் சொற்படிநாம்
சாந்த வழியிலே சென்றிடுவோம்-என்றும்
சாந்த வழியிலே சென்றிடுவோம்.
பூக்களின் குரல் :
சாந்த வழியிலே சென்றிடுவோம்-நாம்
சாந்த வழியிலே சென்றிடுவோம்.
கமலாவும் விமலாவும் :
- நாமும்
சாந்த வழியிலே சென்றிடுவோம்.
சாந்த வழியிலே சென்றிடுவோம்.
(பூக்களைத் தொடர்ந்து கமலாவும் விமலாவும் திரைக்குள்ளே போகிறார்கள்.)
இந்திய நாட்டின் சுடர்மணியாம்!
சண்டை விரும்பாத உத்தமராம்-அவர்
சாந்த வழியிலே சென்றவராம்.
சாந்த வழியிலே சென்றவராம்-அந்தத்
தங்கத் தலைவரின் சொற்படிநாம்
சாந்த வழியிலே சென்றிடுவோம்-என்றும்
சாந்த வழியிலே சென்றிடுவோம்.
பூக்களின் குரல் :
சாந்த வழியிலே சென்றிடுவோம்-நாம்
சாந்த வழியிலே சென்றிடுவோம்.
கமலாவும் விமலாவும் :
- நாமும்
சாந்த வழியிலே சென்றிடுவோம்.
சாந்த வழியிலே சென்றிடுவோம்.
(பூக்களைத் தொடர்ந்து கமலாவும் விமலாவும் திரைக்குள்ளே போகிறார்கள்.)
- Sponsored content
Page 12 of 14 • 1 ... 7 ... 11, 12, 13, 14
Similar topics
» என்ன செய்யலாம் - குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
» 1989 மார்ச் 16: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த தினம்
» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
» ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சின்னச் சின்னப் பூக்கள் நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» 1989 மார்ச் 16: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மறைந்த தினம்
» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
» ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சின்னச் சின்னப் பூக்கள் நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 14
|
|