புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 28 of 100 •
Page 28 of 100 • 1 ... 15 ... 27, 28, 29 ... 64 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மணமாலையா, பணமாலையா?
சமீபத்தில், நண்பரது மகள் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். திருமணம் முடிந்து, மொய் எழுதிக் கொண்டிருந்தனர்.
திடீரென்று, அரசியல்வாதி போல தோற்றமுள்ள ஒருவர், மணமக்கள் அருகில் வந்தவர், அவர்கள் போட்டிருந்த மாலையை, வலுகட்டாயமாக கழற்றச் சொல்லி, முற்றிலும் பணத்தால் உருவாக்கப்பட்ட, தான் கொண்டு வந்திருந்த பணமாலையை அணியச் சொன்னார். பின், மணமக்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவசரமாக புறப்பட்டுச் சென்றார்.
அவரைப் பற்றி, நண்பரிடம் விசாரித்த போது, அவர் தன்னுடைய தூரத்துச் சொந்தம், வளர்ந்து வரும் அரசியல்வாதி என்றார்.யாராக இருந்தாலும், அபசகுனமாக மணமக்கள் போட்டிருந்த மலர் மாலையை கழட்டலாமா? இவரது பணக்காரத்தனத்தை காட்ட இதுவா இடம்?
திருமணம் என்னும் மங்களகரமான நிகழ்ச்சியின் போது, அதன் சடங்கு சம்பிரதாயத்தை மதிக்காமல், மொய் என்ற போர்வையில், இப்படி அராஜகம் செய்வது என்ன நியாயம்?பணத்தையும், சம்பிரதாயங்களையும் மதிக்காத இவரைப் போன்றோர், இனியாவது திருந்துவரா?
— வே.விநாயக மூர்த்தி, வெட்டுவான்கேணி.
சமீபத்தில், நண்பரது மகள் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். திருமணம் முடிந்து, மொய் எழுதிக் கொண்டிருந்தனர்.
திடீரென்று, அரசியல்வாதி போல தோற்றமுள்ள ஒருவர், மணமக்கள் அருகில் வந்தவர், அவர்கள் போட்டிருந்த மாலையை, வலுகட்டாயமாக கழற்றச் சொல்லி, முற்றிலும் பணத்தால் உருவாக்கப்பட்ட, தான் கொண்டு வந்திருந்த பணமாலையை அணியச் சொன்னார். பின், மணமக்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவசரமாக புறப்பட்டுச் சென்றார்.
அவரைப் பற்றி, நண்பரிடம் விசாரித்த போது, அவர் தன்னுடைய தூரத்துச் சொந்தம், வளர்ந்து வரும் அரசியல்வாதி என்றார்.யாராக இருந்தாலும், அபசகுனமாக மணமக்கள் போட்டிருந்த மலர் மாலையை கழட்டலாமா? இவரது பணக்காரத்தனத்தை காட்ட இதுவா இடம்?
திருமணம் என்னும் மங்களகரமான நிகழ்ச்சியின் போது, அதன் சடங்கு சம்பிரதாயத்தை மதிக்காமல், மொய் என்ற போர்வையில், இப்படி அராஜகம் செய்வது என்ன நியாயம்?பணத்தையும், சம்பிரதாயங்களையும் மதிக்காத இவரைப் போன்றோர், இனியாவது திருந்துவரா?
— வே.விநாயக மூர்த்தி, வெட்டுவான்கேணி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெண்களே ஜாக்கிரதை !
சமீபத்தில், பேருந்து நிறுத்தத்தில், பஸ்சுக்காக காத்திருந்தேன். அருகில், இரு இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு போன் வரவே, அதை எடுத்து பேசியவர், 'இல்லம்மா நீ முதல்ல ஆபீசுல ஜாயின்ட் செய்துட்டு எனக்கு சொல்லு. நான் இரண்டு நாள் லீவு போட்டுட்டு, பெங்களூரு வர்றேன்...' என்றவரின் தொலைபேசி உரையாடலின் தொடர்ச்சியில், மறுமுனையில் பேசியது, அவரின் காதலி என்று எனக்கு புரிந்தது.
உரையாடல் முடிந்ததும், உடன் இருந்த நபர் கேட்டார்... 'என்னடா உன் ஆளு, பெங்களூரு வேலையில சேர்ந்தாச்சா... ரெண்டு நாள் லீவு போட்டு, பெங்களூரு போய் கல்யாண விஷயம் பேசப் போறீயா?' என்று கேட்டார். அதற்கு, அந்த இளைஞன், 'கல்யாணமா! அவளயா... நீ வேற... அவளுக்கு ஐ.டி., கம்பெனியில, வேலை கிடைச்சுருக்கு. நல்ல துட்டு; இரண்டு நாள் லீவு போட்டு, அவ பணத்திலேயே பெங்களூர சுத்திப் பார்த்து, எல்லாத்தையும், 'என்ஜாய்' செய்ய போறேன்...' என்றான்.
மற்றவன், 'எல்லாத்தையுமா...' என்று, ராகம் போட்டு கேட்க, 'ஆமாண்டா... நீ நினைக்கிறதையும் சேர்த்துத்தான்; விஷயம் முடிஞ்சதும், கழட்டி விட்ர வேண்டியது தான்...' என்று கூறி சிரித்தான். அதிர்ச்சியில் உறைந்து போனேன்.
பெண்களே... நீங்கள் காதலிக்கும் நபர் தகுதியான ஆளா என்று, காதலிக்கும் முன், யோசியுங்கள்.
இப்படிப்பட்ட நபர்களை காதலித்து, உங்கள் மனதையும், எதிர்காலத்தையும் வீணடித்து கொள்ளாதீர்!
— தி.பாலசுப்ரமணியன், சென்னை.
சமீபத்தில், பேருந்து நிறுத்தத்தில், பஸ்சுக்காக காத்திருந்தேன். அருகில், இரு இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு போன் வரவே, அதை எடுத்து பேசியவர், 'இல்லம்மா நீ முதல்ல ஆபீசுல ஜாயின்ட் செய்துட்டு எனக்கு சொல்லு. நான் இரண்டு நாள் லீவு போட்டுட்டு, பெங்களூரு வர்றேன்...' என்றவரின் தொலைபேசி உரையாடலின் தொடர்ச்சியில், மறுமுனையில் பேசியது, அவரின் காதலி என்று எனக்கு புரிந்தது.
உரையாடல் முடிந்ததும், உடன் இருந்த நபர் கேட்டார்... 'என்னடா உன் ஆளு, பெங்களூரு வேலையில சேர்ந்தாச்சா... ரெண்டு நாள் லீவு போட்டு, பெங்களூரு போய் கல்யாண விஷயம் பேசப் போறீயா?' என்று கேட்டார். அதற்கு, அந்த இளைஞன், 'கல்யாணமா! அவளயா... நீ வேற... அவளுக்கு ஐ.டி., கம்பெனியில, வேலை கிடைச்சுருக்கு. நல்ல துட்டு; இரண்டு நாள் லீவு போட்டு, அவ பணத்திலேயே பெங்களூர சுத்திப் பார்த்து, எல்லாத்தையும், 'என்ஜாய்' செய்ய போறேன்...' என்றான்.
மற்றவன், 'எல்லாத்தையுமா...' என்று, ராகம் போட்டு கேட்க, 'ஆமாண்டா... நீ நினைக்கிறதையும் சேர்த்துத்தான்; விஷயம் முடிஞ்சதும், கழட்டி விட்ர வேண்டியது தான்...' என்று கூறி சிரித்தான். அதிர்ச்சியில் உறைந்து போனேன்.
பெண்களே... நீங்கள் காதலிக்கும் நபர் தகுதியான ஆளா என்று, காதலிக்கும் முன், யோசியுங்கள்.
இப்படிப்பட்ட நபர்களை காதலித்து, உங்கள் மனதையும், எதிர்காலத்தையும் வீணடித்து கொள்ளாதீர்!
— தி.பாலசுப்ரமணியன், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிறந்த நாள் கொண்டாடும் இடமா இது!
சமீபத்தில், மதுரையில் பிரதான சாலை ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது, சாலையின் இருபுறமும், வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் பரபரப்பான சூழ்நிலையில், சாலையின் நடுவில், பத்து பேர் அடங்கிய இளைஞர்கள் குழு ஒன்று, தன் நண்பனின் பிறந்த நாளை, கேக் வெட்டி, 'ஸ்பிரே' அடித்து, கொண்டாடிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்ததும், அதிர்ந்து போனேன்.
இருபுறமும் இருக்கும் வாகன நெரிசலை பொருட்படுத்தாத அந்த இளைஞர்கள், அந்த வாகன நெரிசலில், ஆம்புலன்ஸ் வாகனமும், ஒலியை எழுப்பிக் கொண்டிருந்ததைக் கூட கண்டுகொள்ளவில்லை. இளைஞர்களே... இப்படியொரு பிறந்த நாள் கொண்டாட்டம் தேவைதானா?
வித்தியாசமாக பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்ற பெயரில், ஒரு உயிரோடு விளையாடும் விபரீதத்தை, இதற்கு பின்பாவது புரிந்து கொள்வார்களா?
— எ.தங்கமாலா, புதுக்கோட்டை.
சமீபத்தில், மதுரையில் பிரதான சாலை ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது, சாலையின் இருபுறமும், வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் பரபரப்பான சூழ்நிலையில், சாலையின் நடுவில், பத்து பேர் அடங்கிய இளைஞர்கள் குழு ஒன்று, தன் நண்பனின் பிறந்த நாளை, கேக் வெட்டி, 'ஸ்பிரே' அடித்து, கொண்டாடிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்ததும், அதிர்ந்து போனேன்.
இருபுறமும் இருக்கும் வாகன நெரிசலை பொருட்படுத்தாத அந்த இளைஞர்கள், அந்த வாகன நெரிசலில், ஆம்புலன்ஸ் வாகனமும், ஒலியை எழுப்பிக் கொண்டிருந்ததைக் கூட கண்டுகொள்ளவில்லை. இளைஞர்களே... இப்படியொரு பிறந்த நாள் கொண்டாட்டம் தேவைதானா?
வித்தியாசமாக பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்ற பெயரில், ஒரு உயிரோடு விளையாடும் விபரீதத்தை, இதற்கு பின்பாவது புரிந்து கொள்வார்களா?
— எ.தங்கமாலா, புதுக்கோட்டை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மின் உபகரணங்கள் ஜாக்கிரதை!
மின்சாதனங்களை கவனமாக கையாள வேண்டும் என்று, நம் பெண்களுக்கு எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் கேட்பதேயில்லை. எங்கள் பக்கத்து வீட்டிற்கு, திடீரென உறவினர்கள் வரவே, சாப்பாடு தயார் செய்து கொண்டிருந்தவர்கள்.
மிக்சியின் மூடி உடைந்திருப்பதை கண்டு கொள்ளாமல், அரைக்க வேண்டிய பொருட்களை ஜாரில் போட்டு, மூடிக்கு பதிலாக, பிளாஸ்டிக் தட்டை மிக்சி ஜாரின் மேல் வைத்து, அழுத்திப் பிடித்து, மிக்சியை ஒட விட்டுள்ளனர். அவ்வளவுதான்! பிளாஸ்டிக் தட்டு உடைந்து, கை விரல்கள், மிக்சி பிளேடில் மாட்டி வெட்டுப்பட்டு விட்டன. கல்லூரியில் படிக்கும் அந்த இளம் பெண், தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளாள். சிறு கவனக்குறைவால் ஏற்பட்ட, விளைவைப் பார்த்தீர்களா?
பெண்களே... மின் பொருட்களை பயன்படுத்தும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை, இதன் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்!
- எஸ்.ஹேமலதா, ராமநாதபுரம்.
மின்சாதனங்களை கவனமாக கையாள வேண்டும் என்று, நம் பெண்களுக்கு எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் கேட்பதேயில்லை. எங்கள் பக்கத்து வீட்டிற்கு, திடீரென உறவினர்கள் வரவே, சாப்பாடு தயார் செய்து கொண்டிருந்தவர்கள்.
மிக்சியின் மூடி உடைந்திருப்பதை கண்டு கொள்ளாமல், அரைக்க வேண்டிய பொருட்களை ஜாரில் போட்டு, மூடிக்கு பதிலாக, பிளாஸ்டிக் தட்டை மிக்சி ஜாரின் மேல் வைத்து, அழுத்திப் பிடித்து, மிக்சியை ஒட விட்டுள்ளனர். அவ்வளவுதான்! பிளாஸ்டிக் தட்டு உடைந்து, கை விரல்கள், மிக்சி பிளேடில் மாட்டி வெட்டுப்பட்டு விட்டன. கல்லூரியில் படிக்கும் அந்த இளம் பெண், தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளாள். சிறு கவனக்குறைவால் ஏற்பட்ட, விளைவைப் பார்த்தீர்களா?
பெண்களே... மின் பொருட்களை பயன்படுத்தும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை, இதன் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்!
- எஸ்.ஹேமலதா, ராமநாதபுரம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெண்களே ஜாக்கிரதை!
பகல், 11:00 மணி; காலிங்பெல் அடித்தது. வெளியில் வந்து பார்த்தேன். கிரில் கதவுக்கு வெளியே, 'டிப் டாப்' உடையணிந்த ஒருவன், 'இது டாக்டர் வீடு தானே... மருந்து பார்சல் வந்திருக்கு; சீக்கிரம் கதவை திறங்க...' என்று, அவசரப்படுத்தினான். எனக்கு சந்தேகமாக இருந்ததால், டாக்டராக இருக்கும் என் மகனுக்கு போன் செய்து, விஷயத்தை கூறினேன். அதற்கு, 'மருந்து ஆர்டர் கொடுக்கும் பழக்கமே எனக்கு இல்லையே...' என்றான். அதற்குள், 'இப்ப நீங்க கதவை திறக்காட்டி, மருந்து பார்சலை திருப்பி அனுப்பிடுவேன்; நஷ்டம் உங்களுக்குத் தான்...' என்று, வந்தவன் மிரட்ட ஆரம்பித்தான். உடனே நான், 'மரியாதையாய் போறீயா, இல்ல போலீச கூப்பிடவா...' என்று மிரட்டியதும், என்னை கோபத்துடன் பார்த்து விட்டு சென்று விட்டான்.
வெளியே சென்றுபார்த்தால், மருந்து ஒன்றுமே இல்லை. நல்லகாலம், நான் எப்போதும், கதவை பூட்டியே வைத்திருப்பேன். அவன் உள்ளே வந்திருந்தால், என் கதி என்னவாகி இருக்குமோ... வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே... எப்போதும் கவனமாக இருங்கள்.
- பார்வதி, கோவை.
பகல், 11:00 மணி; காலிங்பெல் அடித்தது. வெளியில் வந்து பார்த்தேன். கிரில் கதவுக்கு வெளியே, 'டிப் டாப்' உடையணிந்த ஒருவன், 'இது டாக்டர் வீடு தானே... மருந்து பார்சல் வந்திருக்கு; சீக்கிரம் கதவை திறங்க...' என்று, அவசரப்படுத்தினான். எனக்கு சந்தேகமாக இருந்ததால், டாக்டராக இருக்கும் என் மகனுக்கு போன் செய்து, விஷயத்தை கூறினேன். அதற்கு, 'மருந்து ஆர்டர் கொடுக்கும் பழக்கமே எனக்கு இல்லையே...' என்றான். அதற்குள், 'இப்ப நீங்க கதவை திறக்காட்டி, மருந்து பார்சலை திருப்பி அனுப்பிடுவேன்; நஷ்டம் உங்களுக்குத் தான்...' என்று, வந்தவன் மிரட்ட ஆரம்பித்தான். உடனே நான், 'மரியாதையாய் போறீயா, இல்ல போலீச கூப்பிடவா...' என்று மிரட்டியதும், என்னை கோபத்துடன் பார்த்து விட்டு சென்று விட்டான்.
வெளியே சென்றுபார்த்தால், மருந்து ஒன்றுமே இல்லை. நல்லகாலம், நான் எப்போதும், கதவை பூட்டியே வைத்திருப்பேன். அவன் உள்ளே வந்திருந்தால், என் கதி என்னவாகி இருக்குமோ... வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே... எப்போதும் கவனமாக இருங்கள்.
- பார்வதி, கோவை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தாம்பூல பையில் சி.டி.,
சமீபத்தில் நண்பரின் மகள் திருமண வரவேற்பிற்கு சென்றிருந்தேன். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து, விருந்து உண்டு செல்லும்போது, தாம்பூலப்பை ஒன்று கொடுத்தனர். பை, கனம் இல்லாமல், லேசாக இருந்தது. உள்ளே என்ன இருக்கிறது என, தெரிந்து கொள்ள பையை பிரித்து பார்த்தேன். உள்ளே ஒரு சி.டி., மட்டும் இருந்தது. வீட்டில் வந்து அதை போட்டு பார்த்தபோது, அதில் குடும்ப வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகள், தத்துவங்கள், விளையாட்டு என, அனைத்து விஷயங்களும் இருந்தன. அதோடு, இரண்டாயிரம் பொது அறிவு கேள்வி, பதில்களும் இடம்பெற்றிருந்தன.
இப்போது பெரும்பாலும் வரவேற்பில், தேங்காய், பழத்திற்கு பதில் மரக்கன்று, புத்தகம் என, பயனுள்ள பொருட்களை வழங்குகின்றனர். அந்த பட்டியலில் இப்போது, சி.டி.,யும் சேர்ந்துள்ளது. இது போன்ற பொருட்களை கொடுத்தால், வாங்குவோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
- எஸ்.வேல்முருகன், மதுரை.
சமீபத்தில் நண்பரின் மகள் திருமண வரவேற்பிற்கு சென்றிருந்தேன். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து, விருந்து உண்டு செல்லும்போது, தாம்பூலப்பை ஒன்று கொடுத்தனர். பை, கனம் இல்லாமல், லேசாக இருந்தது. உள்ளே என்ன இருக்கிறது என, தெரிந்து கொள்ள பையை பிரித்து பார்த்தேன். உள்ளே ஒரு சி.டி., மட்டும் இருந்தது. வீட்டில் வந்து அதை போட்டு பார்த்தபோது, அதில் குடும்ப வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகள், தத்துவங்கள், விளையாட்டு என, அனைத்து விஷயங்களும் இருந்தன. அதோடு, இரண்டாயிரம் பொது அறிவு கேள்வி, பதில்களும் இடம்பெற்றிருந்தன.
இப்போது பெரும்பாலும் வரவேற்பில், தேங்காய், பழத்திற்கு பதில் மரக்கன்று, புத்தகம் என, பயனுள்ள பொருட்களை வழங்குகின்றனர். அந்த பட்டியலில் இப்போது, சி.டி.,யும் சேர்ந்துள்ளது. இது போன்ற பொருட்களை கொடுத்தால், வாங்குவோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
- எஸ்.வேல்முருகன், மதுரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெண்களே... எங்கே போகிறீர்?
என் நண்பர் ஒருவர், தான் வைத்திருக்கும் பேன்சி ஸ்டோர்ஸ் முன்புறம், பி.சி.ஓ., பாக்ஸ் ஒன்று தொங்க விட்டிருந்தார்.
அண்மையில் அவரைப் பார்க்க சென்றிருந்தபோது, அங்கு, பி.சி.ஓ., பாக்ஸ் இல்லாதது கண்டு, காரணம் கேட்டேன்.
அதற்கு அவர், 'அந்த கண்றாவிய ஏம்பா கேக்கறே... முளைச்சி மூணு இலை விடாத விடலைப் பசங்க எல்லாம், ஒரு ரூபா போன்ல, ரொம்ப நேரமா கடலைப் போடுதுங்க. பாய் பிரண்ட்சுக்கு, 'கிஸ்' கொடுக்கிறேன்ங்கிற பேர்ல, பொட்ட புள்ளைங்க, ரிசீவரை, எச்சில் செய்திட்டு போவுதுங்க. பெத்தவங்க இதுங்களோட எதிர்காலத்த நினைச்சு, எப்படியெல்லாம் கனவு கண்டுட்டு இருப்பாங்க...
'சரி... இதுங்க தான் இப்படின்னா, கல்யாணமான பொண்ணுங்க கூட , போன்ல கண்டவன் கூட எல்லாம் சிரிச்சு சிரிச்சு பேசும்போது, மனசு வலிக்குதுப்பா. 'பிசினஸ் டூர் போயிருக்கார்; வர ஒரு வாரமாகும். நீங்க பயமில்லாம வீட்டுக்கு வாங்க...' என்கிறது மாதிரி பேசுற போது, ரொம்ப உறுத்தலாய் இருக்குப்பா.
'பி.சி.ஓ.,வால வர்ற காசைவிட, எனக்கு கண்ணியமும், கட்டுப்பாடும் தான் முக்கியம். அதனால தான், மனசு வெறுத்துப்போய், பி.சி.ஓ., பாக்சை எடுத்துட்டேன்...' என்றார்.'பிறன்மனை நோக்காமை பேராண்மை' என்று, ஆண்களுக்கே ஒழுக்கம் குறித்து கற்பிக்கும் நம் ஊரில், எதிர்கால சந்ததியினரை, நன்மக்களாக உருவாக்கும் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் பெண்களே, இப்படி நடந்து கொள்வதை கேள்விப்பட்ட போது, மனது பாரமானது.
— பாலா சரவணன், சென்னை.
என் நண்பர் ஒருவர், தான் வைத்திருக்கும் பேன்சி ஸ்டோர்ஸ் முன்புறம், பி.சி.ஓ., பாக்ஸ் ஒன்று தொங்க விட்டிருந்தார்.
அண்மையில் அவரைப் பார்க்க சென்றிருந்தபோது, அங்கு, பி.சி.ஓ., பாக்ஸ் இல்லாதது கண்டு, காரணம் கேட்டேன்.
அதற்கு அவர், 'அந்த கண்றாவிய ஏம்பா கேக்கறே... முளைச்சி மூணு இலை விடாத விடலைப் பசங்க எல்லாம், ஒரு ரூபா போன்ல, ரொம்ப நேரமா கடலைப் போடுதுங்க. பாய் பிரண்ட்சுக்கு, 'கிஸ்' கொடுக்கிறேன்ங்கிற பேர்ல, பொட்ட புள்ளைங்க, ரிசீவரை, எச்சில் செய்திட்டு போவுதுங்க. பெத்தவங்க இதுங்களோட எதிர்காலத்த நினைச்சு, எப்படியெல்லாம் கனவு கண்டுட்டு இருப்பாங்க...
'சரி... இதுங்க தான் இப்படின்னா, கல்யாணமான பொண்ணுங்க கூட , போன்ல கண்டவன் கூட எல்லாம் சிரிச்சு சிரிச்சு பேசும்போது, மனசு வலிக்குதுப்பா. 'பிசினஸ் டூர் போயிருக்கார்; வர ஒரு வாரமாகும். நீங்க பயமில்லாம வீட்டுக்கு வாங்க...' என்கிறது மாதிரி பேசுற போது, ரொம்ப உறுத்தலாய் இருக்குப்பா.
'பி.சி.ஓ.,வால வர்ற காசைவிட, எனக்கு கண்ணியமும், கட்டுப்பாடும் தான் முக்கியம். அதனால தான், மனசு வெறுத்துப்போய், பி.சி.ஓ., பாக்சை எடுத்துட்டேன்...' என்றார்.'பிறன்மனை நோக்காமை பேராண்மை' என்று, ஆண்களுக்கே ஒழுக்கம் குறித்து கற்பிக்கும் நம் ஊரில், எதிர்கால சந்ததியினரை, நன்மக்களாக உருவாக்கும் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் பெண்களே, இப்படி நடந்து கொள்வதை கேள்விப்பட்ட போது, மனது பாரமானது.
— பாலா சரவணன், சென்னை.
விழிப்புணர்வு பதிவுகளுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மருத்துவ பரிசோதனையை அலட்சியப்படுத்தாதீர்!
ஒரு பெரிய கடையில், வீட்டு உபயோகப் பொருள் வாங்கிய எனக்கு, முழு உடல் மருத்துவ பரிசோதனைக்கான இலவச கூப்பனைக் கொடுத்தனர். எனக்கும், குடும்பத்தாருக்கும், என் அலுவலகத்தில் இந்த வசதி உண்டென்பதால், இந்த கூப்பனை அடுத்த பிளாட்டில் குடியிருக்கும், அதிக வசதி இல்லாத, ஒரு நண்பருக்கு கொடுத்தேன். அவர், 'எனக்கு ஒரு பிரச்னையுமில்லை வேண்டாம்...' என்று கூறி, வாங்க மறுத்தார்.நான்தான், 'ஐம்பது வயதுக்கு மேல், எல்லாருமே கண்டிப்பாக, வருடா வருடம், பரிசோதனை செய்து கொள்ளணும்...' என்று வற்புறுத்தி, கூப்பனைக் கொடுத்தேன்.
ஒரு நாள் செக்கப்புக்கு போய் வந்த அவர், அதற்குப்பின் என்னை கண்ட போது, கடுப்புடன் முகத்தை திருப்பிக்கொண்டார். காரணம் தெரியாமல் குழம்பி போய், என் மனைவியிடம் இதைப் பற்றி கூறியபோது, அந்த நண்பர் சொன்னதாக, மனைவி கூறியது, 'அவர் மெடிக்கல் செக்கப் செய்த போது, கொலஸ்டிரால் இருந்ததுடன், இதயத்திலும், நுரையீரலிலும் சின்னச் சின்ன பிரச்னைக இருக்கிறதா சொல்லி, அதுக்கு மருந்து மாத்திரைகள எழுதிக் கொடுத்ததுடன், உணவு கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க சொல்லியிருக்காங்க. அதனால கடுப்பாகி போன அவர், எல்லாரிடமும், 'எனக்கு உடம்புல ஒரு நோயும் இல்ல; பாழாப்போன இலவசக் கூப்பனால் தான், இப்ப மனகஷ்டமும், மருந்து செலவும் ஆகிப் போச்சு... எல்லாம் அந்த மனுஷனால தான்...' என்று கூறியதாக சொன்னார். இதைக் கேட்ட எனக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.
இவர் மட்டுமல்ல இவரைப்போன்ற பலர், 'எனக்கு ஒரு நோயும் இல்ல; வரவும் வராது...' என்று, வீண் ஜம்பம் பேசி, எந்த மருத்துவ பரிசோதனையும் செய்து கொள்ளாமலும், மெடிக்கல் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்காமலும், அலட்சியமாக உள்ளனர்.
வாசகர்களே... மனித உடம்பு என்பது, கல் கோட்டை அல்ல; ஆண்டுகள் பல கடந்தாலும், அப்படியே இருக்க! ரத்தமும், சதையும், எலும்பும், கழிவும் ஆன இந்த உடம்பை, சரியாக பராமரிக்கவில்லை என்றால், நம்மை நம்பி வாழும் நம் குடும்பத்தினருக்குத் தான் இழப்பு என்பதை புரிந்து கொள்ளுங்கள்!
ஆர்.பாலாஜி, ஸ்ரீபெரும்புதூர்.
ஒரு பெரிய கடையில், வீட்டு உபயோகப் பொருள் வாங்கிய எனக்கு, முழு உடல் மருத்துவ பரிசோதனைக்கான இலவச கூப்பனைக் கொடுத்தனர். எனக்கும், குடும்பத்தாருக்கும், என் அலுவலகத்தில் இந்த வசதி உண்டென்பதால், இந்த கூப்பனை அடுத்த பிளாட்டில் குடியிருக்கும், அதிக வசதி இல்லாத, ஒரு நண்பருக்கு கொடுத்தேன். அவர், 'எனக்கு ஒரு பிரச்னையுமில்லை வேண்டாம்...' என்று கூறி, வாங்க மறுத்தார்.நான்தான், 'ஐம்பது வயதுக்கு மேல், எல்லாருமே கண்டிப்பாக, வருடா வருடம், பரிசோதனை செய்து கொள்ளணும்...' என்று வற்புறுத்தி, கூப்பனைக் கொடுத்தேன்.
ஒரு நாள் செக்கப்புக்கு போய் வந்த அவர், அதற்குப்பின் என்னை கண்ட போது, கடுப்புடன் முகத்தை திருப்பிக்கொண்டார். காரணம் தெரியாமல் குழம்பி போய், என் மனைவியிடம் இதைப் பற்றி கூறியபோது, அந்த நண்பர் சொன்னதாக, மனைவி கூறியது, 'அவர் மெடிக்கல் செக்கப் செய்த போது, கொலஸ்டிரால் இருந்ததுடன், இதயத்திலும், நுரையீரலிலும் சின்னச் சின்ன பிரச்னைக இருக்கிறதா சொல்லி, அதுக்கு மருந்து மாத்திரைகள எழுதிக் கொடுத்ததுடன், உணவு கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க சொல்லியிருக்காங்க. அதனால கடுப்பாகி போன அவர், எல்லாரிடமும், 'எனக்கு உடம்புல ஒரு நோயும் இல்ல; பாழாப்போன இலவசக் கூப்பனால் தான், இப்ப மனகஷ்டமும், மருந்து செலவும் ஆகிப் போச்சு... எல்லாம் அந்த மனுஷனால தான்...' என்று கூறியதாக சொன்னார். இதைக் கேட்ட எனக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.
இவர் மட்டுமல்ல இவரைப்போன்ற பலர், 'எனக்கு ஒரு நோயும் இல்ல; வரவும் வராது...' என்று, வீண் ஜம்பம் பேசி, எந்த மருத்துவ பரிசோதனையும் செய்து கொள்ளாமலும், மெடிக்கல் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்காமலும், அலட்சியமாக உள்ளனர்.
வாசகர்களே... மனித உடம்பு என்பது, கல் கோட்டை அல்ல; ஆண்டுகள் பல கடந்தாலும், அப்படியே இருக்க! ரத்தமும், சதையும், எலும்பும், கழிவும் ஆன இந்த உடம்பை, சரியாக பராமரிக்கவில்லை என்றால், நம்மை நம்பி வாழும் நம் குடும்பத்தினருக்குத் தான் இழப்பு என்பதை புரிந்து கொள்ளுங்கள்!
ஆர்.பாலாஜி, ஸ்ரீபெரும்புதூர்.
Page 28 of 100 • 1 ... 15 ... 27, 28, 29 ... 64 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 28 of 100
|
|