புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_c10 
3 Posts - 60%
Manimegala
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_c10 
11 Posts - 4%
prajai
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_c10 
9 Posts - 4%
Jenila
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_c10 
4 Posts - 2%
Rutu
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Barushree
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்


   
   

Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 11:21 pm

First topic message reminder :

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 7 Gr0jENBiR6aUXea2MTWR+parlimentelection2014

 பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்?

தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது.

இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.  பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே வரும் 3-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 01, 2014 11:42 pm

ராகுலை எதிர்த்து ஸ்மிரிதி இராணி, சோனியாவை எதிர்த்து வழக்கறிஞர் அஜய் அகர்வால் போட்டி

அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக-வைச் சேர்ந்த ஸ்மிரிதி இராணி போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்துள்ளது.

பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 7வது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் அவருக்கு போட்டியாக நடிகை ஸ்மிரிதி ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். அமேதியில் போட்டியிடுவதை பெருமையாகக் கருதுவதாக ஸ்மிரிதி இராணி கூறியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் அமேதி தொகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்மிரிதி இராணி குற்றம் சாட்டினார்.

இதேபோல் ரேபரெலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் சோனியாவை எதிர்த்து பாரதிய ஜனதா சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அஜய் அகர்வால் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வாரணாசியில் நரேந்திர மோடிக்கு எதிராக வலுவான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக-வின் சார்பில் உத்திர பிரதேசத்தின் பண்டா தொகுதியில் பைரோன் பிரசாத் மிஷ்ரா, தமிழகத்த்தில், வேலூரில் ஏ.சி.சண்முகமும் மற்றும் தஞ்சாவூர் தொகுதியில் கருப்பா எம்.முருகானந்தமும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 02, 2014 6:52 pm

தொய்வை சமாளிக்குமா அ.தி.மு.க.,?

முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரத்தில் பெரும்பங்கு முடிந்துள்ள நிலையில், கள நிலவரம் வேகமாக மாறி வருவது, அ.தி.மு.க., வினரை கவலையடைய செய்துள்ளது.

கடந்த மாதம் 3ம் தேதி, காஞ்சிபுரத்தில், ஜெயலலிதா பிரசாரத்தை துவங்கும் போது, அ.தி.மு.க., வலுவான நிலையில் இருந்தது. அந்த கட்சி, பெரும்பாலான இடங்களில் ஜெயிக்க வாய்ப்பு உள்ளது என, அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அப்போது வெளியான கருத்து கணிப்புகளும், அ.தி.மு.க., 35 இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெறும் என, தெரிவித்தன. முதல்வரின் பிரசார கூட்டங்களுக்கு, 2011ல் இருந்ததை போல் மக்களிடம் எழுச்சியோ, வருகையோ இல்லை என, தகவல்கள் வந்த வண்ணம் இருந்தாலும், இரண்டு வாரங்களுக்கு முன், பா.ஜ., கூட்டணி முடிவானது வரை, அ.தி.மு.க.,வின் நிலை, ஏறத்தாழ இப்படியே தான் இருந்தது.

அதற்கு பின்;

* யாருமே எதிர்பார்க்காத விதமாக, வலுவான அணியை பா.ஜ., அமைத்துவிட்டதால், மக்கள் மத்தியில், யாரை ஆதரிப்பது என்பது குறித்து குழப்பம் ஏற்பட்டது* விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவின் சூறாவளி பிரசாரம், கருணாநிதியின் பிரசார கூட்டம் உள்ளிட்டவை நடந்தன* பிரசாரம் செய்ய களத்தில் இறங்கிய அ.தி.மு.க., வேட்பாளர்கள் பலருக்கு, உள்ளூர் பிரச்னைகள் காரணமாக, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்வர் ஜெயலலிதா என்ற, ஒரே ஒரு பிரசார நட்சத்திரத்தை நம்பித் தான், அ.தி.மு.க., களத்தில் உள்ளது. ஆனால், அவரது பிரசாரமும் கடந்த ஒரு மாதமாக நடந்து கொண்டு இருப்பதால், தற்போது, கடைசி கட்டங்களை எட்டி உள்ளது. கள நிலவரமும் சிக்கலாக இருக்க, பிரசாரத்தை வலுப்படுத்த, அ.தி.மு.க., தலைமை பல்வேறு முயற்சிகளை எடுக்க துவங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாகத் தான், கடந்த மாதம் 30ம் தேதி, அ.தி.மு.க., தொண்டர்களுக்கு, முதல்வர் கடிதம் எழுதினார். அந்த கடிதத்தின் முக்கிய அம்சங்கள்:

* அ.தி.மு.க., தொண்டர்கள், ஒவ்வொருவரும், பிரசார பீரங்கியாக மாற வேண்டும். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இளம் வாக்காளர்களை கவர வேண்டும்

* வாக்காளர்களை, ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவரும் சந்திக்க வேண்டும். அ.தி.மு.க., அரசின் சாதனைகளை எடுத்துக்கூற வேண்டும்

* காங்கிரசும், தி.மு.க.,வும் தமிழர்களுக்கு எதிராக இழைத்திட்ட பல்வேறு அநீதிகளையும், கொடுமைகளையும், வாக்காளர் ஒவ்வொருவரும் உணரும் வகையில், திண்ணை பிரசாரம், தெரு முனை கூட்டம், நேரடி சந்திப்பு மூலம்விளக்க வேண்டும்


* இந்த நேரடி தொடர்பு பிரசாரம் முழுமையாக நடைபெற வேண்டும். அந்த அளவிற்கு, நடமாடும் சுவரொட்டிகளாக, முழக்கம் எழுதப்பட்ட பதாகைகளாக விளக்கம் கூறும் கையேடுகளாக மாறி, கட்சியினர் ஒவ்வொருவரும், தேர்தல் முடியும் வரை, விழிப்புடன் களப் பணியாற்ற வேண்டும். இவ்வாறு, அதில் எழுதப்பட்டு இருந்தது.

அதாவது, அந்த கடிதம் சொல்லாமல் சொல்லிய செய்தி 'நம் பிரசாரம் இன்னும் முழுமையாக மக்களிடையே போய் சேரவில்லை. இன்னமும் முயற்சி எடுக்க வேண்டும். இதை முதல்வர் மட்டும் செய்தால் போதாது' என்பது தான். தேர்தல் என்றால், தொண்டர்களே, உற்சாகமாக இருக்க வேண்டாமா, அப்படி இருங்கள் என, கூற கடிதம் தேவையா என்று, எண்ணுவதில் தவறில்லை. ஆனால், தற்போது, அ.தி.மு.க., சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளில் தொண்டர்களின் சோர்வும் ஒன்று. அதே போல்,

* ராமநாதபுரம் அன்வர் ராஜா, திருச்சி குமார், திருவள்ளூர் வேணுகோபால், கரூர் தம்பிதுரை தவிர, மற்ற எந்த வேட்பாளரையும் கட்சிக்காரர்களுக்கே தெரியவில்லை. வேட்பாளர்களுக்கும் கட்சிக்காரர்களை தெரியவில்லை
* அ.தி.மு.க., உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பெரும்பாலான இடங்களில் நல்ல பெயர் இல்லை என்பது, வேட்பாளர் பிரசார சுற்றுப்பயணங்களில் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து கண்கூடு. இதற்கு மேல், குடிநீர் பற்றாக்குறை, மின்வெட்டு பிரச்னைகளும் உள்ளன

* அ.தி.மு.க.,வில் இல்லாத புது விஷயமாக, தற்போது, ஆங்காங்கேபொறுப்பில் இருக்கும் பலரும், தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள், மாற்று கட்சிகளில் வேட்பாளர்களாக இருந்தால், அவர்களோடு ரகசியமாக கைகோர்க்கும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன இவையெல்லாம், அ.தி.மு.க., தலைமைக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. களத்தில் மற்ற கட்சிகளின் பிரசாரங்களும், எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு சோர்வாக இருந்தாலும், அ.தி.மு.க.,வின் பிரசாரம் மிகவும் சோர்வடைந்து உள்ளதாக தெரிகிறது. இதனால், தொண்டர்களை பிரசார பீரங்கிகளாக மாற்றுவதோடு, மகளிர் சுய உதவி குழுக்களை தி.மு.க., பாணியில் வளைக்கவும், மொத்தமாக ஓட்டுகளை வைத்திருக்கும் எந்த குழுவாக இருந்தாலும் அவற்றை வளைக்கவும், மாவட்ட செயலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் மட்டும் போதுமா, அல்லது, ஜெயலலிதா இன்னொரு சுற்று வந்து, சாட்டையை சுழற்றினால் தான், வேலை நடக்குமா என்பது, இன்னும் ஓரிரு வாரங்களில் தெரிய வரும்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Apr 02, 2014 9:26 pm

அதிமுகவின் வெற்றி சதவீதம் குறைந்து வருவது உண்மைதான்...பார்க்கலாம்..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 03, 2014 1:49 am

வாரணாசியில் நரேந்திர மோடியை கண்டிப்பாக தோற்கடிப்பேன் அரவிந்த் கெஜ்ரிவால் சபதம்

வாரணாசி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கண்டிப்பாக தோற்கடிப்பேன் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சபதமிட்டுள்ளார். மேலும், பாரதீய ஜனதாவுடன் இணைய மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ராஜ்மோகன் காந்தியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். நான் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்றால் எளிதில் வெற்றி பெறக்கூடிய தொகுதியில் போட்டியிட்டிருப்பேன். என்னுடையை குறிக்கோள் மோடியை தோற்கடிப்பதே. அதனால் தான் நான் இந்த தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறேன். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியையும் தோற்கடிக்க வேண்டும். அதனால் தான் அமேதியில் குமார் விஸ்வாஸ் நிறுத்தப்பட்டுள்ளார். இவர்கள் இரண்டு பேர்களையும் தோற்கடிக்க வேண்டியதுள்ளது. அவர்கள் ஊழலையே நம்பிருக்கும் கட்சியின் தலைவர்கள் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும், கெஜ்ரிவால், பாரதீய ஜனதாவில் இணையலாம் என்ற தகவல்களை அவர் மறுத்துள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 03, 2014 1:50 am

காங்கிரஸ் தலைவர் நக்மாவிற்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கோரிக்கை

நடிகை நக்மா உத்தரபிரதேச மாநிலம் மீரட் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து அவர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவருடன் ஏராளமான தொண்டர்கள் செல்கிறார்கள். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் கூட்டம் கூடுகிறது.

சமீபத்தில் நக்மா அங்குள்ள ஹபூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹஜ்ராஜ் சர்மா உள்ளிட்ட நிர்வாகிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். பிரசாரத்தை முடித்த நக்மா, அப்பகுதியில் இருந்து புறப்பட தயாரானபோது மக்கள் கூட்டத்தை விலக்கி விட்டு அங்கு வந்த ஹஜ்ராஜ் சர்மா எம்.எல்.ஏ., திடீரென நக்மாவின் கன்னத்தில் முத்தமிட்டதாக கூறப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எம்.எல்.ஏ.வின் இந்த செயலை எதிர்பாராத நக்மா, அவரது கையை கோபமாக தட்டிவிட்டதுடன், உடனே காரில் ஏறி அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்துக்கு மகளிர் அமைப்புகள் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. ஹஜ்ராஜ் எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவை வலியுறுத்தின. ஆனால் ஹஜ்ராஜ் சர்மா கூறும்போது ‘‘நான் கூட்டத்தில் இருந்து நக்மாவை பாதுகாக்கத்தான் முயன்றேன். மற்றபடி எதுவும் நடைபெறவில்லை’’ என்றார்.

இதனையடுத்து மீரட் நகரில் நடிகை நக்மா வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் சென்றனர். நக்மாவை அருகில் சென்று பார்ப்பதற்காக பல இடங்களில் கூட்டத்தினர் முண்டியடித்தனர். அப்போது கூட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தொண்டர் ஒருவர் நக்மாவிடம் சில்மிஷம் செய்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நக்மா, தொண்டரின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைவிட்டார். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், பிரசாரத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு நக்மா அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். இந்த சம்பவத் தினால் நக்மா அதிர்ச்சியுடன் காணப்பட்டார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்தால் நான் மீரட் பக்கமே வரமாட்டேன்’’ என்றார். இது தொடர்பாக நடிகை நக்மா காங்கிரசிடம் புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை நக்மாவிற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நடிகை நக்மாவின் கூட்டத்திற்கும் அதிகமான கூட்டம் கூடுகிறது. எனவே சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கூடுதல் கவணம் செலத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 03, 2014 1:52 am

சிவசேனா கட்சி தொண்டர்கள் மீது தாக்குதல் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் 3 பேர் கைது

சிவசேனா கட்சி தொண்டர்கள் 2 பேர் மீது தாக்குதல் நடத்திய தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடிவருகிறார்கள்.

சிவசேனா தொண்டர்கள்

தானே கல்வா அருகே உள்ள பாஸ்கர் நகரை சேர்ந்தவர்கள் பிரகாஷ் ராஜ்பர் மற்றும் ஆஷிக் ராஜ்பர். சிவசேனா கட்சி தொண்டர்கள். சம்பவத்தன்று கல்யாண் தொகுதியில் போட்டியிடும் சிவசேனா வேட்பாளர் ஸ்ரீகாந்த் ஷிண்டே வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இவர்கள் 2 பேரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள கோவில் அருகே சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் இவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

3 பேர் கைது

இதில் பிரகாஷ் ராஜ்பருக்கும், ஆஷிக் ராஜ்பருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்த சிவசேனா தொண்டர்களை மீட்டு சத்ரபதி சிவாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும், தப்பியோடிய நபர்களில் 3 பேரை கைது செய்தனர். விசாரணையில், அவர்களது பெயர் ராஜ்நாத் சிங், தீபக் ஷெர்தே மற்றும் பங்கஜ் பாண்டே என்றும், தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் என்றும் தெரியவந்தது. இதில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 03, 2014 1:55 am

திருவண்ணாமலை அதிமுக வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.37 லட்சம்

திருவண்ணாமலை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வனரோஜா வேட்புமனு தாக்கலின் போது தனது பெயரிலும், தனது கணவர் பெயரிலும் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளார்.

இதில் வேட்பாளரிடம் ரொக்கம் மற்றும் நகை, கணவர் பெயரில் ரொக்கம் மற்றும் அசையா சொத்துக்கள் உள்பட மொத்தம் ரூ.37 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு:–

திருவண்ணாமலை அ.தி.மு.க. வேட்பாளர் வனரோஜாவிடம் கையிருப்பாக ரொக்கம் ரூ.3 லட்சம், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 30 பவுன் நகையும், அவரது கணவர் சண்முகத்திடம் ஒரு லட்சம் ரூபாயும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளரின் கணவர் சண்முகம் பெயரில் செங்கம் அருகே நீப்பத்துறையில் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான 6.42 ஏக்கர் விவசாய நிலமும், அதே பகுதியில் 2 ஆயிரத்து 400 சதுரடி நிலமும், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிக்ஸ் சிறுதொழில் நிறுவனமும் உள்ளது.

வேட்பாளரின் கணவர் பெயரில் செங்கம் துக்காப்பேட்டையில் 1987ம் ஆண்டு வாங்கப்பட்ட ஆயிரத்து 244 சதுரடியில் 21 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான வீடு மொத்தம் 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் வேட்பாளரின் கணவர் பெயரில் உள்ளன.

வேட்பாளர் வனரோஜா அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 1995ம் ஆண்டு எம்.ஏ.வும், அதே பல்கலைக்கழகத்தில் பி.எட், படித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 03, 2014 1:58 am

நரேந்திர மோடி உணர்வற்றவர்: சரத் பவார் தாக்கு

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உணர்வற்றவர் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத் பவார் விமர்சித்துள்ளார்.

மோடிக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது; அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என அண்மையில் சரத் பவார் விமர்சித்திருந்தார். அவரது பேச்சு கிளப்பிய சர்ச்சை நீங்குவதற்குள் மீண்டும் மோடியை விமர்சித்துள்ளார் பவார்.

மத்தியப் பிரதேச மாநிலம் அலிபக் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சரத் பவார் இதனை தெரிவித்துள்ளார்.

"குஜராத் கலவரத்தில் காங்கிரஸ் எம்.பி. ஜாபர் அலி உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டபோது அங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள காந்திநகரில்தான் மோடி இருந்தார். ஆனால், ஜாபர் அலி வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லக் கூட்ட மோடி முற்படவில்லை. இப்படி உணர்வற்ற ஒரு தலைவர் பல்வேறு சாதிகளையும், மதங்களையும் சேர்ந்த மக்களை எப்படி பாதுகாப்பார்?" என்றார் சரத் பவார்.

மேலும், "தேர்தல் முடிவதற்கு முன்னரே பாஜக பிரதமர் வேட்பாளரை அறிவித்துள்ளது. இது முறையல்ல. தேர்தலுக்குப் பின்னர் தனிப் பெரும்பான்மை பெறும் கட்சியின் எம்.பி.க்கள் சேர்ந்தே பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வது மரபு" என்றார் அவர்.

சர்வாதிகாரம்:

பின்னர் பேசிய அம்மாநில முதல்வர் பிருதிவிராஜ் சிங் சவான், மோடி ஒரு சர்வாதிகாரியைப் போல் செயல்படுகிறார் என்றார்.

அவரது நடவடிக்கையால் கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங் ஆகியோர் ஓரங்கட்டப்பட்டு விட்டதாகவும் கூறினார். ஜஸ்வந்த் சிங் கண்ணீர் சிந்தியது வருத்தமளிப்பதாக கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 03, 2014 2:02 am

ஒவ்வொருவரும் பிரசார பீரங்கியாகுங்கள்! தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம்

அ.தி.மு.க., தொண்டர்கள், ஒவ்வொருவரும், பிரசார பீரங்கியாக மாற வேண்டும். நவீன தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, இளம் வாக்காளர்களை, கவர வேண்டும்' என, அ.தி.மு.க., தொண்டர்களுக்கு, முதல்வர், ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடித விவரம்:

இந்த மடல் வழியாக, ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட, கட்சி தொண்டர்களிடம், என் உள்ளத்து உணர்வுகளை, பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.அ.தி.மு.க., வரலாற்றில், முதன் முறையாக, 40 லோக்சபா தொகுதிகளிலும், நாமே போட்டியிடும் வாய்ப்பினை, இந்தத் தேர்தலில் பெற்றுள்ளோம். எனவே, இந்த தேர்தல், ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தேர்தல்.எதிரொலிக்கும் வகையில் லட்சக்கணக்கான கட்சி தொண்டர் கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் பதவிகளில், மக்கள் பணியாற்றுகின்றனர். கட்சியில் எளிய தொண்டர்கள், இப்படி மக்கள் தொண்டாற்றும், உயர் பதவிகளை வகிக்கின்றனர் என்ற பெருமையை, கட்சி பெற்றுள்ளது.அதேபோல், இதுநாள் வரை இல்லாத அளவுக்கு, கட்சியில், 40 உறுப்பினர்கள் லோக்சபாவில் இடம் பெற்றுள்ளனர் என்ற செய்தியை, எதிரொலிக்கும் வகையில், கட்சியினர் அனைவரும், தங்கள் கடமையை செய்ய வேண்டும்.தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில், தமிழர்களின் பெருமைகளை சீர்குலைக்கும் வகையில், 10 ஆண்டுகளாக, மத்தி யில் ஆட்சி நடத்தியது காங்கிரஸ். அதனுடன், ஒன்பது ஆண்டுகள் உறவாடியது, தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அரசு, நம் நாட்டின் பொருளாதாரத்தை, முற்றிலும் சீர்குலைத்து விட்டது. இந்திய ரூபாயின் மதிப்பு, கடுமையாக சரிந்து விட்டது. அனைத்து துறைகளிலும், ஊழல் கொடிகட்டி பறக்கிறது.காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, குஜராத்தில் இருந்து அசாம் வரை, விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்டை காப்பாற்ற வும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும், லோக்சபா தேர்தல், ஒரு கருவியாக, நமக்கு வாய்த்துள்ளது. இந்த செய்தியை, தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும், கட்சி தொண்டர்கள் கொண்டு செல்ல வேண்டும்.

உணரும் வகையில்:

வாக்காளர்களை, ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவரும் சந்திக்க வேண்டும். அ.தி.மு.க., அரசின் சாதனைகள்; முன்னோடி திட்டங்கள்; வளர்ச்சி திட்டங்கள்; தொலைநோக்கு திட்டங்கள் போன்றவற்றை எடுத்துக் கூற வேண்டும்.வஞ்சக நெஞ்சத்தோடு காங்கிரசும், தன் குடும்ப சுயநலத்திற்காக, தி.மு.க.,வும், தமிழர்களுக்கு எதிராக இழைத்திட்ட, பல்வேறு அநீதிகளையும், கொடுமைகளையும், வாக்காளர்கள் ஒவ்வொருவரும் உணரும் வகையில், திண்ணை பிரசாரம், தெருமுனை கூட்டம், நேரடி சந்திப்பு மூலம் விளக்க வேண்டும்.நவீன தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, இளம் வாக்காளர்களை கவர வேண்டும். கட்சியினர் ஒவ்வொருவரும், ஒரு பிரசார பீரங்கியாக மாற வேண்டும்.

விழிப்புடன் களப்பணி

வழக்கமான தேர்தல் பிரசார நடவடிக்கை, தொடர்ந்து நடைபெறுவதை போல், இந்த நேரடித் தொடர்பு பிரசாரமும், முழுமையாக நடைபெற வேண்டும். அந்த அளவிற்கு, நடமாடும் சுவரொட்டிகளாக, முழக்கம் எழுதப்பட்ட பதாகைகளாக, விளக்கம் கூறும் கையேடுகளாக மாறி, கட்சியினர் ஒவ்வொருவரும், தேர்தல் முடியும் வரை, விழிப்புடன் களப்பணியாற்ற வேண்டும்.என்னை பொறுத்தவரை, பொது வாழ்வும், அரசியல் தொண்டும், ஒரு பிரார்த்தனை. விருப்பு வெறுப்புகளுக்கு, இடமில்லாத தவம். கட்சி தொண்டர்கள் அனைவரும், இந்த உணர்வுகளை புரிந்து கொண்டு, தேர்தல் பணியாற்ற வேண்டும். அனைத்து தொகுதிகளிலும், நானே போட்டியிடுவதாக நினைத்து, ஒவ்வொருவரும், தேர்தல் பணியாற்ற வேண்டும். அனைத்து தொகுதிகளிலும், பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்ற மகத்தான செய்தி வரும்வரை, கட்சியினர் ஒவ்வொருவரும் அயராது பணியாற்றி, எம்.ஜி.ஆர்., புகழுக்கு, மேலும் ஒரு மகுடம் சூட்ட வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 03, 2014 2:04 am

ஓட்டுப்பதிவுக்கு முன்பே முடிவுகள் தெரிந்து விட்ட தேர்தல்: மோடி


பக்சார்: இதுவரை நடந்த லோக்சபா தேர்தல்களில், ஓட்டுப்பதிவுக்கு முன்பே முடிவுகள் தெரிந்துவிட்ட தேர்தல் இது தான் என பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார்.

பீகார் மாநிலம் பக்சாரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்த தேர்தலில் ஒட்டு மொத்த இந்தியாவும் போராடுகிறது. ஓட்டுப்பதிவுக்கு முன்பாகவே முடிவுகள் தெரிந்து விட்ட முதல் தேர்தல் இது தான். இன்னும் ஏழு ஆண்டுகளில் நாட்டு மக்கள் ஒருவர் கூட சொந்த வீடு இல்லாமல் இருக்கக்கூடாது என்ற எனது குறிக்கோள் நிறைவேற மக்களின் ஆதரவு எனக்கு தேவை. அந்த வீட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை தேவைகளான குடிநீர், மின்சாரம், கழிவறை வசதிகள் இருப்பதுடன், கல்வி மற்றும் சுகாதாரமும் அளிக்கப்படும்.

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இந்த நாட்டை சோனியா அரசு ஆட்சி செய்து வருகிறது. ஆனால் அந்த அரசு விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அம்மாக்கள், சகோதரிகள் இவர்களில் யாருடையாவது கனவுகளையாவது நிறைவேற்றியுள்ளதா? மக்கள் எவ்வளவு காலம் தான் பொறுத்திருப்பார்கள். இவ்வாறு மோடி பேசினார்.

Sponsored content

PostSponsored content



Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக