புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_c10 
1 Post - 20%
Manimegala
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_c10 
11 Posts - 4%
prajai
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_c10 
9 Posts - 4%
Jenila
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Rutu
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
jairam
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்


   
   

Page 5 of 15 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 15  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 11:21 pm

First topic message reminder :

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Gr0jENBiR6aUXea2MTWR+parlimentelection2014

 பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்?

தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது.

இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.  பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே வரும் 3-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும்.



soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Mar 28, 2014 12:45 pm

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Itaxofficerm2714

வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக கொண்டு செல்லப்படும் நபர்கள் மற்றும் பணம் குறித்து தகவல் தருபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் கூறினர்.

இதுகுறித்து வருமானவரித்துறை முதன்மை ஆணையர் எஸ்.ரவி, வருமானவரித்துறையின் புலனாய்வுதுறை இயக்குனர் ஜெனரல் டி.ஜெயசங்கர் ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

கட்டுப்பாட்டு அறை

பாராளுமன்ற தேர்தல் உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்தப்படுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு வருமானவரித்துறை சில வழிமுறைகளை வகுத்து உதவி செய்து வருகிறது.

இதன் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓட்டு போடுவதற்காக வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பணம் கொண்டு செல்லப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 19–ந்தேதி ரூ.51 லட்சமும், சென்னை விமான நிலையத்தில் ரூ.19 லட்சம் மதிப்பிலான தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து விமானநிலையங்கள், முக்கிய ரெயில் நிலையங்கள், ஹோட்டல், பண்ணை வீடுகள், ஹவாலா ஏஜென்சிகள், பண புரோக்கர்கள், கூரியரில் வரும் பணம், அடகுகடைகள் மற்றும் பல்வேறு சந்தேகப்படும் ஏஜென்சிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாரம் 7 நாளும் 24 மணிநேரம் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது.

தகவல் தரலாம்

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் வருமானவரித்துறை அதிகாரிகள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக பணம் கொண்டு செல்பவர்கள் குறித்து முறையாக தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்பவர்கள் பெயர், முகவரிகள் ரகசியமாக வைக்கப்படும். வருமானவரி சட்டத்தின் கீழ் தகவல் தருபவர்களுக்கு உரிய பரிசும் வழங்கப்படும்.

தகவல் தருபவர்கள் கட்டணம் இல்லாத தொலைபேசி எண் 1800 425 6669 என்ற எண்ணிலும், பேக்ஸ் எண் 044– 282 536 59 மற்றும் இ.மெயில் itcontrolroomchennai@gmail.com என்ற முகவரியிலும் தகவல் தரலாம்.

ஆவணங்கள் துணை

முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பொறுத்தவரை தேர்தல் நடத்தை விதிகளின்படியோ அல்லது வருமானவரி சட்டத்தின்படியோ நடவடிக்கை எடுக்கப்படும்.

வியாபாரிகள், தங்க விற்பனையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் விற்பனை ரசீது போன்ற தகுந்த ஆவணங்களின் துணையுடன் பணத்தை கொண்டு செல்வதில் எந்த தடங்கலும் இல்லை. கணக்கில் வராத பணத்தை பிடிக்கவே வருமானவரித்துறை ஈடுபட்டுள்ளது.

கடுமையான நடவடிக்கை

நடப்பாண்டுக்கான வருமானவரி படிவம் வரும் 31–ந்தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்காக வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் வங்கி மற்றும் வருமானவரித்துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. வருமானவரி கட்டாதவர்களுக்கு இது கடைசி வாய்ப்பாகும். அதிக மதிப்புடைய பொருள்கள் வாங்குவது, அதிக பணம் சேமிப்பு கணக்கில் செலுத்துவது, ரூ.5 லட்சத்திற்கு மேல் தங்கம் வாங்குபவர்கள், ரூ.30 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்பவர்கள் குறித்து பதிவுதுறை மற்றும் வங்கியிலிருந்து வருமானவரித்துறைக்கு தகவல் வந்துவிடும்.

எனவே வரி செலுத்துபவர்கள் முறையாக வரி செலுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். தவறுபவர்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்ப உள்ளது. அதற்கு பிறகு நடவடிக்கை கடுமையாகவே இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

உடன் வருமானவரித்துறை மக்கள் தொடர்பு அலுவலர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

-- dinathanthi

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Mar 28, 2014 1:55 pm

நாடு குட்டி சுவராகி ரொம்ப நாள் ஆகி விட்டது .படித்தவன் நாட்டை ஆளாமல் படிக்காத பக்கிகள் நாட்டை ஆண்டால் என்ன ஆகும் என்பதை இப்போது வரை பார்த்து விட்டோம் . தெரியாமல் தான் கேட்கிறேன் .நாமெல்லாம் ஆட்டு மந்தைகளாக இப்படியே தான் இருப்போமா இல்லை விழித்து கொள்வோமா ?என்றைக்கு நம் எல்லாம் சுயநலத்தை ஒழித்து நாட்டை நேசிக்கிறோமோ அன்றைக்கு தான் இந்தியா முன்னேறும் .அதுவரை .......................................



பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Pபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Oபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Sபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Iபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Tபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Iபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Vபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Eபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Emptyபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Kபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Aபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Rபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Tபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Hபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Iபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 Cபாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 5 K
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 28, 2014 10:05 pm


ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு நூதனமாக பணம் பட்டுவாடா

தேர்தல் பிரசாரத்தின் போது, வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு, அரசியல் கட்சியினர், தேர்தல் கமிஷனின் கிடுக்கிப்பிடிக்கு பயந்து, நூதன முறையில், பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்குவதை தடுக்க, தேர்தல் கமிஷன் சார்பில், சட்டசபை தொகுதிக்கு மூன்று பறக்கும் படை மற்றும் மூன்று கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். ஆனாலும், அதிகாரிகளால், அனைத்து பகுதிகளையும், கண்காணிக்க முடியாது என்பதால், பொதுமக்கள் யாரேனும் வாக்காளர்களுக்கு, பணம் அல்லது பரிசுப் பொருள் கொடுத்தால், அதை போட்டோ அல்லது வீடியோ எடுத்து, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இது, அரசியல் கட்சியினரிடம், கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுவாக தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் வேட்பாளர்களை, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பர். ஆரத்தி தட்டில், வேட்பாளர் பணம் போடுவார். இதனால், ஆரத்தி எடுக்க, பெண்கள் இடையே, போட்டி உருவாகும்.

தற்போது, ஆரத்தி தட்டில், பணம் போட்டால், தேர்தல் விதி மீறலாகும். அதை யாரேனும் போட்டோ எடுத்து விடுவார்களோ என்ற பயத்தில், வேட்பாளர்கள் ஆரத்தி தட்டில், பணம் போடுவதில்லை. ஆனால், ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு, வேட்பாளர் அங்கிருந்து அகன்றதும், உடன் வரும் கட்சி நிர்வாகிகள், வேட்பாளருக்கு ஓட்டு போடக்கோரி அச்சிடப்பட்ட, துண்டுப்பிரசுரம் உள்ளே, பணம் வைத்து, பெண்களுக்கு வழங்குகின்றனர். பணம் கொடுக்காதவர்களிடம், சாதாரணமாக துண்டு பிரசுரத்தை வழங்குகின்றனர். ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு, துண்டு பிரசுரத்தை மடித்து, அவர்கள் கையில், திணித்துவிட்டு சமிக்ஞை காட்டி செல்கின்றனர். தேர்தல் கமிஷன், எத்தனை கிடுக்கிப்பிடி போட்டாலும், எங்களை தடுக்க முடியாது என, கூறுவது போல், அரசியல் கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். இதனால், வேட்பாளர்களுக்கு ஆரத்தி வரவேற்பு தொடர்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 28, 2014 10:30 pm

மோடியை ஆதரித்து வருபவர்கள் மீது சாணியை கரைத்து வீசுவோம் - சேலத்தில் முஸ்லிம்கள் கொந்தளிப்பு!

சேலத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா மசூதியின் வாசலில் தே.மு.தி.க வேட்பாளர் சுதீஷ் துண்டறிக்கைகளை கொடுத்து வாக்கு சேகரித்தார். அப்போது பள்ளிவாசலில் தொழுகையை முடித்து வந்த பெறும் திரளான இஸ்லாமியர்கள் ‘எங்கள் இனத்தை கொத்து கொத்தாக குஜராத்தில் கொன்று குவித்தது பா.ஜ.க கட்சி மோடி. அவரை ஆதரித்து நீங்கள் இங்கேயே பிரச்சாரம் செய்யலாமா?’ என்று கொந்தளித்தனர்.

இந்நிலையில் அங்கே தி.மு.க வேட்பாளர் உமாராணி செல்வராஜூம் வாக்கு சேகரிக்க வந்த நிலையில் தி.மு.க வினர் தங்களை தாக்கி விட்டதாக பேச ஆரம்பித்தனர் தே.மு.தி.க.வினர். இந்த தகவலால் இருதரப்பும் மோதிக்கொண்டனர். காவல்துறை தலையிட்டும் பிரச்சனை அடங்கவில்லை. அதன் பின்னும் இஸ்லாமியர்கள் தே.மு.தி.க விற்கு எதிராக கோசமிட அங்கிருந்து வாக்கு சேகரிக்காமலேயே கிளம்பினார் சுதீஷ்.

நாம் அங்கே திரண்டு இருந்த இஸ்லாமியர்களிடம் பேசினோம். த.மு.மு.க வை சேர்ந்த இப்ராகிம் கூறும்போது , ‘எங்கள் இஸ்லாமிய இனத்தை குஜராத்தில் கொன்று குவித்த கட்சி பா.ஜ.க மோடி. அந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்துகொண்டு எந்த தைரியத்தில் இங்கு பள்ளிவாசல் முன்பு வந்து ‘மோடியை பிரதமராக்குங்கள்’ என்று வாக்கு கேட்கலாம்? இனியும் இவ்வாறு பள்ளிவாசல் முன்பு வந்து அவர்கள் வாக்கு கேட்டால் சாணியை கரைத்து மூஞ்சில் ஊற்றுவோம்’ என்றார் ஆக்ரோஷமாய்.

காவல்துறையோ ‘தே.மு.தி.க –தி.மு.க இரண்டு கட்சிகளுக்குமே இங்கு பள்ளிவாசல் முன்பு வந்து வாக்கு சேகரிக்க அனுமதி தரவில்லை.மீறி வந்துள்ளனர்’ என்றனர்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 30, 2014 1:09 am

பா.ஜ.க.வில் இருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கம்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான பார்மரில் போட்டியிட விரும்பிய பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்குக்கு, வாய்ப்பளிக்க கட்சியின் தலைமை மறுத்து விட்டது. மாறாக, சமீபத்தில் காங்கிரசில் இருந்து அந்த கட்சிக்கு தாவிய கர்னல் சோனாராம் சவுத்ரிக்கு டிக்கெட் வழங்கப்பட்டது.

தலைமையின் இந்த நடவடிக்கை கட்சியின் மூத்த தலைவர் அத்வானியின் தீவிர ஆதரவாளர் என கருதப்படுகிற ஜஸ்வந்த் சிங்குக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களை எதிர்த்து பார்மர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக ஜஸ்வந்த் சிங் அறிவித்தார்.

இதனையடுத்து, கடந்த திங்கட்கிழமை தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்ற அவர், பூர்த்தி செய்யப்பட்ட தனது வேட்பு மனுவினை பார்மர் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.

அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்திய பா.ஜ.க.தலைமை, தலைவர் ராஜ்நாத் சிங்கின் முடிவையடுத்து, அடுத்த 6 ஆண்டுகளுக்கு ஜஸ்வந்த் சிங்கை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதே போல், கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய வகையில், பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து ராஜஸ்தானின் சிகார் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி சுபாஷ் ம்ஹாரியாவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக பா.ஜ.க. தலைமை அறிவித்துள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 30, 2014 1:09 am

மோடி பிரதமரானால் இனக்கலவரம் உருவாகும்: மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இன்று ஒரு கூட்டத்தில் பேசுகையில் "மக்களவை தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெற்றி பெற்றால் குஜராத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தை போன்று இந்தியா முழுவதும் கலவரம் வெடிக்கும்" என்று தெரிவித்தார்.

"மத்தியில் மோடி ஆட்சி செய்தால் இனக்கலவரத்தின் தூண்டுகோலாக அமையும். நாட்டில் மதக்கலவரங்களும் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்களும் நடைபெற வாய்ப்பு அதிகம். எனவே மக்கள் அனைவரும் வரும் தேர்தலில் மோடியை வெற்றி பெற விடக்கூடாது" என்றும் மாயாவதி கேட்டுக்கொண்டார்.

கறுப்பு பணம் பற்றி பேசிய மாயாவதி, ஆட்சிக்கு வந்தால் கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வருவதாக கூறிவரும் பா.ஜ.க., ஆறு ஆண்டு காலத்தில் இது குறித்து அக்கட்சி நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் கேள்வியெழுப்பினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 30, 2014 1:11 am

வாரணாசியில் மோடிக்கு எதிராக உள்ளூர் வேட்பாளர்: காங்கிரஸ்

லோக் சபா தேர்தலில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். மோடிக்கு எதிராக மூத்த தலைவர்கள் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி நரேந்திர மோடிக்கு எதிராக வலிமைமிக்க உள்ளூர் வேட்பாளர்களை போட்டியிட முடிவு செய்துள்ளது. அதன்படி ராஜேஷ் மிஸ்ரா மற்றும் அஜய் ராஜா ஆகிய இரண்டு உள்ளூர் போட்டியாளர்கள் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

முன்னதாக நரேந்திர மோடி போட்டியிடும் இரண்டாவது தொகுதியான வதோதராவில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் மதுசூதனன் மிஸ்திரி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 30, 2014 1:13 am


'விவசாயிகளை கொல்வோம்' என்பதுதான் காங்கிரஸின் கொள்கை: மோடி கடும் தாக்கு!

பக்பத்: நாட்டின் முதுகெலும்பான ராணுவத்திற்கும், விவசாயத்திற்கும் மத்திய காங்கிரஸ் அரசு எந்த நன்மையும் செய்யவில்லை என்றும், "ராணுவ வீரர்களை கொல்வோம்...விவசாயிகளை கொல்வோம் ( மார் ஜவான் மார் கிஸான்) " என்பதில்தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதேபோல் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேசம், பக்பத் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ''1957ஆம் அண்டு இந்தியாவில் நடந்த முதல் போராட்டம் ஆங்கிலேயே ஆட்சிக்கு முற்று புள்ளி வைப்பதற்காக நடத்தப்பட்டது. அது முதல் இந்திய சுதந்திர போராட்டம் ஆகும். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய மக்கள் நடத்திய போராட்டம் தான் சுயராஜ் போராட்டம். இந்த சுயராஜ் போராட்டத்தை தற்போது காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து மக்கள் நடத்தி வருகிறார்கள்.

காங்கிரஸ் ஆட்சியில், நாட்டின் முதுகெலும்புகளான ராணுவத்திற்கும், விவசாயத்திற்கும் எந்த ஒரு நன்மையும் செய்யப்படவில்லை. இந்த ஆட்சியில் விவசாயிகள் தற்கொலைதான் அதிகமாக நடந்து உள்ளது.

அதேபோல், நமது எல்லையில் பல ராணுவ வீரர்களை நாம் இழந்துள்ளோம். இந்திய ராணுவ வீரர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் நமது வீரர்கள் இன்றுவரை சண்டை போட்டு வருகிறார்கள். இதற்கு பாகிஸ்தான் ராணுவம்தான் காரணம்.

மறைந்த நம் தலைவர் லால் பகதூர் சாஸ்திரி " ராணுவ வீரர்களை போற்றுவோம்...விவசாயிகளை போற்றுவோம்( ஜெய் ஜவான் ஜெய் கிஸான்)" என்றார். ஆனால் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசோ, "ராணுவ வீரர்களை கொல்வோம்...விவசாயிகளை கொல்வோம் ( மார் ஜவான் மார் கிஸான்) " என்ற கொள்கையை கொண்டுள்ளது.

எனவே, தற்போது காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக சுயராஜ் போராட்டத்தை மக்கள் நடத்தி வருகின்றனர். 2014 பா.ஜ.க. ஆண்டு. இந்த ஆண்டில் மத்திய ஆட்சியில் தாமரை சின்னம் தான் ஆட்சி அமைக்கும்'' என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 30, 2014 10:00 pm

அழிந்தனர் துதிபாடிகள்: ஜஸ்வந்த் கடும் விரக்தி

ஜெய்சல்மார் : ''மிகச் சிறந்தவர்கள் என, தனிநபர் துதி பாடப்பட்டவர்கள் பலரும், காணாமல் போய் விட்டனர்; அவர்கள் நினைவிடங்கள் மட்டுமே உள்ளன,'' என, பா.ஜ.,விலிருந்து நீக்கப்பட்ட, ஜஸ்வந்த் சிங், விரக்தியுடன் கூறியுள்ளார்.

பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர், ஜஸ்வந்த் சிங், லோக்சபா தேர்தலில், ராஜஸ்தான் மாநிலம், பார்மர் தொகுதியில் போட்டியிட விரும்பினார். பா.ஜ., மேலிடம், அவருக்கு, 'சீட்' கொடுக்காததால், சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் அவர், பா.ஜ.,விலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மாரில், அவர் அளித்த பேட்டி:எந்த ஒரு கட்சியிலும், தனிப்பட்ட ஒருவருக்கு முக்கியத்துவம் அளிப்பது சரியான நடைமுறை அல்ல. அதுவும், பா.ஜ., போன்ற கட்சிக்கு, இது அழகல்ல. பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் எடுக்கும் தவறான முடிவுகள், கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். பல நாடுகளில், குறிப்பிட்ட ஒரு தரப்பினரால், 'மிகச் சிறந்தவர்கள்' என, யாரையாவது ஒருவரை துாக்கி பிடித்து துதி பாடுவர். அப்படிப்பட்டவர்கள் காணாமல் போய் விட்டனர். அவர்களின் நினைவிடங்கள் தான், உலகம் முழுவதும் நிறைந்து காணப்படுகின்றன. இதை, நான் கூறவில்லை. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு அறிஞர் கூறியுள்ளார்.பா,ஜ.,வில் மூத்த தலைவர்கள் ஓரம்கட்டப்படுகின்றனர். இது, கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக, வீழ்ச்சிப் பாதைக்கு தான் கொண்டு செல்லும்.இவ்வாறு, அவர் கூறினார்.

பார்மர் தொகுதி அமைந்துள்ள ராஜஸ்தான் மாநிலத்தில், 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன; அடுத்த மாதம், 17 மற்றும் 24ல் தேர்தல் நடக்கிறது. ஜஸ்வந்த் சுயேட்சையாக போட்டியிடும் பார்மர் தொகுதிக்கு, அடுத்த மாதம் 1ல், தேர்தல் நடக்க உள்ளது. இங்கு, ஜஸ்வந்தை எதிர்த்து, பா.ஜ., சார்பில், சோனா ராம் நிறுத்தப்பட்டுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 30, 2014 10:02 pm

உங்கள் தாயார் மீது நம்பிக்கையில்லையா? ராகுலுக்கு மோடி கேள்வி

பிஜாபூர் : குஜராத் மாநிலம் வளர்ச்சியில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது என்ற காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையிலான ராஜிவ் அறக்கட்டளை கூறியுள்ளதில் ராகுலுக்கு நம்பிக்கையில்லையா என பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொதுக்கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், பா.ஜ., என்ற பலூன், குஜராத் வளர்ச்சி என்ற பலூன் வெடித்து சிதறும் என கூறியிருந்தார். இதற்கு பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்துள்ளார். கர்நாடக மாநிலம் பிஜாபூரில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டு மோடி பேசினார்.

இந்த பேரணியில் மோடி பேசியதாவது : குஜராத் வளர்ச்சி என்பது பலூன் போன்றது என ராகுல் கருதினால், உங்கள் தாயார் மீது உங்களுக்கு நம்பிக்கையில்லையா என கேள்வி கேட்க விரும்புகிறேன். குஜராத் வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ளது என சோனியா தலைமையிலான ராஜிவ் அறக்கட்டளை அறிவித்துள்ளது. பலூன் பற்றி சோனியா பேசுவாரா? பலூன் பற்றிய அறிக்கையை சோனியா வெளியிடுவாரா? குஜராத் மக்கள் காங்கிரஸ் தலைவர்களையும், அவர்களின் பொய்யான வாக்குறுதிகள் அடங்கிய பலூனையும் கடந்த மூன்று சட்டசபை தேர்தல்களில் நிராகரித்துள்ளனர் என கூறினார்.

ராகுல் குஜராத்தை பற்றியே பேசுகிறார். தற்போது நடைபெறும் தேர்தல் குஜராத் அரசை தேர்ந்தெடுக்க நடக்கிறதா? குஜராத் முதல்வரை தேர்வு செய்ய நடைபெறுகிறதா? என கேள்வி எழுப்பிய மோடி, தற்போது நடைபெறும் தேர்தல் பிரதமரை தேர்வு செய்ய நடைபெறுகிறது. டில்லியில் மத்திய அரசை அமைக்கதேர்தல் நடைபெறுகிறது. எனவே மத்திய ஆட்சி பற்றி விவாதம் நடத்தப்பட வேண்டும். கடந்த 10 ஆண்டில் என்ன சாதனை செய்தீர்கள் என்பதை காங்கிரஸ் விளக்க வேண்டும் என கூறினார்.

ராகுலும், உங்கள் கட்சி தலைவர்கள் மற்றும் உங்கள் கட்சியை முதல்வர்கள் 18 பேரும், கடந்த 2002ம் ஆண்டு வந்தீர்கள். நிறைய பொய்கள் அடங்கிய பலூனை பறக்க விட்டீர்கள். ஆனால் மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த 2007 மற்றும் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதமும் இதே தான் நடந்தது. உங்கள் பொய்களை மக்கள் நம்பவில்லை. குஜராத் மக்கள் வளர்ச்சியை நம்புகிறார்கள். இதனால் அவர்கள் பா.ஜ.,வை தேர்வு செய்துள்ளனர் என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட வேலைவாய்ப்புகளை விட, வாஜ்பாய் ஆட்சியில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் இரட்டைஇலக்கத்தில் தொகுதிகளை பெற முடியாது. ஒரு சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றியே பெறாது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மக்களிடம் ஒரே மாதிரியான எண்ணம் உள்ளது என கூறினார்.

Sponsored content

PostSponsored content



Page 5 of 15 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக