புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10 
293 Posts - 42%
heezulia
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_m10பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்


   
   

Page 2 of 15 Previous  1, 2, 3 ... 8 ... 15  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 11:21 pm

First topic message reminder :

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 Gr0jENBiR6aUXea2MTWR+parlimentelection2014

 பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்?

தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது.

இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.  பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இதற்கிடையே வரும் 3-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 3:43 am

மோடி பிரதமராக வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தர்மபுரி: தர்மபுரியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. இந்திய அளவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரத்தை மீட்க நரேந்திர மோடி பிரதமராக வேண்டும். எதிர்காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும் என கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 3:44 am

நாட்டில் ஊழலை ஒழிக்க மோடியை தேர்வு செய்யுங்கள்: விஜயகாந்த் பேச்சு.

சிவகங்கை:“காங்.,- அ.தி.மு.க.,- தி.மு.க., ஆகிய கட்சிகளை வீட்டிற்கு அனுப்பாமல், துாங்கமாட்டேன்,” என, சிவகங்கை தேர்தல் பிரசாரத்தில், தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் பேசினார்.

பா.ஜ., வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து, சிவகங்கையில்,அவர் பேசியதாவது:இது மக்கள் கூட்டணி, வெற்றி கூட்டணி. உங்கள் ஓட்டு மோடிக்கு தான். சிவகங்கை, இன்றைக்கும் பின்தங்கியே உள்ளது. சுதந்திரம் பெற்ற காலம் முதல் ஏரி, குளம் வறண்டு, குடிநீர் கூட கிடைக்கவில்லை. ஆனால், மத்திய அமைச்சர் ஒருவர் இருப்பதாக பெயர் மட்டும் தான் உள்ளது. இத்தேர்தல் பிரசாரங்களில், அ.தி.மு.க.,- காங்., ஆகிய இரு கட்சிகளும் குறைகளை அடுக்கி கொண்டே செல்கின்றனர். இங்கு, எப்படி சிதம்பரம் ஜெயித்தார். ராஜகண்ணப்பனை, ஜெ., விட்டு கொடுக்க செய்து தான் ஜெயித்துள்ளார். அ.தி.மு.க., - காங்., இடையே தொடர்பு உள்ளது. இங்கு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில்லை. மானாமதுரையில், இது வரை ஸ்டீல் பேக்டரி திறப்பதாக சொல்லியும், திறக்கவில்லை. கிராபைட் ஆலை விரிவுபடுத்தும் பணி கிடப்பில் உள்ளது.

நன்கு படித்த சிவகங்கை இளைஞர்கள், பிழைப்பிற்காக வெளிநாடு, பிற மாநிலங்களுக்கு செல்கின்றனர்.அடிக்கடி சிவகங்கை வரும், நிதி அமைச்சர் சிதம்பரம்,
வங்கி, ஏ.டி.எம்.,களை மட்டுமே திறந்து வைப்பார்.இவை ஏழைகளுக்கு உதவுமா. நாட்டில், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. இதற்கு காரணம் ஜெ., மற்றும் காங்., அரசு தான். போலீசார், ஆளுங்கட்சிக்கு சாதகமாக உள்ளனர்.சிவகங்கை, சிங்கப்பூர் ஆக்குவேன் என்றார்கள். ஆனால், இன்றைக்கும், இந்த நகரம் குட்டிச்சுவராக தான் உள்ளது.இந்த முறை, சிதம்பரம் நிற்காமல், மகனை நிறுத்தியுள்ளார். தந்தையும், மகனும் அடித்த கொள்கைள் போதாதா?

2011 தேர்தலில், ஜெ., மற்றும் சிதம்பரத்தை நம்பி, இம்மாவட்ட மக்கள் ஏமாந்து விட்டீர்கள். 2016ல் தே.மு.தி.க., ஆட்சிக்கு வரும். நான் படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவேன். நாட்டிற்கு ஊழல் வேண்டாம். ஊழலை ஒழிக்க, நரேந்திர மோடியை தேர்வு செய்யுங்கள். கூட்டணிக்குள் சண்டை போடுகிறார்கள். நாங்கள் அப்படி இல்லை. இங்கிருந்து, இரவு 9 மணிக்கு மேல் பஸ் வசதியில்லை. காரைக்குடி- ராமேஸ்வரத்திற்கு சுற்றுச்சாலை திட்டம் கிடப்பில் உள்ளது.சிவகங்கை, மருத்துவ கல்லுாரியில் போதிய டாக்டர்கள் இல்லை. ஜெ.,ஹெலிகாப்டரில் பறக்கிறார். ரோட்டில் வந்தால் தானே ரோடு, சுகாதாரம் போன்று மக்கள் பிரச்னைகள் தெரியும். அ.தி.மு.க.,- தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும், மக்களை ஏமாற்றுகின்றனர். இதுபோதாதென, காங்., கட்சியும், மக்களை ஏமாற்றுகிறது. காங்.,- அ.தி.மு.க.,- தி.மு.க.,வை வீட்டிற்கு அனுப்பும் வரை, துாங்கமாட்டேன், என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 3:45 am

லோக்சபா தேர்தலில் போட்டியிட ஜெயலலிதாவுக்கு தைரியம் உள்ளதா? : பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

""பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பிரதமர் கனவில் உள்ள, ஜெயலலிதாவிற்கு, ஏதாவது ஒரு லோக்சபா தொகுதியில் போட்டியிட தைரியம் உள்ளதா?'' என, விஜயகாந்த் மனைவி பிரேமலதா கேள்வி எழுப்பினார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, திருவள்ளூர் (தனி) தொகுதிக்கு உட்பட்ட, பெரியபாளையத்தில், நேற்று தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். அப்போது, அவர் பேசியதாவது:

சகாப்தம் படைக்கும் : ஊழல் கட்சிகளுக்கு, சவுக்கடி கொடுக்கப்போகும் கூட்டணியாக, பா.ஜ., கூட்டணி அமைந்து உள்ளது. இக்கூட்டணி, லோக்சபா தேர்தலில் சகாப்தம் படைக்கும். அ.தி.மு.க., தி.மு.க.,வினர், மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தார்களே தவிர, அதை நிறைவேற்றவில்லை.

திருவள்ளூர் தொகுதி, அ.தி.மு.க., - எம்.பி., ஓட்டுக்கேட்க வந்தபோது, காலி குடங்களுடன், மக்கள் குடிநீர் கேட்டு போராடி, அவரை விரட்டி அடித்துள்ளனர். அனைத்து இடங்களிலும், குடிநீர் பிரச்னை உள்ளது. பா.ஜ., கூட்டணி, மாபெரும் வெற்றி அடையும்போது, பல ஆண்டுகால மக்கள் பிரச்னைக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்படும். அ.தி.மு.க.,வை, "டில்லி செங்கோட்டைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ்' என, முதல்வர் ஜெ., சொல்கிறார். ஆனால், ஜெயலலிதாவும், கருணாநிதியும், தங்கள் கட்சியின், பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கவில்லை. முதலில், தன்னை பிரதமராக முன்னிலைப் படுத்தி, கட்சியினரை பேனர் வைக்க சொன்னார் ஜெயலலிதா. ஆனால், அ.தி.மு.க.,விற்கு வெற்றி கிடைக்காது என, தெரிந்ததும், மத்திய அரசில், அ.தி.மு.க., அங்கம் வகிக்கும் என, மாற்றி பேசி வருகிறார். பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பிரதமர் கனவில் உள்ள, ஜெயலலிதாவுக்கு, ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட தைரியம் இருக்கிறதா? கனவு காணும் உரிமை, அனைவருக்கும் இருக்கிறது. ஆனால், ஜெயலலிதா கனவிற்கு மட்டும், அளவே இல்லாமல் போய்விட்டது.நாட்டில், காங்., அல்லது பா.ஜ., கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே, பிரதமராக முடியும். ஜெயலலிதா பிரதமர் கனவு காண்பது, வேடிக்கையாக உள்ளது. கடந்த, 10 நாட்களாக, ஜெயலலிதா, ஸ்டாலின், விஜயகாந்த் ஆகியோர், மக்களை சந்தித்து வருகின்றனர். இதில், யார் சொல்வது உண்மை; யார் சொல்வது பொய்; எதை நம்பவேண்டும்; எதை நம்பக்கூடாது என்ற குழப்பம், மக்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

பொய் வாக்குறுதிகள் : நல்லவர்களை தேர்ந்தெடுப்பதில், மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக, பொய் வாக்குறுதிகளை அ.தி.மு.க.,- - தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர். ஓட்டுக்கு பணம் தேவையா அல்லது நீண்ட கால தமிழக பிரச்னைகள் தீர வேண்டுமா என்பதை சிந்தித்து, மக்கள் ஓட்டளிக்க வேண்டும். மக்களுக்கு தரமான தண்ணீரை, இலவசமாக கொடுக்க வேண்டியது, அரசின் கடமை.
பாட்டிலில் தண்ணீரை அடைத்து, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யும் அவல ஆட்சி, தமிழகத்தில் தான் நடக்கிறது. தெரு, சந்து என, எல்லா இடத்திலும், "டாஸ்மாக்' கடைகளை திறந்து, மக்களை குடிக்க வைத்து, சீரழித்ததே, இந்த அரசின் ஒரே சாதனை. பா.ஜ., கூட்டணிக்கு, மக்கள் சிந்தாமல், சிதறாமல் அளிக்கும் ஓட்டே, நரேந்திர மோடியை பிரதமர் ஆக்கும். தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், நரேந்திர மோடி செய்து கொடுப்பார். ஜெயலலிதா, 45 நிமிடம் பிரசாரம் செய்வதற்காக, தமிழக பெண்கள், ஐந்து மணி நேரம் வெயி லில் காத்திருக்க வேண்டி உள்ளது. அவர் மட்டும், தனி விமானத்திலும், ஹெலிகாப்
டரிலும் வந்து செல்கிறார். இவ்வாறு, பிரேமலதா பேசினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 3:54 am

7 முறை வென்றும் டிக்கெட் மறுப்பு: அத்வானி ஆதரவு எம்.பி. போர்க்கொடி

குஜராத் மாநிலம் ஆமதாபாத் கிழக்கு தொகுதியில் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்ற பாரதீய ஜனதா எம்.பி. ஹரின் பதக்கிற்கு கட்சி டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக நடிகர் பரேஷ் ராவல் நிறுத்தப்பட்டுள்ளார்.

அத்வானியின் தீவிர ஆதரவாளர் என்பதால் ஹரின் பதக்கிற்கு டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில் ஆமதாபாத்தில் ஹரின் பதக் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “இந்த தேர்தலில் பாரதீய ஜனதா டிக்கெட் வழங்கும் முறை, தொண்டர்களை வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது. வெளியில் இருந்து வந்தவர்களுக்கு கட்சி டிக்கெட் வழங்குவது எனக்கு வருத்தம் அளிக்கிறது” என கூறினார்.

மேலும், “அத்வானி, சுஷ்மா சுவராஜ், ஜஸ்வந்த்சிங் ஆகியோர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். எனினும் எனது அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக அவர்கள் அறிவுரை ஏதும் கூறவில்லை. எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி எனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 3 நாளில் முடிவு எடுப்பேன்” எனவும் அவர் தெரிவித்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 3:57 am

40 தொகுதிகளையும் வென்று தாய்நாட்டை காப்போம்: கடலூரில் ஜெயலலிதா சூளுரை

முதலமைச்சர் ஜெயலலிதா இன்று கடலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழி தேவனை ஆதரித்து கடலூர் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளனர். மத்தியில் உள்ள சர்வாதிகார, ஊழல் ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும். தன்னலக்காரர்களுக்கு மக்களவை தேர்தலில் சவுக்கடி கொடுக்கவேண்டும்.

40 தொகுதியிலும் வெற்றிபெற வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்கவேண்டும். 40 தொகுதியிலும் வென்று தாய்நாட்டை காப்போம் என்று சூளுரைத்தார்.

மேலும், அதிமுக வேட்பாளர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழக நலன் பாதுகாக்கப்படும். திமுக ஆட்சியில் மின் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கவில்லை. விலைவாசி உயர்வுக்கு காங்கிரஸ், திமுகவே காரணம் என்று மத்திய அரசு மீதும், திமுக மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 3:58 am

மக்களவை தேர்தல்: தேமுதிக 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. வுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. முதல் கட்டமாக திருவள்ளூர், வடசென்னை, திருச்சி, மதுரை, நாமக்கல் ஆகிய 5 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டு இருந்தார்.

இதில் நாமக்கல் வேட்பாளர் என்.மகேஷ்வரன் உடல் நிலையை காரணம் காட்டி தேர்தலில் போட்டியிட மறுத்து விட்டார். இன்று நாமக்கல் உள்பட மீதம் உள்ள 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.

தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளரும் உயர் மட்டக்குழு உறுப்பினருமான எல்.கே.சுதீஷ் சேலம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் தொகுதியில் என்.மகேஷ்வரனுக்குப் பதில் எஸ்.கே.வேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2–வது வேட்பாளர் பட்டியல் விவரம் வருமாறு:–

1. கள்ளக்குறிச்சி – டாக்டர் வி.பி.ஈஸ்வரன் (மருத்துவர் அணி செயலாளர்)

2. திருப்பூர் – என்.தினேஷ் குமார் (திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்)

3. கரூர் – என்.எஸ்.கிருஷ்ணன் (கரூர் மாவட்ட செயலாளர்)

4. விழுப்புரம் (தனி) – கே.உமாசங்கர் (விழுப்புரம் தெற்கு மாவட்ட துணை செயலாளர்)

5. சேலம் – எல்.கே.சுதீஷ் (உயர்மட்டக்குழு உறுப்பினர், இளைஞர் அணி செயலாளர்)

6. மத்திய சென்னை – பேராசிரியர் ஜே.கா.ரவீந்திரன்

7. கடலூர் – பேராசிரியர் ஆர்.ராமானுசம் (ஆசிரியர்– பட்டதாரி அணி துணை செயலாளர்)

8. திண்டுக்கல் – ஏ.கிருஷ்ணமூர்த்தி (திண்டுக்கல் மாவட்டம்)

9. திருநெல்வேலி – எஸ்.சிவனணைந்த பெருமாள் (மராட்டிய மாநில செயலாளர்)

10. நாமக்கல் – எஸ்.கே.வேல் (வழக்கறிஞர் அணி துணை செயலாளர்)

ஏற்கனவே வெளியிடப்பட்ட 4 தொகுதி வேட்பாளர்கள் விவரம்:–

1. திருவள்ளூர்– வி.யுவராஜ்

2. வடசென்னை– எம்.சவுந்தரபாண்டியன்

3. மதுரை – டி.சிவமுத்துக்குமார்.

4. திருச்சி - விஜயகுமார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 24, 2014 7:43 am

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 103459460 
-
பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 MLoAdocPS4GpuOwNYvzk+ELARGE_20140324015808922854

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 24, 2014 8:50 am

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 MUHw55IQI9wflE7e3tmA+bharathi_1805282h.jpg.pagespeed.ic.t1uuRqexu0
--
மதுரை நாடாளுமன்ற தேர்தலில்
திருநங்கையான பாரதி கண்ணம்மா சுயேட்சையாக
போட்டியிடுகிறார்.

எம்.பி தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை
வேட்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
--

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 4:16 pm

பார்மர் தொகுதியில் சுயேச்சையாக போட்டி: ஜஸ்வந்த் சிங் வேட்பு மனு தாக்கல்

ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட ஜஸ்வந்த் சிங் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங், ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார்.

இதுவே தனது கடைசி தேர்தல் என்றும், தனது சொந்த ஊர் அமைந்துள்ள பார்மர் மாவட்டத்தில் போட்டியிட விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால், அவருக்கு பார்மர் தொகுதியை ஒதுக்க கட்சி மேலிடம் மறுத்து விட்டது. சமீபத்தில் காங்கி ரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த சோனாராம் சவுத்ரிக்கு அத்தொகுதியை ஒதுக்கப்பட்டது.

இதனால், அதிருப்தியடைந்த ஜஸ்ந்த் சிங், பார்மர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி, சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்தார்.

அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த 76 வயதான ஜஸ்வந்த் சிங், அத்தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 4:17 pm

ayyasamy ram wrote:பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள் - Page 2 MUHw55IQI9wflE7e3tmA+bharathi_1805282h.jpg.pagespeed.ic.t1uuRqexu0
--
மதுரை நாடாளுமன்ற தேர்தலில்
திருநங்கையான பாரதி கண்ணம்மா சுயேட்சையாக
போட்டியிடுகிறார்.

எம்.பி தேர்தலில் போட்டியிடும் முதல் திருநங்கை
வேட்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
--

யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்! ஆனால் டெபாசிட்டாவது கிடைக்க வேண்டும்!

Sponsored content

PostSponsored content



Page 2 of 15 Previous  1, 2, 3 ... 8 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக