புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10 
54 Posts - 49%
heezulia
குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10 
3 Posts - 3%
Shivanya
குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10 
12 Posts - 2%
prajai
குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10 
4 Posts - 1%
jairam
குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_m10குறுந்தொகையின் செல்வவளம்..5..!!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகையின் செல்வவளம்..5..!!!


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Fri Apr 26, 2013 12:24 pm

நண்பர்களே..!

நல்லொழுக்கம் அருகி வரும் காலம் இஃது !
ஒருவர் மீதான நமது மரியாதை பொதுவாக அவரின் செல்வ நிலையைக்கொண்டே அமைவது கண்கூடு ;
அடுத்து, அவரின் கல்வி அறிவு நிலை ; இவையெல்லாம் இருப்பினும் இல்லையெனினும் ,
நம் சமூகச் சூழலில், ஒருவரைப் பற்றிய மதிப்பீடு அவரின் பாடறிந்து ஒழுகும் பண்பிலும்
அவரின் நெறி தவறா ஒழுக்க நிலையையும் சார்ந்தே அமைகிறது ! - உள் மனதில் !!
நம்மை விட ஒருவரின் ஒழுக்க நெறி சிறந்ததாக இருப்பின் அவர் மீது ஒரு மட்டில்லாத மரியாதை
தோன்றுவது இயல்பு - சமயங்களில் பயம் கலந்த மரியாதை கூட .

இதனாற்றான் ஒருவனின் காதல் தோல்வியுறுமா..!?

ஒரு குறுந்தொகைப் பாடல் இது பற்றிப் பேசுகிறது ...மன, குண் நலன்கள் பற்றி உள ரீதியான ஒரு
ஆய்வை இப்பாடல் சாத்தியமாக்குகிறது..!

அதற்கான பின்புலத்தை சற்று பார்ப்போம்...

ஒழுக்க நெறியில் சிறந்த ஒரு மருத நில மாதர் திலகம் அவள்.
அவன் !? .. பண்பாட்டு நெறியிலும் நடத்தையிலும் குணநலன்களிலும் அவளுக்கு நிகரானவன் அல்லன்.
காதலுக்கு - அன்றும் , இன்றும் ,என்றும் - கண்ணில்லையே..!. இருவர்க்கும் இடையே காதல் முகிழ்த்து விடுகிறது.

சில காலம் களவில் ...
அவ்வப்பொழுது தலைவியின் ஈடற்ற ஒழுக்க நெறி குறித்து அவள் மீது அச்சம் கலந்த மரியாதையே மேலிடுகிறது !
அவளின் பண்பின் பேராற்றலால் நடுக்கமுறும் அவன் அவளைக் காண்பதையும் தவிர்க்கிறான்..
இன்னும் சின்னாட்கள் இப்படியே கழிகிறது.
ஆனாலும் தலைவியின் கவின்பெறு அழகைக் கண்ணால் பருக அவனுக்கு அவா மேலிடுகிறது ; நேரிடையாக அவளிடம்
செல்லவும் அச்சம் / தயக்கம் ; தோழியிடம் சொல்லி... புலம்பி... தலைவியைச் சந்திக்க அனுமதி வேண்டுகிறான்.
தோழியும் தலைவானுக்காகப் பரிந்துரைக்கிறாள் - தலைவியிடம்.
அந்தோ...!
என்ன வார்த்தை சொல்லி தலைவி வேதனையுறுகிறாள் - 'கழிந்ததே' எனச் சொல்லுகிறாளே..!

அவள் கூறுவதுதான் என்ன..!?

" என் தலைவன் இவ்வளவு காலம் எங்கிருந்தானாம் ? ம்ம் ... நம் மருத நிலத்தில் இருந்து, மீத்தொலைவில்
அமைந்த, மலைகள் இடை இட்ட நாட்டைச் சேர்ந்தவன் அல்லனே அவன் ; அல்லாது சற்றே தொலைவில்
மரங்களின் தலைகள் கூடத் தோன்றாத ஊரினனும் அல்லவே அவன் ; இதோ , விரைவில் அணுகி சந்திக்கக்கூடிய
அருகமைந்த ஊர்தானே அவனது ! அப்படியிருந்தும் எம்மை அவர் நாடுவதில்லையே , இப்போதேல்லாம்.
ஏன் தெரியுமா , தோழி ! அச்சம் !! என் நற்றொழுக்கச் சிறப்பில் அச்சம் !!! தான் எனக்கு ஈடில்லை என்ற பயம்..
இதனால், அவன் என்னைக் காணவரும் போதெல்லாம் ,முனிவனது தவச்சாலையில் அச்சம் மேலிட்ட பணிவோடு
நடமிடும் பலரைப்போலவே நடந்து கொள்வான் ; தன் நெஞ்சில் அன்பைத் தேக்கியவன் அல்லன் அவன் ; அன்பை
நீக்கியவன் ! நானும் முயன்றேன் , தோழியே . அற்றை நிலையில் - பண்டொரு காலை - என் தலைவன் மீது
பரிதலுடன்தான் இருந்தேன் ; யாது பயன் !? அவன் மரியாதைதான் எனக்குக் கிட்டிற்று - கட்டற்ற அன்பல்லவே !
அதனால் அவன் மீதான என் பரிதலும் இப்பொழுது கழிந்ததுவே !
"

எனக் கலங்குகிறாள் அறிவான அந்தப் பேதை..!

அவனை ,அவள் நிராகரித்தே விட்டாளோ..!?

எனக்கு தோன்றுவது இது . அகத்துறை சங்கப்பாடல்கள் காதலின் ஒரு குறிப்பிட்ட நேரத்திய
எண்ண அலைகளையே வண்ணப்படுத்துகிறது ... இந்தக் காதலனும் தன் குணநலத்தை
தலைவிக்கு ஏற்றதாய் மாற்றி சீரிய கற்பு வாழ்க்கைக்கு அடி கோலியிருப்பான் என
நான் நம்புகிறேன் ...நீங்கள்...?

பாடல் இதுதான் :

மலையிடை யிட்ட நாட்டரு மல்லர்
மரந்தலை தோன்றா ஊரரு மல்லர்
கண்ணிற் காண நண்ணுவழி யிருந்தும்
கடவுள் நண்ணிய பாலோர் போல
ஒரீஇ ஒழுகும் என்னைக்குப்
பரியலென் மன்யான் பண்டொரு காலே.


இப்பாடலைப் படைத்தவர் : நெடும் பல்லியத்தனார்.

நண்ணு வழி - விரைந்து வரக்கூடிய இடத்து
கடவுள் - முனிவர்
நண்ணிய - அணுகிய
ஒரீஇ - நீங்கி
என்னைக்கு - என் தலவனுக்கு
பரியலென் - பரிதலையுடையேன்
மன் - கழிந்தது

அன்பன்,
சுந்தரம்


My earnest wish and appeal is that Tamils should not only study our ancient treasures , such as S'angam Literature , but also make efforts so that these treasures and the literary criticism on them are available in other major languages , say in French , in Chinese , in Spanish...

I hope this will not just remain my dream...

To induce the esteemed readers , I think it may not be out of place to give quotes from learned and reputed
researchers...

" These poets are represented ( if we deduct from the total the obviously younger poems which have made their wayinto final redaction of the older cycle ) by 26350 verses composed in the ahaval metre, the first and oldest
metrical pattern in Tamil prosody ; ahaval has no analogy in Sanskrit poetry and the nearest comparison is with
English blank verse. The style , diction and metrical perfection of this poetry suggest that it must have been preceded by a period of development of at least three to five centuries
"

குறுந்தொகையின் செல்வவளம்..!!!..6..[You must be registered and logged in to see this link.]

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Apr 26, 2013 1:53 pm

மிகவும் அருமை சுந்தரம் அவர்களே. தொடருங்கள். மகிழ்ச்சி

sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Fri Apr 26, 2013 6:42 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமை சுந்தரம் அவர்களே. தொடருங்கள். [You must be registered and logged in to see this image.]

அருமை ...ஓ.! மிகவும் அருமை எனச் சொன்னதற்கு மிக்க நன்றி..!
சுந்தரம்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Apr 26, 2013 7:01 pm

தங்களின் சிறப்பான பகிர்வு மன மகிழ்வை அளிக்கிறது.



கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 26, 2013 8:49 pm

தொடர் பதிவுக்கு மகிழ்கிறேன்... சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Sat Apr 27, 2013 7:51 am

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:தங்களின் சிறப்பான பகிர்வு மன மகிழ்வை அளிக்கிறது.

உங்களுக்கு என் நன்றி ..என் மகிழ்வும்தான்..
அன்பன்,
சுந்தரம்

sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Sat Apr 27, 2013 7:52 am

கவியருவி ம.ரமேஷ் wrote:தொடர் பதிவுக்கு மகிழ்கிறேன்... சூப்பருங்க

மிக்க நன்றி ...!
அன்பன்,
சுந்தரம்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக