புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10 
251 Posts - 52%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10 
18 Posts - 4%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Barushree
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 4 of 84 Previous  1, 2, 3, 4, 5 ... 44 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jan 25, 2013 11:23 am

THIYAAGOOHOOL wrote:தமிழ் களஞ்சியம் என்பது இது போன்ற பதிவுகளில் அறிய முடிகிறது. நன்றி அய்யா. தொடருங்கள். தொடர் 16 இரண்டு முறை இடம் பெற்றுள்ளது.
நன்றி தொடருங்கள் நண்பரே ,உங்களை போன்றோரின் ஊக்கங்கள் தான் சான்றோர்களின் பங்களிப்பை இன்னும் அதிகரிக்கும்
(நான் வெறும் அரட்டை குருப் தான் சோகம் )

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Jan 25, 2013 11:39 am

அருமையான பதிப்பு. சேவையும் கூட. வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 25, 2013 1:07 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (18)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“எவ்வயின் பெயரும் வெளிப்படத் தோன்றி
அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப” (வேற்றுமையியல் 7)

- இந் நூற்பாவிற்கு முன் இரு நூற்பாக்களில் , தனிப் பெயரையும், தொகைப் பெயரையும் எழுவாய்’ என அறிமுகப்படுத்தினார்.

அது, இது,அவள்,அவர்கள் – தனிப் பெயர்கள்

நரிப் பல், ஆட்டு வால் , யானத் தந்தம் – தொகைப் பெயர்கள்


இப் பெயர்களை எழுவாயாக அமைத்துத் தொடர்களை எழுதும்போது ,இவைகளைத் தனியாக எடுத்துப் பார்த்தாலும் எழுவாய் இலக்கணத்திற்கு உட்பட்டே நிற்கவேண்டும்! இதுவே ‘செவ்விது’ என்கிறார் தொல்காப்பியர்!

1. ‘அது வந்தது’ –இதிலுள்ள ‘அது’ என்ற எழுவாய் ,எழுவாய்க்குரிய ‘வேற்றுமை ஏற்கவேண்டும்’என்ற விதிக்கு உட்பட்டு , ‘அதனை’ , ‘அதற்கு’ என்றெல்லாம் ,தனியே (‘வெளிப்படத் தோன்றி’)வேற்றுமை வேர்றுமை ஏற்கும்!

2. ‘அவர்கள் வந்தார்கள்’ –இதிலுள்ள ‘அவர்கள்’ என்ற எழுவாய், ‘அவர்களை’, ‘அவர்களுக்கு’ என்றெல்லாம் தனியாக நின்று வேற்றுமை ஏற்கும்!

3. ‘நரிப்பல் அரியது’- இதிலுள்ள எழுவாயான ‘நரிப்பல்’ தனியே ‘நரிப்பல்லை’,‘நரிப்பல்லுக்கு’ என்றெல்லாம் வேற்றுமை ஏற்கும்!

மேல் மூன்று எடுத்துக்காட்டுக்களிலும் எழுவாய் பயின்றது ‘செவ்விது’!

ஈகரை படித்தேன்’ –இதில் ‘நான்’ என்ற எழுவாய் மறைந்து வருகிறது! இது செவிக்கு வந்தாலும் ,கருத்துக்குப் புலப்படுகிறது! இங்கே ‘நான்’ என்பதும், எழுவாய் இலக்கணப்படி ,தனியே, வேற்றுமை எற்கும்:-

நான் + ஐ = என்னை (நான் - என் + ஐ = என்னை )

நான் +கு = எனக்கு (நான் - என் + கு = எனக்கு)

நான் + ஆல் = என்னால் (நான்- என் +ஆல் = என்னால்)

எனவே தோன்றா எழுவாயும் ‘செவ்விது’!

தோன்றா எழுவாய் செவ்விது அல்ல எனச் சிலர் கூறுவர்! தோன்றா எழுவாயை ஒதுக்கினால் தமிழின் கட்டமைப்பே போய்விடும்! தொடர்களை நம் விருப்பப்படிக் கையாளமுடியாது!

இங்கே நமக்கு ஓர் ஐயம் எழுகிறது ! - ‘எல்லா எழுவாயுமே தனிநிலையில் வேற்றுமை ஏற்கத்தானே செய்யும்?’

இதற்கு விடை தருகிறார் இளம்பூரணர் !

சில எழுவாய்களை வேற்றுமைப்படுத்த முடியாது என்கிறார் அவர்!

‘நீயிர் +ஐ = நீயிரை ’ என வராது என்கிறார் அவர்.

‘நீயிர்’ என்பதே ‘நும்’மிலிருந்து வந்ததாகையால் ,வேறொரு திரிபை அது ஏற்காது என்பது அவர் கருத்து .

* * *.



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 26, 2013 10:31 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (19)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுள் பயின்றவை நாடுங் காலை” (அகத்திணையியல் 3)

- இதில் கூறப்பட்டுள்ள ,

முதல் – நிலம் , பொழுது முதலியன.

கரு – பறவை , உணவு முதலியன.

உரி – ஊடல் ,புணர்தல் முதலியன .

இந்த மூன்றும் ‘முறைசிறந்தனவே’ என்று தொல்காப்பியர் கூறுவதால், ‘முதலைவிடக் கரு சிறந்தது ,கருவைவிட உரி சிறந்தது ’என்று ஆகிறது.

எதைவைத்து இப்படிச் சொல்கிறீர்கள்?- என்று தொல்காப்பியரிடம் கேட்டால் , “பாடல்களை வைத்துச் சொல்கிறேன் !” என்கிறார்.

‘பாடலுள் பயின்றவை நாடுங் காலை’ என்பதற்கு இதுதானே பொருள்?

தொல்காப்பியருக்கு முன்பே பல அக நூற்கள் இருந்தன என்பதற்கு இந்த இடம் சான்று!

அகப் பாடல்களை எடுத்துக்கொண்டால்,அதற்கு உயிர் நாடி எது?

பாடல் யார் குரலாக வருகிறதோ அவரின் மன எழுச்சிதான் உயிர் நாடி!

அம் மன எழுச்சிதான் உரிப்பொருள் !

பல்வேறு வட்டார மக்களின் சிறப்பான மன எழுச்சிகளை யெல்லாம் தொகுத்து வகுத்தால் , ஊடல் , பிரிதல் , புணர்தல் , இரங்கல் , இருத்தல் என்ற ஐந்திற்குள் அவை அடங்கிவிடுகின்றன !

அஃதாவது,

முதற் பொருள் – எல்லோர்க்கும் பொது ; அடிப்படை (முதல்)

கருப் பொருள் – எல்லோர்க்கும் பொது (solid substances)

உரிப்பொருள் – குறிப்பிட்ட அந்தத் தலைவன் தலைவியருக்கு என்று தனியாக அமைந்த (உரிமை பூண்ட) ,பொருள் (matter of concern) .

ஆகவே, ‘உரிப்பொருள் ’ என்றால் என்னவோ ஏதோ என்று நினைத்துவிடாநீர்கள்!

“சரி ! குறிஞ்சி நிலத்தின் உரிப்பொருள் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் என்கிறார்கள்! அப்படியானால் மற்ற நிலத்தவர்கள் புணரமாட்டார்களா? ” –உங்கள் வினா!

நல்ல கேள்வி!

மலையும் மலை சார்ந்த இடமும் கொண்ட அந்த மலைப்பாங்கான நிலத்தில் பல்வேறு மன எழுச்சிச் செயல்கள் நடக்கும்தான்! ஆனால் புலவனைப் பாடத்தூண்டும் மன எழுச்சி , குறிஞ்சியைப் பொறுத்தவரை,புணர்தலும் அதனைச் சார்ந்தவைகளுமே!

தலைவியைப் பிரிந்துபோகும் தலைவன் பாலை நிலத்தின் வழியே போவது ,பிற நிலத்து வழியே போவதினும் குறிப்பிடத் தக்கதுதானே? எனவேதான் பாலையின் உரிப்பொருள் ‘பிரிதலும் பிரிதல் நிமித்தமும்’ என்றனர்!

இதனைப்போலவே, பிற நிலங்களின் உரிப்பொருள்களும் சிறப்பு கருதியே வகுக்கப்பட்டுள்ளன!
விடை கிடைத்ததா?

* * *.



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 27, 2013 9:40 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (20)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

‘செல்வி படிக்க விரும்புகிறாள்’ – இத் தொடரின்படிப், படிக்க விரும்பியது செல்வியா? அவளுடைய தாயா?

‘செல்வி ,தான் படிக்க விரும்புகிறாள்’ – என்றும் பொருள் கொள்ள முடிகிறது;செல்வி படிக்கவேண்டுமென்று அவளின் தாய்தான் விரும்புகிறாள் எனவும் பொருள் கொள்ள முடிகிறதே?

எது சரி?

தொல்காப்பியரிடம் கேட்டால் ,“ இரண்டுமே சரிதான் ” என்கிறார் ! :-


“இதுசெயல் வேண்டும் என்னும் கிளவி
இருவயின் நிலையும் பொருட்டா கும்மே
தன்பா லானும் பிறன்பா லானும் ” (வினையியல் 46)

‘இதுசெயல் வேண்டும் என்னும் கிளவி’ – ‘படிக்க வேண்டும்’ , ‘படிக்க விரும்புகிறார்’ என்பன போன்ற சொற்கள். ‘தன்பாலானும் பிறன்பாலானும்’- கூறுவோன் கூற்றாகவும், வேறொருவன் கூற்றாகவும் .

மேற்கண்டவாறு இரு வகைகளிற் பொருள் கொள்ள இடந்தந்த இலக்கண நுட்பத்தை விளக்குகிறார் நச்சினார்க்கினியர்!

அவர் கருத்துப்படி,

1. ‘செல்வி ’ எனும் எழுவாய் ,நேரே சென்று ‘விரும்புகிறாள்’ என்ற பயனிலை கொள்வதால் – தன்வினைப் பொருள் ஏற்படுகிறது.

2. ‘செல்வி ’ எனும் எழுவாயோடு படித்தல் எனும் தொழிற்பெயர் சேர்ந்துகொண்டு, அதன்பிறகு ‘விரும்புகிறாள்’ என்ற பயனிலை கொள்வதால் –பிறவினைப் பொருள் ஏற்படுகிறது.

இவ்வாறு தமிழில் சில சிக்கலான இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன!

தமிழில் மட்டுமல்ல! உலகத்து எல்லா மொழிகளிலும் இதுபோன்ற சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன!

ஏன் ?

ஏனெனில், மொழி என்பது பல்வேறு காலக்கட்டங்களில் ,பல்வேறு உணர்ச்சி அடிப்படைகளில் மொழியப்படுவதாகும்! யாரும் உட்கார்ந்து ஆலோசித்து , “ நான் இந்த மொழியை உருவாக்கிவிட்டேன்; நாளைக் காளை பத்து மணிக்கு இதனை வெளியிடுகிறேன்! ” என்று கூறமுடியாது!எனவேதான் எந்த மொழியிலும் சிறு சிறு இடைவெளிகள் இருக்கும் என்று கூறமுடிகிறது !



* * *.




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 28, 2013 8:18 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (21)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“ பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்
பொருள்வேறு படாஅது ஒன்றா கும்மே ” (கிளவியாக்கம் 33)

- இந் நூற்பாவை எடுத்துக்காட்டுகள்வழி விளக்கலாம்.

‘பப்பாளி வாங்கி வந்தார் ; அது சுவையாக இருந்தது’ – இங்கே‘அது’ என்பது பப்பாளியைச் சுட்டுகிறதல்லவா? அதனால் ‘அது’ என்பது ‘சுட்டுப்பெயர்’.

தொல்காப்பியர் ‘பொருளொடு புணராச் சுட்டுப் பெயர்’ என்றல்லவா கூறுகிறார்?

‘பொருளொடு புணர்ந்த சுட்டுப் பெயர்’ எனத் தனியாக ஒன்று உள்ளதா?


‘அந்தப் புத்தகம்’ – இங்கு ‘அந்த’, பொருளொடு புணர்ந்த சுட்டுப் பெயர்; ‘அந்த’ என்பதுடன் அருகிலேயே ‘புத்தகம்’ ஒட்டிக்கொண்டு நிற்பதைப் பாருங்கள்!

‘ஊரிலிருந்து மாடு வாங்கி வந்தார் ; அது பால் கறக்கவில்லை’ –இங்கு ‘அது’ பொருளொடு புணராச் சுட்டுப் பெயர்.‘அது’ என்பதற்கு அருகில் மாட்டைக் காணோம்; மாடு எங்கோபோய் நிற்கிறது!

பொருளொடு புணராச் சுட்டுப் பெயராக இருந்தாலும் ,வேறு ஒரு பொருளை அது குறிக்காது; தொடரில் முன் வந்த பொருளையே (மாட்டையே) குறிக்கும்.இதனைத்தான் மேல் நூற்பாவில் தொல்காப்பியர் விளக்கினார்.

சுட்டுப் பெயரைப் pronoun என்பர்.

தமிழில், ‘பிரதி பெயர்ச் சொல்’, ‘பதிலிப் பெயர் ’என்றெல்லாம் குறிப்பர்.

இந்த நூற்பாவிற்கு அடுத்து,

“ இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க் கிளவியும்
வினைக்கொருங் கியலுங் காலந் தோன்றின்
சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்
இயற்பெயர் வழிய என்மனார் புலவர் ” (கிளவியாக்கம் 34)

- என்கிறார் தொல்காப்பியர்.

இதன்படி,

‘ சுமதி திறமையானவள்; அவள் தேர்வில் வெற்றி பெறுவாள் ’ √

‘அவள் தேர்வில் வெற்றி பெறுவாள்;சுமதி திறமையானவள்’ ×

- என்று ஆகும்.

அஃதாவது , இயற்பெயரை முன்னே சொல்லிவிட்டுப் பின்வரும் இடத்தில்தான் சுட்டுப் பெயரைக் கூறவேண்டும் என்று ஆகிறதல்லவா?

இந்தத் தொடர் நுட்பங்களைத்தான் மொழியியலார் (Linguists), SYNTAX
என்று இன்று புதிதாகக் கண்டுபிடித்துள்ளதுபோல ஓதுகிறார்கள் !

தொல்காப்பியப் புதையலை நாம் வெளிக் கொணராம லிருப்பதே இதற்குக் காரணம்! எனவேதான் ‘ தொடத் தொடத் தொல்காப்பியம்’!

* * *




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 29, 2013 8:54 pm



தொடத் தொடத் தொல்காப்பியம் (22)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“ ... ... ... ...
ஊரது சார்வும் செல்லும் தேயமும்
ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும்
புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமொடு
அழிந்துஎதிர் கூறி விடுப்பினும் ஆங்குஅத்
தாய்நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினும்
... ... ... ...
கண்டோர் மொழிதல் கண்டது என்ப ” (அகத்திணையியல் 40)

- இதில் ஓர் உருக்கமான சித்திரம் உள்ளது!

காதலர் இருவர் வீட்டைவிட்டுப் பிரிந்து வேற்றூர் நோக்கி நடந்து செல்கின்றனர் ! அப்போது வழியில் சிலர் அவர்களைக் காணுகின்றனர்!
அவர்களிடம் காதலர் ,வழிபற்றிக் கேட்கவே ,நிலையைப் புரிந்துகொண்ட அவர்கள் ,“ இன்னின்ன பாதையில் போனால் இன்னது வரும் ; நீங்கள் இந்த வழியாகப் போகலாம்! கொஞ்ச தூரத்தில் வருவது இன்ன ‘ஊர்’! அது இன்ன‘தேயத்’தைச் சேர்ந்தது! ” என்று அவர்களது நிலைக்குத் தாமும் வருந்திக் கூறினர்! காதலர் சில வினாக்களைக் கேட்க, அவற்றுக்கு அப் பெரியோர் ‘எதிர்’கூறினர்! காதலர் அவர்கள் வழியில் சென்றபின், காதலியின் தாய் பதறிக்கொண்டு அங்கு வந்தாள்! அத் தாய்க்கு நடந்ததைக் கூறி ,“இனிமேல் நீங்கள் விரட்டிச் சென்று பயனில்லை ! அவர்கள் மணம் முடித்துக்கொண்டு உங்கள் வீடு திரும்புவர்! நீங்கள் அமைதியாகப் போங்கள்!”என்று திருப்பி அனுப்பினர் அப்பெரியோர்!

இவையெல்லாம் பிரிந்து செல்லும் காதலரைக் ‘கண்டோர் ’மொழிதல் ஆகும்!

இந்தச் சித்திரத்தைக் காட்டிவிட்டுத் தொல்காப்பியர் ,“ இவையெல்லாம் இலக்கியங்கள் கண்டவை!” என முடிக்கிறார் !

இலக்கியங்களை அவர் மேற்கோள் காட்டினாலும் ,அவர் வரைந்த ஓவியம் கற்பனை அல்ல! கதலர் நடந்து சென்றதைப் பார்த்தோமல்லவா? அது கற்பனையல்ல என்பதற்கு நானே சான்று! 1970 இல் சிவகாசியைவிட்டுக் காதலர் இருவர் மதுரைக்குப் பேருந்தில் வந்துவிட்டனர்; அதற்கு மேல் செல்வதற்குக் காசில்லை! வேறு வழியில்லாமல் ,கரைக்குடி உறவினர் வீட்டுக்குப் போகலாம் என்று மதுரையிலிருந்து காரைக்குடிக்கு மேலூர் ,திருப்பத்தூர், குன்றக்குடி வழியாக நடந்தே வந்துவிட்டனர்!1970இலேயே இப்படி என்றால், கி.மு.1000இல்?

எனவேதான், கி.மு.1000க்கு முற்பட்ட தமிழக நிலவியல் (Geography) வரலாற்றையும் சமுதாய வரலாற்றையும் தாங்கிநிற்கும் அரிய ஆவணமாக இதனைப் பார்க்கவேண்டும்!

மேல் நூற்பாவில் ‘செல்லும் தேயமும்’ என்கிறார் தொல்காப்பியர் !

தேயம் – நாடு

இன்று ‘நாடு’ என்றால் Country ; பழந் தமிழகத்தில் இப்பொருள் இல்லை ! இன்றும் ‘செட்டிநாடு’, ‘வருஷநாடு’ என்றெல்லாம் பேசுகிறோம் !இது கி.மு.1000க்கு முன்பிருந்தே வரும் மரபு என்பதற்கு மேல் நூற்பா சான்று!

‘எதிர்கூறி’ என்றொரு ஆட்சியையும் மேல் நூற்பாவில் பார்த்தோம்!

எதிர்கூறி – பதில் கூறி ; ‘எதிர்த்துக் கூறி’ என்பது பொருளல்ல!

தொல்காப்பியர் காலத்துத் தமிழ்ச் சொற்கள் பல பொருள் மாறி இன்று வழங்குகின்றன என்பதற்கு இந்த இடம் ஒரு சான்று!

‘பதில் என்ற சொல்லே தொல்காப்பியத்தில் வரவில்லை!

‘எதிர்’ என்ற சொல் பல இடங்களில் தொல்காப்பியத்தில் வருகிறது; ஆனால், எல்லா இடங்களிலும் பதில் என்ற பொருள்தான் இருக்கிறதா என்றால் இல்லை ! ‘முன்னே’ , ‘பொருந்துகின்ற’, ‘மறுபாடு’, ‘எதிர்காலம்’ ,‘எதிர்ப்படுதல்’ என்ற பொருள்களில்தான் வருகின்றன! ஓரிரு இடங்களில்தான் ‘எதிர்’ என்ற சொல் தொல்காப்பியத்தில் ‘பதில்’ என்ற பொருளில் வருகிறது!

மேல் நூற்பாவைப் படித்ததும் , “தொல்காப்பியத்தை இலக்கணத்திற்காகப் படிப்பதா? இலக்கியத்திற்காகப் படிப்பதா?” என்ற வியப்பு ஏற்படுகிறதல்லவா?
* * *.




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jan 30, 2013 8:26 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (23)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

ஒருவர் உள்ளங்கையில் ஒரே ஒரு கடுகை வைத்துக்கொண்டு ,“கடுகுதானே இது ?” என்கிறார்!

இன்னொருவர் ஒரு மூட்டைக் கடுகை வாங்கிவிட்டுக் “கடுகு வாங்கிவந்தேன்” என்கிறார்!

முதல் தொடரில், ஒரே ஒரு கடுகு ! அதற்கும் ஒருமையில்தான் ‘கடுகு’ என்ற சொல் வந்தது !

இரண்டாம் தொடரில் ஒரு மூட்டைக் கடுகு ! அதற்கும் ஒருமையில்தான் ‘கடுகு’தானா?

ஒருமை , பன்மை என்ற கணக்கு இல்லையா?

தொல்காப்யத்தில் ஒருமை, பன்மை வேறுபாடு இல்லாமல் கூறுவதற்கு விதி இருக்கிறதா?

உள்ளது! :-

“ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி
பன்மைக்கு ஆகும் இடனுமா ருண்டே” (எச்சவியல் 65)

இந்த விதிப்படியேதான் மேல் ‘கடுகு’த் தொடர்கள் அமைந்தன !

கீழ்வரும் தொடர்களைப் பாருங்கள் :-

1. இன்றைய மாணவன் எங்கே போகிறான்?

2. பெண்ணுக்கு இன்று என்ன தேவை?

3. மீனவன் இன்று அல்லாடுகிறான் !

-இவற்றில் எல்லாம் ஒருமைச் சொற்கள் , பன்மைப் பொருளைக் குறித்தன எனில் , இது நாம் மேலே கண்ட தொல்காப்பிய விதிக்கு உட்பட்டதுதான் என அறிகிறோம்!

‘இடனுமா ருண்டே’ – என்ற தொல்காப்பிய ஆட்சி வந்ததல்லவா? இதிலுள்ள ‘இடன்’ என்ற சொல்லைக் கவனித்தீர்களா?


‘இடன்’ என்பதா? ‘இடம்’ என்பதா?

இரண்டுமே சரிதான் !


‘இடன்’ – பழைய வழக்கு ; ‘இடம்’ – புதிய வழக்கு ; பொருள் ஒன்றுதான்!

‘இடம்பட வீடெடேல்’- என்ற மொழி , ‘இடம்’ என்ற சொல் செல்வாக்குப் பெற்றபின் வரையப் பெற்றதே !

‘இடன் - இடம் ’அமைப்பில், ‘கடன் – கடம் ’ என்ற சொற்களும் வந்துவிட்டன !

‘கடம்’ என்ற பிந்தைய வழக்கிலிருந்தே, ‘கடமை’ ,‘கடப்பாடு’ போன்ற சொற்கள் எழுந்தன!

பழைய வழக்கு அருகவே , புதிய வழக்கிலிருந்து காலத்திற்கு ஏற்பப் புதுச் சொற்கள் கிளைக்கின்றன!

* * *.




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 31, 2013 10:36 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (24)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“உய்த்துணர்வு இன்றித் தலைவரு பொருண்மையின்
மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும்”


- இது தொல்காப்பியம் !

ஒருவர் ஒரு செய்யுளை எழுதினால் ,“ இவர் என்ன கூறவருகிறார் ?” என்று படித்தவர் குழம்பக்கூடாது!

கூறவருவது பளிச்செனத் தெரிய வேண்டும்! ;கூறவந்த பொருள்தான் ‘தலைவரு பொருண்மை’ ! ‘ஆய்ந்து கண்டுபிடிக்க வேண்டிய நிலைக்குப் பாட்டு எழுதக் கூடாது’ என்கிறார் தொல்காப்பியர் !

இது முதலாவது !

இரண்டாவது ,‘மெய்ப்படச்’ செய்யுளை முடிக்கவேண்டும் !

மெய்ப்பட என்றால் ?

இளம்பூரணர் விளக்குகிறார் :-

“ செய்யுள் செய்வார் மெய்ப்பாடு தோன்றச் செய்தல் வேண்டும்!” (செய்.196இளம்.உரை)

அஃதாவது , மெய்ப்பட = மெய்ப்பாடு தோன்ற

‘மெய்ப்பாடு தோன்ற’ என்றால்?

செய்யுளைப் படித்ததும் ஒரு மெய்ப்பாடு – உணர்ச்சி – நம்மிடம் கொப்பளிக்க வேண்டும் !

அஃதாவது , சீற்றத்திற்குரிய பொருளை மையமாக வைத்துப் பாட்டு எழுதினால் , படிக்கும் நம்மிடம் சீற்றம் எழவேண்டும் !

நகைச்சுவைபடச் செய்யுள் எழுதினால் , அதைப் படித்தவர் குறைந்தது ஒரு புன்முறுவலாவது பூக்கவேண்டும்!

இதுவே ‘மெய்ப்பாடு தோன்றல்’!

“எல்லை நீத்த உலகங்கள் யாவையும் என் சொல்லினால் சுடுவேன் !” – என்று சீதை சீறியதாகக் கம்பர் பாடினாரே , அப்போது , சீதையின் மனநிலை நம்முள் இறங்குகிறதா இல்லையா ? இறங்குகிறது என்றால் ,நம்மிடம் மெய்ப்பாடு தோன்றுகிறது என்பது பொருள்! அப்படித்தான் மெய்ப்பாடு தோன்றச் (‘மெய்ப்பட’) செய்யுள் எழுதவேண்டும் என்பதே தொல்காப்பியர் பாடம் !

தொல்காப்பியர் ,‘ மெய்ப்படச் செய்யுளை எழுதவேண்டும் ’என்றாரல்லவா? இதுவே மேனாட்டாரின் இலக்கியத் திறனாய்வுக்கு (Literary criticism) முன்னோடி!

அஃதாவது , ஓர் இலக்கியம் எப்படி இருக்கவேண்டும் என்பதைக் கி.மு. ஆயிரத்திலேயே தொல்காப்பியர் வரையறுத்துவிட்டார் ; அதனை விரித்து ஆங்கிலேயர் நூல் எழுத , அதனை வாங்கி நாம் பாடமாக வைத்துவிட்டோம்!

* * *.




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Feb 01, 2013 10:16 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (25)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தலின்
அங்குஅதன் முதல்வன் கிழவ னாகும்” (களவியல் 49)

-இதில் வரும் ‘அம்பல்’ என்பது வேறொன்றுமில்லை ! “தெரியுமா சேதி? கோடி வீட்டுப் பையனுக்கும் இந்த லதாவுக்கும் தொடர்பாமே?” – என்று ‘குசுகுசு’ என்று சத்தம் வெளியே வராமல் காதோடு காதாக முணுமுணுக்கிறார்களல்லவா அதுதான் ‘அம்பல்’!

‘அலர்’ என்பது?

‘அலர்’ என்பது வெளிப்படையாக ஆங்காங்கே பலர், ஒருவன்-ஒருத்தியின் காதல் பற்றிப் பேசுதல்!

தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே தமிழகத்தில் இப் பழக்கம் இருந்துவருகிறது !

முதலில் அம்பலாக உருவாகும் பேச்சுப் பின்னர் அலராக மாறும் !

‘அம்பல்’ தோன்றாது ‘அலர்’ கிளம்பாது ! எப்படிச் செடியிலிருந்து மரம் உண்டாகுமோ அதுபோல அம்பலிலிருந்தே அலர் உண்டாகும் ! தொல்காப்பியர் நூற்பாவைப் பாருங்கள்! இச் சொற்களை அடுத்தடுத்து இதே வரிசையில் எழுதியிருக்கிறார் அவர் !

தொல்காப்பியர் கூறிய முதல் நுட்பம் இது !

காதலர் இருவரிடையே எழுந்த காதல் அலராலும் அம்பலாலும் வெளிப்படுகிறதல்லவா ? அதற்கு மூலக் காரணம் காதலன்தான் என்று தொல்காப்பியர் கூறுகிறார்!
கிழவன் – காதலன்.

தொல்காப்பியர் கூறிய இரண்டாம் நுட்பம் இது !

அஃதாவது , காதலன் தன் காதலியைப் பார்க்கப் ,பிறருக்குச் சந்தேகம் தட்டும் இடத்தில் நிற்பது , காதலியின் தம்பிக்கு மிட்டாய் வாங்கித்தருவது, முதலில் வாரத்திற்கு ஒருநாள்
காதலியைப் பார்க்க வருபவன் பிறகு ஒருநாளைக்கு இரண்டுமுறை மூன்றுமுறை என்று வரத்தொடங்குதல் முதலிய அவனது செயல்களால் அவர்தம் காதல் ஊரார்க்குத் தெரிந்துவிடும்!

ஏன்? காதல் வெளிப்படுவதற்குக் காதலி காரணமாக இருக்கக் கூடாதா?

இதற்கு இளம்பூரணர் விடை கூறுகிறார் !

ஆண்மீது சந்தேகம் கொள்ளுமளவுக்குப் பெண்மீது எடுத்த எடுப்பிலேயே சமுதாயம் சந்தேகம் கொள்ளாது !

இதுதான் இளம்பூரணர் விளக்கம்!

தொல்காப்பியர் ,மேலே பார்த்தவாறு,நுட்பமாகப் பாடுவதற்கும் இளம்பூரணர் அதைவிட நுணுக்கமாக உரை எழுதுவதற்கும் என்ன காரணம் ?

மக்களுக்கு அறிவு ஊட்டுவதுதான் ! மக்கள் எப்படி முறையாக வாழவேண்டும் என்று அவர்கள் கற்றுக்கொடுத்தார்கள்! வாழ்க்கைப் பாடம் கற்றுத்தருவதற்காகவே மனிதர்களிடையே நடக்கும் ஒவ்வொரு அசைவையும் தொல்காப்பியர் பாடினார் என நாம் அறிதல் வேண்டும்!

இறுதியாகத், தொல்காப்பியர் பயன்படுத்திய ‘முதல்வன்’ என்ற சொல் பற்றிச் சிறிது காணலாம்.

நூற்பாவில் , முதல்வன் = மூலக் காரணன்

இன்று ‘முதல்வன்’ என்றால் ‘முதலமைச்சர்’ , ‘முதல் ஆள் (first man)’, ‘முதன்மையானவன் (chief or principal person)’ ஆகியோரையே குறிக்கும் ; ஆனால் தொல்காப்பியர் காலத்தில் ‘மூலக் காரணன்’ என்ற பொருள் இருந்தது ! இது தொல்காப்பியத்தின் தொன்மையைக் காட்டும்!

‘முழுமுதல் கடவுள்’ என்பதில் , ‘முதல்’என்பதற்கு ‘மூலக் காரணன்’என்ற பொருள் இருப்பதைக் காணலாம் ! இத் தொடரும் மிகப் பழைய தொடர் என்பது நமது இந்த ஆய்வால் தெளிவாகிறதல்லவா?



* * *.




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 4 of 84 Previous  1, 2, 3, 4, 5 ... 44 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக