புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது
Page 9 of 10 •
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
First topic message reminder :
ரஷிய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுக்கத் தடை: சட்டம் நிறைவேற்றம்!
ரஷிய நாடாளுமன்றத்தின் மேல் சபை புதன்கிழமை இன்று ஒரு முக்கியமான சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. ரஷியக் குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுப்பதைத் தடை செய்யும் வகையில் இந்த சட்ட வடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரஷியர்கள் சிலருக்கு அமெரிக்க சட்டத்தின் படி தண்டனை பெற்றுத்தரும் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டதற்கு பதிலடியாக இந்த சட்ட வரைவு ரஷியாவால் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கருதப் படுகிறது.
இந்த மசோதா குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் கூறும்போது, இந்த சட்டத்துக்கு தான் கையெழுத்திடுவதாகவும், அமெரிக்க நிதியுதவியில் ரஷியாவில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளுக்கு விசா தடை விதிப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.
தினமணி
ரஷிய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுக்கத் தடை: சட்டம் நிறைவேற்றம்!
ரஷிய நாடாளுமன்றத்தின் மேல் சபை புதன்கிழமை இன்று ஒரு முக்கியமான சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. ரஷியக் குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுப்பதைத் தடை செய்யும் வகையில் இந்த சட்ட வடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரஷியர்கள் சிலருக்கு அமெரிக்க சட்டத்தின் படி தண்டனை பெற்றுத்தரும் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டதற்கு பதிலடியாக இந்த சட்ட வரைவு ரஷியாவால் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கருதப் படுகிறது.
இந்த மசோதா குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் கூறும்போது, இந்த சட்டத்துக்கு தான் கையெழுத்திடுவதாகவும், அமெரிக்க நிதியுதவியில் ரஷியாவில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளுக்கு விசா தடை விதிப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சிவா wrote://திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக, புதிய தலைமைச் செயலக கட்டடம் மருத்துவமனையாக மாற்றப்படுகிறது. இதனால், மக்கள் பணம் விரயமாகியுள்ளது//
இது உண்மைதானே! தலைவியின் தான்தோன்றித்தனமான முடிவுகளில் இதுவும் ஒன்று! பாதிப்பு மக்களுக்கே!
உண்மை தான் அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பிரதமர் கூட்டத்தில் அனைவரும் ஆங்கிலம் பேசுவர்......... இவரு...........
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
குடி படுத்தும் பாடு : 70 வயது மனைவியை கொலை செய்த 75 வயது கணவர்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே, மதுபானம் குடிப்பதற்காக, தங்க
தாலிச்செயினை அடகு வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த, மனைவி பெரியபிராட்டியை,
70, அரிவாளால் வெட்டிக்கொலை செய்த, கணவர் அர்ச்சுனன், 75, கைது
செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்,
மேலஆழ்வார் தோப்பைச் சேர்ந்தவர் அர்ச்சுனன். இவரது மனைவி பெரியபிராட்டி.
இவர்களுக்கு, 6 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும்,
திருமணமாகிவிட்டன. இளமை முதலே, எந்த வேலைக்கும் செல்லாமல், ஊர் சுற்றிய
அர்ச்சுனன், மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். திருமணத்தின்போது, மனைவி
பெரியபிராட்டி, சீதனமாக தந்த, 70 பவுன் தங்க நகை, தன் குடும்பத்திற்கு
சொந்தமான, 14 ஏக்கர் நிலத்தையும், அடகுவைத்து, விற்று, அதில் கிடைத்த
பணத்தில், அர்ச்சுனன் மதுகுடித்தார். வீட்டில் இருந்த, பட்டுப்புடவை
உள்ளிட்ட பொருட்களையும், குடும்ப சொத்துக்களையும், மதுகுடித்தே அவர்
அழித்துவிட்டதால், அவரிடம், பெரியபிராட்டி, சமீபகாலமாக பேசாமலிருந்தார்.
மனைவியை எழுப்பி பணம் கேட்பு : மேலஆழ்வார்தோப்பில்
இருவரும், அடுத்தடுத்த வீட்டில் வசித்தனர். அவ்வப்போது, வெளியூர்களிலுள்ள
மகன், மகள் வீட்டிற்கு பெரியபிராட்டி சென்றுவிடுவார். மகன்கள், செலவிற்கு
மாதந்தோறும் பணம் அனுப்பினர். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, வீட்டில்
தூங்கிக்கொண்டிருந்த பெரியபிராட்டியை, எழுப்பிய அர்ச்சுனன், மதுகுடிக்க
பணம் தேவைப்படுவதால், அடகு வைக்க, அவர் அணிந்திருந்த, ஏழுபவுன் தங்கதாலிச்
செயினை தருமாறு வற்புறுத்தினார். அதற்கு, அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே,
இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அர்ச்சுனன், அரிவாளால்,
பெரியபிராட்டி கை, தலையில் வெட்டினார். கை விரல் துண்டாகி, தலையில் பலத்த
காயமடைந்த பெரியபிராட்டி, அங்கேயே இறந்து போனார். அவரிடமிருந்து,
தாலிச்செயினை பறித்துக்கொண்டு, தப்பியோடிய அர்ச்சுனன், ஏரல் நகைக்கடையில்,
அதனை அடகு வைக்கும்போது, ஸ்ரீவைகுண்டம் போலீசார் அவரை, கைது செய்தனர்.
குடிக்கக் கூடாது என கண்டித்த மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்
அன்னூர், : கோவை அருகே, அன்னூரில் குடிப்பதை கண்டித்த மனைவி மீது,
மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவரை, போலீசார் தேடி வருகின்றனர். கோவை
மாவட்டம், அன்னூர், கெம்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் வரதராஜ், 34;
பெயின்டர். இவரது மனைவி முருகேஸ்வரி, 30. இவர்களுக்கு நான்கு மற்றும்
ஒன்றரை வயதில் இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் 2008ல் திருமணம் நடந்தது.
எட்டு மாதங்களுக்கு முன், கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து, முருகேஸ்வரி, திண்டுக்கல் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள
தாய் வீட்டுக்கு சென்று விட்டார். ஆறு மாதங்களுக்கு முன், கணவன் வரதராஜ்,
மாமனார் வீட்டுக்குச் சென்று, இனி தகராறு செய்ய மாட்டேன் என்று கூறி,
மனைவியை அழைத்து வந்தார்.
நேற்று முன்தினம், கெம்பநாயக்கன்பாளையம் வீட்டில் இருந்து அலறல் சத்தம்
கேட்டது. அருகில் இருந்தவர்கள் பார்த்தபோது, முருகேஸ்வரி தீக்காயங்களுடன்
உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். கணவர் வரதராசும், மற்றவர்களும்,
முருகேஸ்வரியை, கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்
சேர்த்தனர். அங்கு,
முருகேஸ்வரி போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம்:
கணவர் வரதராஜை மது குடிக்க வேண்டாம் என, பல முறை கூறினேன். ஆனால் கணவர்
திருந்தவில்லை. வேலைக்கு போகாவிட்டாலும் பரவாயில்லை. குடிக்காமல் வீட்டில்
இருந்தால் போதும் என்றும் கூறினேன். கடந்த 6ம் தேதி, "இன்றாவது குடிக்காமல்
வேலையிலிருந்து வீட்டுக்கு வா' என்று கூறினேன். "நான் அப்படித்தான்
குடிப்பேன்' என்று கூறி, வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் கேனை திறந்து, என் மீது
ஊற்றினார். பின்னர் நெருப்பு பற்ற வைத்து விட்டார். இவ்வாறு, முருகேஸ்வரி
வாக்குமூலத்தில் தெரிவித்தார். முருகேஸ்வரியின் தாடையில் துவங்கி, நெஞ்சு,
வயிறு உள்ளிட்ட பகுதிகளில் 70 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மனைவியை தீ
வைத்து எரித்துக் கொல்ல முயன்ற கணவனை, போலீசார் தேடி வருகின்றனர்.
-தினமலர்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே, மதுபானம் குடிப்பதற்காக, தங்க
தாலிச்செயினை அடகு வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த, மனைவி பெரியபிராட்டியை,
70, அரிவாளால் வெட்டிக்கொலை செய்த, கணவர் அர்ச்சுனன், 75, கைது
செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்,
மேலஆழ்வார் தோப்பைச் சேர்ந்தவர் அர்ச்சுனன். இவரது மனைவி பெரியபிராட்டி.
இவர்களுக்கு, 6 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும்,
திருமணமாகிவிட்டன. இளமை முதலே, எந்த வேலைக்கும் செல்லாமல், ஊர் சுற்றிய
அர்ச்சுனன், மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். திருமணத்தின்போது, மனைவி
பெரியபிராட்டி, சீதனமாக தந்த, 70 பவுன் தங்க நகை, தன் குடும்பத்திற்கு
சொந்தமான, 14 ஏக்கர் நிலத்தையும், அடகுவைத்து, விற்று, அதில் கிடைத்த
பணத்தில், அர்ச்சுனன் மதுகுடித்தார். வீட்டில் இருந்த, பட்டுப்புடவை
உள்ளிட்ட பொருட்களையும், குடும்ப சொத்துக்களையும், மதுகுடித்தே அவர்
அழித்துவிட்டதால், அவரிடம், பெரியபிராட்டி, சமீபகாலமாக பேசாமலிருந்தார்.
மனைவியை எழுப்பி பணம் கேட்பு : மேலஆழ்வார்தோப்பில்
இருவரும், அடுத்தடுத்த வீட்டில் வசித்தனர். அவ்வப்போது, வெளியூர்களிலுள்ள
மகன், மகள் வீட்டிற்கு பெரியபிராட்டி சென்றுவிடுவார். மகன்கள், செலவிற்கு
மாதந்தோறும் பணம் அனுப்பினர். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, வீட்டில்
தூங்கிக்கொண்டிருந்த பெரியபிராட்டியை, எழுப்பிய அர்ச்சுனன், மதுகுடிக்க
பணம் தேவைப்படுவதால், அடகு வைக்க, அவர் அணிந்திருந்த, ஏழுபவுன் தங்கதாலிச்
செயினை தருமாறு வற்புறுத்தினார். அதற்கு, அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே,
இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அர்ச்சுனன், அரிவாளால்,
பெரியபிராட்டி கை, தலையில் வெட்டினார். கை விரல் துண்டாகி, தலையில் பலத்த
காயமடைந்த பெரியபிராட்டி, அங்கேயே இறந்து போனார். அவரிடமிருந்து,
தாலிச்செயினை பறித்துக்கொண்டு, தப்பியோடிய அர்ச்சுனன், ஏரல் நகைக்கடையில்,
அதனை அடகு வைக்கும்போது, ஸ்ரீவைகுண்டம் போலீசார் அவரை, கைது செய்தனர்.
குடிக்கக் கூடாது என கண்டித்த மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்
அன்னூர், : கோவை அருகே, அன்னூரில் குடிப்பதை கண்டித்த மனைவி மீது,
மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவரை, போலீசார் தேடி வருகின்றனர். கோவை
மாவட்டம், அன்னூர், கெம்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் வரதராஜ், 34;
பெயின்டர். இவரது மனைவி முருகேஸ்வரி, 30. இவர்களுக்கு நான்கு மற்றும்
ஒன்றரை வயதில் இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் 2008ல் திருமணம் நடந்தது.
எட்டு மாதங்களுக்கு முன், கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து, முருகேஸ்வரி, திண்டுக்கல் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள
தாய் வீட்டுக்கு சென்று விட்டார். ஆறு மாதங்களுக்கு முன், கணவன் வரதராஜ்,
மாமனார் வீட்டுக்குச் சென்று, இனி தகராறு செய்ய மாட்டேன் என்று கூறி,
மனைவியை அழைத்து வந்தார்.
நேற்று முன்தினம், கெம்பநாயக்கன்பாளையம் வீட்டில் இருந்து அலறல் சத்தம்
கேட்டது. அருகில் இருந்தவர்கள் பார்த்தபோது, முருகேஸ்வரி தீக்காயங்களுடன்
உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். கணவர் வரதராசும், மற்றவர்களும்,
முருகேஸ்வரியை, கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்
சேர்த்தனர். அங்கு,
முருகேஸ்வரி போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம்:
கணவர் வரதராஜை மது குடிக்க வேண்டாம் என, பல முறை கூறினேன். ஆனால் கணவர்
திருந்தவில்லை. வேலைக்கு போகாவிட்டாலும் பரவாயில்லை. குடிக்காமல் வீட்டில்
இருந்தால் போதும் என்றும் கூறினேன். கடந்த 6ம் தேதி, "இன்றாவது குடிக்காமல்
வேலையிலிருந்து வீட்டுக்கு வா' என்று கூறினேன். "நான் அப்படித்தான்
குடிப்பேன்' என்று கூறி, வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் கேனை திறந்து, என் மீது
ஊற்றினார். பின்னர் நெருப்பு பற்ற வைத்து விட்டார். இவ்வாறு, முருகேஸ்வரி
வாக்குமூலத்தில் தெரிவித்தார். முருகேஸ்வரியின் தாடையில் துவங்கி, நெஞ்சு,
வயிறு உள்ளிட்ட பகுதிகளில் 70 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மனைவியை தீ
வைத்து எரித்துக் கொல்ல முயன்ற கணவனை, போலீசார் தேடி வருகின்றனர்.
-தினமலர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அ.தி.மு.க., ஆட்சியில் 19 மாதத்தில் 896 கொலைகள்; கருணாநிதி
திருச்சி: ""கடந்த, 19 மாத, அ.தி.மு.க., ஆட்சியில், 896 கொலைகள்
நடந்துள்ளன; இதுதான் இன்றைய சட்டம் - ஒழுங்கின் நிலை,'' என, தி.மு.க.,
தலைவர் கருணாநிதி கூறினார். தி.மு.க., ராஜ்ய சபா எம்.பி., திருச்சி சிவா
மகள் திருமணம் மற்றும், தி.மு.க., நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க,
தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று, திருச்சி வந்தார். அவர்
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கே: இலங்கை விவகாரத்தில், இனியாவது மத்திய அரசு விழிக்க வேண்டும் என்பதை,
நீங்கள் முன்பே சொல்லியிருந்தால், லட்சக்கணக்கான உயிரை
காப்பாற்றியிருக்கலாமே?
ப: தி.மு.க., மட்டுமல்ல, இலங்கை தமிழர்கள் மீது அக்கறை கொண்ட அனைத்து கட்சியும், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.
கே: காங்கிரஸ் கூட்டணியிலிருந்து, தி.மு.க., வெளியே வரவேண்டும் என, வைகோ கூறியுள்ளாரே?
ப: நான் வெளியே வந்தால், அவர்கள் உள்ளே செல்ல தயாராக இருக்கின்றனர்.
கே: காவிரி டெல்டா விவசாயிகளுக்கு, 1,000 கோடி ரூபாய், ஒதுக்க வேண்டும் என, தி.மு.க., மத்திய அமைச்சர்கள் வலியுறுத்துவார்களா?
ப: தி.மு.க., மத்திய அமைச்சர்கள் மட்டுமல்ல, எம்.பி.,க்களும் வலியுறுத்தியுள்ளனர்.
கே: காங்., கூட்டணியில் உள்ள, முலாயம்சிங் யாதவ், செப்டம்பர் மாதம் லோக் சபா தேர்தல் வரும் என, கூறியுள்ளாரே?
ப: அவர் கூறியது யூகம்.
கே: உங்களது யூகம்?
ப: நாங்கள் யூகத்திலும் இல்லை; வியூகத்திலும் இல்லை.
கே: லோக்சபா தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து?
ப: தி.மு.க., எப்போதும், இது போன்ற பெரிய விஷயங்களை, பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டித்தான் முடிவெடுக்கும்.
கே: ராகுல், காங்., துணை தலைவரானதை பாராட்டி, நீங்கள் கடிதம் எழுதியதற்கு
பதில் இல்லை. ராகுலை சந்திக்க, டில்லி சென்ற ஸ்டாலினையும், அவர்
சந்திக்கவில்லையே?
ப: ஸ்டாலின், பாலு உள்ளிட்டோர், "டெசோ' சார்பாக, டில்லியில் உள்ள,
வெளிநாட்டு தூதரை சந்திக்க சென்றனர். சில பத்திரிகைகள் அபாரமாக கற்பனை
செய்து, இதை திசை திருப்ப முயற்சித்துள்ளன.
கே: எதிர் கட்சியினர் மீது, தொடர்ந்து வழக்குகள் பாய்கிறதே?
ப: விஜயகாந்த் மீதா... இந்த அரசுக்கு, வழக்கு போடுவது, வழக்கமானது தான்.
கே: காவிரி பிரச்னை தொடர்பாக, கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துவது போல, தமிழகத்தில் நடத்த வலியுறுத்துவீர்களா?
ப: இங்கு எல்லாம், "நானே' என்ற ஆட்சி நடக்கிறது. இதில், ஆல் - பார்ட்டியாவது, ஆள் இல்லாத பார்ட்டியாவது.
கே: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட, தி.மு.க., தடையாக இருப்பதாக, தமிழக அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளரே?
ப: அ.தி.மு.க., அமைச்சர்கள் பேச்சை நான் கவனிப்பது இல்லை. அதுபற்றி கருத்து
சொல்ல ஆரம்பித்தால், அந்த கருத்துக்களை கேட்டு, தங்களை திருத்தி
கொள்பவர்களாக, இந்த ஆட்சியில் யாரும் இல்லை.
கே: இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவீர்களா?
ப: எங்களது எதிர்ப்பே, போராட்டத்துக்கான அறிகுறி. தமிழர் உணர்வுகளை புரிந்து கொண்டு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே: மத்திய அரசு, தி.மு.க.,வின் நிலைப்பாட்டுக்கு எதிராக உள்ளதே? "சில்லரை
வணிகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்க்கிறோம். இருந்தாலும் தீய, மதவாத
சக்திகள், உள்ளே வரக்கூடாது என்பதற்காக, வேறு வழியின்றி அன்னிய முதலீட்டை
ஆதரிக்கிறோம்' என்று கூறியுள்ளீர்களே? கல்லக்குடி உட்பட, பல களங்களை கண்ட
தி.மு.க.,வுக்கு பயமா?
ப: களங்களை கண்டு, கழகம் ஒருபோதும் அஞ்சாது. மதவாத களங்களை கழகம் விரும்பாது.
கே: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தி.மு.க.,வுடன் இணக்கமாக இருப்பது போல் உள்ளதே?
ப: உங்களுக்கு பொறுக்காதே!
கே: தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை
செய்யப்பட்டு, ஓராண்டு ஆகியும், போலீசார் இதுவரை, ஒருவரை கூட கைது
செய்யவில்லையே?
ப: சி.பி.ஐ.,க்கு இந்த வழக்கை கொண்டு வர, தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
கே: தமிழக சட்டம் - ஒழுங்கு பற்றி...
ப: இந்த ஆட்சியில், 19 மாதத்தில், 896 கொலைகள் நடந்துள்ளன. இதுதான் இன்றைய சட்டம் - ஒழுங்கின் நிலை.
கே: அழகிரி மீது, 1,000 கோடி ரூபாய், ஊழல் குற்றச்சாட்டு உள்ளதால், அவர் பதவி விலக வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளாரே?
ப: முதலில் அந்தம்மாவை, பெங்களூரு கேஸை முடிக்க சொல்லுங்கள்.
இவ்வாறு, அவர் கூறினார்.
"அகநானூறு முடிந்து விட்டது"
:
பேட்டி துவங்கியதிலிருந்து உற்சாகமாகவும், ஜாலியாக, அவர், விஜயகாந்த்
பற்றி, மூன்று முறை பேசினார். தொடர்ந்து, பல கேள்விகளுக்கு, தன் பாணியிலேயே
பதிலளித்தார். அப்போது, மூத்த நிருபர் ஒருவர், "உங்கள் இலக்கியப் பணியில்,
தொல்காப்பியத்துக்கு பின், அகநானூறு எழுதுகிறீர்களா' என, கேட்டதும், அவரை
பார்த்து சிரித்துக் கொண்டே, ""அகநானூறு தான் முடிந்து விட்டதே. எனக்கு
மட்டுமல்ல, உங்களுக்கும் முடிந்து விட்டது. இனி புறநானூறு தான் எழுத
வேண்டும்,'' என்றார்.
-தினமலர்
திருச்சி: ""கடந்த, 19 மாத, அ.தி.மு.க., ஆட்சியில், 896 கொலைகள்
நடந்துள்ளன; இதுதான் இன்றைய சட்டம் - ஒழுங்கின் நிலை,'' என, தி.மு.க.,
தலைவர் கருணாநிதி கூறினார். தி.மு.க., ராஜ்ய சபா எம்.பி., திருச்சி சிவா
மகள் திருமணம் மற்றும், தி.மு.க., நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க,
தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று, திருச்சி வந்தார். அவர்
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கே: இலங்கை விவகாரத்தில், இனியாவது மத்திய அரசு விழிக்க வேண்டும் என்பதை,
நீங்கள் முன்பே சொல்லியிருந்தால், லட்சக்கணக்கான உயிரை
காப்பாற்றியிருக்கலாமே?
ப: தி.மு.க., மட்டுமல்ல, இலங்கை தமிழர்கள் மீது அக்கறை கொண்ட அனைத்து கட்சியும், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.
கே: காங்கிரஸ் கூட்டணியிலிருந்து, தி.மு.க., வெளியே வரவேண்டும் என, வைகோ கூறியுள்ளாரே?
ப: நான் வெளியே வந்தால், அவர்கள் உள்ளே செல்ல தயாராக இருக்கின்றனர்.
கே: காவிரி டெல்டா விவசாயிகளுக்கு, 1,000 கோடி ரூபாய், ஒதுக்க வேண்டும் என, தி.மு.க., மத்திய அமைச்சர்கள் வலியுறுத்துவார்களா?
ப: தி.மு.க., மத்திய அமைச்சர்கள் மட்டுமல்ல, எம்.பி.,க்களும் வலியுறுத்தியுள்ளனர்.
கே: காங்., கூட்டணியில் உள்ள, முலாயம்சிங் யாதவ், செப்டம்பர் மாதம் லோக் சபா தேர்தல் வரும் என, கூறியுள்ளாரே?
ப: அவர் கூறியது யூகம்.
கே: உங்களது யூகம்?
ப: நாங்கள் யூகத்திலும் இல்லை; வியூகத்திலும் இல்லை.
கே: லோக்சபா தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து?
ப: தி.மு.க., எப்போதும், இது போன்ற பெரிய விஷயங்களை, பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டித்தான் முடிவெடுக்கும்.
கே: ராகுல், காங்., துணை தலைவரானதை பாராட்டி, நீங்கள் கடிதம் எழுதியதற்கு
பதில் இல்லை. ராகுலை சந்திக்க, டில்லி சென்ற ஸ்டாலினையும், அவர்
சந்திக்கவில்லையே?
ப: ஸ்டாலின், பாலு உள்ளிட்டோர், "டெசோ' சார்பாக, டில்லியில் உள்ள,
வெளிநாட்டு தூதரை சந்திக்க சென்றனர். சில பத்திரிகைகள் அபாரமாக கற்பனை
செய்து, இதை திசை திருப்ப முயற்சித்துள்ளன.
கே: எதிர் கட்சியினர் மீது, தொடர்ந்து வழக்குகள் பாய்கிறதே?
ப: விஜயகாந்த் மீதா... இந்த அரசுக்கு, வழக்கு போடுவது, வழக்கமானது தான்.
கே: காவிரி பிரச்னை தொடர்பாக, கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துவது போல, தமிழகத்தில் நடத்த வலியுறுத்துவீர்களா?
ப: இங்கு எல்லாம், "நானே' என்ற ஆட்சி நடக்கிறது. இதில், ஆல் - பார்ட்டியாவது, ஆள் இல்லாத பார்ட்டியாவது.
கே: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட, தி.மு.க., தடையாக இருப்பதாக, தமிழக அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளரே?
ப: அ.தி.மு.க., அமைச்சர்கள் பேச்சை நான் கவனிப்பது இல்லை. அதுபற்றி கருத்து
சொல்ல ஆரம்பித்தால், அந்த கருத்துக்களை கேட்டு, தங்களை திருத்தி
கொள்பவர்களாக, இந்த ஆட்சியில் யாரும் இல்லை.
கே: இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவீர்களா?
ப: எங்களது எதிர்ப்பே, போராட்டத்துக்கான அறிகுறி. தமிழர் உணர்வுகளை புரிந்து கொண்டு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே: மத்திய அரசு, தி.மு.க.,வின் நிலைப்பாட்டுக்கு எதிராக உள்ளதே? "சில்லரை
வணிகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்க்கிறோம். இருந்தாலும் தீய, மதவாத
சக்திகள், உள்ளே வரக்கூடாது என்பதற்காக, வேறு வழியின்றி அன்னிய முதலீட்டை
ஆதரிக்கிறோம்' என்று கூறியுள்ளீர்களே? கல்லக்குடி உட்பட, பல களங்களை கண்ட
தி.மு.க.,வுக்கு பயமா?
ப: களங்களை கண்டு, கழகம் ஒருபோதும் அஞ்சாது. மதவாத களங்களை கழகம் விரும்பாது.
கே: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தி.மு.க.,வுடன் இணக்கமாக இருப்பது போல் உள்ளதே?
ப: உங்களுக்கு பொறுக்காதே!
கே: தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை
செய்யப்பட்டு, ஓராண்டு ஆகியும், போலீசார் இதுவரை, ஒருவரை கூட கைது
செய்யவில்லையே?
ப: சி.பி.ஐ.,க்கு இந்த வழக்கை கொண்டு வர, தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
கே: தமிழக சட்டம் - ஒழுங்கு பற்றி...
ப: இந்த ஆட்சியில், 19 மாதத்தில், 896 கொலைகள் நடந்துள்ளன. இதுதான் இன்றைய சட்டம் - ஒழுங்கின் நிலை.
கே: அழகிரி மீது, 1,000 கோடி ரூபாய், ஊழல் குற்றச்சாட்டு உள்ளதால், அவர் பதவி விலக வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளாரே?
ப: முதலில் அந்தம்மாவை, பெங்களூரு கேஸை முடிக்க சொல்லுங்கள்.
இவ்வாறு, அவர் கூறினார்.
"அகநானூறு முடிந்து விட்டது"
:
பேட்டி துவங்கியதிலிருந்து உற்சாகமாகவும், ஜாலியாக, அவர், விஜயகாந்த்
பற்றி, மூன்று முறை பேசினார். தொடர்ந்து, பல கேள்விகளுக்கு, தன் பாணியிலேயே
பதிலளித்தார். அப்போது, மூத்த நிருபர் ஒருவர், "உங்கள் இலக்கியப் பணியில்,
தொல்காப்பியத்துக்கு பின், அகநானூறு எழுதுகிறீர்களா' என, கேட்டதும், அவரை
பார்த்து சிரித்துக் கொண்டே, ""அகநானூறு தான் முடிந்து விட்டதே. எனக்கு
மட்டுமல்ல, உங்களுக்கும் முடிந்து விட்டது. இனி புறநானூறு தான் எழுத
வேண்டும்,'' என்றார்.
-தினமலர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மகாராஷ்டிரா துலேவில் கலவரத்தில் ஈடுபட்ட 6 காவலர் கைது!
(ஞாயிறு, 10 பிப்ரவரி 2013)
மகாராஷ்டிரா துலேவில் கலவரத்தில் ஈடுபட்ட 6 காவலர் கைது!
துலே : மகாராஷ்டிரா மாநிலம் துலேவில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல்
பெரும் கலவரமாக வெடித்து துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர்.
இந்த கலவரத்தில் முக்கியப்
பங்காற்றியதாக 6 காவலர்களை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது. கைது
செய்யப் பட்ட 6 பேரும் ஜனவரி 6 அன்று நடைபெற்ற கலவரத்தில் பங்கேற்று பொது
மக்களின் சொத்தைச் சேதப்படுத்தியதற்கான வீடியோ ஆதாரங்கள்
கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட 6 பேரையும் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அறிந்து கொள்வோம்
(ஞாயிறு, 10 பிப்ரவரி 2013)
மகாராஷ்டிரா துலேவில் கலவரத்தில் ஈடுபட்ட 6 காவலர் கைது!
துலே : மகாராஷ்டிரா மாநிலம் துலேவில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல்
பெரும் கலவரமாக வெடித்து துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர்.
இந்த கலவரத்தில் முக்கியப்
பங்காற்றியதாக 6 காவலர்களை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது. கைது
செய்யப் பட்ட 6 பேரும் ஜனவரி 6 அன்று நடைபெற்ற கலவரத்தில் பங்கேற்று பொது
மக்களின் சொத்தைச் சேதப்படுத்தியதற்கான வீடியோ ஆதாரங்கள்
கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட 6 பேரையும் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அறிந்து கொள்வோம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
போலி மருந்துகள் அதிகரிப்பு...........!!
போலி மருந்து பிடிபடும் சம்பவங்கள், சமீபகாலமாக அதிகரித்து வருவது மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிய வந்துள்ளது.
2009 - 10ல் போலி மருந்து பிடிபட்டதாக 117 புகார் பதிவாகியுள்ளது. அடுத்த இரு ஆண்டுகளில் இது 95 மற்றும் 133 ஆக இருந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுகாதார அமைச்சகம் இந்த தகவல்களை அளித்துள்ளது.
மத்திய மருந்து தர நிர்ணய ஆணையம், கடந்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் மருந்துகளை சோதித்ததாக குறிப்பிட்டுள்ள அமைச்சகம், இதில் 6 ஆயிரத்து 500 மருந்துகள் தரம் குறைந்தவை என்றும், 516 மருந்துகள் போலியானது என்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்த 516 மருந்து தயாரிப்பாளர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 345 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போலி மருந்துகள் உற்பத்தி செய்யப்படுவது குறித்து தகவல் தருபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 4 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது.
ஆனால் இது பலன் தரவில்லை. போலி மருந்து தயாரிப்பதாக அரசுக்கு 37 புகார்கள் வந்தன. ஆனால் இதை விசாரித்ததில் 37 புகார்களுமே தவறானவை என தெரியவந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சங்கை ரிதுவான்
போலி மருந்து பிடிபடும் சம்பவங்கள், சமீபகாலமாக அதிகரித்து வருவது மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிய வந்துள்ளது.
2009 - 10ல் போலி மருந்து பிடிபட்டதாக 117 புகார் பதிவாகியுள்ளது. அடுத்த இரு ஆண்டுகளில் இது 95 மற்றும் 133 ஆக இருந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுகாதார அமைச்சகம் இந்த தகவல்களை அளித்துள்ளது.
மத்திய மருந்து தர நிர்ணய ஆணையம், கடந்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் மருந்துகளை சோதித்ததாக குறிப்பிட்டுள்ள அமைச்சகம், இதில் 6 ஆயிரத்து 500 மருந்துகள் தரம் குறைந்தவை என்றும், 516 மருந்துகள் போலியானது என்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்த 516 மருந்து தயாரிப்பாளர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 345 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போலி மருந்துகள் உற்பத்தி செய்யப்படுவது குறித்து தகவல் தருபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 4 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது.
ஆனால் இது பலன் தரவில்லை. போலி மருந்து தயாரிப்பதாக அரசுக்கு 37 புகார்கள் வந்தன. ஆனால் இதை விசாரித்ததில் 37 புகார்களுமே தவறானவை என தெரியவந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சங்கை ரிதுவான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உக்ரைன் விமான விபத்தில் ஐவர் பலி
உக்ரைன் விமான விபத்தில் ஐவர் பலி
உக்ரைனில் கால்பந்து போட்டியைக் காண ரசிகர்கள் சென்ற விமானம் தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.
உக்ரைனின் ஒடேஸாவில் இருந்து 44 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளுடன் சதர்ன் ஏர்லைன்ஸ¤க்கு சொந்தமான ஏ. என். -24 என்ற விமானம் நேற்று முன்தினம் டோனெட்ஸ்க் நகருக்கு கிளம்பியது. அந்த விமானம் தரையிறங்குகையில் ஓடுதளத்தில் இருந்து விலகிச் சென்றது. இதில் விமானம் தலை கீழாக பிரண்டதில் 5 பேர் பலியாகினர். உடனே விமானத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். பயணிகள் வெளியேற்றப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு நடந்தது. பயணிகளில் பெரும்பாலானோர் டொனெட்ஸ்கில் நடக்கும் யூ. ஈ. எஃப் ஏ. சாம்பியன் லீக் போட்டிகளில் ஷக்தர் டோனெட்ஸ்க் மற்றும் பொரஸ்யா டார்ட்மன்ட் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டியைக் காணச் சென்றவர்கள்.
தட்ஸ் தமிழ்
உக்ரைன் விமான விபத்தில் ஐவர் பலி
உக்ரைனில் கால்பந்து போட்டியைக் காண ரசிகர்கள் சென்ற விமானம் தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.
உக்ரைனின் ஒடேஸாவில் இருந்து 44 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளுடன் சதர்ன் ஏர்லைன்ஸ¤க்கு சொந்தமான ஏ. என். -24 என்ற விமானம் நேற்று முன்தினம் டோனெட்ஸ்க் நகருக்கு கிளம்பியது. அந்த விமானம் தரையிறங்குகையில் ஓடுதளத்தில் இருந்து விலகிச் சென்றது. இதில் விமானம் தலை கீழாக பிரண்டதில் 5 பேர் பலியாகினர். உடனே விமானத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். பயணிகள் வெளியேற்றப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு நடந்தது. பயணிகளில் பெரும்பாலானோர் டொனெட்ஸ்கில் நடக்கும் யூ. ஈ. எஃப் ஏ. சாம்பியன் லீக் போட்டிகளில் ஷக்தர் டோனெட்ஸ்க் மற்றும் பொரஸ்யா டார்ட்மன்ட் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டியைக் காணச் சென்றவர்கள்.
தட்ஸ் தமிழ்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சி.ஆர்.பி.எஃப் வீரர்களை திரும்பப் பெறும் முடிவில் மாற்றம்
காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப். முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அங்கிருந்து வீரர்களைத் திரும்பப் பெறும் முடிவை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 65,000 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில், 3,000 பேரைக் கொண்ட மூன்று படைப்பிரிவுகளை இம்மாதத்தில் திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்திருந்தது. ஜார்க்கண்ட் மற்றும் பிகாரில் நக்சல் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் அந்த வீரர்களைப் பணியில் ஈடுபடுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், புதன்கிழமை சி.ஆர்.பி.எஃப். முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இம்முடிவை அரசு தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி
காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப். முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அங்கிருந்து வீரர்களைத் திரும்பப் பெறும் முடிவை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 65,000 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில், 3,000 பேரைக் கொண்ட மூன்று படைப்பிரிவுகளை இம்மாதத்தில் திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்திருந்தது. ஜார்க்கண்ட் மற்றும் பிகாரில் நக்சல் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் அந்த வீரர்களைப் பணியில் ஈடுபடுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், புதன்கிழமை சி.ஆர்.பி.எஃப். முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இம்முடிவை அரசு தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தில்லியில் 4,500 சட்டவிரோத கட்டுமானங்கள்
தலைநகரில் சுமார் 4,550 சட்டவிரோத கட்டுமானங்கள் உள்ளதாக மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
"தலைநகரில் கடந்த மாதம் 28-ம் தேதிப்படி, 4,550 சட்டவிரோத கட்டுமானங்கள் இருப்பதாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு போலீஸôர் அறிக்கை அனுப்பியுள்ளனர்' என்று மக்களவையில், ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தலைநகரில் சுமார் 4,550 சட்டவிரோத கட்டுமானங்கள் உள்ளதாக மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
"தலைநகரில் கடந்த மாதம் 28-ம் தேதிப்படி, 4,550 சட்டவிரோத கட்டுமானங்கள் இருப்பதாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு போலீஸôர் அறிக்கை அனுப்பியுள்ளனர்' என்று மக்களவையில், ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வரின் விரிவுப்படுத்தப்பட்ட மருத்துவக்காப்பீடு திட்ட முகாம் 20ம் தேதி தொடக்கம்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் முதல்வரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக்காப்பீடு திட்ட முகாம்கள் வரும் 20, 21 தேதிகளில் நடைபெறவுளளது என ஆட்சியர் கே.வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைக் குழுவால் கட்டணம் இல்லாமல் ஆலோசனை, பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன.இதன்படி, வரும் 20-ம் தேதியன்று திருவள்ளூர்-அம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு ஸ்டேட்போர்ட் மருத்துவமனை, வில்லிவாக்கம்-திருவொற்றியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு கார்த்திக் மருத்துவமனை, புழல்-வளசரவாக்கம் பகுதிக்கு ரஷ்சித் மருத்துவமனை,பூந்தமல்லி பகுதிக்கு சுந்தர் வி-கேர் மருத்துவமனை, திருவாலங்காடு-முகப்பேர் பகுதிக்கு பிராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனை, ஆர்.கே.பேட்டை-மூலக்கடை பகுதிக்கு கே.வி.டி. ஹெல்த் சென்டர், திருத்தணி-திருவொற்றியூர் பகுதிக்கு சுகம் மருத்துவமனை ஆகிய இடங்களில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
21ம் தேதி: பள்ளிப்பட்டு-அண்ணாநகர் பகுதிக்கு வி-கேர் மருத்துவமனை, பூண்டி பகுதிக்கு மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், எல்லாபுரம்-கொளத்தூர் பகுதிக்கு ஈஸ்வர் மெடிக்கல் ஃபவுண்டேஷன், சோழவரம்-வேலப்பன்சாவடி-ஏ.சி.எஸ். மருத்துவமனை, கும்மிடிப்பூண்டி-ரெட்டேரி பகுதிக்கு குமரன் மருத்துவமனை, மீஞ்சூர்- திருவொற்றியூர் பகுதிக்கு ஆகாஷ் மருத்துவமனை ஆகிய இடங்களில் முகாம்கள் நடத்தப்படும்.
இம்முகாம்களில் மேல்சிகிச்சைக்காக தேர்வு செய்யப்படுவோருக்கு அந்தந்த மருத்துவமனைகளில் கட்டணம் இல்லாத மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் முதல்வரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக்காப்பீடு திட்ட முகாம்கள் வரும் 20, 21 தேதிகளில் நடைபெறவுளளது என ஆட்சியர் கே.வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைக் குழுவால் கட்டணம் இல்லாமல் ஆலோசனை, பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன.இதன்படி, வரும் 20-ம் தேதியன்று திருவள்ளூர்-அம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு ஸ்டேட்போர்ட் மருத்துவமனை, வில்லிவாக்கம்-திருவொற்றியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு கார்த்திக் மருத்துவமனை, புழல்-வளசரவாக்கம் பகுதிக்கு ரஷ்சித் மருத்துவமனை,பூந்தமல்லி பகுதிக்கு சுந்தர் வி-கேர் மருத்துவமனை, திருவாலங்காடு-முகப்பேர் பகுதிக்கு பிராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனை, ஆர்.கே.பேட்டை-மூலக்கடை பகுதிக்கு கே.வி.டி. ஹெல்த் சென்டர், திருத்தணி-திருவொற்றியூர் பகுதிக்கு சுகம் மருத்துவமனை ஆகிய இடங்களில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
21ம் தேதி: பள்ளிப்பட்டு-அண்ணாநகர் பகுதிக்கு வி-கேர் மருத்துவமனை, பூண்டி பகுதிக்கு மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், எல்லாபுரம்-கொளத்தூர் பகுதிக்கு ஈஸ்வர் மெடிக்கல் ஃபவுண்டேஷன், சோழவரம்-வேலப்பன்சாவடி-ஏ.சி.எஸ். மருத்துவமனை, கும்மிடிப்பூண்டி-ரெட்டேரி பகுதிக்கு குமரன் மருத்துவமனை, மீஞ்சூர்- திருவொற்றியூர் பகுதிக்கு ஆகாஷ் மருத்துவமனை ஆகிய இடங்களில் முகாம்கள் நடத்தப்படும்.
இம்முகாம்களில் மேல்சிகிச்சைக்காக தேர்வு செய்யப்படுவோருக்கு அந்தந்த மருத்துவமனைகளில் கட்டணம் இல்லாத மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 10
|
|