புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10 
40 Posts - 63%
heezulia
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10 
2 Posts - 3%
viyasan
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10 
232 Posts - 42%
heezulia
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10 
21 Posts - 4%
prajai
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது


   
   

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 5:00 pm

First topic message reminder :

ரஷிய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுக்கத் தடை: சட்டம் நிறைவேற்றம்!



ரஷிய நாடாளுமன்றத்தின் மேல் சபை புதன்கிழமை இன்று ஒரு முக்கியமான சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. ரஷியக் குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுப்பதைத் தடை செய்யும் வகையில் இந்த சட்ட வடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரஷியர்கள் சிலருக்கு அமெரிக்க சட்டத்தின் படி தண்டனை பெற்றுத்தரும் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டதற்கு பதிலடியாக இந்த சட்ட வரைவு ரஷியாவால் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கருதப் படுகிறது.

இந்த மசோதா குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் கூறும்போது, இந்த சட்டத்துக்கு தான் கையெழுத்திடுவதாகவும், அமெரிக்க நிதியுதவியில் ரஷியாவில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளுக்கு விசா தடை விதிப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

தினமணி




தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 12:53 am

பொங்கல் பண்டிகை: 4800 சிறப்பு பஸ்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு எளிதாக சென்று வரும் வகையில் 4800 கூடுதல் சிறப்பு பஸ்களை தமிழக அரசு இயக்க உள்ளது.இந்த கூடுதல் சிறப்பு பஸ்களில் சாதாரண கட்டணமே வசூலிக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், பயணிகள் புகார் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2012 நவம்பரில் தீபாவளிப் பண்டிகைக்காக தமிழகம் முழுவதும் 6859 பஸ்களையும், சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2828 சிறப்பு பஸ்களையும் தமிழக அரசு இயக்கியது.இப்போது ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கு, தமிழகம் முழுவதும் 4800 சிறப்பு பஸ்களை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இதில் சென்னையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 2000 சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த சிறப்பு பஸ்கள் ஜனவரி 11, 12, 13 ஆகிய பொங்கலுக்கு முந்தைய தேதிகளிலும், பின்னர் பண்டிகை விடுமுறை முடிந்து 17, 18, 19, 20 ஆகிய தேதிகளிலும் இயக்கப்பட உள்ளன.கடைசி நேரத்திலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால், முன்பதிவு செய்யாதவர்களுக்கும் எளிதாக இடம் கிடைக்கும். எனவே, ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து ஏமாறுவதை பயணிகள் தவிர்க்கலாம் என அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி




தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 12:55 am

கூடங்குளம் : தமிழகத்துக்கு 700 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு


கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 700 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு ஒதுக்குவதாக மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் வரும் ஜனவர் 14 அல்லது 15 ம் தேதிகளில் மின் உற்பத்தி தொடங்கும் எனவும், தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை சரி செய்ய கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்க்கு வேண்டும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை கருதி 700 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு ஒதுக்குவது என முடிவு செய்யபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தினமணி




தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 11:40 pm

பொங்கல் பரிசுத் திட்டத்தை கொடநாட்டில் துவக்கி வைத்தார் முதல்வர்



சிறப்பு பொங்கல் பரிசுத் திட்டத்தை, நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்.

கொடநாட்டில் உள்ள கோத்தகிரி கூட்டுறவு பண்டக சாலையின் நியாய விலைக் கடையில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய திட்டத்தை துவக்கி வைத்தார். மேலும், பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டிகள் மற்றும் சேலைகளையும் அவர் வழங்கினார்.

தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், அரிசி பெறும் சுமார் 1.84 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.20 மதிப்புள்ள 1 கிலோ பச்சரிசி, ரூ.40 மதிப்புடைய 1 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.100 ரொக்கம் என ரூ.160 மதிப்பிலான சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்தை இப்போது கொடநாட்டில் இருந்து முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். விழாவில் 16 பயனாளிகளுக்கு முதல்வர் நேரடியாக பொங்கல் பரிசுத் திட்டத்தை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட 13 அமைச்சர்கள், விழாவுக்கு வந்திருந்த மற்ற ஏனைய பயனாளிகளுக்கும், அவர்கள் அமர்ந்திருந்த இடங்களுக்கே சென்று பொங்கல் பரிசுத் பொருள்களை வழங்கினர்.


தினமணி




தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 11:50 pm

இலங்கைப் பணிப் பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்...........!!

இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவுக்கு வீட்டுப்பணிப்பெண்ணாகச் சென்ற ரிசானா நபீக் என்பவருக்கு இன்று இந்திய நேரம் காலை 11.40 மணியளவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது,

(இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்...)

சவூதி அரேபியாவில் வீடொன்றில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய சமயம் அவ்வீட்டின் சிசு ஒன்றை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் ரிசானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

ஷரீஆ சட்டப்படி பாதிக்கப்பட்டவர்கள் மன்னிப்பு வழங்காத நிலையில் இத்தண்டணையை இரத்துச் செய்ய முடியாது என அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்திருந்தது,

இந்நிலையில் அப்பணிப்பெண்ணை மரண தண்டனையிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன, சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோரை அணுகி மன்னிப்பை பெற்றுக்கொள்ள எடுக்கப்பட்ட சகலவிதமான முயற்சிகளும் பயனளிக்காத நிலையில் இன்று காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சங்கை ரிதுவான்




தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jan 10, 2013 12:02 am

சிங்கப்பூர் சபாநாயகராக இந்தியப் பெண் நியமனம்...........!!

சிங்கப்பூர் பாராளுமன்ற சபாநாயகராக திருமதி ஹலிமா யாகூப் நியமிக்கப்பட்டிருக்கிறார்,

தற்போது சமுதாயம் மற்றும் குடும்ப வளர்ச்சி துணை அமைச்சராக இருக்கும் திருமதி ஹலிமா யாகூப், இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர். அடுத்த வாரம் கூட இருக்கும் பாராளுமன்றத்தில் திருமதி ஹலிமா யாகுப் முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்,

சட்டதுறையில் நிபுணத்துவம் பெற்ற திருமதி ஹலிமா, அரசியலுக்கு வரும் முன் சிங்கப்பூரின் முக்கிய தொழிற் சங்கமான என்டியூசியில் துணை பொதுச் செயலராகப் பணியாற்றி வந்தார். சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தொழிற்சங்க அமைப்பில் பணி செய்த ஹலிமா, உலக தொழிலாளர் அமைப்பின் உறுப்பினராகவும் சில காலம் பணியாற்றியுள்ளார்,

நடமாடும் தொழிலாளர் அகராதி எனப் பெயர்பெற்ற திருமதி ஹலிமா, கடந்த 8 ஆண்டுகளாகப் பாராளுமண்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். சென்றமாதம் முந்தைய சபாநாயகர் மைக்கேல் பால்மர் தகாத உறவு காரணமாக பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து காலியான சபாநாயகர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் திருமதி ஹலிமா சிங்கப்பூரின் முதல் பெண் சபாநாயகர் ஆவார்.

சங்கை ரிதுவான்




தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 11, 2013 1:15 am

திருமண ஆசைகாட்டி மஞ்சள் கயிறு கட்டி பெண்ணை கற்பழித்த பாதிரியார்............!!


உனக்காக பாதிரியார் தொழிலையே விட்டுவிடுகிறேன் - இப்படியும் பாதிரியார்களா ?

திருமண ஆசைகாட்டி சீரழித்து பலமுறை கர்ப்பத்தை கலைத்துவிட்டு தன்னை ஏமாற்றிய பாதிரியார் மீது நர்ஸிங் மாணவி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் காவ்யா(25)(பெயர் மாற்றப்பட்டுள்ளது, அவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து பாதிரியார் மீது புகார் கொடுத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்...

என் தந்தை ஒரு விவசாயி, அவருக்கு என்னையும் சேர்த்து 7 பிள்ளைகள். நான் பி.எஸ்.சி. நர்சிங் படித்துக் கொண்டிருக்கிறேன். முதலில் தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்தபோது வியாசர்பாடி சர்மா நகரைச் சேர்ந்த அந்தோணி ஜோசப்(31) என்பவர் அவரது பெரியம்மா லூர்து மேரிக்கு சிகிச்சை அளிக்க என்னை அழைத்துச் சென்றார்.

அங்கிருந்து அவர் தினமும் என்னை தனது வாகனத்தில் கல்லூரிக்கு அழைத்து வருவார். அப்போது அவர் தன்னை மணக்குமாறு கேட்டார். முதலில் மறுத்தேன். உடனே அவர் நீ என்னை மணக்காவிட்டால் நான் அவர் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார்.

அதன் பிறகு என்னை கட்டாயப்படுத்தி தனது காரில் 23-4-2012 அன்று மூணாறுக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு ஹோட்டலில் தங்க வைத்த அவர் குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து என்னை கற்பழித்துவிட்டார். மயக்கம் தெரிந்த பிறகு அவருடன் தகராறு செய்தேன். உடனே என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி என்னை சமாதானம் செய்தார். அவரது வார்த்தையை நம்பி நடந்த விஷயத்தை நான் யாரிடமும் கூறவில்லை. இந்நிலையில் நான் கர்ப்பமானேன்.

மருத்துவரிடம் அழைத்துச் சென்று என்னை தனது மனைவி என்று கூறி கல்லூரியில் படிக்கும் சமயத்தில் குழந்தை வேண்டாம் என்று நினைக்கிறோம் என்று கூறி மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து கருவை கலைத்தார். அதன் பிறகு அவர் தங்கி இருந்த மூலக்கடை அசிசி நகர், ஆலயத்தில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்று திருமண ஆசை காட்டி என்னை மீண்டும் சீரழித்தார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி தோழியின் திருமணத்திற்காக வேலூர் கிளம்பினேன். அப்போது அவர் என்னை தனது காரில் அழைத்துச் சென்றார். வேலூரில் ஒரு அறை எடுத்து தங்கினோம். அப்போது அவர் எனது கழுத்தில் மஞ்சள் கயிற்றை கட்டிவிட்டு என்னை மனைவி என்று கூறி மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பின்னர் தங்கத் தாலி வாங்கித் தருவதாகக் கூறி மஞ்சள் கயிற்றை அறுத்துவிட்டார்.

கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றோம். அதன் பிறகு கிண்டிக்கு சென்றோம். இரண்டு இடங்களிலும் கணவன், மனைவி என்று கூறியோ அறை எடுத்தோம். இந்த காலகட்டத்தில் 3 முறை கர்ப்பம் ஆனேன். ஆனால் இந்த விஷயம் தெரிந்தால் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று கூறியே கர்பத்தை கலைக்க வைத்தார். எனக்காக பாதிரியார் தொழிலையே விட்டுவிடுவதாக தெரிவித்தார்.

ஆனால் கடந்த சில வாரங்களாக என்னுடன் அவர் பேசவில்லை. இதையடுத்து அவரை தொடர்பு கொண்டபோது என்னை திருமணம் செய்ய மறுத்தார். மேலும் தனக்கு அதிகாரம் படைத்த பலரைத் தெரியும் என்றும், என்னால் அவரை ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறினார். அவருடன் சேர்ந்து அவரது தம்பியும் மிரட்டுகிறார். அதனால் திருமண ஆசை காட்டி என்னை சீரழித்த பாதிரியார் அந்தோணி ஜோசப் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சங்கை ரிதுவான்




தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 11, 2013 10:55 pm

ரூ. 28 கோடியில் மதுரை, கோவையில் புற்று நோய் சிகிச்சை மையம்: ஜெயலலிதா




புற்றுநோயால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்குத் தேவையான நவீன சிகிச்சைகளை அளிக்கும் பொருட்டு, மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனையிலும், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பதற்காக, மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக 10 கோடி ரூபாய், கட்டடம் கட்டுவதற்காக 3 கோடியே 2 லட்சம் ரூபாய், 48 புதிய பணியிடங்கள் தோற்று விப்பதற்காக தொடரும் செலவினமாக 1 கோடியே 24 லட்சம் ரூபாய் என 14 கோடியே 26 லட்சம் ரூபாயும்; கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் மையம் அமைப்பதற்காக மருத்துவ உபகரணங்கள் வாங்கு வதற்காக 10 கோடி ரூபாய், கட்டடம் கட்டுவதற்காக 3 கோடி ரூபாய், 46 புதிய பணியிடங்கள் தோற்று விப்பதற்காக தொடரும் செலவினமாக 1 கோடியே 37 லட்சம் ரூபாய் என 14 கோடியே 37 லட்சம் ரூபாயும் ஆக மொத்தம் 28 கோடியே 63 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியாவிலேயே தலை சிறந்த ஆய்வுக் கூடங்களில் ஒன்றான சென்னையில் இயங்கி வரும் கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு புத்துயிர் அளித்து, மீண்டும் அங்கு தடுப்பு ஊசி உற்பத்தியை தொடங்குவதற்கும், அங்கு திசு வங்கி அமைக்கவும், புதிய கட்டடம் கட்டுவது உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 9 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி




தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 11, 2013 10:58 pm

சமையல் எரிவாயு விநியோகஸ்தரை மாற்றிக் கொள்ளும் வசதி தொடக்கம்: வீரப்ப மொய்லி அறிவிப்பு



சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வைத்துள்ள நுகர்வோர் இனி தங்களது விநியோகஸ்தர்களை மாற்றிக் கொள்ளும் வசதியை (போர்ட்டபிலிடி) மத்திய அரசு தொடங்கியுள்ளது.இதனை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தில்லியில் செய்தியாளர்களிடம் அறிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

எல்.பி.ஜி. எனப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வைத்துள்ள நுகர்வோர் இனி தங்களது விநியோகஸ்தர்களை மாற்றிக் கொள்ளும் வசதி சண்டீகரில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அடுத்த நிதியாண்டில் குறைந்தபட்சம் 25 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும். நாடு முழுவதும் இத்திட்டம் படிப்படியாக விஸ்தரிக்கப்படும். மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள 2 முதல் 3 விநியோகஸ்தர்ககளில் ஒருவரை நுகர்வோர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 13.5 கோடி நுகர்வோருக்கு சிறந்த சேவைகளை அளிப்பதற்காகவும், சமையல் வாயு விநியோகஸ்தர்களின் ஏகபோக நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டவும் இந்த போர்ட்டபிலிடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விநியோகஸ்தர்களை மாற்றுவதற்கான கோரிக்கைகளை வாடிக்கையாளர்கள் இணையதளம் மூலம் முன்வைக்கலாம். இதேபோல், புதிய இணைப்புக்கான மனுக்களையும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என்றார் வீரப்ப மொய்லி.

எனினும், அரசின் இப்புதிய திட்டத்தின் கீழ் விநியோகஸ்தர்களை மட்டுமே மாற்ற முடியுமே தவிர, ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றோர் நிறுவனத்தின் சேவைக்கு மாற முடியாது. அதாவது, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இண்டேன் சிலிண்டர் இணைப்பை வைத்துள்ள ஒரு வாடிக்கைûயாளர், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பாரத் கேஸ் இணைப்புக்கு மாற முடியாது. குறிப்பிட்ட வாடிக்கையாளர் தனது விநியோகஸ்தரை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும்.

தினமணி




தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 11, 2013 11:01 pm

தமிழகத்தில் ரயில் கட்டணத்தை விட பேருந்து கட்டணம் அதிகம் : கருணாநிதி



தமிழகத்தில் ரயில் கட்டணத்தை விட பேருந்து கட்டணம் அதிகம் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதியிடம், ரெயில் கட்டணம் உயர்த்தியதற்கு தமிழக முதல் அமைச்சர் கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறாரே? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழகத்திலே பேருந்து கட்டணத்தை அதிக அளவிற்கு இந்த அரசினர் உயர்த்தியிருக்கிறார்களே, அதைத் திரும்பப் பெறச் சொல்லுங்கள். அதற்குப் பிறகு மத்திய அரசு உயர்த்தியதைப் பற்றி இவர்கள் பேசட்டும் என்று பதில் அளித்துள்ளார்.

மேலும் பேட்டியின் விவரம் வருமாறு,

செய்தியாளர் : மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோதப் போக்காகச் செயல்படுகிறதே, உதாரணமாக சமையல் சிலிண்டர் விலை, டீசல் விலை, தற்போது ரெயில் கட்டண உயர்வு என்றெல்லாம் நடுத்தர மக்களைப் பாதிக்கின்ற செயலில் ஈடுபடுகிறதே, இதை எதிர்த்து தி.மு.க. போராட்டம் நடத்துமா?

கருணாநிதி : மத்திய அரசின் இத்தகைய செயல்களைக் கண்டித்து அறிக்கை கொடுக்கிறோம், கண்டித்து கடிதம் எழுதுகிறோம், திரும்பப் பெறச் சொல்லிக் கேட்கிறோம்.

செய்தியாளர் : காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று நேற்றையதினம் சொல்லி விட்டார்களே?

கருணாநிதி: காவிரி பிரச்சினை பற்றி கர்நாடக அரசின் சார்பில் அவர்களுடைய நிலைமைகளை விளக்கியிருக்கிறார்கள். அவர்களிடமும் தண்ணீர் இல்லை என்று சொல்கிறார்கள். அது உண்மையா அல்லவா என்பதைக் கண்டு பிடிக்க வேண்டிய வேலை, மத்திய அரசுக்கு இருக்கிறது. அவர்கள் அதைக் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோருகிறேன்.

செய்தியாளர் : தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ரெயில் கட்டணங்களை உயர்த்தாமல் எப்படி கட்டமைப்புகளை சீர் செய்ய முடியும், வேறு என்ன செய்ய முடியும் என்று மாற்று யோசனை சொல்லுங்கள் என்று அறிக்கை கொடுத்திருக்கிறாரே?

கருணாநிதி : அவர் சொல்வதைத் தான் நானும் சொல்கிறேன்.

செய்தியாளர் : ரெயில் கட்டண உயர்வுக்கு நீங்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறீர்கள் அல்லவா?

கருணாநிதி : நான் கண்டனம் தெரிவிக்கவில்லை. நீங்களாக கண்டனம் என்று சொல்கிறீர்கள். கண்டனம் என்ற வார்த்தையை நான் பயன்படுத்த வில்லை. தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தலாம், மத்திய அரசு மட்டும் ரெயில் கட்டணத்தை உயர்த்தக் கூடாதா? தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் சொல்லியிருப்பதைப் போல தமிழ்நாட்டில் உள்ள பேருந்து கட்டணத்தை விட ரெயில் கட்டணம் குறைவு தான்.

செய்தியாளர் : நடுத்தர மக்கள் ரெயிலைத் தான் பயன்படுத்துகிறார்கள். அந்தக் கட்டணத்தை உயர்த்துவதை சரி என்று சொல்கிறீர்களே?

கருணாநிதி : நான் சரி என்று சொல்ல வில்லை. ஏழை மக்களைப் பாதிக்கக் கூடிய எந்த கட்டண உயர்வையும் தி.மு.க. ஆதரிக்காது என்று தான் சொல்லியிருக்கிறேன்.

செய்தியாளர் : டாக்டர் ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ள வில்லை. கலைஞர் முதலமைச்சராக இருந்த போது அதை நல்ல முறையில் கவனித்தார் என்று உங்களுக்கு ஆதரவாக அறிக்கை விடுத்திருக்கிறாரே?

கருணாநிதி : “நோ கமெண்ட்ஸ்”.

தினமணி




தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 11, 2013 11:02 pm

மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு



மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேகாலயாவில் பிப்ரவரி 23ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 28ம் தேதி நடைபெறும். நாகாலாந்து சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 23ம் தேதி வாக்குப்பதிவும், 28ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 14ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 28ம் தேதி நடைபெற உள்ளது.

மேலும், இந்த மூன்று மாநிலங்களிலும், பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கூடுதல் படை அனுப்பப்படும் என்றும், தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தினமணி




தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 6 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக