புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
சிறுகதை - "நம் அகங்காரமா?" "மகனின் எதிர்காலமா?"
குமரன் கோமதி தம்பதியினருக்கு இரு பிள்ளைகள். அவர்களுடைய மூத்த மகன் ரவி பள்ளி இறுதித் தேர்வு எழுத உள்ளான். குமரன் மகனின் எதிர்காலம் கருதி தன் எல்லா வேலைகளையும் தள்ளி வைத்துவிட்டு மகனின் படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தார். மகன் எந்த ஒரு விதத்திலும் படிப்பில் இருந்து கவனம் சிதறாமல் இருக்க, தன்னால் இயன்ற அளவு உதவிக் கொண்டிருந்தார்.
மகன் வாலிபப் பருவத்தின் முதல் நிலையில் இருந்ததால் பல சூழ்நிலைகளில் கவனம் சிதற வாய்ப்புள்ளது என்பதால் முடிந்தவரை அறிவுரைகள் கூறி அவனை ஒருநிலைப்படுத்த குமரன் முயன்று கொண்டு இருந்தார். அந்த முயற்சியில் படிப்படியாக வெற்றியும் கண்டுகொண்டிருந்தார்.
இந்த சூழலில், குமரன் தன் மனைவியிடம் தன் மகனின் படிப்பில் தான் காணும் வளர்ச்சி பற்றி தினமும் கூறிக்கொண்டிருப்பது வழக்கம். அவரின் மனைவியும் மகனுக்கு அறிவுரைகள் கூறியும் எதிர்காலத்திற்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்று உணர்த்திக்கொண்டிருப்பார்.
இப்படி இருக்க, ஒரு நாள் குமரன் மாலை வேலையில் அலுவலகத்தில் இருந்து அப்போதுதான் வீட்டில் நுழைகிறார். வந்தவருக்கு கோமதி தண்ணீர் கொடுத்தார். பிறகு, உடை மாற்றி முகம் கழுவி தன் மகன் படிக்கும் அறைக்குச் சென்று, மகனிடம் படிப்பு பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். கணவருக்கு தேநீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டு கோமதி மெதுவாக "உளுந்து வாங்கிவரச்சொல்லியிருந்தேனே, மறந்துவிட்டீர்கள் போலிருக்கிறதே. நாளைக்கு அமாவாசை. இட்லிக்கு மாவு அரைக்கணும். உளுந்து இப்ப ஊறப் போட்டத்தான், படுக்கும் முன்னால மாவு அரைத்து முடிக்க முடியும் " எனக் கேட்க
குமரன் "ஆமாமாம், அலுவலக வேலை அவசரத்தில் நீ சொன்னதையே மறந்து விட்டேன். இப்பப் போய் வாங்கிட்டு வந்திடறேன்" என கிளம்பப் போனார்.
ஆனால் கோமதி "இப்பத்தானே வந்தீங்க, களைப்பாக இருப்பீங்க. நான் ரவியை அனுப்பறேன்" எனக்கூற,
உடனே குமரன் "அவன் படித்துக்கொண்டிருக்கிறான். அவன ஏன் தொந்தரவு பண்ணனும். நான் போய் வாங்கிக்கிட்டு வந்துடறேன்" எனக் கூறி எழுந்தார்.
மீண்டும் கோமதி "இல்ல, இல்ல நான் அவனை அனுப்பறேன். நீங்க இருங்க" என்று கூறிக் கொண்டே, "ரவி, கொஞ்சம் கடைக்குப் போய், ஒரு கிலோ உளுந்து வாங்கிக்கிட்டு அப்படியே பச்ச மிளகாயும், தேங்காயும் வாங்கிட்டு வாப்பா எனக் கூற,
குமரன் மீண்டும் மறுத்து, "நான் போறேம்மா, அவன் படிக்கட்டும்" என்று கூறிக் கொண்டே தன் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டார்.
கோமதி "நான்தான் சொல்றேனே அவன் போகட்டும்னு. நீங்க ஏன் இப்படிப் பண்றீங்க?" என்று சற்று கோபமாகவே கேட்டார்.
குமரன் "அவன் கவனம் சிதற வேண்டாம்னு தான் சொல்றேன். நீ ஏன் கேட்க மாட்டேன்கிறாய்?" எனச் சற்று சத்தமாகக் கேட்டார்.
கோமதி "இப்ப கடைக்கு போறதுல தான் படிப்பு கேட்டுப் போய்டுமாக்கும்? நான் அவன வேலை சொல்ல, நீங்க அவனுக்கு ஆதரவாப் பேச, அவன் என் பேச்ச மதிக்கக் கூடாது. அப்படித்தானே?" என உச்சக் குரலில் கேட்க,
குமரன் "இதில் என்ன இருக்கிறது? உனக்குத் தேவை உளுந்து. அதை யார் வாங்கி வந்தால் என்ன? " என ஏளனமாகக் கேட்டார்.
அதற்கு கோமதி "அப்போ, நான் சொல்லி கூட அவனை நீங்க அனுப்ப மாட்டீங்க. அப்படித்தானே?" என கண்களின் கண்ணீர் கன்னத்தில் வழிய, அதை துடைத்துக்கொண்டே கேட்டார்.
பதிலுக்கு குமரன் "ஆமாம், அனுப்ப மாட்டேன். எனக்கு அவன் படிப்புதான் முக்கியம். இப்ப என்னன்ற நீ?" என ஆண் என்ற ஆணவம் பேச்சில் தெரிய பொரிந்து தள்ளினார்.
கோமதி "பசங்க, என்ன மதிக்கலைனா உங்களுக்கு சந்தோஷம் தானே?" எனப் புலம்ப,
குமரன் "ஆமா, பசங்க என்னை மட்டும் தான் மதிக்கணும், உன்னை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை" என தடம் மாறி ஆவேசமாய்க் காத்த ஆரம்பித்தார்.
அவர்களின் சண்டை தொடக்கத்தில் "மகனின் படிப்பு, கவனச் சிதறல்" குறித்து ஆரம்பித்து, தற்போது தடம் மாறி இருவரின் சுயமரியாதைப் பிரச்சனையாக மாறிக் கொண்டிருந்தது. கோபம் இருவரையும் வாழ்க்கையின் முக்கியமான இலட்சியத்தையே மாற்றி தவறான பாதைக்குக் கொண்டு சென்று கொண்டிருந்தது............................................................
மேற்சொன்ன கதையின் அடுத்த சில வசனங்களை உறவுகளே உங்களிடம் விட்டுவிடுகிறேன். உங்கள் அபிப்பிராயம் சேர்த்து அடுத்த வசனங்களை இட்டு, கதையை தலைப்பின் ஒரு பகுதியான "அகங்காரம்" அல்லது மறு பகுதியான "மகனின் எதிர்காலம்" இவைகளில் ஒரு பக்கம் கொண்டு சென்று முடிக்கவும்.
உங்களின் மேலான கருத்துக்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இனியவரின் இனிய முடிவு அற்புதம். கீழே செல்லவும்.
அதற்கும் கீழே எனது முடிவை காணவும்.
குமரன் கோமதி தம்பதியினருக்கு இரு பிள்ளைகள். அவர்களுடைய மூத்த மகன் ரவி பள்ளி இறுதித் தேர்வு எழுத உள்ளான். குமரன் மகனின் எதிர்காலம் கருதி தன் எல்லா வேலைகளையும் தள்ளி வைத்துவிட்டு மகனின் படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தார். மகன் எந்த ஒரு விதத்திலும் படிப்பில் இருந்து கவனம் சிதறாமல் இருக்க, தன்னால் இயன்ற அளவு உதவிக் கொண்டிருந்தார்.
மகன் வாலிபப் பருவத்தின் முதல் நிலையில் இருந்ததால் பல சூழ்நிலைகளில் கவனம் சிதற வாய்ப்புள்ளது என்பதால் முடிந்தவரை அறிவுரைகள் கூறி அவனை ஒருநிலைப்படுத்த குமரன் முயன்று கொண்டு இருந்தார். அந்த முயற்சியில் படிப்படியாக வெற்றியும் கண்டுகொண்டிருந்தார்.
இந்த சூழலில், குமரன் தன் மனைவியிடம் தன் மகனின் படிப்பில் தான் காணும் வளர்ச்சி பற்றி தினமும் கூறிக்கொண்டிருப்பது வழக்கம். அவரின் மனைவியும் மகனுக்கு அறிவுரைகள் கூறியும் எதிர்காலத்திற்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்று உணர்த்திக்கொண்டிருப்பார்.
இப்படி இருக்க, ஒரு நாள் குமரன் மாலை வேலையில் அலுவலகத்தில் இருந்து அப்போதுதான் வீட்டில் நுழைகிறார். வந்தவருக்கு கோமதி தண்ணீர் கொடுத்தார். பிறகு, உடை மாற்றி முகம் கழுவி தன் மகன் படிக்கும் அறைக்குச் சென்று, மகனிடம் படிப்பு பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். கணவருக்கு தேநீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டு கோமதி மெதுவாக "உளுந்து வாங்கிவரச்சொல்லியிருந்தேனே, மறந்துவிட்டீர்கள் போலிருக்கிறதே. நாளைக்கு அமாவாசை. இட்லிக்கு மாவு அரைக்கணும். உளுந்து இப்ப ஊறப் போட்டத்தான், படுக்கும் முன்னால மாவு அரைத்து முடிக்க முடியும் " எனக் கேட்க
குமரன் "ஆமாமாம், அலுவலக வேலை அவசரத்தில் நீ சொன்னதையே மறந்து விட்டேன். இப்பப் போய் வாங்கிட்டு வந்திடறேன்" என கிளம்பப் போனார்.
ஆனால் கோமதி "இப்பத்தானே வந்தீங்க, களைப்பாக இருப்பீங்க. நான் ரவியை அனுப்பறேன்" எனக்கூற,
உடனே குமரன் "அவன் படித்துக்கொண்டிருக்கிறான். அவன ஏன் தொந்தரவு பண்ணனும். நான் போய் வாங்கிக்கிட்டு வந்துடறேன்" எனக் கூறி எழுந்தார்.
மீண்டும் கோமதி "இல்ல, இல்ல நான் அவனை அனுப்பறேன். நீங்க இருங்க" என்று கூறிக் கொண்டே, "ரவி, கொஞ்சம் கடைக்குப் போய், ஒரு கிலோ உளுந்து வாங்கிக்கிட்டு அப்படியே பச்ச மிளகாயும், தேங்காயும் வாங்கிட்டு வாப்பா எனக் கூற,
குமரன் மீண்டும் மறுத்து, "நான் போறேம்மா, அவன் படிக்கட்டும்" என்று கூறிக் கொண்டே தன் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டார்.
கோமதி "நான்தான் சொல்றேனே அவன் போகட்டும்னு. நீங்க ஏன் இப்படிப் பண்றீங்க?" என்று சற்று கோபமாகவே கேட்டார்.
குமரன் "அவன் கவனம் சிதற வேண்டாம்னு தான் சொல்றேன். நீ ஏன் கேட்க மாட்டேன்கிறாய்?" எனச் சற்று சத்தமாகக் கேட்டார்.
கோமதி "இப்ப கடைக்கு போறதுல தான் படிப்பு கேட்டுப் போய்டுமாக்கும்? நான் அவன வேலை சொல்ல, நீங்க அவனுக்கு ஆதரவாப் பேச, அவன் என் பேச்ச மதிக்கக் கூடாது. அப்படித்தானே?" என உச்சக் குரலில் கேட்க,
குமரன் "இதில் என்ன இருக்கிறது? உனக்குத் தேவை உளுந்து. அதை யார் வாங்கி வந்தால் என்ன? " என ஏளனமாகக் கேட்டார்.
அதற்கு கோமதி "அப்போ, நான் சொல்லி கூட அவனை நீங்க அனுப்ப மாட்டீங்க. அப்படித்தானே?" என கண்களின் கண்ணீர் கன்னத்தில் வழிய, அதை துடைத்துக்கொண்டே கேட்டார்.
பதிலுக்கு குமரன் "ஆமாம், அனுப்ப மாட்டேன். எனக்கு அவன் படிப்புதான் முக்கியம். இப்ப என்னன்ற நீ?" என ஆண் என்ற ஆணவம் பேச்சில் தெரிய பொரிந்து தள்ளினார்.
கோமதி "பசங்க, என்ன மதிக்கலைனா உங்களுக்கு சந்தோஷம் தானே?" எனப் புலம்ப,
குமரன் "ஆமா, பசங்க என்னை மட்டும் தான் மதிக்கணும், உன்னை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை" என தடம் மாறி ஆவேசமாய்க் காத்த ஆரம்பித்தார்.
அவர்களின் சண்டை தொடக்கத்தில் "மகனின் படிப்பு, கவனச் சிதறல்" குறித்து ஆரம்பித்து, தற்போது தடம் மாறி இருவரின் சுயமரியாதைப் பிரச்சனையாக மாறிக் கொண்டிருந்தது. கோபம் இருவரையும் வாழ்க்கையின் முக்கியமான இலட்சியத்தையே மாற்றி தவறான பாதைக்குக் கொண்டு சென்று கொண்டிருந்தது............................................................
மேற்சொன்ன கதையின் அடுத்த சில வசனங்களை உறவுகளே உங்களிடம் விட்டுவிடுகிறேன். உங்கள் அபிப்பிராயம் சேர்த்து அடுத்த வசனங்களை இட்டு, கதையை தலைப்பின் ஒரு பகுதியான "அகங்காரம்" அல்லது மறு பகுதியான "மகனின் எதிர்காலம்" இவைகளில் ஒரு பக்கம் கொண்டு சென்று முடிக்கவும்.
உங்களின் மேலான கருத்துக்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இனியவரின் இனிய முடிவு அற்புதம். கீழே செல்லவும்.
அதற்கும் கீழே எனது முடிவை காணவும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல முயற்சி சந்திரா - பிறகு வருகிறேன் இங்கே.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
தங்களின் கதைப்போக்கை காணும் ஆவலுடன் ச. சந்திரசேகரன்.யினியவன் wrote:நல்ல முயற்சி சந்திரா - பிறகு வருகிறேன் இங்கே.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
இப்போது வரை 66 பேர் படித்துள்ளனர். ஆனால் கதையின் அடுத்த சில வரிகளை யாரும் ஏன் எழுத எத்தனிக்கவில்லை? இக்கதையின் முடிவு நாளை இரவு எழுதப்படும். உறவுகள் அதற்குமுன் எழுத முயற்சிக்கவும். ஆவலுடன் ச. சந்திரசேகரன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
யாராவது எழுதுவாங்கன்னு காத்திருந்தேன் - சரி நான் எழுதறேன் நீங்கள் பதிவிடும் முன்னர் சந்திரா.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உள்ளே படித்துக் கொண்டிருந்த ரவி புத்தகமும் கையுமாக ஓடி வந்தான் வரவேற்பறைக்கு தாயும் தந்தையும் கடிந்த சொற்களால் ஒருவரை ஒருவர் குறை கூறுவது கேட்டு.
ரவி வந்தவுடன் குமரனும் கோமதியும் சிறிது அமைதியானார்கள்.
குடுங்கம்மா பைய நானே கடைக்கு போயி வாங்கிட்டு வர்றேன் என்றதை கேட்டு குமரன் இல்லப்பா நான் போயிட்டு வரேன் - நீ உனது பாடத்தை படி என்றார்.
இல்லப்பா இவ்வளவு நேரம் படித்ததால் சிறிது நேரம் விட்டு படிக்கலாம்ன்னு நானே தம்பியுடன் கொஞ்சம் விளையாட நினைத்தேன் - அதற்கு பதில் அவனோடு கடைக்கு சென்று வருகிறேன் என்றான்.
அப்பா அம்மா நீங்கள் இருவரும் எனக்கு படிக்க சிறிது உதவனும் என்றான் ரவி. குமரனும் கோமதியும் ஒருசேர சொல்லுப்பா என்றனர்.
எனக்கு இந்த இரு குறளுக்கும் நல்ல விளக்கம் எளிமையா வேணும் - நாளை இந்த குறள்கள் இரண்டையும் அசெம்பிளியில் நான் மாணவர்கள் அனைவருக்கும் சொல்லி விளக்க வேண்டும் என்று சொல்லி கீழ்க்கண்ட குறள்கள் உள்ள நோட்டை அவர்கள் கையில் கொடுத்துவிட்டு தம்பியுடன் கடைக்கு சென்றுவிட்டான் அமைதியாக.
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்
குமரனும் கோமதியும் வள்ளுவரின் வாக்கை படித்து அப்படியே அமைதியாகி வெட்கி தலை குனிந்தனர். ஒருபுறம் நல்ல மகனை பெற்றெடுத்த பெருமை இருந்தாலும் மறுபுறம் இருவருக்குமே தாங்கள் அப்படி சண்டை இட்டுக்கொண்டது சங்கடத்தை தந்தது.
குறளின் அர்த்தம் புரிந்த இருவரும் இனி இவ்வாறு நடப்பதில்லை என மனதில் எண்ணிக் கொண்டே கண்களால் ஒருவர் மற்றவரிடம் மன்னிக்க வேண்டினர்.
தங்களை அறியாமலே இருவரின் கைகளும் இனைந்து கொண்டன - ஒருசேர அவர்கள் பார்வையில் ரவியின் ஒளிமயமான எதிர்காலம் தெரிந்தது.....
ரவி வந்தவுடன் குமரனும் கோமதியும் சிறிது அமைதியானார்கள்.
குடுங்கம்மா பைய நானே கடைக்கு போயி வாங்கிட்டு வர்றேன் என்றதை கேட்டு குமரன் இல்லப்பா நான் போயிட்டு வரேன் - நீ உனது பாடத்தை படி என்றார்.
இல்லப்பா இவ்வளவு நேரம் படித்ததால் சிறிது நேரம் விட்டு படிக்கலாம்ன்னு நானே தம்பியுடன் கொஞ்சம் விளையாட நினைத்தேன் - அதற்கு பதில் அவனோடு கடைக்கு சென்று வருகிறேன் என்றான்.
அப்பா அம்மா நீங்கள் இருவரும் எனக்கு படிக்க சிறிது உதவனும் என்றான் ரவி. குமரனும் கோமதியும் ஒருசேர சொல்லுப்பா என்றனர்.
எனக்கு இந்த இரு குறளுக்கும் நல்ல விளக்கம் எளிமையா வேணும் - நாளை இந்த குறள்கள் இரண்டையும் அசெம்பிளியில் நான் மாணவர்கள் அனைவருக்கும் சொல்லி விளக்க வேண்டும் என்று சொல்லி கீழ்க்கண்ட குறள்கள் உள்ள நோட்டை அவர்கள் கையில் கொடுத்துவிட்டு தம்பியுடன் கடைக்கு சென்றுவிட்டான் அமைதியாக.
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்
குமரனும் கோமதியும் வள்ளுவரின் வாக்கை படித்து அப்படியே அமைதியாகி வெட்கி தலை குனிந்தனர். ஒருபுறம் நல்ல மகனை பெற்றெடுத்த பெருமை இருந்தாலும் மறுபுறம் இருவருக்குமே தாங்கள் அப்படி சண்டை இட்டுக்கொண்டது சங்கடத்தை தந்தது.
குறளின் அர்த்தம் புரிந்த இருவரும் இனி இவ்வாறு நடப்பதில்லை என மனதில் எண்ணிக் கொண்டே கண்களால் ஒருவர் மற்றவரிடம் மன்னிக்க வேண்டினர்.
தங்களை அறியாமலே இருவரின் கைகளும் இனைந்து கொண்டன - ஒருசேர அவர்கள் பார்வையில் ரவியின் ஒளிமயமான எதிர்காலம் தெரிந்தது.....
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
இனியவரின் இனிய கதையோட்டத்துக்கு
நாளை எனது முடிவு காண்பீர். இரவு வணக்கங்கள்.
நாளை எனது முடிவு காண்பீர். இரவு வணக்கங்கள்.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
கதையின் கடைசி காட்சிகள்.ச. சந்திரசேகரன் wrote:சிறுகதை - "நம் அகங்காரமா?" "மகனின் எதிர்காலமா?"
அவர்களின் சண்டை தொடக்கத்தில் "மகனின் படிப்பு, கவனச் சிதறல்" குறித்து ஆரம்பித்து, தற்போது தடம் மாறி இருவரின் சுயமரியாதைப் பிரச்சனையாக மாறிக் கொண்டிருந்தது. கோபம் இருவரையும் வாழ்க்கையின் முக்கியமான இலட்சியத்தையே மாற்றி தவறான பாதைக்குக் கொண்டு சென்று கொண்டிருந்தது............................................................
இருவரின் சண்டை முற்றி, தொடர்ந்து பேசிய கோமதியின் கன்னத்தில் குமரன் அரக்கத்தனமாய் ஒரு அறை விட்டார். விழுந்த அறையின் பலம் அதிகமாக இருக்கவே அதே வேகத்தில் கோமதி அருகில் இருந்த சுவரின் விளிம்பில் இடித்து நிலை தடுமாறி கீழே விழ, கோமதியின் நெற்றியிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியது. பக்கத்து அறையில் இருந்த ரவியும், மற்றொரு அறையில் இருந்த அவனது தம்பியும் ஓடி வந்தனர்.
ரத்தத்தை கண்டதும் குமரன் செய்வதறியாது உடனே கோமதியை வாரியெடுத்துக் கொண்டார். ரவியிடம் உடனே ஒரு ஆட்டோ கொண்டு வருமாறு கூறிக் கொண்டே கோமதியை தூக்கிக்கொண்டு வாசலுக்கு ஓடினார்.
இரு தினங்களுக்குப் பிறகு,
மருத்துவமனையில், நெற்றியில் கட்டோடு கோமதி படுத்திருக்க, அருகில் இரு மகன்களும் குமரனும் இருந்தனர்.
குமரன் மெல்ல கோமதியின் கையை பிடித்துக் கொண்டு, "கோமு, என்னை மன்னிச்சிடும்மா. பையன் படிப்பு மேல உள்ள அக்கறையில அரக்கத்தனமா நடந்துகிட்டேன்." என மன்னிப்புக் கேட்க,
கோமதி "இல்லங்க, தப்பு என் மேலதான். அன்னைக்கி நான் அப்படி பேசியிருக்கக் கூடாது." எனச் சொல்ல,
ரவி "ரெண்டு பேர் மேலயும் தப்பே இல்லை. நான்தான் தப்பு பண்ணிட்டேன். இந்த மாதிரி சின்ன சின்ன வேலைகளை தினமும் செய்து பழகாம விட்டுட்டேன். இனி நானும் ஒழுங்கா நடந்துப்பேன். தம்பிக்கும் கற்றுத் தருவேன். என்னை ரெண்டு பேரும் மன்னிச்சிடுங்க" என மன்னிப்புக் கேட்க,
ரவியின் தம்பி "கடவுள் புண்ணியத்துல அம்மவுக்கு ஒண்ணும் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டாரு. நான் உங்க எல்லாரையும் மன்னிச்சிடுறேன்." என்று கூறி சிரிக்க,
குமரன் செல்லமாக அவனை கன்னத்தில் கிள்ளினார்.
ஒரு வாரத்தில் கோமதி குணமாகி வீட்டுக்கு வந்தார்.
ரவி மிக அக்கறையோடு படிப்பை தொடர்ந்தான்.
குடும்பமே அவனுக்கு பக்கபலமாக இருந்தது.
ரவி பள்ளியிலேயே முதல் மாணவனாக தேறினான்.
IIT நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, அவனுக்கு விருப்பமான துறையில் சேர்ந்து தொடர்ந்து வெற்றிகளை குவித்துக் கொண்டிருந்தான்.
உறவுகளே நீங்களும் இந்த கதைக்கு இனியவன் அவர்கள் மேலே கூறியதைப் போல வேறு முடிவுகளை இங்கு பகருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மற்றவர்கள் தங்கள் மேலான கருத்துக்களை வழங்குவீர்களா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்கள் முடிவும் நன்று சந்திரா.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
இனியவருக்கு நன்றிகள்.யினியவன் wrote:உங்கள் முடிவும் நன்று சந்திரா.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|