புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமணியின் கவிதைகள்
Page 12 of 36 •
Page 12 of 36 • 1 ... 7 ... 11, 12, 13 ... 24 ... 36
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
உள்ளடங்கிய நான்கு பாடல்கள்:
வஞ்சித் துறை
முன்னை வினைகள்
இன்னும் வினைகள்
உன்னத் தெரியேன்
மன்னித் தருள்வீர்! ... 1.
வஞ்சித் துறை
முற்றும் சூழ்வது
இற்றுப் போகவே
சுற்றம் ஆகுவீர்
பற்றை நீக்கியே! ... 2.
வஞ்சி விருத்தம்
குன்றச் செய்வீர் கோமானே!
என்றும் அருள்வீர் பெம்மானே!
துன்மை யுரைப்பீர் முக்கண்ணா!
நன்மை விளைப்பீர் கங்காளா! ... 3.
கலித் துறை
முற்றும் சூழ்வது குன்றச் செய்வீர் கோமானே!
இற்றுப் போகவே என்றும் அருள்வீர் பெம்மானே!
சுற்றம் ஆகுவீர் துன்மை யுரைப்பீர் முக்கண்ணா!
பற்றை நீக்கியே நன்மை விளைப்பீர் கங்காளா! ... 4
-- ரமணி
*****
வஞ்சித் துறை
முன்னை வினைகள்
இன்னும் வினைகள்
உன்னத் தெரியேன்
மன்னித் தருள்வீர்! ... 1.
வஞ்சித் துறை
முற்றும் சூழ்வது
இற்றுப் போகவே
சுற்றம் ஆகுவீர்
பற்றை நீக்கியே! ... 2.
வஞ்சி விருத்தம்
குன்றச் செய்வீர் கோமானே!
என்றும் அருள்வீர் பெம்மானே!
துன்மை யுரைப்பீர் முக்கண்ணா!
நன்மை விளைப்பீர் கங்காளா! ... 3.
கலித் துறை
முற்றும் சூழ்வது குன்றச் செய்வீர் கோமானே!
இற்றுப் போகவே என்றும் அருள்வீர் பெம்மானே!
சுற்றம் ஆகுவீர் துன்மை யுரைப்பீர் முக்கண்ணா!
பற்றை நீக்கியே நன்மை விளைப்பீர் கங்காளா! ... 4
-- ரமணி
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
மரபு வித்தகம் 3.
வினா உத்தரம்
இவ்வகைப் பாடல்களில் கேள்விகளும் அவற்றின் விடைகளும் இருக்கும்.
விடைகளை இணைத்தால் செய்யுள் குறிக்கும் பெயராகும்.
எரிவ தெதுவோ விளக்கிலே? மன்னன்
அரிவை இடம்பின் பதமெது? சொல்லெதிர்
’இந்த’வுக் கென்ன? இவற்றோடு ’கன்’சேர
வந்த சிவநா மமே. ... 1.
விடை:
கேள்விகளுக்கு விடை முறையே திரி, (அந்தப்)புரம், அந்த.
இவற்றோடு ’கன்’ விகுதி சேர வந்த சிவநாமம் ’திரிபுராந்தகன்’
*****
இதுபோல் இந்தப் பாடலின் விடையைக் காண்டுபிடியுங்கள்.
வரதுங்க ராமமன்னன் அந்தாதி சொல்லும்
கருவைத் தலமிது! யானையின்னோர் பேரெதுவோ?
அம்மைக்கெப் பக்கமத்தன்? ’போன’ எதிர்ப்பதம்?
செம்மைநல் லூர்சேர்க்க வே. ... 2.
*****
வினா உத்தரம்
இவ்வகைப் பாடல்களில் கேள்விகளும் அவற்றின் விடைகளும் இருக்கும்.
விடைகளை இணைத்தால் செய்யுள் குறிக்கும் பெயராகும்.
எரிவ தெதுவோ விளக்கிலே? மன்னன்
அரிவை இடம்பின் பதமெது? சொல்லெதிர்
’இந்த’வுக் கென்ன? இவற்றோடு ’கன்’சேர
வந்த சிவநா மமே. ... 1.
விடை:
கேள்விகளுக்கு விடை முறையே திரி, (அந்தப்)புரம், அந்த.
இவற்றோடு ’கன்’ விகுதி சேர வந்த சிவநாமம் ’திரிபுராந்தகன்’
*****
இதுபோல் இந்தப் பாடலின் விடையைக் காண்டுபிடியுங்கள்.
வரதுங்க ராமமன்னன் அந்தாதி சொல்லும்
கருவைத் தலமிது! யானையின்னோர் பேரெதுவோ?
அம்மைக்கெப் பக்கமத்தன்? ’போன’ எதிர்ப்பதம்?
செம்மைநல் லூர்சேர்க்க வே. ... 2.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
சென்ற அஞ்சலில் இரண்டாம் பாட்டு:
கேள்விகளுக்கு விடை முறையே: கரி, வலம், வந்த
கரிவலம்வந்த நல்லூர்
மரபு வித்தகம் 4.
சர-மழை
கனவும் நனவும் உளமே விளையும்
நனவும் மறுநாள் கனவாய் இரியும்
உளமே கனவாய் உருவாய் வரத்து
விளையும் இரியும் வரத்து.
[இரிதல்=கெடுதல், ஓடுதல், விலகுதல், வடிதல், அஞ்சுதல்]
மேலே உள்ள வெண்பாவின் சிறப்பு என்ன?
--ரமணி
*****
கேள்விகளுக்கு விடை முறையே: கரி, வலம், வந்த
கரிவலம்வந்த நல்லூர்
மரபு வித்தகம் 4.
சர-மழை
கனவும் நனவும் உளமே விளையும்
நனவும் மறுநாள் கனவாய் இரியும்
உளமே கனவாய் உருவாய் வரத்து
விளையும் இரியும் வரத்து.
[இரிதல்=கெடுதல், ஓடுதல், விலகுதல், வடிதல், அஞ்சுதல்]
மேலே உள்ள வெண்பாவின் சிறப்பு என்ன?
--ரமணி
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
மேலுள்ள வெண்பாவின் சிறப்பு:
இடம்-வலம் படித்தாலும், மேல்-கீழ் படித்தாலும் அதுவாகவே அமைந்த வெண்பா.
மரபு வித்தகம் 5.
நிரோட்டம் அல்லது இதழகலி
இனியொரு நிரோட்ட வெண்பா. இதன் சொற்களைப் படிக்கும்போது உதடுகள் ஒட்டாமலோ
குவியாமலோ அமைவதால் இது நிரோட்டம் அல்லது இதழகலி என்று பெயர் பெறும்.
என்னென்ன நானில்லை என்றறியச் செய்தாய்நீ
என்னதான் நானெனக் கேட்டேன்நான் - என்னைநீ
என்றழைக்கா தேநீயே நான்நானே நீதெளி
யென்றானே நெஞ்சி லிறை.
--ரமணி
*****
இடம்-வலம் படித்தாலும், மேல்-கீழ் படித்தாலும் அதுவாகவே அமைந்த வெண்பா.
மரபு வித்தகம் 5.
நிரோட்டம் அல்லது இதழகலி
இனியொரு நிரோட்ட வெண்பா. இதன் சொற்களைப் படிக்கும்போது உதடுகள் ஒட்டாமலோ
குவியாமலோ அமைவதால் இது நிரோட்டம் அல்லது இதழகலி என்று பெயர் பெறும்.
என்னென்ன நானில்லை என்றறியச் செய்தாய்நீ
என்னதான் நானெனக் கேட்டேன்நான் - என்னைநீ
என்றழைக்கா தேநீயே நான்நானே நீதெளி
யென்றானே நெஞ்சி லிறை.
--ரமணி
*****
படித்தால் எனக்கு மயக்கம் மட்டுமே வருகிறது!என்னென்ன நானில்லை என்றறியச் செய்தாய்நீ
என்னதான் நானெனக் கேட்டேன்நான் - என்னைநீ
என்றழைக்கா தேநீயே நான்நானே நீதெளி
யென்றானே நெஞ்சி லிறை.
உதடுகள் ஒட்டவில்லை! அருமை!
இதழகலி என்னும் தமிழ் வார்த்தையை இன்றுதான் முதன் முதலில் அறிந்து கொண்டேன்!
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
வணக்கம் சிவா.
பாராட்டுக்கு நன்றி.
இன்னொரு உத்தியும் தெரிந்துகொள்ளுங்கள்: இதழுறல் அல்லது இதழுறலி.
அதாவது, ஒவ்வொரு சொல்லிலோ/சீரிலோ உதடுகள் ஒட்டுமாறோ, குவியுமாறோ பாடுவது.
மரபு வித்தகம் 6.
இதழுறல் அல்லது இதழுறலி
ஒவ்வொரு சீரிலும் (குறைந்தது ஓர்) இதழுறல் வருவது:
மானு மழுவு மிருபுஜ மோங்குமே
வானம் புவனமு மாண்டு மழித்துமே
மொய்ம்புறக் காப்பவன் மாண்புறு மாபதி
மெய்யவன் பாடியே போற்று.
பதம் பிரித்து:
மானு(ம்) மழுவும் இருபுஜம் ஓங்குமே
வானம் புவனமும் ஆண்டும் அழித்துமே
மொய்ம்புறக் காப்பவன் மாண்பு(று) உமாபதி
மெய்யவன் பாடியே போற்று.
எல்லா எழுத்துகளிலும் இதழுறல் வந்தது:
குப்பம்மா பாப்பா உவப்பது உப்புமா
சுப்பம்மா பூமா உவப்பது உப்புமா
உப்பொடு மாவுமே உப்புமா வாகுமே
உப்புமா போடு உமா!
--ரமணி
*****
தமிழில் உள்ள 247 எழுத்துகளில் இதழுறல்--அதாவது உச்சரிப்பில் இதழ்கள் ஒட்டியோ குவிந்தோ சொல்வது மொத்தம் 119. இவை போக மீதியுள்ள 128 எழுத்துகளும் இதழகலி எழுதப் பயன்படும் எழுத்துகளாகும்.
உ,ஊ,ஒ,ஓ,ஔ உயிர்களுடன்,
ப், ம், வ் மெய்களும் சேர்ந்து 8
ப்,ம்,வ் 12 உயிர்கள் உறழ்ந்து 36
உ,ஊ,ஒ,ஓ,ஔ x15 மெய்யுடன்
உறழ்ந்து, (ப்,ம்,வ் நீங்கலாக) 75
ஆக 119.
அன்புடன்,
ரமணி
*****
பாராட்டுக்கு நன்றி.
இன்னொரு உத்தியும் தெரிந்துகொள்ளுங்கள்: இதழுறல் அல்லது இதழுறலி.
அதாவது, ஒவ்வொரு சொல்லிலோ/சீரிலோ உதடுகள் ஒட்டுமாறோ, குவியுமாறோ பாடுவது.
மரபு வித்தகம் 6.
இதழுறல் அல்லது இதழுறலி
ஒவ்வொரு சீரிலும் (குறைந்தது ஓர்) இதழுறல் வருவது:
மானு மழுவு மிருபுஜ மோங்குமே
வானம் புவனமு மாண்டு மழித்துமே
மொய்ம்புறக் காப்பவன் மாண்புறு மாபதி
மெய்யவன் பாடியே போற்று.
பதம் பிரித்து:
மானு(ம்) மழுவும் இருபுஜம் ஓங்குமே
வானம் புவனமும் ஆண்டும் அழித்துமே
மொய்ம்புறக் காப்பவன் மாண்பு(று) உமாபதி
மெய்யவன் பாடியே போற்று.
எல்லா எழுத்துகளிலும் இதழுறல் வந்தது:
குப்பம்மா பாப்பா உவப்பது உப்புமா
சுப்பம்மா பூமா உவப்பது உப்புமா
உப்பொடு மாவுமே உப்புமா வாகுமே
உப்புமா போடு உமா!
--ரமணி
*****
தமிழில் உள்ள 247 எழுத்துகளில் இதழுறல்--அதாவது உச்சரிப்பில் இதழ்கள் ஒட்டியோ குவிந்தோ சொல்வது மொத்தம் 119. இவை போக மீதியுள்ள 128 எழுத்துகளும் இதழகலி எழுதப் பயன்படும் எழுத்துகளாகும்.
உ,ஊ,ஒ,ஓ,ஔ உயிர்களுடன்,
ப், ம், வ் மெய்களும் சேர்ந்து 8
ப்,ம்,வ் 12 உயிர்கள் உறழ்ந்து 36
உ,ஊ,ஒ,ஓ,ஔ x15 மெய்யுடன்
உறழ்ந்து, (ப்,ம்,வ் நீங்கலாக) 75
ஆக 119.
அன்புடன்,
ரமணி
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
மெழுகில் உருவாகும் மாயை
(நேரிசை/இன்னிசை வெண்பா)
இறவா உடலே மெழுகுரு என்பர்
பிறவா உடலும் இதுவே - உறவாம்
உயிரின்றி உய்யும் உயிர்ச்சிலை யென்று
துயிலும் மனங்கொள் ளுரு. ... 1
மெய்யிதுவே பொய்யாம் மெழுகதை மேன்மேலும்
மெய்யாக்கும் அல்லது பொய்யாக்கும்! - ஐயா!
உளங்கொள் உருவங்கள் ஒற்றும் மெழுகின்
தளுக்கில் உலவுமே மாசு. ... 2
இரும்புக் கலையம் மெழுகு கொதித்துத்
தருவித்த அச்சுகளில் கால்கைத் தலையாய்
தனியே உறைந்து பசையொட்டித் தைத்துக்
கனவுச் சிலைகை வரும். ... 3
கோலி விழிகளும் கூந்தல் உடற்கூறும்
தோலும் மெழுகிளகித் தோய அனலில்
அலகுகள் ஊசிகள் ஆக்கிடும் பொம்மை
பலவகை ஆடை பெறும். ... 4
புகழுக் கிணையாய்ப் பொருளதுவும் சேர
அகம்கொள்ளும் காட்சியக ஆளுருவம் அல்லாது
வீட்டில் குழந்தை விளையாடும் பொம்மையின்
ஊட்டம் மெழுகின் உரு. ... 5
குழந்தை மரபொம்மைச் சொப்புகள் நாள்போய்
மெழுகு நெகிழி விளையாட்டுச் சாமான்கள்
காற்றுநீர் மேனியும் மாசுறுதல் கண்ணுறாது
போற்றி மகிழும் உலகு. ... 6
--ரமணி, 14/11/2013, கலி.28/07/5114
உதவி:
How to Make Wax Dolls
http://www.ehow.com/how_4728241_make-wax-dolls.html
Environmental Pollution: How Toys Contribute to the Problem
http://www.brighthub.com/environment/green-living/articles/62042.aspx
படங்கள் உதவி:
http://www.pardaphash.com/news/overwhelmed-prabhu-deva-uncovers-his-wax-statue-at-lonavala-wax-museum/721511.html#.UoTeVuWC1CY
https://smalltreasuresdollcollectors.wordpress.com/2013/10/26/complete-history-of-wax-dolls/
*****
ரமணி wrote:வணக்கம் சிவா.
பாராட்டுக்கு நன்றி.
இன்னொரு உத்தியும் தெரிந்துகொள்ளுங்கள்: இதழுறல் அல்லது இதழுறலி.
அதாவது, ஒவ்வொரு சொல்லிலோ/சீரிலோ உதடுகள் ஒட்டுமாறோ, குவியுமாறோ பாடுவது.
மரபு வித்தகம் 6.
இதழுறல் அல்லது இதழுறலி
ஒவ்வொரு சீரிலும் (குறைந்தது ஓர்) இதழுறல் வருவது:
மானு மழுவு மிருபுஜ மோங்குமே
வானம் புவனமு மாண்டு மழித்துமே
மொய்ம்புறக் காப்பவன் மாண்புறு மாபதி
மெய்யவன் பாடியே போற்று.
பதம் பிரித்து:
மானு(ம்) மழுவும் இருபுஜம் ஓங்குமே
வானம் புவனமும் ஆண்டும் அழித்துமே
மொய்ம்புறக் காப்பவன் மாண்பு(று) உமாபதி
மெய்யவன் பாடியே போற்று.
எல்லா எழுத்துகளிலும் இதழுறல் வந்தது:
குப்பம்மா பாப்பா உவப்பது உப்புமா
சுப்பம்மா பூமா உவப்பது உப்புமா
உப்பொடு மாவுமே உப்புமா வாகுமே
உப்புமா போடு உமா!
--ரமணி
*****
தமிழில் உள்ள 247 எழுத்துகளில் இதழுறல்--அதாவது உச்சரிப்பில் இதழ்கள் ஒட்டியோ குவிந்தோ சொல்வது மொத்தம் 119. இவை போக மீதியுள்ள 128 எழுத்துகளும் இதழகலி எழுதப் பயன்படும் எழுத்துகளாகும்.
உ,ஊ,ஒ,ஓ,ஔ உயிர்களுடன்,
ப், ம், வ் மெய்களும் சேர்ந்து 8
ப்,ம்,வ் 12 உயிர்கள் உறழ்ந்து 36
உ,ஊ,ஒ,ஓ,ஔ x15 மெய்யுடன்
உறழ்ந்து, (ப்,ம்,வ் நீங்கலாக) 75
ஆக 119.
அன்புடன்,
ரமணி
*****
நன்றி அண்ணா!
அனைத்தும் புதிதாக உள்ளது! புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்!
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 12 of 36 • 1 ... 7 ... 11, 12, 13 ... 24 ... 36
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 36
|
|