புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமணியின் கவிதைகள்
Page 11 of 36 •
Page 11 of 36 • 1 ... 7 ... 10, 11, 12 ... 23 ... 36
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!
குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!
குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!
கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.
உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!
இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!
விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.
இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.
இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்
பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து
பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்
தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?
கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.
பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
மணப்பாரை முறுக்கு வியாபாரி
’ஒன்றே குலமாம் ஒருவனே தேவன்
அன்றே சொன்னார் அறிஞர் அண்ணா!
இந்தக் கூற்றுக் கேற்பச் செய்தது
வந்து வாங்குமணப் பாரை முறுக்கு!’
சைக்கிள் மணிக்குரல் மதியம் கேட்கக்
கைக்குழந் தைகளும் எட்டிப் பார்க்குமே!
ஆடிப் பேழையில் சைக்கிள் இருக்கையில்
சூடாய்க் கொள்ளும் முறுக்கை வாங்க
வீடுகள் தூக்கம் விழித்தே மதியம்
கூடி நிற்கக் கூட்டம் களிக்க
நாசியில் இறங்கும் கண்வழி பார்த்தவர்
பேசிய மொழியில் பேதைய ரானோம்!
பொன்மொழி யறிஞர் முறுக்குகள் விற்பர்!
மென்திரைப் பாடலும் விற்கும் முறுக்கை!
பாட்டோ பேச்சோ ஏற்கச் செய்வதாம்
கேட்டே விட்டேன் எப்படி யென்றே
மீட்டிங், வீட்டில் தின்னும் முறுக்கு
பாட்டிடைப் பேச்சிட தானே என்றார்!
*****
’ஒன்றே குலமாம் ஒருவனே தேவன்
அன்றே சொன்னார் அறிஞர் அண்ணா!
இந்தக் கூற்றுக் கேற்பச் செய்தது
வந்து வாங்குமணப் பாரை முறுக்கு!’
சைக்கிள் மணிக்குரல் மதியம் கேட்கக்
கைக்குழந் தைகளும் எட்டிப் பார்க்குமே!
ஆடிப் பேழையில் சைக்கிள் இருக்கையில்
சூடாய்க் கொள்ளும் முறுக்கை வாங்க
வீடுகள் தூக்கம் விழித்தே மதியம்
கூடி நிற்கக் கூட்டம் களிக்க
நாசியில் இறங்கும் கண்வழி பார்த்தவர்
பேசிய மொழியில் பேதைய ரானோம்!
பொன்மொழி யறிஞர் முறுக்குகள் விற்பர்!
மென்திரைப் பாடலும் விற்கும் முறுக்கை!
பாட்டோ பேச்சோ ஏற்கச் செய்வதாம்
கேட்டே விட்டேன் எப்படி யென்றே
மீட்டிங், வீட்டில் தின்னும் முறுக்கு
பாட்டிடைப் பேச்சிட தானே என்றார்!
*****
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
மணப்பாறை முறுக்கு...கவிதை ...
-
சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னல்,
தஞ்சாவூர் வீணை,
மணப்பாறை முறுக்கு, மதுரை மல்லி
ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெற தமிழக அரசு
முயற்சி மேற்கொண்டுள்ளது என்றார்
தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்பக் குழு
உறுப்பினர்...
-
புவிசார் குறீயீடு கிடைத்து விட்டதா என தெரியவில்லை...
-
http://dinamani.com/edition_trichy/article1197299.ece?service=print
-
சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னல்,
தஞ்சாவூர் வீணை,
மணப்பாறை முறுக்கு, மதுரை மல்லி
ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெற தமிழக அரசு
முயற்சி மேற்கொண்டுள்ளது என்றார்
தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்பக் குழு
உறுப்பினர்...
-
புவிசார் குறீயீடு கிடைத்து விட்டதா என தெரியவில்லை...
-
http://dinamani.com/edition_trichy/article1197299.ece?service=print
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
சாணை பிடிப்பவர்
’சாணை பிடிக்கலையோ சாணை!’ என்பவர்
காணற் கரியஆ ளாகிப் போனார்!
தோளில் கனக்கும் சுமையுடன் நடந்தே
நாளெலாம் அலைந்தே நளபாகப் படைக்கலன்
கூராக்கித் தந்துதவக் குழம்பும் கறியும்
வேராக விழுதாக இறங்கும் நாவழியே!
சங்க விலக்கியம் சாணையைப் பேசும்
அங்கம் தழீஇத் தலைவியைத் தலைவன்
பிரியும் போது செப்பும் மொழியிதே
’சிறுகா ரோடன் அரக்கொடு சேர்த்த
சாணைக் கற்போல் நானும் நீயும்!’
ஆணவன் பிரிய வருந்தினாள் பெண்ணே!*
சாணைக் கருவி தரையில் இறங்கக்
காணக் குழந்தையர் வருவர் திரளாய்
கால்மிதித் தியங்கும் சாணைக் கல்மேல்
வால்மீன் தீப்பொறி காற்றில் மறையக்
கத்தியரி வாள்மணை கத்திரிக் கோலும்
எத்தனைக் கூரென வியக்க வைக்குமே!*
திருப்பூர் அருகோர் கிராமம் முழுதும்
திருத்தும் கூர்தொழில் செய்யுமே சென்னையில்!
வீடுகள் விடுதிகள் வாடிக்கை சேர்த்து
பாடுறும் தொழிலில் பயனெதும் இலையெனத்
தோள்சுமைச் சாணைத் தொழிலனு பவமென
நாளிதழ் ஒன்று கண்டறிந் ததுவே!
எந்திரம் வாழ்வை இயக்கும் இந்நாள்
அந்தர மாகும் கைத்தொழிற் கல்வியே
ஆலைத் தொழில்களின் ஆடிக் காற்றில்
வேலையும் வேலை யில்லா நிலயையுமே!
உதிரித் தொழிலின் சுதந்திரம் இப்படிச்
சிதறிப் போக விடுதல் நன்றோ?
--ரமணி
குறிப்பு:
1. ’சிறுகா ரோடன்’
’சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய
கல்போற் பிரியல மென்ற சொல்தான்
மறந்தனர் கொல்லோ தோழி!’
--அகநானூறு 1.
2. ’தினமணி நாளிதழ் செய்தி’
http://dinamani.com/specials/kannottam/article1090116.ece?service=print
*****
’சாணை பிடிக்கலையோ சாணை!’ என்பவர்
காணற் கரியஆ ளாகிப் போனார்!
தோளில் கனக்கும் சுமையுடன் நடந்தே
நாளெலாம் அலைந்தே நளபாகப் படைக்கலன்
கூராக்கித் தந்துதவக் குழம்பும் கறியும்
வேராக விழுதாக இறங்கும் நாவழியே!
சங்க விலக்கியம் சாணையைப் பேசும்
அங்கம் தழீஇத் தலைவியைத் தலைவன்
பிரியும் போது செப்பும் மொழியிதே
’சிறுகா ரோடன் அரக்கொடு சேர்த்த
சாணைக் கற்போல் நானும் நீயும்!’
ஆணவன் பிரிய வருந்தினாள் பெண்ணே!*
சாணைக் கருவி தரையில் இறங்கக்
காணக் குழந்தையர் வருவர் திரளாய்
கால்மிதித் தியங்கும் சாணைக் கல்மேல்
வால்மீன் தீப்பொறி காற்றில் மறையக்
கத்தியரி வாள்மணை கத்திரிக் கோலும்
எத்தனைக் கூரென வியக்க வைக்குமே!*
திருப்பூர் அருகோர் கிராமம் முழுதும்
திருத்தும் கூர்தொழில் செய்யுமே சென்னையில்!
வீடுகள் விடுதிகள் வாடிக்கை சேர்த்து
பாடுறும் தொழிலில் பயனெதும் இலையெனத்
தோள்சுமைச் சாணைத் தொழிலனு பவமென
நாளிதழ் ஒன்று கண்டறிந் ததுவே!
எந்திரம் வாழ்வை இயக்கும் இந்நாள்
அந்தர மாகும் கைத்தொழிற் கல்வியே
ஆலைத் தொழில்களின் ஆடிக் காற்றில்
வேலையும் வேலை யில்லா நிலயையுமே!
உதிரித் தொழிலின் சுதந்திரம் இப்படிச்
சிதறிப் போக விடுதல் நன்றோ?
--ரமணி
குறிப்பு:
1. ’சிறுகா ரோடன்’
’சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய
கல்போற் பிரியல மென்ற சொல்தான்
மறந்தனர் கொல்லோ தோழி!’
--அகநானூறு 1.
2. ’தினமணி நாளிதழ் செய்தி’
http://dinamani.com/specials/kannottam/article1090116.ece?service=print
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
பூவிற்கும் பெண்கள்
’பூவம்மா! மல்லி முல்லை சாமந்தீ!’
பூவிற் பனைக்குரல் முகங்கள் எத்தனை!
தான்விற் கும்மலர் தன்றலை யமர
வானமும் வையமும் வாசம் பெறவே
கலைவிரல் தொடுக்கும் நாரும் நூலும்
மலர்களின் வகையும் மனங்குளிர்க் காட்சி! ... 1
சங்க காலத்திவர் மலர்கள் விற்றதைத்
துங்கத் தமிழில் புலவோ ருரைப்பரே
அகநா னூறும் நற்றிண யும்சொலும்
மகளிர் மலர்பனை வட்டிலி லேந்தி
வண்டுகள் சூழ நடந்தே விற்பது
கண்டே தலைவியும் தளர்வுறு வாளே! ... 2
பூவிற் பதில்வரும் உழன்றிடும் வாழ்வே
கோயம் பேடு போன்றசந் தையில்
உதிரிப் பூக்கள் விடியலில் வாங்கி
உதவிகள் நாடித் தொடுத்தே அவற்றில்
காலையும் மாலையும் விற்பதை விற்று
ஆலயங் களுக்கு மீதியைத் தருவரே. ... 3
தெருவாய் அலைந்து விற்பதில் தினமும்
வருவாய் எனவரும் ஐம்பதில் நூறில்
மூன்று வேளையும் உண்ண வியலாதே
ஊன்றுகோ லாகமற் றோர்வினை செய்வரே
கணவன் உழைப்போ கள்ளுக் கடைக்கே
பணமும் கேட்டவன் அலம்பல் செய்வான்! ... 4
மேவிடும் வேலை மேற்கது வாகப்
பூவும் பொட்டும் ஒழித்தே பெரிதும்
மகளிர் இன்று வாங்கும் மலர்களை
அகத்தில் உறையும் கடவுளர் கொள்வரே
உற்சவ மலர்களைக் குத்தகை யார்கொள
அற்றே போகுமோ தனிமலர் விற்பனை? ... 5
--ரமணி
உதவி:
http://tamilandvedas.wordpress.com/2013/06/02/2000-ஆண்டுகளாக-பெண்கள்-செய்ய/
http://www.vinavu.com/2012/10/18/pookaramma/
*****
’பூவம்மா! மல்லி முல்லை சாமந்தீ!’
பூவிற் பனைக்குரல் முகங்கள் எத்தனை!
தான்விற் கும்மலர் தன்றலை யமர
வானமும் வையமும் வாசம் பெறவே
கலைவிரல் தொடுக்கும் நாரும் நூலும்
மலர்களின் வகையும் மனங்குளிர்க் காட்சி! ... 1
சங்க காலத்திவர் மலர்கள் விற்றதைத்
துங்கத் தமிழில் புலவோ ருரைப்பரே
அகநா னூறும் நற்றிண யும்சொலும்
மகளிர் மலர்பனை வட்டிலி லேந்தி
வண்டுகள் சூழ நடந்தே விற்பது
கண்டே தலைவியும் தளர்வுறு வாளே! ... 2
பூவிற் பதில்வரும் உழன்றிடும் வாழ்வே
கோயம் பேடு போன்றசந் தையில்
உதிரிப் பூக்கள் விடியலில் வாங்கி
உதவிகள் நாடித் தொடுத்தே அவற்றில்
காலையும் மாலையும் விற்பதை விற்று
ஆலயங் களுக்கு மீதியைத் தருவரே. ... 3
தெருவாய் அலைந்து விற்பதில் தினமும்
வருவாய் எனவரும் ஐம்பதில் நூறில்
மூன்று வேளையும் உண்ண வியலாதே
ஊன்றுகோ லாகமற் றோர்வினை செய்வரே
கணவன் உழைப்போ கள்ளுக் கடைக்கே
பணமும் கேட்டவன் அலம்பல் செய்வான்! ... 4
மேவிடும் வேலை மேற்கது வாகப்
பூவும் பொட்டும் ஒழித்தே பெரிதும்
மகளிர் இன்று வாங்கும் மலர்களை
அகத்தில் உறையும் கடவுளர் கொள்வரே
உற்சவ மலர்களைக் குத்தகை யார்கொள
அற்றே போகுமோ தனிமலர் விற்பனை? ... 5
--ரமணி
உதவி:
http://tamilandvedas.wordpress.com/2013/06/02/2000-ஆண்டுகளாக-பெண்கள்-செய்ய/
http://www.vinavu.com/2012/10/18/pookaramma/
*****
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
குயில்கள் இன்று
காலத் தணல்கொள ராகம் பாடிய
கோலக் குயில்களின் குரலொலி போனதே!
குரலின் குழைவுகள் தூக்கி யெறிந்தாண்
குரல்கள் இன்று விற்பதில் அதட்டுமே!
’ஆகொய்யாப் பழமாப்பிளூ ஆரஞ்சு மாதுளய்!
ஆஆப்பி ளாப்பி ளாப்பிளு வாளைப்பழம்!’
வடவர் உண்பொருள் நாளும் கொள்வதில்
இடம்பெயர் விற்பனை இளைஞர் கண்பட
வண்டியில் பூரிகள் பலவித சப்ஜிகள்
உண்டிட ஐஸ்க்ரீம் குல்ஃபிசோன் பப்படி
மணிகள் அடித்துவிற் பனைசெயும் இந்நாள்
மணிக்குயில் மணிக்குரல் மாய்ந்தே போகுமே!
பொருள்களும் சேவையும் கொடுப்பதை விடவும்
தரகு விற்பனை யதிகம் ஆகிட
ஒலிக்கும் ஓரிரு குயில்களின் குரல்களும்
விலைகள் கொடுத்து வீண்பொருள் வாங்குமே!
பழைய்ய பேப்பா ருபிளாஸ்டிக் சாமான்!
பழைய்ய இரும்புச் சாமான் பால்கவர்!...
பண்டிகை நாட்களில் வாகன மேறிடக்
கண்டிடும் குரல்கள் அறையும் செவிப்பறை!
பழைய்ய பட்டுப் பாவாடை சேலைவேஷ்டி!
கிழிஞ்சது ஜரிகை வெள்ளிக்கு நல்லவிலை!
ரெண்டு புதிய சின்தெடிக் புடவைக்கு
உண்டு இனாமாக ஒருசேலை யோடிவா!
சில்லறை வணிகம் பிறநாட் டார்கொளின்
கொல்லைப் புறம்வரும் தொழில்நுட் பத்தில்
உண்ண உடுத்தக் குடிக்கக் களித்திடத்
திண்ணம் எதுவும் விற்பனை யாகுமே
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
--ரமணி
*****
முற்றியது
காலத் தணல்கொள ராகம் பாடிய
கோலக் குயில்களின் குரலொலி போனதே!
குரலின் குழைவுகள் தூக்கி யெறிந்தாண்
குரல்கள் இன்று விற்பதில் அதட்டுமே!
’ஆகொய்யாப் பழமாப்பிளூ ஆரஞ்சு மாதுளய்!
ஆஆப்பி ளாப்பி ளாப்பிளு வாளைப்பழம்!’
வடவர் உண்பொருள் நாளும் கொள்வதில்
இடம்பெயர் விற்பனை இளைஞர் கண்பட
வண்டியில் பூரிகள் பலவித சப்ஜிகள்
உண்டிட ஐஸ்க்ரீம் குல்ஃபிசோன் பப்படி
மணிகள் அடித்துவிற் பனைசெயும் இந்நாள்
மணிக்குயில் மணிக்குரல் மாய்ந்தே போகுமே!
பொருள்களும் சேவையும் கொடுப்பதை விடவும்
தரகு விற்பனை யதிகம் ஆகிட
ஒலிக்கும் ஓரிரு குயில்களின் குரல்களும்
விலைகள் கொடுத்து வீண்பொருள் வாங்குமே!
பழைய்ய பேப்பா ருபிளாஸ்டிக் சாமான்!
பழைய்ய இரும்புச் சாமான் பால்கவர்!...
பண்டிகை நாட்களில் வாகன மேறிடக்
கண்டிடும் குரல்கள் அறையும் செவிப்பறை!
பழைய்ய பட்டுப் பாவாடை சேலைவேஷ்டி!
கிழிஞ்சது ஜரிகை வெள்ளிக்கு நல்லவிலை!
ரெண்டு புதிய சின்தெடிக் புடவைக்கு
உண்டு இனாமாக ஒருசேலை யோடிவா!
சில்லறை வணிகம் பிறநாட் டார்கொளின்
கொல்லைப் புறம்வரும் தொழில்நுட் பத்தில்
உண்ண உடுத்தக் குடிக்கக் களித்திடத்
திண்ணம் எதுவும் விற்பனை யாகுமே
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
--ரமணி
*****
முற்றியது
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
கீழ்வரும் பாடலின் பொருளைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
மரபுப்பா வித்தகம் 1.
புல்தின்னும் வேங்கைமுகம் மீசைப்பெண் நாவது
சொல்தின்னும் வண்டொன்று பூத்தின்னும் - வில்லினில்
வல்லம்பு தின்னுமே ஆவியெனக் காட்சிகள்
கல்தின்னும் சிற்றுளியால் மாடு.
--ரமணி, 03/11/2013
*****
மரபுப்பா வித்தகம் 1.
புல்தின்னும் வேங்கைமுகம் மீசைப்பெண் நாவது
சொல்தின்னும் வண்டொன்று பூத்தின்னும் - வில்லினில்
வல்லம்பு தின்னுமே ஆவியெனக் காட்சிகள்
கல்தின்னும் சிற்றுளியால் மாடு.
--ரமணி, 03/11/2013
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
இந்த உத்திக்குப் பெயர் ’கடைமாற்றுப் பொருள்கோள்’ என்று பெயர்.
அதாவது, செய்யுளின் இறுதித் சொல்லை எடுத்துச் செய்யுள் முதலில்
போட்டுப் படிக்கப் பொருள் தெளிவாகும்!
விடை:
மாடு புல்தின்னும் | வேங்கை முகம் மீசை | பெண் நா அது
சொல்தின்னும் | வண்டொன்று பூத்தின்னும் |- வில்லினில்
வல்லம்பு தின்னுமே ஆவி | யெனக் காட்சிகள்
கல்தின்னும் சிற்றுளியால்.
*****
அதாவது, செய்யுளின் இறுதித் சொல்லை எடுத்துச் செய்யுள் முதலில்
போட்டுப் படிக்கப் பொருள் தெளிவாகும்!
விடை:
மாடு புல்தின்னும் | வேங்கை முகம் மீசை | பெண் நா அது
சொல்தின்னும் | வண்டொன்று பூத்தின்னும் |- வில்லினில்
வல்லம்பு தின்னுமே ஆவி | யெனக் காட்சிகள்
கல்தின்னும் சிற்றுளியால்.
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
மரபு வித்தகம் 2.
சதுர்பங்கி
மரபு வித்தக உத்திகளில் திரிபங்கி என்பது ஒரே பாடலில் மூன்று பாடல்கள் அமைத்து எழுதுவது. சதுர்பங்கியில் நான்கு பாடல்கள் உள்ளடங்கி யிருக்கும். பாம்பன் சுவாமிகள் 125 பாடல்களாகப் பிரியும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார் என்பர்.
இந்தப் பாடலில் உள்ளிட்டு வரும் இன்னும் நான்கு பாடல்களை இனம் கண்டுகொள்ள முடிகிறதா? (உள்ளிட்ட பாடல்களில் சீர்கள் மூலப் பாடல்களை விடவும் குறைவாக--இரண்டு, மூன்று சீர்கள் என்பதுபோல்--இருக்கும் என்பது வெளிப்படை).
முன்னை வினைகள் இற்றுப் போகவே!
(எழுசீர் விருத்தம்: தேமா புளிமா தேமா கூவிளம் மா மா காய்)
முன்னை வினைகள் முற்றும் சூழ்வது குன்றச் செய்வீர் கோமானே!
இன்னும் வினைகள் இற்றுப் போகவே என்றும் அருள்வீர் பெம்மானே!
உன்னத் தெரியேன் சுற்றம் ஆகுவீர் துன்மை யுரைப்பீர் முக்கண்ணா!
மன்னித் தருள்வீர் பற்றை நீக்கியே நன்மை விளைப்பீர் கங்காளா!
[துன்மை=தீமை; கங்காளன்=சிவன்]
--ரமணி
*****
சதுர்பங்கி
மரபு வித்தக உத்திகளில் திரிபங்கி என்பது ஒரே பாடலில் மூன்று பாடல்கள் அமைத்து எழுதுவது. சதுர்பங்கியில் நான்கு பாடல்கள் உள்ளடங்கி யிருக்கும். பாம்பன் சுவாமிகள் 125 பாடல்களாகப் பிரியும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார் என்பர்.
இந்தப் பாடலில் உள்ளிட்டு வரும் இன்னும் நான்கு பாடல்களை இனம் கண்டுகொள்ள முடிகிறதா? (உள்ளிட்ட பாடல்களில் சீர்கள் மூலப் பாடல்களை விடவும் குறைவாக--இரண்டு, மூன்று சீர்கள் என்பதுபோல்--இருக்கும் என்பது வெளிப்படை).
முன்னை வினைகள் இற்றுப் போகவே!
(எழுசீர் விருத்தம்: தேமா புளிமா தேமா கூவிளம் மா மா காய்)
முன்னை வினைகள் முற்றும் சூழ்வது குன்றச் செய்வீர் கோமானே!
இன்னும் வினைகள் இற்றுப் போகவே என்றும் அருள்வீர் பெம்மானே!
உன்னத் தெரியேன் சுற்றம் ஆகுவீர் துன்மை யுரைப்பீர் முக்கண்ணா!
மன்னித் தருள்வீர் பற்றை நீக்கியே நன்மை விளைப்பீர் கங்காளா!
[துன்மை=தீமை; கங்காளன்=சிவன்]
--ரமணி
*****
- Sponsored content
Page 11 of 36 • 1 ... 7 ... 10, 11, 12 ... 23 ... 36
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 36
|
|