புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10 
40 Posts - 63%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10 
2 Posts - 3%
viyasan
ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10 
232 Posts - 42%
heezulia
ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10 
21 Posts - 4%
prajai
ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_m10ரமணியின் கவிதைகள் - Page 13 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 13 of 36 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 24 ... 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

First topic message reminder :

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Nov 30, 2013 6:07 pm

பிரதோஷத் துதி 1.
(பதினாறு சீர் விருத்தம்: எல்லாம் கூவிளம், ஒரு சீர் தவிர்த்து)

எண்ணைநீ ராடிடு மீசன னந்தனே
. என்னைநீ காத்தருட் செய்வதென் னாளிலே?
. . சந்தநீ ராடிடுஞ் சண்முகற் றந்தையே
. . . அந்தக னென்மரு ணீக்குத லெங்ஙனம்?
வெண்ணிறப் பால்தயி ராடிடும் நித்தனே
. எண்ணிலாப் பல்வினை யேறுமென் னாவியைத்
. . தீப்புடம் போட்டுநீ தீயவை நீக்குவாய்
. . . இம்மையென் னாயுளுந் தீர்ந்திடு முன்னரே
வெண்ணிறக் காப்பிலுன் நீறதன் தெய்வதம்
. என்னுளே பற்றியே விந்தைசெய் யட்டுமே
. . இத்தனை யாண்டுகள் நீர்விழ லானவே
. . . இன்னுமேன் தாமத மென்னைநீ யாட்கொள
கண்ணுதற் றெய்வமே அண்ணுதற் கெளியனே
. பெண்ணொரு கூறனே பித்தனே யத்தனே
. . நித்தனி ருத்தனு ருத்திரத் தற்பரன்
. . . சித்தமு றைந்திட வித்தக மோங்குமே.

பதம் பிரித்து:

எண்ணைநீர் ஆடிடும் ஈசன் அனந்தனே
. என்னைநீ காத்தருள் செய்வதென் நாளிலே?
. . சந்தநீ ராடிடும் சண்முகன் தந்தையே
. . . அந்தகன் என்மருள் நீக்குதல் எங்ஙனம்?
வெண்ணிறப் பால்தயிர் ஆடிடும் நித்தனே
. எண்ணிலாப் பல்வினை ஏறுமென் ஆவியைத்
. . தீப்புடம் போட்டுநீ தீயவை நீக்குவாய்
. . . இம்மையென் ஆயுளும் தீர்ந்திடும் முன்னரே
வெண்ணிறக் காப்பிலுன் நீறதன் தெய்வதம்
. என்னுளே பற்றியே விந்தை செய்யட்டுமே
. . இத்தனை ஆண்டுகள் நீர்விழல் ஆனவே
. . . இன்னுமேன் தாமதம் என்னைநீ ஆட்கொள
கண்ணுதல் தெய்வமே அண்ணுதற்கு எளியனே
. பெண்ணொரு கூறனே பித்தனே அத்தனே
. . நித்தன் நிருத்தன் உருத்திரன் தற்பரன்
. . . சித்தம் உறைந்திட வித்தகம் ஓங்குமே.

--ரமணி, 30/11/2013

*****


KINGUMAR
KINGUMAR
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

PostKINGUMAR Sat Nov 30, 2013 6:24 pm

ரமணியின் கவிதைகள் - Page 13 3838410834 ரமணியின் கவிதைகள் - Page 13 3838410834 ரமணியின் கவிதைகள் - Page 13 3838410834 

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Dec 03, 2013 7:13 am

மரபு வித்தகம் 7.
ஒருசீர் விருத்தம்

ஒரேயொரு அசையை அல்லது சீரை வைத்து மறைபொருளாய் விரியுமாறு பாட்டெழுதுவது ஒருசீர் விருத்தம் ஆகும். இரண்டு அல்லது மூன்று அசைச் சீர்கள் வரும்போது அவற்றைப் பிரித்தால் பொருள் தரும் சொற்கள் வருதல் கூடாது.

அசை விருத்தம்
தண்
பெண்
கண்
மண்

(தண்மை நிறைந்த பெண்ணின் கண் நோக்குவதோ மண்.)

கா
வா
வா
கா

(’காவாவா, கந்தா வாவா’ என்னும் புகழ்பெற்ற பாடலை நினைவூட்டி)

நான்
யான்
தேன்
ஏன்?

நாம்
யாம்
போம்
ஓம்!

ஏர்
தேர்
ஊர்
வேர்

(ஈரெதுகையில்)
நான்
தேன்
நீ
சீ!

***

சீர் விருத்தம்
இன்மை
நன்மை
தன்மை
உன்ன.

உண்ண
உண்டு
குண்டு
நண்டு

முன்னம்
அன்னம்
இன்று
வின்னம்

பண்ணாதே
கண்ணாம்பா
அண்ணாந்தே
உண்ணாதே!

--ரமணி

*****

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 03, 2013 9:07 am

ரமணியின் கவிதைகள் - Page 13 3838410834 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 03, 2013 6:19 pm

ரமணி wrote:மரபு வித்தகம் 7.
ஒருசீர் விருத்தம்

ஒரேயொரு அசையை அல்லது சீரை வைத்து மறைபொருளாய் விரியுமாறு பாட்டெழுதுவது ஒருசீர் விருத்தம் ஆகும். இரண்டு அல்லது மூன்று அசைச் சீர்கள் வரும்போது அவற்றைப் பிரித்தால் பொருள் தரும் சொற்கள் வருதல் கூடாது.

அசை விருத்தம்
தண்
பெண்
கண்
மண்

(தண்மை நிறைந்த பெண்ணின் கண் நோக்குவதோ மண்.)

கா
வா
வா
கா

(’காவாவா, கந்தா வாவா’ என்னும் புகழ்பெற்ற பாடலை நினைவூட்டி)

நான்
யான்
தேன்
ஏன்?

நாம்
யாம்
போம்
ஓம்!

ஏர்
தேர்
ஊர்
வேர்

(ஈரெதுகையில்)
நான்
தேன்
நீ
சீ!

***

சீர் விருத்தம்
இன்மை
நன்மை
தன்மை
உன்ன.

உண்ண
உண்டு
குண்டு
நண்டு

முன்னம்
அன்னம்
இன்று
வின்னம்

பண்ணாதே
கண்ணாம்பா
அண்ணாந்தே
உண்ணாதே!

--ரமணி

*****
எனக்குத்தான் தெரியவில்லை! உறவுகள் முயற்சிக்கலாமே!

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Dec 14, 2013 7:42 pm

பிரதோஷத் துதி 2.

காப்பு
அண்டபகி ரண்டமெலாம் சண்டதர முண்டதுபோல்
சண்டியுடன் அண்டனவன் தாண்டவத்தில் நீறாகும்
வெண்ணீராய் ஆக்கிவினை ஈர்த்தோர்நாள் மீள்படைக்கும்
கண்ணுதலான் நெஞ்சமுறக் காப்பு.

[சண்டதரம் = இருபத்தெட்டு நரகங்களில் ஒன்று;
அண்டன்=சிவன் (தேவாரம்); ஈர்த்தல்=அறுத்தல், பிளத்தல்]

வழிபாடு
முதல்வன் சிறப்பாய்த் துதிசெய மாலை
அதனின் சிறப்பாய் மதிநாள் நலமே
அதனின் சிறப்பாய் அரன்ராத் திரியே
பதிமூன்றாம் நாளின்னும் நன்று.

மாலய னாதியாய் வானவர் யாவரும்
ஆலயம் சென்றே அரனைத் தொழவே
பிரதோச காலம் பெருமாளின் கோவில்
திருவழி பாடில்லை யே.

காலைநீ ராடியுமா காந்தன் புகழ்பாடி
மாலையில் நந்திக்கு ஆலயத்தில் பச்சரிசி
வெல்லம் படைத்தபின் வேதமுதல் வன்போற்ற
அல்லல் துடைத்தருள் வான்.

ஆலகால நஞ்சும் வரையின்றிப் பின்தொடர
வாலறிவன் நாடி வலம்வந்த வானோரும்
சோமசூக்தம் என்பதாய் ஓடினரே முன்பின்னாய்
காமனெரித் தான்காண வே.

நந்திதேவர் கண்டபின் அங்கே இடப்பக்கம்
வந்துபின் சண்டிகேசர் நந்தி வலப்பக்கம்
கோமுகி நீரிங்ஙன் மும்முறை ஈசனீறாய்
சோமசூக்தம் போவதாம் ஓம்.

பலன்மொழி
பிரதோச நன்னாள் பிறையணியான் போற்றி
அருவினை அல்லல் வருவினை நீங்க
அருமறை போற்றிடும் ஐந்தெழுத் தோதி
திருவெலாம் பெற்றிடுவோ மே.

--ரமணி, 14/12/2013, கலி.28/08/5114

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Dec 18, 2013 9:29 am

ஆதிரைத் திருநாள் துதி

களிமண் உலகு களிம்பெனப் பற்றிக்
களிக்குமென் வாழ்வின் களேபரம் போக்கிக்
களிஞானம் ஈசன் களிகூர்ந் தருளக்
களிப்புடன் உண்டேன் களி.

சேந்தன் களியுண்டு தேரூர்ந்த வேந்தநீ
ஏந்தும் அழலினால் என்வினை தீப்பட
சேந்தன்போல் நானுமுனை யேத்தி யுறவாடும்
பாந்தம் எனக்கருள் வாய்.

--ரமணி, 18/12/2013

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Dec 31, 2013 7:19 am

பிரதோஷத் துதி 3.
சவலைமதிச் சடைனுக்கோர் சவலைவெண் பாமாலை
(ஒரு பா ஒரு பஃது:
அந்தாதி மாலை: சவலை வெண்பா)


காப்பு
சவலைக் குழந்தையென் செய்வினை தீரச்
சவலைவெண் பாமாலை சாற்றினேன்
கவலையே யில்லாக் களிநட ராசா
அவலம் அகற்றி அருள்.

அந்தாதி மாலை
ஆலமர் செல்வவுன் ஆறிழிச் சென்னியில்
கோல மதியினைக் கொள்ளழகும்
நீல மிடறுமுன் நீறுடற் செம்மையும்
சால மனமுறச் செய். ... 1

செய்வினை யாலே இழியுமென் சென்மமே
மெய்யில் உயிரென ஏறியே
குறிலாய் நெடிலாய் ஒலித்திடு மோலம்
உறுந்தலையெ ழுத்தினிற் கூத்து. ... 2

கூத்தனொ டாடிடும் கூத்தியின் லீலையில்
பூத்திடும் ஈரே ழுலகம்
உடலும் உயிரும் உவந்தே நடனம்
கடலென வேழு களம். ... 3

களத்தில் அறுப்புக் கதிரடி பட்டே
விளமும் மனதில் விலகுமே ... ... [விளம்=ஆணவம்]
தானியம் போர்வை யகன்றே தனிப்படத்
தானியங் காத தழைப்பு. ... 4

தழைகள் எழுந்தே தளிர்க்கும் நுழையும்
விழையும் பசுவின் மிடறினில்
மும்மலம் சம்மதம் உற்றே பசுவுமே
மம்மரில் வீழுமே மாய்ந்து. ... 5

மாய்ந்தே படித்தனன் மாயை யகலவே
ஆய்ந்தவர் நூல்பல வாக
கணத்தில் விடுதலை காணும் மறையும்
உணர்வினி லூற லுறாது. ... 6

உறாததைத் தந்தெனை உய்வித் தருள்வாய்
பெறாதனு பூதியும் ஏற
உமையொரு கூறாய் உருத்திடு மீசா
இமைவிழும் காப்பா யிரு. ... 7

இருந்தென் னுளத்தில் நிருத்தியம் செய்தே
வருந்துயர் போக்கி யருள்வாய்
கரும்பென மேனியைக் காணுதல் போக
மருந்தென என்னுளம் வா. ... 8

வானதி வீழவே வான்மதி சூடியே
கானில் நடமிடும் கள்வ!
விடையன் சடைமுடி வேட நடேசா
உடைத்தெறி வாய்மனச் சொல். ... 9

சொல்லும் பொருளும் ஒலியும் உருவமும்
அல்லும் பகலும் கடந்தோனே
அல்ல லருவினை வல்வினை சூழ்வதே
இல்லை யெனும்நிலை யென்று?

நூற்பயன்
காடு நடமிடும் காளே சனினருள்
நாட மனம்வர நேரிடினே
பாடு படுவதும் பாவமும் குன்றவே
தேடுதல் போய்வரும் வீடு.

--ரமணி, 28-30/12/2013, கலி.15/09/5114

*****

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Dec 31, 2013 10:10 am

ரமணி, பாடல்கள் வெகு அழகு..இவை வெண்பாக் கோட்பாட்டில் வருகிறதா..இரண்டாம் அடியில் தனிச்சொல் வரவில்லையே இறுதியில்..

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Dec 31, 2013 11:24 am

தனிச்சொல் இல்லாததால் இவை சவலை வெண்பா வகைப்படும். மேல்விவரங்களுக்கு இந்தச் சுட்டியைப் பார்க்கவும்.

http://www.eegarai.net/t91128p255-topic#1041468


சின்னக் கண்ணன் wrote:ரமணி, பாடல்கள் வெகு அழகு..இவை வெண்பாக் கோட்பாட்டில் வருகிறதா..இரண்டாம் அடியில் தனிச்சொல் வரவில்லையே இறுதியில்..
மேற்கோள் செய்த பதிவு: 1041989

Sponsored content

PostSponsored content



Page 13 of 36 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 24 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக