புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 5 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 5 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 5 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 5 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 5 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 5 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 5 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 5 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 5 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 5 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 5 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 5 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 5 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 5 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 5 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 5 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 5 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 5 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 5 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 5 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 5 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 5 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 5 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jan 29, 2012 6:51 pm

First topic message reminder :

தமிழ் மொழி நீதி நூல்களுக்கு பெயர் பெற்றது. பதினென்கீழ் கணக்கு நூல்கள் மட்டுமல்லாது நீதி கூறும் நூல்கள் ஏராளம் இங்கு உள்ளது.

மனிதன் மனிதனாக வாழ ஒழுக்கம் அவசியம், ஒழுக்கம் தவறி பிறருக்கு துன்பம் விளைவிக்கும் போது மக்களாகிய மனிதன் மாக்களில் கலந்து விடுகிறான். இன்று உயர் நிலையில் இருக்கும் பல நாடுகள் நாகரீகம் என்றால் என்ன என்று தெரியாத காட்டுமனிதர்களாக வாழ்ந்த காலத்தில் நாம் நாகரீகத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறோம் என்பதற்கு இப்படி உள்ள தமிழ் நூல்களே சான்று.

இப்படி நீதி கூறும் பல நூல்களில் மக்களிடம் பிரபலம் ஆகாத ஒரு சில நூல்களில் அதிவீர ராம பாண்டியர் எழுதிய நறுந்தொகையும் ஒன்று. இதில் இடம் பெற்ற வரிகள் மூலம் இது வெற்றிவேற்கை என்றும் அழைக்கப்படுகிறது.

நறுந்தொகை என்பது நறுமை + தொகை, அதாவது நன்மை + தொகை, வாழ்விற்கு நன்மை பயக்கும் பல நல்ல செய்திகளை, ஒழுக்கங்களை, வாழ்வியல் உண்மைகளை அழகாகக் எடுத்துக் கூறுவது இந்த நூலின் சிறப்பு. இந்த நூலில் இடம் பெறும் நூல் பயன் மூலம் இதை எழுதியவர் கொற்கையாண்ட அதிவீர ராம பாண்டியர் என்பது புலனாகிறது. இவர் 10 -11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கொற்கையாண்ட பாண்டிய மன்னர். சிலர் இவர் வாழ்ந்த காலம் 15 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுகின்றனர். கொற்கை என்பது பாண்டிய நாட்டில் இருந்த கடற்கரை நகரம். கொற்கை முத்துகள் குறித்த செய்தி சிலம்பில் இடம் பெற்றுள்ளது. இது இன்றைக்கு அழைக்கப்படும் தூத்துக்குடி, தென்காசி பகுதியை குறிக்கிறது.

இவர் தமிழில் மேலும் பல நூல்களை இயற்றியுள்ளார், அவையாவன நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிக்காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதிகள் ஆகியவை, இன்னூல்கள் பெரும்பான்மை வடமொழி நூல்களின் சாயலில் பாடப்பெற்றவையாக இருப்பதினால் இவர் அம்மொழியிலும் தேர்ச்சி பேற்றிருந்தார் எனக் கொள்ளலாம். இவர் சிறந்த சிவபக்தர் என்பது இவர் எழுதிய நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது. இவரியற்றிய நூல்களுள்ளே நைடதமானது இலக்கியப் பயிற்சிக்குச் சிறந்த நூலாகக்கொண்டு தமிழ்மக்கள் பல்லோரானும் பாராட்டிப் படிக்கப்படுகின்றது.

நறுந்தொகை மொத்தம் 82 செய்யுள்கள் கொண்ட தொகுப்பு நூலாகும். இதில் ஒரு சில செய்யுள்கள் தனிச் செய்யுளாகவும், ஒரு சில செய்யுள்கள் அதற்கு அடுத்து வரும் செய்யுள் வரிகளோடு தொடர்ப்பு கொண்டு பொருள் கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. புறநானூறு, நாலடியார் நூல்களில் வரும் பாடல் வரிகளும் , பொருளும் சில பாடல்களில் பொருந்தி வருகிறது. பல நேரங்களில் ஔவையார் எழுதியதாக கோடிடப்படும் செய்யுள் வரிகள் உண்மையில் இந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.

நல்ல தமிழ் அறிவோம் தொடரில், இனி இந்த நறுந்தொகைப் பாடல்களைப் பயில்வோம்.






சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Feb 16, 2012 5:46 pm

ரட்சகா wrote:பகிர்வுக்கு நன்றி....
சூப்பருங்க சூப்பருங்க

61,62 பொருள் விளக்கம் மாற்றப்பட்டு உள்ளது....
திருத்துங்கள் நண்பரே....

நன்றி நண்பரே,
:நல்வரவு:



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Feb 24, 2012 7:13 pm

ஒன்றுக்கும் உதவாதவர்கள்

65. காலையு மாலையும் நான்மறை யோதா
அந்தண ரென்போ ரனைவரும் பதரே.
66. குடியலைத் திரந்துவெங் கோலொடு நின்ற
முடியுடை யிறைவனாம் மூர்க்கனும் பதரே.
67. முதலுள பண்டங் கொண்டுவா ணிபஞ்செய்து
அதன்பய னுண்ணா வணிகரும் பதரே
68. முதலுள பண்டங் கொண்டுவா ணிபஞ்செய்து
அதன்பய னுண்ணா வணிகரும் பதரே
69. தன்மனை யாளைத் தாய்மனைக் ககற்றிப்
பின்பவட் பாராப் பேதையும் பதரே.
70. தன்மனை யாளைத் தனிமனை யிருத்திப்
பிறர்மனைக் கேகும் பேதையும் பதரே.
71. தன்னா யுதமுந் தன்கையிற் பொருளும்
பிறன்கையிற் கொடுக்கும் பேதையும் பதரே.


பொருள் விளக்கம்

பதர் என்பது நெல்மணியில் ஊடே வளர்ந்து அரிசி இல்லாமல் இருக்கும் வெற்று நெல்லாகும். வெற்று தானியங்களையும் பதர் என்று கூறுவர்.இது போல் சமுதாயத்தில் நல்ல வெளித் தோற்றமுடன் இருந்தாலும் உள்ளே ஒன்றும் இல்லாத மனிதர்களைப் பற்றி கூறுகிறது மேலுள்ள நறுந்தொகைப் பாடல் வரிகள்.

65. அந்தணுக்கு உரிய கடமையான வேதத்தை காலையிலும் மாலையிலும் ஓதாத அந்தணன் என்பவன் எல்லாம் வெறும் பதரே.

66. குடிமக்களை அலைக்கழித்து கடுமையான குணங்களோடு கொடுங்கோல் செய்யும் முடியுடைய மூர்க்க குணம் உள்ள மன்னன் என்பவன் எல்லாம் வெறும் பதரே.

67.ஒரு வாணிபத்தில் முதல் போட்டு அதில் வரும் லாபத்தை அனுபவிக்காமல் அதையும் மீண்டும் மொத்தமாக முதலீடு செய்யும் வணிகர் என்பவர் எல்லாம் பதரே.

68 . நல்ல விதையும், உழுவதற்கும் ஏர் கலப்பையும் நிலமும் இருந்தாலும் (உழைத்து வாழ ஆயிரம் வசதி வாய்ப்பு இருந்தாலும் ) உழைக்காமல் சோம்பேறியாக இருப்பதால் ஏழையாக இருக்கும் அனைவரும் பதரே.

69. கட்டிய மனைவியிடம் சண்டை ஏற்பட்டு தாய் வீட்டுக்கு அனுப்பி அவளை சமாதானம் செய்யாமல், பாராமல் இருக்கும் கணவன் என்பவன் எல்லாம் பதரே.

70. தன் மனைவியை தனி வீட்டில் இருக்கச் செய்து, பிறர் மனைவியை விரும்பி அயல் வீட்டுக்கு செல்லும் அறிவில்லாதவன் எல்லாம் பதரே.

71. தன் கையில் இருக்கும் ஆயுதத்தையும், தன் கைப் பொருளையும் பிறரை நம்பி கொடுத்து அவர் கையை நம்பி வாழும் மனிதர்கள் எல்லாம் பதரே.

தொடரும்



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Feb 28, 2012 6:15 pm

72. வாய் பறையாகவும் நாக்கு அடிப்பாகவும்
சாற்றுவது ஒன்றைப் போற்றிக் கேண்மின்

73. பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால்
மெய் போலும்மே மெய் போலும்மே

74. மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால்
பொய் போலும்மே பொய் போலும்மே

75.இருவர் தம் சொல்லையும் எழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையார் ஆயின்
மனுமுறை நெறியின் வழக்கு இழந்தவர் தம்
மனமுற மறுகி நின்று அழுத கண்ணீர்
முறை யுறந்தேவர் மூவர் காக்கினும்
வழி வழி ஈர்வதோர் வாளாகும் மே

76.பழியா வருவது மொழியாது ஒழிவது

77.சுழியா வரு புனல் இழியாது ஒழிவது

78.துணையோடு அல்லது நெடு வழி போகேல்

79.புணை மீது அல்லது நெடும் புனல் ஏகேல்

80. ஏழிலார் முலைவரி விழியார் தந்திரம்
இயலாதன கொடு முயல்வு ஆகாதே

81.வழியே ஏகுக வழியே மீளுக

82. இவை காண் உலகிற்கு இயலாமாறே


பொருள் விளக்கம்

72. வாயைப் பறையாகவும், நாக்கை பறை அடிக்கும் கோலாகவும் கொண்டு அறிவுடையவர் சொல்லும் சொல்லைக் கேளுங்கள்.

73. பொய் நிறைந்தவர் தான் சொல் வன்மையினால், பொய்யை மெய்ப் போல் பேசி , மொய்யாக ஆக்குவர்.

74. உண்மை நிறைந்தவர் சரியாகப் பேசத் தெரியாததால் உண்மையைக் கூட அடுத்தவர் நம்பும் படி பேசாததால் உண்மையும் பொய் போல் தெரியும்.

75. சாமார்த்தியமாக பேசும் பொய்யர்களின் பேச்சையும், பேசத்தெரியாத உண்மையானவன் பேசும் பேச்சையும் ஒரு முறைக்கு ஏழு முறை கேட்டுத் தெரிந்து
அவர்கள் பொருத்தக் கூறுவதை வைத்து உண்மை உணர வேண்டும். மனுமுறை நீதி தவறாமல் தீர்ப்பு வழங்க வேண்டும். உணராமல் தீர்ப்பை கூறினால் நீதி இழந்தவர் தன் மனமுருகி அழுத கண்ணீர் தீர்ப்பு வழங்கியவரை சும்மா விடாது. மும்மூர்திகளும் காத்து நின்றாலும் கூரான வாள் போல் தலைமுறை தலைமுறைக்கும் சந்ததிக்கு பாவம் சேர்த்து துன்பம் விளைவிக்கும்.

76. நமக்கு பழியை ஏற்படும் வார்த்தையை மொழியாது (பேசாமல்) இருக்க வேண்டும்.

77. சுழித்து வரும் புது வெள்ளத்தில் இறங்குவது கூடாது.

78. தக்க துணையில்லாமல் நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடாது.

79. கப்பல், படகு, ஓடம் போல் ஒரு சரியான கருவி இல்லாமல் நீண்ட நீரில் பயணம் செய்யக்கூடாது.

80. எழில் மிகுந்த மார்பகங்கள், வரி வரைந்த கண்கள், தந்திரம் மிகுந்த சொல் உடைய பெண்களின் உபாயத்தினால் பொருந்தாதவை கொண்டு செய்யும் முயற்சி செய்தல் ஆகாது.

81. நல்ல வழியே செல்க, சென்ற நல்ல வழியில் திரும்புக.

82. இந்த நீதிகள் உயர்ந்தோருக்கு இயலும் ஆறு செயல்களாகும்.


நல்லொழுக்கம் நவிலும் நறுந்தொகை இனிதே முற்றியது.





சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Feb 28, 2012 6:54 pm

நீவீர் படைத்த நறுந்தொகையால் இன்பமடைந்தோ யாம்.
செம்மொழியாம் தமிழ் மொழியின் செம்மையை,
செவ்வனே எடுத்துரைத்து,நறுந்தொகையை நறுமணமாய் தந்து
எம் மனதில் நீ படைத்த நல் வழிப்பாதை நாளும் வளர
நீவீர் செய்யும் தமிழ் பணி தொடர.........
இடுகிறேன் கட்டளை இறைவனுக்கு....நானும் அவன் படைப்பு என்னும் உரிமையில்...

நன்றி
ஜேன்



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 28, 2012 9:07 pm

அருமை ஐயா,

தேர்விற்கு தயார் செய்து கொண்டிருப்பதால், என்னால், நறுந்தொகையை தொடர முடியவில்லை, எப்படியும், இந்த பொக்கிஷம் ஈகரையில் தான் இருக்கப் போகிறது. நான் படித்துக் கொள்கிறேன் ஐயா.....

மிக்க நன்றிகள் ஐயா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Feb 28, 2012 9:48 pm

நன்று சதாசிவம், நானும் இப்போது அதிகமான வேலைப்பளுவில் உள்ளதால் சரியாகப் படிக்க முடியவில்லை. பின்னாளில் தொடர்வேன். உங்களின் முழுமுயர்ச்சியைப் பாராட்டுகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Feb 29, 2012 3:51 pm

நன்றி செல்வகுமார்,
நன்றி ராமன்,
நன்றி தயாளன் அய்யா,

படித்து ரசித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி
நன்றி
:நல்வரவு:



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக