புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jan 29, 2012 6:51 pm

First topic message reminder :

தமிழ் மொழி நீதி நூல்களுக்கு பெயர் பெற்றது. பதினென்கீழ் கணக்கு நூல்கள் மட்டுமல்லாது நீதி கூறும் நூல்கள் ஏராளம் இங்கு உள்ளது.

மனிதன் மனிதனாக வாழ ஒழுக்கம் அவசியம், ஒழுக்கம் தவறி பிறருக்கு துன்பம் விளைவிக்கும் போது மக்களாகிய மனிதன் மாக்களில் கலந்து விடுகிறான். இன்று உயர் நிலையில் இருக்கும் பல நாடுகள் நாகரீகம் என்றால் என்ன என்று தெரியாத காட்டுமனிதர்களாக வாழ்ந்த காலத்தில் நாம் நாகரீகத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறோம் என்பதற்கு இப்படி உள்ள தமிழ் நூல்களே சான்று.

இப்படி நீதி கூறும் பல நூல்களில் மக்களிடம் பிரபலம் ஆகாத ஒரு சில நூல்களில் அதிவீர ராம பாண்டியர் எழுதிய நறுந்தொகையும் ஒன்று. இதில் இடம் பெற்ற வரிகள் மூலம் இது வெற்றிவேற்கை என்றும் அழைக்கப்படுகிறது.

நறுந்தொகை என்பது நறுமை + தொகை, அதாவது நன்மை + தொகை, வாழ்விற்கு நன்மை பயக்கும் பல நல்ல செய்திகளை, ஒழுக்கங்களை, வாழ்வியல் உண்மைகளை அழகாகக் எடுத்துக் கூறுவது இந்த நூலின் சிறப்பு. இந்த நூலில் இடம் பெறும் நூல் பயன் மூலம் இதை எழுதியவர் கொற்கையாண்ட அதிவீர ராம பாண்டியர் என்பது புலனாகிறது. இவர் 10 -11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கொற்கையாண்ட பாண்டிய மன்னர். சிலர் இவர் வாழ்ந்த காலம் 15 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுகின்றனர். கொற்கை என்பது பாண்டிய நாட்டில் இருந்த கடற்கரை நகரம். கொற்கை முத்துகள் குறித்த செய்தி சிலம்பில் இடம் பெற்றுள்ளது. இது இன்றைக்கு அழைக்கப்படும் தூத்துக்குடி, தென்காசி பகுதியை குறிக்கிறது.

இவர் தமிழில் மேலும் பல நூல்களை இயற்றியுள்ளார், அவையாவன நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிக்காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதிகள் ஆகியவை, இன்னூல்கள் பெரும்பான்மை வடமொழி நூல்களின் சாயலில் பாடப்பெற்றவையாக இருப்பதினால் இவர் அம்மொழியிலும் தேர்ச்சி பேற்றிருந்தார் எனக் கொள்ளலாம். இவர் சிறந்த சிவபக்தர் என்பது இவர் எழுதிய நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது. இவரியற்றிய நூல்களுள்ளே நைடதமானது இலக்கியப் பயிற்சிக்குச் சிறந்த நூலாகக்கொண்டு தமிழ்மக்கள் பல்லோரானும் பாராட்டிப் படிக்கப்படுகின்றது.

நறுந்தொகை மொத்தம் 82 செய்யுள்கள் கொண்ட தொகுப்பு நூலாகும். இதில் ஒரு சில செய்யுள்கள் தனிச் செய்யுளாகவும், ஒரு சில செய்யுள்கள் அதற்கு அடுத்து வரும் செய்யுள் வரிகளோடு தொடர்ப்பு கொண்டு பொருள் கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. புறநானூறு, நாலடியார் நூல்களில் வரும் பாடல் வரிகளும் , பொருளும் சில பாடல்களில் பொருந்தி வருகிறது. பல நேரங்களில் ஔவையார் எழுதியதாக கோடிடப்படும் செய்யுள் வரிகள் உண்மையில் இந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.

நல்ல தமிழ் அறிவோம் தொடரில், இனி இந்த நறுந்தொகைப் பாடல்களைப் பயில்வோம்.






சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 30, 2012 9:30 pm

பொது மகளிர்க்கு அழகு ஆண்களை கவர அலங்காரம் செய்து கொள்வதும், உடலை கச்சிதமாக வைத்துக் கொண்டு ஆண்களின் கவனத்தை கவர மேனி மினுக்குவதும்.

மிகவும் உள்ளார்ந்த விளக்கங்கள் ஐயா. எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் என்பதற்கு அளித்த விளக்கம், அருமை ஐயா. அதே போன்று மற்ற நறுந்தொகைக்கும் அருமையாக இருக்கிறது ஐயா. நன்றி

விலை மகட்கு புதுப் பெயரை தெரிந்து கொண்டேன்.

மிகவும் அருமை ஐயா...........நறுந்தொகை செய்யுள்கள் இது போன்று தனித்தனி வரிகளாக தான் இருக்குமா ஐயா. புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Jan 30, 2012 10:52 pm

தொடக்கமே நல்லாயிருக்கு
தொடரட்டும் உங்கள் பணி
உங்களைத் தொடருவோம்
நல்ல தமிழ் அறிய
நாம்!



உங்கள் யாழ்பாவாணன்
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jan 31, 2012 8:01 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நல்லதோர் தொடரைத் துவங்கியுள்ளீர்கள்...வாழ்த்துக்கள் தம்பி சதாசிவம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ஐயா
நன்றி அன்பு மலர்



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jan 31, 2012 8:02 pm

yarlpavanan wrote:தொடக்கமே நல்லாயிருக்கு
தொடரட்டும் உங்கள் பணி
உங்களைத் தொடருவோம்
நல்ல தமிழ் அறிய
நாம்!

நன்றி யாழ்பாவானன் அவர்களே
தொடருங்கள், :நல்வரவு:



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jan 31, 2012 8:10 pm

பிஜிராமன் wrote:
பொது மகளிர்க்கு அழகு ஆண்களை கவர அலங்காரம் செய்து கொள்வதும், உடலை கச்சிதமாக வைத்துக் கொண்டு ஆண்களின் கவனத்தை கவர மேனி மினுக்குவதும்.

மிகவும் உள்ளார்ந்த விளக்கங்கள் ஐயா. எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் என்பதற்கு அளித்த விளக்கம், அருமை ஐயா. அதே போன்று மற்ற நறுந்தொகைக்கும் அருமையாக இருக்கிறது ஐயா. நன்றி

விலை மகட்கு புதுப் பெயரை தெரிந்து கொண்டேன்.

மிகவும் அருமை ஐயா...........நறுந்தொகை செய்யுள்கள் இது போன்று தனித்தனி வரிகளாக தான் இருக்குமா ஐயா. புன்னகை

நன்றி ராமன்.

நான் முன்னுரையில் குறிப்பிட்டது போல் நறுந்தொகைப்பாடல்கள் தனிதனிச் செய்யுள்கள் மட்டுமல்லாது. தொடர் வாக்கியங்கள் உள்ள செய்யுளாகவும். முதல் செய்யுளையும் அடுத்த செய்யுளையும் இணைத்து பொருள் கொள்ளுமாறும் உள்ளது.

அடுத்த செய்யுளை கவனியுங்கள்.




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jan 31, 2012 8:56 pm

16. தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
வானுற வோங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க் கிருக்க நிழலா காதே

17. தெள்ளிய ஆலின் சிறுபழத தொருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி யாட்பெரும் படையொடு
மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.

18. பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர்.

19. சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர்.

20. பெற்றோ ரெல்லாம் பிள்ளைக ளல்லர்.

21. உற்றோ ரெல்லாம் உறவின ரல்லர்.

22. கொண்டோ ரெல்லாம் பெண்டிரு மல்லர்.


பொருள் விளக்கம்


16. நீண்டு நெடிந்து உயர்ந்து இருக்கும் பனைமரத்தில் பழமும், அதில் இருந்து வரும் விதையும் கை கொள்ளும் அளவிற்கு பெரிதாக இருக்கும். அது வானுற வளர்ந்து இருந்தாலும் அந்த மரத்தில் இருந்து வரும் நிழல் ஒருவருக்கும் நிழல் ஆகாது.

17. பசுமையான வளமான ஆலமரத்தின் சிறிய விதை, ஒரு சிறு ஓடையில் வாழும் சிறிய மீனின் முட்டையை விட சிறிதாக இருக்கும். ஆனால் அதில் இருந்து வரும் சிறிய செடி, பெரிதாக வளர்ந்து ஆயிரம் விழுதுகளுடன் பெருகி படர்திருக்கும் போது பெரிய மன்னனின் யானைப் படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகிய அனைவருக்கும் நிழல் தரும்.

18. உருவத்தால் பெரியவர் என்று நாம் நினைப்பவர் அனைவரும் பெரியவரும் இல்லை.

19. உருவத்தால் சிறியவர் என்று நினைக்கும் சிறியவர் எல்லாம் சிறியவர் அல்ல.

20. நமக்கு பிறந்த அனைவரும் பிள்ளைகளாக மாட்டார்கள். நல்ல குணத்தோடு, குலம் வளர இருக்கும் பிள்ளைகளே பிள்ளைகளாவர்.

21. உறவினர் என்று இருக்கும் அனைவரும் உறவினர் ஆகாது. இன்பத்தில் பங்கு கொள்ளவது மட்டுமல்லாமல் துன்பத்திலும் பங்கு கொள்பவரே உறவினர் ஆவார்கள்.

22. மனைவியாக கட்டிக்கொண்டவர் அனைவரும் மனைவி ஆக மாட்டார்கள். கொண்டவன் குறிப்பு அறிந்து, நல்ல குணத்துடன் நடப்பவளே சிறந்த மனைவி.

16 முதல் 22 வரை உள்ள பாடல்களை தனியாக படிக்கலாம். பொருள் வரும். ஒன்றாக வாசித்து படித்தால் தொடர்புடைய வார்த்தைகளால் அழகிய நீளமான பாடலும், ஆழமான பொருளும் வரும்.

இது நறுந்தொகையின் சிறப்பு.


பாடல் 19 உடன் தொடர்புடைய மூதுரை

மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா -கடல்பெரிது
மண்ணீரும் ஆகாது அதனருகே சிற்றூறல்
உண்ணீ ருமாகி விடும்.

பாடல் 21 உடன் தொடர்புடைய மூதுரை

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு.


இங்கு உள்ள ஒரு பாடலுக்கு வேறு ஒரு பார்வையில் அமைந்த பொருளை இங்கே காணவும். மரபுப் பாடல்களின் சிறப்பு இதன் மூலம் அறியலாம்.

[You must be registered and logged in to see this link.]


தொடரும்




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 31, 2012 9:01 pm

உண்மையானது எது என்பதற்கு நறுந்தொகையில் தரப்படும் விளக்கம் மிகவும் அருமை அன்பு மலர்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Feb 01, 2012 2:58 pm

அசுரன் wrote:உண்மையானது எது என்பதற்கு நறுந்தொகையில் தரப்படும் விளக்கம் மிகவும் அருமை அன்பு மலர்

நன்றி அசுரன்.
:நல்வரவு:



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Feb 01, 2012 3:01 pm

மிக மிக அருமை ஐயா..........கூடுதலாய், நறுந்தொகையை ஒட்டி எழுதப்பட்ட பாடல்களையும் தருவது, மிகவும் சிறப்பு ஐயா.......மிக்க நன்றிகள் மகிழ்ச்சி நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Feb 03, 2012 6:30 pm

[color=green]23. அடினுமா வின்பால் தன்சுவை குன்றாது.
24. சுடினுஞ் செம்பொன் தன்னொளி கெடாது.
25. அரைக்கினுஞ் சந்தனந் தன்மண மறாது
26. புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது.
27. கலக்கினும் தண்கடல் சேறா காது.
28. அடினும்பால் பெய்துகைப் பறாதுபேய்ச் சுரைக்காய் .
29. ஊட்டினும் பல்விரை யுள்ளிகம ழாதே.
30. பெருமையும் சிறுமையுந் தான்தர வருமே.




பொருள் விளக்கம்


23. நன்றாக பலமுறை காய்சினாலும் பசுவின் பால் சுவை குறையாது

24. நன்றாக நெருப்பில் இட்டாலும் தங்கத்தின் ஒளி குறையாது.

அடுதல் என்றால், நேரடியாக நெருப்பில் இடாமல் சமைத்தல் என்று பொருள் வரும். அடுதல் என்றால் அழித்தல் என்று பொருள் கொள்ளலாம். ஒரு பொருளின் இயற்கை தன்மையை அழித்து அதை வடிவம் மாறாமல் இருப்பதை அடுதல் என்று கூறலாம். அடுப்பு என்று சொல்லும் இதில் இருந்து பிறந்து இருக்கலாம். பொருளை வடிவம் மாறாமல் சமைக்கும் இடத்தை அடுமனை (பேக்கரி) என்று கூறுவதும் இப்படி ஒரு பொருளில் இருந்து வந்ததது தான்.

சுடுதல் என்றால் நேரடியாக நெருப்பில் இடுதல். நெருப்பில் இடும் போது பொருள் முற்றிலும் மாறி சாம்பல் ஆக மாறி விடும், ஒரு சில பொருள்கள் தவிர, உதாரணம் சங்கு, தங்கம். வைரம் கூட கரியாகிவிடும். தமிழில் புதைக்கும் இடத்தை இடுகாடு என்றும், சுடும் இடத்தை சுடுகாடு என்று அழைப்பதற்க்கு இது தான் காரணம்,

இதைத்தான் மூதுரையில் அட்டாலும் பால் சுவை மாறாது, சுட்டாலும் சங்கு வெண்மை தரும் என்று ஔவை கூறுகிறார். ஒரு கருத்து உதாரணம் சொல்லும் போது கூட எவ்வளவு யோசித்து எழுதி இருக்கிறார்கள் என்று நினைத்தால் வியப்பாக இருக்கிறது.

25. சந்தனம் தேய்த்து தேய்த்து சிறிய துண்டாக மாறினாலும் தன் மணம் குன்றாது.

சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடாது - மூதுரை

26. புகையை கொடுத்தாலும் அகில் கட்டை மணம் வீசும் (அறியாதவர்கள் சாம்பிரானியை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.)

27. எத்தனை கப்பல் போல் கலக்கினும், எத்தனை நதி போல் இணைந்தாலும் கடல் சேறாகாது.

28. நன்றாக சுவையான பாலை ஊற்றி சமைத்தாலும் பேய் சுரைக்காயின் கசப்பு மாறாது.

29. பல வாசனை பொருளுடன் கலந்து ஊட்டினும் பல துண்டுகளை உடைய பூண்டு மணக்காது.

30. மேல சொன்ன பொருள்கள் எப்படி அதன் இயற்க்கை குணத்தில் இருந்து மாறாமல் இருக்கிறதோ, அது போல் தான் நமது வாழ்க்கையும், நாம் செய்யும் பாவம் புண்ணியம் என்ற செயல்களுக்கு ஏற்ப அமையும். இல்லாத ஒன்று வராது, இருக்கின்ற ஒன்று போகாது. இதன் படி ஒருவருக்கும் வரும் பெருமையும் சிறுமையும் அவர் அவர் செயல்கள் பொறுத்தே அமையும். பெருமை வேண்டின் நல்ல செயல் செய்ய வேண்டும்.



















சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக