உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» ebook downloadby B Bhaskar Today at 6:58 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 6:46 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 6:32 pm
» Supertech: 40 மாடி கட்டிடம், 3700 கிலோ வெடிமருந்து.. 8 நிமிடத்தில் தரைமட்டம்..!
by T.N.Balasubramanian Today at 5:34 pm
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by T.N.Balasubramanian Today at 5:08 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 19/08/2022
by mohamed nizamudeen Today at 10:44 am
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 8:32 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Yesterday at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Yesterday at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 6:14 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
B Bhaskar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !
+5
பிளேடு பக்கிரி
உதயசுதா
மாணிக்கம் நடேசன்
இளமாறன்
krishnaamma
9 posters
Page 2 of 3 •
1, 2, 3 


கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !
First topic message reminder :
எங்க வீட்டில் கார்த்திகைக்கு அவல் மற்றும் நெல் பொரி உருண்டைகள் , வேர்கடலை உருண்டை , பொட்டுக்கடலை உருண்டை, அப்பம், சுகியன் , வடை பாயசம் செய்வார்கள்... அதன் குறிப்புகளை இங்கே பார்க்கலாம்

எங்க வீட்டில் கார்த்திகைக்கு அவல் மற்றும் நெல் பொரி உருண்டைகள் , வேர்கடலை உருண்டை , பொட்டுக்கடலை உருண்டை, அப்பம், சுகியன் , வடை பாயசம் செய்வார்கள்... அதன் குறிப்புகளை இங்கே பார்க்கலாம்

Last edited by krishnaamma on Sun Mar 13, 2022 9:50 pm; edited 5 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !
யாரும் பார்க்கவில்லையா??????

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !
நான் பார்த்துட்டேன்மா 
இந்தப் பெயரில் இனிப்பு இப்போது கேள்விப்படுகிறேன் .


ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !
நன்றி பானுஜாஹீதாபானு wrote:நான் பார்த்துட்டேன்மாஇந்தப் பெயரில் இனிப்பு இப்போது கேள்விப்படுகிறேன் .


krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !
மிக்க நன்றி அண்ணாayyasamy ram wrote:நானும் பார்த்துட்டேன்....![]()




krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
சுகியன்
சுகியன்
தேவையானவை:
தேங்காய் துருவல் 1 கப்
உடைத்த வெல்லம் 1/2 - 3/4 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசி மாவு 3 டேபிள் ஸ்பூன்
கோதுமை மாவு 1/2 கப் அல்லது மைதா 1/2 கப்
உப்பு சிட்டிகை
சோடா உப்பு சிட்டிகை
எண்ணை பொறிக்க

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மாவுகளை போட்டு ,உப்பு , சோடா உப்பு போட்டு தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும். (பஜ்ஜி மாவு பதம் )
வாணலி இல் கொஞ்சம் தண்ணீர் விட்டு நறுக்கின வெல்லத்தை போட்டு கரைந்ததும் வடிகட்டவும்.
மீண்டும் வாணலி இல் வெல்ல தண்ணீரை ஊற்றி, ஏலப்பொடி தேங்காய் துருவல் போடவும்.
நல்லா கெட்டியாகும் வரை கிளறவும்.
இது தான் பூரணம் கொழுக்கட்டை க்குள் வைக்கும் பூரணமும் இதுவே தான்.
கெட்டியானதும், இறக்கவும்.
கொஞ்சம் ஆறினதும், உருண்டைகளாக உருட்டவும்
வாணலி இல் எண்ணை வைத்து, பூரண உருண்டைகளை, கரைத்து வைத்துள்ள மாவில் முக்கி, எண்ணை இல் போட்டு பொரிக்கவும்.
சுவையான, சுகியன் நைவேத்தியத்துக்கு தயார்
தேவையானவை:
தேங்காய் துருவல் 1 கப்
உடைத்த வெல்லம் 1/2 - 3/4 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசி மாவு 3 டேபிள் ஸ்பூன்
கோதுமை மாவு 1/2 கப் அல்லது மைதா 1/2 கப்
உப்பு சிட்டிகை
சோடா உப்பு சிட்டிகை
எண்ணை பொறிக்க

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மாவுகளை போட்டு ,உப்பு , சோடா உப்பு போட்டு தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும். (பஜ்ஜி மாவு பதம் )
வாணலி இல் கொஞ்சம் தண்ணீர் விட்டு நறுக்கின வெல்லத்தை போட்டு கரைந்ததும் வடிகட்டவும்.
மீண்டும் வாணலி இல் வெல்ல தண்ணீரை ஊற்றி, ஏலப்பொடி தேங்காய் துருவல் போடவும்.
நல்லா கெட்டியாகும் வரை கிளறவும்.
இது தான் பூரணம் கொழுக்கட்டை க்குள் வைக்கும் பூரணமும் இதுவே தான்.

கெட்டியானதும், இறக்கவும்.
கொஞ்சம் ஆறினதும், உருண்டைகளாக உருட்டவும்
வாணலி இல் எண்ணை வைத்து, பூரண உருண்டைகளை, கரைத்து வைத்துள்ள மாவில் முக்கி, எண்ணை இல் போட்டு பொரிக்கவும்.
சுவையான, சுகியன் நைவேத்தியத்துக்கு தயார்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
அப்பம்
அப்பம் - இது ரொம்ப நல்ல நைவேத்யம் . நான் எப்பவும் இதை நெய் இல் தான் செய்வது வழக்கம் . இதை கரைத்தும் அரைத்தும் செயலாம் முதலில் கரைத்து செய்வது.
தேவையானவை:
கோதுமை மாவு 1 கப்
அரிசி மாவு 3/4 கப்
வெல்லம் 1 கப்
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினது 3 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு 1 சிட்டிகை
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
பொறிக்க நெய்
பூவன் வாழை பழம் 2

செய்முறை:
மேலே சொன்ன எல்லா மாவுகளையும் ஒரு பேசினில் போடவும்.
வாழை பழத்தை துருவவும்.
அதில் போடவும்.
ஏலப்பொடி போடவும்
சோடா உப்பு போடவும்
வெல்லத்தை துருவி போடவும்.
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினத்தை போடவும்
எல்லா வற்றையும் நன்கு அழுத்தி பிசையவும்.
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலக்கவும்.
பால் வேண்டுமானாலும் விடலாம்.
திக் ஆன தோசை மாவு படத்தில் இருக்கணும்.
அடுப்பில் அப்ப காரலை வைத்து எல்லா குழிகளிலும் நெவிடவும்.
உருகி சுட்டதும், அப்ப மாவை கரண்டியால் எடுத்து குழிகளில் விடவும்.
மறுபுறம் திருப்பி போட்டு வெந்ததும், அப்ப குச்சியால் அல்லது இரண்டு ஸ்பூங்களால் எடுக்கவும்.
பந்து போல் அழகாய் மெத் என்று இருக்கும்.
குறிப்பு: அப்ப மாவு எவ்வளவு ஊறுகிறதோ அவ்வளவு மெத் என்று வரும். எனவே காலை இல் முதல் வேலையாக கரைத்து வைக்கணும். எல்லா பக்ஷணமும் பண்ணின பிறகு கடைசியாய் அப்பம் குத்தணும். சரியா? இதை 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம்.
தேவையானவை:
கோதுமை மாவு 1 கப்
அரிசி மாவு 3/4 கப்
வெல்லம் 1 கப்
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினது 3 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு 1 சிட்டிகை
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
பொறிக்க நெய்
பூவன் வாழை பழம் 2

செய்முறை:
மேலே சொன்ன எல்லா மாவுகளையும் ஒரு பேசினில் போடவும்.
வாழை பழத்தை துருவவும்.
அதில் போடவும்.
ஏலப்பொடி போடவும்
சோடா உப்பு போடவும்
வெல்லத்தை துருவி போடவும்.
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினத்தை போடவும்
எல்லா வற்றையும் நன்கு அழுத்தி பிசையவும்.
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலக்கவும்.
பால் வேண்டுமானாலும் விடலாம்.
திக் ஆன தோசை மாவு படத்தில் இருக்கணும்.
அடுப்பில் அப்ப காரலை வைத்து எல்லா குழிகளிலும் நெவிடவும்.
உருகி சுட்டதும், அப்ப மாவை கரண்டியால் எடுத்து குழிகளில் விடவும்.
மறுபுறம் திருப்பி போட்டு வெந்ததும், அப்ப குச்சியால் அல்லது இரண்டு ஸ்பூங்களால் எடுக்கவும்.
பந்து போல் அழகாய் மெத் என்று இருக்கும்.
குறிப்பு: அப்ப மாவு எவ்வளவு ஊறுகிறதோ அவ்வளவு மெத் என்று வரும். எனவே காலை இல் முதல் வேலையாக கரைத்து வைக்கணும். எல்லா பக்ஷணமும் பண்ணின பிறகு கடைசியாய் அப்பம் குத்தணும். சரியா? இதை 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
அப்பம் 2
அப்பம் 2
தேவையானவை:
கோதுமை மாவு 1 டேபிள் ஸ்பூன்
அரிசி 1 கப்
வெல்லம் 1 கப்
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினது 3 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு 1 சிட்டிகை
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
பொறிக்க நெய்
பூவன் வாழை பழம் 2
செய்முறை:
அரிசியை ஒரு 1/2 மணி ஊறவைத்து அரைக்கணும், மட்டாய் தண்ணீர் விடணும்.
கடைசி இல் வெல்லம்,வாழை பழம,ஏலப்பொடி,கோதுமை மாவு போடவும்.
சோடா உப்பு போடவும்
நன்கு அரைத்து எடுக்கவும்.
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினத்தை போடவும்.
பால் வேண்டுமானாலும் விட்டு அரைக்கலாம்.
திக் ஆன தோசை மாவு பதத்தில் இருக்கணும்.
அடுப்பில் அப்ப காரலை வைத்து எல்லா குழிகளிலும் நெய் விடவும்.
உருகி சுட்டதும், அப்ப மாவை கரண்டியால் எடுத்து குழிகளில் விடவும்.
மறுபுறம் திருப்பி போட்டு வெந்ததும், அப்ப குச்சியால் அல்லது இரண்டு ஸ்பூன் களால் எடுக்கவும்.
'அப்பம்' பந்து போல் அழகாய் மெத் என்று இருக்கும்.
குறிப்பு: அப்ப மாவு எவ்வளவு ஊறுகிறதோ அவ்வளவு மெத் என்று வரும். எனவே காலை இல் முதல் வேலையாக கரைத்து வைக்கணும். எல்லா பக்ஷணமும் பண்ணின பிறகு கடைசியாய் அப்பம் குத்தணும். சரியா? இதை 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம்.
தேவையானவை:
கோதுமை மாவு 1 டேபிள் ஸ்பூன்
அரிசி 1 கப்
வெல்லம் 1 கப்
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினது 3 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு 1 சிட்டிகை
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
பொறிக்க நெய்
பூவன் வாழை பழம் 2
செய்முறை:
அரிசியை ஒரு 1/2 மணி ஊறவைத்து அரைக்கணும், மட்டாய் தண்ணீர் விடணும்.
கடைசி இல் வெல்லம்,வாழை பழம,ஏலப்பொடி,கோதுமை மாவு போடவும்.
சோடா உப்பு போடவும்
நன்கு அரைத்து எடுக்கவும்.
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினத்தை போடவும்.
பால் வேண்டுமானாலும் விட்டு அரைக்கலாம்.
திக் ஆன தோசை மாவு பதத்தில் இருக்கணும்.
அடுப்பில் அப்ப காரலை வைத்து எல்லா குழிகளிலும் நெய் விடவும்.
உருகி சுட்டதும், அப்ப மாவை கரண்டியால் எடுத்து குழிகளில் விடவும்.
மறுபுறம் திருப்பி போட்டு வெந்ததும், அப்ப குச்சியால் அல்லது இரண்டு ஸ்பூன் களால் எடுக்கவும்.
'அப்பம்' பந்து போல் அழகாய் மெத் என்று இருக்கும்.
குறிப்பு: அப்ப மாவு எவ்வளவு ஊறுகிறதோ அவ்வளவு மெத் என்று வரும். எனவே காலை இல் முதல் வேலையாக கரைத்து வைக்கணும். எல்லா பக்ஷணமும் பண்ணின பிறகு கடைசியாய் அப்பம் குத்தணும். சரியா? இதை 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !
அருமையான இனிப்பு குழிப் பணியாரம் நன்றி அம்மா.
இதற்கு உங்கள் பெயர் அப்பம்
இதற்கு உங்கள் பெயர் அப்பம்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !
மேற்கோள் செய்த பதிவு: 1285994பழ.முத்துராமலிங்கம் wrote:அருமையான இனிப்பு குழிப் பணியாரம் நன்றி அம்மா.
இதற்கு உங்கள் பெயர் அப்பம்
@பழ.முத்துராமலிங்கம்
ஹா...ஹா...ஹா... இது நான் வைத்த பெயர் இல்லை ஐயா.....



மேலும் இதை நெய் இல் பொரிப்போம் ஐயா ...........சபரி மலை இல் இருந்து அல்லது குருவாயூர் அப்பன் கோவில் இல் இருந்து வரும் நெய் அப்பம் ஐயா இது


krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
வேர்க்கடலை உருண்டை !
வேர்க்கடலை உருண்டை !

தேவையானவை :
உப்பில்லாமல் வறுத்த , தோலெடுத்த வேர்க்கடலை 2 கப்
வெல்லம் 1 - 1 /2 கப்
ஏலக்காய் பொடி கால் ஸ்பூன்
சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் கொஞ்சம்
இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு தனியே வைத்துக் கொள்ளவும். (உருண்டை பிடிக்க )
செய்முறை :
அடி கனமான வாணலி இல் அல்லது உருளி இல் வெல்லத்தை துருவி கொஞ்சம் தண்ணீர் விட்டு வைக்கவும்.
அது கரைந்ததும், வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.
ஏலக்காய் பொடி போடவும்.
நல்ல கமர்கட் பாகு என்று சொல்லப்படும் பாகாக காய்ச்ச வேண்டும்.
அதாவது, பாகு காய்ச்சும்போது, பக்கத்தில் ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்.
வெல்லம் நன்கு கெட்டிப்பட்டு ஆரம்பிக்கும்போது, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து இந்த தண்ணீரில் விடவேண்டும்.
அதை கையால் உருட்டிப் பார்க்கவேண்டும்.
உருட்ட வரும்போது நன்கு உருட்டி,ஒரு பாத்திரத்தில் அடித்தால், "டாண்" என்று சத்தத்துடன் உருண்டோடும்.
அதுவே கமர்கட் பாகு .
அப்படி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, உடைத்து வைத்துள்ள வேர்க்கடலை மற்றும் தேங்காய் துண்டுகளை பாகில் போட்டு நன்கு கிளறவேண்டும்.
தட்டில் கொட்டி வைத்துள்ள அரிசி மாவை தொட்டுக்கொண்டு , சூடு ஆறும் முன் உருண்டைகள் பிடிக்கவேண்டும்.
முதலில் கொஞ்சம் அழுத்தாமல் ஜஸ்ட் உருண்டை வடிவில் பிடித்து ஒரு தட்டில் போட்டு அதை யாரையாவது ஆட்டிக்கொண்டே இருக்க சொல்லவேண்டும்.
அப்படியாக எல்லா உருண்டைகளையும் பிடித்ததும், உருண்டைகள் கொஞ்சம் ஆறி இருக்கும், அதை மீண்டும் நன்றாக அழுத்தி பிடிக்கவேண்டும்.
சுவையான மிக மிக அருமையான வேர்க்கடலை உருண்டைகள் தயார்.
இதை விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.
உருண்டை வேண்டாம் என்று நினைத்தால், நெய் தடவிய தட்டில் கொட்டி கொஞ்சம் ஆறினதும் வில்லைகள் போடுங்கள்

தேவையானவை :
உப்பில்லாமல் வறுத்த , தோலெடுத்த வேர்க்கடலை 2 கப்
வெல்லம் 1 - 1 /2 கப்
ஏலக்காய் பொடி கால் ஸ்பூன்
சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் கொஞ்சம்
இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு தனியே வைத்துக் கொள்ளவும். (உருண்டை பிடிக்க )
செய்முறை :
அடி கனமான வாணலி இல் அல்லது உருளி இல் வெல்லத்தை துருவி கொஞ்சம் தண்ணீர் விட்டு வைக்கவும்.
அது கரைந்ததும், வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.
ஏலக்காய் பொடி போடவும்.
நல்ல கமர்கட் பாகு என்று சொல்லப்படும் பாகாக காய்ச்ச வேண்டும்.
அதாவது, பாகு காய்ச்சும்போது, பக்கத்தில் ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்.
வெல்லம் நன்கு கெட்டிப்பட்டு ஆரம்பிக்கும்போது, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து இந்த தண்ணீரில் விடவேண்டும்.
அதை கையால் உருட்டிப் பார்க்கவேண்டும்.
உருட்ட வரும்போது நன்கு உருட்டி,ஒரு பாத்திரத்தில் அடித்தால், "டாண்" என்று சத்தத்துடன் உருண்டோடும்.
அதுவே கமர்கட் பாகு .
அப்படி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, உடைத்து வைத்துள்ள வேர்க்கடலை மற்றும் தேங்காய் துண்டுகளை பாகில் போட்டு நன்கு கிளறவேண்டும்.
தட்டில் கொட்டி வைத்துள்ள அரிசி மாவை தொட்டுக்கொண்டு , சூடு ஆறும் முன் உருண்டைகள் பிடிக்கவேண்டும்.
முதலில் கொஞ்சம் அழுத்தாமல் ஜஸ்ட் உருண்டை வடிவில் பிடித்து ஒரு தட்டில் போட்டு அதை யாரையாவது ஆட்டிக்கொண்டே இருக்க சொல்லவேண்டும்.
அப்படியாக எல்லா உருண்டைகளையும் பிடித்ததும், உருண்டைகள் கொஞ்சம் ஆறி இருக்கும், அதை மீண்டும் நன்றாக அழுத்தி பிடிக்கவேண்டும்.
சுவையான மிக மிக அருமையான வேர்க்கடலை உருண்டைகள் தயார்.
இதை விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.
உருண்டை வேண்டாம் என்று நினைத்தால், நெய் தடவிய தட்டில் கொட்டி கொஞ்சம் ஆறினதும் வில்லைகள் போடுங்கள்

Last edited by krishnaamma on Tue Nov 20, 2018 11:46 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !
பொட்டுக்கடலை உருண்டை !

தேவையானவை :
பொட்டுக்கடலை 2 கப்
வெல்லம் 1 - 1 /2 கப்
ஏலக்காய் பொடி கால் ஸ்பூன்
சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் கொஞ்சம்
இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு தனியே வைத்துக் கொள்ளவும். (உருண்டை பிடிக்க )
செய்முறை :
அடி கனமான வாணலி இல் அல்லது உருளி இல் வெல்லத்தை துருவி கொஞ்சம் தண்ணீர் விட்டு வைக்கவும்.
அது கரைந்ததும், வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.
ஏலக்காய் பொடி போடவும்.
நல்ல கமர்கட் பாகு என்று சொல்லப்படும் பாகாக காய்ச்ச வேண்டும்.
அதாவது, பாகு காய்ச்சும்போது, பக்கத்தில் ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்.
வெல்லம் நன்கு கெட்டிப்பட்டு ஆரம்பிக்கும்போது, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து இந்த தண்ணீரில் விடவேண்டும்.
அதை கையால் உருட்டிப் பார்க்கவேண்டும்.
உருட்ட வரும்போது நன்கு உருட்டி,ஒரு பாத்திரத்தில் அடித்தால், "டாண்" என்று சத்தத்துடன் உருண்டோடும்.
அதுவே கமர்கட் பாகு .
அப்படி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, உடைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை மற்றும் தேங்காய் துண்டுகளை பாகில் போட்டு நன்கு கிளறவேண்டும்.
தட்டில் கொட்டி வைத்துள்ள அரிசி மாவை தொட்டுக்கொண்டு , சூடு ஆறும் முன் உருண்டைகள் பிடிக்கவேண்டும்.
முதலில் கொஞ்சம் அழுத்தாமல் ஜஸ்ட் உருண்டை வடிவில் பிடித்து ஒரு தட்டில் போட்டு அதை யாரையாவது ஆட்டிக்கொண்டே இருக்க சொல்லவேண்டும்.
அப்படியாக எல்லா உருண்டைகளையும் பிடித்ததும், உருண்டைகள் கொஞ்சம் ஆறி இருக்கும், அதை மீண்டும் நன்றாக அழுத்தி பிடிக்கவேண்டும்.
சுவையான மிக மிக அருமையான பொட்டுக்கடலை உருண்டைகள் தயார்.
இதை விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.
உருண்டை வேண்டாம் என்று நினைத்தால், நெய் தடவிய தட்டில் கொட்டி கொஞ்சம் ஆறினதும் வில்லைகள் போடுங்கள்

தேவையானவை :
பொட்டுக்கடலை 2 கப்
வெல்லம் 1 - 1 /2 கப்
ஏலக்காய் பொடி கால் ஸ்பூன்
சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் கொஞ்சம்
இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு தனியே வைத்துக் கொள்ளவும். (உருண்டை பிடிக்க )
செய்முறை :
அடி கனமான வாணலி இல் அல்லது உருளி இல் வெல்லத்தை துருவி கொஞ்சம் தண்ணீர் விட்டு வைக்கவும்.
அது கரைந்ததும், வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.
ஏலக்காய் பொடி போடவும்.
நல்ல கமர்கட் பாகு என்று சொல்லப்படும் பாகாக காய்ச்ச வேண்டும்.
அதாவது, பாகு காய்ச்சும்போது, பக்கத்தில் ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்.
வெல்லம் நன்கு கெட்டிப்பட்டு ஆரம்பிக்கும்போது, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து இந்த தண்ணீரில் விடவேண்டும்.
அதை கையால் உருட்டிப் பார்க்கவேண்டும்.
உருட்ட வரும்போது நன்கு உருட்டி,ஒரு பாத்திரத்தில் அடித்தால், "டாண்" என்று சத்தத்துடன் உருண்டோடும்.
அதுவே கமர்கட் பாகு .
அப்படி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, உடைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை மற்றும் தேங்காய் துண்டுகளை பாகில் போட்டு நன்கு கிளறவேண்டும்.
தட்டில் கொட்டி வைத்துள்ள அரிசி மாவை தொட்டுக்கொண்டு , சூடு ஆறும் முன் உருண்டைகள் பிடிக்கவேண்டும்.
முதலில் கொஞ்சம் அழுத்தாமல் ஜஸ்ட் உருண்டை வடிவில் பிடித்து ஒரு தட்டில் போட்டு அதை யாரையாவது ஆட்டிக்கொண்டே இருக்க சொல்லவேண்டும்.
அப்படியாக எல்லா உருண்டைகளையும் பிடித்ததும், உருண்டைகள் கொஞ்சம் ஆறி இருக்கும், அதை மீண்டும் நன்றாக அழுத்தி பிடிக்கவேண்டும்.
சுவையான மிக மிக அருமையான பொட்டுக்கடலை உருண்டைகள் தயார்.
இதை விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.
உருண்டை வேண்டாம் என்று நினைத்தால், நெய் தடவிய தட்டில் கொட்டி கொஞ்சம் ஆறினதும் வில்லைகள் போடுங்கள்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
முந்திரி உருண்டை !
முந்திரி உருண்டை !
தேவையானவை :
உடைத்த முந்திரி 2 கப்
வெல்லம் 1 - 1 /2 கப்
ஏலக்காய் பொடி கால் ஸ்பூன்
சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் கொஞ்சம் - தேவையானால் மட்டும் சேர்க்கவும்.
இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு தனியே வைத்துக் கொள்ளவும். (உருண்டை பிடிக்க )
செய்முறை :
அடி கனமான வாணலி இல் அல்லது உருளி இல் வெல்லத்தை துருவி கொஞ்சம் தண்ணீர் விட்டு வைக்கவும்.
அது கரைந்ததும், வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.
ஏலக்காய் பொடி போடவும்.
நல்ல கமர்கட் பாகு என்று சொல்லப்படும் பாகாக காய்ச்ச வேண்டும்.
அதாவது, பாகு காய்ச்சும்போது, பக்கத்தில் ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்.
வெல்லம் நன்கு கெட்டிப்பட்டு ஆரம்பிக்கும்போது, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து இந்த தண்ணீரில் விடவேண்டும்.
அதை கையால் உருட்டிப் பார்க்கவேண்டும்.
உருட்ட வரும்போது நன்கு உருட்டி,ஒரு பாத்திரத்தில் அடித்தால், "டாண்" என்று சத்தத்துடன் உருண்டோடும்.
அதுவே கமர்கட் பாகு .
அப்படி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, உடைத்து வைத்துள்ள முந்திரி மற்றும் தேங்காய் துண்டுகளை பாகில் போட்டு நன்கு கிளறவேண்டும்.
தட்டில் கொட்டி வைத்துள்ள அரிசி மாவை தொட்டுக்கொண்டு , சூடு ஆறும் முன் உருண்டைகள் பிடிக்கவேண்டும்.
முதலில் கொஞ்சம் அழுத்தாமல் ஜஸ்ட் உருண்டை வடிவில் பிடித்து ஒரு தட்டில் போட்டு அதை யாரையாவது ஆட்டிக்கொண்டே இருக்க சொல்லவேண்டும்.
அப்படியாக எல்லா உருண்டைகளையும் பிடித்ததும், உருண்டைகள் கொஞ்சம் ஆறி இருக்கும், அதை மீண்டும் நன்றாக அழுத்தி பிடிக்கவேண்டும்.
சுவையான மிக மிக அருமையான முந்திரி உருண்டைகள் தயார்.
இதை விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.
உருண்டை வேண்டாம் என்று நினைத்தால், நெய் தடவிய தட்டில் கொட்டி கொஞ்சம் ஆறினதும் வில்லைகள் போடுங்கள்
அதுவும் நன்றாக இருக்கும் .
தேவையானவை :
உடைத்த முந்திரி 2 கப்
வெல்லம் 1 - 1 /2 கப்
ஏலக்காய் பொடி கால் ஸ்பூன்
சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் கொஞ்சம் - தேவையானால் மட்டும் சேர்க்கவும்.
இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு தனியே வைத்துக் கொள்ளவும். (உருண்டை பிடிக்க )
செய்முறை :
அடி கனமான வாணலி இல் அல்லது உருளி இல் வெல்லத்தை துருவி கொஞ்சம் தண்ணீர் விட்டு வைக்கவும்.
அது கரைந்ததும், வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.
ஏலக்காய் பொடி போடவும்.
நல்ல கமர்கட் பாகு என்று சொல்லப்படும் பாகாக காய்ச்ச வேண்டும்.
அதாவது, பாகு காய்ச்சும்போது, பக்கத்தில் ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்.
வெல்லம் நன்கு கெட்டிப்பட்டு ஆரம்பிக்கும்போது, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து இந்த தண்ணீரில் விடவேண்டும்.
அதை கையால் உருட்டிப் பார்க்கவேண்டும்.
உருட்ட வரும்போது நன்கு உருட்டி,ஒரு பாத்திரத்தில் அடித்தால், "டாண்" என்று சத்தத்துடன் உருண்டோடும்.
அதுவே கமர்கட் பாகு .
அப்படி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, உடைத்து வைத்துள்ள முந்திரி மற்றும் தேங்காய் துண்டுகளை பாகில் போட்டு நன்கு கிளறவேண்டும்.
தட்டில் கொட்டி வைத்துள்ள அரிசி மாவை தொட்டுக்கொண்டு , சூடு ஆறும் முன் உருண்டைகள் பிடிக்கவேண்டும்.
முதலில் கொஞ்சம் அழுத்தாமல் ஜஸ்ட் உருண்டை வடிவில் பிடித்து ஒரு தட்டில் போட்டு அதை யாரையாவது ஆட்டிக்கொண்டே இருக்க சொல்லவேண்டும்.
அப்படியாக எல்லா உருண்டைகளையும் பிடித்ததும், உருண்டைகள் கொஞ்சம் ஆறி இருக்கும், அதை மீண்டும் நன்றாக அழுத்தி பிடிக்கவேண்டும்.
சுவையான மிக மிக அருமையான முந்திரி உருண்டைகள் தயார்.
இதை விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.
உருண்டை வேண்டாம் என்று நினைத்தால், நெய் தடவிய தட்டில் கொட்டி கொஞ்சம் ஆறினதும் வில்லைகள் போடுங்கள்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !
அம்மா தங்களின் இந்த பதிவை
பார்த்து செய்முறை
தெரிந்து கொண்டேன்.
நன்றி அம்மா
பார்த்து செய்முறை
தெரிந்து கொண்டேன்.
நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Page 2 of 3 •
1, 2, 3 


பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|