புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 9 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 9 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 9 Poll_c10 
7 Posts - 64%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 9 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 9 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 9 Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 9 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 9 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 9 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10


   
   

Page 9 of 27 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 18 ... 27  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 29, 2011 12:02 pm

First topic message reminder :

என் இனிய தமிழ் மக்களே ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..

இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .

" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..

பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...

குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..

சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...

குறிப்பை பார்க்கலாமா ..

இலக்கம்: 1

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..




குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..

தொடர்வோமா நண்பர்களே

நன்றியுடன்
வை.பாலாஜி

குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Mon Dec 05, 2011 9:58 pm

இங்கு உள்ள அனைத்துக் கதைகளும் படும் சூப்பர்..
கே.பாலாவின் கதைகள் யோசிக்க தக்க துப்பரியும் தூரநோக்கு போன்ற சிந்தனையோடு அமைந்துள்ளது..

மிதுனாவின் கதை மிகவும் நுனுக்கமான மற்றும் சமுகம் மற்றும் மனதைத் தொடும் வகையில் அமைந்துள்ளது..அதே போல தன் உமாவின் கதைகளும்..மேலும் உங்களது கற்பனைகளைப் படிக்க ஆவலைத் தூண்டுகிறது...வாழ்த்துகள்... சூப்பருங்க சூப்பருங்க

(ஓசியிலே கதை படிப்பது இப்படிதாங்க... சிரி )


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 06, 2011 7:00 pm

நல்ல கதை உமா ... சூப்பருங்க

கே.பாலாவின் கதை மிக சிறப்பாக உள்ளது .... சூப்பருங்க மகிழ்ச்சி

எல்லாரும் கலக்குறீங்க .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி







http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Dec 06, 2011 7:41 pm

வை.பாலாஜி wrote:நல்ல கதை உமா ... சூப்பருங்க

கே.பாலாவின் கதை மிக சிறப்பாக உள்ளது .... சூப்பருங்க மகிழ்ச்சி

எல்லாரும் கலக்குறீங்க .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நன்றி நன்றி பாலாஜி அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 07, 2011 3:26 pm

வை.பாலாஜி wrote:இலக்கம்: 3

வை.பாலாஜி wrote:
நேரம் அதிகாலை : 6:00 மணி
நாள் : 12/11/2011

அதிக மேல்தட்டு மக்கள் மட்டும் வசிக்கும்  ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதுவது தளத்தில் உள்ள சி3யின் கதவை தட்டினால் பணிப்பெண்    செல்வி , வெங்கடாசலம் கதவை திறந்துவிட்டு,தன் மனைவியை எழுப்பினார் .  இந்த வீட்டில் அனைத்து  வசதியும் இருந்தது .கூடவே  தனிமையும் இருந்தது   மூன்று மகன்களும் வெளியநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார்கள் . செல்வி வேலையெல்லாம் முடித்துவிட்டு மாலை 5 மணிக்கு கிளம்பினாள்.

நேரம் அதிகாலை : 6:00 மணி
நாள் : 13/11/2011

செல்வி எவ்வளவு முறை கதவை தட்டியும் கதவு திறக்கவில்லை ,சந்தேகம் ஏற்படவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியூன் கதவை திறந்தவுடன் எல்லோருக்கும் ஆதிர்ச்சி , வெங்கடாசலம்  மற்றும் அவர் மனைவி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்கள் . காவல் துறை தன் விசாரனையயை துவக்கினார்கள் .. செல்வியை  விசாரிக்கும் போது ஒரு முக்கியமான தடயம்‌ கண்ணில்பட்டது .



அங்கே கிடந்த பொருளை  பார்த்ததும் இன்ஸ்பேட்டர் கந்தனுக்கும் , கான்ஸ்டபில் மாணிக்காத்திற்கும் அதிர்ச்சி காத்திருந்தது..
அது கொலையாளி பயன்படுத்திய கத்தி முழுவதும் ரத்தமாக இருந்தது..உடனே மாணிக்கம் கர்ச்சிபை எடுத்து அதை சுருட்டி வைத்து கொண்டார்..

கொலை நடந்து எப்படியும் 6 , 7 மணி நேரம் இருக்கும் என்று  யூகித்து கொண்டார் ...இதற்கென நியமிக்கப்பட்ட கந்தன் இதுவரை 15 கேசுகளை உடனடியாக விசாரித்து குற்றத்தை கண்டுபிடித்தவன்.

அதிகாலையில் நடந்த விஷ்யம் என்பதால் அக்கம் பக்கம் வீட்டில் இருந்து ஒரு சிலரே வந்து இருந்தார்கள் அனைவரையும் கந்தன் ஒரு பார்வை பார்த்து விட்டு செல்வியை பார்த்தான் ...

நேற்றுவரை உயிரோடு இருந்தவர்கள் இன்று இரண்டு பிணங்களா கிடப்பதை பார்த்த அதிர்ச்சியில் செல்வி அப்படியே சிலை போல் நின்று இருந்தாள்.

கந்தன் : நீ நீங்க எத்தனை வருஷமா வேலை செய்யுரா?

(செல்வி இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை)  

மாணிக்கம் : யம்மா உனைதான் கேக்குறோம்..பதில் சொல்லு

செல்வி : என்னங்க ஐயா

கந்தன் : நாசமா போச்சி..நீ இங்க எத்தனை வருஷமா வேலை செய்யுரேனு கேட்டேன்

செல்வி : அது வந்துக ஐயா இங்க 3 மாசமாதான் வேலை செய்யுறேன் ஐயா..

கந்தன் : இதுக்கு முன்னாடி இங்க யாரு வேலை பார்த்தது?  இவங்க விட்டு ஆளுங்க பத்தி ஏதாவது தெரியுமா?

செல்வி : இதுக்கு முன்னாடி இங்கே மலர் அப்படினு ஒரு பொண்ணு வேலை பார்த்தால்...ஆனா என்ன பிரச்சனைநு தெரியல அந்த பொண்ணை அம்மாவும், அப்பாவும் வேலையை விட்டு தூக்கிட்டாங்கலாம் .....அதை பத்தி நான் அவளவ பேசிக்க மாட்டேன்  இவங்களுக்கு 3 மகன்கள்..எல்லாம் பொண்டாட்டி கூட வெளிநாட்டுல செட்டில் ஆகிடங்கலாம்.....

அதற்குள் விவரம் அந்த பிளாட்டில் இருக்கும் பலருக்கு தெரிந்து வாசலில் கூட்டம் அதிகமானது..கந்தன் போஸ்ட் மார்டம் வேலையை பார்த்து கொண்டிருந்தான் ..இன்னும் சில போலீஸ் அதிகாரிகள் எதிர்வீட்டு ஆளுங்களை விசாரித்து கொண்டிருந்தனர்..


மாணிக்கம் : ஸார் எனக்கு என்னமோ இந்த பொம்பள மேலதான் சந்தேகமா இருக்கு..முதல்ல இவளை விசாரிக்கணும்

கந்தன் : நீ சொல்றது சரிதான்..என்று செல்வியை பார்த்தார்

ஆனால் அவளை பார்த்ததும் இரண்டு கொலைகள் செய்யும் தைரியம் கண்டிப்பாக இவளுக்கு இருக்காது என்பதை அனுமானித்து கொண்டார்

மாணிக்கம்  : இங்க பாருமா நாங்க அடிச்சி விசாரிக்கிறதுக்குள்ள நீயே உண்மையா ஒத்துக..நீ ஏன் அவகளை கொலை பண்ண?

செல்வி : ஐயோ ஐயா நான் கொலையெல்லாம் பண்ணலா ஐயா....அதுவும் அவங்க 2 பேரூம் எனக்கு தெய்வம் என் புள்ளங்களை அவங்கதான் படிக்க வெக்கிறாங்க..நான் கொலையெல்லாம் பண்ணலா என்று அழுது புழம்பினாள்.

கந்தன் : சரி சரி அழாதே ....நீ இருக்கும்போது வேற யாராவது வீட்டுக்குள்ள வந்தாங்களா அதாவது சந்தேகபடுறமாதிரி...

செல்வி : இல்ல ஐயா..

கந்தன் : சரி முன்னாடி வேலை செஞ்சிட்டு இருந்த பொண்ணை பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா?

செல்வி : அதை பத்தி எனக்கு அவளாவ தெரியாது...ஆனால் அதே பொண்ணு கீழ ஒரு வீட்டுளையும் வேலை செஞ்சி இருந்திருக்க அவங்கள விசாரித்து பார்த்தால் ஏதாவது தெரியலாம் ஐயா

கந்தன் : மாணிக்கம்..இந்த அம்மா சொன்ன அந்த வீட்டு ஆளுங்களை கூட்டிட்டு வா

மாணிக்கம் : சரிங்க்கா ஐயா

அதற்குள் போஸ்ட் மார்டம் வேலை எல்லாம் முடிந்து பத்திரிகையாளர்கள் அவர்களுடைய வேலையை மும்முரமாக பார்த்து கொண்டு இருந்தார்கள்..

சிறிது நேரத்தில் மாணிக்கம் ஒரு வயதான அம்மாவுடன் வந்து கொண்டு இருந்தார்

மாணிக்கம் : ஸார் இவங்கதான் செல்வி சொன்ன வீட்டு அம்மா

கந்தன் : உங்கள் வீட்டுல மலர் அப்படினு ஒரு பொண்ணு வேலை செய்தலாமே...அவ வீட்டு அட்ரஸ் தெரியுமா? அந்த  பொண்ணை பத்தி சொல்லுங்கள்

பெண்மணி : அவ இங்க பக்கத்து தெருதான் ஸார்..எங்க வீட்டுல வேலை செய்யும்போது என் பேத்தியோட நகையை திருடிட்ட அதனால் நான் வேலையா விட்டு நிறுத்திட்டோம்...

கந்தன் : இப்படி திருட்டிட்டனு சொல்றீங்களே..அவ எடுத்ததை நீங்க பார்த்தீங்களா?

பெண்மணி : அட ஆமா ஸார்...நாங்கள் எவளோ கேட்டும் அவள் ஒத்துகல அப்புறம் போலீசுக்கு போவோம் அப்படினு சொன்னோன் அதனால் அவளே ஒத்துகிட்ட..இதை இந்த வீட்டு ஆளுங்ககிட்ட சொன்னோம் ஆனா அவ மேலே பரிதாபப்பட்டு இவங்க வேலைக்கு சேர்துக்கிட்டாங்க..என்னக்கென்னமோ அவதான் இதை பண்ணி இருப்பானு தோணுது

கந்தன் : சரி நீங்கள் போங்க..எப்பவாவது விசாரிக்கணும்னு சொன்ன ஒத்துலைப்பு தரணும் சரியா.

பெண்மணி : சரி ஸார்

கந்தனின் கணிப்பு சரியானதாக தோன்றியது..உடனே பிளாட் வாட்ச் மானிடம் சென்று வெளி ஆட்கள் வரும் லிஷ்டை வாங்கி வர சொன்னார்..மாணிக்கம் அதை வாங்கி வந்து கொடுத்தார்..
அதில் இரவு 9 மணிக்கு மலர் வந்ததாக குறிப்பு சொன்னது..

கந்தன் முகத்தில் சந்தோஷம்..கொலையாளி இவளோ சீக்கிரம் கிடைப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை..வண்டியை அந்த பெண்மணி சொன்ன வீட்டிற்கு விட சொன்னார்..ஆனால் அங்கே மலர் இல்லை..தவறு செய்தவர்கள் என்று இருப்பிடத்தில் இருந்து உள்ளார்கள்...

அவளின் அண்ணா வீட்டின் விலாசத்தை விசாரித்து அங்கே சென்றனர்..எதுவுமே தெரியாததுபோல் மலர் அங்கே அமர்த்து இருந்தாள்..'
போலீஸ் செய்ய வேண்டியதை செய்து அவளை ஸ்டேஷன்க்கு கூட்டி வந்தார்கள்..
1 மணிநேரம் மலரிடம்  பதில் வரவே இல்லை...இதற்கு மேலே தப்ப முடியாது என்று உண்மையை சொல்ல ஆரம்பித்தால்...

மலர் : கொலை பன்னது நான்தான் ஸார்...நான் 2 வருஷமா அவங்க வீட்டுல வேலை செஞ்சேன் அம்மா தங்கமானவங்க...நான் ஒரு வீட்டுல திருடி இருந்தேன்னே தெரிஞ்சும் எனக்கு நல்ல சம்பளமும், நல்ல அறிவுரையும் சொன்னாங்க ...நானும் நல்லபடியதான் 2 வருஷம் அங்க வேலை செஞ்சேன் .... எனக்கு புருஷனும் சரி இல்ல..பணம் ஆசையும் அதிகம் ஆச்சி..இதனால் ஒரு தடவை அந்த அம்மாவோட செயினை திருடிட்டேன்..இதை அவங்களே கண்டுபிடிச்சி..என்னை திட்டி வேலையா வீட்டு அனுப்பிடாங்க.. எனக்கும் ரொம்ப கோவம்...அவங்க ரொம்ப அமைதியானவங்க அதனால் அவங்க புருஷன் என்கிட்ட தப்பா நடத்துக்குரருனு சொல்லி அவங்களை பிளக்மைல் பண்ணி பணம் பறிக்கலாம்னு நினைச்சேன்..
ஆனா அவங்க அதை நம்பவே இல்லை...அதுவும் இல்லாம நேத்தைக்கு என் புள்ளைக்கு வேற உடம்பு சரி இல்லாமா போச்சி..... சரி அவங்ககிட்ட ஏதாவது பணம் கேட்கலாம்னு அங்க போனேன்.. ஐயா நல்ல குடிச்சீட்டு இருந்தார் .....நான் எவளோ சொல்லியும் அவங்கள் எனக்கு உதவி பண்ணலா  என்னை திட்டி வெளிய அனுபிட்டாங்க...அதனால இன்னும் கொஞ்சம் கோவம்..கோவத்துல....கோவத்துல.....

சொல்லி முடிப்பதற்குள்.....

கந்தன் : மாணிக்கம் வெளிய நிக்கிற பத்திரிகைகரங்களுக்கு..கொலையாளிய கண்டுபிடிச்சிடோம் பேரு "மலர்" அப்படினு நடந்த   எல்லா விவரத்தையும் சொல்லு..என்றபடி மலரை பார்த்தார்...

உங்களுக்கெல்லாம் இந்த பணம்  பைத்தியம் எப்ப அடங்குதோ..அப்போதன் விடிவுகாலம் என்றபடி..
மலரை வெறுப்பாக   பார்த்தார்...


 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 9 1772578765  கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 9 1772578765  கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 9 1772578765



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 07, 2011 3:40 pm

உங்களுக்கெல்லாம் இந்த பணம் பைத்தியம் எப்ப அடங்குதோ..அப்போதன் விடிவுகாலம் என்றபடி.. மலரை வெறுப்பாக பார்த்தார்...

ரேவா. நல்ல கதை. படிக்கவே இண்டெர்ஸ்டா இருந்தது.


பணம் என்று வருமோ.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 07, 2011 3:42 pm

கதை சூப்பர் ரேவதி.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 07, 2011 3:43 pm

உமா wrote:உங்களுக்கெல்லாம் இந்த பணம் பைத்தியம் எப்ப அடங்குதோ..அப்போதன் விடிவுகாலம் என்றபடி.. மலரை வெறுப்பாக பார்த்தார்...

ரேவா. நல்ல கதை. படிக்கவே இண்டெர்ஸ்டா இருந்தது.

பணம் என்று வருமோ.
ஆமா அக்கா பணம் என்றுதான் வரும்.. கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 9 224747944
நன்றி



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 07, 2011 4:22 pm

வை.பாலாஜி wrote:இலக்கம்: 3
நேரம் அதிகாலை : 6:00 மணி
நாள் : 12/11/2011

அதிக மேல்தட்டு மக்கள் மட்டும் வசிக்கும் ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதுவது தளத்தில் உள்ள சி3யின் கதவை தட்டினால் பணிப்பெண் செல்வி , வெங்கடாசலம் கதவை திறந்துவிட்டு,தன் மனைவியை எழுப்பினார் . இந்த வீட்டில் அனைத்து வசதியும் இருந்தது .கூடவே தனிமையும் இருந்தது மூன்று மகன்களும் வெளியநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார்கள் . செல்வி வேலையெல்லாம் முடித்துவிட்டு மாலை 5 மணிக்கு கிளம்பினாள்.

நேரம் அதிகாலை : 6:00 மணி
நாள் : 13/11/2011

செல்வி எவ்வளவு முறை கதவை தட்டியும் கதவு திறக்கவில்லை ,சந்தேகம் ஏற்படவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியூன் கதவை திறந்தவுடன் எல்லோருக்கும் ஆதிர்ச்சி , வெங்கடாசலம் மற்றும் அவர் மனைவி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்கள் . காவல் துறை தன் விசாரனையயை துவக்கினார்கள் .. செல்வியை விசாரிக்கும் போது ஒரு முக்கியமான தடயம்‌ கண்ணில்பட்டது .


அங்கே இருந்தது ஒரு சிறிய காகிதம்.
அதை எடுத்த துரை (போலீஸ் அதிகாரி) பிரித்து படித்தார். அதில் எங்களுக்கு வாழ விருப்பமில்லை என்று எழுதி இருந்தது. கொலையா தற்கொலையா என்று குழப்பத்தில் காவல் துரை.

அடுத்து செல்வியை விசாரிக்க துடங்கினர். எத்தனை வருடம் வேலை பார்க்கிறாய் என்று ஆரமித்து எல்லா கேள்விகளையுமே கேட்டு முடித்து விட்டார் துரை.

14.12.11
பிரேத பரிசோதனை முடிவு வந்தது.
இருவருமே விஷம் அருந்தியுள்ளனர் என்று தெரிய வந்தது..வெங்கடாசத்தில் மண்டையிலே பலத்த காயமும், அதனால் ஏற்பட்ட ரத்த வெள்ளமும் தான் அது என்று தெரிய வந்தது.
மோதிர கை ரேகையும் வெங்கடாசலத்தின் கை ரேகையே...

ஆனால், நல்ல ஒரு ஆதாரம். அந்த கையெழுத்து இருவரின் கையெழுத்தோடு மேட்ச் ஆகவில்லை என்று கை ரேகை நிபுணர்கள் கூறிவிட்டனர். இது தான் துறைக்கு கிடைத்த ஒரு முக்கிய பாயிண்ட்.

அடுத்து அவர் வீட்டை சோதனை செய்த போது பணமோ நகையோ எதுவுமே அங்கே இல்லை. இது 2வது பாயிண்ட்.

15.12.11
துரை மறைமுகமாக செல்வியை பின் தொடர்ந்தார்.செல்வி தன் வீட்டுக்கு செல்லாமல் வேறு ஒரு வீட்டில் நுழைந்து பேசி கொண்டு இருந்தாள்.. வெளிய வந்த அவளை துரை பிடித்து உள்ளே இழுத்து சென்றாள். உள்ளே இருந்தது இன்னொரு பெண். அவள் யார் என்று தெரியவில்லை இவருக்கு. அந்த வீட்டை சோதனை செய்த போது பணமும் நகையும் கிடைத்தது.

இருவரையுமே ஸ்டேஷனுக்கு கொண்டு விசாரிக்க துவங்கினார் ஒரு பெண் அதிகாரி, பொலிஸ் ஸிடெயிலில். உண்மை சொல்ல ஆரமித்தாள் செல்வி. இவள் என் தோழி .. இருவருக்குமே அதிக பண கஷ்டம். அதனால் தான் சாப்பாட்டில் விஷம் வைத்தோம்.அதை சாப்பிட்டவுடன் ஐயா மாடி படி எரும்போதே மயங்கி கீழே விழுந்து அவர் தலையிலே அடி பட்டு விட்டது. அந்த கடிதமும் நாங்களே எழுதினோம். என்று அழுது கொண்டு அவள் முடிக்கையிலே, மிகவும் ஆத்திரம் அடைந்த துரை அவளை நல்லா அடிங்க வயதானர்வார்களை இப்படியா சாகடிப்பது "நம்பிக்கை துரோகி" என்று மகளிர் போலீஸிடம் சொல்லிவிட்டு வெளியே வந்து FIR பைல் செய்தார்... இருவருமே தான் இக்கொலைக்கு காரணம் என்று தெளிவாக தெரிந்து விட்டது.

எழுதி முடிக்கும் முன் 3 மகன்களும் அங்கே வந்து கண்ணீர் விட்டு அழுதனர்.

துரை: வாருங்கள். உங்களை வளர்த்த அம்மா அப்பாவை விட பணம் தான் முக்கியம் என்று நீங்கள் அவர்களை தனியே விட்டு சென்றீர்கள். அதே பணம் முக்கியமென நினைத்து இருவரையுமே சாகடித்து விட்டார்கள், இறந்து 3 நாள் ஆகுது. இப்போ வந்து அழுறீங்க. போங்க.. பெற்றோர்களை பாதுகாக்க தவறவிட்டு இனி அழுது புலம்புவது வீண்.போங்க வீட்டுக்கு என்று சொல்லிவிட்டு அவரும் சற்று கண்ணீர் மல்க வெளியேறினார்..

(கருத்து : இதெல்லாம் தற்போது அதிகம் நடக்கின்ற ஒரு விஷயம்.ஆதலால் ஒரு விழிப்புணர்வு அனைவருக்குமே வேண்டும் )




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 07, 2011 4:29 pm

ரே உமா கதையெல்லாம் எழுதுறிங்க வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 07, 2011 4:35 pm

ஜாஹீதாபானு wrote:ரே உமா கதையெல்லாம் எழுதுறிங்க வாழ்த்துக்கள் கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 9 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 9 2825183110 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 9 224747944

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 9 678642 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 9 678642 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 9 678642 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 9 678642




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 9 of 27 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 18 ... 27  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக