புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10 
56 Posts - 50%
heezulia
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10 
12 Posts - 2%
prajai
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_m10ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம்  - தொடர் பதிவு ! - Page 11 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !


   
   

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Nov 12, 2011 6:08 pm

First topic message reminder :

தமிழர் வாழ்வில் இன்றியமையாத விஷயங்களாகக் கருதுவது  ஒழுக்கம், வீரம், காதல்  ஆகிய மூன்றும்  தான். பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்த மூன்று விஷயங்களைப் பற்றித் தான் அதிகப் பாடல்கள் உள்ளன. 6 முதல் 9ஆம்  நூற்றாண்டு வரை உள்ள இலக்கியங்களில் தான் பக்தியை மையமாக வைத்து எழுந்த பாடல்கள் அதிகம் காணப்படுகிறது.

சங்கத்தமிழ் நூல்களின் பெரும்பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள் & மேல் கணக்கு நூல்கள் ஆக  18 + 18 =36 நூல்கள் ஆகும். இதில் கீழ் கணக்கு நூல்கள் பெரும்பாலும் நீதி, ஒழுக்கம், வாழ்க்கை நெறிமுறைப் பற்றி அதிகம் கூறுகிறது. அவற்றுள் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, திரிகடுகம் போல் விளங்கும் சிறந்த நூல் ஆசாரக் கோவை ஆகும். இவை வடமொழியில் உள்ள ஸ்மிருதிகளை அடிப்படையாக வைத்து எழுதிய நூல் என்று மூத்தோர் கூறுகின்றனர்.

வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார். ஆசாரங்களை (ஒழுக்கங்கள்) அழகான மாலைப்போல் கோவையாக கோர்த்து (சேர்த்து) எழுதி உள்ளதால் இது ஆசாரக் கோவை என்று பெயர் பெறுகிறது. பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விஷயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது.

இன்று நமக்கு எழும் பல சந்தேகங்கள் ஆன , எந்த திசையில் படுக்க வேண்டும், எந்த திசையில் சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும்,  எப்போது குளிக்க வேண்டும், நீராடும் முறை என்ன , யாரை வணங்க வேண்டும், பெரியவர்களுடன் பழகும் போது , உண்ணும் போது செய்ய வேண்டிய ஒழுக்க நெறிகள் (மேனர்ஸ்) என்னென்ன என்பது போன்ற பல கேள்விகளுக்கு இதில் விடை உள்ளது. இது மட்டுமல்லாது மலம், ஜலம் கழிக்க வேண்டிய இடங்கள், எந்த நாள்கள் பெண்ணுடன் சேர்வது நல்லது, எந்த நாள் தவிர்க்க வேண்டும் பற்றியும் இதில் பாடல்கள் உள்ளன.

தமிழன் பல நூற்றாண்டு முன்னரே அறிவியல், வாழ்க்கை நெறிமுறை, ஆரோக்கியமாக வாழும் வழிகள் கண்டு அறிந்திருந்தான் என்பதற்கு இந்த நூல் சிறந்த சான்றாகும்.  

ஔவையின் மூதுரை, நல்வழியைப் போல் ஆசாரக்கோவை அனைவரிடமும் பிரபலமாகவில்லை. நம் பள்ளிக்கூட புத்தங்களிலும் இவை அரிதாகவே இடம் பெறுகிறது, பலருக்கு தமிழில் இப்படி ஒரு நூல் இருக்கிறது என்று தெரியவில்லை.  

இணையதளத்தில் பல இடங்களிலும் இதில் உள்ள பாடல்களின் மூலம் மட்டுமே கிடைக்கிறது. மூதுரை, நல்வழியைத் தொடர்ந்து ஈகரை உறவுகளுக்கு இந்த அற்புத நூலை அனைவரும் அறிந்து கொள்ள, அனைவரும் சுலபமாக படிக்க, பொருளுடன் பதிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளேன்.

உங்களின் ஆதரவும் ,தவறு ஏற்படின் எடுத்துக் கூறும் நட்பையும் நாடி தொடர்கிறேன்.

                 
அன்புடன்......



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 23, 2012 3:21 pm

மிக்க நன்றிகள் ஐயா, அருமையான ஆசாரங்கள், அதற்கேற்ற விளக்கங்கள்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jan 24, 2012 12:39 pm

பிஜிராமன் wrote:மிக்க நன்றிகள் ஐயா, அருமையான ஆசாரங்கள், அதற்கேற்ற விளக்கங்கள்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ராமன் நன்றி அன்பு மலர்



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jan 24, 2012 1:16 pm

பாடல் 87 கட்டிலில் படுத்திருப்பவருக்குச் செய்யத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


கிடந்தாரைக் கால் கழுவார்; பூப்பெய்யார்; சாந்தம்
மறந்தானும் எஞ் ஞான்றும் பூசார்; கிடந்தார்கண்
நில்லார், தாம் - கட்டில்மிசை

பொருள் விளக்கம்

ஒருவர் தூங்கும் போது, அவர்களின் கால் கழுவக்கூடாது, அவர்கள் மேல் புப்பொழியக் கூடாது. மறந்தும் சந்தனம் பூசக்கூடாது. அவர்கள் உறங்கும் போது கட்டில் அருகில் நிற்கவும் கூடாது.

பாடல் 88 பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


உதவிப் பயன் உரையார்; உண்டி பழியார்;
அறத்தொடு தாம் நோற்ற நோன்பு வியவார்; -
'திறத்துளி வாழ்தும்!' என்பார்

பொருள் விளக்கம்

திறமை அறிந்து வாழ நினைப்பவர்கள் தங்கள் பிறருக்குச் செய்த உதவியை அடுத்தவரிடன் சொல்ல மாட்டார். உணவு உண்ணும் போது குறை இருப்பினும் உணவைப் பழியார். நாம் செய்த தர்மம், விரதம் ஆகியவற்றை பெருமையுடன் விவரித்து கூற மாட்டார்.

பாடல் 89 கிடைக்காதவற்றை விரும்பாமை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


எய்தாத வேண்டார்; இரங்கார், இழந்ததற்கு,
கைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார்; -
மெய்யாய காட்சியவர்

பொருள் விளக்கம்

உண்மையை உணர்ந்த அறிவு நிறைந்தவர்கள், தமக்கு கிடைக்காதவற்றை எண்ணி வருத்தப் பட மாட்டார் . நடந்து முடிந்த நிகழ்ச்சியை நினைத்து கவலைப் பட மாட்டார் . ஒன்றும் செய்ய இயலாத துன்பம் சூழும் சூழல் நிகழ்த்தாலும் கலங்கி நிற்க மாட்டார்.

பாடல் 90 தலையில் சூடிய மோத்தல் முதலானவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


தலைக்கு இட்ட பூ மேவார்; மோந்த பூச்சூடார்;
பசுக் கொடுப்பின், பார்ப்பார் கைக் கொள்ளாரே; என்றும்,
புலைக்கு எச்சில் நீட்டார்; விடல்

பொருள் விளக்கம்

ஒருவர் தலையில் சூடிய பூவை முகர்ந்து பார்க்கக்கூடாது. ஒருவர் முகர்ந்து பார்த்ததை தலையில் சூடக்கூடாது. வேள்வி செய்யும் அந்தணர்கள் பசுவை தானமாக கொடுத்தாலும் அவர்களிடம் இருந்து பெறக்கூடாது. நம் கீழ் பணிபுரியும் மிகச் சிறிய குலத்தில் பிறந்த ஒருவராய் இருந்தாலும் அவர்களுக்குக் கூட நாம் உண்ட உணவின் எச்சிலை கொடுக்கக்கூடாது.

தொடரும்
பி.கு. பிறர் வாழ வேள்வி வளர்ந்து, பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காத உண்மை பேசும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு வேண்டிய உதவியை நாம் செய்ய வேண்டுமே தவிர அவர்களிடம் இருந்து ஒன்றைப் பெற்று ஒரு காரியத்தை செய்யக்கூடாது, இதற்குத் தான் மகாலக்ஷ்மியின் அம்சம் என்று கருதும் பசுவைக் கொடுத்தாலும் அவர்களிடம் இருந்து பெறக்கூடாது என்று இந்தப் பாடல் கூறுகிறது.



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Jan 26, 2012 7:10 pm

பாடல் 91 பழியாவன
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


மோட்டுடைப் போர்வையோடு, ஏக்கழுத்தும், தாள் இசைப்பு,
காட்டுளேயானும், பழித்தார் - மரம் தம்மின்
மூத்த உள, ஆகலான்

பொருள் விளக்கம்

காட்டிலும் நம்மை விட மூத்த வயதுடைய மரங்கள் (யோகிகள்) இருப்பதால் இறுமாப்புடன் இருத்தலும், தன்னடக்கம் இல்லாமல் போர்வை போர்த்தலும், இரு கரங்களை சேர்த்து தலைக்கு பின் வைத்து இருத்தலும் மிகுந்த பாவச் செயலாகும்.

பாடல் 92 அந்தணரின் சொல்லைக் கேட்க!
(நேரிசை வெண்பா)


தலைஇய நற் கருமம் செய்யுங்கால், என்றும்,
புலையர்வாய் நாள் கேட்டுச் செய்யார்; தொலைவு இல்லா
அந்தணர்வாய் நாள் கேட்டுச் செய்க - அவர் வாய்ச்சொல்
என்றும் பிழைப்பது இல

பொருள் விளக்கம்

வீட்டில் முதன்மையான velai தொடங்கும் போது சிறிய arivu உடையவரை நாள் குறிக்க சொல்லக் கூடாது. காலம் கணிப்பதை நன்கு கற்று உணர்ந்த கல்வியாளர்கள் சொல் கேட்க வேண்டும். அவர்கள் சொல்லும் சொல் பொய்ப்பதில்லை.

பாடல் 93 சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


மன்றத்து நின்று உஞற்றார்; மாசு திமிர்ந்து இயங்கார்;
என்றும் கடுஞ் சொல் உரையார்; இருவராய்
நின்றுழியும் செல்லார்; - விடல்

பொருள் விளக்கம்

சான்றோர் இருக்கும் சபையில் குறும்பு செய்யக்கூடாது. அழுக்குத் தோய்த்து அலையக் கூடாது. எப்போதும் கடின சொல் பேசக்கூடாது. இருவர் பேசும் போது இடையில் செல்லக்கூடாது. இவை தவறு, ஆதலால் இவற்றை விட்டொழிக்க வேண்டும்.


பாடல் 94 ஐயம் இல்லாத அறிவினர் செய்கை
(இன்னிசை வெண்பா)


கை சுட்டிக் கட்டுரையார்; கால்மேல் எழுத்து இடார்,
மெய் சுட்டி, இல்லாரை உள்ளாரோடு ஒப்பு உரையார்;
கையில் குரவர் கொடுப்ப, இருந்து ஏலார்; - ஐயம் இல் காட்சியவர்

பொருள் விளக்கம்

சந்தேகம் இல்லாமல் நன்கு கற்றவர்கள், பெரியார் முன் அவரை சுட்டி, கை நீட்டி கடுமையாகப் பேச மாட்டார். கால் மேல் வைத்து எழுத மாட்டார்,. கல்வி அறிவு இல்லாதவரை அறிவு உள்ளவரோடு ஒப்புமை செய்து சாதித்து பேச மாட்டார். பெரியவர் கொடுக்கும் போது அதை அமர்ந்து கொண்டு கையால் அலட்சியமாக வாங்க மாட்டார்,

தொடரும்

விரைவில் நிறைவுறும்




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 26, 2012 9:21 pm

உணவு உண்ணும் போது குறை இருப்பினும் உணவைப் பழியார்

மிகவும் அருமையான ஆச்சாரங்கள் ஐயா,

நான் உணவில் அதிக காரமோ, தேவையில்லாமல், அதிக கரிமசால் பொடியோ சேர்த்து இருந்தால், கோவம் அடைவேன், இனி இதை தவிர்த்துக் கொள்கிறேன்.

ஐயா, 91 ஆவது ஆசாரத்திற்கு இன்னும் கொஞ்சம் விளக்கம் தாருங்கள் ஐயா, எனக்கு விளங்க வில்லை.

மிக்க நன்றிகள் ஐயா....... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jan 27, 2012 8:45 pm

பிஜிராமன் wrote:
உணவு உண்ணும் போது குறை இருப்பினும் உணவைப் பழியார்

மிகவும் அருமையான ஆச்சாரங்கள் ஐயா,

நான் உணவில் அதிக காரமோ, தேவையில்லாமல், அதிக கரிமசால் பொடியோ சேர்த்து இருந்தால், கோவம் அடைவேன், இனி இதை தவிர்த்துக் கொள்கிறேன்.

ஐயா, 91 ஆவது ஆசாரத்திற்கு இன்னும் கொஞ்சம் விளக்கம் தாருங்கள் ஐயா, எனக்கு விளங்க வில்லை.

மிக்க நன்றிகள் ஐயா....... புன்னகை நன்றி

நன்றி ராமன்,

91 ஆம் பாடலில் வேறு ஏதாவது உட்பொருள் இருக்கிறதா என்று எனக்கு முழுமையாகத் தெரியவில்லை ராமன். இணையதளத்தில் தேடியும் இதற்கு இங்கு பதிந்த தகவலைத் தாண்டிய விவரங்கள் எனக்கு கிட்டவில்லை.

இந்த பாடலில் உள்ள வார்த்தைகளை வைத்து பதவுரையை மட்டும் பார்க்கும் போது வரும் பொருள்

காட்டில் உள்ள மரங்களில் நம்மை காட்டிலும் மூத்தவர் இருப்பதால் அங்கு உடலில் போர்வை போர்த்தி இருப்பதும், கழுத்தை தூக்கி கர்வத்துடன் இருப்பதும், இருகரங்களையும் சேர்த்து இருப்பதும் தீராத பழியாகும்.

இந்த வரிகளில் நான் புரிந்து கொண்ட பொருள்

நாம் சமுதாயத்தில் அனைவரின் முன்னிலையில் நல்லவனாக இருக்க விரும்புகிறோம். இதன் பொருட்டு நாம் சாஸ்திரம், ஆசாரம், ஒழுக்கம் என்று பலதும் செய்கிறோம், சரி என்று கூறுகிறோம். ஆனால் யாரும் இல்லாத, நம்மை யாரும் கண்டு கொள்ளாத போது ஒரு சில தவறுகளை / ஒழுக்கக் கேடுகளை செய்யத் துணிகிறோம். இப்படி செய்வதும் தவறு என்று இந்த பாடல் கூறுகிறது என்று நினைக்கிறேன்.

யாரும் இல்லாத காட்டிலும் நம்மை விட மூத்தவர் மரமாக , (இந்து மதக் கருத்துகளில் மக்களுக்கு நல்லது நினைக்கும், சாகாவரம் பெற்ற யோகிகள் மூலிகை மரங்களிலும், நன் மரங்களிலும் வசிப்பதாக கூறப்படுகிறது.) இருப்பதால் அங்கும் அலட்சியமாக மரியாதை குறைவாக நடக்கக்கூடாது என்று பொருள் கொள்கிறேன்.

இது சரியா என்று அறுதியிட்டு கூற போதிய ஆதாரம் இல்லை.

யாருக்கேனும் இந்தப் பாடலில் வேறு பொருள் இருப்பதாக உணர்ந்தால் பதிவிடவும்.

பாடலை உணர்ந்து படிக்கும் நீங்கள் மேலும் வளர வாழ்த்துகள்,

நன்றி.



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 9:08 pm

சதாசிவம் wrote:
பிஜிராமன் wrote:
உணவு உண்ணும் போது குறை இருப்பினும் உணவைப் பழியார்

மிகவும் அருமையான ஆச்சாரங்கள் ஐயா,

நான் உணவில் அதிக காரமோ, தேவையில்லாமல், அதிக கரிமசால் பொடியோ சேர்த்து இருந்தால், கோவம் அடைவேன், இனி இதை தவிர்த்துக் கொள்கிறேன்.

ஐயா, 91 ஆவது ஆசாரத்திற்கு இன்னும் கொஞ்சம் விளக்கம் தாருங்கள் ஐயா, எனக்கு விளங்க வில்லை.

மிக்க நன்றிகள் ஐயா....... புன்னகை நன்றி

நன்றி ராமன்,

91 ஆம் பாடலில் வேறு ஏதாவது உட்பொருள் இருக்கிறதா என்று எனக்கு முழுமையாகத் தெரியவில்லை ராமன். இணையதளத்தில் தேடியும் இதற்கு இங்கு பதிந்த தகவலைத் தாண்டிய விவரங்கள் எனக்கு கிட்டவில்லை.

இந்த பாடலில் உள்ள வார்த்தைகளை வைத்து பதவுரையை மட்டும் பார்க்கும் போது வரும் பொருள்

காட்டில் உள்ள மரங்களில் நம்மை காட்டிலும் மூத்தவர் இருப்பதால் அங்கு உடலில் போர்வை போர்த்தி இருப்பதும், கழுத்தை தூக்கி கர்வத்துடன் இருப்பதும், இருகரங்களையும் சேர்த்து இருப்பதும் தீராத பழியாகும்.

இந்த வரிகளில் நான் புரிந்து கொண்ட பொருள்

நாம் சமுதாயத்தில் அனைவரின் முன்னிலையில் நல்லவனாக இருக்க விரும்புகிறோம். இதன் பொருட்டு நாம் சாஸ்திரம், ஆசாரம், ஒழுக்கம் என்று பலதும் செய்கிறோம், சரி என்று கூறுகிறோம். ஆனால் யாரும் இல்லாத, நம்மை யாரும் கண்டு கொள்ளாத போது ஒரு சில தவறுகளை / ஒழுக்கக் கேடுகளை செய்யத் துணிகிறோம். இப்படி செய்வதும் தவறு என்று இந்த பாடல் கூறுகிறது என்று நினைக்கிறேன்.

யாரும் இல்லாத காட்டிலும் நம்மை விட மூத்தவர் மரமாக , (இந்து மதக் கருத்துகளில் மக்களுக்கு நல்லது நினைக்கும், சாகாவரம் பெற்ற யோகிகள் மூலிகை மரங்களிலும், நன் மரங்களிலும் வசிப்பதாக கூறப்படுகிறது.) இருப்பதால் அங்கும் அலட்சியமாக மரியாதை குறைவாக நடக்கக்கூடாது என்று பொருள் கொள்கிறேன்.

இது சரியா என்று அறுதியிட்டு கூற போதிய ஆதாரம் இல்லை.

யாருக்கேனும் இந்தப் பாடலில் வேறு பொருள் இருப்பதாக உணர்ந்தால் பதிவிடவும்.

பாடலை உணர்ந்து படிக்கும் நீங்கள் மேலும் வளர வாழ்த்துகள்,

நன்றி.

மிக்க நன்றிகள் ஐயா...........எனக்கு இப்பொழுதே புரிந்து விட்டது ஐயா....தங்களின் சிரத்தைக்கு தலைவணங்குகிறேன்.........

யாரும் இல்லாத காட்டிலும், சுய கட்டுப்பாடோடும், திமிறின்றி அடக்கத்துடன் நடந்து கொள்வது, என்றும் நீங்கா புகழை தரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை ஐயா......

மிக்க நன்றிகள் புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jan 28, 2012 9:42 am

பாடல் 95 பொன்னைப் போல் காக்கத் தக்கவை
(இன்னிசை வெண்பா)

தன் உடம்பு, தாரம், அடைக்கலம், தன் உயிர்க்கு என்று
உன்னித்து வைத்த பொருளோடு, இவை நான்கும்,
பொன்னினைப்போல் போற்றிக் காத்து உய்க்க! உய்க்காக்கால்,
மன்னிய ஏதம் தரும்.

பொருள் விளக்கம்

நம்முடைய உடம்பு, கட்டிய மனைவி, நம்மிடம் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று ஒருவர் அடைக்கலமாக கொடுத்த பொருள், ஆபத்து காலத்தில் நம் உயிரை காக்க உதவும் என்று வைத்த பொருள் ஆகிய நான்கினையும் பொன் போல் பாவித்து காக்க வேண்டும். காக்கவில்லையெனில் நீங்காத துன்பத்தை தரும்.


பாடல் 96 எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்
(இன்னிசை வெண்பா)


நந்து எறும்பு, தூக்கணம்புள், காக்கை, என்று இவைபோல்,
தம் கருமம் நல்ல கடைப்பிடித்து, தம் கருமம்
அப் பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப் பெற்றியானும் படும்

பொருள் விளக்கம்

மழைக்காலத்திருக்கு தேவையான உணவை கோடை காலத்தில் சோர்வில்லாமல் சேர்த்து வைக்கும் எறும்பு, குளிர் ,வெயில், மழையில் தங்கள் குஞ்சுகளைக் காக்க தேவைக்கு தகுந்து கூடு கட்டி வாழும் தூக்கனாங்குருவி, ஒரு உணவு கிடைத்தாலும் அதை அனைவருடன் பகிர்ந்து உண்ணும் காக்கை ஆகியவைப் போல் சோர்வில்லாமல், தேவையை நிறைவு செய்து, உற்றாருடன் உறவாடி தன் கடமை உணர்ந்து இல்வாழ்க்கை நடத்துபரின் வாழ்க்கை எல்லா வழியிலும் சிறப்புறும்.

பாடல் 97 சான்றோர் முன் சொல்லும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


தொழுதானும், வாய் புதைத்தானும், அஃது அன்றி,
பெரியார்முன் யாதும் உரையார்; பழி அவர்-
கண்ணுளே நோக்கி உரை

பொருள் விளக்கம்

நன்கு கற்று உணர்ந்து அடங்கிய பெரியவர் முன் ஒரு விஷயத்தை கூறும் போது அவரை வணங்கி, துடுக்கான வார்த்தை பேசாமல் வாய் பொத்தி பேச வேண்டும் , அப்படி கூறும் வார்த்தையில் தவறு நேரா வண்ணம் பார்த்து பார்த்து பேச வேண்டும்.






சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jan 28, 2012 9:55 am

பாடல் 95:
உண்மையிலேயே இப்படி ஒரு நேர்மையை காண்பது இந்த காலத்தில் மிக அரிது. அருமையான விளக்கம் அண்ணா!

பாடல் 96:
இதுவும் நன்று! நமக்கு மிஞ்சியதையாவது தானதர்மம் செய்து வாழலாம். புண்ணியமாவது கிடைக்கும்.

பாடல் 97:
,இந்த காலத்துல இது தான் குறைவு. எல்லாரும் தம்மை கதாநாயகன் என நினைத்துக்கொண்டு வாழ்வது கற்றவர்க்கும் மற்றவர்கும் மரியாதை தர மறுப்பது தா னே இன்றைய நிலை.

இன்று தான் நான் இந்த திரியை காண்கிறேன் சதாசிவம் மிகவும் அருமையான விளக்கம். பாராட்டுகள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 28, 2012 9:58 am

மிக்க நன்றிகள் ஐயா...........இன்னும்.....மூன்றே மூன்று தான்............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக