புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 8 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 8 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 8 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 8 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 8 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 8 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 8 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 8 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 8 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 8 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 8 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 8 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி


   
   

Page 8 of 13 Previous  1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 5:28 am

First topic message reminder :

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 8 Uyir

பழங்கால இந்தியாவில் செக்ஸை வாழ்க்கையின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக நினைத்தார்கள். சாப்பிடுவது, தூங்குவது மாதிரி அதுவும் ஒரு விஷயம். அதை ஒதுக்கி வைக்கவோ, ரகசிய பொருளாகப் பதுக்கி வைக்கவோ அவர்கள் நினைத்ததில்லை. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும் திருமண வாழ்க்கை இந்த உறவில்தான் முழுமை பெறுகிறது என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தது.

இல்லறத்தில் ஆண், பெண் இடையே இருக்கும் உறவு, ஒளிவு மறைவில்லாதது. அன்பு செலுத்துவது, உண்மையாக இருப்பது, மரியாதை தருவது என எதுவுமே ஒன்வே டிராஃபிக் இல்லை. செக்ஸிலும் இப்படித்தான்... அது இருவரின் தேவைகளையுமே முழுமையாக பூர்த்தி செய்யும்படி அமைய வேண்டும் என்றனர் ரிஷிகள். ‘பெண் என்பவகள் ஆணுக்கு படுக்கையில் சந்தோஷம் தருவதற்காகப் படைக்கப்பட்டவகள் இல்லை. அந்த உறவில் சுகம் தேடும் உரிமை அவளுக்கும் இருக்கிறது. அந்த இன்பம் கிடைக்காதபட்சத்தில் அவகள் திருமண உறவுக்கு வெளியில் அதைத் தேட தயங்க மாட்டாகள். அதனால் குடும்பத்தில் மட்டுமில்லை... சமூகத்திலும் பிரச்னைகள் உருவாகும்’ என்பது அந்த ரிஷிகள் சொன்ன வாக்கு.

முடிவாக அவர்கள் சொன்ன நீதி... ‘இந்த உறவில் கொடுப்பவர், எடுப்பவர் என்ற வித்தியாசம் இல்லை!’ நமது ரிஷிகள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்த உண்மைகளை நாற்பது வருடங்களுக்கு முன்புதான் தீவிர ஆராய்ச்சிகளின் வாயிலாக மேற்கத்திய நாகரிகம் புரிந்து கொண்டிருக்கிறது.
வாழ்க்கையின் முழுமையான பரிமாணத்தை நமது மதிப்புக்குரிய முன்னோர் காட்டினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நமது இந்த மரபு வேரைப் பிடுங்கி எறிந்து, "பாலுணர்வு" என்பதையே ஒரு மிகப் பெரிய கவர்ச்சி அம்சம் போல ஆக்கி, "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதன் புனிதத்தையும் இல்லாமல் ஆக்கி, அவர்களது "டேக் இட் ஈஸி" கலாசாரத்தை நமக்கும் விதைத்து விட்டனர்.

இதிலிருந்து மீண்டு வர என்ன வழி? நமது பாரம்பரிய ஞானத்தின் வேர்களைத் தேடி, செக்ஸ் தொடர்பான சிக்கல்களுக்கு அறிவியல்ரீதியான தீர்வுகளைக் காணும் முயற்சி தான் இந்தத் தொடர். மிகுந்த கண்ணி யத்தோடும், அளவற்ற ஜாக்கிரதை உணர்வோடும் இந்தத் தொடரை அணுகியிருக்கிறார் தன் ஆராய்ச்சிகளின் மூலம் உலகளவில் புகழ்பெற்ற செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.

இந்தத் தொடரைப் படிக்கும் எவரும் "உணவு, தூக்கம் போலவே பாலுணர்வும்கூட உயிர்களின் தவிர்க்கமுடியாத அடிப்படைத் தேவை" என்பதையும், அதுபற்றி முழுமையாகத் தெரிந்து கொகள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.

அது ஒரு பெட்ரூம்... பகட்டான அலங்காரங்களோ, திகட்ட வைக்கும் ஆடம்பர வசதிகளோ இல்லாத மிகச் சாதாரணமான பெட்ரூம். ஆனாலும் அது சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டது. வெறும் பத்து ஆண்டுகளில் பத்தாயிரம் முறை பலபேர் வந்து பரவசமான கலவி இன்பத்தை அனுபவித்த படுக்கை அறை என்ற பெருமையை அது பெற்றது.

தங்கள் காதல் மனைவியைக் கட்டியணைத்தபடி வந்த அன்புக் கணவர்கள், கேர்கள் ஃபிரெண்டை முத்தமிட்டபடி நுழைந்த டீன்ஏஜ் காதலர்கள், தனியாக அறைக்குகள் நுழைந்து காத்திருந்து முன்பின் அறிமுகமில்லாத பெண்களை துணையாகத் தேடிக் கொண்டவர்கள், ‘வயது எங்கள் உணர்ச்சிகளுக்கு அணை போடவில்லை’ என்று நிரூபிக்கும் விதமாக தங்கள் மனைவியோடு வந்து அந்தப் படுக்கையைப் பயன்படுத்திக் கொண்ட கிழவர்கள், ‘எங்களுக்கு ஜோடியே தேவையில்லை’ என்ற படி தனி ஆட்களாக வந்து சுய இன்பத்தில் பரவசப்பட்டவர்கள்... இப்படி பலவிதமான மனிதர்களை அந்த அறை பத்து ஆண்டுகளில் பார்த்திருக்கிறது.

வெளிச்சம், இருட்டு என்ற வித்தியாசம் எல்லாம் அவர்களில் பலருக்கு இல்லை. ஒரேநாளில் வெவ்வேறு நேரங்களில் விதம்விதமான உணர்வுகளுடன் அந்த அறைக்கு பல ஜோடிகள் வந்தன. படுக்கை விரிப்பை மாற்றக்கூட அவகாசம் தராமல், அடுத்தடுத்து பத்து ஜோடிகள் வந்து போனதும் நடந்திருக்கிறது.
இவ்வளவு பிஸியான அந்த அறை.. ஒரு நட்சத்திர ஹோட் டலின் ‘தேனிலவு சூட்’ அல்லது ஏதாவது குளிர்பிரதேச சுற்றுலா தல ரிஸார்ட்ஸாக இருக்கும் என்று தானே நீங்கள் நினைத்தீர்கள்.

ஸாரி... அது தப்பு. அந்த அறை, ஒரு மருத்துவக் கல்லூரியின் பரிசோதனைக் கூடம். அங்கு இப்படி பத்தாயிரம் தடவை பலர் பரவச நிலையை அனுபவித்தது, ஓர் ஆராய்ச்சிக்காக! அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் இருக்கும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி... அதில் இருக்கும் மகப்பேறு மற்றும் பெண்கள்நலப் பிரிவில்தான் நடந்தது இந்த ஆராய்ச்சி.

‘இதில் போய் என்ன ஆராய்ச்சி!’ என முகத்தைச் சுளிப்பவர்கள், தவறாமல் அடுத்த பாராவுக்கு போங்கள்.

இந்த வித்தியாசமான ஆராய்ச்சி நடந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்... ‘இருண்ட கண்டம்’ என பெயர்பெற்று மர்மப் பிரதேசமாக இருந்த ஆப்பிரிக்க கண்டத்தைக்கூட மனித இனம் அலசி ஆராய்ந்து விட்ட நேரம் அது. எங்கோ தொலைதூரத்தில் இருந்தபடி மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை
வகைப்படுத்தி பெயர் வைக்கும் அளவுக்கு அறிவியல் அப்போது உச்சத்தில் இருந்தது.

ஆனால், அப்போதும் புரியாத புதிராக இருந்தது, ஆண்பெண் நிகழ்த்தும் அந்தரங்க உறவின் அர்த்தங்கள். அந்த உறவின்போது எந்தெந்த உறுப்புகளுக்குகள் என்னவிதமான மாற்றங்கள் நிகழ்கின்றன? ஒட்டுமொத்த உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன? புதிய உயிரை உருவாக்கி அடுத்தடுத்த தலைமுறைகளை உலகுக்கு படைக்கும் ஆதார சக்தி எப்படி ஆணிடமிருந்து பெண்ணுக்குப் பரிமாறப்படுகிறது? பிரபஞ்சத்தை சிருஷ்டித்ததாகக் கூறப்படும் கடவுகள், ஒவ்வொரு ஜீவனையும் உயிர் கொடுத்து உருவாக்கும் பணியை மட்டும் ஏன் அந்தந்த ஜீவராசிகளிடமே கொடுத்தார்? அந்த உறவு என்பது வெறுமனே உயிர்களை உருவாக்க மட்டும்தானா? மனித இனத்தை எடுத்துக் கொண்டால், இதில் ஆணின் பங்கு என்ன... பெண்ணின் பங்கு என்ன? சுருக்கமாக சொல்லப் போனால் ஆண்களும், பெண்களும் இதை ஏன் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள்? இந்த உறவில் பலபேருக்கு நாட்டம் இல்லாமல் போவதற்கும், சிலர் மட்டும் எப்போதும் இதே நினைப்புடன் வெறியோடு திரிவதற்கும் காரணம் என்ன? பலபேருக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போவதற்கு என்ன காரணம்?



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 10:28 am

வயாக்ரா... ஆராய்ச்சிக் கட்டத்தில் இருந்த போது, உண்மையான வயாக்ராவையும், வயாக்ரா போன்ற டம்மி மாத்திரையும் நெஞ்சுவலி வந்தவர்களுக்குக் கொடுத்து பரிசோதிக்கப்பட்டது. இந்த மருந்தைக் கொடுத்த பிறகு அவர்களின் இ.சி.ஜி. பரிசோதனை செய்யப்பட்டது. இ.சி.ஜி எடுப்பதற்கு முன்பு நோயாளியின் மார்பக முடிகளை எல்லாம் மழிக்க வேண்டும். அப்படி இவர்களுக்கு மார்பக முடிகளை ஷேவ் செய்த நர்ஸ்கள் எல்லாம் தங்கள் டாக்டர்களிடம் சென்று, ‘நாங்கள் அவர்களின் மார்பகத்தைத் தொட்டு ஷேவ் செய்யும்போதும், பின்னர் இ.சி.ஜி. எடுக்கிறபோதும் அவர்கள் அதீத செக்ஸ் உணர்வுக்கு ஆளாகிறார்கள்’ என்று முறையிட்டார்கள். அப்போதுதான், வயாக்ரா, நெஞ்சு வலியை மட்டுப்படுத்துவதற்குப் பதிலாக விறைப்புத் தன்மையை வைக்கிறது என்பது தெரியவந்தது.

இதன் பின்னர் மருத்துவ உலகில் ஒரு பரபரப்பு பற்றிக் கொண்டது. மீடியாக்கள் உபயத்தால் வயாக்ரா ஒரே இரவில் உலகப் புகழடைந்தது. இப்போது செக்ஸ் என்ற வார்த்தையின் முழு அர்த்தம் புரிந்த அனைவருக்கும் வயாக்ரா என்ற வார்த்தையின் மகத்துவம் தெரியும். அப்புறமென்ன, ரத்தக் கொதிப்புக்கான மருந்துகளை, ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைத் தயாரித்துக் கொண்டிருந்த பல மருத்துவ கம்பெனிகள் வயாக்ரா போன்ற இச்சை மருந்துகளின் மீது இச்சை கொண்டு அவற்றைத் தயாரிப் பதில் ஈடுபட ஆரம்பித்து விட்டன.

இப்போது வயாக்ராவுக்கு அடுத்த நிலை மருந்துகள் தயாரிக்கும் முயற்சியில் முழுக் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதில் Pheromones என்கிற ரசாயனம் மனிதனின் அக்குள் மற்றும் பிறப்பு உறுப்புகளின் வியர்வையிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்றால் நம்ப சிரமமாக இருக்கும்!

மனிதனின் மூளை நரம்பு மண்டலத்தில் ‘கெமிக்கல் மெஸஞ்சர்ஸ்’ எனப்படும் நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள் ((Neuro Transmitters) உள்ளன. இது டோபோமைன், செரோடினின் எனும் ரசாயனங்களை உள்ளடக்கியது. இதனைப் பற்றிய ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. செக்ஸ் ஆர்வத்தை உண்டாக்குவதற்கும், விறைப்புத் தன்மையைத் தூண்டுவதற்கும் இந்த ஆய்வுகள் பயன்படும் என்று நம்பப்படுகிறது.

1998 வரை மருத்துவ உலகம் ஆணின் செக்ஸ் உணர்வு, அவனது விருப்பம், விறைப்புத் தன்மை போன்றவற்றில் மட்டுமே மும்முரம் காட்டியது. வயாக்ரா பரபரப்புக்குப் பின்னர், ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்ற அடிப்படையில் பெண்களின் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும் மருந்துகளின் ஆய்வுகளும் நடைபெறத் தொடங்கிவிட்டன. இதன் விளைவாக பெண்களுக்கென பிரத்யேகமாக சில மருந்துகள் இப்போது வரத் துவங்கியுள்ளன.

நவீன மருத்துவ உலகம் பெண்களுக்கான அப்ரோடிஸியாக் பொருட்கள் மீது இப்போது தான் அக்கறை காட்டினாலும், வாத்ஸ்யாயனர் அந்தக் காலத்திலேயே இதில் சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். பெண்களுக்கு செக்ஸ் ஆர்வத்தைத் தூண்டும் மருந்துகளையும், ஆண்குறி மாதிரி யான செயற்கை சாதனங்களையும் பற்றி அப்போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற சாதனம் சிந்துசமவெளி நாகரிக காலத்தில் நடைமுறையில் இருந்தது என்பது தொல்பொருள் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. வருங் காலத்தில் ஜீன்தெரபி மூலமாக பிறப்புறுப்புகளின் பிரச்னைகளை சரிசெய்வதும், ஸ்டெம்செல்கள் மூலமாக ஆண், பெண் உறுப்புகள் தயாரிப்பதும் சாத்தியமானால் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை! ‘சரகர்’ குறிப்பிட்டதையும் இங்கு சொல்லியாக வேண்டும். ‘ஆணின் மிகச் சிறந்த அப்ரோடிஸியாக் பெண்தான். ஒரு பெண்ணைப் பார்த்தவுடனேயே ஆணுக்குள் செக்ஸ் தீ பெரும் நெருப்பாக மூள வேண்டும். பெண்ணுக்கு அப்பாற்பட்டு மருந்தோ, பொருளோ தேவைப்பட்டால்தான் அதைப் பயன்படுத்த வேண்டும்’ என்பதுதான் சரகர் வாக்கு. ‘செக்ஸ் ஆர்வத்தை அதிகப்படுத்தும்’ என்ற நம்பிக்கையில் நம் நாட்டில் போலி மருந்துகள் மீதும், மூலிகைகள் மீதும் மக்கள் தவறான நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

இந்த மூலிகை அப்ரோடிஸியாக் பொருட்கள் பக்கவிளைவுகள் அற்றவை, நன்கு பலன்தரக்கூடியவை என்று மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது தவறான நம்பிக்கையாகும். பௌதிகத்தில் நியூட்டனின் மூன்றாவது விதியில் ‘For every action there is an equal and opposite reaction’ என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு சமமான எதிர்விளைவு நிச்சயம் என்பதுதான் இதற்கு அர்த்தம். இந்த விதி எல்லா மருந்துகளுக்கும்கூட பொருந்தும். பக்கவிளைவு ஒரு மருந்துக்கு இல்லை என்றாலே, அந்த மருந்து எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்பதுதான் நிஜம். அதனால்தான் கைதேர்ந்த மருத்துவர்கள் எந்த மருந்தில் பக்க விளைவு களைவிட நல்ல விளைவுகள் அதிகம் இருக்கிறதோ, அதைப் பரிந்துரை செய்கிறார்கள். ஆனால், நுட்பமான இந்த மருத்துவ அறிவு இல்லாத போலி மருத்துவர்கள் பலரிடம் சென்று மக்கள் பணத்தை இழப்பதுடன், உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொள்கின்றனர்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 10:40 am

‘நீண்ட நேரம் உடல் உறவில் ஈடுபட வேண்டுமா?’, ‘இரவில் வீடு செல்ல தயக்கமா?’, ‘வாலிப வயோதிக அன்பர்களே... உங்களுக்கோர் நற்செய்தி’ என்பது போன்ற சுண்டியிழுக்கும் அழைப்புகளுடன் மக்களுக்குத் தூண்டில் போடும் போலி மருத்துவர்களின் காட்டில் தொடர்ந்து பண மழைதான். பணபலத்தின் மூலம் மீடியாக்களின் துணையோடு இவர்கள் கூவிக்கூவி பொய்நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘ஆயுர்வேத மருத்துவர்’ என்று பொய்சொல்லிக் கொண்டு, பெயருக்கு முன்னால் தாங்களாகவே ‘டாக்டர்’ என்று சொல்லிக்கொண்டு, எல்லா நோய்களையும் குணப்படுத்துவோம் என்று விளம்பரம் செய்பவர்களும் போலி டாக்டர்கள்தான். ஆயுர்வேதம் என்றில்லை... சித்தா, யுனானி போன்ற வைத்திய முறைகளிலும் இந்தப் போலிகள் பெருகிக் கிடக்கின்றனர்.

உண்மையில் ஆயுர்வேதத்துக்கும் அலோபதி மருத்துவ முறைக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. விதிமுறைகளும் வழிமுறைகளும் மட்டுமே வெவ்வேறானவை. மூலாதாரக் கொள்கைகள் ஒன்றுதான்.

ஆயுர்வேதத்தின் பிதாமகரான தன்வந்திரி, ‘ஒரு ஆயுர்வேத மருத்துவர், நோயாளி தன்னிடம் வரும்போது அவருடைய ‘பிரக்ருதி’ (மனித உடம்பின் நிலை) ‘விக்ருதி’ (மனித உடம்பின் பிரச்னைகள்) இரண்டையும் தெரிந்து கொள்ளாமல் அவனுக்கு வைத்தியம் செய்து குணப்படுத்த முடியாது. அப்படி தெரியாமல் வைத்தியம் செய்ய முற்பட்டால் அவன் வைத்தியன் இல்லை; திருடன்!’ என்று சொல்லியிருக்கிறார்.
ஆயுர்வேதத்தில் குறிப்பிட்ட, ‘பிரக்ருதி’யைதான் அலோபதி மருத்துவம், ‘உடல்கூறியல்’ (Physiology) என்கிறது. உடல் உறுப்புகள் எல்லாம் சரிவர இயங்காமல் போனால் என்ன பிரச்னைகள் வரும் என்பதை சொல்லும் ‘விக்ருதி’தான் அலோபதியில் நோய்இயல் (Pathology) என்று அழைக்கப்படுகிறது.

இந்த பிரக்ருதி, விக்ருதி எதுவுமே தெரியாமல் பல போலி மருத்துவர்கள் துரிதஸ்கலிதம், விரைப்புத்தன்மைக் கோளாறு, மலட்டுத்தன்மை போன்றவற்றுக்கு போலி மருந்துகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சுயஇன்பம் தவறு என்று சொல்லி, அதற்கும் அதே மருந்தைக் கொடுக்கிறார்கள்.

எப்படி ஒரே மருந்து எல்லா பிரச்னையையும் தீர்க்கும் என்று மக்கள் யோசிக்க வேண்டும். ஒட்டுமொத்த ஆயுர்வேத மருத்துவர்கள் அனைவரை யும் நான் குற்றம் சொல்லவில்லை. முறையாக ஆயுர்வேத, ஹோமியோ, யுனானி, சித்தா பட்டப் படிப்புகள் படித்து உரிய பட்டம் பெற்ற பல சிறந்த மருத்துவர்கள் நல்ல முறையில் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், பயிருக்கு இடையே முளைக்கும் களைபோல உருவாகும் போலி மருத்துவர்களால் ஒட்டுமொத்த மருத்துவத் துறைக்கும் களங்கம் ஏற்படுகிறது.

ஒருவனுக்கு உடல்ரீதியிலான பிரச்னை. அவன் முதலில் அலோபதி டாக்டரிடம் போனான். "ம்ஹும்... எந்த பிரயோஜனமும் இல்லை". அடுத்ததாக ஹோமியோபதியிடம் போனான். பணம் கரைந்ததுதான் மிச்சம். நேச்சுரோபதியிடம் போனான். ‘ச்சே, வேஸ்ட்’ என்று திட்டிக்கொண்டே வெளியேறியவன், கடைசியாக வெங்கடாசலபதியிடம் போனானாம்.

இப்படி ஒரு மருத்துவத் துறை ஜோக் உண்டு. இப்படித்தான் பலர் தங்கள் பிரச்னைக்கு யாரிடம் போவது என்று சரியாக முடிவெடுக்காமல், யார் யாரிடமோ செல்கிறார்கள்! தமிழில் ஓரினச் சேர்க்கை என்பது ஆங்கிலத்தில் Homo sexuality எனப்படுகிறது. கிரேக்க மொழியில் ‘Homo’ என்றால் ஒரே மாதிரி யானவை என்று அர்த்தம். ‘ஹோமோ செக்ஸ்’ என்ற பெயரை முதன்முதலில் 1869ல் ஜெர்மன் உளவியல் நிபுணர் ‘கார்ல் மரியா பென் கெர்ட்’ என்பவர்தான் பயன்படுத்தினார். அதற்கு முன் பல பெயர்களில் ஓரினச் சேர்க்கை அழைக்கப்பட்டது. பொதுவாக ஓரினச் சேர்க்கை என்று சொல்லப் பட்டாலும் ஆணும் ஆணும் கூடுவதற்கு ‘ஹோமோ செக்ஸுவாலிட்டி’ என்று பெயர். அதுவே பெண்ணும் பெண்ணும் கூடினால ‘லெஸ்பியன்’ (lesbian) என்று குறிப்பிடப்படுகிறது. ‘லெஸ்பியன்’ என்ற வார்த்தை எதிலிருந்து வந்தது? கி.மு. 7ம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் ‘ஸாப்போ’ என்ற கவிஞர் ‘லெஸ்போஸ்’ (Lesbos) எனும் தீவில் வசித்து வந்தார். இந்தத் தீவில் ஒரு பெண் இன்னொரு பெண்ணைப் பார்த்து ‘ஒரு பெண்ணின் மனதைத் தொட்டுப் போனவளே... ’ என்று பாடுவது சகஜம். ஆம், பெண்ணும் பெண்ணும் கூடி வாழ்வது இங்கு சகஜமாக இருந்தது. பெண்களின் இந்தக் கூடல் சங்கமத்தை, ஸாப்போவின் பேனா தித்திப்பாக வர்ணித்து எழுத, உலகம் முழுவதும் பிரபலமாகிப் போனது லெஸ்போஸ் தீவு. இதனால் பெண்ணும் பெண்ணும் இணை சேர்வதற்கு ‘லெஸ்பியன்’ என்ற பெயர் வந்தது.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 10:41 am

மனிதன் தோன்றி வளர்ந்த ஆதி நாளிலிருந்தே ஓரினச் சேர்க்கையும் மனித சமூகத்தில் இருந்து வந்திருக்கிறது. கிரேக்க தத்துவ ஞானி ‘பிளாட்டோ’ தன்னுடைய ‘symposium’ எனும் நூலில், ‘ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள்தான் சிறந்த போர்வீரர்களாக முடியும்’ என்று எழுதியுள்ளார். கிரேக்கப் புராணத்தில் பல கடவுள்களும் ஹீரோக்களும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்நிய தேசத்தின் மீது படையெடுக்கும் எகிப்திய போர் வீரர்கள், தங்களிடம் தோற்கும் அயல் நாட்டு வீரர்களுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது, அந்நாட்களில் மிக மிக சாதாரண விஷயமாக இருந்திருக்கிறது.

கிறிஸ்து பிறப்புக்கு முன்பு வரை ரோம் நாட்டில் ஓரினச் சேர்க்கையை சமுதாயம் தவறாக நினைக்க வில்லை. இந்த உறவுக்கு சமூக அங்கீகாரம் மட்டுமில்லை... சட்டரீதியான அங்கீகாரம்கூடதரப்பட்டிருந்தது. ரோமானிய மன்னர்களான நீரோ, கலிகுலா போன்றவர்கள் ஓரினச் சேர்க்கையை ஆதரித்ததுடன் அதில் லயிப்புடன் ஈடுபட்டும் வந்திருக்கிறார்கள். ஆனால், கிறிஸ்து பிறப்புக்குப் பின்னர் நான்காம் நூற்றாண்டில் ஓரினச் சேர்க்கை மீதான சமுதாயத்தின் கருத்தில் மிகுந்த மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. குறிப்பாக, ஆசனவாய் வழியாக செக்ஸில் ஈடுபடக் கூடாது என்ற எண்ணம் வலுப் பெற்றது. ‘ஆசன வாய் வழியே செக்ஸில் ஈடுபட்டு சந்ததியை உருவாக்கும் வாய்ப்பு இல்லாதபோது ஏன் அதில் ஈடுபட வேண்டும்?’ என்ற எண்ணம் வலுவடைய ஆரம்பித்தது. காலக் கழிவில் கிறிஸ்தவ மதம் தோன்றி அது உலகெங்கும் பரவ ஆரம்பித்த காலத்தில், ‘ஹோமொ செக்ஸ்’ குறித்த எதிர்மறையான கருத்துகள் கிளம்ப ஆரம்பித்தன. அதேசமயம், மறுமலர்ச்சி காலத்தில் மாபெரும் சிற்பியும் ஓவியனுமான மைக்கேல் ஏஞ்சலோவும் இன்னும் சில ஓவியர்களும் புகழ்பெற்ற ‘சிஸ்டைன் சேப்பல்‘ (Sistine chapel) தேவாலயத்தின் நீண்ட சுவர்களில் ஆடையில்லாத ஆண்களையும், ஆண் உறுப்புகளையுமே வரைந்து ஓரினச் சேர்க்கைப் பற்றிய தங்களின் ஆதரவை மறைமுகமாகத் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். ஷேக்ஸ்பியர்கூட தனது புகழ்பெற்ற கவிதைகளில், நாடகங்களில் ஆணின் உறுப்புகளை அழகாக வர்ணித்து எழுதியிருப்பதை நாம் இங்கு சுட்டிக் காட்டித்தான் ஆக வேண்டும். ‘ஜான் பாஸ்வெல்’ என்ற வரலாற்று ஆசிரியர், ‘கிறிஸ்டியானிட்டி சோஷியல் டாலரன்ஸ் அண்ட் ஹோமோ செக்ஸுவாலிட்டி’ என்ற நூலை எழுதினார். இதில் ‘கிறிஸ்தவ மதம் ஆரம்பத்தில் ஹோமோ செக்ஸை எதிர்க்கவில்லை, ஏற்றுக் கொண்டுதான் இருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

செயின்ட் அகஸ்டின், செயின்ட் தாமஸ் ஆக்வீனாஸ் என்ற இரண்டு மத குருமார்கள், ‘எந்த விதமான செக்ஸ் செயல் பாட்டில் ஈடுபட்டால் குழந்தை பிறக்கிறதோ அதுதான் சமுதாயத்துக்கு நல்லது. அதுதான் இயற்கை யானதும்கூட. இதற்கு மாறாக குழந்தை பிறக்க எந்தவித வாய்ப்புமில்லாத நிலையில் செக்ஸில் ஈடுபடுவது பாவம். அது இயற்கைக்குப் புறம்பானது’ என்று குறிப்பிட்டார்கள்.

அப்போது சமூகத்தில் செல்வாக்கு மிக்க ஆசாமிகளாக இருந்தவர்கள், இந்த மத குருக்களின் கருத்துகளை ஏற்றுக் கொண்டதுடன் அவற்றைத் தங்களுக்கு சாதகமாகவும் பயன் படுத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். தங்களை எதிர்ப்பவர்கள் குற்றமற்றவர்களாக இருந்தாலும்கூட அவர்கள் மீது ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டார்கள் என்ற முத்திரையைக் குத்தி அவர்களுக்கு அபராதம் விதிப்பது, சிறையிலடைப்பது, துன்புறுத்துவது போன்ற காரியங்களில் ஈடுபட்டார்கள். இதன் காரணமாகஅக்கால கட்டத்தில் ஓரினச் சேர்க்கை என்பது வெறுப்புக்குரிய கீழ்த்தரமான செயலாக மக்கள் மத்தியில் பதிந்து போனது.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது பாவம், மாபெரும் தவறு என்ற மதரீதியான பார்வைக்கு அழுத்தம் சேர்ப்பதுபோல், பத்தொன்பதாம் நூற்றாண்டில் மருத்துவ உலகமும் ஓரினச் சேர்க்கை தவறானது என்று சொன்னதுடன், இதுவொரு நோய் என்றும் சொல்லத் துவங்கியது. உதாரணமாக, ‘கிராஃப்ட் எபிங்’ என்னும் செக்ஸுவாலஜிஸ்ட் 1886ல், மருத்துவ பாடநூல் ஒன்றை எழுதினார். இதில் ‘ஓரினச் சேர்க்கை என்பது பிறவிக் கோளாறு (ஜீன் குறைபாடு) என்றும், இத்தகைய புணர்ச்சியில் ஈடுபடுவது நரம்புத் தளர்ச்சிக்கு வழிகோலும் என்றும் எழுதியிருந்தார். அப்போது, இவரது கருத்தை ஒட்டி மருத்துவ உலகம் ஓரினச் சேர்க்கையை ஒரு மனநோயாகவே கருதியது.

ஹோமோ செக்ஸ் தவறா, இல்லையா என்பது பல காலமாக நீண்டவிவாதமாக இருக்க, ஃபிரான்ஸ் சக்கரவர்த்தியாக ஐரோப்பியாவை ஆட்டி வைத்துக் கொண்டிருந்த நெப்போலியன், 1804ல் வயதுக்கு வந்த இருவர் விருப்பத்துடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது தவறில்லை என்று சட்டம் போட்டான். இதுதான் சரித்திரத்தில் முதல் சட்டம்!



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 10:41 am

அடுத்தகட்டம், 1957ல் இங்கிலாந்தில் ஒரு கமிட்டி போடப்பட்டது. இந்த கமிட்டி ஓரினச் சேர்க்கையைப் பற்றி கள ஆய்வு செய்து, ஒரு அறிக்கையைத் தயாரித்தது. இதற்கு ‘வுல்ஃபென்டன் ரிப்போர்ட்’ என்று பெயர். இந்த அறிக்கையில், ‘வயதுக்கு வந்த இரண்டு பேர் எந்தவிதமான செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டாலும் தவறே கிடையாது. விருப்பமின்றி எந்தவிதமான செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அது தவறே’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை எந்த வகையான செக்ஸ் உறவு என்பதைவிட விருப்பத்துக்கே முதலிடமும் முக்கியத்துவமும் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பல எழுத்தாளர்களுக்கு, கவிஞர்களுக்கு, இசைக் கலைஞர்களுக்கு, ஓவியர் களுக்கு ஓரினச் சேர்க்கையைப் பற்றி நல்ல எண்ணம் இருந்திருக்கிறது. என்றாலும், தங்களின் ஆதரவுக் கருத்தை நேரடியாக மக்கள் மன்றத்தில் சொல்லாமல், மறைமுகமாகவே வெளிகாட்டி வந்தனர். வெளிப்படையாகச் சொன்னால் சமுதாயம் தங்களை இழிவாகக் கருதி விடுமோ என்ற அச்சமும், அதுவரை தாங்கள் பாடுபட்டு தேடி வைத்திருக்கும் புகழுக்குப் பங்கம் வந்துவிடுமோ என்ற தயக்கமும் அவர்களுக்கு இருந்திருக்கலாம்.

1969ல் அமெரிக்காவில் மான்ஹாட்டன் நகரத்தில் ஓரினச் சேர்க்கைக்கு என்றே ஒரு கேளிக்கை விடுதி இருந்தது. இந்த விடுதியில் போலீஸ்காரர்கள் திடீரென்று ஒரு நாள் ரெய்டு நடத்தி அங்கிருந்தவர்களை எல்லாம் கைது செய்தார்கள். இந்த ரெய்டை எதிர்த்து ஹோமோ செக்ஸ் விரும்பிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து வீதிகளில் தெருமுனைக் கூட்டம் போட்டு ‘ஓரினச் சேர்க்கையை தவறாக நினைக்காதீர்கள்’ என்று கோஷம் போட்டார்கள். இந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் அப்போது மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சி மிக மிக முக்கியமானதாகக் கருதப்பட காரணம் உள்ளது. அது நாள் வரை ஓரினச் சேர்க்கைக்கு மறைமுகமாக ஆதரவு தந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, வீதிக்கு வந்து பகிரங்கமாகப் போராட வைத்தது இச்சம்பவம். ஓரினச் சேர்க்கைக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது என்று வெளிப்படையாக மக்கள் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்தது. அதோடு ஓரினச் சேர்க்கை குறித்த அமெரிக்க அரசின் கருத்தையே மறுபரிசீலனை செய்ய வைத்தது! 1979ல், ‘ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவர்களை சமூகம் ஒதுக்கக் கூடாது. மற்றவர்களைப் போல் இவர்களும் சமமானவர்களே’ என்று முப்பத்தொன்பது அமெரிக்க நகரங்களில் அரசாங்கமே சட்டம் கொண்டு வந்தது. இது ஓரினச் சேர்க்கை சம்பந்தப்பட்ட விவாத வரலாற்றில் ஒரு திருப்பு முனை! மனித உயிர்களிடத்தில் காணப்படும் இந்த ஹோமோசெக்ஸ் பற்றிய பார்வை இந்தியாவில் எப்படி இருந்தது? கிறிஸ்தவ மதமும், மேலை நாடுகளும் ஓரினச் சேர்க்கை பற்றி அந்தக் காலத்தில் எவ்வகையான கண்ணோட்டம் கொண்டிருந்தன என்று சென்ற இதழில் பார்த்தோம். அந்தக் காலகட்டத்திலும் அதற்கு முந்தைய காலகட்டத்திலும், ஓரினச் சேர்க்கை குறித்து நம் இந்திய தேசத்தில் எந்தவிதமான அபிப்பிராயங்கள் நிலவின? இந்தக் கேள்விக்கான பதில் நிச்சயம் உங்களை ஆச்சர்யப்படுத்தும்!

கிழக்கிந்திய கம்பெனி என்ற வர்த்தகப் போர்வையில் வந்து நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு வரை, ஓரினச் சேர்க்கையை ஆட்சேபணைக்குரிய உறவாகவோ, பாவகரமான குற்றமாகவோ இந்திய தேசம் பார்க்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், நம் பழங்கால நூல் களில் ஓரினச்சேர்க்கை பற்றி நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. மனுதர்ம சாஸ் திரத்தில்கூட தண்டிக்கப்பட வேண்டிய, கண்டிக்கப்பட வேண்டிய இழிவான செயலாக சொல்லப்படவில்லை. ஓரினச்சேர்க்கை என்பதை எதிர்க்கவும் செய்யாமல் ஆதரிக்கவும் செய்யாமல், உறவுகளின் விசித்திரங்களில் இதுவும் ஒன்று என்ற மனோநிலையில்தான் நம் மூதாதையர்கள் இருந்திருக்கின்றனர். இதற்கு சரியான எடுத்துக்காட்டு, ‘ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட பிறகு அதில் ஈடுபட்டவர்கள் குளித்து விட்டால் போதும்’ என்று மனுதர்மம் சொல்வதுதான்! இந்திய நீதி நூலாசிரியர்கள்கூட ஓரினச் சேர்க் கையைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களைத் தங்கள் நூல்களில் குறிப்பிடவில்லை. ஒரு விஷயத்தை முக்கியமாக யோசிக்க வேண்டும்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 10:41 am

மனுதர்ம காலம் என்பது வேத காலம். வர்ணங்களின் அடிப்படையில் மக்களைப் பேதப்படுத்தி ஏற்றத்தாழ்வுகளும், புறக்கணிப்புகளும் மண்டிக்கிடந்த அந்தக் காலத்தில் கூட ஓரினச் சேர்க்கையைப் பற்றிய தவறான கண்ணோட்டம் இருந்ததில்லை என்பதுதான் அந்த முக்கியமான விஷயம். ஆனால், வாத்ஸ்யாயனரின் ‘காம சாஸ்திர’த்தில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணம் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதை இத்தருணத்தில் சுட்டிக் காட்டியே தீரவேண்டும். அக்காலத்தில் எட்டு வகையான திருமணங்கள் நடைமுறையில் இருந்திருக்கின்றன. அவற்றில் ‘காந்தர்வ விவாஹம்’ என்றழைக்கப்பட்ட காதல் திருமணமும் ஒன்று. வாத்ஸ்யாயனர் குறிப்பிடும் இந்தக் காந்தர்வ விவாஹ முறைப்படி ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மட்டுமல்ல, ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும்கூட இணை சேரலாம்! பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டு வரைக்கும்கூட இந்தியாவில் ஓரினச்சேர்க்கை ஒரு பிரச்னையாகவே கருதப்படவில்லை. ஆங்கி லேயர்கள் நம்மை ஆட்சி செய்யத் துவங்கிய பிறகுதான் ஓரினச்சேர்க்கை என்பது மிகப்பெரிய பிரச்னையாகக் கருதப்பட்டது.

ஆங்கிலேயர்கள் தங்களின் பயன்கருதி, அந்நாளைய சூழல்களுக்கு ஏற்ற வகையில் சட்ட விதிகளை உருவாக்கி ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் சுமத்தினார்கள் என்பது மறைக்கவும், மறுக்கவும் முடியாத வரலாறு. 1837ம் ஆண்டில் மெக்காலே (Lord Macaulay) என்ற அதிகாரவர்க்கத்தின் பிரதிநிதியான ஆங்கிலேயரால்தான், முதன்முதலாக இந்திய சட்டவிதிகள் (இந்தியன் பீனல் கோட்) தயாரிக்கப்பட்டது. இதன்படி இ.பி.கோ. செக்ஷன் 377ல் ‘ஹோமோ செக்ஸ் இயற்கையான வழிமுறைகளுக்கும், இயல்பான செக்ஸ் செயல்பாடுகளுக்கும் எதிரானது’ என்று சொல்லப்பட்டு, தண்டனைக்குரிய ஒரு குற்றமாக அறிவிக்கப்பட்டது.

இந்திய சட்டம், ஹோமோ செக்ஸைக் குற்றமாகக் கருதுவது ஒருபுறமிருக்கட்டும். ஒரு மனிதன் ஏன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகிறான்? இது அவ்வளவு சுலபத்தில் பதில் சொல்ல முடியாத கேள்வி.

ஒரு மனிதன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குறித்து நான்கு வகையான கருத்தாக்கங்கள் இருக்கின்றன.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 10:52 am

1.ஜெனடிக் தியரி: இதன்படி ஓரினச் சேர்க்கை என்பது ஜீன்களின் கோளாறினால் ஏற்படுகிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால், இதனை மருத்துவ உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை.

2.ஹார்மோன் தியரி: கர்ப்பத்தின்போது தாயின் ஹார்மோன் கோளாறினால் குழந்தைக்கு ஓரினச் சேர்க்கை விருப்பம் வருகிறது என்று சொல்லப்பட்டது. எனினும் குழந்தையின் ஹார்மோனை பரிசோதித்த மருத்துவ உலகம், இதற்கான எந்த நிரூபணமும் இல்லாததைக் கண்டறிந்து இதனையும் மறுதலித்தது.

3.சைக்கோ அனலிடிக்கல் தியரி: இதன்படி குழந்தைப் பருவத்தில் நெருக்கடியான சூழலில் வளரும்போது, மன பாதிப்பின் காரணமாக ஓரினச் சேர்க்கையின் மீது நாட்டம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கோட்பாட்டையும் மருத்துவ உலகம் பரிசீலனை செய்தது. ஓரினச் சேர்க்கையாளர்களின் வீட்டுச்சூழலும், பெற்றோர் களும் நெருக்கடியற்ற நிலைமையில் இருந்தது கண்டறியப்பட்டு, இக்கோட்பாட்டையும் மருத்துவ உலகம் புறந்தள்ளியது.

4.பியர் இன்ஃபுளுயன்ஸ் தியரி (Peer influence theory): இதன்படி ஒரு குழுவில் இருக்கும் பெரும்பாலோருக்கு ஓரினச்சேர்க்கை மீது ஈடுபாடு இருந்தால், ஈடுபாடற்ற மற்றவர்களும் ஓரினச் சேர்க்கை யாளர்களாக மாறுவார்கள் என்று சொல்லப்பட்டது. இதனையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில், இயற்கையான இருபால் சேர்க்கையில் (ஆணும் பெண்ணும் கூடும் இயல்பான செக்ஸில்) விருப்பம் உள்ளவர்கள் எந்தக் குழுவில் இருந்தாலும் அவர்களுக்கு ஓரினச் சேர்க்கை யின் மீது துளியும் விருப்பம் ஏற்படாது என்பதே உண்மை. அப்படியிருக்க, ஒருவரைப் பார்த்து இன்னொருவருக்கு ஹோமோசெக்ஸ் விருப்பம் ஏற்படும் என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது?

மேலே சொன்ன நான்கு கோட்பாடுகளும் யூகத்தின் அடிப்படையிலும், கற்பனையின் அடிப்படையிலுமே உருவானவை என்பதை மருத்துவ உலகம் இந்த நூற்றாண்டில் நிரூபித்து விட்டது.

இருப்பிட சூழல் காரணமாக, சில வேளை களில் ஒருசிலர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடு வது இன்றும் தொடர்கதையாகத்தான் உள்ளது. சிறைக்கூடம், விடுதிகள், ராணுவ முகாம்கள், கப்பல் போன்றவற்றில் குடும்பத்தை, மனைவியைப் பிரிந்து வாழும் சிலர் தனிமையின் வெப்பத்தைத் தணித்துக்கொள்ள ஓரினச்சேர்க்கை என்ற நிழலில் ஒதுங்குவது உண்டு. இதற்கு ஹோமோ செக்ஸுவல் எக்ஸ்பீரியன்ஸ் என்று பெயர். இவர்களை ஓரினசேர்க்கையாளர்கள் என்று கூறிவிட முடியாது. ஏனெனில் தனிமையிலிருந்தும், சந்தர்ப்பவசத்தால் ஏற்பட்ட
இடச் சூழலிருந்தும் இவர்கள் விடுபட்ட பிறகு இவர்களிடம் ஓரினச்சேர்க்கை விருப்பம் தொடர்ந்து இருப்பதில்லை. பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஆண்பெண் சங்கமத்தில் இயற்கையான விருப்பத்துடன் ஈடுபடுவதைப் போல ஹோமோ செக்ஸ் பிரியர்கள் பிறவியிலேயே ஓரினச் சேர்க்கை விருப்பத்துடனேயே வளர்கிறார்கள். இதுவொரு விசித்திர குணாதிசயம்!



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 10:53 am

இது எதனால் என்று இதுவரை கண்டறியப் படவில்லை என்பதுதான் நிஜம். ஹோமோசெக்ஸ் பிரியர்களை பாவப்பட்டவர்கள், குற்றவாளி கள், தவறானவர்கள் என்று கருதக்கூடாது. அவர்களுக்கே தாங்கள் ஏன் இப்படிச் செயல் படுகிறோம் என்பது புரியாத புதிராகத்தான் இருக்கிறது. ஒருவேளை ஹோமோசெக்ஸ் பிரியர்களை குற்றவாளிகள் என்றோ, பாவப்பட்டவர்கள் என்றோ கருதினால்... அந்தக் குற்றத்தையும், பாவத்தையும் கடவுளின், இயற்கையின் தலையில்தான் சுமத்த வேண்டும். ஆம், "இது காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி" என்று உள்ளுக்குள் அவர்கள் புழுங்குவது யாருக்குத் தெரியும்? பொதுவாகவே, ஹோமோசெக்ஸ் பற்றிய உண்மைகளை அறியாததினால் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடு பவர்களை குற்றவாளிகளாக, தவறானவர்களாக மக்கள் கருதுகிறார்கள். அது தவறு..!

ஹோமோசெக்ஸ் சரியா... தவறா...?" இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இந்த விவாதம் ஒரு தொடர்கதையாகவே இருக்கிறது. ஆனால், 1978ல் இந்த விஷயத்துக்கு மருத்துவரீதியில் ஒருவாறாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பு வரை, ஹோமோ செக்ஸ் விருப்பத்தை ஒரு மன நோயாகத்தான் மருத்துவ உலகம் கருதிக்கொண்டிருந்தது. ஆனால், அதே ஆண்டு "அமெரிக்கன் சைக்யாட்ரிக் அசோசியேஷன்" என்ற அமைப்பு, ஓர் அறிக்கை வெளியிட்டது. இதில், "ஹோமோசெக்ஸ் என்பது மனநோய் அல்ல" என்று சொல்லப்பட்டது. இதன் மூலம் மருத்துவ உலகம் தன்னுடைய முந்தையக் கருத்தை மாற்றிக் கொண்டது. இதைத் தொடர்ந்து ஹோமோசெக்ஸ் பற்றிய மருத்துவ உலகின் அணுகுமுறையில் இது மாபெரும் மாற்றம் என்றால், அது மிகையல்ல! ஆனால், பொதுமக்களிடம் இன்னமும் இந்த விஷயத்தில் மாற்றங்கள் இல்லை என்பதுதான் நிதர்சனம். "ஹோமோ" என்ற பேச்சை எடுத்தாலே வெறுத்து ஒதுக்கிவிடும் போக்கே தொடர்கிறது.

ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து எந்தெந்த கட்டங்களில் ஹோமோசெக்ஸ் பிரியனாக உருமாற்றம் பெற்று வளர்கிறான் என்பதை மருத்துவ உலகம் ஆய்வுப்பூர்வமாக வரையறுத்திருக்கிறது. அதுமட்டுமின்றி, அவர்களுக்குள் எத்தகைய உட்பிரிவுகள் உள்ளன என்பதையும் கணித்திருக்கிறது. இதையெல்லாம் புரிந்து கொண்டால் ஓரினச் சேர்க்கையாளர்களை பற்றிய தப்பான அபிப்பிராயங்கள் சுவடற்றுப் போய்விடும். அவற்றை இப்போது பார்க்கலாம்... வித்தியாசத்தை உணரும் கட்டம்... இதை ஆங்கிலத்தில் "சென்ஸிடைஷேசன்" (Sensitization) என்று சொல்வார்கள். இது முதல் கட்டம். 9 வயது முதல் 14 வயது வரைக்குமான காலம் இது.

மனதளவில் உடலளவில் ஏதோ ஒரு வித்தியாசம் தனக்குள் இருப்பதாக இவர்கள் உணர்வார்கள். ஆனால், அது என்ன என்பதை அவர்களால் துல்லியமாக உணர முடியாது. அடையாள குழப்பம்: "ஐடெண்ட்டிட்டி கன்ஃப்யூஷன்" (Identity confusion) என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் இது இரண்டாம் கட்டம். 14 வயது முதல் 20 வயது வரைக்குமான காலம். இக்கட்டத்தில் தனக்கு ஹோமோசெக்ஸில் விருப்பம் இருப்பதை இவர்களால் உணர முடியும். ஆனால், மனசுக்குள் இந்த விருப்பத்தை எதிர்த்து ஒரு யுத்தமே நடக்கும். அடையாளத்தைப் புரிந்துகொள்ளுதல்: "ஐடெண்ட் டிட்டி அஸம்ப்ஷன்" (Identity assumption) என்று சொல்லப்படும் மூன்றாம் கட்டத்தில் 20 வயதிலிருந்து 30 வயது வரைக்குமான காலகட்டத்தைச் சேர்க்கலாம். ஓரினச்சேர்க்கையாளன் என்று தன்னை அடையாளம் கண்டு, அதனை ஏற்றுக்கொண்டு விடும் மனநிலை இந்தக் கட்டத்தில் உருவாகும். ஆனால், அதைப் பகிரங்கமாக வெளியில் சொல்லத் தயக்கமிருக்கும். மன பாதிப்பு ஏற்படு வதுடன் தன்னை சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா என்ற சஞ்சலமும் ஏற்படும். அடையாளத்தை ஏற்றுக்கொள்ளுதல்: "ஸ்டேஜ் ஆஃப் கமிட்மென்ட்" (Stage of Commitment) எனும் நான்காம் கட்டம் 25 வயதுக்கு மேல் உள்ள நிலையைக் குறிப்பதாகும். இந்தக் கட்டத்தில் தன் ஹோமோசெக்ஸ் உணர்வை ஏற்றுக்கொள்வதுடன் அந்த விருப்பத்தை சமூக அபிப்ராயங்களைப் பற்றி கவலைப்படாமல் மற்ற வர்களிடம் தயக்கமின்றி சொல்லவும் தயங்க மாட்டான். இந்தக் கட்டத்தில் சஞ்சலமின்றி மனதில் அமைதி நிலவும்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 10:53 am

இது எதனால் என்று இதுவரை கண்டறியப் படவில்லை என்பதுதான் நிஜம். ஹோமோசெக்ஸ் பிரியர்களை பாவப்பட்டவர்கள், குற்றவாளி கள், தவறானவர்கள் என்று கருதக்கூடாது. அவர்களுக்கே தாங்கள் ஏன் இப்படிச் செயல் படுகிறோம் என்பது புரியாத புதிராகத்தான் இருக்கிறது. ஒருவேளை ஹோமோசெக்ஸ் பிரியர்களை குற்றவாளிகள் என்றோ, பாவப்பட்டவர்கள் என்றோ கருதினால்... அந்தக் குற்றத்தையும், பாவத்தையும் கடவுளின், இயற்கையின் தலையில்தான் சுமத்த வேண்டும். ஆம், "இது காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி" என்று உள்ளுக்குள் அவர்கள் புழுங்குவது யாருக்குத் தெரியும்? பொதுவாகவே, ஹோமோசெக்ஸ் பற்றிய உண்மைகளை அறியாததினால் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடு பவர்களை குற்றவாளிகளாக, தவறானவர்களாக மக்கள் கருதுகிறார்கள். அது தவறு..!

ஹோமோசெக்ஸ் சரியா... தவறா...?" இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இந்த விவாதம் ஒரு தொடர்கதையாகவே இருக்கிறது. ஆனால், 1978ல் இந்த விஷயத்துக்கு மருத்துவரீதியில் ஒருவாறாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பு வரை, ஹோமோ செக்ஸ் விருப்பத்தை ஒரு மன நோயாகத்தான் மருத்துவ உலகம் கருதிக்கொண்டிருந்தது. ஆனால், அதே ஆண்டு "அமெரிக்கன் சைக்யாட்ரிக் அசோசியேஷன்" என்ற அமைப்பு, ஓர் அறிக்கை வெளியிட்டது. இதில், "ஹோமோசெக்ஸ் என்பது மனநோய் அல்ல" என்று சொல்லப்பட்டது. இதன் மூலம் மருத்துவ உலகம் தன்னுடைய முந்தையக் கருத்தை மாற்றிக் கொண்டது. இதைத் தொடர்ந்து ஹோமோசெக்ஸ் பற்றிய மருத்துவ உலகின் அணுகுமுறையில் இது மாபெரும் மாற்றம் என்றால், அது மிகையல்ல! ஆனால், பொதுமக்களிடம் இன்னமும் இந்த விஷயத்தில் மாற்றங்கள் இல்லை என்பதுதான் நிதர்சனம். "ஹோமோ" என்ற பேச்சை எடுத்தாலே வெறுத்து ஒதுக்கிவிடும் போக்கே தொடர்கிறது.

ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து எந்தெந்த கட்டங்களில் ஹோமோசெக்ஸ் பிரியனாக உருமாற்றம் பெற்று வளர்கிறான் என்பதை மருத்துவ உலகம் ஆய்வுப்பூர்வமாக வரையறுத்திருக்கிறது. அதுமட்டுமின்றி, அவர்களுக்குள் எத்தகைய உட்பிரிவுகள் உள்ளன என்பதையும் கணித்திருக்கிறது. இதையெல்லாம் புரிந்து கொண்டால் ஓரினச் சேர்க்கையாளர்களை பற்றிய தப்பான அபிப்பிராயங்கள் சுவடற்றுப் போய்விடும். அவற்றை இப்போது பார்க்கலாம்... வித்தியாசத்தை உணரும் கட்டம்... இதை ஆங்கிலத்தில் "சென்ஸிடைஷேசன்" (Sensitization) என்று சொல்வார்கள். இது முதல் கட்டம். 9 வயது முதல் 14 வயது வரைக்குமான காலம் இது.

மனதளவில் உடலளவில் ஏதோ ஒரு வித்தியாசம் தனக்குள் இருப்பதாக இவர்கள் உணர்வார்கள். ஆனால், அது என்ன என்பதை அவர்களால் துல்லியமாக உணர முடியாது. அடையாள குழப்பம்: "ஐடெண்ட்டிட்டி கன்ஃப்யூஷன்" (Identity confusion) என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் இது இரண்டாம் கட்டம். 14 வயது முதல் 20 வயது வரைக்குமான காலம். இக்கட்டத்தில் தனக்கு ஹோமோசெக்ஸில் விருப்பம் இருப்பதை இவர்களால் உணர முடியும். ஆனால், மனசுக்குள் இந்த விருப்பத்தை எதிர்த்து ஒரு யுத்தமே நடக்கும். அடையாளத்தைப் புரிந்துகொள்ளுதல்: "ஐடெண்ட் டிட்டி அஸம்ப்ஷன்" (Identity assumption) என்று சொல்லப்படும் மூன்றாம் கட்டத்தில் 20 வயதிலிருந்து 30 வயது வரைக்குமான காலகட்டத்தைச் சேர்க்கலாம். ஓரினச்சேர்க்கையாளன் என்று தன்னை அடையாளம் கண்டு, அதனை ஏற்றுக்கொண்டு விடும் மனநிலை இந்தக் கட்டத்தில் உருவாகும். ஆனால், அதைப் பகிரங்கமாக வெளியில் சொல்லத் தயக்கமிருக்கும். மன பாதிப்பு ஏற்படு வதுடன் தன்னை சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா என்ற சஞ்சலமும் ஏற்படும். அடையாளத்தை ஏற்றுக்கொள்ளுதல்: "ஸ்டேஜ் ஆஃப் கமிட்மென்ட்" (Stage of Commitment) எனும் நான்காம் கட்டம் 25 வயதுக்கு மேல் உள்ள நிலையைக் குறிப்பதாகும். இந்தக் கட்டத்தில் தன் ஹோமோசெக்ஸ் உணர்வை ஏற்றுக்கொள்வதுடன் அந்த விருப்பத்தை சமூக அபிப்ராயங்களைப் பற்றி கவலைப்படாமல் மற்ற வர்களிடம் தயக்கமின்றி சொல்லவும் தயங்க மாட்டான். இந்தக் கட்டத்தில் சஞ்சலமின்றி மனதில் அமைதி நிலவும்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 10:53 am

இந்த நான்கு கட்டங்கள் தவிர, ஓரினச் சேர்க்கையாளர்களின் வகைகளையும் மருத்துவ உலகம் இனம் பிரித்து வைத்திருக்கிறது.

1. வெளிப்படையாக வேண்டுமென்றே தானொரு ஹோமோசெக்ஸ் பிரியன் என்பதைக் காட்டுபவர்கள் ஒரு வகை. இவர்களை "Blatant Homosexual" என வகைப்படுத்துகிறார்கள்.

2. அடுத்த வகை "Desparate Male Homosexual" எனப்படும். இவர்கள் தங்கள் விருப்பத்தை வெளியில் காட்டமாட்டார்கள். ஆனால், பொது இடங்களில் கூட்டத்தில் மறைமுகமாக ஈடுபட முயற்சி செய்வார்கள்.

3. "Situational Homosexual" எனும் வகைப்பட்டோர், சூழ்நிலைக்காரணமாக ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர் கள். உதாரணம்... சிறைக் கைதிகள், விடுதியில் தங்கி இருப்பவர்கள், கப்பலில் பணிபுரிவோர், ராணுவ முகாம்களில் பணிபுரிவோர்களில் சிலர்.

4. பணத்துக்காகவோ, ஓரினச் சேர்க்கையை ஒரு தொழிலாகவோ செய்பவர்கள் மற்றொரு வகை. இவர்களுக்கு "Homosexual prostitutes" என்று பெயர். விபசாரத்துக்கு இணையானது இது.

5. அடுத்த வகை "Adjusted Homosexual" எந்தவிதமான மனசஞ்சலமும் இல்லாமல், சமுதாயத்தைப் பற்றியும் கவலைப்படாமல் சந்தோஷமாக ஹோமோசெக்ஸில் ஈடுபடுபவர்கள். இவர்கள் ஊரறிய ஹோமோசெக்ஸ் திருமணம்கூட செய்து கொள்வார்கள்.

ஆக, இந்தக் கோணங்களில் எல்லாம் ஹோமோசெக்ஸ் பிரியர்களைப் புரிந்து கொண்டால் அவர்களைப் பற்றி சமூகத்தில் தவறாக உலாவும் பல்வேறு கற்பனைப் பிதற்றல்களில் துளியும் உண்மை இல்லை என்பதை நம்மால் உணர முடியும். உதாரணமாக, ஹோமோசெக்ஸினால் எய்ட்ஸ் பரவும் என்கிற நம்பிக்கை உள்ளது. இது தவறு. செக்ஸில் ஈடுபடும் ஒருவருக்கு எய்ட்ஸ் கிருமி இருந்தால் மட்டுமே மற்றவருக்கு எய்ட்ஸ் தொற்றும். எனவே ஓரினச்சேர்க்கையோ அல்லது ஆண்பெண் கூடும் ஈரினச்சேர்க்கையோ அதில் ஈடுபடும் ஒருவருக்கு எய்ட்ஸ் இருந்தால்தான் மற்றவருக்கும் அது தொற்றும். அடுத்து, ஹோமோசெக்ஸ் பிரியர்கள் குழந்தைகளைக் கடத்திச் சென்று அவர்களையும் தங்களைப் போல் ஆக்கிவிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டிலும் உண்மை இல்லை. தன்னெழுச்சியாக ஹோமோசெக்ஸ் விருப்பம் இல்லாத எவரையும் யாரும் தன் விருப்பத்துக்கு இணங்க வைக்க முடியாது என்பதே உண்மை. ஹோமோசெக்ஸ் பிரியர்கள் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்ற எண்ணமும் பொதுவாக இருக்கிறது. சமூகத்தில் ஒருவன் குற்றவாளியாக மாற முதல் காரணம் அவன் மனநிலைதானே ஒழிய, ஹோமோசெக்ஸ் காரணம் அல்ல என்பது தீர்க்கமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 10:54 am

ஹோமோசெக்ஸ் பிரியர்களைப் பார்த்துப் பயம் கொள்வது தேவையற்றது. அவர்களும் சக மனிதர்கள் என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. அவர்களை வெறுத்து ஒதுக்குவதும் தவறு. பெற்றோர்கள் தனது பிள்ளைகளுக்கு ஹோமோசெக்ஸில் விருப்பம் இருப்பது தெரிந்துகொண்டால் அவர்களை வெறுக்கவோ, ஒதுக்கவோ கூடாது. பெற்றோரே இப்படி நடந்துகொண்டால்... பிறகு சமுதாயத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இத்தகைய குணாதிசயம் இருப்பது தெரிந்தால், எந்தவித சங்கடமும் இல்லாமல் அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். கேட்பதற்கு கஷ்டமாக இருந்தாலும், இதுதான் உண்மை. மனதைத் திடப்படுத்திக்கொண்டு இந்த விஷயத்தைப் பெற்றோர்கள் எதிர்கொள்வதுதான் சிறந்த வழி. சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் இந்தக் குணாதிசயத்தை மறைத்து, ஒரு பெண்ணை அவனுக்கு வாழ்க்கைத் துணையாகத் திருமணம் செய்துவைத்து விடுகிறார்கள். பெற்றோர்களின் வற்புறுத்தலால் பெண்ணைத் துணையாக ஏற்கும் அந்த ஹோமோசெக்ஸ் பிரியன் அவளுக்குத் தாம்பத்ய சுகத்தை அளிக்கத் தவறிவிடுகிறான். காரணம்... அவனுக்குப் பெண்ணைப் பார்த்தால் உணர்ச்சி வருவதில்லை... ஆணைப் பார்த்தால்தான் உணர்ச்சியே வரும். இதனால் அந்தப் பெண்ணின் வாழ்வு சீரழிந்து விடுகிறது. கடைசியில், அந்தப் பெண்... வேறு துணை நாடி செல்வதோ... அல்லது மலடி என்று பட்டம் சுமத்தப் பட்டு துரத்தப்படுவதோ நடக்கும்... இது நியாயமற்ற விஷயம் தானே?

இந்த இடத்தில் முக்கியமான ஒன்றையும் நாம் கவனிக்க வேண்டும். பெண்ணுக்குப் போதிய சுகம் கொடுக்கமுடியாத எல்லோரையும் "ஹோமோ" என்று முடிவு செய்துவிடுவது கூடாது... போதிய சுகம் தரமுடியாததற்கு உடல்ரீதியில் பல காரணங்கள் இருக்கலாம். அதேபோல... மலடி என்று பட்டம் சூட்டப்படும் பெண்களின் கணவர்கள் எல்லோருமே "ஹோமோ" என்று சொல்லிவிடக் கூடாது. இதற்கும் பல காரணங்கள் இருக்கும். எல்லாவற்றுக்கும் ஒரே அளவீட்டை கணக்கில் கொள்வது வேறுவிதமான பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்!

எல்லோருக்கும் நான் தெளிவுபடுத்த விரும்பும் விஷயம் ஒன்று உண்டு. பொதுவாக நாம் அனைவரும்எழுத, உணவருந்த, பணிபுரிய வலது கையைத்தான் பயன்படுத்துகிறோம். விதிவிலக்காக சிலருக்கு இடதுகையைப் பயன்படுத்தும் பழக்கம் இருக்கும். பல துறைகளில் புகழ்பெற்ற சிலர் இடது கை பழக்கமுள்ளவர்கள். அது போலத்தான் ஈரினச் சேர்க்கையில் ஈடுபடும் பெரும்பாலானவர்கள் மத்தியில் ஓரினச்சேர்க்கையில் மட்டுமே நாட்டம் கொண்டவர்களும் விதிவிலக்காக இருக்கிறார்கள். இதனை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 8 of 13 Previous  1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக