புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி


   
   

Page 7 of 13 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 11, 12, 13  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 5:28 am

First topic message reminder :

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Uyir

பழங்கால இந்தியாவில் செக்ஸை வாழ்க்கையின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக நினைத்தார்கள். சாப்பிடுவது, தூங்குவது மாதிரி அதுவும் ஒரு விஷயம். அதை ஒதுக்கி வைக்கவோ, ரகசிய பொருளாகப் பதுக்கி வைக்கவோ அவர்கள் நினைத்ததில்லை. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும் திருமண வாழ்க்கை இந்த உறவில்தான் முழுமை பெறுகிறது என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தது.

இல்லறத்தில் ஆண், பெண் இடையே இருக்கும் உறவு, ஒளிவு மறைவில்லாதது. அன்பு செலுத்துவது, உண்மையாக இருப்பது, மரியாதை தருவது என எதுவுமே ஒன்வே டிராஃபிக் இல்லை. செக்ஸிலும் இப்படித்தான்... அது இருவரின் தேவைகளையுமே முழுமையாக பூர்த்தி செய்யும்படி அமைய வேண்டும் என்றனர் ரிஷிகள். ‘பெண் என்பவகள் ஆணுக்கு படுக்கையில் சந்தோஷம் தருவதற்காகப் படைக்கப்பட்டவகள் இல்லை. அந்த உறவில் சுகம் தேடும் உரிமை அவளுக்கும் இருக்கிறது. அந்த இன்பம் கிடைக்காதபட்சத்தில் அவகள் திருமண உறவுக்கு வெளியில் அதைத் தேட தயங்க மாட்டாகள். அதனால் குடும்பத்தில் மட்டுமில்லை... சமூகத்திலும் பிரச்னைகள் உருவாகும்’ என்பது அந்த ரிஷிகள் சொன்ன வாக்கு.

முடிவாக அவர்கள் சொன்ன நீதி... ‘இந்த உறவில் கொடுப்பவர், எடுப்பவர் என்ற வித்தியாசம் இல்லை!’ நமது ரிஷிகள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்த உண்மைகளை நாற்பது வருடங்களுக்கு முன்புதான் தீவிர ஆராய்ச்சிகளின் வாயிலாக மேற்கத்திய நாகரிகம் புரிந்து கொண்டிருக்கிறது.
வாழ்க்கையின் முழுமையான பரிமாணத்தை நமது மதிப்புக்குரிய முன்னோர் காட்டினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நமது இந்த மரபு வேரைப் பிடுங்கி எறிந்து, "பாலுணர்வு" என்பதையே ஒரு மிகப் பெரிய கவர்ச்சி அம்சம் போல ஆக்கி, "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதன் புனிதத்தையும் இல்லாமல் ஆக்கி, அவர்களது "டேக் இட் ஈஸி" கலாசாரத்தை நமக்கும் விதைத்து விட்டனர்.

இதிலிருந்து மீண்டு வர என்ன வழி? நமது பாரம்பரிய ஞானத்தின் வேர்களைத் தேடி, செக்ஸ் தொடர்பான சிக்கல்களுக்கு அறிவியல்ரீதியான தீர்வுகளைக் காணும் முயற்சி தான் இந்தத் தொடர். மிகுந்த கண்ணி யத்தோடும், அளவற்ற ஜாக்கிரதை உணர்வோடும் இந்தத் தொடரை அணுகியிருக்கிறார் தன் ஆராய்ச்சிகளின் மூலம் உலகளவில் புகழ்பெற்ற செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.

இந்தத் தொடரைப் படிக்கும் எவரும் "உணவு, தூக்கம் போலவே பாலுணர்வும்கூட உயிர்களின் தவிர்க்கமுடியாத அடிப்படைத் தேவை" என்பதையும், அதுபற்றி முழுமையாகத் தெரிந்து கொகள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.

அது ஒரு பெட்ரூம்... பகட்டான அலங்காரங்களோ, திகட்ட வைக்கும் ஆடம்பர வசதிகளோ இல்லாத மிகச் சாதாரணமான பெட்ரூம். ஆனாலும் அது சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டது. வெறும் பத்து ஆண்டுகளில் பத்தாயிரம் முறை பலபேர் வந்து பரவசமான கலவி இன்பத்தை அனுபவித்த படுக்கை அறை என்ற பெருமையை அது பெற்றது.

தங்கள் காதல் மனைவியைக் கட்டியணைத்தபடி வந்த அன்புக் கணவர்கள், கேர்கள் ஃபிரெண்டை முத்தமிட்டபடி நுழைந்த டீன்ஏஜ் காதலர்கள், தனியாக அறைக்குகள் நுழைந்து காத்திருந்து முன்பின் அறிமுகமில்லாத பெண்களை துணையாகத் தேடிக் கொண்டவர்கள், ‘வயது எங்கள் உணர்ச்சிகளுக்கு அணை போடவில்லை’ என்று நிரூபிக்கும் விதமாக தங்கள் மனைவியோடு வந்து அந்தப் படுக்கையைப் பயன்படுத்திக் கொண்ட கிழவர்கள், ‘எங்களுக்கு ஜோடியே தேவையில்லை’ என்ற படி தனி ஆட்களாக வந்து சுய இன்பத்தில் பரவசப்பட்டவர்கள்... இப்படி பலவிதமான மனிதர்களை அந்த அறை பத்து ஆண்டுகளில் பார்த்திருக்கிறது.

வெளிச்சம், இருட்டு என்ற வித்தியாசம் எல்லாம் அவர்களில் பலருக்கு இல்லை. ஒரேநாளில் வெவ்வேறு நேரங்களில் விதம்விதமான உணர்வுகளுடன் அந்த அறைக்கு பல ஜோடிகள் வந்தன. படுக்கை விரிப்பை மாற்றக்கூட அவகாசம் தராமல், அடுத்தடுத்து பத்து ஜோடிகள் வந்து போனதும் நடந்திருக்கிறது.
இவ்வளவு பிஸியான அந்த அறை.. ஒரு நட்சத்திர ஹோட் டலின் ‘தேனிலவு சூட்’ அல்லது ஏதாவது குளிர்பிரதேச சுற்றுலா தல ரிஸார்ட்ஸாக இருக்கும் என்று தானே நீங்கள் நினைத்தீர்கள்.

ஸாரி... அது தப்பு. அந்த அறை, ஒரு மருத்துவக் கல்லூரியின் பரிசோதனைக் கூடம். அங்கு இப்படி பத்தாயிரம் தடவை பலர் பரவச நிலையை அனுபவித்தது, ஓர் ஆராய்ச்சிக்காக! அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் இருக்கும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி... அதில் இருக்கும் மகப்பேறு மற்றும் பெண்கள்நலப் பிரிவில்தான் நடந்தது இந்த ஆராய்ச்சி.

‘இதில் போய் என்ன ஆராய்ச்சி!’ என முகத்தைச் சுளிப்பவர்கள், தவறாமல் அடுத்த பாராவுக்கு போங்கள்.

இந்த வித்தியாசமான ஆராய்ச்சி நடந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்... ‘இருண்ட கண்டம்’ என பெயர்பெற்று மர்மப் பிரதேசமாக இருந்த ஆப்பிரிக்க கண்டத்தைக்கூட மனித இனம் அலசி ஆராய்ந்து விட்ட நேரம் அது. எங்கோ தொலைதூரத்தில் இருந்தபடி மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை
வகைப்படுத்தி பெயர் வைக்கும் அளவுக்கு அறிவியல் அப்போது உச்சத்தில் இருந்தது.

ஆனால், அப்போதும் புரியாத புதிராக இருந்தது, ஆண்பெண் நிகழ்த்தும் அந்தரங்க உறவின் அர்த்தங்கள். அந்த உறவின்போது எந்தெந்த உறுப்புகளுக்குகள் என்னவிதமான மாற்றங்கள் நிகழ்கின்றன? ஒட்டுமொத்த உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன? புதிய உயிரை உருவாக்கி அடுத்தடுத்த தலைமுறைகளை உலகுக்கு படைக்கும் ஆதார சக்தி எப்படி ஆணிடமிருந்து பெண்ணுக்குப் பரிமாறப்படுகிறது? பிரபஞ்சத்தை சிருஷ்டித்ததாகக் கூறப்படும் கடவுகள், ஒவ்வொரு ஜீவனையும் உயிர் கொடுத்து உருவாக்கும் பணியை மட்டும் ஏன் அந்தந்த ஜீவராசிகளிடமே கொடுத்தார்? அந்த உறவு என்பது வெறுமனே உயிர்களை உருவாக்க மட்டும்தானா? மனித இனத்தை எடுத்துக் கொண்டால், இதில் ஆணின் பங்கு என்ன... பெண்ணின் பங்கு என்ன? சுருக்கமாக சொல்லப் போனால் ஆண்களும், பெண்களும் இதை ஏன் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள்? இந்த உறவில் பலபேருக்கு நாட்டம் இல்லாமல் போவதற்கும், சிலர் மட்டும் எப்போதும் இதே நினைப்புடன் வெறியோடு திரிவதற்கும் காரணம் என்ன? பலபேருக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போவதற்கு என்ன காரணம்?



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:53 am

ஆணுறைக்கு ஆங்கிலத்தில் "காண்டம்" என்று பெயர். எப்படி இந்தப் பெயர் வந்தது? இதற்கு இரண்டுவிதமாக சொல்கிறார்கள். இங்கிலாந்தை ஆண்ட இரண்டாம் சார்லஸ் மன்னரின் அரசவை டாக்டராக "காண்டம்" என்பவர் இருந்தார். அந்த மன்னர் தினமும் புதுப்புது பெண்களைத் தேடும் சபல புத்திக்காரர். இப்படி கண்ட இடங்களுக்குப் போய் மன்னர் ஏதாவது பால்வினை நோயைச் சுமந்து வருவதைத் தவிர்க்கவும், மன்னரின் வாரிசுகளை ஏராளமான பெண்கள் வயிற்றில் சுமந்து கொண்டு ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்படுவதைத் தடுக்கவும் டாக்டர் காண்டம், ஸ்பெஷலாக ஆணுறைகளைத் தயாரித்துத் தினமும் இரவில் மன்னருக்குக் கொடுத்தனுப்புவாராம். அந்த டாக்டரின் பெயரே ஆணுறைக்கு வந்துவிட்டது என்கிறார்கள் சிலர். லத்தீன் மொழியில் "காண்டஸ்" என்றால் கிண்ணம். ஆணுறை கிண்ணம் மாதிரி இருப்பதால், இந்த லத்தீன் பெயரே அதற்கு ஆங்கிலத்திலும் வந்தது என்கிறார்கள் வேறு சிலர். லினன் துணியை அடுத்து, கி.பி. 1700-களில் ஆட்டுக்குடல் சவ்வில் ஆணுறைகள் தயாரிக்கப் பட்டன. ஆனால், இவற்றின் விலை அதிகம்! இப்போது "செகண்ட் சேல்ஸ்" என்ற முறையில் பழைய பைக்குகள், கார்களை விற்பது மாதிரி அந்தக் காலத்தில் ஏற்கெனவே பயன்படுத்திய ஆட்டுக்குடல் ஆணுறை களை கழுவி எடுத்துவந்து, திரும்பவும் கடைகளில் விற்ற கூத்தும் நடந்தது.

ஐரோப்பாவில் இவ்வளவு புரட்சிகளும் நடந்த அதே நேரத்தில் ஜப்பானில் மெல்லிய தோலையும், ஆமை ஓட்டின் உட்புற பகுதியையும் பயன்படுத்தி ஆணுறைகள் தயாரித்து வந்தனர்.

ரப்பர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஆணுறை அசுர வளர்ச்சி கண்டது. 1840-ல் தொடங்கி ஏராளமாக ஆணுறைகள் ரப்பரில் செய்யப்பட்டு மார்க்கெட்டுக்கு வந்தன. 1930-களில் லேடெக்ஸ் ரப்பர் தொழில்நுட்பம் வந்தபிறகு, ஆணுறை இன்னமும் மெலிதானது. இருப்பதே தெரியாத அளவுக்கு அணியமுடிந்தது.

ஆண்களின் உடம்புச்சூடு ஆணுறுப்பு வழியாக பெண்களுக்குப் பரவும் போதுதான் முழுமையான இன்பம் கிடைக்கும் என்றும் ஆணுறை மாட்டினால் அது கர்ப்பத்தைத் தடுப்பது போலவே சூட்டையும் தடுத்துவிடும் என்றும் மக்களில் பெரும்பாலானோர் நினைத்தார்கள். ஆனால், அது உண்மையில்லை. சமீப காலத்தில் பாலியூரித்தேன் கொண்டு புதிய ஆணுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படி தயாரிக்கப்பட்ட ஆணுறைகள் "டியூரான்"(duron) என்று அழைக்கப்படுகிறது. இதில் உடம்புச்சூடு பரவுகிற வசதி இருக்கிறது.

இப்போது செக்ஸ் இன்பத்தை அதிகரிக்கிற விதமாக ஏகப்பட்ட ரகங்களில் ஆணுறைகள் வந்து விட்டன. சின்ன கம்ப்யூட்டர் சிப்பும், பாட்டரியும் இணைத்து, உறவின்போது அதிர்வுகளை ஏற்படுத்துகிற ஆணுறைகூட கிடைக்கிறது.

இதுதவிர, கடந்த செப்டம்பர் மாதம் "ஃபெமிடோம்" எனப்படும் பெண்களுக்கான "பெண்ணுறை"கூட மார்க்கெட்டுக்கு வந்திருக்கிறது. ஆணுறைகளைவிட இது கொஞ்சம் சைஸ் பெரிதாக இருக்கும்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:53 am

ஆணுறைகளின் பயன்பாடு பற்றி சுவாரஸ்யமான ஒரு விஷயம் வளைகுடா போரின் போது நடந்தது. கடந்த 91-ம் ஆண்டு சதாம் உசேன் குவைத்தை ஆக்கிரமித்து இருந்தார். படைகளை வாபஸ் பெறச் சொல்லி ஐ.நா.சபை அவருக்குக் கெடு விதித்தது. குறிப்பிட்ட நாட்களில் இது நடக்கவில்லை என்றால் இராக் படைகளைத் தாக்கி, குவைத்தை மீட்க ஏதுவாக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகள் சவூதி பாலைவனத்தில் தயாராக இருந்தன.

பல நாட்கள் இந்தக் காத்திருப்பு தொடர்ந்தது. இந்த சமயத்தில், "எங்களுக்கு ஐந்து லட்சம் ஆணுறைகள் வேண்டும்" என பிரிட்டிஷ் படைகள் அந்த நாட்டு அரசாங்கத்துக்குத் தகவல் அனுப்பின. ராணுவ வீரர்கள் போர்க்களத்தில் ஓய்வெடுக்கும்போது விலைமாதர்களைத் தேடிப் போவது உலகமெங்கும் சகஜமான விஷயம்தான்! ஆனால், யாருமில்லாத பாலை வனத்தில் இவர்களுக்கு எதற்கு இவ்வளவு ஆணுறைகள் என பிரிட்டிஷ் அரசு குழம்பியது. ஆனாலும் கேட்டதை அனுப்பி வைத்தது.

இருநாட்டு படைகளும் ஒன்றுசேர்ந்து களத்தில் இருந்ததால் பிரிட்டிஷ் படைகளின் முகாமுக்கு ஆணுறைகள் பெட்டிப்பெட்டியாக வந்து இறங்குவதைப் பக்கத்திலிருந்த அமெரிக்க ராணுவ அதிகாரிகள் பார்த் தனர். "நாமே இங்கு காய்ந்துபோய் கிடக்கிறோம். நமக்குத் தெரியாமல் பிரிட்டிஷ் பார்ட்டிகள் பெண்களை எங்கு போய் பிடிக்கிறார்கள்?" என புரியாமல் தவித்த அதிகாரிகள், ராத்திரி நேரத்தில் பிரிட்டிஷ் முகாமை கண்காணிக்க உளவுப் படையினரைத் தனியாக நியமித்தனர். நாட்கள் கடந்தன. ஆனால், பிரிட்டிஷ் வீரர்கள் எதுவும் தப்புதண்டாவுக்கு போகிற மாதிரி தெரியவில்லை.

இந்தச் சூழலில் கெடுமுடிந்தும்கூட, சதாம் படைகள் குவைத்திலிருந்து நகராததால் அவர்கள் மீது தாக்குதல் தொடுக்குமாறு திடீரென கட்டளை வந்தது. அமெரிக்கப் படைகள் உடனே கிளம்ப முடியவில்லை. அவர்களிடமிருந்த துப்பாக்கிக் குழல்களில் எல்லாம் மணல் அப்பி மூடியிருந்தது. இதை சுத்தம் செய்யவே பலமணி நேரம் ஆயிற்று. புத்திசாலி பிரிட்டிஷ் படையினர் இந்தக் குழல்களை ஆணுறைகளால் மூடியிருந்தனர். அதை மீறி மணல் உள்ளே போகவில்லை. அவர்கள் கட்டளை வந்த அடுத்த நிமிடமே ஆணுறைகளை அகற்றிவிட்டுத் தாக்குதலை ஆரம்பித்தனர்.

ஆணுறை இப்படி பல விஷயங்களைத் தடுக்கிறது.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:58 am

ஆபாச சுவரொட்டிகள் கிழிப்பு... ஆபாச சினிமா வுக்கு எதிரான கிளாச்சி... ஆபாசமாக என் பெயரை சினிமாவில் பயன்படுத்தி இருக்கிறார்கள். உடனே அதைப் படத்திலிருந்து நீக்க வேண்டும்’ என்றெல்லாம் சில நிகழ்வுகளை அடிக்கடி நாம் நாளிதழ்களில் படிக்கிறோம். ஆதிகாலத்திலிருந்து... ‘ஆதி விஜய் காலம் வரை காலந்தோறும் சமுதாயத்தில் ‘ஆபாசம்’ பற்றி இப்படி சர்ச்சைகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.

ஒருசிலர் சமூகத்தில் கௌரவமாக மதிக்கப்படும் சில புத்தகத்தைத் தீவிரமாகப் படித்துக் கொண்டிருப்பார்கள். கொஞ்சம் கிட்டச் சென்று பார்த்தால், அவர்கள் அந்தப் புத்தகத்துக்குள் இன்னொரு புத்தகம் வைத்துப் படித்துக் கொண்டிருப்பார்கள். அது ஆபாச புத்தகமாக இருக்கும்! ஏன் இப்படி?

ஆபாச புத்தகத்தை வெளிப்படையாகப் படித்தால், எங்கே சமூகம் தன்னை இழிவாக நினைத்துவிடுமோ என்ற பயம்தான் இப்படி ஒளித்துவைத்துப் படிக்கக் காரணம். பொதுவாக எந்த ஒரு விஷயம் தீவிரமாகக் கட்டுப்படுத்தப் படுகிறதோ, அதை அறிந்துகொள்ள ஆசைப்படுவது மனித இயல்பு. உதாரணமாக, தமிழ் நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்தபோது நமது குடிமகன்கள் பலர் பாண்டிச்சேரி, காரைக்கால் சென்று குடித்துவிட்டு வந்தார்கள். ஆந்திராவில் என்.டி.ஆர். மது விலக்குக் கொண்டு வந்தபோது, அங்கிருந்தவர்கள் தமிழகத்தின் எல்லைப் பிரதேசமான திருத்தணி போன்ற பகுதிகளுக்கு வந்து குடித்துவிட்டுப் போனார்கள்.

இதேபோலத்தான் செக்ஸும். அதைப் பற்றிய கட்டுப்பாடுகள் அதிகரிக்க அதி கரிக்க, அவற்றை மீறி ‘அது என்ன?’என்று தெரிந்துகொள்ளும் தீவிரம் அதிகரித்து விடுகிறது. இதன் விளைவுதான் ஒளித்துவைத்து ஆபாசப் புத்தகத்தைப் படிப்பது, நீலப்படம் பார்ப்பது போன்றவை.

இன்றைக்கு இணைய தளங்களில் போர்னோகிராபி (Pornography) என்பது படுபிரசித்தமாக இருக்கிறது. இதற்கென்று கணக்குவழக்கில்லாமல் வலை தளங்கள் இருக்கின்றன. ‘போர்னோகிராபி’ என்ற ஆங்கில வார்த்தையின் ஆதிமூலம் கிரேக்க சொல்லான ‘போர்னியா’ (Porneia) என்பதுதான். இந்த சொல்லுக்கு ‘விலைமகள்’ என்று பொருள். விலைமகளின் நடைவடிக்கைகளைப் பற்றி எழுதுவதற்குத்தான் ‘போர்னோகிராபி’ என்று பெயர் வைத்தார்கள். இந்த வார்த்தையைப் போலவே ‘எரோடிகா’ (Erotica) என்றொரு சொல் உண்டு. இதுவும் கிரேக்கச் சொல்தான். கிரேக்கப் புராணத்தில் குறிப்பிடப்படும் மன்மதக் கடவுளின் பெயர் ‘ஈராஸ்’ (Eros). இவருடைய ஒரே வேலை, செக்ஸ் ஆசையை தூண்டிவிட்டுக் கொண்டே இருப்பதுதான். கவர்ச்சிகரமான படங்களும், எழுத்துக்களும் மனதில் தூண்டலை நிகழ்த்துவதால் ‘ஈராஸ்’ கடவுளைப் பின்பற்றி ‘எரோடிகா’ என்ற பெயர் வந்தது.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 10:05 am

செக்ஸ் குறித்த படங்கள் இன்றுநேற்று வந்ததல்ல. மனித வரலாறு தொடங்கியபோதே இதன் வரலாறும் துவங்கிவிட்டது. ஆதிகால குகை ஓவியங்களைப் பார்த்தாலே இதைப் புரிந்து கொள்ளலாம்.

செக்ஸ் தொடர்பான ஆளிணிவுகளில் பிரபலமான சார்லஸ் கின்ஸி, ஆபாசம் பற்றிய புத்தகம், படங்களை யாரெல்லாம் படிக்கிறார்கள், பார்க்கிறார்கள் என்று ஆராளிணிச்சி செளிணிது, ஒரு புள்ளிவிவரம் வெளியிட்டார். அதில் 48 சதவிகித பெண்களும், 36 சதவிகித ஆண் களும், "ஆபாசமான படங்கள், எழுத்துக்கள் எங்களை உணர்ச்சிவசப்பட வைத்திருக்கின்றன’ என்று ஒப்புக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நான் 2004-ம் ஆண்டு, ‘இண்டர்நேஷனல் கான்ஃபரன்ஸ்’ ஒன்றில் ஆளிணிவறிக்கை சமர்ப்பித்தேன். இந்த ஆளிணிவுக் காக இந்தியாவில் 15 மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரிடம், ‘ஆபாச புத்தகம், நீலப்படம் போன்றவற்றை படித்திருக்கிறீர்களா?’ என்று கேட்டதற்கு 72.27 சதவிகித ஆண்களும், 48.90 சதவிகித பெண்களும் ‘நாங்கள் படித்திருக்கிறோம், பார்த்திருக்கிறோம்’ என்று ஒப்புக் கொண்டார்கள். ‘போர்னோகிராபி’ பற்றிய பயம் மக்கள் மனதில் இருப்பது எதனால்? ‘செக்ஸ் என்பதே குற்றம், செக்ஸ் என்பதே அனுபவிக்கக் கூடாதது’ என்ற எதிர்மறை எண்ணத்தாலும், அறியாமையாலும்தான் இப்படியரு அதீத பயம் ஏற்பட்டிருக்கிறது. செக்ஸை மிகுந்த கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அவர்கள் மீதே அவர்களுக்கு நம்பிக்கையிருப்பதில்லை. அதனால்தான்அவர்கள் அப்படி நடந்து கொள்கிறார்கள். இதற்கு பொருத்தமான உதாரணம், அமெரிக்காவைச் சேர்ந்த அந்தோனி காம்ஸ்டாக் என்பவர்தான். 1844-ல் பிறந்த இவருக்கு, அம்மா என்றால் வெல்லக்கட்டி... அவ்வளவு பிரியம்.

ஆனால், இவருக்குப் பத்து வயது நடக்கும்போது, அம்மாவைப் பறித்துக்கொண்டான் மரணதேவன். தந்தையோ மதுக்கோப்பைக்குள் விழுந்து கிடந்தார். துன்புறுத்தும் தனிமை யில் இருந்து தப்பி ஒளிந்து கொள்ள, ஆபாச புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தான் சிறுவன் காம்ஸ்டாக். அந்தப் படங் களில் உள்ளது போல சுய இன்ப வேட்கையில் ஈடுபடுவது அவனுக்கு சகஜமானது. ‘சுய இன்பம்’ பற்றிய தவறான கருத்து இருந்த காலம் அது. இதனால் காம்ஸ்டாக்கை குற்ற உணர்ச்சி பிடுங்கித் தின்றது. மேஜர் வயதைத் தொட்டபிறகும் குற்ற உணர்ச்சி தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் இந்த சித்ரவதை பொறுக்க முடியாமல் தற்கொலைக்கு முயற்சித்து, மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் பிழைத்தார் காம்ஸ்டாக். இந்நிலையில், ஆபாச புத்தகம், படங்க ளை நாட்டிலிருந்தே ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தீவிரமாகப் பற்றிக் கொண்டது. ‘ஒளிணி.எம்.சி.ஏ.’ என்ற அமைப்பில் உறுப்பினரானவர், அமைப்பிலிருந்த சிலருடன் சேர்ந்து ஆபாசத்தை ஒழிக்க ஆவேசமாகப் புறப்பட்டார். அரசாங்கத்துக்கு நிறைய விண்ணப்பங்களை எழுதித் தள்ளினார். இவருக்கு சாம்வுல் கோல்கேட் (புகழ்பெற்ற ‘கோல்கேட்’ கம்பெனியின் முதலாளி), ஜே.பி.மார்கன்(பேங்க் அதிபர்) என்ற இரண்டு தலைகள் ஆதரவு தெரிவித்தன.

1873-ல் அமெரிக்க பாராளுமன்றத்தில் ஆபாச புத்தகங்களுக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதைய அமெரிக்க அதிபர் யுலிசஸ் எஸ்.கிராண்ட் இந்தச் சட்டத்தில் கையெழுத்திட்டதும் இது உடனடியாக அமலுக்கு வந்தது. ‘காம்ஸ்டாக் சட்டம்’ என்றே பெயர் பெற்றது. காம்ஸ்டாக்குக்கு ‘ஆன்டி அப்ஸீனிட்டி ஏஜென்ட்’ என்ற பதவியும் அளிக்கப்பட்டது. தவிர, அஞ்சல் துறையிலும் ஒரு பதவி தரப்பட்டது. போலீஸில் இன்ஸ்பெக்டர் பதவிக்கு இணையான அங்கீகாரம் உடையது இந்தப் பதவி.

இந்தப் பதவி கைக்கு வந்தபிறகு, ஆபாச ஒழிப்பு என்ற பெயரில் பயங்கரமாக ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டார். ஓவியர்கள், பதிப்பகங்கள், பத்திரிகைகள் அனைத்தையும் ஏதேதோ காரணம் சொல்லி குற்றவாளியாக்கினார். இவரால் அலைக்கழிக்கப்பட்டு மனம் உடைந்த 15 பெண்கள் தற்கொலை செளிணிது கொண்டார்கள் என்றால், காம்ஸ்டாக் எந்த அளவு ஆட்டம் போட்டிருப் பார் என்பது புரிந்திருக்கும். அபார்ஷன் செளிணியும் டாக்டர்கள், நர்ஸ்கள், விலைமாதர் என பலரும் குற்றம் சாட்டப்பட்டனர்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 10:05 am

தூரிகைக்காரர்களின் சொர்க்கம் என புகழப்பட்ட நியூயார்க்கின் ‘ஹெர்மன் நாட்லர்’ ஓவியக்கூடத்தில் இருந்த 117 ஓவியங்களை ஆபாசம் என்று சொல்லி தூக்கிக்கொண்டு போனார் காம்ஸ்டாக். ரஸ்ஸல் டிரால் என்பவர் எழுதிய ‘செக்ஸுவல் பிஸியாலஜி’ (Sexual physiology) என்ற டாக்டர்களுக்கான மருத்துவப் பாடப்புத்தகத்தை "ஆபாசக் களஞ்சியம்" என்று சொல்லித் தடை செளிணிதார். காம்ஸ்டாக்கின் கொட்டம், பல அரசு அதிகாரிகளுக்குப் பிடிக்கவில்லை.

இந்தச் சூழலில் ‘த ட்ரூத் ஸீக்கர்’ (உண்மை தேடுபவன்) என்ற வாரப் பத்திரிகையில் (1877) ‘காம்ஸ்டாக்கின் கெடுபிடிக்கு காரணம் என்னவென்றால்- எது ஆபாசம், எது ஆபாசமில்லை என்கிற விளக்கம் சட்டரீதியில் தரப்படாததுதான். அதனால்தான் காம்ஸ்டாக் யாரை வேண்டுமானாலும் கைது செளிணிகிறார்’ என்று தலையங்கம் வெளியானது.

அவ்வளவுதான்... ‘உண்மை தேடுபவன்’ இதழின் ஆசிரியரும் காம்ஸ்டாக்கின் கோபத்துக்கு ஆளாகி கைது செளிணியப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துப் பத்திரிகையாளர்களும் கொதிதெழ... நாடு முழுவதும் காம்ஸ்டாக்குக்கு எதிரான தீ பற்றிப் பரவியது. படிப்படியாக காம்ஸ்டாக்கின் கெடுபிடி தளர்ந்தது.
காம்ஸ்டாக்கின் கதையை இங்கு விவரித்ததற் கான காரணம், இப்போது வாசகர்களுக்குப் புரிந்திருக்கும்.

இந்தியாவிலும், இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தில்கூட ‘எது ஆபாசம்?’ என்று துல்லியமாக விளக்கப்படவில்லை. செக்ஸ் குறித்த சட்டங்கள் இந்தியாவில் 1860-ம் ஆண்டு காலக்கட்டத்தில் உருவானவை. இன்று மருத்துவ உலகமும், விஞ்ஞான உலகமும் நவீனமாகிவிட்டன. ஆனாலும் அந்தக் காலத்து சட்டங்கள்தான் பயன்பாட்டில் உள்ளன. காலத்துக்கு ஏற்ப அவை புதுப்பிக்கப்படவில்லை.

இக்காலத்துக்கு ஏற்ற வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று சில ஆண்டுகளாக சட்ட நிபுணர்கள் முயற்சித்துக்கொண்டு இருக்கிறார்கள். விரைவில் புதிய சட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதாவது எது ஆபாசம், எது ஆபாசமில்லை என்கிற குழப்பம் அகலுமா..?

சென்ற இதழில் குறிப்பிட்டது போல - ஆபாசம் குறித்த சர்ச்சை களுக்கு செக்ஸ் பற்றிய அறியாமையே பிரதான காரணமாக இருக்கிறது. இதுதான் ஆபாசம் என்பதை இதுவரை யாருமே தீர்மானமாக வரையறுக்க வில்லை. ஒன்றைப் பார்த்து இது ஆபாசம், இது ஆபாசமில்லை என்று உறுதியாக சொல்லவே முடியாது. ஏனெனில், ஒருவருக்கு ஆபாசமாகத் தோன்றும் (Obscene) விஷயம் இன்னொருவருக்கு கலைப்பூர்வமான (Art) விஷயமாகத் தோன்றலாம்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 10:13 am

உண்மையில் ஆபாசம் குறித்த குளறுபடிகளுக்கு இந்தப் பார்வை மாறுபாடுதான் முக்கிய காரணம். ‘அழகு’ என்ற கருத்தாக்கம் பற்றிச் சொல்லும்போது, ‘ஒரு பொருளின் அழகு என்பது பார்க்கப்படுகின்ற பொருளில் இல்லை, பார்ப்பவரின் கண்ணில் இருக்கிறது’ என்பார்கள். இது ஆபாசத்துக்கும் பொருந்தும்.

ஒரு தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டுவதை பார்க்கும் ஒருவன், அந்தச் செயலின் உன்னதம் அறிந்து உணர்ச்சிவசப்படு வதும், இன்னொருவன் காமம் பொங்க அந்தக் காட்சியை வெறித்துப் பார்ப்பதும்கூட அவரவர் மனதின் விளைவுகள்தான்.

ஆபாசம் என்பதற்கு அகராதிகள் சொல்லும் அர்த்தம் என்ன?

‘நடைமுறை வாழ்வில் புழக்கத்தில் இருக்கும் விருப்பங் களுக்கும், சுவை மனப்பான்மைக்கும் எதிரான - அருவருப்பூட்டும், முகம்சுளிக்க வைக்கும், முறையற்ற செயல் அனைத்தும் ஆபாசமாகக் கருதப்படும்.’ இதுதான் ஆபாசத்துக்கு அகராதிகள் சொல்லும் பொதுவான விளக்கம். கி.பி. 1600-களில் ஆபாசம் பற்றிய அமெரிக்க விதிகளில் செக்ஸ் விஷயங்கள் கவனத்தில்

கொள்ளப்படவில்லை. இன்று நிர்வாணப் படங்கள், செக்ஸ் விருப்பத்தை தூண்டும் எழுத்துக்கள்தான் ஆபாசம் என்று பலரால் கருதப்படுகிறதல்லவா? ஆனால், கி.பி.1600-களில் மதத்துக்கு எதிராகப் பேசுவதையும், எழுதுவதையும் மட்டுமே ஆபாசம் என்று கருதினார்கள். ‘இயற்கைக்கு மாறாக ஒருவரை செயல்பட எதுவெல் லாம் தூண்டுகிறதோ, ஒருவரின் மனதில் எதுவெல்லாம் இயல்புக்கு மாறான, முறையற்ற உணர்வுகளை எழுப்புகிறதோ... அவை எல்லாம் ஆபாசம். இயற்கைக்கு மாறான எண்ணத்தைத் தூண்டும், இயற்கைக்கு மாறாக செயல்பட தூண்டும் எழுத்துக்களும் இதில் அடங்கும்.’ - கி.பி. 1868-ல் இங்கிலாந்து நாட்டின் தலைமை நீதிபதியாக இருந்த ஹிக்கலின் கொடுத்த ‘ஆபாசம்’ பற்றிய இந்த விளக்கமே- ஆபாசம் பற்றிய விதியாகவும் அப்போது மதிக்கப்பட்டது. இதற்கு ஹிக்கலின் விதி (Hicklin Decision) என்று பெயர்.

இதன் அடிப்படையில் இங்கிலாந்து நீதிமன்றங்களுக்கு ஓர் அதிரடி உத்தரவு போடப்பட்டது. இதன்படி, ‘ஒரு முழுப் புத்தகத்தில் ஒரே ஒரு பாராவில் மட்டும் சற்றே செக்ஸ் வாடை அடித்தால்கூட போதும். அந்தப் புத்தகத்தின் ஆசிரியர், வாசகனை முறையற்ற செக்ஸ் தூண்டலுக்கு உள்ளாக்குகிறார். ஆகவே, அந்த புத்தகத்தையே ஆபாச புத்தகமாகத்தான் கருத வேண்டும்’ என்பதுதான் அந்த உத்தரவு. ஐந்து பைசா திருடினாலும் திருட்டுதான்; ஐந்து லட்சம் திருடினாலும் திருட்டுதான் என்பார்கள் அல்லவா? அதைதான் ஆபாசம் பற்றிய ஹிக்கலின் விதியும் அடிநாதமாகக் கொண்டிருந்தது.

அதன்பிறகு காலங்கள் உருண்டோட, ஆபாசம் பற்றிய கருத்தோட்டத்தில் சின்னச் சின்ன மாறுதல்களுடன் புது விதிகள் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. சட்டரீதியிலான ஆபாசம் குறித்த விதிகள் காலந்தோறும் மாறிக் கொண்டே வந்திருக்கிறது என்பதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு.

1973-ம் ஆண்டு இதுவரை இருந்துவந்த ஆபாசம் குறித்த விதிகளுக்கு மாறான ஒரு சிந்தனை உருவானது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் இந்தப் புதிய விதி உருவாக்கப்பட்டது. ‘ஆபாசம் என்று சொல்லி நீண்ட காலத்துக்கு ஒரு புத்தகத்தைத் தடை செய்தால்- அது சிறந்த இலக்கிய அந்தஸ்து கொண்ட, கலாப்பூர்வமான, அரசியல் மற்றும் விஞ்ஞானரீதியிலான படைப்புகளை வெளிவராமல் தடுத்துவிடும்’ என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் புதிய சிந்தனை.

இன்றுவரை ஆபாசம் பற்றிய துல்லியமான, எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வரை யறைகள் இல்லாதது பெரிய துரதிர்ஷ்டம்தான். இதனால்தான் ‘கொலை, கொள்ளை, கற்பழிப்பைப் பற்றி எழுதினால் தவறில்லை. அவற்றைச் செய்தால் மட்டுமே தண்டனை’ என சொல்லும் குற்றவியல் சட்டம், செக்ஸ் பற்றிய விஷயத்துக்கு மாறுபாடான அளவுகோலை முன்வைக்கிறது. அதாவது, ‘செக்ஸ்நடவடிக்கையில் நேரடியாக ஒரு மனிதன் ஈடுபட்டால் அது தவறில்லை. செக்ஸை, செக்ஸ் செயல்பாடுகளை நாவலில், சினிமாவில், எழுத்தில் காட்டினால் அது குற்றம். அதற்கு தண்டனையும் உண்டு’ என்கிறது. இதில் உள்ள முரண்பாடு புரிகிறதா உங்களுக்கு? இப்படி இரண்டையும் நான் ஒப்புமை செய்தவதால் கொலையைப் பற்றி எழுதுவது தவறு, கொலை செய்தால் தவறில்லை என்று நான் சொல்ல வருவதாகத் தப்பு அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டாம். இங்கே நீங்கள் புரிந்து கொள்ளவேண்டியது, கிரிமினல் நடவடிக்கை மீதான அணுகுமுறைக்கும், ஆபாசம் பற்றிய அணுகுமுறைக்கும் உள்ள முரண் பாட்டைதான்! சாதாரண பொதுமக்கள் மட்டுமல்ல- மெத்த படித்தவர்கள், சட்ட நிபுணர்கள்கூட ஆபாசம் குறித்த தவறான கருத்துக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோருமே- கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஏமாற்றுதல் போன்றவற்றைப் போலவேதான் ஆபாசம் பற்றியும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நவீன யுகத்தில் செக்ஸ் ஆராய்ச்சியாளர்கள், பிகேவியரல் சயின்டிஸ்ட்கள் (behavioral scientists) போன்றவர்கள், செக்ஸ் தொடர்பான எல்லை மீறிய எழுத்து மற்றும் படங்களை ஆபாசம் என்று குறிப்பிடாமல் ‘Explicit Sexual material’ என்று குறிப்பிடுகிறார்கள். இதை செக்ஸை அம்பலப்படுத்தும் விஷயம் என்று பொருள் கொள்ள லாம். இவர்கள் பார்வையில் நிர்வாணமான ஒரு பெண்ணின் படம் ‘Explicit Sexual material’ அல்ல; ஆண்-பெண் கூடலை அப்பட்டமாக சொல்லும் புத்தகம் அல்லது படம் ‘Explicit Sexual material’ ஆகும்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 10:21 am

இது ஒருபுறம் இருக்கட்டும்... சமூகம் நினைப்பதைப்போல் ஆபாச எழுத்து, ஆபாச படங்கள் போன்றவை சமூகத்தில் தவறான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதா? இதுபற்றி நடத்தப்பட்ட ஆய்வுகளில் விஞ்ஞானப்பூர்வமான இரண்டு ஆய்வுகளைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

முதலாவது, ‘டேனிஷ் ஃபோரன் ஸிக் மெடிக்கல் கவுன்ஸில்" 1966-ம் ஆண்டில் நடத்தியஆய்வு. இது ‘ஆபாச புத்தகங்கள், எழுத்துக் கள் ஆகியவை கிரிமினல் நட வடிக்கைகளுக்கு மக்களைத் தூண்டுகிறதா?’ எனும் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இரண்டாவது, யுனைடெட் ஸ்டேட்ஸ் பிரசிடென்ட்ஸ் கமிஷன் 1970-ம் ஆண்டில் மேற்கொண்ட ஆய்வாகும்.

இரண்டு ஆய்வுகளும் கற்பழிப்பு, கொலை, கொள்ளை போன்றவற்றில் தண்டிக்கப்பட்ட சிறைக் கைதிகளிடம் மேற்கொள்ளப்பட்டது. ‘நீங்கள் கொலை செய்ய, கற்பழிக்க, கொள்ளை நடந்த தூண்டுகோலாக இருந்தது எது?" என்று கேட்கப்பட்டது.

அந்தக் கைதிகளில் ஒருவர்கூட ஆபாச புத்தகங்கள் தான் என்னைக் கொலை செய்ய வைத்தது, கற்பழிக்கத் தூண்டியது என்று குறிப்பிடவில்லை. தவிர, இதுபோன்ற கிரிமினல் நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட அவர்களின் சொந்த வாழ்க்கைச் சீரழிவும், குடும்பப் பின்னணியும்தான் காரணம் என்றும் கண்டறியப்பட்டது. இதுதவிர 100 மிகப் பெரிய தேசிய நிறுவனங்களிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு குழுக்கள் டென்மார்க் சென்று, மக்கள் மத்தியில் செக்ஸ் கண்காட்சி நடத்தி, "போர்னோகிராபி" படங்களை பார்க்கவைத்து சட்டத்துக்குப் புறம்பானவற்றில் ஈடுபட இவை தூண்டுகோலாக இருக்கிறதா என்றும் ஆய்வு செய்தன.

இந்த இரண்டு விஞ்ஞானப்பூர்வமான ஆய்வுகளும் இதுவரை ஆபாசம் பற்றி பொதுவாக எல்லோரும் கொண்டிருந்த கருத்துக்களை சுக்குநூறாக உடைத்து எறிந்தது. ‘ஆபாசப் புத்தகங்களோ, படங்களோ எவரையும் தவறாகத் தூண்டவில்லை’ என்பதுதான் இந்த ஆய்வுகளின் இறுதி முடிவாகும்.

பத்திரிகையில் அபூர்வமாக சில குற்றவாளிகள், ‘இந்த சினிமாவைப் பார்த்தேன். அதுதான் என்னை இந்த கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட தூண்டியது’ என்று சொன்னால், அந்தக் குற்றவாளியின் மனநிலையை பரிசோதிக்க வேண்டும். அவன் ஆரோக்கியமான மனநிலை கொண்டவனாக இருக்க மாட்டான். மனபாதிப்புக்கு ஆளானவனாகவே இருப்பான்.

இந்த ஆய்வுகளின்படி, ‘போர்னோ கிராஃபி’ சமூகத்தைக் கெட்டுப்போகத் தூண்டுவதில்லை என்பது நிரூ பணமானது. முறையான பாலியல் கல்வியை அளிக்க முன்வந்தால், "போர்னோகிராபி" மீதுள்ள ஆர்வம் தன்னிச்சையாகக் குறைந்துவிடும் என்றும் இந்த ஆய்வறிக்கை உலகுக்கு உணர்த்தி இருக்கிறது.

செக்ஸ் பற்றிய அரிச்சுவடி புரிபட ஆரம்பித்த ஆதி நாளிலிருந்தே மனிதன், அது தொடர்பான மற்றொரு விஷயத்திலும் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தான். எப்படி ஆபாச புத்தகமும் படமும் செக்ஸ் உணர்வைத் தூண்டிவிடும் என்று நினைத்தானோ அதுபோல, செக்ஸ் சாமர்த்தியத்தைத் தூண்டிவிடும் அல்லது தாம்பத்ய உறவின் நேரத்தை அதிகப்படுத்தும் ஒரு பொருளை மனிதன் தேடிக்கொண்டே இருந்தான். கவனிக்க - தன் செக்ஸ் பிரச்னையை மட்டும் தீர்த்துக் கொள்வதற்காக இதுபோன்ற பொருளை மனிதன் தேடவில்லை. ‘இன்னும் வேண்டும்... இன்னும் வேண்டும்’ என்ற அதீத ஆசையின் விளைவே இந்தத் தேடல்.

மனிதனின் காம உணர்வை அதிகப்படுத்தும் பொருட்களுக்கு ‘அப்ரோடிஸியாக்’ (Aphrodisiac) என்று பெயர். இது மருந்தாக, வாசனைப் பொருளாக, உணவாக, உபகரணமாக எதுவாகவும் இருக்கலாம்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 10:21 am

செக்ஸ் உணர்வைத் தீவிரமாகத் தூண்டிவிடும் பொருட்களுக்கு ‘அப்ரோடிஸியாக்’ என்று பெயர் வந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை. கிரேக்க புராணத்தில் ‘யுரேனஸ்’ என்ற ஒரு கடவுள் இருந்தார். இவருக்கு ‘க்ரோனஸ்’ என்றொரு மகன். தந்தையும் மகனும் நேசபாவத்துடன் இருப்பதைக் காட்டிலும் சண்டையிட்டுக் கொள்வதுதான் அதிகம். அப்படி ஒருநாள் இருவருக்கும் இடையே நடைபெற்ற சண்டையின் உச்சத்தில், க்ரோனஸ் தன் தந்தையின் பிறப்புறுப்பை அறுத்துக் கடலில் வீசி எறிந்தான். கடல் அலைகளில் மிதந்த பிறப்புறுப்பைச் சுற்றி நுரைகள் சூழ்ந்தன. அந்த நுரையிலிருந்து ‘அப்ரோடைட்’ என்கிற பெண் கடவுள் பிறந்தாள். ‘அப்ரோஸ்’ (Aphros) என்ற கிரேக்க வார்த்தைக்கு நுரை என்று பொருள். நுரையிலிருந்து பிறந்ததால், அவளுக்கு அப்ரோடைட் என்று பெயர் வந்தது. இவளின் வேலை கடவுள்களுக்கும், மனிதர்களுக்கும் செக்ஸ் ஆர்வத்தைத் தூண்டி விட்டுக்கொண்டே இருப்பதுதான்.

பார்ப்பவர்களைக் கிறங்கடிக்கும் வசீகரத்துடன் இருந்த அப்ரோடைட்டை திருமணம் செய்துகொள்ள மற்ற கடவுளர்களுக்கு மத்தியில் ஏகப்பட்ட போட்டி. அப்ரோடைட்டின் தந்தையான யுரேனஸ் அவளை ‘ஹிப்பாய்ஸ்டாஸ்’ என்பவனுக்குத் திருமணம் செய்து வைத்தார். ஹிப்பாய்ஸ்டாஸ்- தங்க ஆபரணங்கள் செய்பவர்களின் கடவுள். ஹிப்பாய்ஸ்டாஸை மணம் செய்து கொண்டாலும் வேறு சிலருடனும் உறவு வைத்திருந்தாள் அப்ரோடைட்.

கிரேக்கத்தில் கோயில்கட்டி கோலாகலமாகப் பண்டிகையும் கொண்டாடப்படும் அளவுக்கு புகழ் பெற்றவள் அப்ரோடைட். அந்தப் பண்டிகையின் பெயர் ‘அப்ரோடிஸியாக்’. இந்தப் பண்டிகையின் பெயர்தான் செக்ஸ் உணர்வைத் தூண்டும் பொருட்களுக்கு சூட்டப்பட்டது.

தன் காம இச்சையை அதிகரித்துக்கொள்ள ஒவ்வொரு காலத்திலும் மனிதன் ஒவ்வொரு விதமான பொருளைப் பயன்படுத்தி வந்திருக்கிறான். கி.மு. 4000-ல் பாபிலோனில் அரிசியிலிருந்து ஒயின் தயாரிக்கும் பழக்கம் இருந்தது. அந்த ஒயினைக் குடித்தால் செக்ஸ் ஆர்வம் அதிகரிக்கும் என்று அப்போது நம்பினார்கள்.

கி.மு. 200-ல் எகிப்தில் ‘மேன்ட்ரேக்’ (Mandrake) என்ற செடியின் சாறைக் குடித்தால் மெத்தை வித்தையில் புகுந்து விளையாடலாம் என்று மக்கள் நினைக்க, அந்த செடியை மொட்டை அடிக்க ஆரம்பித்தனர்! கி.மு. ஏழாம் நூற்றாண்டில் ஐரோப்பா கண்டம் முழுதும் மேன்ட்ரேக் செடியின் சாறை, பிறந்த குதிரையின் தலை மீது இருக்கும் ‘ஹிப்போமேனஸ்’ என்ற நுரை போன்ற பொருளுடன் கலந்து அருந்தினார்கள்.

ரோம் நாட்டில் ‘ஆர்ஸிட்’ என்ற பூவின் இதழ்களி லிருந்து ‘சாடிரின்’ என்ற பானம் தயாரித்துக் குடித்தால் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும் என்று நம்பி மொடாக்குடி குடித்தார்கள். ‘ஸ்பானிஷ் ஃபிளை’ என்ற ஒருவகை சிறு பூச்சி யைப் பிடித்து வறுத்துப் பொடி செய்து, அந்தப் பொடியைத் திராட்சை சாறில் கலந்து அருந்தினார்கள். இதுபோன்ற காமத்தைத் தூண்டிவிடும் விதவிதமான அப்ரோடிஸியாக் வகையறாக்கள் ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டு மக்களின் நம்பிக்கைக்கேற்ப பயன்பாட்டில் இருந்தன... இருக்கின்றன!



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 10:22 am

காமத்துக்காகக் காளான்களையும் பதம்பார்த்த மக்கள், தங்கத்தையும் விட்டுவைக்கவில்லை. எளிதில் ஜீரணமாகும் வகையில் அதேசமயம் இச்சையைத் தூண்டிவிடும் என்ற நம்பிக்கையில் தங்கத்தைப் பஸ்பமாக்கி சாப்பிட்டார்கள்.

இந்தியாவிலும் இதுபோன்ற பொருட்கள் மீது நிறைய நம்பிக்கைகள் இருந்ததற்கு சான்றுகள் உள்ளன. கி.மு. 600-ல் எழுதப்பட்ட பழமை வாய்ந்த ‘சரக்கா சம்ஹிதா’ என்ற ஆயுர்வேத நூலில் ஒரு அத்தியாயமே "அப்ரோடிஸியாக்" வகை பொருட் களின் மகத்துவத்தைச் சொல்வதற்காக ஒதுக்கப் பட்டிருக்கிறது.

காம இச்சையைத் தூண்டும் பொருட்களை ‘சக்கரா சம்ஹிதா’ உணவுப் பொருட்கள், மருந்துகள், மனதைத் தூண்டி விடுதல் என்று மூன்று வகையாகப் பிரித்திருந்தது. காம இச்சையை அதிகப் படுத்தும் ஐம்பது வகையான மருந்துகளையும் வகைப்படுத்தி இருந்தது.

கி.பி. 300-ல் வாத்ஸ்யாயனர் தன்னுடைய ‘காம சாஸ்திரம்’ ஏழாம் பாகம் இரண்டாம் அத்தியாயத்தில் (அத்தியாய தலைப்பு: ஒளப நிஷதிகம்) செக்ஸ் ஆர்வத்தைத் தூண்டிவிடவும், செக்ஸ் பிரச்னைகளைத் தீர்க்கவும் சில மருந்துகளைக் குறிப்பிட்டிருக்கிறார்.

அவருக்குப் பின்னர் சோதலா என்பவர் கி.பி. 12-ம் நூற்றாண்டில் ‘கதா நிக்ரஹா", மற்றொரு நூலான "சாரங்கதரா சம்ஹிதா’ ஆகிய நூல்களில் கஞ்சா செடிக்கு செக்ஸ் ஆர்வத்தைத் தூண்டிவிடும் ஆற்றல் உண்டு என்று குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் பல நூற்றாண்டுகளாகவே செக்ஸ் உணர்வைத் தூண்டிவிடும் பொருட்கள் புழக்கத்தில் இருந்து வருவது தெரிகிறது.

செக்ஸ் எண்ணத்தைத் தூண்டிவிடும் பொருட்களை பற்றிய விஞ்ஞானரீதியான ஆராய்ச்சிகள் 18-ம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பித்தன. ஒரு உயிரினத்துக்கு ஆண் விதையை எடுத்துவிட்டால் செக்ஸ் ஆர்வம் குறைந்து விடும் என்றும்...

மீண்டும் பொருத்திவிட்டால் செக்ஸ் எண்ணம் பழையபடி திரும்பிவிடும் என்றும் அப்போது கண்டறிந்தார்கள். 1889-ல் ஃபிரான்ஸில் பிரவுன் ஸீகுவார்டு என்ற நரம்பியல் நிபுணர் ஒரு கருத்தரங்கில், ‘‘நான் நாயின் விதையை எடுத்து, சாறு பிழிந்து அதனை ஊசி மூலம் செலுத்திக் கொண்டேன். இப்போது நான் இளமையாக இருக்கிறேன். செக்ஸில் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுகிறேன்’’ என்றார்.

அப்போது அவரது வார்த்தைகளை எவரும் நம்பவில்லை. 1935-ல் ஆண் ஹார்மோன் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, பிரவுன் ஸீகுவார்டு சொன்னதில் மருத்துவரீதியாகக் கொஞ்சம் உண்மை இருப்பதாக நம்பப்பட்டது. இவரது ஆராய்ச்சியிலிருந்து சில உண்மைகளைக் கற்றறிந்த மருத்துவ உலகம், பின்னாட்களில் கணையத்திலிருந்து இன்சுலினை எடுக்கலாம் என்கிற பேருண்மையைக் கண்டுபிடித்தது.

கி.பி. 1900-ல் ‘யூஜின் ஸ்டீநாக்’ என்ற மருத்துவ நிபுணர், வாஸோலிகேஷன் (Vasoligation) என்ற அறுவை சிகிச்சை செய்தால் செக்ஸ் ஆர்வம் அதிகரிக்கும் என்ற கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். அதாவது, விதையில் செர்டோலி செல் (Sertoli cell), லீடிக் செல் (Leydig cell) என்னும் இரண்டு வகையான செல்கள் இருக்கும். செர்டோலி செல்லில்தான் உயிரணு உருவாகிறது. லீடிக் செல்லில் ‘டெஸ்டோஸ்டீரோன்’ (Testostereone) என்ற ஆண் ஹார்மோன் உற்பத்தியாகிறது. இந்த ஆபரேஷன் செய்தால் டெஸ்டோஸ்டீரோன் சுரப்பது அதிகமாகும். இதன் விளைவாக செக்ஸ் உணர்வு அதிகரித்துவிடும் என்று நம்பப்பட்டது.

அக்கால கட்டத்தில் இந்த அறுவை சிகிச்சை புகழடைந்து, 1920-களில் கிட்டத்தட்ட ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் இருந்த பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆபரேஷனை செய்து கொண்டார்கள். அவர்களில் முக்கியமானவர் நவீன உளவியலின் தந்தை என்று புகழப்படும் சிக்மண்ட் ஃபிராய்டு ஆவார். ‘ஈட்ஸ்’ எனும் புகழ்பெற்ற கவிஞரும் இந்த ஆபரேஷனை செய்து கொண்டார்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 10:28 am

இந்த ஆபரேஷனுக்கு இன்னொரு பெயரும் உண்டு. அதன்பெயர் ‘வாசக்டமி’ (Vasectomy). ஆம், இப்போது குடும்பக் கட்டுப்பாட்டுக்காக உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் அதே கருத்தடை ஆபரேஷன்தான் அப்போது செக்ஸ் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக செய்யப்பட்டிருக்கிறது!

1920ல் செர்ஜி அரொமோவித் என்ற விஞ்ஞானி சிம்பன்ஸி குரங்கின் விதையை ஒரு ஆணுக்குப் பொருத்தினார். இதனால் அந்த ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமானது என்று அவர் தெரிவித்தார்.

இதை எல்லாம் பார்க்கிற, படிக்கிறபோது ஒரு சிரிப்புத் துணுக்கு ஞாபகத்துக்கு வருகிறது. அது அடுத்த இதழில்...

சென்ற அத்தியாயத்தில் நான் சொல்வதாகச் சொன்ன அந்த சிரிப்புத் துணுக்கு இதுதான்:

கடவுள் உலகத்தைப் படைத்தபோது முதலில் ஒரு ஆணை உருவாக்கினார். கடவுள் அவனிடம், ‘உனக்கு இருபது ஆண்டுகள் செக்ஸ் லைஃப்’ என்றார். ஆனால் அவனோ, ‘இன்னும் அதிக ஆண்டுகள் வேண்டும்’ என்றான். ‘அதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்... அப்படிப் போய் உட்கார்’ என்று சொன்னார் கடவுள்.

அடுத்து ஒரு சிங்கத்தைப் படைத்தார். அதனிடம், ‘உனக்கு 20 ஆண்டுகள் செக்ஸ் லைஃப்’ என்று அவர் சொல்ல, அதற்கு சிங்கம், ‘எனக்கு 10 ஆண்டுகள் போதும்’ என்றது. உடனே மனிதன், ‘சிங்கம் வேண்டாம் என்ற 10 ஆண்டுகளை எனக்குத் தாருங்கள்’ என்று கடவுளிடம் கேட்டுப் பெற்றான்.

பின்னர் கடவுள் ஒரு குரங்கைப் படைத்து, அதற்கும் ‘20 ஆண்டுகள் செக்ஸ் லைஃப்’ என்றார். குரங்கும் சிங்கத்தைப் போலவே ‘10 ஆண்டுகள் போதும்’ என்றது.

அது வேண்டாமென்ற 10 ஆண்டுகளையும் மனிதன் கெஞ்சிக் கேட்டுப் பெற்றுக் கொண்டான். கடைசியாக கடவுள் ஒரு கழுதையைப் படைத்து, அதற்கும் ‘20 ஆண்டுகள் செக்ஸ் லைஃப்’ என்றார். கழுதையும் ‘10 ஆண்டுகள் போதும்’ என்று சொல்ல, அது நிராகரித்த 10 ஆண்டுகளையும் மனிதனே பெற்றுக் கொண்டான்.

இதனால்தான் ஒரு மனிதன் 20 வயது வரை, செக்ஸில் ஒரு மனிதன் போல நடந்து கொள்கிறான். இருபதி லிருந்து முப்பது வரை சிங்கம் போலவும், முப்பதிலிருந்து நாற்பது வரை குரங்கு போலவும், நாற்பதுக்கு மேல் கழுதை போலவும் ஆகிவிடுகிறான்...!


இது சும்மா ஜோக்குக்காக மட்டும் சொல்லப்பட்டதல்ல; மனிதனின் கட்டுக்கடங்காத செக்ஸ் ஆர்வத்தையும் சுட்டிக் காட்டுவதற்காக சொல்லப்பட்ட கதை. மனிதன் தனது செக்ஸ் ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொள்ள என்னென்ன அப்ரோடிஸியாக் (Aphrodisiac) வகையறாக்களை இப்போது தேடியலைகிறான்..? இந்த நூற்றாண்டில் மருத்துவம் அசுரப் பாய்ச்சலில் புது உயரங்களைத் தொடத் துவங்கியபோது, நவீன அப்ரோடிஸியாக் பொருட்களின் கண்டுபிடிப்பிலும் தன் அதீத கவனத்தைச் செலுத்தியது. அந்தவகையில் அண்மைக்கால வரவு ‘வயாக்ரா!’

வயாக்ராவின் ஜாதகத்தைப் புரட்டினால் எத்தனை எத்தனை சுவாரஸ்யமான விஷயங்கள்..! ஆரம்பத்தில், நெஞ்சுவலிக்காரர்களுக்கு பயன்படுத்ததான் வயாக்ரா கண்டுபிடிக்கப்பட்டது. இதை பைஸர் (Pfizer) எனும் புகழ்பெற்ற மருந்து கம்பெனி முதன் முதலில் தயாரித்தது.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 7 of 13 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக