புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் மருத்துவத்தின் வரலாறு
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
தமிழிலும் இந்திய மொழிகளிலும் வெளிவந்த வரலாற்று நூல்களில் தமிழ் மருத்துவத்தின் வரலாறு குறிப்பிடப்படவில்லை. தமிழ் மருத்துவமும் அதன் வரலாறும் மறைக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகிறது.
பழமையான தொடர்ந்த நாகரிக வரலாற்றினையுடைய மக்கள், தாங்கள் கற்றறிந்த வாழ்வியல் அங்கமான மருத்துவம் பற்றிய வரலாற்றை அறிய முற்படாமலும், அறிந்தனவற்றை வரலாற்று முறையில் எழுத முற்படாமலும் இருப்பதனால், ‘தமிழ் மருத்துவத்தின் வரலாறு' அறியப்படாமல் இருந்து வருகிறது.
வரலாறு
வரலாற்றில் இடம் பெறும் பொருளின் தோற்றம், தொடர்ச்சி' வளர்ச்சி, பரிணாமம்' முதிர்ந்த நிலை, தற்போதைய நிலை ஆகியவற்றைக் கண்டறிந்து உறுதிப்படுத்தி, அகப்புறச் சான்றுகளுடன் உரைத்திடுவது வரலாற்றின் வரைவிலக்கணமாகும்.
தமிழ் மருத்துவ வரலாறு
முற்காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள், அவற்றுக்குரிய மருத்துவத் தொடர்புகளைக் கொண்டு அகப்புறச் சான்றுகளுடன் மருத்துவ வரலாறு வரையப்படும்.
வரலாற்றின் தேவை
மருத்துவ வரலாறு வாழ்வியல் தொடர்புடையது என்பதாலும், அதன் வரலாற்றினால் மருத்துவத்தின் தொன்மை' நோய்களைக் கண்டறிந்து மருந்தளித்த முறைகள் தெரியவரும் என்பதாலும் எதிர்காலத்தில் வருகின்ற நோய்களிலிருந்து எந்தெந்த முறைகளை மேற்கொள்ளலாம் என்பதுடன் புதிய பரிமாணங்களில் மருத்துவத்தை வளர்த்துக் கொள்ளலாம். மேற்கொண்டு செய்ய வேண்டிய செயல் முறைகளிலும் தெளிவு பெற வழியேற்படும்.
வரலாற்றின் இன்றியமையாமை
உலகில் பல்வேறு முறை மருத்துவங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றினால் ஏற்படுகின்ற பக்க விளைவுகளைக் கண்டு அஞ்சி, மரபு வழி மருத்துவமே சாலச் சிறந்தது என உலக மருத்துவ அறிவியல்துறை சார்ந்த அறிஞர்கள் கருதத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்,இந்திய மருத்துவத்தின் வளர்ச்சியில் அதிகக் கவனம் செலுத்தும் நிலையேற்பட்டிருக்கிறது என்பதுடன்' இந்திய மரபினரின் பழமையான மருத்துவத்தின் வரலாறு எழுத வேண்டியது இன்றியமையாத ஒன்றெனக் கருதும் கருத்து வலுவடைகிறது.
தமிழிலும் இந்திய மொழிகளிலும் வெளிவந்த வரலாற்று நூல்களில் தமிழ் மருத்துவத்தின் வரலாறு குறிப்பிடப்படவில்லை. தமிழ் மருத்துவமும் அதன் வரலாறும் மறைக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகிறது.
பழமையான தொடர்ந்த நாகரிக வரலாற்றினையுடைய மக்கள், தாங்கள் கற்றறிந்த வாழ்வியல் அங்கமான மருத்துவம் பற்றிய வரலாற்றை அறிய முற்படாமலும், அறிந்தனவற்றை வரலாற்று முறையில் எழுத முற்படாமலும் இருப்பதனால், ‘தமிழ் மருத்துவத்தின் வரலாறு' அறியப்படாமல் இருந்து வருகிறது.
வரலாறு
வரலாற்றில் இடம் பெறும் பொருளின் தோற்றம், தொடர்ச்சி' வளர்ச்சி, பரிணாமம்' முதிர்ந்த நிலை, தற்போதைய நிலை ஆகியவற்றைக் கண்டறிந்து உறுதிப்படுத்தி, அகப்புறச் சான்றுகளுடன் உரைத்திடுவது வரலாற்றின் வரைவிலக்கணமாகும்.
தமிழ் மருத்துவ வரலாறு
முற்காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள், அவற்றுக்குரிய மருத்துவத் தொடர்புகளைக் கொண்டு அகப்புறச் சான்றுகளுடன் மருத்துவ வரலாறு வரையப்படும்.
வரலாற்றின் தேவை
மருத்துவ வரலாறு வாழ்வியல் தொடர்புடையது என்பதாலும், அதன் வரலாற்றினால் மருத்துவத்தின் தொன்மை' நோய்களைக் கண்டறிந்து மருந்தளித்த முறைகள் தெரியவரும் என்பதாலும் எதிர்காலத்தில் வருகின்ற நோய்களிலிருந்து எந்தெந்த முறைகளை மேற்கொள்ளலாம் என்பதுடன் புதிய பரிமாணங்களில் மருத்துவத்தை வளர்த்துக் கொள்ளலாம். மேற்கொண்டு செய்ய வேண்டிய செயல் முறைகளிலும் தெளிவு பெற வழியேற்படும்.
வரலாற்றின் இன்றியமையாமை
உலகில் பல்வேறு முறை மருத்துவங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றினால் ஏற்படுகின்ற பக்க விளைவுகளைக் கண்டு அஞ்சி, மரபு வழி மருத்துவமே சாலச் சிறந்தது என உலக மருத்துவ அறிவியல்துறை சார்ந்த அறிஞர்கள் கருதத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்,இந்திய மருத்துவத்தின் வளர்ச்சியில் அதிகக் கவனம் செலுத்தும் நிலையேற்பட்டிருக்கிறது என்பதுடன்' இந்திய மரபினரின் பழமையான மருத்துவத்தின் வரலாறு எழுத வேண்டியது இன்றியமையாத ஒன்றெனக் கருதும் கருத்து வலுவடைகிறது.
அடிமைத்தளையை உடைத்த தமிழ் மருந்து
தமிழகத்திலிருந்து மேலை நாட்டிற்கு ஏற்றுமதியான தமிழகத்தின் மிளகு, அந்நாட்டின் அடிமைத் தளையை உடைத்திருக்கிறது என்பது தமிழகத்துக்கும், தமிழக மருத்துவத்துக்கும் கிடைத்த மகுடமாகும்.
கி.பி.410-இல் ரோமாபுரியை, விசிகாத்து என்ற மன்னன் படையெடுப்பின் மூலம் கைப்பற்றினான். அவன், ரோமாபுரி மக்களுக்குத் தண்டனையாகத் திறை விதித்தான். ரோமர்கள்' மூவாயிரம் பவுண்டு மிளகைத் திறையாகச் செலுத்த வேண்டும்; தவறினால், ரோமாபுரி அழிந்து போகும் என்று கர்ச்சித்தான்.
மன்னனின் கொடுங்கோன்மையைக் கண்டு அஞ்சிய ரோமாபுரி மக்கள், வேறு வழியின்றி அவனின் தண்டத்தை ஏற்றுக் கொண்டனர். மன்னனின் விருப்பப்படியே மூவாயிரம் பவுண்டு மிளகைச் செலுத்தி விட்டுத் தங்கள் நாட்டைத் திரும்பப் பெற்றனர்85 என்பது வரலாற்றின் நிகழ்வாக இருக்கக் காண்கிறோம்.
எந்த மன்னனாவது மிளகைத் திறையாகக் கேட்பானா? என்றால், பண்டைக் காலத்தில் பொன்தான் சிறந்த மதிப்பை உடையதாக இருந்தது. பொன்னிருந்தால் எதையும் வாங்கலாம் என்னும் நிலையிருந்த போதும், பொன்னை விடவும் உயர்ந்த பொருளாக ரோமாபுரி மக்களால் மதிக்கப் பெற்றது தமிழகத்திலிருந்து சென்ற மிளகு. பொன்னை வைத்துக் கொண்டு ரோமநாட்டுப் பொருளைத் தான் வாங்க முடியும். தமிழகத்து மிளகை வாங்க வேண்டுமானால், தமிழகத்துக்குப் பல நாள்கள், பல மாதங்கள் எனக் கடல்வழிப் பயணம் மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால்' தமிழர்கள் தங்கள் பொருள்களை அங்குக் கொண்டு சென்று விற்பதில்லை. வேண்டுவோர் வந்துதான் வாங்கிச் செல்ல வேண்டும். உயர்ந்த பொருளைத் தேடிச் சென்று விற்கத் தேவையில்லை. தேவைப்படுவோர் நாடி வரவேண்டும் என்ற நிலையில் தமிழக வணிகம் தலை நிமிர்ந்திருந்ததே காரணமாகும்.
தமிழகத்திலிருந்து மேலை நாட்டிற்கு ஏற்றுமதியான தமிழகத்தின் மிளகு, அந்நாட்டின் அடிமைத் தளையை உடைத்திருக்கிறது என்பது தமிழகத்துக்கும், தமிழக மருத்துவத்துக்கும் கிடைத்த மகுடமாகும்.
கி.பி.410-இல் ரோமாபுரியை, விசிகாத்து என்ற மன்னன் படையெடுப்பின் மூலம் கைப்பற்றினான். அவன், ரோமாபுரி மக்களுக்குத் தண்டனையாகத் திறை விதித்தான். ரோமர்கள்' மூவாயிரம் பவுண்டு மிளகைத் திறையாகச் செலுத்த வேண்டும்; தவறினால், ரோமாபுரி அழிந்து போகும் என்று கர்ச்சித்தான்.
மன்னனின் கொடுங்கோன்மையைக் கண்டு அஞ்சிய ரோமாபுரி மக்கள், வேறு வழியின்றி அவனின் தண்டத்தை ஏற்றுக் கொண்டனர். மன்னனின் விருப்பப்படியே மூவாயிரம் பவுண்டு மிளகைச் செலுத்தி விட்டுத் தங்கள் நாட்டைத் திரும்பப் பெற்றனர்85 என்பது வரலாற்றின் நிகழ்வாக இருக்கக் காண்கிறோம்.
எந்த மன்னனாவது மிளகைத் திறையாகக் கேட்பானா? என்றால், பண்டைக் காலத்தில் பொன்தான் சிறந்த மதிப்பை உடையதாக இருந்தது. பொன்னிருந்தால் எதையும் வாங்கலாம் என்னும் நிலையிருந்த போதும், பொன்னை விடவும் உயர்ந்த பொருளாக ரோமாபுரி மக்களால் மதிக்கப் பெற்றது தமிழகத்திலிருந்து சென்ற மிளகு. பொன்னை வைத்துக் கொண்டு ரோமநாட்டுப் பொருளைத் தான் வாங்க முடியும். தமிழகத்து மிளகை வாங்க வேண்டுமானால், தமிழகத்துக்குப் பல நாள்கள், பல மாதங்கள் எனக் கடல்வழிப் பயணம் மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால்' தமிழர்கள் தங்கள் பொருள்களை அங்குக் கொண்டு சென்று விற்பதில்லை. வேண்டுவோர் வந்துதான் வாங்கிச் செல்ல வேண்டும். உயர்ந்த பொருளைத் தேடிச் சென்று விற்கத் தேவையில்லை. தேவைப்படுவோர் நாடி வரவேண்டும் என்ற நிலையில் தமிழக வணிகம் தலை நிமிர்ந்திருந்ததே காரணமாகும்.
தமிழ் மருத்துவக் கோட்பாடு
சங்ககாலத் தமிழ் மருத்துவக் கோட்பாட்டினைக் குறிப்பினால் உணர்த்துவதாகத் தொல்காப்பியம்' புறநானூறு, பரிபாடல் ஆகியவற்றில் காணப்பெறும் பஞ்ச பூதங்களைப் பற்றி வரும் குறிப்புகளைக் கூறலாம். இந்த உலகம் பஞ்சபூத மயமானதென்பதே சித்த மருத்துவக் கொள்கை. பஞ்சபூத மருத்துவக் கோட்பாட்டின் வளர்ச்சியாகவே இக்கால மருத்துவத்தினைக் கருதலாம்.
பஞ்ச பூதம்
இந்த உலகம் ஐம்பெரும் பூதங்கள் கலந்த மயக்கம். உலகத் தோற்றத்தின் மூலப்பொருளாக அமைவன ஐம்பெரும் பூதங்கள் எனப்படும். அவை நிலம், நீர், தீ' காற்று, ஆகாயம் என்னும் ஐந்து மாகும் என்பதை'
"" நிலம் தீ நீர் வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்''86
என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
‘உலகம் என்பது உலகினையும் உலகிலுள்ள பொருள்களையும் குறிக்கும். உலகமாவது, முத்தும் மணியும் கலந்தாற் போல நிலம்' தீ, நீர்' வளி, ஆகாயம் என விரவி நிற்கும். உலகினுள் பொருள் பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றானாற் போல வேற்றுமைப் படாது நிற்கும். அவ்விரண்டினையும் உலகம் உடையதாகலின் "கலந்த மயக்கம்' என்று இளம்பூரணர் உரை காண்கிறார்.
முத்தும் மணியும் கலந்தாற்போல, உலகமும் பொன்' வெள்ளி, செம்பு ஆகியவை உருக்கினாற் போல உலகிலுள்ள பொருள்களும் அமையும் என்று' புறத்தே உள்ள பூதங்களையும் அகத்தே உள்ள பூதங்களையும் வேறுபடுத்திக் காட்டினார் என்க.
“அணுச் செறிந்த நிலனும், அந்நிலத்தின் ஓங்கிய ஆகாயமும், அவ்வாகாயத்தைத் தடவி வரும் காற்றும்' அக்காற்றின் கண் தலைப்பட்ட தீயும், அத்தீயோடு மாறுபட்ட நீருமென ஐவகைப் பெரிய பூதத்தினது தன்மை போல" 87 என்று ஐம்பெரும் பூதத்தைப் பற்றிப் புறநானுõறு குறிப்பிடக் காணலாம்.
இந்த ஐம்பெரும் பூதங்கள் ஆதியாகக் கொண்டு, சுவை முதலான புலன்களும், அவற்றை நுகரும் பொறிகளும் உண்டாகின்றன என்று பரிபாடல் உரைக்கிறது.
"" சுவைமை யிசைமை தோற்ற நாற்ற மூ
றவையு நீயே யடு போ ரண்ணால்
அவையவை கொள்ளுங் கருவியு நீயே
முந்தியாங் கூறிய வைந்த னுள்ளும்
ஒன்றனிற் போற்றிய விசும்பும் நீயே
இரண்டி னுணரும் வளியு நீயே
மூன்றி னுணருந் தீயு நீயே
நான்கி னுணருந் நீரு நீயே
ஐந்துடன் முற்றிய நிலனு நீயே''88
ஒன்றுஓசை; இரண்டுஓசை, ஊறு; மூன்றுஓசை, ஊறு' ஒளி;நான்குஓசை' ஊறு, ஒளி' சுவை;ஐந்து ஓசை, ஊறு, ஒளி' சுவை, நாற்றம் என்னும் குணங்களால் பூதங்கள் உணரப்படுகின்றன.
நிலம்' தீ, வளி, விசும்பு' நீர். தொல்காப்பியம்
நிலம்' ஆகாயம்' தீ, நீர், காற்று. புறநானூறு
நிலம்' நீ,ர் வளி' விசும்பு, தீ. பரிபாடல்
என்று வரிசைப் படுத்துகின்றன
விசும்பு2; வளி3;தீ4; நீர்5;நிலம்6 பங்காக உடலினுள் பூதங்கள் கலந்திருக்கின்றன என்று மருத்துவ நூல்கள் கூறும். இந்தக் கலவை பரிபாடல் வரிசைப்படுத்திய முறையில் ஒத்திருப்பதைக் காணலாம்.
சங்ககாலத் தமிழ் மருத்துவக் கோட்பாட்டினைக் குறிப்பினால் உணர்த்துவதாகத் தொல்காப்பியம்' புறநானூறு, பரிபாடல் ஆகியவற்றில் காணப்பெறும் பஞ்ச பூதங்களைப் பற்றி வரும் குறிப்புகளைக் கூறலாம். இந்த உலகம் பஞ்சபூத மயமானதென்பதே சித்த மருத்துவக் கொள்கை. பஞ்சபூத மருத்துவக் கோட்பாட்டின் வளர்ச்சியாகவே இக்கால மருத்துவத்தினைக் கருதலாம்.
பஞ்ச பூதம்
இந்த உலகம் ஐம்பெரும் பூதங்கள் கலந்த மயக்கம். உலகத் தோற்றத்தின் மூலப்பொருளாக அமைவன ஐம்பெரும் பூதங்கள் எனப்படும். அவை நிலம், நீர், தீ' காற்று, ஆகாயம் என்னும் ஐந்து மாகும் என்பதை'
"" நிலம் தீ நீர் வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்''86
என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
‘உலகம் என்பது உலகினையும் உலகிலுள்ள பொருள்களையும் குறிக்கும். உலகமாவது, முத்தும் மணியும் கலந்தாற் போல நிலம்' தீ, நீர்' வளி, ஆகாயம் என விரவி நிற்கும். உலகினுள் பொருள் பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றானாற் போல வேற்றுமைப் படாது நிற்கும். அவ்விரண்டினையும் உலகம் உடையதாகலின் "கலந்த மயக்கம்' என்று இளம்பூரணர் உரை காண்கிறார்.
முத்தும் மணியும் கலந்தாற்போல, உலகமும் பொன்' வெள்ளி, செம்பு ஆகியவை உருக்கினாற் போல உலகிலுள்ள பொருள்களும் அமையும் என்று' புறத்தே உள்ள பூதங்களையும் அகத்தே உள்ள பூதங்களையும் வேறுபடுத்திக் காட்டினார் என்க.
“அணுச் செறிந்த நிலனும், அந்நிலத்தின் ஓங்கிய ஆகாயமும், அவ்வாகாயத்தைத் தடவி வரும் காற்றும்' அக்காற்றின் கண் தலைப்பட்ட தீயும், அத்தீயோடு மாறுபட்ட நீருமென ஐவகைப் பெரிய பூதத்தினது தன்மை போல" 87 என்று ஐம்பெரும் பூதத்தைப் பற்றிப் புறநானுõறு குறிப்பிடக் காணலாம்.
இந்த ஐம்பெரும் பூதங்கள் ஆதியாகக் கொண்டு, சுவை முதலான புலன்களும், அவற்றை நுகரும் பொறிகளும் உண்டாகின்றன என்று பரிபாடல் உரைக்கிறது.
"" சுவைமை யிசைமை தோற்ற நாற்ற மூ
றவையு நீயே யடு போ ரண்ணால்
அவையவை கொள்ளுங் கருவியு நீயே
முந்தியாங் கூறிய வைந்த னுள்ளும்
ஒன்றனிற் போற்றிய விசும்பும் நீயே
இரண்டி னுணரும் வளியு நீயே
மூன்றி னுணருந் தீயு நீயே
நான்கி னுணருந் நீரு நீயே
ஐந்துடன் முற்றிய நிலனு நீயே''88
ஒன்றுஓசை; இரண்டுஓசை, ஊறு; மூன்றுஓசை, ஊறு' ஒளி;நான்குஓசை' ஊறு, ஒளி' சுவை;ஐந்து ஓசை, ஊறு, ஒளி' சுவை, நாற்றம் என்னும் குணங்களால் பூதங்கள் உணரப்படுகின்றன.
நிலம்' தீ, வளி, விசும்பு' நீர். தொல்காப்பியம்
நிலம்' ஆகாயம்' தீ, நீர், காற்று. புறநானூறு
நிலம்' நீ,ர் வளி' விசும்பு, தீ. பரிபாடல்
என்று வரிசைப் படுத்துகின்றன
விசும்பு2; வளி3;தீ4; நீர்5;நிலம்6 பங்காக உடலினுள் பூதங்கள் கலந்திருக்கின்றன என்று மருத்துவ நூல்கள் கூறும். இந்தக் கலவை பரிபாடல் வரிசைப்படுத்திய முறையில் ஒத்திருப்பதைக் காணலாம்.
உயிரியற் கொள்கை
உலகில் உண்டாகும் உயிர்கள் ஆறுவகையான அறிதல் என்னும் செயலைச் செய்வதாகக் கண்டனர். அவை' ஒன்று முதல் ஆறுவகையான அறிதல் என்னும் செயலைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அறிதல் என்பது புலன்களின் தொழிலைக் குறிப்பதாகக் கொள்வர்.
“ஓரறிவாவது, உடம்பினால் உற்றுணர்தல்; ஈரறிவாவது, உற்றுணர்தல்' நாவினால் சுவையறிதல்; மூவறிவாவது, உற்றுணர்தல்' சுவையறிதல், மூக்கினால் முகர்ந்தறிதல்; நாலறிவாவது, உற்றுணர்தல்' சுவையறிதல், முகர்ந்தறிதல்' கண்ணினால் கண்டறிதல்; ஐயறிவாவது, உற்றுணர்தல்' சுவையறிதல், முகர்ந்தறிதல், கண்டறிதல், செவியினால் கேட்டறிதல்;ஆறறிவாவது, ஐம்பொறிகளால் அறியும் ஐம்புல வுணர்வுகளோடு மனத்தினால் சிந்தித்தறிதலும் ஆகிய ஆறறிவினை யுடைய உயிர்களாக முறைப்படுத்தி யுள்ளனர்',89 என்று தொல் காப்பியம் குறிப்பிடுகிறது.
ஐம்புலன்
புலன்கள் ஐந்து என்று திருக்குறளும் கூறக் காண்கிறோம்.
"" கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்''90
காண்டல்' கேட்டல், உண்ணல்' மோந்தல், தீண்டல் என்னும் தொழிலையுடைய கண், காது, வாய், மூக்கு' மெய் ஆகிய பொறிகளையும் குறிப்பிடக் காணலாம். எனவே பஞ்சபூதம்' புலன், பொறி' ஆறறி உயிர் ஆகிய, உயிர் தொடர்பான கொள்கைகளைப் பண்டைய காலத் தமிழர்கள் அறிந்திருந்தனர் எனல் பொருந்தும்.
உலகில் உண்டாகும் உயிர்கள் ஆறுவகையான அறிதல் என்னும் செயலைச் செய்வதாகக் கண்டனர். அவை' ஒன்று முதல் ஆறுவகையான அறிதல் என்னும் செயலைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அறிதல் என்பது புலன்களின் தொழிலைக் குறிப்பதாகக் கொள்வர்.
“ஓரறிவாவது, உடம்பினால் உற்றுணர்தல்; ஈரறிவாவது, உற்றுணர்தல்' நாவினால் சுவையறிதல்; மூவறிவாவது, உற்றுணர்தல்' சுவையறிதல், மூக்கினால் முகர்ந்தறிதல்; நாலறிவாவது, உற்றுணர்தல்' சுவையறிதல், முகர்ந்தறிதல்' கண்ணினால் கண்டறிதல்; ஐயறிவாவது, உற்றுணர்தல்' சுவையறிதல், முகர்ந்தறிதல், கண்டறிதல், செவியினால் கேட்டறிதல்;ஆறறிவாவது, ஐம்பொறிகளால் அறியும் ஐம்புல வுணர்வுகளோடு மனத்தினால் சிந்தித்தறிதலும் ஆகிய ஆறறிவினை யுடைய உயிர்களாக முறைப்படுத்தி யுள்ளனர்',89 என்று தொல் காப்பியம் குறிப்பிடுகிறது.
ஐம்புலன்
புலன்கள் ஐந்து என்று திருக்குறளும் கூறக் காண்கிறோம்.
"" கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்''90
காண்டல்' கேட்டல், உண்ணல்' மோந்தல், தீண்டல் என்னும் தொழிலையுடைய கண், காது, வாய், மூக்கு' மெய் ஆகிய பொறிகளையும் குறிப்பிடக் காணலாம். எனவே பஞ்சபூதம்' புலன், பொறி' ஆறறி உயிர் ஆகிய, உயிர் தொடர்பான கொள்கைகளைப் பண்டைய காலத் தமிழர்கள் அறிந்திருந்தனர் எனல் பொருந்தும்.
பஞ்ச பூதங்களின் பரிணாமம்
பூதங்கள் உடலுக்கு முதலாய் உள்ளன. ஒவ்வொரு பூதமும் பலவாகிய பரிணாமங்களைக் கொண்டு உடலை இயக்குவன.
"" மண்ணுட னீர்நெருப்புக் கால்வான மென்றிவைதாம்
எண்ணிய பூதங்க ளென்றறிந்துநண்ணிய
மன்னர்க்கு மண்கொடுத்து மாற்றார்க்கு விண்கொடுத்த
தென்னவர்கோ மானே தெளி''91
என்று' இசை நுணுக்கம் என்னும் மறைந்த தமிழ்நூலின் பாடல் தெரிவிக்கிறது.
"" செப்பிய பூதங்கள் சேர்ந்ததோர் குறியன்றே
அப்பரிசு மண்ணைந்து நீர்நாலாம்ஒப்பரிய
தீயாகின் மூன்றிரண்டு காற்றாம் பரமொன்று
வேயாருந் தோளி விளம்பு''92
என்று' பூதங்கள் ஒவ்வொன்றும் எந்தெந்த அளவு கலந்து மயங்குகின்றன என்று விளக்குகிறது.
இவ்வாறு இவை ஒன்றோடொன்று கூடுவன வல்லவாகவும், இவற்றின் கூட்டம் உடம்பென்றீராதலால்' இவ்வைந்தின் கூட்டம் உடம்பாவது எவ்வாறு என்றால்'
"" மெய்வாய் கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாயு மாயவற்றின் மீதடுத்துத் துய்ய
சுவையொளி யூறோசை நாற்றமென்றைந்தால்
அவைமுதற் புற்கல மாம்''93
பூதங்கள் ஒன்றனோடு ஒன்று கூடுவனவல்ல என்றாலும் இவற்றின் கூட்டம் இல்லாமல் உடம்பு என்று ஒன்று இல்லை என்றாலும்' அவை எவ்வாறு உடம்பில் கூடுகின்றன வென்றால் பூதங்கள் முறையே மெய்' வாய், கண்' மூக்குச் செவி எனவும் சுவை, ஒளி, ஊறு' ஓசை, நாற்றம் எனவும் கலந்து உடம்பிற்கு முதலாய் நிற்பனவாம். (புற்கலம் உடம்பு)
பூதங்கள் ஐந்தும் தத்தம் தன்மை நீங்கி, மண் உடம்பாகவும்' நீர் வாயாகவும், தீ கண்ணாகவும்' காற்று மூக்காகவும், ஆகாயம் செவியாகவும் நின்று உடம்பாயின.
பூதங்கள் உடலுக்கு முதலாய் உள்ளன. ஒவ்வொரு பூதமும் பலவாகிய பரிணாமங்களைக் கொண்டு உடலை இயக்குவன.
"" மண்ணுட னீர்நெருப்புக் கால்வான மென்றிவைதாம்
எண்ணிய பூதங்க ளென்றறிந்துநண்ணிய
மன்னர்க்கு மண்கொடுத்து மாற்றார்க்கு விண்கொடுத்த
தென்னவர்கோ மானே தெளி''91
என்று' இசை நுணுக்கம் என்னும் மறைந்த தமிழ்நூலின் பாடல் தெரிவிக்கிறது.
"" செப்பிய பூதங்கள் சேர்ந்ததோர் குறியன்றே
அப்பரிசு மண்ணைந்து நீர்நாலாம்ஒப்பரிய
தீயாகின் மூன்றிரண்டு காற்றாம் பரமொன்று
வேயாருந் தோளி விளம்பு''92
என்று' பூதங்கள் ஒவ்வொன்றும் எந்தெந்த அளவு கலந்து மயங்குகின்றன என்று விளக்குகிறது.
இவ்வாறு இவை ஒன்றோடொன்று கூடுவன வல்லவாகவும், இவற்றின் கூட்டம் உடம்பென்றீராதலால்' இவ்வைந்தின் கூட்டம் உடம்பாவது எவ்வாறு என்றால்'
"" மெய்வாய் கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாயு மாயவற்றின் மீதடுத்துத் துய்ய
சுவையொளி யூறோசை நாற்றமென்றைந்தால்
அவைமுதற் புற்கல மாம்''93
பூதங்கள் ஒன்றனோடு ஒன்று கூடுவனவல்ல என்றாலும் இவற்றின் கூட்டம் இல்லாமல் உடம்பு என்று ஒன்று இல்லை என்றாலும்' அவை எவ்வாறு உடம்பில் கூடுகின்றன வென்றால் பூதங்கள் முறையே மெய்' வாய், கண்' மூக்குச் செவி எனவும் சுவை, ஒளி, ஊறு' ஓசை, நாற்றம் எனவும் கலந்து உடம்பிற்கு முதலாய் நிற்பனவாம். (புற்கலம் உடம்பு)
பூதங்கள் ஐந்தும் தத்தம் தன்மை நீங்கி, மண் உடம்பாகவும்' நீர் வாயாகவும், தீ கண்ணாகவும்' காற்று மூக்காகவும், ஆகாயம் செவியாகவும் நின்று உடம்பாயின.
மண்ணின் பகுதி
நரம்பு' இறைச்சி, என்பு' மயிர், தோல் என்னும் ஐந்தும் மண்ணின் பகுதி.
நீரின் பகுதி
நீர்' முளை, சுக்கிலம்' நிணம், உதிரமெனும் ஐந்தும் நீரின் பகுதி.
தீயின் பகுதி
பசி' சோம்பல், மைதுனம்' காட்சி, நீர்வேட்கை என்னும் ஐந்தும் தீயின் பகுதி
காற்றின் பகுதி
போக்கு' வரவு, நோய்' கும்பித்தல், மெய்ப்பரிசம் என்னும் ஐந்தும் காற்றின் பகுதி.
ஆகாயத்தின் பகுதி
வெகுளி' மதம், மானம்' ஆங்காரம், உலோபம் என்னும் ஐந்தும் ஆகாயத்தின் பகுதி.
வாயு
உடம்பில் ஓடுகின்ற உதிரத்தைப் போல, வாயுக்களும் உடம்பில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவ்வாயுக்கள் பத்து என்பர். அவை; பிராணன், அபானன்' உதானன், வியானன்' சமானன், நாகன்' கூர்மன், கிருகரன்' தேவதத்தன், தனஞ்சயன் என்பனவாம்.
நாடி
வாயுக்களைப் போல நாடிகள் 72000 ஆகும். அவற்றுள் முதன்மையான நாடிகள் பத்து என்று குறிப்பிடுவர். அவை இடை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி' அத்தி, சிங்குவை' சங்கினி, பூடா' குகு, கன்னி' அலம்புடை என்பன போன்று, பஞ்சபூதங்களின் பரிமாணங்கள் குறிப்பிடப்படுகின்றன.
நரம்பு' இறைச்சி, என்பு' மயிர், தோல் என்னும் ஐந்தும் மண்ணின் பகுதி.
நீரின் பகுதி
நீர்' முளை, சுக்கிலம்' நிணம், உதிரமெனும் ஐந்தும் நீரின் பகுதி.
தீயின் பகுதி
பசி' சோம்பல், மைதுனம்' காட்சி, நீர்வேட்கை என்னும் ஐந்தும் தீயின் பகுதி
காற்றின் பகுதி
போக்கு' வரவு, நோய்' கும்பித்தல், மெய்ப்பரிசம் என்னும் ஐந்தும் காற்றின் பகுதி.
ஆகாயத்தின் பகுதி
வெகுளி' மதம், மானம்' ஆங்காரம், உலோபம் என்னும் ஐந்தும் ஆகாயத்தின் பகுதி.
வாயு
உடம்பில் ஓடுகின்ற உதிரத்தைப் போல, வாயுக்களும் உடம்பில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவ்வாயுக்கள் பத்து என்பர். அவை; பிராணன், அபானன்' உதானன், வியானன்' சமானன், நாகன்' கூர்மன், கிருகரன்' தேவதத்தன், தனஞ்சயன் என்பனவாம்.
நாடி
வாயுக்களைப் போல நாடிகள் 72000 ஆகும். அவற்றுள் முதன்மையான நாடிகள் பத்து என்று குறிப்பிடுவர். அவை இடை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி' அத்தி, சிங்குவை' சங்கினி, பூடா' குகு, கன்னி' அலம்புடை என்பன போன்று, பஞ்சபூதங்களின் பரிமாணங்கள் குறிப்பிடப்படுகின்றன.
பூதப் பரிமாணத்தின் தொகை
பூதங்கள் பரிமாணங்களாக விரிந்து எவ்வகையாக அமைகின்றன என்பதைத் தொகுத்துக் கூறுகின்ற பாடல்.
"" பூத வகைகளோ ரைந்தாய்ப் பொறியைந்தாய்
வாதனையோ ரையைந்தாய் மாருதமும்மேதகுசீர்ப்
பத்தாகு நாடிகளும் பத்தாகும் பாரிடத்தே
முத்திக்கு வித்தா முடம்பு''94
பூதங்கள்5; பொறி5;புலன்5; வாதனை25; வாயு10; நாடி10 ஆக 60 கூறப்பட்டுள்ளன.
உடம்பின் உயரம்
உடம்பின் உயரம் அவரவர் கைவிரல் அளவு (விரலில் உள்ள ஒரு கணு அளவுஓர் அங்குலம் எனப்படும்) தொண்ணூ<ற்றாறு அங்குலம். இதனுள் மேலே நாற்பத் தேழரை அங்குலமும்' கீழே நாற்பத்தேழரை அங்குலமும் விட்டு, நடுநின்ற ஓரங்குலம் மூலாதாரம் அமைந் திருப்பதாகக் கூறுவர்.
"" துய்ய வுடம்பளவு தொண்ணூ<ற்றா றங்குலியா
மெய்யெழுத்து நின்றியங்கு மெல்லத்தான்வையத்
திருபாலு நாற்பதோ டேழ்பாதி நீக்கிக்
கருவாகு மாதாரங் காண்''95
மூலாதாரத்தில் எழுகின்ற நாடி எழுபத்தீராயிரமாகும். அவை இடை, பிங்கலை, சுழுனை என்னும் நாடிகளாய் நடுவு நின்ற சுழுமுனை நீங்க பிற இரண்டும் மேல்நோக்கி யேறி இரண்டு மூக்கின் வழியே இயங்குகின்றன. இது, ஒரு முறை சுவாசிக்கும் வாயு பன்னிரண்டு அங்குல அளவு புறப்பட்டு நாலங்குலம் தேய்ந்து எட்டு அங்குலம் வாயு என்று கொள்க என்பர்.
பூதங்கள் பரிமாணங்களாக விரிந்து எவ்வகையாக அமைகின்றன என்பதைத் தொகுத்துக் கூறுகின்ற பாடல்.
"" பூத வகைகளோ ரைந்தாய்ப் பொறியைந்தாய்
வாதனையோ ரையைந்தாய் மாருதமும்மேதகுசீர்ப்
பத்தாகு நாடிகளும் பத்தாகும் பாரிடத்தே
முத்திக்கு வித்தா முடம்பு''94
பூதங்கள்5; பொறி5;புலன்5; வாதனை25; வாயு10; நாடி10 ஆக 60 கூறப்பட்டுள்ளன.
உடம்பின் உயரம்
உடம்பின் உயரம் அவரவர் கைவிரல் அளவு (விரலில் உள்ள ஒரு கணு அளவுஓர் அங்குலம் எனப்படும்) தொண்ணூ<ற்றாறு அங்குலம். இதனுள் மேலே நாற்பத் தேழரை அங்குலமும்' கீழே நாற்பத்தேழரை அங்குலமும் விட்டு, நடுநின்ற ஓரங்குலம் மூலாதாரம் அமைந் திருப்பதாகக் கூறுவர்.
"" துய்ய வுடம்பளவு தொண்ணூ<ற்றா றங்குலியா
மெய்யெழுத்து நின்றியங்கு மெல்லத்தான்வையத்
திருபாலு நாற்பதோ டேழ்பாதி நீக்கிக்
கருவாகு மாதாரங் காண்''95
மூலாதாரத்தில் எழுகின்ற நாடி எழுபத்தீராயிரமாகும். அவை இடை, பிங்கலை, சுழுனை என்னும் நாடிகளாய் நடுவு நின்ற சுழுமுனை நீங்க பிற இரண்டும் மேல்நோக்கி யேறி இரண்டு மூக்கின் வழியே இயங்குகின்றன. இது, ஒரு முறை சுவாசிக்கும் வாயு பன்னிரண்டு அங்குல அளவு புறப்பட்டு நாலங்குலம் தேய்ந்து எட்டு அங்குலம் வாயு என்று கொள்க என்பர்.
ஆறாதாரம்
நாடிகள் உதிக்கின்ற மூலமாக விளங்குகின்ற மூலாதாரம் தொடங்கி சுவாதிட்டாணம்' மணிபூரகம், அநாகதம்' விசுத்தி, ஆக்கினை என்னும் ஆறாகும்.
சுவைகள்
சுவை என்பது உண்ணப்படும் பொருளில் மட்டுமே உள்ள தன்று. உலகப் பொருள் அனைத்திற்கும் இச்சுவைகள் பொருந்தும். சுவையும் உடல் நலத்தைத் தருவதும்' கெடுப்பதுமாக இருப்பதனால் அவை ஈண்டு கூறப்படுகிறது.
சுவைகளாவன' துவர்ப்பு, புளிப்பு' கார்ப்பு, கைப்பு' உவர்ப்பு, இனிப்பு' எனும் ஆறாகும். இவை முறையே பயம், நோய், பசிநீடல்' கேடு, கலக்கம்' அளி என்னும் ஆறு பயனைத் தருவதாக அமையு மென்பர்.
"" உவர்ப்பின் கலக்கமாம் கைப்பின் வருங்கேடு
துவர்ப்பின் பயமாம் சுவைகள்அவற்றில்
புளிநோய் பசிகார்ப்புப் பூங்கொடியே தித்திப்பு
அளிபெருகு மாவ தரங்கு''96
சுக்கிலம்' சுரோணிதம்
பஞ்ச பூதங்களால் ஆன உடம்பு ஆண், பெண் ஆகிய இருபாலர் இணைப்பினால் கருவாகி அமையும் உயிர்க்குக் கருவாக அமைவது சுக்கிலம்' சுரோணிதம் என்பர்.
இருவினை
பஞ்சபூத உடம்பானது இரண்டு வினையாகிய நல்வினை' தீவினை ஆகிய இரண்டனைத் தன்னகத்தே கொண்டு உயிர்க்கின்றது என்றும்' பஞ்சபூதங்கள் உடம்பின் பகுதிகளாக அமைந்து செயல் படுகிறன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கருத்துகள் பிற்கால மருத்துவ நூல்களிலும் காணமுடிகிறது. என்றாலும், இத்தகைய கோட்பாட்டினை உருவாக்கியவர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ‘அறிவர்' என்னும் முழுதுணர்ந்த மெய்யறிவாளர்கள் எனலாம்.
இலக்கியம் காட்டும் அறிவர்
பண்டைக்காலத்தில் ஆழ்ந்த அறிவினை உடையவர்களை ‘அறிவர்' என்னுஞ் சொல்லால் குறித்தனர். இவர்கள்' இறப்பு, நிகழ்வு' எதிர்வு என்னும் முக்காலமும் உணர்ந்த பெரியோர் என்பர்.
“ மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியி லாற்றிய அறிவன் தேயமும்''97
எனவரும் தொல்காப்பிய நூற்பா, ‘நெறியில் ஆற்றிய' அறிவனைக் குறிப்பிடும் உரையில் இளம் பூரணர், ‘அது முழுதுணர்ந்தோர்க் கல்லது புலப்படாமையின் அது பொருளன்றென்க.,98
“மூவகைக் காலத்தினும் வழங்கும் நெறியான் அமைந்த முழுதுணர் வுடையோன்" என நச்சினார்க்கினியரும் கூறுவர். இதனால் அறிஞர் எனப்படுவோர் யோகம் எனும் மெய்வுணர் வுடையோர் எனலாம். இவ்மெய்யுணர் வுடையோர் ஊணசைவின்மை' நீர் நசை யின்மை, வெப்பம் பொறுத்தல், தட்பம் பொறுத்தல், இடம் வரை யறுத்தல், ஆசனம் வரையறுத்தல், இடையிட்டு மொழிதல், வாய் வாளாமை என எட்டும் கொண்டிருப்பர்.99
இவர்கள்' தாமரை, ஆம்பல்' யாமை என்னும் இருக்கைகளில் இருப்பர்.
நாடிகள் உதிக்கின்ற மூலமாக விளங்குகின்ற மூலாதாரம் தொடங்கி சுவாதிட்டாணம்' மணிபூரகம், அநாகதம்' விசுத்தி, ஆக்கினை என்னும் ஆறாகும்.
சுவைகள்
சுவை என்பது உண்ணப்படும் பொருளில் மட்டுமே உள்ள தன்று. உலகப் பொருள் அனைத்திற்கும் இச்சுவைகள் பொருந்தும். சுவையும் உடல் நலத்தைத் தருவதும்' கெடுப்பதுமாக இருப்பதனால் அவை ஈண்டு கூறப்படுகிறது.
சுவைகளாவன' துவர்ப்பு, புளிப்பு' கார்ப்பு, கைப்பு' உவர்ப்பு, இனிப்பு' எனும் ஆறாகும். இவை முறையே பயம், நோய், பசிநீடல்' கேடு, கலக்கம்' அளி என்னும் ஆறு பயனைத் தருவதாக அமையு மென்பர்.
"" உவர்ப்பின் கலக்கமாம் கைப்பின் வருங்கேடு
துவர்ப்பின் பயமாம் சுவைகள்அவற்றில்
புளிநோய் பசிகார்ப்புப் பூங்கொடியே தித்திப்பு
அளிபெருகு மாவ தரங்கு''96
சுக்கிலம்' சுரோணிதம்
பஞ்ச பூதங்களால் ஆன உடம்பு ஆண், பெண் ஆகிய இருபாலர் இணைப்பினால் கருவாகி அமையும் உயிர்க்குக் கருவாக அமைவது சுக்கிலம்' சுரோணிதம் என்பர்.
இருவினை
பஞ்சபூத உடம்பானது இரண்டு வினையாகிய நல்வினை' தீவினை ஆகிய இரண்டனைத் தன்னகத்தே கொண்டு உயிர்க்கின்றது என்றும்' பஞ்சபூதங்கள் உடம்பின் பகுதிகளாக அமைந்து செயல் படுகிறன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கருத்துகள் பிற்கால மருத்துவ நூல்களிலும் காணமுடிகிறது. என்றாலும், இத்தகைய கோட்பாட்டினை உருவாக்கியவர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ‘அறிவர்' என்னும் முழுதுணர்ந்த மெய்யறிவாளர்கள் எனலாம்.
இலக்கியம் காட்டும் அறிவர்
பண்டைக்காலத்தில் ஆழ்ந்த அறிவினை உடையவர்களை ‘அறிவர்' என்னுஞ் சொல்லால் குறித்தனர். இவர்கள்' இறப்பு, நிகழ்வு' எதிர்வு என்னும் முக்காலமும் உணர்ந்த பெரியோர் என்பர்.
“ மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியி லாற்றிய அறிவன் தேயமும்''97
எனவரும் தொல்காப்பிய நூற்பா, ‘நெறியில் ஆற்றிய' அறிவனைக் குறிப்பிடும் உரையில் இளம் பூரணர், ‘அது முழுதுணர்ந்தோர்க் கல்லது புலப்படாமையின் அது பொருளன்றென்க.,98
“மூவகைக் காலத்தினும் வழங்கும் நெறியான் அமைந்த முழுதுணர் வுடையோன்" என நச்சினார்க்கினியரும் கூறுவர். இதனால் அறிஞர் எனப்படுவோர் யோகம் எனும் மெய்வுணர் வுடையோர் எனலாம். இவ்மெய்யுணர் வுடையோர் ஊணசைவின்மை' நீர் நசை யின்மை, வெப்பம் பொறுத்தல், தட்பம் பொறுத்தல், இடம் வரை யறுத்தல், ஆசனம் வரையறுத்தல், இடையிட்டு மொழிதல், வாய் வாளாமை என எட்டும் கொண்டிருப்பர்.99
இவர்கள்' தாமரை, ஆம்பல்' யாமை என்னும் இருக்கைகளில் இருப்பர்.
மெய்யுணர்வோர் நிலை
யோகஞ் செய்வோர் இமயம், நியமம், ஆசனம், வளிநிலை' தொகைநிலை, பொறைநிலை' நினைதல், சமாதி என்னும் எட்டு நிலைகளைச் செவ்விதின் உணர்ந்தவராவர்.
“ நொசிப்பி னேழுறு முனிவர் நனியுணர்ந்து''100
என மனத்தினை ஒன்றாக்கி நுண்ணியதாகக் காண்டற்குரிய ‘நொசிப்பு' என்னும் ‘சமாதி' நிலை கைவரப் பெற்றவராயிருப்பர்.
மனத்தைச் சுத்தி செய்யும் கருவி
அறிவர்கள் தங்கள் மனத்தைச் சுத்தி செய்து தூய்மை மனத்தினராகி, ‘மனத்துக்கண் மாசிலனாதல்' என்னும் வாக்கின் வழி ஒழுகுவர் என்பதைப் பரிபாடல்101 குறிப்பிடுவதைப் போல, செவி முதலாகிய இந்திரியம் ஐந்தையும் மயக்கமற நீக்கி மைத்திரி' கருணை, முதிதை' இகழ்ச்சி யென்னும் நான்கினாலும் மனத்தை மாசறுத்துத் தம்மைச் சமாதியாகிய ஒரு நெறிக் கண்ணே படுத்துபவர் (இவற்றை வட நூலார் சித்த பரிகாரம் என்பர்.)
அறிவுக்கண்
மனத்தினால்' புலன் உணர்வுகளை அறிந்து, முக்காலத்தையும் உணர்ந்த அறிவர்களை' நுதல்விழி நாட்டத்து இறையோன்102 எனச் சிலம்பு குறிப்பிடும். இம்மூன்றாவது கண்ணைப் பெற்றவர்களை அறிவுக் கண் கொண்ட அறிவர் என முன்னோர் உரைத்தனர். இவர் களையே' நயனங்கள் மூன்றுடை நந்தி103 எனத் திருமூலர் குறிப்பிடு வார். இவ்வகையான மெய்யொழுக்கத்தின் பயனாய் விளைந்த அறிவுடையோர் செயலைக் கூறும் திருக்குறள் அதிகாரங்கள்' நீத்தார் பெருமை, துறவு, மெய்யுணர்தல்' அவா அறுத்தல் ஆகியன.
"" உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்''104
"" ஐந்தவித்தான் ஆற்றல்''105
"" சுவையொளி ஊறோசை நாற்றமென்று ஐந்தின்''106
"" அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும்''107
"" அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை''108
"" இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு''109
"" கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி''110
"" காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்''111
"" வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை''112
"" தூஉய்மை என்பது அவா இன்மை''113
என்னும் குறட்பாக்கள் குறிப்பானவை. மேற்கண்ட பாக்களின் சுருக்க மான கருத்தாவது'
உறுதியான மனத்தினால் ஐந்து புலன் உணர்வுகளை அடக்குதல். ஐந்தின் அடக்கத்தில் உண்டாகும் ஆற்றலை விளக்க இந்திரனே சாட்சி என்பது. பொறிகளின் வகைகளை அறிந்தவனுக்கே உலகம் எனல். வீடு பேறு வேண்டுமென்றால் ஐந்தின் உணர்வுகளை விடுதல். மனத் தினுள்ள இருள் நீங்கினால் இன்பமுண்டாகும் என்றல். காமம், வெகுளி' மயக்கம் ஆகிய கேட்டினை நீக்குதல். அவா இல்லாத தூய்மை நிலையை அடைதல். மெய்ப்பொருளை அடையும் வழியறிந்து அதன் வழியொழுகுதல்' மீண்டும் பிறக்காத நிலையடைதல். வேண்டும் போது பிறப்பதும்' வேண்டாத போது விடுப்பதும் செய்தல். இந்த மெய்வுணர்வினால் ஆற்றல் தலைப்பெற்றவர்களை ‘அந்தணர்' என்னும் சிறப்பு அடையால் போற்றுதல்.
அந்தணர் நெறியில் - முத்தீ
மெய்யுணர்வினைத் தொழிலாக உடைய அந்தணர்கள் முக்கண்ணை அடையப் பெறுவர் என முன்னர் தெரிவிக்கப் பட்டது. அந்த முக்கண்ணை, முத்தீ யென' யோக நெறிக்கு உரியதாக்கி உரைப்பர். இதனை'
"" அந்தி அந்தணர் அருங்கடன் நிறுக்கும்
முத்தீ விளக்கிற் துஞ்சும்""114
என்று புறநானூறு குறிப்பிடுகிறது. இதனையே, சிலம்பும்
"" ஒன்றுபுரி கொள்கை யிருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து''115
என்று' கூறக் காணலாம். அந்திக் காலத்தே அந்தணர் செய்தற்கரிய செயலைச் செய்யும் போது முத்தீ விளக்கில் துஞ்சும். ‘பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே' என்றது, யோக நிலையை அடைபவர்கள் மூலதாரத்திலிருந்து எழுப்பப் பெற்ற தீயையும் இரண்டு கண்ணையும் தீயாகக் கருதி ஞாயிறு திங்கள் எனக் குறித்தனர். இத்தீ ஒளியில் நுதலில் சுழிமுனைக்குள் தோன்றும் காட்சி வெள்ளை நிறமாகவும் பொன்னிறமாகவும் தோன்றும் எனவும்' அவை, வெள்ளியம்பலம் எனவும் பொன்னம்பலம் எனவும் குறிக்கப் பெறும்.
"" ஒன்றுபுரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
முத்தீப் புரைய''116
என்றால்' ஒரு செயலைச் (யோகநெறி) செய்த மனத்தை அடக்கிய இருபிறப்பாளர்' முன்னர் தோன்றிய நிலையிலிருந்து யோக நெறியில் வெற்றி பெற்றபின் அடைந்த நிலை, ஆகிய இரண்டு பிறப்பினை யுடையவர்களிடம் முத்தீப் புரைய மூவகைத் தீயும் நிலைபெற்றிருக்கும் எனலாம்.
யோகஞ் செய்வோர் இமயம், நியமம், ஆசனம், வளிநிலை' தொகைநிலை, பொறைநிலை' நினைதல், சமாதி என்னும் எட்டு நிலைகளைச் செவ்விதின் உணர்ந்தவராவர்.
“ நொசிப்பி னேழுறு முனிவர் நனியுணர்ந்து''100
என மனத்தினை ஒன்றாக்கி நுண்ணியதாகக் காண்டற்குரிய ‘நொசிப்பு' என்னும் ‘சமாதி' நிலை கைவரப் பெற்றவராயிருப்பர்.
மனத்தைச் சுத்தி செய்யும் கருவி
அறிவர்கள் தங்கள் மனத்தைச் சுத்தி செய்து தூய்மை மனத்தினராகி, ‘மனத்துக்கண் மாசிலனாதல்' என்னும் வாக்கின் வழி ஒழுகுவர் என்பதைப் பரிபாடல்101 குறிப்பிடுவதைப் போல, செவி முதலாகிய இந்திரியம் ஐந்தையும் மயக்கமற நீக்கி மைத்திரி' கருணை, முதிதை' இகழ்ச்சி யென்னும் நான்கினாலும் மனத்தை மாசறுத்துத் தம்மைச் சமாதியாகிய ஒரு நெறிக் கண்ணே படுத்துபவர் (இவற்றை வட நூலார் சித்த பரிகாரம் என்பர்.)
அறிவுக்கண்
மனத்தினால்' புலன் உணர்வுகளை அறிந்து, முக்காலத்தையும் உணர்ந்த அறிவர்களை' நுதல்விழி நாட்டத்து இறையோன்102 எனச் சிலம்பு குறிப்பிடும். இம்மூன்றாவது கண்ணைப் பெற்றவர்களை அறிவுக் கண் கொண்ட அறிவர் என முன்னோர் உரைத்தனர். இவர் களையே' நயனங்கள் மூன்றுடை நந்தி103 எனத் திருமூலர் குறிப்பிடு வார். இவ்வகையான மெய்யொழுக்கத்தின் பயனாய் விளைந்த அறிவுடையோர் செயலைக் கூறும் திருக்குறள் அதிகாரங்கள்' நீத்தார் பெருமை, துறவு, மெய்யுணர்தல்' அவா அறுத்தல் ஆகியன.
"" உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்''104
"" ஐந்தவித்தான் ஆற்றல்''105
"" சுவையொளி ஊறோசை நாற்றமென்று ஐந்தின்''106
"" அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும்''107
"" அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை''108
"" இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு''109
"" கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி''110
"" காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்''111
"" வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை''112
"" தூஉய்மை என்பது அவா இன்மை''113
என்னும் குறட்பாக்கள் குறிப்பானவை. மேற்கண்ட பாக்களின் சுருக்க மான கருத்தாவது'
உறுதியான மனத்தினால் ஐந்து புலன் உணர்வுகளை அடக்குதல். ஐந்தின் அடக்கத்தில் உண்டாகும் ஆற்றலை விளக்க இந்திரனே சாட்சி என்பது. பொறிகளின் வகைகளை அறிந்தவனுக்கே உலகம் எனல். வீடு பேறு வேண்டுமென்றால் ஐந்தின் உணர்வுகளை விடுதல். மனத் தினுள்ள இருள் நீங்கினால் இன்பமுண்டாகும் என்றல். காமம், வெகுளி' மயக்கம் ஆகிய கேட்டினை நீக்குதல். அவா இல்லாத தூய்மை நிலையை அடைதல். மெய்ப்பொருளை அடையும் வழியறிந்து அதன் வழியொழுகுதல்' மீண்டும் பிறக்காத நிலையடைதல். வேண்டும் போது பிறப்பதும்' வேண்டாத போது விடுப்பதும் செய்தல். இந்த மெய்வுணர்வினால் ஆற்றல் தலைப்பெற்றவர்களை ‘அந்தணர்' என்னும் சிறப்பு அடையால் போற்றுதல்.
அந்தணர் நெறியில் - முத்தீ
மெய்யுணர்வினைத் தொழிலாக உடைய அந்தணர்கள் முக்கண்ணை அடையப் பெறுவர் என முன்னர் தெரிவிக்கப் பட்டது. அந்த முக்கண்ணை, முத்தீ யென' யோக நெறிக்கு உரியதாக்கி உரைப்பர். இதனை'
"" அந்தி அந்தணர் அருங்கடன் நிறுக்கும்
முத்தீ விளக்கிற் துஞ்சும்""114
என்று புறநானூறு குறிப்பிடுகிறது. இதனையே, சிலம்பும்
"" ஒன்றுபுரி கொள்கை யிருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து''115
என்று' கூறக் காணலாம். அந்திக் காலத்தே அந்தணர் செய்தற்கரிய செயலைச் செய்யும் போது முத்தீ விளக்கில் துஞ்சும். ‘பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே' என்றது, யோக நிலையை அடைபவர்கள் மூலதாரத்திலிருந்து எழுப்பப் பெற்ற தீயையும் இரண்டு கண்ணையும் தீயாகக் கருதி ஞாயிறு திங்கள் எனக் குறித்தனர். இத்தீ ஒளியில் நுதலில் சுழிமுனைக்குள் தோன்றும் காட்சி வெள்ளை நிறமாகவும் பொன்னிறமாகவும் தோன்றும் எனவும்' அவை, வெள்ளியம்பலம் எனவும் பொன்னம்பலம் எனவும் குறிக்கப் பெறும்.
"" ஒன்றுபுரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
முத்தீப் புரைய''116
என்றால்' ஒரு செயலைச் (யோகநெறி) செய்த மனத்தை அடக்கிய இருபிறப்பாளர்' முன்னர் தோன்றிய நிலையிலிருந்து யோக நெறியில் வெற்றி பெற்றபின் அடைந்த நிலை, ஆகிய இரண்டு பிறப்பினை யுடையவர்களிடம் முத்தீப் புரைய மூவகைத் தீயும் நிலைபெற்றிருக்கும் எனலாம்.
அறுதொழில் அந்தணர்
மெய்யொழுக்கங்களை மேற்கொள்ளும் அந்தணர் என்னும் மெய்யுணர்வு அறிஞர் யோக நெறியில் செயலாற்றும் போது' நினைவை மூலாதாரத்தில் செலுத்தி மூலக்கனலை எழுப்பி' சுவாதிட் டானம், மணிபூரம்' அநாகதம், விசுத்தி' ஆக்கினை என்னும் ஆறு நிலையங்களிலும் யோகம் என்னும் தொழிலைப் புரிபவரே அந்தணர் எனப்படுவதனால் ‘அறு தொழில் அந்தணர்,117 எனல் பொருந்தும் எனலாம்.
தமிழ் மறையோர்
‘மறை' என்பது தமிழுக்கு உரியதாகச் சிலப்பதிகாரம் உரைக் கிறது. ‘மறை' என்றால் ‘வேதம்' என்னும் உரைக்கு மாறாக இது அமைகிறது. “வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த',118 என்னும் அடியால் உணர்த்துகிறது. மறை என்பது நான்கு வகையெனவும் உரைக்கிறது.
"" நான்மறை யாளன் செய்யுட் கொண்டு
மேனிலை யுலகம் விடுத்தோன்''119
என்கிறது. தமிழுக்கு உரிய நான்கு மறை என்பது என்னவென்று விளக்கப்படவில்லை. தமிழ் நெறியாகிய அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு நெறிகளைக் கொண்டு உரைக்கிறதெனக் கருதலாம்.
மெய்யொழுக்கங்களை மேற்கொள்ளும் அந்தணர் என்னும் மெய்யுணர்வு அறிஞர் யோக நெறியில் செயலாற்றும் போது' நினைவை மூலாதாரத்தில் செலுத்தி மூலக்கனலை எழுப்பி' சுவாதிட் டானம், மணிபூரம்' அநாகதம், விசுத்தி' ஆக்கினை என்னும் ஆறு நிலையங்களிலும் யோகம் என்னும் தொழிலைப் புரிபவரே அந்தணர் எனப்படுவதனால் ‘அறு தொழில் அந்தணர்,117 எனல் பொருந்தும் எனலாம்.
தமிழ் மறையோர்
‘மறை' என்பது தமிழுக்கு உரியதாகச் சிலப்பதிகாரம் உரைக் கிறது. ‘மறை' என்றால் ‘வேதம்' என்னும் உரைக்கு மாறாக இது அமைகிறது. “வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த',118 என்னும் அடியால் உணர்த்துகிறது. மறை என்பது நான்கு வகையெனவும் உரைக்கிறது.
"" நான்மறை யாளன் செய்யுட் கொண்டு
மேனிலை யுலகம் விடுத்தோன்''119
என்கிறது. தமிழுக்கு உரிய நான்கு மறை என்பது என்னவென்று விளக்கப்படவில்லை. தமிழ் நெறியாகிய அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு நெறிகளைக் கொண்டு உரைக்கிறதெனக் கருதலாம்.
நான்மறை முதல்வர்
நான்கு மறைக்கு உரியவர்களாகக் கூறப்பெறும் அந்தணர் எனப்படும் அறிவர்' அறத்தைத் தொழிலாகக் கொண்டு ஒழுகுபவராகக் காட்டப்படுகின்றனர். “அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்''120 “நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே''121
என்றதனால்' நான்மறைகளை ஓதுபவர்கள் முனிவர் என்றும் அறியலாம். இவ்வாறான அறிஞர்கள் புலவர்களாகவும் இருந்தனர் என்பதற்கு அந்தணர் கபிலர் என்பது உறுதியாகிது. இக்கபிலர் பாரியின் நண்பராகவும் அவைப் புலவராகவும் இருந்தார் என்று புறப்பாடல் குறிப்பிடுகிறது. இப்புலவர் பெயரால் கபிலர் அகவல் என்றொரு ஞானப் பாடல் வழங்கி வருவதையும் கருத்திற் கொள்ளலாம்.
எனவே' அறிஞர், அந்தணர்' மறையோர் என்று குறிப்பிடப் பட்டவர்கள் துறவு நிலையடைந்து ஞான நிலைக்கு உயர்ந்த முனிவர்கள் என்பது பொருத்தமுடையதாக இருக்கும்.
தொல்காப்பியம்' பத்துப்பாட்டு, எட்டுத் தொகை' பதினெண் கீழ்க் கணக்கு, ஐம்பெரும் காப்பியம் ஆகிய நூல்களின் பாடல்கள்' மருத்து வக் குறிப்புகளையும் மருத்துவப் பிரிவுகளையும் குறிப்பிடுகின்றன.
மருத்துவத்தைக் தொழிலாகக் கொண்ட புலவர்களையும் மருத்துவக் குலத்தினரையும் தெரிவிக்கின்றன.
பஞ்சபூதக் கோட்பாடென்னும் மருந்துவக் கொள்கையும் மருந்து, மருத்துவன், நோய்' நோயாளன், முக்குற்றம்' நோயில்லா நெறி, உணவு' மருத்துவம் போன்ற மருத்துவ நெறிகளும் அறியக் கூடியன வாக இருக்கின்றன.
சங்க காலத்தில் ‘சொற்றொகை' என்றொரு நூல் இருந்ததென்றும், அந்நூலாசிரியர் ‘கலைக் கோட்டு முனிவர் என்னும் மருத்துவர் என்றும்' இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது. கலைக் கோட்டு முனிவர் இயற்றிய ‘கலைக்கோட்டுத் தண்டு' என்றொரு நூல் இருந்தாகவும், அந்நூலைப் பின்பற்றி போகர் என்னும் சித்தர் நூல்கள் பல இயற்றியதாகவும், சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய சித்தர் நூல்கள் குறிப்பிடுகின்றன.
மேற்கண்ட இத்தகவல்களே சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியக் கூடியவையாக இருக்கின்றன. இதுவரை கிடைக்கப் பெற்ற நூல்களில் கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததென்று கருதப் பெறும் ‘திருமந்திரம்' ஒன்றே மருத்துவத்தைக் கூறும் முதல் நூலாகக் கொள்ளத்தக்கது. வேறு எந்த மருத்துவ நூலும் கிடைக்கப் பெற வில்லை.
நான்கு மறைக்கு உரியவர்களாகக் கூறப்பெறும் அந்தணர் எனப்படும் அறிவர்' அறத்தைத் தொழிலாகக் கொண்டு ஒழுகுபவராகக் காட்டப்படுகின்றனர். “அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்''120 “நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே''121
என்றதனால்' நான்மறைகளை ஓதுபவர்கள் முனிவர் என்றும் அறியலாம். இவ்வாறான அறிஞர்கள் புலவர்களாகவும் இருந்தனர் என்பதற்கு அந்தணர் கபிலர் என்பது உறுதியாகிது. இக்கபிலர் பாரியின் நண்பராகவும் அவைப் புலவராகவும் இருந்தார் என்று புறப்பாடல் குறிப்பிடுகிறது. இப்புலவர் பெயரால் கபிலர் அகவல் என்றொரு ஞானப் பாடல் வழங்கி வருவதையும் கருத்திற் கொள்ளலாம்.
எனவே' அறிஞர், அந்தணர்' மறையோர் என்று குறிப்பிடப் பட்டவர்கள் துறவு நிலையடைந்து ஞான நிலைக்கு உயர்ந்த முனிவர்கள் என்பது பொருத்தமுடையதாக இருக்கும்.
தொல்காப்பியம்' பத்துப்பாட்டு, எட்டுத் தொகை' பதினெண் கீழ்க் கணக்கு, ஐம்பெரும் காப்பியம் ஆகிய நூல்களின் பாடல்கள்' மருத்து வக் குறிப்புகளையும் மருத்துவப் பிரிவுகளையும் குறிப்பிடுகின்றன.
மருத்துவத்தைக் தொழிலாகக் கொண்ட புலவர்களையும் மருத்துவக் குலத்தினரையும் தெரிவிக்கின்றன.
பஞ்சபூதக் கோட்பாடென்னும் மருந்துவக் கொள்கையும் மருந்து, மருத்துவன், நோய்' நோயாளன், முக்குற்றம்' நோயில்லா நெறி, உணவு' மருத்துவம் போன்ற மருத்துவ நெறிகளும் அறியக் கூடியன வாக இருக்கின்றன.
சங்க காலத்தில் ‘சொற்றொகை' என்றொரு நூல் இருந்ததென்றும், அந்நூலாசிரியர் ‘கலைக் கோட்டு முனிவர் என்னும் மருத்துவர் என்றும்' இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது. கலைக் கோட்டு முனிவர் இயற்றிய ‘கலைக்கோட்டுத் தண்டு' என்றொரு நூல் இருந்தாகவும், அந்நூலைப் பின்பற்றி போகர் என்னும் சித்தர் நூல்கள் பல இயற்றியதாகவும், சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய சித்தர் நூல்கள் குறிப்பிடுகின்றன.
மேற்கண்ட இத்தகவல்களே சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியக் கூடியவையாக இருக்கின்றன. இதுவரை கிடைக்கப் பெற்ற நூல்களில் கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததென்று கருதப் பெறும் ‘திருமந்திரம்' ஒன்றே மருத்துவத்தைக் கூறும் முதல் நூலாகக் கொள்ளத்தக்கது. வேறு எந்த மருத்துவ நூலும் கிடைக்கப் பெற வில்லை.
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|