புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 3 Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 3 Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 3 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 3 Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 3 Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 3 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 3 Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 3 Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 3 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 3 Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 3 Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 3 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மருத்துவத்தின் வரலாறு


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:27 pm

First topic message reminder :

தமிழிலும் இந்திய மொழிகளிலும் வெளிவந்த வரலாற்று நூல்களில் தமிழ் மருத்துவத்தின் வரலாறு குறிப்பிடப்படவில்லை. தமிழ் மருத்துவமும் அதன் வரலாறும் மறைக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகிறது.

பழமையான தொடர்ந்த நாகரிக வரலாற்றினையுடைய மக்கள், தாங்கள் கற்றறிந்த வாழ்வியல் அங்கமான மருத்துவம் பற்றிய வரலாற்றை அறிய முற்படாமலும், அறிந்தனவற்றை வரலாற்று முறையில் எழுத முற்படாமலும் இருப்பதனால், ‘தமிழ் மருத்துவத்தின் வரலாறு' அறியப்படாமல் இருந்து வருகிறது.

வரலாறு

வரலாற்றில் இடம் பெறும் பொருளின் தோற்றம், தொடர்ச்சி' வளர்ச்சி, பரிணாமம்' முதிர்ந்த நிலை, தற்போதைய நிலை ஆகியவற்றைக் கண்டறிந்து உறுதிப்படுத்தி, அகப்புறச் சான்றுகளுடன் உரைத்திடுவது வரலாற்றின் வரைவிலக்கணமாகும்.

தமிழ் மருத்துவ வரலாறு

முற்காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள், அவற்றுக்குரிய மருத்துவத் தொடர்புகளைக் கொண்டு அகப்புறச் சான்றுகளுடன் மருத்துவ வரலாறு வரையப்படும்.

வரலாற்றின் தேவை

மருத்துவ வரலாறு வாழ்வியல் தொடர்புடையது என்பதாலும், அதன் வரலாற்றினால் மருத்துவத்தின் தொன்மை' நோய்களைக் கண்டறிந்து மருந்தளித்த முறைகள் தெரியவரும் என்பதாலும் எதிர்காலத்தில் வருகின்ற நோய்களிலிருந்து எந்தெந்த முறைகளை மேற்கொள்ளலாம் என்பதுடன் புதிய பரிமாணங்களில் மருத்துவத்தை வளர்த்துக் கொள்ளலாம். மேற்கொண்டு செய்ய வேண்டிய செயல் முறைகளிலும் தெளிவு பெற வழியேற்படும்.

வரலாற்றின் இன்றியமையாமை

உலகில் பல்வேறு முறை மருத்துவங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றினால் ஏற்படுகின்ற பக்க விளைவுகளைக் கண்டு அஞ்சி, மரபு வழி மருத்துவமே சாலச் சிறந்தது என உலக மருத்துவ அறிவியல்துறை சார்ந்த அறிஞர்கள் கருதத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்,இந்திய மருத்துவத்தின் வளர்ச்சியில் அதிகக் கவனம் செலுத்தும் நிலையேற்பட்டிருக்கிறது என்பதுடன்' இந்திய மரபினரின் பழமையான மருத்துவத்தின் வரலாறு எழுத வேண்டியது இன்றியமையாத ஒன்றெனக் கருதும் கருத்து வலுவடைகிறது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:47 pm

எள்ளின் "மகுளி' நோய்

தாவரங்களிலிருந்து பெறப்படுகின்ற எண்ணெய்களில் எள்ளின் பயன்பாடு, சங்க காலத்திலிருந்து இன்றுவரை சிறந்த இடத்தைப் பெறுகிறது. (எள்+நெய்=எண்ணெய்) எள்ளின் பயனைக் கருத்திற் கொண்டு எள்ளிற்கும் மருத்துவம் காணப்பட்டது. எள்ளிற்கு வரும் நோய் ‘மகுளி' என்றும், அவ்வாறு நோயுற்ற எள்ளின் சுவை கைப்புச் சுவை கொண்டதாக இருக்கு மென்றும்37 உரைக்கப்படுகிறது.

மருந்தின் பெயரால் அமைந்த சங்க நூல்கள்

மருந்தின் பயனை உணர்ந்திருந்த சங்க கால இலக்கியப் புலவர்கள், தாங்கள் இயற்றிய நூல்களுக்கு மருந்தின் பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர். அவ்வாறு அமைந்த நூல்களாகக் காணப்படுபவை திரிகடுகம்' ஏலாதி, சிறுபஞ்சமூலம் ஆகிய மூன்று நூல்களாகும்.

இந்நூல்கள் மனத்தில் தோன்றுகின்ற மாசுகளை நீக்கி, மக்களை நல்வழிப் படுத்துவதற்காக இயற்றப்பெற்ற அறநூல்களாகும். இந்நூலில் கூறப்பட்டிருக்கும் கருத்துப் பொருள்களும் மருத்துவ நூல்களின் வழி அமைக்கப் பட்டிருக்கக் காணலாம்.

திரிகடுகம்

‘திரிகடுகம்' என்பது சுக்கு, மிளகு' திப்பிலி என்னும் மூன்று மருந்துகளின் கூட்டுப் பெயராகும். இம்மருந்து மூன்று மருந்துகளைக் கொண்டிருப்பதைப் போல' இந்நூலின் செய்யுள் ஒவ்வொன்றிலும் மூன்று கருத்துக்களைக் கூறி ஓர் அறநெறியை வலியுறுத்திக் கூறுவது போல் அமையும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:47 pm

சிறுபஞ்சமூலம்

‘சிறுபஞ்சமூலம்' என்பது கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி' பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகைகளின் வேர்களைக் கொண்ட கூட்டுப் பெயராகும். இந்நூலின் செய்யுள்கள் ஐந்து கருத்துகளைக் கூறி ஒரு நீதியை உரைப்பதாக அமையும்.

ஏலாதி

‘ஏலாதி' என்பது ஏலம், இலவங்கம்' சிறுநாகப்பூ, மிளகு' திப்பிலி, சுக்கு ஆகிய ஆறு பொருள்களின் கூட்டுப் பெயராகும். இதன் பாடல்கள் ஆறு கருத்துகளைக் கொண்டு ஒரு நெறியை உணர்த்துவதாக அமையும்.

மேற்கண்ட இம்மூன்று கூட்டு மருந்துகளும் சிறப்புடன் போற்றப்படுகின்ற மருந்துகளாக தமிழ் மருத்துவத்தில் இடம் பெறுவதாகும். இம்மருந்துகள் சித்த மருத்துவம்' ஆயுர் வேதம் என்னும் இரண்டு மருத்துவத்திலும் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், இம்மருந்தின் தோற்றம்' பழந்தமிழர் மருத்துவ முறை என்பது உணரத்தக்கதாகும்.

மருந்தின் பெயரால் சங்ககாலப் புலவர்கள்

மருந்து' மருத்துவம் ஆகியவற்றின் பயனையும் சிறப்பினையும் அறிந்த சங்ககாலப் புலவர்கள் பலர் இருந்திருக்கின்றனர். அவ்வாறான வர்களுள் நல்லாதனார் (திரிகடுகம்)' காரியாசான் (சிறுபஞ்சமூலம்), கணிமேதாவியார் (ஏலாதி), கபிலர் (குறிஞ்சிப் பாட்டு) ஆகிய நால்வரும் தங்கள் பெயரை மருந்தின் பெயரால் அமைத்துக் கொள்ள வில்லை என்றாலும்' இவர்களின் பாடல்களில் மருத்துவச் செய்திகள் இடம் பெற்றிருந்தன. ஆனால், மருந்துப் பொருளின் பெயரால் புலவர்கள் என்பது, அவர்களின் பெயரைக் கொண்டு அறிய முடிகிறது. அவ்வாறு பெயரமைந்த புலவர்கள், கடுகு பெருந்தேவனார் (கடுகு)38 போந்தைப் பசலையார் (பனை),39 வெள்ளெருக்கிலையார் (வெள் ளெருக்கு),40 காவட்டனார் (காவட்டம் புல்),41 இந்நான்கு பெயரிலும் பொதிந்துள்ள மருந்தின் பெயர்கள் மருத்துவ நூல்களில் காணக் கூடியதாக இருக்கின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:48 pm

மருத்துவப் புலவர்கள்

மருந்தினை அறிந்த புலவர்களைப் போல மருத்துவத்தைத் தொழிலாக கொண்ட புலவர்களும் இருந்திருக்கின்றனர். திருவள்ளுவ மாலை11ஆம் பாடலைப் பாடிய புலவர் ‘மருத்துவன் தாமோதரனார்' என்பதாகும். இவரும், இவரைத் தொடர்ந்து, ‘மருத்துவன் நல்லச் சுதனார்' என்பவர், பரிபாடலின் 6,8,9,10,15,19 ஆகிய ஆறு பாடல் களுக்கும் இசையமைத்த இசையறி புலவராகக் காணப்படுகின்றார்.

இவர்கள் இருவரின் பாடல்கள் சங்கப் பாடல் தொகுப்பில் இடம் பெறவில்லை. என்றாலும் ‘மருத்துவன்' என்னும் தொழிற் பெயரை, பெயர் அடையாகக் கொண்டு வழங்கிவரக் காண்கிறோம்.

சங்ககால மருத்துவப் பாடல்கள்

சங்க காலத்தில் இலக்கியப் புலவர்களாலும் மருத்துவப் புலவர்களாலும் இயற்றப் பெற்ற பாடல்களில், இலக்கியப் புலவர்கள் இயற்றிய பாடல்களில் ஒரு சில மட்டும் சங்க இலக்கியம் என்னும் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. சங்க காலப் புலவர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் நற்றத்தனார்' மது மலர்த்தண்டார்ப் பகுமனார் ஆகிய புலவர்களின் பாடல்கள் சங்கத் தொகுப்பில் காணப் பெறவில்லை. காரணம், சங்கப் பாடல்கள் அகம், புறம் என்னும் இரண்டு பொருட்பகுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப் பெற்றதாகும். இப்புலவர்களின் பாடல்கள் இவ்விரண்டு பொருட் பகுப்பில் அடங்காமல் மருத்துவப் பொருளை உள்ளடக்கியதாக இருந்தமையால், சங்க நூல் தொகுத்தோரால் விடப்பட்டிருக்கின்றன.

‘தேரையர் யமக வெண்பா' என்னும் மருத்துவ நூலுக்குள் உரைமேற்கோளாக அமைந்த பாடல்கள் பல. அவற்றுள் சில சங்கப் பாடல்கள் எனவும், சங்கப் புலவர்கள் பெயரும் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. அந்நூல் உரையாசிரியர் குறிப்பிட்ட சங்கப் பாடல்கள் சங்க நூல்கள் தொகுப்பினுள் காணப்பெறாதவை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:48 pm

நளிர்சுரத்திற்கு மருந்து

இரசம்' தாளகம் ஆகிய இரண்டும் சீனம், கிரேக்கம், இத்தாலி போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இருப்பினும் அந்நாடுகள் உள்மருந்தாக அவற்றைப் பயன் படுத்துவதில்லை. ஆனால், அவற்றைத் தமிழ் மருத்துவர்கள் பண்டு தொட்டே பயன்படுத்தியுள்ளனர். சங்ககாலப் புலவரான நற்றத்தனார்' தாளகம் நளிர்சுரத்திற்கு மருந்தென்று குறிப்பிடுகின்றார்.

முந்நீர் சிவணிய செந்நீர் யாக்கை

முப்பிணி யானவை வெப்பமா நளிரே

மாறிய நாள்பகல் வீறிய யாமமும்

மாசுறு காய மூசுபு வெவ்வினை

மருந்தனு பானமும் இருந்தையில் தாளகம்

அடுநறா முத்திறம் இடுமுறை இல்செய

மீச்சுரம் ஆகிய மீசுரப் படலிகை

பெருமூல வைக்கெதிர் பூளைக் குவையே. (நற்றத்தனார்)

காற்றிற்கு எதிர் நிற்கவொண்ணாப் பூளைப் பூவைப் போல, மிக்குயர்ந்த நளிர்சுரமும் தாளகத்தின் முன் மறைந்தோடிப் போகிற தாம். நச்சுத் தன்மை உடைய தாளகம், சுத்தியினாலும் (Purification) மூலிகைச் சுருக்கினாலும் (Triturah) மருந்தாகிறதென்பர்.42 இதனால் தாளகம் என்னும் மருந்தின் பயன் சங்க காலத்திற்கும் முன்னரே அறியப் பட்டிருந்தது என்பது தெரியவருகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:49 pm

முப்பிணிகளைப் போக்கும் மருந்து

சங்கப் புலவர் பாடிய ஆற்றுப்படை ஆசிரியப்பா என்னும் பாடல் உரையாசிரியரால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அப்பாடல், சக்தி பீசம் என்று கூறப்படுகின்ற கந்தகம், கந்தக பற்பம் என்னும் மருந்தானதால், அது வாதம், பித்தம், ஐயம் என்னும் மூன்று வகை நாடிகளின் குற்றங்களில் உண்டாகக் கூடிய முப்பிணிகளைப் போக்குகின்ற மருந்தாகும் என்னும் கருத்தை உரைப்பதாக அமைந்துள்ளது.

"" சத்தி பீசத் தாவளப் பொடிநிறை

யுத்த மாதி யோரிரு நாற்பால்

வினைமதி யாகா விதிமற் றுளசில

வாருணத் தினைமுதல் வரைவன மத்திமம்

வாடுறு நூன்மைய வாய்க்கின்மே வளிமுத

லாகிய நோய்க் கணமடைக்கலப் படுமுனம்

வேகிய மருத்துவர் வெருக்கொளச் சென்றது

நோய்ப்பகை யாளரோ நொடிந்தன சிதறிப்

பேய்ப்புல னெனவயிர் பெரும்பிணி யாளுநர்

தேவகுலமே யதுபு தெருமரற் பருவர

லாவகுலா லன்றிரி யாழியிற் பெய்துற்

றியங்குபு மாற்றமு மிலரென முன்னரோ.''43

(மருத்துவ ஆற்றுப்படை)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:50 pm

நஞ்சு நோய்க்கும் பெண்ணினச் சேர்க்கையால் வரும் நோய்க்கும் மருந்து.

உணவினாலும் பிறவற்றாலும் உடலுக்குள் செல்கின்ற நஞ்சினால் உண்டாகின்ற நோய்க்கும்' பெண்ணினச் சேர்க்கையினால் தோன்றக் கூடிய உறுப்பு நோய்க்கும் கந்தகத்தினால் செய்யப்படுகின்ற மருந்தின் குறிப்புகள் சங்கச் செய்யுள் என உரையாசிரியரால் மேற்கோளாகக் காட்டப் பெற்ற பாடலொன்றில் காணப்படுகிறது.

"" பன்னிரு வகைபெறு முன்னிய பருவர

லினமிவை முதலென நனவுறு வளிமுத

லாகிய பருவரண் மியவுயிர் நிலை

யேகிய நாபியி லுறுவிட முறப்

பெறுமொரு நலிவரப் பெற்ற தான் மேன்முறை

செறிவுறு மொன்பது தீவினை வகையொரு

பொரியரவு ருவிடப் போக்கு மேன் மீறிய

பெண்போகப் பிணி நண்பயப் பிணியொரு

பன்னிருவகை யெனப் படருறு மிடரென

வந்தடர் தானை மறவரு மிறுதிச் செய்

காலனிற் காந்துபு கனலெனக் கன்னற்

வேலென பற்பல வினையமா விளைத்துழி

நால்வகை யாணமு மேலணிக் காப்பும்

பவனனைக் கண்டுழிப் பஞ்சினி லிரியவாங்

கெய்திய மீளியை யொய்தினிற் கண்டுழிக்

கவன்ற நெஞ்சினர் கவன்ற வானனமென்

பங்கயங் குவியப் பொங்கொளி கான்று

நெடுமா லுந்திக் கடி ""மலர் பூத்தெனப்

பின்னருங் கவினுறு முன்னிய கங்குலில்''44

என்று முற்றுப் பெறாத பாடலாக இருக்கக் காண்கிறோம். இப்பாடலின் தொடர்ச்சி கிடைத்தால் முழுமையாகப் பொருளறியும் வாய்ப்பு ஏற்படும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:51 pm

மருத்துவக்குலம்

பண்டைய காலத் தமிழர்கள் கலையிலும் கல்வியிலும் சிறந் திருந்ததைப் போல மருத்துவத்திலும் சிறந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றாக, ஆய், எயினன் என்னும் இரண்டு இனத்தவர்கள் அரசர்களின் படைத்தலைவர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் ‘வைத்திய சிகாமணி' என்று அரசர்களால் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களின் முன்னோர்கள் கைக்கொண்டு வந்த ‘மருத்துவக் குலத்தின்' குடிப்பெயரே ஆய் (இடையர்), எயினன்(வேடர்)எனப்படுவது. போர்க் கலைகளில் சிறந்து விளங்குகின்ற படைத்தலைவர்கள், போர் வீரர்களுக்கு ஏற்படுகின்ற புண்களுக்கும் நோய்களுக்கும் செய்யும் மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றவர்களாய் இருந்திருக்கின்றனர். எயினர் குலத்தில் வைத்தியத் தொழிலைப் பரம்பரையாகக் கொண்டிருந்த மருத்துவக் குடியில் பிறந்தவன், பாண்டியன் படைத்தலைவன் ‘மாறன்காரி' என்பது குறிப்பிடத்தக்கது45 என்று மு. இராகவையங்கார் குறிப்பிடுகின்றார். ஒரு குலத்தினரே மருத்துவ இனத்தவராக இருந்தனர் என்பதனால், பண்டைய தமிழகத்தில் மருத்துவம் தழைத் தோங்கியிருந்ததாகக் கருதலாம்.

மருத்துவர் குடியிருப்பு

பூம்புகார் நகரத்தில் அமைந்திருந்த வீதிகளில் மருத்துவத் தொழிலுடையோர் ஒரு தெருவில் குடிவாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அத்தகைய மருத்துவக் குடியினர் ‘ஆயுள் வேதர்' என்று குறிப்பிடப் பட்டனர். அவர்கள், மருத்துவத் தொழிலுடன்' மருத்துவ நூலும் இயற்றுவோர் என்னும் குறிப்பு காணப்படுகிறது. இக்குறிப்பினால், மருத்துவத் தொழிலுடையோர் மருத்துவ நூலாசிரியர்களாகவும் இருந்துள்ளனர் என்பது தெரிகிறது.46

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:52 pm

மருத்துவன்

இலக்கியங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மருத்துவம் சார்ந்த மரம்' செடி, கொடிகள் இடம் பெறுவதைச் சிறப்பாகக் கொள்ள முடியாதெனினும், மருந்து தரும் பயன்களினால் மருந்துப்பொருள் இன்னது என அறிந்து' அவற்றைப் போற்றிப் பாதுக்காக்கும் தன்மையையும் பெற்றிருந்தனர் எனும்போது, மருத்துவம் எந்த அளவிற்கு மக்களின் வாழ்க்கையோடு இயைந்து வளர்ந்து கொண் டிருந்தது என்பதை அறிய முடிகிறது.

மருத்துவன் தருகின்ற மருந்தானது உடலுக்குள் சென்று நோயைப் போக்கி மகிழ்ச்சியைத் தருவது போல' எனது சொற்கள் அவனுடைய மனத்தில் தோன்றிய மாசுகளைப் போக்கும் நன் மருந்தாயின என்னும் கருத்தமைந்த பாடல்,47 பாலைக் கலியில் இடம் பெற்றிருக்கக் காணலாம். இதனால்' மருத்துவன் தருகின்ற மருந்து, துன்பத்தினை நீக்குவது என்பது உணர்த்தப் படுகிறது.

மருத்துவன் ஒழுக்கம்

தனக்கு உற்ற நோயை நீக்குமாறு, மருத்துவனிடம் நோயாளி வேண்டி கேட்டுக் கொண்ட பின்னும் மருத்துவன் நோயாளிக்கு மருந்து அளிக்காவிட்டால் அது கொடுமை. என்று நெய்தற்கலி48 உரைக் கின்றது.

நோயாளிக்கு வந்த நோயறிந்து நோய்க்கு மருந்தூட்டுவதே மருத்துவனின் கடமையும் அறமுமாகும். நோயாளி விரும்பும் பொருள்களை யெல்லாம் தருவது மருத்துவ முறையுமன்று. நோயாற்று கின்ற மருத்துவனைப் போற்றி, ‘அறவோன்' என்று பாராட்டுகின்ற பண்பு மக்களிடையே மிகுந்திருந்தது.49

தமிழ் மருத்துவ நெறி

தமிழ் மறையெனப் போற்றப் பெறும் திருக்குறளில் அமைந்துள்ள மருந்து என்னும் அதிகாரம்' தமிழ் மருத்துவ நெறியை வகுத்துரைப் பதாகக் கருதலாம். இந்த அதிகாரத்தில் மருந்து, மருத்துவன்' மருத்துவம், மருத்துவ நூலோர், நோய், நோயாளி' நோய்க்கான காரணம், நோயில்லா நெறி, உணவு நெறி ஆகியன விளக்கப் படுகின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:52 pm

மருந்து/மருத்துவம்

உற்ற நோயைப் போக்குவதற்குச் செய்யப்படுவது மருத்துவம். அந்நோயைப் போக்குவது மருந்து. மருந்து, மருத்துவத்தின் பகுதி யாகும். மருந்து மட்டும் நோய் தீர்க்கப் பயன்படுவதில்லை. நோயுற் றார்க்கு உற்ற நோய் என்ன வென்று உய்த்துணரும் மருத்துவன் வேண்டும். மருத்துவன் குறிப்பிட்டுரைக்கும் மருந்தை நோயுற் றானுக்கு ஊட்டுகின்ற மருத்துவத் துணைவன் வேண்டும். ஆக மருத்துவம் என்பது நோயாளி, மருத்துவன், மருந்து, மருத்துவத் துணைவன் என்னும் நான்கு பகுதிகளைக் கொண்டது. இதனை மருந்து என்னும் சொல்லால் திருக்குறள் உரைக்கும்.

"" உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று

அப்பால் நாற் கூற்றே மருந்து''50

உற்றவன்நோயுற்றவன்; தீர்ப்பான்மருத்துவன்; மருந்து மருத்து வனின் கருவியான நோய்தீர்க்கும் மருந்து; உழைச் செல்வான் மருத்துவனுக்கும் நோயாளிக்கும் துணையாயிருந்து மருந்தூட்டுபவன் (இணிட்ணீணிதணஞீஞுணூ) எனப் பொருள் உரைக்கிறது.

மருத்துவன் நோயாளியை நாடி, நோய் வந்ததன் காரணத்தை நாடி' வந்துற்ற நோய் எது என்பதை நாடி, பின்னர் வந்துற்ற நோயைத் தீர்க்கும் மருந்து எது' எவை என்பனவற்றை நாடி, அதன்பின் எவ்வகையில் மருந்தூட்ட வேண்டும் என்பதை நாடிச் செய்ய வேண்டும்.

நோயுற்ற நோயாளியின் அளவு, அதாவது உடல் பருவம்' வலிமை, மனநிலை ஆகியவற்றையும்' நோயின் அளவு, அதாவது தொடக்கம்' இடை முதிர்வு, வன்மை' மென்மை ஆகியவற்றையும், நோயுற்ற காலம், நோய் தொடருங்காலம்' மருத்துவம் பார்க்க வேண்டிய காலம், மருத்துவம் பார்க்கும் காலம் ஆகியவற்றையும் அறிந்து மருத்துவம் செய்பவனே, மருத்துவம் கற்றவனாகக் கருதப்படுவான்51 என்று மருத்துவனுக்குரிய செயற்பாட்டினை விவரிக்கிறது.

நூலோர்

நூலோர் என்பது மருத்துவ நூலோரைக் குறிப்பிடும். நோய்வரும் வழிகளையும்' நோயறியும் முறைகளையும், நோயின், வகைகளையும் அவற்றிற்குரிய மருந்து எது என நுண்ணறிவின் திறத்தால் வகுத்துரைக்கப் பெற்ற மருத்துவ நூலின் ஆசிரியரை அல்லது மருத்து வத்தின் வழித் தோன்றிய முன்னோர்களை ‘நூலோர்' என்னும் பெயரால் உரைப்பர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:54 pm

மருத்துவம் கூறும் மூன்று

மூன்று என்னும் எண்ணால் உரைக்கப்படுகின்றவை வளி, அழல், ஐயம் என்னும் மூன்று கூறுகளாகும். இம்மூன்றும் தத்தமக்குரிய அளவின்படி அமையாமல் குறைந்தாலோ' கூடினாலோ உடம்பில் பலவகை நோய்களை உண்டாக்கும். இம்மூன்றும் உடலுக்குக் கேட்டைத் தரும்.

"" மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று''52

நோய்

ஒருவன் உண்ணுகின்ற உணவு அவனுடைய வயிற்றின் கொள்ளளவை விடவும் குறைவாக இருந்தால்' உணவு செரித்து, மீண்டும் பசியை உண்டாக்கும். அதனால், நோய் வரும் வழி தடைப்படும். அவ்வாறில்லாமல் வயிற்றின் அளவைவிடவும் அதிக அளவு உணவை வயிற்றுக்குள் திணித்தால் செரிப்புத் தன்மை குறைந்து நோய் வருவதற்கு வழியேற்படும்53 என்று விளக்குகிறது.

நோய்க்குக் காரணம்

நோய் உண்டாவதற்குக் காரணம். உடலுக்கு ஒவ்வாத குற்ற முடைய உணவுகளை உண்பதும்' உணவு உண்பதற் காகக் குறிக்கப் பட்டுள்ள காலத்தைக் கருத்திற் கொள்ளாமல் பெருந்தீனி தின்பதுமே யாகும்.

நோயில்லா நெறி

நோயில்லா நெறி என்பது வாழ்வின் பொது நெறி எனக் கொள்ளலாம். இது எல்லா நிலையினருக்கும் எல்லா வயதினருக்கும் பொருந்துமாதலான் பொது நெறியாகக் கருதலாம்.

மருந்து தேவைப்படுவது, நோய் என ஒரு தீமை தோன்றிய பின்னரேயாம். அதனால் நோய் வந்தபின் போக்குவதை விட, வராமல் தடுப்பதே நல்லநெறி எனப்படும்.

"" நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்''54

என்னும் குறள் கருத்திற் கொள்ளத்தக்கது.

நோயென்பது வேண்டாம் என்றால், மருந்தென ஒன்றும் வேண்டாம். மருந்து வேண்டாம் என்றால் தாம் உண்ட உணவு செரிமானமடைந்து வெளியே சென்றபின்' உணவு உட்கொள்ளும் பழக்கத்தினை மேற்கொண்டால்' மருந்தென்பது வேண்டாம் எனப்படும்.55

உண்ட உணவு செரித்துக் கழிவாக வெளியே சென்றது என்பதையும்' தாம் உண்ண வேண்டிய உணவின் அளவு எவ்வளவு என்பதையும் அறிந்தவனின் உடம்பு நீண்ட நாள்கள் நோயின்றி வாழும்56 என்பது நோயில்லா நெறிமுறையாகக் கொள்ளத்தக்கவை.

Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக