புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10 
4 Posts - 2%
Manimegala
தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10 
432 Posts - 48%
heezulia
தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10 
29 Posts - 3%
prajai
தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_m10தமிழ் மருத்துவத்தின் வரலாறு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மருத்துவத்தின் வரலாறு


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:27 pm

தமிழிலும் இந்திய மொழிகளிலும் வெளிவந்த வரலாற்று நூல்களில் தமிழ் மருத்துவத்தின் வரலாறு குறிப்பிடப்படவில்லை. தமிழ் மருத்துவமும் அதன் வரலாறும் மறைக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகிறது.

பழமையான தொடர்ந்த நாகரிக வரலாற்றினையுடைய மக்கள், தாங்கள் கற்றறிந்த வாழ்வியல் அங்கமான மருத்துவம் பற்றிய வரலாற்றை அறிய முற்படாமலும், அறிந்தனவற்றை வரலாற்று முறையில் எழுத முற்படாமலும் இருப்பதனால், ‘தமிழ் மருத்துவத்தின் வரலாறு' அறியப்படாமல் இருந்து வருகிறது.

வரலாறு

வரலாற்றில் இடம் பெறும் பொருளின் தோற்றம், தொடர்ச்சி' வளர்ச்சி, பரிணாமம்' முதிர்ந்த நிலை, தற்போதைய நிலை ஆகியவற்றைக் கண்டறிந்து உறுதிப்படுத்தி, அகப்புறச் சான்றுகளுடன் உரைத்திடுவது வரலாற்றின் வரைவிலக்கணமாகும்.

தமிழ் மருத்துவ வரலாறு

முற்காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள், அவற்றுக்குரிய மருத்துவத் தொடர்புகளைக் கொண்டு அகப்புறச் சான்றுகளுடன் மருத்துவ வரலாறு வரையப்படும்.

வரலாற்றின் தேவை

மருத்துவ வரலாறு வாழ்வியல் தொடர்புடையது என்பதாலும், அதன் வரலாற்றினால் மருத்துவத்தின் தொன்மை' நோய்களைக் கண்டறிந்து மருந்தளித்த முறைகள் தெரியவரும் என்பதாலும் எதிர்காலத்தில் வருகின்ற நோய்களிலிருந்து எந்தெந்த முறைகளை மேற்கொள்ளலாம் என்பதுடன் புதிய பரிமாணங்களில் மருத்துவத்தை வளர்த்துக் கொள்ளலாம். மேற்கொண்டு செய்ய வேண்டிய செயல் முறைகளிலும் தெளிவு பெற வழியேற்படும்.

வரலாற்றின் இன்றியமையாமை

உலகில் பல்வேறு முறை மருத்துவங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றினால் ஏற்படுகின்ற பக்க விளைவுகளைக் கண்டு அஞ்சி, மரபு வழி மருத்துவமே சாலச் சிறந்தது என உலக மருத்துவ அறிவியல்துறை சார்ந்த அறிஞர்கள் கருதத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்,இந்திய மருத்துவத்தின் வளர்ச்சியில் அதிகக் கவனம் செலுத்தும் நிலையேற்பட்டிருக்கிறது என்பதுடன்' இந்திய மரபினரின் பழமையான மருத்துவத்தின் வரலாறு எழுத வேண்டியது இன்றியமையாத ஒன்றெனக் கருதும் கருத்து வலுவடைகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:30 pm

பயன்கள்

தமிழ் மருத்துவத்தின் வரலாறு எழுதப்பட்டால், மரபுவழி மருத்துவத்தின் மூலம் மரபு நோய்களும்' உலக மருத்துவத்தில் மருந்துகள் கண்டறியப் படாதிருக்கும் பல நோய்களும் எவ்வாறு குணப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன என்பன அறியக் கூடும்.

வரலாறு எழுது முறை

மருத்துவத்துக்கும் பழமையான இனத்துக்கும் உரிய தொடர்பு, மருத்துவத்தின் தேவையை உணர்ந்த முறை' மருத்துவம் கண்டறியப் பட்டதன் காரணம்' மருத்துவம் நிகழ்ந்த சூழல், மருத்துவத்தினால் உண்டான பாதுகாப்பு' மருத்துவத்துக்குப் பயன்பட்ட பொருள்கள். அவற்றைப் பற்றிய கல்வி போன்றவற்றை முறைப்படுத்தி எழுதுதல் வரலாறு எழுதும் முறையாகக் கருதப்படும்.

வரலாற்று மூலங்கள்

மருத்துவத்தின் வரலாறு எழுதுவதற்குச் சான்றுகள்- பழமையான புதைபொருள் ஆவணங்கள், கல்வெட்டுக் குறிப்புகள், தமிழகத்துடன் தொடர்புடைய பிறநாட்டுக் குறிப்புகள்' பழந்தமிழ்க் குடியினர் பற்றிய ஆய்வுகள்' இலக்கண இலக்கியம், சமயத்தின் நடைமுறைகள், வழிபாடுகள், பலியீடுகள்' மருத்துவம் சார்ந்த தொழில் முறைகள்' மரபுவழியினர், பண்பாட்டு நாகரிகக் குறிப்பேடுகள் எனப் பன்முனைச் சான்றுகளைக் கொண்டு எழுதப்படுவது முழுமையான வரலாறு எனக் கருதப்படும்.

தமிழ் மருத்துவத்தின் மூலங்கள்

தமிழ் மருத்துவத்தின் வரலாறு எழுதுவற்குச் சான்றுகள் எனக் கொள்ளப்பட்டவை. சிந்துவெளி நாகரிகத்தின் குறிப்புகள்' தொல் காப்பியம், சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை' பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள், பாண்டியர் வரலாற்றுச் சாசனங்கள், சோழர்கால வரலாறு, சைவ மதத்தின் கோயில் தலமுறைகள் போன்றவை மூலங்களாகக் கொள்ளப்படுகின்றன.

நோக்கம்

தமிழில் மருத்துவ இலக்கியங்கள் எவை என்பதைக் கண்டறிவதே ஆய்வு நோக்கமாகக் கொள்ளப்பட்டாலும், வரலாறு என்பதன் ஆரம்பநிலையாகக் கொண்டு மருத்துவத்தின் வரலாறு எழுதும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இம்முயற்சி, இதன் தொடர்ச்சியாகப் பின்னாளில் ஆய்வு மேற்கொள்வோர்க்குத் துணையாக இருப்பதுடன் வழிகாட்டலாகவும் அமையும்.

ஆய்வின் எல்லை

தமிழ் மருத்துவத்தின் வரலாறு என்னும் இவ்வியலில், சங்க காலந் தொடங்கி, யூகி என்னும் மருத்துவச் சித்தர் காலம் வரை' கிடைக்கின்ற குறிப்புகளைக் கொண்டு மருத்துவ வரலாறு ஆராயப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:31 pm

இயல் அமைப்பு

தமிழ் மருத்துவத்தின் வரலாறு என்னும் இப்பகுதியில், சங்க இலக்கியங்களில் காணப்படும் மருத்துவம் தொடர்பான குறிப்புகளைத் தொகுத்து, மருந்து' மருந்துப் பொருள், மருத்துவன், மருத்துவம்' நோய், நோயாளி' நோயில்லா நெறி, உணவே மருந்து' மருந்தே உணவு, உணவுப் பொருள்' அறுசுவை, மருத்துவக் கோட்பாடு' பஞ்சபூதங்களின் பரிணாமம் போன்ற தலைப்புகளில் தமிழ் மருத்துவத்தின் வரலாறு ஆராயப்படுகிறது.

பண்டைக்காலத் தமிழகத்தில் மருந்து

பண்டைக்காலத் திராவிட மக்களாகிய தமிழர்கள், மருந்தையும் மருந்துப் பொருளையும் பயன்படுத்துவதில் வளர்ச்சியடைந்த நிலையில் சிறந்து காணப்பட்டார்கள் என்பதற்கு, சிந்துவெளி நாகரிகம் பற்றிய அகழாய்வில் கிடைத்துள்ள பொருள்கள் சான்றாக அமைகின்றன. இன்றைய தமிழ் மருத்துவர்களும் ஆயுர்வேத மருத்துவர் களும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகின்ற சிலாசித்து' மான்கொம்பு, பவழம்' தாளகம் போன்ற மருந்துப் பொருள்கள் அங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால், வேதகாலத்திற்கும் முன்பாகவே பழந்திராவிட மருத்துவம், இந்தியா முழுவதும் பரவி இருந்திருக்கிறது. அது பின்னாளில், மொழி, இடம், கொள்கை ஆகியவற்றிற் கேற்பப் பிரிந்து சித்த மருத்துவம், ஆயுர்வேதம் என இரண்டு நிலைகளில் வளர்ந்தது 1என்பர்.

அறுவை மருத்துவக் கருவி

புதை பொருள் அகழாய்வு ஆராய்ச்சியின்படி, சிந்து, கங்கைச் சமவெளிகளில் வாழ்ந்திருந்த பழந்திராவிட மக்கள், அறுவை மருத்துவத்துக்காகச் செப்புக் கத்திகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர் 2 என்பது தெரியவருகிறது. அறுவை மருத்துவத்துக்காகச் செம்பைப் பயன்படுத்தினால்' அது பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்னும் அறிவியல் உண்மையைப் பண்டைய தமிழர் அறிந்திருந்தனர் என்பது பெறப்படுகிறது.

புதைந்த நாகரிக இனத்து மக்கள் மருந்து, மருத்துவம்' அறுவை மருத்துவம் ஆகியவற்றை அறிந்தும் பயன்படுத்தியும் வந்திருந்தனர் என்பதை உறுதிப் படுத்துகிறது.

சிந்துவெளியும் வேம்பும்

வேம்பு' இக்காலத்தில் உயிர்க்கொல்லி மருந்தாகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றது. இதன் தொடக்கம், சிந்துவெளி நதிக்கரை நாகரிக மக்களிடத்துத் தொடங்கியது என்பது, ‘சிந்துவெளி மக்கள் வேப்பிலையைச் சிறந்த மருந்தாக இல்லங்கள் தோறும் பயன் படுத்தி வந்திருக்கின்றனர்,3 என்று அறிஞர் தீட்சித் கூறுவதிலிருந்து அறியமுடிகிறது.

சங்க இலக்கியங்களில் மருத்துவக் குறிப்புகள் வேம்பும் கடுக்காயும்

தமிழுக்குக் கிடைத்த இலக்கண நூல்களுள் முதன்மையான தாகவும் தலை சிறந்ததாகவும் போற்றப் பெறுகின்ற

தொல்காப்பியத்துள் வேம்பும் கடுக்காயும் மருந்தாகப் பயன்படுத்தப் பட்டதைப் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.

வேம்பும் கடுவும் போல வெஞ்சொல் 4

எனவரும் செய்யுளுக்கு, ‘முற்பருவத்துக் கைத்துப் பிற்பருவத்து உறுதி பயக்கும் வேம்பும் கடுவும் போல வெய்யவாய சொல்லினைத் தடையின்றிப் பிற்பயக்குமெனக் கருதிப் பாது காத்து' எனப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரை வகுப்பர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:32 pm

வேம்புஅடையாளப் பூ

போர்க்களத்திற்குச் செல்லும் போர்வீரர்கள், மன்னர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள அடையாளப் பூக்களைத் தங்கள் தலையில் சூடிக்கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது.

பழந்தமிழ் வேந்தர்களான சேரன் பனம்பூவும், சோழன் ஆத்திப் பூவும்' பாண்டியன் வேப்பம் பூவும் சூடினர்.5 இம்மூன்று பூக்களும் பூவையர் சூடுகின்ற பூக்களல்ல. இப்பூக்கள் எல்லாக் காலங்களிலும் கிடைக்கக் கூடியனவும் அல்ல. கோடைக்காலங்களில் மட்டுமே கிடைக்கக் கூடியதும் மருந்துப் பொருளாகக் கூடியனவுமான இவற்றின் பயன் கருதியே மன்னர்கள் தங்களின் அடையாளப் பூக்களாகக் கொண்டிருக்கின்றனர். வேம்பம்பூவின் தொடர்புவாழ்க்கை' இலக்கியம் ஆகியவற்றிலும் இடங்கொண்டிருக்கிறது எனலாம்.

மனைகளில் வேம்பு

மனையில் உள்ளவர்கள் நோய்வாய்ப்பட்டாலோ, ஊரில் நோய்க்குறி காணப்பட்டாலோ, நோய்த் தடுப்பு முறையால் மனையையும் மனையைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மைப் படுத்துவர். அதைப் போல வெளிப்புறமிருந்து நோய்க்கிருமிகள் மனைக்குள் புகாமல் மனையைப் பாதுகாக்கும் பொருட்டு, மனையின் இறைப்பில் வேம்பின் இலைகளைக் கொத்துக் கொத்தாகச் செருகி வைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.

“தீங்கனி இரவமொடு வேம்பு மனைச் செரீ இ''6

இரவ மரத்தின் இலையுடன் வேம்பு மனைகளில் செருகப்பட்டதைக் குறிப்பிடக் காண்கிறோம்.

பெண் மருத்துவர்

போர்க்களத்திற்குச் சென்று, போரில் மார்பில் விழுப்புண் கொண்டு' புண்ணின் கடுப்புடன் மனை திரும்பும் வீரனுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவராக மனைப் பெண்டிர் இருந்திருக் கின்றனர்.

மருத்துவம் பார்க்கும் ஆண்பாலரை ‘மருத்துவர்' என்றும், பெண்பாலரை ‘மருத்துவி' என்றும் அழைக்கும் வழக்கம் இருந் திருக்கிறது.

‘ஆருயிர் மருத்துவி,7 என்று மணிமேகலையைச் சாத்தனார் குறிப்பிடுவதிலிருந்து' ஆண் பெண் இருபாலரும் மருத்துவக் கல்வியுடையவராக இருந்தனர் என்பது புலப்படும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:33 pm

இசை மருத்துவம்

நோயாளிக்கு நோயின் கடுமையைத் தணிக்க மருந்து, சுகாதாரமான சூழல், மணந்த மணம், இனிய இசை' அன்பான பணிவிடை ஆகியன தேவைப்படும். இது வளர்ந்த நாகரிகங் கொண்ட மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பழக்க வழக்க நடைமுறைகள். இவ்வாறான நடைமுறைகள் ஈராயிரம் ஆண்டின் முன்பே பழந்தமிழர் இல்லற ஒழுக்கங்களில் இரண்டறக் கலந்த ஒன்றாகக் காணப்படுகின்றன.

“ தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ8

என்னும் புறநானூற்றுச் செய்யுள், விழுப்புண் கொண்ட போர்வீரன் கிடத்தப் பட்டிருக்கும் மனையின் இறைப்பில் இரவம்' வேம்பு ஆகிய இலைகளைச் செருகி, மனையெங்கும் வெண்ணிறங் கொண்ட சிறுகடுகைத் தூவி' நறுமணம் கமழும் நறும்புகை புகைத்து' யாழினால் பல்லிசை இசைத்தும் ஆம்பல் என்னும் குழலை ஊதியும் காஞ்சிப் பண்ணைப் பாடியும் மருத்துவம் செய்தனர்.

வரிப்புலி மார்பைக் கிழித்தது போல், போர்க்களத்தில் ஏற்பட்ட விழுப்புண்ணை ஆற்றுதற்குக் கொடிச்சியர் இசைப்பாடலை இசைத்தனர்9 என்று மலைபடுகடாம் உரைக்கின்றது.

இதனால்' மனையிலுள்ள நோயாளரைப் பேணும் மருத்துவர்களாகப் பெண்டிரும் இருந்துள்ளனர் என்பதும், நோயின் கடுமையைப் போக்க நோய்த் தடுப்பும் சுகாதாரமும் தேவை என்பதும், அறியப் பட்டிருந்தது. இசையால் நோயைத் தணிக்கும் இசைமருத்துவம் (Musico therapy) என்னும் முறையும் நடைமுறையில் இருந்திருப்பதும் தெரியவருகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:33 pm

போர்க்கள மருத்துவம்

பண்டைக்கால மருத்துவ முறைகளாகச் சங்க இலக்கியங்களில் காணப்பெறும் மருத்துவ முறைகள் அனைத்தும் போர் வீரர்களுக்குப் போரினால் ஏற்படுகின்ற புண்ணையும்' அதற்குண்டான மருந்து, மருத்துவம், மருத்துவன் ஆகியவை பற்றிய செய்திகளாகவுமே காணப்படுகின்றன. காரணம், வீரம் பற்றிய செய்திகளையே புறப் பாடல்கள் கூறுவனவாக அமைவதனால்' அது தொடர்பான செய்திகள் மட்டுமே புலவர்களால் போற்றிப் பாடப்பட்டிருக்கின்றன.

அறுவை மருத்துவம்

போர்க் காலங்களில் போர்வீரர்களுக்கு ஏற்படுகின்ற விழுப்புண் பெரிய அளவில் இருந்தால் அப்புண்ணை மருந்துகளால் ஆற்றுவது கடினம் என்பதை உணர்ந்து' மருத்துவ வல்லார்களால் அப்புண்கள் தைக்கப்பட்டன. அதன் பின்னரே மருந்திட்டுக் கட்டுவதும் நிகழ்ந்துள்ளது. இதுவே இன்றைய நாளிலும் நடைமுறையிலுள்ளது. இவ்வாறு, விழுப்புண்ணைத் தைக்கும் முறையைப் பதிற்றுப் பத்து குறிப்பிகிறது.

“மீன்தேர் கொட்பின் பனிக்கய மூழ்கிச்

சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள்ளூசி

நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் ''10

நீரிலுள்ள மீனைக் கொத்துவதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியில் நீரைவிட்டு மேலே பறந்து செல்லும் சிரல் பறவையைப் போல, நெடிய வெள்ளூசி புண்ணுக்குள் நுழைந்து வெளியே வருகிறது என்கிறது. வெள்ளூசி என்பது வெள்ளியால் செய்யப்பட்ட தையல் ஊசியாக இருக்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:34 pm

ஒட்டு மருத்துவம் (Plastic Surgery)

இரும்பு உலோகங்களான வேல், வாள்' ஈட்டி போன்ற ஆயுதங்களால் எற்படுகின்ற புண்களில்' இரும்பின் உலோக நஞ்சு கலப்பதற்கு வாய்ப்புகள் உள. அவ்வாறு கலக்க நேர்ந்தால், உலோக நஞ்சால் (Tetanus Toxoid) உடலுக்குத் தீங்கு நேரிடலாம். அவ்வாறு நேராதிருக்க இக்கால மருத்துவர்கள் தடுப்பூசியைப் பயன்படுத்துவர். பண்டைக்கால மருத்துவர்கள் உலோக நஞ்சை முறிக்கும் மருந்தாகவும், புண் ஆறிய பின் வடு தோன்றாமல் தோலின் நிறம் பழைய நிலைக்கே மாறவும் அத்திப் பால் பயன் படுத்தினர் என்று புறநானூறு குறிப்பிடுகிறது.

‘வடுவின்றி வடிந்த யாக்கையான்,11 என்று பழைய நிலைக்கே உடல்நிலை பெற்றது என்பதை' இன்றைய (Plastic Surgery) ஒட்டு மருத்துவத்துடன் ஒப்பிடலாம்.

அத்திப்பாலும் அத்திப்பட்டையும் கடுப்பு, இரத்தப் போக்கு' சீதளம், முற்றிய இரணம்' மேகம் ஆகிய நோய்களைத் தீர்க்குமென மருத்துவ நூல் உரைக்கக் காண்கிறோம்.

"" வீறு கடுப்பிரத்தம் வெண்சீத ரத்தமொடு

நாறுவிர ணங்களெல்லாம் நாடாவாம் கூறுங்கால்

அத்திதரு மேகம்போம் ஆயிழையே! எஞ்ஞான்றும்

அத்திப்பாற் பட்டைக் கறி''12

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:35 pm

மருந்தும் பஞ்சும்

இக்கால மருத்துவத்தில் புண்ணுக்கு மருந்து வைத்துக் கட்டும் போது புண்ணின் மேல் பஞ்சு வைத்துக் கட்டும் முறை, பண்டைய தமிழ் மருத்துவர்கள் மேற்கொண்ட முறையைப் பின்பற்றி அமைந்ததாக இருக்கலாம். அக்காலத்தில் தோன்றிய முறையே தொன்றுதொட்டு தொடர்ந்ததாகவும் இருக்கலாம். அதனை உறுதி செய்யும் விதத்தில்'

"" கதுவாய் போகிய துதிவாய் எஃகமொடு

பஞ்சியும் களையாப் புண்ணர்''13

என்னும் புறநானூற்று வரிகள் உறுதி செய்கின்றன.

மருந்தும் பாதுகாப்பும்

மக்களுக்கு உண்டாகும் பிணியைப் போக்குவது மருந்து. அம் மருந்தைத் தருகின்ற தாவரங்களும் மரங்களும் அழிந்து விட்டால் மருந்தின்றித் திண்டாட நேரும். அதனால்' மருந்தாகும் பொருள்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது' எதிர்காலத்தின் தேவையை உணரும் சமூகச் சிந்தனைக் கருத்தாகும். இத்தகைய சமூகச் சிந்தனை, பழந்தமிழ் மக்களிடையே பரவலாகக் காணப்படுகிறது. அத்தகைய சிந்தனையுடைய மக்கள் மருந்தாகும் மரங்களை' அவற்றிலிருந்து மருந்துகளை எடுக்க வெட்டுகின்ற போது' அவை முற்றிலும் அழிந்து விடாமல், அவற்றிலிருந்து குறைந்த அளவிலேயே மருந்தை எடுத்து' மீண்டும் அவை தளிர்த்து வளரும் விதத்தில் பாதுகாத்தும் இருக் கின்றார்கள் என்பதை'

"" மரஞ்சா மருந்துங் கொள்ளார் மாந்தர்''14

என்று நற்றிணை விளக்குகிறது. மரம் பட்டுப் போகும் அளவிற்கு ஒரே மரத்தில் மருந்தெடுக்கும் பழக்கம் அவர்களிடத்தில் இல்லை என்பது பெறப்படுவதனால்' மருந்தின் தேவையை அனைவரும் உணர்ந் திருந்தனர் என்று கூறலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:36 pm

நெஞ்சக நோய்க்கு மருந்து

நோயை உண்டாக்கும் பகுதியாக முதலிடம் வகிப்பது வயிறு. அதனை அடுத்து மார்பும் மார்பில் உண்டாகும் சளியுமே என்பது மருத்துவ நூலோரின் கருத்து.

மார்புச் சளி முற்றினால், நோயாக மாறும் வாய்ப்புண்டு என்பதால் அதனைச் சிறிய அளவாக இருக்கும் போதே குணப்படுத்திக் கொள்ள முயல்வர். மார்புச்சளி நோய் முதியவர்களுக்குப் பனிக்காலங்களிலும் மற்றோர்க்குக் கடுமையான நோயினால் பாதி க்கப்படுகின்ற போதும் உண்டாகும். இந்நோய்க்கான மருந்தாகக் கூவைக் கிழங்கின் மாவு பயன்படுவதாகப் பதார்த்த குண போதினி குறிப்பிடுகிறது. கூவைக் கிழங்கு' ஓர் அரிய மருந்தாகக் குறிப்பிடப்படுகிறது. அத்தகைய கூவைக் கிழங்கைப் பழந்தமிழர் பயன்படுத்தியிருக்கின்றனர் என்கிறது மலைபடுகடாம்.15

அறுவைமுறை மருத்துவம்

அறுவை மருத்துவ முறை பற்றி ஒவ்வொரு குறிப்புகள் ஒவ்வொரு நூலில் காணப்படுகின்றன. அறுவை மருத்துவத்தில் என்னென்ன முறைகள் செய்யப்பட்டன என்பதை விளக்கிக் கூறுவதாக அமைகிறது சீவக சிந்தாமணி.

சீவக சிந்தாமணி காப்பிய நூலாக அமைந்ததினால், விரிவான செய்திகளைத் தருவதாக அமைந்து' அறுவை முறை மருத்துவத்தை விவரிக்கிறது.

"" நெய்க்கிழி வைக்கப் பட்டார் நெய்ப் பந்தர் கிடத்தப் பட்டார்

புக்குழி யெஃக நாடி யிரும்பினாற் போழப் பட்டார்''

"" முதுமரப் பொந்து போல முழுமெய்யும் புண்க ளுற்றார்க்கு

இதுமருந் தென்ன நல்லார் இழுதுசேர் கவளம் வைத்துப்

பதுமுகன் பரமை மார்பில் நெய்க்கிழி பயிலச் சேர்த்தி

நுதிமயிர்த் துகிற்குப் பாயம் புகுகென நூக்கி னானே''16

மரப்பொந்து போல உடல் முழுவதும் ஏற்பட்ட புண்களுக்கு ஏற்ற மருந்து எது? என்பதை அறிந்த மருத்துவர், அம்மருந்தை வாயில் கவளத்தை வைப்பது போல் வைப்பர்; நெய்யில் தோய்த்த துணியைப் புண்ணின் மேல் வைப்பர்; புண்பட்டாரை நெய்ப்பத்தலில் கிடத்துவர்; புண்ணுக்குள் புகுந்த இரும்புத் துண்டுகளை அறுவை முறையால் அறுத்தெடுப்பர்;பின்னர் எலி மயிரால் நெய்யப்பட்ட ஆடையால் போர்த்தி, காற்றுப் புகாதவாறு பாதுகாப்பர் என்று உரைப்பதினால், புண்பட்டார்க்குச் செய்யப்படுகின்ற மருத்துவ முறைகள் தெளிவாக்கப் பட்டுள்ளன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:37 pm

நோயாளர் ஆடை

நோயாளிக்கு அணியவும் போர்த்தவும் செய்கின்ற ஆடை எப்போதும் எல்லாரும் அணிகின்ற ஆடையிலிருந்து மாறுபட்டதாகத் தெரிகிறது. அவ்வாடை எலியின் மயிரினால் செய்யப்பட்டது என்பர்.

எலியின் நுண்மையான மயிரினால் நெய்யப்பட்ட ஆடையால் ஆகிய சட்டை' போர்வை மிகுந்த வெப்பத்தை உடையது; குளிரை நீக்கக் கூடியது; அதனுள் காற்றும் புகாது. மென்மை உடையது. பனிக்காலத்தில் அணிவதற்குரியது; கிடைத்தற்கரியது என்றும் குறிப்பிடப்படுகிறது.17

இக்காலத்தில் குளிருக்காகவும் பனிக்காகவும் அணியப் படுகின்ற கம்பளி என்னும் ஆட்டு மயிரிலிருந்து நெய்யப் படுகின்ற ஆடையை விடவும் சிறந்ததெனத் தெரிகிறது. கம்பளி ஆடை மென்மையானதில்லை. சட்டையாக அணிவதற்கும் ஏற்றதல்ல என்பதை நோக்கும் போது' எலி மயிராடை சிறந்த ஆடையாக இருக்கலாம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக