புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 - Page 2 Poll_c10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 - Page 2 Poll_m10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 - Page 2 Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 - Page 2 Poll_c10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 - Page 2 Poll_m10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 - Page 2 Poll_c10 
2 Posts - 20%
heezulia
வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 - Page 2 Poll_c10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 - Page 2 Poll_m10வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 - Page 2 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 12:21 pm

First topic message reminder :

பாகிஸ்தானில் தலீபான்கள் பகுதியில் ராணுவ நடவடிக்கை தொடங்கியது. அப்பாவி மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினார்கள்


பாகிஸ்தானில் குர்ரம் பழங்குடிஇன மக்கள் பகுதியில் பதுங்கி இருக்கும் தலீபான்களை ஒடுக்குவதற்காக அந்த பகுதியில் ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது. தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் நடக்கும் சண்டையை பார்த்து பயந்து அப்பாவி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி ஓடிவிட்டனர்.

ஊரடங்கு உத்தரவு

குர்ரம் பகுதி பழங்குடி இனப்பகுதியில் ஹக்கிமுல்லா மசூத் தலைமையிலான பாகிஸ்தான் தலீபான்கள் பதுங்கி உள்ளனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக கடந்த 2 வார காலமாக முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

குர்ரம் பகுதியில் உள்ள 80 சதுர கி.மீ. பரப்பை போர்ப்பகுதியாக 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

அந்த பகுதிக்கு ராணுவ வீரர்களை கொண்டு வந்து சேர்ப்பதற்காக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த பகுதியில் உள்ள மனடோ மற்றும் சாய்முகேட் ஆகிய இடங்களில் வீரர்கள் தரை இறக்கப்பட்டனர்.

ராணுவம் முன்னேறியது

ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் அந்த பகுதியில் தலீபான்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் முடுக்கி விடப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக ஹெலிகாப்டர்கள் வானத்தில் வட்டமிட்டபடி இருந்தன. தலீபான்கள் ராணுவத்தை முழு மூச்சுடன் எதிர்க்கவில்லை. ஆங்காங்கே சில இடங்களில் ராணுவத்தை எதிர்த்து துப்பாக்கிகளால் சுட்டனர். இதனால் எதிர்ப்பின்றி ராணுவம் முழு வேகமாக முன்னேறியது.

தலீபான்களின் பதுங்கு குழிகள் மற்றும் முகாம்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. தலீபான்களின் செல்வாக்கு மிகுந்த பகுதிகளான முஷாத், மசோசாய், அலி ஷெர்சாய் ஆகிய பகுதிகளில் ராணுவம் முன்னேறியது.

தப்பி ஓட்டம்

அந்த பகுதிகளில் ராணுவம் சோதனைச்சாவடிகளை அமைத்து தன் நிலையை உறுதிப்படுத்திக்கொண்டது.

ராணுவ நடவடிக்கைகளுக்கான முன்னேற்பாடு தொடங்கியதுமே தலீபான்கள் தங்கள் பதுங்குமிடங்களில் இருந்து தப்பிஓடிவிட்டனர்.

இந்த சண்டையை பார்த்து உயிருக்கு பயந்துபோன அப்பாவி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி ஓடினார்கள்.



வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 12:31 pm

விடாது துரத்தும் பாலியல் குற்றச்சாட்டு: ஸ்ட்ராஸ் கான் மீது மற்றொரு பெண் புகார்

பாரிஸ்: சர்வதேச நிதியமைப்பின் முன்னாள் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக பிரான்ஸ் எழுத்தாளர் டிரிஸ்டேன் பானன், பாரிஸ் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் டிரிஸ்டேன் பானன், 32. கடந்த 2003ம் ஆண்டில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஸ்ட்ராஸ்கான் வீட்டிற்கு நேர்காணலுக்காக சென்ற போது, அவர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார் என்று ஏற்கனவே எழுத்தாளர் டிரிஸ்டேன் பானன் குற்றம்சாட்டியிருந்தார்.

இச்சம்பவத்தின் போது, போலீஸ் நிலையத்திற்கு செல்லவில்லை என்றும், 2007ம் ஆண்டில், "டிவி' ÷ஷா ஒன்றில் இதுபற்றி கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், ஸ்ட்ராஸ் கான் மீது, பாரிஸ் கோர்ட்டில், பானன் வழக்கு தொடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில், "பாரிசில் தங்கியிருந்த ஸ்ட்ராஸ் கானிடம் நேர்காணலுக்கு சென்ற போது, அவருடைய கையை பிடித்துக் கொண்டால் தான் பேசுவேன் என்று தெரிவித்தார். எனக்கு மன உளைச்சலை அளித்து வந்த இப்பிரச்னைக்கு ஒரு நாள் தீர்வு காண வேண்டும் என்று காத்திருந்து, எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது கோர்ட்டில் வழக்கு தொடுப்பதற்கான காலம் வந்துவிட்டது. இச்சம்பவம் நடந்த போது வழக்கு தொடரலாம் என்று நினைத்தேன். ஆனால், அனைவரும் இந்த வழக்கில் நியாயம் கிடைக்காது என்று கூறிவிட்டனர்' என்றார்.

சமீபத்திய, நியூயார்க் ஐந்து நட்சத்திர ஓட்டல் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் இருந்து முழுவதுமாக விடுவிக்கப்படாத ஸ்ட்ராஸ் கானுக்கு, இந்த வழக்கு மேலும் சங்கடத்தை அளித்துள்ளது.தற்போது, கோர்ட்டுக்கு சென்றுள்ள எழுத்தாளர் டிரிஸ்டேன் பானன், ஸ்ட்ராஸ் கானின் இரண்டாவது மனைவி பிரிஜிட்டி கில்லேமெட்டினால், "ஞான ஸ்நான'த்தின் போது வளர்ப்புக் குழந்தையாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது



வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 12:31 pm

ஆப்கான் பார்லி.யில் பெண் எம்.பி.க்கள் மோதல்

காபூல்: ஆப்கானிஸ்தான் பார்லிமென்டில் இரு பெண் எம்.பி.க்கள் கடுமையாக மோதிக்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் நேற்று பார்லிமென்ட் கூட்டம் நடந்தது. கூட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் நாட்டின் துணை அதிபர் முகமது காஸிம் பாஹிம் பற்றி விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது துணை அதிபரை பற்றி அகமத்ஷாய் என்ற பெண் எம்.பி. விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு துணை அதிபரின் ஆதரவு பெற்ற நஸிபா ஜக்கி என்ற பெண் ‌எம்.பி. கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நீண்ட நேரம் நடந்த வாக்குவாதத்தின் போது திடீரென துணை அதிபர் ஆதரவு பெண் எம்.பி. செருப்பை எடுத்து அந்த பெண் எம்.பி. மீது வீசினார். உடனே பதிலுக்கு அந்த பெண் ‌எம்.பி.யும் தண்ணீர் பாட்டிலை எடுத்து வீசினர்.

பி்ன்னர் இருவரும் சக எம்.பி.க்கள் முன்பு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதனால் பாராளுமன்றத்தில் பரபரப்பு நிலவியது. அருகில் இருந்த எம்.பி.க்கள் சிலர் இவர்களின் சண்டையினை விலக்கி விட்டு சமாதானப்படுத்தினர். இதனை அந்நாட்டு டி.வி. சானல் வெளியி்ட்டது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் வந்திருக்கும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், அதிபர் ஹமீத் கர்சாயை சந்தித்து பேச உள்ளார். இந்த நேரத்தில்இந்த சம்பவம் அதிபர் கர்சாய்க்கு தர்மசங்கடத்தினை ஏற்படுத்தியுள்ளது.



வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 12:32 pm

ஜப்பான் கடலுக்குள் அரிய வகை தாதுக்கள் கோலோச்சிய சீனாவுக்கு வந்திருச்சு போட்டி


டோக்கியோ:ஜப்பான் கடலுக்குள், உயர் தொழில்நுட்ப சாதனங்களுக்கு பயன்படுத்தும் அரிய தாதுக்கள் இருப்பதை அந்நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.ஜப்பான் நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பசிபிக் கடலுக்குள், 11,500 முதல் 12,000 அடி ஆழத்தில், 10 ஆயிரம் டன் அளவிற்கு அரிய வகை செரியம், யெட்ரியம் போன்ற தாதுக்கள் இருப்பதை அந்நாட்டு புவியியல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தற்போது, சீனா மட்டுமே உலகளவிலான அரிய வகை தாதுக்களை 97 சதவீதம் உற்பத்தி செய்து கோலோச்சி வருகிறது. ஜப்பானின் இந்த கண்டுபிடிப்பு, சீன நாட்டின் பொருளாதாரத்திற்கு சவாலாக அமையும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான செய்தி வெளியாகியுள்ள, பிரிட்டன் நாட்டின் இயற்கை புவியியல் அறிவியல் இதழில், "யசுகிரோ கட்டோ தலைமையில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், ஜப்பான் நாட்டின் எல்லைக்கு உட்பட்ட கடலுக்குள் 78 இடங்களில், அரிய வகை தாதுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளது.இதுகுறித்து விஞ்ஞானி யசுகிரோ கட்டோ கூறுகையில், "ஒரு சதுர கிலோ மீட்டர் தொலைவில் படிந்துள்ள தாதுக்கள், தற்போது, உலகின் ஓராண்டு நுகர்வான ஐந்தில் ஒரு பகுதி தேவையை பூர்த்தி செய்ய முடியும். ஜப்பான் எல்லைக்கு உட்பட்ட கடலுக்குள் படிந்துள்ள இந்த அரிய வகை தாதுக்களின் மதிப்பு, 10 ஆயிரம் டன் அளவிற்கு இருக்கலாம்' என்றார்.உலகிலேயே அரிய வகை தாதுக்களின் இருப்பு 11 கோடி டன் அளவில் மட்டுமே இருப்பதாகவும், இது,குறிப்பாக சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்க நாடுகளில் மட்டுமே இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே கடல் எல்லை பிரிக்கப்பட்டது. அன்றிலிருந்தே, கடலுக்குள் அரிய வகை தாதுக்கள் இருக்கிறதா என்று ஜப்பான் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டிருந்தனர். தற்போது, இந்த தாதுக்களை வெளியே கொண்டு வர நிறுவனங்கள் இடையே டெண்டர் எடுப்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது.கடலில் உயர்வகை தாதுக்களை எடுத்தால், கடல் உயிரினங்கள் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சுழலும் பாதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 06, 2011 12:32 pm

செய்திகளுக்கு நன்றி , தேதியில் ஏதோ குழப்பம் என்று நினைக்கின்றேன்
....




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 12:33 pm

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நிலநடுக்கம்

மெல்போர்ன்:ஆஸ்திரேலியாவில் 4.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், விக்டோரியா நகரில் கட்டடங்கள் அசைந்தன.ஆஸ்திரேலியாவில், நேற்று, 4.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், மெல்போர்ன் மாநிலத்தின் தலைநகரான விக்டோரியாவில், எட்டு நொடிகளுக்கு கட்டடங்களில் அதிர்வு காணப்பட்டது. விக்டோரியாவில் உள்ள கொரும்பரா என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள பார்க்கில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆனால், பார்க்கிற்கு வந்திருந்த யாருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.* கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் இந்த இடத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

நியூசிலாந்துநியூசிலாந்திலும்,நேற்று, 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தவ்போ என்ற இடத்தில் பூமிக்கடியில் 150 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், எவ்வித பாதிப்பும் இல்லை. நியூசிலாந்தில், ஆண்டுக்கு 14 ஆயிரம் முறை நிலநடுக்கம் ஏற்படுவதாகவும், இவற்றில், 20 நிலநடுக்கங்கள் 5.0 ரிக்டர் அளவில் இருப்பதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.*இந்நாட்டின், தீபகற்ப நகரான கிறிஸ்ட்சர்ச்சில் சென்ற பிப்ரவரி மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 181 மக்கள் பலியானார்கள்



வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 06, 2011 12:36 pm

வை.பாலாஜி wrote:செய்திகளுக்கு நன்றி , தேதியில் ஏதோ குழப்பம் என்று நினைக்கின்றேன்
....

மாற்றிவிட்டேன் பாஸ்! வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 - Page 2 678642



வெளிநாட்டுச் செய்திகள் 06-07-2011 - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக