புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10 
91 Posts - 61%
heezulia
இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10 
6 Posts - 4%
viyasan
இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10 
1 Post - 1%
eraeravi
இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10 
283 Posts - 45%
heezulia
இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10 
19 Posts - 3%
prajai
இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 7 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கணச் சுருக்கம்


   
   

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 2:00 am

First topic message reminder :

இலக்கணச் சுருக்கம் - ஆறுமுகநாவலர்


முதலாவது: எழுத்ததிகாரம்

1.1. எழுத்தியல்

இலக்கண நூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்நு விதிப்படி எழுதுவதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம்.
-----

2. அந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழியதிகாரம் என, மூன்றதிதிகாரங்களாக வகுக்கப்படும்.

எழுத்துக்களின் பெயர்
3. எழுத்தாவது சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம்
-----

4. அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து என நான்கு வகைப்படும்.
-----

5. உயிரெழுத்துக்கள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்னும் பன்னிரண்டெழுத்துக்களுமாம். இவை ஆவி எனவும் பெயர் பெறும்.
-----

6. உயிரெழுத்துக்கள், குற்றெழுத்து, நெட்டெழுத்து, என இரண்டு வகைப்படும்.
-----

7. குற்றெழுத்துக்கள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை குறில் எனவும் பெயர் பெறும்.
-----

8. நெட்டெழுத்துக்கள், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழமாம். இவை நெடில் எனவும் பெயர் பெறும்
-----

9. மெய்யெழுத்துக்கள், க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டெழுத்துக்களுமாகும்.
இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும்.
-----

10. மெய்யெழுத்துக்கள், வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என மூன்று வகைப்படும்.
-----

11. வல்லெழுத்துக்கள், க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறுமாம்.
இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர் பெறும்.
-----

12. மெல்லெழுத்துக்கள், ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம்.
இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர் பெறும்.
-----

13. இடையெழுத்துக்கள், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம்.
இவை இடையினம், இடைக்கணம், இடை எனவும் பெயர் பெறும்.
-----

14. அ, இ, உ என்னும் மூன்றும், மொழிக்கு முதலிலே சுட்டுப் பொருளில் வரும்போது, சுட்டெழுத்துக்களாம். உதாரணம்.
அவன், இவன், உவன்,
அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன்.
-----

15.எகரம் மொழிக்கு முதலிலும், அகரமும் ஒகாரமும் மொழிக்கு கடையிலும், வினாப்பொருளில் வரும் போது, வினாவெழுத்துக்களாம்.உதாரணம்.
எவன், எக்கொற்றன்
கொற்றான, கொற்றனோ
ஏவன், கொற்றனே
யா என்னும் உயிர் மெய்யும், மொழிக்கு முதலிலே வினாப் பொருளில் வரும் போது வினாவெழுத்தாம்
-----

16. அகரத்துக்கு ஆகாரமும், இகரத்துக்கு ஈகாரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், உகரத்துக்கு ஊகாரமும், எகரத்துக்கு ஏகாரமும், ஐகாரத்துக்கு இகரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், ஒளகாரத்துக்கு உகரமும், ககரத்துக்கு ஙகரமும், சகரத்துக்கு ஞகரமும், டகரத்துக்கு ணகரமும், தகரத்துக்கு நகரமும், பகரத்துக்கு மகரமும், றகரத்துக்கு னகரமும், இன வெழுத்துக்களாம். இடையெழுத்தாறும். ஓரினமாகும்; அவை இவ்விரண்டோரினமாகாவாம்.
-----

17. உயிர் மெய்யெழுத்துக்களாவன. புன்னிரண்டுயிரும் பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறிவருதலாகிய இருநாற்றுப்பதினாறுமாம்.

அவை, க, கா, கி, கீ முதலியவைகளாம்.

உயிர் மெய்க்குற்றெழுத்துத் தொண்ணூறு; உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு; ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.

ஊயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் மெல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு, ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.
-----

18. ஆய்தவெழுத்தாவது, குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வரும் ஓரெழுத்தாகும்.
உதாரணம். எஃகு, கஃசு, அஃது, பஃறி
-----

19. மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டும், மெய்பதினெட்டும், உயிர்மெய் இருநாற்றுப் பதினாறும், ஆய்தம் ஒன்றும் ஆகிய இருநாற்று நாற்பத்தேழெழுத்துக்களுந் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கி வருதல் கண்டு கொள்க.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 6:30 pm

சுட்டு

400. படர்க்கைப் பெயரோடு சுட்டுப் பெயர் சேர்ந்துவரின், அப்படர்க்கைப் பெயர் முடிக்குஞ் சொற் கொள்ளுமிடத்து அதற்குப்பின் வரும்: முடிக்குஞ் சொற் கொள்ளாவிடத்து அதற்றுப் பின்னு முன்னும் வரும்.

உதாரணம்.
(1) நம்பி சந்தான்; அவனுக்குச் சோறிடுக
எருது வந்த் அதற்குப் புல்லிடுக
(2) நம்பியவன்; அவனம்பி
----

தேர்வு வினா
400. படர்க்கைப் பெயரோடு சுட்டுப் பெயர் சேர்ந்துவரின், அச் சுட்டுப்பெயர் அப்படர்க்கைப் பெயர்க்கு எவ்விடத்து வரும்?


மரபு

401. மரபாவது, உலக வலக்கிலுஞ் செய்யுள் வழக்கிலுஞ் எப்பொருட்கு எப்பெயர் வழங்கி வருமோ, அப்பொருளை அச் கொல்லாற் கூறுதலாம்.

உதாரணம்.
ஆணைமேய்ப்பான் பாகன் குதிரைக்குட்டி
ஆடுமேய்ப்பான் இடையன் பசுக்கன்று
ஆனையிலண்டம் கீரிப்பிள்ளை
ஆட்டுப்புழுக்கை கோழிக்குஞ்சு
யானைக்குட்டி தென்னம்பிள்ளை
யானைக்கன்று மாங்கன்று
-----

தேர்வு வினா
401. மரபாவது யாது?


முற்றும்மை

402. இத்தனையென்று தொகையுற்று நிற்கும் பொருளும், எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாத பொருளும், முடிக்குஞ் சொல்லைப் பெற்று வருமிடத்து, முற்றும்மைபெற்று வரும்.

உதாரணம்.

(1) தமழ் நாட்டு மூவேந்தரும் வந்தார்
(2) ஒளிமுன்னிருள் எங்குமில்லை
-----

தேர்வு வினா
402. இத்தனையென்று தொகையுற்று நிற்கும் பொருளும், எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாத பொருளும், முடிக்குஞ் சொல்லைப் பெற்று வருமிடத்து, எவ்வாறு வரும்?


ஒரு பொருட் பன்மொழி

403. சொல்லின்பந் தோன்றுதற் பொருட்டு ஒரு பொருண்மேல் இரு சொற்கள் காரணமின்றித் தொடர்ந்து வருதலும் உண்டு.

உதாரணம்.
நாகிளங்கமுகு மீமிசைஞாயிறு
புனிற்றிளங்கன்று உயர்ந்தோங்கு பெரு வரை
-----

தேர்வு வினா

403. ஒரு பொருண்மேல் இரு சொற்கள் காரணமின்றித் தொடர்ந்து வருதலும் உண்டோ?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 6:31 pm

அடுக்குச் சொல்

404.ஒரு சொல், விரைவு, வெகுளி, உவகை, அச்சம், துன்பம் முதலிய காரணம்பற்றி இரண்டு முதல் மூன்றளவு அடுக்கிக் கூறப்படும்.

உதாரணம்.

1 உண்டேனுண்டேன்; போ போ போ விரைவு
2 எய்யெய்; எறி எறி எறி கோபம்
3 வருக வருக் பொலிக பொலிக பொலிக உவகை
4 பாம்பு பகம்பு; தீத் தீத் தீ அச்சம்
5 உய்யேனுய்யேன்; வாழேன் வாழேன் வாழேன் துன்பம்

அசைநிலைக்கு இரண்டளவும், இசைறிறைக்கு இரண்டு முதல் நான்களவும் அடுக்கிக் கூறப்படும்.

உதாரணம்.

1 அன்றேயன்றே அசைநிலை
2 ஏயெயம்பன் மொழிந்தனன் யாயே
நல்குமே நல்குமே நல்குமே நாமகள்
பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ இசைநிலை

சலசல, கலகல, என்பவை முதலியன பிரியாது இரட்டைச் சொல்லாகவே நின்று பொருள் படுதலால், அடுக்கிய சொல்லல்ல.
-----

தேர்வு வினாக்கள்
404. அடுக்குத் தொடருள், ஒரு சொல்லே அடுக்கிக் கூறப்படும் போது, எவ்வௌ; விடத்தில் எத்தனை எத்தனை அடுக்கிக் கூறப்படும்?
இக்காரணங்களின்றி ஒரு சொல் இங்ஙனம் அடுக்கிக் கூறப்படுதல் இல்லையோ?
சலசல, கலகல என்பவை முதலியன அடுக்கிய சொல்லல்லவோ?


சொல்லெச்சம்

405. சொல்லெச்சமாவது, வாக்கியத்தில் ஒரு சொல் எஞ்சி நின்று வருவித் துரைக்கப்படுவதாம்.

உதாரணம்.
பிறவிப் பொருங்கட னீந்நுவர் நீத்தா
ரிறைவ னடிசேரா தார்

இதிலே சேர்ந்தார் பிறவிப் பெருங்கடல் நீந்துவர் எனச் சேர்ந்தார் என்னும் ஒரு சொல் வருவித்துரைக்கப்படுதலாற் சொல்லெச்சம்.
----

தேர்வு வினா
405. சொல்லெச்சமாவது யாது?


இசையெச்சம்

406. இசையெச்சமாவது, வாக்கியத்தில் அவ்வவ் இடத்திற்கேற்ப் இரண்டு முதலிய பல சொற்கள் எஞ்சி என்று வருவித்துரைக்கப்படுவதாம்.

உதாரணம்.
’’அந்தாமரையன்னமே நின்னையானகன்றாற்றுவனோ’’

இதிலே என்னுயிரினுஞ் சிறந்த நின்னை எனப் பல சொற்கள் வருவித்துரைக்கப்படுதலால் இசையெச்சம்.
-----

தேர்வு வினா
406. இசையெச்சமாவது யாது?


ஒழியியல் முற்றிற்று
தொடர்மொழியதிகாரம் முற்றுப் பெற்றது.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 6:32 pm

பகுபத முடிபு

பெயர்ப்பகுபதங்கள்

அவன் என்னுஞ் சுட்டுப்பொருட் பெயர்ப்பகுபதம். ஆ என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, இடையில் வகர மெய் தோன்றி, அம்மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

தமன் என்னுங் கிளைப்பொருட் பெயர்ப் பகுபதம், தாம் என்னம் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதி குறுகி, இறுகி மகர மெய்யின் ஆமல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

பொன்னன் என்னும் பொருட்பெயர்ப் பகுபதம் பொன் என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று பகுதியீற்று னகரமெய் இரட்டித்து இரட்டித்த னகரமெய்யின்மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

நிலத்தன் என்னும் இடப்பெயர்ப் பகுபதம், நிலம் என்னும் பகுதியும், அன் என்னும் ஆண் பால் விகுதியும், அவைகளுக்கு இடையே அத்துச்சாரியையும் பெற்று பகுதியீற்று மகரமெய்யுஞ் சாரியையின் முதல் அகரமும் ஈற்று உகரமுங் கெட்டு, உகரங்கெட நின்ற மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேஙி முடிந்தது.

பிரபவன் என்னங் காலப்பெயர்ப்பகுபதம், பிரபவம் என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால், விகுதியும் பெற்று, பகுதியீந்நு அம் குறைந்து வகர மெய்யீராக நின்று, அவ்வகர மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

திணிதொளன் என்னுஞ் சினைப்பெயர்ப் பகுபதம்,திணிதோன் என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று ளகரமெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

நல்லன் என்னுங் குணப்பெயர்ப் பகுபதம், நன்மை என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று மைவிகுதி கெட்ட நல்ல என நின்று, லகர மெய் இரட்டித்து, இரட்டித்த லகரமெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

கரியன் என்னுங் குணப்பெயர் பகுபதம், கருமை என்னும் பகுதியும், அன் என்னும் ஆண் பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று மை விகுதி கெட்டு, இடை உகரம் இகரமாகத் திரிந்து, யகரவுடம்படுமெய் தோன்றி, அம் மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

செய்யன் என்னுங் குணப்பெயர்ப் பகுபதம், செம்மை என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று மை விகுதி கெட்டு, இடை நின்ற மகர மெய் யகரமெய்யாய் திரிந்து, அது இரட்டித்து, இரட்டித்த மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

ஓதுவான் என்னுந் தொழிற்பெயர்ப் பகுபதம், ஓது என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண் பால் விகுதியும், அவைகளுக்கு இடையே வகரவிடைநிலையும் பெற்று, இடைநிலை மெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது. ஓதுலுடையவன் என்பது பொருள்.

ஓதுவான் என்பது எதிர்காலத் தெரிநிலைமுற்றுப் பகுபதமாயின்: ஓது பகுதி: ஆன் விகுதி: வகரமெய் எதிர்காலவிடைநிலை. எதிர்காலவினையெச்சப்பகுபதமாயின், ஓது பகுதி: வான் எதிர்கால வினையெச்ச விகுதி.

நன்மை என்னும் பண்புப் பெயர் பகுபதம், நல் என்னும் பண்புப் பெயர் விகுதியும் பெற்று, பகுதியீற்று லகரமெய் னகரமெய் னகரமெய்யாகத் திரிந்து முடிந்தது.

வருதல் என்னுந் தொழிற்பெயர் பகுபதம், வா என்னும் பகுதியும், தல் என்னும் தொழிற்பெயர் விகுதியும் பெற்று, பகுதி முதல் குறுகி ரகரவுகரம் விரிந்து முடிந்தது.

உடுக்கை என்னுந் தொழிற்பெயர்ப் பகுபதம், உடு என்னும் பகுதியும், கை என்னும் தொழிற்பெயர் விகுதியும் பெற்று, விகுதிக் ககரமிகுந்து, முடிந்தது.

உடுக்கை என்னுஞ் செயற்படு பொருட் பெயர்ப்பகுபதம், உடு என்னும் பகுதியும், ஐ என்னுஞ் செயற்படு பொருள் விகுதியும், அவைகளுக்கிடையே குச்சாரியையும் பெற்று, சாரியைக் ககரம் மிகுந்து. சாரியையீற்றுகரங்கெட்டு, உகரங்கெட நின்ற ககரவொற்றின் மேல் விகுதி ஐகாரவுயிரேறி, முடிந்தது.

எழுத்து என்னுஞ் செயற்படு பொருட் பெயர்ப்பகுபதம், எழுது என்னும் பகுதியோடு ஐ என்னுஞ் செயற்படுபொருள் விகுதி புணர்ந்து, அவ்விகுதி கெட்டுக், கெட்டவிடத்துத் தகரமிரட்டித்து முடிந்தது.

ஊண் என்னுஞ் செயற்படு பொருட் பெயர்ப்பகுபதம், உண் என்னும் பகுதியோடு ஐ என்னுஞ் செயற்படு பொருள் விகுதி புணர்ந்து, அவ்விகுதி கெட்டு, பகுதி முதல் நீண்டு, முடிந்தது.

காய் என்னும் வினைமுதற்பொருட் பெயர்ப்பகுபதம், காய் என்னும் பகுதியோடு இ என்னும் வினை முதற்பொருள் விகுதி புணர்ந்து, அவ்விகுதி கெட்டு முடிந்தது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 6:34 pm

[You must be registered and logged in to see this image.]



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 6:40 pm

வினைமுற்றுப் பகுபதங்கள்

உண்டான் என்னும் இறந்தகாலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், உண் என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்தகாலங் காட்டும் டகரவிடை நிலையும் பெற்று, இடைநிலை டகரமெய்யின் மேல் விகுதி, ஆகாரவுயிரேறி முடிந்தது.

உண்கின்றான் என்னும் நிகழ்காலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், உண் என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு கின்று என்னும் நிகழ்கால விடைநிலையும் பெற்று, இடைநிலையீற்று உகலங்கெட்டு, உகரங்கெட நின்ற றகரமெய்யின் மேல் விகுதி, ஆகாரவுயிரேறி முடிந்தது.

உண்ணுவான் என்னும் எதிர்காலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், உண் என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே எதிர்காலங் காட்டும்வகரவிடைநிலையும், பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே உகரச்சாரியையும் பெற்று, பகுதியீற்று ணகரமெய் இரட்டித்து, இரட்டித்த ணகரமெய்யின் மேற் சாரியைஉகரமேறி, இடைநிலை வகரமெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி, முடிந்தது.

நடந்தனன் என்னும் இறந்தகாலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், நட என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்தகாலங் காட்டுந் தகரவிடை நிலையும், இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே அன்சாரியையும் பெற்று, இடைநிலைத் தகரமிகுந்து, மிகுந்த தகரவல்லொற்று

• உண்ணுவான் என்பது எதிர்கால வினையெச்சப் பகுபதமாயின், உண் பகுதி: உ சாரியை: வான் எதிர்கால வினையெச்ச விகுதி.

மெல்லொற்றாக விகாரப்பட்டு, இடைநிலைத் தகர மெய்யின்மேற் சாரியை அகரவுயிரேறிச், சாரியை யீற்று னகரமெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

வருகின்றனன் என்னும் நிகழ்காலத் தெரிநிலை வினைமுற்றப் பகுபதம், வா என்னும் பகுதியும் அன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கிடையே கின்று என்னும் நிகழ்கால விடைநிலையும், இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே அன் சாரியையும் பெற்று, பகுதி முதல் குறுகி, ரகரவுகரம் விரிந்து, இடைநிலையீற்று உகரங்கெட்டு, உகரங்கெட நின்ற றகரவொற்றின் மேற் சாரியை அகரவுயிரேறிச், சாரியையீற்று னகரமெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

நடப்பான் என்னும் எதிர்காலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், நட என்னம் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே எதிர்காலங் காட்டும் பகர விடைநிலையும் பெற்று, இடைநிலைப் பகரம் மிகுந்து, இடைநிலைப் பகரமெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது.

நடந்தது என்னும் இறந்தகாலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், நட என்னும் பகுதியும், து என்னும் ஒன்றன் பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்த காலங்காட்டுந் தகர விடைநிலையும், இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே அகரச்சாரியையும் பெற்று, இடைநிலைத் தகரம் மிகுந்து, மிகுந்த தகர வல்லொற்று மெல்லொற்றாக விகாரப்பட்டு, இடைநிலைத் தகர வல்லொற்றின் மேற் சாரியை அகரவுயிரேறி முடிந்தது.

நடப்பித்தான் என்னும் பிறவினைப் பகுபதம், நட என்னும் பகுதியும், பி என்னும் பிறவினைப் விகுதியும் பெற்று விகுதி பகரமிகுந்து, அனைத்தும் ஒரு பகுதியாய் நின்று, ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், பகுதிக்கும் விகுதிக்கும் இடையே இறந்த காலங் காட்டுந் தகர விடைநிலையும் பெற்று, இடைநிலைத் தகரம் மிகுந்து, இடைநிலைத் தகர மெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது.

அடிக்கப்பட்டான் என்னுஞ் செயற்பாட்டு வினைமுற்றுப் பகுபதம் அடி என்னும் பகுதியும், படு என்னுஞ் செயப்பாட்டு வினை விகுதியும், அவைகளுக்கு அடிக்கப்பட்டான் என்னுஞ் செயற்பாட்டு வினைமுற்றுப் பகுபதம் அடி என்னும் பகுதியும், படு என்னுஞ் செயப்பாட்டு வினை விகுதியும், அவைகளுக்கு இடையே குச்சாரியையும், அகரச்சாரியையும். பெற்று, சாரியைச் சகரம் மிகுந்து, பகரமிகுந்து, சாரியையீற்று உகலங்கெட்டு உகரங்கெட நின்ற ககரமெய்யின் மேலே சாரியை அகரவுயிரேறி, விகுதி பகர மிகுந்து, அடிக்கப்படு என அனைத்தும் ஒரு பகுதியாய் நின்று, ஆன் என்னும் ஆண்பால் விகுதி பெற்று, படு என்பதனுடைய உகரமூர்ந்த டகரமெய்யின் மேல் விகுதி ஆகாரருயிரேறி முடிந்தது.

நடவான் என்னும் எதிர்மறைத் தெரிநிலை வினை முற்றுப் பகுபதம், நட என்னும் பகுதியும், ஆன் என்னும் விகுதியும், அவைகளுக்கு இடையே எதிhமறை ஆகார விடைநிலையும் பெற்று, அவ்விடைநிலை கெட்டு, வகரவுடம்படு மெய் தோன்றி, அம்மெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது.

நடக்கின்றிலன் என்னும் எதிர்மறைத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், நட என்னும் பகுதியும், அன் என்னும் விகுதியும், கின்று என்னும் நிகழ்கால விடை நிலையும், இல் என்னும் எதிர்மறையிடை நிலையும் பெற்று, கின்றிடை நிலையின் ககரம் மிகுந்து, ஈற்றுகரங் கெட்டு, உகரங்கெட நின்ற றகர மெய்யின் மேல் எதிர்மறையிடை நிலை இகரமேறி, அவ்விடை நிலையீற்று லகர மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

எழுந்திட்டான் என்னும் இறந்தகாலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், ஏழு என்னும் பகுதியும், இடு என்னும் பகுதிப்பொருள் விகுதியும், அவைகளுகடகு இடையே துச்சாரியையும் பெற்று, சாரியைத் தகர மிகுந்து, மிகுந்த தகர வல்லொற்று மெல்லொற்றாக விகாரப்பட்டுச் சாரியையீற்றுகரங் கெட்டு, உகரங் கெட நின்ற தகர மெய்யின் மேல் விகுதி இகரவுயிரேறி, எழுந்திடு என அனைத்தும், ஒரு பகுதியாக நின்று, ஆன் என்னும் ஆண்பால் விகுதி பெற்று, இடு என்பதனுடைய உகரமூர்ந்த டகரமெய் இரட்டி உகரவுயிர் கெட்டு, உகரங்கெட நின்ற டகர மெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது.

கழிந்தின்று என்னும் எதிர்மறை இறந்தகாலத் தெரிநலைமுற்றுப் பகுபதம், கழி என்னும் பகுதியும் று என்னும் ஒன்றன் பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்த காலங் காட்டுந் தகரவிடைநிலையும், அவ்விடைநிலைக்கும், விகுதிக்கும் இடையே இல் என்னும் எதிர்மறையிடை நிலையும் பெற்று, காலவிடை நிலைத் தகரம் மிகுந்து, மிகுந்த தகரவல்லொற்று மெல்லொற்றாக விகாரப்பட்டு, இடைநிலைத் தகரமெய்யின் மேல் எதிர்மறையிடைநிலை இகரவுயிரேறி, இடைநிலையீற்று லகரமெய் னகரமெய்யாகத் திரிந்து முடிந்தது. கழிந்திலது என்பது பொருள்.

கோடும் என்னும் எதிர்காலத் தெரிநிலை வினைமற்றுப் பகுபதம், கொள் என்னும் பகுதியும், தும் எந்நுந் தன்மைப்பன்மை எதிர்கால விகுதியும் பெற்று, பகுதி முதல் நீண்டு, பகுதஜயீற்று ளகரங் கெட்டு, விகுதித் தகரம் டகரமாகத் திரிந்து முடிந்தது.

அற்று என்னுங் குறிப்பு விணைமுற்றுப் பகுபதம், அ என்னும் பகுதியும், று என்னும் ஒன்றன் பால் விகுதியும் பெற்று, விகுதி றகரவல்லொற்று மிகுந்து முடிந்தது.

அன்னையர் எனனுங் குறிப்பு வினைமுற்றுப் பகுபதம், அ என்னும் பகுதியும் அர் என்னும் பலர்பால் விகுதியும், இவைகளுக்கு இடையே னகரச்சாரியையும் ஐகாரச்சாரியையும் பெற்று, சாரியை னகரமெய்யின்மேற் சாரியை ஐகாரவுயிரேறி, யகரவுடம்படு மெய் தோன்றி, அம்மெய்யின் மேல் விகுதி அகரவுயிரெறி முடிந்தது.

இன்று என்னுங் குறிப்பு வினைமுற்றுப் பகுபதம், இல் என்னும் பகுதியும், று என்னும் ஒன்றன்பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று லகரமெய் னகரமெய்யாகத் திரிந்து முடிந்தது.

உயர்த்துகிற்பன் என்னும் எதரிகாலத் தெரிநிலைமுற்றுப் பகுபதம், உணர்ந்து என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையு எதிர்காலங் காட்டும் பகரவிடைநிலையும், பகுதிக்குங் காலவிடைநிலைக்கும் இடையே கில் என்னும் ஆற்றல் இடைநிலையும் பெற்று, ஆற்றலிடைநிலையீற்று லகர மெய், றகரமெய்யாகத் திரிந்து, இடைநிலைப் பகரத்தின்மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

செய் என்னும் முன்னிலை யேலொருமை வினைமுற்றுப் பகுபதம், செய் என்னும் பகுதியோடு ஆய் என்னும்

அற்று என்பது இறந்தகால வினையெச்சப் பகுபதமாயின், அறு பகுதி; உகரமூர்த்த றகரமெய் இரட்டித்து முடிந்தது எனக்கொள்க.

முன்னிலையேவல் விகுதி புணர்ந்து, அவ்விகுதி கெட்டு முடிந்தது



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 6:42 pm

பெயரெச்சப் பகுபதங்கள்

அடித்த என்னும் இறந்தகாலப் பெயரெச்சப் பகுபதம், அடி என்னம் பகுதியும், அ என்னும் பெயரெச்ச விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்தகாலங் காட்டும் தகரவிடைநிலையும் பெற்று, இடைநிலைத்தகரம் மிகுந்து, இடைநிலைத் தகரமெய்யின்மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

அடிக்கின்ற என்னும் நிகழ்காலப் பெயரெச்சப் பகுபதம், அடி என்னும் பகுதியும், என்னும் பெயரெச்ச விகுதியும், அவைகளுக்கிடையே கின்று என்னம் நிகழ்காலவிடைநிலையும் பெற்று, இடைநிலைக் ககரம் மிகுந்து, இடைநிலைறீற்றுகரங் கெட்டு, உகரங்கெட, நின்ற றகரமெய்யின்மேல் விகுதி அகரவுயிரேறிமுடிந்தது.

வினையெச்சப் பகுபதங்கள்

நின்று என்னும் இறந்தகால வினையெச்சப் பகுபதம், நில் என்னும் பகுதியும், உ என்னும் வினையெச்ச விகுதியும், அவைகளுக்கிடையே இறந்தகாலங்காட்டும் றகரவிடைநிலையும் பெற்று, பகுதியீற்று லகரமெய் இடைநிலை றகர மெய்க்கு இனமாகிய னகரமெய்யாகத் திரிந்து, இடை நிலை றகரமெய்யின் மேல் விகுதி உகரவுயிரேறி முடிந்தது.

நிற்க என்னும் முக்காலத்திற்கும் உரிய வினையெச்சப் பகுபதம், நில் என்னும் பகுதியும், இன் என்னும் எதிர்கால வினையெச்ச விகுதியும், அவைகளுக்கு இடையே குச்சாரியையும் பெற்று, பகுதியீற்று லகரமெய் றகர மெய்யாகத் திரிந்து, சாரியையீற்று உகரங்கெட்டு, உகரங் கெட நின்ற அகரமெய்யின் மேல் இகரவுயிரேறி முடிந்தது.

தோன்றியக்கால் என்னும் எதிர்கால வினையெச்சப் பகுபதம், தோன்று என்னும் பகுதியும், கால் என்னும் எதிர்கால வினையெச்ச விகுதியும், அவைகளுக்கு இடையே இன் சாரியையும் அகரச்சாரியையும் பெற்று, பகுதியீற்று உகரங் கெட்டு, உகலங் கெட நின்ற றகர மெய்யின்மேற் சாரியை இகரவுயிரெறி, சாரியையீற்று னகரமெய் குறைந்து, யகரவுடம்படுமெய் தோன்றி, அம்மெய்யின் மேற் சாரியை அகரவுயிரேறி, விகுதிக் ககரமிகுந்து முடிந்தது.

• நிற்க என்பது வியங்கோள் வினைமுற்றுப் பகுபதமாயின், நில் பகுதி, கூ வியங்கோள் விகுதி.

பின்வரும் பொதுப் பகுபதங்களை முடிக்க:-


சாவான்: 1) 2) 3) உடன்பாட்டு தெரிநிலை வினைமுற்று
எதிர்மறை தெரிநிலை வினைமுற்று
எதிர்கால வினையெச்சம்
செய்யாய்: 1) 2) முன்னிலையேவற் பன்மைவினைமுற்று
முன்னிலையொருமை யெதிர்மறை வினைமுற்று
செய்யீர் 1) 2) முன்னிலையேவற் பன்மை வினைமுற்று
முன்னிலைப் பன்மையெதிர்மறை வினைமுற்று
தழைப்ப: 1) 2) 3) பலர்பாற் படர்க்கை வினைமுற்று
பலவின்பாற் படர்க்கை வினைமுற்று
செயவெனெச்சம்
அன்ன: 1) 2) குறிப்பு வினைமுற்று
குறிப்புவினைப்பெயரெச்சம்
செவ்விய: 1) 2) குறிப்பு வினைமுற்று
குறிப்புவினைப்பெயரெச்சம்
வேட்கும்: 1) 2) எதிர்கால வினைமுற்று
எதிர்காலப் பெயரெச்சம்
வந்து: 1) 2) தன்மையொருமை வினைமுற்று
இறந்தகால வினையெச்சம்
உண்டு: 1) 2) 3) தன்மையொருமை வினைமுற்று
இறந்தகால வினையெச்சம்
அஃறிணையொன்றன்பாற் படர்க்கைக் குறிப்பு வினைமுற்று
தேடிய: 1) 2) 3) 4) இறந்தகால வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
இறந்தகால பெயரெச்சம்
எதிர்கால வினையெச்சம்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 6:43 pm

சொல்லினங் கூறுதல்

அவன் வந்தான்

அவன், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைச் சுட்டுப் பெயர்; திரிபின்மையாகிய எழுவாய்யுரு பேற்றது; அது வந்தான் என்னும் வினைப் பயனிலை கொண்டது.

வந்தான், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கை யயிறந்தகால எடன்பாட்டுத் தெரிநிலை வினை முற்று; அது அவன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாய் நின்றது.

கொலை செய்தவன் நரகத்தில் வீழ்ந்து வருந்துவான்

கொலை, எ-து. தொழிற்பெயர்; ஆக்கப்படு பொருளில் வந்த ஐ என்னும் இரண்டனுருபேற்றது; அது செய்தவன் என்னும் வினை கொண்டது.

செய்தவன், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கையிறந்தகால உடன்பாட்டுத் தெரிநிலை விணையாலணையும் பெயர்; திரிபின்மையாகிய எழுவாயுருபேற்றது; அது வருந்துவான் என்னும் வினைப் பயனிலை கொண்டது.

நரகம், எ-து. பால்பகாவஃறிணைப் படர்க்கைப் பெயர்; பிறிதின்கிழமைப் பொருட்கு இடமிடமாக நிற்கும் இடப்பொருளில் வந்த அல் என்னும் ஏழனுருபேற்றது; அது வீழ்ந்து என்னும் வினை கொண்டது.

அத்து, எ-து. சாரியையுருபிடைச் சொல். வீழ்ந்து, எ-து. செய்தென்வாய்ப்பாட்டிறந்தகால உடன்பாட்டுத் தெரிநிலைவிணை வினையெச்சம்; வருந்துவான் என்னும் வினை கொண்டது.

வருந்துவான், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கை யெதிர்கால உடன்பாட்டுத் தெரிநிலை வினைமுற்று; செய்தவன் என்னும் எழுவாய்குப் பயனிலையாய் நின்றது.

கொற்றனானவன் தன்னை யெதிர்த்த பகைவரை வாளான்மாய வெட்டினான்.

கொற்றன், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைப் பெயர், ஆனவன் என்னும் எழுவாய்ச் சொல்லுருபேற்றது; அது வெட்டினான் என்னும் வினைப் பயனிலை கொண்டது.

தான், எ-து. ஒருமைப் படர்க்கைப் பொதுப் பெயர்; அடையப்படுபொருளில் வந்த ஐ என்னும் இரண்டனுருபேற்றது; அது எதிர்த்த என்னும் வினை கொண்டது.

எதிர்த்த, எ-து. செய்தவென்வாய்ப்பாட்டிறந்தகால உடன்பாட்டுத் தெரிநிலைவினைப் பெயரெச்சம்; பகைவர் என்னும் வினைமுதற் பெயர் கொண்டது.

பகைவர், எ-து. உயர்திணைப் பலர் பாற் படர்க்கைப் பெயர்; அழிக்கப்படுபொருள் வந்த ஐ என்னும் இரண்டனுருபேற்றது; அது வெட்டினான் என்னும் வினை கொண்டது.

வாள், எ-து. பால்பகாவஃறிணைப் படர்க்கைப் பெயர்; கருவிப் பொருளில வந்த ஆல் என்னும் மூன்றனுருபேற்றது; அது வெட்டினான் என்னும் வினை கொண்டது.

மாய, எ-து. செயவென்வாய்ப்பாட்டு முக்காலத்திற்கு முரிய தெரிநிலைவினை வினையெச்சம்; இங்கே காரியப் பொருளில் வந்தமையால் எதிர்காலத்து; வெட்டினான் என்னும் வினை கொண்டது.

வெட்டினான், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கையிறந்தகால உடன்பாட்டுத் தெரிநிலை வினை முற்று; கொற்றன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாய் நின்றது.

சொற்றொடரிலக்கணங் கூறுதல்

அவன் வந்தான் - அல் வழிச்சந்தியில் எழுவாய்த் தொடர்.

கொலை செய்தவன் - வேற்றுமைச் சந்தியில் இரண்டாம் வேற்றுமைத் தொகை

செய்தவன் நரகத்தில் - அல்வழிச் சந்தியில் தழாத் தொடராகிய எழுவாய்த்தொடர்.

நரகத்தில் வீழ்ந்து - வேற்றுமைச் சந்தியில் ஏழாம் வேற்றுமை விரி.

வீழ்ந்து வருந்துவான் - அல் வழிச் சந்தியில் வினையெச்சத் தொடர்.

தாழாத்தொடராவது சிலைமொழியானது வருமொழியைப் பொருட்பொருத்தமுறத் தழுவாத தொடர் பொருட்பொருத்தமுறத் தழுவிய தொடர் தழுவு தொடர்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 6:51 pm

பகுதி

42. பகுதிகளாவன, பகுபதங்களின் முதலிலே நிற்கும் பகாப்பதங்களாம்.
---

43. பெயர்ப்பகுபதங்களுக்குப் பெரும்பாலும் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில், என்னும் ஆறவகைப் பெயர்ச்சொற்களும், சிறுபான்மை சுட்டிடைச் சொற்கள், வினாவிடைச் சொற்கள், பிற மற்று என்னும் இடைச்சொற்களும், பகுதிகளாய் வரும்.
உதாரணம்.
(1) பொன்னன், நிலத்தன், தையான், பல்லன், கரியன், நடையன்.
(2) அவன், இவன், உவன், எவன், ஏவன், யாவன், பிறன், மற்றையன்.
---

44. வினைக்குறிப்பு பகுபதங்களுக்கு, மேற்சொல்லப்பட்டனவாகிய அறுவகைப் பெயர்ச்சொற்களும், இடைச்சொற்களும், பகுதிகளாய் வரும்.
உதாரணம்.
(1) பொன்னன், நிலத்தன், தையான், பல்லன், கரியன், நடையன்.
(2) ஆற்று, இற்று, எற்று
---

45. மை விகுதி புணர்ந்து நின்ற செம்மை கருமை முதலிய பண்புப் பெயர்கள், விகுதி புணரும்பொழுது, பெரும்பாலும் விகாரப்பட்டு வரும். இவை விகாரப்படுதல் பதப்புணர்ச்சிக்குங் கொள்க.
உதாரணம்.
அணியன்: இங்கே அணிமையின் மை விகுதி கெட்டது.
கரியன்: இங்கே கருமையின் மைவிகுதி கெட்டு, நடு உகரம் இகரமாய்த் திரிந்தது.
பாசி: இங்மே பசுமையின் மைவிகுதி கெட்டு, முதல் நீண்டது.
பேரறிவு: இங்மே பெருமையின் மைவிகுதியோடு நடு நின்ற உகரவுயிர் கெட்டு முதல் நீண்டது.
குருங்குதிரை: இங்கே கருமையின் மைவிகுதி கெட்டு, வரும் வல்லெழுத்திற்கு இனமெல்லெழுத்து மிகுந்தது.
பைந்தர்: இங்கே பகமையின் மை விகுதியோடு நடு நின்ற ககரவுயிர் மெய் கெட்டு, முதலகரம் ஐகாரமாய் திரிந்து, வரும் வல்லெழுத்துக்கு இன மெல்லெழுத்து மிகுந்நது.
வெற்றிலை: இங்கே வெறுமையின் மைவிகுதி கெட்டு, நடு நின்ற மெய் இரட்டித்தது.
சேதாம்பல்: இங்கே செம்மையின் மைவிகுதி கெட்டு, முதல் நீண்டு, நடு நின்ற, மகரமெய் தகரமெய்யாய்த் திரிந்தது.
---

46. தெரிநிலைவினைப் பகுபதங்களுக்குப் பெரும்பாலும் நட வா முதலிய வினைச்சொற்களும், சிறுபான்மை பெயர்ச்சொல் இடைச்சொல் உரிச்சொற்களும், பகுதிகளாய் வரும்.
உதாரணம்.
நட, நடந்தான் வினையடி
வா, வந்தான்
நில், நின்றான்
காண், கண்டான்
சித்திரம், சித்திரித்தான் பெயரடி
கடைக்கண், கடைக்கணித்தான்
போல், பொன்போன்றான் இடையடி
நிகர், புலிநிகர்த்தான்
சால், சான்றான் உரியடி
மாண், மாண்டான்
---

47. தெரிநிலைவினைப் பகுதிகள், விகுதி முதலியவற்றோடு புணரும்போது, இயல்பாகியும், விகாரமாகியும் வரும்.
உதாரணம்.
1. தொழு: தொழுதான் இயலபாகி வந்தன உண், உண்டான்
2. சேறல்: இங்கே சொல்லென்பகுதி முதல் நீண்டது.
தந்தான்: இங்கே தாவென்பகுதி முதல் குறகியது.
தருகின்றான்: இங்கே தாவென்பகுதி முதல் குறுகி, ருகரவுயிர்மெய் விரியப்பெற்றது.
செத்தான்: இங்கே சாவென்பகுதி முதலாகரம் எகராமாய்த் திரிந்தது.
விராவினான்: இங்கே விராவென்பகுதி நடுக்குறில் நீண்டது.
கொணார்ந்தான்: இங்கே கொணாவென் பகுதியீற்று நெடில் குறிகி, ரகரமெய் விரிந்தது.
கற்றான்: இங்கே கல்லென் பகுதியீற்று மெய் வருமெழுத்தாய்த் திரிந்தது.
சென்றான்: இங்கே சொல்லென் பகுதியீற்று மெய் வருமெழுத்துக்கு இனமாய்த் திரிந்தது.
----

48. தொரிநிலை வினைப்பகுதிகள், வி, பி, முதலிய விகுதி பெற்றேனும், விகாரப்பட்டேனும், விகாரப்பட்டு விகுதி பெற்றேனும், பிறவினைப் பகுதிகளாய் வரும்.
உதாரணம்.
1. செய், செய்வி, செய்வித்தான் நட, நடப்பி, நடப்பித்தான்
2. திருந்து, திருத்து, திருத்தினான் ஆடு, ஆட்டு, ஆட்டினான் தேறு, தேற்று, தேற்றினான் உருகு, உருக்கு, உருக்கினான்
3. திருத்து, திருத்துவி, திருத்துவித்தான் ஆட்டு, ஆட்டுவி, ஆட்டுவித்தான் தேற்று, தேற்றுவி, தேற்றிவித்தான் உருக்கு, உருக்குவி, உருக்குவித்தான்
----

49. பொன்னன், கரியன், முதலானவை, எட்டு வேற்றுமைகளுள் ஒன்றை யேற்கும் போது பெயர்ப்பகுபதங்களாம்: முக்காலங்களுள் ஒன்றைக் குறிப்பாகக் காட்டும்போது வினைக்குறிப்பு முற்றுப்பகுபதங்களாம்: காலங்காட்டுதலோடு வேற்றுமையேற்கும் போது குறிப்பு வினையாலணையும் பெயர்ப்பகுபதங்களாம். இவையே இம் மூன்றுக்கும் வேறுபாடம்.
---

50. நடந்தான், வந்தான், முதலானவை காலங்காட்டும் போது தெரிநிலை வினை முற்றப் பகுபதங்களாம்: காலங்காட்டுதலோடு வேற்றுமையேற்கும்போது தெரிநிலை வினையாலணையும் பெயர்ப்பகுபதங்களாம். இவையே இவ்விரண்டுக்கும் வேறுபாடாம்.2

தேர்வு வினாக்கள்
42. பகுதிகளாவன யாவை?
43. பெயர்ப் பகுபதங்களுக்குப் பகுதிகள் எவை?
44. வினைக்குறிப்புப் பகுபதங்களுக்குப் பகுதிகள் எவை?
45. விகுதி புணரும் பொழுது விகாரப்பட்டு வரும் பெயர்களும் உளவோ?
46. தெரிநிலை வினைப் பகுபதங்களுக்குப் பகுதிகள் எவை?
47. தெரிநிலை வினைப்பகுதிகள் விகுதி முதலியவற்றோடு புணரும் பொழுது எப்படி வரும்?
48. தெரிநிலை வினைப்பகுதிகள் பிறவினைப் பகுதிகளாமிடத்து எப்படி வரும்?
49. பெயர்ப்பகுபதம் குறிப்பு வினைமுற்;றுப் பகுபதம் குறிப்பு வினையாலணையும் பெயர்ப்பகுபதம் என்னும் மூன்றுக்கும் வேறுபாடு என்ன?
50. தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், தெரிநிலை வினையாலணையும் பெயர்ப் பகுபதம் என்னும் இரண்டுக்கும் வேறுபாடு என்ன?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 6:52 pm

விகுதி
51. விகுதிகளாவன, பகுபதங்களின் இறுதியிலே இடைப்பதங்களாகும்.
---

52. பெயர் விகுதிகள், அன், ஆன், மன்,மான், ன், அள்,ஆள், இ, ள், அர், ஆர், மார், கள், ர், து, அ, வை, வ், தை, கை, பி, முன், அல், என்னும் இருபத்து மூன்றும் பிறவுமாம்.
உதாரணம். குழையன், வாகத்தான், வடமன், கோமான், பிறன், குழையள், வானத்தாள், அரசி, பறள், குழையர், வானத்தார், தேவிமார், கோக்கள், பிறர், அது, குநற்தாளன, அவை, எந்தை, எங்கை, எம்பி, எம்முன், தோன்றல்.
----

53. தொழிற்பெயர்விகுதிகள், தல், அல், அம், ஐ, கை,வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து என்னும் பத்தொன்பதும் பிறவுமாம்.
உதாரணம். நடத்தல், ஆடல், வாட்டம், கொலை, நடக்கை, பார்வை, போக்கு, நடப்பு, வரவு, மறதி, புணர்ச்சி, புலவி, விக்குள், சாக்காடு, கோட்பாடு, தோற்றரவு, வாரானை, நடவாமை, பாய்த்து என வரும்.
மை விகுதி, செய்தமை, செய்கின்றமை, என இறந்த காலவிடை நிலை, நிகழ்காலவிடை நிலைகளோடு கூடியும் வரும்.
துவ்விகுதி, அவர் செய்தது, செய்கின்றது. செய்வது என முக்கால விடைநிலைகளோடு கூடியும் வரும்.
----

54. பண்புப் பெயர்விகுதிகள், மை, ஐ, சி, பு, உ, கு, றி, று, அம், நர், என்னும் பத்தும் பிறவுமாம்.
உதாரணம். நன்மை, தொல்லை, மாட்சி, மான்பு, மழவு, நன்கு, நன்றி, நன்று, நலம், நன்னர் என வருமு;.
---

55. தெரிநிலை வினைமுற்று விகுதிகள், அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார், அ, ஆ, கு, டு, து, று, என், ஏன், அல், அம், ஆம், எம், ஏம், ஒம், கும், டுமு;, தும், றும், ஐ, ஆய், இ, இர், ஈர், க, இய, இயர், ஆல், ஏல், மின், உம் என்னும் முப்பெத்தெட்டும் பிறவுமாம்.
உதாரணம்.
நடந்தனன், நடந்தான், நடந்தனள், நடந்தாள், நடந்தனர், நடந்தார், நடப்ப, நடமார், நடந்தன, நடவா, உண்கு, உண்டு, நடந்தது, கூயிற்று, நடந்தெனன், நடந்தேன், நடப்பல், நடப்பம், நடப்பாம், நடப்பெம், நடப்பேம், நடப்போம், உண்கும், உண்டும், வருதும், சேறும், நடந்தனை, நடந்தாய், நடத்தி, நடந்தனிர், நடந்தீர், வாழ்க, வாழிய, வாழியர், மாறல், அழேல், நடமின், உண்ணும்.
---

56. குறிப்பு வினைமுற்று விகுதிகள், அன், ஆன், அள், ஆள், அர், ஆர், அ,
டு, து, று, என், ஏன், அம், ஆம், எம், ஏம், ஒம், ஐ, ஆய், இ, இர், ஈர், என்னும் இருபத்திரண்டும் பிறவுமாம்.
உதாரணம்.
கரியன், கரியான், கரியள், கரியாள், கரியர், கரியார், கரியன, குநற்தட்டு, கரிது, குழையிற்று, கரியென், கரியேன், கரியம், கரியாம், கரியெம், கரியேம், கரியோம், கரியை, கரியாய், வில்லி, கரியிர், கரியீர்.
---

57. தெரிநிலை வினைப் பெயரெச்ச விகுதிகள், அ, உம், என்னும் இரண்டுமாம்.
உதாரணம்.
செய்த, செய்கின்ற் செய்யும்.
குறிப்பு வினைப்பெயரெச்சவிகுதி, அ ஒன்றேயாம். உம், விகுதி, இடைநிலையேலாது, தானே எதிர்காலங்காட்டலாற் குறிப்பு வiனைப் பெயரெச்சத்துக்கு வாராது.
உதாரணம். கரிய
---

58. தெரிநிலைவினை வினையெச்ச விகுதிகள், உ, இ, ய், பு, ஆ, ஊ, என, அ, இன், ஆல், கால், ஏல், எனின், ஆயின், ஏனும், கு, இய, இயர், வான், பான், பாக்கு, கடை, வழி, இடத்து, உம், மல், மை, மே என்னும் இருபத்தெட்டும் பிறவுமாம். இவற்றுள், இறுதியிற்கூறிய மல், மை, மே என்னும் மூன்று விகுதிகளும் எதிர்மறையில் வரும்.
உதாரணம்.
நடந்து, ஒடி, போய், உண்குபு, உண்ணா, உண்ணுh, உண்ணென, உண்ண, உண்ணின், உண்டால், உண்டகடகால், உண்டானேல், உண்டானெனின், உண்டானாயின், உண்டானெனும், உணற்கு, உண்ணிய, உண்ணியர், வருவான், உண்பான், உண்பாக்கு, செய்தக்கடை, செய்தவழி, செய்தவிடத்து, காண்டலும், உண்ணாமல், உண்ணாமை, உண்ணாமே.
குறிப்பு வினை வினையெச்ச விகுதிகள், அ, றி, து, ஆல், மல், கடை, வழி, இடத்து, என்னும் எட்டும் பிறவுமாம்.
உதாரணம்.
மெல்ல, அன்றி, அல்லது, அல்லால், அல்லாமல், அல்லாக்கடை, அல்லாவழி, அல்லாவிடத்து.
----

59. பிறவினை விகுதிகள், வி, பி, கு, சு, டு. து, பு, று என்னம் எட்டுமாம்.
உதாரணம்.
செய்வி, நடப்பி, போக்கு, பாய்ச்சு, உருட்டு, நடத்து, எழுப்பு, துயிற்று.
---

60. இ, ஐ, அம் என்னும் மூன்று விகுதிகளும், வினைமுதற்பொருளையுஞ் செயற்படு பொருளையும் கருவிப்பொருளையும் உணர்த்தும்.
உதாரணம்.
1. அலரி, பறவை, எச்சம், என்பன வினைமுதற்பொருளை உணர்த்தின. இவை முறையே, அலர்வது, பறப்பது, எஞ்சுவது, எனப் பொருள் படும்.
2. ஊருணி, தொடை, தேட்டம், என்பன செயற்படு பொருளை உணர்த்தின. இவை முறையே, ஊராலுண்ணப் படுவது, தொடுக்கப்படுவது, தேடபபடுவது எஎனப்பொருள்படும்.
3. மண்வெட்டி, பார்வை, நோக்கம், என்பன, கருவிப்பொருளை, உணர்த்தின. இவை முறையே, டண்வெட்டற்கருவி, பார்த்தற் கருவி, நோக்கற்கருவி எனப் பொருள்படும்.
----

61. இதுவரையுங் கூறிய விகுதிகளேயன்றிப் பிற விகுதிகளும் உண்டு. அவை வருமாறு:-
விடு, ஒழி, விகுதிகள், துணிவுப்பொருளை உணர்த்தும்.
உதாரணம்.
வந்துவிட்டான், கெட்டொழிந்தான், என வரும்.
கொள்விகுதி, தற்பொருட்டுப் பொருள் உணர்த்தும்.
உதாரணம்.
அடித்துக்கொண்டான்.
படு, உண், விகுதிகள் செயப்பாட்டு வினைப்பொருள் உணர்த்தும்.
உதாரணம்.
கட்டப்பட்டான், கட்டுண்டான்.
மை விகுதி தன்மைப்பொருள் உணர்த்தும்.
உதாரணம்.
பொன்மை, ஆண்மை
இரு, இடு, என்பன, தமக்கென வேறுபொருள் இன்றிப் பகுதிப்பொருள் இன்றிப் பகுதிப்பொருள் விகுதியாய் வரும்.
உதாரணம். எழுசந்திருக்கின்றான், உரைத்திடுக்கின்றான்.

தேர்வு வினாக்கள்
51. விகுதிகளாவன யாவை?
52. பெயர் விகுதிகள் எவை?
53. தொழிற்பெயர் விகுதிகள் எவை?
54. பண்புப்பெயர் விகுதிகள் எவை?
55. தெரிநிலை வினைமுற்று விகுதிகள் எவை?
56. குறிப்பு வினைமுற்று விகுதிகள் எவை?
57. தெரிநிலை விiனாப் பெயரெச்ச விகுதிகள் எவை?
58. தெரிநிலை வினை வினையெச்ச விகுதிகள் எவை?
குறிப்புவினை வினையெச்ச விகுதிகள் எவை?
59. பிறவினை விகுதிகள் எவை?
60. வினை முதற்பொருள் செயற்படு பொருள் கருவிப்பொருள்களை உணர்த்தும் விகுதிகள் எவை?
61. துணிவுப் பொருளுணர்த்தும் விகுதிகள் எவை?
தற்பொருட்டுப் பொருளுணர்த்தும் விகுதி எது?
செயற்பாட்டு வினைப்பொருளுணர்த்தும் விகுதிகள் எவை?
தன்மைப்பொருளுணர்த்தும் விகுதி எது? பகுதிப்பொருள் விகுதிகள் எவை?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 6:53 pm

புணர்ந்து கெடும் விகுதி

62. முன்னிலையேவலொருமை ஆய் விகுதியும், பெயெரெச்ச விகுதியும், தொழிற்பெயர் விகுதியும், வினைமுதற் பொருளை உணர்த்தும் ஐ விகுதியும், பகுதியோடு புணர்ந்து நின்றாற் போலவே தம்பொருளை உணர்த்தும்.

உதாரணம். நீ, நட, நீ நடப்பி: இவைகளிலே ஆய் விகுதி புணர்ந்து கெட்டது.
கொல்களிறு, ஒடாக்குதிரை: இவைகளிலே பெயரெச்ச விகுதிகள் புணர்ந்து கெட்டன.
அடி, கேடு, இடையீடு : இவைகளிலே தல்லென்னுந் தொழிற்பெயர் விகுதி புணர்ந்து கெட்டது.
காய், தளிர், பூ, கனி : இவைகளிலே வினைமுதற் பொருளை உணர்த்தும் இகரவிகுதி புணர்ந்து கெட்டது.
ஊண், தீன், எழுத்து : இவைகளிலே செயப்படு பொருளை உணர்த்தும் ஐ விகுதி புணர்ந்து கெட்டது.

தேர்வு வினா
62. பகுதியோடு புணர்ந்து பின்கெடும் விகுதிகள் எவை?


---

இடைநிலை
63.இடைநிலைகளாவன, பகுபதங்களிலே பகுதிக்கும் விகுதிக்கும் நடுவிலே நிற்கும் இடைப்பகாப்பதங்களாம். அவை, காலங்காட்டாவிடைநிலையும், காலங்காட்டுமிடைநிலையும் என இரண்டு வகைப்படும்.
---

64. காலங்காட்டாவிடைநிலைகள் பெயர்ப்பகுபதங்களுக்கு வரும்.
உதாரணம்.
அறிஞன் .. ஜஞஇடைநிலைஸ
ஒதுவான் .. ஜவ இடைநிலைஸ
வலைச்சி .. ஜச இடைநிலைஸ
வண்ணாத்தி .. ஜத இடைநிலைஸ
---

65. காலங்காட்டுமிடைநிலைகள் தெரிநிலைவினைப் பகுபதங்களுக்கு வரும்.
அவை, இறந்தகாலவிடைநிலையும், நிகழ்காலவிடைநிலையும், எதிர்காலவிடைநிலையும் என, மூன்று வகைப்படும்.
---

66. இறந்தகாலவிடைநிலைகள், த், ட், ற், இன், என்னும் நான்குமாம்.
உதாரணம்.
செய்தான், உண்டான், தின்றான், ஓடினான்.
சிறுபான்மை இன்னிடைநிலை, போனான், என இகரங்குறைந்தும், எஞ்சியது என னகர மெய் குறைந்தும் வரும். பேயாது என யகரமெய் இறந்தகாலவிடைநிலையாயும் வரும்.
---

67. நிகழ்காலவிடைநிலைகள், ஆநின்று, கின்று, கிறு என்னும் மூன்றுமாம்.
உதாரணம்.
நடவாநின்றான், நடக்கின்றான், நடக்கிறான்.
---

68. எதிர்கால விடைநிலைகள், ப், வ், என்னும் இரண்டுமாம்.
உதாரணம்.
நடப்பான், செய்வான்.

தோர்வு வினாக்கள்
62. இடைநிலைகளாவன யாவை?
63. அவை எடதனை வகைப்படும்?
64. காலங்காட்ட விடைநிலைகள் எப்பகுபதங்களுக்கு வரும்?
65. காலங்காட்டுமிடைநிலைகள் எப்பகுபதங்களுக்கு வரும்?
ஆவை எத்தனை வகைப்படும்?
66. இறந்தகால விடைநிலைகள் எவை?
67. நிகழ்கால விடைநிலைகள் எவை?
68. எதிர்கால விடைநிலைகள் எவை?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக