புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10 
5 Posts - 3%
Manimegala
இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10 
435 Posts - 47%
heezulia
இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10 
30 Posts - 3%
prajai
இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கணச் சுருக்கம்


   
   

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 2:00 am

First topic message reminder :

இலக்கணச் சுருக்கம் - ஆறுமுகநாவலர்


முதலாவது: எழுத்ததிகாரம்

1.1. எழுத்தியல்

இலக்கண நூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்நு விதிப்படி எழுதுவதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம்.
-----

2. அந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழியதிகாரம் என, மூன்றதிதிகாரங்களாக வகுக்கப்படும்.

எழுத்துக்களின் பெயர்
3. எழுத்தாவது சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம்
-----

4. அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து என நான்கு வகைப்படும்.
-----

5. உயிரெழுத்துக்கள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்னும் பன்னிரண்டெழுத்துக்களுமாம். இவை ஆவி எனவும் பெயர் பெறும்.
-----

6. உயிரெழுத்துக்கள், குற்றெழுத்து, நெட்டெழுத்து, என இரண்டு வகைப்படும்.
-----

7. குற்றெழுத்துக்கள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை குறில் எனவும் பெயர் பெறும்.
-----

8. நெட்டெழுத்துக்கள், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழமாம். இவை நெடில் எனவும் பெயர் பெறும்
-----

9. மெய்யெழுத்துக்கள், க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டெழுத்துக்களுமாகும்.
இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும்.
-----

10. மெய்யெழுத்துக்கள், வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என மூன்று வகைப்படும்.
-----

11. வல்லெழுத்துக்கள், க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறுமாம்.
இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர் பெறும்.
-----

12. மெல்லெழுத்துக்கள், ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம்.
இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர் பெறும்.
-----

13. இடையெழுத்துக்கள், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம்.
இவை இடையினம், இடைக்கணம், இடை எனவும் பெயர் பெறும்.
-----

14. அ, இ, உ என்னும் மூன்றும், மொழிக்கு முதலிலே சுட்டுப் பொருளில் வரும்போது, சுட்டெழுத்துக்களாம். உதாரணம்.
அவன், இவன், உவன்,
அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன்.
-----

15.எகரம் மொழிக்கு முதலிலும், அகரமும் ஒகாரமும் மொழிக்கு கடையிலும், வினாப்பொருளில் வரும் போது, வினாவெழுத்துக்களாம்.உதாரணம்.
எவன், எக்கொற்றன்
கொற்றான, கொற்றனோ
ஏவன், கொற்றனே
யா என்னும் உயிர் மெய்யும், மொழிக்கு முதலிலே வினாப் பொருளில் வரும் போது வினாவெழுத்தாம்
-----

16. அகரத்துக்கு ஆகாரமும், இகரத்துக்கு ஈகாரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், உகரத்துக்கு ஊகாரமும், எகரத்துக்கு ஏகாரமும், ஐகாரத்துக்கு இகரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், ஒளகாரத்துக்கு உகரமும், ககரத்துக்கு ஙகரமும், சகரத்துக்கு ஞகரமும், டகரத்துக்கு ணகரமும், தகரத்துக்கு நகரமும், பகரத்துக்கு மகரமும், றகரத்துக்கு னகரமும், இன வெழுத்துக்களாம். இடையெழுத்தாறும். ஓரினமாகும்; அவை இவ்விரண்டோரினமாகாவாம்.
-----

17. உயிர் மெய்யெழுத்துக்களாவன. புன்னிரண்டுயிரும் பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறிவருதலாகிய இருநாற்றுப்பதினாறுமாம்.

அவை, க, கா, கி, கீ முதலியவைகளாம்.

உயிர் மெய்க்குற்றெழுத்துத் தொண்ணூறு; உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு; ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.

ஊயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் மெல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு, ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.
-----

18. ஆய்தவெழுத்தாவது, குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வரும் ஓரெழுத்தாகும்.
உதாரணம். எஃகு, கஃசு, அஃது, பஃறி
-----

19. மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டும், மெய்பதினெட்டும், உயிர்மெய் இருநாற்றுப் பதினாறும், ஆய்தம் ஒன்றும் ஆகிய இருநாற்று நாற்பத்தேழெழுத்துக்களுந் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கி வருதல் கண்டு கொள்க.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 3:35 am

லகர ளகர வீற்றுப் புணர்ச்சி
149. லகர ளகரங்களில் முன் வல்லினம் வரின், வேற்றுமையிலும் அல்வழியிலே பண்புத் தொகையிலும், உவமைத் தொகையிலும், இறுதி லகரம் றகரமாகவும் ளகரம் டகரமாகவுந் திரியும். எழுவாய்த் தொடரினுலும் உம்மைத் தொகையிலுந் திரியாதியல்பாம்.
உதாரணம்.
பாற்குடம் அருட்பெருமை - வேற்றுமை
வேற்படை அருட்செல்வம் - பண்புத்தொகை
வேற்கண் வாட்கண் - உவமைத் தொகை
குயில்கரிது பொருள் பெரிது - எழுவாய்
கால்கை பொருள்புகழ் - உம்மைத்தொகை
பால் குடித்தான், அருள்பெற்றான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், கால்குதித்தோடினான், வால்போழ்ந்திட்டான் என மூன்றாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து திரியாவெனக்கொள்க.
----

150. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த ல ள க்கள், வல்லினம் வரின், எழுவாய்த் தொடரிலும், உம்மைதொகையிலும், ஒரு கால் இயல்பாகவும், ஒரு காற்திரியவும் பெறும்.
உதாரணம்.
கல் குறிது
முள் சிறிது கற்குறிது
முட்சிறிது எழுவாய்
அல் பகல்
உள் புறம் அட்பகல்
உட்புறம் உண்மைத்தொகை
நொல், செல், கொள், சொல் இந்நான்கீற்றின் லகரவொற்று, நெற்கடிது, செற்கடிது, கெற்சிறிது, சொற்பெரிது என எழுவாய்த்தெர்டரிலும் உறழாது திரிதே வரும்.
செல் - மேகம், கொல் - கொல்லன்
உறழ்ச்சியாவது ஒரு கால் இயல்பாகியும், ஒரு கால் விகாரப்பட்டும் வருதல். உறாழ்ச்சி எனினும், விகற்ப்ப வினுமெனினும் ஓங்கும்.
கற்கரித்தான், கட்குடித்தான் எனத்தனிக் கூற்றெழுத்தை சார்ந்h ல ள க்கள், இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்தும், இயல்பாகாது. திரிந்தே நிற்கும்.
----

151 அல்வழி வேற்றுமை இரண்டினும் லகரத்தின் முன் வருந் தகரம் றகரமாகவும், ளகரத்தின் முன் வருந் தகரம் டகரமாகவுந் திரியும்.
உதாரணம்.
அலவழி வேற்றுமை
கற்றீது கற்றீமை
முட்டீது முட்டீமை
---

152. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த ல ள க்கள், அல் வழியில், வருந் தகரந் திரிந்த விடத்து, றகர டகரங்களாகந் திரிதல்லன்றி, ஆய்தமாகவுந் திரியும்.
உதாரணம்.
கற்றீது கஃறீது
முட்டீது முஃடீது
---

153. தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்து அல்வழியில், எழுவாய்த் தொடரிலும், விழித்தொடரிலும், உண்மைத் தொகையிலும், வினைமுற்றுத் தொடரிலும், வினைத்தொகையிலுந் கெடும்.
உதாரணம்.
வேறீது வாடீது
தோன்றறீயன் வேடீயன் எழுவாய்த் தொடர்
தோன்றாறொடராய் வேடீயை - விளித்தொடர்
காறலை தாடலை - உம்மைத்தொகை
உண்பறமியேன் வந்தாடேவி - வினைமுற்றுத் தொடர்
பயிறோகை அருடேவன் - வினைத்தொகை
குயிற்றிரள், அருட்டிறம் என வேற்றுமையிலும், காற்றுணை, தாட்டுணை எனப் பண்புத்தொகையிலும் பிறங்கற்றோள், வாட்டாரை என உவமைத் தொகையிலும், கெடாது திரிந்து நின்றமை காண்க. பிறங்கள் - மலை, தாரை - கண்
வேறொட்டான், தாடொழுதான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்துக் கெடுமெனக் கொள்க.
நிலைமொழி உயர்திணைப் பெயராயின், தோன்றறாள், வேடோள் என வேற்றுமையினுங் கெடும் எனவும், குரிசிற்றடிந்தான், அவட்டொடர்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாய விடத்துக் கெடாது திரியும் எனவுங் கொள்க.
---

154. லகர ளகரங்களின் முன் மெல்லினம் வரின், இருவழியினும், லகரம் னகரமாகவும், ளகரம் ணகரமாகவுந் திரியும். வரு நகரம் லகரத்தின் முன் னகரமாகவும், ளகரத்தின் முன் ணகரமாகவுந் திரியும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
கல் - கன்ஞெரிந்தது கன்ஞெரி
வில் - வின்னீண்டது வின்னீட்சி
புல் - புன்டாண்டது புன்மாட்சி
முள் - முன்ஞெரிந்நது முண்ஞெரி
புள் - புண்ணீண்டது புண்ணீட்சி
கள் - கண்மாண்டது கண்மாட்சி
-----

155. தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், இரு வழியிலும், வரு நகரந் திரிந்த விடத்துக் கெடும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
வேனன்று வேனன்மை
பொருணன்று பொருணன்மை
-----

156. லகர ளகரங்களின் முன் இடையினம் வரின், இரு வழியினும், இறுதி ல ளக்கள் இயல்பாம்
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
கல்யாது கலயாப்பு
விரல்வலிது விரல்வன்மை
முள்யாது முள்யாப்பு
வாள்வலிது வாள்வன்மை
-----

தேர்வு வினாக்கள்

149. லகர ளகரங்களின் முன் இரு வழியினும் வல்லினம் வரின், எப்படிப் புணரும்?
இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், மூன்றாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாய விடத்து, எப்படியாம்?
150. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த லளக்கள், வல்லினம் வரின், எவ்விடங்களில் ஒரு கால் இயல்பாகவும், ஒருகாற்றிரியவும் பெறும்?
எச் சொற்களின் ஈற்று லகரவொற்று, வல்லினம் வரின், எழுவாய்த் தொடரிற்றிரிந்தே வரும்? உறழ்ச்சியாவது யாது? தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த லளக்கள், இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்து இயல்பேயாமோ?
151. இரு வழியினும் லகரத்தின் முன் வருந் தகரம் எப்படியாம்?
152. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த லளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்துக் றடக்களாதலன்றி வேறு திரிபு பெறுமோ?
153. தனிக்குற்றெழுத்தைச் சாரத லளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்து, கெடுதல் எங்கும் இல்லையோ? தனிக்குற்றெழுத்தைச் சாரத லளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்து, எங்கே கெடாது திரிந்து நிற்கும்?
லளக்கள் வேற்றுமையிற் கெடுதல் எங்கும் இல்லையோ?
உயர்திணைப்பெயாPற்று லளக்கள் வேற்றுமையில் வருந் தகரந் திரிந்த விடத்து எப்படியாம்?
154. லளக்களின் முன் இரு வழியினும் மெல்லினம் வரின் எப்படியாம்?
155. தனிக்குற்றெழுத்தைச் சாராத லளக்கள் இரு வழியினும் வரும் நகரந் திரிந்த விடத்து, எப்படியாம்?
156. லளக்களின் முன் இரு வழியினும் இடையினம் வரின் எப்படியாம்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 3:37 am

வகரவீற்றுப் புணர்ச்சி
157. அவ், இவ், உவ் என்னும் அஃறிணைப் பலவின் பாலை உணர்த்தி வரும் சுட்டுப் பெயர்களின் ஈற்று வகரம், அல்வழியில், வல்லினம் வரின் ஆயுதமாகத் திரியும்: மெல்லினம் வரின் வந்த எழுத்தாகத் திரியும்: இடையினம் வரின் இயல்பாகும்.
உதாரணம்.
அஃகடியன இஃசிறியன உஃபெரியன
அஞ்ஞான்றன இந்நீண்டன உம்மாண்டன
அவ்யாத்தன இவ்வளைந்தன உவ்வாழ்ந்தன

156. தெவ் என்னும் சொல்லீற்று வகரம், யகரமல்லாத மெய்கள் வரின், உகரச்சாரியை பெறும்: மகரம் வருமிடத்து, ஒரோவழி மகரமாகத் திரியவும் பெறும்.

உதாரணம்.
அல்வழி வேற்றுமை
தெவ்வுக் கடிது தெவ்வுக்கடுமை
தெவ்வுமாண்டது தெவ்வுமாட்சி
தெவ்வுவந்தது தெவ்வுவன்மை
தெவ்வுமன்னர் தெவ்வுமுனை
தெம்மன்னர் தெம்முனை
--------

தேர்வு வினாக்கள்
157. சுட்டுப்பெயர்களின் ஈற்று வகரம் அல்வழியில் மூவின மெய்களும் வரின், டிப்படியாம்?
158. தெவ்வென்னுஞ் சொல்லீற்று வகரம், யகரமல்லாத மெய்கள் வரின், எப்படியாம்? மகரம் வரின் வேறு விதியும் பெறுமோ?

---


எண்ணுப்பெயர் நிறைப்பெயர் அளவுப் பெயர்கள் சாரியை பெறுதல்

159. உயிரையும் மெய்யையும் ஈறாகவுடைய எண்ணும் பெயர் நிறைப்பெயர் அளவுப்பெயர்களின் முன் அவ்வவற்றிற் குறைந்த அவ்வப்பெயர்கள் வரின், பெரும்பாலும் ஏ என்னுஞ் சாரியை இடையில் வரும்.
உதாரணம்.
ஒன்றேகால் காலேகாணி
தொடியேகஃக கழஞ்சேகுன்றி
கலனேபதக்கு உழக்கேயாழாக்கு
ஒன்றரை, கழஞ்சரை, குறுணிநானாழி எனச் சிறுபான்மை ஏகாரச் சாரியை வராதொழியுமெனக் கொள்க.

தேர்வு வினாக்கள்

159. எண்ணுப் பெயர் நிறைப்பெயர், அளவுப்பெயர்களின் முன் அவ்வவற்றிற் குறைந்த அவ்வப் பெயர்கள் வரின் எப்படியாம்?

-----

இடைச் சொற்களின் முன் வல்லினம் புணர்தல்

160. உயிரீற்றிடைச் சொற்களின் முன் வரும் வல்லினம் இயல்பாயும் மிக்கும் முடியும்.
உதாரணம்.
அம்ம - அம்மகொற்றா
அம்மா - அம்மாசாத்தா
மியா - கேண்மியாபூதா
மதி - னெ;மதிபெரும
என - பொள்ளெனப்புறம்வேரார்
இனி - இனிச்செய்வேன்
ஏ - அவனே கண்டான்
ஒ - அவனோ போனான்
----

161. வினையை அடுத்த படி என்னும் இடைச் சொல்லின் முன் வரும் வல்லினம் மிகா. சுட்டையும் வினாவையும் அடுத்த படி என்னும் இடைச் nசொல்லின் முன் வரும் வல்லினம் ஒரு கால் மிக்கும், ஒரு கால் மிகாதும், வரும்.
உதாரணம்.
வரும்படி சொன்னான்
அப்படிசெய்தான் அப்படிச்செய்தான்
எப்படிபேசினான் எப்படிப்பேசினான்
----

162. வேற்றுமைப் பொருட்புணர்ச்சியில் வல்லினம் வரின், சாரியை இடைச்சொல்லின் இறுதி னகரந் திரியாதியல்பாம்.
உதாரணம்.
ஆன்கூற்று வண்டின்கால்

தேர்வு வினாக்கள்
160. உயிரீற்றிடைச் சொற்களின் முன் வரம் வல்லினம் எப்படியாம்?
161. படி என்னம் இடைச் சொல்லின் மன் வரம் வல்லினம் எப்படியாம்?
162. வேற்றுமைப் பொருட்புணர்ச்சியில் வல்லினம் வரின், சாரியையிடைச் சொல்லின் இறுதி னகரம் டிப்படியாம்?

----

உரிச்சொற்களின் முன் வல்லினம் புணர்தல்

163. உயிரீற்றுச் சொற்களின் முன் வல்லினம் வரின், மிக்கும், இயல்பாகியும், இனமெல்லெழுத்து மிக்கும் புணரும்.
உதாரணம்.
தவ - தவப்பெரியான்
குழ - குழக்கன்று
கடி - கடிக்கமலம்
கடி - கடிகா
தட - தடக்கை
கம - கமஞ்சூல்
நனி - நனிபேதை
கழி - கழிகண்ணோட்டம்
தேர்வு வினா- 136. உயிரீற்றுச் சொற்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்?
உருபு புணர்ச்சி
----

164. வேற்றுமையுருபுகள், நிலைமொழியோடும் வருமொழியோடும் புணருமிடத்து, அவ்வுருபின் பொருட்புணர்ச்சிக்கு முற் கூறிய விதிகளைப் பெரும்பான்மை பெறும்: சிறுபான்மை வேறுபட்டும் வரும்.
உதாரணம்.
நம்பிக்கண் வாழ்வு: இங்கே உயர்திணைப் பெயாPற்று உயிர்முன் வேற்றுமைப் பொருளில் வரும் வல்லினமிகா, என்றும், ணகரம் இடையினம் வரின் இறுவழியினும் இயல்பாம், என்றும், விதித்தபடியே, கண்ணுருபின் முதலுமீறும் இயல்பாயின.
உறிக்கட்டயிர்: இங்கே இகரவீற்றஃறிணைப் பெயர்முன் வேற்றுமைப் பொருளில் வரும் வல்லினம் மிகும் என்றும், ணகரம் வேற்றுமைப் பொருளில் வல்லினம் வரின், டகரமாகத் திரியும் என்றும், விதித்தபடியே, கண்ணுருபின் முதலுமீறும் விகாரமாயின.
நம்பிக்குப் பிள்ளை: இங்கே உயர்திணைப் பெயாPற்று உயிர் முன் வேற்றுமை பொருளில் வரும் வல்லினம் இயல்பாம் என்று விதித்தபடி இயல்பாகாது குவ்வுருபு மிகுந்தது.
இங்ஙனம் உருபு புணர்ச்சியானது பொருட்புணர்ச்சியை ஒத்து வருதலும், அதின் வேறுபட்டு வருதலும், அதின் வேறுபட்டு வருதலும், சான்றோராட்சியால் அறிந்து கொள்க.
உறித்தயிர் என்பது, கண்ணென்னும் ஏழாம் வேற்றுமையுருபின்றி அவ்வுருபினது இடப்பொருள் படப்பெயரும் நிலைமொழி வருமொழிகளாய் நின்று புணர்ந்த புணர்ச்சி யாதலின், பொருட்புணர்ச்சியெனப்பட்டது. உறிக்கட்டயிர் என்பது, அவ்வேழனுருபு வெளிப்படட்டு நின்று நிலைமொழி வருமொழிகளோடு புணர்ந்த புணர்ச்சியாதலின், உருபு புணர்ச்சியெனப்பட்டது.

தேர்வு வினாக்கள்
164. வேற்றுவமயுருபுகள், நிலைமொழியோடும், வருமொழியோடும், எடிப்படிப் புணரும்? வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாவது யாது?
உருபு புணர்ச்சியாவது யாது?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 3:38 am

விதியில்லா விகாரங்கள்
----

165. விதியின்றி விகாரப்பட்டு வருவனவுஞ் சிலவுள. அவை மருவி வழங்குதல், ஒத்து நடத்தல், தோன்றல், திரிதல், கெடுதல், நீளல், நிலை மாறுதல் என எழுவகைப் படும்.
அவைகளுள்ளே, மருவி வழங்குதலொன்று மாத்திரம் தொடர்மொழியிலும், மற்றவை பெரும்பாலும் தனிமொழியிலும் வரும்.
---

166. மருவி வழங்குதலாவது, விதியின்றிப்பலவாறு விகாரப்பட்டு மருவி வருதல்.
உதாரணம்.
அருமந்தன்னபிள்ளை - அருமருந்தபிள்ளை
பாண்டியனாடு - பாண்டி நாடு
சோழநாடு - சோணாடு
மலையமானாடு - மலாடு
தொண்டைமானாடு - தொண்டைநாடு
தஞ்சாவூர் - தஞ்சை
சென்னபுரி - சென்னை
குணக்குள்ளது - குணாது
தெற்குள்ளது - தெனாது
வடக்குள்ளது - வடாது
என்றந்தை - எந்தை
நுன்றந்தை - நுந்தை
---

167. ஒத்து நடத்தலாவது, ஒரேழுத்து நின்றவிடத்து அற்றோரெழுத்து வந்து பொருள் வேறுபடா வண்ணம் நடத்தலாம். அவை வறுமாறு :-
அஃறிணையியற்பெயருள்ளே, குறிலிணையின் கீழ் மகரநின்ற விடத்து னகரம் வந்து பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.
உ-ம்-
அகம் - அகன்
முகம் - முகன்
நிலம் - நிலன்
நலம் - நலன்
மொழி முதலிடைகளிலே சகர ஞகர யகரங்களின் முன் அகர நின்ற விடத்து ஐகாரம் வந்து பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

உதாரணம்.
பசல்
மஞ்சு
மயல் பைசல்
மைஞ்சு
மையல் மொழி முதலில் ஒத்து நடந்தது
அமச்சு
இலஞ்சி
அரயர் அமைச்சு
இலைஞ்சி
அரையர் மொழியிடையில்
ஒத்து நடந்தது
ஒரோவிடத்து மொழிக்கு முதலிலும், சில விடத்து ஐகாரத்தின் பின்னும், நகர நின்ற விடத்து ஞகரம் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.
உதாரணம்.
நணடு
நெண்டு
நமன் ஞண்டு
ஞெண்டு
ஞமன் மொழி முதலில் ஒத்து நடந்தது
ஐந்நூறு
மைந்நின்ற கண் ஐஞ்ஞ10று
மைஞ்ஞின்ற கண் ஐகாரத்தின் பின்
ஒத்து நடந்தது
சேய்நலூர்
செய்நின்ற சேய்ஞலூர்
செய்ஞ்ஞின்ற நீலம் யகரத்தின் பின் ஒத்து நடந்தது
ஒரொவிடத்து அஃறிணைப் பெயாPற்றில் லகர நின்ற வடத்து ரகரம் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.
உதாரணம்.
சாம்பல் - சாம்பர்
பந்தல் - பந்தர்
குடல் - குடர்
அஃறிணைப் பெயர்களுள், ஒரோவிடத்து மென்றொடர்க் குற்றுகரமொழிகளினிறுதி உகர நின்ற விடத்து அர் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.
உதாரணம்.
அரும்பு - அரும்பர்
கரும்பு - கரும்பர்
கொம்பு - கொம்பர்
வண்டு - வண்டர்
ஒரோவழி லகர நின்ற விடத்து ளகரமும், ளகர நின்ற விடத்து லகரமும் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.
உதாரணம்.
அலமருகுயிலினம் - அளமருகுயிலினம்
பொள்ளாமணி - பொல்லாமணி
---

168. தோன்றலாவது, எழுத்துஞ் சாரியையும் விதியின்றித் தோன்றுதலாம்.

உதாரணம்.
யாது - யாவது
குன்றி - குன்றம்
செல் உழி - செல்வுழி
விண் அத்து - விண்வத்து
----

169. திரிதலாவது, ஓரெழுத்து மற்றோரெழுத்தாக விதியின்றித் திரிதலாம்.
உதாரணம்.
மாகி - மாசி
மழைபெயின் விளையும் - மழைபெயில் வியையும்
கண்ணகல் பரப்பு - கண்ணகன் பரப்பு
உயர்திணைமேலே - உயர்திணை மேன
---

170. கெடதலாலது உயிர்மெய்யாயினும் மெய்யாயினும் விதியின்றிக் கெடுதலாம்.
உதாரணம்.
யாவர் - யார்
யார் - ஆர்
யானை - ஆனை
யாடு - ஆடு
யாறு - ஆறு
எவன் என்னும் குறிப்பு வினை, என் என இடைநின்ற உயிர்மெய் கெட்டும், என்ன, என்னை, என உயிர் மெய் கெட்டு இறுதியில் உயிர் தோன்றியும் வழங்கும்.
---

171. நீளலாவது, விதியின்றிக் குற்றெழுத்து நெட்டெழுத்தாக நீளலாம்.
உதாரணம்.
பொழுது - போழ்து
பெயர் - பேர்
---

172. நிலை மாறுதலாவது, எழுத்துக்கள் ஒன்ற நின்ற விடத்து ஒன்று சென்று மாறி நிற்றலாம்.
உதாரணம்.
வைசாகி - வைகாசி
நாளிகேரம் - நாரிகேளம்
மிஞிறு - ஞிமிறு
சிவிறி - விசிறி
தசை - சதை
இந்நிலை மாறுதல் எழுத்துக்கேயன்றிச் சொற்களுக்கும் உண்டு: அங்ஙனஞ் சொன்னிலை மாறி வழங்குவன இலக்கணப் போலி எனப் பெயர் பெறும்.
உதாரணம்.
கண்மீ - மீகண்
நகர்ப்புறம் - புறநகர்
புறவுலா - உலாப்புறம்
இன்முன் - முன்றில்
பொதுவில் - பொதியில்
முன்றில் என்பதில் விதியின்றி றகரந் தோன்றிற்று. பொதியில் என்பதில் விதியின்றி இகரமும் யகர மெய்யுந் தோன்றின.

தேர்வு வினாக்கள்

165.இப்படி விதியினால் விகாரப்பட்டு வருவனவன்றி, விதியின்றி விகாரப்படுவனவும் உளவோ? அவை எத்தனை வகைப்படும்?
166. மருவி வழங்குதலாவது யாது?
167. ஒத்து நடத்தலாவது யாது? 168. தோன்றலாவது யாது?
169. திரிதலாவது யாது?
170. கெடுதலாவது யாது? 171. நீளலாவது யாது?
172. நிலை மாறுதலாவது யாது?
இந்நிலை மாறுதல் எழுத்துக்கே யன்றிச் சொற்களுக்கும் உண்டோ?
சொன்னிலை மாறி வழங்குவன எப்படிப் பெயர் பெறும்?

புணரியல் முற்றிற்று
எழுத்ததிகாரம் முற்றுப் பெற்றது.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 3:40 am

இரண்டாவது: சொல்லதிகாரம்

2.1. பெயரியல்

173. சொல்லாவது, ஒருவர் தங்கருத்தின் நிகழ்பொருளைப் பிறார்க்கு அறிவித்தற்கும், பிறர் கருத்தின் நிகழ் பொருளைத் தாம் அறிதற்குங் கருவியாகிய ஒலியாம்.

தேர்வு வினா
173. சொல்லாவது யாது?

---

திணை
174. அக்கருத்தின் நிகழ்பொருள், உயர்திணை, அஃறிணை என, இரு வகைப்படும்.
திணை- சாதி, உயர்தணை - உயர்வாகிய சாதி, அஃறிணை - உயர்வல்லாத சாதி. அல்திணை என்றது அஃறிணை எனப் புணர்ந்தது. இங்கே திணை என்னும் பண்புப் பெயர், ஆகு பெயராய்ப் பண்பியை உணர்த்தி நின்றது. சாதி பண்பு, சாதியையுடைய பொருள் பண்பி.
---

175. உயர்தணையாவன, மனிதரும், தேவரும், நரகரும் ஆகிய மூவகைச் சாதிப் பொருள்களாம்.
---

176. அஃறிணையாவன, மிருகம், பறவை முதலிய உயிருள்ள சாதிப் பொருள்களும், நிலம், நீர், முதலிய உயிரல்லாத சாதிப் பொருள்களுமாம்.

தேர்வு வினாக்கள்
174. அக்கருத்தின் நிகழ் பொருள் எத்தனை வகைப்படும்?
திணையென்பதற்கு பொருள் என்ன?
உயர்திணையென்பதற்கு பொருள் என்ன? அஃறிணையென்பதற்கு பொருள் என்ன?
இங்கே திணையென்னும் பண்புப் பெயர் எதனை உணர்த்தி நின்றது.
175. உயரிதிணையாவன யாவை?
176. அஃறிணையாவன எவை?

----

பால்

177. உயர்திணை, ஆண்பால், பெண்பால், பலர்பால், என மூன்று பிரிவுடையது.
உதாரணம்.
அவன், வந்தான் - உயர்திணையாண்பால்
அவள், வந்தாள் - உயர்திணைப் பெண்பால்
அவர், வந்தார் - உயர்திணைப் பலர்பால்
பலர்பால் என்றது, ஆடவர், காளையர் என்பன முதலிய ஆண் பன்மையும், பெண்டீர், மங்கையர் முதலிய பெண்பன்மையும், மக்கள், அவர் என்பன முதலிய அவ்விருவர் பன்மையும், அடக்கி நின்றது.
---

178. அஃறிணை, ஒன்றன்பால், பலவின்பால் என, இரண்டு பிரிவையுடையது.
உதாரணம்.
அது, வந்தது - அஃறிணையொன்றன்பால்
அவை, வந்தன - அஃறிணைப் பலர்பால்


தேர்வு வினாக்கள்

177. உயர்திணை எத்துணைப் பிரிவையுடையது?
பலர்பால் என்றது எவைகளை அடக்கி நின்றது?
178. அஃறிணை எத்துணைப் பிரிவையுடையது?

---

இடம்
179. இவ்விரு திணையாகிய ஐம்பாற்பொருளை உணர்த்துஞ் சொற்கள், தன்மை, முன்னிலை, படர்க்கை, என்னும் மூவிடத்தையும் பற்றி வரும்.
---

180. பேசும் பொருள் தன்மையிடம்: பேசும் பொருளினால் எதிர்முகமாக்கப்பட்டுக் கேட்கும் பொருள் முன்னிலையிடம்: பேசப்படும் பொருள் படர்க்கையிடம்.

தேர்வு வினாக்கள்
179. இவ்விரு திணையாகிய ஐம்பாற் பொருளை உணர்த்துஞ் சொற்கள் எவ்விடத்தைப் பற்றி வரும்?
180. தன்மையிடம் எது? முன்னிலையிடம் எது? தன்மையிடம் எது?
படர்க்கையிடம் எது?

----

சொற்களின் வகை
181. சொற்கள், பெயர்ச்சொல் வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நால்வகைப்படும்.

தேர்வு வினா
181. சொற்கள் எத்தனை வகைப்படும்?

---


பெயர்ச் சொற்களின் வகை
182. பெயர்ச் சொல்லாவது, பொறிகட்கும் மனத்துக்கும் விடயமாகிய பொருளை உயர்த்தும்.
பொருள், இடம், காலம், சினை என்னம் நான்கும் nhருளென உன்றாய் அடங்கும். பொருட்கு உரிமை பூண்டு நிற்பனவாகிய பண்புத் தொழிலும் பொருளெனவும் படுமாதலின், அவைகளை உயர்த்துஞ் சொல்லும் பெயர்ச் சொல்லெனப்படும். பொருளினது புடைப் பெயர்ச்சி யெனப்படும் வினை நிகழ்ச்சியை உணர்த்துஞ் சொல்லாகிய வினைச் சொல்லும், பெயர்த்தன்மைப்பட்டு, அப்பொருளை உணர்த்தும். இங்ஙனமாகவே, பெயர்களனைத்தும், பொரட்பெயர், வினையாலணையும் பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர் என்னும் நால்வகையுள் அடங்கும்.
-----

183. பெயர்ச் சொற்கள், இடுகுறிப் பெயர், காரணப்பெயர், காரணவிடுகுறிப் பெயர் என, மூவகைப்படும்.
-----

184. இடுகுறிப் பெயராவது, ஒரு காரணமும் பற்றாது பொருளை உணர்த்தி நிற்கும் பெயராம்.
உதாரணம். மரம், மலை, கடல், சோறு
இவை ஒரு காரணமும் பற்றாது வந்தமையால், இடு கறிப் பெயராயின.
-----

185. காரணப்பெயராவது, யாதேனும் ஒரு காரணம் பற்றிப் பொருளை உணர்த்தி நிற்கும் பெயராம்.
உதாரணம்.
பறவை, அணி, பொன்னன், கணக்கன்
பறப்பதாதலிற் பறவை எனவும், அணியப்படுவதாதலின் அணி எனவும், பொன்னையுடையனாதலிற் பொன்னன் எனவும், கணக்கெழுதுவோனாதலிற் கணக்கன் எனவும் காரணம் பற்றி வந்தமையால், இவை காரணப் பெயராயின.
-----

186. காரணவிடுகுறிப் பெயராவது, காரணங் கருதிய பொழுது அக்காரணத்தையுடைய பல பொருள்களுக்குஞ் செல்வதாயும், காரணங் கருதாத பொழுது இடுகுறிகளவாய் நின்று ஒவ்வொரு பொருட்கே செல்வதாயும், உள்ள பெயராம்.
உதாரணம்.
முக்கணன், அந்தனன், முள்ளி, கறங்கு
முக்கணன் என்பது, காரணங் கருதிய பொழுது விநாயகக் கடவுள் முதலிய பலர்க்குஞ் செல்லுதலாலும், காரணங்கருதாத பொழுது இடுகுறியாளவாய்ச் சிவபெருமானுக்குச் செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று.
அந்தணன் என்பது, காரணங்கருதிய பொழுது அழகிய தண்ணளியையுடையயோர் பலர்க்குஞ் செல்லுதலாலும், காரணங்கருதாத போது இடுகுறியாளவாய்ப் பார்ப்பானுக்குச் செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று.
முள்ளி என்பது, காரணங்கருதிய பொழுது முள்ளையுடைய செடிகள் பலவற்றிற்குஞ் செல்லுதலாலும், காரணங்கருதாத போது இடுகுறியாளவாய் முள்ளி என்னும் ஒரு செடிக்கு செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று.
கறங்கு என்பது, காரணங்கருதிய பொழுது சுழலையுடை பல பொருள்கட்குஞ் செல்லுதலாலும், காரணங்கருதாத போது இடுகுறியாளவாய்க் காற்றாடி என்னும் ஒரு பொருட்குச் செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 3:41 am

187. இப்பெயர்கள், பொதுப்பெயர், சிறப்புப்nபெயர் என இரு வகைப்படும்.

-----

188. பொதுப்பெயராவது, பல பொருள்களுக்குப் பொதுவாகி வரும் பெயராம்
உதாரணம்.
மரம், விலங்கு, பறவை
இவற்றுள், மரம் இடுகுறிப் பொதுப்பெயர்: விலங்கு பறவை என்பன காரணப்பொதுப் பெயர்.

-----

189. சிறப்புப் பெயராவது, ஒவ்வொரு பொருளுக்கே சிறப்பாகி வரும் பெயராம்.
உதாரணம்.
ஆல், கரி, காரி
இவற்றுல் ஆல் இடு குறிப் பெயர்: கரி, காரி என்பன காரணச் சிறப்புப் பெயர். கரி- யானை, காரி - கரிக்குருவி.

-----

190. பெயர்கள், இடவேற்றுமையினாலே, தன்மைப் பெயர், முன்னிலைப் பெயர், படர்க்கைப் பெயர், என மூவகைப்படும்.

தேர்வு வினாக்கள்
182. பெயர்ச் சொல்லாவது யாது? பெயர்கள் அனைத்தும் எத்தனை வகைப்படும்?
184. இடு குறிப்பெயராவது யாது?
185. காரணப்பெயராவது யாது?
186. காரணவிடுகுறிப் பெயராவது யாது?
187. இப்பெயர்கள் மீட்டு எத்தனை வகைப்படும்?
188. பொதுப்பெயராவது யாது?
189. சிறப்புப் பெயராவது யாது?
190. பெயர்கள் இட வேற்றுமையினால் எத்தனை வகைப்படும்?

---

தன்மைப்பெயர்கள்
191. தன்மைப்பெயர்கள், நான், யான், நாம், யாம், என நான்காம். இவைகளுள் நான், யான் இவ்விரண்டும் ஒருமைப்பெயர்கள்: நாம், யாம் இவ்விரண்டும் பன்மைப் பெயர்கள்.
இத்தன்மைப் பெயர்கள் உயர்திணையாண்பால் பெண்பால்களுக்குப் பொதுவாகி வருவனவாகும்.
உதாரணம்.
யானம்பி, யானங்கை - தன்மையொருமை
யாமைந்தர், யாமகளிர் - தன்மைப் பன்மை
உலக வழக்குச் செய்யுள் வழக்கிரண்டினும், நாம், யாம், இரண்டும். நாங்கள், யாங்கள் எனவும் வரும்.

தேர்வு வினாக்கள்
191. தன்மைப் பெயர்கள் எவை? இவைகளுள் எவை ஒருமைப் பெயர்கள்? எவை பன்மைப் பெயர்கள்? இத்தன்மைப் பெயர்கள் திணைபால்களுள் எவைகளுக்குப் பொதுவாகி வருகின்றன?

----

முன்னிலைப் பெயர்கள்
192. முன்னிலைப் பெயர்கள், நீ, நீர், நீயிர், நீவிர், எல்லீர் என ஐந்தாம். இவைகளுள், நீ என்பது ஒருமைப் பெயர்: மற்றவை பன்மைப் பெயர்கள்.
உதாரணம்.
நீ நம்பி, நீ நங்கை, நீ பூதம்
- முன்னிலையொருமை
நீர் மைந்தர், நீர் மகளிர், நீர் ப10தங்கள்
- முன்னிலைப்பன்மை
w தன்மைப் பெயர்களை உயர்திணைப் பெயர்கள் என்பர் தொல்காப்பியர்; இரு தியைப் பொதுப் பெயர்கள் என்பர் நன்னூலார்.
இரு வழக்கினும் நீங்கள் என்பதும் முன்னிலைப் பன்மையில் வரும்.

தேர்வு வினாக்கள்
192. முன்னிலைப் பெயர்கள் எவை? இவைகளுள், எது ஒருமைப்பெயர்? எவை பன்மைப் பெயர்? இம் முன்னிலைப் பெயர்கள் திணை பால்களுள் எவைகளுக்குப் பொதுவாகி வருகின்றன?

---

படர்க்கைப் பெயர்கள்
193. படர்க்கைப் பெயர்கள், மேற்சொல்லப்பட்ட தன்மை முன்னிலைப் பெயர்களல்லாத மற்றைய எல்லாப் பெயர்களுமாம்.
உதாரணம்.
அவன், அவள், அவர், பொன், மணி, நிலம்
---

194. அன். ஆள், இ, ள் என்னும் விகுதிகளை இறுதியில் உயுடைய பொயர்கள் உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைப் பெயர்களாம்.
உதாரணம்.
பொன்னன், பொருளான், வடமன், கோமன், பிறன்
-----

195. அள், ஆள், கள், மார், ர், என்னும் விகுதிகளை இறுதியில் உயுடைய பொயர்கள் உயர்திணைப் பெண்பாலொருமைப் படர்க்கைப் பெயர்களாம்.
உதாரணம்.
குழையள், குழையாள், பொன்னி, பிறள்
-----

196. அர், ஆர், கள், மார், ர், என்னுதம் விகுதிகளை இறுதியில் உயுடைய பொயர்கள் உயர்திணைப் பலர்பாற் படர்க்கைப் பெயர்களாம்.
உதாரணம்.
குழையர், குழையார், கோக்கள், தேவிமார், பிறர்
தச்சர்கள், தட்டார்கள், எனக் கள் விபுதி, விகுதிமேல் விகுதியாயும் வரும்.
-----

197. துவ் விகுதியை இறுதியில் உடைய பெயர்கள் அஃறிணையொன்றன் பாற் படர்க்கைப் பெயர்களாம்.
உதாரணம்.
குழையது
---

198. வை, அ, கள், வ், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய பெயர்கள் அஃறிணைப் பலவின்பாற் படர்க்கைப் பெயர்களாம்.
உதாரணம்.
குழையவை, குழையன, மரங்கள், அவ்.
---

199. விகுதி பெறாது உயர்திணை அஃறிணைகளில் ஆண்பால் பெண்பால்களை உணர்த்தி வரும் பெயர்களுஞ் சில உண்டு. அவை வருமாறு:-
நம்பி, விடலை, கோ, வேள், ஆடூஉ, முதலியன உயர்திணையாண்பாற் பெயர்கள்.
மாது, தையல், மகடூஉ, நங்கை முதலியன உயர்திணைப் பெண்பாற் பெயர்கள்.
கடுவன், ஒருத்தல், போத்து, கலை, சேவல், ஏறு முதலியன அஃறிணையாண்பாற் பெயர்கள்
பிடி, பிண, பெட்டை, மந்தி, பிணா முதலியன பெண்பாற் பெயர்கள்.

தேர்வு வினாக்கள்
193. படர்க்கைப் பெயர்கள் எவை?
194. உயர்திணையாண்பா லொருமைப் படர்க்கைப் பெயர்கள் எவை?
195. உயர்திணைப் பெண்பா லொருமைப் படர்க்கைப் பெயர்கள் எவை?
196. உயர்திணைப் பலர்பாற் படர்க்கைப் பெயர்கள் எவை?
197. அஃறிணையொன்றன்பாற் படர்க்கைப் பெயர்கள் எவை?
198. அஃறிணைப் பலவின்பாற் படர்க்கைப் பெயர்கள் எவை?
199. விகுதி பெறாது உயர்திணை அஃறிணைகளில் ஆண்பால் பெண்பால்களை உணர்த்தி வரும் பெயர்களும் உண்டோ?

-----



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 3:43 am

187. இப்பெயர்கள், பொதுப்பெயர், சிறப்புப்nபெயர் என இரு வகைப்படும்.

-----

188. பொதுப்பெயராவது, பல பொருள்களுக்குப் பொதுவாகி வரும் பெயராம்
உதாரணம்.
மரம், விலங்கு, பறவை
இவற்றுள், மரம் இடுகுறிப் பொதுப்பெயர்: விலங்கு பறவை என்பன காரணப்பொதுப் பெயர்.

-----

189. சிறப்புப் பெயராவது, ஒவ்வொரு பொருளுக்கே சிறப்பாகி வரும் பெயராம்.
உதாரணம்.
ஆல், கரி, காரி
இவற்றுல் ஆல் இடு குறிப் பெயர்: கரி, காரி என்பன காரணச் சிறப்புப் பெயர். கரி- யானை, காரி - கரிக்குருவி.

-----

190. பெயர்கள், இடவேற்றுமையினாலே, தன்மைப் பெயர், முன்னிலைப் பெயர், படர்க்கைப் பெயர், என மூவகைப்படும்.

தேர்வு வினாக்கள்
182. பெயர்ச் சொல்லாவது யாது? பெயர்கள் அனைத்தும் எத்தனை வகைப்படும்?
184. இடு குறிப்பெயராவது யாது?
185. காரணப்பெயராவது யாது?
186. காரணவிடுகுறிப் பெயராவது யாது?
187. இப்பெயர்கள் மீட்டு எத்தனை வகைப்படும்?
188. பொதுப்பெயராவது யாது?
189. சிறப்புப் பெயராவது யாது?
190. பெயர்கள் இட வேற்றுமையினால் எத்தனை வகைப்படும்?

---

தன்மைப்பெயர்கள்
191. தன்மைப்பெயர்கள், நான், யான், நாம், யாம், என நான்காம். இவைகளுள் நான், யான் இவ்விரண்டும் ஒருமைப்பெயர்கள்: நாம், யாம் இவ்விரண்டும் பன்மைப் பெயர்கள்.
இத்தன்மைப் பெயர்கள் உயர்திணையாண்பால் பெண்பால்களுக்குப் பொதுவாகி வருவனவாகும்.
உதாரணம்.
யானம்பி, யானங்கை - தன்மையொருமை
யாமைந்தர், யாமகளிர் - தன்மைப் பன்மை
உலக வழக்குச் செய்யுள் வழக்கிரண்டினும், நாம், யாம், இரண்டும். நாங்கள், யாங்கள் எனவும் வரும்.

தேர்வு வினாக்கள்
191. தன்மைப் பெயர்கள் எவை? இவைகளுள் எவை ஒருமைப் பெயர்கள்? எவை பன்மைப் பெயர்கள்? இத்தன்மைப் பெயர்கள் திணைபால்களுள் எவைகளுக்குப் பொதுவாகி வருகின்றன?

----

முன்னிலைப் பெயர்கள்
192. முன்னிலைப் பெயர்கள், நீ, நீர், நீயிர், நீவிர், எல்லீர் என ஐந்தாம். இவைகளுள், நீ என்பது ஒருமைப் பெயர்: மற்றவை பன்மைப் பெயர்கள்.
உதாரணம்.
நீ நம்பி, நீ நங்கை, நீ பூதம்
- முன்னிலையொருமை
நீர் மைந்தர், நீர் மகளிர், நீர் ப10தங்கள்
- முன்னிலைப்பன்மை
w தன்மைப் பெயர்களை உயர்திணைப் பெயர்கள் என்பர் தொல்காப்பியர்; இரு தியைப் பொதுப் பெயர்கள் என்பர் நன்னூலார்.
இரு வழக்கினும் நீங்கள் என்பதும் முன்னிலைப் பன்மையில் வரும்.

தேர்வு வினாக்கள்
192. முன்னிலைப் பெயர்கள் எவை? இவைகளுள், எது ஒருமைப்பெயர்? எவை பன்மைப் பெயர்? இம் முன்னிலைப் பெயர்கள் திணை பால்களுள் எவைகளுக்குப் பொதுவாகி வருகின்றன?

---

படர்க்கைப் பெயர்கள்

193. படர்க்கைப் பெயர்கள், மேற்சொல்லப்பட்ட தன்மை முன்னிலைப் பெயர்களல்லாத மற்றைய எல்லாப் பெயர்களுமாம்.
உதாரணம்.
அவன், அவள், அவர், பொன், மணி, நிலம்
---

194. அன். ஆள், இ, ள் என்னும் விகுதிகளை இறுதியில் உயுடைய பொயர்கள் உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைப் பெயர்களாம்.
உதாரணம்.
பொன்னன், பொருளான், வடமன், கோமன், பிறன்
-----

195. அள், ஆள், கள், மார், ர், என்னும் விகுதிகளை இறுதியில் உயுடைய பொயர்கள் உயர்திணைப் பெண்பாலொருமைப் படர்க்கைப் பெயர்களாம்.
உதாரணம்.
குழையள், குழையாள், பொன்னி, பிறள்
-----

196. அர், ஆர், கள், மார், ர், என்னுதம் விகுதிகளை இறுதியில் உயுடைய பொயர்கள் உயர்திணைப் பலர்பாற் படர்க்கைப் பெயர்களாம்.
உதாரணம்.
குழையர், குழையார், கோக்கள், தேவிமார், பிறர்
தச்சர்கள், தட்டார்கள், எனக் கள் விபுதி, விகுதிமேல் விகுதியாயும் வரும்.
-----

197. துவ் விகுதியை இறுதியில் உடைய பெயர்கள் அஃறிணையொன்றன் பாற் படர்க்கைப் பெயர்களாம்.
உதாரணம்.
குழையது
---

198. வை, அ, கள், வ், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய பெயர்கள் அஃறிணைப் பலவின்பாற் படர்க்கைப் பெயர்களாம்.
உதாரணம்.
குழையவை, குழையன, மரங்கள், அவ்.
---

199. விகுதி பெறாது உயர்திணை அஃறிணைகளில் ஆண்பால் பெண்பால்களை உணர்த்தி வரும் பெயர்களுஞ் சில உண்டு. அவை வருமாறு:-
நம்பி, விடலை, கோ, வேள், ஆடூஉ, முதலியன உயர்திணையாண்பாற் பெயர்கள்.
மாது, தையல், மகடூஉ, நங்கை முதலியன உயர்திணைப் பெண்பாற் பெயர்கள்.
கடுவன், ஒருத்தல், போத்து, கலை, சேவல், ஏறு முதலியன அஃறிணையாண்பாற் பெயர்கள்
பிடி, பிண, பெட்டை, மந்தி, பிணா முதலியன பெண்பாற் பெயர்கள்.

தேர்வு வினாக்கள்
193. படர்க்கைப் பெயர்கள் எவை?
194. உயர்திணையாண்பா லொருமைப் படர்க்கைப் பெயர்கள் எவை?
195. உயர்திணைப் பெண்பா லொருமைப் படர்க்கைப் பெயர்கள் எவை?
196. உயர்திணைப் பலர்பாற் படர்க்கைப் பெயர்கள் எவை?
197. அஃறிணையொன்றன்பாற் படர்க்கைப் பெயர்கள் எவை?
198. அஃறிணைப் பலவின்பாற் படர்க்கைப் பெயர்கள் எவை?
199. விகுதி பெறாது உயர்திணை அஃறிணைகளில் ஆண்பால் பெண்பால்களை உணர்த்தி வரும் பெயர்களும் உண்டோ?

-----



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 3:44 am

வேற்றுமை
206. பெயர்களனைத்தும், முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை, என எட்டு வேற்றுமைகளை யேற்கும்.
இவற்றுள் முதல் வேற்றுமை எழுவாய் எனவும், பெயர்வேற்றுமை விளியெனவும் பெயர் பெறும்.
-----

207. முதல் வேற்றுமையினது உருபாவது திரிபில்லாத பெயரேயாம்.
இது வினையையும், பெயரையும், வினாவையுங் கொள்ளும்.
உதாரணம்.
சாத்தான் வந்தான், சாத்தனிவன், சாத்தன் யார்
வேற்றுமையுருபினாலே கொள்ளப்படுஞ் சொல், முடிக்குஞ் சொல் எனவும், பயனிலை எனவும், பெயர் பெறும்.
இத்திரிபில்லாத பெயர், தானே தன் பொருளை வினைமுதற் பொருளாக வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட வினைமுதற் பொருளே இதன் பொருளாம்.
வினைமுதல், கருத்தா, செய்பவன் என்பன ஒரு பொருட் சொற்கள்.
இவ் வெழுவாய்க்கு வேறுருபு இல்லையாயினும், ஆனவன், ஆகின்றவன், ஆவான், என்பவன், முதலிய ஐம்பாற் சொற்களுஞ் சிறுபான்மை சொல்லுருபாக வரும்.
உதாரணம்.
சாத்தனானவன் வந்தான்
சாத்தியானவன் வந்தான்
சாத்தரானவர் வந்தார்
மரமானது வளர்ந்தது
மற்றவைகளும் இப்படியே.
-----

208. இரண்டாம் வேற்றுமையினது உருபு ஐயொன்றேயாம்.
இது வினையையும், வினைக்குறிப்பையுங் கொள்ளும்.
இவ்வையுருபு தன்னையேற்ற பெயர்ப்பொருளைச் செயற்படு பொருளாக வேறுபடுத்தும், அப்படி வேறுபட்ட செயற்பட பொருளே இவ்வுருபின் பொருளாம்.
செயப்படுபொருள், கருமம், காரியம், என்பன ஒரு பொருட் சொற்கள்.
அச்செயற்படு பொருளானது, ஆக்கப்படுபொருள், அழிக்கப்படு பொருள், அடையப்பட பொருள், ஒக்கப்படபொருள், உடமைப்பொருள், முதலியனவாகப் பல திறக்கப்படும்.
(உதாரணம்)
குடத்தை வனைந்தான் - ஆக்கப்படு பொருள்
கோட்டையைப் பிடித்தான் - அழிக்கப்படு பொருள்
ஊரையடைந்தான் - அடையப்படுபொருள்
மனைவியைத் துறந்தான் - துறக்கப்படு பொருள்
புலியையொத்தான் - ஒக்கப்படுபொருள்
பொன்னையுடையான் - உடைமைப் பொருள்
-----

209. மூன்றாம் வேற்றுமையினுடை உருபுகள் ஆல், ஆன், ஒடு, ஓடு என்பனவைகளாம்.
இவை வினையைக் கொள்ளும்.
இவ்வுருபுகளுள், ஆன், ஆன் என்னும் இரண்டுருபுகளும, தம்மையேற்ற பெயர்ப் பொருளைக், கருவிய பொருளாகவும், கருதாப்பொருளாகவும், வேறுபடுத்தும் அப்படி வேறு பட்ட கருவிப் பொருளுங் கருதாப்பொருளும் இவ்வுருபுகளின் பொருளாம். கருவி, காரணம் என்பன ஒரு பொரட் சொற்கள்.
கருவி, முதற்கருவி, துணைக்கருவி, என இருவகைப்படும். கருத்தாவும், இயற்றுதற்கரத்தா, ஏவுதற் கருத்தா என இரு வகைப்படும்.
ஒடு, ஓடு என்னும் இரண்டுருபுகளும், தம்மையேற்ற பெயர்ப்பொருளை உடனிகழ்ச்சிப் பொருளாக வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட உடனிகழ்ச்சிப் பொருளே இவ்வுருபு களின் பெர்ருளாம்.
(உதாரணம்)
மண்ணாலாகிய குடம்
மண்ணனாகிய குடம் முதற்கருவி
திரிகையாலாகிய குடம்
திரிகையானாகிய குடம் துணைக்கருவி
தச்சனாலாகிய கோயில்
தச்சனானாகிய கோயில் இயற்றுதற்கருத்தா
அரசனாலாகிய கோயில்
அரசனானாகிய கோயில் ஏவுதற்கருத்தா
மகனோடு தந்தை வந்தான்
மகனொடு தந்தை வந்தான் உடனிகழ்ச்சிப் பொருள்
இவ்வுருபுகளுள், ஆல், ஆன் உருபுகள் நிற்றற்குரிய விடத்துக் கொண்டென்பதும், ஓடு, ஒடு உருபுகள் நிற்றற்குரிய விடத்து உடனென்பதுஞ் சொல்லுருபுகளாக வரும்.
உதாரணம்.
வாள் கொணடு வெட்டினான்
தந்தையுடன் மைந்தன் வந்தான்
-----

210. நான்காம் வெற்றுமையினது உருபு குவ்வொன்றேயாம்.
இது வினையையும் வினையோடு பொருந்தும் பெயரையுங் கொள்ளும்.
இக்குவ்வுருபு, தன்னையேற்ற பெயர்ப் பொருளைக் கோடற்பொருளாகவும், பகைதொடர் பொருளாகவும், நட்புத் தொடர் பொருளாகவும், தகுதியுடை பொருளாகவும், முதற்காரண காரியப்பொருளாகவும், நிமித்த காரண காரியப்பொருளாகவும், முறைக்கியை பொருளாகவும். வேறுபடுத்தும். அப்படி வேறு பட்ட கொடற் பொருண் முதலியன இவ்வுருபின் பொருள்களாம்.
(உதாரணம்)
இரப்பவர்க்குப் பொன்னைக் கொடுத்தாள் - கோடற்பொருள்
பாம்புக்குப் பகை கருடன் - பகைத்தொடர்ப் பொருள்
சாத்தனுக்குத் தோழன் கொற்றன் - நட்புத் தொடர் பொருள்
அரர்க்குரித் தருங்கலம் - தகுதியுடைபொருள்
குண்டலத்திற்கு வைத்த பொன் - தகுதியுடைப் பொருள்
கூலிக்கு வேலை செய்தான் - நிமித்தகாரணகாரியப் பொருள்
சாத்தனுக்கு மகனிவன் - முறைக்கியை பொருள்
குவ்வுருபு நிற்றற் குரிய சில விடயங்களிலே, பொருட்டு நிமித்தம் என்பனவும், குவ்வுருபின்மேல் ஆகவென்பதுஞ் சொல்லுருபுகளாக வரும்.
உதாரணம்.
கூழின் பொருட்டு வேலை செய்தான்
கூலியினிமித்தம் வேலை செய்தான்
கூலிக்காக வேலை செய்தான்
-----

211. ஐந்தாம் வேற்றுமையினுடைய உருபுகள் இன், இல் என்பனவாகும்.
இவை வினையையும், வினையோடு பொருந்தும் பெயரையுங் கொள்ளும்.
இவ்வுருபுகள், தம்மையேற்ப பெயர்ப்பொருளை நீக்கப் பொருளாகவும், ஒப்புப்பொருளாகவும், எல்லைப் பொருளாகவும், ஏதுப்பொருளாகவும், வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட நீக்கப் பொருள் முதலியன இவ்வுருபுகளின் பொருள்கலாம்.
உதாரணம்.
மலையின் வீழருவி
மலையில் வீழருவி நீக்கப் பொருள்
பாலின் வெளிது கொக்கு
பாலில் வெளிது கொக்கு ஒப்புப் பொருள்
சீர்காழியின் வடக்குச் சிதம்பரம்
சீர்காழியில் வடக்குச் சிதம்பரம் எல்லைப் பொருள்
கல்வியினுயர்ந்தவன் கம்பன்
கல்வியிலுயர்ந்தவன் கம்பன் ஏதுப் பொருள்

பாலின் வெளிது கொக்கு என்னுமிடத்து, உயர்வு கருதின் எல்லைப் பொருளாம்.
நீக்கப்பொருளினும். எல்லைப் பொருளினும், இன், இல், உருபுகளின் மேல், நின்று, இருந்து என்பவை, உம் பெற்றும், பெறாதுஞ் சொல்லுருபுகளாக வரும்.
உதாரணம்.
நீக்கப்பொருள்
ஊரினின்றும் போயினான், ஊரினின்று போயினான்
ஊரிலிருந்தும் போயினான், ஊரிலிருந்தும் போயினான்
எல்லைப் பொருள்
காட்டினின்றுமூர் காவதம், காட்டினின்றூர் காவதம்
காட்டிலிருந்துமூர் காவதம், காட்டிலிருந்துமூர் காவதம்
ஒரொவிடத்து எல்லைப் பொருளிலே, காட்டிலும் பார்க்கிலும் என்பவைகள், முன் ஐகாரம் பெற்றுச் சொல்லுருபுகளாக வரும்.
உதாரணம்.
அவனைக் காட்டிலும் பெரியவனிவன்
இவனைக் காட்டிலும் சிறியனவன்
-----



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 3:45 am

212. ஆறாம் வேற்றுமையினுடை உருபுகள் அது, ஆது, ஏ என்பனவாம்.
இவைகளுள், அது, ஆது உருபுகள் அஃறிணை யொருமைப் பெயரையும், அ உருபு அஃறிணைப் பன்மைப் பெயரையுங் கொள்ளும்.
உதாரணம்.
சாத்தனது கை, தனது கை, தன கைகள்
இவ்வுலுபுகள், தம்மையேற்ற பெயர்ப்பொருளை வருமொழிப் பெயராகி தற்கிழமைப் பொருளோடும் பிறிதின் கிழமைப் பொருளோடுஞ் சம்பந்த முடைய பொருளாக, வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட சம்பந்தப்பொருளே இவ்வுருபுகளின் பொருளாம்.
தற்கிழமைப் பொருளாவது, தன்னோடு ஒற்றுமையுடைய பொருள். அது, உறுப்பும், பண்பும், தொழிலும், ஒன்றன் கூட்டமும், பலவின் கூட்டமும், ஒன்று திரிந்தொன்றாயதும் என, ஆற் வகைப்படும்.
(உதாரணம்)
சாத்தானது கை - உறுப்புத்தற்கிழமை
சாத்தனது கருமை - பண்புதற்கிழமை
சாத்தனது வரவு - தொழிற்றற்கிழமை
நெல்லது குப்பை - ஒன்றன்கூட்டற்தற்கிழமை
சேனையது தொகுதி - பலவின்கூட்டத்தற்கிழமை
மஞ்சளது பொடி - ஒன்று திரிந்தொன்றாயதன் தற்கிழமை
பிறிதின்கிழமைப் பொருளாவது, தன்னின் வேறாய் பொருள். அது, பொருள், இடம், காலம், என மூவகைப்படும்.
(உதாரணம்)
முருகனது வேல் - பொருட்பிறிதின் கிழமை
முருகனது மலை - இடப்பிறிதின்கிழமை
மாரனது வேனில் - காலப்பிறிதின் கிழமை
இவ்வுருபுகள் நிற்றற்குரிய இடங்களில், உடைய என்பது சொல்லுருபாக வந்து, இரு திணையொருமை பன்மைப் பெயரையுங் கொள்ளும்.
உதாரணம்.
சாத்தனுடைய புதல்வன், சாத்தனுடைய புதல்வர்
சாத்தனுடைய வீடு, சாத்தனுடைய வீடுகள்
சிறு பான்மை அதுவுருபு, அரனது தோழன், நினதடியாரொடல்லால் என உயர்திணையொருமை பன்மைப் பெயர்களையுங் கொள்ளுமென வறிக.
இவ்வீடானது, அத்தோட்டமவனது என வவுருவன வற்றில், எனது, அவனது, என்பன துவ்விகுதியும் அகராச்சாரியையும் பெற்று நின்ற குறிப்பு வினை முற்று. எனது போயிற்று, அவனதை வாங்கினேன், என வருவனவற்றில், எனது, அவனது என்பன, மேற்கூறியபடி வந்த குறிப்பு விணையாலணையும் பெயர். இங்ஙணமன்றி, இவ்விடங்களில் வரும் அது என்பது ஆறாம் வேற்றுமையுருபன்று.
-----

213. ஏழாம் வேற்றுமையினுடைய உருகள், கண், இல், உள், இடம் முதலியனவாம்.
இவை வினையையும், வினையோடு பொருந்நும் பெயரையுங் கொள்ளும்.
இவ்வுருபுகள், தம்மையேற்ற பொருள். இடம், காலம். சினை, குணம், தொழில் என்னும் ஆறு வகைப் பெயர்பொருளையும், வருமொழிப் பொருளாகிய தற்கிழமைப் பொருளுக்காயினும், பிறிதின்கிழமைப் பொருளுக்காயினும் இடப்பொருளாக, வேறுபடுத்தும். அப்படி வேறுப்பட்ட இடப்பொருளே இவ்வுருபுகளின் பொருளாம்.
(உதாரணம்)
மணியின் கணிருகின்ற தொளி
பனையின்கண் வாழ்கின்றதன்றில் தற் பிறி பொருளிடமாயிற்று
ஊரின் கணிருக்குமில்லம்
ஆகாயத்தின்கட் பறக்கின்றது பருந்து தற் பிறி இடமிடமாயிற்று
நாளின் கணாழிகையுள்ளது
வேனிற்கட்பாதிரி ப10க்கும் தற் பிறி காலமிடமாயிற்று
கையின் கணுள்ளது விரல்
கையின்கண் விளங்குகின்றது கடகம் தற் பிறி சினையிடமாயிற்று
கறுப்பின்கண் மிக்குள்ளதழகு
இளமையின்கண் வாய்த்தது செல்வம் தற் பிறி குணமிடமாயிற்று
ஆடற்கணுள்ளது சதி
ஆடற்கட்பாடப்பட்டது பாட்டு தற் பிறி தொழிவிடமாயிற்று
மற்றவைகளும் இப்படியே
-----

214. எட்டாம் வேற்றுமையினுடைய உருபுகள், படர்க்கைப் பெயாPற்றில் ஏ ஓ மிகுதலும், அவ்வீறு திரிதலும், கெடுதலும், இயல்பாதலும், ஈற்றயலெழுத்துத் திரிதலுமாம்.
இவை ஏவல் வினையைக் கொள்ளும்.
இவ்வுருபுகள், தம்மையேற்ற பெயர்ப் பொருளை முன்னிலையின் விளிக்கப்படுபொருளாக, வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட விளிக்கப்பட்ட பொருளே இவ்வுருபுகளின் பொருளாம். விளித்தல் - அழைத்தல்.
(உதாரணம்)
சாத்தனே ஏ மிகுந்து
அப்பனோ வுண்ணாய் ஓ மிகுந்து
வேனிலாய் கூறாய் ஈறு திரிந்தது
தோழ சொல்லாய் ஈறு கெட்டது
பிதா வாராய் ஈறியல்பாயிற்று
மக்கள் கூறிர் ஈற்றயலெழுத்துத் திரிந்தது.
-----

215. நுமன், நுமள், நுமர் என்னுங் கிளைப் பெயாகளும். எவன் முதலிய வினைப் பெயர்களும், அவன் முதலிய சுட்டுப் பெயர்களும், தான், தாம், என்னும் பொதுப் பெயர்களும், மற்றையான், பிறன் முதலிய மற்றுப் பிற என்பன அடியாக வரும் பெயர்களும் விளி கொள்ளாப் பெயர்களாம்.
-----

216. சிறுபான்மை ஒரு வேற்றுமையுருபு நிற்றற் குரிய விடத்தே, மற்றதொரு வேற்றுமையுருபு மயங்கி வரும்; வரின் அவ்வுருபைப் பொருக்கியைந்த உருபாகத் திரித்துக் கொள்ள வேண்டும்.
உதாரணம்.
ஆலத்தினாலமிர்தமாக்கிய கோன்; இங்கே ஐயுருபு நிற்றற்குரிய விடத்தில் ஆலுருபு மயங்கிற்று.
காலத்தினாற் செய்த நன்றி; இங்கே கண்ணுருபு நிற்றற்குரிய விடத்தில் ஆனுருபு மயங்கிற்று.
நாகுவேயொடு நக்கு வீங்கு தோள்; இங்கே ஐயுருபு நிற்றற் குரிய விடத்தில் ஓடுருபு மயங்கிற்று.
ஈசற்கியான் வைத்தவன்பு; இங்கே கண்ணுருபு நிற்றற்குரிய விடத்தில் குவ்வுருபு மயங்கிற்று.
-----

217. ஒரு வேற்றுமைப் பொருள் மற்றொரு வேற்றுமை யுருபோடுந் தகுதியாக வருதலும் உண்டு.
உதாரணம்.
சாத்தனோடு சேர்ந்தான்; இங்கே செயப்படு பொருள் மூன்றனுருபோடு வந்தது.
மதுரையை நீங்கினான்; இங்கே நீங்கப் பொருள் இரண்டனுருபோடு வந்தது.
சீர்காழிக்கு வடக்குச் சிதம்பரம்; இங்கே எல்லைப் பொருள் நான்கனுருபோடு வந்தது.
வழியைசல் சென்றான்; இங்கே இடப் பொருள் இரண்டனுருபோடு வந்தது.
இன்னும் இப்படி வருவனவற்றையெல்லாம் ஆராய்ந்தறிந்து கொள்க.

தேர்வு வினாக்கள்

206. பெயர்களனைத்தும் எத்தனை வேற்றுமைகளை ஏயற்கும்?
முதல் வேற்றுமை எப்படிப் பெயர் பெறும்?
எட்டாம் வேற்றுமை எப்படிப் பெயர் பெறும்?
207. முதல் வேற்றுமையினது உருபு யாது?
வேற்றமையுருபினாலே கொள்ளப்படுஞ் சொல் எப்படிப் பெயர் பெறும்?
எழுவாய் வேற்றுமையுருபு செ; சொற்களை பயனிலையாகக் கொள்ளும்?
எழுவாய்யுருபுக்குப் பொருள் என்ன?
வினைமுதற்குப் பரியாய நாமங்கள் எவை?
எழுவாய்க்கு எவை சொல்லுருபாக வரும்?
208. இரண்டாம் வேற்றுமையினது உருபு யாது?
இவ்வையுருபு எவைகளைப் பயனிலையாகக் கொள்ளும்?
ஐயுருபுக்கு பொருள் என்ன? செயப்படுபொருட்குப் பரியாய நாமங்கள் எவை?
செயப்படு பொருள் எத்தனை வகைப்படம்?
209. மூன்றாம் வேற்றுமையினுடைய உருபுகள் எவை?
இம் மூன்றாம் வேற்றமையுருபுகள் எதனை பயனிலையாகக் கொள்ளும்?
இவைகளுள் ஆல், ஆன் என்னும் இரண்டுருபுகளுக்கும் பொருள் என்ன?
கருவியென்பதற்குப் பாரியாய நாம் என்ன?
கருவி எத்தனை வகைப்படும்? கருத்தா எத்தனை வகைப்படும்?
ஓடு, ஒடு என்னும் இரண்டுருபுகளுக்கும் பொருள் என்ன?
ஆல், ஆன் உருபுகள் நிற்றற்குரிய விடத்து எது சொல்லுருபாக வரும்?
ஓடு, ஒடு உருபுகள் நிற்றற்குரிய விடத்து எது சொல்லுருபாக வரும்?
210. நான்காம் வேற்றுமையினது உருபு யாது?
இக் குவ்வுருபு எவைகளைப் பயனிலையாகக் கொள்ளும்?
குவ்வுருபுக்கு பொருள் என்ன?
குவ்வுருபு நிற்றற்குரிய விடத்தே எவை சொல்லுருபாக வரும்?
211. ஐந்தாம் வேற்றுமையினுடைய உருபுகள் யாவை?
இவ்வைந்தாம் வேற்றுமையுருபுகள் எவைகளைப் பயனிலையாகக் கொள்ளும்?
ஐந்தாம் வேற்றுமையுருபுகளுக்கு பொருள் என்ன?
நீக்கப் பொருளினும், எல்லைப் பொருளினதும் எவை சொல்லுருபுகளாக வரும்?
எல்லைப் பொருளிலே வேறு சொல்லுருபுகள் வாராமோ?
212. ஆறாம் வேற்றுமையினுடைய உருபுகள் யாவை?
இவ்வாறாம் வேற்றுமைகளுள், எவ்வெவை எவ்வெச் சொல்லைப் பயனிலையாகக் கொள்ளம்?
ஆறாம் வேற்றுமையுருபுகளுக்கு பொருள் என்ன?
தற்கிழமைப் பொருளாவது யாது? அத் தற்கிழமைப் பொருள் எத்தனை வகைப்படும்?
பிறிதின்கிழமைப் பொருளாவது யாது?
அப்பிறிதின்கிழமைப் பொருள் எத்தனை வகைப்படும்?
ஆறாம் வேற்றுமையுருபுகள் நிற்றற்குரிய இடங்களில் எது சொல்லுருபாக வரும்?
அது வுருபு உயர்திணை யொருமை பன்மைப் பெயர்களைக் கொள்ளுதலில்லையோ?
இவ் வீடெனது, அத்தோட்டமவனது, என வருவனவற்றில் அது என்பது ஆறாம் வேற்றுமை உருபு தானோ?
213. ஏழாம் வேற்றுமையினுடைய உருபுகள் யாவை?
ஏழாம் வேற்றுமையுருபுகள் எவைகளைப் பயனிலைகளாகக் கொள்ளும்?
ஏழாம் வேற்றுமையுருபுகளுக்கு பொருள் என்ன?
214. எட்டாம் வேற்றுமையுருபுகள் யாவை?
எட்டாம் வேற்றுமையுருபுகள் எதனைப் பயனிலையாகக் கொள்ளும்?
எட்டாம் வேற்றுமையுருபுகளுக்குப் பொருள் என்ன?
215. இவ்விளியுருபுகளை ஏலாப் பொருள்களும் உளவோ?
216. ஒரு வேற்றுமையுருபு நிற்றற்குரிய விடத்தே மற்றொரு வேற்றுமையுருபு மயங்கி வருதல் உண்டோ?
217. ஒரு வேற்றுமைப் பொருள் மற்றொரு வேற்றுமையுருபோடுந் தகுதியாகவருதலும் உண்டோ?

-----



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 3:48 am

பெயர்கள் உருபேற்று முறை
218. ஐ முதலிய உருபேற்குமிடத்து, யான், கான் என்னுந் தன்மையொருமைப் பெயர்கள், என் எனவும், யாம், நாம், யாங்கள், நாங்கள் என்னுந் தன்மைப் பன்மை பெயர்கள், எம், நம், எங்கள், நங்கள் எனவும், விகாரப்பட்வரும்.
உதாரணம்.
என்னை, எம்மை, நம்மை, எங்களை, நங்களை, மற்றையுருபுகளோடும் இப்படியேயொட்டுக.
நீ என்னும் முன்னிலை யொருமைப் பெயா, நின் உன் எனவும், நீர் முதலிய முன்னிலைப் பண்மைப் பெயர்கள், நும், உம், எனவும், நீங்கள் என்னும் முன்னிலைப் பன்மைப் பெயர், நுங்கள், உங்கள் எனவும், விகாரப்பட்டு வரும்.
உதாரணம்.
நின்iனை, உன்னை, நும்மை, நுங்களை, உங்களை மற்றையுருபுகளோடும் இப்படியேயொட்டுக.
தான், தாம், தாங்கள், என்னும் படர்க்கைப் பெயர்கள், தன், தம், தங்கள் என விகாரப்பட்டு வரும்.
உதாரணம்.
தன்மை, தம்மை, தங்களை மற்றையுருபுகளோடும் இப்படியேயொட்டுக.
இவைகளுள்ளே, தனிக்குற்றொற்றிறுதியாக நின்ற பெயர்களோடு குவ்வுருபு புணருமிடத்து, நடுவே அகாரச்சாரியை தொன்றும். இச்சாரியை அகரத்தின் முன்னும், தனிக்குற்றெற்று இரட்டாவாம்.
உதாரணம்.
தனக்கு, தனது, தனாது. தன
-----

219. உயிரையும் மெய்யையும், குற்றியுலுகரத்தையும் ஈறாகவுடைய பெயர்ச்சொற்கள், இன்னுருபொழிந்த உருபுகளை ஏற்குமிடத்துப் பெரும்பாலும் இன்சாரியை பெறும்.
உதாரணம்.
கிளியினை பொன்னினை நாகினை
கிளியினால் பொன்னினால் நாகினால்
கிளியிற்கு பொன்னிற்கு நாகிற்கு
கிளியினது பொன்னினது நாகினது
கிளியின்கண் பொன்னின்கண் நாகின்கண்
இப்பெயர்கள், குவ்வுருபேற்குமிடத்துக் கிளியினுக்கு, நாகினுக்கு, என இன்சாரியையோடு உகாரச்சாரியையும், பெறுமெனவுங் கொள்க. மற்றைவைகளும் இப்படியே வரும்.
-----

220. ஆ, மா, கோ என்னும் இம் மூன்று பெயர்களும், உருபேற்குமிடத்து, இன்சாரியையேயன்றி, னகரச்சாரியையும் பெறும். குவ்விருபிற்கு னகரச்சாரியையோடு உகரச்சாரியையும், னகரச்சாரியையின்றி உகரச் சாரியையும் வரும்.
உதாரணம்.
ஆவினை ஆனை
ஆவினால் ஆனால்
ஆவிற்கு ஆனுக்கு, ஆவுக்கு
ஆவின் ஆனின்
ஆவினது ஆனது
ஆவின்கண் ஆன்கண்
மா, கோ, என்பவற்றோடும் இப்படியே யொட்டுக. இங்கே மா - விலங்கு, கோ - அரசன்.
-----

221. அது, இது, உது என்னுஞ் சுட்டுப் பெயர்களும், எது, ஏது, யாது என்னும் வினாப் பெயர்களும், உருபேற்கு மிடத்து, அன்சாரியையும், சிறுபான்மை இன்சாரியையும் பெறும்.
உதாரணம்.
அதனை, அதனால், அதினால்
இதனை, இதனால், இதினால்
எதனை, எதனால், எதினால்
மற்றவைகளும் இப்படியே
இவை சிறுபான்மை, அதை, இதை, எதை எனச் சாரியை பெறாதும் வரும்.

-----

222. அவை, இவை, உவை, எவை, காரியவை, நெடியவை முதலிய ஐகார வீற்றிணைப் பன்மைப் பெயர்கள், உரு பேற்குமிடத்து, ஈற்றைகாரங் கெட்டு, அற்றுச்சாரியை பெறும். நான்குருபும் ஏழனுருபும் ஏற்குமிடத்து, அற்றுச்சாரியை மேல் இன்சாரியையும் பெறும்.
உதாரணம். அவற்றை எவற்றை கரியவற்றை
அவற்றால் எவற்றால் கரியவற்றால்
அவற்றிற்கு எவற்றிற்கு கரியவற்றிற்கு
அவற்றின் எவற்றின் கரியவற்றின்
அவற்றது எவற்றது கரியவற்றது
அவற்றின்கண் எவற்றின்கண் கரியவற்றின்கண்
மற்றவைகளும் இப்படியே
-----

223. பல, சில, சிறிய, பெரிய, அரிய முதலிய அகரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர்களும், யா என்னும் அஃறிணைப் பன்மை வினாப் பெயரும், உருபேற்று மிடத்து, அற்றுச்சாரியை பெறும். நான்கனுருபும், ஏழனுருபும், ஏற்குமிடத்து, அற்றுச் சாரியைமேல் இன் சாரியையும் பெறும்.
உதாரணம்.
பலவற்றை சிறியவற்றை யாவற்றை
பலவற்றால் சிறியவற்றால் யாவற்றால்
பலவற்றிற்கு சிறியவற்றிற்கு யாவற்றிற்கு
பலவற்றின் சிறியவற்றின் யாவற்றின்
பலவற்றது சிறியவற்றது யாவற்றது
பலவற்றின்கண் சிறியவற்றின்கண் யாவற்றின்;கண்
மற்றவைகளும் இப்படியே
-----

224. மகரவீற்றுப் பெயர்ச்சொற்கள், உருபேற்குமிடத்து, அத்துச்சாரியை பெறும்; பெறுமிடத்து, ஈற்று மகரமுஞ் சாரியை முதல் அகரமுங் கெடும். சில விடத்து அவ்வத்துச் சாரியையின் மேல் இன் சாரியையும் பெறும்.
உதாரணம்.
மரத்தை மரத்தினை
மரத்தால் மரத்தினால்
மரத்துக்கு மரத்திற்கு
மரத்தின் . . . .
மரத்தது மரத்தினது
மரத்துக்கண் மரத்தின்கண்
-----

225. எல்லாமென்னும் பெயர், அஃறிணைப் பொருளில் உருபேற்குமிடத்து, ஈற்று மகரங்கெட்டு, அற்றுச்சாரியையும், உருபின் மேல் முற்றும்மையும் பெறும்; உயர்திணைப் பொருளில் உருபேற்றுமிடத்து, நம்மூச்சாரியையும், உருபின்மேல் முற்றும்மையும் பெறும்.
உதாரணம்.
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
எல்லாநம்மையும் எல்லாநம்மாலும்
எல்லாநம்மையும் என்பது உயர்திணைத் தன்மைப் பன்மை.
-------

226. உருபேற்குமிடத்து, எல்லாரென்பது, தம்முச்சாரியையும், எல்லீரென்பது நும்முச்சாரியையும் பெற்று உருபின் மேல் முற்றும்மையும் பெறும்.
உதாரணம்.
எல்லார் தம்மையும் எல்லீர் நும்மையும்
எல்லார் தம்மாலும் எல்லீர் நும்மாலும்
எல்லாரையும், எல்லாராலும், எ-ம். எல்லீரையும், எல்லீராலும், எ-ம். சாரியை பெறாதும் வரும்.
-----

227. இவ்வாறு உருபு புணர்ச்சிக்குக் கூறிய முடிபுகள், உருபு தொக்க பொருட்புணர்ச்சிக் கண்ணும், வரும்.
உதாரணம்.
என்கை, எங்கை, எங்கள் கை, நங்கை, நங்கள் கை, நின்கை, உன்கை, நுங்கை, நுங்கள் கை, உன்கை, உங்கை, உங்கள் கை, தன்கை, தங்கை, தங்கள் கை, எ-ம். கிளியின் கால், கொக்கின் கண், ஆவின் கொம்பு, பலவற்றுக்கோடு, மரத்துக்கிளை, எல்லாவற்றுக்கோடும். எ-ம். வரும்.

தேர்வு வினாக்கள்
218. ஐ முதலிய உருபேற்குமிடத்துத் தம்மைப் பெயர்கள் எப்படி விகாரப் பட்டு வரும்?
முன்னிலைப் பெயர்கள் எப்படி விகாரப் பட்டு வரும்?
தான், தாம், தாங்கள் என்னும் படர்க்கைப் பெயர்கள் எப்படி விகாரப் பட்டு வரும்?
இவைகளுள்ளே, தனிக்குற்றொற்றிறுதியாக நின்ற பெயர்களோடு நான்கனுரும் ஆறனுருபுகளும் புணருமிடத்து எப்படியாம்?
219. உயிரையும், மெய்யையும், குற்றியலுகரத்தையும் ஈறாகவுடைய பெயர்ச் சொற்கள் உருபேற்குமிடத்து எப்படியாம்?
220. ஆ, மா, கோ என்னும் பெயர்கள், உருபேற்கு மிடத்து இன்சாhயையேயன்றி, வேறு சாரியையும் பெறுமோ?
221. அது, இது, உது, என்னுஞ் சுட்டுப்ப் பெயர்களும், எது, ஏது, யாது, என்னும் வினாப் பெயர்களும் உருபேற்குமிடத்து, எப்படியாம்?
222. அவை, இவை, உவை, எவை, கரியவை, நெடியவை, முதலிய ஐகாரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர்களும் உருபேற்கு மிடத்து எப்படியாம்?
223. பல, சில, சிறிய, பெரிய, அரிய, முதலிய அகரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர்களும், யா வென்னும் அஃறிணைப் பன்மை வினாப் பெயரும் உருபேற்கு மிடத்து எப்படியாம்?
224. மகரவீற்றுப் பெயர்கள் உரு பேற்குமிடத்து எப்படியாம்?
225. எல்லாமென்னும் பெயர் அஃறிணைப் பொருளில் உருபேற்குமிடத்து எப்படியாம்?
226. உருபேற்குமிடத்து எல்லார் என்பது எப்படியாம்? எல்லீர் என்பது எப்படியாம்?
227. இவ்வாறு ஊருபு புணர்ச்சிக்குக் கூறிய முடிபுகள், உருபு தொக்க பொருட் புணர்ச்சிக் கண்ணும் வருமோ?


பெயரியல் முற்றிற்று.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 3:50 am

2.2 வினையியல்

228. வினைச் சொல்லாவது, பொருளினது, புடைப் பெயர்ச்சியை உணர்த்துஞ் சொல்லாம்.
புடைப்பெயர்ச்சியெனினும், வினை நிகழ்ச்சியெனினும், பொருந்தும். வினை, தொழில் என்பவை ஒரு பொருட் சொற்கள்.
------

தேர்வு வினாக்கள்

228. வினைச் சொல்லாவது யாது?
புடைப் பெயர்ச்சி என்பது என்ன? வினைக்கு பாரியாயநாமம் என்ன?

----

வினை நிகழ்ச்சிக்குக் காரணம்

229. வினையானது வினைமுதல், கருவி, இடம், செயல், காலம், செயப்படு பொருள் என்னும் இவ்வாறுங் காரணமாவேணும், இவற்றுட் பல காரணமாகவேனும், நிகழும்.
உதாரணம்.
வனைந்தான்: இத்தெரிநிலை வினை, வினைமுதன் முதலிய ஆறுங் காரணமாக, வந்தது. வினைமதல் குயவன்; முதற்கருவி மண்; துணைக்கருவி தண்டசக்கர முதலியன் இடம் வனைதற்கு ஆதாரமாகிய இடம்; செயல் வனைதற்கு மதற்காரணமாகிய செய்கை; காலம் இறந்தகாலம்; செயப்படு பொருள் குட முதலியன.
இருந்தான்: இத்தெரிநிலை வினை, வினைமுதன் முதலிய ஆறுங் காரணமாக, வந்தது.
உடையன்: இக்குறிப்பு வினை, கருவியுஞ் செயப்படு பொருளுமொழிந்த நான்குங் காரணமாக வந்தது.
-----

230. வினை முதன் முதலிய ஆறனுள்ளே, தெரிநிலை வினைமுற்றின் கண், விணைமுதலுஞ் செயலுங் காலமுமாகிய மூன்றும் வெளிப்படையாகவும், மற்றை மூன்றுங் குறிப்பாகவுந் தோன்றும்.
தெரிநிலை வினைப் பெயரெச்ச வினையெச்சங்களின்கண் செயலுங் காலமுமாகிய இரண்டும் வெளிப்படையாகவும், மற்றை நான்கும் குறிப்பாகவுந் தோன்றும்.
வினைமுதல் பால் காட்டும் விகுதியினாலும், செயல் பகுதியினாலும், காலம் இடைநிலையும் விகுதியும் விகாரப்பட்ட பகுதியுமாகிய மூன்றனுள் ஒன்றினாலுந் தொன்றும். எச்ச வினைகட்குப் பால் காட்டும் விகுதி யின்மையால், அவற்றில் வினைமுதல் வெளிப்படத் தோன்றதாயிற்று.
உதாரணம்.
உண்டான்: இத்தெரிநிலை வினைமுற்றிலே, பகுதியாற் செயலும், இடைநிலையாற் காலமும், விகுதியால் வினைமுதலும் வெளிப்படையாகவும், மற்றவை
உண்ட: இத் தெரிநிலைவினைப் பெயரெச்சத்திலே, பகுதியாற் செயலும், இடைநிலையாற் காலமும் வெளிப்படையாகவும், குறிப்பாகவுந் தோன்றின.
உண்டு: இத்தெரிநிலை வினையெச்சத்திலே, பகுதியாற் செயலும், இடைநிலையாற் காலமும் வெளிப்படையாகவும், குறிப்பாகவுந் தோன்றின.
---

231. வினைக்குறிப்பு முற்றிக்கண் வினை முதன் மாத்திரம் வெளிப்படையாகவும், மற்றவையெல்லாங் குறிப்பாகவுந் தோன்றும்.
வினைக்குறிப்பு வினையெச்சங்களின் கண், வினைமுதன் முதலியவெல்லாங் குறிப்பாகவே தோன்றும்.
உதாரணம்.
கரியன்: இக்குறிப்பு வினைமுற்றிலே, விகுதியால் வினைமுதல் வெளிப்டையாகவும், மற்றவையெல்லாங் குறிப்பாகவுந் தோன்றும்.

கரிய: இக்குறிப்புவினைப் பெயலெச்சத்திலே, வினைமுதன் முதலியவெல்லாங் குறிப்பாகவே தோன்றின.

இன்றி: இக்குறிப்புவினை வினையெச்சத்திலே, வினைமுதன் முதலியவெல்லாங் குறிப்பாகவே தோன்றின.

தேர்வு வினாக்கள்
229. வினையானது எவை காரணமாக நிகழும்?
230. தெரிநிலைவினைமுற்றிற்கண், வினைமுதன் முதலய ஆறும் எப்படித் தோன்றும்?
தெரிநிலை வினைப் பெயரெச்ச வினையெச்சங்களின் கண் வினைமுதன் முதலிய ஆறும் எப்படித் தோன்றும்? வினைமுதல், செயல், காலம், என்னும் மூன்றும் எவ்வௌ; வுறுப்புக்களினாலே தோன்றும்?
யாது காரணத்தால் எச்ச வினைகளில் வினை முதல் வெளிப்படத் தோன்றாதாயிற்று?
231. வினைக்குறிப்பு, முற்றிக் கண் வினைமுதன் முதலிய ஆறும் எப்படிப்த் தோன்றும்?
வினைக்குறிப்புப் பெயரெச்ச வினையெச்சங்களின் கண் வினைமுதன் முதலிய ஆறும் எப்படித் தோன்றும்?

----

காலம்

232. காலம், இறப்பு, நிகழ்வு, எதிர்வு, என மூவகைப்படும்.

இறப்பாவது தொழிலது கழிவு நிகழ்வாவது தொழில் தொடங்கப்பட்டு முற்றுப் பெறாத நிலமை. எதிர்வாவது தொழில் பிறவாமை.

தேர்வு வினாக்கள்

232. காலமாவது யாது? இறப்பாவது யாது? நிகழ்வாவது யாது? எதிர்வாவது யாது?

---

வினைச்சொற்களின் வகை


233. இக்காலத்தோடு புலப்படுவனவாகிய வினைச்சொற்கள், தெரிநிலைவினையுங் குறிப்பு வினையும் என, இருவகைப்படும்.
---

234. தெரிநிலை வினையாவது, காலங்காட்டும் உருப்புண்மையினாலே, காலம் வெளிப்படத் தெரியும்படி நிற்கும் வினையாம்.

உதாரணம்.

நடந்தான்: இது, தகரவிடை நிலையினால் இறந்தகாலம் வெளிப்படத் தெரியும் படி நிற்றலினாலே, தெரிநிலை வினை.

உண்கும்: இது, கும் விகுதியினால் எதிர்காலம் வெளிப்படத் தெரியும் படி நிற்றலினாலே, தெரிநிலை வினை.

பெற்றான்: இது, பெறு, பெற்று என விகாரப்பட்டு நின்ற பகுதியினால் இறந்தகாலம் வெளிப்படத் தெரியும் படி நிற்றலினாலே, தெரிநிலை வினை.

தெரிநிலை வினைகள் தோன்றுதற்குரிய முதனியடிகள் இவையென்பது பதவியலில் நாற்பத்தாறம் வசனத்திற் கூறப்பட்டது.
---

235. குறிப்பு வினையாவது, காலங்காட்டும் உறுப்பின்மையினாலே, காலம் வெளிப்படத் தெரிதலின்றிச் சொல்லுவோனது குறிப்பினாலே தோன்றும்படி, நிற்கும் வினையாம்.

உதாரணம்.

பொன்னன்: இது, பொன்னையுடையனாயினான் என இறந்தகாலங் கருதியாயினும், பொன்னையுடையனாகின்றான் என நிகழ்காலங் கருதியாயினும், பொன்னையுடையனாவான் என எதிர்காலங் கருதியாயினுந் தன்னை ஒருவன் சொல்ல, அக்காலம் அவனது குறிப்பாட் கேட்போனுக்குத் தோன்றும் படி நிற்றலினாலே, குறிப்பு வினை.

பொன்னன் என்பது, பொன்னுடைமை காரணமாக ஒருவனுக்குப் பெயராய் நின்று எழுவாய் முதலிய வேற்றுமையுரு பேற்கும் போது பெயர்ச் சொல்; முக்காலம் பற்றிப் புடை பெயரும் ஒருவனது வினை நிகழ்ச்சியை உணர்த்திப் பெயருக்குப் பயனிலையாய் வரும் போது குறிப்பு வினைமுற்றுச் சொல்; அங்ஙனம் வினைமுற்றாய் நின்று பின் அவ்வினை நிகழ்ச்சி காரணமாக அவனுக்குப் பெயராகி எழுவாய் முதலிய வேற்றுமையுருபேற்கும் போது குறிப்பு வினையாலணையும் பெயர்.

குறிப்பு வினைகள் தோன்றுதற் குரிய முதனிலையடிகாள் இவையென்பது பதவியலில் நாற்பத்து நான்காம் வசனத்திற் கூறப்பட்டது.
---

236. தெரிநிலைவினை குறிப்புவினை என்னும் இரண்டும், முற்றும், பெயரெச்சமும், வினையெச்சமும், வினையெச்சமும் என்பன மும்மூன்று வகைப்படும். எனவே, தெரிநிலைவினைமுற்றும், தெரிநிலைவினைப் பெயரெச்சமும், தெரிநிலை வினையெச்சமும், குறிப்பு வினைமுற்றும், குறிப்பு வினைப்பெயரெச்சமும், குறிப்பு வினை வினையெச்சமும் என, வினைச்சொற்கள் அறுவகையாயின.
---

237.இவ்வறுவகை வினைச்சொற்களும், உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வரும்.

உடன்பாட்டு வினையாவது. தொழிலினது நிகழ்ச்சியை உணர்த்தும் வினையாம். உடன்பாட்டு வினையெனினும், பொருந்தும்.

உதாரணம்.
நடந்தான் நடந்த நடந்து
பெரியன் பெரிய மெல்ல

எதிர்மறை வினையாவது, தொழில் நிகழாமையை உணர்த்தும் வினையாம். எதிர்மறைவினையெனினும், மறைவினையெனினும், பொருந்தும்.

உதாரணம்.
நடவான் நடவாத நடவாது
இலன் இல்லாத இன்றி
---

238. வினைச்சொற்கள், இருதிணையைம்பான் மூவிடங்களுள் ஒன்றற்கு உரிமையாகியும், பலவற்றிற்குப் பொதுவாகியும், வழங்கும்.

தேர்வு வினாக்கள்
233. இக்காலத்தோடு புலப்படுவனவாகிய வினைச்சொற்கள் எத்தனை வகைப்படும்?
234. தெரிநிலை வினை யாவது யாது?
235. குறிப்பு வினையாவது யாது? பொன்னன் என்பது எத்தனை வகைச் சொல்லாகும்? அது எப்பொழுது பெயர்ச் சொல்? எப்பொழுது குறிப்பு வினைமுற்றுச் சொல்? எப்பொழுது குறிப்பு வினையாலணையும் பெயர்?
236. தெரிநிலை வினை குறிப்பு வினை என்னும் இரண்டும் தனித்தனி எத்தனை வகைப்படும்?
237. இவ்வறுவகை வினைச்சொற்களும் எவ்வெப் பொருளில் வரும்? உடன்பாட்டு வினையாவது யாது? எதிர்மறை வினயாவது யாது?
238. வினைச்சொற்கள் இருதிணையைம்பான் மூவிடங்களைப் பற்றி எப்படி வழங்கும்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக