புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 20:14

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 17:25

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:51

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:54

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:48

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:41

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:27

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:20

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10 
73 Posts - 47%
heezulia
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10 
65 Posts - 42%
mohamed nizamudeen
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10 
5 Posts - 3%
prajai
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Jenila
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kargan86
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10 
73 Posts - 35%
mohamed nizamudeen
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10 
6 Posts - 3%
Jenila
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Jun 2011 - 18:22

First topic message reminder :

கவியேறு உமறுப் புலவரவர் அவர்களின் வரலாற்றுச் சுருக்கம்

அண்ணல் பெருமானார் முஹம்மது(ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் இப்னு பாகிர் என்பார் வாழ்ந்திருந்தார். பெருமானாரின் திருத்தோழராகும் பேறு பெற்ற அன்னார் , அண்ணலாரின் அரிய வாழ்த்தினைப் பெற்றவர். அவரின் வழித்தோன்றல்கள் அனைவரும் காலமெல்லாம் கமழ்மணத்துடன் வாழவேண்டும் என்றே அண்ணலார் ஆசி கூறினார். அந்த பரம்பரையில் வந்தவரே 'சேகு முதலியார்' என்ற செய்கு முஹம்மது அலியார் ஆவர். அன்னார் மலையாள நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்க்கு வந்து, திருநெல்வேலியைச் சார்ந்த நாகலாபுரத்தில் குடியிருந்துகொண்டு, அதையடுத்திருந்த எட்டையபுரத்து மகாராஜாவிடம் வாசனைத் திரவியங்களை எடுத்துப் போய் விற்றுக் காலம் கழித்து வந்தார்.

உயர்ந்த மணப்பொருட்களை வழங்கித் தம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட சேகு முதலியார் தம் அருகிலேயே வாழ்ந்து வரவேண்டு மென்று மன்னர் விரும்பினார்.என்வே, சேகு முதலியாரும் மன்னரின் விருப்பிற்க்குக் கட்டுப்பட்டு,நாகலாபுரத்திலும் எட்டையபுரத்திலுமாக வாழ்ந்து வந்தார்.அக்காலத்தில்தான், அவருடைய ஒப்பற்ற அருந்தவக் கொழுந்தாக 'உமறு' என்ற அழகிய குழந்தை பிறந்தது.

இளமையிலே எழிலும் கல்வியார்வமும் வாய்க்கப் பெற்ற சிறுவர் உமறு, எட்டையபுரத்து அரண்மனைத் தமிழ்ப்புலவராயிருந்த 'கடிகை முத்து புலவர்'என்பவரிடம் தமிழ்க் கல்வி பயிலத் தொடங்கினார். பல்வகைக் கல்வி-கேள்விகளில் தேர்ந்த உமறு, தம் ஆசானின் பெருமதிப்பிற்குரிய மாணவரானார். இவ்வாறிருக்கையில், ஒருநாள் வடநாட்டிலிருந்து ஆரியமும் அருந்தமிழும் கற்றுப் புலமை பெற்ற 'வாலை வாருதி' என்ற புலவர் எட்டையபுர அரசவைக்கு வந்து சேர்ந்தார். தம்மை வாதில் வெல்லத் தக்கார் யாருமிலார் என்று அவர் மார் தட்டிப் பேசிப் பிற புலவர்களை வாதுக்கழைத்தார். அதன்படியே எட்டையபுரத்து அரசவையிலும் வந்து அறிவித்தார். மன்னரும் ஆவன செய்ய இசைந்தார்.

புலமைத் திறத்தாலன்றி, மாய மந்திரங்களாலேயே பல அரசவைப் புலவர்களை வெற்றிகொண்ட வாலைவாருதியைப் பற்றிக் கடிகைமுத்துப் புலவர் கேள்வியுற்றிருந்தார். அதனால், வித்தைகள் புரியும் வித்துவானைத் தம்மால் எவ்வாறு வெற்றிகொள்ள முடியுமென்ற நீங்காக் கவலையில் ஆழ்ந்திருந்தார்.

ஆசானின் கவலையை அறிந்த மாணவர் உமறு, அவரை அணுகி, கவலைக்கான காரணத்தை விளங்கிக் கொண்டார். எனவே, வாலை வாருதியுடன் வாதிடுவதற்கான குறிப்பிட்ட நாள் வந்ததும், தம் ஆசிரியரிடம் அவருக்குப் பகரமாக அரசவை செல்லுவதற்கான அனுமதியை வலிந்துப் பெற்று, எட்டையபுரத்து அரசவைக்கு வந்து சேர்ந்தார். உடல் நலக் குறைவால் கடிகைமுத்துப் புலவர் வரவில்லையென்றும், அவருக்குப் பகரமாக அவரின் மாணவர் வந்திருக்கிறார் என்றும், வாலை வாருதி தம் சொற்பொழிவைத் தொடங்கலாம் என்றும் மன்னர் உத்தரவிட்டார்.

அதைச் செவியேற்ற வாலைவாருதி, தம் வலக்கையிற் போட்டிருந்த தங்கக் கடகத்தை அசைத்து மேலேற்றினார். வழக்கமாக அக்கடகத்திலிருந்து ஒலிக்கும் 'வாலைவாருதி என்றறியீரோ' என்ற சொற்கள், அன்றைக்கு மட்டும், 'வாலைவாருதி என்றறியாயோ பிள்ளாய்!' என்று உண்டாயின. அப்போது உமறுப் புலவர், தம் இடுப்பில் செருகியிருந்த யாழ்ப்பாணத்து எழுத்தாணியை எடுத்து நிலத்தில் ஊன்றி, "என் எழுத்தாணியே! இவருக்கெதிர் பேசு!" என்று கட்டளையிட்டார். ஒன்றும் நிகழவில்லை! பின்னும் உத்தரவிட்டார்.

அப்போதும் ஏதும் நிகழவில்லை! மூன்றாவது முறையிலும் முயன்று தோல்வி கண்ட உமறு, கண்கள் சிவக்க, முகத்தில் தீக்கனல் பறக்கக் கடுஞ்சினம் கொண்டு, எழுத்தாணியைப் பார்த்து, 'பேசு!' என்று உரக்கக் கூறி உத்தரவிட்டார். அவை கிடுகிடுத்த அவ்வோசையைத் தொடர்ந்து, அவ்வெழுத்தாணியிலிருந்து கீழ்க்காணும் பாடல் உதிர்ந்து உள்ளங்களை அதிர வைத்தது:

"சமரதுர கததுங்க மனருஞ்ச பாசென்று
சரிசமா சனமீதிலே
அமரவொரு நரகொம்பு தினமுஞ்சு மாசெல்லு
மமுதகவி ராஜனானே
திமிரபகை வரைவென்ற பருதியெனு மெமதெட்டத்
தீரனணி வாயில்வித்வான்
உமறுகுமு றிடிலண்ட முகடும்ப டீரென்னு
முள்ளச்சம் வையும்பிள்ளாய்!"


இதனைச் செவியுற்ற புலவர் வாலைவாருதி, உளம் பதறி, மெய் நடுக்குற்று, தனது மந்திரச் சக்தியெல்லாம் இத்தகைய அற்புதத்தின் முன் அற்பம் என்றுணர்ந்து, எழுந்து சென்று உமறு புலவரிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோரி, அரசவையை விட்டு அகன்றார்.

இந்நிகழ்ச்சி, மன்னருக்கு உமறுப் புலவர் மீது ஒப்பற்ற மதிப்பை ஏற்படுத்திற்று. மகிழ்ச்சிப் பெருக்கால், மன்னர் தம்மிடமிருந்த விருதுகள் பலவற்றையும் உமறுப் புலவருக்கு வழங்கி அனுப்பிவைத்தார். வெற்றி பெற்று வீடு திரும்பிய தம் மாணாக்கரை இறுகத் தழுவிக்கொண்ட கடிகைமுத்துப் புலவர், தாம் அப்போது முதுமை எய்திவிட்டதால், அன்றுமுதல் உமறே எட்டையபுரத்து அரண்மனை அவைப் புலவராக இருக்கவேண்டுமென்று ஆசி கூறி அனுப்பி வைத்தார். அன்று முதல் உமறுப் புலவர் எட்டையபுரத்து அரண்மனையை அலங்கரித்து வந்தார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Jun 2011 - 18:34

197 வண்டு வாழ்குழன் மடந்தையர் திரண்டுவாழ்த் தெடுப்பக்
கண்டு மென்கொடி யாமினா தாமரைக் காலின்
முண்ட கச்செழு மலர்சொரி தலைமுகங் கவிழத்
தெண்ட னிட்டது புத்தென வுறைந்ததே வதையே. 1.5.32

198 அஞ்ச லித்தது புத்தென மனத்ததி சயித்து
மஞ்சு வார்குழ லாமினா பயந்துமெய் வருந்திக்
கஞ்ச மின்னனார் கணத்துடன் வாயிலைக் கடந்தே
யின்சொ னன்குலக் கிளியென மனையில்வந் திருந்தார். 1.5.23

199 தெரியுந் திங்களைந் தினிலிசு மாயில்செப் பினரா
லுரிய மென்மயி லேநின துதரத்தி லுறைந்தோர்
தரிய லர்க்கிடி யாயடுத் தவர்க்கொரு தருவாய்
வரிசை யுற்றவர் பெயர்முகம் மதுவென வகுத்தே. 1.5.34

200 ஆறு திங்களில் வந்தமூ சாநபி யழகாய்க்
கூறு மென்கரும் பேநின்றன் வயிற்றுறு குழந்தை
வீறு பெற்றிடுந் தலைமையும் பெரும்பத வியையு
மாறி லாதவர் பெயரிடு முகம்மதென் றுரைத்தார். 1.5.35

201 சினவு வேற்கரத் தப்துல்லா வெனுமொரு சிங்க
மனைவி யாகிய ஆமினா வெனுங்குல மடமா
னினமு மாயமும் வாழ்த்திடக் கருப்பமு மிலங்கக்
கனவு கண்டக மகிழ்ந்தினி திருக்குமக் காலம். 1.5.36

202 மக்க நன்னக ரப்துல்முத் தலிபெனு மன்ன
ரக்க மன்னமன் னப்துல்லா தமையழைத் திருத்தித்
தக்க புத்தியு முறைமையுந் தொழிலையுஞ் சாற்றி
யொக்கல் கூட்டுறப் புறநகர்க் கெழுகவென் றுரைத்தார். 1.5.37

203 தந்தை கூறிட அப்துல்லா மனந்தறு காமன்
மந்திர வாளெடுத் தினிதுற விசித்தனர் மருங்கி
லிந்திர வில்லென வில்லெடுத் தொருகையி லேந்திக்
கந்து கங்கொணர் கென்றுகட் டுரைத்தனர் கடிதின். 1.5.38

204 பாட லத்தின்மேற் கொண்டுறு தனிற்பரி வாரங்
கூடு கோளரித் திரளென வரநெறி குறுகிக்
காடுங் கானமுங் கடந்துசெந் தேம்பொழிற் கனிசூழ்
நாட டைந்துபோய்ப் புகுந்தனர் மதீனமா நகரில் 1.5.39

205 மதினத் தின்னுறை ரசவருக் கங்களு மதினப்
பதிய டுத்தவூர்ச் சரக்கையுங் கொண்டுபந் தனமாக்
கதிர்கொண் மாடத்திற் கட்டிவைத் தவரவர் கரத்திற்
புதிய வாணிபத் தலைவிலைக் கீந்தனர் பொருளை. 1.5.40

206 வாணி பத்தொழி லனைத்தையு முடித்துமன் னவருங்
காணு நாட்சில விருந்துதன் பதிவரக் கருதிப்
பூண ணிந்தழ குறுமிளை யவர்புடை சூழச்
சேண டைந்தபு வாவெனுந் தலத்தினைச் சேர்ந்தார். 1.5.41



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Jun 2011 - 18:34

207 ஆதி கற்பனை யூழ்விதிப் பயனும்வந் தடைந்து
போது நாட்களு நாழிகைக் கணக்கையும் போக்கி
நீதி மன்னவ னப்துல்லா தனையறி நினைவாய்ச்
சோதி மென்முக மிலங்கிடத் துயில்வபோன் றிறந்தார். 1.5.42

208 கூடிச் சூழ்ந்தவர் விதிப்பய னெனக்குலை குலைந்து
வாடி மன்னனை யெழில்பெற மணத்துட னடக்கிப்
பாடி யூரபு வாவைவிட் டகன்றுபோய்ப் பதியை
நாடி வந்தவ ராமினாக் கிவையெலா நவின்றார். 1.5.43

209 மாற்றங் கேட்டலு மடமயின் மனமுடைந் தலறித்
தோற்று மாமழை சொரிந்தெனக் கண்ணினீர் சொரியப்
போற்றுங் காழகிற் புகைக்குழ னிலம்புரண் டசையக்
கோற்றொ டிக்கரக் காந்தடா மரைமுகங் குழைக்க. 1.5.44

210 வருந்தி நொந்தழு தாமினா விடைதலும் வளைந்து
திருந்தி ழைக்கொடி மடவிய ரிரங்குத றிரண்முத்
திருந்த சூல்வலம் புரியினைச் சூழ்ந்தசங் கினங்க
ளிரைந்தி ரங்குவ போன்றன வெங்கணு நிறைந்தே. 1.5.45

211 சலித்து விம்மிய மயிலினைக் கண்டுமெய் தளர
வலித்த தோபகை விதிகொலோ மகப்பெறும் பலனோ
பலித்த தேதென வறிகிலோ மெனப்பதை பதைத்தே
யொலித்தய் யோவென விரங்கின ரூரினி லுளரே. 1.5.46

212 உடுத்த பூழியிற் புதைமணி யெனவுட லொடுங்கி
வடித்த கண்ணினீ ரொழுகிட விருந்தபொன் மயிலை
யடுத்து வந்திருந் தன்புட னப்துல்முத் தலிபு
தொடுத்த துன்பங்க ளாற்றிநல் வழிபல சொன்னார். 1.5.47

213 இனத்து ளார்சொலு நல்வழிக் குருகிநெஞ் சிடைந்து
நினைத்த பற்பல துன்பமு மகற்றிநீ ணிலத்தி
லனைத்தை யும்விதித் தவன்செய லினையுமுற் றறிந்து
மனத்தி னிற்றௌி வாகினர் குலக்கொடி மயிலே. 1.5.48

214 தவிசி ருந்துநன் னெறிமுறை நடத்துதா வூது
நபியுந் திங்களோ ரேழினிற் கனவினி னவின்றா
ரவியுங் காலமன் றாட்டத்துக் குரியவ ரானோர்
புவியி னிற்பெயர் முகம்மதென் றிடுமெனப் போந்தே. 1.5.49

215 நலங்கொ டிங்களோ ரெட்டினில் சுலையுமா னபிவந்
திலங்கு பூணணி மயிலனீர் நின்வயிற் றிருந்தோர்
பெலன்கெ ழுமது னான்கிளைப் பேரொளி நபியாய்த்
துலங்க வந்தவர் பெயர்முகம் மதுவெனச் சொன்னார். 1.5.50

216 மாத மொன்பதி லாமினா கனவினின் மதித்தே
வேத நான்மறை நேர்வழிக் குரியவர் விளங்கக்
கோதை யேபெறின் முகம்மது வெனப்பெயர் கூறென்
றாதி நாய்கன் வரிசையீ சாநபி யறைந்தார். 1.5.51



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Jun 2011 - 18:35

217 ஈத லாலிமை யவர்தின மிடைவிடுத் திலராய்ப்
போது சேர்குழ லாமினா கனவினிற் போந்தே
யாதி தூதுவர் முகம்மது பெயரென வ திக
நீதி யானமா ராயமே பெறநிகழ்த் தினரால். 1.5.52

218 என்றும் வானவ ரிசைத்திடுங் கனவெலா மெடுத்தும்
வென்றி நன்னபி மார்சொலுங் கனவெலாம் விரித்து
மன்ற லங்குழ லாமினா படிப்படி வகையா
நன்றி தேர்ந்தசொற் றாயர்க்குத் தினந்தொறு நவின்றார். 1.5.53

219 பெற்ற தாயருங் கனவினின் பெற்றியைப் பிரித்தே
யுற்ற பேரொடு மனத்தொடுந் தௌிந்தறிந் தோர்ந்து
சொற்ற தன்மகட் குறிப்பெலாங் காண்குறத் துணிந்து
குற்ற மின்றிய முகம்மதே பெயரெனக் குறித்தாள். 1.5.54

220 செறிந்த வார்குழ லாமினா வுரைத்தசெய் தியைக்கேட்
டறிந்து தாயதற் கெதிர்மொழி கொடுத்தலு மாராய்ந்
துறைந்த வல்லிருட் சீத்தெறி மதியென வோங்கி
நிறைந்த பேரொளி முகமலர் தரசபா நிகழ்த்தும். 1.5.55

221 திரிந்த பாலெனச் செறுத்துப்பண் ணேழையுஞ் சினந்து
விரிந்த தெண்டிரைக் கடலிடை யமுதென விளங்கிச்
சொரிந்த தேன்மொழி யாமினா வயிற்றினிற் சூலா
யிருந்த நாளெலாங் கனவலா லொழிந்தநா ளிலையே 1.5.56

222 உள்ள கங்குளிர்ந் தருமறை மூன்றையு முணர்ந்தோர்
வள்ள லாகிய அப்துல்லா வயிற்றினில் வடிவாய்ப்
பிள்ளை யொன்றுதோன் றிடுமுகம் மதுவெனும் பெயரி
னெள்ள லின்றிய வுண்மைநன் னபியென விசைத்தார். 1.5.57

223 சொரியும் பூந்துகட் டுடவைசூழ் சாமினிற் றோன்ற
லரிவை தன்னகத் தறிவினுந் தேர்ந்துணர்ந் தறிந்து
தெரியக் கூறிய பெரியவர் சொல்லினுந் தௌிந்து
வரிசை நேருமக் காவினில் விரைவினில் வந்தாள். 1.5.58

224 வந்து நல்வழிக் குரியவ ரிருக்குமக் காவிற்
சந்த னப்புய னப்துல்லா தனைமணம் புரியச்
சிந்தை நேர்ந்தன ளவ்வுரை கேட்டுளந் திடுக்கிட்
டிந்த வூருளர் மிகுதிபேர் மணத்தினுக் கிசைந்தார். 1.5.59

225 எனக்கு னக்கென மடந்தையர் மணத்தினுக் கிகலத்
தனக்கு நேரிலா னெழுதிய படிதனி முடிந்து
வனக்க ருங்குழ லாமினா வெனுமட மானைச்
சினக்கும் வேற்கரத் தப்துல்லா மணத்தொடுஞ் சேர்ந்தார். 1.5.60

226 அந்த வாறறிந் தரிவைய ரிந்நக ரனைத்து
மிந்து வாணுத லாமினா மனைவெறுத் திருந்தார்
கந்த மென்குழல் கருப்புமு முதிர்ந்தன காலம்
வெந்து வானவர் பிறரிலை யென்கொலோ விளைவே. 1.5.61



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Jun 2011 - 18:35

227 மண்ண ருந்திலள் புளிப்பையும் விரும்பிலள் வயினோ
யுண்ணி ரந்தில மெய்பல வருந்தில வுதரக்
கண்ணி ருந்தபூப் பொன்றுமே கண்டில கனிமென்
பண்ணி ருந்தவாய் வெளுத்தில பலன்பெறும் படியே. 1.5.62

228 சிறுத்த மெல்லிடை பருத்திருந் திலதிரு வுதரம்
பொறுத்து வீங்கில வுந்திமேற் புடைத்தில பொருப்புங்
கறுத்திருந்தில பசுநரம் பெழுந்தில கவின்கள்
வெறுத்தி ருந்தில கருப்பமென் றழகுறும் விதமே. 1.5.63

229 என்றும் பற்பல மொழிந்துச பாசலித் திருப்ப
மன்ற லங்குழ லாமினா கருப்பமும் வலியு
மின்று தோன்றுவ தெனவெடுத் தியம்பின ரிலங்கும்
வென்றி வேல்விழி மடந்தையர்க் கிவைசொலி விடுத்தார். 1.5.64

230 உரைத்த வாசகங் கேட்டலு மந்நக ருறைவோ
ரிரைத்த டங்கலு மொருமொழிப் படவெடுத் திசையா
வரைத்த னிக்கொடி யாமினா மனையினின் மறந்துங்
கரைத்த லாயினும் வருவதில் லெனக்கழ றினரே. 1.5.65

231 உற்ற வாய்மையைக் கேட்டலு மாமினா வுலைந்து
குற்ற மேதுநம் மிடத்தென மனத்தினிற் குறித்துப்
பெற்ற சூல்வலி யடிக்கடி பெரிதெனப் பதறி
வெற்றி வாட்கரத் தப்துல்முத் தலிபுக்காள் விடுத்தார். 1.5.66

232 சருவு வேல்விழி மடந்தையர் விடுத்தவர் சாற்றக்
குரிசில் கேட்டவ ரவர்கெல்லாம் வகைவகை கூறி
வருக வென்றலுங் கொடியிடைப் பிடிநடை மடவா
ரொருவ ரும்மவண் புகுவதில் லெனமறுத் துரைத்தார். 1.5.67

233 மஞ்சு வாழ்குழ லாமினா வுரைத்தது மறுத்தா
ரின்சொற் கூறிநா மழைக்கவு மனமிரங் கிலரென்
றஞ்சி யுள்ளகம் புழுங்கிநின் றப்துல்முத் தலிபு
தஞ்ச மீதெனக் கஃபத்துல் லாதனைச் சார்ந்தார். 1.5.68

234 வடிவி ருந்தொளிர் கஃபத்துல் லாதனை வலமாய்க்
கடிதிற் றுன்புற வருங்கரு மாரியின் களையாற்
கொடியி டைப்பர தாபமும் வருத்தமுங் கூறி
நெடிது யிர்த்தயர்ந் திரந்துகொண் டிருக்குமந் நேரம். 1.5.69

235 வேறு
அரியமெய்ப் பொருளா யளவிடற் கரியோ
னருளின னமரர்கள் சுவர்க்கத்
தெரிவையர் பறவைக் குலங்கண்மற் றெவையுஞ்
செழும்பொழிற் செகதலத் திறங்கி
வரிஞிமி றுதறிக் கருங்குழன் முடித்த
மடக்கொடி ஆமினா மனையி
னிரைநிரை செறிந்தங் கவருரை மறாது
நின்றிடும் பணிவிடைக் கெனவே. 1.5.70

236 கருவினிற் றோன்றா தொளிவி லுருவாய்க்
கண்ணிமைத் துண்டுறங் காத
பெருவடி வழகாய்க் குழுவுடன் றிரண்டு
பெரியவ னுரைமறா தெழுந்து
விரிகதிர்க் ககனம் புடவிமட் டொழுங்காய்
விண்ணவ ரெண்ணிறந் தனையோ
ரருவரை யனையா ருருவமுஞ் சிறிதா
யாமினா திருமனை சூழ்ந்தார். 1.5.71



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Jun 2011 - 18:36

237 தேன்பெருக் கொழுகி வழிதருங் கனிகள்
சிதறிடுஞ் சோலைவாய்த் தௌிந்த
வானதி மூழ்கித் துகிலெடுத் துடுத்து
வளைபணித் தொகையெலா மணிந்து
கான்மலர் முடித்துக் கடுவரி வடிவேற்
கண்களி லஞ்சனங் குலவச்
சூன்முதி ராமி னாமனை யிடத்திற்
சூழ்ந்தனர் விண்ணவர் மகளிர். 1.5.72

238 மறுவறுத் திருந்த நிறைந்தபூ ரணமா
மதிக்குலந் திரண்டுவந் ததுவோ
வுறைதரு மமுதத் திரளைக ளுருவா
யொழுங்குட னெழுந்திடுந் திரளோ
கறைபடாச் சுவனக் காட்சிவாழ் வனைத்துங்
கலந்துட னிலங்கிவந் ததுவோ
குறைபடாச் சுவனத் தருவினி லுதித்த
கொழுங்கதிர்ச் செழுங்கனிக் குலமோ. 1.5.73

239 அணித்துலைக் கனலி லுருக்கிடா தொளிரு
மாயிரங் கோடிமாற் றெனவுங்
கணித்திடாப் பசும்பொ னெடுத்தெடுத் தமைத்த
கவின்குலங் கூண்டெழுங் கணமோ
மணிக்கதி ரிழைத்துத் திரட்டிவைத் துருவ
வடிவமைத் தெழுந்திடுங் குழுவோ
துணித்துமின் குலங்கண் மறைபடா தெழுந்த
தொகுதியோ வெனவறி கிலமால். 1.5.74

240 இருட்டடை கிடக்குங் கருங்குழற் பின்ன
லெழுபதி னாயிரமி லங்க
விரித்தபொன் னிழைப்பூந் துகிலுமே கலையும்
விட்டொளிர் வீசிடத் துலங்கத்
தரித்தமுத் தார முடுக்குல மனைத்துந்
தான்குடி யிருந்தெனத் தயங்கக்
கரித்தகண் ணிமையா முலைக்குவ டசையாக்
கன்னியர் திரண்டிருந் தனாரால். 1.5.75

241 பண்ணமைத் தீஞ்சொ லரம்பையர் மேனிப்
பரிமளந் தெருவெலாங் கமழ
விண்ணகத் திரவிக் கதிரொளி மணிகள்
விடுவெயில் விழுதுவிட் டொழுகத்
தண்ணகைத் தரளக் கதிரிரு டுணிப்பத்
தரையெலாம் பொன்மைபோர்த் திருப்ப
மண்ணகத் திருந்த வாமினா மனையை
வானவர் பதியென லாமால். 1.5.76

242 பறவைக ளனைத்து மேவலின் படியே
படியினு மந்தர மனைத்து
நிறைதரப் பெருக வதிலொரு வெண்பு
ணித்திலக் கதிர்கள் கான்றொழுக
வுறைதரு மாமி னாதிரு மனையி
னுட்புகுந் தெதிர்வரு வதுகண்
டறைதர மனமும் பயந்திட வொதுங்கி
யஞ்சிநின் றதிசயித் தனரே. 1.5.77

243 வருந்திநொந் திருந்த வாமினா திருமுன்
வந்துநின் றழகுறும் வெண்பு
ளிருந்தவெண் சிறையை விரித்தொளி சிறந்தே
யிலங்கிட வீசிய காற்றாற்
பொருந்திய சரீர வேர்வையுந் தீர்ந்து
புளகெழச் சிலிர்த்தன ரோமந்
திருந்திழை மனத்துட் பயங்கர மகன்று
தேகமுங் குளிர்ந்தன வன்றே. 1.5.78

244 அண்டரி லொருவர் மரகதக் கிண்ணத்
தமுதினை யேந்திவந் தடுத்தக்
கொண்டவர் கொடுப்பக் கூறுலீன் வாங்கிக்
கொடியிடை மடமயிற் கீய
முண்டகக் கரத்தாற் றாங்கியே பருக
முதிர்பர தாபமு நீங்கிக்
கண்டெனு மொழியார் கருப்பநோ யகன்று
கலக்கமுந் தௌிந்தன ரன்றே. 1.5.79

245 பொன்னொளிர் கவினு முறக்குழைத் தெழுது
பூந்துகில் வெண்ணிறங் கவின
மின்னொளி கரப்பக் கதிர்விடுங் கலையை
விரைந்தொரு தட்டினி லேந்திப்
பன்னிய வமரர் தொகையினி லொருவர்
பரிவுடன் கொணர்ந்ததை வாங்கி
யன்னமோ மயிலோ வெனுமொரு மடமா
னாமினா திருக்கையி லீய்ந்தார். 1.5.80

246 செவ்விவீற் றிருந்து முகமதி யிலங்குந்
திருந்திழை ஆசியா தமையு
மவ்வலங் குழலார் மறியுமென் றுரைக்கு
மயிலையு மரம்பையர் தமையுங்
கவ்வையங் கடல்சூழ் புடவியிற் சிறந்த
காட்சி சேர் மக்கமா நகரி
னவ்விவேல் விழியா ராமினா விருக்கு
நறைமனை புகவிறை யுரைத்தான். 1.5.81



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Jun 2011 - 18:36

247 இறையவ னுரைப்பச் சுவனமா மடவா
ரெங்கணும் பரந்தெழு மொழுங்கு
மறியமு மழகு பழுத்தொளி ததும்பு
மானனா ராசியா தாமு
நிறைமதி யிரண்டு வானகத் திழிந்து
நிலத்திடை யுடுவொடுந் திரண்டே
யறைகழல் சிலம்ப வருவபோல் வந்தங்
காமினா திருமனை புகுந்தார். 1.5.82

248 படித்தலம் புகலு மாமினா வலது
பாரிசத் தாசியா தாமும்
வடித்ததெள் ளமிர்த மெனுமொழிக் குதலை
மறியமு மிடதுபாரி சத்தி
லடுத்தவப் பொழுதி லரம்பையர் சிலர்வந்
தணிமுழந் தாடுடை கணைக்கால்
பிடித்தடி வருடி நின்றனர் மனையும்
பேரொளி பிறங்கின வன்றே. 1.5.83

249 மடந்தையு மகப்பே றடுத்திடுஞ் சமயம்
வானவர் குழுவினை நீந்திக்
கடந்துவந் தொருவர் நின்றன ரவர்செங்
கரத்தினிற் கிண்ணமொன் றேந்தி
யிடங்கொளா துறைந்த கூறுலீன் களிலோ
ரேந்திழை கடிதினில் வாங்கி
யடர்ந்தில்லம் புகுந்து கொடுப்பதைப் பருகி
யாமினா மகிழ்ந்தன ரகமே. 1.5.84

250 பானகம் பருக வொளிவும்வந் திறங்கிப்
பகலவன் கதிரெனப் பரப்ப
வானவர் மகளிர் மருத்துவம் புகுத
மறியமு மாசியா தாமுந்
தேனவிழ் பதுமச் செழுங்கரங் கொடுத்துச்
சேர்ந்தணைந் தருகுறச் சிறந்த
கானமர் குழலா யஞ்சலென் றுரைப்பக்
கனிந்திள கினகருப் பமுமே. 1.5.85

251 கோதறப் பழுத்து மதுரமே கனிந்த
கொவ்வைவா யரம்பையர் வாழ்த்தித்
தீதற நெருங்கி யேவல்செய் திருப்பச்
செழுங்கம லாசனத் திருந்த
மாதருக் கரசி யாமினா வுதர
மனையிடத் திருந்துமா நிலத்தி
லாதரம் பெருக நல்வழிப் பொருளா
யகுமது தோன்றின ரன்றே. 1.5.86

252 கிடந்தொளி பரப்பி வாசங்கொப் பளித்துக்
கிளர்கிபு லாவைமுன் னோக்கி
யிடங்கொளந் தரநேர் சிரசினை யுயர்த்தி
யெழில்பெறச் சுசூதுசெய் திணைத்தாட்
டிடன்பெற மடித்துக் குறியிடக் கையாற்
சேர்த்தொளிர் வலக்கைகான் மேல்வைத்
துடனணி கலிமா விரலினை யுயர்த்தி
யுதித்தனர் முகம்மது நபியே. 1.5.87

253 சிரசினி னெய்தோய்த் திருவிழிக் கருமை
சிறந்திடக் கொப்புளுங் கொயலாய்
மருவுசுன் னத்துஞ் செய்யலாய்த் துடக்கின்
வருங்குறி யொன்றுமில் லாதாய்ப்
பரவுகஸ் தூரி மனையெலா நிறைந்த
பரிமளங் கமகம கமெனப்
பெருகிய வொளிவு வானமட்டு லவப்
பிறந்தனர் முகம்மது நபியே. 1.5.88

154 செம்மையங் கோட்டுக் கடகரிக் கலகந்
தீர்ந்தபி னைம்பதா நாளி
லம்மதி மாசத் தொகையினில் றபீயு
லவ்வலிற் பனிரண்டாந் தேதி
யெம்மனைக் கும்பே றெனவரும் பொருளா
யிசைத்திடுந் திங்களி ராவின்
மும்மையென் றுரைக்கும் புவனமும் புரக்க
முகம்மது நபிபிறந் தனரே. 1.5.89

255 பூதலத் தரசு பதியென வுதித்த
புகழ்பெறு மக்கமா நகரிற்
சீதவொண் கதிர்சேர் கஃபத்துல் லாவின்
றிசையினில் வடகிழக் காக
வேதமொன் றணுகாச் செமுறத்தி லுஸ்தா
வெனுமொரு தலத்தினி னடுவே
மாதவ ரபித்தா லிபுதிரு மனையின்
முகம்மது நபிபிறந் தனரே. 1.5.90

256 நெறிநிலை திரியா மருண்மத மிகுந்து
நெடுநில மெங்கணும் பரந்து
துறவறந் தவறி யில்லற மடிந்து
சுடரிலா மனையது போலக்
குறைபடுங் கால மிருளெனுங் குபிரின்
குலமறுத் தறநெறி விளக்க
மறுவிலா தெழுந்த முழுமதி போல
முகம்மது நபிபிறந் தனரே. 1.5.91



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Jun 2011 - 18:36

257 பானுவின் கதிரா லிடருறுங் காலம்
படர்தரு தருநிழ லெனலா
யீனமுங் கொலையும் விளைத்திடும் பவநோ
யிடர்தவிர்த் திடுமரு மருந்தாய்த்
தீனெனும் பயிர்க்கோர் செழுமழை யெனலாய்க்
குறைசியிற் றிலதமே யெனலாய்
மானிலந் தனக்கோர் மணிவிளக் கெனலாய்
முகம்மது நபிபிறந் தனரே. 15.92

258 செங்கதிர் பரப்பி யுலகெலாம் விளக்கித்
திரிதின கரனும்வெண் ணமுதந்
தங்கிய கிரணச் சசியுமந் தரத்திற்
றவழ்தரு முடுக்குல மனைத்தும்
பொங்கொளி யெவையுஞ் சுவனநா டனைத்தும்
பூதலம் விசும்புமற் றனவு
மிங்கெழின் முகம்ம தொளிவினி லென்றா
லிவர்க்கெவை யுவமைசொல் லுவதே. 1.5.93

259 மகிதலம் புகழீ சாநபி பாரில்
வந்தநாட் டொடுத்திடை விடாது
பகுமத மிலையென் றாறு நூறாண்டு
பாரிசுக் காரர்கள் வணங்கும்
புகையுடன் கெழுமிப் பொறிபல தெரிப்பப்
புரிந்தெழு மக்கினிக் கொழுந்து
திகைதொறுந் தெரிய வெரிந்தசெந் நெருப்புத்
தேய்ந்துநூந் தழிந்தன வன்றே. 1.5.94

260 படியிடை புடைப்பப் பெருக்கெடுத் ததிரப்
பாயலைச் சுருட்டிவிட் டெறிய
விடுகடல் சாவா வெனும்பதி யிடத்தில்
வெறுந்தரை யாயின வறந்து
குடிலமட் டோங்கி மஞ்சடை கிடக்குங்
கொத்தள மொருபதி னான்கு
மிடிபட வீழ்ந்து சேருவா னகர
மெங்கணுங் கலங்கிய தன்றே. 1.5.95

261 சிலையெடுத் துருவாய் வைத்தபுத் தனைத்துஞ்
சிரசுகீட் படமுகங் கவிழ்த்த
சலமதி லிபுலீ சியற்றிய சிங்கா
சனமுமன் றிடிந்தன சயித்தான்
குலமுமன் றொதுங்கி வானகம் புகாமற்
கூண்டு நக்கேத்திர மெரிந்து
நிலமிசை வீழ்ந்த வினுஞ்சில புதுமை
நிகழ்த்துதற் கரியதன் றிரவே. 1.5.96

262 சிறந்தநன் மதலை தனைவிரைந் தெடுப்பத்
தெரிவையர் மனத்தினி னினைப்ப
மறந்திகழ் விழியார் தொடத்தகா தென்றன்
முகம்மதை விரைவினி லேந்தி
நிறந்திகழ் சுவனப் பதியினிற் கொடுவம்
மென்றன னெடியவ னதனா
லறந்திக ழாமி னாதிரு மனைபுக்
கடுத்தவர் பிள்ளையை யெடுத்தார். 1.5.97

263 அமரருக் கிறைவன் சபுறயீல் வரிசை
யகுமதை யெடுத்தினி தேந்தித்
தமருடன் சுவனப் பதியினிற் கொடுபோய்ச்
சலநதி தொறுமுழு காட்டி
யிமைதிறந் திருகண் மையினை யெழுதி
யெண்ணெயிட் டமிர்தமு மூட்டிச்
சுமைதர வாசந் திகழ்த்தியெண் டிசையுஞ்
சுற்றியே சிலமொழி பகர்வார். 1.5.98

264 ஆதிநா யகன்றன் றிருநபி யிறசூ
லாமிவர் தங்கலி மாவைப்
பூதலத் துறைந்த படைப்பெவை யவையும்
போற்றுதல் செய்யவும் வேண்டு
மீதலா லமர ரிவர்கலி மாவுக்
கிசைந்தன ரென்பது மிசைத்துச்
சூதர மொழியா ராமினா விடத்திற்
றோன்றலைக் கொடுத்தகன் றனரே. 1.5.99

265 அந்தர மவனி கடன்மலை யெழுதீ
வகத்தினு மெண்டிசை முழுதுஞ்
சுந்தர வதன முகம்மதைக் கொடுபோய்ச்
சுற்றியெங் கணும்பெயர் விளக்கிச்
சந்தமென் முகத்தா மரைமலர் குளிரத்
தடஞ்சிறை வானவர் திரண்டு
வந்தது மாமி னாதிரு மனையில்
வைத்தது மொருநொடிப் பொழுதே. 1.5.100

266 வள்ளலென் றுதவிப் பெயர்நிலை நிறுத்தி
வளந்தரு புகழ்புல் காசீ
முள்ளக நிறைந்த செம்மலர்ப் பதந்தொட்
டொளிர்பெறு மிணைவிழிக் கேற்றி
விள்ளரும் பவளம் விரிந்தன கனிவாய்
விளங்கிட வாழ்த்தெடுத் துவந்து
தெள்ளமு தனைய முகம்மது நபியைச்
சபாதிரு மடிமிசைக் கொண்டார். 1.5.101



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Jun 2011 - 18:37

267 மலர்தரு கரத்தா லேந்தியே மடியில்
வைத்தினி திருக்குமந் நேர
மலர்தரு பவள வாயிதழ் திறந்தே
யழுதனர் முகம்மது நபியு
முலகமும் விசும்பு நிறைதரப் பொருந்து
முடையவன் சத்தமுண் டான
திலகிய கமல முகமலர் சபாவுக்
கிரகுமத்துண் டாகவென் றிசைந்தே. 1.5.102

268 சத்தமுண் டாகிக் கேட்டவப் பொழுதே
சபாவெனு மடமயி றனக்குப்
பத்திவிட் டொளிரு றூமிராச் சியத்துப்
பதியின்மா ளிகையெலாந் தெரிந்து
மித்திர னெழுந்த குணதிசை தொடுத்து
வீழ்தரு குடதிசை தொடுத்துச்
சித்திரம் பெறவே யிருவிழிக் கெதிரே
தெரிதரச் சிறந்தன வன்றே. 1.5.103

269 வரியளி குடைந்து தண்ணறா வருந்து
மலர்ப்புய னப்துல் முத்தலிபு
கருதிய வரங்கேட் டிருந்துநெஞ் சுருகுங்
காலையிற் ககுபத்துல் லாவி
னிரைநிரை செறிந்த புத்துக ளனைத்து
நெட்டுயிர்ப் பொடுகலைந் தலைந்து
விரைவினி லோடிக் காவத வழிக்கு
வேறுவே றாய்க்கிடந் ததுவே. 1.5.104

270 பானலங் கடந்து சேலெனப் பிறழ்ந்து
பரந்துசெவ் வரிக்கொடி யோடி
மான்மருள் விழியா ராமினா விருந்த
வளமனைத் திசையினை நோக்கி
நானிலம் புகலுங் ககுபத்துல் லாவி
னாலுமூ லையுமொரு நெறியாய்த்
தூநறை கமழ வொளிதிகழ் தரவே
சுசூதுசெய் தெழுந்தன வன்றே. 1.5.105

271 இறையவ னேவ விண்ணவர் கரத்தா
லியற்றிய மணிமதிட் ககுபா
மறைபடா தெவர்க்குங் கேட்பன வாக
வாய்திறந் தோதுவ போன்று
குறைபடா வடிவும் பெருமையும் பெற்ற
கொற்றவ னென்றனை யின்றே
நிறைதரப் புனித மாக்கினா னென்ன
நிகழ்த்திய தொருமொழி யன்றே. 1.5.106

272 இரவினிற் றனித்தங் கிருந்தகா லையினி
லியற்றிய புத்துக ளனைத்தும்
பரவியே சிதறக் கண்டுமங் ககுபாப்
பண்புறச் சுசூதுசெய் தியல்பா
விரைவினின் மொழிந்த வார்த்தையுங் கேட்டு
வெருவியே யப்துல்முத் தலிபு
முருகுகொப் பிளிக்கு மாமினா மனையின்
முழுமணி வாயில்வந் தடுத்தார். 1.5.107

273 தரையினிற் பரந்த குபிரிருட் குலமுஞ்
சாற்றிய கலியிருட் குலமும்
வரைவிலா தொடுங்க முகம்மது நபியிம்
மானிலத் துதித்தன ரென்றே
கரையிலா வுவகை யாநந்த வெள்ளக்
கடலிடை குளித்துறக் களித்து
விரைவினிற் றிமிரக் கடற்பகை துறந்து
வெய்யவன் கதிர்கள்விட் டெழுந்தான். 1.5.108

274 விடிந்தவப் பொழுதி லப்துல்முத் தலிபு
விரைவினி லாமினா வென்னு
மடந்தையைக் கூவி வருகவென் றுரைப்ப
மடமயிற் பெடையென வெழுந்து
நடந்தெதிர் வரக்கண் டம்மநின் னுதலி
னலங்கிளர் பேரொளி யொன்றுண்
டிடந்திகழ்ந் திலங்கக் காண்கிலே னென்ன
வீன்றனன் மகவென விசைத்தார். 1.5.109

275 வஞ்சிமென் கொடியின் முகமலர்க் கவினு
மருங்கினில் விசித்தபட் டுடையுங்
கஞ்சமென் மலர்த்தா ணிலம்புடைப் பெயர்வுங்
கமழ்தரு மெய்யினிற் குறியும்
பிஞ்சுநன் னுதலுங் கண்டுளத் தடக்கிப்
பெற்றவா றென்கொலென் றெண்ணிக்
கொஞ்சுமென் மொழியீர் மதலையைக் கொணர்கென்
றுரைத்தனர் குளிர்மழைக் கொடையார். 1.5.110

276 கூறிய மொழிகேட் டாமினா வெனது
குமரனை மூன்றுநாள் வரைக்கும்
வேறொரு வருக்குங் காணொணா தெனவே
விண்ணவ ருரைத்தன ரென்றெ
யூறிய மதுர வாயிதழ் திறந்தே
யோதின ரப்துல்முத் தலிபு
சீறினர் புருவ முரிதர விருகண்
டீப்பொறி தெறித்திடச் சிவந்தே. 1.5.111



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Jun 2011 - 18:37

277 சினந்தமா துலனைக் கண்டுளம் பதறிச்
சேயிழை யாமினா திகைத்துக்
கனந்தரு கொடையா யரசர்நா யகமே
கருதலர்க் கசனியே நுந்த
மனந்தனிற் சினமென் மனையுநும் மனையே
மகவுநும் மகவினின் மகவே
யினந்தரும் பலன்போ லெழுந்தசந் ததியே
யெடுமிலம் புகுமென விசைத்தார். 1.5.112

278 மருமலர் செறிந்து வண்டுகண் படுக்கு
மஞ்செனுங் கருங்குழன் மடந்தை
தருமுரை கேட்டு வெகுளியைப் போக்கிச்
சசிமுக மலர்ந்தகங் குளிர்ந்து
பருதியொத் திலங்கு மாளிகை புகப்போய்ப்
பார்த்தனர் வாயிலு ளொருவ
ருருவின கருவி கரத்தினி லேந்தி
யுறுக்கிட வெருக்கொடு மீண்டார். 1.5.113

279 மீண்டனர் பதறிக் காறடு மாறி
விளைந்திடும் பயனையோ ராம
லாண்டகை யிவனார் நம்மனை தனைவந்
தடுப்பனோ தகாதென வெண்ணிப்
பூண்டநம் மினத்தா ரனைவர்க்கு முரைத்துப்
போக்குவ மிவனையா மென்னத்
தூண்டியே நடந்து வாயிலைக் கடந்தார்
துன்பமுற் றப்துல்முத் தலிபு. 1.5.114

280 காரண மனைத்தும் வெளிப்படா தமைக்குங்
காலமென் றறிந்துண ராம
லூரவ ரெவர்க்கு முரைத்திவண் புகவென்
றுளத்தினி லெண்ணிய காலை
பாரிடத் தெறும்பீ றாயிப முதலாப்
பகுத்தமைத் தவன்விதிப் படியா
லீரமுற் றுணங்கி நாவழங் காம
லெழுதின மில்லம்புக் கிருந்தார். 1.5.115

281 சிலைநுதற் கயற்க ணாமினா வென்னுஞ்
செவ்விபூத் திருந்தபொன் மடந்தை
மலர்தலை யுலகிற் சுருதியை விளக்கு
முகம்மது நபிநயி னாரை
யிலகிய கமலக் கரத்தினி லேந்தி
யிருவிழி குளிர்தர நோக்கிப்
பலகலை யறிவுங் கொடுப்பபோ லெழுநாட்
பான்முலை கொடுத்தன ரன்றே. 1.5.116

282 மின்னவிர் சுவன வானவர் கூண்டு
விளங்கொளி யினமணித் தசும்பி
னன்னிலைச் சலிலங் கொணந்துகோ தறவே
நறைகமழ் முகம்மது நபியை
யிந்நிலம் விளங்க விளக்குவ தெனவே
யெழிற்கரத் தேந்திநீ ராட்டிப்
பன்னிய சலவாத் தோதியே வாழ்த்திப்
பரிவுடன் புகழ்ந்துபோந் திடுவார். 1.5.117

283 இலங்கிலை வேற்கை யப்துல்முத் தலிபு
மெழுதின மனையகத் திருந்து
நலங்கிளர் நாவும் வழங்கிட மனத்தி
னால்வகைப் பயனையு முணர்ந்து
கலங்கியே தௌிந்து மதலைமேல் விருப்பாய்க்
கடுவிழிக் கனிமொழித் துவர்வாய்ப்
பொலன்கொடி யாமி னாமணி மனையிற்
புக்கினர் புயங்கள்விம் முறவே. 1.5.118

284 திண்டிறற் பொருப்பும் பொருவரா தெழுந்து
செம்மைவீற் றிருந்தபொற் புயத்தார்
வண்டணி குழலா ராமினா வெனும்பேர்
மடந்தைதன் றிருமுக நோக்கிக்
கண்டெனு மொழியா யிவ்வயி னிகழ்ந்த
காரணக் காட்சிக ளெல்லாம்
விண்டெமக் குரைரயு மென்றனர் முறுவல்
விளங்கிய குமுதவாய் திறந்தே. 1.5.119

285 பறவைக ளனைத்தும் வந்துஞ் சுவனப்
பதியைவிட் டமரர்வந் ததுவும்
மறியமு மாசி யாவும்வந் ததுவும்
வானவர் மகளிர்வந் ததுவும்
வெறிகமழ் பறவை வீசிநின் றதுவும்
விண்ணகத் தமுதந்தந் ததுவுங்
குறைவிலாப் புதுமை பலவுங்கண் டதுவுங்
குறிப்புடன் படிப்படி யுரைத்தார். 1.5.120

286 புகன்றநன் மொழிகேட் டறப்பெரும் புதுமைப்
புதுமையீ தெனச்சிர மசைத்துன்
மகன்றனைத் தருக வென்றலு மடமான்
மகிழ்வொடுந் திருமனை புகுந்து
மிகுந்தபே ரொளிவு சொரிந்துகால் வீச
விளங்கிய முகம்மதை யெடுத்துச்
செகந்தனி புரக்கு மப்துல்முத் தலிபு
செழுமணித் தடக்கையி லீய்ந்தார். 1.5.121

287 கறைநிணஞ் சுமந்த செங்கதிர் வடிவேற்
கரதலன் அப்துல்முத் தலிபு
முறைமுறை மோந்து முத்தமிட் டுவந்த
முழுமலர்ச் செழுமுக நோக்கி
நிறைமதி நிகரா முகம்மது நயினார்
நிலவுகொப் பிளித்திடச் சிரிப்பக்
குறைபடா வுவகைப் பெருக்கெடுத் தெறியக்
குளித்தக மிகமகிழ்ந் தெழுந்தார். 1.5.122

288 கதம்பமான் மதம்பே ரொளிவுடன் றிகழ்ந்த
காளையைக் கரத்தெடுத் தணைத்து
மதஞ்சொரிந் தசைந்த களிறென நடந்து
வந்துகஃ பாவினை வலஞ்செய்
திதம்பெறப் போற்றி யுள்ளுறப் புகுந்தங்
கிருந்திறை தனைப்புகழ்ந் தேத்தி
விதம்பெற முகம்ம தெனப்பெயர் தரித்து
வீறுடன் றிரும்பின ரன்றே. 1.5.123

289 தேமலர்ப் பொழில்சூழ் சுவனநாட் டரசைத்
திசைதொறும் விளக்குநா யகத்தை
மாமறைக் கொழுந்தை முகம்மது நபியை
மறுப்படா தெழுந்தசெம் மணியைப்
பூமலர்க் குழலி யாமினா வென்னும்
பூங்கொடிக் கரத்தினி லருளி
நாமவை வேற்கை யப்துல்முத் தலிபு
நடந்துதன் றிருமனை சார்ந்தார். 1.5.124

290 அன்புட னெழுநா ளணியிழை சுமந்த
வாமினா முலையருந் தியபி
னின்புற அபூல கபுதிரு மனையி
னிருந்ததோர் மடக்கொடி துவைபா
மன்பெரும் புகழார் முகம்மது நபிக்கு
மனமகிழ் வொடுமுலை கொடுத்துத்
தன்பெரும் புகழும் வரிசையும் பெருகத்
தழைத்தினி திருக்குமந் நாளில். 1.5.125

நபியவதாரப் படலம் முற்றிற்று



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Jun 2011 - 18:43

1.6. அலிமா முலையூட்டுப் படலம்

291 அறிவத பறமுறை பயிற்றி யன்புட
நெறிவளர் தரவளர்த் திடுவம் நீயெமக்
குறுதியாய் முகம்மதை யருளென் றுன்னியே
யிறையுடன் மொழிந்தன ரமர ரியாருமே. 1.6.1

292 நம்பெறும் பேறென நபியைப் பொன்னுல
கம்பொனீ ராட்டிநல் லமுத மூட்டியே
யெம்பதிக் கரசென வியற்று வோமென
வும்பர்தம் மகளிர்க ளுவந்து கேட்டனர். 1.6.2

293 நான்மறை நபியையெம் மிடத்தி னல்கினாற்
பான்முலை கொடுத்தியாம் பரிப்பந் தம்மென
மான்மரை விலங்கின மனைத்தும் வாய்திறந்
தீனமில் லவன்றனை யிரந்து கேட்டவே. 1.6.3

294 இரைத்தெழும் புள்ளெலா மேகன் றன்னிடத்
துரைத்திடு மெங்கள்பா லுதவி னந்நபி
வருத்தமொன் றின்மையா மதுரத் தேன்கனி
யருத்தியாம் வளர்ப்பதற் கையமில் லையே. 1.6.4

295 வேறு
என்று கூறிய பலமொழி கேட்டபி னிறையோன்
மன்ற லங்குழ லாளலி மாவெனு மடந்தை
வென்றி யாமுலை கொடுப்பதும் வளர்ப்பதும் விருப்ப
மன்றி யேதகு மோபிறர் தமெக்கென வறைந்தான். 1.6.5

296 இறைவ னிம்மொழி கூறலு மமரர்க ளியாரும்
பிறமொ ழிந்திலர் மனத்திடைப் பயம்பெரி தானார்
சிறைவி ரித்திடும் பறவையும் விலங்கினத் திரளு
மறுமொ ழிக்கிட மில்லெனப் போற்றின மகிழ்ந்தே. 1.6.6

297 கனைக டற்றிரை யாடைசூழ் பாரினிற் கவின்கொண்
டனைய நாட்டினி லறபெனும் வளமைநா டதனுள்
குனையி னென்றொரு பதியலி மாகுடி யிருந்தா
ரினைய வூரினி னடந்தவா றெடுத்திசைத் திடுவாம். 1.6.7

298 வேறு
கருங்கட னீரையுண் டெழுந்து கார்க்குலம்
பெருந்தரை யெங்கணும் பெய்த லில்லையா
லிருந்தபைங் கூழெலாங் கருகி யெங்கணும்
பரந்தது சிறுவிலைப் பஞ்ச மானதே. 1.6.8

299 மலிபசி யானையா வறுமை சேனையாப்
பலபரி பவங்களாப் பழிர தங்களாக்
கலியமைச் சாய்த்துறைக் கணக்கர் கோபமாக்
கொலையர சன்கொடுங் கோன டாத்தினான். 1.6.9

300 குலமுறை மன்னர்போய்க் கொடிய பாதகர்
தலைநிலம் புரந்திடுந் தகைமை போலவே
நலனுறு கொடையெனு நாம வேந்துகெட்
டிலனெனு மரசுவீற் றிருந்த காலமே. 1.6.10

301 உருத்திரண் டெழுந்துபொய் யுடம்பை மெய்யெனத்
திருத்துபுண் ணியம்புகழ் தேடி நாடொறும்
வருத்தமின் றிப்பொருள் வழங்கு மேலவர்
தரித்திரம் படைத்திடுஞ் சாம காலமே. 1.6.11



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக