புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10 
26 Posts - 43%
Jenila
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10 
1 Post - 2%
M. Priya
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Rutu
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Jenila
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Baarushree
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10 
2 Posts - 2%
viyasan
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_m10சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1 - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீறாப்புராணம் - உமறுப் புலவர் - காண்டம் 1


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 4:52 pm

First topic message reminder :

கவியேறு உமறுப் புலவரவர் அவர்களின் வரலாற்றுச் சுருக்கம்

அண்ணல் பெருமானார் முஹம்மது(ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் இப்னு பாகிர் என்பார் வாழ்ந்திருந்தார். பெருமானாரின் திருத்தோழராகும் பேறு பெற்ற அன்னார் , அண்ணலாரின் அரிய வாழ்த்தினைப் பெற்றவர். அவரின் வழித்தோன்றல்கள் அனைவரும் காலமெல்லாம் கமழ்மணத்துடன் வாழவேண்டும் என்றே அண்ணலார் ஆசி கூறினார். அந்த பரம்பரையில் வந்தவரே 'சேகு முதலியார்' என்ற செய்கு முஹம்மது அலியார் ஆவர். அன்னார் மலையாள நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்க்கு வந்து, திருநெல்வேலியைச் சார்ந்த நாகலாபுரத்தில் குடியிருந்துகொண்டு, அதையடுத்திருந்த எட்டையபுரத்து மகாராஜாவிடம் வாசனைத் திரவியங்களை எடுத்துப் போய் விற்றுக் காலம் கழித்து வந்தார்.

உயர்ந்த மணப்பொருட்களை வழங்கித் தம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட சேகு முதலியார் தம் அருகிலேயே வாழ்ந்து வரவேண்டு மென்று மன்னர் விரும்பினார்.என்வே, சேகு முதலியாரும் மன்னரின் விருப்பிற்க்குக் கட்டுப்பட்டு,நாகலாபுரத்திலும் எட்டையபுரத்திலுமாக வாழ்ந்து வந்தார்.அக்காலத்தில்தான், அவருடைய ஒப்பற்ற அருந்தவக் கொழுந்தாக 'உமறு' என்ற அழகிய குழந்தை பிறந்தது.

இளமையிலே எழிலும் கல்வியார்வமும் வாய்க்கப் பெற்ற சிறுவர் உமறு, எட்டையபுரத்து அரண்மனைத் தமிழ்ப்புலவராயிருந்த 'கடிகை முத்து புலவர்'என்பவரிடம் தமிழ்க் கல்வி பயிலத் தொடங்கினார். பல்வகைக் கல்வி-கேள்விகளில் தேர்ந்த உமறு, தம் ஆசானின் பெருமதிப்பிற்குரிய மாணவரானார். இவ்வாறிருக்கையில், ஒருநாள் வடநாட்டிலிருந்து ஆரியமும் அருந்தமிழும் கற்றுப் புலமை பெற்ற 'வாலை வாருதி' என்ற புலவர் எட்டையபுர அரசவைக்கு வந்து சேர்ந்தார். தம்மை வாதில் வெல்லத் தக்கார் யாருமிலார் என்று அவர் மார் தட்டிப் பேசிப் பிற புலவர்களை வாதுக்கழைத்தார். அதன்படியே எட்டையபுரத்து அரசவையிலும் வந்து அறிவித்தார். மன்னரும் ஆவன செய்ய இசைந்தார்.

புலமைத் திறத்தாலன்றி, மாய மந்திரங்களாலேயே பல அரசவைப் புலவர்களை வெற்றிகொண்ட வாலைவாருதியைப் பற்றிக் கடிகைமுத்துப் புலவர் கேள்வியுற்றிருந்தார். அதனால், வித்தைகள் புரியும் வித்துவானைத் தம்மால் எவ்வாறு வெற்றிகொள்ள முடியுமென்ற நீங்காக் கவலையில் ஆழ்ந்திருந்தார்.

ஆசானின் கவலையை அறிந்த மாணவர் உமறு, அவரை அணுகி, கவலைக்கான காரணத்தை விளங்கிக் கொண்டார். எனவே, வாலை வாருதியுடன் வாதிடுவதற்கான குறிப்பிட்ட நாள் வந்ததும், தம் ஆசிரியரிடம் அவருக்குப் பகரமாக அரசவை செல்லுவதற்கான அனுமதியை வலிந்துப் பெற்று, எட்டையபுரத்து அரசவைக்கு வந்து சேர்ந்தார். உடல் நலக் குறைவால் கடிகைமுத்துப் புலவர் வரவில்லையென்றும், அவருக்குப் பகரமாக அவரின் மாணவர் வந்திருக்கிறார் என்றும், வாலை வாருதி தம் சொற்பொழிவைத் தொடங்கலாம் என்றும் மன்னர் உத்தரவிட்டார்.

அதைச் செவியேற்ற வாலைவாருதி, தம் வலக்கையிற் போட்டிருந்த தங்கக் கடகத்தை அசைத்து மேலேற்றினார். வழக்கமாக அக்கடகத்திலிருந்து ஒலிக்கும் 'வாலைவாருதி என்றறியீரோ' என்ற சொற்கள், அன்றைக்கு மட்டும், 'வாலைவாருதி என்றறியாயோ பிள்ளாய்!' என்று உண்டாயின. அப்போது உமறுப் புலவர், தம் இடுப்பில் செருகியிருந்த யாழ்ப்பாணத்து எழுத்தாணியை எடுத்து நிலத்தில் ஊன்றி, "என் எழுத்தாணியே! இவருக்கெதிர் பேசு!" என்று கட்டளையிட்டார். ஒன்றும் நிகழவில்லை! பின்னும் உத்தரவிட்டார்.

அப்போதும் ஏதும் நிகழவில்லை! மூன்றாவது முறையிலும் முயன்று தோல்வி கண்ட உமறு, கண்கள் சிவக்க, முகத்தில் தீக்கனல் பறக்கக் கடுஞ்சினம் கொண்டு, எழுத்தாணியைப் பார்த்து, 'பேசு!' என்று உரக்கக் கூறி உத்தரவிட்டார். அவை கிடுகிடுத்த அவ்வோசையைத் தொடர்ந்து, அவ்வெழுத்தாணியிலிருந்து கீழ்க்காணும் பாடல் உதிர்ந்து உள்ளங்களை அதிர வைத்தது:

"சமரதுர கததுங்க மனருஞ்ச பாசென்று
சரிசமா சனமீதிலே
அமரவொரு நரகொம்பு தினமுஞ்சு மாசெல்லு
மமுதகவி ராஜனானே
திமிரபகை வரைவென்ற பருதியெனு மெமதெட்டத்
தீரனணி வாயில்வித்வான்
உமறுகுமு றிடிலண்ட முகடும்ப டீரென்னு
முள்ளச்சம் வையும்பிள்ளாய்!"


இதனைச் செவியுற்ற புலவர் வாலைவாருதி, உளம் பதறி, மெய் நடுக்குற்று, தனது மந்திரச் சக்தியெல்லாம் இத்தகைய அற்புதத்தின் முன் அற்பம் என்றுணர்ந்து, எழுந்து சென்று உமறு புலவரிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோரி, அரசவையை விட்டு அகன்றார்.

இந்நிகழ்ச்சி, மன்னருக்கு உமறுப் புலவர் மீது ஒப்பற்ற மதிப்பை ஏற்படுத்திற்று. மகிழ்ச்சிப் பெருக்கால், மன்னர் தம்மிடமிருந்த விருதுகள் பலவற்றையும் உமறுப் புலவருக்கு வழங்கி அனுப்பிவைத்தார். வெற்றி பெற்று வீடு திரும்பிய தம் மாணாக்கரை இறுகத் தழுவிக்கொண்ட கடிகைமுத்துப் புலவர், தாம் அப்போது முதுமை எய்திவிட்டதால், அன்றுமுதல் உமறே எட்டையபுரத்து அரண்மனை அவைப் புலவராக இருக்கவேண்டுமென்று ஆசி கூறி அனுப்பி வைத்தார். அன்று முதல் உமறுப் புலவர் எட்டையபுரத்து அரண்மனையை அலங்கரித்து வந்தார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 4:59 pm

1.3. நகரப்படலம்

77 நிலங்க ளேழுக்கு நாவலந் தீவுகண் ணிகர்க்கு
நலங்கொ டீவுக்குக் கண்மணி யறபுநன் னாடே
புலன்கொள் கண்மணிக் குள்ளுறை யுயிரெனப் பொருந்தி
யிலங்கு மக்கமா நகர்வளஞ் சிறிதெடுத் திசைப்பாம். 13.1

78 வேறு
விரிகதி ரெறித்த மணிவளை யுகுப்ப
விரிதிரை யகழெனுந் தடத்தி
லெரிசைகைக் கிரணப் பதுமமா மணியி
னினம்பல சூழ்ந்திருந் திலங்கப்
புரிமுறுக் கவிழ்ந்த பொன்னிதழ்க் கமலம்
பூத்திருந் ததுவெனப் புரிசை
தெரிதரச் சிறந்து செல்வமுஞ் செருக்குந்
திகழ்தர வீற்றிருந் ததுவே. 13.2

79 வடவரைப் புடைசூழ் நிலத்தெழு தீவும்
வரவழைத் தொருதலத் திருத்தித்
தடமுடிக் கிரணத் திகிரிமால் வரையைச்
சதுர்தரப் புரிசையாய் நிறுத்தி
யிடனற நெருங்கும் பெரும்புபுறக் கடலை
யிதற்கக ழெனப்பெய ரிட்டுப்
படவர வரசன் றிருமுடி மணியைப்
பதித்தது மக்கமா நகரம். 13.3

80 கானகத் துறையும் வயிரவொண் கதிரோ
கடல்படு நித்திலக் கதிரோ
தேனவிழ் பதும மணிக்கதி ரதுவோ
சிறந்திடு மக்கமா நகரில்
வானவர்க் கிறைவன் ஜபுறயீல் பலகால்
வந்தவர் மெய்யொளி பாய்ந்தே
யீனமி னகரஞ் செழுங்கதிர் பரப்பி
யிருப்பது பிறிதுவே றிலையே. 13.4

81 சரிகதி வேக மாருதஞ் சிதையத்
தாவிய புரவியி னொலியு
நிரைமணி யுருட்டுப் பசுங்கதி ரிரத
நெருங்கிட நடத்துபே ரொலியு
முரலடிச் சிறுகட் பெருமதப் பிறைக்கோட்
டொருத்தலி னிடிமுழக் கொலியும்
விரிதிரைக் கரங்கொண் டறையுவாப் பெருக்கும்
வெருக்கொளத் தெருக்கிடந் தொலிக்கும். 13.5

82 மின்னிடை நுடங்கச் சிலம்பொலி சிலம்ப
மேகலைத் திரண்மணிக் கதிர்செம்
பொன்னொடு மிலங்க மறுகிடைப் புகுந்த
புனையிழைப் பிடிநடை மடவார்
மன்னிய பதத்தி னலத்தக நிலத்தில்
வரிபடக் கிடப்பன சிறந்த
துன்னிதழ்க் கமலப் பதத்தினை நிகர்ப்பச்
சுவட்டடி தொடர்வன போலும். 13.6

83 கண்ணகன் ஞாலம் விலைசொலற் கரிய
கலைபல நிரைத்தலாற் பணியாற்
றண்ணெனக் குளிர்ந்து பிறவுரு வமைத்துத்
தரும்படி மக்கலப் பெருக்கான்
மண்ணினிற் சிறந்த நகர்த்திர வியத்தான்
மரக்கலத் திறக்கிய சரக்கா
லெண்ணிறந் தெழுநல் வளம்பல படைத்தங்
கிருந்தது கடைத்தெருத் தலையே. 13.7

84 மான்மதக் குவையுஞ் சந்தனத் தொகையு
மணிக்கருங் காழகிற் றுணியும்
பான்மதிக் குழவிக் குருத்தெனக் கதிர்கள்
பரப்பிய மதகரி மருப்புந்
தேனமர்ந் தொழுகுங் குங்குமத் தொகையுஞ்
செறிதலா லுயர்ச்சியால் வளத்தா
லீனமி லிமயப் பொருப்பெனப் பணைத்தங்
கிருந்தது கடைத்தெருத் தலையே. 13.8

85 தந்தியின் குழுவுங் குரகதத் திரளுந்
தடவரை பொருவுதேர்க் கணமுஞ்
சிந்துரப் பிறைநன் னுதற்கருங் கூந்தற்
செவ்வரித் தடங்கண்ணார் நெருக்கும்
வந்தவர் நினைத்த பொருளுமா ரமிர்தும்
வகைவகை தருதலான் மணியு
மிந்திர தருவும் வறிதென மதர்த்தங்
கிருந்தது கடைத்தெருத் தலையே. 13.9

86 நிரைத்தபைங் கதிரார் மரகத மணியா
னீணிலாக் கருப்புரத் தகட்டாற்
பருத்தசங் கினத்தால் வலம்புரிக் குலத்தாற்
படர்கொடித் திரட்பவ ளத்தால்
விரித்தவெண் ணுரைபோல் வெண்டுகி லடுக்கால்
விரைசெறி யம்பரின் றிடரா
லிரைத்தபே ரொலியாற் பெருங்கட னிகரா
யிருந்தது கடைத்தெருத் தலையே. 13.10

87 பைங்கடற் பிறந்து வணிகர்கை புகுந்த
பருமணி நித்திலக் குவையுந்
தங்கிய கிரண வனசமா மணியுந்
தயங்கொளி வயிரரா சிகளுஞ்
செங்கதி ரெறிக்கு மிரவியு மமுதச்
செழுங்கதிர் மதியமு முடுவு
மிங்கிவண் குடிபுக் கிருந்தது போன்று
மிருந்தது கடைத்தெருத் தலையே. 13.11

88 அணிபெற வொழுங்காய் வயின்வயின் றிரண்ட
வகிற்புகை முகிலின மெனவுங்
குணில்பொரு முரசப் பெருங்குரல் கிடந்து
குழுமிவிண் ணேறொலி யெனவு
மணிவளைத் தடக்கைத் துவரிதழ் கனத்த
வனமுலை மின்கண்மின் னெனவுந்
தணிவில நிவந்த செழுங்கதிர் மாடந்
தமனியக் கிரியினோ டிகலும். 13.12

89 வெண்ணில வெறிக்கு மிரசதத் தகடு
வேய்ந்தமே னிலைவயின் செறிந்து
பண்ணிருந் தொழுகு மென்மொழிக் குதலைப்
பாவையர் செழுங்குழல் விரித்து
நண்ணிய துகிலுங் கமழ்தர வூட்டு
நறும்புகை சுருண்டெழுந் தொழுங்காய்
விண்ணினிற் படர்வ தேணியொன் றமைத்து
விசும்பினுக் கிடுவது போலும். 13.13

90 அடுசெழும் பாகுந் தேனுமா ரமிர்து
மனத்தொடு மனத்தொடுந் திருந்தி
யிடனற விருந்து விருந்தொடு நுகர்வோர்
மனையிட மெண்ணினை மறைக்குங்
கடுவினை யடர்ந்த கொடுவினை விழியார்
கறைதவிர் மதிமுகங் கண்டோ
படர்தரு மாடக் குடுமியின் விசித்த
பசுங்கொடி மதிமறுத் துடைக்கும். 13.14

91 தேங்கமழ் சுருதி வரிமுறை படர்ந்து
திகழ்தரு நித்திலக் கொடிக
ளோங்கிட மாடக் குடுமியி னடுநின்
றுலவிய திரவினும் பகலும்
வீங்குசெங் கதிரி னிரவியுந் தவள
வெண்கதிர் மதியமும் விலகிப்
பாங்கினிற் புகுமி னெனக்கர மசைத்த
பான்மையொத் திருந்தன மாதோ. 13.15

92 வேறு
மானை யன்னகண் மடந்தையர் வதுவையின் முழக்குஞ்
சேனை மன்னவர் படைமுர சதிர்தெரு முழக்குந்
தான மிந்நகர் முதலெனச் சாற்றிய முழக்குஞ்
சோனை மாமழை முழக்கென வைகலுந் தொனிக்கும். 13.16

93 வீதி வாய்தொறு மிடனற நெருங்கிய மேடைச்
சோதி வெண்கதி ரந்தரத் துலவிய தோற்ற
நீதி மானபி பிறந்தநாள் விண்ணவர் நெருங்கிக்
கோதில் பொன்னகர் திறந்தவாய்க் கதிரெனக் குலவும். 13.17

94 மன்ற லங்கம ழகழ்புனை சுதைதிகழ் மதிளா
னின்றி லங்கிய கணமணிக் கொடுமுடி நிரையான்
முன்றி லெங்கணு மசைதரு கொடிநிறை முறையா
லென்று மிந்நகர் பொன்னக ரென்பதொத் திடுமே. 13.18

95 பட்ட முற்றிடு நபிகளால் விண்ணவர் பரிவாற்
கட்டு பேரொளிக் ககுபத்துல் லாவிருக் கையினான்
மட்டு வார்குளிர் சோலையான் மலிந்தபொன் னுலக
மெட்டு மொன்றெனத் திரண்டுவந் திருந்ததொத் திருக்கும். 13.19

96 தெரிந்த செவ்வியர் முறைவழி தௌிந்தவர் செந்நூற்
சொரிந்த நாவினர் முதியவர் திரண்டசொல் லோதை
யெரிந்த செங்கதி ரிலங்கிய பள்ளிக ளெவையும்
விரிந்த வாய்திறந் தோதுவ போன்றன வேதம். 13.20

97 சந்திர காந்திசெய் பலகையை மடிமிசை தரித்தே
யிந்திர நீலமொத் திருந்தமை தோய்த்ததி லெழுதி
மந்திர மாமொழி மறைபயி லிளையவர் நெருங்கி
யெந்த வீதியு முழங்குவ திவையலா லிலையே. 13.21

98 மறையின் மிக்கவ ரோதிய வோசையும் வரிசைத்
துறவின் மிக்கவர் திக்கிறி னோசையுஞ் சூழ்ந்தே
யிறைவ னைத்தொழு திருகையு மேந்திய வாமீன்
முறைமு றைப்படிக் கூறிய வோசையு முழங்கும். 13.22

நகரப்படலம் முற்றிற்று.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 4:59 pm


1.4. தலைமுறைப் படலம்


99 மருவிரி வாவி செந்தா மரைமலர்க் கைக ளேந்தச்
சொரிமது சிந்துஞ் சந்தத் துடவைசூழ் மதினா தன்னிற்
றெரிதர வரசு செய்து தீனிலை நிறுத்திச் செல்வந்
தருநபி யிறசூ லுல்லா தலைமுறை தோற்றஞ் சொல்வாம். 1.4. 1

100 தெரிபொரு ளரிய வேதத் துட்பொருட் டௌிவ தாக
வருபொரு ளாதி பாரின் முகம்மதை விளக்கஞ் செய்யப்
பரிவுறு மனுவா தத்தைப் படைக்கமண் ணெடுத்து வாவென்
றுரைதர இசுறா யீலு முவந்துமண் ணெடுத்துப் போந்தார். 1.4. 2

101 கதிர்வடி வொழுகி நின்ற ஹபீபுமெய் வகுக்க வேண்டி
விதியவன் ஜிபுற யீலை விரைந்துமண் கொடுவா வென்றான்
துதிபெறு மதினா தன்னிற் றூயவோ ரிடத்திற் றோன்றி
யிதமுற வெடுத்துப் போந்தா ரிமையவர் தலைவ ரன்றே. 1.4. 3

102 திறலுறு ஜிபுற யீல்தந் திருக்கையி லேந்திப் போந்த
பிருதிவி தனையே மிக்கோர் பெறும்பதி சுவனந் தன்னில்
நறைவிரி யமுத மெந்த நாளினு மதுர மாறாத்
துறைவிரி நதிக டோறுங் கழுவினர் துலங்க வன்றே. 1.4. 4

103 வரிசையும் பேறும் வாய்த்த முகம்மது நயினார் தோற்றந்
தெரிதர வானோர்க் கெல்லாஞ் சோபனஞ் சிறக்கச் சொல்லி
யரியமெய் பூரித் தோங்கி யகத்தினின் மகிழ்ச்சி பொங்கிப்
பெரியவன் றிருமன் வைத்தார் பேரொளி யிலங்கிற் றன்றே. 1.4. 5

104 மன்னிய கதிர்கள் வீசு மண்ணினை மனுவா தத்தின்
வெந்நிடத் திருத்தி யங்கம் வியனுறும் வடிவ தாகத்
தென்னுறு ஜலால் ஜமாலென் றேத்திய திருக்கை யாரத்
தன்னிக ரில்லாத் துய்யோன் வகுத்தனன் தழைக்க வன்றே. 1.4. 6

105 மெய்யெழில் வாய்ப்பச் சீவன் விடுத்தனன் விடுத்த போதில்
ஐயமற் றெழுந்து சென்னி மூளையி னவத ரித்து
வையகஞ் சிறப்ப வானோர் மனங்களிப் பேறி விம்மத்
துய்யநற் கலிமா தன்னைச் சொல்லியங் கிருந்த தன்றே. 1.4. 7

106 உரைதெரி கலிமா வோதி யோதியங் கிருந்த சீவன்
இருவிழி தனிலி றங்கி யிருந்தகண் விழித்துச் சொர்க்கச்
சொரிகதிர் வாயின் மேலாய் நோக்கின சுடர்க டூங்கும்
வரியுறு கலிமாத் தன்னை வளம்பெறக் கண்ட தன்றே. 1.4. 8

107 துண்டத்தி னாவி தோன்றத் தும்மலுந் தோன்றிப் பின்பு
விண்டுரை பகரு நாவின் மேவியல் ஹம்தை யோதிக்
கொண்டபின் பிரத்தி சொன்ன குதாதிரு வசன நோக்கி
யண்டர்நா யகனைப் போற்றி யாதமொன் றுரைப்ப தானார். 1.4. 9

108 கணித்தள வறுக்க வொண்ணாக் கடவுளே குதாயே நீங்கா
மணிக்கதி ரெறிக்குஞ் சொர்க்க வாயிலி னிலைக்கு மேல்பாற்
பணித்தநின் றிருநா மத்தி னுடனொரு பெயரைப் பண்பா
யணித்துவைத் திருப்பக் கண்டே னவரெவ ரறியே னென்றார். 1.4. 10

109 மாதர்சூ லகட்டுட் டோன்றா மனுநெறி ஆத மேநின்
காதலி லுதவு கின்ற கான்முளை யதிலோர் பிள்ளை
வேதநா யகமா யெங்கும் விளங்குதீன் விளக்காய்ப் பின்னாட்
பூதல நபியாய்க் காணப் படைத்தனன் புகலக் கேண்மோ. 1.4. 11

110 கலைமறை முகம்ம தென்னுங் காரண மில்லை யாகில்
உலகுவிண் ணிரவி திங்க ளொளிருடுக் கணஞ்சு வர்க்கம்
மலைகட னதிபா தாளம் வானவர் முதலா யும்மை
நிலையுறப் படைப்ப தில்லை யெனவிறை நிகழ்த்தி னானே. 1.4. 12



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 5:00 pm

111 பரத்தினை யிறைஞ்சி வாழ்த்திப் பரிவுபெற் றிருந்த வாதஞ்
சிரத்தினி லிருந்த வாவி தேகத்தி னிறைந்த பின்னர்
வரத்தினி லுயர்ந்த வண்மை முகம்மது புவியிற் றோன்றத்
தரித்தபே ரொளிவுக் கந்தச் சசிகதிர் மழுங்கு மன்றே. 1.4. 13

112 உடலுறைந் துயிருண் டென்னு மொருவடி வில்லான் செவ்வி
மடலவிழ் வனச பாத முகம்மதி னொளிவுக் காக
வடலுறு மக்கட் கெல்லா மதிபதி யாதத் துக்கே
யிடமுறு மமரர் யாரும் சுஜுதுசெய் திடுக வென்றான். 1.4. 14

113 தூயவ னுரைப்பக் கேட்ட சொன்மறா தெழுந்து தங்கள்
காயமு மனமும் வாக்குங் கலந்தொன்றாய் மகிழ்வு பொங்கி
நேயமுற் றிடப் பணிந்த நிரைநிரைக் கைக ளேந்தி
வாயினிற் புகழ்ந்து போற்றி மலக்குகள் வணக்கஞ் செய்தார். 1.4. 15

114 வானவர் செய்யு மந்த வணக்கத்தின் முறைசெய் யாமற்
போனத னால ஜாசீல் பொறைநிறை யறிவு போக்கி
யீனவன் குணத்த னாயி லகுனத்து முனிவும் பெற்றே
யானவம் பிபுலீ சென்னும் பெயரும்பெற் றலைந்து போனான். 1.4. 16

115 பொருப்புருக் கொண்ட தன்னப் புயத்தெழி லாதந் தன்னுள்
விருப்பெனும் போக முற்றி விழைவுபெற் றிடுத லாலே
கருப்பமுற் பவிக்க வேண்டுங் காரண காட்சி யாக
மருப்புகுங் குழல்ஹவ் வாவை வல்லவன் பிறப்பித் தானே. 1.4. 17

116 தேங்கமழ் குழலுஞ் சோதித் சிறுபிறை நுதலும் வாய்ப்பப்
பாங்கிருந் தமுதஞ் சிந்தும் பனிமொழி மாதை நோக்கி
யோங்குநின் பெயரைக் கூறென் றுரைத்திட ஹவ்வா வென்றா
ரீங்கிவ ணுறைந்த வண்ண மேதென வாதங் கேட்டார். 1.4. 18

117 செவ்விமன் னெறியா தத்தின் றிருமதி முகத்தை நோக்கி
மவ்வலங் குழலா ரிந்த வானகம் புவிமற் றுள்ள
வெவ்வையும் படைத்தோ னென்னை வகுத்துநும் வயின்செல் கென்றா
னவ்வழி யடைந்தே னென்றா ரழகொளிர் பவள வாயால். 1.4. 19

118 செப்பிய மாற்றங் கேட்டு ரோமங்கள் சிலிர்த்துப் பூரித்
தப்பொழு திறையைப் போற்றி யாதம்ஹவ் வாவை நோக்கி
மைப்படுங் கரிய கூந்தன் மடமயில் வடிவுட் கொண்டு
துப்புறை யமுதந் துய்ப்பத் தொடுவதற் கொருமித் தாரே. 1.4. 20

119 பகரருங் குணமுந் திவ்ய பரிமள மணமு மாறாச்
சிகரமு மயங்க வெற்றி திகழ்தரு புயமு நோக்கி
நிகரருங் குரிசி லேநன் னிலைபெறு வாழ்வே யென்றன்
மகரினைத் தருக பின்னர் வருகவென் றுரைத்திட் டாரே. 1.4. 21

120 கேட்டனர் மகரென் றாதங் கிலேசமுற் றிறைபாற் கெஞ்சி
வாட்டமில் லவனே யெந்த வகைமகர் கொடுப்ப தென்றார்
நாட்டிய புகழ்சேர் மக்க முகம்மது நபிதம் பேரிற்
சூட்டிய சலவாத் தீரைந் துரைமென விறைவன் சொன்னான். 1.4. 22



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 5:00 pm

121 மதிக்கதிர் விலக்குஞ் சோதி முகம்மதின் சலவாத் தோத
விதித்தன னிறையென் றாதம் விளங்கொளிச் சலவாத் தோதித்
துதித்தனர் ஹவ்வா கேட்டுச் சோபன மகர்பெற் றேனென்
றிதத்தித மித்து நெஞ்ச மிருங்களிப் பேறி னாரே. 1.4. 23

122 கடிமலர்க் கொடியுஞ் செவ்விக் கற்பகத் தருவும் போலப்
பிடிநடை மயிலும் வெற்றி பெறுந்திற லரசுங் காம
மிடையறா தமிர்த போக மினிதுண்டு களித்துப் பொங்கி
வடிவுறு மின்ப வெள்ள வாரிக்கு ளழுந்தி னாரே. 1.4. 24

123 துறக்கநன் னகரிற் சேர்ந்து சுகமனு பவிக்கு மாத
மறக்கரும் பொருளே வேதம் வருமுறைக் குரிய கோவே
பெறற்கருஞ் சுவன வானோ ரனைவரும் பெருது கூண்டென்
புறக்கணி னிருப்ப தென்னோ புகலெனப் புகல லுற்றான். 1.4. 25

124 நிதமழ கொழுகி வாச நிறைந்தமெய் முகம்ம தென்னு
முதிர்கதிர் விளங்கி நுந்த முதுகிடத் திருக்கை யாலே
பதவியி னரிய விண்ணோ ரெண்ணிலாப் பகுப்புக் கூடி
யிதமுறத் தெரிசிக் கின்றா ரென்றன னென்று முள்ளோன். 1.4. 26

125 மருள்கடிந் தறிவு பொங்கு முகம்மதி னொளியை யென்மு
னருள்கவென் றிருகை யேந்தி யாதநன் னபியுங் கேட்கப்
பெரியவன் கருணை கூர்ந்து பெறுமுறை யிதுகொ லென்ன
நெரிநடுப் புருவக் கான்மே னெற்றியி லொளிர செய்தான். 1.4. 27

126 வேறு
தாதவிழ் மலர்த்தா ராதநன் னுதலிற்
றண்ணெனுங் கதிர்கள்விட் டொழுகுஞ்
சோதியைத் தெரிசித் தமரர்க ளணுவுந்
தோன்றுதற் கிடமற நெருங்கிக்
கோதறப் பெருகி முன்னிலை திரண்ட
குழுவினைக் கண்டுகண் குளிர்ந்து
மாதவம் பெற்றே னெனமன மகிழ்ச்சி
வாரியிற் குளித்தன ரன்றே. 1.4. 28

127 அறவரி தான காட்சியும் பேறு
மமரர்க ளியாவரும் பெற்றா
ரிறைவனே யானும் பெறுவதற் கென்க
ணிடத்தினிற் றெரிகிலே னென்றார்
நிறைநடு வாகி யுலகெலா நிறைந்த
நெடியவ னினிதருள் புரிந்து
விறல்புரி யாதம் வலதுகைக் கலிமா
விரனகத் திடத்தில்வைத் தனனே. 1.4. 29

128 வரிச்சுரும் பலர்த்தி நறைவிரி துருக்க
மருவுபொற் புயத்தெழி லாதம்
விரித்தக மகிழ்ச்சி பெருக்கியென் முதுகில்
விளங்கொளி யின்னமு முளவோ
தெரித்தருள் புரியென் றிறையுடன் மொழியச்
செவ்விய முகம்மது நபிதம்
முரித்துணைத் தோழர் நால்வருண் டவர்த
மொளியுள வெனவுரைத் தனனே. 1.4. 30

129 அப்பெரும் பெயர்க ணான்குபே ரொளியு
மகுமதி னொளியடுத் திருப்ப
வைப்பையென் விரல்க னான்கினு மென்ன
வல்லவ னவ்வழி யமைத்தான்
மெய்ப்பொருள் கலிமா விரனடு விரன்மென்
விரற்சிறு விரற்பெரு விரல்க
ளிப்படி விரல்க ளைந்தினு மைவர்
விளங்கொளி யுகிரிலங் கினவே. 1.4. 31

130 பகுத்தொளி விரிக்கு நகத்தொளி விருக்கும்
பண்புகண் டதிசயித் தாத
மகத்தினின் மகிழ்ந்து கண்ணிணை மலரி
னடிக்கடி வைத்துவாய் முத்தி
மிகுத்திடும் வரிசை நபிசல வாத்தை
விளக்கிவாய் மறாதெடுத் தோதி
வகுத்தவல் லவனைப் பணிந்துவா னகத்தில்
வாழ்ந்தினி திருக்குமந் நாளில். 1.4. 32



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 5:00 pm

131 மிக்கெழி லாத மேலவன் விதித்த
விலகலைப் பொருந்தின படியா
லக்கையின் விரல்க ளொளிவுமுன் னிருந்த
வணியணி முதுகிடத் தாகித்
துக்கமு மிகுந்து சுவர்க்கமு மிழந்து
தொல்லுல கடைந்துவெவ் வேறு
திக்கினின் மயங்கி யிருவரு மலைத்துத்
தீவினைக் குரியவ ரானார். 1.4. 33

132 ஆதியே ஹக்கா றப்பனா விறையே
யழிவிலாப் பேரின்ப வாழ்வே
நீதியே யெனவும் பலதரந் தவுபா
நிகழ்த்தியுந் துன்பம்விட் டொழியாப்
போதிலே யெனது முதுகிடத் துறைந்த
பொருளொளிச் சிறப்பெனும் பொருட்டாற்
சோதியே தவுபாத் தனைக்கபூ லாக்கென்
றுரைத்தனர் சுடர்முடி யாதம். 1.4. 34

133 நறைதரு மறுவி கமழ்முகம் மதுநந்
நபிதிருப் பெயர்சொலும் பொருட்டா
யிறைவனு மாதஞ் செயுந்தவு பாவுக்
கிசைந்தினி துறக்கபூ லாக்க
வுறைதரு துன்ப மனைத்தையும் போக்கி
யூழ்வினை பின்புமொன் றாக்க
மறுமதி யகடு தொடுமுடி யறபா
மலையினி லிருவருஞ் சேர்ந்தார். 1.4. 35

134 கூடிய விருவர் தாமுஞ்சுத் தாவிற்
குடியிருந் திருபது சூலில்
நாடிய பொருட்போ னாற்பது பெயரை
நன்குறப் பெற்றதின் பின்னர்
சூடிய கிரீட பதிநபி யமரர்
துரைகனா யகமெனு மிறசூல்
நீடிய வொளியு சிறந்தொரு சூலி
னிலமிசை சீதுதித் தனரே. 1.4. 36

135 மருமலர்த் திணிதோ ணிறைமதி வதன
முகம்மதின் பேரொளி யிலங்கித்
தெரிமறை ஆத மக்களிற் சிறந்த
சீதுவி னிடத்திருந் ததனாற்
பரிவுறு நபிப்பட் டமும்வரப் பெற்றுப்
பல்கலைக் குரிசிலென் றேத்த
வரியவன் கொடுத்த வரிசைக ணிறைந்த
வைம்பது சுகுபிறங் கியதே. 1.4. 37

136 சீதுவி னிடத்தி னிருந்தவர் மதலை
சிறந்தமா மணிமுடிக் குரிசின்
மாதவர் கமல வதனயா னுசுதம்
வயினுறைந் திருந்தணி சிறந்து
தாதவிழ் மலர்த்தார்க் குங்குமக் கலவைத்
தடப்புயர் யானுசு தருகார்
நீதிசேர் ஹயினா னிடத்தினி லிருந்து
நிலைபெற விளங்கிய தன்றே. 1.4. 38

137 தண்மணிக் கதிர்விட் டெறிக்கும்வெண் கவிகைக்
தடவரை மணிப்புய ஹயினான்
கண்மணி மகுலீ லிடத்தினி லிருந்து
கவின்குடி கொண்டெழுந் தோங்கி
வெண்மணித் தரளத் தொடைப்புய மகுலீல்
வேந்தருக் குற்றசே யெனவாழ்
உண்மைநன் னெறிசே ரெறுதுவி னிடத்தி
னுறைந்தினி திலங்கிய தன்றே. 1.4. 39

138 வடவரை குலுங்க நடமிடு துரங்க
மன்னவ ரெறுதுதம் மதலை
கடகரிக் குவட்டி னிணையெனப் பணைத்த
கதிர்முலைத் துடியிடை மடவார்
விடமெனக் கரிய கொலைவிழிக் கணங்கள்
வீற்றிருந் திடுமலர்ப் புயத்தார்
இடிமுர சதிரு முன்றிலா ருகுநூ
கிடத்தினி லிருந்திலங் கியதே. 1.4. 40

139 கடலெனத் தானை யரசர்வந் தீண்டிக்
கைகுவித் திருபுற நெருங்கச்
சுடர்மணித் தவிசி னுயர்ந்தர சியற்றிச்
சுருதிநே ருறையுகு நூகு
புடையிருந் தவர்செய் யறமெலாந் திரண்டோர்
புத்திர வடிவெடுத் தென்ன
விடுகொடை கவிப்பப் புரந்தசே யிதுரீ
சிடத்தினி னிறைந்திருந் ததுவே. 1.4. 41

140 நன்னெறி நயினா ரொளியிருந் ததனா
னபியெனும் பட்டமும் பெறலாய்
உன்னுதற் கரிய முப்பது சுகுபு
முடையவ னருளினா லிறங்கிப்
பன்னிய வுலகத் தொழிலெவை யவைக்கும்
பரிவுறு முதன்மையே யிவரென்
றெந்நிலங் களுக்கும் பெயர்பெற வரசா
யிருந்திட வியற்றிய தன்றே 1.4. 42



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 5:01 pm

141 மெய்த்தவக் குரிசி னபியிது ரீசு
விருப்புற வுதித்தநன் மதலை
யுத்தமர் மத்தூ சல்குதம் மிடத்தவ்
வொளியுறைந் துலகெலா மிறைஞ்ச
வைத்தபின் மத்தூ சல்குதம் மைந்தர்
மடந்தையர் மடலெடுத் தேந்தச்
சித்திரக் கவின்பெற் றிருந்தலா மக்கு
வயின்சிறந் திலங்குமவ் வொளியே. 1.4. 43

142 தருமநன் னெறியா லுலகெலாம் புரக்கத்
தகும்புக ழானலா மக்குத்
திருமக நூகு வயினுறைந் திருந்து
சிறந்தபே ரொளியினா லவர்க்கும்
பெருகிய நபிப்பட் டமுமிகப் பெறலாய்ப்
பிரளயப் பெருக்கெடுத் தெறியுங்
கருநிறக் கடல்வங் கமுங்கவி ழாது
காட்சியாய்க் கலாசுபெற் றதுவே. 1.4. 44

143 வரிசையு மிமையோர் துதிசெயும் பரிசும்
வரப்பெறு நூகுதம் மதலை
தரைபுகழ்ந் தேத்தச் சாமிடத் திருந்து
தனபதி கனபதி யாக்கிக்
கருவிளை விழியார் கவரிகா லசைப்பக்
கனகசிங் காதனத் திருத்தி
விரிகட லுலகம் பொதுவறப் புரக்கும்
வேந்திவ ரெனவியற் றியதே. 1.4. 45

144 சாமுதன் மதலை யறுபகு சதுமன்
றம்மிடத் தவதரித் திருந்து
தூமமும் புழுகுந் தகரமுஞ் சாந்துந்
தோய்ந்திருண் டடர்ந்தபூங் குழலார்
காமுக ரெனச்செய் தணிமணிப் புயங்கள்
கண்கொளா தழகிருந் தொழுகு
மாமதக் களிற்ற ரறுவகு சதுமா
மதலைசா லகுவயி னடைந்த 1.4. 46

145 சாலகு தம்பா லடைந்துவாய் மைக்குந்
தவத்திற்கும் பவுத்துக்கு மிவரே
மேலவ ரெனச்செய் திருந்தவர் மதலை
வேந்தர்ஐ பறுவயின் புரந்து
காலடி மறைக்கக் கவிழ்மத மிறைக்குங்
கடகரி யரசர்ஐ பறுசேய்
பாலகு வயின்வீற் றிருந்துல கெல்லாம்
பரித்திடப் பண்புபெற் றதுவே. 1.4. 47

146 தேன்கிடந் தொழுகுங் குங்குமத் தொடையற்
செழும்புயன் பாலகு மதலை
வான்கிடந் தனைய மின்னொளிர் வடிவார்
மன்னன்றா குவாவிடத் திருந்து
கூன்கிடந் தனைய பிறைகறைக் கோட்டுக்
குஞ்சரத் தரசர்கை கூப்ப
மீன்கிடந் தலர்வான் மதியெனுங் கவிகை
வேந்தர்வேந் தெனவிளைத் ததுவே. 1.4. 48

147 வாரணி முரச மிடியெனக் கறங்கும்
வாயிலான் றாகுவா மதலை
தாரணி தருவா யுதித்தசா றூகு
தம்மிடத் திருந்தெழில் சிறந்து
காரணக் குரிசி லானசா றூகு
கண்ணிணை மணியென விளங்கும்
ஏரணிப் புயனா கூறிடத் துறைந்தங்
கிலங்கிய தருமறை யொளியே. 1.4. 49

148 வெண்டிரை புரட்டுங் கருங்கட லுடுத்த
மேதினிக் கரசென விளங்குந்
திண்டிற னாகூ றுதவிய மதலை
செழும்புக ழாசறு வயின்வந்
தெண்டிசை முழுது மொருதனிச் செங்கோ
லியற்றுவ திவரென வியற்றி
வண்டணி மலர்த்தா ராசறு தவத்தால்
வருமொரு வடிவுறு மதலை. 1.4. 50

149 முருகவிழ் புயத்தார் நபியிபு றாகீம்
செய்தவப் பலனொரு வடிவாய்
ஈனமி லிசுமா யீல்நபி யிடத்தி
னிருந்திலங் கியவொளிப் பொருட்டால்
வானகத் தமரர் சுடர்விரி சுவன
மடந்தைய ரினிதுவாழ்த் தெடுப்பக்
கானகு மலர்த்தார் செழுமணிக் கழுத்திற்
கருவிவாய் தடவில வன்றே. 1.4. 51

150 தீனிலைக் குரிய நபியிபு றாகீம்
செய்தவப் பலனொரு வடிவாய்
ஈனமி லிசுமா யீல்நபி யிடத்தி
னிருந்திலங் கியவொளிப் பொருட்டால்
வானகத் தமரர் சுடர்விரி சுவன
மடந்தைய ரினிதுவாழ்த் தெடுப்பக்
கானகு மலர்த்தார் செழுமணிக் கழுத்திற்
கருவிவாய் தடவில வன்றே. 1.4. 52



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 5:01 pm

151 மன்னவ ரிசுமா யீல்தரு மதலை
மணிவிளக் கனையதா பித்து
தன்னிடத் திருந்து தரணியேழ் புரக்குந்
தலைபதி நிலைபெற வியற்றி
மின்னவிர் மௌலி விளங்குதா பித்து
வேந்தர்பெற் றெடுத்தமா மதலை
யிந்நிலம் புகழு மெசுஹபு வெனும்பே
ரெடுத்தவ ரிடத்திலங் கியதே. 1.4. 53

152 உடல்பிளந் துயிருண் டுதிரங்கொப் பளித்தூ
னுணங்குவேற் கரரெசு ஹபுதம்
பிடிநடை மடவாள் பெற்றெடுத் துவந்த
பிள்ளையஃ றுபுவயி னிருந்து
கடல்கிளர்ந் தனைய தானையஃ றுபுதங்
கண்மணி தயிறகு என்போர்
இடமுற விருந்து நெடும்புகழ் விளக்கி
யெழில்கனிந் திலங்கிய தன்றே 1.4. 54

153 சந்தனந் திமிர்ந்து திரண்டமற் புயத்தார்
தயிறகு தருதிரு மதலை
கந்தெறி தறுகட் கரடமா லியானைக்
காவலர்க் கசனிநா கூறு
சுந்தர வதனத் திலங்கிட விருந்து
சொரிமழைச் செழுங்கைநா கூறு
மைந்தர்மிக் குவந்தம் மிடத்துறைந் திருந்து
மாட்சிபெற் றிலங்கிய தன்றே. 1.4. 55

154 மிக்குவ மெனும்பே ரரசுதம் மதலை
வெயில்விடு மணிமுடி யுதது
பக்கலி லிருந்து செல்வமுஞ் செருக்கும்
பண்புறப் பெருக்கிட நிறைத்துத்
திக்கனைத் தினும்பேர் விளங்கிட விளங்கித்
திறல்பெறு முத்துநன் மதலை
தக்கமெய்ப் புகழ்சே ரிருநிதி யதுனான்
தம்மிடத் திருந்தெழி றழைத்த 1.4. 56

155 வெண்ணிலா விரிக்கு மொருதனிக் குடைக்கீழ்
வேந்துசெய் தருள்புரி யதுனான்
கண்ணின்மா மணியா யுதித்திடு முஅத்து
கவின்பெற விருந்தவ ரிடத்தில்
எண்ணிலா வரச ரடிபணிந் திறைஞ்ச
வியற்றிய பேரொளி முஅத்து
புண்ணியப் பொருளா யுருவெடுத் துலகம்
புரந்தநி சாறிடத் துறைந்த 1.4. 57

156 ஒருகுடை நிழற்கீ ழிருநிலம் புரந்திட்
டுருமென மும்முர சதிரத்
திருநிறை நான்கு திக்கினுஞ் செங்கோல்
செலுத்திய நிசாறெனு மரசர்
பெருகிய நிலைமைக் குலக்கட னாப்பண்
பிறந்தெழுங் கதிரவ னொப்ப
வருமுகின் முலறு நபியிடத் துறைந்து
மகிதலம் புகழ்ந்திட விருந்த. 1.4. 58

157 அறிவெனுங் கடலாய் வரம்புபெற் றிருந்த
வருமறை முலறுநன் னபிக்குப்
பெறுபல னெனவந் துதித்தஇல் யாசு
நபியெனப் பேரொளி தங்கித்
துறவலர்க் கரசா யிருந்தஇல் யாசு
புத்திரர் பவுத்தெலா நிறைந்த
மறுமனர் குலக்கோ ளரியெனப் பிறந்த
மாமணி முதுறக்கத் தெனுமால். 1.4. 59

158 முகம்மது நயினா ரொளிவிருந் திலங்கு
மன்னவர் முதுறக்கா மதலை
செகமகிழ் குசைமா வயினுறைந் தரசர்
செழுமுடி நடுமணி யெனலாய்
நகுகதிர் விரிவெண் குடைநிழ லிருந்த
நரபதி யெனுங்குசை மாமன்
புகழெனத் தோன்றி வருதுறை கனானாப்
பூபதி யிடத்தின்வந் திருந்த. 1.4. 60

159 மடங்கலே றனைய தன்பதி கனானா
மகிபதி தவத்துறு மதலை
நுடங்கிடை மடவார் கருத்தினைக் கவரு
நுலறெனு மழகுறு மரசர்
தடம்புயங் களின்மா நிலங்குடி யிருப்பத்
தங்கியங் கவர்பெறு மரசர்
முடங்குளைப் பகுவாய் மடங்கலங் கொடியார்
மோலிமா லிக்குசார் பிருந்த. 1.4. 61

160 திண்டிற லரசர் சிரம்பொடி படுத்திச்
செவந்தவாட் கரத்தர்மா லிக்கு
மண்டலம் விளக்கு முழுமணி விளக்காய்
வந்தமன் பிஃறிடத் திலங்கி
எண்டிசை யிடத்து மெழுகடற் புறத்து
மறுவகைத் தானைகொண் டெதிர்ந்து
கொண்டமர் கடந்த வரசெனப் பெயருங்
கொடுத்தது திருநபி யொளியே. 1.4. 62



161 குரிசிலென் றுயர்ந்த பிஃறெனு மரசர்
குறைஷியங் குலத்துறு மதலை
விரிதிரை யுவரி நடுநிலம் புரந்த
வேந்தர்கா லிபுவயி னிலங்கிக்
கரிபரி பதாதி ரதம்புடை நெருங்குங்
கடைத்தலை காலிபு தருசேய்
முருகவிழ் மரவத் தொடைப்புயர் லுவையு
முகமலர் தரவிருந் தொளிரும். 1.4. 63

162 வான்மதி பகுந்த முகம்மது நயினார்
வடிவுறும் பேரொளி லுவையாங்
கோன்மகன் ககுபு தம்மிடத் திலங்கிக்
குன்றினி லிடும்விளக் காகிச்
சூன்முதிர் மழைக்கை ககுபுகண் மணியாய்த்
தோன்றிய முறத்திடத் துறைந்த
சேனமுங் கொடியுந் தொடர்கதிர் வடிவேற்
செம்மலென் றுயர்ச்சிபெற் றிருந்தார். 1.4. 64

163 கொந்தலர்ந் திருண்ட கருங்குழன் மடவார்
கொங்கையிற் றடம்புய மழுந்துஞ்
சுந்தரர் முறத்து மதலையாய் நிலத்திற்
றோன்றிய மதிமுகக் கிலாபு
மந்தர மனைய தடம்புய ரிடத்தில்
வந்திருந் தவர்தரு மதலை
கந்தடர் தறுகட் கரடமா லியானைக்
காவலர் குசையிடத் துறைந்த 1.4. 65

164 வில்லுமிழ் வயிரத் தொடைபுரண் டசைந்த
விறற்புயர் குசைதரு மதலை
செல்லென விரங்குஞ் சினந்துவே றாங்கும்
செழுங்கர ரப்துல் முனாபு
மல்லலைத் திணிதோ ளரசர்நா யகர்தம்
வயினுறைந் தவர்பெறு மதலை
யெல்லவ னெனவே கலியிரு டுரத்தி
யிருந்தஹா ஷீமிடத் துறைந்த. 1.4. 66

165 கிம்புரிக் கோட்டுக் கடமலை துளைத்துக்
கிளைத்திடும் வேற்கரர் ஹாஷீம்
அம்புவிக் கரசாய்ப் பெற்றெடுத் துவந்த
வருமணி யப்துல்முத் தலிபு
நம்பிய தவப்பே றெனவிருந் திலங்கி
நறைகமழ் அப்துல்முத் தலிபு
தம்பெயர் விளக்கக் குவலயத் துதித்த
சந்ததி யப்துல்லா வென்போர். 1.4. 67
தலைமுறைப் படலம் முற்றிற்று.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 5:03 pm


1.5. நபியவதாரப் படலம்


166 பெருகிய கோடிசந் திரப்பிர காசமாய்
வருமொரு பெருங்கதிர் மதியம் போலவே
கருணைவீற் றிருந்தசெங் கமலக் கண்ணிணைத்
திருநபி வருமவ தாரஞ் செப்புவாம். 1.5.1

167 வேறு
கடியி ருந்தெழு கற்பக முஞ்சுடர்
வடிவி ருந்த மணியும் வனசமும்
படியுங் கார்முகி லேழும் பழித்துவிண்
குடியி ருத்துங் கொழுந்தடக் கையினார். 1.5.2

168 வேறு
விண்டொடு கொடுமுடி மேரு வீறழித்
தெண்டிசைக் கிரியொடு மிகலுங் கொங்கையர்
கொண்டமா மயலொடு மனமுங் கூர்விழி
வண்டொடும் வண்டுறை மாலை மார்பினார். 1.5.3

169 கொன்னுனை வெண்ணிறக் கோட்டு வாரணச்
செந்நிறக் குருதியிற் றிமிர்ந்து வாய்கழீஇ
மின்னவிர் கணமணி விளங்கு மாமுடி
யொன்னல ருயிரைமேய்ந் துறங்கும் வேலினார். 1.5.4

170 முடங்கலங் கைதைமுள் ளெயிற்று வெண்பணிப்
படங்களா யிரத்தினும் பரித்த பாரெலா
மிடங்கொள்பூ தரப்புயத் திருத்தி யேதிலார்
மடங்கலே றெனுமன வலியின் மாட்சியார். 1.5.5

171 மாக்கட னெடும்புவி வளைந்த வன்கலி
நீக்கிய வெண்குடை நீழ லோம்புவோர்
வீக்கிய கழலடி வேந்தர் பொன்முடி
தாக்கிய மருச்செழுங் கமலத் தாளினார். 1.5.6

172 வரபதி யுலகெலாம் வாழ்த்து மக்கமா
புரபதிக் கதிபதி யென்னும் பூபதி
பரபதி யரசர்கள் பணிந் திறைஞ்சிய
நரபதி யப்துல்லா வென்னு நாமத்தார். 1.5.7

173 செழுமழை முகிலென வமுதஞ் சிந்திட
வழிகதிர் நபியென வகுத்த பேரொளி
பொழிகரத் தப்துல்லா விடத்திற் பொங்கியே
யெழிறரு திருநுத லிடத்தி லங்குமே. 1.5.8

174 அயிலுறை செழுங்கரத் தப்துல் லாவெனும்
பெயரிய களிறுக்கோர் பிடியும் போலவ
ருயிரென விருந்தசைந் தொசிந்த பூங்கொடி
மயிலெனு மாமினா வென்னு மங்கையே. 1.5.9

175 இற்புகுந் தெழுமதி யிலங்கு மாமணி
விற்புரு வக்கடை மின்க ணாயகம்
பொற்பெலாம் பொதிந்தபொற் கொடிநற் பூவையர்
கற்பெலாந் திரண்டுருக் கொண்ட கன்னியே. 1.5.10

176 அறத்தினுக் கில்லிட மருட்கோர் தாயகம்
பொறுத்திடும் பொறுமையிற் பூமிக் கெண்மடங்
குறைப்பெருங் குலத்தினுக் கொப்பி லாமணிச்
சிறப்பினுக் குவமையில் லாத செல்வியே. 1.5.11



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 5:03 pm

177 குணிப்பருங் குறைசியங் குலமென் றோங்கிய
மணிப்பெருங் கடலிடை வளருஞ் செல்வமே
தணிப்பிலா தெடுத்தெறி தரங்க மேனடுப்
பணிப்படா தெழுந்தசெம் பவளக் கொம்பனார். 1.5.12

178 இத்தகைக் குலமயி லாமி னாவெனு
முத்தவெண் ணகைக்கனி மொழியு மோகனச்
சித்திர அப்துல்லா வென்னுஞ் செம்மலு
மொத்தினி தமுதமுண் டுறையு நாளினில். 1.5.13

179 வேறு
வீசு தெண்டிரைக் கடன்மலை யடங்கவெண் குடைக்கீ
ழாசி லாதசிங் காசனத் திருந்தசிக் கந்தர்
காசி னிக்கர சியற்றுதுல் கருனையின் கால
மாசி லாக்கணக் கெட்டுநூற் றெண்பத்தோர் வருடம். 1.5.14

180 கரைத்த மின்றௌித் தெழுத்தெனச் சிறக்குமக் காவி
னிரைத்த கார்க்குலந் திரண்டெனக் களிறுக ணெருங்கி
யிரைத்த டர்ந்துமும் மதங்களை வாரிநின் றிறைத்து
வரைக்கு லங்கள்போல் வந்ததற் கொருமுதல் வருடம். 1.5.15

181 திங்க ளாமிற சபுமுதற் றேதிவெள் ளியிராத்
துங்க வார்கழன் முகம்மது பேரொளி துலங்கி
யெங்க ணாயக ரப்துல்லா நுதலிடத் திருந்து
மங்கை யாமினா வயிற்றினிற் றரித்தன வன்றே. 1.5.16

182 திருத்தும் பொன்னக ரமரரே திரண்டவா னவரே
கருத்தி னுண்மகிழ்ந் தெவ்வையு மலங்கரித் திடுமின்
வருத்த மென்றிலா முஹம்மதை யாமினா வயிற்றி
லிருத்தி னேனென வுரைத்தன னியாவர்க்கு மிறையோன். 1.5.17

183 பரந்த வாய்க்கொடும் பாந்தளும் விடங்கொள் பஞ்சரமுங்
கரிந்து பொங்கிய குழிகளுங் கனற்பொறி கதுவ
வெரிந்து செந்நெருப் பொழுகிய நரகங்க ளேழும்
விரைந்த வித்தடைத் திடுகவென் றனன்முதல் வேந்தன். 1.5.18

184 விற்கெ ழுமறு சொடுகுறு சந்தரம் விளங்கச்
சொர்க்க வாயிலுந் திறந்தலங் கரித்தனர் துன்ப
மிக்க வாரிபாழ் நரகங்க ளடைத்தனர் வானோர்
கற்கு மாமறை முதலவன் விதித்தகட் டளைக்கே. 1.5.19

185 அந்தண் பொன்னக ரடங்கலு மலங்கரித் ததுவும்
வெந்த பாழ்நர கங்களை யடைத்தபல் விதமுஞ்
சந்த திண்புய முகம்மது நபிதரித் ததுவு
மிந்த வாறுக ளனைத்தையு மறிந்திபு லீசு. 1.5.20

186 நடுங்கி வாயினீர் வறந்திட நாவுலர்ந் துடல
மொடுங்கி யைம்பொறி மயக்குற நெஞ்செலா முடைந்து
புடங்கொள் வங்கம தாய்நினை வுருகினன் புலம்பத்
துடங்கி னானடிக் கடிபெரு மூச்சொடு சுழன்றே. 1.5.21



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 5:04 pm

187 கரைவ னேங்குவன் மலங்குவன் கலங்குவன் கதறி
யிரைவன் கன்னத்திற் கையைவைத் திருந்தெழுந் திருப்பன்
றரையின் மேல்விழுந் தெனக்கிலை யினிச்சிங்கா சனமென்
றுரைம றந்திடக் கிடந்தன னிருகணீ ரொழுக. 1.5.22

188 அறிவ ழிந்தமன் னவன்றனை மக்கள்வந் தடைந்து
குறியுந் துன்பமும் வந்தவா றேதெனக் கூறி
நிறையு மக்களோ டுறும்வர லாறெலா நிகழ்த்தி
யுறையு மில்லிட மிவணிலை நமக்கென வுரைத்தான். 1.5.23

189 இந்த வாசகங் கேட்டலு மக்களெல் லோருந்
தந்தை யேயிதற் கென்செய்வோ மெனத்தடு மாறிப்
புந்திநொந்து நொந் தவரவர் திசைதிசை புகுந்தார்
சிந்தை நொந்திபு லீசுவுந் திகைத்திருந் திடைந்தான். 1.5.24

190 தரித்தி டுமுதற் றிங்களிற் றரைபுக ழாத
முரைப்ப ராமினா கனவினி லுன்றிரு வுதரத்
திருக்குஞ் சந்ததி வலிமையை யுடையதிவ் வுலகத்
தருக்க னொப்பல நாமமு கம்மதென் றகன்றார். 1.5.25

191 கருப்பந் திங்களி ரண்டினி லாமினா கனவின்
மருப்பு குங்குழல் வல்லிநின் வயிற்றினின் மதலை
யருப்பும் வீறுடை யவர்பெயர் முகம்மதென் றதிக
விருப்ப மாயிது றீசுநன் னபிவிளம் பினரே. 1.5.26

192 இக்கெ னும்மொழி யாமினாக் கினிதுறத் திங்கள்
புக்கு மூன்றினி னூகுநன் னபிமனப் பொலிவாய்
மிக்க வுண்மையும் விளங்கிய வெற்றியு முடையோர்
தக்க பேர்முகம் மதுவெனச் சாற்றிவிட் டகன்றார். 1.5.27

193 திங்க ணான்கினி லாமினா கனவினிற் றௌிவா
யிங்கி தத்திபு றாகிநன் னபியியம் பினராற்
சங்கை யாய்மிகு வரிசையும் பெருங்கொலுத் தனையும்
பொங்கு வாழ்வினர் பெயர்முகம் மதுவெனப் போந்தே. 1.5.28

194 அம்பொற் கும்பத்தி னருவநீர் மஞ்சன மாடிச்
செம்பொற் பட்டுடுத் தெறிகதி ரணியிழை திருத்திப்
பம்பு மேகலை தரித்துமென் கரவளை பரித்துக்
கம்ப லைச்சிலம் பணிந்தனர் பதங்கவின் பெறவே. 1.5.29

195 நெறித்த வார்குழ லிறுக்கிமென் மலர்பல நிறைத்துக்
குறித்த வேலிணைக் கண்களி லஞ்சனங் கோட்டிச்
செறித்த மான்மதஞ் சந்தனக் கலவையுந் திமிர்ந்தே
யெறித்த நன்கதிர் விளக்கென வாமினா வெழுந்தார். 1.5.30

196 இனத்து ளாரெனுஞ் செழுமலர்க் கொடிநடு விடையே
கனத்த மாமணிக் கொம்பென நடந்துகஃ பாவின்
மனத்தி ருக்கற வலஞ்செய்து வாயிலில் வந்து
நினைத்தி டும்பொரு டருகெனப் போற்றினர் நிறைந்தே. 1.5.31



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக