புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டதேவிப் புராணம் Poll_c10கண்டதேவிப் புராணம் Poll_m10கண்டதேவிப் புராணம் Poll_c10 
74 Posts - 47%
heezulia
கண்டதேவிப் புராணம் Poll_c10கண்டதேவிப் புராணம் Poll_m10கண்டதேவிப் புராணம் Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
கண்டதேவிப் புராணம் Poll_c10கண்டதேவிப் புராணம் Poll_m10கண்டதேவிப் புராணம் Poll_c10 
5 Posts - 3%
prajai
கண்டதேவிப் புராணம் Poll_c10கண்டதேவிப் புராணம் Poll_m10கண்டதேவிப் புராணம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
கண்டதேவிப் புராணம் Poll_c10கண்டதேவிப் புராணம் Poll_m10கண்டதேவிப் புராணம் Poll_c10 
2 Posts - 1%
jairam
கண்டதேவிப் புராணம் Poll_c10கண்டதேவிப் புராணம் Poll_m10கண்டதேவிப் புராணம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கண்டதேவிப் புராணம் Poll_c10கண்டதேவிப் புராணம் Poll_m10கண்டதேவிப் புராணம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கண்டதேவிப் புராணம் Poll_c10கண்டதேவிப் புராணம் Poll_m10கண்டதேவிப் புராணம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
கண்டதேவிப் புராணம் Poll_c10கண்டதேவிப் புராணம் Poll_m10கண்டதேவிப் புராணம் Poll_c10 
1 Post - 1%
kargan86
கண்டதேவிப் புராணம் Poll_c10கண்டதேவிப் புராணம் Poll_m10கண்டதேவிப் புராணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்டதேவிப் புராணம் Poll_c10கண்டதேவிப் புராணம் Poll_m10கண்டதேவிப் புராணம் Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
கண்டதேவிப் புராணம் Poll_c10கண்டதேவிப் புராணம் Poll_m10கண்டதேவிப் புராணம் Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
கண்டதேவிப் புராணம் Poll_c10கண்டதேவிப் புராணம் Poll_m10கண்டதேவிப் புராணம் Poll_c10 
9 Posts - 4%
prajai
கண்டதேவிப் புராணம் Poll_c10கண்டதேவிப் புராணம் Poll_m10கண்டதேவிப் புராணம் Poll_c10 
6 Posts - 3%
Jenila
கண்டதேவிப் புராணம் Poll_c10கண்டதேவிப் புராணம் Poll_m10கண்டதேவிப் புராணம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
கண்டதேவிப் புராணம் Poll_c10கண்டதேவிப் புராணம் Poll_m10கண்டதேவிப் புராணம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கண்டதேவிப் புராணம் Poll_c10கண்டதேவிப் புராணம் Poll_m10கண்டதேவிப் புராணம் Poll_c10 
2 Posts - 1%
jairam
கண்டதேவிப் புராணம் Poll_c10கண்டதேவிப் புராணம் Poll_m10கண்டதேவிப் புராணம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கண்டதேவிப் புராணம் Poll_c10கண்டதேவிப் புராணம் Poll_m10கண்டதேவிப் புராணம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கண்டதேவிப் புராணம் Poll_c10கண்டதேவிப் புராணம் Poll_m10கண்டதேவிப் புராணம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டதேவிப் புராணம்


   
   

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:03 am

கண்டதேவிப் புராணம்
திரிசிரபுரம் மஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றியது.



இஃது சிவநேசம் பொருந்திய வெளிமுத்தி வயிரவ ஐயாவவர்கள் அநுமதிப்படி தேவகோட்டை மு.குப்பான் செட்டியாரவர்கள் குமாரர் முத்தரசப்பசெட்டியாரால் சென்னை இலக்ஷ்மீவிலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.


கடவுள் வாழ்த்து


1 விநாயகர்
பூமேவு பரையொருபாற் பெருமான்பின் பாற்றழுவிப் புணர்ந்தொன் றாய
மாமேவு பெண்பாலாண் பாலொடுமா றுற்றெரிந்து மாறு றாமே
தூமேவு முன்பால்வந் துறத்தழீஇ யொருமருப்பாற் றுணைப்பா லாய
தேமேவு முகமலரும் வலம்புரிக்குஞ் சரத்திருதாள் சேர்ந்து வாழ்வாம் 1

2 சொர்ன்னவருடேசர்
மாமேவு கடவுளருந் தடவுளருஞ் சுரும்பமர்பூ மாலை வேந்துங்
கோமேவு மலரானும் பலரானும் புகழ்திகிரிக் குரிசி றானுந்
தேமேவு பண்ணவரு நண்ணவருள் சுரந்துகண்ட தேவி மேவும்
பாமேவு புகழ்ச்செம்பொன் மாரிபொழிந் தவர்மலர்த்தாள் பரசி வாழ்வாம் 2

3 தேமாரி யமன்பதைக ளுளங்கருதி யன்னையுஞ்சீர் திகழ்பி தாவு
மாமாரி யனுமுலவாப் பெருங்கதியு நீயேயென் றடைந்து போற்றக்
காமாரி யாயிருந்துங் கவுமாரி யொடுங்கலந்த கருணை மூர்த்தி
பூமாரி சுரர்பொழியப் பொன்மாரி பொழிந்தபிரான் பொற்றாள் போற்றி 3

4 பெரியநாயகி
சொற்றபெரும் புவனமெலா மொருங்கீன்ற பெருந்தலைமைத் தோற்றத் தானோ
கொற்றமிகு பெருங்கருணை சுரக்குமிறை மையினானோ குமரி யாயுங்
கற்றமையிப் பெயர்பூண்டா யெனுமருத வாணரெதிர் கனிவா யுள்ளாற்
சற்றமைய முறுவலித்து மகிழ்பெரிய நாயகிதா டலைமேற் கொள்வாம் 4

5 வாய்ந்தபர சத்தியாய் விந்துவாய் மனோன்மணியாய் மகேசை யாய்ச்சீர்
வேய்ந்தவுமை யாய்த்திருவாய்ப் பாரதியா யிவரன்றி வேறா யின்னு
மேய்ந்தசிறை யிலிநாத னெத்திறநிற் பானதனுக் கியைய நின்றே
தோய்ந்தவுயிர்க் கின்புதவும் பெரியநா யகிதுணைத்தா டொழுது வாழ்வாம் 5

6 சபாநாயகர்.
மறையாதியியம்புகுறிகுணங்கடந்தோரைந்தெழுத்தேவடிவமாகி
நிறையாதிபடைப்பாதிதுடியாதியோரைந்துநிகழ்த்தநாளு
மிறையாதிதவிர்ந்திருவர்வியந்தேத்தவுமைதிருக்கண்விழைந்துசாத்த
வறையாதிமணிமன்றுண்டநவிலும்பெருவாழ்வையடுத்துவாழ்வாம் 6

7 சிவகாமியம்மை.
ஆன்றதாயடைந்தசுகங்கருவுமடைதருமாலென்றறைகூற்றிற்கோர்
சான்றதாயெவ்வுயிருமடையின்பந்தானடையுந்தவாலின்பாக
நான்றதாய்மிளிர்சடிலநாதனியற்றானந்தநடனங்காணு
மீன்றதாய்சிவகாமவல்லியிருதாமரைத்தாளிறைஞ்சிவாழ்வாம் 7

8 தட்சணாமூர்த்தி.
வேறு.
ஆய்தருபொருளுமாராய்ந்தடிநிழலடங்குமாண்பும்
வேய்தருமலர்நேரங்கைவிரலிருகூற்றிற்றேற்றித்
தோய்தருமுனிவர்நால்வர்துதித்திடக்கல்லாலென்னும்
பாய்தருவடிவாழ்முக்கட்பரனடிக்கன்புசெய்வாம் 8

9 வயிரவர்.
புகர்படுசெருக்குமேவல்புன்மையென்றெவருந்தேறப்
பகர்மறைகமழாநிற்கும்பரிகலமங்கையேந்தி
நிகரின்மான்முதலோர்மேனிநெய்த்தோர்கொண்டொளிர்பொன்மாரி
நகரினிதமர்ந்துவாழும்வடுகனைநயந்துவாழ்வாம் 9

10 மருதவிருட்சம்.
வேறு.
பரவியநாதமூலமாப்பராரைபணைகிளைகொம்பொடுவளாரும்
விரவியபஞ்சசத்தியாத்தளிர்கள்வேதமாமலர்களாகமமாக்
கரவியலாதவாசமைந்தெழுத்தாக்காமருசுகோதயமதுவா
வுரவியன்ஞானசொரூபமேயாகியொளிர்தருமருதினைத்துதிப்பாம் 10

11 வலம்புரிவிநாயகர்.
வேறு.
ஓங்குபெருந்தனக்கினமாயுற்றமதவாரணங்களொருங்குதேம்பி
யேங்குதிறமுறவருத்திவணக்கிடுமங்குசபாசமென்னுநாமந்
தாங்குபடையிரண்டுமொருதனைவணங்கக்கரத்தேந்தித்தலைமைபூண்டு
தேங்குநெடுங்கருணைபொழிவலம்புரிக்குஞ்சரத்திருதாள்சென்னிசேர்ப்பாம் 11

12 சுப்பிரமணியர்.
வெயிலேறவிரிக்குமுடிவானவர்விண்குடியேறவெள்ளையானை
குயிலேறவரிபிரமர்புள்ளேறவம்மனைவேர்கூடாமாதர்
கயிலேறமிளர்கடக்கையேறமெய்யேறக்கவினார்தன்கை
யயிலேறவமர்ந்துசிறைமயிலேறும்பெருமானையடுத்துவாழ்வாம். 12

13 திருநந்திதேவர்.
வேறு.
வரைபொடிபடுக்கும்வச்சிரப்படையும்வலிசெழுதண்டவெம்படையும்
விரைசெலற்றிறத்தின்மாற்றலர்நடுங்கும்விளங்கொளித்திகிரியம்படையும்
புரையமைசமழ்ப்புப்பொருந்தவில்வீசிப்பொலியும்வேத்திரப்படைதாங்கி
யுரையமைகயிலைகாத்தருணந்தியொருவனைமருவியேத்தெடுப்பாம். 13

14 தமிழாசிரியர்.
வேறு.
பன்னிருதடங்கைச்செம்மல்பாற்சிவஞானம்பெற்றுப்
பன்னிருகதிருமொன்றாம்பான்மையின்விளங்கிநாளும்
பன்னிருதவமாணாக்கர்பழிச்சிடமலையமேவப்
பன்னிருசரணநாளுந்தலைக்கொடுபரவுவோமே. 14

15 திருஞானசம்பந்தசுவாமிகள்.
அறைவடமொழிநவின்றபாணினியகத்துநாண
விறையமர்மயிலைமூதூரிருந்தவோர்தாதுகொண்டே
நிறைதரவொராறுமேலுநிரப்புதென்மொழிநவின்ற
மறையவன்காழிவேந்தன்மலரடிக்கன்புசெய்வாம். 15

16 திருநாவுக்கரசுசுவாமிகள்.
நீற்றுமெய்ச்சிவனேயென்றுமவனினுநிறைந்தாரென்றுஞ்
சாற்றுதற்கியையத்தந்தைதன்பரியாயப்பேரு
ளீற்றுமெய்கெடுத்தொன்றிற்பன்னிரண்டன்மெய்கொடுத்துக்கூறத்
தோற்றுமெய்ப்புகழ்சானாவிற்கரசினைத்தொழுதுவாழ்வாம். 16

17 சுந்தரமூர்த்திசுவாமிகள்.
எண்ணியமறுமைப்பேறுமிம்மையேயுற்றதென்ன
மண்ணியவியங்கும்வெள்ளிமால்வரையெருத்தமேறி
யண்ணியவியங்காவெள்ளிமால்வரையடைந்துவாழும்
புண்ணியமூர்த்திநாவற்புலனைப்போற்றிவாழ்வாம். 17

18 மாணிக்கவாசக சுவாமிகள்.
மாயவனறியாப்பாதமலரவன்மனைவிமேனி
தோயவுமலரோன்காணாச்சுடர்முடியனையானீன்ற
பாயநீருடுத்தமங்கையிவரவுமுருகிப்பாடுந்
தூயவர்கமலபாதத்துணையுளத்திருத்திவாழ்வாம். 18

19 தண்டீசநாயனார்.
மலர்புரைகுடங்கைவெள்வாய்மழுப்படையொன்றுதாங்கி
யலர்பசுவோம்பியின்னுமுண்ணுதலாதியாவும்
பலர்புகழ்தனக்கென்றொன்றும்வேண்டிலாப்பரன்போற்கொண்ட
நலர்செறிசேய்ஞலூர்வாழ்பிள்ளையைநயத்தல்செய்வாம். 19

20 அறுபத்துமூன்றுநாயன்மார்.
வேறு.
பூன்றதன்மையில்புன்மையேநெஞ்சகத்
தேன்றவஞ்சகமாதியிருப்பினுந்
தோன்றவோர்புரஞ்சூழ்ந்துறவாழ்வரா
லான்றமேன்மையறுபத்துமூவரே. 20

21 பஞ்சாக்கரதேசிகர்.
பூதங்கடந்துபொறிகடந்துபுலனுங்கடந்துபுகல்காண
பேதங்கடந்துகாலமுதலனைத்துங்கடந்துபெருவிந்து
நாதங்கடந்துவளர்துறைசைநமச்சிவாயதேசிகன்பொற்
பாதங்கடந்துபற்றறுத்தானினிமேலல்லற்படலிலையே. 21

22 அம்பலவாண்தேசிகர்.
வேறு.
மருடருவினைகடேய்த்தோமாமலக்குறும்புமாய்த்தோ
மிருடருபிறப்பில்வாரோமென்றுமோரியல்பிற்றீரோ
மருடருதுறைசைமேவுமம்பலவாணதேவன்
பொருடருகமலத்தாளெந்தலைமிசைப்புனைந்தபோதே. 22

23 சித்தாந்தசைவர்கள்.
பண்ணியபுறமார்க்கங்கள்பாழ்படவொழித்துமேலாம்
புண்ணியவிபூதியக்கமணியொடைந்தெழுத்தும்போற்றி
யண்ணியசிவானந்தத்தேனிரம்பவுண்டமையாநிற்கும்
தண்ணியகுணசித்தாந்தசைவரைவணக்கஞ்செய்வாம். 23

24 ஆலப்பணிசெய்வோர்கள்.
அரவுநீர்ச்சடையானெங்களம்மையோடகிலமெல்லாம்
பரவுமாறமர்பொன்மாரிப்பதிப்பெருந்தளியிற்றொண்டின்
விரவுநான்மறையோராதியலகிடல்விழைந்தோரீறா
முரவுசேர்தவத்தர்யாருமுவந்தியாந்தொழுந்தேவாவார். 24


கடவுள் வாழ்த்து முற்றிற்று.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:04 am

அவையடக்கம்.

25 தரைபுகழ்வேதசாரமாம்விபூதிசாதனமேபொருளாக்கொண்
டுரைபுகழ்சிறந்ததேவிசாலப்பேருத்தமவணிகர்கள்யாரும்
வரைபுகழமைந்தகண்டதேவியிற்பொன்மாரிபெய்தருளியபெருமான்
குரைபுகழ்விளங்குதெய்வமான்மியமாய்க்குலவியபெருவட்மொழியை. 1

26 மொழிபெயர்த்தெடுத்துமதுரமிக்கொழுகிமுழங்கிமுப்புவனமும்போற்றப்
பழிதபுத்துயர்ந்துபரவுசெந்தமிழாற்பாடுகவென்றலுமனையார்
கழிசிறப்புவகைமீக்கொளப்புகன்றகட்டுரைமறுப்பதற்கஞ்சி
யுழிதரற்றகையமனமுடையானுமுரைசெயத்துணிந்தனன்மன்னோ. 2

27 வேறு.
இருவகையெழுத்துமல்லாவாய்தமுற்குறிலுமீற்று
மருவுவல்லெழுத்துங்கூடவன்னமாயெழுதல்போல
விருவகைவழக்குமல்லாவென்கவியிறைவன்சீரு
மருவுநற்பெரியோரன்புங்கூடலான்மதிக்கும்பாவாம். 3

28 வேறு.
மறைமுழுதுணர்ந்தசிறையுடைக்கழுகுவானகந்துருவியுமுணராப்
பிறைவளர்முடிமேற்சிறையிலாக்கழுகுபெய்தபூநிறைதரக்கொண்ட
விறையவன்செவிகற்றுணர்ந்தவர்மொழிபாவேற்றலிற்கற்றுணராத
குறையினேன்மொழியும்பாக்களுமேற்குங்குறித்துணர்பொருட்டிறமதனால். 4

29 மறையவனுணராமதிமுடிப்பெருமான்மருதமர்வனப்பெருங்கோயி
லுறைபவன்புராணமுரைக்குநீபொருளுக்கொக்குமாறுரைப்பைகொலென்னி
னிறையவனருளாவியன்றமட்டுரைப்பேனிமித்தகாரணனெனற்கந்த
விறையவன்குலாலனென்றுரைத்ததுதானெற்றுமற்றற்றுணர்ந்தவரே. 5


அவையடக்க முற்றிற்று.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:05 am

சிறப்புப்பாயிரம்.

30 இலங்குமதிநதிபொதியுஞ்சடிலத்தெம்மா
னினிதுமகிழ்ந்திருக்குமுயர்கண்டதேவித்
தலங்குலவுமான்மியநன்கெம்மனோர்க
டருக்கியுணவமுதுகுசெந்தமிழாற்செய்தா
னலங்குலவுஞானகலைமுதலாவெண்ணி
னவில்கலைகளுந்தெரிந்தநல்லோனெங்குந்
துலங்குபெரும்புகழ்படைத்தவொருமீனாட்சி
சுந்தரநாவலவனுயர்தோற்றத்தானே. 1

சிறப்புப்பாயிர முற்றிற்று.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:06 am

1. திருநாட்டுப்படலம். (31- 110)

31 பிறங்கருள்வடிவமானபெரியநாயகியாரோடு
மறங்கிளர்செம்பொன்மாரிபொழிந்தவரமர்ந்துமேவு
நிறங்குலாங்கண்டதேவிமுதற்பலநெருங்கக்கொண்ட
திறங்கமழ்பாண்டிநாட்டின்வளஞ்சிலசெப்பலுற்றாம். 1

32 வான்றவழிமயமென்னமாலயற்கரியனாய
தேன்றவழ்கடுக்கைவேணிச்செம்மலைமருகாப்பெற்ற
மீன்றவழ்வசத்தண்ணல்விளங்குவெண்குடைநன்னீழ
றான்றவழ்தரப்பொலிந்துதழைவதுபாண்டிநாடு. 2

33 திருந்துபல்லுயிர்க்குஞ்செம்பொற்றிருவடிநீழனல்கும்
பெருந்தகைவழுதியீன்றபேரெழிலணங்கைவேட்டுப்
பொருந்துபொன்முடிகவித்துப்பொலிகுடைநீழல்செய்ய
வருந்தவம்புரிந்ததம்மாவணிகெழுபாண்டிநாடு. 3

34 உமைநிகர்சிறப்புவாய்ந்தவுலோபாமுத்திரையோடன்பி
னமைசிவபெருமானன்னவகத்தியமுனிவர்கோமான்
கமைமிகுதமிழ்விரித்துக்கவினவீற்றிருக்குந்தெய்வச்
சிமையமால்வரையுடைத்தத்திருத்தகுபாண்டிநாடு. 4

35 பெரும்பொருள்வெறுப்பத்தோற்றும்பெற்றியான்மற்றைநாடும்
விரும்புறத்தக்கதாகிமெலிதராவிளையுணாளு
மரும்புபல்செல்வர்சான்றோரமைதரவுடையதாகி
யிரும்புகழ்படைத்துமேவுமேற்றஞ்சால்பாண்டிநாடு. 5

36 புனைபிருதுவிமுனைந்தாம்பூதகாரியமேயென்று
நினைதருபுவனமோம்பநிலவுமப்பூதமைந்து
ளினைதலிலொன்றுதெவ்வவெண்ணியப்புகழ்சால்பூதந்
தனைநிகருருவக்கொண்மூதழைவிசும்பாறுசென்று. 6

37 பொழிபுனன்மிகவும்வேண்டும்புகழ்ப்பணைக்காவல்பூண்ட
வழிமதுக்கற்பமாலைவானவன்றிசையிற்புக்குக்
கழிபுனல்வெறுப்பவுண்டுகரைந்தவைம்பூதந்தம்மு
ளழிவுசெயொன்றைநட்டாங்கதனுருக்கொண்டுமீண்டு. 7

38 நாட்டுமைம்பூதந்தம்முண்டுநிலைப்பூதமாயும்
வாட்டுவெங்கோடையோடுமருவியெவ்வுயிருந்தீய
மூட்டுதல்கருத்துட்கொண்டுமுதுசினங்கொடுமுழங்கிப்
பூட்டுதல்செய்யாச்சாபம்பொருக்கனவொன்றுவாங்கி. 8

39 அளவருந்தீட்டாவம்புமலங்குபமின்னெனும்பல்வாளும்
பளகரும்வலியிற்றாங்கிப்பரவிடங்கொடுக்குமாற்ற
லுளவொருபூதமாயவாகவப்பூமியுற்று
வளனமைமற்றோர்பூதமருவுவெப்பொழிந்ததென்ன. 9

40 திசைபுகழ்ந்தேத்துங்கண்டதேவியின்மருதநீழ
லசைவறவமர்ந்தவெங்கள்சிறையிலியண்ணன்முன்னம்
வசைதவிரரசற்காகப்பொழிந்தபொன்மாரிபோல
விசைநிமிர்ந்தெழுச்சிமேவப்பொழிந்தனவெங்கு மாதோ. 10



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:06 am

41 புலவர்கள்பெருமான்முன்னம்பொழிந்தபொன்மாரியாலே
நலவர்கள்புகழ்காங்கேயன்வெங்கலிநசித்தாற்போல
வலவர்களுவக்குங்கொண்மூவளவறப்பொழிந்தநீராற்
குலவரகணெருங்கும்பார்வெங்கோடைபோயொழிந்ததன்றே. 11

42 சிறையிலிநாதர்பெய்தசெம்பொன்மாமழையாலன்று
தறையகத்துள்ளவாயசிலவுயிர்தழைத்தவின்று
குறையறவாரியுண்டுகுயின்பொழிமழையினாலே
நிறைபலவுயிர்களெல்லாந்தழைத்தனநிரம்பினமண்மேல். 12

43 நிறத்துமின்னுடையதாகிக்கறுத்தமானேயம்பூண்டே
யறத்தினாலுலகமோம்புமென்பதையறையக்கேட்டோ
நிறத்துமின்னுடையதாகிக்கறுத்தமானேயம்பூண்டே
யறத்தினாலுலகமோம்புமென்பதையமையக்கண்டோம். 13

44 வான்றமிழ்பொதியக்குன்றமழைபொழிபெருநீரெங்குந்
தான்றவழ்கின்றதோற்றஞ்சந்தனஞ்செறியக்குன்ற
மான்றவெங்கோடைமாயவடர்ந்துமிக்கெழுகார்கால
மீன்றதண்குளிர்க்குடைந்துவெண்படாம்போர்த்ததேய்க்கும். 14

45 வரையகங்காந்தட்டீபம்வயக்கினகலிகைகானத்
தரையகமாம்பியோம்பித்தழைந்தனநாரையோடை
நிரையகம்பீலியூதிநிரைத்தனநெய்தல்பூத்த
திரையகம்பவளமுத்தஞ்சிந்தினமுகிற்புத்தேட்கே. 15

46 தலைமிசைவீழ்ந்தநன்னீரடியுறத்தள்ளிமீட்டுந்
தலைமிசைக்கொள்ளாக்குன்றந்ததையருவியினகைக்குந்
தலைமிசைவீழ்ந்தநன்னீரடியுறத்தள்ளிமீட்டுந்
தலைமிசைக்கொள்ளும்பல்பாதவஞ்செறிகானைமாதோ. 16

47 உண்டதுபோகவெஞ்சியுள்ளதைப்புறத்துவீசுந்
தண்டருச்செறிந்தகானந்தளவினானகையாநிற்கு
முண்டதுபோகவெஞ்சியுள்ளதைப்புறம்போக்காது
தண்டலில்சிறையினாக்குந்தடம்பணைவைப்பைமாதோ. 17

48 மழைபொழிநன்னீர்முற்றுஞ்சுவைகெடாவண்ணந்தேக்கி
விழைதரவுதவம்பண்ணைநாரையான்மிகநகைக்கு
மழைபொழிநன்னீர்முற்றுஞ்சுவைகெடும்வண்ணந்தேக்கி
விழைதரப்படாதாச்செய்யும்வீரையைநோக்கிமாதோ. 18

49 வெள்ளியமேகம்பச்சைவீரைநீர்மடுத்துத்தாமு
நள்ளியபசுமையந்தமேகநன்னீர்மடுத்துத்
துள்ளியவேனிலாலேவெள்ளெனுந்தோற்றமுற்ற
வொள்ளியபுவியும்புல்லாற்பசந்ததாலொருங்குமாதோ. 19

50 முன்றளையுண்டதின்னுமயர்த்திடாமுகில்களெல்லா
நன்றளைபாண்டிநாட்டிற்பொழிவளநவில்வார்யாரே
யென்றளையோங்கலாதியிருந்திணையைந்துண்முன்னங்
குன்றளைவளந்தொகுத்துக்கூறுதலுற்றாஞ்சில்ல. 20



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:07 am

குறிஞ்சி.

51 வேறு.
அமரமான்மியமுள்ளதென்றறிஞரேயறையுந்
தமரமோங்கிடப்பெருவளநனிகொடுதழையும்
பமரமார்தொடைப்பசுவருக்கத்தகப்படாத
குமரவேளினிதிருந்தரசாட்சிசெய்குறிஞ்சி. 21

52 கிளக்குந்தெய்வமான்மியமுடைத்தாதலிற்கிரிக
ளளக்கலாவளவரும்பொருள்வறப்பினுமளித்த
றுளக்கலாநிலைதோற்றமுற்கொடுகலைத்தொகைகள்
விளக்குமாரியர்க்கொப்பெனவிளங்குவமாதோ. 22

53 கருங்குடாவடியிறவுளர்காய்கணைக்கஞ்சி
மருங்கொர்கந்தரம்புக்கதுமற்றதுகதிர்கண்
டொருங்குவெந்தழல்பொழிதரவுள்ளலைந்துயங்கு
முருங்குதுன்பமெவ்விடஞ்சென்றுமுருக்கிடாரொத்தே. 23

54 வட்டமாகியபளிக்கறைநடுவொருவழுவை
யிட்டமேவுறத்துயிறல்கண்டிறவுளர்மடவார்
பட்டநீரலாற்கறைமதிப்பிரதிவிம்பந்தா
முட்டவானுயர்வரையகமுகிழ்க்குமோவென்பார். 24

55 தலைவரில்வழிமாரவேட்குறுசரந்தந்து
மலையுமாசெயலென்னெனமங்கையருதைப்ப
வுலைவில்பூப்பலமீளவுநல்குமொண்செயலை
நிலையதங்குணம்வருத்தினுநீக்குறார்நிகரும். 25

56 விளவுதாழ்வரைச்சாதல்வாய்விழைபிடிவாய்த்தே
னளவிறால்பறித்தூட்டுவமால்களிறதுகண்
டுளவுபாதியினறுமுறுத்துறவிழிசிவப்பார்
களவுமேற்கொடாவயிற்பயில்காளையரம்மா. 26

57 காந்தண்மெல்லரும்புடைதரக்கண்டமாமஞ்ஞை
பாந்தள்பைத்ததுபணமெனப்படர்ந்தெதிர்கொத்தி
யேய்ந்தநாணமுற்றுள்ளவாறரவெதிர்வரினு
மாய்ந்தசிந்தையினையமுற்றுழிதருமம்மா. 27

58 மறந்தவாவிழிமங்கையர்புணர்ச்சியைமதித்துச்
சிறந்தவாடவர்நள்ளிருட்முறியிடைச்செலும்போ
துறந்தசெம்மணிவிளக்கெடுத்திடையிடையுதவ
நிறந்தவாவரவீன்றிடுநெடுவரைச்சாரல். 28

59 அறையிடைத்தினைக்குரல்பலபரப்பியிட்டவைமேற்
கறையடிச்சிறுகன்றுகள்சுழன்றிடக்கண்டு
பிறைமருப்புலக்கையினரற்குழியவைபெய்து
குறையறுத்தவைத்தளாவியின்றேன்கொள்வார்பலரும். 29

60 ஐயவற்புதக்குமரவேள்வள்ளியோடமரச்
செய்யமாதவமுஞற்றியசிலம்புயர்சீர்மை
யெய்யவல்லவர்யாவரேபலவளமியைந்து
பெய்யவல்லகானத்திறஞ்சிறிதுபேசிடுவாம். 30



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:07 am

முல்லை.

61 பராவுகற்பொருமடந்தைபாற்பாற்றியதோட
மராவுமாறுளங்குறித்தளவிறந்தகற்பாகி
விராவுமேன்மையிற்பொலிதரவிருத்திசெய்தென்று
முராரிவாழ்வதற்கிடமெனத்திகழ்வதுமுல்லை. 31

62 எவ்விடங்களும்பசுந்துழாய்க்குலஞ்செறிந்திடலால்
வெவ்விடங்கொள்கட்பிருந்தையைப்புணர்சுகம்விராவ
வவ்விடங்குடிகொண்டனனலங்குநான்முகத்துக்
கவ்விடங்கொளப்பூத்தவோருந்தியங்கடவுள். 32

63 என்றுமால்சிவபத்தரிற்சிறந்தவனென்ப
தொன்றும்வாய்மையேகூவிளங்குருந்தொளிர்தூர்வை
கொன்றையானைந்துமல்கியவிடங்குடிகொண்டான்
பொன்றுமாறிலாப்பூசனைபுரிதரற்பொருட்டே. 33

64 ஒன்றுமுல்லையுந்தெய்வதபூமியென்றுரைத்தற்
கென்றுமோரிடையூறிலையேதுவென்னென்னிற்
றுன்றுதேவெலாமுறுப்புறச்சுமந்தபல்பசுவு
மன்றவண்டரும்வைகலேசாலுமால்மதியீர். 34

65 தூயவேய்ங்குழலோசையுந்தொகுநிரைக்கழுத்தின்
மேயமாமணியோசையுமேகம்வாய்விடுக்கும்
பாயவோசையுந்தனித்துறைபாவையருவப்பா
ராயநாயகர்தேர்வருமோசைகேட்டம்மா. 35

66 வளர்த்தநாந்தனித்தமர்வுழிமாரவேளெய்து
தளர்த்தவீசுவீரரும்பெனத்தையலார்நகைக்க
விளர்த்தமுல்லைகண்மீளவும்வீசுவவரும்பு
கிளர்த்மாதரார்கிளர்நகைக்கெதிர்நகைத்தென்ன. 36

67 மலர்ந்தபூம்புனமுருக்குகள்சூழ்ந்தனமருவ
வலர்ந்தபூவைகளதனடுப்பொலிதருங்காட்சி
கலந்தசெந்தழற்கோட்டையுள்வாணண்முற்கரையும்
வலந்தவாவிறற்றானவருறைவதுமானும். 37

68 பூத்துநின்றிடுபலாசுநஞ்சிவபிரான்புரையு
மேத்துகார்புறஞ்சூழ்ந்ததுகரியதளியையும்
வார்த்தசெய்யதேனத்தகுதோனின்றுவழியு
மார்த்தபுண்ணிழிநீரெனலாம்வனத்தம்மா. 38

69 வரகுஞ்சாமையுமவரையுந்துவரையுமலிந்து
விரவும்பல்வளமேதகப்பொலிவனவொருபாற்
பரவுதீஞ்சுவைப்பாறயிர்மோர்பகர்வெண்ணெ
யுரவுவாசநெயிவ்வளம்பொலிவனவொருபால். 39

70 கன்றுமாக்களுஞ்சேக்களும்பொலிபெருங்கானத்
தொன்றுமேன்மையையென்னுரைசெய்தனமுலவா
தென்றுநீர்வளமலிந்துகண்கவர்பொழிலியைந்து
துன்றுமென்மைசான்மருதத்தின்வளஞ்சிலசொல்வாம். 40



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:08 am

மருதம்

71 தருவுந்தேனுவுஞ்சங்கமும்பதுமமுமணியும்
வெருவும்வாள்வலித்தேவருமிடுபணிவிரும்பத்
திருவுநேர்கலாச்சசிமுலைச்சுவடுயர்திணிதோண்
மருவுமிந்திரன்காவலிற்பொலிவதுமருதம். 41

72 மருதமென்பதுந்தெய்வமான்மியமுளதென்று
கருதவோரிடையூறிலைகமழ்சுராபான
மொருவுறாதுசெய்வார்களங்குறைதலுமாம்பை
வெருவுறாதமர்நீர்மையுமேதகுசான்றாம். 42

73 கொங்குதங்கியசந்தமுங்காரகிற்குறடுந்
தங்குமால்கரிக்கோடுமாமயிற்பெருந்தழையு
மெங்குமாகவெள்வயிரஞ்செம்மணிபலவெடுத்துப்
பொங்குவெண்டிரைகொழித்துலாய்வரும்பெரும்பொருநை. 43

74 வலியவச்சிரமேந்திவெள்வாரணமூர்ந்து
பொலியநன்கரம்பைகடழீஇத்தானத்திற்பொருந்தி
யொலியகற்பகக்கானளாயுறுதலிற்பொருநை
கலியவாம்கழற்காலுடையிந்திரன்கடுக்கும். 44

75 ஓதிமஞ்செலுத்திடுதலாலொளிகெழுபணில
மாதியேந்துபுபூமணந்திடுதலாலலவன்
சோதிமாமணியரவஞ்சார்வேணிசூழ்தரலா
னீதிமூவருநிகர்ப்பதுநெடும்புனற்பொருநை. 45

76 அன்றுதாகநோயொருகுறடணிந்திடவார்த்து
வென்றுவந்ததுபற்பலதாகநோய்வீட்ட
வின்றுவந்ததோவென்றிடமிகப்பெருக்கெடுத்து
நன்றுபொங்கியார்த்தெழுத்ததுநலமலிவையை. 46

77 போந்துமேகம்வாய்மடுத்தொழித்திடுமெனல்பொய்யே
யேந்துமிந்நதிமடுத்துவரொழித்தநீரெடுத்து
மாந்துவிண்ணினிதாப்பெயுமெனவராவளர்கண்
மோந்துபொங்கியார்த்தெழுவதுமுதுமதுநதியே. 47

78 வாரியேழுமொன்றாயினுமதித்திடப்படுமோ
ரேரிபோல்வதோவெனப்புகல்பற்பலவேரி
மூரிநீர்கடைபோகவுமுதுகரையலைத்து
மாரியாரினுமறாதருள்வாமெனமலிந்த. 48

79 மொழிபல்லேரியினதிகளின்புனன்முதுமதகின்
வழிபுகுந்துபோய்வயலெலாம்புகுந்தனமறாத
பழிவிளைத்திடுமலமறப்பத்திசெய்தொழுகு
மிழிவிலாரிடத்தெம்பிரானருள்புகுந்தென்ன. 49

80 திரைபரந்தெழுதீம்புனல்வயறொறும்புகுத
நுரைபரந்தெழுகட்புனனுளையவாய்ப்புகுத்தி
வரைபரந்தெழுதோளுடைமள்ளருண்மகிழ்ந்து
விரைபரந்தெழுபூம்பணைபுகுந்தனர்விரைந்தே. 50



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:08 am

81 பிறங்குமாயவன்மனைவிதன்பேருடல்பிளப்ப
நிறங்குலாமவனொருபவத்துறுபடைநிறுத்தி
மறங்குலாவுதென்றிசையினானூர்திவன்பிடரி
னறங்குலாநுகம்பிணைத்தனர்மேழிகையணைத்தார். 51

82 வலக்கையுட்குறுமுட்டலைக்கோலொன்றுவாங்கி
விலக்கருங்கடுப்பமைதரவிளாப்பலகோலி
நலக்குறும்படைச்சால்செறிதரநகுபலவு
முலக்கவன்பகடுரப்பினருழுதனர்மாதோ. 52

83 முன்னநம்முருக்கொண்டவன்முருக்குவெம்படையே
யன்னவன்றிருமனையொடுநம்மையுமடர்ப்ப
தென்னறிந்திலமெனச்சிலமீனெழீஇத்துள்ளும்
பன்னருந்துயருற்றொளித்திடும்பலகூர்மம். 53

84 கரக்குமாந்தர்பாலிரவலர்முகமெனக்கவிழ்ந்த
புரக்குமாயவன்கண்ணிலும்பொலிபலகமலம்
பரக்குமின்னனவிங்ஙனமாகவும்பாரார்
தரக்குமஞ்சியவலியினாலுழுதொழில்சமைந்தார். 54

85 வடக்கிருந்துதென்றிசைசெலநடத்தியும்வயங்கு
குடக்கிருந்துகீழ்த்திசைசெலநடத்தியுங்குளிர்செ
யடக்குபுன்முதலியாவையுமழிந்துசேறாகிக்
கிடக்கும்வண்ணமேயுழுதனர்கெழுவலிமள்ளர். 55

86 செறுவின்சீருறவரம்புருக்குலைந்ததுதேர்ந்து
மறுவில்செய்ப்புகழ்நுமக்குறாதெனமறுப்பார்போற்
பெறுவலத்துயர்மள்ளர்கள்பேணுகங்கரிந்து
கொறுகொறுத்துஞெண்டுழன்றிடக்குலையுயர்த்தினரால். 56

87 ஓதுவேதியர்முதலியோர்நடுநிலையுறுதற்
கேதுவாஞ்செறுநடுநிலையெனுஞ்சமமெய்தத்
தீதுதீர்பரம்பேறுபுமள்ளர்தாஞ்செலுத்தக்
கோதுதீர்படிமக்கலம்போற்சமங்கொண்ட. 57

88 மேகவாகனனாகியவேந்தனைத்தொழுது
பாகமார்தரச்சமைந்தநென்முளைகள்பற்பலவும்
வேகமாய்விதைத்துறவழிநாட்புனல்வீழ்த்திக்
காகமாதிகளுறாவகையோப்பினர்களமர். 58

89 வெள்ளியங்குரித்தெனப்பொலிமுளையெலாம்விழைநீ
ரள்ளியுண்டுயர்மரகதமங்குரித்தென்னப்
புள்ளிதீர்பசப்புற்றதுபொற்புறத்தளிர்த்தாங்
கொள்ளிதாலெனத்தளிர்த்தனபெரும்பணையொருங்கு. 59

90 உற்றகேவலத்துயிர்களைப்புவனங்களொருங்கு
பற்றவற்றதோர்பருவத்துவிடுபராபரன்போ
லற்றமற்றபைம்பயிர்களைப்பருவநன்கறிந்து
கொற்றமள்ளர்கள்கொண்டுபோய்வயறொறுநடுவார். 60



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:09 am

91 நட்டபைம்பயிர்நன்னிலந்தாழ்ந்தெழுநயமே
யொட்டமுன்புதாழ்ந்தெழுந்துபின்வளர்வுழியூறா
வட்டவாய்மலர்தாமரைகுமுதங்கண்மலிந்த
பட்டவாயிறங்குணங்களும்பாற்றுலோபம்போல். 61

92 எறிதருங்களையெறிதரும்பருவமீதென்று
செறிதரும்புயவலியுடைக்களமர்கள்செப்பக்
குறிதருங்கருங்கயல்விழியுழத்தியர்குழுமி
மறிதரும்புனல்வயலிடையனமெனப்புகந்தார். 62

93 அங்கண்மேவியவுழத்தியரளவையோராம்ப
லங்கண்வாங்கயல்வெண்டரங்கங்களேயாம்ப
லங்கண்ஞெண்டுநாற்காலிலோர்கானடையாம்ப
லங்கண்மாரிகைபொழிதரக்களைவதுமாம்பல். 63

94 கண்ணுமாற்றுக்காலாட்டியர்கொங்கைகோகனகங்
கண்ணுமற்றவர்குழல்பொழிமதுவுங்கோகனகங்
கண்ணும்வாண்மெய்யினொளியுமற்றையகோகனகங்
கண்ணுமாதெனத்தடிவதுமதுப்பெய்கோகனகம். 64

95 வாயுரைப்பதுவள்ளைகைதடிவதும்வள்ளை
யாயகையணிநகுவளையழிப்பனகுவளை
யோயமாய்ப்பதுசைவலமிசைவலமுடைய
பாயமென்பணையகம்புகூஉத்தொழில்செய்பாவையரே. 65

96 இன்னவாறுபல்களைகளைந்தெழுதலுமுலோப
மென்னவோதுதலொழிதரக்குணந்தடித்தென்னப்
பன்னவாம்பயிர்முழுமையுந்தடித்துறப்பணைத்துப்
பின்னர்வான்சதிரீன்றனபேருலகுவப்ப. 66

97 உம்பல்வாய்கிழித்தெழுமரப்பெனக்கதிரொருங்கு
நம்புபைம்பயிர்மடல்கிழித்தெழுந்துநன்மதியம்
பம்பவாக்கியகிரணத்தாலினியபால்பற்றி
யம்பர்முற்றுறவிளைந்துசாய்ந்தனபணையகத்து. 67

98 பிறையுருப்புனையிரும்புகைக்கொடுபெருங்களமர்
முறையறுத்தவைமுழுமையும்வரிந்திருங்களத்து
நிறைதலைச்சுமையாக்கொடுசென்றுபோய்நிரப்பிச்
சிறைகுலைத்துமேற்கடாம்பலமிதித்திடச்செய்வார். 68

99 சங்கநின்றும்வெண்டாளம்வேறெடுத்தெனவைநின்
றங்களத்தடுசெந்நெல்வேறெடுத்தினிதாகத்
துங்கமார்தருவளியெதிர்தூற்றினர்குவித்தார்
சிங்கலில்லதோர்காலெடுத்தளந்தனர்சிறப்ப. 69

100 இறைவன்பாகமுமேனையர்க்கீவதுமீந்து
குறையிலெஞ்சியயாவையுங்கொண்டுபோய்மனைவாய்
நிறையவிட்டுவைத்தைம்பலத்தாற்றையுநிலைசெய்
மிறையிலாக்குடியெங்கணுநிறைந்துளமேன்மேல். 70



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக