புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_m10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10 
100 Posts - 48%
heezulia
வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_m10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_m10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_m10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_m10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10 
7 Posts - 3%
prajai
வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_m10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10 
3 Posts - 1%
Barushree
வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_m10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_m10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_m10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_m10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_m10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10 
227 Posts - 51%
heezulia
வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_m10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_m10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_m10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_m10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10 
18 Posts - 4%
prajai
வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_m10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_m10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_m10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10 
2 Posts - 0%
Barushree
வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_m10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_m10வாக்காளர்களே சிந்திப்பீர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாக்காளர்களே சிந்திப்பீர்


   
   
enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010
http://enganeshan.blogspot.in/

Postenganeshan Fri Apr 08, 2011 3:42 pm

இப்போதெல்லாம் தேர்தலில் ஜெயிப்பது எந்தக் கட்சியென்றாலும் தோற்பது பொது மக்கள் தான் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. யாரிடம் தோற்பது என்பதை தீர்மானிக்கும் உரிமை தான் வாக்காளர்களுக்கு தரப்பட்டிருக்கிறது. ஜனநாயகம் என்பதன் உண்மையான பொருளை பெரும்பாலானோர் உணராததால் தான் இந்த கவலைக்கிடமான நிலை. சுதந்திரத்திற்கு முன் நெஞ்சு பொறுக்குதிலையே என்று பாரதி மனம் பதைத்துப் பாடிய வரிகள் சுதந்திரம் வாங்கி எழுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் நம் மக்கள் விஷயத்தில் பொருத்தமாகவே இருக்கிறது.

தந்த பொருளைக் கொண்டே- ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்
அந்த அரசியலை இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார்

என்று பாரதி பாடியது போல அரசியல்வாதிகள் என்றால் வானளவு அதிகாரம் கொண்டவர்களாக நினைக்கும் மனோபாவம் பலருக்கும் உள்ளது. தாங்கள் தேர்ந்தெடுத்தவர்கள் என்கிற உண்மை மறந்து தங்களை ஆளும் தலைவர்கள் என்ற எண்ணத்தில் எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் தன்மை அடிமட்ட மக்களிடம் அதிகமாக இருக்கிறது. இந்த பயத்திற்கு இணையாக ஞாபகமறதி என்னும் சாபக்கேடும் மக்களிடம் காணப்படுவதால் தான் மோசமான அரசியல்வாதிகள் தொடர்ந்து வெற்றி பெற்று மக்கள் தாங்கள் பெற வேண்டிய எதையும் பெறாமல் தோல்வி அடைகிறார்கள். அரசியல்வாதிகள் மக்களுக்குச் சேர வேண்டிய எல்லாச் செல்வங்களையும் தங்கள் தனிப்பட்ட கஜானாக்களுக்கு கொண்டு சேர்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

லஞ்சம், ஊழல், அராஜகம் எல்லாம் இன்று தலைவிரித்தாடும் போதும் பெரும்பாலான பொதுமக்கள் எல்லாம் விதியென்று அவற்றை விரக்தியுடன் ஏற்றுக் கொள்கிறார்கள். 'ரௌத்திரம் பழகு' என்றான் பாரதி. இந்த தேசத்தில் ஒன்றுமில்லாத அற்ப விஷயங்களுக்கெல்லாம் கோபப்படும் மக்களுக்கு இது போன்ற முக்கிய விஷயங்களுக்கு கோபம் கொஞ்சமும் வருவதில்லை. அதனால் தான் எதையும் செய்யலாம், நம்மை யாரும் ஒன்றும் செய்து விடமுடியாது என்ற அபார தைரியம் அரசியல்வாதிகளுக்கு வந்திருக்கிறது.

இது தான் இன்றைய சூழ்நிலை வாக்காளப் பொது மக்களே!

தேர்தல் என்பது ஒன்று தான் நமக்குக் கிடைக்கும் அருமையான சந்தர்ப்பம். அந்த ஒரு நேரத்தில் தான் அரசியல்வாதிகள் நம்மைத் தேடி வருகிறார்கள். பின் வரும் ஐந்தாண்டு காலங்கள் நாம் அவர்களைத் தேடி ஓட வேண்டியிருக்கும். அப்படி ஓடித் தேடினாலும் எளிதில் கிடைக்க மாட்டார்கள். எனவே நாம் இந்த சந்தர்ப்பத்தைக் கோட்டை விடாமல் தெளிவாக இருக்க வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டும்.

நம் வீட்டில் வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என்று வைத்துக் கொள்வோ. எப்படிப்பட்டவரை தேர்ந்தெடுப்போம். "என்னமாய் பேசறான்" என்று பேச்சைப் பார்த்து தேர்ந்தெடுப்போமா, நன்றாக நமக்கு உழைப்பவனைத் தேர்ந்தெடுப்போமா? அவனுக்குத் தகுதி இருக்கிறதா, அவன் பழைய சரித்திரம் என்ன என்று பார்ப்போமா, பார்க்க மாட்டோமா? நம் வீட்டு விஷயத்தில் அறிவுபூர்வமாகச் செயல்படும் நாம் நம் நாட்டு விஷயத்தில் மட்டும் ஏன் அப்படி செயல்படுவதில்லை? பேச்சைப் பார்க்கிறோம், ஜாதியைப் பார்க்கிறோம், மதத்தைப் பார்க்கிறோம் அந்த மனிதர் நன்றாக, நாணயமாக நாட்டு மக்களுக்காக உழைப்பாரா என்று மட்டும் ஏன் பார்க்க மறக்கிறோம்?

வாக்காளர்களே, எங்கள் தாத்தா காலம் முதல் இந்தக் கட்சிக்குத் தான் ஓட்டு போட்டார்கள் என்றும் இனி நானும் இப்படித்தான் போடுவேன் என்றும் சொல்லும் பைத்தியக்காரத்தனம் உங்களிடம் இருந்தால் அதை முதலில் விட்டொழியுங்கள். இந்த அடிமை சாசனம் நல்லதல்ல.

நான் ஒருவன் ஓட்டுப் போட்டு என்ன ஆகப்போகிறது என்று நினைக்காதீர்கள். உங்களைப் போல் நினைத்து ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுப் போடாதவர்கள் எண்ணிக்கை பெரும்பாலான வெற்றி வேட்பாளர்கள் பெறும் ஓட்டுகளின் எண்ணிக்கையை விட அதிகம் என்று புள்ளி விவரம் கூறுகிறது. உங்களைப் போன்றவர்கள் ஓட்டுப் போட்டிருந்தால் எத்தனையோ தேர்தல்களில் நாட்டின் தலைவிதியையே மாற்றியிருக்கலாம்.

ஒரு ஆட்சியை மதிப்பிடுகையில் கடைசி சில மாதங்களை மட்டும் பார்க்காமல் ஆட்சிக்காலம் முழுவதையும் பரிசீலியுங்கள்.

இலவசமாக யார் என்ன தருகிறார்கள் என்று பிச்சைக்காரர்களாக கணக்குப் போடாமல் யாரிடமும் கையேந்தாமல் வாழும் வண்ணம் உங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த அவர்கள் எதாவது செய்வார்களா என்று பார்த்து ஓட்டுப் போடுங்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக பேச்சைக் கொண்டோ, தேர்தல் அறிக்கைகள் கொண்டோ தீர்மானிக்காமல் அவர்களது முந்தைய செயல்பாடுகள், சாதனைகளை வைத்து தீர்மானியுங்கள். எல்லாருமே மோசமானவர்கள், இதில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற நிலை வந்தால் கூட இருப்பதில் குறைந்த மோசத்தைத் தேர்ந்தெடுங்கள். அதன் மூலம் மோசமான விளைவுகளையும் குறைக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- என்.கணேசன்
http://enganeshan.blogspot.com/

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 08, 2011 7:54 pm

சூப்பருங்க சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Fri Apr 08, 2011 8:36 pm

சிந்திக்க நேரமில்லை சந்திக்கத்தான் நேரமிருக்கிறது பணம் வாங்க வாக்காளர்களுக்கு

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Fri Apr 08, 2011 10:42 pm

anbulakshmi.vijayakumar wrote:சிந்திக்க நேரமில்லை சந்திக்கத்தான் நேரமிருக்கிறது பணம் வாங்க வாக்காளர்களுக்கு



மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக