புதிய பதிவுகள்
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10 
73 Posts - 60%
heezulia
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10 
67 Posts - 60%
heezulia
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10 
29 Posts - 26%
mohamed nizamudeen
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu 27 Jan 2011 - 15:51

ஒரு தேசிய இனம் அடிமைப்பட்டிருக்கிறதா அல்லது ஆளும் இறையாண்மை பெற்றிருக்கிறதா என்பதை அதன் தாய்மொழி பெற்றிருக்கும் தகுதியை வைத்து அறிந்து கொள்ளலாம்.

அனைத்து நிலையிலும் அலுவல் மொழியாக அவ்வினத்தின் மொழி இருந்தால் அந்தத் தேசிய இனம் தன்னைத் தானே ஆண்டு கொள்கிறது என்று பொருள். அயல்மொழிதான் முதன்மை அலுவல் மொழியாக இருக்கும், அந்த அயல்மொழியின் தலைமைக்குக் கீழ்பட்டு சொந்த மொழி சிற்சில இடங்களில் பணிவாகத் தலைகாட்டும் என்றால் அந்த இனம் அடிமைப்பட்டிருக்கிறது என்று பொருள்.

இந்தியாவெங்கும் இந்தி கோலோச்சுகிறது. அது கொல்லைப்புற வழியாகக் கோலோச்சவில்லை. இறையாண்மையுள்ள ஓர் அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் படி அது ஆட்சி புரிகிறது. தமிழ்? அந்த அரசமைப்புச் சட்டத்தின் கொல்லைப்புறத்தில் – பின்னிணைப்பு என்ற பெயரில் எட்டாவது அட்டவணையில் மொட்டையாக “மொழிகள்” என்ற தலைப்பின் கீழ் அகரவரிசைப்படி 16ஆவது இடத்தில் செருகப்பட்டுள்ளது.

அரசமைப்பு விதி 343(1)இன் படி அனைத்து இந்தியாவுக்கும் இந்தி ஆட்சி மொழி. தற்காலிகமாக ஆங்கிலம் கூடுதல் ஆட்சி மொழியாக இருக்கும்.[343(3)

இந்திய அரசு நிறுவனங்களில் ஆங்கிலம் பயன்படுத்துவதை எந்த அளவு முடியுமோ அந்த அளவு குறைக்க வேண்டும் என்கிறது அந்தச் சட்டம். [344-2(3)] இதன் பொருள் இந்தியை எந்த அளவு கூடுதலாகத் திணிக்க முடியுமோ அந்த அளவு திணிக்க வேண்டும் என்பதாகும்.

எட்டாவது அட்டவணையில் உள்ள மாநில அலுவல் மொழிகளை உயர்நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாகப் பயன்படுத்த வழி கூரும் விதி 348(2). அதிலேயும் இந்திக்குத்தான் தனிச்சிறப்புரிமை. அந்த விதி இவ்வாறு கூறுகிறது:

“348(2) மேலே உள்ள உட்பிரிவு (a)யின் கிளை(1)இல் யாது கூறப்பட்டிருந்தாலும் ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் இந்தி அல்லது ஏதாவதொரு மாநில அலுவல் மொழியை அம்மொழி பேசும் மாநிலத்தில் அமைந்துள்ள உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்த அதிகாரம் வழங்கலாம்.
ஆனால் உயர்நீதிமன்றத் தீர்ப்புகள், ஆணைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்”.


இவ்விதியைப் புரிந்து கொள்ள இவ்வாறு விளக்கலாம்.

குடியரசுத் தலைவரின் முன் அனுமதி பெற்று, தமிழக ஆளுநர், தமிழக உயர்நீதிமன்றத்தில் இந்தி மொழியை அல்லது தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்கலாம்.

இந்த விதியின்படி, தமிழக உயர்நீதிமன்றத்தில் இந்தியை வழக்காடு மொழியாக அனுமதிக்குமாறு தமிழக அரசு கோரியிருந்தால் உடனடியாக அனுமதி வழக்கியிருக்கும் இந்திய அரசு. தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கேட்டதால்தான் இந்திய அரசு மறுத்துவிட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டம் பல்வேறு சூழ்ச்சிகளையும் மறைமுகச் சதிகளையும் உள்ளடக்கியிருக்கிறது. விதி 348(2ஐ மேம்போக்காகப் பார்த்தால், அது மாநில மொழிகளை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்கிட வாய்ப்பளித்திருப்பது போல் தோன்றும். ஆனால் அவ்விதியிலும் இந்திக்குத்தான் முன்னுரிமை. இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியும் ஒரு மாநில மொழிதான். இந்தி அல்லது மாநில மொழி என்று போட வேண்டிய தேவையே இல்லை.

மாநில மொழிக்கு வாய்ப்பளிப்பது போல் காட்டிவிட்டு, இந்தியை இந்தி பேசாத மாநிலத்திலும் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக ஆக்கிட உறுதி அளிப்பதே 348(2) விதியின் உள்நோக்கம்.

அதனால்தான் பீகார், உத்திரபிரதேசம், மத்தியப் பிரதேசம், இராயத்தான் மாநிலங்களில் இதே 348(2) விதியைப் பயன்படுத்தி உயர்நீதிமன்ற மொழியாக இந்தியைச் செயல்படுத்திவிட்டது இந்திய அரசு.

இந்த விதியைப் பயன்படுத்தி தமிழக அரசு 2006ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி ஆக்கிடக்கோரி இந்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்பியது. ஓராண்டுக்குப் பின் அம்மனுவை இந்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. குடியரசுத் தலைவராக அப்போதிருந்த முனைவர் அப்துல் கலாம் பார்வைக்கே அந்த விண்ணப்பத்தை அனுப்பாமல் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

குடியரசுத் தலைவர் அம்மனுவைத் திருப்பி அனுப்பிவிட்டதாக இந்திய அரசு அதிகாரிகள் அறிவித்தனர். அச்செய்தியை ஏடுகளில் பார்த்த அப்துல்கலாம் தம் பார்வைக்கே அம்மனு வரவில்லை என்று தம் செயலாளர் மூலம் அறிக்கை கொடுத்தார்.

மீண்டும் தமிழக அரசு விண்ணப்பம் போட்டுள்ளது. “மேற்கு வங்காளத்தில் வங்க மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகக் கேட்டார்கள். அக்கோரிக்கையை ஏற்கவில்லை. எனவே தமிழகத்தின் கோரிக்கையையும் ஏற்க முடியாது” என்று இந்திய அரசு கூறுயுள்ளது.

வங்க மொழியை ஏன் ஏற்கவில்லை? அதற்கான அரசமைப்புச் சட்டக் காரணம் என்ன? மேற்கு வங்கத்தைக் காரணம் காட்டி தமிழகத்திற்கு மறுப்பதற்கு அரசமைப்பில் ஏதாவது விதி இருக்கிறதா? இல்லை; இந்திய ஆளும் வர்க்கத்தின் சூதுதான் இருக்கிறது; ஆதிக்க இனத்திமிர்தான் இருக்கிறது.

இதே 348(2) விதியைப் பயன்படுத்தித்தானே மேற்சொன்ன நான்கு மாநிலங்களில் உயர்நீதிமன்ற வழக்காடு மொழி என்ற தகுதியை இந்திக்கு வழங்கியிருக்கிறார்கள்.

உயர்நிதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கோரி மதுரையில் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் ஆறு வழக்கறிஞ்சர்கள் 9.6.2010 முதல் சாகும் வரை பட்டினிப் போராட்டம் தொடங்கினர். அக்கோரிக்கையை ஆதரித்து சென்னையிலும் ஏழு வழக்கறிஞர்கள் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் தொடங்கினர். இரு இடங்களிலும் வழக்கறிஞர்கள் தளைப்படுத்தப்பட்டனர். சிறையிலும் உண்ணாப் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர். 21.06.2010 முதல் தமிழில் வழக்காட வாய்மொழி வாக்குறுதி அளித்தார் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு.இக்பால்.

ஆனால் இந்திய அரசு அசையவில்லை. தமிழக முதல்வர் வெற்று வேண்டுகோளோடு தம் கடமையை முடித்துக் கொண்டார். தமிழக அரசு அனுப்பிய விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்று தோண்டி துருவி செய்திகள் வெளியிட்டன ஏடுகள்.

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதி கோரிய தமிழக அரசின் விண்ணப்பம் முதலில் அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, கே.யி.பாலகிருட்டிணன்(தற்போது கையூட்டு மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக விசாரணையில் இருப்பவர்) கருத்துரைக்கு அனுப்பப்பட்டது. அவர், மாநில மொழியில்(தமிழில்) வழக்காட அனுமதிக்கக் கூடாது. எல்லா மாநிலமும் அதே போல் உரிமை கேட்கும். அப்படிச் செய்தால் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தாகும். இந்தியா முழுவதும் நீதித்துறை ஒரே சீராக இருப்பதைப் பாதிக்கும் என்று கூறினார்.

பிறகு, சட்ட அமைச்சகத்திலிருந்து உள்துறை அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பியுள்ளார்கள்.

தலைமை நீதிபதியின் கருத்தைக் கேட்க வேண்டிய தேவையே இல்லை. அதே போல் உள்துறை அமைச்சகத்திற்கும் விதி 348(2)க்கும் என்ன தொடர்பிருக்கிறது? ஒன்றுமில்லை.

காலம் கடத்தி, கைவிரிப்பதற்காக ஏகாதிபத்திய மனங்கொண்ட ஆட்சியாளர்கள் ‘அடிமைகளின் மொழியான தமிழுக்கு அரியணையா’ என்ற எண்ணத்தில் சூழ்ச்சி செய்கிறார்கள். சுற்றி அடிக்கிறார்கள்.

இதே ஏகாதிபத்திய அரசு இந்தியில் அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரம் படைத்த மொழியாக்கத்தை வெளியிட 1988இல் விதி 394A என்ற சட்டதிருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. இவ்விதியின் படி இன்றைக்கே உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் இந்தியில் தீர்ப்பு எழுதினால் அதைச் செல்லாது என்று கூற முடியாது.

தமிழினம் தில்லிக்கு காலணியாக அடிமைப்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றுகள்தாம் மேற்சொன்னவை அனைத்தும்.

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கடும் மொழியாக, தீர்ப்பெழுதும் மொழியாகக் கொண்டு வரத் தொடர்ந்து போராடுவோம். அதே வேளை இந்திய ஏகாதிபத்தியத்தின் காலணியத் தளைகளிலிருந்து தமிழ்த் தேசம் விடுபடுவதற்கான போராட்டத்தை விரைவு படுத்துவோம்!


nan.thiru இந்த பதிவை விரும்பியுள்ளார்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu 27 Jan 2011 - 15:55

முதலில் இந்தியன் பிறகே தமிழன் ஆனால் அதர்க்காக அநியாயம் நடப்பதி பொறுக்க முடியாது அதே சமயம் இந்தியாவை உடைப்பதை ஏற்கவும் முடியாது

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu 27 Jan 2011 - 16:08

முதலில் தமிழன் பின்பும் தமிழன். தமிழ் இனப் போராட்ட வரலாறு என்ற எனது பதிவைப் படியுங்கள். உங்களுக்கேப் புரியும். தமிழ்நாடு இந்தியாவிற்கு அடிமையாக்கப்பட்டுள்ளது என்பது விளங்கும்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 27 Jan 2011 - 16:10

அருமையான பகிர்வு அதுக்கு மணி கொடுத்ததும் நச் பதில்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu 27 Jan 2011 - 16:21

எந்த மாநிலத்துலயுமே அந்த மாநில மொழி வழக்காடு மொழி இல்லையே.
மணி சொன்னது போல முதலில் இந்தியன்,பின்தான் தமிழன்.

"அதே வேளை இந்திய ஏகாதிபத்தியத்தின் காலணியத் தளைகளிலிருந்து தமிழ்த் தேசம் விடுபடுவதற்கான போராட்டத்தை விரைவு படுத்துவோம்!"

கோடிட்ட வரிகள் நீங்க கொடுத்த பதிவுகளில் இருந்தது.இதன் மூலம் என்ன சொல்ல வரிங்க? இலங்கை மாதிரி இங்கயும் அடிச்சுக்கிட்டு சாகனும்ன்னு சொல்ல வரிங்க அப்படித்தானே.
திரும்பவும் இந்த வார்த்தைய சொல்றதுக்கு மன்னிக்கனும்.
இந்தியாவில் பிறந்ததால் நீங்க இந்தியர் குடியுரிமை உள்ளவர்,ஆனா இந்தியர் இல்லை.




ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Uஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Dஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Aஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Yஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Aஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Sஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Uஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Dஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... Hஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... A
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu 27 Jan 2011 - 16:41

நீங்கள் அனைவரும் படித்த பள்ளிப் பாடங்களை மறக்காமல் உள்ளீர்கள் என்பது தெளிவாக விளங்குகிறது. அதற்கு அப்பால் உண்மைகளை தேடுங்கள். உண்மை எதுவென்று உங்களுக்கேப் புரியும். என்னிடம் விதண்டாவாதம் செய்வதை விடுத்து நீங்களே தேடுங்கள்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu 27 Jan 2011 - 16:42

உங்கள் மொழி உணர்வுதான் சார் அடுத்த மாநிலத்துக்கு தண்ணி தராம நீக்குது இந்தியான்னு நினைச்சா இப்படி ஆகுமா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 27 Jan 2011 - 17:05

maniajith007 wrote:முதலில் இந்தியன் பிறகே தமிழன் ஆனால் அதர்க்காக அநியாயம் நடப்பதி பொறுக்க முடியாது அதே சமயம் இந்தியாவை உடைப்பதை ஏற்கவும் முடியாது

நானும் மணியை வழி மொழிகிறேன் நன்றி நன்றி நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu 27 Jan 2011 - 18:13

தமிழ் ஈழம் இப்போது தமிழ் தேசம் ஆக மாறுகிறது .எங்கேயோ இப்படி மிக பெரிய தவறுகள் நிகழ்கின்றன . சிறு அடி பட்ட உடம்பில் கட்டூ போடுவதற்கு பதில் மொத்த உடலையும் கூறு போட சொல்கிறீர்கள்

ராம்





avatar
Guest
Guest

PostGuest Thu 27 Jan 2011 - 19:55

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் ..... முடிந்தால் தடுத்து பாருங்களேன்....

தாயக தமிழர்கள் கொல்ல படுவதை பார்த பிறகும் .... இந்தியா அரசிடம் தமிழகம் அடிமயாய் உள்ளதாய் மறுக்கீர்கள்,....

உங்களுக்கு எப்படி சொல்லி அல்லது செய்து புரியவைபது... சகோதர சகோதரிகளே ...

Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக