புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10 
74 Posts - 44%
heezulia
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10 
6 Posts - 4%
prajai
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10 
10 Posts - 5%
prajai
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10 
8 Posts - 4%
Jenila
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....


   
   

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Jan 27, 2011 2:21 pm

First topic message reminder :

ஒரு தேசிய இனம் அடிமைப்பட்டிருக்கிறதா அல்லது ஆளும் இறையாண்மை பெற்றிருக்கிறதா என்பதை அதன் தாய்மொழி பெற்றிருக்கும் தகுதியை வைத்து அறிந்து கொள்ளலாம்.

அனைத்து நிலையிலும் அலுவல் மொழியாக அவ்வினத்தின் மொழி இருந்தால் அந்தத் தேசிய இனம் தன்னைத் தானே ஆண்டு கொள்கிறது என்று பொருள். அயல்மொழிதான் முதன்மை அலுவல் மொழியாக இருக்கும், அந்த அயல்மொழியின் தலைமைக்குக் கீழ்பட்டு சொந்த மொழி சிற்சில இடங்களில் பணிவாகத் தலைகாட்டும் என்றால் அந்த இனம் அடிமைப்பட்டிருக்கிறது என்று பொருள்.

இந்தியாவெங்கும் இந்தி கோலோச்சுகிறது. அது கொல்லைப்புற வழியாகக் கோலோச்சவில்லை. இறையாண்மையுள்ள ஓர் அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் படி அது ஆட்சி புரிகிறது. தமிழ்? அந்த அரசமைப்புச் சட்டத்தின் கொல்லைப்புறத்தில் – பின்னிணைப்பு என்ற பெயரில் எட்டாவது அட்டவணையில் மொட்டையாக “மொழிகள்” என்ற தலைப்பின் கீழ் அகரவரிசைப்படி 16ஆவது இடத்தில் செருகப்பட்டுள்ளது.

அரசமைப்பு விதி 343(1)இன் படி அனைத்து இந்தியாவுக்கும் இந்தி ஆட்சி மொழி. தற்காலிகமாக ஆங்கிலம் கூடுதல் ஆட்சி மொழியாக இருக்கும்.[343(3)

இந்திய அரசு நிறுவனங்களில் ஆங்கிலம் பயன்படுத்துவதை எந்த அளவு முடியுமோ அந்த அளவு குறைக்க வேண்டும் என்கிறது அந்தச் சட்டம். [344-2(3)] இதன் பொருள் இந்தியை எந்த அளவு கூடுதலாகத் திணிக்க முடியுமோ அந்த அளவு திணிக்க வேண்டும் என்பதாகும்.

எட்டாவது அட்டவணையில் உள்ள மாநில அலுவல் மொழிகளை உயர்நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாகப் பயன்படுத்த வழி கூரும் விதி 348(2). அதிலேயும் இந்திக்குத்தான் தனிச்சிறப்புரிமை. அந்த விதி இவ்வாறு கூறுகிறது:

“348(2) மேலே உள்ள உட்பிரிவு (a)யின் கிளை(1)இல் யாது கூறப்பட்டிருந்தாலும் ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் இந்தி அல்லது ஏதாவதொரு மாநில அலுவல் மொழியை அம்மொழி பேசும் மாநிலத்தில் அமைந்துள்ள உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்த அதிகாரம் வழங்கலாம்.
ஆனால் உயர்நீதிமன்றத் தீர்ப்புகள், ஆணைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்”.


இவ்விதியைப் புரிந்து கொள்ள இவ்வாறு விளக்கலாம்.

குடியரசுத் தலைவரின் முன் அனுமதி பெற்று, தமிழக ஆளுநர், தமிழக உயர்நீதிமன்றத்தில் இந்தி மொழியை அல்லது தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்கலாம்.

இந்த விதியின்படி, தமிழக உயர்நீதிமன்றத்தில் இந்தியை வழக்காடு மொழியாக அனுமதிக்குமாறு தமிழக அரசு கோரியிருந்தால் உடனடியாக அனுமதி வழக்கியிருக்கும் இந்திய அரசு. தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கேட்டதால்தான் இந்திய அரசு மறுத்துவிட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டம் பல்வேறு சூழ்ச்சிகளையும் மறைமுகச் சதிகளையும் உள்ளடக்கியிருக்கிறது. விதி 348(2ஐ மேம்போக்காகப் பார்த்தால், அது மாநில மொழிகளை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்கிட வாய்ப்பளித்திருப்பது போல் தோன்றும். ஆனால் அவ்விதியிலும் இந்திக்குத்தான் முன்னுரிமை. இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியும் ஒரு மாநில மொழிதான். இந்தி அல்லது மாநில மொழி என்று போட வேண்டிய தேவையே இல்லை.

மாநில மொழிக்கு வாய்ப்பளிப்பது போல் காட்டிவிட்டு, இந்தியை இந்தி பேசாத மாநிலத்திலும் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக ஆக்கிட உறுதி அளிப்பதே 348(2) விதியின் உள்நோக்கம்.

அதனால்தான் பீகார், உத்திரபிரதேசம், மத்தியப் பிரதேசம், இராயத்தான் மாநிலங்களில் இதே 348(2) விதியைப் பயன்படுத்தி உயர்நீதிமன்ற மொழியாக இந்தியைச் செயல்படுத்திவிட்டது இந்திய அரசு.

இந்த விதியைப் பயன்படுத்தி தமிழக அரசு 2006ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி ஆக்கிடக்கோரி இந்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்பியது. ஓராண்டுக்குப் பின் அம்மனுவை இந்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. குடியரசுத் தலைவராக அப்போதிருந்த முனைவர் அப்துல் கலாம் பார்வைக்கே அந்த விண்ணப்பத்தை அனுப்பாமல் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

குடியரசுத் தலைவர் அம்மனுவைத் திருப்பி அனுப்பிவிட்டதாக இந்திய அரசு அதிகாரிகள் அறிவித்தனர். அச்செய்தியை ஏடுகளில் பார்த்த அப்துல்கலாம் தம் பார்வைக்கே அம்மனு வரவில்லை என்று தம் செயலாளர் மூலம் அறிக்கை கொடுத்தார்.

மீண்டும் தமிழக அரசு விண்ணப்பம் போட்டுள்ளது. “மேற்கு வங்காளத்தில் வங்க மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகக் கேட்டார்கள். அக்கோரிக்கையை ஏற்கவில்லை. எனவே தமிழகத்தின் கோரிக்கையையும் ஏற்க முடியாது” என்று இந்திய அரசு கூறுயுள்ளது.

வங்க மொழியை ஏன் ஏற்கவில்லை? அதற்கான அரசமைப்புச் சட்டக் காரணம் என்ன? மேற்கு வங்கத்தைக் காரணம் காட்டி தமிழகத்திற்கு மறுப்பதற்கு அரசமைப்பில் ஏதாவது விதி இருக்கிறதா? இல்லை; இந்திய ஆளும் வர்க்கத்தின் சூதுதான் இருக்கிறது; ஆதிக்க இனத்திமிர்தான் இருக்கிறது.

இதே 348(2) விதியைப் பயன்படுத்தித்தானே மேற்சொன்ன நான்கு மாநிலங்களில் உயர்நீதிமன்ற வழக்காடு மொழி என்ற தகுதியை இந்திக்கு வழங்கியிருக்கிறார்கள்.

உயர்நிதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கோரி மதுரையில் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் ஆறு வழக்கறிஞ்சர்கள் 9.6.2010 முதல் சாகும் வரை பட்டினிப் போராட்டம் தொடங்கினர். அக்கோரிக்கையை ஆதரித்து சென்னையிலும் ஏழு வழக்கறிஞர்கள் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் தொடங்கினர். இரு இடங்களிலும் வழக்கறிஞர்கள் தளைப்படுத்தப்பட்டனர். சிறையிலும் உண்ணாப் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர். 21.06.2010 முதல் தமிழில் வழக்காட வாய்மொழி வாக்குறுதி அளித்தார் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு.இக்பால்.

ஆனால் இந்திய அரசு அசையவில்லை. தமிழக முதல்வர் வெற்று வேண்டுகோளோடு தம் கடமையை முடித்துக் கொண்டார். தமிழக அரசு அனுப்பிய விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்று தோண்டி துருவி செய்திகள் வெளியிட்டன ஏடுகள்.

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதி கோரிய தமிழக அரசின் விண்ணப்பம் முதலில் அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, கே.யி.பாலகிருட்டிணன்(தற்போது கையூட்டு மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக விசாரணையில் இருப்பவர்) கருத்துரைக்கு அனுப்பப்பட்டது. அவர், மாநில மொழியில்(தமிழில்) வழக்காட அனுமதிக்கக் கூடாது. எல்லா மாநிலமும் அதே போல் உரிமை கேட்கும். அப்படிச் செய்தால் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தாகும். இந்தியா முழுவதும் நீதித்துறை ஒரே சீராக இருப்பதைப் பாதிக்கும் என்று கூறினார்.

பிறகு, சட்ட அமைச்சகத்திலிருந்து உள்துறை அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பியுள்ளார்கள்.

தலைமை நீதிபதியின் கருத்தைக் கேட்க வேண்டிய தேவையே இல்லை. அதே போல் உள்துறை அமைச்சகத்திற்கும் விதி 348(2)க்கும் என்ன தொடர்பிருக்கிறது? ஒன்றுமில்லை.

காலம் கடத்தி, கைவிரிப்பதற்காக ஏகாதிபத்திய மனங்கொண்ட ஆட்சியாளர்கள் ‘அடிமைகளின் மொழியான தமிழுக்கு அரியணையா’ என்ற எண்ணத்தில் சூழ்ச்சி செய்கிறார்கள். சுற்றி அடிக்கிறார்கள்.

இதே ஏகாதிபத்திய அரசு இந்தியில் அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரம் படைத்த மொழியாக்கத்தை வெளியிட 1988இல் விதி 394A என்ற சட்டதிருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. இவ்விதியின் படி இன்றைக்கே உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் இந்தியில் தீர்ப்பு எழுதினால் அதைச் செல்லாது என்று கூற முடியாது.

தமிழினம் தில்லிக்கு காலணியாக அடிமைப்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றுகள்தாம் மேற்சொன்னவை அனைத்தும்.

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கடும் மொழியாக, தீர்ப்பெழுதும் மொழியாகக் கொண்டு வரத் தொடர்ந்து போராடுவோம். அதே வேளை இந்திய ஏகாதிபத்தியத்தின் காலணியத் தளைகளிலிருந்து தமிழ்த் தேசம் விடுபடுவதற்கான போராட்டத்தை விரைவு படுத்துவோம்!


nan.thiru இந்த பதிவை விரும்பியுள்ளார்


கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Feb 17, 2011 11:04 am

நன்றி சிவா அண்ணா .இந்திய அரசியலை சுத்தப்படுத்தவேண்டு என்றால் முதலில் அறுவது வயசுக்கு மேல் உள்ள அரசியல் வாதிகள் அனைவரையும் அகற்றவேண்டும் .இவர்கள் தான் ஆசை பிடித்து அலைகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 17, 2011 11:08 am

kannan3536 wrote:நன்றி சிவா அண்ணா .இந்திய அரசியலை சுத்தப்படுத்தவேண்டு என்றால் முதலில் அறுவது வயசுக்கு மேல் உள்ள அரசியல் வாதிகள் அனைவரையும் அகற்றவேண்டும் .இவர்கள் தான் ஆசை பிடித்து அலைகிறார்கள்

அரசியல்வாதிகளுக்கும் ஓய்வுபெறும் வயது நிர்ணயிக்கப்பட வேண்டியது அவசியம். நடக்க முடியாமல், காது கேளாமல், பேச முடியாமல் இருப்பவர்களெல்லாம் நமக்குத் தலைவர்கள் என்றால் நம் நாட்டை கடவுள் கூடக் காப்பாற்ற முடியாது.



ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Feb 17, 2011 11:28 am

மகிழ்ச்சி என்ன கொடுமை சார் இது அநியாயம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Feb 17, 2011 12:50 pm

மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகள் என்பதில் என்ன சந்தேகம் ?சட்டத்தை மதிக்காமல் துப்பாக்கியால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைப்பவன் தீவிரவாதிதான் .

ராம்


நிசாந்தன் wrote:சிவா அவர்களே. இந்திய ஆளும் அரசுகள் காந்தியை வைத்து அரசியல் நடத்துகிறது. எங்கு பார்த்தாலும் காந்தியைப் பற்றித்தான் பாடங்கள் இருக்கும். நேதாஜி பற்றியோ, பகத்சிங் பற்றியோ, சேகுவேரா பற்றியோ எங்கும் இருக்காது. அப்படியே இருந்தாலும் ஒரிரு பக்கங்கள் மட்டுமே இருக்கும். காரணம் இந்திய மக்கள் அனைத்து அடக்குமுறைகளையும் அமைதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எதிர்த்து நிற்க கூடாது. அதனால் தான் இன்று மாவோயிட்டுகள் தீவீரவாதிகளாக சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள் இந்திய அரசால்.


கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Feb 17, 2011 2:17 pm

சட்டத்தை யார் மதிக்கிறார்கள் ?அதனால் தான் அவர்கள் வேறு வழி இன்றி போராடப்போகிரார்கள் ?அந்த இனத்தினது பிரச்சனை தீர்க்கப்பட்டால் அவர்கள் ஏன் உயிரைக்கொடுத்து போராடவேண்டும்?அண்மைய உதாரணங்களை பாருங்கள் எகிப்திலும் போராடியவர்கள் எல்லாம் தீவிரவாதிகளா ?அங்கே உயிர்கள் பரிக்கப்படவில்லையா ?
கருப்புப்பணம் கொண்டுவரவே திராணி இல்லாதஅரசு இவர்களுக்கேதிராக
போராடாமல் இருப்பதென்னவோ எமது மக்களுக்கு பழகி விட்டது /?
இன்னும் ஒன்று ஜனநாயக ரீதியாக தோற்கடிக்கலாம் என்பது பொய்க்கதை முபாராக் முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்தார் அங்கும் தேர்தல்கள் நடந்தனவே?இங்கே இப்போ கணணி மையப்படுத்திய கருவியினை பயன்படுத்துகிறார்கள் .ப்ரோக்ராம்மே எழுதும் போதே பத்துக்கு ஒன்று என எழுதினால் யாருக்கு போட்டாலும் தமக்கு விழுமாறு பார்க்கலாம் எல்லோ ?கொஞம் ஜோசியுங்கோ ???ஜனநாயகம்இதுவா ?

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Feb 17, 2011 2:48 pm

சிவா அவர்களே. இங்குள்ள அனைவரும் அமெரிக்கா இப்படி செய்தது, ஈரான் இப்படி செய்தது, எகிப்தில் இப்படி நடக்கிறது, இசுரேல் மக்கள் விரோதப் போக்கை கடைப்பிடிக்கிறது என்று அடுத்த நாட்டை குறை சொல்லுகிறார்கள். தங்கள் நாடு செய்யும் தகிடுதத்தங்களை சொல்லும் போது மாட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இது என்ன நியாயம்? இந்தியா எது செய்தாலும் தலையாட்டிக்கொண்டு இருக்க முடியாது. இங்குள்ளவர்களுக்கும் இந்தியா செய்யும் வேலைகளை தெரிவிப்பது அவசியம்.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Feb 17, 2011 2:53 pm

ராம் அவர்களே, மாவோயிட்டுகளைப் பற்றி எதுவுமே தெரியாமல் வெறும் தொலைக்காட்சியில் வரும் செய்திகளை மட்டும் படித்துவிட்டு எதையும் கூறக் கூடாது. எதைக் கூறினாலும் ஆராய்ந்து பார்த்துவிட்டு கூறுவதே சிறந்தது. உங்களுக்கு ஒரு வேண்டுகோள் “தோழர்களுடன் ஒரு பயணம்” என்ற அருந்ததி ராயின் புத்தகத்தை படியுங்கள். மாவோயிட்டுகளுடன் தங்கி அவர்களின் நியாயங்களை வாழ்வியலைப் பற்றி அருந்ததி ராய் எழுதிய புத்தகம் அது.
மேலும், தான் எடுத்த இலட்சியத்தில் தீவிரமாக இருப்பவன் தான் தீவிரவாதி. துப்பாக்கி எடுத்தவன் எல்லாம் தீவிரவாதி ஆக முடியாது. அப்படி இருக்கும் போது தீவிரவாதி என்ற சொல்லும் பெருமைக்குரிய சொல்லே ஆகும்.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Feb 17, 2011 10:39 pm

அனைவருக்கும் வணக்கம்
எப்பக்கம் வரும் அந்த இந்தி என்று கேட்டவர் - வீட்டின்
உட்பக்கத்திலிருந்து உதித்தது கண்டோம்
அனுபவம் இல்லாத தயாநிதி மாறனை கேபினெட் அமைச்சராக அமர்த்திய போது கொடுத்த பதில் "தயாநிதிக்கு இந்தி தெரியும்" என்பதே. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பலர் தீக்குளித்த போது இவர்கள் வீட்டில் இந்தி படித்திருக்கிறார்கள் என்ற உண்மை தொண்டையில் நிற்கிறது
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Feb 18, 2011 2:43 pm

1.அருந்ததிராயை நான் நடுநிலைவாதியாக ஏற்றுக் கொள்வதில்லை
2.எப்போதும் குண்டு வைத்து ரயில் தண்டவாளங்களையும் ,மொபைல் கோபுரங்களையும் தகற்பது என்ன வேலை என்பது எனக்கு புரியவில்லை ?

3.அப்பாவி அரசு ஊழியர்களையும் ,போர் வீரர்களையும் மொத்தமாக சாகடிப்பது என்ன வேலை .இவர்களை நான் மனிதனாக மதிப்பதே இல்லை .அவர்கள் பக்கம் இருக்கும் ஒரு சில நியாயங்களுக்காக இவர்கள் ஆடும் ஆட்டம் மிக அதிகம் .

4.அவர்களின் கட்டுபாட்டில் உள்ள பகுதிகளில் எல்லா பெரிய நிருவங்களில் இருந்து மிக பெரிய அளவில் பணம் வசூலிக்கிறார்கள் .இது என்ன நியாயம் (மேற்கு வங்கத்தில் மட்டும் 1000 கோடி ரூபாய் ஒரு வருடத்திற்கு வசூல் )

5.திறமை இருந்தால் மக்களை விட்டு வெளியே வந்து நேரடியாக மோத வேண்டியாது தானே ?

மக்களின் பினால் ஒளிந்து கொண்டு துப்பாக்கியுடன் அப்பாவிகளை கொல்லுபவர்களை என்ன மோசமான பேர் கொண்டும் அழிக்கலாம் .

சீனாவின் கைகூலிகள் தான் இவர்கள்

ராம்



நிசாந்தன் wrote:ராம் அவர்களே, மாவோயிட்டுகளைப் பற்றி எதுவுமே தெரியாமல் வெறும் தொலைக்காட்சியில் வரும் செய்திகளை மட்டும் படித்துவிட்டு எதையும் கூறக் கூடாது. எதைக் கூறினாலும் ஆராய்ந்து பார்த்துவிட்டு கூறுவதே சிறந்தது. உங்களுக்கு ஒரு வேண்டுகோள் “தோழர்களுடன் ஒரு பயணம்” என்ற அருந்ததி ராயின் புத்தகத்தை படியுங்கள். மாவோயிட்டுகளுடன் தங்கி அவர்களின் நியாயங்களை வாழ்வியலைப் பற்றி அருந்ததி ராய் எழுதிய புத்தகம் அது.
மேலும், தான் எடுத்த இலட்சியத்தில் தீவிரமாக இருப்பவன் தான் தீவிரவாதி. துப்பாக்கி எடுத்தவன் எல்லாம் தீவிரவாதி ஆக முடியாது. அப்படி இருக்கும் போது தீவிரவாதி என்ற சொல்லும் பெருமைக்குரிய சொல்லே ஆகும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 2:54 pm

rarara wrote:1. நான் நடுநிலைவாதியாக ஏற்றுக் கொள்வதில்லை
2.எப்போதும் குண்டு வைத்து ரயில் தண்டவாளங்களையும் ,மொபைல் கோபுரங்களையும் தகற்பது என்ன வேலை என்பது எனக்கு புரியவில்லை ?

3.அப்பாவி அரசு ஊழியர்களையும் ,போர் வீரர்களையும் மொத்தமாக சாகடிப்பது என்ன வேலை .இவர்களை நான் மனிதனாக மதிப்பதே இல்லை .அவர்கள் பக்கம் இருக்கும் ஒரு சில நியாயங்களுக்காக இவர்கள் ஆடும் ஆட்டம் மிக அதிகம் .

4.அவர்களின் கட்டுபாட்டில் உள்ள பகுதிகளில் எல்லா பெரிய நிருவங்களில் இருந்து மிக பெரிய அளவில் பணம் வசூலிக்கிறார்கள் .இது என்ன நியாயம் (மேற்கு வங்கத்தில் மட்டும் 1000 கோடி ரூபாய் ஒரு வருடத்திற்கு வசூல் )

5.திறமை இருந்தால் மக்களை விட்டு வெளியே வந்து நேரடியாக மோத வேண்டியாது தானே ?

மக்களின் பினால் ஒளிந்து கொண்டு துப்பாக்கியுடன் அப்பாவிகளை கொல்லுபவர்களை என்ன மோசமான பேர் கொண்டும் அழிக்கலாம் .

சீனாவின் கைகூலிகள் தான் இவர்கள்

ராம்


கொங்குநாட்டாரின் கருத்துதான் என்னுடைய கருத்தும்! ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 359383



ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக