புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10 
21 Posts - 64%
ayyasamy ram
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10 
10 Posts - 30%
Ammu Swarnalatha
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10 
1 Post - 3%
M. Priya
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10 
4 Posts - 4%
Rutu
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10 
3 Posts - 3%
Baarushree
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
prajai
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Jenila
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
viyasan
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10 
1 Post - 1%
M. Priya
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ணன் என் காதலன் - வேணி மோகன்


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 10:44 am

First topic message reminder :

கர்ணன் என் காதலன் - முகவுரை

மகாபாரதத்தில் ஈடு இணை அற்ற வீரனாய் நாம் அறிந்த கர்ணனை பற்றிய என் பதிவு இது. ஒன்றா, இரண்டா அவன் சிறப்பு. ஈகைக்கும், நட்புக்கும் அவன் தந்த மதிப்பு.. செய்நன்றி மறவாத அவனது பண்பு, தன்னிலே தான் கொண்ட நம்பிக்கை, பிற உயிரையும் தன் உயிராய் நினைக்கும் பாங்கு.

வாக்கு மாறாமை, அத்துணைக்கும் மேலே, இணையற்ற வீரம், என்னிலைக்கு போயினும் தன்னிலை மறவாத நேர்மை என இன்னும் உண்டு ஆயிரம்.

சிறு வயது முதலே, என்னை கவர்ந்தவன், வீரம், ஈரம், கம்பீரம், கொடை, ஆண்மை எனும் சொற்களுக்கு நான் உருவேற்றி இருந்த உருவம் கர்ணன். அதிலும் நடிகர் திலகம் நடிப்பில் கர்ணன் படம் பார்த்த போது, கச்சிதமாய் கர்ணனுக்குள் அவர் பொருந்திப் போனார்.

அந்தப் படமும் ஒரு காரணம் தான் கர்ணன் மீதான என் காதலுக்கு.

பிறந்தது முதலே விதியால் வஞ்சிக்கப்பட்டு, பல அவமானங்களுக்கு இடையே வளர்ந்தாலும் தன் திறமையை பிறர் புகழ வளர்த்துக் கொண்டவன். என் வாழ்க்கையில் கர்ணனை ஒரு முன் உதாரணமாய் கொண்டு நான் வாழ இன்னும் இருக்கின்றன நிறைய விஷயங்கள்

நிகரற்ற அந்த தூய வீரனைப் பற்றி நான் அறிந்த தகவல்களை உங்களுடன் பகிர விருப்பம். படித்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். தவறு இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்.

ஏற்கனவே நிகழ்ந்தது என சொல்லப்பட்ட நிகழ்வுகளும், கூட ஆங்காங்கே என் கற்பனையும் கலந்து நான் சொல்லப் போகும் கர்ணனின் கதைக்கு, உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
__________________
நட்புடன்,
வேணி மோகன்




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 12:31 pm

பகுதி முப்பத்தி ஐந்து : தினவாரியான யுத்தத்தின் தொடர்ச்சி :


பதினான்காம் நாள் யுத்தம் :


முந்தைய தினத்தின் இறுதியில் அர்ஜுனனின் சபதத்தை கேட்ட ஜயத்ரதன், போர்க்களத்தை விட்டு ஓடிவிடலாமா என யோசித்தான். அது வீரருக்கு அழகன்று என மற்றவர்கள் தடுத்தனர். அர்ஜுனனை எண்ணி துரோணர் கலங்கினார். அதற்கேற்ப பத்மவியூகம், சகடவியூகம் என வியூகங்களை வகுத்தார்.

கண்ணன் தேரை ஓட்ட, அனுமனின் கொடி கொண்ட ரதத்தில், ஆக்ரோஷமாய் அர்ஜுனன் உள்ளே வர, அவனை எதிர்க்க, துரோணர், துரியோதனனின் தம்பியான துர்மர்ஷணனை பெரும்படையுடன் அர்ச்சுனனை நோக்கி அனுப்பினர். சிறிது நேரத்திலே, அவன் புறமுதுகிட்டு ஓடினான். அவன் ஓட்டத்தைக் கண்டு சினம் கொண்ட துச்சாதனன் அர்ஜுனனை எதிர்க்க வந்தான். அவனும், சோர்ந்து முடியாமல் திரும்பி விட்டான்.

துரோணர் எதிர்க்க வந்தார். அர்ஜுனனின் அன்றைய இலக்கு ஜயத்ரதன் ஆதலால் அர்ஜுனன் அவரைத் தவிர்த்து வியூகத்தை உடைத்து உள்ளே புகுந்தான். ஜயத்ரதனை நோக்கி முன்னேறிய அர்ஜுனனைக் கண்ட துரியோதனன், துரோணரைக் கடிந்து கொண்டான். அர்ஜுனனை வேறு வகையில் திசை திருப்பினால், தருமரைக் கைப்பற்றுவது சுலபம் என்பதால் அவனை அங்கே விட்டேன் என்றார்.

என் கவசத்தை உனக்குத் தருகிறேன், அதை நீ போட்டுக் கொண்டு போய் அர்ஜுனனுடன் போராடு. வெற்றி உனக்குத்தான் என அவரது மந்திர கவசத்தை துரியோதனனுக்கு தந்தார்.

அர்ஜுனனை எதிர்க்க வந்த துரியோதனனை அர்ஜுனனின் அம்புகளால் ஏதும் செய்ய முடியவில்லை. அவன் வியக்க, கண்ணன் உண்மை உரைக்க, பின்னர் கவசம் இல்லாத இடங்களில் யுத்த முறைக்கு புறம்பாக அர்ஜுனன் தாக்க, வலி தாளாமல் துரியோதனன் வேறிடம் சென்றான்.

அர்ஜுனன் ஜயத்ரதன் இருக்கும் இடம் நோக்கி செல்ல, அங்கே அவனை எதிர்க்க, பூரிசிரவஸ் வந்தார். அவருடன் அர்ஜுனன் போரிட, அர்ஜுனனின் உதவிக்கு சாத்யகி வந்தார். பூரிசிரவஸ் – இன் தாக்குதலால் சாத்யகி மயக்கம் அடைந்தான். அவனைக் வெட்ட வாளை ஓங்கினார் பூரிசிரவஸ். ஓங்கிய கையை பார்த்தனின் அம்பு துளைக்க, அது வாளுடன் வீழ்ந்தது.

நான் இன்னொருவனுடன் போரிட, அறநெறி கெட்டு நீ என் கையை துண்டித்து நிந்தனைக்கு உரியது என்றார் பூரிசிரவஸ். நேற்று என் மகனைக் நீங்கள் கொன்றது மட்டும் அறவழியா?? அதைக் கூறும் தகுதி உமக்கு உள்ளதா என அர்ஜுனன் கேட்டான்.

தன் செயலுக்கு நாணி, யுத்தம் விடுத்து, பரமனை நினைத்து தியானத்தில் ஆழ்ந்தார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த சாத்யகி, தியானத்தில் இருந்த பூரிசவரஸின் தலையைக் கொய்தான்.

மாலை நேரம் நெருங்கிக் கொண்டு இருந்தது. பலரையும் வென்று அர்ஜுனன் ஜயத்ரதனை நெருங்கினான். அப்போது ஜயத்ரதன் துரோனரிடம், நீங்கள் ஆயிரம் பேருக்கு கற்றுக் கொடுத்தாலும், வேறு யாரும் அர்ஜுனனைப் போலே சிறந்து விளங்கவில்லையே ஏன்??? என வினவ, அவன் தன் வலிமையுடன், தவ வலிமையையும் கொண்டு விளங்குகிறான் என்றார்.

துரோனர் இங்கே ஜயத்ரதனைக் காக்க, மீதம் உள்ள பாண்டவர்களை அங்கே எஞ்சி இருந்த மற்றவர் துணையுடன் கர்ணன் ஒரு வழி செய்து கொண்டு இருந்தான். அத்தனை பேர் வந்தாலும், எதிர்க்க இயலாத நிலை. விஜயம் அவனுக்கு தந்து கொண்டு இருந்தது ஜெயம்.

வியூகத்தின் நடுவே பாதுகாப்பாய் இருந்தான் ஜயத்ரதன். அந்தியோ நெருங்கிக் கொண்டு இருந்தது. அவன் கதை முடிக்க வேண்டுமானால் துரோனரைத் தாண்டிப் போக வேண்டும். அந்த மனிதரோ, அவனைக் காக்கும் அரணாய் இருக்க, கண்ணன் ஒரு உபாயம் செய்தான். தன் சக்ராயுதம் கொண்டு சூரியனை மறைத்தான். தன் வாக்கை நிறைவேற்ற முடியாத அர்ஜுனன், துக்கம் மிக தீக்குளிக்க ஏற்பாடுகள் செய்ய, அதைக் காணும் ஆவலில் வெளி வந்தான் ஜயத்ரதன். அவன் வெளி வந்ததும், கண்ணன் உடனே, சக்ராயுதத்தை விளக்க, சூரியன் மறையாதது கண்டு, அவன் மீண்டும் தன்னை மறைத்துக் கொள்வதற்குள், கண்ணன் சொல்படி அர்ஜுனனின் பாசுபத அஸ்திரம், அவன் சிரசைக் கொய்தது.

தன் மகன் தலையை எவன் ஒருவன் தரையில் விழச் செய்கிறானோ, அவனது தலை சுக்கல் சுக்கலாய் போக வேண்டும் என, தவம புரிந்து கொண்டு இருந்தான் ஜயத்ரதன் தந்தை விருத்தாட்சத்திரன். இதை கண்ணன் உரைத்தான். கொய்த அந்த தலை தவத்தில் இருக்கும் தந்தை மடியில் சென்று விழுமாறு செய்தான் அர்ஜுனன்.

தன் மடியில் ஏதோ விழக் கண்ட விருத்தாட்சத்திரன், அதை எடுத்து நோக்க, தன் மகனின் சிரம். அவர் பதறி அதை எறிய, அவர் தலை சுக்கல் சுக்கலானது. ஒரே நேரத்தில் தந்தை, மகன் இருவரும் மறைந்தனர்.

பாண்டவர்களுக்கு மகிழ்ச்சி. கௌரவர்களுக்கு துயரம். அன்றைய போரில் துரியோதனன் தம்பிகள் பலர் மாண்டிருந்தனர். இதனால் துயரம் மிகக் கொண்ட துரியோதனன், தன்னைத்தானே நொந்து கொண்டான்.

அவன் மனவேதனையை உணர்ந்த துரோணர், தன் முழு ஆற்றலையும் செலுத்திப் போரிடத் துணிந்தார். பகைவரைத் தொலைத்துவிட்டுத்தான் தன் கவசத்தைக் களைவேன் என சபதம் செய்து, சூரியன் மறைந்த பின்னும் யுத்தம் செய்ய தயார் ஆனார்.

தன்னை எதிர்த்து வந்த சிபி என்னும் மன்னனின் தலையைக் கொய்தார். தன்னை எதிர்த்த திருஷ்டத்துய்மனின் மைந்தரைக் கொன்றார்.

பீமன் வேறு புறத்தில் துரியோதனனின் தம்பியரான துர்மதனையும்,துஷ்கர்ணனையும் கொன்றான். சாத்யகி சோம தத்தனை எதிர்த்தான். சகுனி சோம தத்தனுக்கு உதவினான்.

கடோத்கஜன் ஒரு புறம் கடும் போர் புரிந்தான். அவன் மகன் அஞ்சனபர்வா அஸ்வத்தாமாவை எதிர்த்து போரிட்டான். ஆயினும் அம்மகன் கொல்லப்பட்டான். மகனை இழந்த ஆத்திரத்தில், அஸ்வத்தாமாவுடன் கடும் போரிட்டான் கடோத்கஜன். இருவரும் சளைக்கவில்லை. பின்னர் கர்ணனிடம் வந்தான் கடோத்கஜன். அவனது பேராற்றலைக் கண்ட துரியோதனன் நடுங்கினான். அரக்கர்களுக்கு இரவில் தங்கள் பலம் இருமடங்காய் அதிகரிக்கும் அல்லவா??? எனவே கடோத்கஜனை அடக்க வழின்றி தவித்தனர் கௌரவர்கள்.

துரியோதனனின் வற்புறுத்தலின் பேரில் அர்ஜுனனைக் கொல்ல வைத்திருந்த சக்தி ஆயுதத்தை (இந்திரன் கர்ணனின் கொடைக்கு மகிழ்ந்து, ஒரு முறை மட்டும் உபயோகிக்கலாம் எனக் கொடுத்திருந்தது) கடோத்கஜன் மேல் பிரயோகிக்க, அவன் மாண்டான்.

ஆயினும், இனி எப்படி அர்ச்சுனனைக் கொல்வது என கவலையில் மூழ்கினான் கர்ணன்.

பாண்டவர்களோ பதின் மூன்றாம் நாள் போரில் அபிமன்யூவை இழந்ததற்கும், பதினான்காம் நாள் போரில் கடோத்கஜனை இழந்ததற்கும் வருந்தினர்.

இந்த அளவில் அன்றைய போர் நின்றது.


பதினைந்தாம் நாள் யுத்தம் :

தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்து வந்த துரியோதனன் நம்பிக்கையை இழக்கவில்லை. துரோணர் வெற்றியை பறித்துத் தருவார் என எண்ணினான். துரோணரும் கடுமையாகப் போரிட்டார். போரின் உக்கிரத்தைக் கண்டு கண்ணன் ஆழ்ந்து சிந்தித்தார். அறநெறிப்படி துரோணரை வெல்ல முடியாது என உணர்ந்தார். பிரமாஸ்திரத்தையும் துரோணர் பயன்படுத்தக் கூடும் என எண்ணினார்

ஏதேனும் பொய் சொல்லித் துரோணரின் கவனத்தைத் திருப்பினாலன்றி வெற்றி கிடைக்காது என எண்ணினார் கண்ணன். ஒரு முனையில் யுத்தகளத்தை கலக்கிக் கொண்டிருந்தான் பீமன். அசுவத்தாமன் என்ற புகழ் மிக்க யானையைக் கதாயுதத்தால் கடுமையாக தாக்கினான். அது சுருண்டு விழுந்தது. அசுவத்தாமன் என்ற அந்த யானை இறந்ததில் அசுவத்தாமனே இறந்தாற்போல உணர்ச்சி வயப்பட்ட பீமன், 'அசுவத்தாமனை கொன்றுவிட்டேன்' என கத்தினான்.

இது துரோணர் காதில் விழுந்தது. தலையில் இடி விழுந்தாற் போல ஆனார். ஆனால் பின் மனம் தெளிந்தார். அச் செய்தி பொய்யாய் இருக்கும் என எண்ணினார். ஆற்றல் மிக்க தன் மகன் அசுவத்தாமனை யாராலும் கொல்லமுடியாது என நினைத்து போரைத் தொடர்ந்தார்.

ஆயிரக்கணக்கான குதிரைகளையும், வீரர்களையும், யானைகளையும் கொன்று குவித்தார். ரத்த வெள்ளம் பெருக்கெடுத்தது. போர்க்களம் ரத்தக் கடல் போல் காட்சியளித்தது. அணையப் போகும் ஜோதி இன்னும் பிரகாசமாய் எறிவது போல, அன்றைய போரில் அவரது ஆற்றல அபரிமிதமாக இருந்தது. அவரது திறம் மயிர்க் கூச்சரியச் செய்ததாம்.

துரோணர், விண்ணுலகம் செல்லும் காலம் வந்ததை உணர்ந்த வஷிஷ்டர் முதலான ரிஷிகள் அவரிடம் வந்தனர். சாந்த நிலை அடையுங்கள் என வேண்டினர். முனிவர்கள் கூற்றும், சற்று முன்னர் கேட்ட பீமன் கூற்றும் அவரது போர்ச்செயலை அறவே நிறுத்தின. உண்மையில் மகன் கொல்லப்பட்டானா? என்ற வினா உள்ளத்தை வாட்ட, சத்தியமே பேசும் தருமரிடம் கேட்டால் உண்மை தெரியும் என அவரை அணுகினார்.

இதை முன்னமே யோசித்த கண்ணன், ஒரு நன்மையின் பொருட்டு பொய் சொல்லுமாறு தருமரிடம் கூறினார். தருமர் மறுத்தார். அசுவத்தாமன் என்னும் யானை இறந்தது உண்மைதானே! அதையாவது சொல்லுங்கள் 'என கண்ணன் வற்புறுத்த, தருமரும் சரியென அதை அவர் கூற முற்பட்டபோது 'அசுவத்தாமன் இறந்தான்' என்ற செய்தி மட்டும் காதில் விழுமாறும், மற்றவை விழாதவாறும் சங்கை எடுத்து முழங்கினார் கண்ணன்.

தருமரின் கூற்று பொய்யாய் இராது என துரோணர் ஆயுதங்களைத் தூக்கி எறிந்து விட்டு தியானத்தில் ஆழ்ந்தார். அந்த நேரம் பார்த்துத் திருஷ்டத்துய்மன் வாள் கொண்டு துரோணரின் தலையைத் துண்டித்தான். அவரது தலை தரையில் உருள, உடலிலிருந்து கிளம்பிய ஜோதி விண் நோக்கிச் சென்றது.

கண்ணன் செய்த சூழ்ச்சியில் பங்கு கொண்ட தருமரின் செயல் தவறானது என ஒரு சாரர் விவாதிப்பது உண்டு. இன்னும் ஒரு தகவலை, அதுவரை தருமரின் ரதம் நிலத்தில் படாமல் இருந்ததாயும், இந்த அவரது செயலுக்குப் பின், அவர் ரதம் மண்ணில் பதிந்ததாயும் கூறுவது உண்டு.

துரோணரின் வீழ்ச்சியோடு பதினைந்தாம் நாள் போர் முடிந்தது.

துரோணரின் வீழ்ச்சிக்குப் பின் நமது கதையின் நாயகன் தான் பிரதம தளபதி.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 12:32 pm

பகுதி முப்பத்தி ஆறு : தினவாரியான யுத்தத்தின் தொடர்ச்சி


துரோணரின் மறைவுக்குப் பின்னர், ஒரு மனதாக கர்ணன் பிரதம தளபதியாக நியமிக்கப் படுகிறான். மகாபாரத்தில், பதினாறு மற்றும் பதினேழாம் நாள் யுத்தம் “கர்ண பர்வா” எனும் தலைப்பின் கீழ் உள்ளது.

கர்ணன் தளபதியாய் ஆனதும், கண்ணன், அர்ஜுனனிடம் கர்ணனைப் பற்றி சொல்கிறார்.

கர்ணன் ஒரு மாவீரன். அவனை உனக்கு சமமானவன் மட்டும் அல்ல உன்னை விட வீரத்தில் மேலானவன்.

ஆற்றலில் அவன், தன் வழியே வரும் அனைத்தையும், பொசுக்கிடும் வலிமை கொண்ட நெருப்புக்கு சமம்.

வேகத்தில், கட்டுக்கடங்காமால் மோதும் மூர்க்கத்தனமான காற்றுக்கு சமம் அவன்.

சீற்றம் கொள்கையில், தன்னைக் கூட அழித்துக் கொள்வான் அவன்.

வலிமையான பண்பில், உடல் அமைப்பில், அவன் சிங்கத்துக்கு ஒப்பானவன்.

உயரமும், உயரத்துக்கேற்ற பருமனும், நீண்ட கைகளும், பரந்த மார்பும் உடையவன்.

வெல்லமுடியாதவன். கொல்லப்பட முடியாதவன். உணர்ச்சிமிக்கவன். தோள்கள் தினவெடுத்தவன்.

போர்க்கலையின் ஒவ்வொரு செயல்பாடுகளின் மீதும் வெறிபிடித்தவன்.

எதிரிகளை தினறடிப்பவன். அவன் நண்பரின் பயங்களை சிதறடிப்பவன்.

மொத்தத்தில் அவன் ஒரு நாயகன். இதுவரை நாயகனாய் இருந்த அனைவருக்கும் முதலானவன்.


மூவுலகின் தலை சிறந்த அனைத்து வீரர்களும், கடவுளர்களும் ஒன்று சேர்ந்து சண்டை இட்டாலும் அவனை வெல்ல முடியாது. எனவே அதற்காய் பலரின் கோபத்துக்கு அவனை ஆளாக்கி, அவனது வலிமை பாதியாய் மட்டுப்படுத்தப்பட்டது.

ஆனாலும் கூட, அவனுக்கும், உனக்கும் நடைபெற இருக்கும் மாபெரும் சண்டையில், சிறந்த, சிதறாத கவனம், மற்றும் தெளிவு இருந்தால் மட்டுமே அவனை வெல்வது சாத்தியம்.

என பலவாறாய் அர்ஜுனனுக்கு யோசனைகள் சொல்லி, அவனை கர்ணனுடனான யுத்தத்துக்கு கண்ணன் தயார் செய்தார்.


பதினாறாம் நாள் யுத்தம் :


பதினாறாம் நாள் பாண்டவர்கள் அனைவருக்கும் உள்ளுக்குள் ஒரு வித பயத்துடனே ஆரம்பித்தது.

கர்ணன் ஒற்றை ஆளாய் நின்று பாண்டவர்கள் அனைவரையும் முறியடித்தான்.

அவன் கால் பதித்த இடம் எல்லாம் காலனின் ராஜ்ஜியம் தான்.

சகதேவன், துச்சாதணனை எதிர்த்து, கடுமையான யுத்தம் செய்து அவனை தோற்கடித்தான். அவனது படைகளையும் துவம்சம் செய்தான்.

நகுலன் கௌரவ சேனையை கலங்கடித்துக் கொண்டிருந்தான் ஒரு பக்கம். அழிவைக் கண்ட கர்ணன், அங்கே வந்தான்.

நகுலன் : (அவனைக் கண்டு ஏளனமாய் நகைத்தபடியே) ஒ.. பாவ ஆத்மாவே, என்னுடைய நல்ல நேரம் நீ என் முன்னே இங்கே இருப்பது. நீதான் இந்த யுத்தத்துக்கே அடிப்படையானவன். உன்னை இன்று கொல்வதன் மூலம் என் தீராத தாகத்தைத் தனித்துக் கொள்கிறேன். உன்னை தனித்து கொல்கிறேன். வா என்னுடன் போருக்கு.

கர்ணன் : சில திறம் குறைந்த வீரர்களை வெற்றி கொண்ட செருக்கில் சவால் விடாதே. இன்று நான் உன்னுடைய ஆணவத்தை அழிக்காமல் விட மாட்டேன்.

நகுலன் : வாயினால் பேசியது போதும். இனி அஸ்திரங்கள் பேசட்டும், என கர்ணன் மீது என்பது அம்புகள் தொடுத்தான்.

பதிலாய் கர்ணன் எழுபது அம்புகளில் அதை முறியடித்தான். நகுலனின் வில்லை முறித்தான். அவன் சாரதியை அழித்தான். மேலும் மூன்று அம்புகளால் அவன் தேர்க் குதிரைகளை கொன்றான்.

கோபம் கொண்ட நகுலன், ரதத்தில் இருந்து குதித்து, கூரிய ஈட்டியை தன் பலங்கொண்ட மட்டும் வேகமாய் கர்ணன் மீது எறிந்தான். அதை கர்ணன் தன் ஒரே அம்பினால் செயலிழக்கச் செய்தான்.

அதுவும் பயனில்லாது போக, நகுலன் யுத்தகளத்தில் வேறு இடத்திற்கு ஓடினான். கர்ணன் அவனைத் துரத்திச் சென்று வழி மறித்தான்.

கர்ணன் : சிறுவனே.. என்ன சொன்னாய் என்னை நோக்கி.. நினைவு இருக்கிறதா???

ஆணவம் கொள்வது, அறிவைக் கொன்று விடும். இனிமேலாவது, உனக்கு சமமானவர்களுடன் போரிடு. உன்னைவிட ஆற்றல் கொண்டவர்களிடம், அடங்கிப் போ...

போ.. போய் கண்ணன் மற்றும் அர்ஜுனனின் மறைவில் இளைப்பாறு.. எனக் கூறி அவனைக் கொல்லும் வாய்ப்பு இருந்தும், அன்னைக்குத் தந்த வாக்குக்காக அவனை விட்டுச் செல்கிறான்.

அவமானத்தில் தலை குனிய, அவன் தருமரைத் தேடிச் சென்றான். அங்கே தருமருக்கும், துரியோதனனுக்கும் யுத்தம் கடுமையாக நடந்து கொண்டு இருந்தது. யுதிர்ஷ்டிரர் கை மேலோங்கி, துரியோதனன் தன் ஆயுதங்கள் அனைத்தையும் இழந்தான். உடனே அவனைக் காக்க, கிருபர், கர்ணன், அசுவத்தாமா அனைவரும் வந்தனர். அவர்களின் நடுவே கொஞ்சம் களைப்பாறி பின்னர் வேறொரு ரதத்தில் ஏறி, துரியோதனன் மீண்டும் யுதிர்ஷ்டிரருக்கு சவால் விட, கோபம் கொண்ட அவர், மீண்டும் ஒரு கடும் யுத்தத்திற்கு பின்னர், ஒரு ஈட்டியை எடுத்து, துரியோதனனை நோக்கி எறிய முற்பட்டார்.

அது அவனை துளைத்துக் கொண்டு, அவன் உயிரைப் போக்கி இருக்கும். பீமனின் சபதம் நினைவு வர, தருமர், அவனை உயிருடன் விட்டார். அவனும் தப்பி வேறிடம் சென்றான்.

அவரை கர்ணன் எதிர்த்தான். தருமர் கர்ணன் மீது அம்பு மழை பொழிய, கர்ணனின் பத்து அம்புகள், அவரது உடமைகளை களைய, கோபம் கொண்ட அவர் தனது சக்தி ஆயுதத்தை கர்ணன் மேல் பிரயோகிக்க, கர்ணன் மூர்ச்சை அடைந்து ரதத்தில் வீழ்ந்தான்.

கர்ணன் இறந்தே போனான் என அனைவரும் கருத, அவனது சாரதி அவனை யுத்த களத்தில் இருந்து விலக்கிச் செல்ல விளைய, மூர்ச்சை தெளிந்து ஏழுந்தான் கர்ணன். எழுந்தவன், தருமரை முறியடிப்பது அப்போதே என முடிவு கட்டி களத்தில் இறங்கினான்.

தருமரின் ரதத்தை காவலாய் இருந்து காத்த அனைத்து வீரர்களையும் துவம்சம் செய்தான். அவரது வில்லை ஓடித்தான். தருமர் வேறு வில் கொண்டு கர்ணன் மீது ஒரு அம்பை எய்தார். அது இலக்கை நெருங்குகையில், கர்ணன் வேறொரு அம்பால் அதை முறியடித்தான்.

கோபமுற்ற தருமர், ஒரு தெய்வீக அஸ்திரத்தை கர்ணன் மீது ஏவினார். அதுவும் தவறாது நான்காய் பிரிந்து, கர்ணனின், இரு தோள்களையும், ஒன்று அவன் மார்பையும், ஒன்று அவன் தலையையும் தாக்கியது.

தாக்கிய அனைத்து இடங்களிலும் குருதி வழிய, இன்னும் மூர்க்கமானான். அவனது ஒரு அஸ்திரம் தருமரின் தேரை சுக்கல் சுக்கலாக்கியது. தருமர் வேறு தேர் தேடி அந்த இடம் விட்டு மறைய, கர்ணன் அவரைத் தொடர்ந்து சென்று வழி மறித்தான்.

தருமரைக் கொல்லும் வாய்ப்பு இருந்தும், தன் தாய்க்கு கொடுத்த வாக்குக்காக தருமரை, நீங்கள் உங்கள் குருவிடம் கற்றவை அனைத்தும் மறந்து போனீர் போலே, சென்று மீண்டும் அதை எல்லாம் நினைவு படுத்திக் கொண்டு வாருங்கள். சண்டை இடலாம். எனக் கூறி அவரை விட்டான்.

இதனால் பெரும் அவமானம் அடைந்தார் தருமர்.

இந்த அளவில் அன்றைய யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது.

என்னதான் கர்ணனின் திறமை வெளிப்பட்டாலும், பாண்டவர்களுள் இருவரைக் கொல்லக் கிடைத்த வாய்ப்பை கர்ணன் நழுவ விட்டது துரியோதனனுக்கு வருத்தத்தைக் கொடுத்தது.

மனதில் வருத்தம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாது, அவன் கர்ணனிடம் சென்றான்.

துரியோதனன் : கர்ணா, என் ஆருயிர் நண்பா.. நானும், எனைச் சார்ந்தோரும் உன்னை நம்பியே இருக்கிறோம். எங்களை நீ காப்பாயாக..

கர்ணன் : நண்பா, அதை நானும் அறிவேன். உன்னிடம் நான் இன்று சில விஷயங்களை மனம் விட்டுப் பகிர்ந்து கொள்கிறேன்.

அச்சம் கொள்ளாதே. அது உன் தைரியத்தைக் கொன்று விடும்.

அர்ஜுனனுக்கும், எனக்கும் உள்ள நிறை, குறைகளை உனக்கு நான் சொல்கிறேன் கேள். எனக்கு வேண்டிய உதவி நீ செய்தால் நிச்சயம் வெற்றிக் கனி நமக்குத்தான்.

துரியோதனன் : உன் வாக்கு பலிக்கட்டும். சொல் நண்பா...

கர்ணன் : என் தெய்வீக அஸ்திரங்கள் அர்ஜுனனிடம் இருப்பதற்கு சமமானவை தான். எதிரிகளை அழிப்பதில் அவனை விட நான் மிஞ்சினவன் தான். மற்றும், உடல் வலுவிலும், மன வலுவிலும், எண்ணத்தின் தீர்கத்திலும் நான் அவனை விட வலுவானவன் தான்.

இந்திரனுக்காய், விஸ்வகர்மாவால் தயாரிக்கப்பட்ட என் வில் “விஜயா” காண்டீபத்தை விட சக்தி வாய்ந்ததுதான். இந்திரன் என் குருவான பரசுராமருக்கு அதை அளிக்க, என் கற்கும் திறமையில் மகிழ்ந்த என் குருநாதர் அதை எனக்கு அளித்தார்.

என் அம்பு மழையை சமாளிக்க அர்ஜுனனால் இயலாது. என் அம்பின் வீச்சுக்கு முன்னே அவனால் நிற்க இயலாது...

துரியோதனன் : அதுதான் தெரிந்த விஷயம் ஆயிற்றே நண்பா... உனக்கு அவன் ஈடாக முடியுமா???

கர்ணன் : ஆனால்... கவனி நண்பா...

துரியோதனன் : ஆனால் என்ன கர்ணா???

கர்ணன் : அர்ஜுனன் என்னை விட எந்த விதத்தில் சிறந்தவன் என்று சொல்கிறேன் கேள்...

அர்ஜுனனின் சாரதியாய் இருப்பவர், சகல உலகங்களை தனக்குள் அடக்கிய, தாய் தேவகியின் தெய்வீகப் புதல்வன் கண்ணன். மூவுலகுக்கும் கடவுள் அவன்.

மேலும் அந்த ரதம், அக்னி பகவானால், கான்டவ வானத்தைக் அழிக்க அவருக்கு வழங்கப்பட்ட தெய்வீக ரதம். எந்த சக்தி வாய்ந்த அஸ்திரத்தாலும் அழிக்க முடியாத வலுப் பெற்ற ரதம் அது. அதன் குதிரைகளும் அப்படியே. மனோ வேகத்துக்கு ஈடான வேகம் கொண்டவை அந்தக் குதிரைகள்.

பார்த்தனிடம் இரு அம்பறாப் துணிகள் உள்ளன. என்றுமே தீர்ந்து போகாத அம்புகளை உடையவை. எடுக்கக் குறையாது அம்புகள் அதிலே நிறைந்து கொண்டே இருக்கும். என்னிடம் அது போல இல்லை.

அவன் காண்டீபத்தின் நானும் தெய்வீகத் தன்மை உடையது. அழிக்க இயலாதது. துண்டிக்க இயலாதது.

அர்ஜுனனின், ரதத்தில் கட்டப்பட்டிருக்கும் கொடியில் உள்ள குரங்கு சின்னம். நீ இதை நிச்சயம் அறிந்திருப்பாய். சாட்சாத் அனுமார் அந்தக் கொடியில் வீற்றிருக்கிறார். யுத்த களத்தில் அர்ஜுனன் ரதம் வரும் வழியெல்லாம் அதன் கர்ஜனை ஒலித்து, நம்மவரை நடுங்க வைக்கும்.

துரியோதனன் : அப்போது நம் நிலை....

கர்ணன் : கவலை வேண்டாம் நண்பா... நான் இருக்கிறேன். ஆனாலும் எனக்கு நீ ஒரு உதவி செய்தாயானால் நிச்சயம் நான் அர்ஜுனனை வெல்வேன்.

துரியோதனன் : என்ன செய்ய வேண்டும் என் உயிருக்கும் மேலானவனே???

கர்ணன் : எனக்கு மட்டும் கண்ணனைப் போலே ஒரு சாரதி இருந்தால் என்னால் நிச்சயம் வெல்ல முடியும்.

துரியோதனன் : அவர் அளவுக்கு சாரதியா???

கர்ணன் : ஆம் நண்பா. நமது பிரிவில் இருக்கும் சல்லியன். மிகச் சிறந்த பயிற்சி கொண்டவர். தேரோட்டுவதில் கண்ணனுக்கு நிகரானவர் அவர். அவர் மட்டும் எனக்கு சாரதியானால், வெற்றி நமக்கு நிச்சயம் தான்.

கூடவே எனக்கு ஆயுதங்கள் நிரம்பிய வண்டிகளும் என்னுடன் வேண்டும்.

துரியோதனன் : நிச்சயம் நண்பா... நான் இப்போதே சென்று சல்லியனிடம் பேசுகிறேன். நீ கேட்ட அனைத்தும் உனக்கு நாளை தயாராய் இருக்கும். இப்போது நீ ஓய்வெடு நண்பா. நான் உன்னை காலையில் சந்திக்கிறேன்.

கர்ணன் : ஆகட்டும் நண்பா... சென்று வா...

உறக்கம் எப்படி வரும்??? கர்ணனுக்கு தன் முடிவு தெரிகிறது. ஆனாலும், நண்பனுக்காய்... தன் அனைத்தையும் இழக்கத் துணிந்தான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 12:33 pm

பகுதி முப்பத்தி ஏழு : தினவாரியான யுத்தத்தின் தொடர்ச்சி:


கர்ணன் தனக்கு தேரோட்டியாக சல்லியன் இருந்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என சொல்ல, துரியோதனன் அவரை கர்ணனின் தேரோட்டியாக இருக்குமாறு கேட்க அவரது இருப்பிடம் செல்கிறான். இனி அங்கே நடப்பவை.

துரியோதனன் : ஆட்சியாலர்களுக்கெல்லாம் முதல்வரே, மத்ர தேசத்து மன்னரே.. வணக்கம். நான் தங்களிடம் ஒரு உதவியை நாடி வந்துள்ளேன்.

சல்லியன் : சொல் துரியோதனா. என்ன வேண்டும்??? நானும் என் சேனையும் அதற்காய் காத்திருக்கிறோம்.

துரியோதனன் : அர்ஜுனனை போரில் வெல்ல, நீங்கள் கர்ணனுக்கு தேரோட்டியாக இருந்து, கர்ணனை வழி நடத்த வேண்டுகிறேன் மன்னா.

சல்லியன் : (கோபம் மிக) என்ன??? நான் கர்ணனுக்கு தேரோட்டியாவதா??? நீ என்னை அவமதிக்கிறாய் துரியோதனா...

துரியோதனன் : கோபம் வேண்டாம் அரசே. சற்றே பொறுமையாய் கேளுங்கள்.

நீங்கள் போரிடுவதில், கண்ணனுக்கு நிகரானவர். கர்ணனுக்கு சாரதியாய் இருந்து அவன் அர்ஜுனனை வெல்ல துணை புரிய வேண்டும்.

நீர் அறியாதது இல்லை. பாண்டவர்களால் என் சேனை பெருத்த அழிவுக்கு உட்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் அது முழுதாய் அழிந்து விடும்.

கர்ணன், அர்ஜுனனை அழிக்க நினைக்கிறான். ஆனால், அதற்கு பரமாத்மாவுக்கு சமமாய் ரதம் ஓட்டவல்ல தங்களின் துணை இருந்தால் நிச்சயம் கர்ணன் வெல்வான். அர்ஜுனனை தோற்கடித்தால், பின்னர் பாண்டவர்களை வெல்வது எளிது.

அரசர்க்கு அரசர், நீங்கள் மட்டும் சம்மதித்தால், உங்கள் இருவரையும் யாராலும் அழிக்க முடியாது. அழிப்பது என்ன நெருங்கக் கூட முடியாது.

தயை கூர்ந்து நீங்கள் சம்மதியுங்கள்.

சல்லியன் : துரியோதனா, நான் ஒரு அரசன். ஆனால், கர்ணன் ஒரு தேரோட்டியின் மகன். என் நிலை இறங்கி நான் அவனுக்கு தேர் ஒட்டுவதா?? நடவாது.

அத்தோடு நினைவில் வை, பரந்த என் தோள்களுக்கு பல்லாயிரம் வீரர்களை அழிக்கும் வலு உண்டு. காற்றின் வேகத்தில் சுழன்றோடும் என் ரத்தத்துக்கும், அதிலே கட்டப்பட்ட குதிரைகளுக்கும், ஆயிரம் சேனைகளை அழிக்கும் வலு உண்டு. என் வில்லுக்கும் அந்த வலு உண்டு. என்னிடம் உள்ள தெய்வீக அச்திரங்களுக்கு மலைகளைக் கூட தூளாக்கும் வலு உண்டு.

ஷத்ரியர்கள் மேலானவர்கள். நான் ஒரு ஷத்ரியன். நான் பிறப்பில் இழிந்தவனான கர்ணனுக்கு ஏன் தேர் ஓட்ட வேண்டும்??? நான் ஒரு நாட்டுக்கு அரசன். பெருமைக்கும் புகழுக்கும் சொந்தக்காரன். இந்த அவமானம் எனக்கு ஏன் வர வேண்டும்.

நான் என் நாட்டுக்குத் திரும்ப என்னை அனுமதிப்பாயாக துரியோதனா.

(இவ்வாறு சொல்லி விட்டு, சல்லியன் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தார். அவரை தடுத்து நிறுத்திய துரியோதனன் மிகவும் பிரியமாக கீழ்க்கண்டவாறு பேசினான்)

துரியோதனன் : உண்மைதான் அரசரே. நீங்கள் கர்ணனை விட மேலானவர்தான். நான் தங்களை அவமதிக்க விரும்பவில்லை/முயலவுமில்லை. என் மனதில் சில காரணங்கள் உண்டு. கர்ணன் அஸ்திரங்கள் உபயோகத்தில் அர்ஜுனனை விட மேலானவன். தாங்கள் ரதம் செலுத்துவதிலும், குதிரைகளை கட்டுக்குள் வைப்பதிலும் பகவான் கிருஷ்ணரை விட மேலானவர். வாசுதேவன் அனைவருக்கும் முதல்வன். அவனை யுத்தத்தில் வெல்ல யாராலும் இயலாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனாலும் அவன் பார்த்தனுக்கு சாரதியாய் இருக்கிறான். நீங்கள் கண்ணனைப் போல இருமடங்கு திறமை வாய்ந்தவர். தாங்கள் கர்ணனுக்கு ரதம் ஓட்டினால் உங்களுக்கு அது அவமானம் தராது. மாறாக பேரையும், புகழையும் தான் தரும்.

சல்லியன் : கண்ணனுடன் என்னை ஒப்பிட்டுப் பேசிய உன் பேச்சில் மனம் மகிழ்ந்தேன் நான். உனக்காய் என முடிவை நான் மாற்றிக் கொள்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நான் என்ன சொன்னாலும் கர்ணன் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். என்னை அவமதிப்பது போலே அவன் நடந்தால் நான் அவனுக்கு சாரதியாய் இருக்க மாட்டேன். இதற்கு சம்மதம் எனில், கர்ணனுக்கு தேர் ஓட்ட நான் சம்மதிக்கிறேன்.


துரியோதனனும், கர்ணனும், ஆவார் நிபந்தனைக்கு ஒத்துக்கொள்ள, சல்லியன் கர்ணனின் சாரதி ஆனான்.

யுதிர்ஷ்டிரருக்கு கொடுத்த வாக்கை இவர் காப்பாற்ற வேண்டுமே.. அதாவது, கர்ணன், அர்ஜுனனுடன் போர் புரிய நேர்ந்தால், அர்ஜுனனை பாராட்டியே பேச வேண்டும். இது கர்ணனின் ஆவலைக் குன்றச் செய்யும் என்பதால்.

தாய் மாமன் ஆயிற்றே.. விடுவாரா... செவ்வனே செய்தார் அந்தப் பணியை. ஆரம்பம் முதலே அர்ஜுனனையே பாராட்டிக் கொண்டு இருந்தார். அதில் கர்ணனின் மனம் சிறிது சலனப்பட்டாலும், பின்னர், தன்னைத் தானே தேற்றிக் கொண்டு அவரிடம் வாதிட்டான்.

இருவரின் வாதம் கண்ட துரியோதனன் இடையே புகுந்து, இருவரும் தங்களுக்குள் போரிடுவதை நிறுத்தி, எதிரிகளுடன் போரிடுங்கள். அதுவே நான் வேண்டுவது என்றான்.

இருவரின் கவனமும், யுத்தகளத்துக்கு வந்தது.

இனி யுத்தகளம்...


பதினேழாம் நாள் யுத்தம் :


துரியோதனனின் பக்கத்தில், கிருபரும், கிருத்வர்மன் வலது புறம் இருக்க, அவர்களைத் தாண்டி, சகுனியும், உலுகனும் ஒரு இருக்க, சுசர்மன் இடது புறம் காக்க, துரியோதனன் அவர்களுக்கு நடுவே இருக்க, அவனுக்கு பின்னே, ஆயிரம் வீரர்களுடன் யானை மீது துச்சாதனன் இருக்கிறான். அனைவருக்கும் பின்னே வியூகத்தைக் காக்க அஸ்வத்தாமா இருக்கிறான்.

இவர்கள் அனைவருக்கும் முன்னிலையில் கர்ணன் நிற்கிறான். அவனுக்கு பின்னே அவனது வீர மக்கள், விருஷசேனா, பானசேனா மற்றும் சுசேனா ஆகியோர் நிற்கிறார்கள். இவர்கள் மூவருமே பாலகர்கள். ஆனாலும் வீரர்கள். போர்க்கலையில் விர்தகர்கள். போர் வெறியன் கர்ணன். அவன் மக்கள் இப்படி இல்லாமல் இருந்தால் தான் ஆச்சரியப் படவேண்டும்.

பாண்டவர்கள் பக்கத்தில்....

அர்ஜுனன், திஷ்டத்துய்யுமன், பீமன், சாத்யகி, பாஞ்சாலியின் புத்திரர்கள் ஐவர், சிகண்டி, நகுல, சகதேவர்கள், என அனைவரும் அணிவகுத்து நிற்க, அவர்களின் பின்னே, தருமர் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்தார்.

மாவீரர்கள் அனைவரும் அணிவகுத்து நிற்க, சங்கநாதங்களும், போர் முரசுகளும் இரு புறமும் முழங்க, வேங்கைகளும், சிறுத்தைகளும், சீறிப் புறப்பட ஆயத்தமாய் இருந்தன. ஆனால், முதல் நாள் போரை ஒப்பிடுகையில், போர் வீரர்களில் எண்ணிக்கை, மூன்றில் ஒரு பாகமாய் குறைந்திருந்தது.

யுத்தம் ஆரம்பமானது. ரத, கஜ, துரக, பதாதிகள் அனைவரும், வெற்றி அல்லது வீர மரணம் எனும் எண்ணம் கொண்டு, தங்கள் லட்சியமாய் முடிந்த வரை பகைவர்கள் எண்ணிக்கையை குறைப்பது என்பதைக் கொண்டு ஒருமித்தக் கருத்துடன் நடந்த அன்றைய போர்... யுத்த சரித்திரத்தில் ஒரு மைல்க் கல்தான்.

கர்ணனின் ஆரம்பம் அசத்தலாகவும், பாண்டவர்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்தது.

பாண்டவர்களின் தரப்பில், சிறந்த வீரர்களாகக் கருதப்பட்ட, பானதேவன், சித்திரசேனன், சேனவிந்து, தபன் மற்றும் சூரசேனனை எளிதில் வீழ்த்தினான்.

அவனது ரதத்தை இருபுறமும் இருந்து காத்தனர் அவனது இரு மக்கள். சத்தியசேனன் மற்றும் சுசேனன். விருசசேணன் கர்ணன் தேரின் பின்னால் இருந்து தன் தந்தையைக் காத்தான்.

கர்ணன், மாவீரர்கள் ஐவரைக் கொன்றதை கண்டவுடன், அவனுடன் போரிட, பாண்டவர் தரப்பில் இருந்து, திஷ்டத்துய்மன், சாத்யகி, பாஞ்சாலியின் புத்திரர்கள், பீமன் மற்றும் சிகண்டி என இத்துணை பேரும் சேர்ந்து ஒருவனான கர்ணனை எதிர்த்தனர்.

அனைவரையும் ஒரு புன்னகையுடனே எதிர்க்கொண்டான் கர்ணன். போர்.. போர்... என திணவெடுத்த அவன் தோள்கள் பூரிப்பில் மேலும் விரிய, சாந்தம் தவழும் முகம் சந்திரன் எனில், வீரம் ததும்பும் முகம் சூரியனின் காந்தியுடன், கொளுத்தும் வெய்யிலில், பூமியில் தோன்றிய சூரியனாய், சூரர்களை அழிக்க வந்த சொர்ண சொரூபமாய், தான் இருக்கும் இடத்தையே தன் வீரத்தால் ப்ராசிக்க வைத்தான் கர்ணன்.

அவன் சென்ற வழி எல்லாம், எதிரிக்கு அழிவு. அவர்கள் படையில் நிலை குலைவு. அவன் வீரத்தைக் காணக் காண, ஒவ்வொரு கௌரவர் தரப்பு வீரனுக்கும், உள்ளுக்குள் உற்சாகம் குமிழியிட்டுக் கிளம்பியது.

தீரச் செருக்கு, திமிறி வெளிப்பட்டது அனைவருக்கும். வீறு கொண்டு அவர்கள் வேங்கைகளாய் வெறும் கையுடன், பாண்டவர் தரப்பு வீரர்களைப் பந்தாடினர்.

மின்னலும், இடியுமாய், விஜயத்தின் (கர்ணனின் வில்) வீச்சின் சத்தம் அந்த யுத்த களத்தில் எங்கு நோக்கினும் கேட்டது. சல்லியனின் திறமையில், கர்ணனின் ரதம், யுத்தகளம் எங்கும் சுற்றி, சுழன்று அடிக்கும் சூறாவளியாய், எட்டுத் திக்கும் விஜயம் செய்து, ஜெயம் தந்தது துரியோதனனுக்கு.

ஆரம்பத்தில் கர்ணனை ஊக்கம் கெடுத்த சல்லியனும், கர்ணனின் திறம் கண்டு உண்மையான வீரனை நான் இங்கே கண்டேன். அவன் மீது பெரும் மதிப்பு கொண்டேன் என உள்ளத்திலே கர்ணனை மெச்சி, உச்சி முகர்ந்தார்.

அவன் கண்ணசைவில் அவன் எண்ணம் புரிந்து, களத்தை அவனுக்கு சாதகமாக்கினார்.

காணக் காணத் தெவிட்டவில்லை சல்லியனுக்கு கர்ணனின் வீரம். களைப்பு என்பதே அறியாதவனா இவன் என மலைப்பு வந்தது அவருக்கு...

இதுவரை இருந்த உன்னை அறிவேன் நான்
ஓயாது இருந்த உன் கொடையின் தன்மை அறிவேன் நான்

உன்னுள்ளே உறங்கிய வீரம் அதை இன்றே அறிந்தேன்
ஓயாது உன்னை தூற்றிய என் சித்தம் தெளிந்தேன்

உண்மையான வீரம் எது என்பதை அறிந்தேன்
ஓயாத உன் தீரம் அதை இன்று அறிந்தேன்

உனைக் கீழானவன் என்ற என் எண்ணம் அதைக் களைந்தேன்
சுழன்று சீரும் உன்னிலே புயலின் வேகம் கண்டேன்

ஒருவனாய், நீ எதிரிகளை மட்டும் இன்றி
என்னை நோக்கி வரும் அம்புகளையும்
தடுத்ததாய்.

உன்னை மதியாத என்னை நீ மதித்தாய்
என்னை பிறர் மிதியாது காத்தாய்

ஆண்மகனடா நீ...
சீரும் வேங்கையாய் உன் தீரம்
பாயும் சிங்கமாய் உன் வீரம்

ஆயிரம் யானைகள் சேர்ந்தது உன் யுத்த பலம்
அளவு சொல்ல முடியாதது உன் ஆன்ம பலம்

எனக்கு சமமில்லை நீ என்றேன். அந்த ஆண்டவனும்
உனக்கு இணையில்லை என்கிறேன் நான்

உத்தமனாய் உள்ளாயடா நீ போரிலும்...
புறமுது காட்டுவோரை விடுத்து
ஆயுதம் அற்றவரை விடுத்து,

ஆயிரம் பேர் சேர்ந்து தாக்கினாலும் தடுத்து
சாய்க்க முடியாத மலையாய் நின்றாய்

ஆரம்பத்தில் இருந்த உற்சாகம்
சிறுது கூட குன்றாமல் குறையாமல்,
இருக்க இருக்க உன் காந்தி கூடுவது
என்ன மாயமோ???

விழுப்புண்கள் அவை கூட உன் அழகுக்கு
அழகுதான் சேர்க்கிறது. வழியும் உன் குருதி
உனக்கு வாழ்த்துதான் சொல்கிறது.

எப்படி இருந்த கௌரவ சேனை???
பிதாமகரின் பிரசன்னத்தில் கூட
விசனமாய் இருந்தவர்கள், வீரன்
உன் பிரகாசத்தில், வீறு கொண்டனர்

நீ என் மகனாய் இருந்திருந்தால்...
என் புகழ் இறவாது இருந்திருக்கும்

இப்போதும் என்ன??? உன் பெயர்
உள்ளவரை என் பெயரும் இருக்கும்

என் வாழ்நாளின் பிறந்த பயனை
நான் அடைந்தேன் கர்ணா உன்னாலே...



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Wed Jun 15, 2011 10:39 am

கர்ணன் என் காதலன் : 38

பகுதி முப்பத்தி எட்டு : தினவாரியான யுத்தத்தின் தொடர்ச்சி:


கர்ணன் யுத்த களத்தில் காலனைப் போலே போர் புரிந்தான். பாண்டவர்களின் சேனையில் பெரும் அழிவுக்கு காரணமாய் இருந்தான். எனவே, அவனை எதிர்க்க, பாண்டவர் தரப்பில் இருந்து, திஷ்டத்துய்மன், சாத்யகி, பாஞ்சாலியின் புத்திரர்கள், பீமன் மற்றும் சிகண்டி என அனைவரும் சேர்ந்து ஒருவனான கர்ணனை எதிர்த்தனர்

அவர்களில் முதலாய் கர்ணனை நோக்கி வந்த பீமனின் வில்லை கர்ணனின் மகன் சுசேனன் முறிக்க, விரைந்து வேறு வில்லை எடுத்த பீமன், பத்து அம்புகளால் சுசேனனின் கதையை முடித்தான். கர்ணன் மீதும் அம்பு மழை பொழிந்தான். கர்ணனின் இன்னொரு மகனான பானுசேனனையும், கூரிய கத்தி போன்ற அம்பினால் கொன்றான். தன் மக்கள் இருவரையும் தன் கண் முன்னே கொன்ற பீமனின் மீது கர்ணன் கடும் கோபம் கொண்டான். தொடர்ந்த பீமன், கர்ணனுக்கு துணையாய் வந்த சேனையை அழிக்கத் தொடங்கினான்.

பீமன் கடுமையாய் தாக்கப்பட்டான் கர்ணனால். இருவருக்கும் இடையே கடும் யுத்தம் நடந்தது. கர்ணன் பீமனால் தாக்குண்டு மயங்கி தேரில் விழுந்தான். அன்றைக்கு பீமன், போர்க்களத்தில் யமனைப் போலக் காட்சி தந்தான்.

சல்லியன், கர்ணனை போர்க்களத்தில் இருந்து வெளியேற்றிச் சென்றான்.

களம், பீமனின் கைக்குள் வந்தது. எங்கு நோக்கினும், ரத்த வெள்ளம். அன்று அவன் சபதமான துச்சாதணனை கொல்வேன் என்ற சபதம் நிறைவேறியது.

துச்சாதணனின் ரத்தம் பருகிய பீமன், காணவே பயங்கரமாய், இருந்தானாம். ஒரு பக்கம் அவனுக்கு பயந்த சேனைகள் ஓட, ஒரு பக்கம் அவன் கொன்று குவித்த சடலங்கள் இருக்க, அவன் செல்லும் வழியெல்லாம், புயலுக்குள் சிக்கிய பூவனமாய் சின்னாபின்னமாகின.

ஓரளவு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு கர்ணன் விரைந்து வந்தான் களத்துக்கு. வெற்றியின் மதர்ப்பில் இருந்தான் பீமன். தோல்வியின் தாக்கத்தில் இருந்தவன் கர்ணன். வீறு கொண்ட வேங்கையாய் கர்ணன் பாய, செருக்கு கொண்ட சிறுத்தையாய் பீமன் இருக்க, விரைவில் பீமன் களைத்துப் போனான்.

ஆயுதங்கள், ரதம் என தன் உடமைகள் அனைத்தையும் இழந்து, அந்த இடத்தை விட்டு வேறிடம் செல்ல, அவனைத் தொடர்ந்த கர்ணன், யாராலும் வெல்ல இயலாதவன் எனும் செருக்கு இருப்பின், வெற்றி உனக்கு நிரந்தரம் அல்ல எனக் கூறினான்.

இதன் இடையே, தருமர், கர்ணனிடம் தன் தோல்வியை எண்ணி எண்ணி உள்ளத்தில் மறுகிக் கொண்டு இருந்தார். அவரது தோல்வியை கேள்வியுற்ற அர்ஜுனனும், கிருஷ்ணரும் அவரைக் காண பாசறைக்கு செல்ல, தருமாரோ, கர்ணன் வீழ்ந்தானா??? என வினவுகிறார்.

இல்லை. கர்ணனை நான் இன்னும் களத்தில் சந்திக்கவே இல்லை. தங்கள் நிலையை அறியவேண்டி இங்கு வந்தேன் எனக் கூறினான் அர்ஜுனன்.

அதிலே அதிருப்தியுற்ற தருமர், கோபத்துடன் அர்ஜுனனை சாடுகிறார். உன் போன்ற கோழைக்கு காண்டீபம் எதற்கு?? இதோ நிற்கிறாரே ஆபத்பாந்தவன், அவரிடம் கொடுத்துவிடு. அவர் போரில் கர்ணனை வெல்வார் என்கிறார்.

அர்ஜுனனும் கோபம் கொண்டு, தருமரை தகாத வார்த்தைகள் சொல்கிறான். இத்துணைக்கும் முழு முதல் காரணம் நீர்தான். உம்மால்தான் இந்த நிலை வந்தது. சூதாட ஒத்துக் கொண்டதும் நீங்கள். ஆடி தோற்றதும் நீங்கள்.

என்னை காண்டீபத்தைக் கைவிடச் சொல்பவன் எவனாயினும் அவனை கொல்வதாய் நான் ரகசிய பிரதிக்ஞ்னை செய்துள்ளேன். இப்போதே உன் கதையை முடிப்பேன் என அர்ஜுனன் கூவுகிறான்.

இதை கண்ணுற்ற கண்ணன், இருவருக்கும் சமாதானம் செய்து வைக்கிறார்.

தான் செய்த தவறுக்கு தருமர் வருந்த, அர்ஜுனனோ, தான் இதுவரை எதிர்த்தும் பேசாத தருமரை, தன் மனம் போனபடி பேசி அவரை உள்ளத்தால் இறந்து போகச் செய்கிறான் கண்ணனின் ஆலோசனையின் பேரில்.

பின்னர், கர்ணனின் உயிரை எடுத்துவிட்டுதான் இனி மறுவேலை என, களம் புகுந்தான் அர்ஜுனன்.

அங்கே சென்று பீமனுக்கு தன் அண்ணனின் நிலையை அறிவித்து, கர்ணனை நாடிச் சென்றான்.


கர்ணனின் தீரம் :


அங்கே கர்ணனோ ஒரு திறம் வாய்ந்த அதிரதனாய் கண் கூசும்படி ஜொலித்துக் கொண்டு இருந்தான்.

ஒருவர் பின் ஒருவராக தன்னை எதிர்க்க வந்த பாண்டவ அதிரதர்களை கொன்று குவித்துக் கொண்டு இருந்தான். செல்லும் வழியெல்லாம் தன் முத்திரையைப் பதித்தான். ஆயிரக் கணக்கான வீரர்கள் இருந்த இடம் தெரியாது போயினர்.

பாண்டவப் படையினர் கர்ணனின் தீரம் எனும் கடலுக்கும் மூழ்கிக் கொண்டு இருந்தனர். அவர்களைக் காக்கும் படகாய் அர்ஜுனன் அங்கே வந்து சேர்ந்தான்.

இதன் இடையே, துச்சாதணனை பீமன் கொன்ற முறைக்காக, கர்ணனின் சகோதரன் சித்ரசேனன் பீமனை கடிந்து பேசிக் கொண்டு இருக்க, யுத்தமான்யு சித்திரசேனனுக்கு போரிட சவால் விடுத்து, போரிலே அவன் தலையைக் கொய்து கொன்றான்.

தன் கண் முன்னே உயிரிழந்த இருவரின் இறப்பிலும், துக்கமும், ஆவேசமும் கொண்ட கர்ணனை நோக்கித்தான் அர்ஜுனன் வந்து கொண்டு இருந்தான்.

சல்லியன், கர்ணனிடம், கர்ணா, இதோ அர்ஜுனனின் ரதம் உன்னை நோக்கி வருகிறது.

உன் பலமனைத்தும் ஒருங்கிணைத்து, தயாராய் இரு. போர்க்களத்தின், உன் பக்கத்து வெற்றி உன் தோள்களில் மட்டும் உள்ளது இப்போது. துணிந்து நில் என சொல்லிக் கொண்டு இருந்தார்.

இது இவ்வாறு இருக்க, துச்சாதனன் மற்றும் சித்திரசேனனின் மறைவில் கோபம் கொண்ட கர்ணனின் மகன், வ்ரிஷசேணன், நகுலனை நோக்கி அம்பென விரைந்தான். யாராலும் அவனைத் தடுக்க இயலவில்லை. (கர்ணனின் மகன் அல்லவா???)

சுற்றி இருந்தவர் அனைவரையும் தோற்கடித்து, நகுலனை அடைந்து நகுலின் ரதக் குதிரைகளை எல்லாம் கொன்றான். நகுலன், வேறொரு ரதத்தில் ஏறிக் கொள்ள, அதையும் உடைத்தான். கோபம் கொண்ட நகுலன், தன் வாளையும், கேடயத்தையும், எடுத்துக் கொண்டு கீழே குதித்தான். அவனோடு சரிக்குச் சரியாய் போரிட்டான் இளையவன்.

நகுலன் சோர்ந்து போகும் நேரம், கண்ணன், நகுலின் நிலையை அர்ஜுனனுக்கு கூறினான்.

உடனே அங்கே விரைந்தான் அர்ஜுனன். அர்ஜுனனைக் கண்டதும், நகுலன் அவனிடம், தயவு செய்து இவன் கதையை முடித்து விடு எனக் கூறி பீமனின் ரதத்தில் ஏறிக் கொண்டான்.

விரைந்த அவனைத் தொடர்ந்த வ்ரிஷசேணனை பின்னிருந்து அம்பெய்து கொன்றான் அர்ஜுனன்.

தன் மகன் பிரமாதமாய் சண்டை போடுகிறான் எனக் கேள்வியுற்ற கர்ணன் அதைக் காண ஆவலாய் வந்தான். அவன் கண் முன்னே அர்ஜுனன், வ்ரிஷசேணனை தலையைக் கொய்து கொன்றான்.

இதுதான் முறையா?? நீயெல்லாம் ஒரு ஷத்ரியனா?? இதுதானா உன் யுத்த லட்சணம்??? என கர்ணன் வினவுகிறான்.

தனி ஒருவனாய் சிக்கிக் கொண்ட என் மகனது வில்லை பின்னிருந்த அறுத்த வீரன் பேசும் மொழிகளா இவை என அர்ஜுனனும் திரும்ப வினவுகிறான்.

துரோணரின் செயலை பின்தொடர்ந்து தான் செய்த செயலுக்கு வெட்கினான் கர்ணன்.

மகனின் மரணமும், அது தந்த ரணமுமாய் அர்ஜுனனை போருக்கு அழைத்தான் கர்ணன்.

அப்போது கண்ணன் :

தெளிந்து நில் அர்ஜுனா, துணிந்து நில். மாவீரன் கர்ணன் உன்னை நோக்கி வருகிறான். அவனது வில்லின் ஒலி போர்க்களம் எங்கும் ஒலிக்கிறது கேள். அவனது அம்புகளுக்கு முன்னர் உன் ஒருவனால் மட்டுமே நிற்க இயலும்.

சிவபெருமானின் அன்பும், ஆசிகளும் உன்னுடன் இருக்க வெற்றி உனக்கே இருக்கட்டும் என, தைரியமும், ஆசிகளும் கூறினார்.

அர்ஜுனன் : மூவுலகுக்கும் கடவுளான நீங்க என்னுடனே இருக்கையில் வெற்றி எனக்கு நிச்சயம் தான். கர்ணனைக் கொல்லாது நான் யுத்த களத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. ரதத்தை கர்ணனின் இடம் நோக்கி செலுத்துங்கள்

ஒன்று நான் இருக்க வேண்டும், இல்லையெனில் கர்ணன் இருக்க வேண்டும். இருவரில் ஒருவர்தான் தான் இந்தப் போரின் முடிவில்.

ஆனால், இருப்பவர், இல்லாதவர் இருவரின் புகழும் இந்த பூவுலகம் இருக்கும் வரை இறவாது இருக்கும்.

கண்ணன் : உண்மைதான் அர்ஜுனா...

(அங்கே கர்ணனின் நிலையோ... சொல்லி அடங்காத சோகத்திலும் அது தந்த வேகத்திலும் இருந்தது..)

ரத்தச் சிவப்பில் இருந்தன விழிகள் தன் மகனை நினைத்து.

பேரிகைகள் முழங்க, கோஷங்கள் எழும்ப, சங்குகள் முழங்க, இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளும் நிலையைக் காண, தாங்கள் போட்டுக் கொண்டிருந்த சண்டைகளைக் கூட விட்டு விட்டு வந்தனர்.

சொர்க்கத்தில் கூட (சொர்க்கம் இருக்கான்னு கேக்காதீங்க பா. கதை சொன்னா சரின்னு கேட்டுக்கணும்) அனைத்து தேவர்களும், அசுரர்களும், ரிஷிகளும், கந்தர்வர்களும், ராட்ஷசர்களும், நாகர்களும், அப்சரஸ்களும், வித்யாதரர்களும் குவிந்து இருந்தனர்.

புகழ் பெற்ற இரு வீரர்களும் தன் திறனை முழு வீச்சில் வெளிப்படுத்தப் போகும் வித்தைகளைக் காண விழி இமைக்காது காத்திருந்தனர்.

சூரியனோ, தன் மகனுக்கு ஆசி கூறுவது போலே பிரகாசமான தன் கதிர்களை ஒளிர்த்துக் கொண்டு இருந்தான். இந்திரனும், தன் மகனின் வெற்றிக்காய் ப்ராத்தித்துக் கொண்டு ஆசிகளை வழங்கினான்.

மூவுலகத்தின் கடவுள், அர்ஜுனனின் ரத்தத்தை நடத்த, மத்ர தேச அரசன் கர்ணனின் ரதத்தை நடத்த, இருவரும் சந்திக்கும் வேளை நெருங்கியது.

காத்திருந்த அனைவரும், அர்ஜுனன் அல்லது கர்ணன் இருவரில் ஒருவர் பக்கம் சேர்ந்து கொண்டு, கோஷமிட்டுக் கொண்டனர்.

கர்ணனின் பக்கம், துரியோதனன், கிருதவர்மன், கிருபர், சகுனி மற்றும் அஷ்வத்தாமா அனைவரும் இருந்தனர். அவர்கள் பின்னே ஆயிரக்கணக்கில் வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.

அர்ஜுனனின் பக்கம், தருமரைத் தவிர்த்து சகோதரர்கள் மூவரும், சிகண்டி, சாத்யகி என அனைவரும் இருக்க, அவர்கள் பின்னும் ஆயிரக்கணக்கில் வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.

இருப்பினும், அனைவரும் இவர்கள் இருவரின் மோதலைக் காணும் ஆவலில் இருந்தனர்.

தேவர்கள் பூமாரி பொழிந்தனர். அர்ஜுனன் மற்றும் கண்ணனின் புகழ் பாடி, இனிய தென்றலை வீசச் செய்தனர்.

(மீதம் அடுத்த பகுதில்...)





வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Wed Jun 15, 2011 10:40 am

கர்ணன் என் காதலன் : 39

பகுதி முப்பத்தி ஒன்பது : அஸ்திரங்கள் :

வில் வித்தையின் தலை சிறந்த வீரர்கள் இருவரும் மோதப்போகின்றனர். அஸ்திரங்களின் ஆளுமை. அதை அறிய நமக்கு வேண்டும் அதை பற்றின புலமை, அதற்காய் இங்கே பகிர்கிறேன் விவரங்களை. அஸ்திரங்கள் என்பவை மிகவும் வலிமை வாய்ந்தவை. அனைவருக்கும் அவை கிட்டிவிடாது. முறையான பயிற்சியும், குருவின் துணையும் இருந்தால் மட்டுமே அவை வீரனுக்கு கைவசமாகும்.

பல அஸ்திரங்கள் இருந்தாலும், நான் அறிந்த அஸ்திரங்களைப் பற்றிய விவரங்களை (என் தந்தை சொன்னவையும், இணையத்தின் வழி நான் அறிந்தவையும்) இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இது கதையை இன்னும் சுவாரஸ்யமாக்கும்.


பிரம்மாஸ்திரம் : இலக்கை மொத்தமாய் அழிக்கும் வலிமை கொண்டது. வேறு எத்தகைய அஸ்திரத்தையும் எதிர்க்கும் வலிமை கொண்டது. அஸ்திரத்துக்கு அதிபதி பிரம்ம தேவன்.

பிரம்மஸ்ரிஷா : இதுவும் பிரம்மாவின் அஸ்திரம். தேவர்களையும் எதிர்க்கு வலிமை கொண்டது. பிரம்மாஸ்திரத்தின் அளவு அழிவை தரவல்லது.

இந்திராஸ்திரம் : இந்திரனின் அம்சமானது. ஆயிரக்கணக்கான அஸ்திரங்களை வானிலிருந்து மழை பொழிவது போலே பொழிய வைக்க வல்லது.

வஜ்ராயுதம் : இதுவும் இந்திரனின் அஸ்திரம். மின்னலால் தாக்குண்டது போல இலக்கை அழிக்கும் வலிமை கொண்டது.

பாசுபதாஸ்திரம் : சிவனிடம் இருந்து பெறப்பட வேண்டிய அஸ்திரம். இலக்கு எந்த இயல்புடையதாக இருப்பினும், அதை அடியோடு அழிக்கும் வலுப்பெற்றது.

ஆக்னேயாஸ்ச்திரம் : அக்னியின் அஸ்திரம். இலக்கை எரித்து சாம்பலாக்கும் அஸ்திரம்

வருணாஸ்திரம் : வருணனின் அஸ்திரம். எல்லைஇல்லாமல் எரியும் நெருப்பையும் அடக்கவல்லது. பொதுவாக ஆக்னேயாஸ்ச்திரத்தை எதிர்க்க செலுத்தப்படும் அஸ்திரம்

வாய்வாஸ்திரம் : கடுமையான சூறாவளியை உண்டாக்கும் அஸ்திரம். இலக்கை பூமியை விட்டுத் தூக்கி சுழற்றி அடிக்கும் அஸ்திரம். வாயுவின் அஸ்திரம்

சூரியாஸ்திரம் : இருளை மறைத்து ஒளியைக் கொடுக்கும் அஸ்திரம். சூரியனின் அஸ்திரம்.

நாகாஸ்திரம் : நாகமாய் மாறி இலக்கை அழிக்கும் வலுகொண்டது. கிடைத்தற்கு அரியது. பொதுவாய் இதற்கு ஈடான/எதிரான அஸ்திரம் கிடையாது.

நாகபாசானம் : விஷம் கொண்ட நாகங்கள், இலக்கை கட்டுண்டு கிடக்கச் செய்யும். இதில் கட்டுண்டவர் கடவுளே ஆனாலும் கண்விழிப்பது அரிது.

மோகினி அஸ்திரம் : விஷ்ணுவின் அஸ்திரம். எய்யப்படும் இலக்கை ஒரு மாயையில் சிக்க வைக்கும். ஒரு முழு சேனையையும் மதி இழக்கச் செய்யும் வலு கொண்டது

சம்மோஹனம் : எதிரியின் மொத்த சேனைக்கும் ஆபத்தை வரவழைக்கும் ஆற்றல் கொண்டது

பிரம்மோஹனம் : இதுவும் சம்மோஹன அஸ்திரத்தைப் போன்றது

நாராயனாஸ்திரம் : எண்ணற்ற அம்புகளையும், சக்கரங்களையும் இலக்கை நோக்கி மழை போல பொழியச் செய்யும். இதை யாரும் எதிர்த்து நின்றால், நிற்பவரின் வலிமையையும் இந்த அஸ்திரத்தில் சேரும். நிராயுதபாணியாய் நிற்பவரை அஸ்திரம் தாக்காது. ஒரு முறை மட்டுமே உபயோகிக்க இயலும். பின்னர் இது விஷ்ணுவை அடைந்து விடும்

வைஷ்ணவாஸ்திரம் : இதுவும் விஷ்ணுவின் அஸ்திரம். இலக்கை, அதன் இயல்பு எதுவாக இருப்பினும் அழிக்கும் வல்லமை கொண்டது.

பர்வதாஸ்திரம் : இலக்கின் மேல், வானத்தில் இருந்து மலை ஒன்றை விழச் செய்யும்.

(இன்னும் ஒரு அஸ்திரம் இருக்கிறது, ஆனால் பெயர் நினைவில் இல்லை. அந்த அஸ்திரம் எய்யப்படும் போது, எதிரிகள் அவர்களுக்குள்ளாகவே போரிடும்படி ஒரு மாயை உருவாகும். இந்த அஸ்திரத்தின் பெயர் விவரம் அறிந்தவர்கள் அதை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி)


இனி யுத்த பூமிக்கு...... அடுத்த பகுதி இறுதிப் பகுதி. சற்றே நீளம் அதிகம். எனவே இந்தப் பகுதி வெகு சுருக்கமாய்.




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Wed Jun 15, 2011 10:43 am

கர்ணன் என் காதலன் : 40

பகுதி நாற்பது : இறுதிப் பகுதி

யுத்த பூமி


கர்ணன், மற்றும் அர்ஜுனன், இருவருக்கும் இடையே கடுமையான யுத்தம் துவங்கியது. இரு வீரர்களுமே தங்கள் மனதில் வெற்றி அல்லது வீரமரணம் எனும் எண்ணத்தை விதைத்திருந்தனர்.

துவக்கம் அர்ஜுனனிடம் இருந்து. ஆக்னேய அஸ்திரத்தை கொண்டு கர்ணனுக்கு துணை இருந்த அனைத்து வீரர்களையும் அக்னி கொண்டு துரத்தினான்.

அதற்கு பதிலாய் கர்ணன், வாருனாஸ்திரம் எய்தான். அது கரிய மேகங்களுடன் கூடிய மழையை வருவித்து அந்த இடத்தையே வெள்ளக்காடாக ஆக்கியது.

அர்ஜுனன் வாயுவாஸ்திரம் கொண்டு அந்த மழை மேகங்கள் அனைத்தும் தூர துரத்தினான். பின்னர், இந்திரனால் தனக்கு தரப்பட்ட சக்தி அஸ்திரத்தை கர்ணன் மேல் பிரயோகித்தான். அஸ்திரத்தின் வலிமையால் ஆயிரக்கணக்கான அம்புகள் காண்டீபத்திலிருந்து பாய்ந்து கர்ணனின் உடலை பதம் பார்த்தன.

அதற்கு பதிலாய் பார்கவா அஸ்திரத்தை கர்ணன் பிரயோகிக்க, அது பாண்டவ சேனையின் ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்றது.

அதில் கோபம் கொண்ட அர்ஜுனன், கண்ணாலும், பீமனாலும் ஊக்கம் பெற்று, பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்தான்.

அது கர்ணனின் தரப்பின் ஆயிரம் வீரர்களைக் கொன்றது

கர்ணன் அதற்கு பதிலாக, ஐந்து சர்ப்ப அம்புகளை எடுத்து அதை கண்ணனின் மீது ஏவினான். அது கண்ணனின் உடலில் ஊடுருவி, பூமிக்குள் பாய்ந்து மீண்டும் கர்ணனிடமே செல்லத்துவங்க, அர்ஜுனன் அவற்றை தன் அம்புகளின் மூலம் துண்டு துண்டாக்கினான். அந்த அம்பினால் கண்ணனுக்கு பாதிப்பு எதுவுமே இல்லாமல், எப்போதும் போல சிரித்துக் கொண்டே இருந்தார்.

ஆனாலும், கண்ணனை, கர்ணன் தாக்கியதில் கோபம் கொண்ட அர்ஜுனன், கர்ணன் சேனையில் கர்ணனுக்கு துணை இருந்த ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்று குவித்தான்.

அர்ஜுனனின் தாக்குதலில் அஞ்சிய கர்ணனின் சேனை வீரர்கள் அனைவரும் அவனை விட்டு விலகிச் சென்றனர்.

தனி ஒருவனாய், அர்ஜுனனையும், அவனைக் காக்க நின்ற வீரர்களையும் தாக்கினான் கர்ணன்.

அர்ஜுனனிடம் அம்புகள் தீராத அம்புறாத் துணிகள் இரண்டு உண்டு. கர்ணனிடம் அது இல்லை.

அர்ஜுனனிடம் உடைக்க இயலாத காண்டீபம் உண்டு, கர்ணனிடமும் உடைக்க இயலாத விஜயம் உண்டு. ஆனால், காண்டீபத்தில் நாணை அறுக்க இயலாது. விஜயத்தில் அப்படி இல்லை.

காண்டீபத்தின் நானை அவிழ்க்க வேண்டுமானால் முடியும். ஆனால் அர்ஜுனன் கண் இமைக்கும் நேரத்தில் அதை மீண்டும் கட்டும் வலிமை உடையவன்

காண்டீபத்தில் நூற்றி ஒரு நாணும் உண்டு. செயற்கரிய வீரன் ஒருவன் காண்டீபத்தின் நாணை அறுத்தாலும் அந்த நூற்று ஒரு நாண் வரை அது மீண்டும் மீண்டும் வரும். ஆனால், காண்டீபத்தின் நாணை அறுப்பது அவ்வளவு சுலபம் அல்ல.

இது அத்தனை இருந்தும் கர்ணன் அர்ஜுனனை எதிர்த்தான்.

தனி ஒருவனாய், களத்தில் நின்று அர்ஜுனனை சார்ந்த வீரர்கள் அனைவரையும் களைத்துப் போகச் செய்தான்.

களத்தில் அர்ஜுனனும் கர்ணனும் மட்டுமே.

காணுதற்கு அறிய ஒரு காட்சி கண் முன்னே அரங்கேற, கண் இமைக்கக் கூட இல்லாமல் மக்கள் வெள்ளம் அதைக் கண்ணுற, நாடி, நரம்பு, ரத்தம், மனம் என அனைத்திலும் போர்த்திறம் ஊறிய இரண்டு வீரர்கள் அங்கே போரிட, காற்றும் அங்கே நின்று போனதாம் போரினைக் காண.

மேகமும், மேகமும் மோதினால் மின்னல் வரும். இது இயற்கை. மின்னலும், மின்னலும் மோதினால் வருவது என்னவோ??? அதுதான் அன்றைய குருச்சேத்திரம்.

யார் சிறந்தவர் :


போரில் அர்ஜுனனின் தாக்குதலில் கர்ணனின் ரதம், சில மீட்டர்கள் வரை பின்னுக்குத் தள்ளப்பட்டது. அதே அர்ஜுனனின் ரதம், கர்ணனின் தாக்குதலில் சில அங்குலங்கள் மட்டுமே பின்னுக்குத் தள்ளப்பட்டது.

இதற்காய் கண்ணன், கர்ணனைப் பாராட்ட, அர்ஜுனன் கோபம் கொண்டு, கண்ணனைக் கேட்டான்.

“என் தாக்குதலில் கர்ணனின் ரதம் மீட்டர் கணக்கில் நகர்ந்ததே அதற்கு நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே. நமது ரதம் நகர்ந்தற்க்கு அவனைப் பாராட்டுகிறீர்களே???”

“ஆம் அர்ஜுனா, அவன் ரதத்தில் மனிதர்களான சல்லியனும், கர்ணனும் மட்டும்தான் இருக்கிறார்கள். உன் ரதத்தில், நீயும், மூவுலகையும் தன்னுள்ளே அடக்கிய பகவான், நானும் இருக்கிறேன், மூவுலகங்களும் என்னுள் அடக்கம். கூடவே உன் தேரின் கொடியில் மகா பலசாலியாய் அனைவராலும் அறியப்பட்ட அனுமன் இருக்கிறார். நாங்கள் இருவரும் இருக்கும் ரதத்தை எந்த மனிதனாலும் அசைக்கக் கூட முடியாது. ஆனால், கர்ணனின் தாக்குதலில் ரதம், சில அங்குலங்களே நகர்கிறதே”

“வலிமை மிக்கவன், தனித்திருந்தாலும் தீரம் மிக்கவன் கர்ணன்”

இந்த விவாதம் அர்ஜுனன் தரப்பில் நடந்து கொண்டு இருக்க, அங்கே கர்ணனின் தரப்பில் என்ன நடக்கிரதெனக் காண்போம்.

கர்ணன் : எத்தனை முறை அவிழ்தாலும் அர்ஜுனன், காண்டீபத்தில் நாணை கண் இமைக்கும் நேரத்தில் கட்டிக் கொள்கிறானே. பலே... இப்போது தெரிகிறது அவனை ஏன் வில்வித்தையில் சிறந்தவன் என்று அனைவரும் சொல்கிறார்கள் என”

சல்லியன் : கர்ணா, உண்மைதான். அவன் குரு வில்வித்தையில் மிகச் சிறந்தவர். அவரது பரிபூரண ஆசியையும், அருளையும், வழிகாட்டுதலையும் பெற்றவன் அர்ஜுனன்.

அர்ஜுனனின் வலிமையைக் காணக் காண, கர்ணனிடம் உற்சாகம் ஊற்றுப் போலப் பொங்குகிறது.

கர்ணன் : இப்படி ஒரு போரைத்தான் நான் எதிர்நோக்கினேன். சளைக்காமல் போரிடும் வீரன் ஒருவனைத்தான் நான் தேடிக் கொண்டு இருந்தேன். நிமிடம் கூட என்னை ஓய்வெடுக்க விடாது, நான் கற்று வைத்த அத்தனை திறமையும் என்னிலிருந்து வெளிக்கொணர வைக்கும் இந்த அர்ஜுனன் மீதும் என் ப்ரீத்தி பெருகுகிறது. இந்த நிமிடத்தில் நான் தான் உலகிலேயே மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பவன்.

சல்லியன் : கர்ணா, எதிராளி வலிமை மிக்கவன் என்கையில் நமக்கு அவன் மீது வன்மம் வருவதுதானே இயல்பு. நீ சொல்வது இயல்புக்கு மீறியதாக அல்லவா இருக்கிறது.

கர்ணன் : இல்லை, மத்ரா தேச மன்னரே, எனக்கு அப்படி இல்லை, என் வரையில் நான் அப்படி இல்லை. போரிடும் போதும், நமக்கு நிகரானவர்களோ, நம்மை விட வலிமை மிக்கவர்களோ அவர்களோடு போரிடும் போதுதான் நமது திறமை முழு அளவில் வெளிப்படும்.

நம்மை மேலும், மேலும் வலுப்படுத்த, இதுபோன்ற போர்தான் அவசியம். நான் எப்போதும் விரும்புவதும் அதைத்தான். அது இன்றுதான் நிறைவேறுகிறது.

உண்மையில் அர்ஜுனன் ஒரு தலை சிறந்த வீரன்.

சல்லியன் : எதிரியிடம் கூட நல்லதைக் காணும் உன் வீரத்தின் திறத்தின் முன் நான் தலை வணங்குகிறேன் கர்ணா. மகனே.. உனக்கு சாரதியாய் இருப்பதில் வருத்தமும், உன்னை ஜெயிக்க விடக் கூடாது எனும் வக்கிரமும் கொண்டு இருந்தேன்.

உன் திறமையைக் கண்டதும், வக்கிரம் மறைந்தது. உன் குணம் கண்டு, என் வருத்தமும் மறைந்தது. இப்போது நீ பேசியதைக் கண்டதும், உன் மீதும், வாத்சல்லியமும், வாஞ்சையும் வஞ்சமின்றி பல்கிப் பெறுகிறது கர்ணா.

வெற்றி உன் வசமாகட்டும் கர்ணா.

கர்ணன் : உங்கள் அன்பை அடைந்தது என் பாக்கியம். மிக்க நன்றி அரசரே.





வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Wed Jun 15, 2011 10:45 am

நாகாஸ்திரம் :

இருவருக்கும் இடையே போர் தொடர்ந்து நடைபெறுகிறது. இருவரும் அஸ்திரங்களின் மூலம் ஒருவருக்கு ஒருவர் பதில் சொல்லிக் கொண்டு இருந்தனர்.

பல விதமான அஸ்திரங்கள் இரு தரப்பில் இருந்தும் வெளியேற, அதைக் கண்ட மக்கள், இருவரில் யாரோ ஒருவரின் பக்கம் சேர்ந்து அவருக்காய், கோஷங்கள் எழுப்பி அவர்களை உற்சாகப் படுத்தினர்.

இது இவ்வாறு இருக்க, இந்த யுத்தம் பற்றிக் கேள்வியுற்ற அஸ்வசேணன் என்னும் நாகம், இந்த யுத்தத்தைக் காண வந்தது.

இந்த நாகம், அர்ஜுனனை பழி வாங்க வேண்டும் என பல்லாண்டு காலமாய் காத்துக் கொண்டு இருக்கும் நாகம். அர்ஜுனன், அக்னிக்காக, கான்டவ வனத்தை அழிக்கையில், தன் தாயின் கருவில் இருந்த இந்த நாகம், மிகுந்த இடர்களுக்கு இடையில் தப்பிப் பிழைத்து, தன் தாயைக் கொன்றவனைப் பழி வாங்கிடத் துடித்துக் கொண்டு இருந்தது.

கர்ணனும், அர்ஜுனனும், போரிடுகிறார்கள் என்பதை அறிந்து, வேகமாய் களத்தை அடைந்தது. அர்ஜுனனைக் கொல்லவென கர்ணன் வைத்திருந்த நாகாஸ்திரத்தில் சென்று புகுந்தது.

கர்ணனும், பல அஸ்திரங்கள் எய்து பார்க்க, அர்ஜுனன் அத்தனை அஸ்திரங்களையும் தடுத்தான். அர்ஜுனனின் அத்தனை அஸ்திரங்களையும் கர்ணன் தகர்த்தான்.

முடிவில் கர்ணன், நாகாஸ்திரத்தை எடுத்து, விஜயத்தில் தொடுத்து, நாணை முழு நீளத்திற்கு இழுத்து எய்யப் போகும் தருணம், கர்ணனின் குறியைக் கண்ட சல்லியன் கர்ணனிடம், அவன் கழுத்துக்கு குறி வைக்காதே, மார்புக்கு குறி வை என்றான்.

கர்ணன், அர்ஜுனன் மாபெரும் வீரன், அவன் உயிர் சில நிமிடங்கள் ஆனாலும் துடித்து இறப்பதை நான் விரும்பவில்லை. ஒரே நொடியில் வேதனை இன்றி அவன் இறக்கட்டும். இதோ அவன் கழுத்துக்கு குறி வைத்து எய்கிறேன் அம்பை என்றான்.

சல்லியன் மீண்டும் வலியுறுத்தினான், சொன்னாள் கேள் கர்ணா, அர்ஜுனனிடம், நாகாஸ்திரத்துக்கு தகுந்த பதில் அஸ்திரம் கிடையாது. எனவே கண்ணன் நிச்சயம் ஏதாவது சூழ்ச்சி செய்வான். எனவே நீ அவன் மார்புக்கு குறி வை என்றான்.

கர்ணன் : இல்லை என் மனம் ஒப்பவில்லை. இதோ அவன் தலையைக் கொய்கிறேன் என அம்பை விடுத்தான்.

நாகாஸ்திரம், நெருப்பைக் கக்கிக் கொண்டு அர்ஜுனனை நோக்கிப் பாய, அர்ஜுனன் தன் முடிவு நெருங்கி விட்டது என கையைக் கட்டிக் கொண்டு காத்திருக்க, அண்டசராசரங்கள் நடுநடுங்க, போரை ஆவலாய் காணக் காத்திருந்த தேவர்கள் மனம் பதைபதைக்க, நாகஸ்திரம் அர்ஜுனனை நெருங்கியது.

அந்த நேரத்தில், கண்ணன் தன் காலால் தேரை அழுத்த, அது, ஒன்னரை அடி மண்ணுக்குள் புதைந்தது.

அர்ஜுனன் தலையைக் கொய்ய வந்த நாகாஸ்திரம், அர்ஜுனனின் கிரீடத்தை(அர்ஜுனனுக்கு அவன் தந்தை இந்திரனால் வழங்கப்பட்டது) மட்டும் சுக்குநூறாக உடைத்தது.

அஸ்திரம் திரும்ப கர்ணனை வந்தடைந்தது.

சல்லியன் கோபம் :


சல்லியன் கர்ணனை அறிவுருத்தினான். கர்ணா, இதோ மீண்டு வந்த அஸ்திரம், இப்போதாவது அதை அர்ஜுனன் மார்புக்கு குறி வை. கர்ணன் அதை எடுத்து வில்லில் தொடுக்கும் போதுதான், தன் தாய்க்கு, நாகாஸ்திரத்தை ஒருமுறைக்கு மேல் அர்ஜுனன் மேல் பிரயோக்கிக்க மாட்டேன் என வாக்கு தந்தது நினைவுக்கு வந்தது. அஸ்திரத்தை மீண்டும் அம்பறாத் துணிக்குள்ளே வைத்து விட்டான்.

இலக்கை சரியாகத் தாக்காத அஸ்வசேணன் மீண்டும் வந்து, நான் தான் நீ எய்த அம்பில் இருந்தவன். என்னை நீ மீண்டும் உபயோகித்துக் கொள். அந்த பாவியைக் கொல்லாமல் விட மாட்டேன். தேவர்கள் அனைவரும் திரண்டு வந்தாலும் அர்ஜுனனை நான் கொல்வதை தடுக்க இயலாது. என்கிறது.

அதை கர்ணன் மறுக்கிறான். ஆயிரம் அர்ஜுனன்களை நான் அழிக்க வேண்டி இருந்தாலும், ஒரே அஸ்திரத்தை நான் ஒரு முறைக்கு மேலே உபயோகிக்க மாட்டேன்.

மேலும், வெற்றி என் திறமை மூலமாக எனக்கு கிடைக்க வேண்டும். அடுத்தவர் மூலம் கிடைக்கும் வெற்றி எனக்கு வேண்டாம் என மறுத்துவிடுகிறான்.

அஸ்வசேனன், இவனிடம் பேசிப் பயன் இல்லை என, தானே அர்ஜுனனைத் தாக்கச் செல்கிறது. அதை கண்ட கண்ணன், அர்ஜுனனுக்கு அந்த நாகத்தை அழிக்குமாறு ஆணை இடுகிறான். அர்ஜுனனும், அந்த நாகத்தை அழிக்கிறான்.

அஸ்திரத்தை கர்ணன், உள்ளே வைத்ததைக் கண்ட சல்லியன், கோபம் கொண்டு, அஸ்திரத்தை எடுத்து தாக்கு கர்ணா என்கிறான்.

கர்ணன் : (தாய்க்கு தந்த வாக்கு என்பதை சொல்ல இயலாத கர்ணன்) நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டாம். உங்கள் வேலை ரதத்தை செலுத்துவது மட்டும்தான். அதை செய்யுங்கள்

சல்லியன் : (இந்த பதிலில் ஆத்திரம் அடைகிறான் சல்லியன்)

இதன் பின்னர், கண்ணன், தேரினை பூமிக்குள் இருந்து வெளியே எடுக்கிறார்.

மீண்டும் இரு வீரர்களும், உயிரைப் பறிக்கும் அஸ்திரங்களை இருவரும் ஒருவர் மீது ஒருவர் எய்து கொண்டு போரிடுகிறார்கள்.

அர்ஜுனன், எய்த என்னன்ற அம்புகள் கர்ணனைத் தாக்க, கர்ணன் சோர்ந்து போகிறான். அப்போது அவன் முடிவு அவன் கண்களில் தெரிகிறது.

மரணம் தன்னை நெருங்கி வந்ததை கர்ணன் அறிகிறான் கால தேவனின் துணையுடன். “கர்ணா, பூமாதேவி உன் ரதத்தை தன்னுளே பிடித்து வைக்கப் போகிறாள்” கவனம் என எச்சரிக்கிறார்.

ஆனாலும், தேரின் சக்கரம், பூமிக்குள் புதைகிறது. தேர் அசைய மறுத்து நின்று விடுகிறது.

கர்ணன் : அரசரே, ரதத்தை மேற்கொண்டு செலுத்துங்கள்.

சல்லியன் : ரதம் இம்மி கூட நகராது. சக்கரம் மண்ணில் புதையுண்டு போயிற்று.

கர்ணன் : இறங்கி சரி செய்யுங்கள்

சல்லியன் : (கர்ணன் தன் சொல் பேச்சு கேட்க மறுத்த காரணத்தால்) அது என் வேலை அல்ல. என் வேலை ரதத்தை செலுத்துவது மட்டும் தான்.

கர்ணன் : இது என்ன வாதம். உடனே ரதத்தை மேலே கொண்டு வர ஆக வேண்டியதை செய்யுங்கள்.

சல்லியன் : முன்பே நான் துரியோதனனிடம் சொல்லி இருக்கிறேன், நீ என்னை அவமதிப்பது போல பேசினால், உன்னை விட்டு நான் விலகி விடுவேன் என்று. நீ என்னிடம் பேசும் முறை சரி இல்லை. நான் போகிறேன். நீயே உன் ரதத்தை சரி செய்து கொள்.

கர்ணன் : போர் முனையில் இப்படி என்னை நிராதரவாக விட்டுச் செல்வது நியாயம் இல்லை.

சல்லியன் பதிலேதும் பேசாது அவர் பாட்டுக்கு சென்று விட்டார்




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 10:46 am

மிகவும் மகிழ்ச்சி! தொடருங்கள்.....!!! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Wed Jun 15, 2011 10:47 am

கர்ணனின் முடிவு :

அர்ஜுனனுக்கு கர்ணன் இந்த நிலையில் இருக்கையில் போரிட விருப்பம் இல்லை. ஆனால் கண்ணன் ஆணை இட்டான். அவனைத் தாக்கு. தாக்கி அழித்துவிடு.

அப்போது

கர்ணன் : அர்ஜுனா, நில், என் தேர்ச்சக்கரம் மண்ணில் புதையுண்டு போயிற்று. கொஞ்சம் அவகாசம் கொடு. ஒரு நிமிடத்தில் அதை நான் சரி செய்து விடுகிறேன்.

அர்ஜுனன் மௌனமாய் அதற்கு சம்மதிக்க, கண்ணன், அர்ஜுனனி போரிடத் தூண்டுகிறான். அர்ஜுனன் பகவானை மகிழ்விக்க கர்ணனை தாக்கத் தொடங்கினான்.

கர்ணன் : தனியாய், சாரதி இன்றி, ரதமும் மண்ணிலே புதையுண்ட நிலையில் போரிடுவதுதான் வீரத்துக்கு அழகா??? அர்ஜுனா, நீ செய்வது நியாயமா?? கொஞ்சம் பொறு அர்ஜுனா.

கண்ணன் : தனியாய் வந்த சிறுவன் அபிமன்யுவை, மாவீரர்கள் அனைவரும் சேர்ந்து கொன்றீர்களே அது தான் வீரமா?? அதைச் செய்த வீரன் பேசும் வார்த்தைகளா இது??? சூதாட அழைத்தது நியாயமா??? வஞ்சகமாய், நாட்டை எடுத்துக் கொண்டது நியாயமா??? திரௌபதியை சபையில் துகிலுரித்து அவமானப் படுத்தியது நியாயமா??? இதை நீ செய்யாவிடினும், செய்தவர் பக்கம் இருந்து, அமைதியாய் வேடிக்கை பார்த்தது நீதானே???

கர்ணன் : எதுவும் பேசாமல், தன் சக்தி அஸ்திரத்தால் அர்ஜுனனை தாக்கினான். அது ஒரு கணம், அவனை நிலை குலையச் செய்ய, கர்ணன் அந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி, தன் தேர் சக்கரத்தை மண்ணிலிருந்து எடுக்க முயற்சித்தான்.

ஆனாலும், பிடித்திருந்தவள் பூமாதேவி அல்லவா??? விடுவாளா??? ஆன மட்டும் முயற்சித்தான் கர்ணன். அவனால் சக்கரத்தை வெளியே எடுக்க முடியவில்லை.

அந்தோ பரிதாபம், அப்போது தெளிவடைந்த அர்ஜுனன், கர்ணனைத் தன்னிடம் இருந்த சக்தி அஸ்திரத்தால் தாக்கினான்.

சரியாய் அவன் மார்பிலே பாய்ந்தது அஸ்திரம்.

அந்தக் கணத்தில் பரசுராமரின் சாபம் பலித்து, கர்ணனுக்கு, அஸ்திரங்களை ஏவும் மந்திரங்கள் மறந்து போக, உதவி அற்ற நிலையில், கர்ணன், புறமுதுகு காட்டாது, அர்ஜுனனின் அஸ்திரங்களை மார்பிலே ஏந்தினான்.

அம்பு மீது அம்பு விட்டான் அர்ஜுனன். ஆனாலும் கர்ணனின் உயிரை அவற்றால் தீண்டக் கூட முடியவில்லை. ஒரு கட்டத்தில், அர்ஜுனனின், மின்னல் வேக அம்புகள் அனைத்தும், மலர் மாலைகளாகி கர்ணனுக்கு விழத் துவங்கின.

குழம்பினான் அர்ஜுனன். விளக்கினான் கண்ணன்.

இதுநாள் வரையில் கர்ணன் செய்த தான தர்மங்களின் பலன் அவனைக் காக்கிறது. இரு வருகிறேன், என ஒரு வயோதிக ஏழை அந்தணன் வடிவெடுத்து கர்ணனிடம் செல்கிறான். (கர்ணன் திரைப்படத்தில் வந்தவை)

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா

மன்னவர் பணியேற்கும்
கண்ணனும் பணி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா

செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழுந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா

கர்ணனை நாடினான் கண்ணன்.

கண்ணன் : அய்யோ.. தருமம் இப்படி வீழ்ந்து கிடக்கிறதே. யாசிக்க வந்த நானோ ஏதும் பெற முடியாத பாவி ஆனேனே.

கர்ணன் : யாசகமா??? பெரியீர், ஏது வேண்டும்??? என்னிடம் இருக்கும் எதையும் பெறலாம். இப்போது உயிர் ஒன்றுதான் இருக்கிறது. அது வேண்டுமா?? இல்லை என்றேன் என்ற சொல் வராமல், இருப்பதைக் கேட்டுப் பெற்று இறக்கும் போதும் எனக்கு பெருமை வரச் செய்யுங்கள்

கண்ணன் : நீ செய்த தருமத்தின் பயனை எல்லாம் எனக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விடு. அதுபோதும்.

கர்ணன் : ஆகா... எவ்வளவு சிறந்த சேவைக்கு என்னை ஆளாக்கிணீர்.

(என கர்ணன், தான் செய்த தான, தர்மத்தின் பலனை எல்லாம், தன் உதிரம் கொண்டு கண்ணனுக்கு தாரை வார்த்துக் கொடுத்தான்)

கண்ணன் : கர்ணா, அழியாப் புகழோடு முக்தியும் பெறுவாய் நீ

கர்ணன் : எனக்கு முக்தியும் சித்திக்கும் என்று அருள் புரியும் நீர் யார்???

கண்ணன் : நானா?? இதோ பார்.... என விஷ்வரூப தரிசனம் தருகிறான்.

கர்ணன் : பரந்தாமா, தங்களின் கருனைதானா என்னை ஆட்கொண்டது?? என கைகளைக் கூப்பியபடி தொழுகிறான்.

(தொழுதவன் மயங்குகிறான், மாதவன், அர்ஜுனனிடம் சென்று இப்போது தொடு உன் கணையை, கர்ணன் கதை முடிந்து விடும். அவ்வாறே அர்ஜுனன் செய்ய, கர்ணன் உயிர் உடலை விட்டுப் பிரிந்தது)

கர்ணன் : அம்மா..ஆ...ஆ...ஆ...




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Wed Jun 15, 2011 10:51 am

கர்ணனின் உறவுகள் :


கர்ணனின் கடைசி ஓலம் அவன் அன்னையை எட்ட, விரைந்து வருகிறாள் போர்க்களத்துக்கு...

குந்தி : மகனே... மகனே... மகனே... என அலறித் துடித்து, கர்ணனை மடியில் ஏந்தி கதறுகிறார்.

சூரியன் : கர்ணா, என் மகனே... என நொடியில் தன் வெளிச்சக் கதிர்கள் இழந்து இருண்டு போகிறான்.

தருமர் : அன்னையின் குரல் கேட்டு, நகுலா, இறந்தது யார் அர்ஜுனனா?? இல்லை கர்ணனா?? அம்மா ஏன் மகனே மகனே என கதறுகிறார்???

நகுலன் : நான் அறிவேன் அண்ணா, நிச்சயம் இறந்தது கர்ணன்தான். ஆனாலும் அன்னை அழும் காரணம் தான் நான் அறியேன் அண்ணா.

தருமர்: சரி வாருங்கள் பார்க்கலாம் என சகோதரர்கள் நால்வரும் வருகின்றனர்.

குந்தி : மகனே... அய்யோ... சாகாப் புகழும், வளமும், நலமும், கொண்ட உன்னை விட்டு உயிர் பிரிந்ததா??? மகனே... என தன் மடியில் இருந்த மகனின் முகம் தொட்டு கதறிக் கொண்டு இருந்தால் இந்த அன்னை.

அர்ஜுனன் : அம்மா, என்னம்மா இது??

குந்தி : என் மகன். தன் உடன் பிறந்த சகோதரர்களான உங்களைக் காக்க தன் உயிரை ஈந்த என் முதல் மகன்.

அர்ஜுனன் : அம்மா....

குந்தி : ஆம் அர்ஜுனா, எனது தலை மகன் கர்ணன் தான்.

அர்ஜுனன் : அய்யோ.. என்னம்மா இது??? என் அண்ணனையா நான் கொன்றேன்?? அதிலும் அனைவரில் மூத்தவரையா நான் கொன்று விட்டேன்??? எதிரில் இந்த மாவீறனைக் கண்ட போதெல்லாம், அண்ணனைப் போல தோன்றியது இதனால்தாணா???

கிருஷ்ணா... கிருஷ்ணா... வஞ்சகன் நீ உன்னால் அல்லவா இந்த உத்தமனை நான் கொன்றேன்???


கிருஷ்ணன் : ம்ம்ம்ம்ம்.... ஹ ஹ ஹ... நான் கொன்றேன், நான் கொன்றேன் என ஏன் நீ வீணில் மார்தட்டிக் கொள்கிறாய்?? உன் ஒருவனால் அவனைக் கொல்ல முடியுமா??? முதலிலேயே நான் உன்னிடம் சொல்லி உள்ளேன்.

மாபெரும் வீரன் கர்ணன். அவனை தேவர்கள், மூவர்கள், ஏன் கடவுளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் கூட அவனைக் கொல்ல முடியாது. அளப்பரிய ஆற்றல் கொண்டவன்.

ஆற்றலில் அவன், தன் வழியே வரும் அனைத்தையும், பொசுக்கிடும் வலிமை கொண்ட நெருப்புக்கு சமம்.

வேகத்தில், கட்டுக்கடங்காமால் மோதும் மூர்க்கத்தனமான காற்றுக்கு சமம் அவன்.

சீற்றம் கொள்கையில், தன்னைக் கூட அழித்துக் கொள்வான் அவன்.

வலிமையான பண்பில், உடல் அமைப்பில், அவன் சிங்கத்துக்கு ஒப்பானவன்.

உயரமும், உயரத்துக்கேற்ற பருமனும், நீண்ட கைகளும், பரந்த மார்பும் உடையவன்.

வெல்லமுடியாதவன். கொல்லப்பட முடியாதவன். உணர்ச்சிமிக்கவன். தோள்கள் தினவெடுத்தவன்.

போர்க்கலையின் ஒவ்வொரு செயல்பாடுகளின் மீதும் வெறிபிடித்தவன்.

எதிரிகளை தினறடிப்பவன். அவன் நண்பரின் பயங்களை சிதறடிப்பவன்.

மொத்தத்தில் அவன் ஒரு நாயகன். இதுவரை நாயகனாய் இருந்த அனைவருக்கும் முதலானவன்.

சாபங்கள் எதுவும் இல்லாமல் இருந்திருந்தால், அழிவில்லாதவன் அவன். அழிக்க இயலாதவன் அவன்.

நம்பிக்கை எனும் சொல்லு இலக்கணம் அவன். விசுவாசம் எனும் சொல்லுக்கு பொருளானவன் அவன்.

நட்புக்கு, நடமாடும் உதாரணம் அவன். இறந்தாலும், இறவாமல் நம் நெஞ்சில் பொருந்தியன் அவன்.

கர்ணனின் சாவுக்கு பங்களித்த காரணிகள் இவை : (நன்றி விக்கிபீடியா)

1. கர்ணனின் சாவிற்கு முதல் மற்றும் முக்கிய காரணம் முனிவர் துர்வாசா ஆவார். அபர் குந்தியை ஆசீர்வதிக்கையில் மந்திரத்துடன் அவரது விருப்பத்திற்கு எந்த கடவுளையும் அழைக்கலாம் என்று ஆசீர்வதித்த அவர், அந்த மந்திரத்தின் பின்விளைவை அவரிடம் சொல்லவில்லை. எனவே, குந்தி அந்த மந்திரத்தின் பின்விளைவைப் பற்றிய விழிப்புணர்வின்றி தனது திருமணத்திற்கு முன்னதாக சூரியனை அழைத்தார். திடீர் பயத்தாலும் தொடர்ந்த தீய வழியினாலும் குழந்தை உருவானது. தேரோட்டி அதிரதாவினால் அவர் வளர்க்கப்பட்டதால் கர்ணனை க்ஷத்ரியராக ஏற்றுக்கொள்ளல் மறுக்கப்பட்டது. அஸ்தினாப்பூரின் சிம்மாசனத்திற்குரிய உண்மையான நபர் கர்ணன், யூதிஷ்திராவோ அல்லது துரியோதனனோ அல்ல, ஆனால் அவரது பிறப்பு ரகசியமாக வைக்கப்பட்டதால் இது அறியப்படவில்லை.

2. இராட்சத தேனீ வடிவத்தில் இருந்த பகவான் இந்திரன், கர்ணனின் தொடையைக் குடைந்தார். இது குரு பரசுராமரைக் கோபப்படுத்தியது, அவர் தொடர்ந்து கர்ணனை தனது சாதி பற்றி பொய்யுரைத்ததற்காக சாபமிட்டார். பின்னர் குருக்ஷேத்திராவில் நடக்கவிருந்த படுகொலைபற்றி பரசுராமருக்கு தெரியும் என்பது வெளியிடப்பட்டது. அர்ஜூனனுடன் போரிடும் முன்னர் இரவில் அவர் கர்ணனிடம் கனவில், உறுதியாக கௌரவர்களைத் தோற்கடிக்கவே கொடூரமான முறையில் அவரை நோக்கத்தோடு சாபமிட்டதாக விவரித்தார், கர்ணன் சாபத்தை பணிவுடன் ஏற்றுக்கொண்டதால், அவர் இறப்புக்குப் பின்னரும் எக்காலத்திற்கும் அழியாத புகழைக் கொண்டிருப்பார் என்று ஆசிர்வதித்தார்.

3. பசுவின் உரிமையாளரான பிராமணனின் சாபம்.

4. பூமாதேவியின் சாபம்.

5. பகவான் இந்திரனுக்கு தனது கவசம் மற்றும் குண்டலத்தை தன்னிடமிருந்து தானமாக அளித்தல், இந்த முறை அவர் பிச்சைக்காரராக மாறுவேடமிட்டிருந்தார், ஏனெனில் அவரது அதீத பெருந்தன்மைக் குணம்.

6. ஷக்தி ஆயுதத்தை கடோட்கச்சாவின் மீது செயல்படுத்தியது.

7. அவரது தாய் குந்திதேவிக்கு அளித்த அவரது இரண்டு சத்தியங்கள்.

8. அர்ஜூனனை கர்ணனின் நாகஸ்திரத்திலிருந்து காக்க கிருஷ்ணன் தேரை அழுத்தியது

9. குந்திக்கு தான் அளித்த இரண்டாவது சத்தியத்தின் பொருட்டு "நாகஸ்திரத்தை" இரண்டாவது முறை பயன்படுத்தாதது.

10. ஷால்யா, போர் மிகமுக்கியமான கட்டத்தில் இருந்த போது நடுவழியில் கர்ணனின் தேரை விட்டுச்சென்ற தேரோட்டி.

11. மகாபாரதப் போரின் ஆரம்பத்தில் கர்ணனுக்கு பாண்டவர்கள் தனது சகோதரர்கள் என்பது கிருஷ்ணர் மூலமாகத் தெரிந்தபோது, பாண்டவர்களின் மீதான கர்ணனின் பழிவாங்கும் எண்ணம் பயனற்றதானது. பாண்டவர்களின் மீதான கர்ணனின் பகைமை மறைந்தது. ஆனால், துரியோதனனின் மீதான விசுவாசத்தின் அடிப்படையில், கர்ணன் போரில் அர்ஜூனனுக்கு எதிராகப் போரிட முடிவுசெய்தார். மாறாக, பாண்டவர்கள் யாருக்கும் கர்ணன் அவர்களின் சகோதரர் என்பது கர்ணன் இறந்த பின்னர் வரையில் தெரியாது.

12. பகவான் கிருஷ்ணர், கர்ணன் தனது தேரை சேற்றிலிருந்து வெளியே கொண்டுவரும் போது அவரைக் கொல்லும்படி அர்ஜூனனை வற்புறுத்தினார்.

13. கர்ணன் ஆரம்பத்திலிருந்தே தனது தெய்வீக அம்பான விஜயாவை பயன்படுத்தவில்லை

14. கிருஷ்ணர் அர்ஜூனனை கர்ணனிடமிருந்து மூன்று முறை ஷக்தி, பார்கவா அஸ்திரா மற்றும் நாகாஸ்திரா ஆகியவற்றிலிருந்து காப்பாற்றினார்


துரியோதனன் : கர்ணா... என் நண்பா.. போய் விட்டாயா என்னை விட்டு??? அய்யோ... இதுவரை இருவரும் சேர்ந்து இருந்ததைப் போலே, நாணும் உன்னுடனே வந்திருப்பேனே நண்பா. வந்தாலும், செயற்கரிய செயலைச் செய்து நீ அடைந்த இடத்தை நான் அடைய முடியுமா???

நண்பா, என் பொருட்டு எதையும் நீ செய்வாய் என்பதை நான் அறிந்தே இருந்தேன். உன்னை நான் இழப்பேன் என கனவில் கூட எண்ணியதில்லை நண்பா.

என் உயிரே, உன் மீது நான் கொண்ட நட்புக்கு, நீ இத்துணை பெரிய தியாகம் செய்வாய் என் நான் அறியவில்லையே கர்ணா.

என்ன செய்து என் அன்பை இனி உனக்கு புரியவைப்பேன் என நீ கேட்டபோது நான் அறியவில்லை கர்ணா, உன் உயிரைத் தந்து அதை நீ உணர வைப்பாய் என..

நண்பா... கர்ணா... என் உயிரே....

சுபாங்கி : அத்தான்... என்னை விட்டு போய் விட்டீர்களா??? அய்யோ.. என் தெய்வம் என்னை விட்டுப் போய் விட்டதா??? என் உளம் வாடப் பொறுக்காத என் உயிர் என்னை வாட விட்டுச் சென்று விட்டதா???

சுபாங்கியின் தந்தை : மகளே.. சுபாங்கி... என தொடர்ந்து ஓடி வருகிறார்.

சுபாங்கி : பாருங்கள் அப்பா. பாருங்கள், நீங்கள் விரும்பாத உங்க மருமகனைப் பாருங்கள். என்னை வாழ்வித்த தெய்வம், மண்ணிலே வீழ்ந்து இருப்பதை பாருங்கள்.

சுபாங்கியின் தந்தை : கர்ணன், குந்தியின் மடியில் கிடப்பதைக் கண்டு.. உண்மை அறிந்து... மகளே... என கதறுகிறார்.

சுபாங்கி : அவர் இல்லாத உலகத்தில் எனக்கு எதுவுமே இல்லை. அவர் ஜீவன் இல்லாத, இடத்தில் நாணும் வாழ மாட்டேன். அத்தான்.. நீங்கள் வாழும் உலகிற்க்கே நாணும் வருகிறேன் அத்தான்... அத்தான்... அத்தான்... என கர்ணனின் மீது வீழ்ந்து சுபாங்கி இறக்கிறாள்.

சுபாங்கியின் தந்தை : கர்ணா, என் மருமகனே, போரிலே உன் வீரம் கண்டே, மனதளவில் உன் மீது மரியாதை அதிகரித்தது. உன் தீரத்தின் செருக்கில், எனது ஆணவச் செருக்கு அடியோடு அழிந்து போனது. போர் முடிந்ததும், உன்னிடம் மன்னிப்பு கேட்க எண்ணி இருந்தேனே... இனி நான் என்ன செய்வேன்.

யாரிடம் சென்று சொல்வது என் மனமாற்றத்தை??? சொன்னாலும் கேட்க முடியாது இடத்துக்கு சென்று விட்டீர்களே?? அய்யோ.. கர்ணா, மகனாய் உன்னை, மாளிகைக்கு அழைத்துச் செல்லலாம் என இருந்தேனே... என் ஆசை மண்ணோடு மண்ணாகிப் போனதே நான் என்ன செய்வேன்???

குந்தி : கர்ணா.. என் மகனே, தம்பிமார் ஐவரும் உன் தாள் பணிய, நீ முடிசூடி அரசாள வேண்டும் எனக் கனவு கண்டேன். கர்ணா..

தருமதேவதை : நீ ஏனம்மா அழுகிறாய்?? மலை போல் ஐந்து பிள்ளைகளை வைத்துக் கொண்டு கண்ணீர் வடிப்பது உன் போன்ற தாய்க்கு தகுமா?? எனக்கு இருந்தது ஒரே பிள்ளை. அவனையும் நான் இழந்து விட்டேனே. மகனே.. கர்ணா...

குந்தி : நீங்கள் யாரம்மா???

தருமதேவதை : தருமத்தின் தேவதை. எல்லாரும் சேர்ந்து என் மகனை கொன்று விட்டீர்களே?? உங்களுக்கு புகழ் உண்டா??? மோட்சம் உண்டா?? எனக்கென ஒரே ஒரு மகன் அவதரித்திருந்தான். அவன் பிறந்ததில் தருமம் தழைத்தது என சந்தோசம் கொண்டிருந்தேன்.

கிருஷ்ணா.. எத்தனையோ சதி செய்து, அவனை வாழ விடாது செய்தாயே. இது நியாயமா??? கருணைக் கடவுளுக்கு இது அடுக்குமா??

கிருஷ்ணன் : ஹ ஹ ஹ, தருமமாதா, அறம் அறிந்த நீயும் பிறர் போல புலம்புதல் சரியா??? என் செயல் விதி மாறி அமையுமா???

பரித்ராணாய ஸாதூநாம், விநாஷாய ச துஷ்க்ருதாம் |
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய, ஸம்பவாமி யுகே யுகே ||

For the up-liftment of the good and virtuous,
For the destruction of evil,
For the re-establishment of the natural law,
I will come, in every age




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக