புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_c10 
21 Posts - 66%
ayyasamy ram
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_c10 
10 Posts - 31%
Ammu Swarnalatha
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Rutu
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Baarushree
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Jenila
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
viyasan
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ணன் என் காதலன் - வேணி மோகன்


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 10:44 am

First topic message reminder :

கர்ணன் என் காதலன் - முகவுரை

மகாபாரதத்தில் ஈடு இணை அற்ற வீரனாய் நாம் அறிந்த கர்ணனை பற்றிய என் பதிவு இது. ஒன்றா, இரண்டா அவன் சிறப்பு. ஈகைக்கும், நட்புக்கும் அவன் தந்த மதிப்பு.. செய்நன்றி மறவாத அவனது பண்பு, தன்னிலே தான் கொண்ட நம்பிக்கை, பிற உயிரையும் தன் உயிராய் நினைக்கும் பாங்கு.

வாக்கு மாறாமை, அத்துணைக்கும் மேலே, இணையற்ற வீரம், என்னிலைக்கு போயினும் தன்னிலை மறவாத நேர்மை என இன்னும் உண்டு ஆயிரம்.

சிறு வயது முதலே, என்னை கவர்ந்தவன், வீரம், ஈரம், கம்பீரம், கொடை, ஆண்மை எனும் சொற்களுக்கு நான் உருவேற்றி இருந்த உருவம் கர்ணன். அதிலும் நடிகர் திலகம் நடிப்பில் கர்ணன் படம் பார்த்த போது, கச்சிதமாய் கர்ணனுக்குள் அவர் பொருந்திப் போனார்.

அந்தப் படமும் ஒரு காரணம் தான் கர்ணன் மீதான என் காதலுக்கு.

பிறந்தது முதலே விதியால் வஞ்சிக்கப்பட்டு, பல அவமானங்களுக்கு இடையே வளர்ந்தாலும் தன் திறமையை பிறர் புகழ வளர்த்துக் கொண்டவன். என் வாழ்க்கையில் கர்ணனை ஒரு முன் உதாரணமாய் கொண்டு நான் வாழ இன்னும் இருக்கின்றன நிறைய விஷயங்கள்

நிகரற்ற அந்த தூய வீரனைப் பற்றி நான் அறிந்த தகவல்களை உங்களுடன் பகிர விருப்பம். படித்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். தவறு இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்.

ஏற்கனவே நிகழ்ந்தது என சொல்லப்பட்ட நிகழ்வுகளும், கூட ஆங்காங்கே என் கற்பனையும் கலந்து நான் சொல்லப் போகும் கர்ணனின் கதைக்கு, உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
__________________
நட்புடன்,
வேணி மோகன்




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 10:58 am

பகுதி பத்து : அங்க தேசம்

அங்க தேசம் சென்று பட்டாபிஷேகம் எல்லாம் வெகு விமரிசையாக முடிந்து... பின்னர் கர்ண மாமன்னர் அரசவைக்கு வருகிறார்....

ஆவலாய் கூடி இருந்தது மக்கள் கூட்டம். அவர் தானத்தில் சிறந்தவர். தர்மத்தில் உயர்ந்தவர் என்பதை அறிந்த மக்கள்... இனிப்பைத் தேடும் எறும்புகளாய் அவர் அவை தேடி வந்தனர்..

புகழ் பாடி பரிசு பெற வந்த மக்கள் ஒரு வரிசையில், கர்ண மன்னரைக் காண வந்த மக்கள் ஒரு வரிசையில், மக்களை மதிக்கும் அவர் பண்புக்காய் அவரைக் காண வந்த மக்கள் ஒரு வரிசையில் என மக்கள் வெள்ளம் அலை புரண்டாலும், கரை தாண்டாது காத்திருந்தனர்.

மன்னர் புகழ் பாட வந்தவர்... ஒருவர் பாடல் ஆரம்பித்தார்....

(கர்ணன் படத்தில் வந்த பாடல்கள் இவை)

மழை கொடுக்கும் கொடை ஒரு இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடை ஒரு மூன்று மாதம்
பசு கொடுக்கும் கொடை அது நான்கு மாதம்
பார்திபனாம் கர்ணனுக்கோர் நாளும் மாதம்

அவர் முடித்ததும் மற்றொருவர் பாடுகிறார்...

நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்
நாடு தோறும நடந்து சிவந்தன பாவலர் கால்கள்
நர்போருளை தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம்
தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னர் திருக்கரமே

இவை நான் சொன்ன வரிகள் :

யாரும் உனக்கு எதுவும் தராவிடினும்
தருவார் யாரும் உனக்கின்றிப் போய்விடினும்
பெறுவதில் உள்ள சுகம் நீ அறியாமலே போய்விடினும்
கொடுப்பதில் வரும் சுகம் ஈடாகுமா அதற்கு??? என கொடுக்கவே
பிறந்தவன் நீ...

உனக்கென எதையும் எண்ணாது உன் நலம் என்றும்
எண்ணாது, பிறரை மகிழ்விப்பதிலே உன் உளம் மகிழ,
காண்போர் நெஞ்சம் நெகிழ, உளதே உன் வாழ்வு..

சீரான சீரிய சபையில்.. சிறுவன் ஒரு ஓடி வருகிறான்... காவலர்கள் துரத்த... அவர்களை நிறுத்தி காரணம் கேட்கையில்... (கர்ணன் படத்தில் கண்டு நான் நெகிழ்ந்த காட்சி)

சிறுவன் : மகாராஜா... மகராஜா.....

கர்ணன் : நில்... ஏன் இந்த சிறுவனை துரத்தி வருகிறீர்கள்...

காவலர் : பாட சாலைக்குத் தீ வைத்தான்... எனவே துரத்தி வந்தோம்... யார் தடுத்தும் முடியாமல் இவன் அரசவைக்குள் வந்து விட்டான் அரசே... மன்னிக்கவும்...

கர்ணன் : பாலகனே... யார் நீ ???

சிறுவன் : என் பெயர் மேகநாதன்..

கர்ணன் : உன் பெற்றோர்???

சிறுவன் : தாய் தந்தை அற்றவன், நான் ஒரு அநாதை...

கர்ணன் : என்ன ???

சிறுவன் : நான் கெட்டவனோ இல்லை அவர்கள் கெட்டவர்களோ... நான் அறியேன்...

கர்ணன் : என் இனமடா நீ.... ஆமாம்.. பாட சாலைக்கு தீ வைத்தாயாமே??? பாவம் அல்லவா அது. உன் போல் அறிவாளிகள் செய்யும் வேலையா இது??? தவறில்லையா???

சிறுவன் : அறிவில்லாதவர்கள் அப்படி செய்ய என்னைத் தூண்டினார்கள்...

கர்ணன் : என்ன சொல்கிறாய்?? எனக்கொன்றும் புரியவில்லையே...

சிறுவன் : என்னை பாருங்கள்.. படிக்கும் வயதல்லவா எனக்கு.... அறிவுப் பசி எடுத்து.. பல பாட சாலைகளைத் தேடித் போனேன்.. எங்கும் இடம் இல்லை.

கர்ணன் : ஏன்???

சிறுவன் : பிறப்பரியாதவன், அநாதை, தாழ்ந்தவன், உயர்ந்தவனோடு படிப்பது பாவம் போ.. என்று என்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டார்கள்

கர்ணன் : கொடுமை...

சிறுவன் : உண்மை... அந்த கொடுமை உங்கள் ஆட்சியில் நடக்கக் கூடாது என்றுதான் பாட சாலைக்கு தீ வைத்தேன்.. இது குற்றமா???

கர்ணன் : இல்லை.. குற்றம் இல்லை... மகனே... அரசுக்கே புத்தி சொல்லும் அறிவடா உனக்கு... உன் போன்ற சிறுவர்களுக்காக ஒரு அரசன் நாட்டில் செய்ய வேண்டியது என்ன என்பதை நான் உன் அறிவின் மூலம் புரிந்து கொண்டேன்...

அனைத்தையும் குறைவின்றி செய்து விடுகிறேன்... இப்போது என்னை மன்னித்து விடு...

(என அந்த சிறுவனிடம் தன் இரு கரம் குவித்து மன்னிப்பு கேட்டார்..)

நாடாளும் அரசன், மகா பராக்கிரமசாலி... வித்தைகளில் நிகர் அற்றவன்.. என எத்துனை இருந்தாலும், தன் தவறு என உணர்ந்த மாத்திரத்தில் மன்னிப்பு கேட்க தயங்கினான் இல்லை கர்ணன்...

ஆணைகள் பல இட்டு, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதங்கள் இன்றி அனைவருக்கும் கல்வி என பல புதிய திட்டங்கள் வந்தன கர்ணன் ஆட்சியில்... வாரி வழங்கும் வள்ளலாய் கர்ணன் இருந்ததால்... மக்கள் வளம் குறையாது... நிலை தவறாது... ஒழுக்கம் தவறாது... உயர்ந்த பண்புகளுடன்... இருந்தனர்...

தன்னை நாடி வருவோர்க்கு இல்லை எனும் சொல்லை சொல்லாது இருந்தான் கர்ணன்.... யார் வந்தாலும் என்ன கேட்டாலும் அதை தவறாது கொடுப்பவன் கர்ணன்... எனும் அளவு அவன் புகழ் நாடு கடந்து பரவி இருந்தது... தடையின்றி தரும் அவரது குணத்தால்... “தானசூரன்” என்னும் பெயர் கொண்டு இருந்தான்...

ஆதவனை வணங்கும் வழக்கத்தை மாறாது எப்போதும் கடை பிடித்து வந்தான் கர்ணன்...

ஒரு நாள் அப்படி இறைவனை துதித்து வெளி வருகையில்... காவலாளி அவரைப் பணிந்து, “ஒரு தள்ளாத முதியவர் உங்களைக் காண வந்திருக்கிறார் அரசே” எனக் கூறுகிறான்.

“பணிவுடன் அவரை அழைத்து வா” என காவலாளியைப் பணிக்கிறான் கர்ணன்....

தள்ளாடும் கருத்த மேனி.. தன் சுமை தாங்க முடியாது வில்லென வளைந்த முதுகு... கந்தல் உடை... என உள்ளே வந்தவரை வணங்கி வரவேற்று, ஆசனத்தில் அமர வைத்து ஆழ்ந்து நோக்கினான் கர்ணன் ......



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 10:59 am

பகுதி பதினொன்று : கர்ணனின் கொடை

கர்ணனிடம் தானம் பெற ஒரு முதியவர் வந்திருந்தார்... அவரைப் பற்றி இப்போது...

கர்ணன் ஆதவனை வணங்கி வெளி வருகையிலே... ஆதவனின் அசரீரி ஒலிக்கிறது. “கர்ணா உன்னிடம் தானம் பெற வந்திருப்பவன் இந்திரன்... உனது கவச குண்டலங்களை... உன்னிடம் பெற வந்திருக்கிறான். அவை உன்னிடம் உள்ள வரை உன்னை வெல்ல ஒருவரும் இல்லை உலகிலே...” என எச்சரிக்கை செய்தார்...

கர்ணன் : வர வேண்டும் முதியவரே.... வணக்கம்... தாமதத்திற்கு மன்னிக்கவும்...

முதியவர் : வணக்கம் மகாராஜா

கர்ணன் : (அவர் கரம் பிடித்து ஆசனத்தில் அமர வைத்து... அவரை நோக்கி) நான் என்ன செய்ய வேண்டு தங்களுக்கு என கேட்கிறான்

முதியவர் :

என்ன கொடுப்பான், எதைக் கொடுப்பான்
என்றிவர்கள் எண்ணும் முன்னே....
பொன்னும் கொடுப்பான்...
பொருள் கொடுப்பான்
போதாது போதாது என்றால்...
இன்னும் கொடுப்பான்...
இவையும் குறைவென்றால்..
எங்கள் கர்ணன்.. தன்னைக் கொடுப்பான்...
தன் உயிரும் தான் கொடுப்பான்....
தயாநிதியே....

(கர்ணன் திரைப்படத்தில் நான் கேட்ட வரிகள்... சொந்தமாய் எழுதலாம் என்று முயற்சித்தேன்... இந்த வரிகள் என் இதயத்தின் இமயம் தொட்ட அளவு என் வரிகள் தொடவில்லை.. எனவே அதே வரிகள்...கூடவே அதை ஒட்டிய உரையாடலும்..)

கர்ணன் : தள்ளாத வயது.. பாவம்....

முதியவர் : மன்னா, வாழ எனக்கு சகல வசதிகளும் உண்டு... ஆனாலும் எனக்கு ஒரு ஆசை... என்னிடம் இல்லாதது... உம்மிடம் உள்ளது அது.. அதை நான் உங்களிடம் இருந்து பெற்றால்... தந்த உமக்கும், பெற்ற எனக்கும், உவகை தருமே எனும் பேராசை...

கர்ணன் : தன் மந்தகாச சிரிப்புடன்... பேராசைதானே கேளுங்கள்....

முதியவர் : எதையும் மறுக்காது கொடுக்கும் தாங்கள், நான் கேட்கும் இதையும் தருவீர்கள் என நம்பி வந்தேன்...

கர்ணன் : பெறவே வந்தீர்கள்... தரவே இருக்கிறேன்.. இன்னும் என்ன தயக்கம்... தயங்காது கேளுங்கள்...

முதியவர் : தங்கள் உடலோடு ஒட்டிய கவசமும், செவியோடு ஒட்டிய குண்டலமும் எனக்கு வேண்டும்.... அளிக்க முடியுமா உம்மால்???

கர்ணன் : மந்தகாசம்... விரிந்து சிரிப்பாய் வெடிக்கிறது..

முதியவர் : மன்னா இந்தச் சிரிப்பு....

கர்ணன் : ஏன் ஏமாற்றம் தரத் தக்கதாய் இருக்கிறதா???

முதியவர் : ம்ம்ம்ம்

கர்ணன் : தள்ளாடும் தேகம், தள்ளாடாத நோக்கம்... பொய்யான நடிப்பு... அதில் அடங்கி இருப்பது மெய்யான பிடிப்பு... (இதை விடவா நான் என் வரிகளில் எழுதிடுவேன்...)

முதியவர் : நடிப்பா.... என்ன கூறுகிறீர்??? நான் கொண்டது வேஷமா????

கர்ணன் : ம்ம்ம்.... என்னிடம் வர வேஷம் வேண்டியதில்லை... இருந்தும்.. ஈடுபட்ட செயலின் தன்மை அப்படி பொய் உடம்பை போர்த்தி வரத் தூண்டியுள்ளது...

முதியவர் : கர்ணா .......

கர்ணன் : தேவேந்திரன்... விண்ணுலக அதிபதி....

(அவமானத்தில் கன்றி சிவந்த முகத்துடன் தேவேந்திரன் தன் உருவம் பெறுகிறான்....)

கர்ணன் : பணிவுடன் விழுந்து வணங்குகிறான்... தேவேந்திரா இது என்ன சோதனை... இல்லை என்ற சொல்லையே அறியாத இந்த மனிதனிடம் தெய்வம் தோன்றினால் போதுமே... உயிரையும் கொடுக்கத் தயங்க மாட்டேனே... கேவலம்... இந்த உடலைப் பிடித்திருக்கும் சிறு உறையையா கொடுக்க மறுத்து விடுவேன்... இதோ ஒரு நொடியில் வருகிறேன்...

(உள்ளே சென்று உயிர் வலிக்க, மெய் வலிக்க... பிறப்பு முதல்... இதுநாள் வரை தானோடு இருந்த, செவியோடு ஒட்டிய குண்டலங்களையும், உடலோடு ஒட்டிய கவசத்தையும், அறுத்தெடுத்து, அங்கம் தனில் குருதி ஒழுக, அந்த கவசத்தையும், குண்டலங்களையும், ஒரு தங்கத் தட்டில் வைத்து பணிவுடன் இந்திரனிடம் நீட்டுகிறான்)

(கர்ணனின் வலியையும், வேதனையும் கண்டு உள்ளம் கலங்குகிறான் இந்திரன்.... )

இந்திரன் : (உணர்ச்சிகளின் பிடியில் இருந்த இந்திரன்) கர்ணா .... நீ தெய்வத்திலும் சிறந்தவன்... உடலைச் சேவித்துக் கொடுத்து, கொடைக்கு சிகரம் கண்ட உத்தமன் நீ ... உன் உடலோடு பிறந்தவைகளை நீ இழந்ததால்... ஏற்பட்ட ஈனம் மறைந்து... அழகு உருவை நீ அடைவாய்... என வாழ்த்துகிறான்...

கர்ணனுக்கு... தன் உடலில் ஏற்பட்ட காயங்கள் மறைந்து... அறுந்துபோன காதும் முழுமை அடைந்தது...

தன் உடலோடு ஒட்டியதை இழந்தால்... தன் உயிரே போய் விடும் என்பதை நன்கு அறிந்தும் அதை... தன் உடலில் இருந்து அரிந்தும் தந்தவன்... உள்ளத்தால் எத்தனை உயர்ந்தவனாய் இருந்திருக்க வேண்டும்...

உளம் வேண்டுமா??? என் நாட்டின்
வளம் வேண்டுமா??? என் உயிர்
வேண்டுமா??? என என்ன எண்ணமடா
உனக்கு??

உயிர் போகும் நிலை வரினும்
பயிரான உன் கொடையின் தீரம்
கண்டதில் என் விழியில் ஈரம்

பலநாள் நீ நின்றிருந்தாய்
என் நெஞ்சத்தின் ஓரம்...

இன்றோ என் மனக் கடலின்
நீ இட்டது நங் கூரம்....



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:02 am

பகுதி பன்னிரெண்டு : துரியோதனன் பொறாமை :

இணையத்திலும்... சிலர் வாய் வழி கேட்கையிலும் நான் அறிந்த இந்த கதை... உண்மையில் நிகழ்ந்ததா என்பதை நான் அறியேன்.... கர்ணன் தொடர்பாய் நான் அறிந்தவை அனைத்தையும் இங்கே பகிர ஆசை. எனவே இந்த கதையும்....

கர்ணனின் கொடை பற்றி நாம் அறிவோம்... அவனிடம் யார் வந்து என்ன கேட்டாலும் தயங்காது, இல்லை எனும் சொல்லே இல்லாது வாரித் தருபவன்... விடியல் முதல் இரவு வரை கூட்டம் கூட்டமாய் மக்கள் அவனிடம் வந்து, ஆடு, மாடு, நிலம், பொன், பொருள் என தாங்கள் விரும்பும் அனைத்தையும் பெற்றுச் சென்றனர்...

அவன் புகழ் பாடும் மக்கள் எங்கும் நிறைந்து இருந்தனர்.... கர்ணனின் புகழ் நாள்தோறும் வளரக் கண்டு... ஒரு சிறு பொறாமை எட்டிப் பார்த்ததாம் துரியோதனுக்கு...

(இதில் தான் எனக்கு கொஞ்சம் உடன் பாடு இல்லை... ஏன் எனில், துரியோதனன் அவையில், அவன் புகழ் பாட வருவோரை எல்லாம் கர்ணன் புகழ் பாடச் சொல்லிக் கேட்டவன், கர்ணன் புகழில் பொறாமை கொள்வானா?? என்ன??? சரி... கதைக்கு வருவோம்...)

கர்ணன்.. ஒரு சிறு நாட்டுக்குத்தான் அதிபதி.. நான் எல்லையற்ற பெரிய நாட்டின் இளவரசன், என்னால் கர்ணனைப் போலே ஆயிரம் மடங்கு தானம் செய்ய முடியும் என, எண்ணம் கொண்டு, அவனும் தான தர்மங்களை செய்து வந்தானாம்.

அவனிடம் பொருள் பெற்றவர்களும்... அவனை புகழத்தான் செய்தனர்... ஆனாலும் கர்ணனை புகழும் அளவு என்னைப் புகழ வில்லையே என மனதில் ஒரு ஆற்றாமை அவனுக்கு இருந்ததாம்...

அப்போது, அவனுக்கு கர்ணனின் சிறப்பை காட்ட வேண்டும் என இந்திரன் முடிவு செய்து... ஒரு பிராமணன் போல தோற்றம் கொண்டு துரியோதனனி காண அவன் அவைக்கு வந்தார்...

(கர்ணன் புகழ் பரப்ப சரியா ஆள் இவர்தானே... தானம் தர தன்னை எந்த அளவு கர்ணன் வருத்திக் கொள்வான் என கண்ணாரக் கண்டவர் அல்லவா???)

துரியோதன் : ஏ பிராமணனே... என்னிடம் இருந்து நீ பெற வந்தது என்ன?? என்ன வேண்டுமோ தயங்காமல் கேள்... எதுவானாலும் இக்கணமே அளிப்பேன் என இறுமாப்புடன் கூறுகிறான்.

இந்திரன் : (உனக்கு இத்துணை ஆணவமா என உள்ளுக்குள் நகைத்துக் கொண்டு) இளவரசே... நான் விரைவில் ஒரு யாகம் தொடங்கவிருக்கிறேன். அதற்கு தேவையான விறகுகள் கொடுத்து உதவினால்... போதுமானது..

துரியோதனன் : இத்துணை பெரிய ராஜ்யத்தின் மன்னனாகப் போகும் என்னிடம் இருந்து கேட்க வெறும் விறகுதானா தெரிந்தது உமக்கு... சரி உங்கள் அதிர்ஷ்டம் அவ்வளவுதான் போலும். உம் விருப்பப் படியே தேவையான விறகுகளை பெற்றுக் கொள்ளுங்கள்...

இந்திரன் : துரியோதனனை மிகப் பாராட்டி பேசிய பிராமணர்... கருணை உள்ளம் கொண்ட இளவரசே, நான் நடத்த இருக்கும் யாகம் இன்னும் பத்து நாட்கள் கழித்து தான். இப்போது விறகுகளை நான் பெற்றால், அதை சேமித்து வைக்கவும், மழையிலிருந்து காக்கவும் என்னிடம் போதிய இடம் இல்லை.

எனவே... நான் பத்தாம் நாள் வந்து விறகுகளை தங்களிடம் இருந்து பெற்றுக் கொள்கிறேன்... என பணிவுடம் சொல்ல...

துரியோதனனும் அவரது வேண்டுகோளை ஏற்றான்...

இந்திரன், வருணனை அழைத்து, துரியோதனனின் நாட்டில் மழை பொழியச் செய்தார்.

நாட்டில், எரி, குளம், நீர் நிலைகள் எங்கும் நீர் நிறைந்து விட்டது... இடை விடாது பெய்த மழை காரணமாக நாடே வெள்ளக் காடானது.. அனைத்தும் மழை நீரில் நனைந்தது.. ஒரு துரும்பு கூட நனையாமல் இல்லை...

பத்து தினங்களுக்கு பின் மழை நின்று... கதிரவன் மெல்ல எட்டிப் பார்த்தான். தன் கதிர்களால் மக்களை மகிழ்சியில் ஆழ்த்தினான்...

இந்திரன் மீண்டும் ஏழை பிராமணனாக வடிவம் எடுத்து துரியோதனன் அரண்மனைக்குச் சென்றான்...

இந்திரன் : பணிவுடன் வணங்கி, இளவரசே, இன்று என் யாகம் தொடங்குதிறது... எனக்கு வாக்களித்தவாறு விறகுகளை வழங்க வேண்டுகிறேன்...

துரியோதனன் : (கொஞ்சம் மனக் கிலேசம் கொண்டான் துரியோதனன்... அவருக்கு விறகு தரக் கூடாது என்பது அவன் நோக்கம் அல்ல... இப்போதைய சூழ்நிலையில் அவனால் காய்ந்த விறகுகள் தர முடியாது... அனைத்தும் நனைந்து போய் விட்டது... இதனால் அவன் மிக வருந்தினான்.)

பிராமணரே மன்னித்துக் கொள்ளுங்கள்... பத்து தினங்களாக இடை விடாது பெய்த மழையில் விறகுகள் அனைத்தும் நனைந்து போய் விட்டன. தற்சமயம் உங்களுக்கு விறகுகள் தர முடியாத நிலையில் நான் உள்ளேன்.

உங்கள் யாகத்தை சிறிது தினங்கள் தள்ளி வைத்துக் கொண்டால் நான் வாக்களித்த படி உமக்கு விறகுகளை தந்து விடுகிறேன்...

இந்திரன் : இளவரசே, உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் தாங்கள் அளித்த வாக்கை காப்பாற்ற வேண்டாமா??? நான் முதலில் கேட்ட போது ஒப்புக் கொண்டு இப்போது யாகத்தை தள்ளி வைக்கச் சொல்வது முறையா??? யாகம் என்பது நல்ல நாள், பார்த்து செய்வது அல்லவா??? அதை நான் எப்படி தள்ளி வைக்க முடியும்???

துரியோதனன் : (பிராமணன் பேச்சைக் கேட்ட துரியோதனன் மனம் மிக வருந்தியது... ஆனாலும் அதை வெளிக்காட்டாமல்... மீண்டும் சொன்னான்) என் கையில் என்ன உள்ளது ஐயா... ஒரு துரும்பு கூட மிஞ்சவில்லையே.. மழைக்கு.... அனைத்துமே ஈரமாகி விட்டது...

இந்திரன் : நீங்கள் சொன்ன சொல்லை காக்கத் தவறி விட்டீர்கள்... இது நியாயம் அல்ல... நான் யாகம் செய்ய இப்போது என்ன செய்வேன்... என மீண்டும் மீண்டும் கேட்க...

பணிவாய் பதில் சொல்லிக் கொண்டிருந்த துரியோதனனுக்கு கோபமும் வந்தது....

துரியோதனன் : இந்த நிலையில் நான் எப்படி என் வாக்குறுதியை காக்க இயலும்??? புத்தி உள்ளவர்கள் உம்மை போல பேசுவார்களா??? இனி உம்முடன் பேச நான் தயாரில்லை... நீங்கள் போகலாம்....

இந்திரன் : ஆம் புத்தி இல்லாதவன் தான் நான்... போயும் போயும் உம்மிடம் வந்தேனே.. விறகுகளை பெற... உம்மிடம் வராது கர்ணனிடம் நான் சென்றிருந்தால்... தன் உயிர் கொடுத்தாவது அவன் தன் வாக்கை நிறைவேற்றி இருப்பான்.

இப்போதும் தான் என்ன... நான் அவன் அரண்மனைக்கு சென்று... அவரிடம் விறகுகள் பெற்று போய் என் யாகத்தை நடத்துவேன்... எனக் கூறிச் வெளியேறினார்...

இது, துரியோதனனின் சுய கௌரவத்தை பாதித்தாலும், இந்த சூழ்நிலையில் கர்ணன் மட்டும் என்ன செய்து விட முடியும் என தன் உள்ளத்தை தேற்றிக் கொண்டான்...

பின்னர் அந்த பிராமணர் கர்ணன் அரண்மனைக்குச் செல்கிறார்... கர்ணன் அவரை பணிவுடன் வரவேற்று... தன்னால் அவருக்கு ஆக வேண்டியது என்ன எனக் கேட்கிறார்...

பிராமணர் தனக்கு வேண்டியதை சொல்ல... கர்ணன்... மனதுக்குள் யோசிக்கிறான்... நல்ல நாள் பார்த்து செய்யும் யாகத்தை தள்ளிப் போட முடியாது... காய்ந்த விறகுக்கு எங்கே போக என சிந்தித்த வாறே... மேலே பார்க்க....

கூரையைத் தாங்கி நின்ற விட்டங்களும், சட்டங்களும் அவன் கண்ணில் பட... உடனே பணியாளர்களை அழைத்து அரண்மனையின் ஒரு பாகத்தை இடித்து... அதில் உள்ள மரங்களை சேகரிக்கக் கட்டளை இட்டான்... விரைவிலே... யாகத்திற்கு தேவையான விறகுகள் கிடைத்தன...

அதை ஒரு வண்டியில் ஏற்றி... வண்டியுடன் விறகுகளை எடுத்துச் செல்லுமாறு... கர்ணன் அந்த பிராமணனை வேண்டினான்...

கர்ணனை மனதாரப் பாராட்டி, அவனை வாழ்த்தி... பிராமணர் அங்கிருந்து கிளம்பினார்... துரியோதனன் அரண்மனை வழியே அந்த வண்டி போகையில்... அந்த பிராமணர், கர்ணனை புகழ்ந்து கொண்டே போக... தன் சுய கௌரவத்தையும் விட்டு, துரியோதனன் அந்த பிராமனரிடம் சென்று கர்ணன் மட்டும் எப்படி விறகுகளைத் தந்தான்-ன்னு கேட்டான்

பிராமணர் நடந்ததை சொல்ல... கர்ணனின் உண்மையான தர்ம குணத்தை துரியோதனன் பரிபூர்ணமாக உணர்ந்தான். அவன் மீது பொறாமை கொண்டது தவறு. உண்மையான ஈகை என்பது பணக்காரத்தனத்திலோ, பகட்டிலோ இல்லை... மனதில் தான் உள்ளது என்பதை உணர்ந்தான்...

கர்ணன் மீது தான் ஏற்கனவே கொண்ட... அன்பு பல்கிப் பெருகி... அவனுள்ளே கரை புரண்ட வெள்ளமாய் அலை அடித்தது....



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:03 am

கர்ணன் என் காதலன் - 13

இன்று மிக முக்கியமானதொரு தருணம் நம் ஹீரோவின் வாழ்வில்....

தன் வழக்கமான பயிற்சிகளை முடித்துக் கொண்டு கர்ணன் திரும்ப வருகையில், "காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்" என ஒரு பெண்ணின் குரல் கேட்க, குரல் வந்த திசையில் கர்ணன் விரைய, அங்கே அவன் கண்ட காட்சி.......

மிரண்டோடும் குதிரைகள் ரதத்தை இழுத்துச் செல்ல, சாரதியின் இருக்கையில், அதை கட்டுப் படுத்த இயலாத ஒரு பெண், கதறிக் கொண்டு இருந்தாள்....

இயல்பிலே இரக்க குணம் கொண்ட நம் கதாநாயகன், பாய்ந்தோடிச் செல்கிறார் அவளைக் காக்க... பாயும் குதிரைகள் மீள முடியாத பாதாளம் நோக்கிச் செல்ல, பாய்ந்த நம் காளை அந்த குதிரைகளை பெரு முயற்சி செய்து அதை கட்டுக்குள் கொண்டு வர, அதற்குள் பாதை முடியும் இடம் வர.....

வேறென்ன.... அந்தப் பெண் மயங்கி விட்டாள்....

ரதத்தில் இருந்த அவளை அருகிருந்த நீர் நிலைக்கு அருகே அள்ளிச் சென்று, அவள் முகத்தில் சற்றே நீர் தெளிக்க.... பதறி விழிக்கிறாள் அந்த அழகிய நங்கை....

இதுவரை அவள் நலம் கருதி பதறி இந்த நாயகனுக்கோ... பதற்றம் நீங்கி ரசனை வந்து ஒட்டிக் கொள்ள... அவன் நெஞ்சில் காதல் பற்றிக் கொள்ள.... இதோ அங்கே நடந்தவை...

பக்கத்தில்... ஒரு வீர, தீர ஆண்மகன்... தன்னை காத்தவன்... கண்டதும் நாணத்தில்... பேச்சின்றி தன் பெற்றோர்களிடம் செல்ல எத்தனிக்க...



அவள் நாணம் கண்ட ரசனையில்... அவள் பின்னே செல்கிறான் நாயகன்....

கர்ணன் : பயமா???................ நாணமா?????????.................. கோபமா??????

நாயகி : ம்ம்ம் ......

கர்ணன் : ஹ ஹ ஹ ... பெண்கள் தேரோட்டுவது வீரமான செயல்தான்... அதை எதிர்பாராது... குதிரை மிரண்டு ஓடியதுதான் தவறு... அதற்காக நீ வருந்தத் தேவை இல்லை... பயப்படாதே...

நாயகி : (சொல்லி விட்டு கர்ணன் திரும்பி செல்ல எத்தனிக்க.....) அச்சச்சோ... போகிறாரே என அவசரமாக
கடவுள் போல வந்து காப்பாற்றினீர்.... இல்லை என்றால்????

கர்ணன் : நாட்டின் ஒரு நல்லழகை காத்த பேரு எனக்கு இல்லாது போயிருக்கும்... இதை நிகழச் செய்த ஆணடவனுக்கு நான் தான் நன்றி கூற வேண்டும் ...

நாயகி : நானும் தான் நன்றி கூறிகிறேன்.... கடவுளுக்கு அல்ல... உங்களுக்கு....

கர்ணன்: ஆஹா... இந்தப் பேச்சு எனக்கு தெம்பைத் தருகிறது.... நிலவும், மலரும், தேனும் ஒன்று கூடி ஒரு பெண் ஆகி.. என்னை புகழ்வதைக் கேட்பது இதுதான் முதல் முறை ...

நாயகி : வசந்தம் வீசாத வேளையிலும் தங்கள் பேச்சு, உடலை குளிர வைத்து உள்ளத்தை இனிக்க வைக்கிறது ...

கர்ணன் : உனக்கு மட்டும் அல்ல, இனிமேல் இனிமை நமக்குச் சொந்தம்...

நாயகி : நமக்கு என்று நீங்கள் சொன்ன உறவைக் கேட்டதும் ... என் கண்களைப் பாருங்கள் ...

கர்ணன் : ஏன் கண்ணீர்???? இந்த ஆனந்தக் கண்ணீர் இனி தடை இன்றி பெருக வேண்டும்... அதில் நான் சலிப்பின்றி நீந்த வேண்டும்...

நாயகி : கவலை வேண்டாம்... அது எனக்கு சொந்தம்... கடலாகக் கூட இன்பக் கண்ணீர் பெருக்குவேன்...

கர்ணன் : பிறந்த பலனை பெற்று விட்டேன் ...

நாணத்தில் நாயகி அங்கே இருந்து ஓட ... கர்ணன் அவள் பின்னே ஓட, நாயகியைக் கானத்து பதறிய அவள் தோழி அவளைத் தேடி ஓடி வர, கர்ணனைக் கண்டவள் ...

தோழி : தங்கப் பதுமையின் அருகே வந்த பளிங்குச் சிலை போலே யாரம்மா இவர்???

நாயகி : நீ ஏனடி இங்கே வந்தாய்??

தோழி : நான் வந்தது பரவாயில்லை அம்மா, மகாராஜாவும், ராணியாரும் தங்களைக் காண வந்து விட்டனர் ... அதை சொல்லத்தான் நான் ஓடி வந்தேன் ...



இவர்கள் பேசிக் கொண்டு இருக்கையிலே தந்தை வரும் அரவம் கேட்டு, இங்கே கர்ணனை விட்டு விட்டு, அவர்கள் இருவரும் அவசரமாய் அவர்களை எதிர்கொள்ள விரைகின்றனர்...



நாயகியின் தந்தை : என்னம்மா இது??? ரதத்தை விட்டு இறங்கி இங்கே என்ன செய்கிறாய்????

நாயகியின் தாய் : சுபாங்கி ... (அப்பாடா ஹீரோயின் பேர் சொல்லியாச்சு...) உனைக் காணாது என்ன ஆனதோ என பதறி ஓடி வந்தோம் ...

நாயகி : ஒன்றுமில்லை அம்மா... வெப்பம் தாள வில்லை... தண்ணீர் அருந்தி வருகிறோம்... நீங்கள் போங்கள் அப்பா ... நாங்கள் பின்னால் வருகிறோம் ...

தந்தை : சுபாங்கி ... இந்த சந்திர சைல அரசனின் குலம் வளர்க்க இருக்கும் ஒரே குலக் கொடி நீ... உன்னை தனியே விட்டுப் போக விடுத்து நாங்கள் துடித்த துடிப்பு இன்று உயிரே ஆடி விட்டது ... ம்ம்ம்.... ம்ம்ம்... கிளம்பு போகலாம் ...

அவள் பின்னே ஓடி வந்த கர்ணன்... இவர்களைக் கண்டதும் தொடர முடியாது பின் தங்கி விட... பாவம் இவர்கள் பேசிய ஒன்றும் அவனுக்கு கேட்க வில்லை ...

ஊர் தெரியாது... அவள் பேர் தெரியாது கர்ணன் தவிக்க அவர்கள் மறுபுறம் திரும்பியதும் ஓடி சென்று சைகையில் அவள் பெயர் மற்றும் ஊர் என்னவென்று அவன் கேட்க...

தாய் தந்தையர் முன்னே செல்ல பேச இயலாத அவள் சைகை காட்டி அவள் ஊரைத் தெரிவித்து விட்டு சென்று விட்டாள்...

அவள் காட்டிய சைகை இதுதான்.... நெற்றிக்கு நேரே கையை வைத்துக் காட்டி... அதன் கீழே வளைவாய் ஒரு குறிப்பு காட்டி... இரு கைகளால்... மலை போல காட்டினாள்....


அஸ்திரங்கள் அனைத்தும் அத்துப்படி... தன்னிடம் தானம் பெற வருவோர் கேட்கும் முன்னே இன்னது தான் அவர்களுக்கு வேண்டும் என் அறிந்து அவர்கள் கேட்கும் முன்னே தருபவன்... வீரன்... சூரன்....



ஆனாலும் அந்தப் பெண் காட்டிய சைகை புரியவில்லை....


காதல் கொண்ட மனம் அவள் யாராய் இருக்கும் என கலங்கித் தவிக்க.... தூக்கத்திலும் அவளை எண்ணிப் பிதற்ற.... வலிமை பொருந்திய அரசனும் தன் வலு இழந்தான் காதலினால்....



காரிருளாம் அவள் கூந்தலின் நடுவே

ஒளிரும் சந்திரனாம் அவள் முகம்

பொன்னை ஒத்த நிறம் அவள் மேனி...

பஞ்சுப் பொதியை ஒத்த கணம் அவள் வதனம்

பிறை நெற்றியில் பதித்த நல்வயிரமாம் அவள் திலகம்

ஆளை இழுக்கும் நீர் சுழியாம் அவள் இரு கண்கள்...

எனைக் கண்ட நாணத்தில் அவள் முகம் கொண்டதே

தாமரையின் வண்ணம்... தங்கத்தில் பதித்த பவளமாய்

அவள் செவ்விதழ்கள்... ஐயோ... அவை எனை மொத்தம்

எரிக்கும் செந்தழல்கள்... வெண் மலர் கொண்ட அரும்பாம்

பற்கள்.. தேன் கொண்ட கனியாம் சொற்கள்... அவளின்றி

இருந்தேனே... இத்துனை நாள்... இனி நான் இருக்க இயலுமா...

ஒரு நாளும்????



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:04 am

பகுதி பதினான்கில் ஒன்று : என் காதலன்

கர்ணன் அங்கே தன் உள்ளம் கொள்ளை கொண்டு போன பெண்ணைப் பற்றிக் கனவு கண்டு கொண்டு இருக்க... அந்தப் பெண் இங்கே என்ன செய்கிறாள் எனக் காண்போம்...

கண்ணான காதலனை கண்னருகே கண்டு வந்தவள்...
கையோடு அவன் மனத்தைக் கொண்டு வந்தவள்...
மறந்தாளே தன் மனதை அங்கே தொலைத்து வந்ததை...

கடமைக்காய் தன் கடன்களைச் செய்தாளே அன்றி, ஒன்றிலும் அவள் மனம் ஒன்றவில்லை..

காண்பவரிடம் எண்ணம் செல்லவில்லை... அவர்கள் கேட்டாலும் இவள் பதில் சொல்லவில்லை... பசியில்லை... பசி இன்றி தோழியின் வற்புறுத்தலுக்காய் உண்டாலும் அதில் ருசி இல்லை...

எந்நேரமும் தன்னையே தொலைத்தவளாய், எங்கோ வெறித்த பார்வையுடன்... இருந்தாள்....

பின்னர் என்ன நினைத்தாளோ.... சித்திரமாய்... தன் காதலன் உருவத்தை வரைய ஆரம்பித்தாள்... அச்சடித்த காகிதமாய்... அவனை சித்திரத்தில் தொட்டு எடுத்தாள்.....

அடுத்ததை காட்டும் பளிங்காம் அவன் வண்ணம்
அவனையே காட்டும் பதக்கமாய் என் எண்ணம்
தேக்கின் வலிமையில் தேகம்.. வாக்கின்
இனிமையில் மேகம்.. குதிரையை அடக்கிய
வீரம், நான் விழுந்தேன் அவர் ஓரம்.. நான்
விழிக்கையில் என்னருகே அவர் முகம்...
வேண்டும் மீண்டும் எனக்கந்த வரம்

என்னவொரு பிரகாசம் அவர் கண்ணில்...
அதில்தான் பரவசம் இந்த பெண்ணில்..
குலம் அறியேன், அவர் வளம் அறியேன்..
அன்பர் அவர் பெயரும் அறியேன், நான்
அறிந்ததெல்லாம் ஒன்றுதான்... இனி
நானும் அவரும் ஒன்றுதான்...

என, வீசும் காற்றையும், ஆடும் மயிலையும், ஓடும் மேகங்களையும் கர்ணனுக்காய் தூது விட்டாள்...

பெற்றவரை மறந்தாள், தோழியை மறந்தாள், புன்னகை மறந்தாள், பொன்னகை துறந்தாள்...

இவள் நிலை காண சகியாத தோழி அவள்.... விசாரித்து... கர்ணனின் பெயரைக் கண்டுபிடித்து... தன் இளவரசிக்கு சொல்லி விட்டாள்...

யார் என அறியாத போதே... தன் மனதை இழந்தவள்... இன்னார்தான் என அறிந்த பின்னே... மொத்தமும் மறந்தாள்... என்று நான் என் மன்னவனைக் காண்பேனோ... என ஏங்க... அவர் நினைவில் தூங்க... இருவர் கனவிலும் மாறி மாறி... இருவரும் வர....

கற்பனையிலே போனது காலங்கள் பல.... இருவரும் காதல் கடலில் சிக்கி தத்தளிக்க... அவர் ஏக்கம் அடுத்த பகுதியில் தீரும்...



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:05 am

பகுதி பதினான்கில் இரண்டு : நட்பின் ஆழம்

இப்போது... நமது நண்பர்களிடம் வருவோம்... கர்ணன் மீது துரியோதனன் வைத்த அன்பின் அளவை, கர்ணன் அறிய வந்த ஒரு சந்தர்ப்பம் பற்றி காண்போம்... கர்ணன் படத்தில் இருந்து...

கர்ணனும், பானுமதியும் சொக்கட்டான் (அதாங்க... நம்ம தாயம் வெளையாடுவோமே.. அது) ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆட்டம் வெகு சுவாரஸ்யமாய் போகிறது... வெற்றி யாருக்கு எனும் நிலை வெகு அருகில்...

கர்ணன் : இந்த முறை எனக்குத்தான் வெற்றி ....

பானுமதி : அதுதான் நடவாது.. எந்த முறையும் வெற்றி எனதுதான்...

கர்ணன் : பெண்கள்.. எப்போதுமே தோல்வியை தாள மாட்டார்கள்... ஆகையால் நான் விட்டுக் கொடுத்தால் தான் உண்டு...

பானுமதி : ஆண்களுக்கு வீரம் அதிகம் இருக்கலாம்.. அறிவு பெண்களுக்கு தான் அதிகம்... இது அறிவு விளையாட்டு...

கர்ணன் : குழந்தைகள் சிறுகச் செய்தாலும் அதை பெரிதாய் பேசுவது மரபு... அதுபோல பெண்களின் சிறிய செயலையும் பெரிதாகப் பாராட்டுவது ஆண்களின் கடமை... அதைக் கொண்டு நீங்கள் அறிவோ திறமையோ அதிகம் படைத்தவர்கள் என அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம்...

பானுமதி : இப்படி ஒரு வீண் நினைப்பும், தற்பெருமையும் தான் ஆண்களுக்கு மிச்சம்... ஆனால் எதிலும் வெற்றி எங்களுக்குத்தான்...

கர்ணன் : ம்ம்ம்... பேசு பேசு... வெற்றி எனைத் தேடி வந்து கொண்டு இருக்கிறது பார்.... பிறகு உன் பேச்சு தானாகவே நின்று விடும்... ஹ ஹ ஹ ஹ

அப்போதுதான் துரியோதனன் உள்ளே வருகிறான்... வாயிலை நோக்கி அமர்ந்திருந்த பானுமதி கணவன் வருகையைக் கண்டு எழுந்திருக்க... வாயிலுக்கு முதுகை காட்டி அமர்ந்திருந்த கர்ணன் ....

கர்ணன் : எங்கே ஓடுகிறாய்.... என அவள் மடியை பிடித்து இழுக்க....

பானுமதி அணிந்திருந்த மேகலையின் (இது நம்ம ஒட்டியாணம்) முத்துக்கள்... சிதறி... அப்போதுதான் அங்கே வந்து நின்ற துரியோதனனின் காலடியில் உருண்டன....

துரியோதணன் : ஹ ஹ ஹ ஹ... எனக்காக நிற்க வேண்டாம் உங்கள் ஆட்டம்... வெற்றி வரை தொடரட்டும்.... சிதறிய முத்துக்களை நான் எடுக்கட்டுமா??? எடுத்து அவைகளை நான் கோர்கட்டுமா??

அச்சம் கொஞ்சம், கண்ணீர் கொஞ்சமாய்... பானுமதி ஒரு ஓரமாய் நிற்க...

தான் செய்த காரியத்தின் நினைவில்... கூனிக் குறுகி... கர்ணன் துரியோதனிடம் செல்கிறான்....

கர்ணன் : நண்பா...

துரியோதனன் : கர்ணா... என்ன நடுக்கம்??

கர்ணன் : விளையாட்டின் உற்சாகத்தில்... செய்தது யாதென அறியாது நான் மடியை இழுத்து விட்டேன்... என் மாபெரும் தவறை உணர்ந்து என் உடலெல்லாம் பதறுகிறது...

துரியோதனன் : எவ்வளவு அறியாத்தனம் உனக்கு??? தங்கையின் மடியைப் பிடித்து இழுத்ததில் அண்ணனுக்கு ஏன் இந்த தடுமாற்றம்??? உன்னையும், என் மனைவியையும் நான் நன்கு அறியாதவனா??? இந்தப் பேதைமை உன்னிடம் உதித்ததே பெரும் தவறல்லவா???

பானுமதி... இத்துணை நேரமும் சிறு அச்சத்தோடு இருந்தவளின் கண்கள்... தன் கணவனின் அன்பில் நெஞ்சமும், விழிகளும் நிறைய கணவனை நோக்குகிறாள்.....

கர்ணன் : கண்கள் குளமாக... உயிரே... என் தெய்வமே...

துரியோதனன் : கர்ணா... என இருவரும் ஆரத் தழுவிக் கொள்கின்றனர்...

எனை சந்தேகம் கொள்ளவும்,
தீயிட்டு எனைக் கொளுத்தவும்
தங்கள் கண் முன்னே கண்ட
காட்சி இருப்பினும், என்னிடம்
நீங்கள் கொண்ட நம்பிக்கையை
நான் காணும் போது.. மரணம்
எனக்கு மறு நொடி ஆயினும்
மகிழ்வோடு ஏற்பேனே... மன்னவா

என பானுமதியும்...

நண்பனின் மனைவி எனும் நினைவின்றி
விளையாட்டை ஒரு பொருட்டாய் கருதி
அதிலே மூழ்கிப் போய், நான் செய்த
காரியம்... கடவுளுக்கே அடுக்காதே

நண்பா... ஆனாலும், என் மீது எத்துனை
நம்பிக்கை நீ வைத்திருந்தால் இப்படி
ஒரு வார்த்தை நீ சொல்லி இருப்பாய்...
என் உயிரே...

என் உயிரினும் மேலான என்னவனே,
எனை ஆளும் மன்னவனே, இதன்
கைமாறாய் நான் என்ன செய்வேன்??
என் உயிரை நான் உன் பொருட்டு
இழந்தாலும் அதற்கு ஈடாகுமா???

நட்பெனும் சொல்லுக்கு பிறந்த என்
நற்சித்திரமே, நட்பு வானில் நீ என்றும்
ஒரு நட்சத்திரமே... உன்னை நான்
நீங்கேன் என் நண்பா... என் உயிர்
போகும் வரை...

என கர்ணனும்... இருக்க...

எனக்கும் இந்த நட்பின் ஆழத்திலும், மெய் அன்பிலே ஆழத்திலும்.... எனை அப்படியே ஆழச் செய்த காட்சி இது....

அநீதி செய்பவன், பிறர் உடமைக்கு
உடையவனாய் ஆக எண்ணியவன்,
என ஆயிரம் குறைகள் உன்னை
சொன்னாலும், சொன்னவருக்கும்
இல்லாத மனமடா உனக்கு... துரியோதனா....

அதிலும் பாருங்களேன்... என்ன அழகாய்... அவ்வை பாட்டி... “வரப்புயர” என ஒத்தை வார்த்தையில் ஒரு மன்னனை வாழ்தினாராமே... அது மாதிரி.... ரெண்டு வார்த்தையில் எத்துனை அழகாய் சொல்லி விட்டான் தன் மனதை....

சிதறிய முத்துக்களை... நான் எடுக்கவோ... கோர்க்கவோ....

முத்துக்கள் பொதுவாக வழுவழுப்பானவை... அதை எடுக்க பொறுமை நிறைய வேண்டும்.... என் பொறுமை குறையவில்லை என்கிறான்....

எடுக்கவே பொறுமை அத்துணை வேண்டும் எனில், அதை கோர்க்க.... வெகுவாய் நிதானமும் இருக்க வேண்டும்....

அந்த, அப்படி வழுவழுப்பான முத்துக்களை எடுக்கவும், கோர்க்கவும் வேண்டிய பொறுமையும் நிதானமும் என்னிடம் உண்டு... கவலை இன்றி நீங்கள் ஆட்டத்தை தொடருங்கள் என சொல்லுகிறான்...

என்ன மனிதனடா நீ??? என்ன மனமடா உனக்கு??? அத்துணை நம்பிக்கையா உனக்கு??? இத்துணை நல்லவனா நீ???



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:07 am

பகுதி பதினைந்து : யார் அந்தப் பெண்

பௌர்ணமி இரவு... பிரிந்திருக்கும் காதலர்களின், காதலை கொழுந்து விட்டு எரிய தூபம் போடும் குளிர்ந்த நிலவு...

தடையின்றி தன் வேலையை கர்ணனிடம் காட்ட... நிலவிலும் அவள் முகம்.... நினைவிலும் அவள் முகம்... கண் மூடிய கனவிலும் அவள் முகம்... என காணும் திசை எல்லாம், வேறு காட்சி ஏதும் இல்லை, தன் காதலி அவள் ஆட்சி அன்றி...

கற்பனையிலும், கனவிலுமே... அவர்களின் காதல் பெருகிக் கொண்டே இருக்க... அன்று தான் அவன் காதல் அவன் நண்பனுக்கு தெரியும் நிலை வந்தது...

துரியோதனனும், பானுமதியும், பௌர்ணமி ஒளியில் உலவி வர வெளியே கிளம்ப... உலவித் திரும்புகையில், கர்ணனின் அரண்மனை வழியே அவர்கள் செல்கையில்... சரி நண்பனை கண்டு செல்வோமே என இருவரும் இங்கே வர....

(கர்ணன் படத்தின் காட்சிகள் .......சற்றே நீண்ட காட்சி... என்வரிகளை விட அந்த வரிகளை நான் ரசித்ததால்... மாற்றம் ஏதும் செய்ய வில்லை...)

இருவரும் உள்ளே வரும் வேளையில்... கர்ணன் மஞ்சத்தில் இருந்து கீழே விழ...

துரியோதனன் : (பதறித் துடித்து...) கர்ணா....

கர்ணன் : (நெஞ்சத்தில் ஒரு கையை வைத்து.. ) ஆ.... வனமோகினி போல் வந்தவளே... உன் உயிரைக் காத்தவன் நான்... என் உயிரைக் கொள்ளை கொண்டு போகலாமா???

சுபாங்கி : இல்லை இல்லை... என் உயிரை நீங்கள் தான் கொள்ளை கொண்டு விட்டீர்கள்... (கற்பனையில் கூட அந்தப் பெண் ரொம்ப நன்றாக பேசுகிறாள்.)

கர்ணன் : ஆ... வந்துவிட்டாயா??? வா... வா.... என் அருகே வா... என அருகே இருந்த துரியோதனன் கரத்தை பிடித்து... கரமா இது... மலரல்லவா.??

துரியோதனன் : ஆமாம் ஆமாம்... மங்கையின் கரம் அல்லவா இது...

கர்ணன் : துரியோதனன் கரத்தை முத்தமிட்டு... மானே வா.. மயிலே... வா... கிளியே வா... என் அருகில் வா....

துரியோதனனும், பானுமதியும் ஆன மட்டும் சிரிப்பை அடக்கிக் கொண்டு... கர்ணனுடன் உரையாடலை தொடர்கின்றனர்...

அச்சோ.. பாவம் கர்ணன் துரியோதனனை முத்தமிட வேறு செல்கிறான்....

பானுமதிக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது...

கர்ணன் : ஆஹா.. என்ன இனிமையான சிரிப்பு... அப்படிச் சிரி...

இப்போது சிரிப்பது... துரியோதனனின் முறை ஆயிற்று...


கர்ணன் : மூடிய விழிகளை திறக்காமலே.. என்ன இது பயங்கரமான சிரிப்பு.?? என் மீது உனக்கு கோபமா???



துரியோதனன் : விழிக்காமல் இருந்தால் வேதனை அல்லவா??? வேறு.. எப்படி இருக்கும் என் சிரிப்பு...

கர்ணன் : கண்ணே... என் மீண்டும் துரியோதனனை தழுவச் செல்ல...



துரியோதனன் அவனை எழுப்ப விழைகிறான்...

துரியோதனன் : நண்பா... கர்ணா... நண்பா....

கர்ணன் விழித்து அருகே இருந்த துரியோதனனை கண்டவுடன்... நாணமும், அவமானமுமாய்... அந்தப் புறம் திரும்பிக் கொள்கிறான்...

பானுமதி : அண்ணா, இது எத்தனை நாளாக நடக்கிறது... நின்று கொண்டே தூங்கும் பழக்கம்??

கர்ணன் : நாணம் மிகக் கொண்டவனாய்... நீங்கள் எங்கே வந்தீர்கள் இந்த நேரத்தில்...

(அட..அட... பளிங்கு முகமும், பால் போன்ற நிறமும்... போய்... அந்தி நேர சூரியனாய் என் உள்ளத்தைக் கொள்ளவே/கொல்லவே வந்ததா... இந்த சந்தர்ப்பம்...)

துரியோதனன் : நல்ல நிலவு... உலவி வரலாம் எனப் புறப்பட்டோம்... இங்கே வந்ததும் உன்னை... பார்த்துப் போகலாம் என உள்ளே வந்தோம்...

பானுமதி : வந்தது நல்லதாகப் போயிற்று... வந்ததால்தான்... உங்கள் உயிருக்கு வந்த ஆபத்து புரிந்தது...

கர்ணன் : என் உயிருக்கு ஆபத்தா??? என்ன அது??? (ஐயோ பாவம் ஒண்ணுமே தெரியாது இவருக்கு.... )

இப்படி கேட்டது... பானுமதி... கர்ணனைப் போலவே... பாவனைகளை மாற்றிப் கொண்டு....

பானுமதி : ஆ... வனமோகினி போல் வந்தவளே... உன் உயிரைக் காத்தவன் நான்... என் உயிரைக் கொள்ளை கொண்டு போகலாமா???

அண்ணா... காதல் உரையாடல்.. கனவிலே உங்களிடம் பட்ட பாடு....

கர்ணன் : மீண்டும் நானச்சிரிப்பு... ஐயோ.... அவமானம்... அவமானம்.... அதுவும் உனக்கு தெரியும்படியாக இப்படி நடந்ததுவிட்டதே... இனி சாகும் வரை உன் நகைச்சுவைக்கு இந்த ஒரு விஷயம் போதுமே...

மூவருக்கும் சிரிப்பு வருகிறது...

துரியோதனன் : சரி சரி... இந்த விஷயத்தை உடனே கடுமையாக கவனித்தாக வேண்டும்...

பானுமதி : அதுமட்டும் அல்ல... நான் சாவதற்குள்... உங்களுக்கு சீக்கிரம் ஒரு கல்யானத்தை செய்து பார்த்து விடவேண்டும் என்று எனக்கு ஆசை கிடந்தது அடித்துக் கொள்ளுகிறது...

கர்ணன் : ஹ ஹ ஹ ..... இப்படி ஒரு பொறுப்புள்ள பாட்டி எனக்கு கிடைக்கவில்லையே என்றுதான் நான் ஏங்கிக் கொண்டு இருந்தேன்... பொறு.. நான் உண்மையைச் சொல்லி விடுகிறேன்...

பானுமதி : ஆ... அப்படி வாருங்கள் வழிக்கு...

கர்ணன் : கானகத்தில் நான் ஒரு பெண்ணைக் கண்டேன்...

துரியோதனன் : ஒ... அவள் அழகானவளா??

கர்ணன் : கதையைக் கேள்... அழகு எப்படி என்று தானே.. தெரியும்... அவள் ஒரு தேரை ஒட்டி வந்தாள்...

பானுமதி : அது ஒன்று போதுமே... உங்களுக்கு ... அவளைக் காதலிக்க... ()

கர்ணன் : கட்டுக்கடங்காமல் ஓடும் அதை நான் அடக்கி.. அவள் உயிரை நான் காப்பாற்றினேன்..

பானுமதி : ம்ஹூம்... அவமானத்தை எண்ணி அழுதிருப்பாள்.. உங்களுக்கா தெரியாது அவளை சிரிக்க வைக்க...

துரியோதனன் : ஆமாம்... அவளை சிரிக்க வைக்க நீ என்ன செய்தாய்???

பானுமதி : என்ன செய்திருப்பார்??? பேசி இருப்பார்... அவள் சிரித்திருப்பாள்... அப்படித்தானே என கர்ணனிடம் வினவ...

கர்ணன் : ஹ ஹ ஹ ஹ... அப்படித்தான் நடந்தது.. எப்படியோ அதை நீ அப்படியே சொல்லி விட்டாயே... எல்லா பெண்களுக்கும் இது இயற்கை போலும்...

துரியோதனன் : உண்மைதான்... எனக்கு, உன் தங்கைக்கும் ஏற்பட்ட அனுபவம் கூட கிட்டத்தட்ட அப்படித்தான்...

பானுமதி : வெட்கமும், கொஞ்சம் கோபமும் போட்டி இட... நீங்கள் பேசாமல் இருக்க மாட்டீர்கள்??? நம் கதை பழைய கதை... புதிய கதையில் அதைக் கொண்டு வந்து புகுத்தி குழப்பலாமோ??? வழக்கமானது என உணரும் போது ருசி குறைந்து விடாதா???

கர்ணன் : பலே.. தங்கையே... மனோதத்துவம் புரிந்தவள் நீ..

மூவரும் மீண்டும் சிரிக்க...

பானுமதி ; சரி.. சரி.. பிறகு???

கர்ணன் : பிறகென்ன... கரடி போல் வந்து விட்டனர் அவள் தாயும், தகப்பனாரும்... அவளால் என்னுடன் பேசக் கூட முடியவில்லை...

பானுமதி : ஐயோ.. பாவம்...

கர்ணன் : ம்ம்ம்ம்... ஊர், பெயர் ஒன்றுமே சொல்லவில்லை... கையால் ஜாடை காட்டி.. ம்ப்ச்...

பானுமதி : அடிப்பாவி.... அது சரி.. அவள் காட்டிய ஜாடைக்கு அர்த்தமாவது புரிந்ததா உங்களுக்கு???

கர்ணன் : புரிந்திருந்தால்... கனவா கண்டுகொண்டு இருப்பேன்... பறந்திருக்க மாட்டேனா அவள் இருப்பிடம் நோக்கி??

துரியோதனன் : ம்ஹூம்ம்... சரி என்ன ஜாடை செய்தாள்?? அதாவது நினைவு இருக்கிறதா???

கர்ணன் : அதை மறக்க முடியுமா??? என அன்று அவள் காட்டிய சைகையை மீண்டும் செய்து காட்டுகிறான்... செய்து விட்டு ஏக்கம் ததும்பும் காதல் பார்வை ஒன்றை பார்த்து இப்படி பார்த்து விட்டு போய் விட்டாள்... (அந்தப் பார்வை கூட கொள்ளை அழகு...)

பானுமதி : என்ன பெண் இவள்... இப்படி புரியாத ஒரு ஜாடையைக் காட்டி விட்டு போய் இருக்கிறாள்..

கர்ணன் : ஐயோ தங்கையே... உனக்குமா?? புரியவில்லையா?? என ஓய்ந்து போய் ஒரு இருக்கையில் சாய்கிறான்... நண்பா துரியோதனா...

துரியோதனன் : பானுமதி இவனை இப்படி தவிக்க விட்டு விட்டு என்ன செய்வது... என இருவரும் பேசிக்கொண்டே வெளியே செல்கிறார்கள்...

பானுமதி : உங்களுக்கு புரியவில்லையா??? நெற்றியைக் காட்டி, கீழே வளைவான குறி இட்டது சந்திரனைக் குறிக்கிறது... பின்னர் கையால் காட்டிய சைகை மலையைக் குறிக்கிறது...

துரியோதனன் : சந்திர மலை... அப்படி ஒரு நாட்டை நான் கேள்விப் பட்டதே இல்லையே...

பானுமதி : மலை எனும் சொல்லுக்கு சைலம் எனும் பொருளும் வரும்...

துரியோதனன் : சந்திர சைலம்... ஆஹா... அப்படி ஒரு தேசம் இருக்கிறது.... அதன் அரசர் நமக்கு நெருங்கிய நண்பர் தான்..

பானுமதி : அந்த நாட்டின் இளவரசிதான் அந்தப் பெண்...

துரியோதனன் : ஆஹா... அப்போது இவ்வளவு சுலபமாய் காரியம் முடிந்து விட்டது... இத்தனையும் சொன்னால் உன் அண்ணா அப்படியே பூரித்து விடுவான்... வா.. போய் சொல்லலாம்...

பானுமதி : இருங்கள்.. இதில் உங்கள் அவசரத்தைக் காட்ட வேண்டாம்... அவரிடம் சொல்லாமலே நாம் இதை முடிக்க வேண்டும்.. அப்போதுதான் அதிலும் ஒரு நகைச்சுவையை உண்டாக்கலாம்.

என் இருவரும் சிரித்துக் கொண்டே செல்கிறனர்..

இதை அறியாத கர்ணனின் நிலையோ வெகு பரிதாபம்...

யார் அவள்.. அந்தப் பூமகள்... என் உளம்
கவர்ந்த மான்மகள்.. பார்த்த நொடியில்
உச்சி முதல் பாதம் வரை உற்சவத்தில்
அலங்கரித்தாள்..

உச்சரித்த சொற்களிலே, உற்சாகத்தின்
உச்சியிலே ஏற்றி வைத்தாள்.. இருளடைந்த
உள்ளத்திலே அன்பின் தீபம் ஏற்றி
வைத்தாள்...

ஒளியாக வந்தவள், என் அக இருள் நீங்க
வந்தவள்... என் வாழ்வின் பொருளாய்
வந்தவள்... என் உள்ளம் கொத்தி எங்கே
சென்றாயடி கண்ணே...

உன்னை நான் காணும் நிலை வர வேண்டும்
விரைவில்... அல்லது என் உடல் மண்ணைக்
காணும் நிலை வந்துவிடும் விரைவில்...
வருவாயா பெண்ணே??? என் வசந்தமாய்...



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:08 am

பகுதி பதினாறு : கர்ணனின் நிச்சயதார்த்தம்

கர்ணனின் உள்ளத்தைக் கவர்ந்தவள் யார் எனத் தெரிந்தும், அவளைக் காணாது அவன் துடிக்கும் துடிப்பை நன்கு அறிந்த பின்னும், அமைதியாய் இருப்பார்களா, அவன் நண்பனும், சகோதரியும்??? கிளம்பி விட்டனர் சந்திர சைலத்திற்கு...

சீர் வரிசைத் தட்டுக்கள் அரன்மையை நிறைக்க... பொன்னும், பொருளும், மலரும், மணிகளும், அதிலே குவிந்து இருக்க... ஏகோபத்திய வரவேற்பு இருவருக்கும் அங்கே... இருக்காதா பின்னே.... இவர்களின் பேரரசுக்கு உட்பட்ட சிற்றசர் அல்லவா அந்தப் பெண்ணின் தந்தை...

இனி காட்சிகள் கர்ணன் திரைப் படத்தில் இருந்து...

பெண்ணின் தந்தை : விஷயத்தை சொல்லி ஒரு ஓலையை அனுப்பி இருந்தால்.. திருமணத்திற்கு நானே ஒப்புதல் தந்திருப்பேன். உத்தரவு இட்டிருந்தால்.. நானே நேரில் வந்திருப்பேனே... இதற்க்காக மகாராணியும் சக்கரவர்த்தியும் நேரில் வர வேண்டுமா??? என்றாலும் தங்கள் இருவர் வருகையால் எங்கள் இல்லம் பெருமை பெற்றது...

துரியோதனன் : எங்கள் வருகையால் மூன்று விஷயங்கள் பூர்த்தியாகின்றன..

ஒன்று : உலக வழக்கு... அதாவது பெண் கேட்டு வருபவர்கள் நேரில் வர வேண்டும் என்பது...
அடுத்தது... நாங்களே நேரில் வந்திருப்பதால்.. எங்கள் நண்பன், அங்க தேச மன்னன், கர்ணனின் தகுதி எத்தகையது என்பதை நீங்கள் அறிய வேண்டும்...
மூன்றாவது – மகாராணியின் ஆசை... அதை அவர்களே கூறுவார்கள்...

பானுமதி : எங்கள் வீட்டுக்கு வரும் மணப்பெண், எப்படி எப்படியெல்லாம் இருப்பாள், என்னென்னவெல்லாம் பேசுவாள், எதை எதை எல்லாம் செய்வாள் என்பதை அறிந்து, அதை முன்னதாகவே மணமகனுக்கு அறிவித்து, அவரை, இவள் நினைவுக்கு உள்ளாக்க வேண்டும் என்பதே எனது ஆசை..

பெண்ணின் தந்தை : தேவி சீக்கிரம் ராணியாரை பெண்ணிடம் அழைத்துப் போ...

பெண்ணின் தாயார் : தயை செய்யுங்கள் மகாராணி...

(என்னப்பா... இவங்க ரெண்டு பேருக்கும் ஒரு பேரை வெச்சிருந்தா அதை சொல்லிக் கூப்பிடலாம் இல்ல... ச்சே... )

மகள் இருக்கும் இடத்திற்கு பானுமதியை அந்த அம்மாள்... அழைத்துச் சென்று...

பெண்ணின் தாயார் : சுபாங்கி... துரியோதனச் சக்கரவர்த்தியும், அவரது தர்ம பத்தினியும், இப்போதுதான் வந்தார்கள்.. அவர்களை வணங்கிக் கொள்ளம்மா...

அந்தப் பெண் வந்து பானுமதியை வணங்க...

பானுமதி : நான் யாரைவாது ஆசீர்வதித்தால் அவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும்.. நான் உன்னை ஆசிர்வதிக்கிறேன்...

பெண்ணின் தாயார் : மகாராணி.. நீங்கள் பேசிக் கொண்டு இருங்கள்.. நான் வருகிறேன்... (இங்கிதம் தெரிந்த பெரியவர்கள்... )

பானுமதி : சுபாங்கி, உனக்கு பாடத் தெரியுமா???

சுபாங்கியின் தோழி : அவர்களுக்கு அதைத் தவிர வேறொன்றும் தெரியாது...

பானுமதி : நடனம்???

சுபாங்கியின் தோழி : ஆடாத நேரமே கிடையாது...

பானுமதி : ம்ம்ம்ம் .... சித்திரம் வரையும் பழக்கம் உண்டா???

சுபாங்கியின் தோழி : பிரமாதமாய்... ஆ... எழுதி இருப்பதை காட்டட்டுமா???

பானுமதி : (கோபம் வருகிறது...என்ன பெண் இவள், அவளைக் கேட்டால் இவளே பதில் சொல்லிக் கொண்டு... முந்திரிக் கொட்டை.. (ஜெயா நான் உன்னை சொல்லலே..) ) வேண்டாம்... என் முன் மான் போல் ஓடி வந்ததை பார்த்தேன்... ஆணை போல் நடந்து வரும் ஆணின் முன் எப்படி நடப்பாய் ...

சுபாங்கியின் தோழி : அன்னம் போல் நடப்பார்கள்.. அதுதான் இவர்களது இயற்கை நடை...

பானுமதி : ஆமாம்... உனக்கு பேசத் தெரியுமோ???

சுபாங்கியின் தோழி : ஒ... ஒரு கேள்வி கேட்டால் ஒன்பது பதில்கள் சொல்வார்கள்...

பானுமதி : (சுபாங்கியின் தோழியை நோக்கி) ஒ.. நீதான் சுபாங்கியா??

சுபாங்கியின் தோழி : இல்லையே... நான் அவர் தோழி.. என் பெயர் மங்களா... (அப்பா... இப்போதாவது பேரைச் சொன்னார்களே...)

பானுமதி : இதுவரை ஒன்பது பதில் சொன்னவள் நீதான்... எனவே நீதான் சுபாங்கியோ என நினைத்தேன்...

இதுவரை.. நாணத்தில் கவிழ்ந்த தலை நிமிராத... நமது கதாநாயகி... இப்போதுதான் பேசுகிறாள்...

மங்களா: மன்னியுங்கள் மகாராணி...

சுபாங்கி : மகாராணி.. பயத்தால் உங்களுக்கு மறுமொழி சொல்லாது இருந்து விட்டேன்... மன்னிக்கவும்

பானுமதி : சிம்மத்தைக் கண்டால் பயப்படலாம்...

சுபாங்கி : கருணை வடிவான கடவுளைக் கண்டும் பயப்படுவது உண்டு... (ஐஸ் ஐஸ் )

பானுமதி : என்னைப் புகழுவது எனக்குப் பிடிக்காது... இருந்தாலும்.. நயமான உன் பேச்சு எனக்கு பிடிக்கிறது...

சுபாங்கி : நாணப் புன்னகை...

பானுமதி : அடியே மங்களா... உன் தோழியின் வீரத்தைப் பற்றி உன் எண்ணம் என்ன???

மங்களா : தேரை ஓட்ட ஆரம்பித்தால், வீர ஆண்மகன் ஒருவர் வந்து குதிரையை அடக்கும் அளவுக்கு... வேகம் இருக்கும்...

சுபாங்கி : மங்களா... என்ன விளையாட்டு இது...

பானுமதி ; பரவாயில்லை... அதற்குள்ள வயதுதானே உங்களுக்கு... மங்களா...

உன் தோழிக்கு ஒரு நல்ல துணையைக் கொடுக்கத்தான் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்... என் அண்ணா கர்ணனுக்கும், உன் தோழி சுபாங்கிக்கும்.. திருமண நிச்சயம் இன்று நடைபெறுகிறது...

(வாக்கியத்தின் ஆரம்பத்தில் இருந்த விருப்பமின்மை... கர்ணன் எனும் பெயரைக் கேட்டதும்... பறந்து... நாணமும், ஆனந்தமும் போட்டி இட... அடடா... தங்கப் பதுமை... சிவந்த மலர்களின் கலவையாய் ஆனதே... )

பெரியோர்கள் சூழ அன்றே திருமணம் நிச்சயிக்கப் படுகிறது... திருமணமும் முடிகிறது.

(இதுவரை தான் அந்த திரைப்படத்தில் உள்ளது... அது ஏதோ.. திடீரென முடிந்து விட்டது போல ஒரு தோனல் எனக்கு. எப்படி பட்ட சம்பவம் அது... எனவே என் கற்பனைப் புரவியை தட்டி விட்டேன்... இனி வரும் வரிகள் என் கற்பனை....)

நிச்சயம் முடித்து விட்டு சுபாங்கி கர்ணன் உருவை வரைந்து வைத்திருந்ததை... பெற்றுக் கொண்டு தங்கள் ஊருக்குத் திரும்பினர்.. துரியோதனனும்.. பானுமதியும்...

கர்ணனின் இருப்பிடம் சென்று...

பானுமதி : என்ன அற்புதமான சித்திரம்... என்ன தத்ரூபம்...

துரியோதனன் : ஆமாம், அச்சு, அசலாய் அப்படியே உன் அண்ணனைப் போலவே உள்ளதே...

பானுமதி : இருக்காதா பின்னே.... ஒரு தரம் பார்த்ததிலே உள்ளத்தை தொலைத்தவள் அல்லவா???

கர்ணன் : என்ன இது.. யாரைப் பற்றி பேசுகிறீர்கள்... என்ன சித்திரம் அது.... எனக்கு ஏதாவது சொல்லலாம் அல்லவா??? (ஐயோ.. பாவம்)

பானுமதி : அதுவா.... யாரோ ஒரு பெண்... அவள்... தன் காதலனைக் கண்டது ஒரு முறைதானாம்... அவள் உயிரையே காப்பாற்றியவராம் அவர்.... அவர் உருவை வரைந்து வைத்துக் கொண்டு அதனோடு தான் தனிமையில் பேசுவதும், சிரிப்பதுமாம்...

கர்ணன் : (தன் காதலியோ என ஐயம் கொள்கிறான்...) எங்கே... அந்த சித்திரத்தைக் காட்டு பார்ப்போம்...

துரியோதனன் : அந்த பெண்ணும் மிக அழகானவள் தானாம்... தேர் ஓட்டுவதில் தேர்ந்தவளாம்....

கர்ணனுக்கே மனதில் முடிவே ஆகி விட்டது... இது தன் காதலிதான் என... அந்த சித்திரத்தைக் காணும் ஆவல்... அவள் பெயரைத் தெரிந்து கொள்ள ஆவல்... அவள் இடம் இன்னது என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல்... ஆனாலும் பானுமதியின் முன்னர் அதை வெளிப்படுத்த தயக்கம்...

(கிண்டல் பண்ணுவாங்க இல்ல... )

கர்ணன் : யார் அந்தப் பெண்??? அவள் பெயர் என்ன???

பானுமதி : (அத்துணை சீக்கிரம் சொல்லிவிடுவேனா என்ன என் மனதுள் எண்ணிக் கொண்டு...) அவள் நமது தேசத்திற்கு உட்பட்ட ஒரு சிற்றசரரின் மகள் தான்... அவள் பெயர் கூட... என நிறுத்தி விட்டு... யோசனை செய்வது போல் நடிக்க...

ஆவலாய்... பெயர் அறியக் காத்திருந்தவன்... உள்ளே கோபம் கொஞ்சம் எட்டிப் பார்க்க....

துரியோதனன் : என்னவோ... சொன்னார்களே.... அது... வந்து....

கர்ணனுக்கு... அழுகையே வந்து விடும் போல ஆகிவிட்டது.... (பாவம்... இப்படியா ஒருவனை வம்புக்கு இழுப்பது..)

பானுமதி : (என்ன இருந்தாலும் அண்ணன் அல்லவா... அவன் துயரை இவள் பொறுப்பாளா????) அவள் பெயர் சுபாங்கி அண்ணா... சந்திர சைல இளவரசி....

கர்ணன் : சு...பா...ங்....கி... சு.....பா.....ங்....கி..... என்ன இனிமையான பெயர்!!!!

துரியோதனன் : அது மட்டும் அல்ல நண்பா.... அவளுக்கும் உனக்கு மணமுடிக்க நிச்சயித்து வந்தோம்.... அடுத்த திங்கள்.. உன்னவள் உன்னுடன் இருப்பாள்....

பானுமதி : இந்தாருங்கள் அண்ணா... அந்தப் பெண் வரைந்த சித்திரம்... உங்களை அப்படியே வரைந்து வைத்திருந்தாள்....

இதை நான் கேட்க தன் உயிரையே பிரிவது போல எடுத்து தந்தாள்... தன் உயிரிடம் தான் அது போகப் போகிறது என்பதால்...

கர்ணன், உணர்ச்சிப் பெருக்கில் நிலை குலைந்து போகிறான்... தன் காதல் நிறைவேறிய மகிழ்ச்சி... தன் காதலை நிறைவேற்றிய தன் நண்பனிடம் நெகிழ்ச்சி... தன் உயிர் தன்னை வரைந்ததை பெற்று வந்து தந்த தங்கையிடம் நெகிழ்ச்சி... அனைத்தும் அவனிடம் சேர்ந்து இருந்ததில் நிறைய மலர்ச்சி...

இதுவரை... சூத்புத்திரன்... என்றே பலவாறு கேலி செய்யப்பட்டு... காயம் பட்டு... பட்டு.. காய்த்துப் போன மனதில்... நட்பும், சகோதரப் பாசமும், கைகூடிய நேசமும், அவன் நெஞ்சை நிறைத்து தள்ளாட வைத்தன....

கர்ணன் : நண்பா... என் உயிரின், உயிரே... எனை இன்பத்திலே ஆழ்த்தி... மகிழ்ச்சியின் உள்ளே வீழ்த்தி ... மகிழ்ச்சியிலே.. நான் என்றும் இருக்க, எனக்கென இருக்கும் நண்பா... என்ன தருவேன் உன் அன்புக்கு... ஈடாக....

மகிழ்வென்னும் உணர்வே, அறியாத எனக்கு
மகிழ்வன்றி வேறு உணர்வே இல்லாது போனதே.
இகழ்வென்று நாளும் இருந்திட்ட போதும், இன்று
புகழ் கொண்டு நாளும் புலரும் படி ஆனதே...

பெற்றவள் அன்பின்றி நானும் புளுங்கிட்ட போதும்
உற்றவளாய், என்னவளை நீ தந்திட்ட போதும்...
உறுதுணையாய், உற்ற துணையாய், என் அன்பு
அணையாய் இருந்தாயடா நண்பா....

உன் அன்புக்கு இணையாய்... நான் என்ன கொடுப்பேன்...
உன்னிடம் இருந்த பெற்றவை இந்த செல்வமும்,
குறையாத வளமும், மதிப்பற்றவை.. இவை.. உன்
மதிப்பில்லா அன்புக்கு ஈடாய்...

இனி நான் எடுக்கும் ஜன்மம் அனைத்திலும் உனக்கு
நான் நன்றிக் கடன் பட்டேனடா.. நண்பா... நட்பு எனும்
சொல்லுக்கு ஒரு நல்லுதாரணம் நீ... நான் உன்னை
அலங்கரிக்கும் தோரணம்...


என... கர்ணனின் என்ன ஓட்டம்... பிறவிகளைக் கடந்து போனது.... கூடவே அந்த சித்திரத்தில் தன் வருங்கால மனைவி தன்னை தீட்டி இருந்த பாங்கிலே... இவன் அனல் மேல் பணியாய் உருகித்தான் போனான்...

மனநாளும் வந்தது...



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:08 am

பகுதி பதினேழு : கர்ணனின் திருமணம்

கர்ணனின் திருமணம் இன்று... திருமணத்தில் போது நமக்கு புரியாத, நாம் அறியாத சடங்குகள் உண்டு ஏராளம்.... அத்தகைய சடங்குகள் எல்லாம் என்ன பொருள் கொண்டு நடக்கிறது என்பதை நான் அறிந்த வரையில் சொல்ல ஆசை... கர்ணனின் திருமணத்தை ஒரு குறை இன்றி நடத்த வேண்டும் அல்லவா???

(எனக்கு தெரிந்தவற்றை சொல்கிறேன்... ஏதேனும் விட்டுப் போனால் எனை வழி நடத்தும் பெரியவர்கள்... என் மீது கோபம் கொள்ளாது... எனை வழி நடத்துங்கள்... நன்றி..)

(நான் அறிந்தவையோடு, அறியாதவற்றை முறைப்படி அறிய வைத்த இணையத்துக்கும் என் நன்றி..)

நாள் நெருங்க நெருங்க... கர்ணனுக்கு பரபரப்பு கூடுகிறது... துரியோதனனுக்கும், பானுமதிக்கும் திருமணம் ஒரு சிறு குறை கூட இன்றி நடக்க வேண்டுமே... என உள்ளம் கிடந்தது அடித்துக் கொள்ளுகிறது... இப்போது அவர்கள் இடையே நடக்கும் உரையாடல்...

பானுமதி : (பரபரப்பாய் அமைதி இன்றி காணப்பட்ட தன் கணவரை நோக்கி) சுவாமி.. எதிரிகள் அவரை எதிர்கொள்ளும் போதும் தங்களை நான் இப்படிக் கண்டதில்லையே???

துரியோதனன் : கர்ணன் திருமணத்தை ஒரு குறைவின்றி நான் நடத்த வேண்டும் பானு...

பானுமதி : குறை ஒன்றும் வந்திடாது அதிலே... அனைத்தும் நல்லபடி நடக்க என்னால் ஆனா அனைத்தும் நான் செய்கிறேன்... நீங்கள் கலங்க வேண்டாம்...

துரியோதனன் : இல்லை.. கண்ணே... நான் அதை சொல்ல வில்லை... நான் என் நண்பன் நிலையை யோசிக்கிறேன்... பாவம்... பிறந்து முதலே.... இவர்கள்தான் தாய், தந்தை என் எத்துனை மகிழ்வாய், எல்லோரையும் போலே இருந்திருப்பான்...

அவன் அவர்களுக்கு பிறந்தவன் இல்லை என அறிந்த போது எத்துனை வருந்தி இருப்பான்... என்ன காயம் பட்டிருக்கும் அவன் நெஞ்சம்..

நானாய் இருந்திருந்தால்... காணாது போயிருப்பேன்... எத்துனை நெஞ்சுரம் கொண்டவன்... என்ன துன்பம் கொண்டிருப்பான் அவன் நெஞ்சில்... அதை என்றேனும் காட்டினானா வெளியே??

அவனைப் போய் வீசி எறிந்துவிட்டாளே... அவனைப் பெற்றவள். அவள் மட்டும் என் முன் வந்தால் பாரம்மா... நீ வேண்டாம் என விட்டெறிந்த பிள்ளை, எப்படி வளர்ந்திருக்கிறான் பார்... இவன் நண்பன் நான்... எனக் காட்டி பெருமைப் படுவேன்...

என்னிலிருந்து அவன் வேறு என என்னால் பிரித்து நோக்க இயலவில்லை... அவன் மனதில் ஒரு சிறு குறையும் இன்றி நான் இந்த திருமணத்தை நடத்தினாலும்... அவன் மனதில் அந்த அன்னையைப் பற்றிய வேதனை கொஞ்சமேனும் இருக்கும் அல்லவா??? அதனால் தான் வருத்தம்...

பானுமதி : வருந்த வேண்டாம் மஹராஜா, அன்னையைப் போல அன்பைப் பொழிய நீங்களும்.... உடன் பிறந்த தங்கையை அவரைத் தாங்க நானும் இருக்க, அவர் வருத்தம் போக்க நாம் ஆக வேண்டிய அனைத்தும் செய்யலாம்...

சரி.. சரி.. இப்படியே வருந்திக் கொண்டு இருந்தால்... உங்கள் நண்பர் வந்தால்.. அவருக்கு என்ன பதில் சொல்வீர்கள்... போங்கள் மன்னா... போய்.. ஆக வேண்டிய பணிகளுக்கு ஆவன செய்யுங்கள்...

இப்படி பேசிக் கொண்டு இருக்கையிலே... கர்ணன் அங்கே வருகிறான்...

துரியோதனன் : அங்க தேச அதிபதியே வருக... மன்னவனே வருக...

கர்ணன் : இது என்ன நண்பா... நீயுமா?? தங்கையே... நீயாவது சொல்லக் கூடாதா உன் கணவரிடம்.... என்னை இப்படி எல்லாம் சொல்ல வேண்டாம் என...

பானுமதி : அதுதானே... இப்படியா வரவேற்பது உங்கள் நண்பரை???

துரியோதனன் : பின்னே எப்படி???

பானுமதி : என்னைப் போல வரவேற்கக் கற்றுக் கொள்ளுங்கள்... “கொடை வள்ளலே.. வருக... ஈகையின் செம்மலே வருக....”

கர்ணன் : பலே... அடித்த இடத்தைத் துடைத்து விட்டு, மீண்டும் பலமாய் அதே இடத்தில் அடித்து விட்டாய்.... ஹ ஹ ஹ...

மூவருக்கும் சிரிப்பு வருகிறது...

பானுமதி : ஆமாம் அண்ணா... தங்கள் முகத்தில் ஏதோ ஒரு ஒளி கூடித் தெரிகிறதே... என்ன அது???

துரியோதனன் : ஆம் நண்பா... நாளுக்கு நாள் உன் தேஜஸ் அதிகமாவது என்ன விந்தை???

கர்ணன் : இது என்ன விந்தை???

துரியோதனன் : எல்லாம் இந்தக் காதல் படுத்தும் பாடு...

பானுமதி : இருக்காதா பின்னே... அதுவும் வரப்போகிறவள் இவருக்கு ஏற்ற துணை அல்லவா??? கற்பனையிலே எனக்கு காணத் தெவிட்டவில்லை... அவள் ரத்தத்தை ஓட்ட.. இவர் பின்னே அமர்ந்து செல்வதை...

கர்ணன் : போதும் போதும்... இன்று உன் நகைச் சுவைக்கு நான்தானா அகப்பட்டேன்... இதோ நான் கிளம்பி விட்டேன்...

பானுமதி : எங்கே கல்யாண வேலைகளை கவனிக்கவா??? ஆனாலும் இத்துணை அவசரம் கூடாது அண்ணா உங்களுக்கு...

துரியோதனன் : ஹ ஹ ஹ... கர்ணா... போதுமா உனக்கு???

கர்ணன் : அது சரி தங்கையே... இந்த திருமணம் பற்றி உன் எண்ணம் என்ன??? அதிலே ஏன் இத்துணை சடங்குகள் உள்ளன.

அதன் பொருள் எல்லாம் என்னவென்று எதுவும் தெரியவில்லை... விளக்கிச் சொல்லி எனக்கு விளங்க வைப்பாய் தங்கையே...

துரியோதனன் : சொல்லு தேவி... நானும் கேட்கிறேன்...

பானுமதி : திருமணம் எனும் சொல்லே ஒரு அழகான பொருள் கொண்ட சொல்தான்

திரு – என்றால்... மதிப்புக்குரிய... மரியாதைக்குரிய... என்றும் தெய்வத்தன்மை கொண்டது என்றும் பொருள்.. மணம் - எனும் சொல், வாசனை மற்றும் இணைதல் என்றும் பொருள் தரும். தெய்வீகத் தன்மை கொண்ட இணைதல், இருமனங்களின் இணைதல் என்றும் பொருள் வரும்...

கர்ணன் : அட இந்த விளக்கம் புதிது... சரி.. அதற்கேன் அத்துணை சடங்குகள்???

பானுமதி : சடங்குகள் அனைத்துமே ஒவ்வொரு உள்ளார்த்தம் கொண்டவை..

முதல் சடங்கு பொன் உருக்குதல்... அடுத்து...

கர்ணன் : அதென்ன பொன்னை உருக்குதலா??

பானுமதி : ஆம் அண்ணா... திருமாங்கல்யத்திற்குரிய தங்கத்தை கோவிலில் வைத்து பூசை செய்து பின்னர் ஒரு தட்டில் மங்கல பொருட்கள் அனைத்தும் வைத்து கொண்டு வந்து பூஜையறையில் வைக்கவேண்டும். பொன் உருக்கும் நாள் அன்று அதை மணமகனின் பெற்றோர் அல்லது பெரியோர் எடுத்து மணமகனிடம் கொடுக்க அவர் அதை பொற்கொல்லரிடம் கொடுத்து உருக்கவேண்டும்.

அவர் கும்பம் வைத்து விளக்கேற்றி தூபதீபம் காட்டி, வேண்டிய அனைத்தும் வைத்து தேங்காய் உடைத்துப் பூசை செய்து பொன்னை உருக்குவார். உருக்கியபின் தாய்மாமன் தேங்காய் உடைத்துப் பூசை செய்து அந்த இளநீரை உருக்கிய தணலில் ஊற்றி தீயை தணிப்பார். பின் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்குமம் வைத்து வெற்றிலை மேல் உருக்கிய தங்கத்தையும் வைத்து மணமகனிடம் ஆசாரியார் கொடுப்பார். அதை மணமகன் வந்துள்ள சபையோருக்குக் காண்பித்து, அதன் பின் அந்த கொல்லருக்கு அரிசி, மற்றும் காய்கறியுடன் தட்சணை அளித்து உருக்கிய தங்கத்தைத் திருமாங்கல்யம் செய்ய ஒப்படைக்கவேண்டும்.

கர்ணன் : அடேயப்பா... இவ்வளவு இருக்கிறதா???

பானுமதி : அதுமட்டுமா??? இன்னும் இருக்கிறது நிறைய... கண்ணிக்கால் ஊன்றல், முலைப்பாலிகை போடல், அடுத்து பந்தல் அமைத்தல், மணமகன் அழைப்பு, மணமகன் புறப்படுதல், பெண் புறப்படுதல், மாப்பிள்ளை அழைப்பு, அரசு ஆணைக்கோல் (இது மருவி தற்போது அரசாணிக்கல் என ஆகிவிட்டது), வித்திடுதல் (அங்குரார்ப்பணம்), இரட்சாபந்தனம் (காப்பு கட்டுதல்), மணமகளை அழைத்தல், கன்னிகாதானம், தாலிகட்டுதல், மாலை மாற்றுதல், பால்பழம் கொடுத்தல், கோதரிசனம், கைபிடித்தல், ஸ்பத பதி (ஏழடி நடத்தல்), அம்மி மிதித்தல், கணையாழி எடுத்தல், பொரிஇடல், ஆசிர்வாதம், அட்சதை, என அனைத்தும் முடிந்ததும், மணமக்கள் மற்றும் அவர் பெற்றோரின் கையில் கட்டப்பட்டிருக்கும் காப்புகளை அவிழ்த்து, அத்துடன் தட்சினையும் சேர்த்து, திருமணத்தை குறைவின்றி நடத்திக் கொடுத்த குருக்களுக்கு தர வேண்டும்.

துரியோதனன் : எல்லாம் சரி.. அது என்ன இந்த ஸ்பத பதி??? மீதம் இருப்பவை பேர் சொல்லும் போதே புரிகிறது... இது மட்டும் ஏனோ....

பானுமதி : அதிலும் உண்டு ஒரு சிறப்பு... அது ஏழடி நடத்தல். ஒவ்வொரு அடிக்கும் ஒரு மந்திரம் உண்டு... மணமகன்... மணப்பெண்ணின் வலக்காலை ஏழு அடி எடுத்து வைக்க வேண்டுமாம்...

முதல் அடி : உனக்கு வாழ்வில் உண்ணும் உணவில் குறைவின்றி இருக்க இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட்டும்

இரண்டாம் அடி : உடல் நலம் சிறந்து இருக்க, இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட்டும்

மூன்றாம் அடி : நீ குறை இன்றி விரதத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட்டும்

நான்காம் அடி : நல்ல சுகமும், மன சாந்தியும் கிடைக்க இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட்டும்

ஐந்தாம் அடி : பசுக்கள் போன்ற தூய்மையே உருவான பிராணிகள் பின் தொடர்ந்து வரட்டும்

ஆறாம் அடி : சகல சௌபாக்கியங்களும் உனக்கு கிடைக்க இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட்டும்

ஏழாம் அடி : உன் வாழ்வில் இடம்பெறும் சுபகாரியங்கள், ஹோமங்கள் அனைத்தும் நல்லபடி முடிய இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட்டும். எழடிகள் நடந்த நாம் இருவரும் நண்பர்கள் ஆனோம். எது வந்தாலும் இருவரும் சேர்ந்து அனுபவிப்போம்.

என்று பொருள் தருமாம் அந்த மந்திரங்கள்...

கர்ணன் : சரி இந்த அட்சதை என்பது மஞ்சள் கலந்த அரிசிதானா???

பானுமதி : ஆமாம் அண்ணா. அதைத்தான் அறுகரிசி என்பார்கள். முனை உடையாத பச்சரிசி, அறுகம்புல், மஞ்சள் மாவு இவை கலந்த கலவையே அறுகரிசி... இதை திருமணத்திற்கு வருகை வந்தவர்கள் அனைவரும், இரு கைகளால் அள்ளி, மணமக்கள் மேல் தூவி, ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் சூழ பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துவார்கள்...

துரியோதனன் காலைப் பார்த்து கேட்கிறான் கர்ணன் (அப்போ துரியோதனன் மெட்டி போட்டு இருந்தார் என் கற்பனையில்...)

கர்ணன் : ஆண்கள் ஏன் மெட்டி போட வேண்டும்???

பானுமதி : பெண்கள் மணமானவர்கள் என்பதைக் குறிக்க பெண்கள் நெற்றியில் அதாவது தலை வகுட்டின் ஆரம்பத்தில் குங்குமம் இடுவது வழக்கம்... நிமிர்ந்து நடக்கும் ஆணுக்கு, தன் எதிரே வரும் பெண், மணம் ஆனவள்... தவறான கண் கொண்டு காணக் கூடாது என்பதைக் காட்ட...

அதுபோல, தலை குனிந்து நடப்பவள் பெண்... எனவே தன் எதிரே வரும் ஆண்மகன் மணம் ஆனவன், இன்னொரு பெண்ணின் கணவன் என்பதைக் குறிக்க ஆண்கள் மெட்டி இடுவது மரபாயிற்று...

கர்ணன் : பலே... பலே... முன்னோர்கள் சொன்னவை எல்லாம்... உள்ளார்த்தம் கொண்டவை தான் இல்லையா???

துரியோதனன் : அது சரி... மாங்கல்யம் கட்டுகையில் இந்த மூன்று முடிச்சு போடுவதில் ஏதும் கருத்து உள்ளதா??? கூடவே மங்கள வாத்தியங்கள்.. அப்போது மட்டும் காதைக் கிழிக்கும் வண்ணம் இசைக்கப்படுவது ஏன்???

பானுமதி : அதற்கும் உண்டு அர்த்தம்.

முதல் முடிச்சு – நீ எனக்கும், நான் உனக்கும் கட்டுப்பட்டவர்கள்
இரண்டாம் முடிச்சு – நீ என் பெற்றோருக்கும், நான் உன் பெற்றோருக்கும் கட்டுப்பட்டவர்கள்
மூன்றாம் முடிச்சு – நாம் இருவரும் இந்த திருமணம் என்ற பந்தத்திற்கு கட்டுப் பட்டவர்கள்

என்றும் பொருள் கொள்ளலாம்...

கர்ணன் : சரி.. அந்த மங்கள வாத்தியங்கள்....

பானுமதி : ம்ம்ம்... சொல்கிறேன்... சொல்கிறேன்... சபையில் உள்ளோர் தும்முதல், மற்றும் அபசகுனமாக பேசுதல் இவை எதுவும் மணமக்களுக்கு கேட்காதவாறு இருக்கத்தான்... வாத்தியங்கள் அப்படி இசைக்கப்படுவது...

இப்படியாக பேசி முடித்து.. ஆக வேண்டிய காரியங்கள் எல்லாம் நல்ல படி முடித்து, மண நாளும் வந்தது....

எப்போதுமே... காண்பவர்களின் கருத்தை நிறைப்பவன் கர்ணன்.... மண நாள் அன்று சொல்லவும் வேண்டுமா???

தூய வெண்பட்டு உடுத்தி... பொன்னால் ஆபரணங்கள் பல பூண்டு, வாசனை திரவியங்கள் மணம் கமல... அலங்கரித்த பளிங்குச் சிலையாய்... சபைதனில் அவன் நடந்த பாங்கில்... காற்றும் அசையவில்லை ஒரு நிமிடம்.... என்ன அழகு... என்ன ஒளி, என்ன ஒரு காந்தம் அவன் பார்வையில்....

பளிங்கு சிலையே, உன் பார்வை
ஒரு கலையே.. உனைக் கண்ட
நிமிடம், உயிர் பெற்ற யாவரும்
ஆயினர் சிலையே....

கம்பீரம் உன் நடையே, உன் அழகு
உனக்கு அணியே... நீ அணிந்த
அணிகலனுக்கும் உன் அழகுதான்
ஒரு அணியே...

பட்டுடித்தி வந்திட்ட பகலவனே,
மேகம் மறைக்கும் சூரியனாய்,
நின் தேகம் மறைக்கும் ஆடைகள்
மலர் மேல் பணியாய் அதுவும்
உனக்கு அணியாய்...

கம்பீரம், தேஜஸ், காந்தி... என அத்தனையும் ஒன்றாய் கலந்த கலவையாய்.. கர்ணன்

அந்தப் பெண் மட்டும் என்ன...

தங்கப் பதுமைக்கு தங்கத்தில்
அணியிட்டால்.. தெரியுமோ என
வைரத்தால், உச்சி முதல் பாதம்
வரை, உற்சவ சிலையாய்
அலங்காரம் கொண்டு...

அத்தனைக்கும் மேலே, நாணத்தில்
சிவந்த முகத்தை அழகாரமாய்
கொண்டு... அன்னம் அது தோற்க
அவள் பாதம் மெல்ல தரையில்
பதிக்க...

கான்பவரும் காதல் கொண்டனர்
அவள் அழகில்... மேக வண்ணப்
பட்டு உடுத்தி தோகை அவள்
நடந்து வந்து... மணவறை
சேர்ந்தாள்.....

ஆதவனும், நிலவும் அருகே
வராதாமே... யார் சொன்னது...
இதோ.. இங்கே மணவறையில்
இரண்டும் உள்ளதே...

தகதகக்கும் கதிரொளி கொண்டு
இருக்கும் இடத்தை ஜொலிக்க
வைக்கும் கர்ணன் – ஆதவனாய்..

குளிர வைக்கும் ஒளி கொண்டு
இருந்த இடத்தை ஒளியேற்றிய
சுபாங்கி – நிலவாய்...

வந்திருந்தோர் அனைவரும் மனதார வாழ்த்த... அட்சதைகள்... அள்ளி தெளிக்க.... மங்கல இசை எங்கும் ஒலிக்க... மங்கை அவள் இணைந்தால்... கர்ணனின் மனைவியாய் அவன் தனிமையை தகர்க்க....

கர்ணனிடம் பெற்றுச் சென்றவர்கள் அனைவரும் வந்திருந்தனர் அரங்கம் நிறைக்க... அவன் மீது வாழ்த்துக்களை அள்ளி இறைக்க...

அனைவரின் அன்பிலும் கரைந்து நின்றான் கர்ணன்.... அன்பிலே கரைந்த கர்ணனை கண்டு ஆனந்தத்தின் எல்லையிலே தொல்லைகள் இன்றி இருந்தான் அவன் ஆருயிர் நண்பன் ஒரு புறம்...

பெற்ற அன்னையைப் போலே அவனுக்கு அனைத்தும் பார்த்துப் பார்த்து செய்த அவன் தங்கை பானுமதியோ.... இந்தக் காட்சியில் உள்ளம் நிறைந்து, நெஞ்சம் மகிழ்ச்சியில் விம்ம நின்றிருந்தால்.. ஒரு புறம்...

கூடவே அதற்கு கொஞ்சமும் குறையாத சந்தோசத்தில்.. இந்தப் பெண் யார்....

அடிப்பாவி வேணி... நீயா???

உன் காதலனுக்கு கல்யாணம்... உனக்கு என்ன இத்துணை சந்தோஷம்????

இப்படி காதலிச்ச கர்ணனை வேற ஒரு பொண்ணுக்கு தாரை வாத்து கொடுத்துட்டு எப்படி உன்னாலே சந்தோஷமா இருக்க முடியுது????

(என் மனசாட்சி தாங்க இந்த சவுண்ட் குடுக்குது...)

அவனை எனக்கு பிடிக்காம விட்டுக் கொடுக்கலே... ரொம்ப பிடிச்சதாலே... அவனுக்கு பிடிச்சதை செஞ்சேன்... இது ஒரு தப்பா???

என்ன ஆனாலும் அவன் என் காதலன் தான்... இப்போதான் எனக்கு அவன் மேல இன்னும் காதல் அதிகம் ஆகுது....



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:09 am

பகுதி பதினெட்டு : கர்ணன் தேரோட்டியின் மகனா??


கர்ணனின் திருமணம் இனிதே, எந்தக் குறையும் இன்றி நடந்தேறியது... அனைவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில்.... இரவு விருந்து முடித்து சம்மந்திகள் இருவரும் பேச வருகின்றனர்... (இந்தப் பகுதிகளும் கர்ணன் திரைப் படத்தை தவிர வேறு எங்கும் இல்லாததால்.. அவையே இங்கும்... என் கற்பனையுடன் கலந்து... )

அதிரதன் (கர்ணனின் தந்தை) : அனைத்தும் மிக நலமாய் நடந்தன... ஆனாலும் உங்கள் பெருந்தன்மை... சொல்லில் வடிக்க இயலாதது...

சுபாங்கியின் தந்தை : பெருந்தன்மையா?? தாங்கள் என்ன கூறுகிறீர்???

அதிரதன் : ஆமாம்... எளியவன் நான்... உம் போன்ற அரசர்களின் அடிமை... உங்கள் பெருந்தன்மையால் என் குலமும் இனி பெரும் பேரைப் பெற்று விடும்...

சுபாங்கியின் தந்தை : அடிமையா?? என்ன சொல்கிறீர்கள்??? தாங்கள் எனது மருமகன்.. அங்க தேச மன்னர் கர்ணனின் தந்தை அல்லவா???

அதிரதன் : உண்மை.. ஆனால்.. பிறப்பால் நான் தேரோட்டி தானே???

சுபாங்கியின் தந்தை : என்ன??? தேரோட்டியா??? (அதிர்ச்சியும், கோபமும் போட்டி போட்டுக் கொண்டு.. வருகிறது)

அதிரதன் : ஏன்?? துரியோதன மகாராஜா இதை தங்களிடம் சொல்லவில்லையா???

சுபாங்கியின் தந்தை : ம்ம்ம்ம் சொல்லாவிட்டால் என்ன?? அவருக்கு உட்பட்ட சிற்றரசு.. அதனிடம் எப்படி நடந்தாலும் தப்பில்லை... இந்த எண்ணம் பேரரசுக்கு இருக்கத்தானே செய்யும்... ஹ ஹ ஹ... சம்மந்தி அவர்களே.. எப்படியோ புலியும், பூனையும் ஒன்றாகி விட்டது.. அதனால் ஒரு புது சந்ததி உருவாகுமே எனும் உங்கள் புதிய ஆசை.. பலே... இந்தப் புதுமையைக் கேட்கவே எனது உள்ளத்தில் மகிழ்ச்சி கிளர்ந்தெழுகிறது...

நீங்கள் போய் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்...

அதிரதன் உள்ளே செல்லுகிறார்...

சு. தந்தை : தேரோட்டியின் மகன்... என் மருமகனா???

மறுநாள் காலை... கோவிலுக்கு செல்வோம் என சுபாங்கியின் தந்தை கூற, தந்தை, அன்னை, மகள் மற்றும் அவள் தோழி என நால்வரும் ரதத்தில் கிளம்புகின்றனர்...

செல்லும் வழியைக் கண்ட சுபாங்கி... குழம்பி தன் தந்தையிடமே கேட்கிறாள்....

சுபாங்கி : தந்தையே கோவிலுக்கு போகலாம் என் புறப்பட்டீர்களே... ஊரைதாண்டி ஆயிற்று... நாம் எங்கே போகிறோம்???

தந்தை : ம்ம்ம்... நம் நாட்டுக்கு...

சுபாங்கி : அப்பா...

தந்தை : அலறாதே... மகளே.. கர்ணன்... உன் கணவன்.. ஒரு தேரோட்டியின் மகன்.... அந்த உண்மையைக் கூறாது மறைத்து.. ஒரு ஷத்திரியன் மகளை மணந்து விட்டான்..

சுபாங்கி : அதனால்???

தந்தை : உன்னைத் தீண்டும் தகுதி அவனுக்கு இல்லை.. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என எண்ணி எண்ணி வருந்தி, அவன் அழியட்டும்... அதுதான் அவன் செய்த செயலுக்கு தண்டனை..

அன்னை : அப்படி என்றால் என் மகளின் கதி???

தந்தை : மனந்தவனை மறக்க வேண்டியதுதான் உன் மகளின் விதி...

அன்னை : அய்யயோ.. இது என்ன அநீதி??

தந்தை : தேவி, உன் மகளோடு சேர்ந்து நீயும் அழு... நானும் அழுகிறேன்... ஆனால் என் மகளை மட்டும் அவனோடு சேர்ந்து வாழ் விடவே மாட்டேன்... இது உறுதி

சுபாங்கி : அப்பா, என் உயிரே அவர்தானப்பா... தேரை நிறுத்துங்கள்... நான் இறங்கி நடந்தேனும் என் தெய்வத்தை அடைகிறேன்...

தந்தை : அது மட்டும் நடக்காது மகளே... மானம் தான் எனக்குப் பெரிது... அதற்காய் நீ செய்யும் தியாகம் தான் அவனை மறப்பது...

சுபாங்கி ரதத்தில் இருந்து இறங்க எத்தனிக்க, அவளை இழுத்து அமர வைக்கிறார் அவளது தந்தை...

சுபாங்கி : அம்மா.. எனக் கதறி அவளது அன்னை மடியில் விழுகிறாள்...

அழுது கொண்டே ஊர் வந்து சேர்கின்றனர்...

அரண்மனையை அடைந்ததும், மகளைக் கீழே தள்ளி... இவளை உள்ளே அழைத்துப் போ என்கிறார் தந்தை...

அவமானத்தில், கோபத்தின் உச்சியில் இருக்கிறார் பெண்ணைப் பெற்றவர்....

குதிரை தின்ற மிச்சக் கொள்ளை உன்ன வேண்டியவன், தேனை அருந்த ஆசைப்படலாமா??? என உள்ளுக்குள் புகைந்து கொண்டு இருக்கிறார்...

வருகிறார் நம் கதா நாயகன் அங்கே...

கர்ணன் : சுபாங்கி... சுபாங்கி... (என அவளை அழைத்துக் கொண்டே வந்தவன் அங்கே குறுக்கும், நெடுக்குமாய் நடந்து கொண்டு இருந்த அவள் தந்தையைப் பார்த்து..) மாமா...

சு. தந்தை : மாமன்?? யார் அவன்??? மாமனாக்க விரும்பியவன் யார் அவன்??

கர்ணன் : மாமன் – யார் அவன் ?? மகளைக் கொடுத்தவன். மாமனாக்கியவன் - யார் அவன்?? – மகளை மணந்தவன்

சு.தந்தை : இரண்டு தவறு.. அதை எடுத்துச் சொல்ல உன்னால் முடிந்தது.. ஆனால் அந்த அளவுடன் உன் வாய்த்துடுக்கு முடியட்டும்... என் கோவம் எல்லையைத் தாண்டும் முன் போய்விடு..

கர்ணன் : போவதா?? எங்கே???

சு. தந்தை : இது மன்னன் வசிக்கும் இடம்... உன் போன்ற தேரோட்டி நிற்க வேண்டிய இடம் நடுத்தெரு...

கர்ணன் : பெரியவரே... சற்றே அடக்கத்துடன் பேசுங்கள்... நான் இப்போது அரசன் (கம்பீரமாய் தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்து நின்று கர்ணன் சொல்கிறான்)

சு. தந்தை : என்னதான் கர்ஜித்தாலும் பூனை புலியாக முடியாது... உன் ரத்தத்தில் அரசு ஓடவில்லை.. தேர் தான் ஓடுகிறது..

கர்ணன் : அனைவர் ரத்தமும் சிவந்து தான் ஓடுகிறது...

சு. தந்தை : ஆணவக்காரன். இப்படி எல்லாம் பேசி என் குல தர்மத்தை நீ குலைக்க முடியாது... மன்னன் மகளை, ஒரு மன்னன் மரபில் வந்தவன் தான் மணந்திருக்க வேண்டும்...

கர்ணன் : அதை மணக்கும் முன் யோசித்திருக்க வேண்டும்...

சு. தந்தை : தவறுதான்... என் மகள் வாழ்வற்றுப் போனாள்... நான் செய்த தவறுக்கு பலன் அது... இத்தோடு இந்த வழக்கு முடியட்டும்..

கர்ணன் : இறக்கும் வறை என் வாழ்வோடு இணைக்கப்பட்ட வழக்கு அது... நீங்கள் நினைப்பது போல அவ்வளவு எளிதாக முடியாது...

சு. தந்தை : முடியத்தான் வேண்டும்.. குலத்தால் சிம்மம் நான்.. குதிரை நீ... நான் தேர் ஏற விரும்பினால்... நீ அந்த தேரை ஓட்ட வேண்டும்... உன் நிலை என்னவென்று உனக்குப் புரிந்ததா???

தேரோட்டி, போய் விடு இங்கிருந்து...

கர்ணன் : கொதித்துப் போகிறான் இந்த பேச்சில்...

வெறி ஏறி நிற்கும் மன்னா, மகளின் வாழ்வு வீழ்ந்தாலும், குல பெருமை என வெறும் பேச்சு பேசும் மன்னா, இதற்கு இப்போதே ஒரு முடிவு வேண்டும்...

உன்னோடு என் உறவு இன்றுடன் முடிந்தது... உன் மகள் என் மனைவி அவள்... அவள் எனக்கு சொந்தம்... அனுப்பு அவளை என்னுடன்... கண்களில் அனல் பறக்க கர்ணன் அவரிடம் கூற, அதற்கு அவர்...

சு. தந்தை : ஹ ஹ ஹ ஹ... உறுமி விட்டான்.... ஹ ஹ ஹ தேரோட்டி... போய் விடு இங்கிருந்து...

கர்ணன் : இல்லை... எடு உனது வில்லை...

சுபாங்கியின் குரல் : அரசே...

கர்ணன் : சுபாங்கி... என குரல் வந்த திசையில் செல்ல எத்தனிக்க...

சு. தந்தை : நில்.. நீ செல்லாதே அங்கே...

கர்ணன் : முன்னமே சொன்னேன் நான் அவள் கணவன்

சுபாங்கியின் குரல் : பெண்ணுக்கு கணவன் பெரிதல்ல... பிறந்த குலம் தான் பெரிது... இதுவரை வாழ உதவி வந்த தந்தை தான் பெரிது... புதிதாய் வந்த கணவன் பெரிதல்ல..

சொல்லுக்கு செவி சாய்க்கா அரசரே.. வில்லுக்கு இரை ஆக்கி என்ன பயன்?? வீரம் வேண்டுமானால் வெளிப்படலாம்... ஆனால் நீங்கள் நினைக்கும் காரியம் நடை பெறாது... தாங்கள் வந்தது போலே போகலாம்...

கர்ணன் : எனைப் பிரிந்தால், உன் உயிர் பிரியும் என்று சொன்னவளே... அந்த எண்ணத்தை உன்னை விட்டு பிரித்து விட்டாயா?? கணவனுக்கு பின்தான் தெய்வம் என்ற இந்த நாட்டின் பெண் தர்மம்.. உன்னாலா பிழை பட வேண்டும்???

சு. தந்தை : ஹ ஹ ஹ ஹ

கர்ணன், தன் மீது ஆசை கொண்டு வந்தவளை, தான் மனந்தவளை கையோடு அழைத்துச் செல்ல ஆசையாய் வந்தவன்... அவளது இந்த வார்த்தைகளைக் கேட்டு... உடைந்து போகிறான்... உள்ளத்தால்... நொறுங்கிப் போகிறான்...

இதுவரை நான் அறியாதவர் தான்
எனை அவமானப் படுத்தினர். இன்றோ
என் மனைவி, என் உயிரின் சரி பாதி
அவளும் அன்றோ.. எனை அவமானப்
படுத்தினாள்...

அம்மா, என்னைப் பெற்றவளே, எனை
அன்றே கொன்று போட்டிருந்தால் இந்த
நிலை எனக்கு வந்திருக்குமா???

நான் என்னம்மா தவறிழைத்தேன்... எனை
நீ வெறுத்து ஒதுக்க... அன்று நீ துவக்கி
வைத்தது.. இன்று வரை ஓயவில்லை..

என் வாழ்வில் வரும் அத்துணை பெரும்
எனை ஏளனம் செய்தால் நான் என்னதான்
செய்வேன்... அத்துணை பாவமா நான்
செய்தேன்?? அறிந்து செய்தேனா?? அறியாமல்
செய்தேனா?? ஆயிரம் முறை அனுபவிக்கிறேன்
உள்ளம் அறுக்கும் வேதனையை... ஐயோ....



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக