புதிய பதிவுகள்
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10 
76 Posts - 51%
heezulia
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10 
59 Posts - 40%
T.N.Balasubramanian
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10 
15 Posts - 3%
prajai
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Rutu
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_m10கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ணன் என் காதலன் - வேணி மோகன்


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 10:44 am

First topic message reminder :

கர்ணன் என் காதலன் - முகவுரை

மகாபாரதத்தில் ஈடு இணை அற்ற வீரனாய் நாம் அறிந்த கர்ணனை பற்றிய என் பதிவு இது. ஒன்றா, இரண்டா அவன் சிறப்பு. ஈகைக்கும், நட்புக்கும் அவன் தந்த மதிப்பு.. செய்நன்றி மறவாத அவனது பண்பு, தன்னிலே தான் கொண்ட நம்பிக்கை, பிற உயிரையும் தன் உயிராய் நினைக்கும் பாங்கு.

வாக்கு மாறாமை, அத்துணைக்கும் மேலே, இணையற்ற வீரம், என்னிலைக்கு போயினும் தன்னிலை மறவாத நேர்மை என இன்னும் உண்டு ஆயிரம்.

சிறு வயது முதலே, என்னை கவர்ந்தவன், வீரம், ஈரம், கம்பீரம், கொடை, ஆண்மை எனும் சொற்களுக்கு நான் உருவேற்றி இருந்த உருவம் கர்ணன். அதிலும் நடிகர் திலகம் நடிப்பில் கர்ணன் படம் பார்த்த போது, கச்சிதமாய் கர்ணனுக்குள் அவர் பொருந்திப் போனார்.

அந்தப் படமும் ஒரு காரணம் தான் கர்ணன் மீதான என் காதலுக்கு.

பிறந்தது முதலே விதியால் வஞ்சிக்கப்பட்டு, பல அவமானங்களுக்கு இடையே வளர்ந்தாலும் தன் திறமையை பிறர் புகழ வளர்த்துக் கொண்டவன். என் வாழ்க்கையில் கர்ணனை ஒரு முன் உதாரணமாய் கொண்டு நான் வாழ இன்னும் இருக்கின்றன நிறைய விஷயங்கள்

நிகரற்ற அந்த தூய வீரனைப் பற்றி நான் அறிந்த தகவல்களை உங்களுடன் பகிர விருப்பம். படித்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். தவறு இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்.

ஏற்கனவே நிகழ்ந்தது என சொல்லப்பட்ட நிகழ்வுகளும், கூட ஆங்காங்கே என் கற்பனையும் கலந்து நான் சொல்லப் போகும் கர்ணனின் கதைக்கு, உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
__________________
நட்புடன்,
வேணி மோகன்




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:05 am

பகுதி பதினான்கில் இரண்டு : நட்பின் ஆழம்

இப்போது... நமது நண்பர்களிடம் வருவோம்... கர்ணன் மீது துரியோதனன் வைத்த அன்பின் அளவை, கர்ணன் அறிய வந்த ஒரு சந்தர்ப்பம் பற்றி காண்போம்... கர்ணன் படத்தில் இருந்து...

கர்ணனும், பானுமதியும் சொக்கட்டான் (அதாங்க... நம்ம தாயம் வெளையாடுவோமே.. அது) ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆட்டம் வெகு சுவாரஸ்யமாய் போகிறது... வெற்றி யாருக்கு எனும் நிலை வெகு அருகில்...

கர்ணன் : இந்த முறை எனக்குத்தான் வெற்றி ....

பானுமதி : அதுதான் நடவாது.. எந்த முறையும் வெற்றி எனதுதான்...

கர்ணன் : பெண்கள்.. எப்போதுமே தோல்வியை தாள மாட்டார்கள்... ஆகையால் நான் விட்டுக் கொடுத்தால் தான் உண்டு...

பானுமதி : ஆண்களுக்கு வீரம் அதிகம் இருக்கலாம்.. அறிவு பெண்களுக்கு தான் அதிகம்... இது அறிவு விளையாட்டு...

கர்ணன் : குழந்தைகள் சிறுகச் செய்தாலும் அதை பெரிதாய் பேசுவது மரபு... அதுபோல பெண்களின் சிறிய செயலையும் பெரிதாகப் பாராட்டுவது ஆண்களின் கடமை... அதைக் கொண்டு நீங்கள் அறிவோ திறமையோ அதிகம் படைத்தவர்கள் என அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம்...

பானுமதி : இப்படி ஒரு வீண் நினைப்பும், தற்பெருமையும் தான் ஆண்களுக்கு மிச்சம்... ஆனால் எதிலும் வெற்றி எங்களுக்குத்தான்...

கர்ணன் : ம்ம்ம்... பேசு பேசு... வெற்றி எனைத் தேடி வந்து கொண்டு இருக்கிறது பார்.... பிறகு உன் பேச்சு தானாகவே நின்று விடும்... ஹ ஹ ஹ ஹ

அப்போதுதான் துரியோதனன் உள்ளே வருகிறான்... வாயிலை நோக்கி அமர்ந்திருந்த பானுமதி கணவன் வருகையைக் கண்டு எழுந்திருக்க... வாயிலுக்கு முதுகை காட்டி அமர்ந்திருந்த கர்ணன் ....

கர்ணன் : எங்கே ஓடுகிறாய்.... என அவள் மடியை பிடித்து இழுக்க....

பானுமதி அணிந்திருந்த மேகலையின் (இது நம்ம ஒட்டியாணம்) முத்துக்கள்... சிதறி... அப்போதுதான் அங்கே வந்து நின்ற துரியோதனனின் காலடியில் உருண்டன....

துரியோதணன் : ஹ ஹ ஹ ஹ... எனக்காக நிற்க வேண்டாம் உங்கள் ஆட்டம்... வெற்றி வரை தொடரட்டும்.... சிதறிய முத்துக்களை நான் எடுக்கட்டுமா??? எடுத்து அவைகளை நான் கோர்கட்டுமா??

அச்சம் கொஞ்சம், கண்ணீர் கொஞ்சமாய்... பானுமதி ஒரு ஓரமாய் நிற்க...

தான் செய்த காரியத்தின் நினைவில்... கூனிக் குறுகி... கர்ணன் துரியோதனிடம் செல்கிறான்....

கர்ணன் : நண்பா...

துரியோதனன் : கர்ணா... என்ன நடுக்கம்??

கர்ணன் : விளையாட்டின் உற்சாகத்தில்... செய்தது யாதென அறியாது நான் மடியை இழுத்து விட்டேன்... என் மாபெரும் தவறை உணர்ந்து என் உடலெல்லாம் பதறுகிறது...

துரியோதனன் : எவ்வளவு அறியாத்தனம் உனக்கு??? தங்கையின் மடியைப் பிடித்து இழுத்ததில் அண்ணனுக்கு ஏன் இந்த தடுமாற்றம்??? உன்னையும், என் மனைவியையும் நான் நன்கு அறியாதவனா??? இந்தப் பேதைமை உன்னிடம் உதித்ததே பெரும் தவறல்லவா???

பானுமதி... இத்துணை நேரமும் சிறு அச்சத்தோடு இருந்தவளின் கண்கள்... தன் கணவனின் அன்பில் நெஞ்சமும், விழிகளும் நிறைய கணவனை நோக்குகிறாள்.....

கர்ணன் : கண்கள் குளமாக... உயிரே... என் தெய்வமே...

துரியோதனன் : கர்ணா... என இருவரும் ஆரத் தழுவிக் கொள்கின்றனர்...

எனை சந்தேகம் கொள்ளவும்,
தீயிட்டு எனைக் கொளுத்தவும்
தங்கள் கண் முன்னே கண்ட
காட்சி இருப்பினும், என்னிடம்
நீங்கள் கொண்ட நம்பிக்கையை
நான் காணும் போது.. மரணம்
எனக்கு மறு நொடி ஆயினும்
மகிழ்வோடு ஏற்பேனே... மன்னவா

என பானுமதியும்...

நண்பனின் மனைவி எனும் நினைவின்றி
விளையாட்டை ஒரு பொருட்டாய் கருதி
அதிலே மூழ்கிப் போய், நான் செய்த
காரியம்... கடவுளுக்கே அடுக்காதே

நண்பா... ஆனாலும், என் மீது எத்துனை
நம்பிக்கை நீ வைத்திருந்தால் இப்படி
ஒரு வார்த்தை நீ சொல்லி இருப்பாய்...
என் உயிரே...

என் உயிரினும் மேலான என்னவனே,
எனை ஆளும் மன்னவனே, இதன்
கைமாறாய் நான் என்ன செய்வேன்??
என் உயிரை நான் உன் பொருட்டு
இழந்தாலும் அதற்கு ஈடாகுமா???

நட்பெனும் சொல்லுக்கு பிறந்த என்
நற்சித்திரமே, நட்பு வானில் நீ என்றும்
ஒரு நட்சத்திரமே... உன்னை நான்
நீங்கேன் என் நண்பா... என் உயிர்
போகும் வரை...

என கர்ணனும்... இருக்க...

எனக்கும் இந்த நட்பின் ஆழத்திலும், மெய் அன்பிலே ஆழத்திலும்.... எனை அப்படியே ஆழச் செய்த காட்சி இது....

அநீதி செய்பவன், பிறர் உடமைக்கு
உடையவனாய் ஆக எண்ணியவன்,
என ஆயிரம் குறைகள் உன்னை
சொன்னாலும், சொன்னவருக்கும்
இல்லாத மனமடா உனக்கு... துரியோதனா....

அதிலும் பாருங்களேன்... என்ன அழகாய்... அவ்வை பாட்டி... “வரப்புயர” என ஒத்தை வார்த்தையில் ஒரு மன்னனை வாழ்தினாராமே... அது மாதிரி.... ரெண்டு வார்த்தையில் எத்துனை அழகாய் சொல்லி விட்டான் தன் மனதை....

சிதறிய முத்துக்களை... நான் எடுக்கவோ... கோர்க்கவோ....

முத்துக்கள் பொதுவாக வழுவழுப்பானவை... அதை எடுக்க பொறுமை நிறைய வேண்டும்.... என் பொறுமை குறையவில்லை என்கிறான்....

எடுக்கவே பொறுமை அத்துணை வேண்டும் எனில், அதை கோர்க்க.... வெகுவாய் நிதானமும் இருக்க வேண்டும்....

அந்த, அப்படி வழுவழுப்பான முத்துக்களை எடுக்கவும், கோர்க்கவும் வேண்டிய பொறுமையும் நிதானமும் என்னிடம் உண்டு... கவலை இன்றி நீங்கள் ஆட்டத்தை தொடருங்கள் என சொல்லுகிறான்...

என்ன மனிதனடா நீ??? என்ன மனமடா உனக்கு??? அத்துணை நம்பிக்கையா உனக்கு??? இத்துணை நல்லவனா நீ???



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:07 am

பகுதி பதினைந்து : யார் அந்தப் பெண்

பௌர்ணமி இரவு... பிரிந்திருக்கும் காதலர்களின், காதலை கொழுந்து விட்டு எரிய தூபம் போடும் குளிர்ந்த நிலவு...

தடையின்றி தன் வேலையை கர்ணனிடம் காட்ட... நிலவிலும் அவள் முகம்.... நினைவிலும் அவள் முகம்... கண் மூடிய கனவிலும் அவள் முகம்... என காணும் திசை எல்லாம், வேறு காட்சி ஏதும் இல்லை, தன் காதலி அவள் ஆட்சி அன்றி...

கற்பனையிலும், கனவிலுமே... அவர்களின் காதல் பெருகிக் கொண்டே இருக்க... அன்று தான் அவன் காதல் அவன் நண்பனுக்கு தெரியும் நிலை வந்தது...

துரியோதனனும், பானுமதியும், பௌர்ணமி ஒளியில் உலவி வர வெளியே கிளம்ப... உலவித் திரும்புகையில், கர்ணனின் அரண்மனை வழியே அவர்கள் செல்கையில்... சரி நண்பனை கண்டு செல்வோமே என இருவரும் இங்கே வர....

(கர்ணன் படத்தின் காட்சிகள் .......சற்றே நீண்ட காட்சி... என்வரிகளை விட அந்த வரிகளை நான் ரசித்ததால்... மாற்றம் ஏதும் செய்ய வில்லை...)

இருவரும் உள்ளே வரும் வேளையில்... கர்ணன் மஞ்சத்தில் இருந்து கீழே விழ...

துரியோதனன் : (பதறித் துடித்து...) கர்ணா....

கர்ணன் : (நெஞ்சத்தில் ஒரு கையை வைத்து.. ) ஆ.... வனமோகினி போல் வந்தவளே... உன் உயிரைக் காத்தவன் நான்... என் உயிரைக் கொள்ளை கொண்டு போகலாமா???

சுபாங்கி : இல்லை இல்லை... என் உயிரை நீங்கள் தான் கொள்ளை கொண்டு விட்டீர்கள்... (கற்பனையில் கூட அந்தப் பெண் ரொம்ப நன்றாக பேசுகிறாள்.)

கர்ணன் : ஆ... வந்துவிட்டாயா??? வா... வா.... என் அருகே வா... என அருகே இருந்த துரியோதனன் கரத்தை பிடித்து... கரமா இது... மலரல்லவா.??

துரியோதனன் : ஆமாம் ஆமாம்... மங்கையின் கரம் அல்லவா இது...

கர்ணன் : துரியோதனன் கரத்தை முத்தமிட்டு... மானே வா.. மயிலே... வா... கிளியே வா... என் அருகில் வா....

துரியோதனனும், பானுமதியும் ஆன மட்டும் சிரிப்பை அடக்கிக் கொண்டு... கர்ணனுடன் உரையாடலை தொடர்கின்றனர்...

அச்சோ.. பாவம் கர்ணன் துரியோதனனை முத்தமிட வேறு செல்கிறான்....

பானுமதிக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது...

கர்ணன் : ஆஹா.. என்ன இனிமையான சிரிப்பு... அப்படிச் சிரி...

இப்போது சிரிப்பது... துரியோதனனின் முறை ஆயிற்று...


கர்ணன் : மூடிய விழிகளை திறக்காமலே.. என்ன இது பயங்கரமான சிரிப்பு.?? என் மீது உனக்கு கோபமா???



துரியோதனன் : விழிக்காமல் இருந்தால் வேதனை அல்லவா??? வேறு.. எப்படி இருக்கும் என் சிரிப்பு...

கர்ணன் : கண்ணே... என் மீண்டும் துரியோதனனை தழுவச் செல்ல...



துரியோதனன் அவனை எழுப்ப விழைகிறான்...

துரியோதனன் : நண்பா... கர்ணா... நண்பா....

கர்ணன் விழித்து அருகே இருந்த துரியோதனனை கண்டவுடன்... நாணமும், அவமானமுமாய்... அந்தப் புறம் திரும்பிக் கொள்கிறான்...

பானுமதி : அண்ணா, இது எத்தனை நாளாக நடக்கிறது... நின்று கொண்டே தூங்கும் பழக்கம்??

கர்ணன் : நாணம் மிகக் கொண்டவனாய்... நீங்கள் எங்கே வந்தீர்கள் இந்த நேரத்தில்...

(அட..அட... பளிங்கு முகமும், பால் போன்ற நிறமும்... போய்... அந்தி நேர சூரியனாய் என் உள்ளத்தைக் கொள்ளவே/கொல்லவே வந்ததா... இந்த சந்தர்ப்பம்...)

துரியோதனன் : நல்ல நிலவு... உலவி வரலாம் எனப் புறப்பட்டோம்... இங்கே வந்ததும் உன்னை... பார்த்துப் போகலாம் என உள்ளே வந்தோம்...

பானுமதி : வந்தது நல்லதாகப் போயிற்று... வந்ததால்தான்... உங்கள் உயிருக்கு வந்த ஆபத்து புரிந்தது...

கர்ணன் : என் உயிருக்கு ஆபத்தா??? என்ன அது??? (ஐயோ பாவம் ஒண்ணுமே தெரியாது இவருக்கு.... )

இப்படி கேட்டது... பானுமதி... கர்ணனைப் போலவே... பாவனைகளை மாற்றிப் கொண்டு....

பானுமதி : ஆ... வனமோகினி போல் வந்தவளே... உன் உயிரைக் காத்தவன் நான்... என் உயிரைக் கொள்ளை கொண்டு போகலாமா???

அண்ணா... காதல் உரையாடல்.. கனவிலே உங்களிடம் பட்ட பாடு....

கர்ணன் : மீண்டும் நானச்சிரிப்பு... ஐயோ.... அவமானம்... அவமானம்.... அதுவும் உனக்கு தெரியும்படியாக இப்படி நடந்ததுவிட்டதே... இனி சாகும் வரை உன் நகைச்சுவைக்கு இந்த ஒரு விஷயம் போதுமே...

மூவருக்கும் சிரிப்பு வருகிறது...

துரியோதனன் : சரி சரி... இந்த விஷயத்தை உடனே கடுமையாக கவனித்தாக வேண்டும்...

பானுமதி : அதுமட்டும் அல்ல... நான் சாவதற்குள்... உங்களுக்கு சீக்கிரம் ஒரு கல்யானத்தை செய்து பார்த்து விடவேண்டும் என்று எனக்கு ஆசை கிடந்தது அடித்துக் கொள்ளுகிறது...

கர்ணன் : ஹ ஹ ஹ ..... இப்படி ஒரு பொறுப்புள்ள பாட்டி எனக்கு கிடைக்கவில்லையே என்றுதான் நான் ஏங்கிக் கொண்டு இருந்தேன்... பொறு.. நான் உண்மையைச் சொல்லி விடுகிறேன்...

பானுமதி : ஆ... அப்படி வாருங்கள் வழிக்கு...

கர்ணன் : கானகத்தில் நான் ஒரு பெண்ணைக் கண்டேன்...

துரியோதனன் : ஒ... அவள் அழகானவளா??

கர்ணன் : கதையைக் கேள்... அழகு எப்படி என்று தானே.. தெரியும்... அவள் ஒரு தேரை ஒட்டி வந்தாள்...

பானுமதி : அது ஒன்று போதுமே... உங்களுக்கு ... அவளைக் காதலிக்க... ()

கர்ணன் : கட்டுக்கடங்காமல் ஓடும் அதை நான் அடக்கி.. அவள் உயிரை நான் காப்பாற்றினேன்..

பானுமதி : ம்ஹூம்... அவமானத்தை எண்ணி அழுதிருப்பாள்.. உங்களுக்கா தெரியாது அவளை சிரிக்க வைக்க...

துரியோதனன் : ஆமாம்... அவளை சிரிக்க வைக்க நீ என்ன செய்தாய்???

பானுமதி : என்ன செய்திருப்பார்??? பேசி இருப்பார்... அவள் சிரித்திருப்பாள்... அப்படித்தானே என கர்ணனிடம் வினவ...

கர்ணன் : ஹ ஹ ஹ ஹ... அப்படித்தான் நடந்தது.. எப்படியோ அதை நீ அப்படியே சொல்லி விட்டாயே... எல்லா பெண்களுக்கும் இது இயற்கை போலும்...

துரியோதனன் : உண்மைதான்... எனக்கு, உன் தங்கைக்கும் ஏற்பட்ட அனுபவம் கூட கிட்டத்தட்ட அப்படித்தான்...

பானுமதி : வெட்கமும், கொஞ்சம் கோபமும் போட்டி இட... நீங்கள் பேசாமல் இருக்க மாட்டீர்கள்??? நம் கதை பழைய கதை... புதிய கதையில் அதைக் கொண்டு வந்து புகுத்தி குழப்பலாமோ??? வழக்கமானது என உணரும் போது ருசி குறைந்து விடாதா???

கர்ணன் : பலே.. தங்கையே... மனோதத்துவம் புரிந்தவள் நீ..

மூவரும் மீண்டும் சிரிக்க...

பானுமதி ; சரி.. சரி.. பிறகு???

கர்ணன் : பிறகென்ன... கரடி போல் வந்து விட்டனர் அவள் தாயும், தகப்பனாரும்... அவளால் என்னுடன் பேசக் கூட முடியவில்லை...

பானுமதி : ஐயோ.. பாவம்...

கர்ணன் : ம்ம்ம்ம்... ஊர், பெயர் ஒன்றுமே சொல்லவில்லை... கையால் ஜாடை காட்டி.. ம்ப்ச்...

பானுமதி : அடிப்பாவி.... அது சரி.. அவள் காட்டிய ஜாடைக்கு அர்த்தமாவது புரிந்ததா உங்களுக்கு???

கர்ணன் : புரிந்திருந்தால்... கனவா கண்டுகொண்டு இருப்பேன்... பறந்திருக்க மாட்டேனா அவள் இருப்பிடம் நோக்கி??

துரியோதனன் : ம்ஹூம்ம்... சரி என்ன ஜாடை செய்தாள்?? அதாவது நினைவு இருக்கிறதா???

கர்ணன் : அதை மறக்க முடியுமா??? என அன்று அவள் காட்டிய சைகையை மீண்டும் செய்து காட்டுகிறான்... செய்து விட்டு ஏக்கம் ததும்பும் காதல் பார்வை ஒன்றை பார்த்து இப்படி பார்த்து விட்டு போய் விட்டாள்... (அந்தப் பார்வை கூட கொள்ளை அழகு...)

பானுமதி : என்ன பெண் இவள்... இப்படி புரியாத ஒரு ஜாடையைக் காட்டி விட்டு போய் இருக்கிறாள்..

கர்ணன் : ஐயோ தங்கையே... உனக்குமா?? புரியவில்லையா?? என ஓய்ந்து போய் ஒரு இருக்கையில் சாய்கிறான்... நண்பா துரியோதனா...

துரியோதனன் : பானுமதி இவனை இப்படி தவிக்க விட்டு விட்டு என்ன செய்வது... என இருவரும் பேசிக்கொண்டே வெளியே செல்கிறார்கள்...

பானுமதி : உங்களுக்கு புரியவில்லையா??? நெற்றியைக் காட்டி, கீழே வளைவான குறி இட்டது சந்திரனைக் குறிக்கிறது... பின்னர் கையால் காட்டிய சைகை மலையைக் குறிக்கிறது...

துரியோதனன் : சந்திர மலை... அப்படி ஒரு நாட்டை நான் கேள்விப் பட்டதே இல்லையே...

பானுமதி : மலை எனும் சொல்லுக்கு சைலம் எனும் பொருளும் வரும்...

துரியோதனன் : சந்திர சைலம்... ஆஹா... அப்படி ஒரு தேசம் இருக்கிறது.... அதன் அரசர் நமக்கு நெருங்கிய நண்பர் தான்..

பானுமதி : அந்த நாட்டின் இளவரசிதான் அந்தப் பெண்...

துரியோதனன் : ஆஹா... அப்போது இவ்வளவு சுலபமாய் காரியம் முடிந்து விட்டது... இத்தனையும் சொன்னால் உன் அண்ணா அப்படியே பூரித்து விடுவான்... வா.. போய் சொல்லலாம்...

பானுமதி : இருங்கள்.. இதில் உங்கள் அவசரத்தைக் காட்ட வேண்டாம்... அவரிடம் சொல்லாமலே நாம் இதை முடிக்க வேண்டும்.. அப்போதுதான் அதிலும் ஒரு நகைச்சுவையை உண்டாக்கலாம்.

என் இருவரும் சிரித்துக் கொண்டே செல்கிறனர்..

இதை அறியாத கர்ணனின் நிலையோ வெகு பரிதாபம்...

யார் அவள்.. அந்தப் பூமகள்... என் உளம்
கவர்ந்த மான்மகள்.. பார்த்த நொடியில்
உச்சி முதல் பாதம் வரை உற்சவத்தில்
அலங்கரித்தாள்..

உச்சரித்த சொற்களிலே, உற்சாகத்தின்
உச்சியிலே ஏற்றி வைத்தாள்.. இருளடைந்த
உள்ளத்திலே அன்பின் தீபம் ஏற்றி
வைத்தாள்...

ஒளியாக வந்தவள், என் அக இருள் நீங்க
வந்தவள்... என் வாழ்வின் பொருளாய்
வந்தவள்... என் உள்ளம் கொத்தி எங்கே
சென்றாயடி கண்ணே...

உன்னை நான் காணும் நிலை வர வேண்டும்
விரைவில்... அல்லது என் உடல் மண்ணைக்
காணும் நிலை வந்துவிடும் விரைவில்...
வருவாயா பெண்ணே??? என் வசந்தமாய்...



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:08 am

பகுதி பதினாறு : கர்ணனின் நிச்சயதார்த்தம்

கர்ணனின் உள்ளத்தைக் கவர்ந்தவள் யார் எனத் தெரிந்தும், அவளைக் காணாது அவன் துடிக்கும் துடிப்பை நன்கு அறிந்த பின்னும், அமைதியாய் இருப்பார்களா, அவன் நண்பனும், சகோதரியும்??? கிளம்பி விட்டனர் சந்திர சைலத்திற்கு...

சீர் வரிசைத் தட்டுக்கள் அரன்மையை நிறைக்க... பொன்னும், பொருளும், மலரும், மணிகளும், அதிலே குவிந்து இருக்க... ஏகோபத்திய வரவேற்பு இருவருக்கும் அங்கே... இருக்காதா பின்னே.... இவர்களின் பேரரசுக்கு உட்பட்ட சிற்றசர் அல்லவா அந்தப் பெண்ணின் தந்தை...

இனி காட்சிகள் கர்ணன் திரைப் படத்தில் இருந்து...

பெண்ணின் தந்தை : விஷயத்தை சொல்லி ஒரு ஓலையை அனுப்பி இருந்தால்.. திருமணத்திற்கு நானே ஒப்புதல் தந்திருப்பேன். உத்தரவு இட்டிருந்தால்.. நானே நேரில் வந்திருப்பேனே... இதற்க்காக மகாராணியும் சக்கரவர்த்தியும் நேரில் வர வேண்டுமா??? என்றாலும் தங்கள் இருவர் வருகையால் எங்கள் இல்லம் பெருமை பெற்றது...

துரியோதனன் : எங்கள் வருகையால் மூன்று விஷயங்கள் பூர்த்தியாகின்றன..

ஒன்று : உலக வழக்கு... அதாவது பெண் கேட்டு வருபவர்கள் நேரில் வர வேண்டும் என்பது...
அடுத்தது... நாங்களே நேரில் வந்திருப்பதால்.. எங்கள் நண்பன், அங்க தேச மன்னன், கர்ணனின் தகுதி எத்தகையது என்பதை நீங்கள் அறிய வேண்டும்...
மூன்றாவது – மகாராணியின் ஆசை... அதை அவர்களே கூறுவார்கள்...

பானுமதி : எங்கள் வீட்டுக்கு வரும் மணப்பெண், எப்படி எப்படியெல்லாம் இருப்பாள், என்னென்னவெல்லாம் பேசுவாள், எதை எதை எல்லாம் செய்வாள் என்பதை அறிந்து, அதை முன்னதாகவே மணமகனுக்கு அறிவித்து, அவரை, இவள் நினைவுக்கு உள்ளாக்க வேண்டும் என்பதே எனது ஆசை..

பெண்ணின் தந்தை : தேவி சீக்கிரம் ராணியாரை பெண்ணிடம் அழைத்துப் போ...

பெண்ணின் தாயார் : தயை செய்யுங்கள் மகாராணி...

(என்னப்பா... இவங்க ரெண்டு பேருக்கும் ஒரு பேரை வெச்சிருந்தா அதை சொல்லிக் கூப்பிடலாம் இல்ல... ச்சே... )

மகள் இருக்கும் இடத்திற்கு பானுமதியை அந்த அம்மாள்... அழைத்துச் சென்று...

பெண்ணின் தாயார் : சுபாங்கி... துரியோதனச் சக்கரவர்த்தியும், அவரது தர்ம பத்தினியும், இப்போதுதான் வந்தார்கள்.. அவர்களை வணங்கிக் கொள்ளம்மா...

அந்தப் பெண் வந்து பானுமதியை வணங்க...

பானுமதி : நான் யாரைவாது ஆசீர்வதித்தால் அவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும்.. நான் உன்னை ஆசிர்வதிக்கிறேன்...

பெண்ணின் தாயார் : மகாராணி.. நீங்கள் பேசிக் கொண்டு இருங்கள்.. நான் வருகிறேன்... (இங்கிதம் தெரிந்த பெரியவர்கள்... )

பானுமதி : சுபாங்கி, உனக்கு பாடத் தெரியுமா???

சுபாங்கியின் தோழி : அவர்களுக்கு அதைத் தவிர வேறொன்றும் தெரியாது...

பானுமதி : நடனம்???

சுபாங்கியின் தோழி : ஆடாத நேரமே கிடையாது...

பானுமதி : ம்ம்ம்ம் .... சித்திரம் வரையும் பழக்கம் உண்டா???

சுபாங்கியின் தோழி : பிரமாதமாய்... ஆ... எழுதி இருப்பதை காட்டட்டுமா???

பானுமதி : (கோபம் வருகிறது...என்ன பெண் இவள், அவளைக் கேட்டால் இவளே பதில் சொல்லிக் கொண்டு... முந்திரிக் கொட்டை.. (ஜெயா நான் உன்னை சொல்லலே..) ) வேண்டாம்... என் முன் மான் போல் ஓடி வந்ததை பார்த்தேன்... ஆணை போல் நடந்து வரும் ஆணின் முன் எப்படி நடப்பாய் ...

சுபாங்கியின் தோழி : அன்னம் போல் நடப்பார்கள்.. அதுதான் இவர்களது இயற்கை நடை...

பானுமதி : ஆமாம்... உனக்கு பேசத் தெரியுமோ???

சுபாங்கியின் தோழி : ஒ... ஒரு கேள்வி கேட்டால் ஒன்பது பதில்கள் சொல்வார்கள்...

பானுமதி : (சுபாங்கியின் தோழியை நோக்கி) ஒ.. நீதான் சுபாங்கியா??

சுபாங்கியின் தோழி : இல்லையே... நான் அவர் தோழி.. என் பெயர் மங்களா... (அப்பா... இப்போதாவது பேரைச் சொன்னார்களே...)

பானுமதி : இதுவரை ஒன்பது பதில் சொன்னவள் நீதான்... எனவே நீதான் சுபாங்கியோ என நினைத்தேன்...

இதுவரை.. நாணத்தில் கவிழ்ந்த தலை நிமிராத... நமது கதாநாயகி... இப்போதுதான் பேசுகிறாள்...

மங்களா: மன்னியுங்கள் மகாராணி...

சுபாங்கி : மகாராணி.. பயத்தால் உங்களுக்கு மறுமொழி சொல்லாது இருந்து விட்டேன்... மன்னிக்கவும்

பானுமதி : சிம்மத்தைக் கண்டால் பயப்படலாம்...

சுபாங்கி : கருணை வடிவான கடவுளைக் கண்டும் பயப்படுவது உண்டு... (ஐஸ் ஐஸ் )

பானுமதி : என்னைப் புகழுவது எனக்குப் பிடிக்காது... இருந்தாலும்.. நயமான உன் பேச்சு எனக்கு பிடிக்கிறது...

சுபாங்கி : நாணப் புன்னகை...

பானுமதி : அடியே மங்களா... உன் தோழியின் வீரத்தைப் பற்றி உன் எண்ணம் என்ன???

மங்களா : தேரை ஓட்ட ஆரம்பித்தால், வீர ஆண்மகன் ஒருவர் வந்து குதிரையை அடக்கும் அளவுக்கு... வேகம் இருக்கும்...

சுபாங்கி : மங்களா... என்ன விளையாட்டு இது...

பானுமதி ; பரவாயில்லை... அதற்குள்ள வயதுதானே உங்களுக்கு... மங்களா...

உன் தோழிக்கு ஒரு நல்ல துணையைக் கொடுக்கத்தான் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்... என் அண்ணா கர்ணனுக்கும், உன் தோழி சுபாங்கிக்கும்.. திருமண நிச்சயம் இன்று நடைபெறுகிறது...

(வாக்கியத்தின் ஆரம்பத்தில் இருந்த விருப்பமின்மை... கர்ணன் எனும் பெயரைக் கேட்டதும்... பறந்து... நாணமும், ஆனந்தமும் போட்டி இட... அடடா... தங்கப் பதுமை... சிவந்த மலர்களின் கலவையாய் ஆனதே... )

பெரியோர்கள் சூழ அன்றே திருமணம் நிச்சயிக்கப் படுகிறது... திருமணமும் முடிகிறது.

(இதுவரை தான் அந்த திரைப்படத்தில் உள்ளது... அது ஏதோ.. திடீரென முடிந்து விட்டது போல ஒரு தோனல் எனக்கு. எப்படி பட்ட சம்பவம் அது... எனவே என் கற்பனைப் புரவியை தட்டி விட்டேன்... இனி வரும் வரிகள் என் கற்பனை....)

நிச்சயம் முடித்து விட்டு சுபாங்கி கர்ணன் உருவை வரைந்து வைத்திருந்ததை... பெற்றுக் கொண்டு தங்கள் ஊருக்குத் திரும்பினர்.. துரியோதனனும்.. பானுமதியும்...

கர்ணனின் இருப்பிடம் சென்று...

பானுமதி : என்ன அற்புதமான சித்திரம்... என்ன தத்ரூபம்...

துரியோதனன் : ஆமாம், அச்சு, அசலாய் அப்படியே உன் அண்ணனைப் போலவே உள்ளதே...

பானுமதி : இருக்காதா பின்னே.... ஒரு தரம் பார்த்ததிலே உள்ளத்தை தொலைத்தவள் அல்லவா???

கர்ணன் : என்ன இது.. யாரைப் பற்றி பேசுகிறீர்கள்... என்ன சித்திரம் அது.... எனக்கு ஏதாவது சொல்லலாம் அல்லவா??? (ஐயோ.. பாவம்)

பானுமதி : அதுவா.... யாரோ ஒரு பெண்... அவள்... தன் காதலனைக் கண்டது ஒரு முறைதானாம்... அவள் உயிரையே காப்பாற்றியவராம் அவர்.... அவர் உருவை வரைந்து வைத்துக் கொண்டு அதனோடு தான் தனிமையில் பேசுவதும், சிரிப்பதுமாம்...

கர்ணன் : (தன் காதலியோ என ஐயம் கொள்கிறான்...) எங்கே... அந்த சித்திரத்தைக் காட்டு பார்ப்போம்...

துரியோதனன் : அந்த பெண்ணும் மிக அழகானவள் தானாம்... தேர் ஓட்டுவதில் தேர்ந்தவளாம்....

கர்ணனுக்கே மனதில் முடிவே ஆகி விட்டது... இது தன் காதலிதான் என... அந்த சித்திரத்தைக் காணும் ஆவல்... அவள் பெயரைத் தெரிந்து கொள்ள ஆவல்... அவள் இடம் இன்னது என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல்... ஆனாலும் பானுமதியின் முன்னர் அதை வெளிப்படுத்த தயக்கம்...

(கிண்டல் பண்ணுவாங்க இல்ல... )

கர்ணன் : யார் அந்தப் பெண்??? அவள் பெயர் என்ன???

பானுமதி : (அத்துணை சீக்கிரம் சொல்லிவிடுவேனா என்ன என் மனதுள் எண்ணிக் கொண்டு...) அவள் நமது தேசத்திற்கு உட்பட்ட ஒரு சிற்றசரரின் மகள் தான்... அவள் பெயர் கூட... என நிறுத்தி விட்டு... யோசனை செய்வது போல் நடிக்க...

ஆவலாய்... பெயர் அறியக் காத்திருந்தவன்... உள்ளே கோபம் கொஞ்சம் எட்டிப் பார்க்க....

துரியோதனன் : என்னவோ... சொன்னார்களே.... அது... வந்து....

கர்ணனுக்கு... அழுகையே வந்து விடும் போல ஆகிவிட்டது.... (பாவம்... இப்படியா ஒருவனை வம்புக்கு இழுப்பது..)

பானுமதி : (என்ன இருந்தாலும் அண்ணன் அல்லவா... அவன் துயரை இவள் பொறுப்பாளா????) அவள் பெயர் சுபாங்கி அண்ணா... சந்திர சைல இளவரசி....

கர்ணன் : சு...பா...ங்....கி... சு.....பா.....ங்....கி..... என்ன இனிமையான பெயர்!!!!

துரியோதனன் : அது மட்டும் அல்ல நண்பா.... அவளுக்கும் உனக்கு மணமுடிக்க நிச்சயித்து வந்தோம்.... அடுத்த திங்கள்.. உன்னவள் உன்னுடன் இருப்பாள்....

பானுமதி : இந்தாருங்கள் அண்ணா... அந்தப் பெண் வரைந்த சித்திரம்... உங்களை அப்படியே வரைந்து வைத்திருந்தாள்....

இதை நான் கேட்க தன் உயிரையே பிரிவது போல எடுத்து தந்தாள்... தன் உயிரிடம் தான் அது போகப் போகிறது என்பதால்...

கர்ணன், உணர்ச்சிப் பெருக்கில் நிலை குலைந்து போகிறான்... தன் காதல் நிறைவேறிய மகிழ்ச்சி... தன் காதலை நிறைவேற்றிய தன் நண்பனிடம் நெகிழ்ச்சி... தன் உயிர் தன்னை வரைந்ததை பெற்று வந்து தந்த தங்கையிடம் நெகிழ்ச்சி... அனைத்தும் அவனிடம் சேர்ந்து இருந்ததில் நிறைய மலர்ச்சி...

இதுவரை... சூத்புத்திரன்... என்றே பலவாறு கேலி செய்யப்பட்டு... காயம் பட்டு... பட்டு.. காய்த்துப் போன மனதில்... நட்பும், சகோதரப் பாசமும், கைகூடிய நேசமும், அவன் நெஞ்சை நிறைத்து தள்ளாட வைத்தன....

கர்ணன் : நண்பா... என் உயிரின், உயிரே... எனை இன்பத்திலே ஆழ்த்தி... மகிழ்ச்சியின் உள்ளே வீழ்த்தி ... மகிழ்ச்சியிலே.. நான் என்றும் இருக்க, எனக்கென இருக்கும் நண்பா... என்ன தருவேன் உன் அன்புக்கு... ஈடாக....

மகிழ்வென்னும் உணர்வே, அறியாத எனக்கு
மகிழ்வன்றி வேறு உணர்வே இல்லாது போனதே.
இகழ்வென்று நாளும் இருந்திட்ட போதும், இன்று
புகழ் கொண்டு நாளும் புலரும் படி ஆனதே...

பெற்றவள் அன்பின்றி நானும் புளுங்கிட்ட போதும்
உற்றவளாய், என்னவளை நீ தந்திட்ட போதும்...
உறுதுணையாய், உற்ற துணையாய், என் அன்பு
அணையாய் இருந்தாயடா நண்பா....

உன் அன்புக்கு இணையாய்... நான் என்ன கொடுப்பேன்...
உன்னிடம் இருந்த பெற்றவை இந்த செல்வமும்,
குறையாத வளமும், மதிப்பற்றவை.. இவை.. உன்
மதிப்பில்லா அன்புக்கு ஈடாய்...

இனி நான் எடுக்கும் ஜன்மம் அனைத்திலும் உனக்கு
நான் நன்றிக் கடன் பட்டேனடா.. நண்பா... நட்பு எனும்
சொல்லுக்கு ஒரு நல்லுதாரணம் நீ... நான் உன்னை
அலங்கரிக்கும் தோரணம்...


என... கர்ணனின் என்ன ஓட்டம்... பிறவிகளைக் கடந்து போனது.... கூடவே அந்த சித்திரத்தில் தன் வருங்கால மனைவி தன்னை தீட்டி இருந்த பாங்கிலே... இவன் அனல் மேல் பணியாய் உருகித்தான் போனான்...

மனநாளும் வந்தது...



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:08 am

பகுதி பதினேழு : கர்ணனின் திருமணம்

கர்ணனின் திருமணம் இன்று... திருமணத்தில் போது நமக்கு புரியாத, நாம் அறியாத சடங்குகள் உண்டு ஏராளம்.... அத்தகைய சடங்குகள் எல்லாம் என்ன பொருள் கொண்டு நடக்கிறது என்பதை நான் அறிந்த வரையில் சொல்ல ஆசை... கர்ணனின் திருமணத்தை ஒரு குறை இன்றி நடத்த வேண்டும் அல்லவா???

(எனக்கு தெரிந்தவற்றை சொல்கிறேன்... ஏதேனும் விட்டுப் போனால் எனை வழி நடத்தும் பெரியவர்கள்... என் மீது கோபம் கொள்ளாது... எனை வழி நடத்துங்கள்... நன்றி..)

(நான் அறிந்தவையோடு, அறியாதவற்றை முறைப்படி அறிய வைத்த இணையத்துக்கும் என் நன்றி..)

நாள் நெருங்க நெருங்க... கர்ணனுக்கு பரபரப்பு கூடுகிறது... துரியோதனனுக்கும், பானுமதிக்கும் திருமணம் ஒரு சிறு குறை கூட இன்றி நடக்க வேண்டுமே... என உள்ளம் கிடந்தது அடித்துக் கொள்ளுகிறது... இப்போது அவர்கள் இடையே நடக்கும் உரையாடல்...

பானுமதி : (பரபரப்பாய் அமைதி இன்றி காணப்பட்ட தன் கணவரை நோக்கி) சுவாமி.. எதிரிகள் அவரை எதிர்கொள்ளும் போதும் தங்களை நான் இப்படிக் கண்டதில்லையே???

துரியோதனன் : கர்ணன் திருமணத்தை ஒரு குறைவின்றி நான் நடத்த வேண்டும் பானு...

பானுமதி : குறை ஒன்றும் வந்திடாது அதிலே... அனைத்தும் நல்லபடி நடக்க என்னால் ஆனா அனைத்தும் நான் செய்கிறேன்... நீங்கள் கலங்க வேண்டாம்...

துரியோதனன் : இல்லை.. கண்ணே... நான் அதை சொல்ல வில்லை... நான் என் நண்பன் நிலையை யோசிக்கிறேன்... பாவம்... பிறந்து முதலே.... இவர்கள்தான் தாய், தந்தை என் எத்துனை மகிழ்வாய், எல்லோரையும் போலே இருந்திருப்பான்...

அவன் அவர்களுக்கு பிறந்தவன் இல்லை என அறிந்த போது எத்துனை வருந்தி இருப்பான்... என்ன காயம் பட்டிருக்கும் அவன் நெஞ்சம்..

நானாய் இருந்திருந்தால்... காணாது போயிருப்பேன்... எத்துனை நெஞ்சுரம் கொண்டவன்... என்ன துன்பம் கொண்டிருப்பான் அவன் நெஞ்சில்... அதை என்றேனும் காட்டினானா வெளியே??

அவனைப் போய் வீசி எறிந்துவிட்டாளே... அவனைப் பெற்றவள். அவள் மட்டும் என் முன் வந்தால் பாரம்மா... நீ வேண்டாம் என விட்டெறிந்த பிள்ளை, எப்படி வளர்ந்திருக்கிறான் பார்... இவன் நண்பன் நான்... எனக் காட்டி பெருமைப் படுவேன்...

என்னிலிருந்து அவன் வேறு என என்னால் பிரித்து நோக்க இயலவில்லை... அவன் மனதில் ஒரு சிறு குறையும் இன்றி நான் இந்த திருமணத்தை நடத்தினாலும்... அவன் மனதில் அந்த அன்னையைப் பற்றிய வேதனை கொஞ்சமேனும் இருக்கும் அல்லவா??? அதனால் தான் வருத்தம்...

பானுமதி : வருந்த வேண்டாம் மஹராஜா, அன்னையைப் போல அன்பைப் பொழிய நீங்களும்.... உடன் பிறந்த தங்கையை அவரைத் தாங்க நானும் இருக்க, அவர் வருத்தம் போக்க நாம் ஆக வேண்டிய அனைத்தும் செய்யலாம்...

சரி.. சரி.. இப்படியே வருந்திக் கொண்டு இருந்தால்... உங்கள் நண்பர் வந்தால்.. அவருக்கு என்ன பதில் சொல்வீர்கள்... போங்கள் மன்னா... போய்.. ஆக வேண்டிய பணிகளுக்கு ஆவன செய்யுங்கள்...

இப்படி பேசிக் கொண்டு இருக்கையிலே... கர்ணன் அங்கே வருகிறான்...

துரியோதனன் : அங்க தேச அதிபதியே வருக... மன்னவனே வருக...

கர்ணன் : இது என்ன நண்பா... நீயுமா?? தங்கையே... நீயாவது சொல்லக் கூடாதா உன் கணவரிடம்.... என்னை இப்படி எல்லாம் சொல்ல வேண்டாம் என...

பானுமதி : அதுதானே... இப்படியா வரவேற்பது உங்கள் நண்பரை???

துரியோதனன் : பின்னே எப்படி???

பானுமதி : என்னைப் போல வரவேற்கக் கற்றுக் கொள்ளுங்கள்... “கொடை வள்ளலே.. வருக... ஈகையின் செம்மலே வருக....”

கர்ணன் : பலே... அடித்த இடத்தைத் துடைத்து விட்டு, மீண்டும் பலமாய் அதே இடத்தில் அடித்து விட்டாய்.... ஹ ஹ ஹ...

மூவருக்கும் சிரிப்பு வருகிறது...

பானுமதி : ஆமாம் அண்ணா... தங்கள் முகத்தில் ஏதோ ஒரு ஒளி கூடித் தெரிகிறதே... என்ன அது???

துரியோதனன் : ஆம் நண்பா... நாளுக்கு நாள் உன் தேஜஸ் அதிகமாவது என்ன விந்தை???

கர்ணன் : இது என்ன விந்தை???

துரியோதனன் : எல்லாம் இந்தக் காதல் படுத்தும் பாடு...

பானுமதி : இருக்காதா பின்னே... அதுவும் வரப்போகிறவள் இவருக்கு ஏற்ற துணை அல்லவா??? கற்பனையிலே எனக்கு காணத் தெவிட்டவில்லை... அவள் ரத்தத்தை ஓட்ட.. இவர் பின்னே அமர்ந்து செல்வதை...

கர்ணன் : போதும் போதும்... இன்று உன் நகைச் சுவைக்கு நான்தானா அகப்பட்டேன்... இதோ நான் கிளம்பி விட்டேன்...

பானுமதி : எங்கே கல்யாண வேலைகளை கவனிக்கவா??? ஆனாலும் இத்துணை அவசரம் கூடாது அண்ணா உங்களுக்கு...

துரியோதனன் : ஹ ஹ ஹ... கர்ணா... போதுமா உனக்கு???

கர்ணன் : அது சரி தங்கையே... இந்த திருமணம் பற்றி உன் எண்ணம் என்ன??? அதிலே ஏன் இத்துணை சடங்குகள் உள்ளன.

அதன் பொருள் எல்லாம் என்னவென்று எதுவும் தெரியவில்லை... விளக்கிச் சொல்லி எனக்கு விளங்க வைப்பாய் தங்கையே...

துரியோதனன் : சொல்லு தேவி... நானும் கேட்கிறேன்...

பானுமதி : திருமணம் எனும் சொல்லே ஒரு அழகான பொருள் கொண்ட சொல்தான்

திரு – என்றால்... மதிப்புக்குரிய... மரியாதைக்குரிய... என்றும் தெய்வத்தன்மை கொண்டது என்றும் பொருள்.. மணம் - எனும் சொல், வாசனை மற்றும் இணைதல் என்றும் பொருள் தரும். தெய்வீகத் தன்மை கொண்ட இணைதல், இருமனங்களின் இணைதல் என்றும் பொருள் வரும்...

கர்ணன் : அட இந்த விளக்கம் புதிது... சரி.. அதற்கேன் அத்துணை சடங்குகள்???

பானுமதி : சடங்குகள் அனைத்துமே ஒவ்வொரு உள்ளார்த்தம் கொண்டவை..

முதல் சடங்கு பொன் உருக்குதல்... அடுத்து...

கர்ணன் : அதென்ன பொன்னை உருக்குதலா??

பானுமதி : ஆம் அண்ணா... திருமாங்கல்யத்திற்குரிய தங்கத்தை கோவிலில் வைத்து பூசை செய்து பின்னர் ஒரு தட்டில் மங்கல பொருட்கள் அனைத்தும் வைத்து கொண்டு வந்து பூஜையறையில் வைக்கவேண்டும். பொன் உருக்கும் நாள் அன்று அதை மணமகனின் பெற்றோர் அல்லது பெரியோர் எடுத்து மணமகனிடம் கொடுக்க அவர் அதை பொற்கொல்லரிடம் கொடுத்து உருக்கவேண்டும்.

அவர் கும்பம் வைத்து விளக்கேற்றி தூபதீபம் காட்டி, வேண்டிய அனைத்தும் வைத்து தேங்காய் உடைத்துப் பூசை செய்து பொன்னை உருக்குவார். உருக்கியபின் தாய்மாமன் தேங்காய் உடைத்துப் பூசை செய்து அந்த இளநீரை உருக்கிய தணலில் ஊற்றி தீயை தணிப்பார். பின் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்குமம் வைத்து வெற்றிலை மேல் உருக்கிய தங்கத்தையும் வைத்து மணமகனிடம் ஆசாரியார் கொடுப்பார். அதை மணமகன் வந்துள்ள சபையோருக்குக் காண்பித்து, அதன் பின் அந்த கொல்லருக்கு அரிசி, மற்றும் காய்கறியுடன் தட்சணை அளித்து உருக்கிய தங்கத்தைத் திருமாங்கல்யம் செய்ய ஒப்படைக்கவேண்டும்.

கர்ணன் : அடேயப்பா... இவ்வளவு இருக்கிறதா???

பானுமதி : அதுமட்டுமா??? இன்னும் இருக்கிறது நிறைய... கண்ணிக்கால் ஊன்றல், முலைப்பாலிகை போடல், அடுத்து பந்தல் அமைத்தல், மணமகன் அழைப்பு, மணமகன் புறப்படுதல், பெண் புறப்படுதல், மாப்பிள்ளை அழைப்பு, அரசு ஆணைக்கோல் (இது மருவி தற்போது அரசாணிக்கல் என ஆகிவிட்டது), வித்திடுதல் (அங்குரார்ப்பணம்), இரட்சாபந்தனம் (காப்பு கட்டுதல்), மணமகளை அழைத்தல், கன்னிகாதானம், தாலிகட்டுதல், மாலை மாற்றுதல், பால்பழம் கொடுத்தல், கோதரிசனம், கைபிடித்தல், ஸ்பத பதி (ஏழடி நடத்தல்), அம்மி மிதித்தல், கணையாழி எடுத்தல், பொரிஇடல், ஆசிர்வாதம், அட்சதை, என அனைத்தும் முடிந்ததும், மணமக்கள் மற்றும் அவர் பெற்றோரின் கையில் கட்டப்பட்டிருக்கும் காப்புகளை அவிழ்த்து, அத்துடன் தட்சினையும் சேர்த்து, திருமணத்தை குறைவின்றி நடத்திக் கொடுத்த குருக்களுக்கு தர வேண்டும்.

துரியோதனன் : எல்லாம் சரி.. அது என்ன இந்த ஸ்பத பதி??? மீதம் இருப்பவை பேர் சொல்லும் போதே புரிகிறது... இது மட்டும் ஏனோ....

பானுமதி : அதிலும் உண்டு ஒரு சிறப்பு... அது ஏழடி நடத்தல். ஒவ்வொரு அடிக்கும் ஒரு மந்திரம் உண்டு... மணமகன்... மணப்பெண்ணின் வலக்காலை ஏழு அடி எடுத்து வைக்க வேண்டுமாம்...

முதல் அடி : உனக்கு வாழ்வில் உண்ணும் உணவில் குறைவின்றி இருக்க இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட்டும்

இரண்டாம் அடி : உடல் நலம் சிறந்து இருக்க, இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட்டும்

மூன்றாம் அடி : நீ குறை இன்றி விரதத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட்டும்

நான்காம் அடி : நல்ல சுகமும், மன சாந்தியும் கிடைக்க இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட்டும்

ஐந்தாம் அடி : பசுக்கள் போன்ற தூய்மையே உருவான பிராணிகள் பின் தொடர்ந்து வரட்டும்

ஆறாம் அடி : சகல சௌபாக்கியங்களும் உனக்கு கிடைக்க இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட்டும்

ஏழாம் அடி : உன் வாழ்வில் இடம்பெறும் சுபகாரியங்கள், ஹோமங்கள் அனைத்தும் நல்லபடி முடிய இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட்டும். எழடிகள் நடந்த நாம் இருவரும் நண்பர்கள் ஆனோம். எது வந்தாலும் இருவரும் சேர்ந்து அனுபவிப்போம்.

என்று பொருள் தருமாம் அந்த மந்திரங்கள்...

கர்ணன் : சரி இந்த அட்சதை என்பது மஞ்சள் கலந்த அரிசிதானா???

பானுமதி : ஆமாம் அண்ணா. அதைத்தான் அறுகரிசி என்பார்கள். முனை உடையாத பச்சரிசி, அறுகம்புல், மஞ்சள் மாவு இவை கலந்த கலவையே அறுகரிசி... இதை திருமணத்திற்கு வருகை வந்தவர்கள் அனைவரும், இரு கைகளால் அள்ளி, மணமக்கள் மேல் தூவி, ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் சூழ பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துவார்கள்...

துரியோதனன் காலைப் பார்த்து கேட்கிறான் கர்ணன் (அப்போ துரியோதனன் மெட்டி போட்டு இருந்தார் என் கற்பனையில்...)

கர்ணன் : ஆண்கள் ஏன் மெட்டி போட வேண்டும்???

பானுமதி : பெண்கள் மணமானவர்கள் என்பதைக் குறிக்க பெண்கள் நெற்றியில் அதாவது தலை வகுட்டின் ஆரம்பத்தில் குங்குமம் இடுவது வழக்கம்... நிமிர்ந்து நடக்கும் ஆணுக்கு, தன் எதிரே வரும் பெண், மணம் ஆனவள்... தவறான கண் கொண்டு காணக் கூடாது என்பதைக் காட்ட...

அதுபோல, தலை குனிந்து நடப்பவள் பெண்... எனவே தன் எதிரே வரும் ஆண்மகன் மணம் ஆனவன், இன்னொரு பெண்ணின் கணவன் என்பதைக் குறிக்க ஆண்கள் மெட்டி இடுவது மரபாயிற்று...

கர்ணன் : பலே... பலே... முன்னோர்கள் சொன்னவை எல்லாம்... உள்ளார்த்தம் கொண்டவை தான் இல்லையா???

துரியோதனன் : அது சரி... மாங்கல்யம் கட்டுகையில் இந்த மூன்று முடிச்சு போடுவதில் ஏதும் கருத்து உள்ளதா??? கூடவே மங்கள வாத்தியங்கள்.. அப்போது மட்டும் காதைக் கிழிக்கும் வண்ணம் இசைக்கப்படுவது ஏன்???

பானுமதி : அதற்கும் உண்டு அர்த்தம்.

முதல் முடிச்சு – நீ எனக்கும், நான் உனக்கும் கட்டுப்பட்டவர்கள்
இரண்டாம் முடிச்சு – நீ என் பெற்றோருக்கும், நான் உன் பெற்றோருக்கும் கட்டுப்பட்டவர்கள்
மூன்றாம் முடிச்சு – நாம் இருவரும் இந்த திருமணம் என்ற பந்தத்திற்கு கட்டுப் பட்டவர்கள்

என்றும் பொருள் கொள்ளலாம்...

கர்ணன் : சரி.. அந்த மங்கள வாத்தியங்கள்....

பானுமதி : ம்ம்ம்... சொல்கிறேன்... சொல்கிறேன்... சபையில் உள்ளோர் தும்முதல், மற்றும் அபசகுனமாக பேசுதல் இவை எதுவும் மணமக்களுக்கு கேட்காதவாறு இருக்கத்தான்... வாத்தியங்கள் அப்படி இசைக்கப்படுவது...

இப்படியாக பேசி முடித்து.. ஆக வேண்டிய காரியங்கள் எல்லாம் நல்ல படி முடித்து, மண நாளும் வந்தது....

எப்போதுமே... காண்பவர்களின் கருத்தை நிறைப்பவன் கர்ணன்.... மண நாள் அன்று சொல்லவும் வேண்டுமா???

தூய வெண்பட்டு உடுத்தி... பொன்னால் ஆபரணங்கள் பல பூண்டு, வாசனை திரவியங்கள் மணம் கமல... அலங்கரித்த பளிங்குச் சிலையாய்... சபைதனில் அவன் நடந்த பாங்கில்... காற்றும் அசையவில்லை ஒரு நிமிடம்.... என்ன அழகு... என்ன ஒளி, என்ன ஒரு காந்தம் அவன் பார்வையில்....

பளிங்கு சிலையே, உன் பார்வை
ஒரு கலையே.. உனைக் கண்ட
நிமிடம், உயிர் பெற்ற யாவரும்
ஆயினர் சிலையே....

கம்பீரம் உன் நடையே, உன் அழகு
உனக்கு அணியே... நீ அணிந்த
அணிகலனுக்கும் உன் அழகுதான்
ஒரு அணியே...

பட்டுடித்தி வந்திட்ட பகலவனே,
மேகம் மறைக்கும் சூரியனாய்,
நின் தேகம் மறைக்கும் ஆடைகள்
மலர் மேல் பணியாய் அதுவும்
உனக்கு அணியாய்...

கம்பீரம், தேஜஸ், காந்தி... என அத்தனையும் ஒன்றாய் கலந்த கலவையாய்.. கர்ணன்

அந்தப் பெண் மட்டும் என்ன...

தங்கப் பதுமைக்கு தங்கத்தில்
அணியிட்டால்.. தெரியுமோ என
வைரத்தால், உச்சி முதல் பாதம்
வரை, உற்சவ சிலையாய்
அலங்காரம் கொண்டு...

அத்தனைக்கும் மேலே, நாணத்தில்
சிவந்த முகத்தை அழகாரமாய்
கொண்டு... அன்னம் அது தோற்க
அவள் பாதம் மெல்ல தரையில்
பதிக்க...

கான்பவரும் காதல் கொண்டனர்
அவள் அழகில்... மேக வண்ணப்
பட்டு உடுத்தி தோகை அவள்
நடந்து வந்து... மணவறை
சேர்ந்தாள்.....

ஆதவனும், நிலவும் அருகே
வராதாமே... யார் சொன்னது...
இதோ.. இங்கே மணவறையில்
இரண்டும் உள்ளதே...

தகதகக்கும் கதிரொளி கொண்டு
இருக்கும் இடத்தை ஜொலிக்க
வைக்கும் கர்ணன் – ஆதவனாய்..

குளிர வைக்கும் ஒளி கொண்டு
இருந்த இடத்தை ஒளியேற்றிய
சுபாங்கி – நிலவாய்...

வந்திருந்தோர் அனைவரும் மனதார வாழ்த்த... அட்சதைகள்... அள்ளி தெளிக்க.... மங்கல இசை எங்கும் ஒலிக்க... மங்கை அவள் இணைந்தால்... கர்ணனின் மனைவியாய் அவன் தனிமையை தகர்க்க....

கர்ணனிடம் பெற்றுச் சென்றவர்கள் அனைவரும் வந்திருந்தனர் அரங்கம் நிறைக்க... அவன் மீது வாழ்த்துக்களை அள்ளி இறைக்க...

அனைவரின் அன்பிலும் கரைந்து நின்றான் கர்ணன்.... அன்பிலே கரைந்த கர்ணனை கண்டு ஆனந்தத்தின் எல்லையிலே தொல்லைகள் இன்றி இருந்தான் அவன் ஆருயிர் நண்பன் ஒரு புறம்...

பெற்ற அன்னையைப் போலே அவனுக்கு அனைத்தும் பார்த்துப் பார்த்து செய்த அவன் தங்கை பானுமதியோ.... இந்தக் காட்சியில் உள்ளம் நிறைந்து, நெஞ்சம் மகிழ்ச்சியில் விம்ம நின்றிருந்தால்.. ஒரு புறம்...

கூடவே அதற்கு கொஞ்சமும் குறையாத சந்தோசத்தில்.. இந்தப் பெண் யார்....

அடிப்பாவி வேணி... நீயா???

உன் காதலனுக்கு கல்யாணம்... உனக்கு என்ன இத்துணை சந்தோஷம்????

இப்படி காதலிச்ச கர்ணனை வேற ஒரு பொண்ணுக்கு தாரை வாத்து கொடுத்துட்டு எப்படி உன்னாலே சந்தோஷமா இருக்க முடியுது????

(என் மனசாட்சி தாங்க இந்த சவுண்ட் குடுக்குது...)

அவனை எனக்கு பிடிக்காம விட்டுக் கொடுக்கலே... ரொம்ப பிடிச்சதாலே... அவனுக்கு பிடிச்சதை செஞ்சேன்... இது ஒரு தப்பா???

என்ன ஆனாலும் அவன் என் காதலன் தான்... இப்போதான் எனக்கு அவன் மேல இன்னும் காதல் அதிகம் ஆகுது....



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:09 am

பகுதி பதினெட்டு : கர்ணன் தேரோட்டியின் மகனா??


கர்ணனின் திருமணம் இனிதே, எந்தக் குறையும் இன்றி நடந்தேறியது... அனைவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில்.... இரவு விருந்து முடித்து சம்மந்திகள் இருவரும் பேச வருகின்றனர்... (இந்தப் பகுதிகளும் கர்ணன் திரைப் படத்தை தவிர வேறு எங்கும் இல்லாததால்.. அவையே இங்கும்... என் கற்பனையுடன் கலந்து... )

அதிரதன் (கர்ணனின் தந்தை) : அனைத்தும் மிக நலமாய் நடந்தன... ஆனாலும் உங்கள் பெருந்தன்மை... சொல்லில் வடிக்க இயலாதது...

சுபாங்கியின் தந்தை : பெருந்தன்மையா?? தாங்கள் என்ன கூறுகிறீர்???

அதிரதன் : ஆமாம்... எளியவன் நான்... உம் போன்ற அரசர்களின் அடிமை... உங்கள் பெருந்தன்மையால் என் குலமும் இனி பெரும் பேரைப் பெற்று விடும்...

சுபாங்கியின் தந்தை : அடிமையா?? என்ன சொல்கிறீர்கள்??? தாங்கள் எனது மருமகன்.. அங்க தேச மன்னர் கர்ணனின் தந்தை அல்லவா???

அதிரதன் : உண்மை.. ஆனால்.. பிறப்பால் நான் தேரோட்டி தானே???

சுபாங்கியின் தந்தை : என்ன??? தேரோட்டியா??? (அதிர்ச்சியும், கோபமும் போட்டி போட்டுக் கொண்டு.. வருகிறது)

அதிரதன் : ஏன்?? துரியோதன மகாராஜா இதை தங்களிடம் சொல்லவில்லையா???

சுபாங்கியின் தந்தை : ம்ம்ம்ம் சொல்லாவிட்டால் என்ன?? அவருக்கு உட்பட்ட சிற்றரசு.. அதனிடம் எப்படி நடந்தாலும் தப்பில்லை... இந்த எண்ணம் பேரரசுக்கு இருக்கத்தானே செய்யும்... ஹ ஹ ஹ... சம்மந்தி அவர்களே.. எப்படியோ புலியும், பூனையும் ஒன்றாகி விட்டது.. அதனால் ஒரு புது சந்ததி உருவாகுமே எனும் உங்கள் புதிய ஆசை.. பலே... இந்தப் புதுமையைக் கேட்கவே எனது உள்ளத்தில் மகிழ்ச்சி கிளர்ந்தெழுகிறது...

நீங்கள் போய் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்...

அதிரதன் உள்ளே செல்லுகிறார்...

சு. தந்தை : தேரோட்டியின் மகன்... என் மருமகனா???

மறுநாள் காலை... கோவிலுக்கு செல்வோம் என சுபாங்கியின் தந்தை கூற, தந்தை, அன்னை, மகள் மற்றும் அவள் தோழி என நால்வரும் ரதத்தில் கிளம்புகின்றனர்...

செல்லும் வழியைக் கண்ட சுபாங்கி... குழம்பி தன் தந்தையிடமே கேட்கிறாள்....

சுபாங்கி : தந்தையே கோவிலுக்கு போகலாம் என் புறப்பட்டீர்களே... ஊரைதாண்டி ஆயிற்று... நாம் எங்கே போகிறோம்???

தந்தை : ம்ம்ம்... நம் நாட்டுக்கு...

சுபாங்கி : அப்பா...

தந்தை : அலறாதே... மகளே.. கர்ணன்... உன் கணவன்.. ஒரு தேரோட்டியின் மகன்.... அந்த உண்மையைக் கூறாது மறைத்து.. ஒரு ஷத்திரியன் மகளை மணந்து விட்டான்..

சுபாங்கி : அதனால்???

தந்தை : உன்னைத் தீண்டும் தகுதி அவனுக்கு இல்லை.. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என எண்ணி எண்ணி வருந்தி, அவன் அழியட்டும்... அதுதான் அவன் செய்த செயலுக்கு தண்டனை..

அன்னை : அப்படி என்றால் என் மகளின் கதி???

தந்தை : மனந்தவனை மறக்க வேண்டியதுதான் உன் மகளின் விதி...

அன்னை : அய்யயோ.. இது என்ன அநீதி??

தந்தை : தேவி, உன் மகளோடு சேர்ந்து நீயும் அழு... நானும் அழுகிறேன்... ஆனால் என் மகளை மட்டும் அவனோடு சேர்ந்து வாழ் விடவே மாட்டேன்... இது உறுதி

சுபாங்கி : அப்பா, என் உயிரே அவர்தானப்பா... தேரை நிறுத்துங்கள்... நான் இறங்கி நடந்தேனும் என் தெய்வத்தை அடைகிறேன்...

தந்தை : அது மட்டும் நடக்காது மகளே... மானம் தான் எனக்குப் பெரிது... அதற்காய் நீ செய்யும் தியாகம் தான் அவனை மறப்பது...

சுபாங்கி ரதத்தில் இருந்து இறங்க எத்தனிக்க, அவளை இழுத்து அமர வைக்கிறார் அவளது தந்தை...

சுபாங்கி : அம்மா.. எனக் கதறி அவளது அன்னை மடியில் விழுகிறாள்...

அழுது கொண்டே ஊர் வந்து சேர்கின்றனர்...

அரண்மனையை அடைந்ததும், மகளைக் கீழே தள்ளி... இவளை உள்ளே அழைத்துப் போ என்கிறார் தந்தை...

அவமானத்தில், கோபத்தின் உச்சியில் இருக்கிறார் பெண்ணைப் பெற்றவர்....

குதிரை தின்ற மிச்சக் கொள்ளை உன்ன வேண்டியவன், தேனை அருந்த ஆசைப்படலாமா??? என உள்ளுக்குள் புகைந்து கொண்டு இருக்கிறார்...

வருகிறார் நம் கதா நாயகன் அங்கே...

கர்ணன் : சுபாங்கி... சுபாங்கி... (என அவளை அழைத்துக் கொண்டே வந்தவன் அங்கே குறுக்கும், நெடுக்குமாய் நடந்து கொண்டு இருந்த அவள் தந்தையைப் பார்த்து..) மாமா...

சு. தந்தை : மாமன்?? யார் அவன்??? மாமனாக்க விரும்பியவன் யார் அவன்??

கர்ணன் : மாமன் – யார் அவன் ?? மகளைக் கொடுத்தவன். மாமனாக்கியவன் - யார் அவன்?? – மகளை மணந்தவன்

சு.தந்தை : இரண்டு தவறு.. அதை எடுத்துச் சொல்ல உன்னால் முடிந்தது.. ஆனால் அந்த அளவுடன் உன் வாய்த்துடுக்கு முடியட்டும்... என் கோவம் எல்லையைத் தாண்டும் முன் போய்விடு..

கர்ணன் : போவதா?? எங்கே???

சு. தந்தை : இது மன்னன் வசிக்கும் இடம்... உன் போன்ற தேரோட்டி நிற்க வேண்டிய இடம் நடுத்தெரு...

கர்ணன் : பெரியவரே... சற்றே அடக்கத்துடன் பேசுங்கள்... நான் இப்போது அரசன் (கம்பீரமாய் தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்து நின்று கர்ணன் சொல்கிறான்)

சு. தந்தை : என்னதான் கர்ஜித்தாலும் பூனை புலியாக முடியாது... உன் ரத்தத்தில் அரசு ஓடவில்லை.. தேர் தான் ஓடுகிறது..

கர்ணன் : அனைவர் ரத்தமும் சிவந்து தான் ஓடுகிறது...

சு. தந்தை : ஆணவக்காரன். இப்படி எல்லாம் பேசி என் குல தர்மத்தை நீ குலைக்க முடியாது... மன்னன் மகளை, ஒரு மன்னன் மரபில் வந்தவன் தான் மணந்திருக்க வேண்டும்...

கர்ணன் : அதை மணக்கும் முன் யோசித்திருக்க வேண்டும்...

சு. தந்தை : தவறுதான்... என் மகள் வாழ்வற்றுப் போனாள்... நான் செய்த தவறுக்கு பலன் அது... இத்தோடு இந்த வழக்கு முடியட்டும்..

கர்ணன் : இறக்கும் வறை என் வாழ்வோடு இணைக்கப்பட்ட வழக்கு அது... நீங்கள் நினைப்பது போல அவ்வளவு எளிதாக முடியாது...

சு. தந்தை : முடியத்தான் வேண்டும்.. குலத்தால் சிம்மம் நான்.. குதிரை நீ... நான் தேர் ஏற விரும்பினால்... நீ அந்த தேரை ஓட்ட வேண்டும்... உன் நிலை என்னவென்று உனக்குப் புரிந்ததா???

தேரோட்டி, போய் விடு இங்கிருந்து...

கர்ணன் : கொதித்துப் போகிறான் இந்த பேச்சில்...

வெறி ஏறி நிற்கும் மன்னா, மகளின் வாழ்வு வீழ்ந்தாலும், குல பெருமை என வெறும் பேச்சு பேசும் மன்னா, இதற்கு இப்போதே ஒரு முடிவு வேண்டும்...

உன்னோடு என் உறவு இன்றுடன் முடிந்தது... உன் மகள் என் மனைவி அவள்... அவள் எனக்கு சொந்தம்... அனுப்பு அவளை என்னுடன்... கண்களில் அனல் பறக்க கர்ணன் அவரிடம் கூற, அதற்கு அவர்...

சு. தந்தை : ஹ ஹ ஹ ஹ... உறுமி விட்டான்.... ஹ ஹ ஹ தேரோட்டி... போய் விடு இங்கிருந்து...

கர்ணன் : இல்லை... எடு உனது வில்லை...

சுபாங்கியின் குரல் : அரசே...

கர்ணன் : சுபாங்கி... என குரல் வந்த திசையில் செல்ல எத்தனிக்க...

சு. தந்தை : நில்.. நீ செல்லாதே அங்கே...

கர்ணன் : முன்னமே சொன்னேன் நான் அவள் கணவன்

சுபாங்கியின் குரல் : பெண்ணுக்கு கணவன் பெரிதல்ல... பிறந்த குலம் தான் பெரிது... இதுவரை வாழ உதவி வந்த தந்தை தான் பெரிது... புதிதாய் வந்த கணவன் பெரிதல்ல..

சொல்லுக்கு செவி சாய்க்கா அரசரே.. வில்லுக்கு இரை ஆக்கி என்ன பயன்?? வீரம் வேண்டுமானால் வெளிப்படலாம்... ஆனால் நீங்கள் நினைக்கும் காரியம் நடை பெறாது... தாங்கள் வந்தது போலே போகலாம்...

கர்ணன் : எனைப் பிரிந்தால், உன் உயிர் பிரியும் என்று சொன்னவளே... அந்த எண்ணத்தை உன்னை விட்டு பிரித்து விட்டாயா?? கணவனுக்கு பின்தான் தெய்வம் என்ற இந்த நாட்டின் பெண் தர்மம்.. உன்னாலா பிழை பட வேண்டும்???

சு. தந்தை : ஹ ஹ ஹ ஹ

கர்ணன், தன் மீது ஆசை கொண்டு வந்தவளை, தான் மனந்தவளை கையோடு அழைத்துச் செல்ல ஆசையாய் வந்தவன்... அவளது இந்த வார்த்தைகளைக் கேட்டு... உடைந்து போகிறான்... உள்ளத்தால்... நொறுங்கிப் போகிறான்...

இதுவரை நான் அறியாதவர் தான்
எனை அவமானப் படுத்தினர். இன்றோ
என் மனைவி, என் உயிரின் சரி பாதி
அவளும் அன்றோ.. எனை அவமானப்
படுத்தினாள்...

அம்மா, என்னைப் பெற்றவளே, எனை
அன்றே கொன்று போட்டிருந்தால் இந்த
நிலை எனக்கு வந்திருக்குமா???

நான் என்னம்மா தவறிழைத்தேன்... எனை
நீ வெறுத்து ஒதுக்க... அன்று நீ துவக்கி
வைத்தது.. இன்று வரை ஓயவில்லை..

என் வாழ்வில் வரும் அத்துணை பெரும்
எனை ஏளனம் செய்தால் நான் என்னதான்
செய்வேன்... அத்துணை பாவமா நான்
செய்தேன்?? அறிந்து செய்தேனா?? அறியாமல்
செய்தேனா?? ஆயிரம் முறை அனுபவிக்கிறேன்
உள்ளம் அறுக்கும் வேதனையை... ஐயோ....



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:10 am

பகுதி பத்தொன்பது : என் மன்னவன், என் காதலன்

தனது மாமனார் மற்றும் மனைவியால் அவமானப் படுத்தப்பட்டு... கடும் சினத்துடன் தன் அரண்மனைக்கு வந்து சேருகிறான் கர்ணன். இனி அங்கே நடப்பவை...

பணியாளர்கள் மற்றும் அந்த அரண்மனையில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாய்.. பேசிக் கொண்டே தங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்... புயல் போல உள்ளே நுழைகிறான் கர்ணன்

ஒரு சேவகன் : மன்னா, மகாராணி அவர்கள்....

கர்ணன் : இடையிட்டு... போய்விடு அந்தப் பக்கம்.... (என்று எரிச்சலாய் மொழிந்து விட்டு, தன் அறைக்குச் செல்கிறான்)

நன்கு மலர்களால் அலங்கரிக்கப் பட்ட அறை... பாலும் பழமும் ஒரு பக்கம் இருக்க.. குளிர் நிலவோ வானிலே இருக்க... இவன் மட்டும் நெஞ்சம் நிறைய வேதனையில் இருக்க...

அப்போதும் தனை ஆற்றிலே விட்டு விட்ட அன்னையை நினைத்து கண்களில் நீர் வழிகிறது... அதை துடைக்கத் தோன்றாது அவன் துக்கத்தில் இருக்க, மலர் அரும்புகள் பல அவன் மீது விழுகின்றன... திரும்பிப் பார்க்க அங்கே... சுபாங்கி...

அவளைக் கண்டதும் உடனே மகிழ்ச்சி, நெகிழ்ச்சி... பின்னர் வருகிறது அடங்காத கோபம்...

கர்ணன் : நீயா?? எங்கே வந்தாய்...

சுபாங்கி : நானேதான் ... என் இடம் வந்தேன்...

கர்ணன் : அங்கே உன் தந்தையின் முன்னே என்னை அவமானப் படுத்தி விட்டு இங்கே எங்கு வந்தாய்???

சுபாங்கி : இந்தப் பாலை அருந்துங்கள்...

கர்ணன் : பயப்படாதே... ஒரு பெண்ணிடம் என் வீரத்தை காட்டும் அளவு நான் கோழை அல்ல... நான் அமைதியாகச் சொல்லும் போதே போய்விடு இங்கிருந்து...

சுபாங்கி : எங்கே போவேன் நான்.. என் மன்னவன், நீங்கள்... நான் இங்கேதான் இருப்பேன் (சென்று கர்ணனின் அருகில் அமர்ந்து கொள்கிறாள்)

கர்ணன் : இது நல்ல மனைவிக்கு அழகு.. ஆனாலும் அங்கே அத்துணை பேசிவிட்டு இப்போது எங்கே வந்தாய்... சென்று விடு... என அவளை கீழே தள்ளுகிறான்...

சுபாங்கி : (அழுகையுடன்) அங்கே நடந்தது ஒரு நாடகம்... அப்படி பேசியது கூட நான் இல்லை.. என் தோழி மங்களா...

கர்ணன் : மங்களாவா??? கோபம் குறைந்து முகம் சற்றே தெளிகிறது...

சுபாங்கி : ஆமாம். அவள் என்னைப் போலவே பேசும் திறம் கொண்டவள்... (இன்னும் அழுது கொண்டே இருக்க, கர்ணன் அவளிடம் செல்கிறான்..)

கர்ணன் : சுபா... சுபா... பெண்ணுக்குள்ள சிறப்பெல்லாம் உன்னகத்தே கொண்டவளே... கோபம் கொண்ட கணவனிடம் இருந்து, குணம் கெட்ட தந்தையைக் காத்தாய்

சுபாங்கி : காரிய வெற்றிக்காக அந்த வழியைக் கையாண்டேன்... வெற்றி எனதுதான்.. ஆனாலும் நான் கையாண்ட முறைக்காக என்னை மன்னியுங்கள் பிரபு...

கர்ணன் : மன்னிக்கிறேன்.. மன்னிக்கிறேன்... எப்படி மன்னிக்க வேண்டும் உன்னை??? (இருவருக்கும் சிரிப்பு வருகிறது... ) (அப்பாடா சமாதானம் ஆயட்டாங்க பா... )

அது சரி.. நீ எனக்கு முன்னே இங்கே எப்படி வந்தாய்...

சுபாங்கி : என்ன, அப்படி கேட்டு விட்டீர்கள்... நான் தேரோட்டி நீங்கள் பார்த்ததில்லையா??? (பெருமையாய் தலை உயர்த்திக் கேட்கிறாள்..)

கர்ணன் : பார்த்திருக்கிறேன்... பார்த்திருக்கிறேன்... அடங்காத தேரோட்டத்தை, வெள்ளோட்டம் பார்த்த பின் தானே நான் உன்னையே பார்த்தேன்... ஹ ஹ ஹ

அதை மறப்பேனா நான்???

சுபாங்கி : போதும் உங்கள் பரிகாசம்... நான் தேரோட்டுவதில் என்ன தவறு... நான் தான் இப்போது தேரோட்டியின் மனைவி ஆகிவிட்டேனே...

இதுவரை... மந்தகாசமாய் புன்னகை அளித்த கர்ணனின் முகம்... தீ பட்டார் போல சுருங்கி... களை இழந்து போனது...

சுபாங்கி : ஏன்... ஏதாவது தங்கள் மனதை வருந்தச் செய்துவிட்டேனா???

கர்ணன் : சுபா.. கணவனை தேரோட்டி என நீ பெருமையைச் சொல்லுகிறாய்... ஆனால் மற்றவர் என்னைக் காயப்படுத்துவதே அந்த வார்த்தையைக் கொண்டு தான்...

ஷத்ரியனுக்கு உரிய வீரம் இருந்தும், பிறப்பரியா காரணத்தால்.. இழிகுலத்தான் என எல்லோரும் ஏசுவதைத்தான் என்னால் தாள முடியவில்லை..

சுபாங்கி : சுயநலமிகள் அப்படி பேசிவிட்டுப் போகட்டும்... குலம் எதுவானால் என்ன, இல்லை என்று சொல்லாத உங்கள் குணமும், போரில் யாராலும் வெல்ல முடியாத திறனும் உங்களை விட யாருக்கு உண்டு... எட்டுத் திக்கும் புகழ் பரவும் ஒருவர் அல்லவா நீங்கள்..

கர்ணன் : என் குலம் எக்குலமாயினும் எனக்கு கவலை இல்லை... ஆனால்.. பெற்றவளே என்னை, பேழையில் வைத்து ஆற்றிலே விட்டாள் எனில், என் பிறப்பில் என்ன இழுக்கு இருக்குமோ எனும் எண்ணம், என்னை வாழ விடாது செய்கிறது சுபா.

சுபாங்கி : கருனைக்குத் தாய் உள்ளம் என்பார்கள்.. ஆனால் ஒரு தாய் செய்த அநீதி நம் தலை மீது வந்து விடிந்தது... அதற்காக நீங்கள் ஏன் வருந்த வேண்டும்?? பிறர் தயவால் வாழ வேண்டிய நிலை இல்லையே நமக்கு.. பின் என்ன பயம்??

கர்ணன் : பயம் வேறு... மான உணர்ச்சி வேறு...

சுபாங்கி : என்னால் புரிந்து கொள்ள முடிகிறது... ஆயிரம் தான் நான் ஆறுதல் சொன்னாலும், என் தந்தையே என் கணவரை தாழ்த்திப் பேசிய போது, என் உடலும், உள்ளமும் கொந்தளித்துக் கொண்டுதான் இருந்தது... என்ன செய்வது... (அழுகை)

கர்ணன் : அவள் அழக் கண்டு இவனுள்ளும் வேதனை... என்னால் உன் மனம்படும் வேதனையைக் கண்டாயா??

சுபாங்கி : உங்கள் வேதனைக் கண்டு நான் படும் வேதனை அல்ல இது.. உத்தமருக்கு இப்படி ஒரு சோதனையா??? சத்தியம் ஒரு நாள் உங்கள் நிலையை இந்த சமூகத்துக்கு உரைக்காதா எண்ணும் ஆதங்கம் இது... அதை விடுத்து வேறு வேதனை என்ன எனக்கு???

கர்ணன் : உண்மை... நானாகி விட்டவள் நீ...

சுபாங்கி : என் உயிர் நீங்கள்.. நான் அருந்தும் தேன் உங்கள் வாக்கு... நான் காணும் வான் உங்கள் பார்வை... நான் நாடும் கோவில் உங்கள் இதயம்...

கர்ணன் : ஆஹா... இனிக்க இனிக்கப் பேசி, கனியக் கனியக் காணும் என் கண்மணியை, குலம் எண்ணும் பெயரால் என்னிடம் இருந்து பிரிக்க இருந்தனரே.... (என வருந்துகிறான்)

சுபாங்கி : பிரபு... குலம் என்பதும் இனம் என்பதும் பிறப்பைக் கொண்டு அறியப்படுவது இல்லை... வானுக்குள் இல்லை பேதம், விளக்குக்கு இல்லை இருள்... வீரத்தில் இருதுதான் குலம் பிறக்கும், அதில் மேல் என்றும் கீழ் என்றும் எங்கே இருக்கும்???

கொடுக்கும் கரங்கள் மேல் இருக்கும், பெறுபவர் கரம் தான் கீழ் இருக்கும். கொடுப்பவர் என்பது நீங்கள் அல்லவா??? தருமத்தின் தாயே கலங்காதீர்...

கர்ணன் : ஆஹா... என்னவளே.. என் உயிரே... என் மனதை அமைதிக்கு ஆட்படுத்தி, எனை மகிழ்ச்சிக்கு உட்படுத்த, உயிர் பெற்று வந்தாயா???

நீ இல்லாத இத்துணை வருடமும்
ஒரு நிமிடமாய்த் தான் போனதே...
இனி நீ இன்றி ஒரு நிமிடமும் என்
வாழ்வு நகராதே..

நான் நாடும் சொர்க்கம் நீ, என்
வாழ்வு உன் பக்கம் இனி...

என் மகிழ்ச்சியின் அகராதி நீ
என் காதல் ரதி நீ...

என்னவளே, என் பொருட்டு உன்னை
பெற்று வளர்த்து ஆளாக்கிய உன்
தந்தையைக் கூட எதிர்த்து வந்தாயே

உள்ளம் உருக்கிய உன் இந்த அன்புக்காய்
மன்னித்தேன் உன் தந்தையை... உனக்காய்

என கர்ணனின் என்ன ஓட்டமும்....

என் உள்ளத்தின் இஷ்ட தெய்வமாய்
உம்மை நான் பிரதிஷ்டை செய்து ஆனது
காலங்கள் பல...

அன்றிலிருந்து இன்று வரை கூடும்
இந்த அன்புக்கு எது தடை???

எத்துனை துயரம் அடைந்தாயோ
என்னவனே... என் அன்பின் மன்னவனே

பெற்றவள் உன்னை ஆற்றில் விட்டால்
என்ன? உன் உற்றவள் நான் உன்னை
எதன் பொருட்டும் நீங்கேன்... உன் துயர்
போக்காது தூங்கேன்...

சத்தியம் ஒரு நாள் வெல்லும்... அன்று
உள்ளார்ந்து ஒளிரும் உன் முகத்தைக்
காண காத்திருக்கேன் நானும்...

அதுவரை, உன் மனம் நோகாது, உன்
மலர் முகம் சுருங்காது, மலர்ந்திருக்க
வைத்திருப்பேன் நானும்...



என அவன் வேதனையை நீக்கும் வடிகாலாய்... அவள் மனமும் இருக்க.... காலங்கள் போகிறது...



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:11 am

பகுதி இருபது : யார் பாக்கியசாலி



இந்தப் பகுதியில், கர்ணனும், சுபாங்கியும், தாங்கள் இருவரும், ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசிக்கின்றனர் என்பதை சொல்ல ஆசை... கற்பனைதான்...

கதிரவனிடம் இருந்து ஒளி பெற்று நிலவு ஒளிர்கிறது என நாம் படித்ததுண்டு... ஆனாலும் நிலவிடம் ஒளி பெற்று கதிரவன் ஒளிர்வதாய் நான் அறிவது இப்போதுதான் முதல் முறை..

கொதிக்கும் சூரியனாய், எரிக்கும் பார்வையுடன், மனதால், எளிதில் நெருங்க இயலாத தொலைவிலே அனைவரையும் நிறுத்தி வைத்தவன், தன் மனதை இரக்கத்துக்கும், ஈகைக்கும் மட்டும் திறந்து வைத்தவன்... இன்று இருந்த நிலை... அவனுக்கே புதிது...

அரண்மனையிலும் அவன் நேரம் தவறாமைக்கும், சொன்னதை, சொன்னது போல் செய்வதற்கும் பெயர் போனவன். நேரம் தவறி நடக்கும் எதையும், காணச் சகியாதவன்... தாமதமாய் வந்து, தயங்கிய பணியாளை... இல்லத்தில் சுகமில்லை எனும் காரணம் சொன்னவனுக்கு, விடுப்புடன் பொன் முடிப்பும் கொடுத்து இல்லாளை கவனிக்க அனுப்பினான்...

அனுப்பியவன் சிந்திக்கிறான்... இதற்க்கு முன்னும் இந்த காரணங்கள் நான் கேட்டிருக்கிறேன்... ஆனாலும் இது போல அவனுக்காய் யோசிக்க தோன்றவில்லையே... என ஆழ்ந்த சிந்தனையில்...

சுபாங்கி : என்ன சிந்தனை பிரபோ...

கர்ணன் : எல்லாம் நல்ல சிந்தனை தான்...

சுபாங்கி : புரியும்படி சொன்னால்தான் என்னவாம்???

கர்ணன் : என்னைப் புரிந்தவள், என்னுள் பல மாயம் புரிந்தவள், இது புரியவில்லையா???

சுபாங்கி : போதும் பரிகாசம்... சொல்லுங்களேன்...

கர்ணன் : நீ இப்படிச் சொல்லக் கேட்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி.. நான் சொல்வதில் இல்ல...

(அச்சோ... என்ன வெட்கம்??? கன்னம் ஆப்பிள் நிறத்துல ஆய்டிச்சே...) கண் நோக்கிய பெண்ணோ இப்போது மண் நோக்க...

மண் நோக்கிய அவளை மன்னன் நோக்க...

முகம் திருப்பி... அவள் நிற்க...

மறுபக்கமும் சென்று மன்னவன் அவள் முகம் நோக்க...

நாணமும், காதலும் போட்டி இட... அவள் மன்னன் முகம் காண...

படபடக்கும், இரு வண்ணத்துப் பூச்சி அவள் கண்களிலே... செங்காந்தள் நிறம் அவள் கன்னத்திலே... தறி கேட்டு ஓடும புரவி அவள் எண்ணத்திலே...

காற்றில் ஆடும் சருகாய் அவள் இதழ்கள்... அவள் மன்னவன் முகம் நோக்க...

வழிய வழிய காதலை விழி வழி இவள் இதயம் நுழைக்கும் முயற்சியில் கர்ணன் கண்கள்... உலகிலே தனக்கு மிகப் பிரியமான பொருளை நோக்கும் விதமாய் அவன் பார்வை... தொட்டால் வலிக்குமோ என மெலிதாய் வருடும் மயிலிறகாய்.. அவன் தீண்டல்...

தாங்க முடியா சுமையால் மூடின அவள் இமைகள்...

(ஓகே ஓகே... திட்டாதீங்க... வந்துட்டேன் பா... )

பக்கத்து நந்தவனத்தில் கேட்ட குயிலோசையில் கலைந்தன அவர்கள் சிந்தனை...

கர்ணன் : சுபா...

சுபாங்கி : ம்ம்ம்ம்

கர்ணன் : உறங்கி இருந்த என் உணர்வுகளுக்கு எல்லாம்.. உயிர் கொடுத்த என் உயிரே... நீ இன்றி இனி இருந்திடுமோ என் உயிரே???

சுபாங்கி : என்னுள்ளே பெண்மையை.. உயிர்பித்தவர் நீங்கள்... காதலை உயிர்வித்தவர் நீங்கள்... என் உயிரே உறைந்திருக்கும் என்னுயிர் நீங்கள்..

கர்ணன் : என் நிலவு நீ...

சுபாங்கி : என் வானம் நீங்கள்..

கர்ணன் : என் சுவாசம் நீ...

சுபாங்கி : என் மனதின் வாசம் நீங்கள்...

கர்ணன் : தாமரை மலர் நீ...

சுபாங்கி : எனை மலர்விக்கும் ஆதவன் நீங்கள்...

கர்ணன் : நிலவுக்கும், உனக்கும் வேறுபாடு தெரியவில்லை எனக்கு...

சுபாங்கி : உங்களிடம் ஒளி பெரும் நிலவு தானே நான்...

கர்ணன் : கண்ணே...

சுபாங்கி : மன்னா...

கர்ணன் : மென்மையான உணர்வுகள் மரத்துப் போன மரம் நான் என இருந்தேன்... நீ என் வாழ்வில் நான் அருந்தத் திகட்டாத தேன்...

சுபாங்கி : மரத்துப் போன உணர்வுகள் அல்ல அவை.. மறந்து போனவை... உம்மை விட்டு ஒதுங்கி இருந்தவை...

கர்ணன் : ஒதுங்கியனவா??? என்னிடம் இருந்தா???

சுபாங்கி : இல்லை.. இல்லை... பதுங்கியவை.... உங்கள் வீரம் கண்டு...

கர்ணன் : ஹ ஹ ஹ.... இப்போது மட்டும் வருவானேன்??? என் வீரம் மட்டுப் பட்டதா???

சுபாங்கி : மட்டற்ற வீரம் உம்முடையது... அது மட்டுப் பட வில்லை... அன்பினால் கட்டுப் பட்டது...

கர்ணன் : உண்மை... கட்டுண்டு கிடப்பதும்.. சுகம் தான் போலும்.....

சுபாங்கி : உங்கள் அன்பினால் நானும் கட்டுப் பட்டுப் போனேன்.... தேடி அலைந்து நான் கண்ட தேவாமிர்தம் நீங்கள்...

கர்ணன் : தேன்மதுரம் உன் பேச்சு...

சுபாங்கி : தீங்கிழைக்கும் உங்கள் பார்வை வீச்சு...

கர்ணன் : தீண்டக் கூடாதா???

சுபாங்கி : தடை தாண்டக் கூடாதா??

கர்ணன் : சம்மதம் தானா???

சுபாங்கி : சொல்லவும் வேண்டுமா???

கர்ணன் : மனதுக்கு இனியவளே, சுகம் தரும் என்னவளே... சுகித்திருப்பேன் உன் அருகினிலே..

சுபாங்கி : அன்பைப் பொழியும் அறுநிதியே, உங்கள் அன்பே என் கவசம்

கர்ணன் : சுபா... கனியக் கனியக் காதல் பேசும் என் கண்மணியே.... என் ஆருயிரே.... நான் இல்லை என் வசம்...

சுபாங்கி : எப்போதும் நான் உங்கள் வசம்..

கர்ணன் : என் வாக்கியம் நீ...

சுபாங்கி : நான் செய்த பாக்கியம் நீங்கள்..

கர்ணன் : குளிரும் நிலவே, குறிஞ்சி மலரே... குறை இன்றி வைத்திருப்பேன் உன்னை...

சுபாங்கி : ஒளிரும் கதிரே, ஓய்வில்லாப் பகலே... உம்மருகே நான் இருக்க குறை என்ன எனக்கு???

கர்ணன் : சுபா... சுபா... எனைக் குளிர்விக்கவே வந்த குங்குமமே... பாதம் பதிக்கும் பங்கையமே... நீ என் வாழ்வில் ஒரு நித்திய உதயம்

சுபாங்கி : நான் வாழ வேண்டுமே.. உங்கள் இதயம்...

கர்ணன் : தந்தேன் என் தாமரையே... நீ வாழத்தான் என் இதயம்...

சுபாங்கி : நீங்கள் என் இதய வானின் உதயம்...

கர்ணன் : இதைத்தான் நான் அப்போது சிந்தித்துக் கொண்டு இருந்தேன்.. என்னையே கொஞ்சம் நிந்தித்துக் கொண்டு இருந்தேன்...

சுபாங்கி : எதைப் பற்றியது உங்கள் சிந்தனை?? அதற்கு ஏன் நிந்தனை???

(கர்ணன் பணியாள் பற்றி சொல்கிறான்..)

சுபாங்கி : அதனால்???

கர்ணன் : இதுவரை நான், என் பணிகள் நேரம் தவறாது நடக்க வேண்டும் என எண்ணியதுண்டு... அதிலே அடுத்தவர் சிரமம் என்பது நான் அறிந்தேன் இல்லை... எனை அறிய வைத்தவள் நீ... என் அரிய பொக்கிஷம் நீ...

சுபாங்கி : என் அன்பின் அகராதி நீங்கள்... என் பொருட்டு உங்களுக்கு எத்துனை அன்பு........................ கண்ணா.....

கர்ணன் : அன்பே...

சுபாங்கி : உலகில் உள்ள அத்துணை உறவுகளும், சொல்லால், மொழியால், பொருளால்... எனை அன்பிலே குளிப்பாட்டியது போல, என் நெஞ்சம் நிறைந்து உள்ளது...

கர்ணன் : நெகிழ்ச்சியில் என் உள்ளம்... வேண்டுவன கேள்... நொடியில் தருகிறேன் உனக்கு...

சுபாங்கி : கேட்கும் முன்னே அனைத்தும் தர நீங்கள் இருக்கையில் வேறென்ன வேண்டும் எனக்கு???

கர்ணன் : ஏதாவது கேள்... நான் உனக்கு தந்தே ஆகவேண்டும்...

சுபாங்கி : என் இன்பம் நாடும் இதயம் அதில் நானே வசிக்க வேண்டும்
என் துன்பம் போக்கும் கரங்கள்... அதன் உள்ளே நான் உறங்க வேண்டும்...
எனை அன்பாய் நோக்கும் விழிகள்... அதன் இமையாய் நான் இருக்க வேண்டும்
என் உயிர் நீங்கள்... அதைக் காக்கும் மெய்யாய் நான் இருக்க வேண்டும்...
உங்கள் கடந்த காலம் அதை பொய்யாய் ஆகும் வலிமை எனக்கு வேண்டும்...
என நான் வேண்ட... வேண்டுவன நிறைய உண்டு...

கர்ணன் : சுபா... என் நலம் நாடும் என் நெஞ்சுக்கு இனியவளே...

சுபாங்கி : இன்னும் நான் வேண்டுவது ஒன்று உண்டு..

கர்ணன் : சொல் கண்ணே...

சுபாங்கி : நான் மேற்சொன்ன எதுவும் எனக்கு இல்லாது போயினும்...

கர்ணன் : ம்ம்ம்ம்

சுபாங்கி : என் மரணத்துக்கு முன்னே... நான் கண்ட கடைசி உயிர் நீங்களாக வேண்டும்.... இந்த வரம் மட்டும் தருவீரா பிரபோ...

கர்ணன் : (கலங்கிய விழிகள்.. கதறும் இதழ்கள்... பதறும் நெஞ்சம்...)

என்ன தவம் செய்தேன் நான் உன்னை என்னவளாய் அடைய.... அன்பே...

என் மரணம் உனக்கு முன் என்றாலும்... நீ எனைக் காணும் வரை என் உயிர் உடல் அருகே உனக்காய் காத்திருக்கும்..

சுபாங்கி : பிரபோ... உங்கள் மரணம் எனும் செய்தி எனைத் தீண்டும் போது.. அது உயிர் அற்ற என் உடலைத்தான் தீண்ட முடியும்...

கர்ணன் : என் உயிரே சுபா....

சுபாங்கி : என் தெய்வமே... பிரபோ...

(கர்ணனுக்கும், சுபாங்கிக்கும் இடையிலான பிரியத்தை சொல்ல இந்தப் பகுதியைத் தொடங்கினேன்... அதைத் தவிர வேறு எதுவும் சொல்ல இயலாமல் போய் விட்டது..)



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:12 am

பகுதி இருபத்தி ஒன்றில் ஒன்று : உண்மை நண்பன் :

பெயரளவிலும், அன்பிலும் மட்டும் அல்ல, ஒரு மன்னனாகவும் கர்ணன் தன் கடமைகளை இனிதே செய்து வந்தான்...

முன்னர் யுதிர்ஷ்டர் ராஜசூய யாகம் செய்திருந்தார். அது போல தானும் செய்ய ஆசை கொண்டான் துரியோதனன். இந்த யாகம் செய்ய ஒரு நிபந்தனை உண்டு. அந்த யாகத்தை தலைமை ஏற்று நடத்துபவருக்கு பல நாட்டு அரசர்கள் கட்டுப் பட்டு இருக்க வேண்டும்.

தனது ஆர்வத்தை துரியோதனன் கர்ணனிடம் சொல்ல, கர்ணன் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். சுற்றிலும் உள்ள பல நாடுகளுக்கு படை எடுத்துச் சென்று அனைவரையும் வெற்றி கண்டான். கால் வைத்த திக்கெல்லாம் வெற்றி.. வெற்றி... அவனுக்கு....

வெற்றியுடன் திரும்பிய அவனை, ஆரத் தழுவி வரவேற்றான் துரியோதனன்.

ஆனாலும் இந்த யாகத்தை செய்ய புரோகிதர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அந்த யாகம் செய்த ஒருவர் இருக்கையில், வேறொருவர் அதை செய்யக் கூடாது... தர்மர் இருக்கிறார்.. அத்தோடு கூடவே, தந்தை இருக்கையில் தந்தை தான் முன்னின்று செய்ய வேண்டும், எனக் கூறி யாகம் செய்ய மறுத்தனர்.

வேண்டுமானால், அதற்கு ஒப்பான, வைஷ்ணவ வேள்வி செய்யலாம்... எனக் கூறி அதைச் செய்தனர்...

முறைப்படி அனைவருக்கும், அழைப்பு அனுப்பப்பட்டு, அனைவருக்கும் தகுந்த மரியாதை செய்யப்பட்டது....

பெரியவர்கள் அனைவரும் கலந்து கொள்ள, வெகு விமரிசையாய் நடந்தேறியது அந்த வேள்வி. வேள்வியின் வெற்றிக்கு கர்ணனே காரணம் என எண்ணினான் துரியோதன். அவனிடம் இன்னும் ஒரு வேண்டுகோள் வைத்தான்.

போரில் பாண்டவர்கள் அனைவரும் தோற்றதும், தருமரின் மறைவுக்குப் பின், ராஜசூயாகத்தை தனக்காக நடத்தித் தருமாறு கோரினான்.

அப்படி செய்தால், தன் புகழ் மேலும் உயரும் எனும் ஆவல் அவனுக்கு...

அப்போது கர்ணன ஒரு சபதம் செய்தான். “மன்னா, அர்ஜுனனை நான் போரில் கொல்லும் வரை மது மாமிசங்களைத் தீண்டேன். இல்லை என்று வந்தோருக்கு, இல்லை எனும் சொல் என்னிடம் இராது” என்பதே அது.

மகாரதர்களான பீஷ்மர், துரோணர் என
அனைவரும் இருக்க, என்னில், என்
வீரத்திலும், தீரத்திலும், நம்பிக்கை
கொண்ட என் நண்பனே, உனக்காய்
நான் எதையும் செய்வேன். என்
சக்திக்கு அப்பாற்பட்டதானாலும்
என் உயிர் கொடுத்தேனும் அதை
உன் பொருட்டு செய்வேன்...

என் கர்ணனும்

ஆயிரம் சுற்றங்கள் எனை சூழ்ந்து
இருந்தாலும், என் எண்ணங்களை
நான் சொல்லும் முன்னே அறிந்து
என் முன்னேற்றத்துக்காய் பறந்து
என் நாட்டின் எல்லைகள் விரிந்து
என் மகிழ்ச்சியின் விரிந்தது
உன்னாலே... என் உத்தம நண்பனே...

என துரியோதனனும்... மனத்தால்... ஒருவரை ஒருவர் மேலும் மேலும் நெருங்கிக் கொண்டு இருந்தனர்...



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:13 am

பகுதி இருபத்தி ஒன்றில் இரண்டு : நான் தந்தை

அமுதூறும் காதலிலே கர்ணனும், சுபாங்கியும் இருக்க... தேனூறும் செய்தி ஒன்று கர்ணனுக்கு....

சுபாங்கி கருவுற்று இருந்தாள்....

எல்லை இல்லாத மகிழ்ச்சியில் கர்ணன். பிறப்பரியா எனக்கு என் பெருமை சொல்ல ஒரு மகவு.... ஒரு சிறந்த கணவனாய் இதுவரை இருந்தேன். இனிமேல் ஒரு நல்ல தகப்பனாகவும் நான் இருக்க வேண்டும். எனும் எண்ணம் அவன் உள்ளே..

மனைவி அவளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறான். பானுமதியும், துரியோதனனும் அவ்வப்போது வந்து அவள் நலம் விசாரித்துக் கொள்கின்றனர்.

மாதங்கள் உருண்டு ஓடுகின்றன.

புளிப்பான மாங்காய்கள் தான் சுபாங்கியின் விருப்ப உணவு...

ஒரு நாள்.. அவளுக்கு மாங்காயை வெட்டிக் கொடுத்துக் கொண்டு இருந்த கர்ணன்

கர்ணன் : சுபா....

சுபாங்கி : ம்ம்ம்ம்

கர்ணன் : நான் ஒன்று கேட்கட்டுமா???

சுபாங்கி : புதிதாய் என்ன சுவாமி... கேளுங்களேன்...

கர்ணன் : நீ கூச்சபடாமல் பதில் சொல்வதானால் கேட்கிறேன்

சுபாங்கி : அப்படி எனில் எனை கூச்சப்படுத்தவே ஏதோ கேட்கப் போகிறீர்கள்... சரி கேளுங்கள்..

கர்ணன் : இப்படி குழந்தையை சுமந்து கொண்டே இருப்பது பாரமாக இல்லையா???

சுபாங்கி : அது, கடவுள் பெண்களுக்கு என்றே கொடுத்த வரம்..

கர்ணன் : அப்படியா???

சுபாங்கி : ஆமாம். அன்பான கணவனின், கருவை உள்வாங்கிய நிமிடம் தொட்டு, அவரையே சிறு குழந்தையாய் பாவித்து, எங்கள் வயிற்றிலே வைத்து, அனைத்து வேலைகளையும், உண்பது, உறங்குவது போன்ற அனைத்தையும், பார்த்து பார்த்து, அந்த சிசுவின் அசைவை உணரும் நொடி இருக்கிறதே... சொல்லில் வடிக்க இயலாத சுகம் அது... சொல்லத் தெவிட்டாத இன்பம் அது.

வேண்டிச் சுமக்கும் வரம் அது. சுமை அல்ல சுகம்...

கர்ணன் : போதும் போதும்... இந்த வரம் உங்களுக்கே இருக்கட்டும் தாயே... ஆளை விடு.. ஹ ஹ ஹ

சுபாங்கி : என்ன தெரியும் உமக்கு. சூல் கொண்ட என்னில் கருவாய் உருக்கொண்டது நீங்கள் தான்..

கர்ணன் : சுபா... என் அன்பே...

சுபாங்கி : நீங்கள் அது போல இல்லையே... என் நினைவே இன்றி நீங்கள் போர்.. போர் என சென்று விடுவது பெருமை தரும் விஷயமாய் இருந்தாலும், நான் வேண்டும் வேளையில், உங்களால் என், என்னருகே இருக்க இயலாதது எனக்கு கொஞ்சம் வேதனை தருகிறது சுவாமி...

கர்ணன் : நீ சுமக்கும் சூல் ஒரு பத்து திங்கள் தானே கண்ணே..
என் நெஞ்சில் உன்னை நான் சுமப்பது நீ அறியாததா பெண்ணே???

சுபாங்கி : பிரபோ...

கர்ணன் : ஆம் சுபா, எனக்காய் உன் தாய், தந்தையரை விடுத்து என்னுடன் வந்தவள் அல்லவா?? நானாய் ஆனவள் நீ. உன்னை நான் நொடியும் நீங்காது உன்னுடனே இருக்கவே விழைகிறேன்.

என்ன செய்ய கடமை இருக்கிறது அல்லவா???

சுபாங்கி : அதை நன்றாய் நான் அறிவேன் சுவாமி.. ஆனாலும் மதிக்கு தெரிவது.. இந்த மட மனதுக்கு தெரியவில்லையே... (கண்ணீர் விடுகிறாள்)

கர்ணன் : (அவள் கண்ணில் நீர் வழிய இவனுக்கோ, நெஞ்சில் குருதி... )

வேண்டாம் கண்ணே, கலங்காதே... இனி உன் பொருட்டு நீ விரும்பும் வரை நான் உன்னோடு இருக்கிறேன்...

சுபாங்கி : என் உயிரே... என் தெய்வமே... (அடடா.. என்ன சந்தோசம் இந்தப் பொண்ணுக்கு)

கர்ணன் : நீ சிரிக்கையில் என் உள்ளம்...

(கர்ணன் திரைப் படத்தில் வரும் காட்சிகள்... கொஞ்சம் வேறுபடலாம்...)


தூதுவன் : பிரபுவுக்கு வந்தனம்

கர்ணன் : ம்ம்ம்ம்ம்

தூதுவன் : மன்னா... சந்திர சைல நாட்டில் இருந்து வந்திருக்கும் தூதுவன் நான். உங்கள் மாமியார் உங்கள் மனைவியை வளைகாப்பு நடத்த அனுப்பி வைக்குமாறு தங்களை கேட்டு ஒரு ஓலை அனுப்பி இருக்கிறார்.

சுபாங்கி : யார் என் அம்மாவா??? ஆர்வமும், மகிழ்ச்சியும் போட்டி இட, தூதுவனைக் கேட்கிறாள்...

தூதுவன் : ஆம் தாயே...

கர்ணன் : சுபா.... என அவளை அடக்கி விட்டு... ஏனப்பா, உங்கள் மகாராணிக்கு, தனக்கு ஒரு மகள் இருந்தது இப்போதுதான் நினைவு வந்ததா???

சுபாங்கி : பாரப்பா... நீ சற்றே ஓய்வெடுத்துக் கொள்...

தூதுவன் : சரி தாயே... என் வெளி செல்கிறான்

சுபாங்கி : பாருங்கள் பிரபு... சற்றே அமைதியாகக் கேளுங்கள்... காப்பு சூட்டுதல் ஒரு பெண்ணுக்கு அவள் வாழ்வில் கிடைக்கும் பெரும் பேறு.. தாய் இருந்தும் எனக்கு அந்த நலம் கிடைக்கவில்லையே என நான் எண்ணி எண்ணி அழுதிருக்கிறேன். தெய்வமே எனக்கு அருள் செய்ய என் அன்னையின் அழைப்பை அனுப்பி இருக்கிறது.

தாங்கள் தயை கூர்ந்து தடை சொல்லாது எனை அனுப்பி வையுங்கள்.

கர்ணன் : தாயற்ற நான் படும் துன்பம், உன்னையும் தாயற்றவள் ஆக்கத் துணியுமா??? என் உயிரான நீ உலக வழக்கில் இருந்து விளக்கப் படுவதை நான் தான் விரும்புவேனா?? ஏதோ என் இதயம் உன்னை அங்கே அனுப்ப ஒப்பவில்லை..

என் மனதுக்கு இனியவள்.. மனம் வாட ஏதும் நடந்திடுமோ என்ற அச்சம் தான். அப்படி ஏதும் இருந்து விட்டால்... ஆ... நினைக்கும் போதே மான உணர்ச்சி கொந்தளிக்கிறது சுபா...

உத்தரவு தருவது எனக்கு நல்லதாகப் படவில்லை... எனைத் தவறாக நினைக்காதே... மன்னித்துவிடு...

சுபாங்கி : உங்கள் இஷ்டம். கொடுத்து வைக்காதவளுக்கு இந்த முடிவு இயற்கை... என் அழுது கொண்டே சென்று ஒரு பக்கம் அமர்கிறாள்...

அப்போது பானுமதி உள்ளே வருகிறார்...

பானுமதி : சுபா....

சுபாங்கி : மகாராணி... என தாயைத் தேடும் கன்றாய் ஓடிச் சென்று அவளை அடைகிறாள்...

பானுமதி, இவள் பொருட்டு கர்ணனிடம் பேசுகிறாள்..

பானுமதி : அண்ணா, வாயும் வயிருமாக உள்ள பெண்ணை, உயிரும் உள்ளமும் போல போற்ற வேண்டும். பூச்சூட வந்திருக்கும் தாயின் அழைப்பை ஏற்க மறுத்து விட்டீர்களா???

கர்ணன் : ஆமாம். அதனால் தான் இந்த சோகக் கண்ணீர்... ஏன் என்றால் பாசத்தின் மறு அவதாரம் அல்லவா என் மாமன், மாமியார்...

பானுமதி : அண்ணா, சற்று பொறுமையாக கேளுங்கள்... பெற்றோரின் கோபம் என்றுமே நிலைக்காது... அவர்களாக மனம் மாறி வரும்போது அதை தடை சொல்வது அழகும் அல்ல, மரியாதையும் அல்ல.. என் வேண்டுகோள்..

கர்ணன் : இஷ்டம் இல்லை என்பது போல முகம் திருப்ப...

பானுமதி : அல்லது என் உத்தரவு... சுபாவை நீங்கள் மனமார வாழ்த்தி, முகம் மலர போய் வா எனக் கூறுங்கள்...

கர்ணன் : ம்ம்ம்...ம்ம்ம்ம்... நடப்பது நடக்கட்டும்... எனக்கென்று இனி என்ன ஒரு புது அவமானமா வந்து விடப் போகிறது??? என சுபாங்கியின் பக்கம் திரும்பி.. போ..போ...

பானுமதி : ம்..ஹூம்... இதையே கொஞ்சம் இன்பமாக சொல்லி விட்டால் என்ன நஷ்டமாம்???

மகளே, ஒரு குறையும் இன்றி
மனதில் மகிழ்ச்சி நிறைய,
இதுவரை பட்ட வேதனை மறைய,
உன் வாழ்வில் இன்பம் நிறைய..

போய்... வா... மகளே... என ஒரு அன்னையாய் இருந்து அவளை கர்ணனின் ஒப்புதலின் பேரில் வழி அனுப்பி வைக்கிறாள்...



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:13 am

பகுதி இருபத்தி இரண்டில் ஒன்று : மீண்டும் அவமானம் :

பானுமதி வழி அனுப்புகையில் சுபாங்கிக்கு வரவேற்பு இப்படி எல்லாம் இருக்கும் என ஒரு பாடல் மூலம் சொல்லி அனுப்புகிறாள்..

இது போல...

காவலன் சேனை நின்றிருக்கும் - தந்தை
கண்களும் உன்னைக் கண்டிருக்கும்
பாவலர் தோழியர் இசை கேட்கும் அன்புப்
பார்வையெல்லாம் உன்னை வரவேற்கும்

(நன்றி சரோஜ், நீங்கள் தந்த இந்த பாடல் வரிகளுக்கு... )

தந்தையின் இல்லம் செல்லும் வழியில்... தனக்கு வரவேற்ப்பு இப்படி எல்லாம் இருக்கும் என ஒரு கற்பனையில் செல்கிறாள் சுபாங்கி...

ஊரெல்லாம் விழாக் கோலம் பூண்டு, விருந்தினர் வரவில் அரண்மனை நிறைய, மங்கல நாதங்கள் முழங்க, மலர்த் தோரணங்கள் வீதி எங்கும் தொங்க, அரண்மனை வாயிலில் இருந்து... தோழிகள் மலர் தூவி வரவேற்க, வழியும் அன்பும், அதை வார்த்தைகள் இன்றிச் சொல்லும், ஆனந்தக் கண்ணீருமாய், தாயும், தந்தையும் தன்னை வரவேற்கக் காத்திருப்பார் என ஒரு இனிய கற்பனையுடன் வருகிறாள்.

அரண்மனையும் வந்தது.. வாயிலில் யாரும் இல்லை. விழா நடக்க எந்த அறிகுறியும் இல்ல.

தோழியர் யாரும் இல்ல. உறவிறனர் ஒருவரும் இல்லை.

பணியாளர் மட்டும் இவளை வணங்கி இருக்க, குழப்பத்துடன் அரண்மனைக்குள் நுழைகிறாள்.

அன்பாய் வரவேற்க அன்னையும் இல்ல, பாசமாய் அரவனைக்க தந்தையும் இல்லை...

சுபாங்கி : அம்மா... அம்மா...

சு. தந்தை : நில். எங்கே வந்தாய்??

சுபாங்கி : காப்புச் சூட்ட. (வாக்கியத்தை முடிக்கும் முன்னே தந்தையின் இடையீடு..)

சு. தந்தை : என் முகத்தில் கரி பூசிச் சென்றவள் நீ. உனக்கு காப்பு சூடுவதா??? அதற்காய் என் வாயிலை மிதித்திதாயே... மானமில்லாதவளே...

சுபாங்கி : வார்த்தைகளை சிதற விடாதீர். சொல்லாய் வெளி வந்ததும் வாயு வெளியில் கலந்து காணாமல் போனாலும், அது விளைவிக்கும் பல விபரீதங்கள்..

சு. தந்தை : முறை இன்றி வந்தவளுக்கு, முகமன் வேறு சொல்ல வேண்டுமோ???

சுபாங்கி : முறை இன்றி வரவில்லை. அழைப்பு வந்ததால் தான் வந்தேன்.

சு. தந்தை : அழைப்பு... அரசாங்க வேலை விஷயமாய், அசலூர் போன கணவன் வீடு திரும்பும் முன் பூச்சூட்டி அனுப்பிடலாம் என கனவு கண்டாள் நான் கட்டிய மனைவி.. பாவம், வேலை விரைவில் முடிந்து நான் வந்துவிடுவேன் என அவளுக்கு தெரியவில்லை.

சுபாங்கி : அப்போது நீங்கள் என்னை அழைக்கவில்லையா???

சு. தந்தை : ஒரு தேரோட்டியின் மகனுக்காக, இந்த தேசத்தின் அரசனை தூக்கி எறிந்து சென்றவளுக்கு அழைப்பா???

சுபாங்கி : அப்பா... என் அருகே செல்ல விழைய...

சு. தந்தை : சீ... போ... எனத் தள்ளி விடுகிறார்..

சு. அன்னை : ஐயோ மகளே.. என ஓடி வருகிறார்... (இப்படித்தான் வரச் சொல்லிட்டு.. உள்ளே போய் இருக்கறதா???)

சு. தந்தை : இனி நீயும் சரி.. உன் சம்மந்தப்பட்ட எதுவும் இந்த நாட்டின் எல்லைக்குள் கூட வரக் கூடாது. போய் விடு இங்கிருந்து..

சு. அன்னை : நீங்கள் செய்வது கொஞ்சம் கூட முறை இல்லை.

சு. தந்தை : முறை தவறி காரியம் செய்தது உன் மகள். நான் அல்ல. ஒரு தேரோட்டியின்..

சுபாங்கி : அப்பா.. போதும் நிறுத்துங்கள். என் கணவர், ஒரு நாட்டின் அரசர். அவரைத் தரக் குறைவாக பேச உங்களுக்கு அதிகாரம் இல்லை.

சு. தந்தை : நீ இப்போது இருப்பது என் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி. இங்கே நின்று நீ இதை சொல்லக் கூடாது... போய் விடு இங்கிருந்து. கண் முன்னே நிற்காதே.

சுபாங்கி : என் கணவரின் சிறப்பை நீங்க ஓர் நாள் அறியத்தான் போகிறீர்கள். அப்போது நீங்கள் உங்கள் செயலுக்காய் வருந்தத்தான் போகிறீர்கள்.

சு. தந்தை : பார்கிறேன் அதையும் தான்.

சுபாங்கி : நான் வருகிறேன்.

சு. தந்தை : மீண்டுமா???

சுபாங்கி : நான் போகிறேன். இனி ஒரு முறை என் கால்கள் உங்கள் மண்ணில் பதியாது.

சு. அன்னை : மகளே...

சுபாங்கி : சென்று வருகிறேன் அம்மா..

நெஞ்சம் நிறைய கனவுகளுடன் வந்தவள், கண்கள் நிறைய கண்ணீரை சுமந்து திரும்பினாள்... கர்ணனின் இருப்பிடம்...



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக