புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10 
36 Posts - 47%
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10 
6 Posts - 8%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10 
4 Posts - 5%
Raji@123
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10 
2 Posts - 3%
prajai
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10 
8 Posts - 2%
prajai
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்


   
   

Page 27 of 32 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 32  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 24, 2012 3:28 pm

அருமையிருக்கு நன்றி அண்ணா.!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 16, 2012 1:13 pm

நண்பர்கள் கூட்டு... தொழிலுக்கு வேட்டு...

ஷேவிங் செய்து கொள்வதற்காக சலூன் ஒன்றிற்கு சென்றிருந்தேன். கடையை நடத்துபவர் சுமார் 25 வயது இளைஞர். சலூனில் சிறிய டிவி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அப்போது இந்தியா-நிïசிலாந்து அணிகளுக்கிடையே 20-20 கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. கடை முழுவதும் அவருடைய நண்பர் கூட்டம் நிறைந்து, குழுவாக கிரிக்கெட் மேட்ச்சை பரவசமாய் ரசித்துக் கொண்டிருந்தனர். நான் அவரிடம் ஷேவ் செய்யுமாறு கூற, அவரும் தயாரானார்.

அப்போது அவரது நண்பர்களில் ஒருவர் அவரிடம், "மச்சி, ஷேவிங்கை நாளைக்குக் கூட பண்ணலாம். மேட்ச்சை பார்க்க முடியுமா? கஸ்டமரை நாளைக்கு வரச்சொல்லு'', என்றார். அதையே பலரும் வலியுறுத்தினர். அந்த இளைஞர் வருமானம் போகிறதே என்று வருந்தினாலும் அவரால் நண்பர்களின் பேச்சை மீற முடியவில்லை. பரிதாபமாக என்னைப் பார்த்து, "சாரி சார்'' என்றார். "பரவாயில்லை தம்பி, நான் வேற எங்கயாவது போய் ஷேவ் பண்ணிக்கிறேன்'' என்று கூறிவிட்டு கிளம்பினேன்.

என்ன மாதிரியான நண்பர்கள் இவர்கள்? சக நண்பன் பிழைப்பு நடத்துவதற்காக வைத்திருக்கும் கடைக்குள் அமர்ந்து டிவி பார்ப்பதோடு, அவனுடைய வருமானத்துக்கும் அல்லவா வேட்டு வைக்கின்றனர். வாடிக்கையாளர்களை கவர வைக்கப்பட்ட டிவி, அவரது வருமானத்துக்கே தடையாகிப் போனது தான் பரிதாபம்.

- டி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 16, 2012 1:14 pm

பாலுக்கு அழுத குழந்தை... பசியமர்த்தாத அம்மா!

நான் சமீபத்தில் பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது நடந்த சம்பவம் இது. என் பக்கத்து பெட்டில் இருந்த பெண்மணிக்கு பெண் குழந்தை பிறந்து இருந்தது. அந்த குழந்தை பசிக்காக அழும்போதெல்லாம் அவள் அந்த குழந்தையையே வெறித்து பார்ப்பாள்.

குழந்தை அழுது முகமெல்லாம் சிவந்து போய் விடும். பின்பு பிறர் திட்டிய பிறகே பால் கொடுப்பாள். எதனால் இப்படி என்று விசாரித்தால் அந்த பெண்ணுக்கு இது நான்காவது பெண் குழந்தையாம். ஆண் குழந்தையை எதிர்பார்த்த அவள் கணவன் நாலாவதும் பெண் குழந்தை என்றதும் வெறுப்பில் மனைவியையும் பிள்ளையையும் வந்து பார்க்கக் கூட இல்லையாம். அதனால் இவளுக்கும் அந்த குழந்தை மீது வெறுப்பு வந்து, பாலூட்டாமல் இருந்திருக்கிறாள்.

இந்த காலத்தில் பெண்கள் எல்லா துறைகளிலும் சாதிக்கின்றனர். அதனால் பெண் குழந்தைகளை வெறுப்பதை முதலில் கைவிடுங்கள். அதோடு ஆணோ பெண்ணோ இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொண்டால் இப்படியான வேதனைகளுக்கு வாய்ப்பு இருக்காதே!

- எஸ்.அனுபிரபா, காரைக்கால்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 16, 2012 1:14 pm

கண்டக்டரின் சாமர்த்தியம்

சமீபத்தில் நான் பெங்களூரில் உள்ள என் மகனைப் பார்ப்பதற்காக பஸ்ஸில் ஏறிச் சென்றேன். அது இரவு நேர பயணம். தர்மபுரியை தாண்டியதும் ஒரு ஓட்டல் முன்பு பஸ்சை நிறுத்தினர். பஸ்சில் இருந்து இறங்கும் ஒவ்வொரு பயணியிடமும் துண்டு சீட்டு ஒன்றை கொடுத்தார் கண்டக்டர். அதில் பஸ் நம்பர் எழுதப்பட்டு இருந்தது.

கண்டக்டரை `இது எதற்கு?' என்று கேட்டபோது, `நிறைய பஸ்கள் இங்கு சாப்பாட்டுக்காக நிறுத்துவார்கள். கிட்டத்தட்ட எல்லாமே ஒரே மாதிரியான பஸ்கள் என்பதால் பயணிகள் எந்த பஸ்சில் இருந்து இறங்கிச் சென்றோம் என்பதை மறந்து தவிக்கின்றனர். அல்லது வேறு பஸ்சில் ஏறி விடுகிறார்கள். அப்படி நடப்பதை தவிர்க்கவே பஸ் நம்பர் எழுதின சீட்டை தருவது வழக்கம்' என் றார். `நானே முன்பு ஒரு தடவை இப்படி தடுமாறியது நினைவுக்கு வர அவரிடம் உங்கள் சேவை மகத்தானது. பாராட்டுகள்' என்று சொன்னேன்.

- மா.மாரிமுத்து, ஈரோடு.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 16, 2012 1:15 pm

மழை இருட்டில்... தெரியாத ஊரில்...

நான் ஆசிரியையாகப் பொறுப்பேற்ற புதிதில் சக ஆசிரியர்கள், மாணவிகளுடன் சுற்றுலாவாக நீலகிரிக்குச் சென்றிருந்தோம். அங்கு சென்றவுடன் தலைமை ஆசிரியரின் நண்பர் வீட்டிற்குச் சென்று, எங்கள் உடமைகளை வைத்துவிட்டு, சிறிது தொலைவில் உள்ள ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டு விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம்.

அப்போது திடீரென வானம் இருண்டு மழை பெய்யத் தொடங்கியது. இருட்டவும் ஆரம்பித்து விட்டது. ஒருவர் பின் ஒருவராக சங்கிலித் தொடர்போல் தொடர்ந்து சென்று கொண்டிருந் தோம். திடீரென மழை வலுத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. அந்த இருட்டில் தொடர்ந்து வந்த எங்கள் சங்கிலித் தொடர்பும் துண்டிக்க, ஆங்காங்கே உள்ள வீடுகளில் கதவைத் தட்டி புகலிடம் தேடினோம். நாங்கள் கதவைத் தட்டிய வீடுகளில் யாருமே கதவை திறக்கவில்லை. எங்கள் நிலையை மனக்குமுறலுடன் வெளியிட, இறுதியாகக் கதவைத் திறந்து விசாரித்தனர்.

நாங்கள் தங்கிய வீட்டு விலாசம், அக்குடும்ப நண்பர் விவரம் எங்களுக்குத் தெரியவில்லை. அவ்வீட்டுத் தலைவரின் மகன் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அவன் பெயரை மட்டும் என் உடன் வந்திருந்த ஆசிரியை தெரிந்து வைத்திருந்தார். அவன் பெயரை சொன்னதும் வீட்டிலுள்ளோர் நன்கு சிந்தித்து, ஒரு குறிப்பிட்ட மாணவனின் வீடாகத் தான் இருக்கும் என்று அனுமானித்து எங்களை அங்கு கொண்டு வந்து சேர்த்தனர். அந்த மழை இருட்டில் மாணவிகளுடன் நாங்கள் தவித்த தவிப்பை இன்னும் மறக்க முடியவில்லை.

புதிய ஊர்களுக்கு சுற்றுலா போகும்போது ஆசிரியர்கள் தங்க வேண்டிய இடங்களின் முகவரி, அவர்களின் தொலைபேசி நம்பர் வரை தெளிவான குறிப்புகளுடன் தகுந்த திட்டமிடலையும் ஏற்படுத்திக் கொண்டே பயணிக்க வேண்டும்.

- வி.பார்வதி, இராசிபுரம்



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Tue Oct 16, 2012 1:15 pm

ஆமா மச்சி , சொல்லு மச்சி என்று சொன்னாலே அவர்கள் ஆப்பு மட்டும் தான் வைப்பார்கள் ..

அருமை தல மாமா ...

noorvkr
noorvkr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 20/10/2012

Postnoorvkr Sat Oct 20, 2012 2:00 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:நெகிழ வைத்த நிஜங்கள் - Page 27 678642
[img][/img]

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Oct 20, 2012 2:45 pm

நண்பர்கள் செய்தது மிகத்தவறு..! என்ன கொடுமை சார் இது

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Oct 20, 2012 7:34 pm

அனைத்து பதிவுகளும் ஒரு சமூக அக்கறை கொண்டது நன்று

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 24, 2012 12:49 pm

தொலைந்தது செல்போன்... தொலையாதது நேர்மை...

திருவிழாவிற்காக சமீபத்தில் என் நண்பனுடைய ஊருக்குச் சென்றிருந்தேன். திருவிழாவில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் நெரிசலில் சிக்கிக் கொண்டேன். அந்த நெரிசலில் என்னுடைய செல்போன் தொலைந்து விட்டது. பதறிப்போன நான் உடனடியாக நண்பனிடம் செல்போன் தொலைந்த விஷயத்தைக் கூறினேன்.

உடனே என்னுடைய நண்பன் ஒலிபெருக்கியில், `வெளிïரிலிருந்து வந்திருக்கும் எனது நண்பனின் செல்போன் தொலைந்து விட்டது. யாரிடமாவது கிடைத்தால் தயவு செய்து கொண்டுவந்து கொடுத்து விடுங்கள்' என்று கேட்டுக் கொண்டான்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் என்னருகே வந்த ஒரு பெரியவர், தொலைந்து போன என் செல்போனை என்னிடம் கொடுத்து `தம்பி இந்த செல்போன் கீழே கிடந்தது. உங்களுடையதா பாருங்க' என்று கேட்டார். செல்போன் கிடைத்த மகிழ்ச்சியில் நான் அவரிடம், "அய்யா...இது என்னுடையது தான். என்னிடம் கொண்டு வந்து கொடுத்ததற்கு நன்றி'' என்று சொல்லி விட்டு அந்தப் பெரியவரிடம் நூறு ரூபாயைக் கொடுத்தேன்.

அந்தப் பெரியவரோ, `வேண்டாம் தம்பி விருந்தாளியா வந்த உங்களையும், உங்க உடமையையும் பாதுகாக்கறது எங்க கடமை அதுக்கு கூலி எதிர்பார்க்கலாமா?' என்று கேட்க, பெரியவரின் ஊர்ப்பற்றும் அக்கறையான வார்த்தைகளும் என்னை மிகவும் நெகிழ வைத்து விட்டன.

- ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

Sponsored content

PostSponsored content



Page 27 of 32 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக